Search This Blog

Showing posts with label Politics. Show all posts
Showing posts with label Politics. Show all posts

Thursday, February 15, 2018

புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி


நீண்ட நாட்களின் பின் புதிய கலப்பு தேர்தல் மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான் தேர்தல்கள் முடிவடைந்து முடிவுகளும் வெளி வந்துள்ள சூழ் நிலையில் தமிழர்களின் தாயக நிலத்தில் நடந்த தேர்தல் புதிய மாற்றங்களுக்கான கட்டியமாக அமைந்துள்ளமை நம்பிக்கை தரும் மாற்றங்களை முன் மொழிந்துள்ளமை ஒரு வெற்றிடத்துக்கான சிந்தனை ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது பாசிச மனோபாவத்துக்கு மக்கள் கொடுத்த பதிலாகவே பார்க்க முடியும்.
1989ஆம் ஆண்டு தேர்தலைத் தவிர தமிழ் மக்களது பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட மேட்டுக் குடி மிதப்பு மிக்க சர்வாதிகார தன்னிச்சையான முடிவுகளுக்கு கட்டுப் பட வேண்டும் என்ற அரசியல் அதிகார நிகழ்வுகளின் வழியே பயணித்தது.மக்கள் அதிகாரம் துஸ் பிரயோகம் பண்ணப் பட்ட ஒரு பகைப் புலத்தில் இன்றைய தேர்தல் சில எதிர்வு கூறல்களுக்கு இடம் தந்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையான இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்த போதிலும் ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் ஏனைய கட்சிகளின் அல்லது சுயேச்சைக் குழுக்களின் ஆதரவை கோர வேண்டிய நிலமை காணப் படுகிறது.பல இடங்களில் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாத திரி சங்கு சொற்க நிலை காணப் படுகிறது.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விழுந்த வாக்குகளே அதிகம்.உதாரணத்துக்கு கட்டைபறிச்சான் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட காருண்யா எழுநூறுக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகள் 1200க்கும் அதிகம் .இந்த நிலமையே அனேகமாக எல்லா இடங்களிலும் காணப் படுகிறது.
இம் முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளில் பெரும் பகுதி வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கு கிடைத்த வாக்குகள் என பல அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.
எந்த ஒழுங்கான நகர கிராமிய கட்டமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லையென்றே சொல்லலாம் வெறும் பழய பெருங்காய பானை மணத்தோடு மக்களின் மறதியில் பயணிக்கும் கோடி முகமுடையோர் வாக்குகளைப் பெறலாம் என்றால்.
முறயான நகர கிராமிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி முற்போக்கு சிந்தனையும் தெளிந்த அரசியல் ஞானமும் கொண்ட புத்திஜீவிகள் பெண்கள் என ஒரு புதிய சிந்தனை மயப் பட்ட அணிக்கான தேவையயை உணர்த்தி நிற்கிறது இத் தேர்தல்
பல கட்சிகள் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் 150 இடங்களை கைப்பற்றி சபைகளை நிர்வகிக்க பெரும் பான்மைப் பலமில்லாமல் இருக்கும் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 81 இடங்களை கைப்பற்றி மூன்று சபைகளில் அறுதிப் பெரும் பான்மை பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 88இடங்களை கைப்பற்றி மக்களின் மாற்றுத் தேர்வுக்கான ஒரு இடத்தை தெளிவுறுத்துகிறது.
தேசிய கட்சிகள் கணிசமான இடங்களைப் பெற்றுள்ளன குறிப்பாக மட்டக் களப்பில் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.சுயேட்சைகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் சிந்திக்க வைக்கக் கூடிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த முடிவுகள் எதிர் காலத்தில் மக்களை முதன்மைப் படுத்தும் மக்கள் ஜனாயக முற்போக்கு அரசியலுக்கு உள்ள தேவையயை வலியுறுத்துகிறது.
அணி சேர்வோம் புதிய சிந்தனைகளுடனும் சமூக கலாசார விழுமியங்களை முன்னெடுக்கும் அரசியல் கலாசாரம் நோக்கி
பாலசுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக் கழகம்

Wednesday, February 14, 2018

உள்ளூராட்சித் தேர்தலில் தொங்கும் உறுப்பினர்கள். Over Hang members.

Anpalagan Croos
உள்ளூர் அதிகார சபைகளுக்கான தேர்தல் முடிவடைந்துவிட்டது. அரசு ஏலவே வர்த்தமாணி அறிவித்தல் மூலம் உள்ளூர் அதிகார சபைகள் ஒவ்வொன்றுக்கும் எத்தனை உறுப்பினர்கள் எனத்தீர்மானித்து அதற்கேற்பவே தேர்தல் நடைபெற்றது. இத் தீர்மானமானது ஒவ்வொரு உள்ளூர் அதிகார சபைகளுகளினதும் பரப்பளவு மற்றும் சனத்தொகையை அடிப்படையாகக் கொண்டு எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அதன் அடிப்படையல் அம் மொத்த உறுப்பினர் தொகையில் 60% வட்டாரம் மூலமும் 40% பட்டியலிலிருந்து விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்வதாக எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
உதாரணமாக ஒரு உள்ளூர் அதிகார சபைக்கு 20 உறுப்பினர்களை (100%) தெரிவு செய்வதாயின் 12 பேர் (60%) வட்டாரத்திலிருந்தும் 08 பேர் (40%) பட்டியலில் இருந்து விகிதாசார அடிப்படையிலும் தெரிவு செய்தல்.
இதற்கமையவே தேர்தல் நடைபெற்றபோதும் முடிவுகளில் சில உள்ளூர் அதிகார சபைகளுகளில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதுதான் தொங்கும் (Over Hang) உறுப்புரிமையாகும்.
இது எப்படி நிகழ்ந்தது எனப் பார்ப்போம்.
உதாரணமாக மட்டக்களப்பு மாநகர சபைக்கு நிர்ணயிக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 33 ஆகும். இதை 100% ஆக எடுத்தால் வட்டாரங்களில் இருந்து 20 பேர் 60% தெரிவு செய்யப்படல் வேண்டும். மிகுதி 13 போர் 40% அளிக்கப்ட்ட வாக்குகளின் விகிதாசாரத்திற்கு ஏற்ப பட்டியலில் இருந்து தெரிவு செய்யப்பட வேண்டும். இதுவே தேர்தல் நியதி.
தேர்தலில் வட்டாரத் தெரிவானது ஒவ்வொரு வட்டாரத்திலும் அதி கூடுதலான வாக்குகளைப் பெறுபவர் தெரிவு செய்யப்படுவார் என்பது சட்ட ஏற்பாடாகும். அவ்வாறே நிகழ்ந்தது.
ஆனால் தகைமை பெறும் எண்ணைக்கொண்டு ஒவ்வொரு கட்சி அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த செல்லுபடியான வாக்குகளின் அடிப்படையில் உறுப்புரிமை தீர்மானிக்கப்படும் போது கிடைக்கவேண்டிய உறுப்புரிமை எண்ணிக்கையிலும் பார்க்க வட்டார ரீதியான தெரிவில் நேரடியாக அதிகமாக் கிடைத்திருப்பின் அக் கட்சியின் அல்லது சுயேச்சைக் குழுவின் உறுப்பினர் எண்ணிக்கையை எக்காரணம் கொண்டும் குறைக்க முடியாது. ஏனெனில் அவர்கள் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட்டவர்கள்.
அப்பொழுது மொத்த உறுப்பினர் எண்ணிக்கை அதிகரிக்கும். அதுவே தொங்கும் உறுப்பினர்கள். (Over Hang)
இதனை ஒரு எடுத்துக்காட்டு மூலம் காண்போம்.
மட்டக்களப்பு மாநகர சபை
நிர்ணயிக்கப்பட்ட உறுப்புரிமை – 33.
வட்டாரங்கள் - 20 (20 பேர் வட்டார ரீதியாக தெரிவு செய்யப்பட வேண்டும்.
விகிதாசார ரீதியான 13 பேர் தெரிவு செய்யப்பட வேண்டும்.
வட்டார ரீதியாக பெறப்பட்ட விபரம் -
இலங்கை தமிழரசுக் கட்சி - 17 வட்டாரங்களிலிருந்து 17 உறுப்பினர்கள்.
தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி 01 வட்டாரத்திலிருந்து 01 உறுப்பினர்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சி 01 வட்டாரத்திலிருந்து 01 உறுப்பினர்.
சுயேச்சைக் குழு-2 01 வட்டாரத்திலிருந்து 01 உறுப்பினர்.
ஆக 20 வட்டாரங்களிலிருந்தும் 20 பேர் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.
இப்பொழுது அளிக்கபட்ட மொத்த செல்லுபடியான வாக்குகளின் அடிப்படையில் தகைமை பெறும் எண்ணானது,
அளிக்கபட்ட மொத்த செல்லுபடியான வாக்குகள் - 47569. இதனை 33ஆல் (மொத்த உறுப்பினர் எண்ணிக்கை) வகுக்கும்போது பெறப்படுவது தகைமை பெறும் எண்ணாகும்.
இங்கு ஒரு உறுப்பினருக்கான தகைமை எண் 1441 என அமைகின்றது.
இப்பொழுது இத் தகைமைபெறும் எண்ணால் (1441) இலங்கை தமிழரசுக் கட்சி பெற்ற மொத்த வாக்குகளை (17469) வகுக்கும் போது 12.1 என அமையும்
இங்கு இலங்கை தமிழரசுக் கட்சி 12 உறுப்பினர்களே பெற வேண்டிய நிலையில் வட்டாரத்தி;ல் 17 உறுப்பினர்கள் பெற்றமையினால் 05 உறுப்பினர்கள் அதிகமாக அமைகின்றது. இங்கு பெற்ற உறுப்பினர்களை குறைக்க முடியாது.
ஏனைய கட்சிகள் அல்லது சுயேச்சைக் குழுக்கள் பெற்ற மொத்த வாக்குகள் தகைமை எண்ணால் வகுக்கப்பட்டடு அவர்களுக்குரிய உறுப்புரிமை இதே வகையில் வழங்கப்பட்டது.
இதனால் தற்போது மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதிநிதிகள் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.
இதுவே தொங்கும் உறுப்பினர்கள் Over Hang members ஆயிற்று.

Sunday, January 7, 2018

நாம் நல்ல வாக்காளர்களா?

வேட்பாளருக்கான தகுதிகளை எதிர்பார்ப்பதைப் போல், வாக்காளருக்கும் தகுதிகள் உள்ளன என்பதை என்றாவது உணர்ந்திருக்கிறோமா?
நல்ல வேட்பாளர்களே இல்லை, எல்லா வேட்பாளருமே ஊழல் பெருச்சாளிகளாக இருக்கிறார்கள், எனவே நான் தேர்தலில் யாருக்கும் வாக்களிக்கவில்லை, 49ஒ க்கு வாக்களித்தேன், கட்சி வேறுபாடு இல்லாமல் நல்ல வேட்பாளர் இருந்தால் நாங்கள் வாக்களிக்கத் தயார் என்று எப்பொழுதுமே அரசியலை சாடும், கட்சிகளை சாடும் குரல்கள் தேர்தல் காலங்களில் ஒலிக்கும்.

நல்ல வேட்பாளர்கள் நள்ளிரவு தாமரை போல் திடீரென்று முளைத்து எழுவார்களா என்ன? வேட்பாளர் எங்கிருந்து வருகிறார்? நம்முடைய ஊரைச் சேர்ந்த, நம்முடைய சாதியை சார்ந்த, நம்முடைய வட்டாரத்தில், நம் கண்முன் தொழில்செய்து கொண்டு நடமாடும் யாரோ ஒருவர்தானே நம்முடைய வேட்பாளராகிறார். நீரளவே ஆகுமாம் நீராம்பல் என்ற வரிதான் நினைவுக்கு வருகிறது. நம் தகுதி அளவிற்குத்தான் நம்முடைய வேட்பாளர்களையும் கட்சிகள் தேர்வு செய்கின்றன.
ஒரு தேர்தலில் அடுத்து வர இருக்கும் ஐந்தாண்டுகளில் நமக்கான ஆட்சியாளர்களாக, நம் பகுதிக்கான நலத் திட்டங்கள், முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்பவர்களாக நாம் நம் வேட்பாளர்களைத் தேர்வு செய்ய வேண்டும், அதற்காகவே இந்தத் தேர்தல் என்பதை நாமும் வேட்பாளர்களைப் போலவே வசதியாக மறந்துவிடுகிறோம். அதிகாரப் போட்டியில் ஒருவரை ஒருவர் முந்தும் சாகச விளையாட்டில் நாம் நம்மை அறியாமல், யார் கையையோ பிடித்து உயர்த்திக் கொண்டிருக்கிறோம்.
வாக்காளர்களாகிய நாம் எவ்வளவு விழிப்புடன் இருக்கிறோம், வேட்பாளர்களை நல்லவர்களா, கெட்டவர்களா? என்று பார்க்கிறோமா?
தகுதியுடைய வேட்பாளர்கள் நமக்கு வேண்டும் என்றால், நாம் முதலில் தகுதியுடைய வாக்காளர்களாக மாறுவோம்.
குடி உயர கோல் உயரும். மக்கள் எவ்விதமோ அரசு அவ்விதம். ஜனநாயகத்தில் மக்களே தங்களுக்கான அரசை தீர்மானிக்கிறார்கள்.
தேர்தலில் மாற்றத்தின் நாயகர்கள் நாம்தான்.
( - அ. வெண்ணிலாவின் கட்டுரையிலிருந்து)

கருணாகரன் சிவராசா

Friday, December 22, 2017

Jose Mujica: The world's 'poorest' president (செல்வந்தர்களை அரசியலில் இருந்து துரத்தியடிக்க வேண்டும். - ஜோஷே முஜிகா)


செல்வந்தர்கள், ஏழைகளின் பிரதிநிதியாக இருக்கும் பணியை சிறப்பாக செய்வதில்லை.
பணத்தை வைத்திருக்கின்ற, பணத்தை விரும்புகின்ற, பணத்தின் பின்னால் பைத்தியமாக அலைகின்றவர்களை நான் எதிர்க்கவில்லை. ஆனால் அவர்களை அரசியலில் இருந்து தூரமாக்கவேண்டும். அவர்கள் வர்த்தகத்திலும் பணத்தை அதிகரிப்பதிலும் தமது முழுக்கவனத்தையும் ஈடுபடுத்த வேண்டும். அரசியல் என்பது அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிப்பதாகும். அது அவர்களுக்கு சரிப்பட்டு வராது.
அவர்கள் நன்னோக்குடன் பொதுமக்களுக்காக எடுக்கும் முடிவுகள்கூட அவர்களது கண்ணோட்டத்திலேயே இருக்கும். அவர்களது கண்ணோட்டம் என்பது பணம் மட்டுமே.
2010 இலிருந்து 2015 வரை உருகுவே நாட்டின் ஜனாதிபதியாக இருந்த Jose Mujica 2014 இல் வழங்கிய நேர்காணல் ஒன்றிலிருந்து.


Jose Mujica he is the president at Uruguay between 2010 and 2015. Jose Mujica want's to make all the other bad presidents ( People who are love money and people who are mad at money) should be goon away from politics.
Laundry is strung outside the house. The water comes from a well in a yard, overgrown with weeds. Only two police officers and Manuela, a three-legged dog, keep watch outside.
This is the residence of the president of Uruguay, Jose Mujica, whose lifestyle clearly differs sharply from that of most other world leaders.
President Mujica has shunned the luxurious house that the Uruguayan state provides for its leaders and opted to stay at his wife's farmhouse, off a dirt road outside the capital, Montevideo.
The president and his wife work the land themselves, growing flowers.
This austere lifestyle - and the fact that Mujica donates about 90% of his monthly salary, equivalent to $12,000 (£7,500), to charity - has led him to be labelled the poorest president in the world.



His charitable donations - which benefit poor people and small entrepreneurs - mean his salary is roughly in line with the average Uruguayan income of $775 (£485) a month.

In 2010, his annual personal wealth declaration - mandatory for officials in Uruguay - was $1,800 (£1,100), the value of his 1987 Volkswagen Beetle.
This year, he added half of his wife's assets - land, tractors and a house - reaching $215,000 (£135,000).
That's still only about two-thirds of Vice-President Danilo Astori's declared wealth, and a third of the figure declared by Mujica's predecessor as president, Tabare Vasquez.
Elected in 2009, Mujica spent the 1960s and 1970s as part of the Uruguayan guerrilla Tupamaros, a leftist armed group inspired by the Cuban revolution.
He was shot six times and spent 14 years in jail. Most of his detention was spent in harsh conditions and isolation, until he was freed in 1985 when Uruguay returned to democracy.

Those years in jail, Mujica says, helped shape his outlook on life.

"I'm called 'the poorest president', but I don't feel poor. Poor people are those who only work to try to keep an expensive lifestyle, and always want more and more," he says.

"This is a matter of freedom. If you don't have many possessions then you don't need to work all your life like a slave to sustain them, and therefore you have more time for yourself," he says.

"I may appear to be an eccentric old man... But this is a free choice."

The Uruguayan leader made a similar point when he addressed the Rio+20 summit in June this year: "We've been talking all afternoon about sustainable development. To get the masses out of poverty.

"But what are we thinking? Do we want the model of development and consumption of the rich countries? I ask you now: what would happen to this planet if Indians would have the same proportion of cars per household than Germans? How much oxygen would we have left?

"Does this planet have enough resources so seven or eight billion can have the same level of consumption and waste that today is seen in rich societies? It is this level of hyper-consumption that is harming our planet."

Mujica accuses most world leaders of having a "blind obsession to achieve growth with consumption, as if the contrary would mean the end of the world".



Thursday, December 14, 2017

அம்பேத்கர் இந்து மதம் அம்பேத்கர்

அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத்தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்தபிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப்புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோலைக்கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித்தார்.
''உலகில் உள்ள எல்லா மதங்களும் ‘இறைவன் மனிதனைப் படைத்தார்’ என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும்தான் இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்து...ம் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்று சொல்கிறது”
என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்து மதத்தில் உள்ள சாதியமைப்பு பிரமிட் முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ''இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.
“இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்” என்றார்.
அம்பேத்கர் அவர்கள் திரு காந்தியை சாடி (ஹரிஜன்) எங்களை இந்து மதம் அடிமைபடுத்துவதைத்தான் திரு காந்தி விரும்புகிறாரா?  தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் (ராமனின் பிள்ளை) என்று திரு காந்தி அழைப்பதையும் அதன் பெயரில் பத்திரிகை வருவதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்கிறார் ( சாதி ஒழிப்பு நூல் ) ஆக அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து சனாதன சாதிய வன்மத்தை போட்டு உடைக்கிறார்கள்... காந்தியின் கூற்றுப்படி ஹரிஜன் என்பது ராமனின் பிள்ளை எனில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருமைதானே என நினைக்கத் தோன்றும் ஆனால்
அம்பேத்கரும்,  பெரியாரும்  மிகத் தெளிவாக ராம ராஜியத்தை உடைத்தெறிகிறார்கள், ராமாயணத்தில் உள்ள சம்பூகன் வதத்தை  இருவருமே மிக நேர்த்தியாக கையாண்டார்கள் ... ராமனின் ஆட்சியில் ஒரு பார்ப்பனின் கோரிக்கைக்காக எவ்வித விசாரணையுமின்றி கொலையும் செய்யத் துணியும் கேடுகெட்டதுதான் ஹிந்து  சனாதன ராம ராஜ்ஜியம் என அறிவுறுத்துகின்றனர்... இங்கு  ராமாயணத்தில் ஒரு பார்ப்பனன் ராம ராஜ்ஜியத்தை குறை கூறுகிறான் அதற்கு நாரதர் என்பவர் குறையை தீர்க்க வழி சொல்கிறார், என்னவென்றால் கடைகோடியில் எங்கோ பார்ப்பனர் அல்லாத ஒருவன் தவம் இருப்பதாகவும் (பார்ப்பனர் அல்லாதோர் தவம் இருப்பது குற்றமா?) அவன் உயிரை பறித்து விட்டால் தீர்வு வரும் என்கிறார்... ராமனும் அவனை தேடி அலைகிறார் சம்பூகன் அவன் என அடையாளம் காண்கிறார் ... எந்த சாதி என மட்டும் வினவுகிறார் ( வேறு எதுவும் அவனிடத்தில் கேட்கப்படவில்லை) அவன் "சூத்திரன்" என்றதும் தலையை துண்டிக்கிறார்... இதுதான் ராம ராஜ்ஜியம் எனில் எங்களை எப்படி ராமனின் பிள்ளை என அழைப்பீர்கள் என அம்பேத்கரும் பெரியாரும் சாடுகிறார்கள்...ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 65 – 77
அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)ஹிந்து மதம் எந்த விதத்திலும் , எக்காலத்திலும் சாதியத்தை வைத்தே பிழைப்பு நடத்துவதைத்தான் நோக்கமாககொண்டிருக்கிறது அதிலும் குறிப்பாக பார்ப்பனியத்தை.... இடைநிலை சாதிகளான ஏனைய அனைத்து "சுமார் 3000 க்கும் மேலான சாதிகள்) சாதிகளுமே பார்ப்பனனை பொறுத்தவரையில் "சூத்திரன் (தேவடியாள் மகன்) மட்டுமே.... ஆனால் இந்திய சாதிய அமைப்புகள் தங்களை சூத்திரன் என்றழைக்கும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் தங்களுக்கு கீழான  அடிமை சாதிகளை உறுவாக்கி அவர்களை ஒடுக்குதலையே முதன்மையாக கொண்டிருக்கிறார்கள்.... இவர்களுக்கு தேவை எதிர்ப்பு அல்ல ஏனைய அடிமைகள் அவ்வளவே....
தங்களை ஆண்ட சாதி , படியளந்த சாதி, அரசாண்ட ஷத்ரியர்கள் என பெருமை பிதற்றிக்கொடண்டாலும் ஹிந்துமத பார்பனனை கேட்டுப்பாருங்கள் "அவாள்ளாம் சூத்திரா" என்பார்கள்... இதுதான் ஹிந்துமதம்...
இந்த இடைநிலை சாதிகளானாலும் , அதன் கீழான தாழ்த்தப்பட்டவர்களானாலும் ஹிந்து மதத்தின் மிக நுணுக்கமான அடிமை படுத்துதலையே கடைபிடிக்கிறார்கள்... தங்களை வைசியர்களாக , ஷத்ரியர்களாக , அடையாளப்படுத்தும் சாதிகள் சூத்திரர்களை ஒடுக்குவது, சூத்திரர்கள் தங்களை ஒடுக்கும் இடைநிலை சாதிகளை எதிர்க்காமல்  தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவது , தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையே ஒடுக்குவது... அதன் வழி ஹிந்து மதத்தை விடாப்பிடியாக இறுக்கமாக கட்டமைப்பது என்பதைத்தான் காலங்காலமாக பின்பற்றப்படுகிறது...ஒரு சாதிகள் சூழ்ந்து இன்னொரு சாதிகளை அனுசரிக்கும் வழக்கம் ஹிந்து மதத்திற்கோ, அதன் பார்ப்பனியத்திற்கோ  அறவே இருக்காது.... ஏனென்னால் அப்பொழுது ஹிந்துமதம் அழிந்து போகும்... இதன் காரணமாகவே பெருந்தலைவர்களையெல்லாம் ஹிந்துமதம் சாதிய வட்டத்திற்குள் அடக்கி வைக்கும் , அம்பேத்கரை  தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமான தலைவராக ஹிந்து மதம்  வைத்தது இதன் மூலமேயாகம், நடைமுறையில் காமராஜரை கூட சாதித்தலைவராக மாற்றியதும் குறிப்பிடப்பட வேண்டும், மக்களின் உணர்வுகளில் , அவர்களின் பலவீனங்களில் ஒவ்வொன்றிலும் ஹிந்து மதத்தின் அனுகூலங்களை புகுத்தி அவர்களின் சாதிய உணர்வுகளை எப்பொழுதுமே ஹிந்து மதம் கிளரிக்கொண்டே இருக்கும்...
என்ன சாதித்தது ஹிந்து மத சாதிகள் , தாழ்த்தப்பவர்கள் கல்வி யை செவி வழியில் கேட்டால்கூட பொசுக்கி விடு என்றதும்(கீதை) , பெண்களுக்கு (பார்ப்பன பெண்களும்) கல்வி அறவேக்கூடாது அவர்கள் ஆண்களுக்கு அடிமையாளர்கள் என்றும்தான் ஹிந்துமத பார்ப்பனிய சாதனையா? இப்போதெல்லாம் இப்படி நடப்பதில்லையே என்கிறீர்களா?   "நான் உன்னை கல்யாணம் பன்னிட்டேன்டி இனிமேல் எனக்கு நீ அடிமை" என எத்தனை உதடுகள் சொல்லியிருக்கும் என்று மனதை திறந்து வைத்து உங்களை நீங்களே உணருங்கள், சாதியின் பெயரால் ஆணவக்கொலைகளை நிகழ்த்துவதில் , தீண்டாமை கடைபிடிக்கப்படுவதில்  ஹிந்து மத சனாதனம் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்பது இந்த நாட்டின் மிகப் பெரிய சாபம் என்றால் அது மிகையாகாது.

Tuesday, December 12, 2017

அரசியல் உரிமை

இந்த எண்ணக்கரு தொடர்பில் நிறைய வாதப் பிரதிவாதங்கள் உண்டு பெரும்பாலும் அரச அலுவலர்களது வாய்களில் நர்த்தனமாடும் வார்த்தையாக காணப்படும் எண்ணக் கருவானது உண்மையில் அரசியலுடன் தொடர்புடைய கட்சிகள், நபர்களிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பதை தவறு என்பதனை குறித்து நிற்கின்றது.
ஒரு பொது மகனாக மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு அவ்வகையில் நானும் எனது கருத்துக்களை இங்கு முன் வைத்துக் கொண்டிருக்கின்றேன் எனது பதிவுகள் எந்த ஒரு கட்சிக்கோ நபருக்கோ ஆதரவானவை அல்ல மாறாக சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய வகையில் மக்களது சிந்தனை மற்றும் செயல்களில் மாற்றம் வர வேண்டும் என்பதே அவா...
தற்பொழுது இலங்கையில் முற்று முழுதாக வட்டார முறையான தேர்தல் முறைமையாக காணப்படவிட்டாலும் பெருமளவில் வட்டாரமுறையை சார்ந்ததாக காணப்படுகின்றது எனவே தங்களது பிரதேசத்திற்கு சேவையாற்றக் கூடிய நபரை தெரிவு செய்வதற்கு இத் தேர்தல் முறைமை வழி சமைத்துக் கொடுத்துள்ளது..
இங்கு வாக்களிக்க தகுதியுடையவர்கள் பின்வரும் இரண்டு விடயங்கள் தொடர்பில் கடப்பாடுடையவர்கள்...
1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கை கட்டாயம் செலுத்துவதற்குரிய கடப்பாடு
(தனது வாக்கை செலுத்தாது கடமையிலிருந்து தவறியவராவதுடன் பிழையான தெரிவுகள் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமானவராகவும் ஜனநாயகத்தை மறுதலிப்பவராகவும் அமைவார்)
2. வாக்காளர்கள் சரியான நபரை தெரிவு செய்தல்.
பெரும்பாலும் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்வதற்கு பலர் முனைவர் எனினும் பகுத்தறிவுள்ளவர்கள் என்னும் எடுகோளின் அடிப்படையில் மக்கள் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் சரியான பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டியது அவசியம்
1. தான் தேர்தலில் போட்டியிடும் பிரதேசம் தொடர்பான குறிப்பிடத்தக்க அறிவு (பிரதேச அமைவு, காணப்படுகின்ற வளங்கள், மக்களது அடிப்படை பிரச்சனைகள், பொதுவான விடயங்கள் தொடர்பான அறிவு)
2. தான் போட்டியிடுகின்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டால் மக்களுக்கு எவ்விதமான சேவை செய்யலாம் என்பது தொடர்பான குறிப்பிடத்தக்க அறிவு (குறிப்பாக ஒருவர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவாராயின் பிரதேச சபை சட்டம், அப்பிரதேச சபை வருமானம், வளங்கள் பற்றிய அறிவு நிறைந்து அவற்றின் அடிப்படையில் சேவையாற்றக்கூடிய வகையில் குறிக்கோள்கள் அமைய வேண்டும் அதை விடுத்து பிரதேச சபைக்கு போட்டியிடும் நபர் தான் வெற்றி பெற்றால் பிரதேச சபை மூலம் பிரதான 'அ' வகை வீதிகளை புனரமைப்பேன் என்பது கேலிக்கூத்தாகவே அமையும் ஏனெனில் அது பாராளுமன்ற, அமைச்சரவை தீர்மானங்களுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றமை ஆகும் ஆயினும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவ்வாறான கோரிக்கையை அரசிற்கு விடுக்கலாம் அது தொடர்பில் கூறி அவர் மக்களை பிழையாக நடாத்த வேண்டிய அவசியம் இல்லை)
3. மேலும் தனது பிரதிநிதித்துவத்தால் மக்களிற்கு சேவையாற்றக்கூடிய வகையில் வெளி வளங்களை பெற்றுத் தரக்கூடிய ஆற்றல் ( பிரதேச சபை உறுப்பினராயின் மாகாண சபை மூலம் நிதி, வளங்களை பெற்று பிரதேசத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய ஆற்றல்)
பெரும்பாலும் மக்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தங்களது ஆதரவை தெரிவிக்கும் பண்பு காணப்படுகின்றது விகிதாசாரமுறைமைக்கு இது ஓரளவு பொருந்தினாலும் வட்டார முறையைப் பொருத்த வரை பிரதிநிதி மற்றும் அவரது பிண்ணனி முக்கியமாக உள்ளது
நீங்கள் ஆதரவளிக்கும் நபர் சமூகத்தில் உயர் தொழிலில் உள்ளவராக நற்பண்புகள் நிறைந்தவராக காணப்படலாம் ஆனால் அவர் வினைத்திறமை அற்றவராக அடையாளம் காணப்பட்டவராயின் அவரை தெரிவு செய்வதனால் பயன் ஏது?
நீங்கள் குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கின்றீர்கள் அதன் பிரதிநிதிக்கே ஆதரவளிக்க வேண்டும் எனக் கடப்பாட்டுடன் திகழ்கின்றீர்கள் என வைத்துக் கொள்கின்றோம் அவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துபவர் வினைத் திறமை அற்றவராகவோ அல்லது சமூக விரோதியாகவோ காணப்படின் நிலையைச் சற்று சிந்தித்து பாருங்கள் கடந்த கால கசப்பான அனுபவங்களினால் தான் மேற்கூறிய கருத்தை கூற வேண்டியுள்ளது கடந்த காலத்தில் A என்ற கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய X என்ற நபர் தான் தவிசாளராக இருந்த சபையில் தற்காலிக ஊழியராக இருந்த பெண்ணை நிரந்தரமாக்க பாலியல் லஞ்சம் கேட்டு நியமனத்தை இடை நிறுத்தி கௌரவ ஆளுநர் தலையீடு செய்த வரலாறுகள் உண்டு...
எனவே அன்பார்ந்த மக்களே பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொழுது சரியான பிரதிநிதியை தெரிவு செய்யுங்கள் ஏனெனில் மக்களின் அறிவின் அடிப்படையிலேயே அவர்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளும் அமைவர், கட்டாய வாக்களிப்பின் மூலம் ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எமக்குண்டு சிந்தித்துச் செயல்படுங்கள் நாளை_நமதே.

Thanks 
Pragash Sinnarajah

Thursday, November 9, 2017

ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்


உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.
“உற்பத்தி இலாபத்துக்காகச் செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்காக இல்லை. “வேலை செய்ய திறமையும் விருப்பமும் உடைய எல்லோருக்கும் வேலை கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை; வேலை இல்லாதவர்களின் படை ஒன்று எப்போதுமே இருக்கிறது.
“எப்போது வேலை போகுமோ என்ற பயத்தில்தான் தொழிலாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.”
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

பொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா? பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.
முதலில், அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
அதன் மூலம் இந்நிகழ்வுகளுக்கிடையேயான உள்உறவுகளை முடிந்த வரைக்கும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், உண்மையில் இரண்டு துறைகளுக்கும் இடையே முறையியல் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தனியாகப் பிரித்து மதிப்பிட முடியாத பல காரணிகள் பொருளாதார நிகழ்வுகளைப் பாதிக்கின்றன என்பதால், பொருளாதாரவியல் துறையில் பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பது சிக்கலானதாக உள்ளது.
மேலும், நாகரீகக் காலகட்டம் என்று அழைக்கப்படும் மனிதகுல வரலாற்றில் திரட்டப்பட்டுள்ள அனுபவங்கள் வெறும் பொருளாதாரக்  காரணிகளால் மட்டும் பாதிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.


உதாரணமாக, வரலாற்றில் தோன்றிய பேரரசுகளில் பெரும்பாலானவை நாடு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வென்றடக்கும் தரப்பினர், வென்றடக்கிய நாட்டில் பொருளாதார ரீதியாகவும், சட்டரீதியாகவும் சலுகை பெற்ற வர்க்கமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள். நிலவுடைமை ஏகபோகத்தைக் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், தமது தரப்பிலிருந்தே மத குருக்களை நியமித்துக் கொண்டார்கள். கல்வியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த மத குருக்கள், சமூகம் வர்க்க ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றினார்கள். மக்கள் தமது சமூக செயல்பாடுகளில் தம்மை அறியாமலேயே வழிநடத்தப்படும் வகையிலான ஒரு தார்மீகக் கட்டமைப்பை உருவாக்கினார்கள்.
இந்த வரலாற்றுப் பாரம்பரியம் நேற்றோடு முடிந்த போன கதை. இருப்பினும், நாம் இன்னும் தோர்ஸ்டெய்ன் வெப்லன் வேட்டையாடும் கட்டம் ( பார்க்க அடிக்குறிப்பு 1)  என்று அழைக்கும் மனிதகுல வளர்ச்சிக் கட்டத்தை எந்த நாட்டிலும் கடந்து விடவில்லை. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார நடைமுறைகள் அத்தகைய
வேட்டையாடும் கட்டத்தைச் சேர்ந்தவை. இந்த நடைமுறைகளிலிருந்து நாம் வந்தடையக் கூடிய விதிகள் எதிர்காலத்தில் வரப் போகும் புதிய, மேம்பட்ட கட்டங்களுக்கு பொருந்தப் போவதில்லை.
மனிதகுல வளர்ச்சியின் வேட்டையாடும் கட்டத்தைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் சோசலிசத்தின் உண்மையான நோக்கம். எனவே,  பொருளாதார அறிவியல் அதன் இன்றைய நிலையில் எதிர்கால சோசலிச சமூகத்தைப் பற்றி விளக்க சாத்தியமற்று உள்ளது.
இரண்டாவதாக, சோசலிசம் ஒரு சமூக அறம் சார்ந்த இலக்கை நோக்கிய பயணம். ஆனால், அறிவியல் அத்தகைய இலக்குகளை உருவாக்கித் தர முடியாது என்பதோடு, அறிவியல் மூலம் இலக்குகளை மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதற்கான சாத்தியம் இன்னும் குறைவு. அதிகபட்சமாக, குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை மட்டுமே அறிவியல் வழங்க முடியும். ஆனால், அத்தகைய இலக்குகளை உயர்ந்த அறநெறி இலட்சியங்களைக் கொண்டிருக்கும் ஆளுமைகள்தான் உருவாக்குகின்றனர். அந்த இலக்குகள் குறைப் பிரசவமாகி விடாமல் உயிர்த் துடிப்போடும், சக்தியோடும் இருக்கும் போது, உணர்ந்தும் உணராமலும் தமது செயல்பாடுகளால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை தீர்மானிக்கும் மனிதர்களால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகின்றன.
எனவே, மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்யும் போது அறிவியலையும் அறிவியல் முறையியலையும் அளவுக்கு மீறி மதிப்பிட்டு விடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைப் பாதிக்கும் கேள்விகள் தொடர்பாக துறை நிபுணர்கள் மட்டும்தான் கருத்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடக் கூடாது.
சமீப காலமாக மனித சமூகம் ஒரு நெருக்கடியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்றும் சமூகத்தின் நிலைத்தன்மை மிக மோசமாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்றும் பல குரல்கள் ஆணித்தரமாக பேசிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் தனிநபர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் சிறு அல்லது பெரிய குழு தொடர்பாக விட்டேற்றியாக, ஏன் பகை உணர்வோடு இருப்பது ஒரு போக்காக உள்ளது. நான் சொல்வதை விளக்குவதற்கு எனது சொந்த அனுபவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.
சமீபத்தில் ஒரு புத்திசாலியான, நல்லெண்ணம் படைத்த ஒருவரிடம் இன்னொரு போர் மூண்டு விடும் அபாயத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அத்தகைய போர் மனிதகுலத்தின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும், தேசங்களுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பு ஒன்றுதான் அத்தகைய அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என்றும் எனது கருத்தை தெரிவித்தேன். அதைக் கேட்டவுடன், அவர், மிக அமைதியாக, பதட்டமின்றி, மனித இனம் அழிந்து போவதை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்? என்று கேட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூட இப்படி ஒரு கருத்தை இவ்வளவு எளிதாக யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி. தனக்குள் ஒரு சமநிலையை வந்தடைவதற்குப் போராடித் தோற்று போய், இனிமேலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட ஒரு மனிதரின் கருத்து அது. இன்று பலரையும் பீடித்துள்ள வலிமிகுந்த தனிமையின், ஒதுக்கி வைப்பின் வெளிப்பாடு அது. இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா?
இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பது எளிது. ஆனால், குறிப்பிடத்தக்க அளவு உறுதியுடன் அவற்றுக்கு விடை சொல்வது கடினமானது. இருப்பினும், என்னால் முடிந்த அளவு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான் முயற்சிக்கிறேன். நமது உணர்ச்சிகளும், தேடல்களும் பல நேரங்களில் முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன என்பதையும், எளிதான, எளிமையான சூத்திரங்களாக அவற்றை வெளிப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்தே நான் இந்த முயற்சியில் இறங்குகிறேன்.
ஒரு மனிதர் ஒரே நேரத்தில் தனித்த பிறவியாகவும், சமூகப் பிறவியாகவும்  இருக்கிறார். தனித்த பிறவியாக தனது வாழ்வையும், தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தனது உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார். சமூகப் பிறவியாக, தனது சக மனிதர்களின் அங்கீகாரத்தையும், அன்பையும் பெற முயற்சிக்கிறார்; அவர்களது மகிழ்ச்சிகளில் பங்கெடுக்க விளைகிறார்; அவர்களது துயரங்களுக்கு ஆறுதல் சொல்கிறார்; அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்த முயற்சிக்கிறார்.
பல்வகைப்பட்ட, பல நேரங்களில் ஒன்றோடொன்று முரண்படும் இத்தகைய முயற்சிகள்தான் ஒரு மனிதரின் தனிச்சிறப்பான தன்மையைத் தீர்மானிக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் அவற்றின் குறிப்பிட்ட சேர்க்கை, அவர் தனது உள்மன சமநிலையைப் பராமரித்து சமூகத்தின் நலனுக்கு பங்களிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கின்றது.
இந்த இரண்டு உந்துதல்களின் ஒப்பீட்டு வலிமைகள் மரபு வழியில் தீர்மானிக்கப்படுவதற்கான சாத்தியம் இருந்தாலும், ஆனால், இறுதியாக வெளிப்படும் ஒரு மனிதரின் ஆளுமை அவர் வளர்ந்த சூழலாலும், வளர்ந்த சமூகத்தின் கட்டமைப்பாலும், அச்சமூகத்தின் பாரம்பரியங்களாலும், குறிப்பிட்ட வகையிலான நடத்தைகள் பற்றிய அச்சமூகத்தின் மதிப்பீடுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு தனி மனிதரைப் பொருத்தவரை “சமூகம்” என்ற கருத்தாக்கம், சமகால மனிதர்களுடனும், முந்தைய தலைமுறை மனிதர்களுடனும் அவருக்கு இருக்கும் நேரடி, மறைமுக உறவுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்கவும், உணரவும், முயற்சிக்கவும், வேலை செய்யவும் முடிகிறது; ஆனால், உடல்ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சமூகத்தை அவர் பெருமளவு சார்ந்திருப்பதால், சமூகம் என்ற சட்டகத்துக்கு வெளியில் ஒரு மனிதரைப் பற்றிச் சிந்திப்பதோ, புரிந்து கொள்வதோ, சாத்தியமற்றதாகிறது.
“சமூகம்” தான் மனிதருக்கு உணவு, உடைகள், வீடு போன்ற அத்தியாவசிய தேவைகளையும், வேலை செய்வதற்கான கருவிகளையும், மொழியையும் சிந்தனை வடிவங்களையும் சிந்தனையின் பெரும்பகுதி உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. “சமூகம்” என்ற சிறு சொல்லின் பின் மறைந்திருக்கும் கடந்த காலத்தையும், சமகாலத்தையும் சேர்ந்த கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் மூலமும், சாதனைகளின் மூலமும்தான் ஒரு மனிதரது வாழ்க்கை சாத்தியமாக்கப்படுகிறது.
எனவே, சமூகத்தின் மீது தனிநபரின் சார்பு இயற்கை யதார்த்தமாக உள்ளது. எப்படி எறும்புகளையும், தேனீக்களையும் அவற்றின் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதோ அது போல மனிதருக்கும் சமூகம் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக உள்ளது. எறும்புகளின், தேனீக்களின் வாழ்க்கையின் சின்னஞ்சிறு விபரங்கள் கூட, மாற்ற முடியாத, பாரம்பரியமாக பெறப்பட்ட உள்ளுணர்வுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்களின் சமூக வடிவமைப்புகளும், அவர்களுக்கிடையேயான உறவுகளும் மாறக் கூடியவையாகவும், மாற்றத்துக்குட்பட்டவையாகவும் உள்ளன.
மனிதர்களின் நினைவுத் திறன், புதிய சேர்க்கைகளை படைக்கும் திறன், மொழி வழி தகவல் பரிமாற்றம் ஆகியவை உயிரியல் அவசியங்களால் கட்டுப்படுத்தப்படாத முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அந்த முன்னேற்றங்கள் பாரம்பரியங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றிலும் இலக்கியத்திலும், அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளிலும், கலைப்படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. ஒரு மனிதர் குறிப்பிட்ட வகையில் தனது சொந்த நடத்தையைக் கட்டுப்படுத்த முடிவதையும், அவரது உணர்வுபூர்வமான சிந்தனையும், விருப்பங்களும் அதில் பங்களிப்பு செய்வதையும் இது விளக்குகிறது.
ஒரு மனிதர் பிறக்கும்போதே மரபுரீதியாக ஒரு உடற்கட்டமைப்பைப் பெறுகிறார். மனித இனத்தின் இயல்பான இயற்கை உந்துதல்கள் உள்ளிட்ட அந்தக் கட்டமைப்பு நிலையானது, மாற்ற முடியாதது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல், தன் வாழ்நாள் முழுவதும், தகவல் தொடர்பு மூலமும் பிற வகை தாக்கங்களின் மூலமும் சமூகத்திலிருந்து ஒரு கலாச்சார கட்டமைப்பை அவர் வரித்துக் கொள்கிறார். காலப்போக்கில் மாற்றப்படக்கூடிய இந்தக் கலாச்சார கட்டமைப்புதான் ஒரு தனிநபருக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவை முதன்மையாகத் தீர்மானிக்கிறது.
மானுடவியலின் புராதன சமூகங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் நிலவும் கலாச்சார வடிவங்களைப் பொறுத்தும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளின் தன்மையைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை பெருமளவு வேறுபடலாம் என்று தெரிய வருகிறது. மனித குலத்தின் நிலையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் இதில்தான் நம்பிக்கைவைக்க வேண்டும். உயிரியல் கட்டமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதோ, குரூரமான, சுயமாகச் சுமத்தப்பட்டுக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதோ மனித குலத்தின் விதி இல்லை.
மனித வாழ்க்கையை அதிகபட்ச நிறைவளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கு சமூகத்தின்  கட்டமைப்பையும், மனிதரின் கலாச்சார கண்ணோட்டத்தையும் எப்படி மாற்ற வேண்டும்? சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்கப்பட முடியாதவை என்ற உண்மையை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல மனிதரின் உயிரியல் இயல்புகள் நமது நடைமுறையை பொறுத்தவரை மாற்றப்பட முடியாதவை.
மேலும், கடந்த சில நூற்றாண்டுகளில் தொழில்நுட்பங்களும், மக்கள் தொகை பெருக்கமும் உருவாக்கியுள்ள நிலைமைகளை இல்லாமல் செய்து விட முடியாது. மக்களின் தொடர்ந்த இருத்தலுக்கு இன்றியமையாத பொருட்களுடன் கூடிய, ஒப்பீட்டளவில் மக்கள்நெருக்கம் அதிகமான பகுதிகளுக்கு, பெருமளவு உழைப்புப் பிரிவினையுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொறியமைவு இன்றியமையாதது. தனிநபர்களும், ஒப்பீட்டளவில் சிறு குழுக்களும் தமது தேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ளும் வாழ்க்கை நினைத்துப் பார்க்கும் போது சொர்க்கமாக இனித்தாலும், அது இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. மாறாக, இப்போது மனிதகுலம் இந்த பூமிக் கோளம் தழுவிய உற்பத்தி, நுகர்வு சமூகமாக உள்ளது என்று சொல்வது மிகையாகாது.
நமது காலத்தின் நெருக்கடியின் சாராம்சம் என்ன என்று சுருக்கமாக சுட்டிக் காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் வந்திருக்கிறேன். தனிமனிதர் சமூகத்துடன் கொண்டிருக்கும் உறவைப் பற்றியது அது. சமூகத்தின் மீது தனது சார்பை மனிதர் முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்ந்திருக்கிறார். ஆனால், இந்தச் சார்பை ஒரு நேர்மறையான சொத்தாக உணராமல், ஒரு உயிரோட்டமான பிணைப்பாக உணராமல், தன்னைப் பாதுகாக்கும் சக்தியாக உணராமல், தனது இயற்கை உரிமைகளுக்கும், தனது பொருளாதார இருத்தலுக்கும் அச்சுறுத்தலாக அவர் பார்க்கிறார்.
மேலும், சமூகத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம், அவரது உயிரியல்  கட்டமைப்பில் உள்ளார்ந்து இருக்கும் தான் என்ற தன் முனைப்பு போக்கைத் தீவிரப்படுத்துகிறது. இயல்பாகவே பலவீனமாக இருக்கும் சமூக போக்குகளை, மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிலையில் இருக்கும் மனிதர்களும் இந்தச் சீரழிவு நிகழ்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த அகந்தையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள அவர்கள் பாதுகாப்பற்றும், தனிமையாகவும் உணர்கிறார்கள்; ஒரு வகை அப்பாவித்தனமான, எளிமையான, பகட்டற்ற வாழ்வின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாகவே குறுகிய, அபாயங்கள் நிரம்பிய தனது வாழ்க்கையின் உண்மையான பொருளை ஒரு மனிதர் கண்டு கொள்ள முடியும்.
இன்று நிலவும் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் தீங்குகளின் உண்மையான மூலம் என்பது எனது கருத்து. பெரும் எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் அவர்களது உழைப்பின் பலன்களை பறித்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறு பறித்துக் கொள்வது வன்முறையின் மூலம் நடக்கவில்லை, சட்டரீதியாக நிறுவப்பட்ட விதிகளைக் கவனமாகக் கடைப்பிடிப்பதன் மூலமே நடக்கிறது. இதைப் பற்றி பேசும் போது, உற்பத்தி சாதனங்கள் – அதாவது, நுகர்வு பொருட்களையும், கூடுதல் எந்திர சாதனங்களையும் உற்பத்தி செய்வதற்கான ஒட்டு மொத்த உற்பத்தித் திறன் –  சட்டப்படியாகவும், நடைமுறையிலும் தனியார் சொத்தாக உள்ளன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
விளக்குவதற்கு எளிமையாக இருக்கும் வகையில் பின்வரும் விவாதத்தில், உற்பத்தி சாதனங்களின் உடைமையில் பங்கு இல்லாத அனைவரையும் தொழிலாளர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன். அந்தச் சொல் வழக்கமாக இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.
உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர், தொழிலாளரின் உழைப்புச் சக்தியை வாங்கும் நிலையில் இருக்கிறார். உழைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளர் உற்பத்தி செய்யும் புதிய பொருட்கள் முதலாளியின் சொத்தாக மாறி விடுகின்றன. இந்த நிகழ்முறையின் சாராம்சமான விஷயம் என்னவென்றால் தொழிலாளர் உற்பத்தி செய்வதற்கும், அவர் பெறும் ஊதியத்துக்கும் இடையேயான உறவுதான். இரண்டுமே உண்மையான மதிப்பின் அலகுகளில் அளவிடப்படுகின்றன.
உழைப்பு ஒப்பந்தம், சுதந்திரமானதாக இருந்தாலும் தொழிலாளருக்குக் கிடைக்கும் வருமானம் அவர் உற்பத்தி செய்யும் பொருட்களின் உண்மை மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக, அவரது குறைந்தபட்ச தேவைகளாலும், முதலாளிகளின் உழைப்பு சக்திக்கான தேவையை நிறைவு செய்ய போட்டி போடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாலும் தீர்மானிக்கப்படுகின்றது. கோட்பாட்டில்கூடத் தொழிலாளருக்கான ஊதியம், அவர் உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனியார் மூலதனம் ஒரு சிலரிடம் குவியும் போக்கு காணப்படுகிறது. ஒரு பக்கம் முதலாளிகளுக்கிடையேயான போட்டி, இன்னொரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றமும், அதிகரிக்கும் உழைப்புப் பிரிவினையும் சிறு உற்பத்திக் கூடங்களை அழித்து விட்டுப் பெரும் தொழிற்சாலைகள் உருவாவதை ஊக்குவிப்பது இதற்குக் காரணமாகின்றன. இந்த வளர்ச்சிகளின் விளைவாக ஜனநாயகரீதியில் அமைப்பாக்கப்பட்ட அரசியல் சமூகத்தால்கூடக் கட்டுப்படுத்த முடியாத தனியார் மூலதன சிறு கும்பலின் சர்வாதிகாரம் தோன்றுகிறது.
சட்டமியற்றும் அவைகளின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; தனியார் முதலாளிகள் அவர்களுக்குப் பெருமளவு நிதி உதவி அளித்து அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றனர்; இதன் மூலம் அனைத்து நடைமுறை விஷயங்களைப் பொருத்தவரையில் வாக்காளர்களைச் சட்டமியற்றும் அவையிலிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், மக்களின் பிரதிநிதிகள், மக்கள் தொகையின் நலிவுற்ற பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவு பாதுகாப்பதில்லை.
மேலும், தனியார் முதலாளிகள்  நேரடியாகவும், மறைமுகமாகவும் தகவல் தொடர்பின் முக்கியமான ஊடகங்களான பத்திரிகைகள், வானொலி, கல்வி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். எனவே, ஒரு தனிப்பட்ட குடிமகன் புறநிலையைச் சரியாக புரிந்து கொண்டு முடிவு எடுப்பதும் தனது அரசியல் உரிமைகளை அறிவுபூர்வமாகப் பயன்படுத்துவதும் பெரும்பாலான நேரங்களில் மிகக் கடினமாகவோ, அல்லது சாத்தியமற்றதாகவோ உள்ளது.
மூலதனத்தில் தனியுடைமை என்ற அடிப்படையிலான பொருளாதாரத்தில் நிலவும் நிலைமை இரண்டு முக்கிய கோட்பாடுகளை கொண்டிருக்கிறது : முதலில், உற்பத்திச் சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றின் உடைமையாளர்கள் தம் விருப்பப்படி அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானதாக உள்ளது.
இந்த வகையில் தூய்மையான முதலாளித்துவ சமூகம் என்ற ஒன்று நிச்சயமாக இல்லைதான். குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட, கடுமையான அரசியல் போராட்டங்களின் மூலம் குறிப்பிட்ட வகை தொழிலாளர்களுக்குச் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தத்தின்” மேம்பட்ட வடிவத்தைப் பெறுவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இன்றைய பொருளாதாரம், “தூய்மை”யான முதலாளித்துவத்திலிருந்து பெருமளவு வேறுபடவில்லை என்று தெரிகிறது.
“உற்பத்தி இலாபத்துக்காகச் செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்காக இல்லை. “வேலை செய்ய திறமையும் விருப்பமும் உடைய எல்லோருக்கும் வேலை கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை; வேலை இல்லாதவர்களின் படை ஒன்று எப்போதுமே இருக்கிறது.
“எப்போது வேலை போகுமோ என்ற  பயத்தில்தான் தொழிலாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.”
வேலையில்லாதவர்களும் குறைவான சம்பளம் பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தையாக அமைவதில்லை என்பதால் நுகர்வு பொருட்களின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படுகிறது; அதன் விளைவாக பெருமளவு சிரமங்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரது வேலைச் சுமையையும் குறைப்பதற்கு மாறாக, கூடுதல் வேலை இழப்பை உருவாக்குகிறது.
இலாப நோக்கமும், முதலாளிகளுக்கிடையேயான போட்டியும், மூலதனத்தை ஒன்று குவிப்பதிலும் பயன்படுத்துவதிலும் நிலையற்ற தன்மைக்குக் காரணமாக உள்ளது. இது கடும் பொருளாதார மந்தங்களுக்கு இட்டுச் செல்கிறது. கட்டற்ற போட்டி பெருமளவு உழைப்பை வீணாக்குவதற்கும் மேலே குறிப்பிட்ட தனிநபர்களின் சமூக உணர்வை முடக்கிப் போடுவதற்கும்  இட்டுச் செல்கிறது.
தனிநபர்களை முடக்கிப் போடுவது, முதலாளித்துவத்தின் மிக மோசமான தீங்கு என்று நான் கருதுகிறேன். தமது எதிர்கால வாழ்க்கைப் பணிக்குத் தயாராகும் மாணவர்கள், பொருள் ஈட்டுவதில் அடையும் வெற்றியை வியந்து வழிபடும் மனோபாவத்தின் அடிப்படையிலான, ஒரு அதீதமான போட்டி மனப்பான்மைக்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
இந்த சாகடிக்கும் தீங்குகளை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே வழிதான் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமூக இலக்குகளை நோக்கியதான கல்வி முறையுடன் கூடிய ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பதுதான் அந்த வழி. அத்தகைய ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி சாதனங்கள் சமூகத்துக்கு சொந்தமாக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
சமூகத்தின் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், வேலை செய்ய திறன் உடைய அனைவருக்கும் வேலையைப் பகிர்ந்து கொடுத்து, ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். ஒரு மனிதருக்கு வழங்கப்படும் கல்வி, அவரது உள்ளார்ந்த திறமைகளை வளர்ப்பதோடு, சக மனிதர்கள் மீதான பொறுப்புணர்வையும் வளர்க்கும். இப்போதைய சமூகத்தில் ஊக்குவிக்கப்படும் அதிகாரத்தையும் வெற்றியையும் வழிபடுவதற்கு மாற்றாக அது இருக்கும்.
இருப்பினும் திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோசலிசம் ஆகி விடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்போடு தனிநபரை முழுமையாக அடிமைப்படுத்துவது இணைந்திருக்கலாம். உண்மையான சோசலிசத்தைச் சாதிப்பற்கு மிகக் கடினமான சில சமூக-பொருளாதார பிரச்சனைகளுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது; அனைத்தும் தழுவிய அரசியல் பொருளாதார அதிகாரத்தின் மையப்படுத்தலை அமல்படுத்தும் போதே அதிகார வர்க்கம் சர்வாதிகாரம் படைத்ததாகவும், அனைத்துக்கும் மேலே தன்னை நிறுத்திக் கொள்வதாகவும் மாறுவதை எப்படித் தடுப்பது? தனிமனிதரின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது, அதன் மூலம் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிர்சக்தியை உருவாக்குவதை எப்படி உறுதி செய்வது?
மாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கும் நமது காலத்தில் (1949-ல் எழுதியது) சோசலிசத்தின் நோக்கங்கள் குறித்தும் அது சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தெளிவு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்தப் பிரச்சனைகள் குறித்த சுதந்திரமான, தடையற்ற விவாதங்கள் முடக்கப்பட்ட இப்போதைய நிலைமைகளில்,(பார்க்க அடிக்குறிப்பு 2) இந்த பத்திரிகையை (monthly review)  தொடங்குவது மிக முக்கியமான பொதுச் சேவை என்று நான் கருதுகிறேன்.
மொழியாக்கம்: அப்துல்
http://www.vinavu.com

John F Kennedy

John Fitzgerald Kennedy, the son of Joseph Patrick Kennedy and Rose Fitzgerald, was born in Brookline, Massachusetts, on 29th May, 1917. His great grandfather, Patrick Kennedy, had emigrated from Ireland in 1849 and his grandfathers, Patrick Joseph Kennedy and John Francis Fitzgerald, were important political figures in Boston. Kennedy's father was a highly successful businessman who later served as ambassador to Great Britain (1937-40).
In 1940 Kennedy graduated from Harvard University with a science degree. The same year saw the publication of Why England Slept (1940), a book on foreign policy. He joined the United States Navy in 1941 and became an intelligence officer. After the United States entered the Second World War, Kennedy was transferred to the Motor Torpedo Boat Squadron where he was given command of a PT boat.
Sent to the South Pacific, in August 1943, his boat was hit by a Japanese destroyer. Two of his crew were killed but the other six men managed to cling on to what remained of the boat. After a five hour struggle Kennedy, and what was left of his crew, managed to get to an island five miles from where the original incident took place.
Kennedy suffered a bad back injury and in December 1943 was sent back to the United States. When he recovered he was promoted to the rank of lieutenant and became a PT instructor in Florida. After a further operation on his back he returned to civilian life in March 1945. For the next twelve months he worked as a journalist covering the United Nations Conference in San Francisco and the 1945 General Election in Britain.


In 1960 Kennedy entered the race to become the Democratic Party presidential candidate. Kennedy won Democratic primaries in New Hampshire, Wisconsin, Indiana, Ohio, Oregon, Maryland, Nebraska and West Virginia. At the national convention in July 1960, Kennedy was nominated on the first ballot. He selected Lyndon B. Johnson, as his running mate.

On 22nd November, 1963, President John F. Kennedy arrived in Dallas. It was decided that Kennedy and his party, including his wife, Jacqueline Kennedy, Vice President Lyndon B. Johnson, Governor John Connally and Senator Ralph Yarborough, would travel in a procession of cars through the business district of Dallas. A pilot car and several motorcycles rode ahead of the presidential limousine. As well as Kennedy the limousine included his wife, John Connally, his wife Nellie, Roy Kellerman, head of the Secret Service at the White House and the driver, William Greer. The next car carried eight Secret Service Agents. This was followed by a car containing Lyndon Johnson and Ralph Yarborough.
At about 12.30 p.m. the presidential limousine entered Elm Street. Soon afterwards shots rang out. John Kennedy was hit by bullets that hit him in the head and the left shoulder. Another bullet hit John Connally in the back. Ten seconds after the first shots had been fired the president's car accelerated off at high speed towards Parkland Memorial Hospital. Both men were carried into separate emergency rooms. Connally had wounds to his back, chest, wrist and thigh. Kennedy's injuries were far more serious. He had a massive wound to the head and at 1 p.m. he was declared dead.
Within two hours of the killing, a suspect, Lee Harvey Oswald, was arrested. Throughout the the time Oswald was in custody, he stuck to his story that he had not been involved in the assassination. On 24th November, while being transported by the Dallas police from the city to the county jail, Oswald was shot dead by Jack Ruby.




Fingers were pointed at Dallas police after John F Kennedy was assassinated in the city, the declassified documents reveal. Those who believed the local force was behind the killing included Russian leader Nikita Khrushchev.And one FBI informant even named patrolman JD Tippit, who was shot dead by Lee Harvey Oswald 45 minutes after JFK died, as the President’s actual killer.
According to a note sent to agents, the source was told by an H ­Theodore Lee that “the president was actually assassinated by Dallas police officer TIPPIT”.
Dallas patrolman JD Tippit was named to by an FBI informant as the real gunman.
© Provided by Trinity Mirror Plc Dallas patrolman JD Tippit was named to by an FBI informant as the real gunman. The informant said Lee got the information from several previously active members of the Fair Play for Cuba Committee.
The note also said a week before the assassination Tippit, who was alleged to be the head of the right-wing John Birch Society in Dallas, and a third man – possibly Oswald – met in Jack Ruby’s nightclub.
Ruby shot Oswald two days after Kennedy’s assassination and died of lung cancer in 1967.
The two men had supposedly met in a Florida airport as part of a group heading to Cuba to “cut sugar cane” and were heard discussing “Big Bird” by an informant.
Lee would later tell the FBI that communist Oswald was somehow involved in the anti-Castro movements as well as the FPCC, which allowed him to see both “sides of the issues involved”.
a group of people riding on the back of a car: Moments before the assassination.© Provided by Trinity Mirror Plc Moments before the assassination.
Tippit was in his patrol car when he stopped Oswald as he walked down Patton Avenue in Dallas.
After talking to Oswald through the window, he got out and was shot three times with a .38 calibre revolver. An autopsy showed he then took a bullet to the right side of his temple as he lay on the pavement.
However, the suspicions about the Dallas police were not confined to the US. CIA notes of a May 1964 conversation with Khrushchev said the Soviet leader did not believe American security was so “inept” that the president could be killed without a conspiracy.
He believed the Dallas Police Department was an “accessory” to the assassination and the CIA source “got the impression that Chairman Khrushchev had some dark thoughts about the American Right Wing being behind this conspiracy”.
a man wearing a suit and tie: Soviet leader Nikita Khrushchev believed there was a conspiracy behind Kennedy's death.© Provided by Trinity Mirror Plc Soviet leader Nikita Khrushchev believed there was a conspiracy behind Kennedy's death.
When the source said Oswald and Ruby were both “mad” and he “acted on his own... Khrushchev said flatly that he did not believe this”.
The Soviets also suspected then Vice President Lyndon B Johnson could have been behind the killing, according to one of the 2,891 newly released documents.
In a note from December 1, 1966, FBI Director J Edgar Hoover said he was aware a US mole in Moscow was saying the KGB was “in possession of data purporting to indicate Johnson was responsible for the assassination”.
It came as the Kremlin feared it would be blamed for the President’s death and face retaliation.
The details emerged in a message to the White House called Reaction of Soviet and Communist Party Officials to the Assassination of President John F Kennedy.
The declassified documents, containing more than 30,000 pages, have done little so far to silence conspiracy theorists who believe Oswald was a fall guy for a wider plot.
John F. Kennedy making a funny face: The Kremlin feared it would be blamed for the President’s death and face retaliation.© Provided by Trinity Mirror Plc The Kremlin feared it would be blamed for the President’s death and face retaliation.
One document from 1975 contains a partial deposition by Richard Helms, a deputy CIA director under Kennedy.
The intelligence chief later became CIA chief to the Rockefeller Commission, studying unauthorised CIA activities in domestic affairs. Commission lawyers appeared to be seeking information on which foreign leaders might have been the subject of assassination attempts by or on behalf of the CIA.
A lawyer asked Helms: “Is there any information involved with the assassination of ­President Kennedy which in any way shows that Lee Harvey Oswald was in some way a CIA agent or agent?”
But the document ends short of his answer. The papers also show Helms, who later served under the administrations of Lyndon B Johnson and Richard Nixon , claim that Johnson used to say Kennedy’s killing was an act of foreign retribution.
Helms said in a deposition: “President Johnson used to go around saying the reason President Kennedy was assassinated was that he had assassinated President Diem.”
South Vietnamese leader Ngo Dinh Diem was arrested and killed just weeks before Kennedy during a US-backed coup. 

https://www.msn.com/en-au/news/world/jfk-files-reveal-dallas-cop-shot-by-lee-harvey-oswald-may-have-been-the-real-gunman/ar-AAu92g4?ocid=spartanntp