Search This Blog

Showing posts with label Spiritual. Show all posts
Showing posts with label Spiritual. Show all posts

Saturday, May 15, 2021

Benefits Of Navagraha Mantra



The Navagraha or 9 planets, their transits, and positions in the birth chart form the basis of Vedic Astrology. The Navagraha include Surya (Sun), Chandra (Moon), Mangala (Mars), Budha (Mercury), Brihaspati (Jupiter), Shukra (Venus), Shani (Saturn), and the shadow planets - Rahu and Ketu. Our ancient sages found that the careful study of these planets can reveal the past, present, and future of any individual and accordingly, designed the system of Vedic Astrology.
Each of these planets has its own unique personality and characteristics. They can individually, and in combination with one or more planets, can give positive or adverse impact depending on their positioning at the time of the birth of an individual, and on their subsequent transit during the individual’s life. Navagraha mantra is a sacred hymn dedicated to these 9 planets. Chanting or listening to this mantra can help reduce the adverse effects of Navagraha and increase their positive blessings.
Navagraha Mantra – Sacred Tool To Gain Positive Planetary Blessings:
Mantras are powerful incantations packed with immense spiritual energy that can fill your aura with peace and positivity. There are specific guidelines as to how a mantra should be chanted, and when to chant so these mantras can create vibrations that can bring peace and happiness in life.
Navagraha Mantras consist of nine sacred hymns, each of which is dedicated to one of the Navagrahas. These simple, single-line mantras are chanted to propitiate the 9 powerful planets. Chanting these hymns with devotion can help in getting various benefits from the auspicious and favourably placed planets; and in reducing the adverse effects of the inauspicious and unfavourably placed ones.
A planet governs every day of the week and it is believed that the mantra addressed to a planet should be recited on the day dedicated to that planet for optimal results. For instance, Surya Mantra can be chanted on Sundays, Chandra Mantra on Mondays, and so on. Rahu and Ketu do not have any days dedicated to them. However, one can chant Rahu Mantra on Saturdays and Ketu Mantra on Tuesdays.
9 Navagraha Mantras & Benefits:
Surya (Sun) Mantra:
Om japa kusuma sankasam kashya peyum mahadyuthim
Thamorim sarva papaghanam pranatosmi divakaram
Om Hring Hraung Suryay Namaha
Benefits: Power, strength, authority, longevity
Chandra (Moon) Mantra:
Om Dadhi sankha thusharabham kshirodarnava sambhavam
Namami sasinam somam shabhormakuda Bhushanam
Om Aing Kling Somay Namaha
Benefits: Clarity of mind, peace, happiness
Mangal (Mars) Mantra :
Om Dharani Garbha Sambhootham vidyuthi kanthi samaprabham
Kumaram Sakthi Hastham tham Mangalam Pranamamyaham
Om Hung Shring Bhaumay Namaha
Benefits: Relief from enmity, diseases & debts
Budha (Mercury) Mantra:
Om Priyangu Kalikashyamam roopena prathimam budham
Soumyam soumyagunopetham tham Budham pranamamyaham
Om Aing Shring Shring Budhay Namaha
Benefits: Good communication, intellect & good appearance
Guru (Jupiter) Mantra:
Om Devanam cha rishinam cha gurum kanchana sannibham
Budhhibhootham thrilokesham tham namami brihaspatham
Om Hring Cling hung Brihsptye Namaha
Benefits: Success, fame, wisdom, fortune
Shukra (Venus) Mantra:
Om Himakunda mrinalabham dythyanam paramam gurum
Sarava sastha pravaktharam bhargavam pranamamyaham
Om Hring Shring Shukray Namaha
Benefits: Money, good relationships, property
Shani (Saturn) Mantra:
Om Neelanjana samabhasam raviputhram yamagrajam
Chhayya marthanda sambhootham tham namami shanaiswaram
Om Aing Hring Shring Shanaishchray Namaha
Benefits: Hard work, sincerity, achievement of goals
Rahu Mantra:
Om Ardha kayam mahaveeryam chandradhithiya vimardanam
Simihika Garbha Sambhootam Tham Rahum Pranamamayaham
Om Aing Hring Rahave Namaha
Benefits: Material blessings, charisma, ambitious nature
Ketu Mantra:
Om Palasa Pushpa sankasam tharakagraha masthakam
Roudram roudrathmakam ghoram tham Kethum pranamamyaham
Om Hring Aing Ketave Namaha
Benefits: Wisdom, spiritual progress, progress in life
Chant these mantras on respective days for positive planetary blessings & progress in life.

Tiruchendur Murugan Temple

Wednesday, March 17, 2021

முருகனின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனை தீரும்.

.


✡️ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. முருகப்பெருமானின் எந்த பெயரை சொல்லி அழைத்தால் என்ன பிரச்சனைகள் தீரும் என்று அறிந்து கொள்ளலாம்.
✡️ஆனந்த கடவுளான முருகப்பெருமானுக்கு பல்வேறு பெயர்கள் உள்ளன. அதாவது காங்கேயன், கார்த்திகேயன், சரவணன், குமரன், சண்முகன், சேனாதிபதி, குகன், வேலாயுதன், கந்தன், கடம்பன், கதிர்வேலன் ஆகிய முக்கியமான பெயர்களில் பக்தர்கள் அன்புடன் வழிபட்டு வருகின்றனர்.
✡️ முருகா என்ற சொல்லில் முக்தி பிறக்கின்றது
கந்தா என்ற சொல்லில் கருணை பூக்கின்றது
கடம்பா என்ற சொல்லில் கருமவினை கரைகின்றது
கதிர்வேலா என்ற சொல்லில் காமம் கலைகிறது
கார்த்திகேயா என்ற சொல்லில் கஷ்டம் அழிகின்றது
ஆறுமுகா என்ற சொல்லில் ஆனந்தம் பிறக்கின்றது
சரவணா என்ற சொல்லில் மனம் சாந்தி அடைகின்றது
குமரா என்ற சொல்லில் குறைகள் விலகுகிறது
குழந்தைவேலா என்ற சொல்லில் குதூகலம் பிறக்கின்றது
தண்டாயுதபாணி என்ற சொல்லில் தரித்திரம் தொலைகிறது
சண்முகா என்ற சொல்லில் சக்தி பிறக்கிறது
அழகன் என்ற சொல்லில் புது ஆனந்தம் பூக்கிறது
மயிலோன் என்ற சொல்லில் மகிழ்ச்சி பிறக்கிறது
விசாகன் என்ற சொல்லில் விடியல் பிறக்கிறது
வேலவா என்ற சொல்லில் வேகம் பிறக்கிறது
சேயோன் என்ற சொல்லில் அழகு பிறக்கிறது
செவ்வேல் என்ற சொல்லில் வசந்தம் பூக்கிறது
பாலமுருகா என்ற சொல்லில் பாவம் நீங்குகிறது
சுப்பிரமணியா என்ற சொல்லில் சுகம் பிறக்கிறது..

Thursday, December 31, 2020

சுகமாய் வாழ சுந்தர காண்டம்!


ராமாயணத்தில் எந்த பகுதியை படித்தால் உடனடியாக ராமனின் அருள் கிடைக்கும்
ராமனின் அருள் கிடைக்க ராமாயணத்தை படித்தே ஆகவேண்டும் என்று அவசியமில்லை மனப்பூர்வமாக ராமனை நினைத்தாலே அவனது அருள் பரிபூரணமாக கிடைக்கும் மிக சிறந்த ராம பக்தர்களான அனுமனும் சபரியும் ராமாயணத்தை படித்தா அருள் பெற்றார்கள் ராமனை நினைத்தாலே பக்தியின் ஊற்றுக்கண் தானாக திறக்கும்
இருந்தாலும் நமது பெரியவர்கள் ராமாயணத்தில் உள்ள சுந்தர காண்டத்தை படிப்பதனால் வாழ்வில் பல நலன்களையும் பல வளங்களையும் பெறலாம் என்று சொல்கிறார்கள் அப்படி பெற்ற சிலரையும் நான் சந்தித்து இருக்கிறேன் சுந்தர காண்டம் முழுக்க முழுக்க ஒரு ராம பக்தனின் அதாவது அனுமனின் புகழ்பாடும் பகுதியாக இருந்தாலும் ராம சிந்தனையானது எவ்வளவு உயர்ந்த மகோன்னதமான நற்பேறை தரும் என்பதை தத்துவார்த்த அடிப்படையில் விளக்குகிறது கம்ப இராமாயண சுந்தர காண்டபகுதியாக இருந்தாலும் சரி வால்மிகியின் சுந்தர காண்ட பகுதியாக இருந்தாலும் சரி அது நமக்கு ராமனை பரிபூரணமாக உணர்த்துகிறது எனவே எல்லா காண்டங்களையும் படிப்பது சிறப்பு என்றாலும் சுந்தர காண்டம் படிப்பது வாழ்க்கை துக்கங்களை முடிவுக்கு கொண்டுவரும் .

Wednesday, November 11, 2020

ஷீரடி சாய்பாபாவின் கதை | Real Story of Shirdi SaiBaba


Shirdi Sai Baba, also called Sai Baba of Shirdi, (born 1838?—died October 15, 1918), spiritual leader dear to Hindu and Muslim devotees throughout India and in diaspora communities as far flung as the United States and the Caribbean. The name Sai Baba comes from sai, a Persian word used by Muslims to denote a holy person, and baba, Hindi for father.

Sai Baba’s early years are a mystery. Most accounts mention his birth as a Hindu Brahman and his subsequent adoption by a Sufi fakir, or mendicant. Later in life he claimed to have had a Hindu guru. Sai Baba arrived in Shirdi, in the western Indian state of Maharashtra, about 1858 and remained there until his death in 1918.

At first denounced by the villagers of Shirdi as a madman, by the turn of the century Sai Baba had a considerable following of Hindus and Muslims, attracted by his compelling teachings and his performance of apparent miracles, which often involved the granting of wishes and the healing of the sick. He wore a Muslim cap and for the better part of his life lived in an abandoned mosque in Shirdi, where he daily kept a fire burning, a practice reminiscent of some Sufi orders. Yet he named that mosque Dvarakamai, a decidedly Hindu name, and is said to have had substantial knowledge of the Puranas, the Bhagavadgita, and various branches of Hindu thought. Sai Baba’s teachings often took the form of paradoxical parables and displayed both his disdain for the rigid formalism that Hinduism and Islam could fall prey to and his empathy for the poor and diseased.

https://www.britannica.com

Thursday, October 29, 2020

அழிவடைந்து கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் திருகோணமலை


திருகோணமலை திருமங்கலாய் காட்டுப் பகுதியில் அழிவடைந்து கொண்டிருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன் ஆலயம் - பாதுகாக்க முன்வாருங்கள்!
பேராசிரியர் ப.புஸ்பரட்ணம் -
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்.
இலங்கையில் இந்து மதத்திற்கு 2500 ஆண்டுகளுக்கு குறையாத வரலாறு உண்டு. பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தி எழுந்த பாளி இலக்கியங்கள் கி.மு. 3 ஆம் நூற்றாண்டில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரே இலங்கையில் இந்து மதமும், அம்மதம் சார்ந்த ஆலயங்களும் இருந்ததாகக் கூறுகின்றன. அவற்றுள் கிழக்கிலங்கையில் இருந்த இற்றைக்கு 1600 ஆண்டுகளுக்கு முற்பட்ட மூன்று சிவன் ஆலயங்கள் பற்றி மகாவம்சம் கூறுகின்றது.










சம கால இலங்கையில் அதிலும் குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கான இந்து ஆலயங்கள் புதுப் பொலிவுடன் காணப்படுகின்றன. அவற்றுள் கணிசமான ஆலயங்கள் ஒல்லாந்தர் ஆட்சியின் பிற்பகுதியில் சுதேச மக்களுக்கு மத சுதந்திரம் வழங்கப்பட்டதன் பின்னர், பழைய ஆலயங்கள் இருந்த இடங்களில் அல்லது பழைய ஆலயங்களின் பெயரை நினைவுபடுத்தி புதிய இடங்களில் கட்டப்பட்டவையாக உள்ளன. போர்த்ததுக்கேயர் ஆட்சிக்கு முன்னர் இம்மாகாணங்களில் இருந்த ஆலயங்கள் பற்றி இலக்கியங்கள், புராணங்கள், கல்வெட்டுகள் மற்றும் ஐரோப்பியர் கால ஆவணங்கள் என்பவற்றில் பல வரலாற்றுக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. ஆயினும் தற்காலத்தில் அவ்வாலயங்கள் இருந்த ஒரு சில இடங்களில் மட்டும் அவ்வாலயங்களின் அழிபாடுகளை அடையாளம் காணமுடிகின்றன. ஆயினும் அவ்வழிபாடுகளை வைத்து அவ்வாலயங்களின் கட்டிட அமைப்பையோ, கலை மரபையோ, வழிபாட்டிலிருந்த தெய்வங்கள் பற்றியோ அறிய முடியவில்லை.
இதற்கு இம்மாகாணங்களின் கரையோரங்களில் ஆதிக்கம் செலுத்திய போர்த்துக்கேயரும். பின்வந்த ஒல்லாந்தரும் சுதேச மதங்களுக்கு எதிராகக் கடைப்பிடித்த கலையழிவுக் கொள்கையால் இவ்வாலயங்கள் அழிக்கப்பட்டதே காரணமாகும். அவ்வாறு அழிக்கப்பட்ட ஆலயங்களின் கட்டிடப் பாகங்களைக் கொண்டே அவர்களின் ஆட்சிக் காலக் கோட்டைகள், கிறிஸ்தவ ஆலயங்கள், நிர்வாகக் கட்டிடங்கள் என்பன கட்டப்பட்டன. இந்த உண்மையை அவர்களின் ஆட்சி ஆவணங்களே உறுதி செய்கின்றன. இதை தற்போது யாழ்ப்பாணக் கோட்டையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொல்லியல் ஆய்வில் கிடைத்து வரும் இந்து ஆலயங்களுக்கு உரிய கட்டிடப் பாகங்கள் மேலும் உறுதி செய்கின்றன.
இருந்த போதிலும் போத்துக்கேயர், ஒல்லாந்தர் ஆட்சியில் அவர்களின் ஆதிக்கம் பெரும்பாலும் இலங்கையின் கரையோரப் பகுதிகளை அண்டிய மாகாணங்களில் ஏற்பட்டிருந்ததனால் அவர்களின் கலையழிவுக் கொள்கையில் இருந்து மாகாணங்களின் உட்பகுதியில் இருந்த ஆலயங்கள் தப்பித்திருக்க இடமுண்டு. அவற்றில் ஒன்றாகவே திருமங்கலாய்ச் சிவன் ஆலயத்தைப் பார்க்கின்றேன். இவ்வாலயம் திருகோணமலை மாவட்டத்தில் கிளிவெட்டி பிரதேச சபைக்கு உட்பட்ட திருமங்கலாய் என்ற வரலாற்றுப் பழமைவாய்ந்த இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயம் பற்றி திருகோணமலை தலபுராணங்களில் ஒன்றான திருகரைசை புராணத்திலும் கூறப்பட்டுள்ளது. ஆயினும் தற்போது இவ்வாலயம் கிளிவெட்டியின் பிரதான வீதியில் இருந்து ஏறத்தாழ பத்து கிலோ மீற்றர் தொலைவில் மீன்சார வேலி போடப்பட்ட அடர்ந்த காட்டின் மத்தியில் காணப்படுகின்றது.
இவ்விடத்திற்குச் செல்லும் பாதையில் பிற்பகல் மூன்று மணிக்குப் பின்னர் யானைகளின் நடமாட்டத்தை எதிர்கொள்வது சாதாரண நிகழ்வாகவே இருக்கின்றது. இவற்றின் காரணமாகவே இதுவரை தொல்லியல், வரலாற்று ஆய்வாளர்கள் இவ்வாலயத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதில் தயக்கம் காட்டி வந்துள்ளனர் எனலாம். இந்நிலையில் திருமங்கலாய் பிரதேசத்தில் வாழ்ந்த மூதாதையினரின் வழித்தோன்றல்களாக தற்போது கிளிவெட்டியில் வாழ்ந்து வரும் திரு. வி. முத்துலிங்கம், திரு. கே. குலேந்திரராசா, திரு. கே. மாணிக்கராசா முதலியோர் இவ்வாலயத்தை ஆய்வு செய்வதற்கு எமக்கு வழங்கிய பாதுகாப்பு உத்தரவாதமும், உதவிகளும் அவ்வாலயத்தை நேரில் சென்று ஆய்வு செய்வதற்கு தூண்டுதலாக அமைந்தது.
இந்த ஆய்வில் எமது பல்கலைக்கழக தொல்லியல் இறுதி வருட மாணவர்களுடன் மத்திய கலாசார நிதிய யாழ்ப்பாண செயல்திட்ட முகாமையாளர் திரு. லஸ்மன் சந்தன மைத்திரிபால மற்றும் யாழ்ப்பாண பிராந்திய தொல்லியற் திணைக்கள அதிகாரிகளான திரு. மணிமாறன், திரு. கபிலன் ஆகியோர் பல சிரமங்களுக்கு மத்தியில் எம்முடன் இணைந்து பல நாட்களாக ஆய்வில் பங்கெடுத்தமை மாணவர்களுக்குப் புதிய ஆய்வு அனுபவத்தைக் கொடுத்தது. தற்போது இவ்வாலயத்தின் பெரும்பகுதி முற்றாக அழிவடைந்து அதன் அழிபாடுகள் ஆங்காங்கே கற்குவியல்களாகக் காணப்படுகின்றன. ஆயினும் அவ்வாலயத்தின் கட்டிட அமைப்பையும், அதன் கலை மரபையும், ஆலயம் தோன்றி வளர்ந்த காலத்தையும் உறுதிப்படுத்தக் கூடிய நம்பகரமான ஆதாரங்களை அடையாளம் காணக்கூடியதாக இருக்கின்றன.
கருங்கற்களையும், செங்கட்டிகளையும் கொண்டு கட்டப்பட்ட இவ்வாலயத்தின் கர்ப்பக்கிரகமும் அதன் மேலமைந்த விமானமும் முற்றாக அழிவடைந்து, அதன் கட்டிடப் பாகங்கள் ஆங்காங்கே சிதறுண்டு காணப்படுகின்றன. கர்ப்பக்கிரகம் இருந்த இடம் பிற்காலத்தில் புதையல் எடுப்போரால் தோண்டப்பட்டு அவ்விடம் தற்போது ஒரு குழியாகக் காணப்படுகின்றது. கர்ப்பக்கிரகத்திற்கு முன்னால் அழிவடைந்து காணப்படும் அந்தராளத்தில் ஆலய காலப் பொருட்கள் சிலவற்றுடன் பிற்காலத்தில் கொண்டுவந்து வைக்கப்பட்ட சிவலிங்கமும் காணப்படுகின்றது. அந்தராளத்திற்கு முன்னால் மகா மண்டபமும். பலிபீடமும் இருந்தமைக்கான அத்திபாரங்களும், அதற்குப் பயன்படுத்தப்பட்ட அலங்காரத் தன்மை கொண்ட பல கருங்கற் தூண்களும் காணப்படுகின்றன.
இம்மகாமண்டத்திற்கு வலப் பக்கமாக பயன்படுத்தப்படாத நிலையில் கருங்கற்களான மாடங்கள், தெய்வச் சிலைகள் வைப்பதற்குப் பயன்படுத்திய பீடங்கள் மற்றும் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன. மகா மண்டபத்தின் இடப் பக்கமாக ஆலயத்தில் பயன்படுத்தியிருந்த கோமுகிகள், சந்தனம் அரைக்கும் கற்கள், கபோத வடிவிலமைந்த அரைவட்டத் தூண்கள் காணப்படுகின்றன. மகா மண்டபத்திற்கு மிக அருகில் கருங்கற்களைக் கொண்டு சற்சதுர வடிவில் ஆழமாகக் கட்டப்பட்ட ஆலயத்தின் தீர்த்தக் கிணறு காணப்படுகிறது. மேலும் இவ்வாலயத்தைச் சுற்றி சுற்று மதில்களும் அவற்றிடையே துணைக் கோவில்களும் (பரிவாரத் தெய்வங்கள்) இருந்திருக்கலாம் என்பதை அவற்றிற்குரிய அத்திவாரங்களும் பரவலாகக் காணப்படும் செங்கட்டிகளும், கருங்கற்களும் உறுதிப்படுத்துகின்றன.
இந்த ஆய்வின் போது கட்டிட அழிபாடுகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட ஐந்து தமிழ்க் கல்வெட்டுக்கள் இவ்வாலய வரலாற்றுடன். கிழக்கிலங்கை வரலாறு பற்றிய ஆய்விலும் அதிக முக்கியத்துவம் வாய்ததாகக் காணப்படுகின்றது. எமக்குத் தெரிந்தவரை வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ள வரலாற்றுப் பழமை வாய்ந்த ஆலயங்களுடன் அவ்வாலயங்களின் வரலாறு கூறும் கல்வெட்டுக்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஆனால் அந்த இரண்டு அம்சங்களும் முதன் முறையாகத் திருமங்கலாயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இங்கு சிறப்பாக நோக்கத்தக்கது.
இங்கு கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களின் எழுத்தமைதியைக் கொண்டு அவை வேறுபட்ட காலங்களில், வேறுபட்ட நோக்கங்களுக்காக பொறிக்கப்பட்டவை என்பதை உறுதிப்படுத்த முடிகின்றது. அவற்றுள் கி.பி. 10 ஆம், கி.பி. 11 ஆம் நூற்றாண்டுக்குரிய மூன்று கல்வெட்டுக்கள் ஆலய நிர்வாக ஒழுங்குகள் பற்றியும், அவ்வாலயத்திற்கு சிற்றம்பலம் உடையார், திருவெண்ணைக்கூற்றன், திருவரங்கம் முதலான அதிகாரிகள், சமூகப் பெரியவர்கள் வழங்கிய தானங்கள் (காசு) பற்றியும் கூறுகின்றன. கி.பி. 15 ஆம் கி.பி. 16 ஆம் நூற்றாண்டுக்குரிய ஏனைய இரு கல்வெட்டுக்களும் இவ்வாலயத்திற்கு பசுக்கள் தானமாக வழங்கப்பட்ட செய்திகளைக் கூறுகின்றன.
இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள கங்குவேலி என்ற இடத்தில் திருமங்கலாய் ஆலயத்திற்குரிய மணி ஒன்று காணப்படுகின்றது. இது திருமங்கலாய் ஆலயத்தில் இருந்து பிற்காலத்தில் கங்குவேலிக்கு எடுத்துச் செல்லப்பட்ட மணியாகும். ஆவ்வாலய மணியில் திருமங்கலாய் கோவிலுக்கு அவ்வூரில் வசித்த (திருமங்கலாயில் வசித்த) “பத்திபெட்டி மகன் பத்தன் யுடைய உபையம்” என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இச்சாசனத்தின் எழுத்தமைதி கொண்டு இதன் காலம் கி.பி.17 ஆம் நூற்றாண்டிற்கு உரியதெனக் கூறலாம்.
ஆகவே மேற்கூறப்பட்ட கல்வெட்டுகள், ஆலய மணிச் சாசனம் என்பவற்றை ஆதாரங்களாகக் கொண்டு இவ்வாலயம் இற்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஏறத்தாழ 17 ஆம் நூற்றாண்டுவரை அழிவடையாத நிலையில் இப்பிரதேச மக்களால் வழிபடப்பட்டு வந்துள்ளமை தெரிய வருகின்றது. இவ்வாலயம் இலங்கைத் தமிழர் குறிப்பாக கிழக்கிலங்கைத் தமிழரின் பூர்வீக வரலாறு, பண்பாடு பற்றிய ஆய்வில் பின்வரும் அம்சங்களில் முக்கியத்துவம் பெறுகின்றதை அவதானிக்க முடிகின்றது.
1.இவ்வாலயம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து திராவிடக் கட்டிடக்கலை மரபில் தோன்றி வளர்ந்ததற்குப் பின்புலமாக திருமங்கலாய்ப் பிரதேசத்தின் தொன்மையான, செறிவான தமிழ்க் குடியிருப்புக்கள் இருந்துள்ளமை தெரிகின்றது. இந்த உண்மையை எமது ஆய்வின் போது இப்பிரதேசத்தில் ஆங்காங்கே பிற தேவைகளுக்காக வெட்டப்பட்டிருந்த ஆழமான குழிகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட 10 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மட்பாண்ட ஓடுகள், கூரை ஓடுகள், சுடுமண் உருவங்கள் முதலான சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன.
2.தமிழகத்தில் பல்லவர் ஆட்சியில் தோன்றிய பக்தி இயக்கத்தின் செல்வாக்கால் சமகால இலங்கையிலும் கற்களைப் பயன்படுத்தி திராவிடக் கலைமரபில் ஆலயங்கள் அமைக்கும் மரபு தோன்றி வளர்ந்ததைக் காணமுடிகின்றது. அவற்றுள் சோழ ஆட்சியின் தலைநகராக இருந்த பொலநறுவையில் கட்டப்பட்ட இரண்டாம் சிவதேவாலயமே இலங்கையில் இதுவரை ஓரளவு முழுமையாகக் கண்டுபிடிக்கப்பட்ட காலத்தால் முந்திய திராவிடக் கலைமரபில் கட்டப்பட்ட ஆலயம் எனக் கூறப்படுகின்றது. ஆனால் பொலநறுவை இராசதானி கால வரலாற்றில் எந்த இடத்திலும் சொல்லப்படாத திருமங்கலாய் சிவன் ஆலயம் அதன் கட்டிட அமைப்பிலும். கலைமரபிலும் சற்று மேலோங்கிக் காணப்படுவதன் முக்கியத்துவம் எதிர்காலத்தில் விரிவாக ஆராயபட வேண்டும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக உள்ளது.
3.சோழர் ஆட்சியிலும் சோழர் ஆட்சிக்குப் பின்னரும் பொலநறுவைக்கு அப்பால் வடக்கு – கிழக்கு இலங்கையிலேயே சோழ ஆட்சியாளர், தமிழ் அதிகாரிகள், தமிழ் வணிக கணங்கள் முதலியோரால் கட்டப்பட்ட ஆலயங்கள் பற்றிப் பல தமிழ்க் கல்வெட்டுக்கள் கூறுகின்றன. ஆயினும் அக்கல்வெட்டுக்கள் கூறும் ஆலயங்கள் எந்த இடங்களில் இருந்துள்ளன என்பது பெரும்பாலும் இதுவரை அடையாளம் காணப்படாமலே உள்ளன. ஆனால் திருமங்கலாய் ஆலயம் பற்றிய கல்வெட்டுக்களுடன், ஆலய அமைப்பையும்,  அதன் கலை மரபையும் அறியக்கூடிய அரிய பல ஆதாரங்கள் முதன் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாதாரங்கள் கிழக்கிலங்கை இந்துக்களின் வரலாறு, பண்பாடு பற்றிய எதிர்கால ஆய்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்தவையாகக் காணப்படுகின்றன.
4.இலங்கையில் அநுராதபுர இராசதானியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு சில பௌத்த ஆலயங்களே தற்காலத்திலும் வழிபாட்டிற்குரிய ஆலயங்களாகக் காணப்படுகின்றன. ஆனால் அநுராதபுரத்திலும், இலங்கையின் ஏனைய இடங்களிலும் கண்டுபிடிக்கப்பட்ட பெரும்பாலான ஆதிகால, இடைக்கால ஆலயங்கள் இலங்கையின் மரபுரிமைச் சின்னங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பிற்காலத்தில் அவை சுற்றுலாத் துறையின் முக்கிய மரபுரிமை மையங்களாகவே செயல்பட்டு வருகின்றன. ஆனால் திருமங்கலாய் சிவன் ஆலயம் கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து 1964 ஆம் ஆண்டு வரை அங்கு வாழ்ந்த மக்களின் பிரதான வழிபாட்டு ஆலயமாகவே இருந்துள்ளது. இந்த உண்மையை அவ்வாலயத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்களும், ஆலய மணியில் பொறிக்கப்பட்டிருக்கும் சாசனமும், அங்கு பரம்பரையாக வாழ்ந்து வந்த மக்களின் நில உரிமைப் பத்திரங்களும் உறுதிப்படுத்துகின்றன.
இவ்வாலயத்தின் பழமையையும், அதன் வரலாற்றுப் பெறுமதியையும் எமது ஊடகங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டியதைக் கவனத்தில் எடுத்துக் கொண்ட சக்தி தொலைக்காட்சி நிறுவனம் இவ்வாலயத்தை ஆவணப்படுத்த முன்வந்தது. இதற்காக அரச திணைக்கள அனுமதியுடன் அன்றைய சக்தி தொலைக்காட்சி முகாமையாளரான திருமதி. உமாச்சந்திரா பிரகாஷ் தலைமையில், சக்தி அலைவரிசை பிரதானி ஆர்.பி. அபர்ணாசுதன் வழிகாட்டலில் சக்தி வானொலி முகாமையாளர் திரு. ஞா. கணாதீபன் மற்றும் குழுவினரை திருமங்கலாய்க்கு அனுப்பி வைத்தது. அவர்கள் ஏழு மையில் தூரம் கால் நடையாகவும்,  உழவு இயந்திரத்திலும் அச்சத்துடன் காட்டு வழியாகப் பயணம் செய்து திருமங்கலாய் சிவன் ஆலயத்தில் காணப்பட்ட அனைத்து ஆதாரங்களையும் ஆவணப்படுத்தினர். இவ்வரிய பணியால் ஆய்வில் ஈடுபட்ட எமக்கும்,  அங்கு கூடியிருந்த மக்களுக்கும், தனது காலத்திலேயே இவ்வாலயத்தை மீளுருவாக்கம் செய்திட வேண்டும் என அயராது உழைத்து வரும் திரு. வி. முத்துலிங்கத்திற்கும் பெரும் மகிழ்ச்சியையும், நம்பிக்கையும் ஏற்படுத்தி இருந்தது.
இவ்வாலயத்தை ஆவணப்படுத்திய சக்தி ஊடக நிறுவனம் அது பற்றிய செய்தியை மக்களிடம் கொண்டு சென்ற போது இவ்வாலயம் பற்றி மேலும் அறிய வேண்டும், நேரில் பார்வையிட வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. இதை உணர்ந்து கொண்ட நாம் இவ்வாலயத்தை மீளுருவாக்கம் செய்து பாதுகாக்கும் நோக்கில் திருமதி. உமாச்சந்திரா பிரகாஷ் அவர்களுடன் இணைந்து பல முயற்சியகளில் ஈடுபட்டோம். அதற்காக ஜனாதிபதி, சம்பந்தப்பட்ட திணைக்களங்கள், அமைச்சின் அதிகாரிகள், கௌரவ இராஜங்க கல்வி அமைச்சர் மற்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் முதலியோரின் உதவிகளை நாடினோம். இலங்கைத் தொல்லியற் திணைக்களம் தனது அதிகாரிகளை அனுப்பி இவ்வாலயத்தின் பழமையை உறுதிப்படுத்திக் கொண்டது. மத்திய கலாசார நிதியம் ஆலயத்தை மீள்புனரமைப்புச் செய்வதைப் பரிசீலிப்பதாகப் பதில் அனுப்பியது. ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எமது கோரிக்கைகளைச் சாதகமாகப் பரிசீலிக்க முன்வந்த அதிகாரிகளும் பதவி மாற்றம் செய்யப்பட்டதால் தற்போது எல்லா முயற்சிகளையும் நாம் ஆரம்பத்தில் இருந்தே தொடங்க வேண்டிய நிலையில் உள்ளோம். அதற்கு நாட்டின் தற்போதைய நிலையும் சாதகமாகக் காணப்படவில்லை.
இருப்பினும் விலைமதிக்க முடியாத எமது மரபுரிமைச் சின்னம் ஒன்று எம் கண்முன்னே மண்ணுக்குள் மறைந்து போவதை வேடிக்கை பார்க்கும் நிலையும் இல்லை என்றே நம்புகின்றோம். ஏனெனில் கடந்த முப்பது ஆண்டு கால அனர்த்தத்தில் பல தடவைகள் இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் மீண்டும் தமது சொந்தக் கிராமங்களுக்குத் திரும்பிய போது தமது இருப்பிடங்களைக் காட்டிலும் தமது வழிபாட்டு ஆலயங்களை மீளுருவாக்கம் செய்வதற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்த பெருமைக்குரியவர்கள். இது மதத்தின் மீது எமது மக்களுக்கு உள்ள அதித நம்பிக்கையைக் காட்டுகின்றது.
ஆனால் திருமங்கலாய் சிவன் ஆலயம் ஒரு வழிபாட்டு ஆலயமாக மட்டும் பார்க்க முடியவில்லை. பலதரப்பட்ட மக்களின் பார்வையில் இவ்வாலயம் இலங்கையில் உள்ள தேசிய மரபுரிமைச் சின்னங்களில் ஒன்றாக நோக்கப்படலாம். ஆனால் இந்து மக்களைப் பொறுத்தவரை இவ்வாலயம் அவர்களின் எதிர்காலச் சந்ததியினரிடம் கையளிக்கப்பட வேண்டிய நம்பிக்கை நாற்று. அதற்கும் அப்பால் இலங்கையில் இந்து மதத்திற்கு நீண்ட வரலாறு உண்டு என்பதை அடையாளப்படுத்தும் விலை மதிக்க முடியாத மரபுரிமையின் அடையாளம். இம்மரபுரிமைச் சின்னங்களுக்குப் பின்னால் தமிழ் மக்களின் வரலாறும். பண்பாடும் பொதிந்து காணப்படுகின்றது.
ஆகவே இவ்வாலயத்தை மீட்டெடுத்து, மீளுருவாக்கம் செய்து, பாதுகாக்க அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து உழைக்க முன்வர வேண்டும். இப்பணி அரசியல், பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டது. இந்த உண்மையை உரியவர்களிடம் கொண்டு செல்வதற்கு எமது தகவல் தொடர்புச் சாதனங்கள் தமது பணியை தொடர்ந்தும் செய்வார்கள் என்ற நம்பிக்கை எப்போதும் எமக்குண்டு.

Sunday, August 9, 2020

ஸ்ரீ ருத்ரத்தில் மஹிமை

:


ஜாபாலோபனிஷத்தில் எதை ஜெபித்தால் மோக்ஷம் அடையலாம் என்ற கேள்விக்கு ருத்ரம் ஜெபித்தால் மோக்ஷம் அடையலாம் என்ற பதில் காணப்படுகிறது.

ருத்ரம் கேட்பது எத்தனை சிறந்ததோ ருத்ரத்தின் உயர்வைக் கேட்பது கூட அதே அளவு சிறப்பு வாய்ந்தது. அதனைக் கூறிக் கொண்டிருந்தால் பரமேஸ்வரன் ஆனந்தமடைவான்.

கர்ம காண்டத்திற்கும் ஞான காண்டதிற்கும் பயன்படுவதற்கு ஏற்றாற்போல் வேதத்திற்கு ஹிருதயமாக ருத்ரத்தை வைத்துள்ளார்கள்.

* "யஜுஷாம் ஸாரம்" என்பதால் ருத்ரம் யஜுர் வேதத்தின் ஸாரமாகும்.

* சாதாதப ஸ்மிருதியில்

"மத்யபானம் செய்தாலும் குருதாரகமனம் ஸ்வர்ணஸ்தேயம் ப்ரஹ்மஹத்யை இவற்றையெல்லாம் செய்தாலும் விபூதி தாரணம் கொண்டு ருத்ரத்தை ஜபம் செய்கிறவன் ஸமஸ்த பாவங்களிருந்து விடுபடுகிறான்"

* அத்ரி ஸ்மிருதியில்

மஹாபாபங்களை செய்தவனும் ருத்ர பாராயணம் மிக சிறந்தது என்று அறிந்து பதினொரு முறை ஜபிப்பதால் அந்த பாபங்களில் இருந்து விடுபடுகிறான் இதில் ஐயமில்லை

*யாக்ஞவல்ய ஸ்மிருதி

ஸுரபானம் செய்தவனும் ஸ்வர்ணஸ்தேயம் செய்தவனும் தண்ணீரில் இருந்து கொண்டு ருத்ரமும் புருஷ சூக்தமும் ஜபிப்பதால் எல்லா பாபங்களில் இருந்து விடுபடுகிறான்

* சத ருத்ரேண இதி’ என்று. ‘சத ருத்ரம் ஜபம் செய்தால் சித்தம் சுத்தமாகி மோட்சம் கிட்டும்’ என்கிறார்.

* வேதம் முழுவதும் ஒரு தடவை ஜபம் செய்வதால் அந்த பகலிலேயே சுத்தி அடைவான் ஆனால் ருத்ரத்தை ஜபிப்பதால் அந்த க்ஷணமே சுத்தியடைந்துவிடுவான்.

* மஹாபாரதத்தில் "வேதேசாஸ்ய விஞ்ஞான சதருத்ரீய முத்தமம்" மற்ற வேத பகுதிகளை விட ருத்ரம் உத்தமானது

அநுஸாசனிக பருவத்தில் காலையில் எழுந்து சுத்தமாக இருந்து அஞ்சலி பந்தத்துடன் ருத்ரத்தை ஜபிக்கின்றவன் அடைய முடியாது ஒன்றுமில்லை

* அவிமுக்தம் மம க்ஷேத்ரம் மந்நாம பரமம் சுபம்
சதருத்ரீய ஜாபித்வம் ததா சன்யாச முத்தமம்!’
அவிமுக்தத் தலத்தில் மரணமடைந்தவன், சன்னியாசம் ஏற்றுக் கொண்டவன், சத ருத்ரீயம் ஜபம் செய்பவன் – இவர்கள் மோட்சத்தை அடைவார்கள்’ என்று கூறப்படுகிறது. சத ருத்ரீயத்தின் பெருமை எவ்வளவு உயர்ந்தது என்பது இதன் மூலம் தெரிகிறது.

* யார் சத ருத்ரீயத்தை நிரந்தரம் அனுஷ்டானம் செய்வாரோ அவருக்கு ருத்ர க்ரந்தி பேதனம் நிகழ்ந்து கைவல்யத்தை அடைவார். சத ருத்ரீய ஜபம் சகல பாவங்களையும் பஸ்மம் செய்ய வல்லது என்பது பராசர புராணம் என்ற நூலில் கூறப்பட்டுள்ள விஷயம்.

* ததோ பூத ப்ரேத பிசாச பத்த ப்ரஹ்ம ராக்ஷச யக்ஷ யமதூத சாகினீ டாகினீ சர்வ ஸ்வாபத தஸ்கர ஜ்வராத் யுபத்ரவாத்!’ என்று மஹா ந்யாசத்தில் கூறப்பட்டுள்ளது.

* சத ருத்ரீய சன்யஸ்து’ – சத ருத்ரீயம் மட்டும் படிக்க வேண்டுமாம். பிரணவத்திற்கு எத்தனை முக்கியத்துவமோ சத ருத்ரீயத்திற்கும் அத்தனை முக்கியத்துவம் கூறப்படுகிறது.

* ஆயிரம் பிராயச்சித்த கர்மாக்களை விட ஒரு ருத்ர அத்யாயம் எத்தனையோ உயர்ந்தது. பிராயஸ்சித்த செயல்களால் செய்த பாவம் தீருமே தவிர, மீண்டும் பாவம் செய்ய வேண்டுமென்ற குணம் மாறாது. ருத்ர அத்யாயம் அதைச் செய்யக் கூடியது.

* ருத்ரத்தை யக்ஞம் போன்ற செயல்களிலும், உபாசனைகளிலும் ஏன் பயன்படுத்துகிறோம்? ‘இஷ்டப் ப்ராப்தி. அனிஷ்ட பரிஹாரம்’ ஏற்படுவதற்காக. அதாவது விரும்பியவை கிடைப்பதற்கும், விருப்பமில்லாதவை விலகுவதற்கும்

* நிரந்தரம் சிவனை பூஜிப்பவர்களைப் பார்த்து வியாதிகளும் பாவங்களும் உபத்திரவங்களும் பூத பிரேத பிசாசுகளும் விலகி நின்று பயம் கொள்ளும். ‘சர்வே ஜ்வலந்தம் பஸ்யந்து’ – அவற்றுக்கு இவர்கள் அக்னி ஜ்வாலை போல் தென்படுவார்களாம்

* சிவனை தியானித்து சத ருத்ரீயம் படித்தால் பூமியிலுள்ள அனைத்து செல்வத்தையும் சிவனுக்கு அர்ப்பணித்த புண்ணியம் கிடைக்கும். ஒரு முறை ருத்ரம் ஜபம் செய்தால் பூமியிலுள்ள சகல பொருட்களாலும் சிவனை பூஜித்த பலன் கிடைக்கும்’ என்று கூறியுள்ளார்.

इडा देवहूर्मनुर्यज्ञनीर्बृहस्पतिरुक्थामदानि
शसिषद्विश्वेदेवाः सूक्तवाचः पृथिवीमातर्मा
मा हिसीर्मधु मनिष्ये मधु जनिष्ये मधु वक्ष्यामि
मधु वदिष्यामि मधुमतीं देवेभ्यो वाचमुद्यास
शुश्रूषेण्यां मनुष्येभ्यस्तं मा देवा अवन्तु
शोभायै पितरोऽनुमदन्तु ॥

அபூர்வ நக்ஷத்திரங்கள் பற்றிய முழு ரகசியங்கள்.

 நக்ஷசத்திரம் என்பதை "நக்ஷ்" என்றும் "க்ஷேத்திரம்" என்றும் இரண்டு சொற்களாக பிரிக்கலாம். "நக்ஷ்" என்றால் "ஆகாயம்" என்று பொருள்."க்ஷேத்திரம்" என்றால் "இடம்" என்று பொருள்.எனவே நக்ஷ்சத்திரம் என்றால் ஆகாயத்தில் ஒரு இடம் எனப்பொருள்படும்.

ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஆகாயத்தில் சந்திரன் எந்த இடத்தில் நிற்கின்றானோ அந்த இடத்தை நக்ஷ்சத்திரம் எனக்குறிப்பிடுவது வழக்கம்.
நட்சத்திர மண்டலம் 27 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது,அவைகளே 27 நட்சத்திரங்களாகும். 27 நட்சத்திரங்களின் பெயர்கள் கீழே தரப்பட்டுள்ளன.

நட்சத்திர பெயர்கள்
***********************

1.அஸ்வினி 2. பரணி 3.கிருத்திகை 4.ரோஹிணி 5.மிருகசீரிடம் 6.திருவாதிரை 7.புனர்பூசம் 8.பூசம் 9.ஆயில்யம்

10.மகம் 11.பூரம் 12.உத்திரம் 13.ஹஸ்தம் 14.சித்திரை 15.ஸ்வாதி 16.விசாகம் 17. அனுசம் 18. கேட்டை

19.மூலம் 20.பூராடம் 21.உத்திராடம் 22.திருவோணம் 23.அவிட்டம் 24.சதயம் 25.பூரட்டாதி 26.உத்திரட்டாதி 27. ரேவதி

நட்சத்திர வடிவம்
*******************

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - யோனி, அடுப்பு,
முக்கோணம்
கிருத்திகை - கத்தி, கற்றை, வாள்,
தீஜ்வாலை
ரோஹிணி - தேர், வண்டி, கோயில்,
ஆலமரம், ஊற்றால், சகடம்
மிருகசீரிடம் - மான் தலை,
தேங்கைக்கண்
திருவாதிரை - மனித தலை, வைரம்,
கண்ணீர்துளி
புனர்பூசம் - வில்
பூசம் - புடலம்பூ, அம்புக்கூடு,
பசுவின்மடி
ஆயில்யம் - சர்ப்பம்,அம்மி
மகம் - வீடு,பல்லக்கு,நுகம்
பூரம் - கட்டில்கால், கண்கள்,
அத்திமரம், சதுரம், மெத்தை
உத்திரம் - கட்டில்கால், கம்பு, குச்சி,
மெத்தை
ஹஸ்தம் - கை
சித்திரை - முத்து,புலிக்கண்
ஸ்வாதி - பவளம்,தீபம்
விசாகம் - முறம், தோரணம், குயவன் சக்கரம்
அனுசம் - குடை, முடப்பனை,
தாமரை, வில்வளசல்
கேட்டை - குடை,குண்டலம்,ஈட்டி
மூலம் - அங்குசம்,சிங்கத்தின்
வால், பொற்காளம்,
யானையின் துதிக்கை
பூராடம் - கட்டில்கால்
உத்திராடம் - கட்டில்கால்
திருவோணம் - முழக்கோல், மூன்று.
பாதச்சுவடு,அம்பு
அவிட்டம் - மிருதங்கம்,உடுக்கை
சதயம் - பூங்கொத்து,
மூலிகைகொத்து
பூரட்டாதி - கட்டில்கால்
உத்திரட்டாதி - கட்டில்கால்
ரேவதி - மீன்,படகு

நட்சத்திரப்பெயர்களுக்குரிய தமிழ் அர்த்த்ம்.
************************************************

அஸ்வினி - குதிரைத்தலை
பரணி - தாங்கிப்பிடிப்பது
கிருத்திகை - வெட்டுவது
ரோஹிணி - சிவப்பானது
மிருகசீரிடம் - மான் தலை
திருவாதிரை - ஈரமானது
புனர்பூசம் - திரும்ப கிடைத்த ஒளி
பூசம் - வளம் பெருக்குவது
ஆயில்யம் - தழுவிக்கொள்வது
மகம் - மகத்தானது
பூரம் - பாராட்ட த்தகுந்தது
உத்திரம் - சிறப்பானது
ஹஸ்தம் - கை
சித்திரை - ஒளி வீசுவது
ஸ்வாதி - சுதந்தரமானது
விசாகம் - பிளவுபட்டது
அனுசம் - வெற்றி
கேட்டை - மூத்தது
மூலம் - வேர்
பூராடம் - முந்தைய வெற்றி
உத்திராடம் - பிந்தைய வெற்றி
திருவோணம் - படிப்பறிவு உடையது,
காது
அவிட்டம் - பணக்காரன்
சதயம் - நூறு மருத்துவர்கள்
பூரட்டாதி - முன் மங்கள பாதம்
உத்திரட்டாதி - பின் மங்கள பாதம்
ரேவதி - செல்வம் மிகுந்தது

நட்சத்திர அதிபதிகள்.
************************

அஸ்வினி - கேது
பரணி - சுக்கிரன்
கிருத்திகை - சூரியன்
ரோஹிணி - சந்திரன்
மிருகசீரிடம் - செவ்வாய்
திருவாதிரை - ராஹு
புனர்பூசம் - குரு
பூசம் - சனி
ஆயில்யம் - புதன்
மகம் - கேது
பூரம் - சுக்கிரன்
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சந்திரன்
சித்திரை - செவ்வாய்
ஸ்வாதி - ராஹு
விசாகம் - குரு
அனுசம் - சனி
கேட்டை - புதன்
மூலம் - கேது
பூராடம் - சுக்கிரன்
உத்திராடம் - சூரியன்
திருவோணம் - சந்திரன்
அவிட்டம் - செவ்வாய்
சதயம் - ராஹு
பூரட்டாதி - குரு
உத்திரட்டாதி - சனி
ரேவதி - புதன்

சராதி நட்சத்திரப்பிரிவுகள்
*****************************

அஸ்வினி - சரம்
பரணி - ஸ்திரம்
கிருத்திகை - உபயம்
ரோஹிணி - சரம்
மிருகசீரிடம் - ஸ்திரம்
திருவாதிரை - உபயம்
புனர்பூசம் - சரம்
பூசம் - ஸ்திரம்
ஆயில்யம் - உபயம்
மகம் - சரம்
பூரம் - ஸ்திரம்
உத்திரம் - உபயம்
ஹஸ்தம் - சரம்
சித்திரை - ஸ்திரம்
ஸ்வாதி - உபயம்
விசாகம் - சரம்
அனுசம் - ஸ்திரம்
கேட்டை - உபயம்
மூலம் - சரம்
பூராடம் - ஸ்திரம்
உத்திராடம் - உபயம்
திருவோணம் - சரம்
அவிட்டம் - ஸ்திரம்
சதயம் - உபயம்
பூரட்டாதி - சரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்
ரேவதி - உபயம்

மூலாதி நட்சத்திரப்பிரிவுகள்
*******************************

அஸ்வினி - தாது
பரணி - மூலம்
கிருத்திகை - ஜீவன்
ரோஹிணி - தாது
மிருகசீரிடம் - மூலம்
திருவாதிரை - ஜீவன்
புனர்பூசம் - தாது
பூசம் - மூலம்
ஆயில்யம் - ஜீவன்
மகம் - தாது
பூரம் - மூலம்
உத்திரம் - ஜீவன்
ஹஸ்தம் - தாது
சித்திரை - மூலம்
ஸ்வாதி - ஜீவன்
விசாகம் - தாது
அனுசம் - மூலம்
கேட்டை - ஜீவன்
மூலம் - தாது
பூராடம் - மூலம்
உத்திராடம் - ஜீவன்
திருவோணம் - தாது
அவிட்டம் - மூலம்
சதயம் - ஜீவன்
பூரட்டாதி - தாது
உத்திரட்டாதி - மூலம்
ரேவதி - ஜீவன்

பிரம்மாதி நட்சத்திரப்பிரிவுகள்
**********************************

அஸ்வினி - பிரம்மா
பரணி - சிவன்
கிருத்திகை - விஷ்ணு
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சிவன்
திருவாதிரை - விஷ்ணு
புனர்பூசம் - பிரம்மா
பூசம் - சிவன்
ஆயில்யம் - விஷ்ணு
மகம் - பிரம்மா
பூரம் - சிவன்
உத்திரம் - விஷ்ணு
ஹஸ்தம் - பிரம்மா
சித்திரை - சிவன்
ஸ்வாதி - விஷ்ணு
விசாகம் - பிரம்மா
அனுசம் - சிவன்
கேட்டை - விஷ்ணு
மூலம் - பிரம்மா
பூராடம் - சிவன்
உத்திராடம் - விஷ்ணு
திருவோணம் - பிரம்மா
அவிட்டம் - சிவன்
சதயம் - விஷ்ணு
பூரட்டாதி - பிரம்மா
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - விஷ்ணு

நட்சத்திர திரிதோஷம்
*************************

அஸ்வினி - வாதம்
பரணி - பித்தம்
கிருத்திகை - கபம்
ரோஹிணி - கபம்
மிருகசீரிடம் - பித்தம்
திருவாதிரை - வாதம்
புனர்பூசம் - வாதம்
பூசம் - பித்தம்
ஆயில்யம் - கபம்
மகம் - கபம்
பூரம் - பித்தம்
உத்திரம் - வாதம்
ஹஸ்தம் - வாதம்
சித்திரை - பித்தம்
ஸ்வாதி - கபம்
விசாகம் - கபம்
அனுசம் - பித்தம்
கேட்டை - வாதம்
மூலம் - வாதம்
பூராடம் - பித்தம்
உத்திராடம் - கபம்
திருவோணம் - கபம்
அவிட்டம் - பித்தம்
சதயம் - வாதம்
பூரட்டாதி - வாதம்
உத்திரட்டாதி - பித்தம்
ரேவதி - கபம்

புருஷார்த்த நட்சத்திரப்பிரிவுகள்
************************************

அஸ்வினி - தர்மம்
பரணி - ஆர்த்தம்
கிருத்திகை - காமம்
ரோஹிணி - மோட்சம்
மிருகசீரிடம் - மோட்சம்
திருவாதிரை - காமம்
புனர்பூசம் - ஆர்த்தம்
பூசம் - தர்மம்
ஆயில்யம் - தர்மம்
மகம் - ஆர்த்தம்
பூரம் - காமம்
உத்திரம் - மோட்சம்
ஹஸ்தம் - மோட்சம்
சித்திரை - காமம்
ஸ்வாதி - ஆர்த்தம்
விசாகம் - தர்மம்
அனுசம் - தர்மம்
கேட்டை - ஆர்த்தம்
மூலம் - காமம்
பூராடம் - மோட்சம்
உத்திராடம் - மோட்சம்
அபிஜித் - காமம்
திருவோணம் - ஆர்த்தம்
அவிட்டம் - தர்மம்
சதயம் - தர்மம்
பூரட்டாதி - ஆர்த்தம்
உத்திரட்டாதி - காமம்
ரேவதி - மோட்சம்

நட்சத்திர தேவதைகள்
*************************

அஸ்வினி - அஸ்வினி குமாரர்
பரணி - யமன்
கிருத்திகை - அக்னி
ரோஹிணி - பிரஜாபதி
மிருகசீரிடம் - சோமன்
திருவாதிரை - ருத்ரன்
புனர்பூசம் - அதிதி
பூசம் - பிரஹஸ்பதி
ஆயில்யம் - அஹி
மகம் - பித்ருக்கள்
பூரம் - பகன்
உத்திரம் - ஆர்யமான்
ஹஸ்தம் - அர்க்கன்/சாவித்ரி
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சக்ராக்னி
அனுசம் - மித்ரன்
கேட்டை - இந்திரன்
மூலம் - நைருதி
பூராடம் - அபா
உத்திராடம் - விஸ்வதேவன்
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வாசுதேவன்
சதயம் - வருணன்
பூரட்டாதி - அஜைகபாதன்
உத்திரட்டாதி - அஹிர்புத்தன்யன்
ரேவதி - பூசன்

நட்சத்திர ரிஷிகள்
*********************

அஸ்வினி - காத்யாயனா
பரணி - ரிஷிபத்தன்யா
கிருத்திகை - அக்னிவேஷா
ரோஹிணி - அனுரோஹி
மிருகசீரிடம் - ஸ்வேதயி
திருவாதிரை - பார்கவா
புனர்பூசம் - வாத்ஸாயனா
பூசம் - பரத்வாஜா
ஆயில்யம் - ஜடுகர்ணா
மகம் - வ்யாக்ரபாதா
பூரம் - பராசரா
உத்திரம் - உபசிவா
ஹஸ்தம் - மாண்டவ்யா
சித்திரை - கௌதமா
ஸ்வாதி - கௌண்டின்யா
விசாகம் - கபி
அனுசம் - மைத்ரேயா
கேட்டை - கௌசிகா
மூலம் - குட்சா
பூராடம் - ஹரிதா
உத்திராடம் - கஸ்யபா
அபிஜித் - சௌனகா
திருவோணம் - அத்ரி
அவிட்டம் - கர்கா
சதயம் - தாக்ஷாயணா
பூரட்டாதி - வத்ஸா
உத்திரட்டாதி - அகஸ்தியா
ரேவதி - சந்தாயணா

நட்சத்திர கோத்திரங்கள்
***************************

அஸ்வினி - அகஸ்தியா
பரணி - வஷிஷ்டா
கிருத்திகை - அத்ரி
ரோஹிணி - ஆங்கீரஸா
மிருகசீரிடம் - புலஸ்தியா
திருவாதிரை - புலஹா
புனர்பூசம் - க்ரது
பூசம் - அகஸ்தியா
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - அத்ரி
பூரம் - ஆங்கீரஸா
உத்திரம் - புலஸ்தியா
ஹஸ்தம் - புலஹா
சித்திரை - க்ரது
ஸ்வாதி - அகஸ்தியா
விசாகம் - வஷிஷ்டா
அனுசம் - அத்ரி
கேட்டை - ஆங்கீரஸா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஹா
உத்திராடம் - க்ரது
அபிஜித் - அகஸ்தியா
திருவோணம் - வஷிஷ்டா
அவிட்டம் - அத்ரி
சதயம் - ஆங்கீரஸா
பூரட்டாதி - புலஸ்தியா
உத்திரட்டாதி - புலஹா
ரேவதி - க்ரது

அந்தரங்க பஹிரங்க நட்சத்திரங்கள்.
****************************************

அஸ்வினி - பஹிரங்கம்
பரணி - பஹிரங்கம்
கிருத்திகை - அந்தரங்கம்
ரோஹிணி - அந்தரங்கம்
மிருகசீரிடம் - அந்தரங்கம்
திருவாதிரை - அந்தரங்கம்
புனர்பூசம் - பஹிரங்கம்
பூசம் - பஹிரங்கம்
ஆயில்யம் - பஹிரங்கம்
மகம் - அந்தரங்கம்
பூரம் - அந்தரங்கம்
உத்திரம் - அந்தரங்கம்
ஹஸ்தம் - அந்தரங்கம்
சித்திரை - பஹிரங்கம்
ஸ்வாதி - பஹிரங்கம்
விசாகம் - பஹிரங்கம்
அனுசம் - அந்தரங்கம்
கேட்டை - அந்தரங்கம்
மூலம் - அந்தரங்கம்
பூராடம் - அந்தரங்கம்
உத்திராடம் - பஹிரங்கம்
திருவோணம் - பஹிரங்கம்
அவிட்டம் - அந்தரங்கம்
சதயம் - அந்தரங்கம்
பூரட்டாதி - அந்தரங்கம்
உத்திரட்டாதி - அந்தரங்கம்
ரேவதி - பஹிரங்கம்

நட்சத்திரங்களூம் தானங்களும்
**********************************

அஸ்வினி - பொன் தானம்
பரணி - எள் தானம்
கிருத்திகை - அன்ன தானம்
ரோஹிணி - பால் தானம்
மிருகசீரிடம் - கோதானம்
திருவாதிரை - எள் தானம்
புனர்பூசம் - அன்ன தானம்
பூசம் - சந்தன தானம்
ஆயில்யம் - காளைமாடு தானம்
மகம் - எள் தானம்
பூரம் - பொன் தானம்
உத்திரம் - எள் தானம்
ஹஸ்தம் - வாகன தானம்
சித்திரை - வஸ்திர தானம்
ஸ்வாதி - பணம் தானம்
விசாகம் - அன்ன தானம்
அனுசம் - வஸ்திர தானம்
கேட்டை - கோ தானம்
மூலம் - எருமை தானம்
பூராடம் - அன்ன தானம்
உத்திராடம் - நெய் தானம்
திருவோணம் - வஸ்திர தானம்
அவிட்டம் - வஸ்திர தானம்
சதயம் - சந்தன தானம்
பூரட்டாதி - பொன் தானம்
உத்திரட்டாதி - வெள்ளாடு தானம்
ரேவதி - பொன் தானம்

நட்சத்திர வீதி
****************

அஸ்வினி - நாக வீதி
பரணி - நாக வீதி
கிருத்திகை - நாக வீதி
ரோஹிணி - கஜ வீதி
மிருகசீரிடம் - கஜ வீதி
திருவாதிரை - கஜ வீதி
புனர்பூசம் - ஐராவத வீதி
பூசம் - ஐராவத வீதி
ஆயில்யம் - ஐராவத வீதி
மகம் - ஆர்ஷப வீதி
பூரம் - ஆர்ஷப வீதி
உத்திரம் - ஆர்ஷப வீதி
ஹஸ்தம் - கோ வீதி
சித்திரை - கோ வீதி
ஸ்வாதி - கோ வீதி
விசாகம் - ஜாரத்கவீ வீதி
அனுசம் - ஜாரத்கவீ வீதி
கேட்டை - ஜாரத்கவீ வீதி
மூலம் - அஜ வீதி
பூராடம் - அஜ வீதி
உத்திராடம் - அஜ வீதி
திருவோணம் - மிருக வீதி
அவிட்டம் - மிருக வீதி
சதயம் - மிருக வீதி
பூரட்டாதி - வைஷ்வானரீ வீதி
உத்திரட்டாதி - வைஷ்வானரீ வீதி
ரேவதி - வைஷ்வானரீ வீதி

நட்சத்திர வீதி(வேறு)
************************

அஸ்வினி - பசு வீதி
பரணி - நாக வீதி
கிருத்திகை - நாக வீதி
ரோஹிணி - யானை வீதி
மிருகசீரிடம் - யானை வீதி
திருவாதிரை - யானை வீதி
புனர்பூசம் - ஐராவத வீதி
பூசம் - ஐராவத வீதி
ஆயில்யம் - ஐராவத வீதி
மகம் - வ்ரிஷப வீதி
பூரம் - வ்ரிஷப வீதி
உத்திரம் - வ்ரிஷப வீதி
ஹஸ்தம் - ஆடு வீதி
சித்திரை - ஆடு வீதி
ஸ்வாதி - நாக வீதி
விசாகம் - ஆடு வீதி
அனுசம் - மான் வீதி
கேட்டை - மான் வீதி
மூலம் - மான் வீதி
பூராடம் - தகன வீதி
உத்திராடம் - தகன வீதி
திருவோணம் - கன்றுகுட்டி வீதி
அவிட்டம் - கன்றுகுட்டி வீதி
சதயம் - கன்றுகுட்டி வீதி
பூரட்டாதி - பசு வீதி
உத்திரட்டாதி - தகன வீதி
ரேவதி - பசு வீதி

நட்சத்திரங்களும் லோஹபாதங்களும்
*****************************************


அஸ்வினி - ஸ்வர்ண பாதம்
பரணி - ஸ்வர்ண பாதம்
கிருத்திகை - இரும்பு பாதம்
ரோஹிணி - இரும்பு பாதம்
மிருகசீரிடம் - இரும்பு பாதம்
திருவாதிரை - வெள்ளி பாதம்
புனர்பூசம் - வெள்ளி பாதம்
பூசம் - வெள்ளி பாதம்
ஆயில்யம் - வெள்ளி பாதம்
மகம் - வெள்ளி பாதம்
பூரம் - வெள்ளி பாதம்
உத்திரம் - வெள்ளி பாதம்
ஹஸ்தம் - வெள்ளி பாதம்
சித்திரை - வெள்ளி பாதம்
ஸ்வாதி - வெள்ளி பாதம்
விசாகம் - வெள்ளி பாதம்
அனுசம் - வெள்ளி பாதம்
கேட்டை - தாமிர பாதம்
மூலம் - தாமிர பாதம்
பூராடம் - தாமிர பாதம்
உத்திராடம் - தாமிர பாதம்
திருவோணம் - தாமிர பாதம்
அவிட்டம் - தாமிர பாதம்
சதயம் - தாமிர பாதம்
பூரட்டாதி - தாமிர பாதம்
உத்திரட்டாதி - தாமிர பாதம்
ரேவதி - ஸ்வர்ண பாதம்

நட்சத்திர குணம்
*******************

அஸ்வினி - க்ஷிப்ரம்/லகு
பரணி - உக்கிரம்/குரூரம்
கிருத்திகை - மிஸ்ரம்/சாதாரணம்
ரோஹிணி - ஸ்திரம்/துருவம்
மிருகசீரிடம் - மிருது/மைத்ரம்
திருவாதிரை - தாருணம்/தீக்ஷணம்
புனர்பூசம் - சரம்/சலனம்
பூசம் - க்ஷிப்ரம்/லகு
ஆயில்யம் - தாருணம்/தீக்ஷணம்
மகம் - உக்கிரம்/குரூரம்
பூரம் - உக்கிரம்/குரூரம்
உத்திரம் - ஸ்திரம்/துருவம்
ஹஸ்தம் - க்ஷிப்ரம்/லகு
சித்திரை - மிருது/மைத்ரம்
ஸ்வாதி - சரம்/சலனம்
விசாகம் - மிஸ்ரம்/சாதாரணம்
அனுசம் - மிருது/மைத்ரம்
கேட்டை - தீக்ஷணம்/தாருணம்
மூலம் - தீக்ஷணம்/தாருணம்
பூராடம் - உக்கிரம்/குரூரம்
உத்திராடம் - ஸ்திரம்/துருவம்
திருவோணம் - சரம்/சலனம்
அவிட்டம் - சரம்/சலனம்
சதயம் - சரம்/சலனம்
பூரட்டாதி - உக்கிரம்/குரூரம்
உத்திரட்டாதி - ஸ்திரம்/துருவம்
ரேவதி - மிருது/மைத்ரம்

(க்ஷிப்ரம்-துரிதமானது) (உக்கிரம்,குரூரம்-கொடியது)
(சரம், சலனம்-அசைகின்றது)
(ஸ்திரம்,துருவம்- அசையாதது) (தாருணம்-கொடூரமானது) (லகு-கனமில்லாதது,சிறியது)
(தீக்ஷணம்-கூர்மையானது)

நட்சத்திர கணம்
******************

அஸ்வினி - தேவம்
பரணி - மனுசம்
கிருத்திகை - ராக்ஷசம்
ரோஹிணி - மனுசம்
மிருகசீரிடம் - தேவம்
திருவாதிரை - மனுசம்
புனர்பூசம் - தேவம்
பூசம் - தேவம்
ஆயில்யம் - ராக்ஷசம்
மகம் - ராக்ஷசம்
பூரம் - மனுசம்
உத்திரம் - மனுசம்
ஹஸ்தம் - தேவம்
சித்திரை - ராக்ஷசம்
ஸ்வாதி - தேவம்
விசாகம் - ராக்ஷசம்
அனுசம் - தேவம்
கேட்டை - ராக்ஷசம்
மூலம் - ராக்ஷசம்
பூராடம் - மனுசம்
உத்திராடம் - மனுசம்
திருவோணம் - தேவம்
அவிட்டம் - ராக்ஷசம்
சதயம் - ராக்ஷசம்
பூரட்டாதி - மனுசம்
உத்திரட்டாதி - மனுசம்
ரேவதி - தேவம்

தேவம்- அழகு, ஈகைகுணம், விவேகம், நல்லொழுக்கம், அல்ப போஜனம், பேரறிவு

மனுசம்- அபிமானம், செல்வமுடைமை, கிருபை, அதிகாரம், பந்துக்களை பாதுகாத்தல்

ராக்ஷசம்- பராக்கிரமம், அதிமோகம், கலகப்பிரியம், துக்கம், தீயசெயல், பயங்கர வடிவம்

தாமசாதி நட்சத்திர குணங்கள்
**********************************

அஸ்வினி - தாமசம்
பரணி - ராஜசம்
கிருத்திகை - ராஜசம்
ரோஹிணி - ராஜசம்
மிருகசீரிடம் - தாமசம்
திருவாதிரை - தாமசம்
புனர்பூசம் - சாத்வீகம்
பூசம் - தாமசம்
ஆயில்யம் - தாமசம்
மகம் - தாமசம்
பூரம் - ராஜசம்
உத்திரம் - ராஜசம்
ஹஸ்தம் - ராஜசம்
சித்திரை - தாமசம்
ஸ்வாதி - தாமசம்
விசாகம் - சாத்வீகம்
அனுசம் - தாமசம்
கேட்டை - சாத்வீகம்
மூலம் - தாமசம்
பூராடம் - ராஜசம்
உத்திராடம் - ராஜசம்
திருவோணம் - ராஜசம்
அவிட்டம் - தாமசம்
சதயம் - தாமசம்
பூரட்டாதி - சாத்வீகம்
உத்திரட்டாதி - தாமசம்
ரேவதி - சாத்வீகம்

சாத்வீகம்-நுட்பமான புத்தி, ஞானம், தெய்வபக்தி, குருபக்தி, தீய செயல்களில் ஈடுபடாதிருத்தல்

ராஜசம்- உயிர்கள் மீது இரக்கம், நல்லறிவு, இனிமையான பேச்சு,
கல்வியில் தேர்ச்சி, இன்பசுகம், பரோபகாரம், யாருக்கும் தீங்கு நினையாமை, தான தர்மம் செய்வதில் விருப்பம், நடுநிலையோடு செயல்படுதல்

தாமசம்- அதிக தூக்கம், பொய் பேசுதல், நிதானமின்மை, சோம்பேறித்தனம், பாவசிந்தை, முன்யோசனை இல்லாமை

நட்சத்திர யோனி
*******************

அஸ்வினி - ஆண் குதிரை
பரணி - பெண் யானை
கிருத்திகை - பெண் ஆடு
ரோஹிணி - ஆண் நாகம்
மிருகசீரிடம் - பெண் சாரை
திருவாதிரை - ஆண் நாய்
புனர்பூசம் - பெண் பூனை
பூசம் - ஆண் ஆடு
ஆயில்யம் - ஆண் பூனை
மகம் - ஆண் எலி
பூரம் - பெண் எலி
உத்திரம் - ஆண் எருது
ஹஸ்தம் - பெண் எருமை
சித்திரை - ஆண் புலி
ஸ்வாதி - ஆண் எருமை
விசாகம் - பெண் புலி
அனுசம் - பெண் மான்
கேட்டை - ஆண் மான்
மூலம் - பெண் நாய்
பூராடம் - ஆண் குரங்கு
உத்திராடம் - பெண் கீரி
திருவோணம் - பெண் குரங்கு
அவிட்டம் - பெண் சிங்கம்
சதயம் - பெண் குதிரை
பூரட்டாதி - ஆண் சிங்கம்
உத்திரட்டாதி - பெண் பசு
ரேவதி - பெண் யானை

நட்சத்திர கோத்திரங்கள்(வேறு)
***********************************

அஸ்வினி - மரீசா
பரணி - மரீசா
கிருத்திகை - மரீசா
ரோஹிணி - மரீசா
மிருகசீரிடம் - அத்ரி
திருவாதிரை - அத்ரி
புனர்பூசம் - அத்ரி
பூசம் - அத்ரி
ஆயில்யம் - வஷிஷ்டா
மகம் - வஷிஷ்டா
பூரம் - வஷிஷ்டா
உத்திரம் - வஷிஷ்டா
ஹஸ்தம் - ஆங்கீரஸா
சித்திரை - ஆங்கீரஸா
ஸ்வாதி - ஆங்கீரஸா
விசாகம் - ஆங்கீரஸா
அனுசம் - புலஸ்தியா
கேட்டை - புலஸ்தியா
மூலம் - புலஸ்தியா
பூராடம் - புலஸ்தியா
உத்திராடம் - புலஹா
திருவோணம் - புலஹா
அவிட்டம் - புலஹா
சதயம் - க்ரது
பூரட்டாதி - க்ரது
உத்திரட்டாதி - க்ரது
ரேவதி - க்ரது

நட்சத்திர திசைகள்
**********************

அஸ்வினி - கிழக்கு
பரணி - கிழக்கு
கிருத்திகை - கிழக்கு
ரோஹிணி - கிழக்கு
மிருகசீரிடம் - கிழக்கு
திருவாதிரை - தென்கிழக்கு
புனர்பூசம் - தென்கிழக்கு
பூசம் - தென்கிழக்கு
ஆயில்யம் - தெற்கு
மகம் - தெற்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தெற்கு
ஹஸ்தம் - தென்மேற்கு
சித்திரை - தென்மேற்கு
ஸ்வாதி - மேற்கு
விசாகம் - மேற்கு
அனுசம் - மேற்கு
கேட்டை - மேற்கு
மூலம் - வடமேற்கு
பூராடம் - வடமேற்கு
உத்திராடம் - வடக்கு
திருவோணம் - வடக்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடக்கு
பூரட்டாதி - வடக்கு
உத்திரட்டாதி - வடக்கு
ரேவதி - வடக்கு

நட்சத்திர திசைகள்(வேறு)
*****************************

அஸ்வினி - கிழக்கு
பரணி - தென்கிழக்கு
கிருத்திகை - தெற்கு
ரோஹிணி - தென்மேற்கு
மிருகசீரிடம் - மேற்கு
திருவாதிரை - வடமேற்கு
புனர்பூசம் - வடக்கு
பூசம் - வடகிழக்கு
ஆயில்யம் - கிழக்கு
மகம் - தென்கிழக்கு
பூரம் - தெற்கு
உத்திரம் - தென்மேற்கு
ஹஸ்தம் - மேற்கு
சித்திரை - வடமேற்கு
ஸ்வாதி - வடக்கு
விசாகம் - வடகிழக்கு
அனுசம் - கிழக்கு
கேட்டை - தென்கிழக்கு
மூலம் - தெற்கு
பூராடம் - தென்மேற்கு
உத்திராடம் - மேற்கு
திருவோணம் - வடமேற்கு
அவிட்டம் - வடக்கு
சதயம் - வடகிழக்கு
பூரட்டாதி - கிழக்கு
உத்திரட்டாதி - தென்கிழக்கு
ரேவதி - தெற்கு

நட்சத்திரங்களும் வணங்க வேண்டிய தேவதைகளும்.
************************************************************

அஸ்வினி - அஸ்வினி தேவதைகள்
பரணி - சிவன்
கிருத்திகை - சுப்பிரமணியன்
ரோஹிணி - ஸ்ரீக்ருஷ்ணன்
மிருகசீரிடம் - நாக தேவதைகள்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - ஸ்ரீராமன்
பூசம் - சுப்பிரமணியன்
ஆயில்யம் - நாக தேவதைகள்
மகம் - சூரியன்,நரசிம்மன்
பூரம் - சூரியன்
உத்திரம் - சாஸ்தா,தன்வந்த்ரி
ஹஸ்தம் - மஹாவிஷ்ணு,
ராஜராஜேஷ்வரி
சித்திரை - மஹாலக்ஷ்மி
ஸ்வாதி - மஹாலக்ஷ்மி,ஹனுமன்
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - சிவன்
கேட்டை - ஹனுமன்
மூலம் - கணபதி
பூராடம் - ராஜராஜேஷ்வரி
உத்திராடம் - ஆதித்தியன்
திருவோணம் - மஹாவிஷ்ணு
அவிட்டம் - கணபதி
சதயம் - நாக தேவதைகள்
பூரட்டாதி - வராஹ மூர்த்தி
உத்திரட்டாதி - சிவன்
ரேவதி - மஹாவிஷ்ணு

நட்சத்திர அதிதேவதைகள்
******************************

அஸ்வினி - கணபதி,சரஸ்வதி
பரணி - துர்கை
கிருத்திகை - அக்னி தேவன்
ரோஹிணி - பிரம்மா
மிருகசீரிடம் - சந்திரன்
திருவாதிரை - சிவன்
புனர்பூசம் - தேவதைகள்
பூசம் - குரு
ஆயில்யம் - ஆதிசேஷன்
மகம் - சுக்கிரன்
பூரம் - பார்வதி
உத்திரம் - சூரியன்
ஹஸ்தம் - சாஸ்தா
சித்திரை - விஸ்வகர்மா
ஸ்வாதி - வாயு
விசாகம் - சுப்பிரமணியன்
அனுசம் - லக்ஷ்மி
கேட்டை - தேவேந்திரன்
மூலம் - அசுர தேவதைகள்
பூராடம் - வருணன்
உத்திராடம் - ஈஸ்வரன்,கணபதி
திருவோணம் - விஷ்ணு
அவிட்டம் - வசுக்கள்,இந்திராணி
சதயம் - யமன்
பூரட்டாதி - குபேரன்
உத்திரட்டாதி - காமதேனு
ரேவதி - சனீஸ்வரன்

நட்சத்திர ஆதியந்த பரம நாழிகை
**************************************

அஸ்வினி - 65
பரணி - 56
கிருத்திகை - 56
ரோஹிணி - 56
மிருகசீரிடம் - 56
திருவாதிரை - 56
புனர்பூசம் - 62
பூசம் - 52
ஆயில்யம் - 56
மகம் - 54
பூரம் - 53
உத்திரம் - 56
ஹஸ்தம் - 57
சித்திரை - 60
ஸ்வாதி - 65
விசாகம் - 61
அனுசம் - 60
கேட்டை - 62
மூலம் - 63 ½
பூராடம் - 62
உத்திராடம் - 55
திருவோணம் - 65 ½
அவிட்டம் - 66 ½
சதயம் - 53 ½
பூரட்டாதி - 66 ½
உத்திரட்டாதி - 63 ½
ரேவதி - 64

நட்சத்திர நாடி
****************

அஸ்வினி - ஆதி
பரணி - மத்யா
கிருத்திகை - அந்த்யா
ரோஹிணி - அந்த்யா
மிருகசீரிடம் - மத்யா
திருவாதிரை - ஆதி
புனர்பூசம் - ஆதி
பூசம் - மத்யா
ஆயில்யம் - அந்த்யா
மகம் - அந்த்யா
பூரம் - மத்யா
உத்திரம் - ஆதி
ஹஸ்தம் - ஆதி
சித்திரை - மத்யா
ஸ்வாதி - அந்த்யா
விசாகம் - அந்த்யா
அனுசம் - மத்யா
கேட்டை - ஆதி
மூலம் - ஆதி
பூராடம் - மத்யா
உத்திராடம் - அந்த்யா
திருவோணம் - அந்த்யா
அவிட்டம் - மத்யா
சதயம் - ஆதி
பூரட்டாதி - ஆதி
உத்திரட்டாதி - மத்யா
ரேவதி - அந்த்யா

நட்சத்திர பஞ்சபக்ஷிகள்
***************************

அஸ்வினி - வல்லூறு
பரணி - வல்லூறு
கிருத்திகை - வல்லூறு
ரோஹிணி - வல்லூறு
மிருகசீரிடம் - வல்லூறு
திருவாதிரை - ஆந்தை
புனர்பூசம் - ஆந்தை
பூசம் - ஆந்தை
ஆயில்யம் - ஆந்தை
மகம் - ஆந்தை
பூரம் - ஆந்தை
உத்திரம் - காகம்
ஹஸ்தம் - காகம்
சித்திரை - காகம்
ஸ்வாதி - காகம்
விசாகம் - காகம்
அனுசம் - கோழி
கேட்டை - கோழி
மூலம் - கோழி
பூராடம் - கோழி
உத்திராடம் - கோழி
திருவோணம் - மயில்
அவிட்டம் - மயில்
சதயம் - மயில்
பூரட்டாதி - மயில்
உத்திரட்டாதி - மயில்
ரேவதி - மயில்

நட்சத்திர பஞ்சபூதங்கள்
***************************

அஸ்வினி - நிலம்
பரணி - நிலம்
கிருத்திகை - நிலம்
ரோஹிணி - நிலம்
மிருகசீரிடம் - நிலம்
திருவாதிரை - நீர்
புனர்பூசம் - நீர்
பூசம் - நீர்
ஆயில்யம் - நீர்
மகம் - நீர்
பூரம் - நீர்
உத்திரம் - நெருப்பு
ஹஸ்தம் - நெருப்பு
சித்திரை - நெருப்பு
ஸ்வாதி - நெருப்பு
விசாகம் - நெருப்பு
அனுசம் - நெருப்பு
கேட்டை - காற்று
மூலம் - காற்று
பூராடம் - காற்று
உத்திராடம் - காற்று
திருவோணம் - காற்று
அவிட்டம் - ஆகாயம்
சதயம் - ஆகாயம்
பூரட்டாதி - ஆகாயம்
உத்திரட்டாதி - ஆகாயம்
ரேவதி - ஆகாயம்

நட்சத்திரங்களில் தோன்றியவர்கள்
***************************************

அஸ்வினி - அஸ்வத்தாமன்
பரணி - துரியோதனன்
கிருத்திகை - கார்த்திகேயன்
ரோஹிணி - கிருஷ்ணன்,பீமசேனன்
மிருகசீரிடம் - புருஷமிருகம்
திருவாதிரை - ருத்ரன், கருடன்,
ஆதிசங்கரர், ராமானுஜர்
புனர்பூசம் - ராமன்
பூசம் - பரதன்,தாமரை மலர்,
கிளி
ஆயில்யம் - தர்மராஜா,
லக்ஷ்மணன், சத்ருகணன்,
பலராமன்
மகம் - யமன்,சீதை,அர்ச்சுணன்
பூரம் - பார்வதி, மீனாட்சி,
ஆண்டாள்
உத்திரம் - மஹாலக்ஷ்மி, குரு.
ஹஸ்தம் - நகுலன்-சகாதேவன்,
லவ-குசன்
சித்திரை - வில்வ மரம்
ஸ்வாதி - நரசிம்மர்
விசாகம் - கணேசர்,முருகர்,
அனுசம் - நந்தனம்
கேட்டை - யுதிஸ்திரர்
மூலம் - அனுமன்,ராவணன்
பூராடம் - ப்ருஹஸ்பதி
உத்திராடம் - சல்யன்
திருவோணம் - வாமனன், விபீசனன்,
அங்காரகன்
அவிட்டம் - துந்துபி வாத்தியம்
சதயம் - வருணன்
பூரட்டாதி - கர்ணன், கின்னரன்,
குபேரன்
உத்திரட்டாதி - ஜடாயு,காமதேனு
ரேவதி - அபிமன்யு,சனிபகவான்

நட்சத்திரத்தொகை
*********************

அஸ்வினி - 3
பரணி - 3
கிருத்திகை - 6
ரோஹிணி - 5
மிருகசீரிடம் - 3
திருவாதிரை - 1
புனர்பூசம் - 2
பூசம் - 3
ஆயில்யம் - 6
மகம் - 5
பூரம் - 2
உத்திரம் - 2
ஹஸ்தம் - 5
சித்திரை - 1
ஸ்வாதி - 1
விசாகம் - 2
அனுசம் - 3
கேட்டை - 3
மூலம் - 9
பூராடம் - 4
உத்திராடம் - 4
திருவோணம் - 3
அவிட்டம் - 4
சதயம் - 6
பூரட்டாதி - 2
உத்திரட்டாதி - 2
ரேவதி - 3

நட்சத்திர இருப்பிடம்
***********************

அஸ்வினி - ஊர்
பரணி - மரம்
கிருத்திகை - காடு
ரோஹிணி - காடிச்சால்
மிருகசீரிடம் - கட்டிலின் கீழ்
திருவாதிரை - நிற்கும் தேரின் கீழ்
புனர்பூசம் - நெற்குதிர்
பூசம் - மனை
ஆயில்யம் - குப்பை
மகம் - நெற்கதிர்
பூரம் - வீடு
உத்திரம் - ஜலம்
ஹஸ்தம் - ஜலக்கரை
சித்திரை - வயல்
ஸ்வாதி - பருத்தி
விசாகம் - முற்றம்
அனுசம் - பாழடைந்த காடு
கேட்டை - கடை
மூலம் - குதிரைலாயம்
பூராடம் - கூரை
உத்திராடம் - வண்ணான் துறை
திருவோணம் - கோயில்
அவிட்டம் - ஆலை
சதயம் - செக்கு
பூரட்டாதி - தெரு
உத்திரட்டாதி - அக்னி மூலை வீடு
ரேவதி - பூஞ்சோலை

நட்சத்திர குலம்
******************

அஸ்வினி - வைசியகுலம்
பரணி - நீச்ச குலம்
கிருத்திகை - பிரம்ம குலம்
ரோஹிணி - க்ஷத்திரிய குலம்
மிருகசீரிடம் - வேடர் குலம்
திருவாதிரை - இராட்சச குலம்
புனர்பூசம் - வைசியகுலம்
பூசம் - சூத்திர குலம்
ஆயில்யம் - நீச்ச குலம்
மகம் - க்ஷத்திரிய குலம்
பூரம் - பிரம்ம குலம்
உத்திரம் - சூத்திர குலம்
ஹஸ்தம் - வைசியகுலம்
சித்திரை - வேடர் குலம்
ஸ்வாதி - இராட்சச குலம்
விசாகம் - நீச்ச குலம்
அனுசம் - க்ஷத்திரிய குலம்
கேட்டை - வேடர் குலம்
மூலம் - இராட்சச குலம்
பூராடம் - பிரம்ம குலம்
உத்திராடம் - சூத்திர குலம்
அபிஜித் - வைசியகுலம்
திருவோணம் - நீச்ச குலம்
அவிட்டம் - வேடர் குலம்
சதயம் - இராட்சச குலம்
பூரட்டாதி - பிரம்ம குலம்
உத்திரட்டாதி - சூத்திர குலம்
ரேவதி - க்ஷத்திரிய குல

நட்சத்திர யோனி திரை
சுயாதிகாரம், நற்குணம், தைரியம், அழகு, ஊராதிக்கம், யஜமான் விருப்பம் போல் நடத்தல்

யானை
ராஜ மரியாதை, உடல் வலிமை, போகம், உற்சாகம்

பசு
பெண் மோகம்

ஆடு
விடா முயற்சி,பிரயாணத்தில் விருப்பம்,பிற பெண்கள் மீது மோகம்,பிறருக்கு உதவும் தன்மை,மனித நேயம்,வழக்குரைத்தல்

சர்ப்பம்(பாம்பு)
கோபம்,கொடூரமான பேச்சு,செய்நன்றி இல்லாமை,மந்த புத்தி

சுவானம்(நாய்)
முயற்சி,உற்சாகம்,வீரம்,உறவினருடன் பகை,பக்தி,பெற்றோரிடத்தில் அன்பு

மார்ச்சாரம்(பூனை)
சாமர்த்தியம்,இரக்கமில்லாமை,கெட்டவர் தொடர்பு,உணவில் விருப்பம்

மூக்ஷிகம்(எலி)
அதிக விவேகம்,மிகுந்த செல்வம்,தன்னடக்கம்,சுய நலம்,

சிங்கம்
நற்குணம்,நற்செயல்,குடும்பத்தைப்பாதுகாத்தல்,சுயதர்மம்,சதாச்சாரம்

மஹிசம்(எருமை)
மந்த புத்தி,வெகுஜன தொடர்பு,வெற்றி,ஆசை

வியாக்ரம்(புலி)
முகஸ்துதிக்கு மயங்குதல்,சுயாதிகாரம்,பொருளாசை,உறவுமேன்மை,

மான்
சுதந்திர போக்கு,பொறுமை,உண்மைபேசுதல்,நற்காரியங்கள் செய்தல்,தானதர்மம் செய்தல்,தைரியம்,சொந்தங்கள் மீது பாசம்

வானரம்(குரங்கு)
போகத்தில் விருப்பம்,உலோபக்குணம்,தீயசெயல்,பேராசை,தைரியம்,நல்லோர் தொடர்பு

கீரி பிறருக்கு உதவுதல்,செல்வமுடைமை,பெற்றோரிடத்தில் அன்பு,நல்வழியில் செல்தல்,நன்றி விசுவாசம் இல்லாமை நன்றி நன்றி

- திருமந்திர whatsaap வகுப்பில் இருந்து
சித்தர்களின் குரல் shiva shangar