Search This Blog

Showing posts with label Other Sciences / Social Sciences. Show all posts
Showing posts with label Other Sciences / Social Sciences. Show all posts

Tuesday, July 4, 2023

எழுத்தும் தொழில்நுட்பமும்-ஜாக் டெரிடா PHILOSOPHY: Jacques Derrida

ஜாக் டெரிடா
ஜூலை மாதம் 15ஆம் தேதி பிறந்த ஃப்ரெஞ்ச் தத்துவவியலாளர் ஜாக் டெரிடா ’கட்டுடைப்பு’ என்ற விமர்சன முறைமையை உருவாக்கியவர். பல சமயங்களில் ‘கட்டுடைப்பு’ என்ற சொல்லின் பயன்பாடு குறித்து வருத்தப்பட்டிருக்கிறார் டெரிடா. அவர் எல்லாத் துறைகளிலும் கட்டுடைப்பு கோட்பாட்டைப் பயன்படுத்தி செய்த ஆய்வு பெரும் புகழை ஈட்டித் தந்தது.
எழுத்தாக இருக்கும் அனைத்தும் பதிவு செய்யத் தொடங்கிய பின் மொழியின் கீழ் வருவதான இயக்கமாக அடையாளப்படுத்தப்பட்டது. எழுத்தின் வடிவத்தைக் காட்ட தொழில்நுட்பம் தேவைப்பட்டது. அது குறிப்பிட்ட பாணி, வகைமாதிரி என்ற பல முறைமைகளில் சொல்லப்படலாம். அவை எல்லாம் நன்கு அறிமுகமானவைதான். ஆனால் குறிப்பிட்ட வகையில் எழுதப்படுவதெல்லாம் பொருள் கொடுக்கின்றனவா என்பது குறித்த சந்தேகம் உள்ளது. ஏனெனில் பொருள் தருதல் என்பதன் மூலாதாரம் எழுதும் தொழில்நுட்பத்துடன் இணைகிறதா என்பது கேள்விக்குரியது.
எனவே மொழி, எழுத்து, பேச்சு என்பதை வேறுபடுத்திப் புரிந்துகொள்வதன் மூலமே இவற்றின் மூலாதாரத்தை அறியமுடியும். இப்போது ‘மொழி’ என்று குறிப்பிட்டால், அதில் செயல்பாடு, இயக்கம், சிந்தனை, பிரதிபலிப்பு, நனவுநிலை, நனவிலி, அனுபவம், பாதிப்பு என்று எல்லாமே அடங்கிவிடுகிறது.
இப்போது ‘மொழி’ என்பதற்குப் பதிலாக ‘எழுத்து’ என்பதை இவற்றுக்கு எல்லாம் பயன்படுத்தினால் அவற்றின் சாராம்சம் வெளிப்படும். ஒளிப்பதிவு, நடன அமைப்பு, வரைபட எழுத்து, இசையின் குறிப்பு போன்றவற்றில் எழுத்தின் சாராம்சம் ஒலியிலிருந்து வேறுபட்டதாக உள்ளது.
அதே போல் ராணுவத்திற்குரிய எழுத்து, அரசியல் எழுத்து, போன்றவைத் தொழில்நுட்பத்தை நாடும் எழுத்தாக உள்ளன. உயிரியல் துறைக்கான எழுத்து, ஒவ்வொரு உயிரணுவுக்கும் வேறுபட்டதாக உள்ளது. எனவே இந்த எல்லாத் துறைகளிலும் இரண்டாம்பட்சமாகக் கருதப்பட்ட எழுத்து அடிப்படை சாராம்சத்தைக் கொண்டதாக உள்ளது.
இணையதள எழுத்து என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்றாக உள்ளது. ஏனெனில் அது ஆன்மா, வாழ்வு, மதிப்பு, தேர்வு, நினைவு போன்றவற்றில் பயன்படுத்தப்படும் எழுத்துதான் மனிதனிலிருந்து வேறுபட்ட செயற்கை ஆற்றல் கொண்ட எந்திர மனிதனை உருவாக்குகிறது. எனவே ஒலியன் என்ற ஒலித்துணுக்கு போல் எழுத்தின் துணுக்கு அல்லது வரிவடிவம்தான் எந்த ஒரு பொருளின் மூலாதாரமாக, பொருள் தரும் ஒன்றாக, அடிப்படை அலகாக உள்ளது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இதிலிருந்துதான் அர்த்தத்திற்கான மூலாதாரம் உருவாகிறது.
ஜாக்டெரிடா
Thanks

Mubeen Sadhika

Friday, May 5, 2023

பெண் பாலியல் விருப்பமும் விடுதலையும்-லூச் இரிகரை (LUCE IRIGARAY)


பெண்ணின் பாலியல் விருப்பம் ஆணை முழுமையாக விழுங்கி விடக்கூடியது. பெண் பாலியலின் வன்மையைக் கண்டு ஆணுக்கு அச்சம் உண்டு. அதனால் அது தேவையற்றது, வீணாவது, புறந்தள்ளப்படவேண்டியதாகக் கருதப்பட்டு வருகிறது. பெண்ணின் முழுமையான பாலியல் வீரியத்தைக் காணும் போது அதை நிறைவு செய்ய முடியாத ஆண் குற்றவுணர்விலும் பதற்றத்திலும் தள்ளப்படுகிறான். அந்தத் தோல்வியை ரகசியமாக வைத்துக் கொள்கிறான்.
அதனால் பெண்ணை ஒரு தாய்மையின் உருவாக மாற்றிப் பார்க்கவே ஆண் விரும்புகிறான். கன்னித்தாயாக பின் தன் குழந்தைகளின் தாயாக, தன்னுடைய தாயாக மாற்றிப் பார்ப்பது பாதுகாப்பானதாக அவனுக்கு இருக்கிறது. மேலும் அந்தத் தகுதியை அவள் அடைவது அவளைப் பாலியலில் வீரியம் குன்றியவளாக்கவும் பயன்படுகிறது என்பதால் ஆணுக்கு அது பாதுகாப்பைத் தருகிறது.
மேலும் பெண் ஒரு பயன்பாட்டு கருவியாகவே ஆண்மைய சமூகம் பார்த்திருக்கிறது. அதனால் ஒரு நுகர்பொருளாக அவளை மாற்றிவிடுவது எளிமையானதாகிறது. ஆனால் இதுவரையிலான எந்த ஓர் அரசியல் கோட்பாடும் பெண்ணின் விருப்பம் குறித்த விடுதலையைப் பேசவில்லை. மார்க்சியம் அதன் முக்கியத்துவம் பற்றி கவனமெடுக்கிறது.
ஆண், பெண்ணுக்கு நிகரில்லாத நிலையில் பெண்ணுக்கான அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. அதனை மீட்டெடுக்கப் பொருளாதாரத்திலும் பிற துறைகளிலும் சம வாய்ப்புகளைப் பெற்றாலும் ஆணுடைய பலவீனம் குறித்த சொல்லாடல் இருபால் உறவு நிறுவனத்தில் வெளிப்படாமலேயே உள்ளது.
பாலியலும் ஆண்,பெண் உடல்களும்
ஆண் தன் பாலியலை நிறைவேற்றிக் கொள்ள பெண் உடல் தேவைப்படுகிறது. ஆனால் பெண் தனக்கான பாலியல் விருப்பமாக ஆண் உடல் இருக்கிறது என்ற கற்பிதத்தை உருவாக்கி வைக்க நிர்பந்திக்கப்படுகிறாள்.
ஆணுடைய தேவை சார்ந்து தன் பாலியல் தேவை நிர்ணயிக்கப்படுவதை அவள் ஏற்கவேண்டியிருக்கிறது. அதுவே அவளது குணாம்சமாகிறது. அதை மீறினால் அவளுக்குத் தவறான பெயர் கிடைக்கும் என்ற எண்ணத்தில் கட்டுப்பாட்டுடன் இருக்கிறாள்.
ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள பாலியல் முரண்பாடு குறித்து ஃப்ராய்டும் லக்கானும் குறிப்பிடவில்லை.
ஆணிடம் கிடைத்த பாலியல் நிறைவைத்தான் தனது பாலியல் கற்பனையாகப் பெண் உருவாக்க வேண்டியிருக்கிறது. இது வதைபடுதல் இன்பம் என்ற வகைமையைச் சார்ந்ததாக உள்ளது.
ஃப்ராய்ட் சிறுமிகளின் பாலியல் விருப்பத்துக்கான தொடக்கம் முளையிலேயே மறைந்து போவதாகக் கூறுகிறார். ஆனால் பெண் பாலியலின் ஆதி வடிவம் இப்போதிருப்பது போல் இருந்திருக்காது. மேலும் நாகரிகமயப்படுத்துதல் என்பது ஆண் மைய சிந்தனையிலிருந்து உருவான ஒன்றாக இருப்பதால் பெண் தன் உடல் குறித்த முழுமையான விழிப்புணர்வைப் பெற்றுவிடாமல் தடுப்பதாகவே பண்பாட்டுக் கூறுகள் அனைத்தும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அதனால்தான் ஆண் பாலியல் செயலூக்கம் கொண்டும் பெண் பாலியல் முடக்கப்பட்ட நிலையிலும் உள்ளது. இந்தக் கருத்தே பெண் தன் உடலிலிருந்து பிரிக்கப்பட்ட கருத்தாக்கத்தை உருவாக்கியது.

முந்தைய உளவியல் ஆய்வுகளின் மறுவாசிப்பு
ஃப்ராய்ட் தனது உளவியல் ஆய்வில் சிறுமிக்கும் அவள் தாய்க்கும் இடையிலுள்ள உறவு குறித்து மிகக் குறைந்த அளவிலான கவனத்தையே கொடுத்திருக்கிறார். பெண் குழந்தை தனது தாயை விரும்புவது ஆணிய தன்மை வெளிப்படும் லிங்கத்தை விரும்புவது போலானதுதான் என்று ஃப்ராய்ட் குறிப்பிடுகிறார். இந்த விருப்பம்தான் தாய் மீதான வெறுப்பாக மாறுகிறது என்கிறார் ஃப்ராய்ட். தனக்கும் தாய்க்கும் உள்ள உடல் குறையாக அது பரிணாமம் பெறுகிறது என்கிறார் ஃப்ராய்ட்.
ஃப்ராய்ட்டுக்குப் பாலியல் செயல்பாடு என்பது மனித மறுஉற்பத்தி செயல்பாடாகவே தோன்றுகிறது. பெண்ணின் பாலியல் பரிணாமம் மறுஉற்பத்திக்கானதாகக் கட்டமைக்கப்படவேண்டியது என்பதே ஃப்ராய்டின் இலக்காக இருக்கிறது. பெண் என்ற உயிரி சமூகவயப்படுத்தப்பட்டு குடும்பம் என்ற நிறுவனத்தின் உற்பத்தி எந்திரமாக்கப்படும் உளவியலைத்தான் ஃப்ராய்ட் பேசுகிறார். இடிபஸ் சிக்கலின் அடிப்படையில் ஆணைப் போன்ற உடலைப் பெறாத ஏக்கம் கொண்ட மனித உயிரியாகப் பெண் உருவாவதாக ஃப்ராய்ட் வாதிடுகிறார்.
பெண்ணின் அடக்கப்பட்ட பாலியல் விருப்பம் குறித்து ஆய்வு செய்யாத ஃப்ராய்ட் அதனால் ஏற்படும் விளைவுகளை நோயாகப் பாவிக்கிறார். பாலியல் வெறுப்பு, இசிவு நோய் எனப்படும் ஹிஸ்டிரியா, மனப்பிறழ்வு போன்றவற்றால் பெண் பாதிக்கப்படுவதாக ஃப்ராய்ட் கூறுகிறார். இந்த உளவியல் ஆய்வு பெண்ணின் எந்த வகையான இயல்பைக் குறித்தும் பேசுவதாக இல்லை. பெண் ஓர் இருள் பிரதேசமாகவே இதுவரையிலான உளவியல் ஆய்வுகள் பாவிக்கின்றன.
கரன் ஹார்னி, மெலெய்ன் கிளைன், எர்னஸ்ட் ஜோன்ஸ் போன்றவர்கள் ஃப்ராய்டின் ஆய்வை ஏற்கவில்லை. அவர்களுக்குப் பின் வந்த உளவியல் ஆய்வாளர்கள் பெண் உளவியல் குறித்த மாறுபட்ட ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.
லூச்இரிகரை
Thanks

Mubeen Sadhika

Saturday, April 29, 2023

வாழ்வின் வடிவமும் அரசியலும்-அகம்பென்

வாழ்வின் வடிவம் குறித்து கிரேக்கத்தில் இரு சொற்களில் விளக்கப்படுகிறது. ஒன்று எல்லா உயிரிகளின் நடைமுறை வாழ்தலைக் குறிப்பது. மற்றொன்று ஒரு குறிப்பிட்ட உயிரி அல்லது குழுவைச் சார்ந்தவர்களின் வாழ்தலைக் குறிப்பது. வாழ்வின் வடிவம் என அகம்பென் குறிப்பது வாழ்விலிருந்து எப்போதும் அதன் வடிவத்தைப் பிரிக்கவே முடியாது என்ற பொருளில் ஆகும்.

வாழ்வின் சாத்தியங்கள் என்பவை வாழ்தலுக்கான வழிமுறைகள், செயல்பாடுகள், நடைமுறைகள் போன்றவை ஆகும். எந்த ஒரு மனித வாழ்வும் உயிரியல் வழிமுறைகளின் படி இருக்கவேண்டும் என்றோ ஏதோ ஒரு தேவையை முன்வைத்தோ நடத்தப்படவேண்டும் என்பதில்லை. வாழ்தலின் சாத்தியங்கள் அந்தந்தச் சூழலுக்கு ஏற்ப மாறுபடலாம். அதனால் வாழ்தலைப் பணயம் வைத்துத்தான் எந்த ஒரு மனித வாழ்வும் வாழ்தலுக்கான சாத்தியத்தைத் தேடுகிறது. மனித வாழ்வில் வெற்றியோ தோல்வியோ சாதனையோ வீழ்ச்சியோ மகிழ்ச்சி எப்போதும் பணயம் வைக்கப்படுகிறது. அதுதான் வாழ்வின் வடிவத்தை அரசியல் வடிவமாக மாற்றுகிறது.
அரசியல் அதிகாரம் வாழ்வின் வடிவத்தை உடுப்பற்ற வடிவமாக மாற்றி அமைக்கிறது. வாழ்தல் சட்டத்திற்குள் உள்வாங்கப்படுவது எங்கே என்றால் அது மரண அச்சுறுத்தலைத் தரும்போது மட்டுமே ஆகும். ஆனால் இறையாண்மை அதிகாரத்தின் முன் வாழ்தல் எப்போதும் மரண அச்சுறுத்தலைச் சந்தித்துக் கொண்டே இருக்கிறது. ஏனெனில் எல்லா மனிதர்களும் இந்த இறையாண்மை அதிகாரத்திடம் தங்கள் உயிரையும் மரணத்தையும் பணயம் வைத்திருக்கின்றன. அதனால்தான் மனித வாழ்வை உடுப்பற்ற வாழ்வாக இறையாண்மை அதிகாரம் கருதுகிறது. மார்க்ஸியம் உருவாக்கிய மனிதன், குடிமகன் என்ற பிளவு இப்போது உடுப்பற்ற வாழ்வு, பல்வேறு வடிவங்களாலான வாழ்வு என்று இடமாற்றப்பட்டுவிட்டது.
பல்வேறு வடிவங்களில் வாக்காளர், தொழிலாளர், பத்திரிகையாளர், மாணவர், எய்ட்ஸ் நோயாளி, மூன்றாம் பாலினத்தவர், மூத்தவர், பெற்றோர், பெண் என்று அது பிரிக்கப்பட்டிருக்கிறது. இந்த வடிவங்கள் அனைத்துமே உடுப்பற்ற வாழ்வைக் கொண்டவை. அந்த வடிவங்களைக் கொண்ட மனிதர்களை வெறும் உடல்களாக மட்டுமே இறையாண்மை அதிகாரம் கருதுகிறது. இப்படிப் பிரிப்பதால்தான் மனித வாழ்வின் மகிழ்வும் பிரிக்கப்படுகிறது என்பதை அகம்பென் வலியுறுத்துகிறார்.
அகம்பென்

Thanks Mubeen Sadhika 

ஜியோர்ஜியோ அகம்பென் இத்தாலிய தத்துவம் மற்றும் தீவிர அரசியல் கோட்பாட்டின் முன்னணி நபர்களில் ஒருவர், சமீபத்திய ஆண்டுகளில், ஆங்கிலோ-அமெரிக்க அறிவுசார் உலகில் பல துறைகளில் அவரது பணி சமகால புலமைப்பரிசில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 1942 ஆம் ஆண்டில் ரோமில் பிறந்த அகம்பென், சிமோன் வௌயிலின் அரசியல் சிந்தனை குறித்த முனைவர் ஆய்வறிக்கையுடன் சட்டம் மற்றும் தத்துவத்தில் படிப்பை முடித்தார், மேலும் ஹெகல் மற்றும் ஹெராக்ளிட்டஸைப் பற்றிய மார்ட்டின் ஹைடெக்கரின் கருத்தரங்குகளில் ஒரு முதுகலை அறிஞராக பங்கேற்றார். மசெராட்டா, வெரோனா பல்கலைக்கழகங்கள் உட்பட பல்வேறு பல்கலைக்கழகங்களில் கற்பித்த அவர், கோலேஜ் இன்டர்நேஷனல் டி பாரிஸில் நிகழ்ச்சிகளின் இயக்குநராக இருந்தார்  . அமெரிக்காவின் பல்வேறு பல்கலைக்கழகங்களில் வருகை பேராசிரியராக பணியாற்றிய அவர், நியூயார்க்கில் உள்ள பல்கலைக்கழகத்தின் புதிய பள்ளியில் புகழ்பெற்ற பேராசிரியராக இருந்தார் .செப்டம்பர் 11, 2001 தாக்குதல்களை அடுத்து அமெரிக்காவிற்குள் நுழையுமாறு அமெரிக்க குடிவரவுத் துறை கோரிய “உயிர் அரசியல் பச்சை குத்தலுக்கு” ​​அவர் சமர்ப்பிக்க மறுத்தபோது அவர் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

Wednesday, March 22, 2023

மதமும் உண்மையும்-ஜிஜெக்கின் விளக்கம்


எல்லா மதங்களின் அனுபவங்களும் நடைமுறைகளும் உண்மையையும் அர்த்தத்தையும் உள்ளிணைத்தவையாக உள்ளனவா என்பதுதான் இன்றைய கேள்வியாக உள்ளது. இதற்கு என்ன காரணம் என்றால் இறையியலாளர்களால் கடவுளோடு ஏன் சாத்தானும் அதே அளவு ஆற்றல் வாய்ந்த தன்மையுடன் இருக்கிறது என்பதற்கான கேள்விக்கு விடை காண முடியவில்லை. எங்கும் இருக்கும் கடவுளுடன் எந்தத் தீங்கும் இழைக்காத பல்லாயிரம் கோடி பேர் இன்னும் ஏன் இத்தனை துயருடன் இருக்கிறார்கள் என்பதற்கான பதிலை எந்த மதமும் தரவில்லை. அந்தக் கேள்விக்கு மூன்று வகையான விடைகள் தரப்படுகின்றன. 1.பாவத்தின் சம்பளம் மரணம் 2.அறவியல் சார்ந்த நடத்தை நெறிமுறை 3.இறுதி நீதி எனும் தெய்வீக மாயம்.
அதே போல் மற்ற இறையியலாளர்கள் மேலும் மூன்று பதில்களையும் தருகிறார்கள். 1.எங்கும் நிறைந்திருக்கும் கடவுள் என்றாலும் அதற்கும் எல்லை உண்டு 2.கடவுள் தனது ஆற்றலை வீணாகச் செலவழிப்பதை விரும்புவதில்லை 3.சாத்தானின் ஆற்றலுடன் கடவுள் தொடர்ந்து போரிட்டுக் கொண்டிருக்கிறார்.
இந்தச் சிக்கலான கேள்விக்கு பின்நவீனத்துவம் எளிமையான ஒரு பதிலை வைத்திருக்கிறது. ஆதிகாலத்து பாவத்தைக் கைவிடுதல் என்பதைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்தப் பதில் மனித அந்நியமாதலை உள்ளிணைத்ததாக உள்ளது. அறிவொளி சார்ந்தவர்கள் நல்லதையும் தீயதையும் பிரிக்கிறார்கள். ஒரே கடவுள் கொள்கையினர் தீயதை மனித விடுதலையுடன் இணைக்கிறார்கள். அறிவொளியின் கருத்தைக் கடவுளைக் குறித்த மனிதனுடைய அணுகுமுறையாகக் கொள்ளலாம். ஒற்றைக் கடவுள் கோட்பாட்டில் நல்லதும் தீயதும் இணைந்துவிடுகிறது.
மூன்றாவது வழியாக, துயருற்றிருக்கும் கடவுள் என்ற கோட்பாடு இதற்குப் பதிலாக இருக்கும். சிலுவையில் அறையப்பட்ட ஏசுவின் துயர் போன்ற துன்பத்தை அனுபவிக்கும் கடவுள் மனிதனுடைய துன்பத்திற்குக் காரணமாக இருக்கிறார் எனலாம். ஷெல்லிங் எழுதிய ஒரு கவிதை இதற்கு சான்றாகக் கொள்ளாலம்: ‘கடவுள்தான் வாழ்வு, அவர் வெறும் ஓர் உயிர் அல்ல. ஆனால் எல்லா வாழ்வும் விதியைக்கொண்டது. அத்துடன் துயருவதையும் உருவாவதையும் அனுபவிப்பது.’
எனவே துயருரும் கடவுள் இல்லாமல் வரலாற்றைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனெனில் கடவுள் வரலாற்றுடன் இணைந்திருக்கிறார். அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார். அதனால் துயருரும் கடவுள்தான் இப்போது மனித குலத்தைக் காப்பாற்ற முடியும். பல்லாயிரம் கோடி பேரின் துன்பம் கடவுளின் துன்பம் என ஏற்றுக்கொள்ளலாம். அதனால் அது தெய்வீகமானது.
ஸ்லோவாய் ஜிஜெக்

Mubeen Sadhika

Wednesday, March 15, 2023

பாலியல் உறவுகளும் மீகற்பனையும்(fantasy)-ஜிஜெக்கின்(Slavoj Zizek) விளக்கம்


சில ஆண்டுகளுக்கு முன் பிரிட்டீஷ் தொலைக்காட்சியில் ஒரு பியர் விளம்பரம் வந்தது. அதில் ஒரு பெண் ஓர் ஓடை அருகே நடந்துகொண்டிருப்பாள். அங்கு ஒரு தவளையைப் பார்ப்பாள். அதை எடுத்து முத்தம் கொடுப்பாள். அது ஓர் அழகிய இளைஞனாக மாறிவிடும். ஆனால் கதை அங்கு முடியவில்லை. அந்த இளைஞன் அந்தப் பெண்ணை பெரும் மோகம் கொண்டு காண்பான். அவளை இழுத்து அணைத்து முத்தமிடுவான். அவள் ஒரு பியர் குப்பி ஆகிவிடுவாள். அதை அவன் தன் வெற்றியின் சின்னமாகக் கையில் வைத்திருப்பான்.
பெண்ணுக்குத் தன் அன்பும் அரவணைப்பும் ஒரு தவளையை ஆணாக்கின. ஆனால் ஓர் ஆணின் அன்பும் அரவணைப்பும் ஒரு பெண்ணை போதை வஸ்தாக்கிவிட்டன. வெறும் அவனுடைய விருப்பத்தின் பொருளாக மாற்றிவிட்டன. இந்த வேறுபாடு பாலியல் ரீதியிலான உறவு என்பதே இல்லை என்பதைக் காட்டுகிறது. ஒரு பெண் தவளையுடன் இருக்கலாம் அல்லது ஓர் ஆண் பியர் குப்பியுடன் இருக்கலாம். ஆனால் ஒரு பெண்ணும் ஆணும் இணைந்து இருப்பது சாத்தியமில்லை. அல்லது ஒரு தவளை ஒரு பியர் குப்பியை அணைப்பது கூட சாத்தியப்படலாம்.
இது மீகற்பனை என்பதன் மீதான கவனத்தைக் குவிக்கிறது. அதாவது பெண் தன் மீகற்பனையில் தவளையை ஆணாக எண்ணுகிறாள்; ஆண் பெண்ணை பியர் குப்பியாக எண்ணுகிறான். எனவே ஒவ்வொரு ஆண் அல்லது பெண் தன்னிலையும் தங்களது மீகற்பனைகளின் மூலமாக உருவாக்கப்படும் தன்னிலைகள் குறித்து எடுத்துச் சொல்வதாக படைப்பாக்கங்கள் உருவாக வேண்டியிருக்கின்றன.
இதன் மூலம் உண்மை மீகற்பனையால் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்றால் மீகற்பனை செப்பனிடப்படாத உண்மையிலிருந்து நம்மைக் காக்கிறது என்று பொருள். எனவே மீகற்பனை உண்மையின் பக்கம் இருக்கிறது. அதுதான் உண்மையை ஏற்கும்படியாகவும் செய்கிறது.
- ஸ்லாவாய் ஜிஜெக்,
தற்காலத்தின் மிக முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாளர்,
சமூக-அரசியல் விமர்சகர்.

 Thanks ;Mubeen Sadhika

Sunday, March 12, 2023

Philosophy of Absurdism by Albert Camus

 According to many, the most fundamental philosophical question is what existence means. This is a question that Albert Camus explored in his novels, plays, and essays. His view of life was called absurdism, which held that life had no inherent meaning and that the search for meaning was ultimately futile. Camus even went so far as to suggest that suicide might be the only logical response to this absurdity.

Camus dismissed religion as a source of meaning since it was based on an illusion, and even if God did exist, the amount of pain and suffering in the world made God either an imbecile or a psychopath. Finding Findingships with other people was also dismissed as absurd because everyone we know and love will eventually die, and many will suffer before they do.

Camus did not believe that embracing illusion, as Nietzsche suggested, was a solution to the problem. Instead, Camus believed we should openly acknowledge and embrace life's absurdity. He used the example of Sisyphus, who was condemned to push a boulder up a mountain only to have it roll back down, yet continued to do so for eternity.

While this may not seem like a solution to the problem, Camus believed we needed to confront the truth of life's absurdity and refuse to let it destroy us. He suggested that we "imagine Sisyphus happy," although it may not be comforting.

In conclusion, whether life is absurd is a fundamental philosophical problem, and Camus' view of absurdism suggests that life has no inherent meaning. However, his solution was to confront the truth of this absurdity and embrace it, rather than give in to despair or seek illusory solutions.'

Suicide

Camus unreservedly condemned, strictly criticized, and rejected suicide and existential leap because suicide is a total surrender to absurdity and a full confession that life is too much on the individual. His interest in existentialism is to explain the meaninglessness of life through his explication of the absurd, which is found in human existence, and which continues to torment man until the finality of his existence, which is death. The knowledge that life is absurd is already a step towards conquering the meaninglessness of life. For Camus, therefore, since the absurd has no meaning, man must hold himself apart from it and revolt against it. This is why he suggested philosophical suicide as a solution to reverse the absurdity of life. The question then is, since man believes in the absurdity of existence, then how and where should he direct his conduct? Does suicide solve this problem? The consequences of Camus’ submissions are enormous, but be that as it may, this work attempts a study of the absurdity inherent in human existence to answer the following questions: How far did Camus achieve the idea of the absurdity of life? How realistic is Camus’ attempt to analyze life as meaningless apart from the meaning we give to it? Did Camus actually succeed in his effort to show that life is absurd? Finally, what are the implications of Camus’ absurdity to philosophy and life? This work will adopt expository and analytic methodological approaches. Here we shall, with a detailed and deep reflective inquiry, expose the place of absurdity in Camus’ philosophy to fully understand his understanding of life.


Thursday, March 9, 2023

அறிவிலிருந்து உண்மைக்கும்…உண்மையிலிருந்து அறிவுக்கும்-ஜிஜெக்கின்(Slavoj Zizek) விளக்கம்..

 

அறிவுக்கும் உண்மைக்கும் இடையில் இயங்கியல் இறுக்கம் நிலவும் கோணத்திலிருந்து இதை அணுகலாம். உளவியல் ‘புறவயமான’ அறிவுக்கும் ‘அகவயமான’ உண்மைக்கும் இடையில் இருக்கும் முரண் களனில் வினைபுரிகிறது. உண்மையின் போர்வையில் ஒருவர் பொய் சொல்லலாம் (அதீத கருத்து வெறி உடையவர்கள் தங்களின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்) ஒருவர் பொய்யின் போர்வையில் உண்மையைச் சொல்லலாம் (மனயிசிவு நடைமுறை அல்லது நாக்குழறி சில சமயங்களில் விருப்பம் வெளிப்பட்டுவிடும்).
இந்த உண்மையும் பொய்யும் அமைப்புக்குள் எப்படி எல்லாம் புதிய வடிவங்கள் எடுக்கின்றன என்பதுதான் இப்போதிருக்கும் விவாதம். இதில் மத ரீதியான கட்டமைப்புக்குள்ளிருந்துதான் பெரும்பாலும் உண்மையும் பொய்மையும் பேசப்படுகின்றன. குறிப்பாக, கிறித்துவ மதம் சார்ந்த நம்பிக்கை உண்மையையும் பொய்மையையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.
கிறித்துவத்திற்கு முந்தைய மதங்கள் ‘ஞானத்தை’ச் சொல்லும் தளத்தில் இயங்கின. காலத்தின் உண்மையை இறைப்பொருளின் மெய்மைக்கு விட்டுக் கொடுப்பதில் கவனம் செலுத்தின. ஆனால் கிறித்துவமோ ஏசுகிறிஸ்துவை காலந்தோறும் அழியாத தனிமனிதனாக வரையறுத்தது. உயிர்த்தெழுதல் அமரத்துவமான உண்மைக்குரிய பாதையாகும் என்றது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கிறித்தவம் தன்னை ‘அன்பின் மதம்’ என்று சொல்கிறது. ஆனால் அப்படியான அன்புக்குரியவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துப் பார்க்கிறது கிறித்துவம். ஏனெனில் அதில் மதமாற்றமும் பாவமன்னிப்பும் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. மதமாற்றம் காலங்களைக் கடந்த வினை, நித்தியத்தை மாற்றக் கூடியது.
அதே போல் கிறித்தவம் குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல் என்ற விதிவிலக்கை வைத்ததால் அது பாவமன்னிப்புக்கு சான்றளிக்கிறது. உண்மையையும் பொய்மையையும் ஒரே எடையில் வைத்துப் பார்க்க அது உதவுகிறது. மேலும் கிறித்துவம் இறைவனுக்கு வடிவத்தை, முகத்தைக் கொடுத்துப் பார்க்கிறது. எந்த ஒரு மனிதனும் அன்புடையவனாக, கருணை கொண்டவனாக தன் சுற்றத்தைப் பாதுகாப்பவனாக இருக்கிறான் என்றால் அவன் கடவுளின் வடிவம் என்கிறது. அதனால் மனித வரலாற்றில்தான் கடவுள் தன்னை அறியமுடியும். மனிதனின் வாழ்வில்தான் கடவுள் வாழமுடியும்.

தன்னிலையாக்கம் குறித்த விளக்கம்-ஜிஜெக்
உடல், மனம் பிளவுபட்டிருப்பதாகக் கருதும் கார்ட்டீசிய ஆவியைத் கல்விப்புலத்தினர் துரத்துகின்றனர். இன்றைய தத்துவக் கல்விப் புலத்தில் பீடித்திருக்கும் ஆவியான கார்ட்டீசியத்தை ஓட்டுவதைப் பெரும்பாலும் எல்லா ஆய்வாளர்களும் செய்துவருகிறார்கள். உடல், மனம் பிளவுபட்டிருப்பதாக ரெனே டெக்கார்ட் சொன்னதை இப்போது யாரும் ஏற்கத் தயாராக இல்லை. அதில் உருவான சுயம் என்பது குறித்த விளக்கத்தைத் தர பலரும் பல தத்துவங்களை உருவாக்கிக் கொண்டே போகிறார்கள்.
ஆனால் எல்லோரும் கார்ட்டீசிய தன்னிலைதான் இதுவரை உருவாக்கப்பட்ட தன்னிலை குறித்த விளக்கங்களிலேயே அதிக ஆற்றல் வாய்ந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் கார்ட்டீசிய தன்னிலைக்கு எதிரான விளக்கங்களை உருவாக்க முனைகிறார்கள். அவற்றை இப்போதாவது தெளிவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஊடுருவும் சுயம் என்ற விளக்கத்தை அடைவதற்கு கார்ட்டீசிய தன்னிலை உதவாது. அதற்கு மூன்று வகையான விளக்கங்கள் தேவைப்படுகின்றன. ஜெர்மன் கருத்தியல்வாதம், அல்தூஸரிய அரசியல் தத்துவம், பன்மைத்துவ தன்னிலைகளைக் கூறும் கட்டுடைக்கும் தத்துவம் ஆகிய மூன்று வகையான சிந்தனைகளினூடாக தன்னிலைக் குறித்த விளக்கம் அறியப்படவேண்டியிருக்கிறது.
முதலாவது சுயத்திற்குள் இருக்கும் பித்துநிலையை மீண்டும் சாதாரண நிலைக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்தது. அது நனவிலியைத் தன்னிலைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளும் கருத்தாக உருவானது. அடுத்தது இன்றைய சர்வதேச முதலாளித்துவச் சூழலில் அரசியலாக்கப்பட்டத் தன்னிலைதான் சரியான விளக்கமாகக் கொள்ளப்படுகிறது. மூன்றாவது பன்முகத் தன்மைக் கொண்ட தன்னிலைதான் பின்நவீனத்துவ அரசியல் முகத்தைக் காட்டும் என்ற விளக்கத்தைத் தருகிறது.
- ஸ்லாவாய் ஜிஜெக்,
தற்காலத்தின் மிக முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாளர்,
சமூக-அரசியல் விமர்சகர்.
Thanks

Mubeen Sadhika

Thursday, February 23, 2023

குற்றமும் தண்டனையும் குறித்து ஜுடித் பட்லர் விளக்கியது

 ஒருவர் மற்றவருக்கு ஒரு தண்டனையைக் கொடுக்கும் போது உளவியல் அறம் சார்ந்த ‘பொறுப்பு’ ஏற்படுகிறது. அதில் தண்டனைக் கொடுப்பவர் கொள்ளும் இன்பம் குற்றத்திற்கு நிகரானதாகக் கொள்ளப்படுகிறது. குற்றம் இழைத்தவர் ஒரு விதியை மீறிவிட்டார் அல்லது சொன்ன சொல் தவறிவிட்டார் என்பதற்காக நிகழ்த்திய வினையாக மட்டும் தண்டனை இருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்.

தண்டனைக் கொடுத்து அதன் மூலம் குற்றம் இழைத்தவர் படும்பாட்டைத் தனது இன்பமாக தண்டனைக் கொடுப்பவர் அனுபவிப்பது அறமாகக் கருதப்படுவதற்கான காரணம் என்ன என ஆராயவேண்டும். குற்றம் இழைத்தவரின் குற்றத்திற்கு நிகரான தண்டனைக் கொடுப்பதாக மட்டும் சமாதானப்படுத்திக் கொண்டுவிடுவதற்கான அடிப்படை உளவியல் காரணிகள் என்ன என்பதை அறியவேண்டும்.
இதில் குற்றம் இழைத்தவர் ஒரு குறிப்பிட்ட உடன்படிக்கையில் இருக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண்-பெண் இருவரும் மீறக்கூடாத விதி இருக்கிறது. அதை யார் ஒருவர் மீறும் போதும் அடுத்தவர் உடனே தண்டனையைப் பிரயோகிக்க நினைக்கிறார். இப்படிப்பட்ட உடன்படிக்கை மீறலுக்கு உளப்பூர்வமான அறம் குறித்த சிந்தனை தண்டனை கொடுக்கும் நிலைக்கு ஒருவரைத் தள்ளுகிறது.
இரு பால் உறவு என்ற நிறுவனத்தில் இருக்கும் விதிகளில் குற்றமும் தண்டனையும் கொண்டிருக்கும் உடன்படிக்கையும் மீறலும் பெரும்பாலும் உடல் சார்ந்ததாக இருக்கிறது. இரு பால் நிறுவனமய உறவுகள் சிக்கலில்லாமல் இயங்க இந்த உடன்படிக்கை உளப்பூர்வமாக உள்வாங்கப்பட்டிருக்கிறது.
அதனால் உடல் சார்ந்த மீறல்களுக்குத் தண்டனைகள் வழங்குவது அறத்தின் பாற்பட்ட நடவடிக்கையாகக் கொள்ளப்படுகிறது. குற்றத்தை வழங்கியவர் அதற்கான இன்பத்தை அனுபவிக்கும் அறத்தைக் கைக்கொள்கிறார். குற்றம் இழைத்தவர் உடன்படிக்கை மீறலுக்கான குற்ற உணர்வைக் கொள்கிறார். ஆன்ம சுத்தி என்பதுதான் அதன் அடிப்படை அம்சம்.
இந்த இடத்தில் ‘நான்’ என்ற சுயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய ஆன்ம சுத்தியுடன் இருக்கவேண்டும் என்ற உடன்படிக்கையை இரு பால் உறவின் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும். அது கடமை உணர்வாக மறுபெயரிடப்பட்டிருக்கிறது. கடமையை மீறுபவர்கள் சுயத்தின் மதிப்பை இழந்தவர்களாகிறார்கள். அவர்கள் மீது தண்டனை பிரயோகம் செய்வது அறமாகிறது. எனவே உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல் அறத்தை மீறுபவர்களைத் தண்டிப்பதுதான் எல்லோருடைய சுயத்திலும் உள்வாங்கப்பட்ட திறமாக உள்ளது.
ஜுடித் பட்லர் தன் கோட்பாடுகள் குறித்து…
என் கோட்பாடுகள் அரசியல் புனைவு வகைமையைச் சார்ந்தவை அல்ல. உடல் சார்ந்த வாழ்வு குறித்தப் புரிதல்களை, சாத்தியங்களை மேம்படுத்த உருவாக்கப்பட்டவைதான் என் கோட்பாடுகள். பெண்ணியத்தில் தத்துவரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் உடல் குறித்துச் சொல்லவேண்டிய அம்சங்கள் பெரும் சிக்கலில் உள்ளதாக நான் கருதியதால் இத்தகைய சிந்தனையை அடைந்தேன்.
சில உடல்கள் தவிர்க்கப்பட வேண்டியவையாகவும் சில உடல்களுக்கான அங்கீகாரம் தரப்படக்கூடாது எனவும் பாரபட்சம் காட்டப்பட்டதால் உடல்களின் அடிப்படை குறித்து ஆராயத் தலைப்பட்டேன். என் கோட்பாடுகள் எல்லாம் அவற்றுக்கான மருந்தோ, உத்தியோ, கற்பனையோ அல்ல. என் சிந்தனை வழியில் உடல்களைச் சமமாகப் பாவித்தலுக்கான தீர்வு குறித்த ஆலோசனை மட்டுமே நான் வழங்கியிருக்கிறேன்.
அதன் மூலம் உடல் மீதான அதிகாரத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.
நாம் யார் என்ற கேள்வியின் பதிலாகத்தான் நாம் கட்டமைக்கப்படுகிறோம். பண்பாடு, சமூகம், இன்னபிற அம்சங்கள் உருவாக்கி வைத்திருப்பதை எதிரொலிப்பதாக ஏன் உடல்கள் மாறிப் போயின என்பதிலிருந்து இதற்கான விடையைத் தேடலாம்.
ஏனெனில் மொழிக்குள் பண்பாட்டுக்குள் சமூகத்திற்குள் செயல்படும் அதிகாரத்தின் விளைவாக நம் சிந்தனை வெளிப்படுகிறது.
இதில் வரையறுத்தல், அடையாளப்படுத்துதல், இனங்காட்டுதல்தான் நம்மைப் பற்றிய நம் தன்னிலை பற்றிய மற்றமையாக உள்ளது. அதனைப் புரிந்துகொள்வதற்கான அம்சங்களை நோக்கிப் போவதன் மூலம் உடல்களின் சிக்கல்களைத் தெளிவாக்கிக் கொள்ளலாம். அதனால் பாலினச் சிக்கலைத் தவிர்க்கலாம்.
ஜுடித்பட்லர்
Thanks

Mubeen Sadhika

Wednesday, February 22, 2023

Why do we commit suicide?

 

Often, the decision to commit suicide is influenced by several factors that overlap and reinforce each other. Often, it is also impossible to establish for what reason a person took his/her life. Risk factors for suicidal behaviour can be divided into clinical, social and psychological factors.

 

Suicide: Clinical Factors

Do suicides have a mental illness? Many people ask this question, which is often true, but not always. According to Polish police statistics, the two most common causes of suicide are family disagreements and mental illness.

 

Depression

The mental illness that affects the risk of suicide the most is depression. It is estimated that two-thirds of suicides suffer from depression, and about 15% of people with depression decide to end their lives. Patients who also have insomnia are at greater risk.

 

Contrary to appearances, the most severe depression does not mean the most significant risk of taking your life. You need some determination and energy to kill yourself. Patients with intense depression, having no strength for anything, also do not have the power to commit suicide. Therefore, a more significant risk may be when a person is beginning to recover from depression theoretically. People who have recently been diagnosed with depression are also at greater risk. People who struggle with this disease for longer learn to live with it and less often decide to end their lives.

 

Schizophrenia

The risk of committing suicide is exceptionally high in patients who suffer from persistent auditory hallucinations. Sometimes such persons still hear “voices” telling them to kill themselves and eventually succumb to these commands. However, even if the “voices” do not command suicide, they can be challenging to deal with, and sometimes suicide seems to the patient the only escape.

 

As with depression, those recently diagnosed with the disease are at greater risk than those with schizophrenia for many years. Moreover, schizophrenia is often accompanied by depression, which may be an additional risk factor.

 

Addiction

At least one-third of suicides abuse psychoactive substances. The most common addiction is alcoholism, and suicides are often committed under the influence of this substance. The relationship between alcoholism and the risk of suicide is not straightforward. Alcohol can indirectly affect the risk of suicide by causing family conflict and loss of support from loved ones. Still, the cognitive and physiological changes caused by long-term alcohol abuse may also play a role. Alcoholics who commit suicide often lose an essential person shortly before their death or have experienced an interpersonal conflict or other personal crisis.

 

Personality disorders

Personality disorders approximately seven times increase the risk of taking one’s own life. People with borderline personality disorder, characterized by, e.g. impulsiveness, frequent feeling of emptiness, fear of abandonment, and extreme and ambivalent emotions, are at particular risk.

 

Suicide: Social Factors

Human, as social being, needs support and close relationships. This is especially true when he experiences difficulties in life. People who have whom to turn to in stressful and difficult situations and know that they are not alone with their problems cope better and are less likely to say that the only way out is death.

 

As I mentioned above, crises in social relations, such as family conflicts, are among the most common causes of suicide. The loss of a loved one may also lead to such an act. The more a man depended on the person he/she lost and the less support other people provided him/her, the greater the risk of suicide.

 

Suicide: Psychological Factors

Edwin Shneidman distinguished ten commonalities in suicides:

 

Seek a solution – Suicides often find themselves in situations they cannot solve. The only option seems to be suicide. Therefore, shortly before taking his life, a suicide often feels calm and improves his mood. After all, he no longer has to worry about how to get out of his problems; he has found a solution …

Cessation of consciousness – A person who commits suicide escapes from problems and mental pain, guilt, or other challenging emotions.

Intolerable psychological pain – According to Shneidman, intolerable psychological pain is the pain of feeling pain. It’s an overwhelming emotion for which there is no cure, and sometimes suicide seems like the only cure that can relieve suffering.

Frustrated psychological needs – One of the causes of suicide is unmet needs, such as love, understanding, and achievement. An unmet need for achievement can be especially true of perfectionists. This trait is often associated with suicidal ideation because perfectionists find living up to their own expectations challenging.

Have The Courage To Ask For Help ,Why So Many Struggle With It

 

Some individuals may feel ashamed of their inability to ask for help, leading them to expect their partner to anticipate their needs and then blame them when they don't. This behaviour can be attributed to the desire to avoid feeling inadequate and shameful, whether due to an inability to request assistance or even needing it. Redirected shame can often cause anger and fear, making it difficult for individuals to ask for help.

Many clients struggle with asking for help and may feel entitled to it. However, this entitlement can distract them from acknowledging their limitations and lead them to expect others to meet their needs. Female clients may become frustrated with their spouses for not understanding their needs, as they may have experienced their fathers doing so. Asking for help can feel daunting and risky, leading individuals to fear rejection. Seeing their partner as a threat, they may transfer their shame onto them, playing a game of emotional hot potato.

On the other hand, many male clients may feel that needing help is a sign of weakness, and they may associate shame with accepting help. They may feel that admitting a need for help is admitting defeat, and it can be challenging for them to acknowledge their limitations. Their masculinity may be tied to being independent and solving their problems independently.

Many people fear needing others and try to control and manipulate situations to meet their needs. They may seek treatment to improve themselves rather than become more comfortable with vulnerability. Self-love is cultivated through acceptance, and therapy can help replace judgment and shame with empathy and feedback.

It's important to acknowledge and accept our flaws and limitations and to seek help when needed. It's essential to have a community of people who love and accept us for who we are, our flaws and all. We don't have to be perfect; not everyone will tolerate our imperfections, but some will, and that's what matters. Believing that we are unlovable due to our weaknesses is a flawed belief that can lead to isolation and despair.

Tuesday, February 7, 2023

பாலினச் சிக்கல் ஜுடித் பட்லர் (Judith Butler)

 

ஜூடித் பட்லர் (Judith Butler, பெப்ரவரி 24, 1956) அமெரிக்க ஐரோப்பிய மெய்யியலாளரும் பாலினக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது ஆய்வுகள் அரசியல் தத்துவம்நன்னெறிபெண்ணியக் கூறுகள்கோணல் கோட்பாடு[மற்றும் இலக்கியக் கோட்பாடுகளில் தாக்கமேற்படுத்தி உள்ளன.

’பெண்’ அல்லது ‘ஆண்’ என்ற சிக்கலற்ற ஒருமையின் அடையாளத்தின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் தன்னிலைக்குள் பால்(Sex), பாலினம்(gender) என்ற வேற்றுமை கொண்ட பிளவு அறிமுகமாகிறது. உயிரியல் ரீதியான அம்சமே இறுதியானது என்று கொண்டாலும் கூட பால் உயிரியல் ரீதியான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் பாலினம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது:

எனவே பாலினம், பாலின் தற்செயலான விளைவும் அல்ல பாலாக ஓர் உடலில் ஊன்றப்பட்டதும் அல்ல. (ஆண், பெண் மற்ற பாலினத்தாருக்கும் இது பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)
எனவே பால், பாலினம் என ஒருங்கிணைந்த தன்னிலைக்குள் பாலினம் என்பது பாலின் பல்வேறு விளக்கங்களைக் கொண்டிருக்கிறது என்பதைத் தீவிரமாக அறியவேண்டும்.
ஓர் உடலின் பால், பண்பாட்டுப் பொருளைக் கொண்டு பாலினத்தை ஊகிக்கிறது என்றால் அந்த உடலின் பாலை ஒரே ஒரு வழியில் பாலினம் பின் தொடரமுடியாது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பால்/பாலினம் என்ற வேறுபாடு உயிரியலைக் கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட பாலை ஏற்ற உடல்களுக்கும் பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட பாலினத்திற்கும் தீவிர தொடர்பின்மை இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான்.
ஆண்பால், பெண்பால் என்ற இருமை பாலினம் ஆண் உடலில் ‘ஆணுக்குரிய’ கட்டமைப்புகளை மட்டுமே கொண்டிருக்கும் என்றோ ‘பெண்ணுக்குரிய’ கட்டமைப்புகளை மட்டுமே கொண்டிருக்கும் என்றோ சொல்ல முடியாது. ஒவ்வொரு உடலும் அந்தந்தப் பாலுக்குரிய தன்மையை மட்டுமே கொண்டிருக்கும் என்று உறுதியாக்கப்பட்டாலும் கூட அவை பாலினத்தையும் அவ்வாறே ஏற்றிருக்கும் என்பதை எந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியாது.
பெண்ணியக் கோட்பாட்டில் பெண்கள் அரசியல் ரீதியாகப் பிரதிநிதித்துவம் பெறுவது முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அரசியல், பிரதிநிதித்துவம் போன்ற சொற்கள் சர்ச்சைக்குரியவை. பிரதிநிதித்துவம் என்ற சொல் பெண்கள் அரசியல் தன்னிலைகளாகச் செயல்படுவதைக் குறிக்கிறது.
மொழியில் பிரதிநிதித்துவம் என்பது பெண்களைப் பற்றி எது உண்மை நிலையோ அதனை வெளிப்படுத்துவது அல்லது மறுப்பதாகும். எனவே மொழியின் வளர்ச்சி பெண்களை அரசியல் ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அத்தியாவசியமாகும். ஏனெனில் பெண்களின் வாழ்க்கை முரணாகச் சித்திரிக்கப்படுகிறது அல்லது சித்திரிக்கப்படுவதே இல்லை என்ற நிலையில் மொழியின் வளர்ச்சிக்கான தேவையைப் புரிந்துகொள்ள முடியும்.
ஃபூக்கோ சொல்வதை இங்கு நினைவுகூர வேண்டும். சட்ட அதிகார அமைப்பு, பிரதிநிதித்துவம் செய்யும் தன்னிலைகளை உற்பத்தி செய்கிறது என்கிறார் ஃபூக்கோ. சட்ட அதிகார அமைப்பு, எல்லை வகுப்பது, தடைவிதிப்பது, விதிமுறைப்படுத்துவது, தடுப்பது, தனிநபரைக் ‘காப்பது’ என்ற செயல்பாடுகளை அரசியல் அமைப்புக்கு ஏற்ப நடத்துகிறது. இப்படிப்பட்ட அமைப்பால் உருவாக்கப்படும் தன்னிலைகள் அந்த அமைப்புக்குள் மட்டும் தகவமைக்கப்படுகின்றன.
இதில் பெண்களின் ‘தன்னிலை’ எந்தச் சட்ட அதிகார அமைப்பால் உருவாக்கப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். மத சட்ட அமைப்பு, சமூக சட்ட அமைப்பு, அரசியல் சட்ட அமைப்பு எல்லாம் பல வகையான தடைகளை, தடுப்புகளை, விதிகளைக் கொண்டுதான் பெண் என்னும் தன்னிலையை உருவாக்குகின்றன. இந்தச் சட்ட அமைப்புகள்தான் பெண்களின் விடுதலையைப் பற்றியும் பேசுகின்றன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இதே சட்ட அமைப்புகள்தான் ஆண்மை என்ற தன்னிலையையும் மேலாதிக்கம் செய்வதற்கு ஏற்பத் தகவமைத்து உருவாக்குகின்றன.
சட்ட அதிகார அமைப்பு தன்னிலைகளை உற்பத்தி செய்வதற்கான முழு உரிமையைக் கொண்டு செயல்படுகிறது. எனவே இத்தகைய தன்னிலைகள்தான் பிரதிநிதித்துவத்திற்கு உரியவை ஆகின்றன. சட்ட அமைப்பால் ஆளப்படுவதற்கும் ஆள்வதற்குமான பிரதிநிதித்துவமாக அது இருப்பதைக் குறித்து விழிப்புணர்வு கொள்ளாமல் வைத்துக்கொள்வதே இந்தத் தன்னிலைகளின் முதன்மைச் செயல்பாடாக இருக்கிறது.
ஜுடித் பட்லரின் நேர்காணல்கள்...
பாலினச் சிக்கல் நூல் வெளிவந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் உங்கள் நோக்கம் என்னவாக இருந்தது?
இரு பாலின ஊகங்கள் குறித்த விமர்சனமாக அந்த நூல் இருந்தது. ஆனால் அது பாலின வகைமைகள் குறித்தாகவும் மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பெண் என்ற பதத்தின் பொருள் மாறிக் கொண்டே இருக்கிறது. பெண் என்ற வகைமை மாறிக் கொண்டேதான் இருக்கவேண்டும். அரசியல்பூர்வமாக, இன்னும் அதிகமான சுதந்திரத்துடன் பெண் இருக்க பல புதிய சாத்தியங்களைக் கண்டறிவது அவசியமாகிறது.
பாலினம் குறித்த வரலாற்றுப் புரிதல் மாறவேண்டியிருக்கிறது. ஏனெனில் அதன் விதிகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டு, மறுக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெண் என்ற வகைமையில் பெண்ணாக மாறியவர்களும் சேர்த்துக் கொள்ளப்படும் போது அதற்கு அதிர்ச்சியாவதோ எதிர்ப்பதோ நடக்காமல் போகலாம். ஆண்மைக்கான எதிர்காலமும் மாறிக் கொண்டிருப்பது பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறது. அதே போல் ஆணாக மாறியவர்களும் ஆண் என்ற வகைமைக்குள் சேர்த்துக் கொள்ளப்படலாம்.
பாலினச் சிக்கல் நூலில் ‘நிகழ்த்துதல்’ என்பது குறித்த உங்கள் கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. பாலினம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அப்போது நான் கல்விப் புலத்தில் பேச்சு செயல்பாடுகளைக் குறித்து பல விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டிருந்தேன். ’நிகழ்த்துதலில்’ வெளிப்படும் பேச்சு செயல்பாடுகள் புதிய உண்மையை வெளிக் கொண்டுவருவதாக அல்லது புதிய உண்மையை உருவாக்குவதாகத் தோன்றியது.
எடுத்துக்காட்டாக, ஒரு நீதிபதி ஒரு தண்டனையை வழங்கும் போது ஒரு புதிய உண்மை உற்பத்தியாகிறது. நீதிபதிகள் அந்த உண்மையை நடைமுறையில் பாவிக்கப்படுவதை உறுதி செய்கிறார்கள். அப்படி என்றால் நீதிபதி அத்தகைய முழுமையான அதிகாரம் கொண்டவர் எனக் கூறுவோமா? அல்லது நீதிபதி ஒரு சில மரபுகளை அல்லது நடைமுறைகளைப் பின் தொடர்கிறார் என்று சொல்வோமா? எனவே சில மரபுகளை, விதிகளைத்தான் நீதிபதி பின்தொடர்கிறார் என்று சொல்வோம். நீதிபதி தனக்கான அதிகாரம் எதுவும் இல்லாதவர். அவர் தனது ஆளுகையில் உள்ள அதிகாரத்தைப் பிரயோகிக்கிறார். அவர் அதிகாரம் சொல்லும் விதிகளைச் சுட்டுபவராகிறார். அவர் தீர்மானிக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுபவர் ஆகிறார்.
அது எப்படி பாலினத்தோடு தொடர்புபடும்?
முப்பது ஆண்டுகளுக்கு முன் மக்கள் விழிப்புணர்வுடனோ விழிப்புணர்வு இல்லாமலோ பாலினத்தின் மரபுகளைச் சுட்டுகிறார்கள். அவர்கள் தங்களது உள்ளார்ந்த உண்மையை வெளிப்படுத்தும் போதும் தங்களைப் புதிதாக உருவாக்கிக் கொள்ளும் போதும் இப்படி அவர்கள் பாலின மரபைச் சுட்டுகிறார்கள்.
பண்பாட்டு விதிகளிலிருந்து நாம் யாருமே விடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. அதே சமயத்தில், நாம் எல்லோருமே பண்பாட்டு விதிகளால் தீர்மானிக்கப்படுவதும் இல்லை. எனவே பாலினம் என்பது ஒரு பேச்சு வார்த்தை, ஒரு போராட்டம், வரலாற்றுத் தடைகளைக் கையாளும் அமைப்பு, புதிய உண்மைகளை உருவாக்கும் ஒன்று என்றாகிறது.
நாம் ‘சிறுமி’களாகும் போது பல்லாண்டு காலமாகக் கட்டிக்காத்து வைக்கப்பட்ட ‘சிறுமிகளுக்கான பண்பாட்டில்’ நுழைகிறோம். நாம் அதைத் தேர்வு செய்யவில்லை. அது நம் மீது திணிக்கப்படவும் இல்லை. ஆனால் சமூக உண்மை மாறக்கூடியது.
ஜுடித்பட்லர் thanks

Mubeen Sadhika

Monday, January 23, 2023

இடிபஸுக்கு எதிராக டெல்யூஜ்

 டெல்யூஜும் கத்தாரியும் இணைந்து எழுதிய இடிபஸுக்கு எதிராக இந்த நூலின் தலைப்பின் விளக்கமாக முதலாளித்துவமும் மனப்பிறழ்வும் என்ற ஒரு சொற்றொடர் இருக்கிறது.

டெல்யூஜும் கத்தாரியும் ப்ராய்டின் இடிபஸ் சிக்கல் என்ற உளவியல் கோட்பாட்டை முழுமையாகத் தலைகீழாக மாற்றும் நோக்கத்தில் எழுதிய இந்த நூலில் இடிபஸ் சிக்கல் என ப்ராய்ட் சொன்னது முதலாளித்துவ நிறுவனங்களால் எதிர்வினையாற்றுகின்ற, குற்றவுணர்வை உருவாக்குகின்ற ஓர் உற்பத்தி என்கிறார்கள். ப்ராய்ட், மார்க்ஸ், நீட்ஷே என்ற மூன்று தத்துவக் கோட்பாட்டாளர்களின் கருத்துகளின் அடிப்படையில் எழுதப்பட்ட நூலாக இடிபஸுக்கு எதிராக எனும் இந்த நூலைக் கருதலாம். இந்த நூலில் டெல்யூஜும் கத்தாரியும் மனச்சிதைவு ஆய்வு என்ற பதத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள்.
உளவியலின் ஆய்வை நீட்ஷே, ஸ்பைனோஜா, பெர்க்சன் போன்ற தத்துவவியலாளர்களின் கோட்பாட்டை வைத்து டெல்யூஜும் கத்தாரியும் முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்கள் ப்ளேட்டோ, தெகார்த், ஹெகலின் கோட்பாடுகளை முன்னெடுக்கவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும்.
டெல்யூஜும் கத்தாரியும் இணைந்து இடிபஸுக்கு எதிராக என்ற நூலின் இரண்டாம் பாகத்தையும் எழுதியிருக்கிறார்கள். ஆயிரம் பீடபூமிகள் என்ற அந்த நூலில் இருக்கும் இயல்களில் எதை வேண்டுமானாலும் முதலில் படிக்கலாம். எல்லாவற்றையும் ஒரே ஒழுங்கில் படிக்கவேண்டும் என்ற அவசியமின்றி எழுதப்பட்ட நூலாக அந்த நூல் இருக்கிறது.
மேலும் ஆயிரம் பீடபூமிகள் நூலில் ‘உருவாகுதல்,’ ‘எல்லையாக்கம்,’ ‘தவிர்த்தல்,’ ‘நாடோடித்தனம்’ உட்பட பல கோட்பாடுகளை அறிமுகப்படுத்துகிறார்கள்.

இடிபஸுக்கு எதிராக நூலிலிருந்து ஒரு மொழிபெயர்க்கப்பட்ட பத்தி:

ஒரு மன நோயாளியின் வெளி நடமாட்டத்தை நாம் கண்ணுற்ற பின்னால், சாமுவேல் பெக்கட்டின் பாத்திரங்கள் வெளியே நடைபோடும்போது என்ன ஆகிறது என்பதை ஒப்பிட்டுப் பார்ப்போம்.
அவர்களுடைய இயக்கத்தின் வேறுபட்ட நடையும் உத்தியும் அவர்களில், அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தேர்ந்த எந்திரத்தை படைக்கின்றன. பிறகு, பெக்கட்டின் படைப்புகளில் ஒரு மிதிவண்டியின் பங்கும் இருக்கிறது: மிதிவண்டி-ஒலியெழுப்பான் எந்திரத்திற்கு, தாய்-ஆசனவாய் எந்திரத்துடன் என்ன உறவு இருக்கிறது? 'மிதிவண்டிகளைப் பற்றியும், ஒலியெழுப்பான் பற்றியும் பேச எத்தனை அமைதியாக இருக்கிறது.
துரதிர்ஷ்டவசமாக, நான் அவற்றைப் பற்றிப் பேச முனையவில்லை. ஆனால் என் நினைவு சரியாக இருக்கும் என்றால், குதத்தில் இருக்கும் துளை மூலம் என்னை இந்த உலகில் கொண்டுவந்தவளைப் பற்றிப் பேச வேண்டும்.'
இடிபஸ் என்ற பொருள் பயன்படுத்த எளிதானது, மிகவும் வெளிப்படையானது, அது துவக்கத்திலிருந்தே இருப்பது என்றுதான் கருதப்படுகிறது. அது அப்படிப்பட்டதல்ல: இடிபஸ் என்பது, விருப்ப எந்திரங்களின் அதீத அடக்குதலைக் குறிப்பிடுகிறது.
அவை ஏன் அடக்கப்படுகின்றன. எதுவரை? உண்மையில், அது போன்ற அடக்குதலுக்கு பணிந்து போவது அவசியமா, விரும்பத்தக்கதா? இதை அடைய எந்தச் செயல்முறைகள் பயன்படுத்தப்பட வேண்டும்? இடிபல் முக்கோணத்திற்குள் எது போக வேண்டும், அதைக் கட்டமைக்க எது தேவை? ஒரு மிதிவண்டியின் ஒலிப்பானும் என் தாயின் குதமும் அந்த வேலையைச் செய்துவிடுமா?
எனினும் இதைவிட முக்கியமான கேள்விகள் இருக்கத்தானே செய்கின்றன? குறிப்பிட்ட விளைவுகளுக்குட்பட்டு எந்த எந்திரம் அதை உற்பத்தி செய்ய முடியும்? ஒரு குறிப்பிட்ட எந்திரத்தை எடுத்துக்கொண்டால் எதற்கு அது பயன்படுத்த முடியும்?
ஜியோமிதி விவரணையை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு கத்தி எதற்குப் பயன்படுகிறது என்பதை நாம் ஊகிக்க முடியுமா?
இன்னொரு உதாரணம்: என் கோட்டின் வலது பாக்கெட்டில் இருக்கும் ஆறு கற்களாலான (இந்த பாக்கெட்தான் கற்களின் மூலாதாரமாக விளங்குகிறது) ஒரு முழுமையான எந்திரத்தை எதிர்கொள்வது பற்றிப் பேசலாம். ஐந்து கற்கள் என்னுடைய கால்சட்டையின் வலது பாக்கெட்டில் இருக்கின்றன. அதன் இடது பாக்கெட்டில் (இவைக் கடத்தும் பாக்கெட்டுகள்) ஐந்து கற்கள் இருக்கின்றன. என் கோட்டின் மற்ற பாக்கெட் ஏற்கனவே கையாளப்பட்ட கற்களை ஏற்கிறது. ஒவ்வொரு கல்லும் ஒரு பாக்கெட்டை முன்னேற்றுகிறது. இந்த நிலையில், வாயும் கல்-உறிஞ்சும் எந்திரமாக இருக்கும்போது, இந்தச் சுற்றின் தாக்கத்தை எப்படி நாம் கணிக்க முடியும்? இந்த முழுச் சுற்றில் நாம் பாலியல் மகிழ்வின் உற்பத்தியை எங்குக் காண முடியும்?
மேலோன் டைஸ்(மாலோன் இறக்கிறான்)-புதினத்தின் இறுதியில் பெடல் சீமாட்டி மனநோயாளிகளை வேனிலும் படகுகளிலும் இயற்கைச் சுற்றுலா அழைத்துச் செல்கிறார்: ஒரு நரக எந்திரம் கட்டமைக்கப்படுகிறது. 'தோலுக்கு அடியில் உடல் என்பது ஓர் அதி சூடான தொழிற்சாலை. வெளியே, உடையும் ஒவ்வொரு துளையிலிருந்தும், நோயாளி ஒளிர்கிறான், மிளிர்கிறான்.'
Thanks

Mubeen Sadhika

Sunday, December 11, 2022

The eye-tracking

Eye tracking is a sensor technology that can detect a person’s presence and follow what they are looking at in real-time. The technology converts eye movements into a data stream that contains information such as pupil position, the gaze vector for each eye, and gaze point. Essentially, the technology decodes eye movements and translates them into insights that can be used in a wide range of applications or as an additional input modality.

How eye tracking works

Typically, an eye tracking system comprises one or more cameras, some light sources, and computing capabilities. Algorithms translate the camera feed into data points with the help of machine learning and advanced image processing.

How the human brain is capable of sorting through an avalanche of external stimuli—most of which never reach the human consciousness—to create a sense of awareness of the individual's surroundings.

UsIing a combination of artificial intelligence, mathematics, and a close examination of the eye movements of individuals as they were shown images of people's faces, researchers found that important clues are revealed in the eyes.
When people were shown clear images, their eye movements showed a distinct pattern that indicates they were aware of their surroundings. However, as the subjects were presented with progressively dimmer images of faces, the pattern of eye movement changed. Tracking these changes allowed researchers to discern whether the subjects actually perceived the face or not without asking them.
How the human brain is capable of sorting through an avalanche of external stimuli—most of which never reach the human consciousness—to create a sense of awareness of the individual's surroundings.
UsIing a combination of artificial intelligence, mathematics, and a close examination of the eye movements of individuals as they were shown images of people's faces, researchers found that important clues are revealed in the eyes.
When people were shown clear images, their eye movements showed a distinct pattern that indicates they were aware of their surroundings. However, as the subjects were presented with progressively dimmer images of faces, the pattern of eye movement changed. Tracking these changes allowed researchers to discern whether the subjects actually perceived the face or not without asking them.
The eye-tracking tool allowed researchers to explore the amorphous dividing line between consciousness and unconsciousness, a state most obvious as we awake from sleep. People become progressively more aware of their surroundings as slumber recedes, a process that is controlled in a region of the brain known as the thalamus.
They found that when people awake the thalamus discharges a brief pulse which jumpstarts the transition to consciousness. However, this activity is only a first step in a series of actions throughout the brain that leads to full awareness, they found. For instance, that initial pulse from the thalamus may fail to activate other neural networks, keeping the individual unconscious of most surrounding stimuli. However, the pulse can also activate neurons involved in processing visual cues in the frontal cortex, which in turn amplifies circuits involved in arousal and attention. At the same time, signals irrelevant to the event are turned off. tool allowed researchers to explore the amorphous dividing line between consciousness and unconsciousness, a state most obvious as we awake from sleep. People become progressively more aware of their surroundings as slumber recedes, a process that is controlled in a region of the brain known as the thalamus.
They found that when people awake the thalamus discharges a brief pulse which jumpstarts the transition to consciousness. However, this activity is only a first step in a series of actions throughout the brain that leads to full awareness, they found. For instance, that initial pulse from the thalamus may fail to activate other neural networks, keeping the individual unconscious of most surrounding stimuli. However, the pulse can also activate neurons involved in processing visual cues in the frontal cortex, which in turn amplifies circuits involved in arousal and attention. At the same time, signals irrelevant to the event are turned off.
Thanks:

Cecile G. Tamura