Search This Blog

Showing posts with label NEWS. Show all posts
Showing posts with label NEWS. Show all posts

Saturday, July 1, 2017

விஜய் டிவி வரலாற்று பின்னணி


1994-ஆம் ஆண்டு நா. பா. வா ராமஸ்வாமி உடையாரால்,கோல்டன் ஈகிள் டெலிவிசன் நெட்வொர்க் (GEC) என்ற பெயரில் தொடங்க பட்ட, தொலைகாட்சி நிறுவனம் , பின்பு , விஜய் மல்லையாவுக்கு கை மாறி விஜய் டிவியாக உருமாறியது .கோல்டன் ஈகிள் என்ற புகழ் பெற்ற உடையாரின் பீர் மதுவின் பெயரால் துவங்கப்பட்ட இந்நிறுவனம் பின்பு மல்லையா என்ற சாராய சாம்ராட்டிற்கு கை மாறியதும் அவர் இந்த டிவி தன் பெயரிலேயே அழைக்க பட வேண்டும் என்று விரும்பி விஜய் என்று பெயரிட்டார் . 
அதன் பின் பலவிதமான கார்பரேட் காரணங்களுக்காக சேனல் ஃபாக்ஸ்(FOX) நிறுவனத்திற்கு கை மாறியது கை மாறும்போது மல்லையாவின் ஒப்பந்த விதிகளிலேயே எந்த காரணம் முன்னிட்டும் சேனல் பெயர் மாற்ற படக் கூடாது என்பது குறிப்பிட பட்டது . அதன் பின்பு 2001-ஆம் ஆண்டு ரூபர்ட் முர்டோக்கின் என்பவரின் ஸ்டார் நிறுவன த்தால் வாங்கப் பட்டு ஸ்டார் விஜய் என பெயர் மாற்றப்ப ட்டது. இன்று வரை அது தொடர்கிறது . உபரி தகவல் : உடையாரின் GEC யில் துக்ளக் சோ அவர்கள் CEO வாக இருந்தார் அப்பொழுது தான் தொலைகாட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் மற்றும் தொகுப்பாளராக என் முழு நேர அலுவல் துவங்கியது . 
அதன் பின்பு GECயில் எஸ் வி சேகர் அவர்கள் பொறுப்பேற்றார். சேனல் மல்லையா கைகளுக்கு போன பின்பு ரபி பெர்னார்ட் அவர்கள் பொறுப்பேற்றார் . அதன் பின்பு ஏ எல் மோகன் பொறுப்பேற்றார் . அதுவரை என் பணி விஜய் டிவியுடன் இணைந்து இருந்தது . சென்னையில் செகன்ட் லைன் பீச் ரோட்டில் உள்ள மெக்டோவல் ஹவுஸ் என அழைக்க படும் அலுவலகத்தில் தான் மல்லையாவுக்கு கை மாறிய பின் விஜய் டிவி சேனல் அலுவலகம் நடந்தது. அதே அலுவலகத்தில் அதற்கு முன்பு UB petro products எனப்படும் மல்லையாவின் அலுவலகம் இருந்தது அங்கு விஜய் மல்லாவை சந்தித்து இருக்கிறேன் limestone எனப்படும் சுண்ணாம்பு கற்களை UB petro products க்கு சப்ளை செய்யும் முக்கியமான கம்பெனிகளில் நான் மார்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்த Bansal Chemline pvt ltd நிறுவனமும் ஒன்று அந்த சமயத்தில் நான் வேலை பார்த்த Bansal Chemline pvt ltd என்ற கம்பெனி சார்பில் விஜய் மல்லையா அளித்த பிசினஸ் லஞ்ச்சில் கலந்து கொண்ட அனுபவமும் எனக்கு இருக்கிறது . 
சில விசயங்களை மக்கள் புரிந்து கொள்ளுவதே இல்லை . மல்லையா நம் நாட்டை பொறுத்தவரை தேடப்படும் குற்றவாளி . இன்றும் அவரது நிறுவனங்கள் தங்கள் பெயரை மாற்றி கொண்டு , வியாபாரத்தை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன . UB petro products ltd ன் இன்றைய பெயர் Spic Organics Ltd. நிறுவனங்கள் பெயர்களை மட்டுமே மாற்றி கொண்டு மாறி மாறி தங்களது கார்பரேட் ஒப்பந்தங்களை மட்டுமே மாற்றி எழுதி கொள்கின்றன . மக்கள் தங்கள் வேலைகளை விட்டு விட்டு , கருத்து காளமேகமாக மாறி , சோசியல் மீடியா வைரல்களாக பதிவிட்டு கொண்டு இருக்கின்றனர் . அது காசு மேல காசாக மாறி மழையாக பொழிகிறது . விஜய் டிவி சம்பாதிக்கிற பணம் இந்தியாவுக்கு சொந்தமல்ல .
Govindarajan Vijaya Padma

Wednesday, June 28, 2017

IET Young Woman Engineer Award 2017

Although women represent more than half of the Sri Lankan population, their representation in the field of engineering is considerably less. In order to combat this problem and to encourage more women to be part of the industry, the Institution of Engineering and Technology (IET) Young Professionals (YP) have introduced the The Young Woman Engineer Award (YWEA). At the launching ceremony of the event, many respected individuals in the field of Engineering and Technology spoke about the gender imbalance and why it was important to combat it.  

Introduction

Even though women representation in engineering & technology field is considerably less in Sri Lanka, women represent more than half of the Sri Lankan population.  Women dominate the biomedical and arts faculties at the universities but in the engineering& technology faculties they are poorly represented. Similar situation can be seen in the industry.
To promote the engineering and technology among young women engineers and to increase the participation of women in the field of engineering IET YP Sri Lanka decided to launch Young Woman Engineer of the Year – 2017 for the first time in Sri Lanka. This is in line with the IET Young woman engineer – UK launched in 1978, the awards were part of an initiative to address the female shortage of engineers in the industry, and inspire the next generation of female engineers by recognizing and celebrating their talents.
This event is open for all the young women engineers in the industry and academic field in Sri Lanka. All the applicants will be evaluated by a judge panel consisting well known qualified personnel and the title ‘Young Woman Engineer of the Year’ will be awarded on the awards ceremony proposed to be held on September 2017.

Expected outcomes

Promote engineering

Promoting Engineering to youth is not as straightforward as one might think. Main objective of holding this event is to discuss Engineering using the values that it offers to people, to the community, and to the world. By putting Engineering in contest and giving recognition  to the people who have done a great influence to the field of engineering, our youth will be able to gain a better understanding of how they can make a contribution in this world through rewarding careers in Engineering.

Promote woman into engineering

Creating a young woman role model for the field of engineering is really important for the present community. This will encourage other young women to stand themselves and take any challenge and convince that femininity won’t make any barrier to achieve whatever anymore.  The winner of the competition will be the ambassador for future programs focusing on promoting women in engineering.

Fund raising for CSR project to promote engineering.

YWE event will be a media to raise funds for future CSR projects done by the IET YP Sri Lanka. Awareness programs on engineering and technology field for school students at remote areas will be organized in collaboration with this event which will enhance the women participation in engineering field. Furthermore contests related to engineering & technology field will be organized to increase the student’s creativity and competencies.

Friday, June 16, 2017

இராமேசுவரம் கோவில் வள்ளல் சீதக்காதி எனும் ஷேக் அப்துல் காதர் கட்டியதுதான்

தகவலுக்கு நன்றி Siddique Ahamed Anwar Raja
இந்து மக்களின் புனித தலமாக கருதபடும்
இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலை மன்னர் கிழவன் சேதிபதியுடன் இணைந்து பணியை மேற்கொண்டார் சீதக்காதி அவர்கள்

மற்றொரு தகவல் என்னவெனில் இராமநாபுர சமஸ்த்தானம் அரண்மணை கட்ட இவர் பொருளுதவி வழங்கியதாக மத்திய தொல்லியல் துறை சார்பாக கல்வெட்டு ஒன்று இராமநாபுர அரண்மனையிலே வைத்துள்ளது

வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள்


நான் படித்து புரிந்து கொண்ட வரையில் ரகுநாத சேதுபதி எனும் கிழவன் சேதுபதி காலத்தில் தான் ராமேசுவர கோவிலின் புகழ் பெற்ற சுற்று பிரகாரங்கள புதிய வடிவில் கட்ட பட்டன ...இதற்கு . நிதி கொடுத்து உதவியவர் சீதக்காதி வள்ளல் எனும் ஷேக் அப்துல் காதர் அது மட்டுமல்ல இவரது மேற்பார்வையில்தான் கட்டப்பட்டது .இந்த காலகட்டத்தில்தான் வைகை ஆற்றின் குறுக்கே அணை கட்டப்பட்டது . மிகவும் உறுதியான அரண்மனை சிவகங்கையில் கட்டப்பட்டது .முதன் முதலாக் முல்லை பெரியாறு அணை கட்டும் திட்டமும் இவர் அரசில் தான் முடிவெடுக்க பட்டது .சேதுபதி மன்னர்களின் ஆட்சியில் பொற்காலம் என்று கிழவன் சேதுபதி ஆட்சியைத்தான் சொல்கிறார்கள .இதில் மேலும் நான் ஆய்வு செய்ய இருக்கிறேன் . அதற்க்கான சில புத்தகங்கள் கேட்டேன் தோழர் யெஸ். பாலபாரதி எனக்கு அனுப்பி இருக்கிறார் .இணையத்தளத்தில் போதுமான தகவல்கள் இல்லை . இந்த விசயத்தில் நான் மிகவும் ஆர்வமாக இருப்பதற்கு காரணம் , இந்த மன்னனின் மூளையாக விளங்கி ஆட்சியில் சிறப்பு மிக்க வளர்ச்சிக்கு தான் சம்பாதித்த பணத்தையும் தாரளமாக நிதியாக கொடுத்து உதவியவர் சீதக்காதி வள்ளல் எனும் ஷேக் அப்துல் காதர். என்று நிரூபிக்க வேண்டும்எனது முல்லைபெரியாறு புத்தகம் எழுத ஆய்வு செய்தபோது இந்த சேதுபதி மன்னர் பற்றி தகவல்கள் சேகரித்தேன் . அதில் சேதுபதி மன்னரின் அமைச்சர் தான் முல்லை பெரியாறு அணை கட்டுவது பற்றி ஆய்வு செய்தார் என்று தெரிந்து கொண்டேன் .வள்ளல் சீதக்காதி பற்றி படிக்கும் போது இந்த மன்னரின் ஆட்சியில் அவரது பங்களிப்பு பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது .எல்லாவற்றையும் தொடர்பு படுத்தி பார்க்கும் பொது ராமேசுவரத்தின் அந்த அருமையான உள் பிரகாரம் கட்ட காரணமானவர் இஸ்லாமியரான சீதக்காதி என்று புரிந்து கொள்ள முடிகிறது . மிகப்பெரிய ஆச்சர்யம் இந்த மன்னரின் காலத்தில் கிருஸ்துவவளர்ச்சிக்கும் இடமளித்து இருக்கிறார் . இவர் மத நல்லிணக்கதை போற்றுபவராக இருந்து இருக்கிறார். தமிழும் தெலுங்கும் ஆட்சி மொழியாக வைத்து இருந்தவர் .இவறது வாரிசான விஜயரகுநாத சேதுபதி தனது மகன் பாஸ்கர சேதுபதியை ஆங்கில புலமையுடன் வளர்த்து இருக்கிறார். அவர் சுவாமி விவேகானந்தருக்கு அமெரிக்காவின் சர்வ மத சபையில் கலந்து கொள்ள நிதியுதவி செய்து , அவர் அமெரிக்காவில் இருந்து திரும்பி வரும் போது மிகப்பெரிய வரவேற்பை அளித்தவர் .சேதுபதி மன்னர்களின் சர்வ மத கொள்கையால் கவரபட்டே சுவாமி விவேகானந்தர் இவர்களுடன் மிகுந்த நெருக்கமான நட்புறவை கொண்டு இருந்தார் .வரலாறு மிக அருமையானதாக் நமக்கு நல்ல விசயங்களை தெளிவு படுத்துவதாக இருக்கிறது .ஆனால் அதன் முக்கிய சாராம்சங்களை அவ்வப்போது வந்த ஆட்சியாளர்கள் இருட்டடிப்பு செய்து வரலாற்றை திரித்து இருக்கிறார்கள் . இந்த வரலாறு சம்பந்தமாக ஏதாவது தகவல் தெரிந்தால் எனக்கு நண்பர்கள் கொடுத்து உதவ வேண்டுகிறேன்
Govindarajan Vijaya Padma

Saturday, June 10, 2017

இந்தியாவையே அழிக்கும் கடுகு | Campaign against genetically-modified



Genetically modified foods or GM foods, also known as genetically engineered foods or bioengineered foods, are foods produced from organisms that have had changes introduced into their DNA using the methods of genetic engineering.

People have been manipulating the genetic make-up of plants and animals for countless generations. This is referred to as traditional cross breeding and involves selecting plants and animals with the most desirable characteristics (e.g. disease resistance, high yield, good meat quality) for breeding the next generation.
 
Today’s techniques use new ways of identifying particular characteristics and transferring them between living organisms. For example, it is now possible to make a copy of a particular gene from the cells of a plant, animal or microbe, and insert the copy into the cells of another organism to give a desired characteristic.
 
Foods derived from genetically modified organisms are called ‘GM foods’. All of the GM foods approved so far are from GM plants, for example corn plants with a gene that makes them resistant to insect attack, or soybeans with a modified fatty acid content that makes the oil better suited for frying. Plants that use less water to grow have also been developed so they are more suitable for changing climatic conditions.

How are GM foods regulated?

GM foods are regulated under Standard 1.5.2 – Food produced using Gene Technology, in the Food Standards Code. The standard has two provisions – mandatory pre-market approval (including a food safety assessment) and mandatory labelling requirements. This standard ensures that only assessed and approved GM foods enter the food supply. Approved GM foods are listed in Schedule 26 of the Food Standards Code. Anyone seeking to amend the Code to include a new GM food should refer to the Application Handbook.
 
Details on FSANZ's assessments of GM foods and current approvals can be found here.
 
Not every approved GM food enters the marketplace. Many GM crops approved for use as food, are grown for animal feed and some GM approved plants don’t make it to market because of a variety of reasons, for example if they are not commercially viable. 
 
In Australia, the Office of the Gene Technology Regulator (OGTR) oversees the development and environmental release of GM organisms under the Gene Technology Act 2000. In New Zealand, similar functions are undertaken by the Environmental Protection Authority, under the Hazardous Substances and New Organisms (HSNO) Act 1996.

Tuesday, June 6, 2017

இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம்


இலக்கிய கலாநிதி வ.அ.இராசரெத்தினம் அவர்களின் 92 வது பிறந்த நாள் இன்று 05.06.2017என் தமிழ் ஆசான் தமிழ் மீதான காதலை ஏற்படுத்தி வாசிப்பு அனுபவத்தையும் பழந்தமிழ் இ...லக்கியம் உலக இலக்கியம் எல்லாவற்றையும் நான் அறிய திறவுகோலாய் இப்போதும் எனக்குள் என் நினைவுகளில் சிம்மாசனமிட்டிருக்கும் இலக்கிய ஆளுமை.
என் கையயைப் பிடித்து இந்த வழி போ என தடமிட்டு தந்த ஆசான் .
மண் மணம் செறிந்த எழுத்துக்களைத் தந்து ஈழத்து இலக்கியத்துக்கு செழுமை சேர்த்த படைப்பாளி.
சிறுகதை
நாவல்
நாடகம்
உரைச்சித்திரம்
கவிதை
உரை
என எல்லாம் கைவரப் பெற்ற புலமையாளன் .திருகோணமலை மாவட்டத்தில் இலக்கிய கலாநிதி பட்டம் பெற்ற ஒரே ஒரு படைப்பாளியாய் கொட்டியாரத்துக்கு பெருமை சேர்த்த இலக்கிய நாயகன்.
இவர் எழுத்துக்கள் பெரும்பாலானவற்றில் கொட்டியாரத்தின் அழகை தித்திக்க தித்திக்க தேன் சுவை சொட்ட எடுத்துச் சொல்லியிருப்பார்.மாவலியாள் இவர் எழுத்துக்களில் கரை புரண்டோடுவாள் கங்கையின் அலயடிப்பும் கொட்டியாரக் குடாக் கடலின் ஆர்ப்பரிப்பும் இவர் எழுத்தாணியில் நடமிடும்.
  1. இவரது தோணி சிறுகதை உலக மொழிகளில் மொழி பெயர்க்கப் பட்டது.
    ''சந்தானாள் புரவியில்'' மூதூரின் பழைமையயயயும் கொட்டியாரக் குடாக் கடலின் அழகையும் பல சிறு கதைகளில் மூதூரின் கிராமங்கள் பலவற்றின் சிறப்புக்களையும் படம் பிடித்திருப்பார்.
  2. ''ஒரு வெண்மணற் கிராமம் காத்துக் கிடக்கிறது'' எனும் நாவலில் ஆலங்கேணி எனும் அழகு தமிழ் கிராமத்தை அதன் பண்பாட்டை நம்முன் கொண்டு வந்து நிறுத்தியவர்.
  3. ''கிரவுஞ்சப் பறவைகள்'' எனும் வரலாற்றுப் புதினத்தின் மூலம் வரலாற்று நாவல் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை நமக்கு பாடமாக விட்டுச் சென்றுள்ளார்
  4. சேனையூர் மத்திய கல்லூரியில் சிறப்புறு தமிழ் ஆசானாய் பிரதிஅதிபராய் கடமையாற்றி எம் கல்லூரிக்கு பெருமை சேர்த்தவர்.

Wednesday, May 17, 2017

18-Yr-Old Rifath Shaarook From Tamil Nadu Makes India Proud, Builds World’s Smallest & Lightest Satellite

Eight months of hard work, a team of seven youngsters from Tamil Nadu, a contest involving designs and models from 57 countries, and a winning model of a satellite that is only 64 grams in weight: seven Indian students have made the country proud by designing the world’s lightest and smallest satellite.
The Logical Indian spoke to the team’s leader, Rifath Shaarook. Rifath is only 18 years old and extremely passionate about space. He grew up in a science-crazy household, with his small room in Pallapatti, Karur, Tamil Nadu serving as his first research station.
“My dad, Mohamed Farook, was a scientist who did independent research in astronomy,” Rifath said. “He was an EC Engineer. He passed away in 2008 when I was 9. We always talked about space and astronomy in my childhood. I used to tell him that, one day, I would launch a satellite of my own. Now that’s dream is coming true but, sadly, my dad is no more with me.”

Shaarook built the 65gram (0.14lb) device as an exercise in demonstrating how well carbon fiber performs when 3D printed.

His invention is now set for a sub-orbital, four-hour mission in outer space.

During this short mission, the tiny satellite will be fully operational for 12 minutes in space’s micro-gravity.

“We designed it completely from scratch. It will have a new kind of on-board computer and eight indigenous built-in sensors to measure acceleration, rotation and the magnetosphere of the earth,” he told Business Standard.

Shaarook named the little tech-wonder after India’s science-loving former President Abdul Kalam. He calls it KalamSat.

Kalam spearheaded many initiatives and paved the way for the country’s aeronautical scientists to make great advancements in space exploration for India.

Shaarok’s background is a humble one. He comes from a small town in Tamil Nadu and is currently working as a lead scientist for Space Kidz India.

The program encourages and promotes young children and teenagers in India to study science and education.

Shaarok also has a history of invention. For example, three years prior, he built a variation of a helium weather balloon as part of a nationwide young scientist’s competition. 

கலைவேந்தன் ம.தைரியநாதன் அவா்கள் (16.05.2017) காலமானார்

ஈழத்து இசைநாடக வரலாற்றில் தனிமுத்திரை பதித்து அறுபது ஆண்டுகளுக்கும் மேலாக முழுநேர இசைநாடகக் கலைஞனாக வாழ்ந்து தன்னையும் தனது குடும்பத்தையும் நாடகக் கலைக்கென்றே அர்ப்பணித்த மாபெரும் இசைநாடக கலைஞன்.
.
இனிமையான கம்பீரக் குரலும் அட்சரம் பிசகாத நடிப்பும் சுருதி தாளம் தப்பாத இசைத்திறனும் அரங்கைத் தன்வசப்படுத்தி விடும் ஆளுமையும் கொண்டதொரு மரபு வழிக் கலைஞன் ஈ
...ழத்து இசைநாடகத் துறையின் முது கலைஞனாகவும் நடிகமணி வைரமுத்துவின் வழி வந்த துறைதோய்ந்த பட்டறிவாளனாகவும் ஈழத்து இசைநாடகக் கலையின் அடையாளமாகவும் வாழ்ந்தவா். தமிழா்களின் தேசியக் கலைச் சொத்தாகத் திகழ்ந்தவா்.

ஆற்றுகையாளனாக மட்டுமல்லாமல் இசைநாடகத்தை அற்புதமாகக் கற்பிக்கும் பேராற்றல் கொண்ட ஆசானாகவும் நெறியாளனாகவும் நின்று நிலைத்தவா்.
முழுமை கண்ட இசைநாடகக் கலைஞன் ஏனெனில் நடிகமணி வைரமுத்து அவா்களின் காலத்தில் அவரோடு நூற்றுக்கணக்கான மேடைகள் கண்ட கலைஞராக விளங்கியவர்.

நகர்ப்புற அரங்குகளில் மட்டும் நாடகம் நிகழ்த்திப் பெயா் பெற்ற கலைஞன் அல்ல தைரியநாதன். ஈழத்தின் கிராமங்கள் அனைத்திற்கும் சென்று நாடகம் நடித்தஇ ஆயிரக் கணக்கான மேடைகள் கண்ட அதி அற்புதக் கலைஞனாக வரலாறு படைத்தவா் . நாடக மேதை நடிகமணி வி.வி.வைரமுத்துவின் மாணவனாக தன் கலைப் பணியைத் தொடங்கிய தை ரியநாதன் அவர்கள் திருமறைக் கலாமன்றத்தின் ஊடாக நாடக பணியாற்றினார். .1997 , 1998 காலப்பகுதிகளில் திருமறை கலாமன்றத்தின் 'வடலிக் கூத்தர்' கலைக்குழுவில் மிக முக்கிய வகிபாகம் ஏற்று எமது பாரம்பரியக் கலைகளை ஐரோப்பிய நாடுகள் வரை காவிவந்து கடத்துகை செய்த ஒப்பற்ற கலைஞர் இவர்.

Friday, May 5, 2017

இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும்

 – தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்:-
பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பிய காலத்தில் இலங்கையில் உருவான முதலாவது பெண் பொறியியிலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரம்.
அதி வணக்கத்திற்குரிய வல்பொல ராஹூல தேரர் பல ஆண்டுகளுக்கு முன்னதாக இலங்கையில் பௌத்த மத்திய நிலையமொன்றை அமைப்பதற்கு ஆயத்தமானார்.
இந்த கட்டடம் அமைக்கப்படும் மண் மற்றும் கட்டட நிர்மான தொழில்நுட்பம் தொடர்பில், இளம் பெண் பொறியியலாளரிடம் இது குறித்து ஆலோசனை வழங்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.
‘நாயக்கத் தேரரே இந்த இடத்தில் மரத்திலான பயில்கள் கீழ் இறக்காமல் கட்டிட நிர்மானம் செய்யக் கூடாது. அது கட்டடத்தின் ஆயுட்காலத்தை பாதிக்கும்’ என தனக்கு கிடைக்கப் பெற்ற மண் மாதிரியை பரிசோனை செய்த பெண் பொறியியலாளர் கூறினார்.
‘அத்தனை பெரிய செலவினை செய்ய முடியாது. எனினும் இந்த கட்டடத்தை நிர்மானிக்க வேண்டும் அல்லவா’ என ராஹூல தேரர் கூறினார். இந்த சம்பாசனை நடைபெற்ற போது ராஹூல தேரரின் உறவினரான சித்தாலபே நிறுவனத்தின் தலைவர் விக்டர் ஹெட்டிகொடவும் பிரசன்னமாகியிருந்தார்.
‘எனினும் மற்றுமொரு முறை காணப்படுகின்றது எனினும் இந்த முறை இலங்கையில் இதுவரையில் நடைமுறைப்படுத்தப்படவில்லை’ என அந்த இளம் பெண் பொறியியலாளர், நாயக்க தேரரிடம் கூறினார்.
‘அம் சொல்லுங்கள் பார்க்கலாம் என்னவென்று’ என விக்டர் ஹெட்டிகொட இந்த சம்பாசனையில் இணைந்து கொண்டு கூறினார்.
‘ ஒட்டு மொத்த கட்டடத்தின் அத்திவாரத்தையும் ஒன்றாக நிர்மானிக்காது பகுதி அளவிலான அத்திவாரங்களின் ஊடாக நிர்மானிக்க முடியும். இவ்வாறு செய்தால் ஓர் இடத்தில் தாழிறங்கினாலும் ஒட்டு மொத்த கட்டடத்தையும் பாதிக்காது, புனர்நிர்மானப் பணிகளும் இலகுவில் செய்ய முடியும் என தனது புதிய தொழில்நுட்பத்தை பெண் பொறியியியலாளர் விபரித்தார்.
அதி வணக்கத்திற்குரிய ராஹூல தேரர் இந்த புதிய தொழில்நுட்பத்தின் ஊடாக கட்டடத்தை நிர்மானிக்க இணங்கியிருந்தார். சகதி மிக்க மண்ணில் கட்டிட அத்திவாரத்தை போட்டால் பாரியளவில் செலவாகும். எனினும் இளம் பெண் பொறியியலாளரின் யோசனைக்கு அமைய நிர்மானம் செய்ததனால் பாரியளவு செலவு குறைக்கப்பட்டது.
எனினும் அந்த பெண் பொறியியலாளர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இணைந்த போது பெண்களுக்கு என்ன என்ஜினியரிங் என கேள்வி எழுப்பியிருந்தனர்.
1960களில் அவர் பல்கலைக்கழகத்தில் இணைந்து கொள்ளும் போது பெண்கள் மருத்துவம், ஆசிரியம் மற்றும் தாதியர் ஆகிய உத்தியோகங்களிலேயே அதிகளவில் ஈடுபட்டனர்.
எனினும், அவர் இலங்கை பெண்களின் வரலாற்றில் புதிய ஓர் அத்தியாயத்தை ஆரம்பித்து முதல் பெண் பொறியியலாளராக உருவாகியிருந்தார். அவரது பெயர் பிரமிளா சிவபிரகாசிப்பிள்ளை சிவசேகரம் ஆவார்.
‘எனது தந்தை கொழும்பு துறைமுகத்தில் பொறியியலாளராக கடமையாற்றியிருந்தார். இரண்டாம் உலக யுத்தம் ஆரம்பித்த போது எனது குடும்பத்தினர் மீளவும் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டனர்’ இலங்கையின் முதல் பெண் பொறியியிலாளரான பிரமிளா தான் பிறக்கும் முன்னதாகவே பெற்றோர் யாழ்ப்பாணத்திற்கு சென்றுவிட்டதாகக் கூறுகின்றார்.
ரீ. சிவபிரகாசபிள்ளை, மனைவி லீலாவதி, பிள்ளைகளான பூமன் மற்றும் பிரபான் ஆகியோருடன் மனைவியின் சகோதரான மாவட்ட நீதவான் சீ.குமாரசுவாமியின் வீட்டில் தங்கியிருந்தனர். இந்த வீடு யாழ்ப்பாணம் கோட்டைக்கு உள்ளே அமைந்திருந்தது. பிரமிளா அங்கேதான் பிறக்கின்றார். 1943ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ம் திகதி பிரமிளா பிறந்தார்.
1950ம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடம் ஆரம்பிக்கப்படுகின்றது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக நியமிக்கப்படும் ரீ.சிவபிரகாசபிள்ளை தனது மனைவி பிள்ளைகளுடன் கொழும்பில் மீளவும் குடியேறுகின்றார்.
‘தரம் ஒன்று முதல் எச்.எஸ்.சீ வரையில் நான் கொழும்பு மகளிர் கல்லூரியில் கல்வி கற்றேன்’. பாடசாலை காலத்தில் பிரமிளா மிகவும் சிறந்த மாணவியாக திகழ்ந்தார்.
‘விளையாட்டில்; எனக்கு அதிக நாட்டம் இருக்கவில்லை. எனினும் இசை மற்றும் நடனம் என்பனவற்றை நான் மூன்று வயதிலிருந்தே கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன்’ என அவர் கூறுகின்றார்.
‘திருமதி ஞானபிரகாசத்திடம் நான் பரதம் மற்றும் மனிப்பூரி ஆகிய நடனங்களை கற்றுக்கொண்டேன். அந்த இடத்தில் திருமதி பலிஹக்காரவும் கற்பித்தார். திருமதி சிவபிரகாசம் சில நாட்களுக்கு இந்தியாவிற்கு சென்றிருந்தார். அவருக்கு பதிலீடாக கோவிந்த ராஜபிள்ளை என்பவர் நடனம் கற்றுக் கொடுத்தார். அவர் மதுவிற்கு அடிமையாகியிருந்த காரணத்தினால் ஒழுங்காக பாடம் எடுக்கவில்லை. இதனால் பரதம் கற்றுக் கொள்வதனை கைவிட நேரிட்டது. எனினும் பல்கலைக்கழகம் செல்லும் வரையில் மனிப்பூரி கற்றுக் கொண்டேன்.’ என இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் தனது அனுபவங்களை பகிர்ந்து கொள்கின்றார்.
படிக்கும் போது ஆண்டு நிறைவு நிகழ்வின் போது சில நடனங்களை ஆடியிருந்தார். ஓர் தடவை நடைபெற்ற கூட்டு நடன நிகழ்வில் பிரமிளா கிருஸ்ணன் வேடமிட்டிருந்தார். பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுக் கொண்டு சில காலங்களில் பேராதனைப் பல்கலைக்கழக பொறியியல் பிரிவின் விரிவுரையாளராக கடமையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தது.
1959ம் அண்டில் நான் எச்.எஸ்.சீ பரீட்சைக்கு தோற்றியிருந்தேன். அந்த ஆண்டில் கொழும்பு மகளிர் கல்லூரியில் இருந்து இரண்டு பேர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்லத் தகுதி பெற்றுக்கொண்டனர். அந்த இருவரில் நானும் ஒருவராவேன். மற்றையவர் லெலானி சுமனதாச. அவர் வீட்டு நிர்மான கற்கை நெறியை பயின்றார். பிரமிளா இவ்வாறே பல்கலைக்கழக அனுமதியை பெற்றுக் கொண்டார்.
1960ம் ஆண்டில் பொறியியல் பீடத்தில் அவர் இணைந்து கொண்ட போது பல்வேறு எதிர்ப்புக்கள் கிளம்பியிருந்தன. அவரது பெற்றோர் கூட வேறும் ஒர் துறையை தெரிவு செய்யுமாறு கோரியிருந்தனர்.
‘பொறியியல் கற்கை நெறியில் இரும்பு வேலைகள், மரத் தளபாட பாஸ்மார், வெல்டிங், பொருத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியிருந்தது. பெண் பிள்ளையொன்று எவ்வாறு இதனை செய்வது என சிலர் என்னிடம் கேள்வி எழுப்பியிருந்தனர்.’
எனினும் தன்னை தைரியமிழக்கச் செய்யும் மக்களின் கருத்துக்கைள ஒரு சதத்திற்கேனும் பிரமிளா கண்டுகொள்ளவில்லை.
பல்கலைக்கழக நிர்வாகத்தினரும் பெண் பிள்ளையொன்று பொறியியல் பீடத்தில் இணைந்து கொள்வதில்லை எனக் கூறி அதனை விரும்பவில்லை என அவர் கூறுகின்றார்.
பிரமிளவிற்கு முன்னதாக பொறியியல் பீடத்தில் இணைந்து கொள்வதற்காக இரண்டு பெண்கள் விண்ணப்பம் செய்த போதிலும், இருவரிடமும் போதியளவு புள்ளிகள் கிடையாது எனக் கூறி பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்திருந்தது என பிரமிளா கூறுகின்றார்.
‘பெண் ஒருவர் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி தொழில் ஒன்றைப் பெற்றுக் கொண்டு திருமண பந்தத்தில் இணைந்து கொண்டதன் பின்னர் தொழிலை விட்டு விடுவார்கள் என பல்கலைக்கழகம் நிர்வாகம் கூறியது. இதனால் ஆண்களுக்கான தொழில் வாய்ப்பு முடக்கப்படுகின்றது என கூறியது. பெண் ஒருவர் பொறியியலாளர் பதவியை பெற்றுக் கொள்வதனை ஆண்கள் எவ்வாறு எதிர்த்தார்கள் என்பதனை பிரமிளா விபரிக்கின்றார். எனினும் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகி தொழில் பெற்றுக் கொhண்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் பிள்ளைகள் பிறந்ததன் பின்னரும் 95 விதமானவர்கள் தொழில்களில் ஈடுபடுகின்றார்கள்’
அந்தக் காலத்தில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொறிறியல் பீடம் தகரத்தினால் அமைக்கப்பட்ட கொட்டகை ஒன்றிலேயே காணப்பட்டது. இதன் காரணமாக பொறியியல் பீடம் அந்தக் காலத்தில் தகரப் பெகல்டீ என அழைக்கப்பட்டது.
பல்வேறு தடைகளைத் தாண்டி பிரமிளா 1960ம் ஆண்டில் தகரப் பீடத்தில் இணைந்து கொண்டார்.
‘அந்தக் காலத்தில் பகிடிவதை இவ்வளவு கடுமையாக இருக்கவில்லை. மிகவும் எளிமையான நகைச்சுவைகள் காணப்பட்டன, எனக்கு எவரும் பகிடி வதை செய்யவில்லை. எனினும் எல்லோருக்கும் கூக்குரல் எழுப்பப்பட்டது.’ என அந்தக் கால பகிடிவதை பற்றி பிளமிளா விபரிக்கின்றார்.
அந்தக் காலத்தில் மருத்துவம் பொறியியல் பீடங்களின் மாணவ மாணவியர் முதலாம் ஆண்டில் ஒரே வகுப்பிலேயே அப்போது கல்வி பயின்றிருந்தனர்.
எச்.எஸ்.சீயில் கற்பிக்கப்பட்ட பாடங்களே மீளவும் கற்பிக்கப்பட்டது. இதனால் முதலாம் ஆண்டு மிகவும் எளிமையாக கடந்து சென்றது. இரண்டாம் ஆண்டிலேயே மருத்துவ மற்றும் பொறிறியல் பீடங்கள் தனித்தனியாக பிரிகின்றன.
பல்கலைக்கழகம் சென்ற போது நான் சேலையே அணிந்தேன். அது எனது தந்தையின் சட்டமாக அமைந்ததிருந்தது. அது மட்டுமல்ல தலை வாரிச் செல்ல வேண்டும் என தந்தை உத்தரவிட்டிருந்தார். பொறியியல் பீடத்திற்கு சென்ற காரணத்தினால் இந்து கொள்கைகளை விட்டுக் கொடுக்க பிரமிளாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
பொறியியல் மாணவர்கள் அந்தக் காலத்தில் உருக்கு வேலைகள், மர வேலைகள், வேல்டிங் வேலைகள் போன்றவற்றை நடைமுறை ரீதியாக கற்றுக்கொண்டனர். யுவதி என்ற காரணத்தினால் அந்தப் பணிகளை மேற்கொள்வதிலிருந்து பிரமிளாவினால் அதனை விட்டு விலகியிருக்க முடியவில்லை. ஏனைய ஆண் மாணவர்களைப் போன்றே பாரிய இரும்பு தகடுகளை வெட்டி வீசினார். வேல்டிங் செய்தார்.
அனைத்து நடைமுறை பயிற்சிகளின் போதும் ஆண் மாணவர்களுக்கு சிறு சிறு உதவிகள் செய்யப்பட்டன, எனினும் எனக்கு அவ்வாறு உதவி வழங்கப்படவில்லை. மர வேலை குறித்து போதிக்கும் விரிவுரையாளர் மொரட்டுவ பகுதியில் பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் தளபாட வேலைகள் செய்வார்கள் என கூறியிருந்தார். என தனியாகவே நடைமுறைப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டிருந்தார். இந்த அடக்குமுறைகள் அவருக்கு நன்மையையே ஏற்படுத்தியிருந்தது. நடைமுறைப் பயிற்சிகளை உரிய முறையில் மேற்கொண்ட காரணத்தினால் பின்னொரு காலத்தில் பணியில் ஈடுபட்ட போது எந்தவொரு தொழிலாளியும் அவரை ஏமாற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. அந்தக் காலத்தில் உருவாக்கிய மரத்திலான மின்குமிழ் தாங்கியொன்றும் இன்னமும் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் கற்றுக் கொண்ட பாடங்களை நினைவில் நிறுத்திக் கொள்ள இந்த மின்குமிழ் தாங்கியை பாதுகாப்பாக வைத்திருப்பதாக பிரமிளா தெரிவித்துள்ளார்.
1964ம் ஆண்டில் இலங்கையின் முதல் பெண் பொறியியலாளராக பிரமிளா சிவபிரகாசபிள்ளை பட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
‘நான்தான் முதல் பெண் பொறியியலாளராவேன், எனக்கு பின்னர் 1966ம் ஆண்டில் சுசி முனசிங்க (சுனில் முனசிங்கவின் மனைவி) மின் பொறிறியல் பயிற்சி நெறியை தெரிவு செய்தார். எனக்கு பத்து ஆண்டுகளின் பின்னர் அதாவது 1970ம் அண்டில் இந்திரா அருள்பிரகாசம் மெக்கானிக்கல் பொறியியல் பட்ட கற்கை நெறியை தெரிந்திருந்தார். இந்திரா சமரசேகர தற்போது கனடாவின் அல்பர்ட்டாவின் பல்கலைக்கழகமொன்றின் துணை வேந்தராக கடமையாற்றி வருகின்றார் என பிரமிளா கடந்த காலத்தையும் தற்காலத்தையும் ஒப்பீடு செய்துள்ளார்.
பட்டக் கற்கை நெறியை பூர்த்தி செய்ததன் பின்னர் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளர் பதவியொன்று வழங்கப்டப்டது. இந்தக் காலத்தில் கொழும்பில் காணப்பட்ட பொறியியல் பீடம் பேராதனைக்கு மாற்றப்பட்டது.
பேராதனை பல்கலைக்கழகத்தில் அநேகமான இயந்திரங்களை நிறுவுவதற்கு நாம் மிகுந்த சிரமப்பட்டோம்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஆலோசகராக கடமையாற்றிய பிரமிளா சிறிது காலத்தின் பின்னர் அரசாங்கத் திணைக்களமொன்றில் பொறியியலாளர் பதவி வழங்கப்பட்டது.
எனினும், சில மாதங்களின் பின்னர் இங்கிலாந்தில் பட்டப்பின் கற்கை நெறி ஒன்றை கற்க அரசாங்கம் புலமைப் பரிசில் வழங்கியருந்தது. இதனால் எனக்கு களத்தில் பணிகள் வழங்கப்படவில்லை. சில மாதங்கள் காரியாலயப் பணிகளை மேற்கொண்டிருந்தேன்.
1965ம் ஆண்டு பிரமிளா பட்ட பின் கற்கை நெறி ஒன்றி;ற்காக பிரித்தானியா சென்றார். அவருடன் ஹர்சா சிறிசேன என்ற மற்றுமொரு யுவதியும் பட்ட பின் கற்கை நெறிக்காக பிரிட்டன் சென்றிருந்தார். ஹர்சா கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலும், பிரமிளா ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திலும் கற்கை நெறிகளை ஆரம்பித்தனர்.
‘நான் சமர்வில் கல்லூரிக்கு சென்றிருந்தேன் அங்கு பெண்கள் மட்டுமெ கற்றுக்கொண்டனர்.’ இந்தக் காலத்தில் சுனேத்திரா பண்டாரநாயக்கவும் கல்லூரியில் பட்டக் கற்கை நெறி ஒன்றை கற்று வந்தார்.’
பிரமிளா சிவபிரகாசபிள்ளை, சிவசேகரம் என்ற பெயர் மாற்றம் பெறும் நிகழ்வு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றக் காலத்தில் இடம்பெற்றது. 1968ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் திகதி பிரமிளா திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார்.
பிரமிளாவின் கணவர் சிவானந்தம் சிவசேகரம் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தில் கல்வி பயின்றுவந்தார். கல்வி கற்கும் காலத்தில் பிரமிளா குறித்த ஓர் ஈர்ப்பு சிவசேகரத்திற்கு ஏற்பட்டது. பேராதனை பல்கலைக்கழகத்தில் வைத்து தனது காதலை வெளிப்படுத்தினார். இந்த சந்தர்ப்பத்தில் இருவரும் பேராதனை பல்கலைக்கழக விரிவுரையாளர்களாக கடமையாற்றியிருந்தனர்.
‘என்னை பிடிக்குமா என நான் பிரமிளாவிடம் கேட்டேன்’ என பேராசிரியர் சிவசேகரம் தெரிவித்தார்.
என்ன சொன்னார் பிரமிளா?முடியாது என்றார் பிரமிளா என்றார் சிவசேகரகம். ‘இல்லை அப்பாவிடம் கேட்குமாறு நான் கூறினேன்’ என 72 வயதான பிரமிளா வெட்கத்துடன் தெரிவித்தார்.
அவர்கள் இருவரினதும் காதலின் பிரதிபலனை தற்போது பிரித்தானியாவில் காண முடிகின்றது. அவர்களது ஒரே மகன் மணிமாறன் சிவசேகரம் ஆவார். இரண்டு பிள்ளைகளின் தந்தையான மணிமாறன் ஐக்கிய இராச்சியத்தில் ஓர் நிர்வாக அதிகாரியாக கடமையாற்றுகின்றார்.
ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற காலத்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சர்வதேச மகளிர் பொறியியாளர் மாநாடு ஒன்றில் உரையாற்ற பிரமிளாவிற்கு சந்தர்ப்பம் கிட்டியது. எதிர்வரும் நூற்றாண்டில் பெண் பொறியியலாளர்களின் பணி என்ற தொனிப் பொருளில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. இந்த மாநாட்டின் ஓர் அமர்வின் தலைவியாகவும் பிரமிளா கடயைமாற்றியிருந்தார்.
பட்ட பின் கற்கை நெறியை பூர்த்தி செய்த பிரமிளா மீளவும் இலங்கை அரச சேவையில் இணைந்து கொள்கின்றார். 1971ம் ஆண்டு அரச கட்டிடப் பொருள் கூட்டுத்தாபனத்தின் பொறியியலாளராக நியமனம் பெற்றுக்கொண்டார். இந்த கூட்டுத்தாபனத்தின் முதல் பொறியியலாளராக கடமையாற்றினார்.
பெண்களினால் முடியாது என கூறப்பட்ட தொழிலை நான் திறம்பட செய்தேன். பணியாற்றும் போதே நான் சில விடயங்களை பாஸ்மாரிடம் கற்றுக்கொண்டேன். எனது காலத்தில் மாத்தளை வைத்தியசாலைக்கு ஒர் களஞ்சியசாலை அமைக்கப்பட்டது. பல மாடிகளைக் கொண்ட ரெலிகொம் நிறுவனத்தின் பல கட்டடங்கள் நிர்மானிக்கப்பட்டன.
முதல் நியமனமாக கட்டட திணைக்களத்தின் கண்டி காரியாலயத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவத்தை பிரமிளா பகிர்ந்து கொள்கின்றார். இந்த அனுபவம் மறக்க முடியாதது என்கின்றார்.
‘ஒரு நாள் கண்டி அரசாங்க அதிபர் என்னை அழைத்து தமது அலுவலக மலசல கூடங்கள் புனரமைக்கப்பட உள்ளதாகவும் அதனை சோதனையிடுமாறும் கோரியிருந்தார். இந்த விடயம் குறித்து மாவட்ட பிரதம பொறியியலாளருக்கு அறிவித்தேன். பீ.எச்டி பட்டம் பெற்ற ஒருவர் அவ்வாறு பணியாற்ற வேண்டியதில்லை என பிரதம பொறியியலாளர் கூறினார்.’ பெண் என்ற காரணத்தினால் எனக்கு இழைக்கப்பட்ட ஓர் அநீதியாகவே நான் இதனைக் கருதுகின்றேன்.
மறைந்த முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச உள்ளுராட்சி மன்ற மற்றும் வீடமைப்பு அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் நான் கொழும்பு கட்டட திணைக்களத்தின் பொறியியலாளராக கடமையாற்றியிருந்தேன்.
‘பிரேமதாச அவர்கள் ஓர் நாள், தான் கல்வி கற்ற வாழைத்தோட்ட பாடசாலையை இரண்டு மாடிகளாக தரம் உயர்த்துமாறு’ கோரியிருந்தார்.
இந்தப் பாடசாலை அமைந்துள்ள மண்ணை பரிசோதனை செய்த போது நிலக்கீழ் சேற்று மண் காணப்பட்டமை தெரியவந்தது. அவ்வாறான ஓர் மண்ணில் மாடிகளைக் கொண்ட கட்டடம் அமைப்பது நடைமுறைச் சாத்தியமற்றது.
‘பிரேமதாசவிடம் சென்று கட்டடம் அமைக்க முடியாது என கூறுவதற்கு பிரதான பொறியியலாளர்கள் அஞ்சினார்கள். பெண் ஆகிய என்னிடம் அந்தப் பணியை ஒப்படைத்தனர்.’
பிரமிளா, பிரேமதாசவிடம் சென்று நிலைமையை விளக்கினார். இந்த விளக்கத்தை பிரேமதாச ஏற்றுக்கொண்டார். ஆண் பொறியியலாளர்கள் அஞ்சிய பிரச்சினைக்கு பிரமிளா இலகுவில் தீர்வு வழங்கினார்.
அவர் கட்டட திணைக்களத்தின் பிரதம பொறியியலாளராக கடமையாற்றிய காலத்தில் இதேவிதமான ஓர் அனுபவத்தை எதிர்நோக்க நேரிட்டது.
பாரிய கட்டடம் அமைக்கும் போது இரவு வேளையில் அத்திவாரத்தை சென்று பார்வையிட வேண்டும், அந்தப் பணி ஓர் கனிஸ்ட பொறியியலாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்தப் பணியை மேற்கொள்கின்றீர்களாக என பிரமிளா குறித்த கனிஸ்ட பொறியியலாளரிடம் கேட்டார்.
இது உங்கள் பணமில்லையே என கனிஸ்ட பொறியியலாளர் பதிலளித்திருந்தார். அப்போது நான் கூறினேன் இது மக்களின் பணமாகும், எனவே அது எனதும் பணமாகும் எனக் கூறினேன் என பிரமிளா தெரிவித்துள்ளார்.பெண் என்ற காரணத்தினால் இந்த நிலையை எதிர்நோக்க நேரிட்டது என அவர் கருதுகின்றார்.
1978ம் ஆண்டில் கட்டடத் திணைக்களத்தின் பிரதம கட்டுமான பொறியியலாளராக நியமிக்கப்பட்டார். பெண் ஒருவர் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் சந்தர்ப்பம் இதுவாகும்.
தேசிய நூலகம், காவல்துறை தலைமையகம், மாளிகாவத்தை அரச கட்டடங்கள் சில என்பன பிரமிளாவின் தலைiமையில் நிர்மானிக்கப்பட்டவையாகும்.
கொரிய நிறுவனம் செத்சிரியபா கட்டடத்தை அமைத்த போதும், ஜப்பான் இசுறுபாயவை அமைத்த போதும் அவற்றை கண்காணித்த பிரதம பொறியியலாளராக பிரமிளா செயற்பட்டிருந்தார்.
இசுறுபாய நிர்மானிக்கப்பட்ட போது அந்த மண்ணை தெற்காசியாவில் புகழ்பூத்த திரு.துரைராஜா பரிசோதனையிட்டிருந்தார். இந்தப் பகுதியில் கபுக் மண் காணப்படுவதாகவும் இதனால் உறுதியான கட்டடத்தை அமைக்க முடியும் எனவும் அவர் கூறியிருந்தார், இந்த விடயம் கொரிய பொறியியலாளர்களுக்கு புரியவில்லை என பிரமிளா கூறியுள்ளார்.
1976ம் ஆண்டு முதல் 1979ம் ஆண்டு வரையில் இலங்கைப் பொறியியல் கூட்டுத்தாபனத்தினால் வெளியிடப்படும் தி இன்ஜினியர் என்ற சஞ்சிகையின் ஆசிரியராக கடமையாற்றியிருந்தார். 1906 முதல் 2006ம் ஆண்டு வரையிலான காலப் பகுதியை மையமாகக் கொண்டு 2006ம் ஆண்டில் இலங்கை பெறியியலாளர் வரலாறு என்ற பெறுமதி மிக்க நூல் ஒன்றை உருவாக்கியிருந்தார். 1997ம் ஆண்டு முதல் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளராக கடமையாற்றிய பிரமிளா 2007ம் ஆண்டு ஓய்வு பெற்றுக்கொண்டார்.
இலங்கையின் சிலுமின பத்திரிகையில் வந்த இலங்கையின் முதல் பெண் பொறியியலாளர் பிரமிளா சிவபிரகாசப்பிள்ளை சிவசேகரமும் அனுபவப்பகிர்வும் என்ற இந்த நேர்காணலை தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள் வழங்குகிறது. இதனை மீள் பதிவு செய்பவர்கள் மொழிபெயர்ப்பின் தமிழ் மூலமான குளோபல் தமிழ்ச் செய்திகளை குறிப்பிட்டு மீள்பதிவு செய்யலாம்.

Saturday, February 25, 2017

The world's first solar panel-paved road has opened in a town in northern France.

The goal? To power the entire village.
IT MAY be situated in a small French village that doesn’t see that much sun, but the Normandy town of Tourouvre has opened the world’s first solar roadway, bringing the hugely popular idea into reality.
The notion of paving roadways with solar panels to meet our energy needs is very appealing, but for the longest time, it has remained largely a theoretical one.
The newly launched French roadway is just one kilometer long but that works out to be 2800 square meters of photovoltaic cells — enough, theoretically, to power the village’s street lights.
The resin-coated solar panels were hooked up to the local power grid just in time for Christmas as France’s Environment Minister Segolene Royal looked on last week.
“This new use of solar energy takes advantage of large swathes of road infrastructure already in use ... to produce electricity without taking up new real estate,” she said in a statement.
The one-kilometer road is set to pave the way for to construction of much bigger solar highways in the future.
The minister announced a four-year “plan for the national deployment of solar highways” with initial projects in western Brittany and southern Marseille.
The idea, which is also under exploration in Germany, the Netherlands and the United States, is that roadways are occupied by cars only around 20 percent of the time, providing vast expanses of the surface to soak up the sun’s rays.
The simple idea bestowed a secondary — and equally important — purpose for roads by allowing them to double as an energy source.
But critics are still waiting to see how practical and cost-effective solar roads can be.