Search This Blog

Showing posts with label Leadership. Show all posts
Showing posts with label Leadership. Show all posts

Sunday, January 26, 2020

சின்ன எம்.ஜி.ஆர் ஜெய்சங்கரின் புகழ்

ஜெய்சங்கரை* வைத்து படம் எடுத்து ஒரு தயாரிப்பாளர் நஷ்டம் அடைந்தார், நடுவீதிக்கு வந்தார் என்று எவராலும் விரல் நீட்டி கூற முடியாது. காரணம் அவர் யாரிடமும் எனக்கு இவ்வளவு சம்பளம் கொடுங்கள் என்று கேட்டதில்லை.
முடிந்ததை கொடுங்கள் என்பார். அவர் வீட்டு பீரோ நிறைய திரும்பி வந்த காசோலைகள் பண்டல் பண்டலாக இருந்தது என்பார்கள்.
அதேபோல தோல்வி அடைந்த படங்களின் சம்பளத்தை திருப்பிக் கொடுப்பதை தொடங்கி வைத்தவரே ஜெய்சங்கர் தான். லைட் பாயிலிருந்து ரசிகன் வரை யார் அவரை உதவி என்று தேடிப்போனாலும் இருப்பதை கொடுக்கும் கொடை வள்ளலாக வாழ்ந்தார்.


எம்.ஜி.ஆரை சந்திப்பது கடினம். அப்படி சந்தித்து விட்டால் பெரியதாக அள்ளிக் கொடுப்பார். ஜெய்சங்கரை சந்திப்பது எளிது. அவர் சக்திக்கேற்ப கிடைக்கும். அதனால்தான் ஜெய்சங்கரை சின்ன எம்.ஜி.ஆர் என்பார்கள்.
வழக்கறிஞர்களும், நீதிபதிகளும் நிறைந்த பாரம்பரிய குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்சங்கர், சோ நடத்திய 'விவேகா பைன் ஆர்ட்ஸ்' நாடக குழுவில் நடித்துக் கொண்டிருந்தவர் 'இரவும் பகலும்' படத்தில் அறிமுகமானார்.
முதல் படமே வெற்றி பெற புகழ்பெற்றார் ஜெய்சங்கர். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற பெரிய நடிகர்கள் ஒரு பக்கம், ஜெமினி கணேசன், ரவிசந்திரன் என இளம் பெண்களை கவர்ந்து கொண்டிருந்த ஹீரோக்கள் இன்னொரு பக்கம். இதற்கு இடையில்தான் ஜெய்சங்கர் புகுந்து தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். யார் நீ, பொம்மலாட்டம், குழந்தையும் தெய்வமும், மன்னிப்பு, பட்டணத்தில் பூதம் போன்ற படங்கள் அவரை அடுத்தடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் சென்றன.
மற்ற நடிகர்களிடமிருந்து தன்னை வேறுபடுத்திக் காட்ட ஹாலிவுட் ஹீரோக்களின் சாயலில் நடிக்க ஆரம்பித்தார். சிஐடி சங்கர், வல்லவன் ஒருவன், கருந்தேள் கண்ணாயிரம், கங்கா, ஜக்கம்மா, ஜம்பு, எங்க பாட்டன் சொத்து போன்ற படங்களில் ஜேம்ஸ் பாண்ட் பாணியில் நடித்தார். துணிவே துணை, கங்கா போன்ற படங்களில கவுபாய் கேரக்டர்களில் நடித்தார். இவர் காலத்தில்தான் ராஜ்கோகிலா, ஜெயமாலா, ராஜ்மல்லிகா, போன்ற கவர்ச்சி நடிகைகளும் சினிமாவுக்கு வந்தார்கள்.
100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் ஜெய்சங்கர் கடைசி வரை தனக்கென தனி பாணி வைத்துக் கொண்டார். அவர் நடித்த வண்ணப் படங்கள் ஒரு சில தான். வண்ணப் படங்கள் வந்த பிறகும் நீண்ட நாள் கருப்பு வெள்ளை படங்களில் நடித்துக் கொண்டிருந்தவரும் ஜெய்சங்கர்தான். காரணம் அவர் கடைசி வரை சிறு தயாரிப்பாளர்களின் ஹீரோவாகவே இருந்தர்.
ரஜினி, கமலின் வருகைக்கு பிறகு அவரால் அவர்களுடன் போட்டிபோட முடியவில்லை. சினிமாவை விட்டு மெல்ல விலக ஆரம்பித்தார்.
சில ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு ஏவிஎம் தயாரித்த 'முரட்டுக்காளை' படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்தார். ஏற்கெனவே 'காயத்ரி' என்ற படத்தில் ஜெய்சங்கர் ஹீரோவாகவும், ரஜினி வில்லனாகவும் நடித்தது குறிப்பிடத்தக்து. முரட்டுக்காளை ஜெய் சங்கருக்கு ரீ எண்ட்ரியை கொடுத்தது. 61 வயதில் அவர் சாகும் வரையில் நடித்துக் கொண்டுதான் இருந்தார்.

இளைஞர்களுடன் இணைந்து 'ஊமை விழிகள்' போன்ற படங்களிலும் நடித்தார். 100 படங்களுக்கு மேல் ஹீரோ. எம்.ஜி.ஆர் போன்ற வள்ளல் குணம். அழகு குறையாத நடிகன், இத்தனை இருந்தும் ஜெய்சங்கரின் புகழ் இன்னும் குடத்திலிட்ட விளக்காத்தான் இருக்கிறது.

Monday, January 20, 2020

"மனிதராக" வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஆத்மீகத் துறவி ரதன தேரர்

மதம் கடந்து நல்லதொரு "மனிதராக" வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஆத்மீகத் துறவி ரதன தேரர்.
இளம் வயதில் துறவறம் பூண்டு இலங்கையின் பல பாகங்களிலுமுள்ள தமிழ் மக்களுடன் இதய சுத்தியுன் உறவைப் பேணி தமிழ் மக்கள் சமகாலத்தில் படும்முகம் கொடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக சவால்களைக் கண்டு மனம் வருந்தி உண்மையை உணர்ந்துள்ள துறவி.
தற்காலத்தில் அவ்வாறு துறவறம் பூண்டு ஏனைய மக்களின் மனங்களைப் புண்படுத்திக் கொண்டிருக்கும் துறவிகள் மத்தியில் இவர் "சேற்றில் முளைத்த செந்தாமரைதான்"
இவர் உறவு வைத்துள்ள பெரும்பாலானோர் தமிழர்களே.
சரளமாக தமிழ் மொழி பேசும் இவர் ஹொரணைப் பகுதியொன்றிலுள்ள பாடசாலையில் தமிழ் ஆசிரியராகக் கடமை புரிந்து கொண்டிருக்கிறார்.
இவருடன் இன்று தொலைபேசியில் உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு நான் பெரும் மகிழ்ச்சிஅடைகிறேன்.
இவருடைய தமிழ் மொழித் திறமையைக் கண்டு வியப்புற்றேன்.
இலங்கைத் தமிழ் மக்கள் படும் துன்பங்களை எண்ணி மனம் வருந்தினார்.

அவ்வாறு அவருக்கு தமிழ் மொழி தெரிந்த படியாலே அவரின் மன உட்கிடக்கை என்னவென்று புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது.
அவருடனான கருத்துப் பகிர்விலிருந்து அறியப்பட்டதொன்று என்னவென்றால்; தமிழர்களும் சிங்களவர்களும் மொழியால் மட்டுமே வேறுபாடு கொண்டவர்கள் என்றும் இலங்கை வரலாற்றில் இரு இனத்தவரும் அன்புடனும் ஒற்றுமையாகவும் வாழ்ந்து வந்தபோது குறுகிய மனப்பான்மை கொண்ட அரசியல் வாதிகளே தங்கள் சுயநலத்திற்காக பிரித்தாண்டு கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மையை கூறி கவலையடைந்தார்.
இப்படியான புத்த துறவிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஓர் ஆன்மீகவாதி என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும்.
வாழ்த்துக்கள் தேரரே.

Shivapalan 

Sunday, October 13, 2019

Dr Abiy Ahmed Ali -2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமரான அபி அகம்மது அலிக்கு

2019 அமைதிக்கான நோபல் பரிசு எத்தியோப்பிய பிரதமரான அபி அகம்மது அலி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவரை பற்றி அவ்வளவாக யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதற்கு காரணம் ஊடக வன்முறை.
இவர் நோபல் பரிசை பெறுவதற்கு நூறு சதவீதம் தகுதியுடையவர்.
எத்தியோப்பியா பெரும் ஆயுத போராட்ட வன்முறையில் சிக்கி சீரழிந்து கொண்டிருந்த வேளையில், 2018 ஏப்ரலில் ஆட்சியை பிடித்தார்.
ஆட்சிக்கு வந்தவுடன், அந்நாட்டில் இருந்த அவசர நிலை பிரகடனத்தை ரத்து செய்தார்.
அரசியல் கைதிகளை எந்த நிபந்தனையும் இன்றி விடுவித்தார்.
போராடிய ஆயுத இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, நாட்டில் அமைதியை நிலைநாட்டினார்.
அவர்களுக்கு அரசியல் அதிகார பதவிகளை வழங்கினார்.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் ஆட்சியதிகாரத்தில் பெண்கள் மூன்றில் ஒரு பங்கு அரசியல் அதிகாரத்துக்கு போராடி கொண்டிருக்கும் அதே காலகட்டத்தில், எத்தியோப்பிய நாட்டு ஆட்சியதிகாரத்தில் பெண்களுக்கு 50 சதவீத பிரதிநிதித்துவம் கிடைக்கும்படி செய்தார்.
இங்கே இந்தியா காஷ்மீர் போல, எத்தியோப்பியாவுக்கும் எரித்திரியா என்ற சிறிய நாட்டிற்கும் நீண்ட காலமாக இருந்துவந்த சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்தார்.
எரித்ரியாவின் முழு சுதந்திரத்தை அங்கீகரித்தார்.
தனது அண்டை நாடான சூடானில் நடைபெற்ற பிரச்சனையில் தலையிட்டு அங்கு அமைதி நிலவ பெரிதும் காரணமாக இருந்தார்.
பிரேசில் நாட்டில் கார்ப்பரேட் நலன்களுக்காக காடுகள் தீவைத்து எரிக்கபடுகிறது. ஆனால் எத்தியோப்பிய பிரதமர்
சுற்றுச்சூழலை மேம்படுத்த, எத்தியோப்பிய பள்ளிக்கூட பிள்ளைகளை வைத்து ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நட செய்தார்.

எத்தியோப்பிய விமான சேவையை உலக தரத்திற்கு உயர்த்தினார்.
இன்று விமான சேவையில் உலகிலேயே சிறந்தது எத்தியோப்பியாதான் என்பது உறுதியாகியுள்ளது.

இதையெல்லாம் தான் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே செய்து முடித்தார்.
The Norwegian Nobel Committee has awarded the 100th Nobel Peace Prize to the Prime Minister of Ethiopia, Dr Abiy Ahmed Ali, for "his efforts to achieve peace and international cooperation" and for his "decisive initiativeto end the long-running military stalemate with neighbouring Eritrea.
was one of the people who nominated Abiy Ahmed - not just for his remarkable achievements, but also for his profound commitment to the cause of peace and friendly relations among nations in the Horn of Africa and beyond.
In the nomination letter, I wrote: "By saving a nation of 108 million people from the precipice of an economic and political explosion, he captured the imagination of his own people, and people across the African continent as an embodiment of hope ... and his messages of peace, tolerance, and love and understanding are being felt far beyond Ethiopia."
Awol K Allo is Lecturer in Law at Keele University, UK.
Thanks, https://www.aljazeera.com

Sunday, September 1, 2019

ஆக்கபூர்வமான விமர்சனம்

எதிரியின் மீதான நம் விமர்சனம்
புலி இரையைக் கவ்வுவதைப் போல வேகமாய் இருக்க வேண்டும்.
நட்பு சக்திகளின் மீதான விமர்சனம்
பூனை தன் குட்டியை கவ்வுவதைப் போல மென்மையாய் இருக்க வேண்டும்.
ஆம். எதிரி மீதான விமர்சனம் அவனை அம்பலப்படுத்துவதாக இருக்க வேண்டும்.
நண்பன் மீதான விமர்சனம் அவனை எம் பக்கத்திற்கு வென்றெடுப்பதாக இருக்க வேண்டும்.
உணர்ச்சி வேகத்தில் நாம் நட்பு சக்திகளின் குறைகளை வெறுப்பாய் எதிர் கொள்வது ஒருபோதும் உதவாது.
ஏனெனில், நிர்ப்பந்தம் தோலைத்தான் தொடும்.
ஆனால், அறிவுறுத்தல் ஆத்மாவைத் தொடும்
சமூகத்தில் நிலவும் முரண்பாடுகளை கையாள்வது குறித்து நாம் இதனைக் கவனத்தில் கொள்ளல் வேண்டும்.
எமது உரையாடல்கள் பொறுப்புணர்வுடன் ஆக்கபூர்வமானவையாக இருத்தல் வேண்டும்.
நன்றி- tholar

Monday, July 15, 2019

தலைவர் காமராசரின் பிறந்ததினம் ஜூலை 15



" காமராசர் கல்லூரியில் படிக்கவில்லையே தவிர - வாழ்க்கைப் பாடத்தை நன்றாகப் படித்தவர்! மக்களின் புன்னகையை - பெருமூச்சை - கண்ணீரைப் படித்து அவர் பாடம் பெற்றார்!

முப்பது ஆண்டு - நாற்பது ஆண்டு - என்று மக்களிடம் தோண்டாற்றினால்தான் இந்தப் பாடத்தைப் பெறமுடியும்!

. . . வைரம் என்பது நீண்ட நெடுங்காலத்திற்கு முன்பு பூமியின் அழுத்தத்தால் கீழே அடகி நடுங்கிக் கிடந்த கரித்துண்டுதான்! அதுபோல, நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து தோன்றிய வைரமணிகளிலே ஒருவரே காமராசர்! "
- அறிஞர் அண்ணா.

பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழாவான இன்று அவருக்கு என் புகழாஞ்சலியைச் செலுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க பெருந்தலைவர் காமராஜரின் புகழ்!
உயரிய அறம் சார்ந்த காந்திய அரசியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட கடைசி அரசியல்வாதி காமராஜர். அதனால் தான், “காலத்தின் கடைசிக் கருணை காமராஜர்” என்றார் கண்ணதாசன்.
 

இன்று பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாள்! அவரைப் பற்றிய ஒரு சில செய்திகளை இன்றைய கடிதத்தில் நினைவு கூர்வது அவருக்கு கழகம் செலுத்துகின்ற மரியாதையாக இருக்குமென்று கருதுகிறேன்.

"கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட அவசர உத்தரவு - ஆசிரியர்கள் தவிப்பு" என்ற தலைப்பில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு "தினமலர்" நாளேட்டின் சிறப்பு நிருபர் வெளியிட்ட செய்தியில், "முந்தைய தி.மு.க. ஆட்சிக் காலத்தில் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ம் தேதி, கல்வி வளர்ச்சி நாளாக அறிவிக்கப்பட்டது. இவ்விழாவையொட்டி, அனைத்துப் பள்ளி களிலும், பல்வேறு வகையான போட்டிகளை முன் கூட்டியே நடத்தி, அதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, ஜூலை 15ம் தேதி பரிசுகள் வழங்கி, விழா கொண்டாடப்பட்டு வந்தது. இதற்காக, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு தனி நிதி உதவியும் வழங்கப் பட்டது. இந்த விழாவை தொடர்ந்து நடத்த வேண்டும் என்பதற்காக, முந்தைய (தி.மு.கழக) அரசு தனி சட்டமும் கொண்டு வந்து அமல் படுத்தியுள்ளது. இந்நிலையில், இன்று காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. ஆனால், இவ்விழாவைக் கொண்டாடுவது குறித்தோ, முன்கூட்டியே போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்படுவது குறித்தோ, தமிழக அரசு முன்கூட்டியே எவ்வித அறிவிப்பையும் பள்ளிகளுக்கு தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று மாலை அவசர அவசரமாக அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, "பேக்ஸ்", "இ. மெயில்" மூலம் காமராஜர் பிறந்த நாள் விழாவை அனைத்து வகையான பள்ளிகளிலும் கொண்டாட வேண்டும். அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளுக்கு விழாவிற்கான செலவுத் தொகை பின்னர் வழங்கப்படும் என அரசு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடைசி நேரத்தில், திடீரென அரசு இப்படி உத்தரவிட் டுள்ளதால், விழாவை எப்படி நடத்துவது என தெரியாமல் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந் துள்ளனர்."
இவ்வாறு "தினமலர்" நாளேட்டில் செய்தி வந்தது.

காமராஜர் பிறந்த நாளுக்கு முதல்நாள் திடீரென இவ்வாறு அவசரமாக அரசு அறிவிக்கக் கூட காரணம் என்ன? 14-7-2011 அன்று நான் விடுத்த ஓர் அறிக்கையில்;

2007-2008ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு - பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த நாளை "கல்வி வளர்ச்சி நாள்" என்று ஒவ்வொரு பள்ளி யிலும் கொண்டாடப்பட வேண்டுமென்று தமிழக அரசின் சார்பில் அறிவித்ததோடு அதனைச் சட்டமாகவும் கொண்டு வந்து தி.மு. கழக ஆட்சியில் நிறைவேற்றினோம். ஆனால் இந்த ஆண்டு அரசின் சார்பில் செய்துள்ள அறிவிப்பில் கூட - பெருந்தலைவர் காமராஜர் 109ஆம் பிறந்த நாள் அன்று அவரது திருவுருவச் சிலைக்கு அமைச்சர்களும், நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர்களும் மாலை அணிவிப்பார்கள் என்று மட்டுமே விளம்பரம் செய்யப்பட்டுள்ளதே தவிர - அந்த நாள் கல்வி வளர்ச்சி நாள் என்றுகூட அறிவிக் கப்படவில்லை என்றெல்லாம் தெரிவித்திருந்தேன்.

அதன் பின்னர்தான் அரசாங்கம் விழித்துக் கொண்டு காமராஜர் பிறந்த நாளைக் கொண்டாட முடிவு செய்தது. அதனால்தான் இந்த ஆண்டு என்னதான் இந்த ஆட்சியினர் செய்கிறார்கள் என்று இன்று வரை பார்த்தேன். இன்றைய தினம் அரசின் சார்பில் வெளிவந்துள்ள அரைப்பக்க விளம்பரத்தில், முதலமைச்சரும், மற்ற அமைச்சர்களும் கடற்கரை காமராஜர் சாலையிலே உள்ள பெருந்தலைவர் காமராஜரின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்துவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறதே தவிர, பள்ளிகளில் காமராஜர் பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று கொண்டாடும்படி எந்த அறிவிப்பும் இல்லை.

காமராஜர் அவர்களுடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடுவோம் என்று திராவிட முன்னேற்றக் கழக அரசின் சார்பில் அறிவித்து, அந்த அறிவிப்பு தொடர்ந்து நிரந்தரமாக செயல்பட குறுக்கே வருகின்ற அரசு எப்படியிருக்குமோ என்ற சந்தேகத் தினால் - அதை ஒரு சட்டமாகவே ஆக்கி, ஜூலை 15 என்றால் அன்றைய தினம் காமராஜருடைய பிறந்த நாளை சட்டப்படி பள்ளிகளில் கொண்டாட வேண்டு மென்று - சட்டப்பேரவையிலேயே சட்டம் நிறைவேற்றி, அதை கழக ஆட்சியில் உறுதிப்படுத்தியிருக்கிறோம்.

ஏன் சட்டத்தை மாற்ற முடியாதா என்று கேட்கக் கூடும். மாற்றலாம், ஆனால் ஒரு அறிவிப்பை மாற்றுவது சுலபம். அதைக் கண்டு கொள்ளாமலே இருந்து விட்டால் தானாகவே மாறிவிடும். அல்லது வேண்டுமென்றே கூட அறிக்கை விட்டு அதை மாற்றி விடலாம். ஆனால் சட்டமாகச் செய்தால், அதை திரும்பப் பெற, மாற்றுவதற்கு, சட்டசபையைக் கூட்டியாக வேண்டும். சட்டமன்றத்தைக் கூட்டி, இப்படி கழக ஆட்சிக் காலத்தில் கருணாநிதி முதல் அமைச்சராக இருந்த போது காமராஜருடைய பிறந்த நாளை கல்வி வளர்ச்சி நாள் என்று குறிப்பிட்டு கொண்டாடினார். அதற்காக ஒரு சட்டம் செய்தார், அந்தச் சட்டத்தை நாங்கள் விலக்கிக் கொள்கிறோம், ரத்து செய்கிறோம் என்று சொல்ல வேண்டும். ஆனால் அப்படிப்பட்ட சட்டத்தை ரத்து செய்து விட்டு வெளியிலே நடமாட முடியுமா என்பது வேறு விஷயம். அதனால் தான் இதைச் சட்டமாகவே ஆக்கினோம்.

2006 - சட்டமன்றத் தேர்தலின் போது திராவிட முன்னேற்றக் கழகம் வெளியிட்ட தேர்தல் அறிக்கை யில், ‘காமராஜர் பிறந்த நாளாம் ஜூலை 15ஆம் தேதியைக் கல்விக் கண் திறந்த நாளாக அறிவித்துப் பள்ளிகளில் விழா எடுப்போம்’ என வாக்குறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டில் கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிறந்த நாளான ஜூலைத் திங்கள் 15ஆம் நாளைக் ‘கல்வி வளர்ச்சி நாள்’ என அரசு அறிவித்து கழக ஆட்சியில் 24.5.2006 அன்று ஆணை வெளியிட்டு, பின்னர் சட்டமாக்கப்பட்டது. அதன்படி, 15.7.2006 அன்று தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் காமராஜர் அவர்களின் திருவுருவப் படம் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மாணவ, மாணவிகளுக்கு, பேச்சு, கட்டுரை ஓவியப் போட்டிகளும், கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் அளிக்கப்பட்டன. அத்துடன் அவ்விழாவில் 2 வயது முதல் 15 வயது வரை உள்ள குழந்தைகளுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் சத்துணவுடன் வாரம் இரண்டு முறை முட்டை வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு தமிழகம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

பின்னர், 15.7.2007 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டபோது, சத்துணவுடன் வாரம் மூன்று முறை முட்டை வழங்கும் திட்டமும், 15.7.2008 அன்று கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டபோது, முட்டை சாப்பிடாத குழந்தைகளுக்குச் சத்துணவுடன் வாரம் மூன்று முறை வாழைப்பழம் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு; கழக ஆட்சி நடைபெற்ற வரை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டது.
பெருந்தலைவர் காமராஜர் அவர்களை தி.மு. கழகம் பெருமைப்படுத்திய ஒரு சில நிகழ்வுகளை நினைவு கூர்ந்திட வேண்டுமென்றால், காமராசர் அவர்கள் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வேளையில் அவர் சட்டப்பேரவை உறுப்பினர் அல்ல. ஆனால், 6 மாத காலத்தில் அவர் பேரவை அல்லது மேலவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். அதனால் அப்பொழுது குடியாத்தம் இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். அப்போது பேரறிஞர் அண்ணா அவர்கள் திராவிட நாடு இதழில் "குணாளா, குலக்கொழுந்தே" என எழுதி, பெருந் தலைவர் காமராசரின் வெற்றிக்குப் பாடுபடுவோம் எனக் கூறி ஆதரவு தெரிவித்தார். அதன்படி, தி.மு. கழகம்; காமராசரின் வெற்றிக்காக பாடுபட்டு அவரை வெற்றி பெறச் செய்தது.

சென்னை மாநகராட்சி தி.மு. கழக நிர்வாகத்தில் இருந்தபோது பெருந்தலைவர் காமராசர் அவர்களுக் குப் பெரியார் பாலத்திற்கு அருகில் சிலை அமைத்து, அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு அவர்களைக் கொண்டு 9.10.1961 அன்று அச்சிலையைத் திறந்து வைத்தது கழகம்.

பெருந்தலைவர் காமராசர் அவர்கள் 2.10.1975 அன்று மறைந்தபின், கிண்டி காந்தி மண்டபத்திற்கு அருகில் அவருக்கு நினைவு மண்டபம் எழுப்பியது. அந்த நினைவு மண்டப முகப்பில் பெருந்தலைவர் காமராசர் அவர்களின் மார்பளவுச் சிலை திறந்து வைக்கப்பட்டது.

1990-இல் சென்னை விமான நிலையத்தில் உள்ள உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிலையத்திற்கு "காமராசர் முனையம்" எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சென்னை கடற்கரைச் சாலைக்கு 1997-இல் "காமராசர் சாலை"" எனப் பெயர் சூட்டப்பட்டது.

கடற்கரைக்கு அருகில் கட்டடங்கள் கட்டுவதற்கு தடை இருந்த காரணத்தால், குமரி முனையில் காமராசரின் அஸ்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் மணி மண்டபம் கட்டமுடியாத நிலை இருந்தது. அதன்பின், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் அவர்களிடம் பேசி, கோரிக்கை வைத்து, அனுமதி பெற்று, காமராசர் மணி மண்டபம் கட்டி முடிக்கப்பட்டு 2.10.2000 அன்று திறந்து வைக்கப்பட்டது.

2006- இல் பெருந்தலைவர் காமராசர் பெயரில் அரசு விருது ஒன்றை நிறுவி சமூகப் பொதுத் தொண்டுகளில் சிறந்து விளங்கும் சான்றோர் ஒருவரை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் பொற்கிழியுடன் பெருந்தலைவர் காமராசர் விருது வழங்கப்பட்டது.

2006-இல் பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பிறந்த ஜூலை 15 ஆம் நாளை "கல்வி வளர்ச்சி நாள்" எனச் சட்டமியற்றி ஆண்டுதோறும் ஒவ்வொரு பள்ளிக்கும் தனி நிதி ஒதுக்கீடு செய்து கல்வி வளர்ச்சி நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் இராதாபுரம் பேருந்து நிலையம் 77 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டு, 19.7.2010 அன்று பெருந்தலைவர் காமராசர் பெயர் சூட்டப்பட்டது.

இந்தியாவில் நெருக்கடி நிலை கொண்டு வரப்பட்டு, தலைவர்கள் எல்லாம் சிறையிலே வாடிய போது, சுதந்திர இந்தியாவில் ஜனநாயகம் வீழ்ச்சி யடைகிறது என்பதையும், தனது தேசிய சகாக்கள் சிறைவாசம் அனுபவிக்கிறார்கள் என்பதையும் தாங்கிக் கொள்ள முடியாத காமராசர் உடல் நலிவுற்றுப் படுத்த படுக்கையானார்.

ஒரு நாள் காலை நானும் அன்றைய கல்வி அமைச்சர் நாவலரும் காமராஜர் அவர்களைக் காண அவரது இல்லம் சென்றோம். அவர் அருகே அமர்ந்த என்னைக் கண்டதும் அவரது கண்கள் கலங்கின. மெதுவாகத் தொட்டேன். தழுவிக் கொண்டார். அவரது கண்கள் நீர்வீழ்ச்சிகளாயின. ‘தேசம் போச்சு! தேசம் போச்சு’ என்று உரக்கக் கூவினார். நான் வாய்விட்டுக் கதறி அழுது விட்டேன். நாவலர் கண்ணீர் வடித்தவாறு எங்களிருவரையும் தேற்றினார். ‘அய்யா! நீங்கள் சொல்லுங்கள்! இப்போதே நாங்கள் அனைவரும் ராஜினாமா செய்து விடுகிறோம்! இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த, சர்வாதிகாரத்தை அழிக்க நீங்கள் தலைமையேற்று அணி நடத்துங்கள்! உங்கள் பின்னால் நாங்கள் வரத் தயார்!’ என்றேன். "பொறுமையாக இருங்கள்! அவசரப்படாதீர்கள்! இப்போது இந்தியாவில் தமிழ்நாட்டில்தான் ஜனநாயகம் இருக்கிறது. நீங்கள் ராஜினாமா செய்தால் அதுவும் போய்விடும். கொஞ்ச நாள் பொறுமையாக இருங்கள்"" என்று அவர் அறிவுரை கூறினார்.

அப்படிப்பட்ட பெருந்தலைவர் காமராஜர் அவர்களின்  பிறந்த நாள் விழாதான் இன்று! மறைந்த தலைவர்கள் மற்றும் சான்றோர்கள் யாராயினும் அவர்களுக்கும் நமக்கும் எவ்வளவு கொள்கை வேறுபாடுகள், கருத்து மாறுபாடுகள் இருந்தாலும் அவர்களின் சிறப்புகளையும், சீலமிகு செயல்களையும், செயற்கரிய மக்கள் பணிகளையும், தியாகங்களையும், ஆற்றலையும், என்றைக்கும் நாம் மறந்ததில்லை; மறவாமல் போற்றிக் கொண்டிருக்கிறோம்.

கழகம் ஆட்சிப் பொறுப்பிலே இருந்தபோது, காவேரிப் பிரச்சினை, நெருக்கடி கால நிலை என்பன போன்றவற்றில் ஒவ்வொரு முடிவிற்கு முன்பும் அவர் எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர் ஆயிற்றே என நினைக்காமல், அனுபவத்தில் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் அவரை நான் அணுகி அவருடைய வீட்டிற்கே சென்று அவருடைய கருத்துக்களைத் தெரிந்துகொண்டு அவ்வாறே செயல்பட்டிருக்கிறேன்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழகத்தின் முதல்வராக இருந்து நடத்திய இரண்டாவது உலகத் தமிழ் மாநாட்டின்போது மாநாட்டிற்கு வந்தவர்கள் அனைவரையும் வரவேற்று உரையாற்றி அந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தவரே காமராஜர் அவர்கள்தான்.
இவ்வாறு எத்தனையோ நினைவுகள்!

மாற்றாரை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். மாலை நேரப் பொதுக் கூட்டங்களில் பேசும்போது எப்படியெப்படியோ தாக்கிக் கொள்கிறோம். தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி கோலோச்சிய பிறகு, தி.மு. கழகம் ஆட்சிக்கு வந்தது. அதற்காக தி.மு. கழகத்திடம் வெறுப்பைக் காட்ட வேண்டிய பெருந்தலைவர் அவ்வாறு நடந்து கொண்டதில்லை. அதனால்தான் அவர் பெருந்தலைவர் ஆனார். அஃதே போல பேரறிஞர் அண்ணா அவர்களும், அவருக்குப் பின் நானும் பெருந்தலைவர் காமராஜ ரிடம் எந்த அளவுக்கு மரியாதை செலுத்தினோம், பழகினோம் என்பதை தமிழகம் நன்கறியும். அந்தப் பெருந்தலைவர் பிறந்த நாள் விழாவான இன்று அவருக்கு என் புகழாஞ்சலியைச் செலுத்துவதில் மகிழ்ச்சியடைகிறேன். வாழ்க பெருந்தலைவர் காமராஜரின் புகழ்!

Tuesday, July 2, 2019

சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவருக்கு மிக முக்கியமான ஆலோசனை என்ன“?!

பலர் என்னிடம் கேட்கும் கேள்வி „சொந்தமாக தொழில் தொடங்க இருப்பவருக்கு நீங்கள் கூறும் மிக முக்கியமான ஆலோசனை என்ன“?!
இந்தக் கேள்விக்கான மறுமொழியை பல வழிகளில் கூறலாம்…
சொந்தமாக தொழில் என்றவுடன் எம் கண்ணுக்கு வருவது ஒரு பலசரக்கு கடை அல்லது வீட்டில் வைத்து செய்யும் ஏதேனும் ஒரு தயாரிப்பு…
ஆனால் இன்றைய உலகில் சொந்த தொழில் என்பது மிகவும் பரந்த பல்வேறு துறைகளை உள்ளடக்கியது.
ஒரு நூலில் நான் படித்தது ஆனால் மிகவும் சரி என்று எனக்கு பட்டது, நான் படித்திருந்தது உங்களுக்கு உதவலாம்..
அந்த நூலின் ஒவ்வொரு பக்கங்களும் தொழிலின் தோல்வியைப் பற்றி மட்டுமே பேசுகின்றன.. இந்த உலகில் மனிதன் தொடங்கும் ஒவ்வொரு தொழிலும் தோல்வியிலேயே முடிகிறது என்று அந்த நூல் சொல்கிறது… எவ்வளவு நாட்கள் கழித்து அந்த தொழில் தோல்வியில் முடிகிறது என்பதே அந்த தொழிலின் வெற்றியாகும்..
சமீபத்தில் அமேசான் நிறுவனத்தின் நிறுவனர் அளித்த பேட்டி ஒன்றை நான் காண நேரிட்டது.. அதில் அவர் உறுதியாகச் சொல்கிறார் அமேசான் ஒரு நாளில் தோல்வியில் முடியும் என்று!! இதன் போது என் கண்முன்னே வந்துபோன காட்சி Ceylinco House(Ceylinco Consolidated) நிறுவனமும் அதன் உரிமையாளர் Lalith Kotelawala அவர்களும்தான்.
இதிலிருந்து நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நான் கற்றுக்கொண்ட ஒரு செய்தி என்னவென்றால் நான் செய்யப்போகும் எந்த ஒரு தொழிலும் இறுதியில் தோல்வியில் முடியப்போகிறது. அதை ஏன் மிகப்பெரிய தொழிலாக செய்து என்றோ ஒரு நாள் பெரிய தோல்வியை நோக்கி என் தொழிலை நடத்த கூடாது.….
________________________________________________
ஒரு இடத்தில் சின்ன பெட்டிக்கடை வைக்க முயற்சி/ முடிவு செய்துவிட்டால் ஒரே ஒரு பெட்டிக்கடை மட்டும் வைக்காதீர்கள். குறைந்தபட்சம் 5 அல்லது 6 பெட்டிக்கடைகளை ஒரே வரிசையில் வையுங்கள்.. ஒரு பெட்டிக் கடைக்கு தான் விளம்பரம் என்றும் ஒரே இடத்தில் 5 பெட்டிகடைகள் இருந்தால் மக்கள் தன்னை அறியாமல் அந்த இடத்தை நோக்கி நகர்வார்கள். .

எடுத்துக்காட்டாக BBK, BDP, RENO, MobiFlip மற்றும் OPPO ஒரே நிறுவனத்தின்(Oppo Electronics) அலைபேசி..
Lenova, Medion Motorola, BLADE, ShenQi, Quantum மற்றும் Stoneware ஒரே நிறுவனத்தின் தலைமை நிறுவனமாக கொண்டவை.
நீங்கள் WhatsUp பயன்படுத்தினாலும் அல்லது பேஸ்புக்கின் Messangerரை பயன்படுத்தினாலும் நீங்கள் சுற்றி சுற்றி ஒரே நிறுவனத்தின் பொருளையே பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்தப்படுகிறீர்கள்.
_____________________________________________
வேறுபட்ட ஒரு தொழிலை தேர்ந்தெடுங்கள். இந்தத் தொழில் மக்களுக்கு இருக்கும் ஏதேனும் ஒரு சிக்கலைத் தீர்க்க இருக்க வேண்டும்..

அதாவது இன்னொரு விதத்தில் சொல்லப்போனால் நீங்கள் காட்டாத வரை மக்களுக்கு என்ன வேண்டும் என்று அவர்களுக்கே தெரியாது.
எனவே கூடுமானவரை இதுவரை அங்கு கிடைக்காத பொருளை அங்கு விற்கவே படாத பொருளை விற்க முயற்சி செய்யுங்கள் அது உறுதியாக விற்கும்.. ஏனென்றால் மக்கள் ஏற்கனவே கிடைக்கும் பொருளை பார்த்து வெறுப்படைந்து விட்டார்கள்..
எவ்வளவுதான் இட்லியும் தோசையும் சத்துள்ள உணவு என்றாலும் அதன் மீதும் ஒரு நாள் நமக்கு வெறுப்பை வரவே செய்கிறது
இப்படி மேலைநாடுகளில் அவர்களின் உணவுப் பழக்கத்தின் மீது ஏற்பட்ட வெறுப்பு புதிதாக உணவு முறைகளை கண்டு பிடிக்கச் செய்தது… அப்படி வந்ததுதான் இந்த Pizza, Burger, Cock, Fanta மற்றும் பல…
_________________________________________
நீங்கள் வலிமை உள்ளவராக மாறுவதற்கான ஒரே வழி அடுத்தவருக்கு உதவி செய்வது மட்டுமே ஆகும்…இதுதான் எனது வளர்ச்சியின் சூத்திரம்!!

உங்களைப் போன்றே தொழில் செய்ய முயலும் உங்கள் பகுதியில் உள்ள சிறு-குறு சேவை வழங்குபவர்களை ஒன்று சேர்க்க முயலுங்கள்…
உதாரணமாக விவசாயம், ஏற்றுமதி தொழிலில் விளங்கும் தொழிலாளர்களை ஒரு செயலி கொண்டு வந்து அதன் மூலம் அவர்களுக்கு அதிகமான தொழிலை பெற உதவுங்கள்..
இது ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே இதுபோன்று ஒவ்வொரு தொழிலும் உங்களால் ஒருங்கிணைக்கப்பட்டு பலரும் பலன்களை பெறலாம்…
________________________

வேலையை அனுபவித்து அதற்கு இலக்கு வைத்து செயல்படுங்கள் என்பதுதான் தொழில்முனைவோர்களுக்கு நான் சொல்ல விரும்புவது.
வேலையை ஈடுபாட்டுடன் செயல்பட்டால், பணம் புகழ் என அனைத்தும் கிடைத்துவிடும். ஆனால் பணத்தை இலக்காக கொண்டு செயல்பட தொடங்கினால், நீங்கள் நினைத்த பணம் கிடைத்த பிறகு உங்களுக்கு அந்த தொழில் மீது ஆர்வம், நம்பிக்கை, மரியாதை குறைந்துவிடும்.
புலோலியூரான்/யோகீசன்

Tuesday, June 18, 2019

அ.பங்கயற்செல்வன்.பாடசாலையில் மிகச் சிறப்பாகத் துலங்கும் ஆளுமை

Karunakaran Sivarasa
கல்வி, பொதுப்பணிகள், பல்துறை ஈடுபாடு எல்லாவற்றிலும் சமாந்தரமாகச் செயற்படுவோரில் முக்கியமானவர் அ.பங்கயற்செல்வன். இவை எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பானவை என்ற விளக்கம் ஒருவருக்கிருந்தாலே இவற்றின் பெறுமதியை உணர முடியும். அப்படிப் பெறுமதியைத் தெரியும்போதுதான் அவற்றில் ஈடுபடும் ஆர்வம் ஏற்படும். பங்கைக்கு இதைப்பற்றிய புரிதலும் தெளிவும் உண்டு. அதனால்தான் அவர் இவற்றில் தன்னை ஆர்வத்தோடு ஈடுபடுத்துகிறார். பங்கையின் இந்த ஈடுபாடும் அதனால் உண்டாகும் செயற்பாட்டு விளைவுகளும் பல ஆயிரக்கணக்கானோருக்குப் பயனாகின்றன.
பங்கயற்செல்வனின் கல்விப் பணிகள் பாடசாலைகளில் மட்டும் உள்ளடங்கவில்லை. அதற்கப்பால் கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை (KEDT என்ற கல்வி அபிவிருத்தி மையத்தினூடாகவும் நிகழ்கிறது. அதற்கப்பாலும் விரிந்தது.
பாடசாலையில் அவர் மிகச் சிறப்பாகத் துலங்கும் ஆளுமை. அவர் பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டிருக்கின்ற பாடசாலைகளில் இதை யாரும் காணலாம். அதிபராகவும் ஆசிரியராகவும் அவர் தன்னை முத்திரை பதித்திருக்கிறார். செயற்திறனிலும் ஆளுமையிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் முதல்தர அதிபராகக் கணிக்கப்பட்டவர். அவருடைய மாணவர்கள் இதை நிரூபிக்கிறார்கள். அவரோடு இணைந்து பணியாற்றிய ஆசிரியர்கள் பங்கையின் சிறப்பை எடுத்துரைக்கிறார்கள். அவரை அறிந்த பெற்றோர் தங்களன்பைச் செலுத்தியளிக்கும் மதிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.
ஒருவர் செல்லுமிடம் சிறக்குமென்றால் அவருடைய சிந்தனையும் செயலுமே அதை விளைப்பதென்று பொருள்படும். பங்கயற்செல்வனின் பணிப்பரப்புகள் இத்தகையனவே. இதனால்தான் அவர் கடந்த ஆண்டு கல்விச் சுற்றுலாவாக சீனாவரை பயணிக்க வாய்த்தது. மாணவர்களை இளைய தலைமுறை என்ற புரிதலோடு அணுகுவதற்கு அடையாளம், புதிய எதிர்காலத்துக்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்ற பங்கையின் அக்கறையே. இதற்காக அவர் நவீனக் கற்கை முறையைத் தான் பணியாற்றும் பாடசாலையில் (கிராமப்புறப்பாடசாலை இது) நடைமுறைப்படுத்தியிருக்கிறார். வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் இன்று இலங்கை முழுவதிலும் கவனத்திற்குரியதொரு பாடசாலையாக கணிக்கப்படுவதற்கும் அவதானிக்கப்படுவதற்குமான ஏது நிலை இந்தச் சிந்தனையின், செயற்பாட்டின் விளைவே.
வளங்கள், வசதிகள் எல்லாவற்றையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்காமல் அவற்றை நாம்தான் உருவாக்க வேணும். அதற்கான சாத்தியங்களைக் கண்டறிய வேணும் என்ற புரிதலோடு பங்கை பல கதவுகளையும் தட்டுவதைப் பார்த்திருக்கிறேன். “பொதுத் தேவைக்காக பிறருடைய ஆதரவையும் உதவிகளையும் நாடுவது பல நல்லார்வலர்களை ஒருங்கிணைத்துப் பணிசெய்வதாகும். அவர்களுடைய கனவுகளுக்கு நாம் வடிவங்களை ஏற்படுத்துகிறோம். இதனால் அவர்களுக்கும் மகிழ்ச்சி. நமக்கும் பயன். இந்தப் பயனே எங்களுடைய மகிழ்ச்சி. ஆகவே அவர்களையும் மகிழ வைத்து நாமும் மகிழ்கிறோம்.இதன் மூலமாக இருதரப்பும் நிறைவடையக் கூடியாக இருக்கு. மற்றவர்களுக்கு முன்னுதாரணங்களையும் உருவாக்க முடியுது” என்பார் பங்கை.
இது முக்கியமான ஒரு செயற்பாட்டு முறை என்பதை நாம் கவனிக்க வேணும். போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த எமக்கு இன்னமும் உரிய நீதியோ உரிய நிவாரணமோ கிடைக்கவில்லை. சரியான உதவிகளும் ஊட்டமும் கூடக் கிட்டவில்லை. ஆகவே நாமாகத்தான் நம்மை அடியாழத்திலிருந்து மேலுயர்த்த வேண்டியுள்ளது. இதற்கு “கேளுங்கள் கிடைக்கும். தட்டுங்கள் திறக்கப்படும்” என்ற வகையில் செயற்படுவதே ஓரளவுக்குப் பயனுடைய வழியாகும். ஆனால், இதைச் செய்வதற்கு அடிப்படையானது வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் புதிய நற்சிந்தனைகளும் துரிதமான செயற்பாடுகளுமாகும்.
நாம் எதை எப்படிச் சிந்திக்கிறோம். அதை எப்படிச் செயற்படுத்துகிறோம் என்பதையே பிறர் அவதானிப்பர். அதுவே அவர்களுடைய மனதில் நம்பிக்கையை உருவாக்கும். அந்த நம்பிக்கையை நாம் உருவாக்கிக் கொண்டால் நமக்கு ஆதாரவளிப்பற்கும் உதவுவதற்கும் பலர் முன்வருவர். பல கரங்கள் நீளும். பல மனங்கள் முன்னிற்கும். புதிய உறவு வட்டம் உருவாகி விடும். அது பங்கேற்பாளர்களை உருவாக்கும். பங்கை இதில் வெற்றியடைந்த ஒரு சாதனையாளர் என்று துணிந்து கூறுவேன். இதில் பங்கயற்செல்வன் நமக்கொரு முன்னோடியே.
இதற்கு தொடர்பு சாதனங்களைப் பங்கை பயன்படுத்தும் விதம் பற்றியும் குறிப்பிட வேணும். இன்று எல்லோருக்கும் இலகு சாத்தியங்களை அளித்திருக்கும் முகப்புத்தகம் (FB) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத் தன்னுடைய சிந்தனை, செயற்பாடு, தொடர்பாடல் எல்லாவற்றுக்கும் மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி வருகிறார் பங்கை. இது பணிச்சாட்சியம் மட்டுமல்ல, வெளிப்படைத்தன்மைக்குமானது. காட்சிப்படுத்தல் என்பது வெளிப்படுத்தலின் சிறந்த வடிவாகும். கூடவே தொடர்பாடலையும் விரிவாக்குகிறது. விரைவாக்குகிறது. இந்தக் காட்சிப்படுத்தலும் வெளிப்பாடும் தகவற் பகிர்வும் உலகெங்குமுள்ள நல்லார்வலர்களிடம் தூண்டலை ஏற்படுத்துகிறது.
இன்று பங்கயற்செல்வனின் செயற்பாடுகளுக்கு உலகளாவிய ஆதரவுண்டு என்றால் அது அவர் உருவாக்கிய சாத்தியங்களின் வழி கிடைத்ததே. தனியே கல்விப் பணிமனையையும் மாகாண, மத்திய அரசின் கல்விசார் உதவிகளுடன் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பாடத்திட்டங்களுக்குள் அடங்கிய கல்வி, சுற்று நிருபங்களுக்குக் கட்டுப்பட்ட செயற்பாட்டு முறைமை என்பதோடு வரையறைப்பட்டதல்ல. சமூகத்தை பாடசாலையோடு இணைப்பதற்கும் அப்பால் உலகத்தைப் பாடசாலையோடு இணைத்தது என்பேன்.
இது தகவல் யுகம். (Information era) தகவலைச் சரியாகவும் வெற்றிகரமாகவும் யார் பயன்படுத்துகிறார்ளோ அவர்களுக்கு வெற்றிச் சாத்தியங்கள் அதிமாகின்றன. பங்கயற்செல்வன் தகவல் யுகத்தின் போக்கையும் அதன் தன்மைகளையும் பெறுமதிகளையும் நன்கறிந்திருக்கிறார். என்றபடியால்தான் அதன் சாத்தியங்களை அவரால் பெறக் கூடியதாக இருக்கிறது.
கல்விக்கு அப்பால் பொதுப்பணிகளிலும் பங்கையின் ஆர்வமும் செயற்பாடும் முக்கியமானது. நானறிந்த வரையில் பலரோடும் பல அமைப்புகளோடும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பணிகளைச் செய்திருக்கிறார். இன்னும் செய்து வருகிறார். றோட்டரிக் கழகம் (Rotary club), (கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு (Kilipeople), கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உள்ளிட்ட பல அமைப்புகளின் வழியாகவும் தனிநபர்களின் ஊடாகவும். நெருக்கடிக் காலம் மற்றும் இடர் நிலை போன்றவற்றிலெல்லாம் ஒரு களப்பணியாளராக அவர் மாறிடுவதையும் நாம் காணலாம்.
பங்கையிடம் நாம் காணக்கூடிய இன்னொரு சிறப்பியல்பு, எதையும் Positive ஆக நோக்குவது. அவருடைய முன்னகர்வுக்கும் வெற்றிக்கும் இது அடிப்படையானது என்று நம்புகிறேன். இந்த Positive நோக்கு மனப்பாங்கே அவர் எல்லோருடனும் இணைந்து இயங்கவும் பிறரை இணைத்து இயக்கவும் முடியுமாக்குகிறது. இதனால்தான் சில எதிர்மறைக்குணவியல்புடையோரினால் அவருக்கெதிராகவெனப் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இருட்படுத்தலையும் நெருக்கடிகளையும் கடந்தும் தன்னை நிலைப்படுத்தவும் துலங்கவும் முடியுமென வைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் சொல்ல வேணும். சமூகத்திற்குப் பங்களித்த ஆளுமைகளைக் கவனம் கொண்டு அவர்களுக்கு மதிப்பளிக்க வேணும். அவர்களைச் சமூகத்துக்கு அடையாளம் காட்ட வேணும் என்ற விரிந்த எண்ணம் பங்கையிடம் எப்போதுமுண்டு. அண்மையில் அன்ரன் அன்பழகன், மருத்துவர் சத்தியமூர்த்தி ஆகியோருக்கான மதிப்பளித்தலின் மையமும் சிந்தனைப்புள்ளியும் பங்கையே. ஏனைய நண்பர்களோடு இணைந்து இதைச் சாத்தியப்படுத்தியமை அவருடைய இன்னொரு வெற்றியாகும்.
கல்வி, பொதுப்பணி என்பவற்றோடு கலை, இலக்கியத்திலும் பங்கயற்செல்வனின் ஆர்வமும் ஈடுபாடும் பெரிது. பல நாடகங்களில் பங்கேற்று நடித்திருக்கிறார். புத்தகச் சேகரிப்பாளர். இலக்கிய வாசிப்பாளர். மாணவர்களை வாசிப்பிலும் ஆற்றல் வெளிப்பாட்டில் ஈடுபடுத்துவதிலு்ம கரிசனையுடையவர். இப்படிப் பன்முக ஈடுபாட்டாளுமையாக இருக்கும் பங்கயற்செல்வனுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளில் அவருக்கான பரிசென்பது அவருடைய பணிகளையும் அவருடைய பங்களிப்புகளைக்குறித்தும் நாம் பேசுவதே நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். ஒரு சமூகத்தின் இயக்கத்திற்கும் வளர்ச்சிக்கும் இந்த மாதிரிப் புத்தாக்குநர்களே கூடுதலாகப் பங்களிக்கின்றனர்.
கிளிநொச்சியின் அடையாளமாக உள்ள மிகச் சில ஆளுமைகளில் பங்கையும் ஒருவர். இந்த நிலையை எட்டுவதற்குப் பங்கயற்செல்வன் தன் வாழ்வில் செலவிட்ட நேரம் மிக அதிகம். பாடுபட்டது அதை விட அதிகம். அவருடைய நோக்குக்கும் செயற்பாடுகளுக்கும் இடமளித்து ஒத்துழைக்கும் குடும்பத்தினருக்கும் பங்கையோடு பயணிக்கும் சக நண்பர்களுக்கும் நன்றிகள்.
என்றும் சமனிலை தளும்பாத நிதானத்தோடு பங்கை செலுத்திக் கொண்டிருக்கும் படகு வெற்றி இலக்கைத் தொடுவதற்கு அன்பு நிறைந்த வாழ்த்துகள். கூடியிருப்போம்

Sunday, May 19, 2019

கண்ணதாசனும் விஸ்வநாதனும்


படித்ததில் பிடித்தது வலைதளத்தியிருந்து.

கண்ணதாசனும் விஸ்வநாதனும்




ஒரே நாளில் பிறந்தவர்கள்



ஜூன் 24 கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள். ஏன் மெல்லிசை மன்னருக்கும் நேற்றுதான் பிறந்த நாள். இருவருமே மறக்க முடியாத பல பாடல்களுக்குச் சொந்தக்காரர்கள். ஒருவர் படைத்தார். ஒருவர் இசைத்தார். கவியரசர் 1927 ஆம் ஆண்டும், மெல்லிசை மன்னர் 1928 ஆம் ஆண்டும் பிறந்தவர்கள். மனதில் நின்ற பாடல்களைச் சொல்லும் போது இருவரையுமே நினைத்துக் கொள்ளுங்கள்.

கண்ணதாசன் மயங்க வைத்த கலங்க வைத்த வரிகளுக்குச் சொந்தக்காரர். வனவாசம் மனவாசம் சேரமான் காதலி (சாஹித்ய அகாடமி பரிசு பெற்றது) அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் போன்ற புத்தகங்களை வெளியிட்டார்.

கறுப்புப் பணம், சிவகங்கைச் சீமை போன்ற படங்கள் எடுத்த தயாரிப்பாளர் கறுப்புப் பணம் படத்தில் கதாநாயகனாகவே சூரியகாந்தி, இரத்தத் திலகம், ஆபூர்வ ராகங்கள் போன்ற படங்களில் ஓரிரு காட்சிகளில் நடித்தவர்.

கண்ணதாசன்
"இந்தியா முழுவதிலும் பல இசை அமைப்பாளர்களை நான் சந்தித்திருக்கிறேன்.
இந்தியாவின் எந்த மொழியிலும் தம்பி விஸ்வநாதனுக்கு இணையான ஓர் இசை அமைப்பாளரை நான் கண்டதுமில்லை; கேட்டதுமில்லை..
'ஆமாம்,.. நீ அடிக்கடி சந்திக்கும் விஸ்வநாதனைப் பற்றி இந்த வாரம் சந்தித்தேன் என்று எழுதுவதில் என்ன பொருள் ? ' என்று நண்பர்கள் கேட்கக்கூடும்.
காரணம் உண்டு.
தம்பி விஸ்வநாதனை மூன்று வாரங்களாக நான் சந்திக்கவில்லை. இவ்வளவு பெரிய இடைவெளி எங்களுக்குள் விழுந்ததில்லை. தம்பி ஏராளமான ரீ - ரெக்கார்டிங்குகளில் மாட்டிக்கொண்டதால், இந்த வாரம்தான் சந்தித்தேன்.
உலகத்தில் எந்தப் பாகத்தில் என்ன இசை இருக்கிறது என்பது விஸ்வநாதனுக்குத் தெரியும். விஸ்வநாதனுடைய இசைக்கு நான் பாட்டெழுதத் தொடங்கி முப்பது ஆண்டுகள் முடிந்துவிட்டன. இந்த முப்பது ஆண்டுகளில் தம்பியின் திறமையை நான் கண்டு வியந்திருக்கிறேன்.
பட்டத்து ராணி பார்க்கும் பார்வை ' யில் எகிப்திய இசையைக் கேட்டேன். 'தென்றல் வந்து வீசாதோ ? " பாடலில் தென்பாண்டி மண்டலத்தின் மண்வாடையைக் கண்டேன், அபூர்வ ராகத்தில் நளினமான கர்நாடக சங்கீதத்தை அனுபவித்தேன். "முத்தமிடும் நேரம் எப்போ" என்ற பாடலில் மெக்ஸிகன் ஆர்ப்பாட்டத்தைக் கண்டேன்...சொல்லி கொண்டே போனால் இடம் போதாது.
கடுமையான உழைப்பாளி. தூங்குகிற நேரம் மிகவும் குறைவு. நாள் முழுதும் உழைப்பு. இசையைத் தவிர வேறு உலகம் தெரியாது.
"ஊமைத்துரையில் "துரை" என்று வருகிறதே அண்ணே, அவன் வெள்ளைக்காரனா ? என்று ஒருமுறை கேட்டான்.
காபூல் நகரில் தங்கி இருந்தபோது , " இங்கிருந்துதான் கஜினி முகம்மது நம் நாட்டின் மீது படை எடுத்தான் " என்றேன் "யாரண்ணே கஜினி முகம்மது ? என்றான்.
பூகோளம், சரித்திரம், இன்றைய அரசியல் பற்றி அவன் கேட்கும் கேள்விகளை நினைத்தால் சிரிப்பு வரும்.
ஆனால் அவனோடு பாட்டெழுத உட்கார்ந்துவிட்டால் பொழுது போவதே தெரியாது.
முப்பது வருடங்கள்.
தொழிலில் தளர்ச்சி இல்லாமல் தம்பியும் நானும் கண்ட அந்த எல்லையை, இந்தத் தலைமுறையில் வேறு யாரும் காண முடியாது.
எல்லோருமே விதைபோட்ட அறுபது நாளில் அறுவடையாகும் கீரைப்பாத்திகள். இரண்டாண்டுகள் ஆட்டம் போட்டுவிட்டு இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போன இசை அமைப்பாளர்கள் பலரை நான் பார்த்திருக்கிறேன்.
தம்பிக்கும், மாமா (கே.வி.மகாதேவன்) வுக்கும் அஸ்திவாரம் மிகப் பெரியது.
ஏழுவயதில் இரண்டு ரூபாய் சம்பளத்தில் கம்பெனி நடிகனாக வாழ்க்கையைத் துவங்கிய விஸ்வநாதன், பட்டபாடு கொஞ்சமல்ல. பதினாறு வயதில் வைரம் நாடகக் கம்பெனியில் வேலை பார்த்தபோது ஒரு நெக்லஸைத் திருடி விட்டதாகத் தம்பியைப் போலீஸில் ஒப்படைத்தார்கள். போலீஸார் அவனை அடித்தும் விட்டார்கள். பிறகு செட்டியாருடைய மெத்தைக்கு அடியிலேயே நெக்லஸ் கிடைத்தது.
ஜூப்பிடரில் நடிகனாகி, ஆபீஸ் பையனாகி, ஆர்மோனிஸ்ட்டாகி, சுப்பராமன் இறந்த பிறகு இசை அமைப்பாளனாகி, எடுத்த எடுப்பிலேயே உச்ச ஸ்தாயில் பல்லவி பாடியவன் தம்பி.
முன்பெல்லாம் இரவு பதினேரு மணிக்கு டெலிபோன் மணி அடித்தால் அது ஏ.எல்.எஸ் அல்லது விஸ்வநாதனாக இருக்கும். இப்போது விஸ்வநாதன் மட்டுமே.
இசைக்குப் பாட்டா ? பாட்டுக்கு இசையா?
இரண்டும் பாதிப் பாதி.
'ஆகாயப் பந்தலிலே' இசைக்கு எழுதப்பட்ட பாட்டு. 'சோதனைமேல் சோதனை' பாட்டுக்குப் போடப்பட்ட இசை.
"இது நன்றாக இல்லை" என்று என்னிடம் சொல்லக் கூடிய ஒரே இசை அமைப்பாளர், விஸ்வநாதன்.
' மாலையிட்ட மங்கை ' படத்தில் இருந்துதான் எனக்கு மார்கெட் ஏறிற்று. காரணம், தம்பி விஸ்வநாதனின் இசை.
ஆயிரம் புகழ் வந்தாலும், யாரையும் எடுத்தெறிந்து பேசாத குணம், தம்பி, மாமா, புகழேந்தி மூவருக்கும் உண்டு.
நானும் தம்பியும் பத்தே நிமிடங்களில் போட்டு முடித்த பாட்டு, "நெஞ்சில் ஓர் ஆலையத்தில்" வரும் "முத்தான முத்தல்லவோ " நான்கு மாதங்கள் உயிரை விட்ட பாட்டு நெஞ்சம் மறப்பதில்லை என்ற படத்தில் வரும், "நெஞ்சம் மறப்பதில்லை " என்ற பாட்டு.
எந்த இரவிலும் நான் போட்டுக் கேட்பது நான் எழுதி தம்பி இசை அமைத்து, சரஸ்வதி ஸ்டோர் பதிப்பித்த ஸ்ரீ கிருஷ்ண கானமே அதைக் கேளாமல் நான் தூங்கியதே இல்லை. இதுவரை அது போல் ஒரு பக்திப் பாடல் வந்ததாகவும் எனக்கு ஞாபகம் இல்லை.
எழுத எழுத எவ்வளவு விஷயங்கள் வந்து குவிகின்றன எதைச் சொல்வது, எதை விடுவது ?
பெங்களூர் உட்லண்ட்ஸ், ரூம் நெம்பர் முப்பத்தாறு. 'கர்ணன்', பாத காணிக்கை' எல்லாமே அங்கேதான். "வீடு வரை உறவு " பிறந்த இடமும் அதுதான்.
பம்பாய் ஜன்பத் ஓட்டலில், எழுதி எழுதிப் பார்த்து முடியாமல் திரும்பி விட்டோம்.
நானும் தம்பியும் பாண்டிச்சேரியில் எழுதிக் கொண்டிருந்தபோதுதான், காரைக்கிடியில் என் சுவீகாரத்தாயார் இறந்துவிட்ட செய்தி வந்தது. தம்பியின் காரை எடுத்துக் கொண்டே போய்ச் சேர்ந்தேன்.
1962ல் நான் இறந்து விட்டதாக தம்பிக்கு யாரோ தொலைபேசியில் சொன்னார்கள். தம்பி சாரதா ஸ்டுடியோவில் ரெக்கார்டிங்கை நிறுத்திவிட்டு முட்டி மோதிக் கொண்டு ஓடி வந்தான். அதுபோலவே செய்தி கேட்டு எம்.வி. ராஜம்மா, எம்.ஆர்.ராதா, கிருஷ்ணன் - பஞ்சு ,பீம்சிங், ஸ்ரீ தர், சம்பத் ஆகியோர் ஓடிவந்தார்கள்! எம்.ஜி.ஆர். டெலிபோனில் துழாவினார்.
நான் கல்லுப் பிள்ளையார் மாதிரி உட்கார்ந்திருந்தேன்.
தொலைபேசியில் வதந்தி பரப்பியது யாருமல்ல...நானே தான் !
தம்பி என்னைக் கட்டிப்பிடித்துக் கொண்டு அழுதான்.
இந்த வகையில் அவனை நான் முந்திக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசை."


Sunday, May 5, 2019

The way Gratitude Literally Alters The Human Heart & Molecular Structure Of The Brain

Gratitude is a funny thing. In some parts of the world, somebody who gets a clean drink of water, some food, or a worn out pair of shoes can be extremely grateful. Meanwhile, somebody else who has all the necessities they need to live can be found complaining about something. What we have today is what we once wanted before, but there is a lingering belief out there that obtaining material possessions is the key to happiness. Sure, this may be true, but that happiness is temporary. The truth is that happiness is an inside job.
It’s a matter of perspective, and in a world where we are constantly made to feel like we are lacking and always ‘wanting’ more, it can be difficult to achieve or experience actual happiness. Many of us are always looking toward external factors to experience joy and happiness when really it’s all related to internal work. This is something science is just starting to grasp as well, as shown by research coming out of UCLA’s Mindfulness Awareness Research Center. According to them:
"Having an attitude of gratitude changes the molecular structure of the brain, keeps grey matter functioning and makes us healthier and happier. When you feel happiness, the central nervous system is affected. You are more peaceful, less reactive and less resistant. Now that’s a really cool way of taking care of your well-being."
"Gratitude writing can be beneficial not just for healthy, well-adjusted individuals, but also for those who struggle with mental health concerns. In fact, it seems, practising gratitude on top of receiving psychological counselling carries greater benefits than counselling alone, even when that gratitude practice is brief" We found that across the participants when people felt more grateful, their brain activity was distinct from brain activity related to guilt and the desire to help a cause. More specifically, we found that when people who are generally more grateful gave more money to a cause, they showed greater neural sensitivity in the medial prefrontal cortex, a brain area associated with learning and decision making. This suggests that people who are more grateful are also more attentive to how they express gratitude. ">Most interestingly, when we compared those who wrote the gratitude letters with those who didn’t, the gratitude letter writers showed greater activation in the medial prefrontal cortex when they experienced gratitude in the fMRI scanner. This is striking as this effect was found three months after the letter writing began. This indicates that simply expressing gratitude may have lasting effects on the brain. While not conclusive, this finding suggests that practising gratitude may help train the brain to be more sensitive to the experience of gratitude down the line, and this could contribute to improved mental health over time.

Some Facts 

1. Gratitude unshackles us from toxic emotions

2. Gratitude helps even if you don’t share it

3. Gratitude’s benefits take time

4. Gratitude has lasting effects on the brain

Heart
“Emotional information is actually coded and modulated into these fields. By learning to shift our emotions, we are changing the information coded into the magnetic fields that are radiated by the heart, and that can impact those around us. We are fundamentally and deeply connected with each other and the planet itself.” 
“One important way the heart can speak to and influence the brain is when the heart is coherent – experiencing stable, sine-wave-like pattern in its rhythms. When the heart is coherent, the body, including the brain, begins to experience all sorts of benefits, among them, are greater mental clarity and ability, including better decision making.” 
Conclusion
Every individual’s energy affects the collective field environment. The means each person’s emotions and intentions generate an energy that affects the field. A first step in diffusing societal stress in the global field is for each of us to take personal responsibility for our own energies. We can do this by increasing our personal coherence and raising our vibratory rate, which helps us become more conscious of the thoughts, feelings, and attitudes that we are feeding the field each day. We have a choice in every moment to take to heart the significance of intentionally managing our energies. This is the free will or local freedom that can create global cohesion. – Dr Deborah Rozman, the President of Quantum Intech
Thanks; https://greatergood.berkeley.edu,http://bernardalvarez.mysharebar.com

Thursday, April 4, 2019

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன்

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவரான மகேந்திரன் ஜயா அவர்கள் உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார். ஆழ்ந்த இரங்கல்.

மகேந்திரன் ஜயா - பிறப்பு: சூலை 25, 1939 இறப்பு: ஏப்ரல் 2, 2019 புகழ் வாய்ந்த தமிழ்த் திரை இயக்குநர்களுள் ஒருவர். இவரது இயற்பெயர் ஜெ. அலெக்சாண்டர். மென்மையான உணர்வுகள் இழையோடும் ஆழமான கதைக்காகவும், அழகுணர்ச்சி மிகு காட்சியமைப்புகளுக்காகவும் இவரது திரைப்படங்கள் புகழ் பெற்றவை.
மகேந்திரன், புதுமைப்பித்தனின் சிற்றன்னை என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு, உதிரிப்பூக்கள் என்ற திரைப்படத்தை இயக்கினார். இது தமிழ் திரையுலக வரலாற்றின் மிகச் சிறந்த படங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.
எம்.ஜி.ஆரை கதாநாயகனாக வைத்து பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக்க திரைகதை, வசனம் போன்றவற்றை எழுதிவைத்தார். ஆனால் பல்வேறு காரணங்களால் இதனை திரைப்படமாக்க முடியாமல் போனது.
"நீங்கள் என்ன வேலை செய்தாலும், எதில் ஈடுபட்டு இருந்தாலும், உங்களைச் சுற்றி நடக்கிற எல்லாமே கதைகள்தான். சுற்றி இருக்கிற ஒவ்வொருவரும் பாத்திரங்கள்தான். அதைக் கவனிப்பதும் தேர்ந்தெடுப்பதும் மட்டும்தான் உங்கள் காரியம். அதைக் கைக்கொண்டு விட்டால், அதன் பின் ஒவ்வொரு விநாடியும் நீங்கள் கூர் தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள் என்பதுதான் உண்மை. நீங்கள் நடிகனாக விரும்பலாம், டைரக்டர் ஆக விரும்பலாம், கதை - வசனமோ, பாடலோ எழுத விரும்பலாம். எதுவாக ஆக விரும்பினாலும் உங்களுக்கான கச்சாப் பொருட்கள் உங்களைச் சுற்றி நிகழ்கிற சம்பவங்களிலும் உலவுகிற மனிதர்களிடத்திலும் இருக்கின்றன."
- மகேந்திரன்.

Wednesday, March 20, 2019

How To Start Loving Yourself


1. Get rid of the negative influences in your life


First step to loving yourself, get rid of the people that don’t love you.

Love is an action, a choice—not a feeling. So anybody who claims they love you but doesn’t make time for you, doesn’t make you feel special, or treats you like you’re unimportant—they do not love you and they are a parasite. They are eating away at your self-confidence and happiness. Get rid of them. They are not good, not important, and most importantly, they are not worthy of your precious heart and time. You’re beautiful, unique, and amazing—don’t waste your time on people who don’t question why you’re not famous for being awesome, duh!

2. Take more time to do the things YOU want to do


If your friends call you up on your day off and they want to go to the movies, you really don’t have to say yes. If you wanted to stay inside and read your favorite book for the 233rd time, do that! Just because the people around you do one thing, it doesn’t mean you have to do it too.

Next time you’re invited out or you find yourself doing something with friends or family out of obligation, ask yourself if it’s something that you really have to do. If it isn’t, is it something you genuinely want to do? If not, politely decline, and just do you.

3. Take that step out of your comfort zone


Do you want to take a painting class? Are you interested in that yoga class at your gym? Do you want to talk to that cute guy/girl in your history class? Just do it! You really won’t be sorry you did.

The things you are scared to do the most are the things that you’ll regret the least! I used to be so scared to go to the gym. I’d hype myself up the night before, doing research on all these cool exercises and routines that I wanted to try. Then in the morning, I would get to the gym and end up on the elliptical or stair-master for an hour because I was so worried what everybody in the gym would think of some newbie trying to go hard on the weights.

Eventually, I got a personal trainer to help give me a confidence boost. It totally worked. Now I hit the gym and instead of worrying about everybody else, I just work on shredding my routine and sweating all the stress away. It was also this mindset that helped me realize that most people are too concerned about themselves that they hardly ever notice those around them. So if you think people are watching or will judge you, it’s okay to feel like that, but don’t let it cripple you, or stop you. Just do whatever it is you want to do anyway! You’ll be great as long as your heart is in it!

4. Be active!


Active doesn’t mean two grueling hours of power lifting at the gym.

It could be as simple as going out for a walk around the block, jogging in place while you watch your favorite T.V. show, or doing 15 minutes of stretching when you wake up in the mornings.

If doing intense workouts is your thing, or maybe long hikes—that’s great, do that! Activity is whatever you want it to mean, but it’s important for you to get up and give your body a little work out every couple days or so. Not only does this mean positive results physically, but internally too. Your body releases endorphins (the feel good stuff) when you’re active, so you’ll feel more energized, optimistic, and ready to tackle everyday situations that are otherwise frustrating.

On a personal note, exercising or going for a quick stroll around my apartment complex gives me alone time that I otherwise wouldn’t get and alone time is necessary for a person’s individual growth. This brings me to my next point…

5. Meditate


Take a few minutes once a day to just breathe, to bring all your thoughts and emotions together.

I usually do this in the mornings after an intense, sweaty work out. I go into the gym’s sauna and play a good song and I ask myself “How am I feeling mentally?”, “How am I feeling physically?”, and “What emotions am I feeling right now?” If it’s been a rough morning or a tough week and I’m just angry or sad, then I start taking deep breaths and start thinking positive thoughts to help reinforce confidence and security within myself.

If I’m feeling good and I’m ready to breathe rainbows, then I still take my deep breaths and I think of everything I’m grateful for which really is the cherry on top when I’m already in a good mood. Obviously everybody’s version of meditation will be different, but meditation in general can make the world of a difference in how you feel about yourself and your life. It also helps to clarify and organize any mixed emotions you may be dealing with.

6. Compliment Yourself


I don’t care if this one sounds silly. It works.

When I get ready in the mornings, I find at least one thing I genuinely like about my look/outfit that day.

This morning, I really didn’t like anything. My hair was being stubborn, I didn’t have time for make up, I gained like 3 pounds this week, and it just wasn’t happening. I came to work in a lousy mood and wanted to go back home and hide in my bed. Then I realized, I didn’t find something that I liked about myself today… So I went to the bathroom, made my hair work with a bobby pin, and I smiled at the mirror and thought to myself, “My hair looks cute like this!”

Now I’m in a much better mood, and it’s because I feel better about myself. Now, there will be days where it’s hard, just like me today.

However, I challenge you to fake it till you make it.

Look in the mirror before work, school, whatever, and tell yourself one thing that you like about the way you look. It could be as silly as, “My teeth look really white today.” That’s awesome! Blind the world with your pearly whites! Guess what? The more you make yourself find something you like, one day you’ll look in the mirror and you’ll find something you like about yourself right away. You’ll look in the mirror and you’ll say, “Dang, I look gorgeous today!” even if you’re just wearing a baggy pair of jeans and a sweater. It’ll happen.
Loving yourself is hard because nobody knows your mistakes, flaws, and thoughts as much as you do. It’s so easy to beat yourself up when you miss something, forget something, or make a silly mistake, but I challenge you to be patient with yourself. I challenge you to follow some of these tips and to stick with them to see how loving you is achievable. You’re awesome and I know it, so it’s time you knew it, too.