Search This Blog

Showing posts with label Mystery. Show all posts
Showing posts with label Mystery. Show all posts

Sunday, January 17, 2016

புரியாத புதிர் கல் வட்டங்கள்

இந்த உலகத்தில் புதைந்து கிடக்கும் பல புதிர்களுக்கு இன்று வரை பதில்களே எட்டப்படவில்லை! நாம் வாழும் பூமியில், நம் முன்னோர் ஆக்கிய ஒவ்வொன்றும் ஏதோ ஒரு காரணத்துக்காக உருவாக்கப்பட்டவை, இன்று நமக்கு எதற்காக அவை ஆக்கப்பட்டது என்ற குழப்பங்கள் தீர்ந்தபாடில்லை. கால காலமாய் ஆராய்சி செய்தி ஆராய்சியாளர்கள் சிலவற்றிற்கு பதில் தேடி தந்திருக்கிறார்கள். அப்படி புரியாத புதிர்களில் ஒன்று கல் வட்டங்கள். சில ஊர்களில் ஊருக்கு ஒதுக்குப்புறத்தில் திட்டுகளில் வட்ட வட்டமாக கற்களைக் கொண்டு வட்டம் அமைத்திருக்கிறார்கள். இதற்கு கல் வட்டம் என்று பெயர்.
இது போன்ற கல் வட்டங்கள் உலகத்தில் பல இடங்களில் உள்ளன. இந்த கல்வட்டம் என்பது ஒரு பெருங்கற்கால ஈமச்சின்னம் என்று ஆய்வு செய்தவர்கள் கூறுகிறார்கள். இறந்தவர்களின் உடல் பகுதிகளை வைத்து அல்லது அவர்களின் நினைவாக எடுக்கப்படும் ஈமச்சின்னங்களின் மேற்பரப்பில், கற்பாறைகளைக் கொண்டு ஒரு வட்டம் உருவாக்கப்படுகிறது. இது தரையின் மேற்பரப்பில் காணப்படும். இப்படி அமைக்கப்படும் கல்வட்டங்கள் ஈமச்சின்னங்களைப் பாதுகாக்கவும், அடையாளப்படுத்தும் அமைப்பாகவும் இது இருப்பதாக கருதப்படுகிறது. இத்தகைய கல்வட்டங்கள் அமைப்பதினால் பிற்காலத்தில் இறந்தவர்களைப் புதைப்பவர்கள், இதைத் தோண்டுவதில்லை என்று கருதப்படுகிறது. பெருங்கற்காலக் கல்வட்டங்களின் புதைந்த பகுதியில் தாழிகள், குழிகள், கற்பதுக்கைகள் போன்றவை காணப்படுகின்றன.
இது போது கல் வட்டங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் சில இடங்களிலும் மேலும், தமிழகத்தில், கற்கள் கிடைக்காத ஆற்றுப் படுகைகள் தவிர, பிற பகுதிகளில் ஆயிரக்கணக்காண எண்ணிக்கையில் இவை காணப்படுகின்றன. குறிப்பாக சானூர், சித்தன்னவாசல் கொடுமணல், குப்பால் நத்தம்,ஆனைக்கரை ஆகிய இடங்களில் காணப்படுகின்றன.
இது போல கல்வட்டங்கள் உலக அளவில் மிக பிரமாண்டமான கல்வட்டங்களும் காணப்படுகின்றன. அவற்றில் சில சில்பரி மலை மற்றும்ஆவ்பரி கல் வட்டங்கள். சில்பரி மலை இங்கிலாந்தின் ‘சில்பரி’ என்னுமிடத்தில் ஒரு பிரமாண்டமான மலை இருக்கிறது. இதுவும் ஒரு கல்வட்டம் மாதிரிதான். அளவு தான் பிரமாண்டம்! சில்பரி மலை 40 மீட்டர் உயரமும், 167 மீட்டர் விட்டமும் கொண்டது. அதன் உச்சி தட்டையாக இருகிறது. அந்த தட்டையின்விட்டத்தின் பரப்பளவு 30 மீட்டர். இது 5 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இந்த மலை இயற்கையாக உருவாகிய மலை என்றுதான் ஆரம்பத்தில் பலர் நினைத்தார்கள். ஆனால், இந்த சில்பரி மலையை தொடர்ந்து ஆராய்ந்தபோது, இது முழுக்க முழுக்க மனிதனால் செயற்கையாக உருவாக்கப்பட்டது என்று தெரியவந்தது. சுமார் 4750 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த மலை கட்டப்பட்டிருக்கலாம். கி.மு. 2400 முதல் கி.மு. 2300 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இந்த மலை உருவாக்கப்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மலை ஏன்கட்டப்பட்டது? என்ன உபயோகத்திற்காக என்பதற்கான காரணம் மட்டும் தெரியவில்லை. முழுவதும் வெண்கட்டிக் கற்களால் கட்டப்பட்டது சில்பரி மலை. இரண்டரை இலட்சம் சதுர மீட்டர் அளவுள்ள இதைக் கட்டி முடிக்க 18 மில்லியன் மனித மணி நேரங்கள் செலவு செய்யப்பட்டிருக்கின்றன என்று கணித்திருக்கிறார்கள். மூன்று அடுக்குகளாக அதைக் கட்டியிருக்கிறார்கள். தட்டையாக உள்ள அதன் மேல் பகுதி உருண்டை வடிவில் இருந்திருக்கலாம் என்றும் இடைப்பட்ட காலத்தில் அது ஏதேனும் கட்டடம் கட்டுவதற்காக தட்டையாக்கப் பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. ஆவ்பரி கல் வட்டங்கள் சில்பரி மலைக்கு அருகில், வைல்ட்ஷையரில் இருக்கும் கிராமமான ஆவ்பரியில் 100 டன்களுக்கும் அதிக எடையுள்ள நூற்றுக்கணக்கான கற்களைக் கொண்டு வட்ட வடிவ அமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த வட்ட வடிவ அமைப்பில் 331 மீட்டர் விட்டமுள்ள மிகப் பெரிய வட்டத்தின் உள்ளே, இரண்டு சிறிய வட்டங்களாக அது அமைந்திருக்கிறது. வட்டத்தை சுற்றியுள்ள கால்வாய் 21 மீட்டர் அகலமும், 11 மீட்டர் ஆழமும் கொண்டுள்ளது. மொத்தம் 98 கற்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சில 40 டன்னுக்கு மேல் எடையுடையதாக உள்ளன. வடக்கு பக்கமுள்ள உள் வட்டமானது 98 மீட்டர் விட்டம் உடையாதாக உள்ளது. இதில் உள்ள 4 கற்களில் 2 மட்டுமே நின்ற நிலையில் உள்ளது. தெற்கு பக்கமாக உள்ள வட்டமானது 108 மீட்டர் விட்டமுடையதாக உள்ளது. 5.5 மீட்டர் உயரமுள்ள ஒரு கல் நடுநாயகமாக நிறுவப்பட்டுள்ளது. இதுவும் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கப்பட்டிருக்கின்றது. இந்த கல் வட்டமும் யார் அமைத்தார்கள்? ஏதற்காக அமைத்தார்கள் என்ற விவரங்கள் மட்டும் தெரியாத புதிராகவே இருக்கிறது.
-முற்றும்-

Saturday, November 14, 2015

பூமித்தாய் மறைத்து வைத்திருக்கும் மனிதரில்லா ஒரு மர்மதேசம்..!!!





மக்களின் மரியாதையை பெற்ற ஒரு மலை என்றால், அது சீனாவில் உள்ள
டியான்சி மலைதான்.
அமைவிடம் :-
சீனாவின் ஹூணான் மாகாணத்தில்
உள்ள வுலிங்யூன் மாவட்டத்தில்,
ஷாங்ஜியாஜி நகரில், இந்த டியான்சி
மலை அமைந்துள்ளது.
இதன் அருகில் க்சோக்ஷியு
பள்ளத்தாக்கும் உள்ளது.
டியான்ஷி என்றால் ’சொர்க்கத்தின்
மகன்’(Son of Heaven) என்று பெயர். இந்த பெயர் விளங்கக் காரணம், அந்த மலை அருகில் வசிக்கும் உள்ளூர்
விவசாயிகள் துஜியா இனக்குழு என
அழைக்கப்பட்டனர். அவர்களுடைய எழுச்சியும் வளர்ச்சியும் வெற்றிபெற்றதால், அதற்கு
இந்த மலையும் ஒரு காரணமாக
நினைத்தனர். அந்த மகிழ்ச்சியில் இந்த
பெயரை அவர்களின் தலைவனான
ஷியாங் துகன் வைத்தார்.
இந்த பெயரில் சீன பேரரசரின் பாரம்பரிய பட்டப்பெயரும் உள்ளது ஒரு
சுவாரஸ்யம்... இந்த மலைக்கு வெளியில் மார்பிள் தயாரிக்கப்படுவது
அதன்புகழுக்கு இன்னும் ஒரு மகுடம்
ஆகும்.
இந்த மலை சீனாவின் சிறந்த சுற்றுலா
தலங்களில் ஒன்றாக விளங்குகிறது.
பார்வையாளர்கள் காலை 8.00
மணியிலிருந்து மாலை 6.00 மணி
வரை அனுமதிக்கப்படுகின்றனர்.
வசந்த காலமும், இலையுதிர் காலமும்
ரசிப்பதற்கு ஏற்ற காலமாக
கவனிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக
ஏப்ரலும் அக்டோபரும் இங்கு
சுற்றுலாவிற்கு சிறப்பான மாதங்கள்.
டியான்சி மலையின் இயற்கை அழகு..
இந்த இடம் சுற்றுலாத்தலமாக
வடிவமைக்கப்பட்டிருந்தாலும் இயற்கை
எழில்தான் இதன் ஈர்ப்பு பொக்கிஷம்.
இங்கு செல்பவர்கள் மூன்று முக்கிய
இடங்களை ரசிக்கும் வாய்ப்பு
கிடைக்கிறது.
தங்க முக்கோணம் (Golden
Triangle) என்று அழைக்கப்படும் அவை:
1. ஷாங் ஜியாஜி வன பூங்கா
2. க்சோக்ஷியு பள்ளத்தாக்கு
3. டியான்சி மலைகள்
மனிதரில்லா இந்த நிலப்பரப்பில் மர்மம் இருப்பதாக உள்ளூர் கதை உலவுகிறது..

Wednesday, November 11, 2015

Secret Underground City of Ellora Caves - Ancient Aliens In India?



We are at Ellora caves in India, and I am going to show you some solid evidence about a secret underground area that is hidden under these caves. As you can see, there is a rectangular tunnel about 1 foot wide that is vertically going down, and is not open for public access. I asked the security guards if I could take a closer look and they told me that visitors are not allowed but they also told me that, this tunnel is over 40 feet deep and then it takes a right angle turn to proceed underground. Nobody knows what's inside after that because the tunnel becomes too narrow for human beings to get through it. 
Here is another one that is hiding in plain sight. You can see a channel on the ground and there is a small rectangular opening at the end of this passage that would drain the water to the other side of the temple. But, I went to the other side of this rock but guess what? It is a solid stone!! So, there is no other way, except that this rectangular opening leads to the underground. Notice that the rectangular opening is only large enough for a 10 year old to go in? Since adult human beings can't access it, was it designed for human beings at all? 

This is another hidden passage in Ellora caves that I tried to get through, but after 10 feet, it becomes so narrow that I can't go any further. Where do these mysterious tunnels lead? Who could have used such narrow passages? The other important question is: how can you carve such narrow passages if human beings cannot even get through them? Was it carved by humans at all? Were these carved for extraterrestrials that are smaller than human beings?

Notice how this entrance is clearly going underground, in this cave temple. These are underground areas hiding in plain sight. The security guards told me that there are several underground tunnels in Ellora caves which gradually become too narrow for human beings to access them, and all of them are locked. From these old doors, we can assume that these tunnels have been closed from public access at least 30 to 40 years ago. 

These underground tunnels are not found in the same area, but are scattered over many different caves in Ellora, which stretches across a few miles. Is it possible that there could be a vast underground city like Derinkuyu in Turkey? Derinkuyu is an enormous underground city with advanced technical features that could accommodate more than 20,000 people, which was hidden for centuries only to be discovered in 1965. 

If it is true that there is a vast underground city in Ellora, shouldn't there be ventilation shafts that would allow air from the ground to reach below. In Derinkuyu, there are thousands of holes drilled from the ground that act as ventilation shafts to the underground city. Look at this long ventilation shaft in Ellora caves that is drilled secretly in a dark chamber. It is about 4 inches wide, but it is so deep that we can't even see the other end. Could this be a ventilation shaft that reaches the underground city?

How about this ventilation shaft, which is also going underground? You can also see hundreds of holes like this drilled on the rock floor. Some of them are unfinished, and only few inches deep, but notice how the other holes have been closed with concrete recently. I asked why some of these holes have been closed and my tour guide told me that someone dropped their car keys into one of them, but these holes are so deep that they couldn't retrieve it. So, they just covered these holes by putting concrete over them.

What else could be the purpose of these deep holes on the floor, if they are not ventilation shafts? Why would hundreds of holes be drilled on these rock floors with painstaking efforts without any reason? Now, this is one of the abandoned, bat infested places and let's take a look at what's inside. This seems like a very old sanctum holding a lingam, which is a Hindu god. Centuries ago, plenty of water would be poured on this lingam everyday as part of religious worship, and it would drain through this channel. Notice that this water drain has been closed recently with some rocks. Where would the water go? Let's see...It would go vertically down through this tunnel. 

Unless there is an area underground, this would be pointless because the water would just overflow all over the place! All over Ellora caves, there are hundreds of idols which would require thousands of gallons of water poured on them every day. Was this a technique to get clean water underground that could be used for different purposes? 

Sunday, November 1, 2015

The Ished tree of ancient Egypt is a fantastic mystery.

Appearance: Several species of trees were considered sacred in Egyptian mythology. The names of all of them were written with the same hieroglyphic determinative. In Egyptian art, trees were usually depicted by this sign by simply being placed into the larger representational context. It was been suggested that the tree shown in the glyph is the Maerua crasifolia which is found in throughout Africa, tropical Arabia, and Palestine, but is disappearing from Egypt.
Meaning: Several types of trees appeared in Egyptian mythology. The sycamore was particularly important. Two of them, called the "sycamores of turquoise" stood at the eastern gate of heaven from which the sun emerged each morning. These sycamores were especially associated with the goddesses Nut, Hathor and Isis, each of whom were called "Lady of the Sycamore". Nut and Hathor were often shown to reach out from the tree to offer the deceased food and water. Sometimes the tree was anthropomorphized, having arms itself which offer the sustenance to the dead. In the example shown at right, the deceased is suckled by such a tree.
The ished tree, probably the Persea tree, had a particular solar meaning. It too was associated with the rising sun and it was protected from Apepby the great cat of Heliopolis. This cat was one of the forms of Re. A sacred ished was grown in Heliopolis as early as the Old Kingdom. Later, an ished was grown in Memphis and Edfu. During the 18th Dynasty a popular motif depicting the divine ished inscribed by the gods with the name of the king and the years of his reign.
The willow tree was also sacred in Egypt as it was the tree that was said to have grown up around Osiris' leaden coffin in Byblos. Several towns had tombs that were said to hold part of Osiris' dismembered body. All of these had willow groves associated with them. It was said that the god'sba rested within these groves.
Other various species of trees were believed to be sacred to individual deities. For example, the tamarisk tree was sacred to Wepwawet, the acacia was sacred to Horus, and as mentioned earlier the sycamore was sacred to Re and the willow was sacred to Osiris.





























Monday, October 19, 2015

வேற்றுகிரகவாசிகளுடன் சந்திப்பு-இந்தியாவில்...


ஏன் வேற்றுகிரகவாசிகள் தொடர்பான சம்பவங்கள் மேலை நாடுகளிலேயே நடக்கின்றன,நம் நாட்டில் நடப்பதில்லை என்ற சந்தேகம் எல்லோருக்கும் தோன்றும்.இந்தியாவிலும் நடக்கின்றன,இந்தியாவைப் பிற நாடுகள் பார்த்த பார்வையைவிட இந்தியர்களான நம்முடைய பார்வையே அவநம்பிக்கையுடனும் அவமதிப்புடனும் இன்னமும் தொடர்வதால் இங்குள்ளவர்களின் கூற்று எதுவும் நம்பப்படுவதில்லை.
அப்படித்தான் நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் ஒடிசா மாநிலத்துக்கு சில வேற்றுகிரக மனிதர்கள் வந்ததும் அங்கிருந்த ஒடிசா வாசிகளைத் தங்கள் வாகனத்தில் ஏற்றிச் சுற்றிக்காண்பித்ததும் நம்பப்படாததுடன் இகழ்ச்சியாகப் பேசப்பட்டது.
ஆனால் கிராமப்புறக்கலைஞர் ஒருவர் அதை பனையோலைச் சுவடியில் சித்திரமாகவே பதிவு செய்து குறிப்புகளும் எழுதியிருக்கிறார். நல்ல வேளையாக அது இன்னமும் அழிக்கப்படாமல் காப்பாற்றப்பட்டு வருகிறது.
ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தின் மலைப்பாங்கான பகுதியில் வேற்றுகிரகவாசிகள் தங்களுடைய விசித்திரமான விண்கலத்துடன் 1947-ம் ஆண்டு மே 31-ம் தேதி வந்து இறங்கினர். தீரம் மிக்க 2 இளைஞர்கள் அஞ்சி ஓடாமல் அந்த விண்கலத்தையே பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது உள்ளே இருந்தவர்கள் அந்த இரு இளைஞர்களையும் அழைத்து தங்களுடைய விண்கலத்தின் உள்ளே அழைத்துச் சென்றனர். அவர்களையும் ஏற்றிக்கொண்டு விண்ணில் ஒரு சுற்று சுற்றிவந்தனர். பிறகு அவர்களை அந்த இடத்திலேயே இறக்கிவிட்டுப் போய்விட்டனர்.
அவ்விரு இளைஞர்களும் அதை அக்கிராமவாசிகளிடம் தெரிவித்தனர். அதை யாரும் நம்பவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் ""பட்ட சித்திரக்காரர்'' என்று அழைக்கப்படும் ஓவியரிடம் தங்கள் அனுபவத்தை அப்படியே விவரித்தனர். அவர் அதை அப்படியே கேட்டு சித்திரமாக வரைந்து வைத்துள்ளார்.
அந்தச் செய்தி பத்திரிகைகளில் வரவில்லை. ஆனால் ஒடியா வார இதழ் ஒன்று 1947 ஜூன் 15-ம் தேதி அச் செய்தியை ஒற்றைப் பத்திச் செய்தியாக வெளியிட்டுள்ளது. அதுவும் எப்படி என்றால் ""கிராமவாசிகளின் அதீத கற்பனை'' என்ற காட்டமான விமர்சனத்தோடு.
இந்தச் செய்தி உண்மையாக இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையே இல்லாமல் அச்செய்தி பிரசுரிக்கப்பட்டுள்ளது.
கிராமவாசிகள் கூறக் கேட்டவர் வரைந்த சித்திரத்தில் வேற்றுகிரக மனிதர்கள் எந்திர மனிதர்களாக வரையப்பட்டுள்ளனர். அவர்களுடைய தலையில் அரைவட்ட வடிவில் சாதனங்கள் இருக்கின்றன. விண்வெளி வீரர்கள் அணிவதைப் போன்ற ஆடையையே அவர்கள் அணிந்துள்ளனர். கைகள் கூரான கத்தியைப் போல இருந்தன. ஆனால் அவர்கள் கையை உயர்த்தியிருந்த விதம் வாழ்த்து கூறுவது போலவோ, ஆசிர்வதிப்பது போலவோ இருந்தது.
சிலருடைய கைகள் வட்டவடிவில் பந்து போல உருண்டிருந்தது. சிலருடைய கைகளில் 5 விரல்கள் இருந்தன.
இந்த விண்கலத்தையும் விண்வெளி மனிதர்களையும் பார்த்தவர்கள் சமீபத்தில்தான் இறந்தனர். ஆனால் அவர்கள் உயிரோடு இருந்தவரையில் அவர்கள் கூறுவதைப் பொறுமையோடு கேட்டு பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் யாருக்குமே ஏற்படவில்லை.
இந்தச் சம்பவம் நடந்த ஒரு மாதத்துக்கெல்லாம் அமெரிக்காவின் நியூமெக்சிகோ மாநிலத்தில் ரோஸ்வெல்(ROSWELL) என்ற இடத்தில் வேற்றுகிரக மனிதர்களின் கலம் ஒன்று பூமியில் வேகமாக வந்து மோதி சிதறியதாகப் பதிவாகியிருக்கிறது.
இப்போதும்கூட இதை நம்புகிறார்களோ இல்லையோ இதையும் வியாபார தந்திரத்தோடு சில நினைவுப் பொருள்களைத் தயாரித்து ஒடிசா தலைநகர் பூரியில்(PURI) விற்றுக்கொண்டிருக்கின்றனர்.
விண்வெளியியல் விஞ்ஞானிகள் அவ்விருவரைக் கேட்டு பதிவு செய்திருந்தால், வேற்றுகிரகவாசிகள் பூமியில் உள்ளவர்களுடன் நேருக்கு நேர் ""முதலில் சந்தித்தது இந்தியாவில்'' என்ற வரலாற்று உண்மை வெளிவந்திருக்கக்கூடும்.

Sunday, September 27, 2015

இடோ நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்கு விடை கிடையாது.

1657 மார்ச் 4 அன்று டோக்கியோ என்ற நகரமே சுடுகாடு ஆகிப் போனதன் பின்னணியில் உள்ள மர்மத்துக்கு விடை கிடையாது.
இன்றைய டோக்கியோவின் அன்றைய பெயர் இடோ ஜப்பானின் மிகப்பெரிய வணிக நகரம். சுமார் மூன்று லட்சம் பேர் வசித்தார்கள். நெருக்கமாக அமைத்த வீடுகள் (மரத்தால் காகிதக் கூழினால் ஆனவை), குறுகலாக அமைந்த தெருக்கள், நீளமான சந்தைகள் நிறைய கோயில்கள், பாலங்கள் கொண்ட நகரம் அது.
கனத்த சாரீரமுடைய ஒருவர் தும்மினால்கூட நில அதிர்வு ஏற்படும் சபிக்கப்பட்ட தேசம்தானே ஜப்பான். 1657 மார்ச் 2 அன்று நண்பகலில் ஏதோ ஓரிடத்தில் சிறிய அளவில் நெருப்பு பரவ ஆரம்பித்தது. எங்கிருந்தோ கிளம்பி வந்த சூறாவளிக் காற்று அந்த நெருப்பின் இருப்பை பல மடங்காக்கியது. அந்தக் காலத்திலேயே இடோ நகரில் தீயணைப்பு படை இருந்தது. ஆனால் அளவில் மிகச் சிறியது. அவர்கள் நெருப்பிடம் தோற்றுப் போனார்கள். மார்ச் இரண்டாம் தேதி இன்முகத்துடன் தன் சேவையைத் தொடங்கிய தீ, மூன்றாம் தேதி முழுவதும் மும்முரமாக வேலை பார்த்துவிட்டு நான்காம் தேதி நண்பகலுக்குப் பின்னரே ஓய்வெடுக்கச் சென்றது.
புகைமூட்டத்தினுள் புதைந்திருந்த இடோ நகரில் கால்வைத்த இடமெல்லாம் கருகிய உடல்கள் அந்தப் பேரழிவு நெருப்பு பரவ காரணம் என்ன?
நில அதிர்வாகத்தான் இருக்கும் என்பது பொதுவான கருத்து. ஆனால் இன்றைக்கும் ஜப்பானியர்களை கேட்டால் இடுங்கிய கண்களில் பயம் பரவ, நடுங்கும் குரலுடன் அந்த சம்பவத்தை சொல்வார்கள்.
ஜப்பானிய இளம்பெண் ஒருத்தி விலையுயர்ந்த பகட்டான கிமோனோ(kimono, ஜப்பானியப் பெண்கள் அணியும் முழுநீள கவுன்) ஒன்றை வாங்கி ஆசையுடன் அணிந்தாள். ஏனோ அடுத்த சில நாள்களிலேயே நோய்வாய்ப்பட்டு படுக்கையில் விழுந்தாள். என்ன நோயென்று பிறர் அறியும் முன்பே செத்துப் போனாள்.
அவள் ஆசையுடன் வாங்கி வைத்திருந்த கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணுக்கு விற்கப்பட்டது. அவளும் அணித்துகொண்டு அழகு பார்த்தால் மர்ம நோயொன்று அவளை அணிந்துகொண்டு அழகு பார்த்தது. இரண்டாமவளும் இறந்து போனாள். மூன்றாவதாக கிமோனோ, இன்னொரு இளம்பெண்ணிடம் சென்று சேர்ந்தது. அவளுக்கும் அதே கதி. அதோ கதி.
இடே நகரமெங்கும் விஷயம் பரவியது. ' அந்த கிமோனோவில் துர்சக்தி ஏதோ புகுந்துள்ளது. அதுதான் மூன்று இளம்பெண்களின் உயிரை எடுத்துள்ளது. மதகுரு ஒருவரிடம் அந்த மர்ம கிமோனோ ஒப்படைக்கப்பட்டது. ஊரே கூடி நிற்க மதகுருவும் அந்த கவுனைப் பரப்பி வைத்து மந்திரமெல்லாம் ஓதி சடங்குகள் செய்து எரிகின்ற கட்டை ஒன்றை எடுத்து அந்த கிமோனோவுக்குக் கொள்ளி வைக்க....
அச்சுறுத்தும் ஊளைச் சத்தத்துடன் சூறாவளிக் காற்று ஒன்று எங்கிருந்தோ கிளம்பி வர.... உயரமாகக் கிளம்பிய தீ, திகுதிகுவென வேகமாகப் பரவ...
அந்த சம்பவத்தால் ஏற்பட்ட இழப்பு சுமார் ஒரு லட்சம் மனித உயிர்கள். பல்லாயிரக்கணக்கான கால்நடைகள். முந்நூறு கோயில்கள். அறுபது பாலங்கள் அநேக கட்டடங்கள். 60-70 சதவிகித இடோ நகரமே தீக்கிரையாகியிருந்தது. இதுவரை ஜப்பான் சந்தித்த பேரழிவுகளில் இதுவும் ஒன்று.

Tuesday, September 15, 2015

ஆந்தையாக மாறிய தேவதை . ஆலன் கார்னர் (Alan Garner)

ஆலன் கார்னர் (Alan Garner) - என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார்.

வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். 'உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல் வயப்பட்டு அவனை திருமணம் செய்து, ஒரு நாள் வாழ்ந்தாலும், அடுத்த நாளே பொன்னிறமான இறக்கையுள்ள தேவதையான நீ அழகில்லாத ஆந்தையாக மாறிவிடுவாய்'.
இப்படி எச்சரிக்கை செய்யப்பட்ட தேவதை, பூமிக்கு வந்தாள். வானுலகத்தில் இல்லாத பல துயரமான விஷயங்கள் பூமியில் இருப்பதைப் பார்த்து வருந்தினாள். ஆனால், இங்கு வாழும் மனிதர்களின் காதலும், அதில் வரும் தடைகளும் அவளுக்கு மிகவும் ரசனையாகத் தோன்றிவிட்டன. அதை நேரடியாக அனுபவிக்க தேவதை ஆசைப்பட்டுவிட்டாள். ஓர் இளைஞனைக் காதலிக்க ஆரம்பித்தாள்.
பிறகு அந்தச் சுகத்திலிருந்து மீளமுடியாமல் அவனைத் திருமணம் செய்ய முடிவெடுக்கும்போது அவளுக்கு வானுலகத்தின் எச்சரிக்கை மீண்டும் ஞாபகப்படுத்தப்பட்டது.
ஒரே ஒரு நாள் பூமியில் உள்ள இளைஞனுக்கு மனைவியாக வாழ்ந்து, அந்தச் சுகத்தை அனுபவித்துவிட்டுப் பிறகு அடுத்த நாளிலிருந்து காலம் முழுவதும் ஆந்தையாகத் துயரப்படுவதா அல்லது காதலைத் தியாகம் செய்துவிட்டு, சிறகடித்து வானுலகத்துக்கு அழகிய தேவதையாகப் பறந்து செல்வதா?
தீர்க்கமாக யோசனை செய்தாள். பிறகு உறுதியான ஒரு முடிவுக்கு வந்தாள். காதலனோடு ஒருநாள் வாழ்ந்தால்கூட போதும். அதற்குப் பிறகு என்ன ஆனாலும் பரவாயில்லை.
இந்த விஷயத்தைத் தன் காதலனிடம் சொன்னால் சம்மதிக்க மாட்டான் என்று கருதி தனது வானுலக சாப விஷயங்களை மறைத்து அவனைக் கல்யாணம் செய்து கொண்டாள். ஒருநாள் முழுவதும் இமைப்பொழுதும் பிரியாமல் அர்த்தமுள்ள முழு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தாள். அடுத்த நாள், அவள் உருவம் மெல்ல மெல்ல மாறியது. ஆந்தை ஆனாள்.
காதலின் உன்னதத்தை விளக்கவே, ஆலன் கார்னர் The Owl Service (1967) என்ற இந்தக் கதையை எழுதினார்.
சாதாரணமாக, ஆலன் கார்னர் கதை எழுதும்போது, அடித்துத் திருத்தி நிறைய மாற்றங்கள் செய்வார். 'தேவதை' கதை எழுதும்போது அடித்தல் திருத்தல் கூட இல்லாமல் கதையின் ஆரம்பத்திலிருந்து கடைசிவரை தங்கு தடையின்றி எழுதி முடித்தார். அதைப் பார்த்த அவரது உதவியாளர்கள், 'எப்படி இவ்வளவு சுத்தமாக இந்தக் கதையை எழுதினீர்கள்?' என்று கேட்டார்கள்.
'இந்தக் கதையை நான் எழுதவில்லை. இதில் வரும் கதாநாயகியான தேவதையே எழுதியதால்தான் அடித்தல் இல்லாமல் இருக்கிறது' - ஆலன் கார்னர் சிரித்துக்கொண்டே சொன்னார். விளையாட்டாக அப்படிக் கூறியதில் இருந்த ஓர் அதிசய உண்மையை அவர் அப்போது உணரவில்லை. அதுதான்
சில நாட்களில் அவர் எழுதிய கதை மிகவும் பிரசித்தி பெற்றது. அதை டிவியில் தொடர் நாடகமாக எடுக்க விரும்பினார்கள். ஆலன் கார்னர் மேற்ப்பார்வையில் டிவி படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடந்தன.
தேவதை ஒரே ஒருநாள் காதலனுடன் வாழ்ந்ததாகக் கதையில் சொல்லப்படும் வீட்டைப் போல, பொருத்தமான ஒரு வீட்டை ஆலன் கார்னர் தேடினார்.
வேல்ஸ் என்ற இடத்துக்கு அருகில் உள்ள ஒரு மலையடிவாரம் அவர் மனதுக்கு ரம்மியமாகப்பட்டது. அங்கே போனார். அந்த சூழ்நிலையில் எங்காவது ஒரு வீடு படப்பிடிப்புக்குக் கிடைக்குமா என்று தேடினார். தூரத்தில் மலையடிவாரத்தில் மரங்கள், செடிகள் அடர்ந்த சோலை மாதிரி இருந்த இடத்தின் நடுவில் ஒரு வீட்டைப் பார்த்தார். அந்த வீட்டில் யார் இருக்கிறார்கள், படப்பிடிப்புக்கு அனுமதி தருவார்களா என்று விசாரிக்கச் சென்றார். அருகே சென்று அந்த வீட்டின் அமைப்பைப் பார்த்ததுமே அதிர்ச்சியடைந்தார்.
தன்னுடைய தேவதைக் கதையில் வருணித்த மாதிரியே ஒவ்வொரு அமைப்பும் இருந்தது. கதவில் செதுக்கப்பட்ட சிற்ப வேலைப்பாடுகள்கூட அச்சுபிசகாமல் அப்படியே இருந்தன.
அந்த வீட்டில் யாரும் குடியிருப்பதற்கான அறிகுறியே இல்லை. அக்கம்பக்கத்தில் விசாரித்தார். அந்த வீட்டின் சாவி, வேறு ஒருவரிடம் இருந்தது. அவர் வந்து திறந்து காட்டினார். உள்ளே போன ஆலன் கார்னருக்கு தலைசுற்றி மயக்கமே வந்துவிட்டது. படுக்கை அறை, சமையற்கட்டு, ரிசப்ஷன் ஹால், ஜன்னல்கள்கூட அவர் கற்பனையாக கதையில் வர்ணித்தபடியே இருந்தன.
எப்படி இந்த அதிசயம் நிகழ்ந்தது? ஆலன் கார்னருக்கு ஒன்றுமே புரியவில்லை.
'இந்த வீட்டில் யார் இருக்கிறார்கள்! அவர்கள் எங்கே?' - விசாரித்தார்.
'இந்த வீட்டின் சொந்தக்காரன் ஒரு பைத்தியம். அவன் எப்போதாவதுதான் வருவான். அவனைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்கள் விரும்பினால் இங்கேயே படப்பிடிப்பை நடத்துங்கள்' என்றார் வீட்டின் சாவியை வைத்திருப்பவர்.
ஆலன் கார்னர், இவ்வளவு பொருத்தமான வீடு கிடைத்ததே என்ற சந்தோஷத்தில் அங்கே படப்பிடிப்பை ஆரம்பித்தார். முதல் நாள் படப்பிடிப்பு முடியும்போது ஒரு பெரிய ஆந்தை, ஆலன் கார்னரின் தலைக்கு மேல் பறந்துவிட்டுப் போனது. அடுத்த பத்து நாட்கள் தொடர்ந்து அந்த வீட்டின் படப்பிடிப்பு நடந்தது. ஆனால் அப்போதெல்லாம் அந்த ஆந்தை வரவில்லை.
கடைசி நாள் கிளைமாக்ஸ். ஆலன் கார்னர் கதைப்படி (தேவதை ஆந்தையாக மாறும் காட்சியை) அந்த வீட்டின் பெட்ரூமில் காலை பத்து மணிக்கு எடுக்க ஆரம்பித்தார். திடீரென்று அந்த ஆந்தை அறைக்குள் பறந்து வந்துவிட்டது. படப்பிடிப்புக் குழுவினர் எவ்வளவு விரட்டியும் அந்த ஆந்தை அந்த அறையை விட்டுப் போகவில்லை. ஆலன் கார்னர் அதை விரட்ட வேண்டாம் என்று கூறிவிட்டு கிளைமாக்ஸ் காட்சியை எடுத்து முடித்தார்.
அதற்குப் பிறகே அந்த ஆந்தை அறையைவிட்டுப் பறந்து சென்றது.
அந்த ஆந்தைக்கும் தன் தேவதைக் கதைக்கும் எதோ, நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆலன் கார்னர் நம்ப ஆரம்பித்தார். ஆனால் ஆந்தை படப்பிடிப்பின்போது வந்தது தற்செயலான நிகழ்ச்சி என்றுதான் மற்றவர்கள் கூறினார்கள். ஆலன் கார்னர், அதை ஒப்புக்கொள்ளவில்லை.
அவருக்கு ஒரு யோசனை உதித்தது. அந்த வீட்டின் சொந்தக்காரன் எங்கே இருக்கிறான் என்று கண்டுபிடித்து அவனை விசாரித்தால், இந்த வீட்டைப் பற்றி ஏதாவது புதிய விஷயங்கள் கிடைக்கும் என்று நினைத்து அவனைப் பற்றி பல இடங்களில் விசாரித்தார்.
வீட்டின் சொந்தக்காரனைக் கண்டுபிடிப்பது அவ்வளவு சுலபமாக இருக்கவில்லை. பலர் பலவிதமாக அவனைப் பற்றிக் கூறினார்கள். சிலர் அவனைப் பைத்தியம் என்றனர். இன்னும் சிலர், அவன் பகல் முழுவதும் எங்காவது அடர்ந்த காட்டில் மரங்களுக்கு அடியில் தூங்குவான் என்றும், இரவு நேரங்களில் காடுகளில் சுற்றித் திரிவான் என்றனர். அந்த மலையடிவாரத்தில் வேட்டையாடும் சிலர், தாடி மீசையோடு இரவு நேரங்களில் அவன், ஆவி மாதிரி சுற்றித் திரிந்ததைப் பார்த்ததாகச் சொன்னார்கள்.
ஆலன் கார்னர் அவனை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டார். வேட்டையாடும் ஒரு கோஷ்டியுடன் இரவில் காட்டுக்குப் போனார். நடுநிசி வரை தேடித் பார்த்தும் யாரும் அந்தக் காட்டில் இருப்பதாகத் தெரியவில்லை.
அப்போது தூரத்தில் ஆந்தையின் சத்தம். பலமுறை விட்டு விட்டுக் கத்தியது, ஆலன் கார்னர் தனது படப்பிடிப்பின்போது வந்து கத்திய ஆந்தையின் சத்தம் போலவே உணர்ந்தார். ஆனால், ஒரே இனத்தைச் சேர்ந்த பறவைகளின் சத்தங்களில் அப்படியொன்றும் அதிக வித்தியாசம் இருக்காது என்று வேட்டையாட வந்தவர்கள் கூறினர், மேற்கொண்டு அந்த பைத்தியமாகத் திரியும் வீட்டுக்காரனைத் தேட இன்னும் சற்று தூரம் போக முயன்றனர்.
ஆனால் விடாமல் சிக்னல் மாதிரி அந்த ஆந்தை கத்தியது. அந்தச் சத்தம், ஆலன் கார்னரை அழைத்த மாதிரியே இருந்தது. அந்த ஆந்தை சத்தமிடும் இடத்துக்குப்போகலாம் என்றார் ஆலன் கார்னர்.
பாதை மிகவும் மோசமாக புதர்கள் மண்டிக் கிடந்தது. உடன் வந்தவர்கள் அங்கே போகத் தயங்கினார்கள். ஆலன் கார்னர் ஒரு டார்ச்சை மட்டும் வாங்கிக் கொண்டு அந்த இடத்துக்குப் போனார்.
ஆந்தை கத்திய மரத்தடியில் ஒரு மிருகம் அசைவது இருட்டில் அரைகுறையாகத் தெரிந்தது. டார்ச் அடித்துப் பார்த்தார். அது மிருகம் இல்லை. ஆனால் கூன் விழுந்து வயது முதிர்ந்த ஓர் உருவம் தாடி மீசை நீளமாக வளர்ந்த நிலையில் நின்றிருந்தது. அந்த ஆள்தான் வீட்டுக்காரனாக இருக்கலாம் என்று நெருங்கி அவனருகில் போனார். அந்த உருவம் காட்டில் பறித்த கனிகளைத் தன் கைகளில் வைத்துக் கொண்டு மரத்தின் உச்சியில் அமர்ந்திருந்த ஆந்தையையே பார்த்துக் கொண்டிருந்தது.
சிறிது நேரத்தில் மரத்தின் மேலிருந்து அந்த ஆந்தை சிறகடித்துப் பறந்து கிழே வந்தது. ஆலன் கார்னர் டார்ச் வெளிச்சத்தில் நன்றாகப் பார்த்தார். படப்பிடிப்பில் வந்த ஆந்தை தான் அது என்று அதன் உருவ அமைப்பிலிருந்து தெரிந்து கொண்டார்.
அந்த ஆந்தை பறந்து வந்து ஆலன் தலைக்குமேல் ஒரு வட்டமடித்து விட்டு பிறகு, தாடி வைத்த அந்த வயதான மனிதனின் தோளில் போய் அமர்ந்தது. அந்த ஆள், தன் கையிலிருந்த பழங்களை அதனிடம் நீட்டினான். அந்த ஆந்தையும் அந்தப் பழங்களைக் கொத்திக் கொண்டு மீண்டும் மரத்தை நோக்கிப் பறந்து சென்றது. எல்லாவற்றையும் பார்த்த ஆலன் கார்னர் வியப்பில் ஆழ்ந்தார். அந்த மனிதனின் அருகில் போனார்.
'உங்கள் பெயர் என்ன என்று தயவு செய்து சொல்ல முடியுமா?' என்று கேட்டார்.
அந்த வயதானவர் அப்போதுதான் ஆலன் கார்னரைத் திரும்பிப் பார்த்தார். ஆனால், பதில் பேசவில்லை.
'எதற்க்காக நீங்கள் இந்தக் காட்டில் இரவு நேரத்தில் இப்படிச் சுற்றிக்கொன்டிருக்கிறிர்கள்?'
அதற்கும் அந்த வயதானவர் பதில் சொல்லவில்லை.
'பழங்களை எதற்க்காக ஆந்தைக்குக் கொடுக்...'
ஆலன் கார்னர் பேசி முடிக்கும் முன் அந்த வயதான ஆள் 'உஷ்' என்று வாயில் விரலை வைத்து சைகை காட்டினார்.
'ஆந்தை இல்லை... அது தேவதை!' - என்று மரத்தின் உச்சியை, ஆந்தை பறந்துபோன திசையைச் சுட்டிக் காட்டினார். ஆலன் கார்னர் உணர்ச்சி மேலீட்டால் அப்படியே ஸ்தம்பித்துப் போனார்.
ஆனால் எதையும் லட்சியம் செய்யாமல் அந்த வயதானவர் அந்த அடர்ந்த காட்டின் இருட்டில் மெதுவாக நடந்து போனார். மரத்தின் உச்சியில் ஆந்தையாக இருந்த அந்த உருமாறிய தேவதை அவர் போன திசையில் பறந்து போனது.
இந்தக் காட்சிகளைப் பார்த்த ஆலன் கார்னருக்கு பல விஷயங்கள் புரிந்தன. தேவதை என்று, தான் எழுதிய கதை, கற்பனை அல்ல. அது ஆந்தையாக உருமாறிய தேவதையே, தன்னை எழுத தூண்டிய உண்மைக் கதைதான். அத தேவதையின் காதலன்தான் அவள் ஆந்தையாக உருமாறிய பிறகு இப்படிக் காட்டில் அலைந்து திரிகின்றான். நம்ப முடியாத அதிசயத்தை நேரில் பார்த்த அதிர்ச்சியுடன் அந்த கானகத்தை விட்டு வெளியேறினார்.

Tuesday, September 1, 2015

மேஜிக் மேதைகள்


சுமார் இருபது அடி நீளமுள்ள தடிமனான கயிறு அது. அதனை கையில் ஏந்தியிருந்த அந்த மாயவித்தைக்காரர் கண்களை மூடி தன் தலையை குனிந்திருந்தார். அவரது உதடுகள் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி இருந்தன. கூட்டம் அசுவாரசியமாக சலசலத்துக் கொண்டிருந்தது. மாயவித்தைக்காரர் கயிறைக் காற்றில் சுழற்ற ஆரம்பித்தார். வேகமாகச் சுழற்றியபடியே கயிறை வான் நோக்கி வீசினார். கூட்டத்தின் பார்வை மேல்நோக்கி உயர்ந்தது. மீண்டும் கீழிறங்கவில்லை. கயிறும்தான். வானுக்கும் நிலத்துக்கும் பாலமாக கம்புபோல விறைத்து நின்றது.
'ஏ பையா! ஏறு அதிலே!
அந்தச் சிறுவன் கூட்டத்தினரைப் பார்த்து கைகளை சந்தோஷமாக அசைத்தான். விறைத்து நின்று கொண்டிருந்த கயிறைப் பற்றினான். வாலில்லா குரங்குபோல சடசடவென கயிறில் ஏறினான். கயிறு வளையவோ, நெளியவோ, சுருண்டு விழவோ இல்லை. கயிறின் உச்சியை அடைந்தான்.பறக்கும் விமானம் ஒன்று மேகத்துக்குள் மறைவதுபோல, காணாமல் போனான். கூட்டம் வாய்பிளந்தது.
மாயவித்தைக்காரர் பி.எஸ். வீரப்பாவின் ஜெராக்ஸ் சிரிப்பு ஒன்றை சிரிக்க, யாருக்கும் பதிலுக்குச் சிரிக்கத் தோன்றவில்லை. அவர், வாள் ஒன்றைத் தன் பற்களால் கவ்வியபடி, கயிற்றைப் பிடித்தார். விறுவிறுவென மேலே ஏறினார். உச்சியை அடைந்தார். வாளைக் கையில் எடுத்தார். சூரிய ஒளிபட்டு வாளின் முனை பளபளத்தது. கூட்டத்தினர் கண்கள் கூச வான்நோக்கி மெளனமாக 'ஆ' உச்சரித்துக் கொண்டிருந்தனர்.
மாயவித்தைக்காரர் தன் வாளை காற்றை வெட்டுவதாக சில முறை குறுக்கும் நெடுக்கமாக வீசினார். ஒரு சில நொடிகள் கடந்திருக்கும். மேலே ஏறிச் சென்று மாயமாகிப் போன சிறுவனின் உடல் பல துண்டுகளாகத் தரையில் விழுந்தது. கூட்டம் அதிர்ந்து சில அடிகள் விலகி நின்றது. சிலர் மயங்கிக் கூட விழுந்தனர். மாயவித்தைக்காரர், ரத்தம் சொட்டும் வாளைத் தன் பற்களால் கவ்வியப்படி சரசரவென கீழே இறங்கினார். கண்களால் கயிற்றுக்கு கட்டளை இட்டார். அது பெட்டி பாம்புபோல சுருண்டு விழுந்தது..
மீண்டும் அந்த வில்ல சிரிப்பு. அடேய் படுபாவி கொலைகார என்று சிலர் மாயவித்தைக்காரரை மனத்துக்குள் சபிக்க ஆரம்பித்திருந்தனர். அவரோ தன் வாளை உறைக்குள் சொருகிவிட்டு ஒரு கம்பளத்தை எடுத்து உதறி தரையில் விரித்தார். சிதறிக் கிடந்த அந்தச் சிறுவனின் உடல் துண்டுகளை அந்த கம்பளத்தில் ஓர் ஒழுங்குப்படி அடுக்கினார். அந்த கம்பளத்தை சுருட்டினார். மீண்டும் கண்களை மூடி ஏதோ மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தார். அடுத்து நிகழவிருப்பது அதிசயமா அல்லது மீண்டும் அதிர்ச்சிதானா? கூட்டத்தினரின் கணகள் விரிந்து கிடந்தன.
கம்பள மூட்டை அசைந்தது. படாரென கம்பளத்துக்குள் இருந்து அந்தச் சிறுவன், முழுமையான உடலுடன் எந்தவிதக் காயமும் இன்றி பழையபடி சிரித்துக்கொண்டு எழுந்து நின்றான். கூட்டத்தினரை நோக்கி கையை அசைத்தான். எழுந்த ஆரவார ஒலியை மாயவித்தைக்காரர் பெருமிதத்துடன் எதிர்கொண்டார்.
இந்த வித்தை இந்தியாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் நடத்தப்பட்டதுதான். இந்த மாயவித்தையை உருவாக்கியது யார், எந்த காலகட்டத்திலிருந்து அரங்கேற்றப்படுகிறது என்ற வரலாறு தெரியவில்லை ஆனால் இந்தியாவுக்கு வந்த மார்க்கோ போலோ, இபின் பதூத்தா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் இந்த கயிறு வித்தை குறித்து வியந்து எழுதி வைத்திருக்கிறார்கள். மகுடி ஊதினால் சுருண்டு கிடக்கும் கயிறு, பாம்பை போல படமெடுத்து எழுத்து அப்படியே வானை நோக்கி உயரமாக வளரும் வித்தை குறித்தும் வியந்திருக்கிறார்கள். உயிரை விட்டு உடல் மாற்றுவது உள்ளிட்ட பல அதிசயங்களை நிகழ்த்திய மாயவித்தைக்காரர்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றனர் என்ற வாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..
நன்றி-முகில்

Friday, July 10, 2015

மோனாலிசா மர்மங்கள் What is Isleworth Mona Lisa

One of the surprising things about Leonardo da Vinci is that despite his colossal reputation as an artist he didn’t actually produce many paintings. Over the course of a long career lasting almost half a century, he began probably no more than 20 pictures. Only 15 have survived that scholars agree are wholly his.
So the discovery of a new painting by Leonardo would be a very big deal indeed. According to recent reports, a picture by the 19th Century French artist Paul Gauguin has been sold privately for a record-breaking $300 million (£197 million). Imagine how much an authentic Leonardo could make if one ever came to the market.
The thing is, attributing artworks to Leonardo is notoriously difficult. One painting currently touring cities across Asia exemplifies what I mean. It used to be known as the “Isleworth Mona Lisa”, but its current owners have rebranded it the “Earlier Mona Lisa” because they believe that Leonardo himself painted parts of it a decade or so before beginning arguably the most famous picture in the world: the Mona Lisa in the Louvre.
In December, the Isleworth painting went on show to the public in an exhibition at the Arts House at the Old Parliament building in Singapore. In March, it will travel to Hong Kong before arriving in China and then visiting other destinations in Asia.
At first glance, it is remarkably similar to the Louvre’s Mona Lisa. A woman with dark hair and an enigmatic smile sits at a slight angle to the viewer on a loggia opening onto a panoramic landscape. Except this woman is obviously much younger than the subject of the Louvre painting. If Mona Lisa had been painted a decade earlier, then this is how she would appear.
So what is this unusual picture? A curious, sexed-up copy of Leonardo’s masterpiece? Not according to the Mona Lisa Foundation, a Swiss non-profit organisation leading research into the painting on behalf of the anonymous international consortium that owns it. Three years ago, the foundation convened a press conference in Geneva at which they presented “the results of 35 years of research and convincing arguments” suggesting that the painting was in fact an earlier portrait of Mona Lisa, which Leonardo had left unfinished.
The event sparked headlines around the world. Here, it seemed, was a newly discovered, authentic Leonardo. How exciting! But the day after the press conference, Leonardo expert Martin Kemp, emeritus professor of art history at the University of Oxford, published a blog post rubbishing the foundation’s claims and explaining in detail why he considered them to be erroneous. Perhaps the idea of a second Mona Lisa was too good to be true.
Masterpiece or copy?
In fact, art historians had known about the Isleworth Mona Lisa for some time. Shortly before World War One, the maverick English connoisseur Hugh Blaker spotted it in an old manor house in Somerset, where it had hung for more than 100 years, having been bought in Italy as an original masterpiece by Leonardo.
Sensing something special beyond the covering of dirt and varnish, Blaker acquired it and brought it to his studio in Isleworth in west London (hence the painting’s moniker). Not long afterwards, his stepfather John R Eyre published a monograph proposing that Leonardo had worked on two versions of his portrait of Mona Lisa, and that the Isleworth picture was the first one.
The painting was subsequently bought by the American collector Henry F Pulitzer, who in turn published a self-serving book arguing that the Isleworth picture was in fact Leonardo’s only real portrait of Mona (short for Madonna) Lisa Gherardini, wife of the Florentine merchant Francesco del Giocondo. (Pulitzer concluded that the Louvre painting was an idealised portrait of someone else.)
Yet despite all this theorising, the idea that the Isleworth Mona Lisa was actually by Leonardo never gained traction with important scholars. In 1979, following Pulitzer’s death, the picture disappeared inside a Swiss bank vault, where it remained until 2008, when it was acquired by the consortium that now owns it.
At the same time, the Mona Lisa Foundation was established to investigate the question of the picture’s attribution to Leonardo. According to its vice president, the stamp dealer David Feldman, the foundation “does not have any stake in the painting” and endeavours “to examine facts in the most objective light possible”.
However, he would not comment directly when asked if there was any overlap between the owners of the painting and the foundation’s board. And to the question of whether the consortium’s ultimate goal was to sell the painting as a real Leonardo, he replied: “I cannot disclose any information relating to the consortium.”
Detective work
Like Eyre and Pulitzer before them, the current owners of the Isleworth painting are convinced that it is in part by Leonardo. Yet, like Eyre and Pulitzer, they are struggling to convince leading scholars. As well as Kemp, other respected Leonardo experts including the German art historian Frank Zollner deny that there is any substance to their claims. Why?
The foundation interprets historical evidence including written sources, as well as the fact that Leonardo sometimes created multiple versions of the same picture, such as the Virgin of the Rocks, to contend that he painted two portraits of Mona Lisa: one that was commissioned around 1503 by Lisa’s husband Francesco; the other a decade later by the artist’s patron Giuliano de’ Medici.
This would account for the younger appearance of the woman in the Isleworth painting. It would also explain why Raphael, who made a sketch probably from memory around 1505 after seeing the painting in progress, showed the sitter flanked by two columns. Similar columns are visible in the Isleworth picture, but only their bases appear in the painting in the Louvre, which has never been trimmed.
Admittedly, it is awkward that the support of the Isleworth picture is canvas, when Leonardo usually painted on wood. But the foundation points to the fact that the artist did occasionally paint on canvas – witness his tempera study of drapery on linen canvas in the Louvre, which dates from the 1470s, when Leonardo was still making his name. (This is, however, an exception to the general rule: Leonardo’s mature oil paintings, including the Louvre’s Mona Lisa, were executed on wood.)
In addition, the foundation has collaborated with scientists to help build its case. Feldman says that research physicist John Asmus of the University of California has run “a series of peer-reviewed scientific tests” determining “with 99 per cent scientific certainty that the same artist painted at least the face of both the Isleworth and Louvre Mona Lisas. Accordingly, if one denies that the Isleworth is by Da Vinci [sic], then one also denies the Louvre version.”
The foundation therefore concludes that Leonardo was responsible for the face and hands of the woman in the Isleworth picture, while an inferior artist must have painted the clumsy landscape in the background.
Seeing double
Among Leonardo scholars, however, the ‘two Mona Lisas’ theory remains moot – and that’s before the particular merits of the Isleworth picture are evaluated. Kemp believes that Leonardo only ever began one painting of Mona Lisa, which he then worked on intermittently until his death. While the foundation interprets revisions in “under-drawings” discovered during infrared analysis of the Isleworth painting as a sign that it must be an original work, Kemp argues that they “do not reveal any of the characteristics of Leonardo’s preparatory methods”. When I contacted him recently, Kemp reaffirmed his belief that the Isleworth picture is a later, “stilted” copy.
Although Kemp has closely scrutinised (and questioned) the evidence provided by the foundation, he has never actually studied the painting firsthand. Feldman told me that, despite an invitation, Kemp “refused” to examine the canvas before the foundation announced its findings in 2012.
But, says Kemp, “I have not ‘refused’ to see it. I decided not to [because] I only go to see works (at my expense and never for remuneration) if the evidence I have – documentation, provenance, digital images and scientific examination – convinces me that it is worth the time, travel and expense.” In the case of the Isleworth painting, he saw “nothing to convince me that seeing it in the flesh is of high priority. I am sent many non-Leonardos – as many as one a week – and have to make choices. If I travelled to see every hopeful ‘Leonardo’, I would be impoverished.” He adds: “If they want to bring the painting to me, they can.”
To gain a fresh perspective on the story, I invited the British scholar and leading Leonardo expert Luke Syson to comment on it. In 2011, Syson, who now works at the Metropolitan Museum of Art in New York, oversaw the blockbuster exhibition Leonardo da Vinci: Painter at the Court of Milan, at the National Gallery in London. The climax of the show was the introduction to the public of an oil-on-walnut picture of Christ as Salvator Mundi, or “Saviour of the World”.
Following intense analysis, art historians now agree that Leonardo painted it – making it the first “new” Leonardo for a century. (Incidentally, like the Isleworth Mona Lisa, this painting, which was previously thought to be a copy after a picture by one of Leonardo’s pupils, has been known since the start of the 20th Century.)
In other words, Syson knows a thing or two about attributing paintings to Leonardo. He is one of a handful of international scholars with well-established reputations as authorities on Leonardo whose backing the foundation would ideally like to secure.
Like Kemp, Syson has not seen the Isleworth picture in reality – though, as he says, “I have never been asked to view [it] – and that fact may in itself be revealing. A serious campaign to introduce a new work by a great artist would ensure it was shown to all the principal experts.”
But on the basis of published photographs of the picture, he has “never taken these claims seriously. In all honesty, one doesn’t in this instance need to see the work in the flesh to judge this Mona Lisa a rather poor, somewhat later copy, one of dozens that were made of this famous picture in the centuries that followed its creation.”
Syson says that “lots of the details are misunderstood” and points out that the canvas support “would be very off the mark for Leonardo, who [typically] painted on wooden panels. But most important it’s simply not good enough to be by Leonardo himself. This is just the most recent of many attempts made by optimistic owners to prove their copies of Leonardo’s pictures are by him, wholly or ‘in part’.”
Moreover, Syson does not accept that scientific evidence can conclusively settle debates over the authenticity of pictures such as the Isleworth Mona Lisa. “The bringing in of science – sometimes pseudo-science – is increasingly a feature of such claims,” he continues. “Even if the science is good, it can never prove an attribution (though it can sometimes disprove it); it’s only ever one of several factors we’d use to assess the authenticity and authorship of a work of art. The picture needs also to be of the right quality, and to contain the characteristic thought and ‘hand-writing’ of the artist.”
Syson notes that Leonardo’s workshop did produce copies of his paintings, sometimes imitating his every change as he executed the original. “But this picture, to judge from available photos and the fact it was painted on a canvas support, doesn’t come into this category. The story ignores art history, denies the principles of connoisseurship, and bypasses the experts. The whole thing is a little sad, especially for anyone visiting the display who is hoping to see a masterpiece by Leonardo.”
The Mona Lisa Foundation, of course, disagrees with this position. “We at the foundation find it hard to accept that there can be valid points of view against something which is now proven scientifically,” says Feldman, who also cites “public feedback” in Singapore that the Isleworth picture must be by Leonardo. However, advances in art history are determined not by public vote but by consensus among experts. And in the case of the Isleworth Mona Lisa, the foundation still has much to do in order to win more support among people whose opinions really count.
Alastair Sooke is art critic of The Daily Telegraph









லியர்னாடோ டா வின்சி நிஜமான
'மொனா லிசா' ஓவியத்தைக் கி.பி.1503ம் ஆண்டளவுகளில்
வரைந்திருக்கலாம் என்று
நம்புகிறார்கள். இந்த மொனா லிசா
ஓவியம் தற்சமயம் பாரிஸில் இருக்கும்
'லூவ்ரெ' (Louvre) கண்காட்சியகத்தில்
இருக்கிறது. அதனால் நிஜமென்று நாம்
நினைத்துக் கொண்டிருக்கும் மொனா
லிசா ஓவியத்தை 'லூவ்ரெ மொன
லிசா' என்று இனிச் சொல்லிக்
கொள்வோம். இதுவரை உலகமெங்கும்
தனியாளாக நின்று வெற்றி முழக்கம்
செய்துகொண்டிருந்த 'லூவ்ரெ
மொனா லிசா'விற்குப் போட்டியாக
முளைத்தது ஒரு புது 'மொனா
லிசா' ..Isleworth monalisa என்று அழைக்கப்படுகிறது ....
உலகமே அதிசயத்தில் துள்ளிக்
குதித்தது. ஏற்கனவே, 'டா வின்சி' ஒரு
மர்ம மனிதராக ஆச்சரியத்துடன்
பார்க்கப்பட்டு வருவதோடு, அவரின் பல
ஓவியங்களும் மர்மங்கள்
நிறைந்தவையென்று
பார்க்கப்பட்டுவரும் வேளையில்,
இப்படியொரு புதுத் திருப்பத்தை
யாரும் எதிர்பார்க்கவில்லை. அச்சு
அசலாக இரண்டும் ஒரே மொனா
லிசாவாக இருந்ததால், ஒருவேளை
அது மொனா லிசா என்னும் பெண்ணின்
இரட்டைப் பிறவியாக இருக்கலாமென்றும் சந்தேகப்பட்டார்கள்.
அப்புறம் இது மொனா லிசா என்னும்
பெண்ணின் இரட்டைப் பிறவியல்ல,
மொனா லிசா ஓவியத்தின் இரட்டை
என்ற முடிவுக்கு வந்தார்கள்.
இப்படியொரு இரட்டை (Twin) மொனா
லிசா ஓவியத்துக்கு இருப்பதை
யாரும் அதுவரைஅறிந்திருக்கவில்லை. இதைப் படித்துக் கொண்டிருக்கும் உங்களில் பலருக்குக் கூட இந்தச் செய்தி புதிதாகத்தான் இருக்குமென
நம்புகிறேன்.
லூவ்ரெ மொனா லிசாவின் இரட்டை
மொனா லிசா என்று சொலப்படும்
ஓவியம், சில நூற்றாண்டு காலமாக
யாரும் தீண்டாத ஓவியமாக, ஸ்பெயின்
நாட்டின் மாட்ரிட் நகரிலிருக்கும்
தேசியக் கண்காட்சிச்சாலையில் (The
Prado, Spain's national museum) இருந்து
வந்திருக்கிறது. 16ம் நூற்றாண்டிலும்,
17ம் நூற்றாண்டிலும் டா வின்சியின்
ஓவியங்களைப் பலர் நகலாக
வரைந்திருக்கிறார்கள். அவற்றில்
மொனா லிசாவின் ஓவியத்தையும்
நகலெடுத்துப் பல ஓவியங்கள்
இருக்கின்றன. நிஜமான ஓவியம்
இருக்கும்போது, நகல்களுக்குக்
கொடுக்கப்படும் முக்கியத்துவம்
எப்போதும் குறைவாகவே இருக்கும்.
அந்த நகல்களும் திறமையான
ஓவியர்களாலேயே
வரையப்பட்டிருக்கும்.
அதுமட்டுமில்லாமல், அவை
முந்நூறு, நானூறு ஆண்டுகள்
பழமையானவை. ஆனாலும் அவை
நகலென்பதாலேயே அதிகக் கவனம்
கொடுக்கப்படாமல் வைக்கப்படுகின்றன.
மொனா லிசாவின் நகல் ஓவியங்களை,
பிராடோ தேசியக்
கண்காட்சிச்சாலையில், தனியாகப்
பாதுகாத்து வந்தனர். மிகச்சமீபத்தில்,
நவீனத் தொழில்நுட்பங்களின் மூலம் அந்த ஓவியங்கள் அனைத்தையும் எடுத்து ஆராய்ச்சி செய்தனர். பழைய
ஓவியங்களுக்கு 'எக்ஸ் கதிர்' (X Ray),
'புற ஊதாக்கதிர்' (Ultra Violet),
'அகச்சிவப்புக் கதிர்' (Infrared) ஆகிய
கதிர்களைச் செலுத்தி ஆராயும்
முறை தற்சமயத்தில் வழக்கத்தில் உள்ளது. இந்தக் கதிர்ச் சோதனைகளால் ஒவ்வொரு மொனோ லிசா நகல்களையும் ஆராய்ந்து பார்த்தனர். அவற்றில் இருந்த
ஒரு மொனா லிசா ஓவியத்தில்,
மொனா லிசாவின் உருவம் மட்டும்
தெளிவாகத் தெரிய, உருவத்தைச்
சுற்றியுள்ள பின்னணியில் கருப்பு
நிறம் பூசப்பட்டிருந்தது. கருப்புநிறப்
பின்னணி பூசப்பட்டிருந்தது ஏனோ
வித்தியாசமான உணர்வைக் கொடுக்க,
அதை நன்றாக ஆராய்ந்து பர்த்தார்கள்.
அப்போதுதான் அந்த ஆச்சரியம் நடந்தது.
அந்த ஓவியத்தின் மீது எக்ஸ் கதிர்களைச் செலுத்திப் பார்த்தபோது மிரண்டே போனார்கள். அதுவரை காணத்தவறிய ஒரு காட்சியை அவர்கள் அங்கே கண்டனர். அந்த மொனா லிசா ஓவியத்தில் எக்ஸ் கதிர்கள் பட்டவுடன், கருப்பு நிறத்துக்குக் கீழே வேறொரு அழகான வர்ணமயமான பின்னணி அந்த ஓவியத்தில் வரையப்பட்டிருந்தது தெரிந்தது. அந்தப் பின்னணிக் காட்சியைச் சரியாகக்
கவனித்தபோது, நிஜமான லூவ்ரெ
மொனா லிசா ஓவியத்தின் பின்னணி
எதுவோ, அச்சு அசலாக அந்தப் பின்னணி அங்கே இருந்தது. என்ன நடக்கிறதென்றே
புரியவில்லை அந்த ஓவியத்தை
ஆராய்ச்சி செய்தவர்களுக்கு. அதாவது
ஒரு அழகான ஓவியத்தின் மேல்
பகுதிக்குக் கருப்பு வர்ணத்தை
வேண்டுமென்றே தீட்டி உருமறைப்புச்
செய்திருக்கிறார்கள். நிஜ ஓவியத்தைப்
போலவேயிருக்கும் இந்த ஓவியம், யார்
கண்ணிலும் பட்டுவிடக் கூடாது
என்பதற்காகவே அந்தக் கருப்பு வர்ணம்
பூசப்பட்டிருந்தது. யார் அப்படிச்
செய்திருந்தார்களென்பது பற்றிய எந்தக்
குறிப்பும் வரலாற்றில்
காணப்படவில்லை. கி.பி.1660ம்
ஆண்டளவுகளில் அந்தக் கருப்பு வர்ணம்
பூசப்பட்டிருக்கலாம். இதில்
இன்னுமொரு ஆச்சரியமும் இருந்தது.
அந்தக் கருப்பு வர்ணத்தை மெதுவாக
சுரண்டி நீக்க முயற்சித்தபோது, அது
இலகுவாகவே அந்த ஓவியத்திலிருந்து
நீங்கியது. அப்புறம் என்ன. அந்தக் கருப்பு
நிறம் மொத்தமாக நீக்கப்பட்டது.
நீக்கிவிட்டுப் பார்த்தவர்களுக்கு தங்கள்
கண்களையே நம்பமுடியவில்லை.
லூவ்ரெ மொனா லிசாவை அப்படியே
உரித்து வைத்ததுபோல இன்னுமொரு
மொனா லிசா அங்கே காணப்பட்டாள்.
ஒருவேளை இதுவும் ஏனைய மொன
லிசாக்களைப்போல நகல் ஓவியமாக
இருக்குமோவென்ற ரீதியில் ஆராய்ந்து
பார்த்தபோது, அந்த ஓவியம் லூவ்ரெ
மொனா லிசாவின் நகலல்ல என்று
இலகுவாகப் புரிந்து போனது.
இரண்டு ஓவியங்களிலும் இருந்தது
ஒரே மொனா லிசாதானென்றாலும்
அவை வரையப்பட்டிருந்த பார்வைக்
கோணங்களில் சற்றே மாற்றமிருந்ததைக்
கண்டுபிடித்தார்கள். ஏனைய நகல்கள்
அனைத்திலும் மொனா லிசாவின்
பின்னணிக் காட்சிகள் வெவ்வேறான
விதங்களில், மழுப்பப்பட்டவையாக
இருந்தன. ஆனால் இந்த மொனா
லிசாவில் இரண்டு பின்னணிக்
காட்சிகளும் ஒன்றுபோல இருந்தன.
இரண்டு மொனா லிசாக்களின்
காலங்களை ஆராய்ந்து பார்த்தபோது,
கிடைத்த பதில் ஆச்சரியத்திலும்
ஆச்சரியமாக இருந்தது.
இரண்டு மொனா லிசா
ஓவியங்களையும் பலவித
ஆராய்ச்சிகளுக்குட்படுத்திப்
பார்த்தபோது, இரண்டு ஓவியங்களுமே
ஒரே காலத்தில், அதுவும் ஒரே
நேரத்தில் வரையப்பட்டதாகத் தெரிய
வந்தது. அதாவது, லியர்னாடோ டா
வின்சியே இரண்டு படங்களையும் ஒரே
சமயத்தில் வரைந்திருக்க வேண்டும்.
இல்லையென்றால், லியர்னாடோ டா
வின்சி, மொனா லிசாவை மாடலாக
இருக்கும்படி வைத்து, அந்த ஓவியத்தை
வரைந்து கொண்டிருந்தபோது, டா
வின்சியைப் போலவே ஓவியம்
வரைவதில் திறமையுள்ள
வேறொருவர், அருகில்
நின்றுகொண்டு இரண்டாவது
ஓவியத்தை வரைந்திருக்க வேண்டும்.
இப்போது உங்களுக்கு ஒரு சந்தேகம்
வரலாம். "லியர்னாடோ டா வின்சியே
ஒரு ஓவியத்தை வரைந்த பின்னர்,
இரண்டொரு நாட்கள் கழித்து,
முதலாவது ஓவியத்தைப் பார்த்து
இரண்டாவது ஓவியத்தை
வரைந்திருக்கலாம்தானே!". இப்படி ஒரு
சந்தேகம் அனைவருக்கும் வருவது
இயல்புதான். 'அது எப்படி இரண்டு
ஓவியங்களையும் ஒரே நாளில், ஒரே
நேரத்தில் இருவர் அருகருகேயிருந்து
வரைந்திருக்கிறார்கள்' என்ற
முடிவுக்கு வந்தார்கள்? ஓவியங்களை
ஆராய்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த
முடிவுக்கு வந்ததற்குப் பெரிய
காரணம் இருந்தது. அதுவும்
ஆச்சரியமான ஒரு காரணம்தான்.
தொடர்வதற்கு முன்னர் ஒன்று. மொனா
லிசா ஓவியங்களில் இப்போது இரண்டு
ஓவியங்களைப்பற்றி நாம்
பேசிக்கொண்டிருக்கிறோம். இரண்டு
ஓவியங்களையும் குறிப்பிடுவதற்கான
பெயர்களை நாம் முடிவு செய்து
கொள்ளவேண்டும். நிஜமான மொனா
லிசா என்று கருதப்படும் ஓவியத்தை,
'லூவ்ரெ மொனா லிசா' என்று
சொல்வார்களென முன்னர்
சொன்னேனல்லவா? அதுபோல, இந்த
இரண்டாவது மொனா லிசா ஓவியத்தை
'பிராடோ மொனா லிசா' (Prado Mona
Lisa) என்று அழைக்கிறார்கள். நாமும்
இனி அப்படியே அழைத்துக்
கொள்ளலாம்.
இனி விசயத்துக்கு வருகிறேன். இரண்டு ஓவியங்களும் ஒரே நேரத்தில் வரையப்பட்டன என்பதற்கான சான்றுகள் ஆராய்ச்சியாளர்களுக்கு எப்படிக் கிடைத்தன தெரியுமா? லூவ்ரெ
மொனா லிசா ஓவியத்தை டா வின்சி
வரையும்போது, எந்த எந்த இடங்களை
அழித்து மீண்டும் திருத்தங்கள்
செய்திருந்தாரோ, அதே இடங்களில்
பிராடோ மொனா லிசா
ஓவியத்திலும் அழித்துத் திருத்திய
மாற்றங்கள் இருந்தன. அதாவது ஓவியம் வரையும்போது ஏற்படும் தவறுகளை அழித்துவிட்டு மீண்டும் திருத்தி வரையும்போது, அங்கு ஆழமான அடையாளங்களும், ஓவியங்களில் பயன்படுத்தும் மை அதிகளவில் ஒன்றுக்குமேல் ஒன்றாகப்
பூசப்பட்டிருக்குமல்லவா?
இவையனைத்தும் இரண்டு
ஓவியங்களிலும் ஒன்றுபோல இருந்தன.
லூவ்ரெ மொனா லிசாவில் அப்படிப் பல
இடங்களில் டா வின்சி திருத்தங்களைச்
செய்திருந்தார். அதேயளவு இடங்களில்
பிராடோ மொனா லிசாவிலும்
திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தன.
இதுவொரு சாதாரண நிகழ்வு
கிடையாது. தற்செயலாக அமையக்
கூடிய நிகழ்வாகவும் இருக்க
முடியாது. ஒரே இடத்திலிருந்து
இருவர் ஒரே ஓவியத்தை வரைந்து
கொண்டிருக்கும்போது, அதில்
தலைமையாக இருந்து வரைபவருக்கு
ஏற்படும் அதிருப்தியினால் மாற்றங்கள்
செய்யும்போது, அவரது
சிஷ்யரானவரும் அந்த மாற்றங்களைச்
செய்து வரைந்திருக்க
வேண்டுமென்று உறுதியாகச் சொல்ல
முடிந்தது. அத்துடன் அந்த இரண்டாவது
மொனா லிசா ஓவியத்தை வரைந்தவர்
நிச்சயமாக டா வின்சியின் சிஷ்யர்களில்
ஒருவராகத்தான் இருக்க முடியுமென்ற
முடிவுக்கும் வந்தார்கள்.
அந்த பிராடோ மொனா
லிசாவை ( 2 வது படம் ) நன்றாக உற்றுப் பாருங்கள்.
டா வின்சியே வரைந்ததாகச்
சொல்லப்படும் நிஜ லூவ்ரெ மொனா
லிசாவை விட, மிக அழகான
தோற்றத்தில் அந்தப் பிராடோ மொனா
லிசா ஜொலிப்பது தெரியும். அது
மட்டுமில்லாமல், அந்த மொனா
லிசாவின் உடையின் மேல்
போர்த்தியிருக்கும் மெல்லிய பட்டுத்
துணியினூடாக ஆடைகள்
தெரிவதைத் தத்ரூபமாக
வரைந்திருப்பது தெரியும். டா
வின்சியைப் போலவே கைதேர்ந்த
ஓவியர் ஒருவராலேயே அப்படி
வரைந்திருக்க முடியும். அல்லது டா
வின்சியால் மிகக்கவனமெடுத்துப்
பயிற்றுவிக்கப்பட்ட ஒருவராலேயே
அப்படியொரு ஓவியத்தை
வரைந்திருக்க முடியும். காரணம் நிஜ
மொனா லிசா ஓவியத்தை விட, இது
மிகவும் அழகாகவும், இளமையாகவும்
வரையப்பட்டிருக்கிறது என்பது
ஒத்துக்கொள்ள வேண்டிய உண்மைதான்.
டா வின்சியின் சிஷ்யர்களில்
ஒருவர்தான் அந்த ஓவியத்தை
வரைந்திருக்க முடியுமென்ற
முடிவுக்கு வந்தால், அது அவரின்
இரண்டு சிஷ்யர்களில் ஒருவராகத்தான் இருக்கும். அவர்தான் டா
வின்சியின் காதலரான 'அந்த்ரேயா
சலை' (Andrea Salai) என்பவர். அவர் இல்லாத பட்சத்தில் டா வின்சியின் பிரதான சிஷ்யரான ஃபிரான்செஸ்கோ
மெல்ஷி' (Francesco Melzi) ஆகவும்
இருக்கலாம். திறமையின்
அடிப்படையில் பார்த்தால் மெல்ஷி
வரைந்திருக்கவே சாத்தியம் அதிகம்
உண்டு. ஆனால், டா வின்சியின்
அந்தரங்க ஓவியங்களை, அவருடன்
இருந்து வரையக் கூடியவரென்று
பார்த்தால் சலையாக இருக்கும்
சாத்தியம் உண்டு. இரு ஓவியங்களும்
மிக அருகருகே இருந்தவாறே
வரையப்பட்டிருக்க வேண்டும். அதற்குக்
காரணம் இரண்டு ஓவியங்களும்
வரையப்பட்டிருக்கும் பார்வைக் கோணம் (Angle of view) என்று சொன்னேனல்லவா?
அந்தப் பார்வைக் கோண
வித்தியாசத்தைக்கூட
ஆராய்ச்சியாளர்கள் அளந்திருக்கிறார்கள்.
மிகச்சரியாக 2.7 அங்குலம்
இடைவெளிகளிலுள்ள பார்வைக்
கோணங்களில் அந்த இருவரும்
நின்றுகொண்டு மொனா லிசாவை
வரைந்திருக்கின்றனர். இதற்கு
இன்னுமொரு முக்கிய ஆதாரம் இரண்டு
படங்களிலும் காணப்படுகின்றது.
மொனா லிசா உட்கார்ந்திருக்கும்
நாற்காலியின் மேற்பகுதியின் ஒரு
பக்கம், சொற்ப அளவில் பிராடோ மொனாலிசா ஓவியத்தில் தெரிகிறது.
ஆனால், லூவ்ரெ மொனா லிசா
ஓவியத்தில் அந்த நாற்காலியின்
அடையாளம் தெரியவில்லை.
இதிலிருந்து, லூவ்ரெ ஓவியத்தை
வரைந்தவர் மொனா லிசாவுக்கு நேர்
எதிரே நின்று
வரைந்திருக்கிறாரென்றும், பிராடோ
ஓவியத்தை வரைந்தவர் சற்று இடப்பக்கம் நின்றபடி வரைந்திருக்கிறாரெனவும்
தெரிய வருகிறது. இந்த இடத்தில்தான்
சிலருக்கு முக்கியமானதொரு
சந்தேகம் தோன்றுகிறது.
லியர்னாடோ டா வின்சி இடது
கைப்பழக்கமுள்ளவர். அப்படியென்றால், இடது பக்கம் நின்று
வரைந்தவராக லியர்னாடோ டாவின்சியாகவல்லவா இருக்கவேண்டும். இடது பக்கம் வரையும் பலகை இருக்கும்போது, அதை இடக்கையால் வரைவதுதானே இலகுவாக இருக்கும்.
அப்படிப் பார்க்கும்போது, நாம் தற்சமயம்
நிஜமென்று நினைத்துக்
கொண்டிருக்கும் லூவ்ரெ மொனா
லிசா ஓவியத்தை டா வின்சியின்
சிஷ்யன் வரைந்திருக்க வேண்டும்.
பிராடோ மொனா லிசா ஓவியத்தை
டா வின்சி வரைந்திருக்க வேண்டும்.
உண்மை ஏன் இப்படியும் இருக்கக்
கூடாது? சரியாகப் பார்த்தால்,
அழகாகவும், ஜொலிப்பாகவும்,
இளமையாகவும், தெளிவாகவும்
இருப்பது பிராடோ ஓவியம்தான்.
அப்படிப் பார்க்கையில் அதை டா வின்சி
வரைந்திருக்கத்தான் சாத்தியம் அதிகம்.
இதுவரை நிஜத்தை நிழலென்றும்,
நிழலை நிஜமென்றும் நாம் நம்பி
வருகின்றோமா? இப்போது இந்தப்
பகுதிவின் ஆரம்பத்தில் 'எனக்குள்
ஒருவன்' படத்தைப் பற்றி நான் ஏன்
சொன்னேனென்று உங்களுக்குப்
புரிந்திருக்கும். எது
எப்படியிருந்தாலும், இரண்டு
ஓவியங்களிலும் டா வின்சியின்
ஆளுமை இருந்து கொண்டுதான்
இருக்கிறது. அதுவரைக்கும்
மகிழ்ச்சிதான். இதை மீளப்பரிசோதனை
செய்யும் அளவுக்கு லுவ்ரெ மொனா
லிசா ஓவியம் இல்லை. மேலதிகமான
பரிசோதனைகளுக்கு அதை
உட்படுத்தும்போது கெட்டுப்
போவதற்கான வாய்ப்புகள் அதிகம்
உள்ளது. ஏற்கனவே அந்த ஓவியம்
மிகவும் பழுதடைந்த
நிலையிலேயேதான்
காணப்படுகிறது. அதனால் அதுவே டா
வின்சி வரைந்த நிஜ ஓவியமென்று
நம்பிவிடுவதில் நம் யாருக்கும்
பிரசனை இல்லை. இவையெல்லாம்
ஒருபுறம் இருக்க, இந்த இரண்டு மொனா
லிசா ஓவியங்களையும் டா வின்சி
ஒரு முக்கிய தேவையைக் கருதியே
இரண்டுவிதமான பார்வைக்
கோணங்களில்
வரைந்தெடுத்திருக்கிறாரென்று
அறிவியல் ஆராய்ச்சியாளர்கள்
சொல்கிறார்கள். அவர்கள் சொல்வதைக்
கேட்கும்போது தலையே சுற்றுவது
போல இருக்கும். மிகச்சமீபத்தில்
கண்டுபிடிக்கப்பட்ட நவீன
தொழில்நுட்பத்தை, டா வின்சி
அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னரே
பரிசோதித்துப்
பார்த்திருக்கிறாரென்று, தகுந்த
ஆதாரங்களுடன் நிரூபிக்கிறார்கள்
ஆராய்ச்சியாளர்கள்.
அப்படி டா வின்சி
முயற்சி செய்து பார்த்தது என்ன
தெரியுமா? மனித வரலாற்றிலேயே
முதன்முதலாக முப்பரிமாணத்
தோற்றத்தைத் (3 Dimension) தரக்கூடிய
ஓவியத்தை டா வின்சி
வரைந்திருக்கிறார் என்பதுதான் அது.