Search This Blog

Showing posts with label Old gold tamil songs. Show all posts
Showing posts with label Old gold tamil songs. Show all posts

Friday, July 11, 2014

பட்டுகோட்டையை என்றும் நினைவூட்டும் பாடல் ...ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே Aarambam Aavadhu Pennukkullae - Thangap Padhumai (1959)





( நீங்கள் கொலைகாரனா கொற்றவனை கொன்றீர்களா?
கூறுங்கள் அத்தான் கூறுங்கள்..)

வீடற்ற பத்தினியின் இன்பத்தை கொன்றவன் நான்
அவள் இதயத்தில் கொந்தளித்த எண்ணத்தை கொன்றவன் நான்
வாழ தகுந்தவளை வாழாமல் வைத்து விட்டு
பாழும் பரத்தையினால் பண்பு தனை கொன்றவன் நான்
அந்த கொலைகளுக்கே ஆளாகி இருந்துவிட்டேன்
இனி எந்த கொலை செய்தாலும் என்னடி என் ஞானபெண்ணே….
என்னடி என் ஞானபெண்ணே…என்னடி என் ஞானபெண்ணே

ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
மனிதன் ஆரம்பமாவது பெண்ணுக்குள்ளே
அவன் ஆடி அடங்குவது மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சிக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

(அத்தான்…. அத்தான்…. உங்கள் மீது கொடும்பழி வந்திருக்கிறதே அத்தான்.
என் மீது உண்மையான அன்பிருந்தால் அஞ்சாமல் உண்மையை சொல்லுங்கள்
ம்ம்.. யாருக்கும் அஞ்சாமல் சொல்லுங்கள் அதான்..)

அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே…..
அன்பை கெடுத்து நல் ஆசையை கொன்றவன்
அஞ்சி நடப்பானோ ஞானப்பெண்ணே
துன்பத்தை கட்டி சுமக்க துணிந்தவன்
சொன்னாலும் கேட்பானோ ஞானபெண்ணே
சொன்னாலும் கேட்பானோ ஞானபெண்ணே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே

( அத்தான் உண்மையை கூறமுடியாதபடி அவ்வளவு பெரிய தவறு
என்ன செய்து விட்டீர்கள்? )

தவறுக்கும் தவறான தவறை புரிந்து விட்டு
தனிப்பட்டு போனவன் ஞானபெண்ணே…….
தவறுக்கும் தவறான தவறாஇ புரிந்து விட்டு
தனிப்பட்டு போனவன் ஞானப்பெண்ணே..தனிப்பட்டுப்போனவன் ஞானப்பெண்ணே
பதறி பதறி நின்று கதறி புலம்பினாலும்
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
பயன்பட்டு வருவானோ ஞானப்பெண்ணே
ஆரம்பமாவது… மனிதன் ஆரம்பமாவது
பெண்ணுக்குள்ளே.. அவன் ஆடி அடங்குவதும் மண்ணுக்குள்ளே
ஆராய்ந்து பார் மனக்கண்ணுக்குள்ளே
ஆத்திரம் கொள்ளாதே நெஞ்சுக்குள்ளே..

(ஆ….ஆ…. அத்தான்…அத்தான்… இது என்ன அத்தான்.. இது என்னா?
உங்கள் கண்கள் எங்கே அத்தான்… உங்கள் கண்கள் எங்கே..? )

கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ
பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
பொருத்தமான துணை இருந்தும் பொங்கி வரும் அழகிருந்தும்
போன பக்கம் போக விட்டேன் பார்வையை
அவன் பொருத்திருந்தே புரிந்து கொண்டான் வேலையை
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ

( கருணையே வடிவமான தெய்வம உங்கள் கண்களை பறித்தது? )

எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எதிரில் வந்து கெடுக்கவில்லை
இதயம் இடம் கொடுக்கவில்லை
எங்கிருந்தோ ஏவி விட்டான் கிளியை
அது என் தலையில் போட்டதடி பழியை
கண்ணை கொடுத்தவனே எடுத்துக்கொண்டான்டீ மானே
வளர்த்தவனே வெறுத்துவிட்டாண்டீ

( நீதி நிலை பெற என் நெற்றியில் குங்குமம் திகழ
உண்மையை கூறுங்கள்… உங்கள் மனைவி கேட்கிறாள்..
என் மஞ்சளும் குங்குமமும் கேட்கிறதத்தான்… )

சிங்காரம் கெட்டு சிறைபட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம்.. சம்சாரம் ஏதுக்கடி..
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி………
மனைவியை குழந்தையை மறந்து திரிந்தவனை
வாழ்த்துவதாகாதடி தங்கம் … மன்னிக்க கோடாதடி..
சிங்காரம் கெட்டு சிறைப்பட்ட பாவிக்கு
சம்சாரம் ஏதுக்கடி தங்கம் சம்சாரம் ஏதுக்கடி

Thursday, March 20, 2014

Monday, February 3, 2014

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்


P சுசீலா அம்மாவின் இனிமையான வித்தியாசமான குரல் இந்த பாடலில். அதற்காகவே இந்த பாடலை பலமுறை கேட்கலாம். வேதாவின் இனிமையான இசை.

திரைப் படம்: நான்கு கில்லாடிகள் (1969)
பாடியவர்கள்: T M S, P சுசீலா
இசை: வேதா
பாடல்: கண்ணதாசன்
இயக்கம்: L பாலு
நடிப்பு: ஜெயசங்கர்,  பாரதி
 செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத
ஆடையின் வனப்பை நீ எழுத
ஆசையின் அழகை நான் எழுத

நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க
நாடகம் என்றே நான் நினைக்க
நடப்பதை உன்னிடம் ஏன் மறைக்க

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்
உறவுக்கு என்றும் இரண்டு பக்கம்
அதை உன்னிடம் சொல்வதில் என்ன வெட்கம்

உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்
உறவின் ஒரு பக்கம் நீ அறிவாய்
இந்த நிலவின் மறுபக்கம் யாரறிவார்

செவ்வானத்தில் ஒரு நட்சத்திரம்
சிரித்தது எனைப் பார்த்து
என் சிவந்த உடலா இதழா மனமா
சிரித்தது எதைப் பார்த்து

Sunday, January 26, 2014

வளையாபதி - மூலக்கதை - குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்



நன்றி www.koodal.com/tamil/research/articles.asp?id=264&content=tamil&name=tamil-online

முத்தமிழில் ஒன்றான நாடகத்தினின்று வளர்ந்த வடிவம் திரைப்படம். கற்றார்க்கும் கல்லாதவர்க்கும் களிப்பு நல்கும் திரைப்படம் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றும் இயைந்ததாகக் காணப்படுகிறது. இது கல்வியறிவு முழுவதும் பெறாத கிராமங்களில் கூடத் தனது கவர்ச்சியினால் வெகுவிரைவில் வளர்ந்தது. இங்ஙனம் வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் புராணக் கதைகளைத் திரைப்படமாக்கி அதில் சிலர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். புதுவையில் பிறந்த சுப்புரத்தினம் தமிழ் பயின்று புலவராகத் திகழ்ந்தார். பாரதியின் நட்பால் தன்னைப் பாரதிதாசனாக்கிக் கொண்டு பாடு பொருளில் புதுநடை கண்டார். திராவிட இயக்கத்தின் கொள்கைப் பிடிப்பால் தனது படைப்புகளைப் புரட்சிகரமாக்கி வந்தார். பாரதிதாசன் தமிழனாய், தமிழாசிரியனாய், புரட்சிக்கவிஞனாய் வாழ்ந்த காலத்தில் திரைப்படத்துறையில் பாடலாசிரியராகக் கால்தடம் பதித்தார். புதுவைக்குயிலின் இனிய கானங்கள் பாடல்களாகத் திரைவானில் ஒலிக்கத் தொடங்கின. கவிஞரின் எழுத்துப் புலமை அறிந்தோர் தம் படத்திற்குத் திரைக்கதை, உரையாடலையும் எழுத அவரை அழைத்தனர். அந்த வகையில் பாவேந்தர் பாரதிதாசன் வளையாபதி என்னும் படத்திற்குத் திரைக்கதை உரையாடல் (ஒரு பாடல்) எழுதினார். பாரதிதாசன் எழுதிய இப்படத்தின் திரைக்கதை  உரையாடலைக் கட்டுரை புரப்பாகக் கொண்டது இக்கட்டுரை. பாரதிதாசன், மூலக்கதையை எவ்வாறு திரைக்கதையாக்குகிறார் என்பதையும், எவ்வாறு கதை மாற்றம் பெறுகின்றது என்பதையும், திரையில் பாரதிதாசனின் தமிழ்ச்சுவை எப்படி உள்ளது என்பதையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
வளையாபதி - மூலக்கதை:
ஐம்பெருங்க காப்பியங்களுள் ஒன்று வளையாபதி. அழகிய விருத்தங்களாலான இக்காப்பியத்தின் எழுபத்தி இரண்டு பாடல்களே நமக்குக் கிடைத்துள்ளன. அபிதான சிந்தாமணி, நவகோடி நாராயணன் வளையல் வியாபாரம் செய்யும் செட்டியார் இனத்தைச் சேர்ந்தவன். அவனைப் பற்றிப் பாடிய தமிழ்நூல் வளையாபதி என்கிறது. நவகோடி நாராயணன் வளையாபதி காப்பியத் தலைவன், வைசிய புராண முப்பத்தைந்தாவது சருக்கத்தில் அமைந்த வளையாபதியின் மூலக்கதை, நவகோடி நாராயணன் எனும் வைர வாணிகன் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணொருத்தியை மணந்தான். அதனால் வணிகர் குலத்தினர் அவனை வெறுத்தனர். அப்பெண்ணைப் பிரிந்து அயல்நாடு சென்று பொருளீட்டி, காவிரிப்பூம்பட்டினத்தில் தன் குலத்துப் பெண்ணொருத்தியுடன் வாழ்ந்து வருகிறான். முன்பு தொடர்பு கொண்டிருந்த பெண்ணுக்குப் பிறந்த பிள்ளை வளர்ந்து, தந்தையை அறிந்து வணிகர் அவையினரால் நாராயணன் மகனே இவன் என முறை வழங்கப்பெற, தன் தாயைத் தந்தையுடன் சேர்த்து வைக்கிறான்.
திரைக்கதை அமைப்பு:
காப்பியக் கதையைத் திரைக்கதையாக மாற்றித் திரைக்கதைக்கென உரையாடலையும் தீட்டியவர் பாவேந்தர் பாரதிதாசன். செல்வம் கொழித்த காவிரிப் பூம்பட்டினத்தில் நவகோடிப் பொன்னுக்கு அதிபதியாக நேர்மையான வாணிபனாக வாழ்ந்து வருபவன் வளையாபதி. தன் குலத்துப் பெண்ணொருத்தியை மணந்து இல்வாழ்க்கை நடத்தி வருகிறான். ஆறு வருடங்களாகக் குழந்தை பாக்கியம் இல்லாமையாலும் ஊர்மக்களின் கேலிக்கு உள்ளானதையும் மனதில் கொண்டு மனமுடைந்த வளையாபதி சத்தியவதி என்பவளை விரும்பி இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொண்டு ஊருக்கு வருகிறான். ஆத்திரமும் வருத்தமும் அடைந்த முதல் மனைவி சுந்தரி சத்தியவதியைப் பழி தீர்க்க அவளை ஒழுக்கங்கெட்டவள் எனத் தன் கணவனை நாடகமாடி நம்ப வைக்கிறாள். கருவுற்ற நிலையில் கணவனாலும் தந்தையாலும் விரட்டியடிக்கப்பட்ட சத்தியவதி தற்கொலைக்கு முயல, அவளை மூதாட்டி ஒருத்தி காப்பாற்றுகிறாள். அவள் அரவணைப்பில் உத்தமன் என்னும் ஆண் மகனைப் பெற்று வளர்க்கிறாள். வளர்ந்த உத்தமன் காவிரிப்பூம்பட்டினத்துப் பள்ளி ஒன்றில் படித்து வருகிறான். இதற்கிடையில் சுந்தரியின் தம்பி சாத்தானின் காதலி அல்லிக்குப் பிறந்த குழந்தையைத் தம் குழந்தையென வளையாபதியிடம் கூறி அவனை நம்ப வைக்கிறாள் சுந்தரி. உத்தமன் படிக்கும் பள்ளியில் வளையாபதி மகன் அழகனும், படிக்க, இருவருக்கும் சண்டை ஏற்படுகிறது. உத்தமன் யார் என்பதை சுந்தரி, சாத்தான் அறிகின்றனர். சுந்தரி சாத்தான் மூலம் சத்தியவதியைக் கொல்ல முயல்கிறாள். தாயைக் காப்பாற்றிய உத்தமன் தந்தை மீது வழக்கு தொடர்கிறான். வழக்கில் உத்தமன் வளையாபதி மகன் என்பதும் அல்லியின் மகனே அழகன் என்பதும் தெரிய வருகிறது. சத்தியவதி கணவருடன் சேர்கிறாள். தன்னை வளையாபதியும் சத்தியவதியும் மன்னிக்கும்படிக் கூறிய சுந்தரி தற்கொலை புரிகிறாள். வளையாபதி, சத்தியவதி உத்தமனுடன் வாழ்கின்றனர். இதுவே வளையாபதியின் திரைக்கதை.
கதை மாற்றம்:
மூலக்கதையில் பிற்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்ணை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக் கொள்கிறான் நவகோடி நாராயணன். மகன் தன் தந்தையைக் கண்டுபிடித்து வாணிகர் அவையினரால் தான் நாராயணன் மகனென ஏற்றுக் கொள்ளப் பெறுகிறான். தன் தாயைத் தந்தையிடம் சேர்க்கிறான். திரைக்கதையில் வளையாபதி குழந்தை இன்மையால் தன் மனத்திற்குப் பிடித்த பிற்பட்ட குலப்பெண்ணை இரண்டாம் மனைவியாக ஏற்றுக் கொள்கிறான். அவன் மகன் உத்தமன் தன் தந்தையின் தவறை உலகுக்கு உணர்த்தி தக்க பாடம் புகட்டித் தன்னை அவன் மகன் என உலகறியச் செய்கிறான்.
பாத்திரப்படைப்பு:
திரைக்கதை அமைப்பிற்கேற்ப கதை மாந்தர்கள் படைக்கப்பட்டால்தான் படமும் சிறக்கும். அந்த வகையில் கதைப் போக்கிற்கேற்ப வளையாபதியில் பதினெட்டு பாத்திரங்களை படைத்துள்ளார் பாரதிதாசன். படைப்புக்கு பாங்கு கொண்ட பாரதிதாசன் பாத்திரங்களின் குணாதிசயங்களுக்கேற்ப பாத்திரப் பெயர்களையும் சூட்டியுள்ளார். வளையாபதி எனும் படத்தின் பெயரே கதை நாயகனுக்கு நேர்மை, சத்தியம் தவறாத பெண் சத்தியாவதி உண்மையும் நேர்மையும்கொண்ட அவள் மகன் உத்தமன் வளையாபதியின் மைத்துனன் வஞ்சகன். அவன் பெயர் சாத்தான். ஏனைய பாத்திரப் பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக சுந்தரி, அல்லி, அழகன், வேம்பு என்றிவ்வாறு படைத்துள்ளார். தலைமைப் பாத்திரங்களாக வளையாபதி, சத்தியவதி, சுந்தரி, உத்தமன் ஆகியோர் படைக்கப்பட்டுள்ளனர்.
உரையாடல் திறன்:
திரைப்படத்தின் மூல ஆதாரம் கதை, திரைக்கதை, உரையாடல் திரைக்கதை, உரையாடலில் மட்டும் கவனம் கொண்டு கதாசிரியர்கள் எழுதி வந்தனர். அவர்கள அப்பணிக்கு மட்டுமே அமர்த்தப்படுவர். இன்றைய தமிழ் சினிமாவின் நிலையே வேறு. இசையும் பாடல்களும் பின்னுக்குத் தள்ளப்பட்டு உரையாடல் (வசனம்) முக்கியத்துவம் பெற்ற காலத்தில் பாரதிதாசன் படங்களுக்குத் திரைக்கதை, உரையாடல் எழுதி வந்தார். அத்திம்பேர், அம்மாமி எனும் தமிழ் மறைந்து, தமிழ் சினிமாவில் தமிழுக்கு இடம் வாங்கிக் கொடுத்தவர் நம் பாரதிதாசன். வளையாபதி உரையாடல் மனித வாழ்க்கையில் கலந்திருந்த தினசரி மக்கள் பேசும் எளிய அழகு தமிழில் அமைந்துள்ளது. இயற்கைத் தன்மையுடன் தமிழ் வார்த்தைகளைப் படைத்துள்ளார் பாவேந்தர். எதுகையும், மோனையும், உவமை நயமுமாய் கதைக்கும் காட்சிக்கும் தக்க வகையில் எழுதப்பெற்ற வளையாபதி உரையாடலின் துளிகள் (சில) இங்கே சான்றுகளாக,
குழந்தை இன்மையால் மனமுடைந்த கணவரிடம் பேசுகிறாள் சுந்தரி,
சுந்தரி : அத்தான் எதிர்காலம் பலன் தராதா?
வளையாபதி : அன்பு மணமான ஆறாண்டுகளுக்குப் பிறகா? பட்ட மரத்தில் எதிர்காலம் பச்சிள நீர் தருமா? வறண்ட பாலைவனத்தில் எதிர்காலம் மண மல்லிகை தருமா?
சுந்தரி : நம்பிக்கை வையுங்கள் அத்தான்!
வளையாபதி : நம்பிக்கை உன்னிடத்திலா? தேக்கு மரத்தில் சந்தனம்! வெற்றுச் சிப்பியில் முத்து....!
சுந்தரி : (கண்ணீருடன்) நான் மலடி! வெற்றுச் சிப்பி! தேவைப்படுகிறது உங்களுக்கு ஒரு முத்துச்சிப்பி
நண்பர் மகள் சத்தியவதியிடம் அவளை மணப்பதாகக் கூறுகிறான் வளையாபதி அப்போது இருவரது உரையாடல்.
சத்தியவதி : உங்கள் உள்ளம் என்னை ஒப்புக் கொள்கிறது. இல்லையா?
வளையாபதி : வட்ட நிலா குடியேற வானம் ஒப்புக் கொள்ள வேண்டுமா?
சத்தியவதி : ஆனாலும் .... நான் வேளாளர் மகள். நீங்கள் வயிர வணிகர். ஊரார் நம்மை எதிர்ப்பார்கள்.
வளையாபதி : வையம் எதிர்த்தாலும் வளைந்து கொடுக்கப் போவதில்லை நான்! என் பெயர் வளையாபதி
அப்பா வீட்டிற்கு வந்த சத்தியவதியைப் பார்த்து யாரோடு வந்தாய் அம்மா என்கிறார். சத்தியவதியோ கண்ணில் பெருகும் நீரோடு கதியற்றவள் என்ற பேரோடு என்கிறாள். வேலைக்காரி வேம்பின் பேச்சு சுவையாக உள்ளது என்பதை வேம்பு உன் பேச்சு கரும்பு என்கிறாள் சத்தியவதி. வணிகர் குலத்தினர் சத்தியவதியை அவள் ஊருக்கு அனுப்பி வைக்கச் சொல்கின்றனர். அதற்கு வளையாபதியோ உயிரை விட்டு உடலை எங்கேனும் பிரிக்க முடியுமா? என்று கணவன் மனைவி உறவுப் பிணைப்பையும், வேலைக்காரி கூறும் அப்பேர்ப்பட்ட சீதையையே விரட்டிட்டாங்க என்னும் கூற்றில் காப்பியத்தன்மையையும் பாரதிதாசன் எழுதிய உரையாடலில் காண முடிகிறது. இவ்வுரையாடலுடன் ஒரு பாடலுடன் வளையாபதி திரைப்படம் 1952ல் திரைக்கு வந்தது. கூடவே புலமையுடையோரின் பாராட்டுக் கடிதங்களும் பாரதிதாசனுக்கு வந்தன.
முடிவுரை:
பாட்டுக்கவி பாரதிதாசனின் திரைக்கதை, உரையாடல் கதைப்போக்கிற்கென கதைமாந்தர் பண்பு நலனுடன் உணர்ச்சி வெளிப்பாட்டுடனும் சிறந்த சொல்லாட்சி, நடை, எதுகை, மோனையுடன் பழகு தமிழில் அமைந்துள்ளது. இசைப்புலமையும் இயற்றமிழும் கொண்டு விளங்கிய பாவேந்தர் திரைத்தமிழிலும் தன் முத்திரையைப் பதிக்கத் தவறவில்லை. வளையாபதி திரைக்கதை, உரையாடல் அதற்குத் தக்கச் சான்றாகும்.
நன்றி: கட்டுரை மாலை

டி எம் எஸ் அவர்களுக்கு இது ஆரம்ப கால பாடல். ஆகையால் நன்றாக அடக்கி வாசித்திருப்பது தெரிகிறது.
ஜமுனா ராணி ரொம்பவும் இலகுவாக பாடியிருக்கிறார்.

இசை S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம் என்றாலும் இந்தப் பாடலுக்கு சுநதரம் இசையமைத்திருப்பதாக அறிகிறேன்.

கொஞ்ச காலம் பின்னரும் இதே மேட்டில், டி எம் எஸும், சுசிலா அம்மாவும் ஒரு பாடல் பாடியிருக்கின்றனர். இப்போது நினைவுக்கு வரவில்லை.

திரைப் படம்: வளையாபதி (1952)
குரல்கள்: டி எம் எஸ்,  K ஜமுனா ராணி
பாடல்: பாரதிதாசன்
இசை: S. தட்சிணாமூர்த்தி  மற்றும் P M. சுந்தரம்
நடிப்பு : G முத்துகிருஷ்ணன் , சுந்தரியாக T A. ஜெயலக்ஷ்மி, சத்யவதியாக சௌகார் ஜானகி, உத்தமனாக ராமகிருஷ்ணா
இயக்கம்: T R சுந்தரம்






குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் நாதா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

கொஞ்சிடும் அஞ்சுகமே ஓடி வந்த ஜோடி புறா
கூடி ஆனந்தமாய் கொஞ்சி பாடிடுதே பாடிடுதே
இன்பம் நாடிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

குளிருடன் மாலை வேளை கொல்லும் நெஞ்சம் என்ன சொல்வேன்

மனமும் தென்றல் காற்றும் ஒன்றை ஒன்று மருவிடுதே

அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அன்னாவி வானத்தையே தாவும் ஒரு மாமருந்தே
அரும்பாய் முல்லைக் கொடி ஓடி தாவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே
ஆனந்தம் நாதா மேவிடுதே

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

ஆதலால் இன்ப வாழ்வு கைக் கூடும் எவ்வுயிர்க்கும்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்
ஆதலாலே மயிலே
காதலால் நாம் இருவர்

சேர்ந்தே இன்பமெல்லாம் வாழ்ந்தே வாழ்ந்திடிவோம்
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்
ஓ ஓ
வாழ்ந்திடிவோம் நாமே வாழ்ந்திடிவோம்

என் போல் பாக்யவதி யாருமில்லை உலகினிலே
இன்பம் இன்பம் நம் இரண்டு மனம் ஒரு மனமே

ஓ ஓ ஓ ஓ ஓ

குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி கண்டதனால்
வண்டு காதலினால் ஹா ஹா  தாவிடுதே தாவிடுதே
இன்பம் மேவிடுதே

Wednesday, January 22, 2014

Kannadasan (24 June 1927 -- 17 October 1981)

Kannadasan (24 June 1927 -- 17 October 1981) was a Tamil poet and lyricist, heralded as one of the greatest and most important writers in the Tamil language.
Frequently called Kaviarasu (English: King of Poets),
Kannadasan was most familiar for his song lyrics in Tamil films and contributed around 5000 lyrics besides 6000 poems and 232 books,including novels, epics, plays, essays, his most popular being the 10-part religious essay on Hinduism, captioned Arthamulla Indhumatham (English: Meaningful Hindu Religion).
He won the Sahitya Akademi Award for his novel Cheraman Kadali in the year 1980 and was the first ever to receive the National Film Award for Best Lyrics, given in 1969 for the film Kuzhanthaikkaga.
Kannadasan worked in "Thiraioli" a Cine magazine run by Rama.Thiyagarajan in Rayavaram. Pudukkottai Distt and in Chennai. He also worked for "Thirumagal" magazine in Ramachandrapuram, Pudukkottai Distt.

Atheism to Hinduism
Muthiah was a staunch atheist and a follower of the Dravidian atheistic movement. He had great love for the Tamil language and culture, and excelled in Tamil literature, prose and poetry. He once read the Thiruppavai of Andal, and was amazed at its mystic poetry, that was to have a deep and everlasting impact on him. After a lot of introspection, he decided to reconvert back into Hinduism, renamed himself as Kannadasan, dug deep into understanding Hinduism, and wrote his series of books on Hinduism titled "Arthamulla Indhu Matham"
Kannadasan is the real master of Tamil film lyrics which exceeds all other works he contributed. Simple words with a philosophical flavor is his evergreen style. Though many song writers back from Papanasam Shivam, Kambadasan, Vindhan, Maruthakasi, Ku.Ma.Balasubramanian etc. ruled Tamil music industry, but after Kannadasan the scene changed.He was the unbeatable no.1. till he died. In this same period there were many excellent poets like Vaali, Pulamaipittan, Alangudi Somu, Avinasimani,Panchu Arunachalam, Jayakanthan etc., the songs written by these poets too are considered by many fans as Kannadasan songs, because everyone thinks if a song has been good it could be by Kannadasan alone. This was the credit he attained.Even after his death though film lyrics had come a long way from Vairamuthu to Tamarai or even Kolaiveri Danush, still Kannadasan is the best and his songs overtake all the new songs up to date. New songs fade away by months or even days, but still Kannadasan's songs haunt us. After Bharati we could name Kannadasan as the next great poet, but poetry and film lyrics are totally different in Tamil art world. He was the producer of historic Tamil film "sivagangai seemai"portraiting first freedom fighters "Marudhu Pandaiars"belonging to "AGAMUDAIRS"a sub sect of "Mukulatthor"(KALLAR,MARAVAR and AGAMUDAIAR).The song "Santhupottu"in that film was popular and ever remembered..



Wednesday, May 29, 2013

டி .எம்.சௌந்தரராஜன் அவர்களின் முக்கியமான தனிப் பாடல்கள்


திருவிளையாடல் -பாட்டும் நானே
அருணகிரிநாதர் - முத்தைத் திரு பத்தித்
முதலாளி -ஏரிக் கரையின் மேலே
திருமணம் -மங்கியதோர் நிலவினிலே
வளையாபதி - குலுங்கிடும் பூவில் எல்லாம்
மந்திரிகுமாரி - அன்னம் இட்ட வீட்டிலே
கூண்டுக்கிளி -கொஞ்சும் கிளியான
நானே ராஜா -மந்தமாருதம் தவழும்
மலைக்கள்ளன் -எத்தனை காலம்தான்
தூக்குத் தூக்கி - பெண்களை நம்பாதே
ஏறாத மலைதனிலே
சதாரம் -எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே
நான் பெற்ற செல்வம் -வாழ்ந்தாலும் ஏசும்
ராணி லலிதாங்கி -ஆண்டவனே இல்லையே
மர்ம வீரன் -ஓ எந்தன் பிரேமா
சபாஷ் மீனா - சித்திரம் பேசுதடி
சௌபாக்கியவதி - தில்லையம்பல நடராஜா
சாரங்கதாரா -வசந்த முல்லை போலே
உத்தமபுத்திரன் -யாரடி நீ மோகினி
நாடோடி மன்னன் - தூங்காதே தம்பி தூங்காதே
பதிபக்தி -வீடு நோக்கி ஓடி வந்த
பாகப் பிரிவினை - ஏன் பிறந்தாய் மகனே
பாவ மன்னிப்பு -வந்த நாள் முதல்
தாய் சொல்லைத் தட்டாதே -போயும் போயும்
தாயைக் காத்த தனயன் - கட்டித் தங்கம்
பார் மகளே பார் -பார் மகளே பார்
பாதை தெரியுது பார் - சின்னச் சின்ன மூக்குத்தியாம்
பார்த்தல் பசிதீரும் -பிள்ளைக்குத் தந்தை
ஆலயமணி - பொன்னை விரும்பும்
நிச்சய தாம்பூலம் - பாவாடை தாவணியில்
பலேபாண்டியா - நான் என்ன சொல்லி விட்டேன்
படித்தால் மட்டும் போதுமா? - நான் கவிஞனுமல்ல
இரத்தத் திலகம்- ஒரு கோப்பையிலே
இருவர் உள்ளம்- கண்ணெதிரே தோன்றினாள்
தெய்வத் தாய் - ஒரு பெண்ணைப் பார்த்து
படகோட்டி - தரை மேல் பிறக்க வைத்தான்
கொடுத்ததெல்லாம் கொடுத்தான்
எங்க வீட்டுப் பிள்ளை- நான் ஆணையிட்டால்
பெண் போனால்
கலங் கரை விளக்கம் - நான் காற்று வாங்கப் போனேன்
அன்பே வா -உள்ளம் என்றொரு கோயிலிலே
புதியபறவை -எங்கே நிம்மதி ,எங்கே நிம்மதி
பச்சை விளக்கு - ஒளி மயமான எதிர்காலம்
என் கடமை -நில்லடி நில்லடி சீமாட்டி
ஹலோ மிஸ்
ஆண்டவன் கட்டளை -ஆறு மனமே ஆறு
கை கொடுத்த தெய்வம் - ஆயிரத்தில் ஒருத்தியம்மா
வேட்டைக்காரன் - உன்னை அறிந்தால்
ஆயிரத்தில் ஒருவன் - அதோ அந்தப் பறவை
ஓடும் மேகங்களே
குடியிருந்த கோயில் -என்னைத் தெரியுமா
இரவும் பகலும் -இரவும் வரும் பகலும் வரும்
உள்ளத்தின் கதவுகள்
பெண்ணே நீ வாழ்க -பொல்லாத புன் சிரிப்பு
மனம் ஒரு குரங்கு -மனம் ஒரு குரங்கு
செல்வமகள் - அவன் நினைத்தானா
பேசும் தெய்வம்- நான் அனுப்புவது கடிதம் அல்ல
கௌரி கல்யாணம்- ஒருவர் மனதை ஒருவர்
சாந்தி -யார் அந்த நிலவு?
நீலவானம் -ஒ, லிட்டில் பிளவர்
பெற்றால்தான் பிள்ளையா -செல்லக் கிளியே [டி.எம்.எஸ்.]
தங்கை -தண்ணீரிலே தாமரைப் பூ
நெஞ்சிருக்கும் வரை - பூ முடிப்பாள்
ஒளி விளக்கு -தைரியமாகச் சொல் நீ
வல்லவனுக்கு வல்லவன் -ஓராயிரம் பார்வையினிலே
தொழிலாளி -ஆண்டவன் உலகத்தின்
ஆனந்தி -கண்ணிலே அன்பிருந்தால்
கண்ணன் என் காதலன் -பாடுவோர் பாடினால்
கல்லும் கனியாகும் -நான் கடவுளைக் கண்டேன்
கை விரலினில் பிறந்தது
ஐந்து லட்சம் -நான் பாடிய தமிழ்ப் பாட்டு
நம் நாடு - நல்ல பேரை வாங்க
மன்னிப்பு நீ எங்கே
கார்த்திகை தீபம் எண்ணப் பறவை சிறகடித்து
சொர்க்கம் பொன் மகள் வந்தாள்
மாட்டுக் கார வேலன் -ஒரு பக்கம் பார்க்கிறா
ராமன் எத்தனை ராமனடி -அம்மாடி பொண்ணுக்குத்
வியட்நாம் வீடு -உன் கண்ணில் நீர் வழிந்தால்
குமரிக் கோட்டம் -எங்கே அவள்
சவாலே சமாளி -நிலவைப் பார்த்து
பாபு -இதோ எந்தன் தெய்வம்
ரிக்ஷாகாரன் -கடலோரம் வாங்கிய காற்று
தங்கப் பதக்கம் -சுமை தாங்கி சாய்ந்தால்
தேவி- -தித்திக்கும் முத்தமிழே
இருள் பாதி ஒளி பாதி
சின்னக் குழந்தை
உயர்ந்த மனிதன் -அந்த நாள் ஞாபகம்
தவப்புதல்வன் -இசை கேட்டால்

--உமா வரதராஜன்

Monday, October 3, 2011

Chella kuyil srinisha-palam neeyappa.


ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த முருகா..!

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்..!

உனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது
என்று நாணித்தான் முருகா!

நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவது
என்று நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லை...!

முருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசமன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று நாணித்தான்
அப்பனித் தலையர் தரவில்லை...!

அப்பனித் தலையர் தரவில்லையாதலால்
முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே..!

ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து
ரசம் அன்பினொடு நாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ!

உனக்கென்ன விதமிக்கனியை நாமீவததென்று
நாணித்தான் அப்பனித் தலையர் தரவில்லையாதலால்..

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே!

முருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா

சக்தி வடிவேல் வடிவேல் வேல்...

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?

சக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா
உனக்குக் குறையுமுளதோ?

முருகா உனக்குக் குறையுமுளதோ?

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

முருகா நீ...

ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டு கொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்?

எமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்..!

என் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்

தருவையரு பழனி மலையில்

சந்ததம் குடிகொண்ட சங்கரான் கும்பிடும் என் தண்டபாணி..!

தண்டாபாணி தண்டபாணி தண்டபாணித் தெய்வமே..!

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!

பழம் நீயப்பா! ஞானப் பழம் நீயப்பா!! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!!

சபைதன்னில்

திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்

பழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா! தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!!

கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!

நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய்!

ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!

ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்!

கார்த்திகைப் பெண்பால் உண்டாய்!

திருக்கார்த்திகைப் பெண் பாலுண்டாய்!

உலகன்னை அணைப்பாலே

திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா..!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!

ஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு..!

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!

நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு!

தாயுண்டு! மனம் உண்டு..!!

தாயுண்டு! மனம் உண்டு..!

அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு

உன் தத்துவம் தவறென்று சொல்லவும்


ஔவையின் தமிழுக்கு உரிமை உண்டு ..!

ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?

ஆறுவது சினம் கூறுவது தமிழ்.. அறியாத சிறுவனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?

மாறுவது மனம் சேருவது இனம்.. தெரியாத முருகனா நீ?

ஏறு மயிலேறு..! ஈசனிடம் நாடு..!! இன்முகம் காட்டவா நீ..!!!

ஏற்றுக் கொள்வான்.. கூட்டிச் செல்வேன்..

என்னுடன் ஓடி வா நீ..!

என்னுடன் ஓடி வா நீ..!

MANNIKKA VEYNNNDUGIREYN SSKFILM015 PS,TMS @ IRU MALARGALL

punnagai mannan poovizhi kannan - iru kodugal

Ammamma Thambi Endru - அம்மம்மா தம்பி என்று நம்பி

punnagai mannan poovizhi kannan - iru kodugal

Rare Radha song (Chinna arumbu from Pangaligal)


திரைப் படம்: பங்காளிகள் (1961)
இசை: V தச்சிணாமூர்த்தி
திருச்சி லோகநாதன்
குரல்:
பாடல்: மருதகாசி
இயக்கம்: ராமகிருஷ்ணா
நடிப்பு: ஜெமினி, அஞ்சலி தேவி




சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்த காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும்
நான் களிக்கும் நாள் வரும்


சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்

மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே மனம்
மகிழும் நாள் வரும்
நான் மகிழும் நாள் வரும்

சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்

நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
நீ எங்கு இருந்த போதும்
என் இதயம் உன்னை வாழ்த்தும்
தாய் அன்பு உன்னை காக்கும்
தாய் அன்பு உன்னை காக்கும்
நீ அழுவதேனடா
உறங்கி அமைதி காணடா

அழுவதேனடா
அமைதி காணடா
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம் ம்


Tuesday, September 20, 2011

ஹோ……லிட்டில் பிளவர் பாடல் Oh little flower


பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : ஓஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : ஓஹோ…..சிவக்கச் சிவக்கச் சிரிக்கும் அழகிலே தளுக்கிக் குலுக்கி மினுக்கும் நடையிலே நடக்க நடக்கத் துடிக்கும் இடையிலே ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : ஆஹா கனியக் கனிய வளர்ந்த பருவமே கருத்த விழியில் மிரட்டும் உருவமே உனக்கும் எனக்கும் உருவம் பொருத்தமே ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர் ஆண் : அழகு அழகு சுகத்தை எடுத்து வடிக்கவா அருகில் இருந்து விருந்து கொடுக்கவா அடுத்த கதையைப் படித்து முடிக்கவா ஒரே தரம் ஒரே தரம் உறவாடவா விளையாடவா ஆண் : ஹோ……லிட்டில் பிளவர் சீ யுவர் லவ்வர் சீ யுவர் சிட்டுக் கண்ணில் பட்டு பட்டு சிக்கி கொண்ட லவ்வர்