Search This Blog

Showing posts with label Development. Show all posts
Showing posts with label Development. Show all posts

Friday, February 23, 2018

கமல், கட்சி, கோட்பாடு, கொள்கை…


Kumaresan Asak

கருத்துகளில் மாறுபடலாம். ஆனால், காட்சிகளை மறுப்பதற்கில்லை. மதுரை ஒத்தக்கடை மைதானத்தில் பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த கூட்டத்தினர், அதில் கணிசமாகத் தெரிந்த இளைஞர்கள், பெண்கள் என்ற காட்சிகள் மறைக்க முடியாதவை. அவர்களின் முகங்களில் வெளிப்பட்ட மாற்றத்துக்கான எதிர்பார்ப்பு, அதன் பின்னால் இருக்கும் நீண்ட காலக் காத்திருப்பு என்ற காட்சிகளிலும் கேள்விக்கு ஏதுமில்லை. ஆம், அய்யம் இன்றிச் சொல்லத்தக்க வகையில் திட்டவட்டமாக மய்யம் உருக்கொண்டுவிட்டது. பெயரில் மட்டுமல்லாமல், தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடகம், தெலங்கானா, புதுவை ஆகிய தென் மாநிலங்களை அடையாளப்படுத்தும் ஆறு கைகள், அவற்றின் நடுவில் நம்பிக்கை நட்சத்திரமாக மக்கள் என்ற விளக்கத்துடனான கொடி அமைப்பிலும் ஒரு மாறுபட்ட கண்ணோட்டத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.
அகில இந்தியப் பொறுப்பாளர் உள்ளிட்ட நிர்வாகக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது என்றாலும், தனது செயற்களம் இந்த ஆறு மாநிலங்கள்தான் எனக் காட்டியிருப்பதோடு, அதன் மூலம் திராவிடம் என்ற அடையாளத்தையும் பதிவு செய்திருக்கிறார். திராவிட இயக்கத்திலிருந்து புறப்பட்ட கட்சிகளேகூடப் பெயரில் அந்தச் சொல் இருந்தாலும், நடைமுறையில் தமிழக எல்லைக்குள்தான் இயங்கிக்கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் மக்கள் நீதி மய்யத்துக்கு, திராவிடம் என்ற பெயரைப் பயன்படுத்தாமலே இப்படியொரு அடையாளத்தைச் சூட்டியிருப்பது கவனத்தில் கொள்ளத்தக்கது. நடைமுறையில் இதுவும் தமிழகத்துக்குள் மட்டுமே இயங்கப்போகிறதா அல்லது இதர ஐந்து மாநிலங்களிலும் விரிவாகச் செயல்படப்போகிறதா என்பது கவனிக்கப்பட வேண்டியது.
இதே தமிழகத்தில், இதே மதுரைக்கு அருகில், தூத்துக்குடி நகரில் பிப்ரவரி 17 முதல் 20 வரையில் நடைபெற்ற, மதுரைக் கூட்டத்தில் கமல் பெருமிதத்துடன் தனக்குக் காணொளிப் பதிவு மூலம் வாழ்த்துத் தெரிவித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக உள்ள, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 22ஆவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டுத் தொடக்க விழா, நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள், நிறைவு நாளில் காவல் துறையின் மூர்க்கத் தாக்குதலை எதிர்கொண்ட செம்படைப் பேரணி, பொதுக்கூட்டத்தில் புதிய செயலாளர் கே.பாலகிருஷ்ணன், பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உரைகள்... இவற்றுக்கு ஊடக நிறுவனங்கள் எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்தன? கமல் ராமேஸ்வரம் வந்தது முதல் மதுரை மேடையில் ஏறியது வரையில் ஒவ்வொரு நொடி நகர்வையும் செய்தியாகச் சொன்னவர்கள், முத்துநகர் மாநாட்டுச் செய்திகளை ஒரு தொகுப்பாக மட்டும் வெளியிட்டு முடித்துக்கொண்டார்கள். இதுபற்றி ஆதங்கத்தோடு பேசிய ஒரு தோழரிடம், “இந்த ஊடக அரசியல் புதிய அனுபவமா என்ன? அதை விமர்சித்துக்கொண்டே, அவர்களால் புறக்கணிக்க முடியாத, குறைத்துக்காட்ட முடியாத பெரும் மக்கள் சக்தியாக இயக்கத்தைக் கட்டி வளர்ப்பதில் செயல்முனைப்பைக் கூர்மைப்படுத்துங்கள்” என்று கூறினேன்.
இரு மேடைகள், இரு பண்பாடுகள்
------------------------------------------------------
இக்கட்டுரை அந்த ஊடகப் பாகுபாடு பற்றியதல்ல; தூத்துக்குடி மாநாட்டின் உள்ளரங்கம், தியாகிகள் நினைவுச் சின்னம், பொதுக்கூட்ட மேடைப் பின்னணி… இவை ஒவ்வொன்றிலும் தோழர்களின் வியர்வை இருந்தது. மக்களுக்காகப் போராடுவதில் பங்கேற்கிற உணர்வு கலந்த கலைப் படைப்பாக்கம் இருந்தது. சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பாக மாநாட்டு நிகழ்வுகள் தரப்பட்டதிலும், தகவல் தொழில்நுட்பத் துறையில் ஈடுபட்டுள்ள தோழர்களின் முயற்சி இருந்தது.
ஆனால், மதுரைக் கூட்டத்தின் மைதான வளாகம், பொதுக்கூட்ட மேடையின் ஒளிப்பட நுட்பங்கள், செய்தியாளர் சந்திப்புக்கான அரங்கம் என ஒவ்வொன்றிலும் பெரும் தனியார் நிறுவனத்தின் வடிவமைப்பு, அவர்களது தொழில்நுட்பத் திறன் ஆகியவைதான் முன்னால் நின்றன. கமல் பேசத் தொடங்கியதும் அவரது கருத்துகள்தான் முன்னுக்கு வந்தன என்பது உண்மையே. ஆனால், வரிக்கு வரி “நீங்கள்... நீங்கள்” என்று தொண்டர்களைக் குறிப்பிட்ட அவர், தொழில்நுட்பமும் கலைத்திறனும் கலந்த மேடையாக்கத்தில் அவர்களை எந்த அளவுக்கு ஈடுபடுத்தினார்? தொடக்கத்திலேயே அவர்களை வெறும் பார்வையாளர்களாக மட்டும் உட்கார வைத்துவிட்டு, கார்ப்பரேட் நிறுவனத்திடம் மேடைப் பொறுப்பை ஒப்படைத்ததன் தொடர்ச்சியாகத்தான் இனி மய்யத்தின் நிகழ்ச்சி நிரல்களும், கொள்கை முடிவுகளும் அமையுமா? காலம் அதையும் கவனத்தில் கொள்ளும்.
பிப்ரவரி 21 உலக தாய்மொழி தினம். அது தொடர்பான சிந்தனை ஏதாவது வெளிப்படுகிறதா என்று கவனித்தால்... ஹூகும். கொடியில் அடையாளப்படுத்தப்படும் ஆறு மாநிலங்களின் மொழிகள் மீது மத்திய அரசால் தொடுக்கப்படும் இந்தித் திணிப்பு நடவடிக்கைகளில் மய்யத்தின் பார்வை என்ன என்று சொல்வதற்கு, கட்சியைத் தொடங்கிடத் தேர்ந்தெடுத்த இந்தத் தேதி எவ்வளவு பொருத்தமானது. மேடையில் கமல் பேசியது போல, அவரது “நேரமின்மை” காரணமாக விடுபட்டவற்றில் இதுவும் ஒன்று என எடுத்துக்கொள்ள வேண்டியதுதான். மேலும், சொல்லாதது எது என்று தேடுவதை விட சொன்னது எப்படி என பார்ப்பதே முக்கியம்.
‘மக்கள் நீதி மய்யம்’ என்ற பெயர் ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் பெயர் போல இல்லாமல் ஒரு தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் (என்ஜிஓ) பெயர் போல இருக்கிறதே என்று சமூக ஊடகங்களில் சிலர் கேட்டிருக்கிறார்கள். கழகம், கட்சி என்று பெயரிலேயே அமைப்பை அடையாளப்படுத்திவந்துள்ள வழக்கத்திலிருந்தே இக்கேள்வி எழுகிறது. அடிப்படையில் கட்சி ஈடுபாடு என்பதே ஒரு தன்னார்வத் தொண்டுதான். மற்ற கட்சிகளைப் போலவே புதிய கட்சியும் இருக்க வேண்டிய தேவையில்லை என்பதால், அவற்றுக்கு மாற்று என்று சொல்லிக்கொண்டுதான் புதிய கட்சி புறப்படுகிறது என்பதால், பெயரிலும் அந்த மாறுபாடு வெளிப்படுவதில் தவறில்லை. மக்கள் பக்குவமும், முன்போலப் பெயரிலேயே கட்சி என்ற சொல் இருந்தாக வேண்டும் என்ற நிலையைக் கடந்து வந்துவிட்டது. பெயரில் தெரிகிற மாற்றம் கட்சியின் செயல்களில் தெரிகிறதா என்றே மக்கள் உற்று நோக்குவார்கள்.
இடதுக்கும் வலதுக்கும் நடுவில்?
----------------------------------------------------
ஆனால், கட்சியின் சித்தாந்தம் (இஸம்) எப்படிப்பட்டதாக இருக்கும்? இடதா, வலதா என்று கேட்கிறார்கள் என்று தெரிவித்த கமல், “அதனால்தான் பெயரிலேயே மய்யம் என்று வைத்திருக்கிறோம்” என்று கூறினார். “கொள்கை பற்றியெல்லாம் கவலைப்படாதீர்கள், செயலில் இறங்குங்கள்” என்று ஆந்திர முதல்வரும், தனது முன்னுதாரணங்களில் ஒருவருமான சந்திரபாபு நாயுடு சொன்னதாகவும் கூறினார். கொள்கை பற்றிக் கவலைப்படாமல் செயல்படச் சொல்வது நல்ல முன்னுதாரணம்தானா? கேரள முதல்வர் அப்படிக் கொள்கையின்றிச் செயல்பட்டுக் கொண்டிருப்பவர்தானா?
கட்சியின் தொடக்க விழா சிறப்பு விருந்தினர், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவால். டெல்லியில் பாஜக, காங்கிரஸ் இரண்டையும் வீழ்த்திய தமது ஆம் ஆத்மி கட்சியின் சாதனையை, தமிழகத்தில் அதிமுக, திமுக இரண்டையும் வீழ்த்துவதன் மூலம் மக்கள் நீதி மய்யம் பின்னுக்குத் தள்ள வேண்டும் என்று அவர் வாழ்த்தினார். அப்படியான ஒரு மாற்றுக்கு இங்கே உண்மையாக உழைத்துக்கொண்டிருக்கிற இயக்கங்களோடு கமல் கட்சி எப்படிப்பட்ட உறவுகளை வளர்த்துக்கொள்ளப் போகிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுகிறது. அதை விடவும், ஆம் ஆத்மி கட்சி உருவாக்கப்பட்டபோது, இதே போன்ற கேள்வி கேட்கப்பட்டதும், அதற்கு அவர்கள் அளித்த பதிலும் இங்கே நினைவுகூரப்பட வேண்டியவை.
அக்கட்சியின் இணையதளத்தில், “கட்சியின் சித்தாந்தம் பற்றிக் கேட்கப்படுகிறது. பொருளாதார வளர்ச்சி விஷயங்களில் வலதுசாரி, மக்கள் பிரச்னைகளில் இடதுசாரி என்ற நிலைப்பாடு மேற்கொள்ளப்படும். முன்னுக்கு வருகிற பிரச்னையின் தன்மையைப் பொறுத்து அதை எப்படிக் கையாள்வது என்ற அணுகுமுறை வகுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருந்தது. மக்களின் பிரச்னைகளே அடிப்படையில் வலதுசாரிக் கொள்கைகளால் ஏற்படுவதுதானே, மக்கள் பிரச்னைகளுக்காகப் போராடுவது என்பதே அடிப்படையில் வலதுசாரிக் கொள்கைகளை எதிர்ப்பதுதானே?
அப்படியான கொள்கைத் தெளிவற்ற நிலையைத்தான் மையமாக இருப்பது என்கிறாரா கமல்? நட்சத்திரமாக இருந்து வந்த தன்னை இனி மக்கள் தங்கள் குடும்பங்களில் ஒரு விளக்காக வைத்துக் கொள்ளட்டும் என்று பேசிய கமல், தனது கட்சியின் இந்தக் கொள்கை இருட்டு மீது கொஞ்சம் வெளிச்சம் பாய்ச்சுவது நல்லது. கட்சியின் உயர்மட்டக் குழு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பல தரப்பினரும் அதில் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்கள் இது பற்றிப் பேசி, எரியாமலிருக்கிற விளக்குத் திரியில் சிறு நெருப்பையேனும் பற்ற வைப்பார்களா அல்லது கமல் பேசுவதற்கு விளக்கமளிக்கும் தொண்டில் மட்டும் ஈடுபடுவார்களா?
‘பிக் பாஸ்’ விமர்சனங்களைத் தொடர்ந்தும், ரஜினிகாந்த் தனது அரசியல் நுழைவு பற்றி அறிவித்ததைத் தொடர்ந்தும், அரசியல் கருத்துகளை முன்னைக் காட்டிலும் திட்டவட்டமாகக் கூறத் தொடங்கினார் கமல். அப்போது, நரேந்திர மோடி அரசின் பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளை வரவேற்று ட்விட்டினார். ஆளுக்காள் பிடிபிடியெனப் பிடித்தார்கள். பின்னர் அவரே, தமது முந்தைய கருத்துகள் தவறு என வெளிப்படையாகவே அறிவித்தார். எந்தப் பிரச்னையிலும் கருத்தே சொல்லாத அரசியலை விடவும், ஏதோவொரு கருத்தைச் சொல்லிவிட்டுப் பின்னர் அதைத் திருத்திக்கொள்கிற அரசியல் நல்லதுதானே?
அதே வேளையில் பேட்டிகளிலும் பேச்சிலும் தமிழக அரசியல் நிலவரம் பற்றிய விமர்சனத்தைத்தான் அவர் வெளிப்படுத்தியிருக்கிறார். மத்திய பாஜக அரசு மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்துவிட்டுள்ள கார்ப்பரேட் சேவை நடவடிக்கைகள், அதற்குக் கவசமாகப் பயன்படுத்துகிற மதவெறி சர்ச்சைகள் பற்றியெல்லாம் அவரிடமிருந்து குறிப்பிடத்தக்க வகையில் எதுவும் வெளிப்படவில்லை. கட்சியின் உயர்மட்டக் குழு முறைப்படி உட்கார்ந்து நடத்தக்கூடிய விவாதத்துக்குப் பிறகாவது இந்த அரசியல் நிலைப்பாடுகளும் மக்கள் முன்பாக வைக்கப்படுமா?
அடிப்படை பலம் எது?
----------------------------------
நாத்திகவாதியான தன் பின்னால் திரண்டுள்ளவர்கள் பல்வேறு இறை நம்பிக்கை உள்ளவர்கள்தான் என்று அங்கீகரித்துப் பேசிய கமல், தனக்குப் பிறகு அவர்கள்தான் இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லப் போகிறார்கள் என்றும் அறிவித்த கமல், அவர்களைக் கொள்கை இருட்டில் வைத்திருக்கக் கூடாது என்பதைப் புரிந்துகொண்டாக வேண்டும். தான் என்ன பேசினாலும், தனது கட்சியில் யார் என்ன பேசினாலும் அது கட்சியின் அடிப்படைக் கொள்கை பலத்திலிருந்தே வருகிறது என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும். உயர்மட்டக் குழுவைக் கூட்டி, தெளிவான கொள்கை அறிக்கையை உருவாக்கி வெளியிட்டாக வேண்டும். இதில் பினராயி விஜயனைப் பின்பற்றப்போகிறாரா அல்லது சந்திரபாபு நாயுடு அல்லது கேஜ்ரிவாலைப் படியெடுக்கப் போகிறாரா?
மதுரைக் கூட்டத்தில் கொள்கை என எதுவுமே சொல்லாமல் விட்டுவிட்டதாகக் கூற முடியாது. எல்லோருக்கும் தரமான சிறந்த கல்வி கிடைக்கச் செய்தல் ஒரு கொள்கை என்று அறிவித்தார். இதில் வேறு எந்தக் கட்சியாவது மாறுபடுகிறதா? எந்தக் கட்சியாவது தரமற்ற, சிறப்பற்ற, எல்லோருக்கும் சமமாகக் கிடைக்காத கல்விதான் தனது கொள்கை என்று கூறியிருக்கிறதா? இப்படிப் பொத்தாம் பொதுவாகப் பேசுவது கல்விக் கொள்கையாகுமா? பொதுப்பள்ளி, அருகமைப் பள்ளி, ஏற்றத்தாழ்வற்ற பாடத்திட்டம், சந்தை சக்திகளின் பிடியிலிருந்து கல்வி மீட்பு, தாய்மொழி வழிக் கல்வி, உயர் கல்வி நிறுவனங்களிலும் தாய்மொழி வழியில் பாடங்கள், கல்விச் சாலைகளில் சமூகநீதிக்கான இட ஒதுக்கீட்டு நியாயங்களைத் தகுதி என்ற போர்வையில் மறுக்கும் நவீனப்படுத்தப்பட்ட மநுவாதம்... இவற்றைப் பற்றியெல்லாம் பகுத்தறிவாளர் கமல் என்ன நிலைப்பாடு மேற்கொள்ளப்போகிறார்?
அரசியலில் சாதி, மத விளையாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் என்று மேடையில் இன்னொரு கொள்கை அறிவிப்பையும் வெளியிட்டார். அவையிலிருந்து எழுந்த வலுத்த கரவொலி, சாதியவாத அரசியலுக்கும் மதவாத அரசியலுக்கும் எதிரான தமிழக மக்கள் மனநிலையின் எதிரொலிதான். இன்றைய இந்தியச் சமூகக் களத்தில் திட்டமிட்ட முறையில் மதவெறி அரசியல் எப்படி கோரத் தாண்டவமாடுகிறது என்ற கூர்மையான விமர்சனத்தை முன்வைப்பதிலிருந்தே மதவாத, சாதிய அரசியல் விளையாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி என்ற கொள்கை தெளிவுபெறும். தமிழகத்திலும் இதர ஐந்து மாநிலங்களிலும் மதவாத, சாதிய அரசியல் சக்திகள் ஊடுறுவ முயல்வது பற்றிய எச்சரிக்கை வெளிப்படையான அறைகூவலாக ஒலித்தால்தான் இந்தக் கொள்கை நம்பகமானதாக இருக்கும். சாதி ஆணவக்கொலைகளை வன்மையாக எதிர்ப்பது, மதப் பிரச்னைகளைக் கிளறிவிட்டு மக்களைக் கூறுபோட முயல்வதை ஆவேசத்தோடு சாடுவது, மக்கள் ஒற்றுமைக்காகக் களம் காணும் முற்போக்கு சக்திகளோடு கரம் கோப்பது என்று விரிவடைந்த செயல்பாட்டில்தான் இந்தக் கொள்கை பொலிவுபெறும்.
கட்சியை அறிவிப்பதில் இத்தனை ஆண்டுகள் எடுத்துக்கொண்ட நிதானம், கட்சியின் கொள்கைகளை வகுப்பதில் இருக்கக் கூடாது. மக்களைத் தாக்குகிற அத்தனை பிரச்னைகளையும் அணுகுவதற்கான அடிப்படைக் கொள்கைத் தளம் தேவை. மய்யம் என்ற பெயரில் அந்தத் தளத்திலிருந்து விலகி நிற்பது, கட்சியின் பயணத்தில் பெரும் பள்ளமாகக் குறுக்கிடும். அதில் விழாமல் இருக்க இப்போதே மரபணு நீக்கப்படாத சித்தாந்த விதையை ஊன்றட்டும். கொள்கை உரத்தைச் சேர்க்கட்டும். ஆன்மிக அரசியல் என்ற விற்பனை முத்திரையோடு இன்னொருவர் கிளம்பவிருப்பதால், தனது பயணத்தில் நேச சக்திகள் யார் என்பது உள்ளிட்ட கோட்பாட்டுச் சுவரை மக்கள் நீதி மய்யம் வலுவாக எழுப்பட்டும்.
மதுரை கூட்டத்தில் நம்பிக்கையும் எதிர்பார்ப்புமாக ஒளிர்ந்த அந்த முகங்களுக்குச் செய்யப்படும் நியாயம் இதுவாகத்தான் இருக்க முடியும்.


Thursday, February 15, 2018

புதிய அரசியல் கலாசாரத்தை நோக்கி


நீண்ட நாட்களின் பின் புதிய கலப்பு தேர்தல் மூலம் உள்ளூராட்சி மன்றங்களுக்கான் தேர்தல்கள் முடிவடைந்து முடிவுகளும் வெளி வந்துள்ள சூழ் நிலையில் தமிழர்களின் தாயக நிலத்தில் நடந்த தேர்தல் புதிய மாற்றங்களுக்கான கட்டியமாக அமைந்துள்ளமை நம்பிக்கை தரும் மாற்றங்களை முன் மொழிந்துள்ளமை ஒரு வெற்றிடத்துக்கான சிந்தனை ஓட்டத்தை வெளிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத் தக்கது பாசிச மனோபாவத்துக்கு மக்கள் கொடுத்த பதிலாகவே பார்க்க முடியும்.
1989ஆம் ஆண்டு தேர்தலைத் தவிர தமிழ் மக்களது பிரதேசத்தில் ஒரு குறிப்பிட்ட மேட்டுக் குடி மிதப்பு மிக்க சர்வாதிகார தன்னிச்சையான முடிவுகளுக்கு கட்டுப் பட வேண்டும் என்ற அரசியல் அதிகார நிகழ்வுகளின் வழியே பயணித்தது.மக்கள் அதிகாரம் துஸ் பிரயோகம் பண்ணப் பட்ட ஒரு பகைப் புலத்தில் இன்றைய தேர்தல் சில எதிர்வு கூறல்களுக்கு இடம் தந்துள்ளது.
வடக்கிலும் கிழக்கிலும் பெரும்பான்மையான இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியடைந்த போதிலும் ஒரு சில இடங்களைத் தவிர ஏனைய இடங்களில் ஏனைய கட்சிகளின் அல்லது சுயேச்சைக் குழுக்களின் ஆதரவை கோர வேண்டிய நிலமை காணப் படுகிறது.பல இடங்களில் எதிர் கட்சிகள் ஒன்றிணைந்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு சபைகளில் அதிகாரத்தை கைப்பற்ற முடியாத திரி சங்கு சொற்க நிலை காணப் படுகிறது.
வடக்கு கிழக்கில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக விழுந்த வாக்குகளே அதிகம்.உதாரணத்துக்கு கட்டைபறிச்சான் வட்டாரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட்ட காருண்யா எழுநூறுக்கு மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற அவரை எதிர்த்து போட்டியிட்ட தமிழ் கட்சிகள் சுயேச்சைக் குழுக்கள் பெற்ற வாக்குகள் 1200க்கும் அதிகம் .இந்த நிலமையே அனேகமாக எல்லா இடங்களிலும் காணப் படுகிறது.
இம் முறை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த வாக்குகளில் பெரும் பகுதி வேட்பாளர்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கு கிடைத்த வாக்குகள் என பல அவதானிப்புகள் தெரிவிக்கின்றன.
எந்த ஒழுங்கான நகர கிராமிய கட்டமைப்புகளும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இல்லையென்றே சொல்லலாம் வெறும் பழய பெருங்காய பானை மணத்தோடு மக்களின் மறதியில் பயணிக்கும் கோடி முகமுடையோர் வாக்குகளைப் பெறலாம் என்றால்.
முறயான நகர கிராமிய கட்டமைப்புகளை ஏற்படுத்தி முற்போக்கு சிந்தனையும் தெளிந்த அரசியல் ஞானமும் கொண்ட புத்திஜீவிகள் பெண்கள் என ஒரு புதிய சிந்தனை மயப் பட்ட அணிக்கான தேவையயை உணர்த்தி நிற்கிறது இத் தேர்தல்
பல கட்சிகள் சேர்ந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கில் 150 இடங்களை கைப்பற்றி சபைகளை நிர்வகிக்க பெரும் பான்மைப் பலமில்லாமல் இருக்கும் போது ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 81 இடங்களை கைப்பற்றி மூன்று சபைகளில் அறுதிப் பெரும் பான்மை பெற்றுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி 88இடங்களை கைப்பற்றி மக்களின் மாற்றுத் தேர்வுக்கான ஒரு இடத்தை தெளிவுறுத்துகிறது.
தேசிய கட்சிகள் கணிசமான இடங்களைப் பெற்றுள்ளன குறிப்பாக மட்டக் களப்பில் ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிடத் தக்க வெற்றிகளைப் பெற்றிருக்கிறது.சுயேட்சைகளும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளும் சிந்திக்க வைக்கக் கூடிய வெற்றிகளைப் பெற்றுள்ளனர்.
இந்த முடிவுகள் எதிர் காலத்தில் மக்களை முதன்மைப் படுத்தும் மக்கள் ஜனாயக முற்போக்கு அரசியலுக்கு உள்ள தேவையயை வலியுறுத்துகிறது.
அணி சேர்வோம் புதிய சிந்தனைகளுடனும் சமூக கலாசார விழுமியங்களை முன்னெடுக்கும் அரசியல் கலாசாரம் நோக்கி
பாலசுகுமார்
மேனாள் முதன்மையர்
கலை கலாசார பீடம்
கிழக்குப் பல்கலைக் கழகம்

Thursday, December 14, 2017

அம்பேத்கர் இந்து மதம் அம்பேத்கர்

அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறுவது, பெளத்தத்தைத் தழுவுவது என்று எடுத்த முடிவு உணர்ச்சிவசப்பட்ட முடிவு அல்ல. பல ஆண்டுகாலமாக வரலாற்றை ஆராய்ந்தபிறகே அவர் அப்படியான முடிவுக்கு வந்தார். பிரெஞ்சுப்புரட்சி மானுடச் சமூகத்துக்கு அளித்த நவீன சிந்தனைகளான சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகிய அளவுகோலைக்கொண்டு இந்து மதத்தைப் பரிசோதித்தார்.
''உலகில் உள்ள எல்லா மதங்களும் ‘இறைவன் மனிதனைப் படைத்தார்’ என்று சொல்கின்றன. ஆனால் இந்து மதம் மட்டும்தான் இறைவன் ஒரு மனிதனை முகத்தில் இருந்து...ம் இன்னொரு மனிதனைக் காலில் இருந்தும் படைத்தார்’ என்று சொல்கிறது”
என்று தன் விமர்சனத்தை முன்வைத்தார். இந்து மதத்தில் உள்ள சாதியமைப்பு பிரமிட் முக்கோண அமைப்பில் இருக்கிறது என்று சொன்ன அம்பேத்கர், ஒவ்வொரு சாதிக்காரனும் தன்னை மேலே இருந்து அழுத்துகிறவன் மீது கோபப்படுவதில்லை. ஏனெனில், அவன் அடிமைப்படுத்துவதற்குக் கீழே ஒரு சாதி இருக்கிறது. இந்த உளவியல் திருப்தி, சாதியமைப்பை வலுவாகத் தக்கவைத்துக்கொள்வதைக் கண்டுபிடித்துச் சொன்னார். ''இந்து மதம் என்பது ஒவ்வொரு சாதிக்காரனும் இன்னொரு சாதிக்காரனிடம் இருந்து எவ்வளவு தூரம் விலகி நிற்பது போன்ற விதிமுறைகளின் தொகுப்பாகத்தான் இருக்கிறது” என்றார்.
“இந்து மதத்தில் உள்ள ஒவ்வொரு வர்ணமும் பல மாடிகளைக்கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பு போலத்தான். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்குச் செல்வதற்கு என்று எந்தப் படிகளும் கிடையாது” என்றார். அதனாலேயே “ஓர் ஆதிக்கச்சாதியில் பிறப்பவன் கருவிலேயே நீதிபதி ஆகும் கனவைக் கொண்டிருக்கிறான். ஆனால் ஒரு தோட்டியின் மகனோ கருவில் இருக்கும்போதே தோட்டியாவதற்கான வாய்ப்பைத்தான் கொண்டிருக்கிறான்” என்றார்.
அம்பேத்கர் அவர்கள் திரு காந்தியை சாடி (ஹரிஜன்) எங்களை இந்து மதம் அடிமைபடுத்துவதைத்தான் திரு காந்தி விரும்புகிறாரா?  தாழ்த்தப்பட்டவர்களை ஹரிஜன் (ராமனின் பிள்ளை) என்று திரு காந்தி அழைப்பதையும் அதன் பெயரில் பத்திரிகை வருவதையும் நான் கடுமையாக எதிர்க்கிறேன் என்கிறார் ( சாதி ஒழிப்பு நூல் ) ஆக அம்பேத்கரும் பெரியாரும் ஹிந்து சனாதன சாதிய வன்மத்தை போட்டு உடைக்கிறார்கள்... காந்தியின் கூற்றுப்படி ஹரிஜன் என்பது ராமனின் பிள்ளை எனில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு பெருமைதானே என நினைக்கத் தோன்றும் ஆனால்
அம்பேத்கரும்,  பெரியாரும்  மிகத் தெளிவாக ராம ராஜியத்தை உடைத்தெறிகிறார்கள், ராமாயணத்தில் உள்ள சம்பூகன் வதத்தை  இருவருமே மிக நேர்த்தியாக கையாண்டார்கள் ... ராமனின் ஆட்சியில் ஒரு பார்ப்பனின் கோரிக்கைக்காக எவ்வித விசாரணையுமின்றி கொலையும் செய்யத் துணியும் கேடுகெட்டதுதான் ஹிந்து  சனாதன ராம ராஜ்ஜியம் என அறிவுறுத்துகின்றனர்... இங்கு  ராமாயணத்தில் ஒரு பார்ப்பனன் ராம ராஜ்ஜியத்தை குறை கூறுகிறான் அதற்கு நாரதர் என்பவர் குறையை தீர்க்க வழி சொல்கிறார், என்னவென்றால் கடைகோடியில் எங்கோ பார்ப்பனர் அல்லாத ஒருவன் தவம் இருப்பதாகவும் (பார்ப்பனர் அல்லாதோர் தவம் இருப்பது குற்றமா?) அவன் உயிரை பறித்து விட்டால் தீர்வு வரும் என்கிறார்... ராமனும் அவனை தேடி அலைகிறார் சம்பூகன் அவன் என அடையாளம் காண்கிறார் ... எந்த சாதி என மட்டும் வினவுகிறார் ( வேறு எதுவும் அவனிடத்தில் கேட்கப்படவில்லை) அவன் "சூத்திரன்" என்றதும் தலையை துண்டிக்கிறார்... இதுதான் ராம ராஜ்ஜியம் எனில் எங்களை எப்படி ராமனின் பிள்ளை என அழைப்பீர்கள் என அம்பேத்கரும் பெரியாரும் சாடுகிறார்கள்...ஸ்ரீமத் ராமாயணம் உத்தர காண்டம் 65 – 77
அத்தியாயம் 76 ( 613) சம்பூக வத: (சம்பூகனை வதம் செய்தல்)ஹிந்து மதம் எந்த விதத்திலும் , எக்காலத்திலும் சாதியத்தை வைத்தே பிழைப்பு நடத்துவதைத்தான் நோக்கமாககொண்டிருக்கிறது அதிலும் குறிப்பாக பார்ப்பனியத்தை.... இடைநிலை சாதிகளான ஏனைய அனைத்து "சுமார் 3000 க்கும் மேலான சாதிகள்) சாதிகளுமே பார்ப்பனனை பொறுத்தவரையில் "சூத்திரன் (தேவடியாள் மகன்) மட்டுமே.... ஆனால் இந்திய சாதிய அமைப்புகள் தங்களை சூத்திரன் என்றழைக்கும் பார்ப்பனியத்தை எதிர்க்காமல் தங்களுக்கு கீழான  அடிமை சாதிகளை உறுவாக்கி அவர்களை ஒடுக்குதலையே முதன்மையாக கொண்டிருக்கிறார்கள்.... இவர்களுக்கு தேவை எதிர்ப்பு அல்ல ஏனைய அடிமைகள் அவ்வளவே....
தங்களை ஆண்ட சாதி , படியளந்த சாதி, அரசாண்ட ஷத்ரியர்கள் என பெருமை பிதற்றிக்கொடண்டாலும் ஹிந்துமத பார்பனனை கேட்டுப்பாருங்கள் "அவாள்ளாம் சூத்திரா" என்பார்கள்... இதுதான் ஹிந்துமதம்...
இந்த இடைநிலை சாதிகளானாலும் , அதன் கீழான தாழ்த்தப்பட்டவர்களானாலும் ஹிந்து மதத்தின் மிக நுணுக்கமான அடிமை படுத்துதலையே கடைபிடிக்கிறார்கள்... தங்களை வைசியர்களாக , ஷத்ரியர்களாக , அடையாளப்படுத்தும் சாதிகள் சூத்திரர்களை ஒடுக்குவது, சூத்திரர்கள் தங்களை ஒடுக்கும் இடைநிலை சாதிகளை எதிர்க்காமல்  தாழ்த்தப்பட்டவர்களை ஒடுக்குவது , தாழ்த்தப்பட்டவர்கள் தாழ்த்தப்பட்டவர்களையே ஒடுக்குவது... அதன் வழி ஹிந்து மதத்தை விடாப்பிடியாக இறுக்கமாக கட்டமைப்பது என்பதைத்தான் காலங்காலமாக பின்பற்றப்படுகிறது...ஒரு சாதிகள் சூழ்ந்து இன்னொரு சாதிகளை அனுசரிக்கும் வழக்கம் ஹிந்து மதத்திற்கோ, அதன் பார்ப்பனியத்திற்கோ  அறவே இருக்காது.... ஏனென்னால் அப்பொழுது ஹிந்துமதம் அழிந்து போகும்... இதன் காரணமாகவே பெருந்தலைவர்களையெல்லாம் ஹிந்துமதம் சாதிய வட்டத்திற்குள் அடக்கி வைக்கும் , அம்பேத்கரை  தாழ்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டுமான தலைவராக ஹிந்து மதம்  வைத்தது இதன் மூலமேயாகம், நடைமுறையில் காமராஜரை கூட சாதித்தலைவராக மாற்றியதும் குறிப்பிடப்பட வேண்டும், மக்களின் உணர்வுகளில் , அவர்களின் பலவீனங்களில் ஒவ்வொன்றிலும் ஹிந்து மதத்தின் அனுகூலங்களை புகுத்தி அவர்களின் சாதிய உணர்வுகளை எப்பொழுதுமே ஹிந்து மதம் கிளரிக்கொண்டே இருக்கும்...
என்ன சாதித்தது ஹிந்து மத சாதிகள் , தாழ்த்தப்பவர்கள் கல்வி யை செவி வழியில் கேட்டால்கூட பொசுக்கி விடு என்றதும்(கீதை) , பெண்களுக்கு (பார்ப்பன பெண்களும்) கல்வி அறவேக்கூடாது அவர்கள் ஆண்களுக்கு அடிமையாளர்கள் என்றும்தான் ஹிந்துமத பார்ப்பனிய சாதனையா? இப்போதெல்லாம் இப்படி நடப்பதில்லையே என்கிறீர்களா?   "நான் உன்னை கல்யாணம் பன்னிட்டேன்டி இனிமேல் எனக்கு நீ அடிமை" என எத்தனை உதடுகள் சொல்லியிருக்கும் என்று மனதை திறந்து வைத்து உங்களை நீங்களே உணருங்கள், சாதியின் பெயரால் ஆணவக்கொலைகளை நிகழ்த்துவதில் , தீண்டாமை கடைபிடிக்கப்படுவதில்  ஹிந்து மத சனாதனம் மிகப் பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கிறது என்பது இந்த நாட்டின் மிகப் பெரிய சாபம் என்றால் அது மிகையாகாது.

Tuesday, December 12, 2017

அரசியல் உரிமை

இந்த எண்ணக்கரு தொடர்பில் நிறைய வாதப் பிரதிவாதங்கள் உண்டு பெரும்பாலும் அரச அலுவலர்களது வாய்களில் நர்த்தனமாடும் வார்த்தையாக காணப்படும் எண்ணக் கருவானது உண்மையில் அரசியலுடன் தொடர்புடைய கட்சிகள், நபர்களிற்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ ஆதரவு தெரிவிப்பதை தவறு என்பதனை குறித்து நிற்கின்றது.
ஒரு பொது மகனாக மக்களை தெளிவுபடுத்த வேண்டிய கடமை ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு அவ்வகையில் நானும் எனது கருத்துக்களை இங்கு முன் வைத்துக் கொண்டிருக்கின்றேன் எனது பதிவுகள் எந்த ஒரு கட்சிக்கோ நபருக்கோ ஆதரவானவை அல்ல மாறாக சிறந்த மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்யக்கூடிய வகையில் மக்களது சிந்தனை மற்றும் செயல்களில் மாற்றம் வர வேண்டும் என்பதே அவா...
தற்பொழுது இலங்கையில் முற்று முழுதாக வட்டார முறையான தேர்தல் முறைமையாக காணப்படவிட்டாலும் பெருமளவில் வட்டாரமுறையை சார்ந்ததாக காணப்படுகின்றது எனவே தங்களது பிரதேசத்திற்கு சேவையாற்றக் கூடிய நபரை தெரிவு செய்வதற்கு இத் தேர்தல் முறைமை வழி சமைத்துக் கொடுத்துள்ளது..
இங்கு வாக்களிக்க தகுதியுடையவர்கள் பின்வரும் இரண்டு விடயங்கள் தொடர்பில் கடப்பாடுடையவர்கள்...
1. தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்கை கட்டாயம் செலுத்துவதற்குரிய கடப்பாடு
(தனது வாக்கை செலுத்தாது கடமையிலிருந்து தவறியவராவதுடன் பிழையான தெரிவுகள் தெரிவு செய்யப்படுவதற்கு காரணமானவராகவும் ஜனநாயகத்தை மறுதலிப்பவராகவும் அமைவார்)
2. வாக்காளர்கள் சரியான நபரை தெரிவு செய்தல்.
பெரும்பாலும் தேர்தல் காலங்களில் மக்களை மூளைச் சலவை செய்வதற்கு பலர் முனைவர் எனினும் பகுத்தறிவுள்ளவர்கள் என்னும் எடுகோளின் அடிப்படையில் மக்கள் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் சரியான பிரதிநிதியை தெரிவு செய்ய வேண்டியது அவசியம்
1. தான் தேர்தலில் போட்டியிடும் பிரதேசம் தொடர்பான குறிப்பிடத்தக்க அறிவு (பிரதேச அமைவு, காணப்படுகின்ற வளங்கள், மக்களது அடிப்படை பிரச்சனைகள், பொதுவான விடயங்கள் தொடர்பான அறிவு)
2. தான் போட்டியிடுகின்ற தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டால் மக்களுக்கு எவ்விதமான சேவை செய்யலாம் என்பது தொடர்பான குறிப்பிடத்தக்க அறிவு (குறிப்பாக ஒருவர் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடுவாராயின் பிரதேச சபை சட்டம், அப்பிரதேச சபை வருமானம், வளங்கள் பற்றிய அறிவு நிறைந்து அவற்றின் அடிப்படையில் சேவையாற்றக்கூடிய வகையில் குறிக்கோள்கள் அமைய வேண்டும் அதை விடுத்து பிரதேச சபைக்கு போட்டியிடும் நபர் தான் வெற்றி பெற்றால் பிரதேச சபை மூலம் பிரதான 'அ' வகை வீதிகளை புனரமைப்பேன் என்பது கேலிக்கூத்தாகவே அமையும் ஏனெனில் அது பாராளுமன்ற, அமைச்சரவை தீர்மானங்களுடன் தொடர்புடையதாகவே காணப்படுகின்றமை ஆகும் ஆயினும் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அவ்வாறான கோரிக்கையை அரசிற்கு விடுக்கலாம் அது தொடர்பில் கூறி அவர் மக்களை பிழையாக நடாத்த வேண்டிய அவசியம் இல்லை)
3. மேலும் தனது பிரதிநிதித்துவத்தால் மக்களிற்கு சேவையாற்றக்கூடிய வகையில் வெளி வளங்களை பெற்றுத் தரக்கூடிய ஆற்றல் ( பிரதேச சபை உறுப்பினராயின் மாகாண சபை மூலம் நிதி, வளங்களை பெற்று பிரதேசத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய ஆற்றல்)
பெரும்பாலும் மக்கள் குறிப்பிட்ட அரசியல் கட்சிகள் சார்பில் தங்களது ஆதரவை தெரிவிக்கும் பண்பு காணப்படுகின்றது விகிதாசாரமுறைமைக்கு இது ஓரளவு பொருந்தினாலும் வட்டார முறையைப் பொருத்த வரை பிரதிநிதி மற்றும் அவரது பிண்ணனி முக்கியமாக உள்ளது
நீங்கள் ஆதரவளிக்கும் நபர் சமூகத்தில் உயர் தொழிலில் உள்ளவராக நற்பண்புகள் நிறைந்தவராக காணப்படலாம் ஆனால் அவர் வினைத்திறமை அற்றவராக அடையாளம் காணப்பட்டவராயின் அவரை தெரிவு செய்வதனால் பயன் ஏது?
நீங்கள் குறிப்பிட்ட கட்சியை ஆதரிக்கின்றீர்கள் அதன் பிரதிநிதிக்கே ஆதரவளிக்க வேண்டும் எனக் கடப்பாட்டுடன் திகழ்கின்றீர்கள் என வைத்துக் கொள்கின்றோம் அவ்வாறு பிரதிநிதித்துவப்படுத்துபவர் வினைத் திறமை அற்றவராகவோ அல்லது சமூக விரோதியாகவோ காணப்படின் நிலையைச் சற்று சிந்தித்து பாருங்கள் கடந்த கால கசப்பான அனுபவங்களினால் தான் மேற்கூறிய கருத்தை கூற வேண்டியுள்ளது கடந்த காலத்தில் A என்ற கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய X என்ற நபர் தான் தவிசாளராக இருந்த சபையில் தற்காலிக ஊழியராக இருந்த பெண்ணை நிரந்தரமாக்க பாலியல் லஞ்சம் கேட்டு நியமனத்தை இடை நிறுத்தி கௌரவ ஆளுநர் தலையீடு செய்த வரலாறுகள் உண்டு...
எனவே அன்பார்ந்த மக்களே பிரதிநிதிகளை தெரிவு செய்யும் பொழுது சரியான பிரதிநிதியை தெரிவு செய்யுங்கள் ஏனெனில் மக்களின் அறிவின் அடிப்படையிலேயே அவர்களால் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகளும் அமைவர், கட்டாய வாக்களிப்பின் மூலம் ஜனநாயகப் பண்புகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாடும் எமக்குண்டு சிந்தித்துச் செயல்படுங்கள் நாளை_நமதே.

Thanks 
Pragash Sinnarajah

Thursday, November 9, 2017

ஏன் சோசலிசம் ! – ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்


உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரான ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் எழுதிய இந்தக் கட்டுரை, அமெரிக்காவில், மன்த்லி ரிவியூ என்ற பத்திரிகையின் முதல் இதழில் (மே 1949) வெளியிடப்பட்டது.
“உற்பத்தி இலாபத்துக்காகச் செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்காக இல்லை. “வேலை செய்ய திறமையும் விருப்பமும் உடைய எல்லோருக்கும் வேலை கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை; வேலை இல்லாதவர்களின் படை ஒன்று எப்போதுமே இருக்கிறது.
“எப்போது வேலை போகுமோ என்ற பயத்தில்தான் தொழிலாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.”
- ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

பொருளாதார, சமூகப் பிரச்சனைகளில் நிபுணராக இல்லாத ஒருவர் சோசலிசம் குறித்துத் தனது கருத்துக்களை வெளியிடுவது சரிதானா? பல காரணங்களுக்காக அது சரிதான் என்று நான் கருதுகிறேன்.
முதலில், அறிவியல் கண்ணோட்டத்தில் இந்தக் கேள்வியைப் பரிசீலிக்கலாம். முதல் பார்வையில் வானவியலுக்கும் பொருளாதாரவியலுக்கும் அடிப்படையில் முறையியல் வேறுபாடுகள் இல்லாதது போலத் தோன்றலாம். இரண்டு துறைகளிலுமே அறிவியலாளர்கள் தாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட நிகழ்வுகள் தொடர்பான விதிகளைக் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர்.
அதன் மூலம் இந்நிகழ்வுகளுக்கிடையேயான உள்உறவுகளை முடிந்த வரைக்கும் புரிந்து கொள்ள முயற்சிக்கின்றனர். ஆனால், உண்மையில் இரண்டு துறைகளுக்கும் இடையே முறையியல் வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. தனியாகப் பிரித்து மதிப்பிட முடியாத பல காரணிகள் பொருளாதார நிகழ்வுகளைப் பாதிக்கின்றன என்பதால், பொருளாதாரவியல் துறையில் பொதுவான விதிகளைக் கண்டுபிடிப்பது சிக்கலானதாக உள்ளது.
மேலும், நாகரீகக் காலகட்டம் என்று அழைக்கப்படும் மனிதகுல வரலாற்றில் திரட்டப்பட்டுள்ள அனுபவங்கள் வெறும் பொருளாதாரக்  காரணிகளால் மட்டும் பாதிக்கப்பட்டுத் தீர்மானிக்கப்படவில்லை என்பது அனைவரும் அறிந்ததே.


உதாரணமாக, வரலாற்றில் தோன்றிய பேரரசுகளில் பெரும்பாலானவை நாடு பிடித்தலை அடிப்படையாகக் கொண்டிருக்கின்றன. வென்றடக்கும் தரப்பினர், வென்றடக்கிய நாட்டில் பொருளாதார ரீதியாகவும், சட்டரீதியாகவும் சலுகை பெற்ற வர்க்கமாகத் தம்மை நிலைநிறுத்திக் கொண்டார்கள். நிலவுடைமை ஏகபோகத்தைக் கைப்பற்றிக் கொண்ட அவர்கள், தமது தரப்பிலிருந்தே மத குருக்களை நியமித்துக் கொண்டார்கள். கல்வியைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த இந்த மத குருக்கள், சமூகம் வர்க்க ரீதியாகப் பிரிக்கப்பட்டிருப்பதை ஒரு நிரந்தர அமைப்பாக மாற்றினார்கள். மக்கள் தமது சமூக செயல்பாடுகளில் தம்மை அறியாமலேயே வழிநடத்தப்படும் வகையிலான ஒரு தார்மீகக் கட்டமைப்பை உருவாக்கினார்கள்.
இந்த வரலாற்றுப் பாரம்பரியம் நேற்றோடு முடிந்த போன கதை. இருப்பினும், நாம் இன்னும் தோர்ஸ்டெய்ன் வெப்லன் வேட்டையாடும் கட்டம் ( பார்க்க அடிக்குறிப்பு 1)  என்று அழைக்கும் மனிதகுல வளர்ச்சிக் கட்டத்தை எந்த நாட்டிலும் கடந்து விடவில்லை. இப்போது நாம் பார்த்துக் கொண்டிருக்கும் பொருளாதார நடைமுறைகள் அத்தகைய
வேட்டையாடும் கட்டத்தைச் சேர்ந்தவை. இந்த நடைமுறைகளிலிருந்து நாம் வந்தடையக் கூடிய விதிகள் எதிர்காலத்தில் வரப் போகும் புதிய, மேம்பட்ட கட்டங்களுக்கு பொருந்தப் போவதில்லை.
மனிதகுல வளர்ச்சியின் வேட்டையாடும் கட்டத்தைத் தாண்டி முன்னேறிச் செல்வதுதான் சோசலிசத்தின் உண்மையான நோக்கம். எனவே,  பொருளாதார அறிவியல் அதன் இன்றைய நிலையில் எதிர்கால சோசலிச சமூகத்தைப் பற்றி விளக்க சாத்தியமற்று உள்ளது.
இரண்டாவதாக, சோசலிசம் ஒரு சமூக அறம் சார்ந்த இலக்கை நோக்கிய பயணம். ஆனால், அறிவியல் அத்தகைய இலக்குகளை உருவாக்கித் தர முடியாது என்பதோடு, அறிவியல் மூலம் இலக்குகளை மனிதர்கள் ஏற்றுக் கொள்ளும்படி செய்வதற்கான சாத்தியம் இன்னும் குறைவு. அதிகபட்சமாக, குறிப்பிட்ட இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகளை மட்டுமே அறிவியல் வழங்க முடியும். ஆனால், அத்தகைய இலக்குகளை உயர்ந்த அறநெறி இலட்சியங்களைக் கொண்டிருக்கும் ஆளுமைகள்தான் உருவாக்குகின்றனர். அந்த இலக்குகள் குறைப் பிரசவமாகி விடாமல் உயிர்த் துடிப்போடும், சக்தியோடும் இருக்கும் போது, உணர்ந்தும் உணராமலும் தமது செயல்பாடுகளால் சமூகத்தின் பரிணாம வளர்ச்சியை தீர்மானிக்கும் மனிதர்களால் அவை ஏற்றுக் கொள்ளப்பட்டு முன்னெடுத்து செல்லப்படுகின்றன.
எனவே, மனிதகுலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஆய்வு செய்யும் போது அறிவியலையும் அறிவியல் முறையியலையும் அளவுக்கு மீறி மதிப்பிட்டு விடாமல் கவனமாக இருக்க வேண்டும். சமூகத்தின் கட்டமைப்பைப் பாதிக்கும் கேள்விகள் தொடர்பாக துறை நிபுணர்கள் மட்டும்தான் கருத்துச் சொல்ல வேண்டும் என்று முடிவு செய்து விடக் கூடாது.
சமீப காலமாக மனித சமூகம் ஒரு நெருக்கடியைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது என்றும் சமூகத்தின் நிலைத்தன்மை மிக மோசமாகச் சிதறடிக்கப்பட்டிருக்கிறது என்றும் பல குரல்கள் ஆணித்தரமாக பேசிக் கொண்டிருக்கின்றன. இத்தகைய நிலையில் தனிநபர்கள், அவர்கள் சார்ந்திருக்கும் சிறு அல்லது பெரிய குழு தொடர்பாக விட்டேற்றியாக, ஏன் பகை உணர்வோடு இருப்பது ஒரு போக்காக உள்ளது. நான் சொல்வதை விளக்குவதற்கு எனது சொந்த அனுபவம் ஒன்றை குறிப்பிட விரும்புகிறேன்.
சமீபத்தில் ஒரு புத்திசாலியான, நல்லெண்ணம் படைத்த ஒருவரிடம் இன்னொரு போர் மூண்டு விடும் அபாயத்தை பற்றிப் பேசிக் கொண்டிருந்தேன். அத்தகைய போர் மனிதகுலத்தின் இருத்தலையே கேள்விக்குள்ளாக்கி விடும் என்றும், தேசங்களுக்கு அப்பாற்பட்ட கட்டமைப்பு ஒன்றுதான் அத்தகைய அபாயத்திலிருந்து நம்மைப் பாதுகாக்க முடியும் என்றும் எனது கருத்தை தெரிவித்தேன். அதைக் கேட்டவுடன், அவர், மிக அமைதியாக, பதட்டமின்றி, மனித இனம் அழிந்து போவதை ஏன் இவ்வளவு தீவிரமாக எதிர்க்கிறீர்கள்? என்று கேட்டார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கூட இப்படி ஒரு கருத்தை இவ்வளவு எளிதாக யாரும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பது உறுதி. தனக்குள் ஒரு சமநிலையை வந்தடைவதற்குப் போராடித் தோற்று போய், இனிமேலும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட ஒரு மனிதரின் கருத்து அது. இன்று பலரையும் பீடித்துள்ள வலிமிகுந்த தனிமையின், ஒதுக்கி வைப்பின் வெளிப்பாடு அது. இதற்கு என்ன காரணம்? இதிலிருந்து விடுபட ஏதாவது வழி இருக்கிறதா?
இப்படிப்பட்ட கேள்விகளை கேட்பது எளிது. ஆனால், குறிப்பிடத்தக்க அளவு உறுதியுடன் அவற்றுக்கு விடை சொல்வது கடினமானது. இருப்பினும், என்னால் முடிந்த அளவு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நான் முயற்சிக்கிறேன். நமது உணர்ச்சிகளும், தேடல்களும் பல நேரங்களில் முரண்பட்டவையாகவும் தெளிவற்றவையாகவும் இருக்கின்றன என்பதையும், எளிதான, எளிமையான சூத்திரங்களாக அவற்றை வெளிப்படுத்த முடியாது என்பதையும் தெரிந்தே நான் இந்த முயற்சியில் இறங்குகிறேன்.
ஒரு மனிதர் ஒரே நேரத்தில் தனித்த பிறவியாகவும், சமூகப் பிறவியாகவும்  இருக்கிறார். தனித்த பிறவியாக தனது வாழ்வையும், தனக்கு மிகவும் நெருக்கமானவர்களின் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்ளவும், தனது தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ளவும், தனது உள்ளார்ந்த திறமைகளை வளர்த்துக் கொள்ளவும் முயற்சிக்கிறார். சமூகப் பிறவியாக, தனது சக மனிதர்களின் அங்கீகாரத்தையும், அன்பையும் பெற முயற்சிக்கிறார்; அவர்களது மகிழ்ச்சிகளில் பங்கெடுக்க விளைகிறார்; அவர்களது துயரங்களுக்கு ஆறுதல் சொல்கிறார்; அவர்களது வாழ்க்கை நிலையை மேம்படுத்த முயற்சிக்கிறார்.
பல்வகைப்பட்ட, பல நேரங்களில் ஒன்றோடொன்று முரண்படும் இத்தகைய முயற்சிகள்தான் ஒரு மனிதரின் தனிச்சிறப்பான தன்மையைத் தீர்மானிக்கின்றன. ஒரு மனிதரின் வாழ்வில் அவற்றின் குறிப்பிட்ட சேர்க்கை, அவர் தனது உள்மன சமநிலையைப் பராமரித்து சமூகத்தின் நலனுக்கு பங்களிக்க முடியுமா என்பதைத் தீர்மானிக்கின்றது.
இந்த இரண்டு உந்துதல்களின் ஒப்பீட்டு வலிமைகள் மரபு வழியில் தீர்மானிக்கப்படுவதற்கான சாத்தியம் இருந்தாலும், ஆனால், இறுதியாக வெளிப்படும் ஒரு மனிதரின் ஆளுமை அவர் வளர்ந்த சூழலாலும், வளர்ந்த சமூகத்தின் கட்டமைப்பாலும், அச்சமூகத்தின் பாரம்பரியங்களாலும், குறிப்பிட்ட வகையிலான நடத்தைகள் பற்றிய அச்சமூகத்தின் மதிப்பீடுகளாலும் தீர்மானிக்கப்படுகிறது.
ஒரு தனி மனிதரைப் பொருத்தவரை “சமூகம்” என்ற கருத்தாக்கம், சமகால மனிதர்களுடனும், முந்தைய தலைமுறை மனிதர்களுடனும் அவருக்கு இருக்கும் நேரடி, மறைமுக உறவுகளின் தொகுப்பைக் குறிக்கிறது. ஒரு தனிமனிதர் தானாகவே சிந்திக்கவும், உணரவும், முயற்சிக்கவும், வேலை செய்யவும் முடிகிறது; ஆனால், உடல்ரீதியாகவும், அறிவு ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சமூகத்தை அவர் பெருமளவு சார்ந்திருப்பதால், சமூகம் என்ற சட்டகத்துக்கு வெளியில் ஒரு மனிதரைப் பற்றிச் சிந்திப்பதோ, புரிந்து கொள்வதோ, சாத்தியமற்றதாகிறது.
“சமூகம்” தான் மனிதருக்கு உணவு, உடைகள், வீடு போன்ற அத்தியாவசிய தேவைகளையும், வேலை செய்வதற்கான கருவிகளையும், மொழியையும் சிந்தனை வடிவங்களையும் சிந்தனையின் பெரும்பகுதி உள்ளடக்கத்தையும் வழங்குகிறது. “சமூகம்” என்ற சிறு சொல்லின் பின் மறைந்திருக்கும் கடந்த காலத்தையும், சமகாலத்தையும் சேர்ந்த கோடிக்கணக்கான மனிதர்களின் உழைப்பின் மூலமும், சாதனைகளின் மூலமும்தான் ஒரு மனிதரது வாழ்க்கை சாத்தியமாக்கப்படுகிறது.
எனவே, சமூகத்தின் மீது தனிநபரின் சார்பு இயற்கை யதார்த்தமாக உள்ளது. எப்படி எறும்புகளையும், தேனீக்களையும் அவற்றின் சமூகத்திலிருந்து பிரிக்க முடியாதோ அது போல மனிதருக்கும் சமூகம் ஒரு பிரிக்க முடியாத அம்சமாக உள்ளது. எறும்புகளின், தேனீக்களின் வாழ்க்கையின் சின்னஞ்சிறு விபரங்கள் கூட, மாற்ற முடியாத, பாரம்பரியமாக பெறப்பட்ட உள்ளுணர்வுகளால் தீர்மானிக்கப்படுகின்றன. ஆனால், மனிதர்களின் சமூக வடிவமைப்புகளும், அவர்களுக்கிடையேயான உறவுகளும் மாறக் கூடியவையாகவும், மாற்றத்துக்குட்பட்டவையாகவும் உள்ளன.
மனிதர்களின் நினைவுத் திறன், புதிய சேர்க்கைகளை படைக்கும் திறன், மொழி வழி தகவல் பரிமாற்றம் ஆகியவை உயிரியல் அவசியங்களால் கட்டுப்படுத்தப்படாத முன்னேற்றங்களைச் சாத்தியமாக்கியிருக்கின்றன. அந்த முன்னேற்றங்கள் பாரம்பரியங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் போன்றவற்றிலும் இலக்கியத்திலும், அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளிலும், கலைப்படைப்புகளிலும் வெளிப்படுகின்றன. ஒரு மனிதர் குறிப்பிட்ட வகையில் தனது சொந்த நடத்தையைக் கட்டுப்படுத்த முடிவதையும், அவரது உணர்வுபூர்வமான சிந்தனையும், விருப்பங்களும் அதில் பங்களிப்பு செய்வதையும் இது விளக்குகிறது.
ஒரு மனிதர் பிறக்கும்போதே மரபுரீதியாக ஒரு உடற்கட்டமைப்பைப் பெறுகிறார். மனித இனத்தின் இயல்பான இயற்கை உந்துதல்கள் உள்ளிட்ட அந்தக் கட்டமைப்பு நிலையானது, மாற்ற முடியாதது என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு மேல், தன் வாழ்நாள் முழுவதும், தகவல் தொடர்பு மூலமும் பிற வகை தாக்கங்களின் மூலமும் சமூகத்திலிருந்து ஒரு கலாச்சார கட்டமைப்பை அவர் வரித்துக் கொள்கிறார். காலப்போக்கில் மாற்றப்படக்கூடிய இந்தக் கலாச்சார கட்டமைப்புதான் ஒரு தனிநபருக்கும் சமூகத்துக்கும் இடையேயான உறவை முதன்மையாகத் தீர்மானிக்கிறது.
மானுடவியலின் புராதன சமூகங்கள் பற்றிய ஒப்பீட்டு ஆய்வுகள் மூலம் நிலவும் கலாச்சார வடிவங்களைப் பொறுத்தும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்தும் அமைப்புகளின் தன்மையைப் பொறுத்தும் மனிதர்களின் சமூக நடத்தை பெருமளவு வேறுபடலாம் என்று தெரிய வருகிறது. மனித குலத்தின் நிலையை மேம்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பவர்கள் இதில்தான் நம்பிக்கைவைக்க வேண்டும். உயிரியல் கட்டமைப்பின் காரணமாக ஒருவரை ஒருவர் அழித்துக் கொள்வதோ, குரூரமான, சுயமாகச் சுமத்தப்பட்டுக் கொண்ட விதியின் தயவில் வாழ்வதோ மனித குலத்தின் விதி இல்லை.
மனித வாழ்க்கையை அதிகபட்ச நிறைவளிக்கக் கூடியதாக மாற்றுவதற்கு சமூகத்தின்  கட்டமைப்பையும், மனிதரின் கலாச்சார கண்ணோட்டத்தையும் எப்படி மாற்ற வேண்டும்? சில நிலைமைகள் நம்மால் மாற்றியமைக்கப்பட முடியாதவை என்ற உண்மையை நாம் எப்போதும் மனதில் வைத்திருக்க வேண்டும். முன்பு குறிப்பிட்டது போல மனிதரின் உயிரியல் இயல்புகள் நமது நடைமுறையை பொறுத்தவரை மாற்றப்பட முடியாதவை.
மேலும், கடந்த சில நூற்றாண்டுகளில் தொழில்நுட்பங்களும், மக்கள் தொகை பெருக்கமும் உருவாக்கியுள்ள நிலைமைகளை இல்லாமல் செய்து விட முடியாது. மக்களின் தொடர்ந்த இருத்தலுக்கு இன்றியமையாத பொருட்களுடன் கூடிய, ஒப்பீட்டளவில் மக்கள்நெருக்கம் அதிகமான பகுதிகளுக்கு, பெருமளவு உழைப்புப் பிரிவினையுடன் கூடிய மையப்படுத்தப்பட்ட உற்பத்திப் பொறியமைவு இன்றியமையாதது. தனிநபர்களும், ஒப்பீட்டளவில் சிறு குழுக்களும் தமது தேவைகளைத் தாமே நிறைவு செய்து கொள்ளும் வாழ்க்கை நினைத்துப் பார்க்கும் போது சொர்க்கமாக இனித்தாலும், அது இனிமேல் திரும்பி வரப் போவதில்லை. மாறாக, இப்போது மனிதகுலம் இந்த பூமிக் கோளம் தழுவிய உற்பத்தி, நுகர்வு சமூகமாக உள்ளது என்று சொல்வது மிகையாகாது.
நமது காலத்தின் நெருக்கடியின் சாராம்சம் என்ன என்று சுருக்கமாக சுட்டிக் காட்ட வேண்டிய கட்டத்துக்கு நான் வந்திருக்கிறேன். தனிமனிதர் சமூகத்துடன் கொண்டிருக்கும் உறவைப் பற்றியது அது. சமூகத்தின் மீது தனது சார்பை மனிதர் முன்னெப்போதையும் விட அதிகமாக உணர்ந்திருக்கிறார். ஆனால், இந்தச் சார்பை ஒரு நேர்மறையான சொத்தாக உணராமல், ஒரு உயிரோட்டமான பிணைப்பாக உணராமல், தன்னைப் பாதுகாக்கும் சக்தியாக உணராமல், தனது இயற்கை உரிமைகளுக்கும், தனது பொருளாதார இருத்தலுக்கும் அச்சுறுத்தலாக அவர் பார்க்கிறார்.
மேலும், சமூகத்தில் அவர் வைக்கப்பட்டிருக்கும் இடம், அவரது உயிரியல்  கட்டமைப்பில் உள்ளார்ந்து இருக்கும் தான் என்ற தன் முனைப்பு போக்கைத் தீவிரப்படுத்துகிறது. இயல்பாகவே பலவீனமாக இருக்கும் சமூக போக்குகளை, மேலும் மேலும் பலவீனப்படுத்துகிறது. சமூகத்தின் ஒவ்வொரு நிலையில் இருக்கும் மனிதர்களும் இந்தச் சீரழிவு நிகழ்முறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமது சொந்த அகந்தையில் சிறை பிடிக்கப்பட்டுள்ள அவர்கள் பாதுகாப்பற்றும், தனிமையாகவும் உணர்கிறார்கள்; ஒரு வகை அப்பாவித்தனமான, எளிமையான, பகட்டற்ற வாழ்வின் மகிழ்ச்சியை இழக்கிறார்கள். சமூகத்துக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்வதன் மூலமாகவே குறுகிய, அபாயங்கள் நிரம்பிய தனது வாழ்க்கையின் உண்மையான பொருளை ஒரு மனிதர் கண்டு கொள்ள முடியும்.
இன்று நிலவும் முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார அராஜகம்தான் தீங்குகளின் உண்மையான மூலம் என்பது எனது கருத்து. பெரும் எண்ணிக்கையிலான உற்பத்தியாளர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் அவர்களது உழைப்பின் பலன்களை பறித்துக் கொள்ள தொடர்ந்து முயற்சிப்பதை நாம் காண்கிறோம். அவ்வாறு பறித்துக் கொள்வது வன்முறையின் மூலம் நடக்கவில்லை, சட்டரீதியாக நிறுவப்பட்ட விதிகளைக் கவனமாகக் கடைப்பிடிப்பதன் மூலமே நடக்கிறது. இதைப் பற்றி பேசும் போது, உற்பத்தி சாதனங்கள் – அதாவது, நுகர்வு பொருட்களையும், கூடுதல் எந்திர சாதனங்களையும் உற்பத்தி செய்வதற்கான ஒட்டு மொத்த உற்பத்தித் திறன் –  சட்டப்படியாகவும், நடைமுறையிலும் தனியார் சொத்தாக உள்ளன என்பதை நினைவில் வைத்திருக்க வேண்டும்.
விளக்குவதற்கு எளிமையாக இருக்கும் வகையில் பின்வரும் விவாதத்தில், உற்பத்தி சாதனங்களின் உடைமையில் பங்கு இல்லாத அனைவரையும் தொழிலாளர்கள் என்று நான் குறிப்பிடுகிறேன். அந்தச் சொல் வழக்கமாக இந்தப் பொருளில் பயன்படுத்தப்படுவதில்லை.
உற்பத்திச் சாதனங்களைச் சொந்தமாக வைத்திருப்பவர், தொழிலாளரின் உழைப்புச் சக்தியை வாங்கும் நிலையில் இருக்கிறார். உழைப்புச் சாதனங்களைப் பயன்படுத்தி தொழிலாளர் உற்பத்தி செய்யும் புதிய பொருட்கள் முதலாளியின் சொத்தாக மாறி விடுகின்றன. இந்த நிகழ்முறையின் சாராம்சமான விஷயம் என்னவென்றால் தொழிலாளர் உற்பத்தி செய்வதற்கும், அவர் பெறும் ஊதியத்துக்கும் இடையேயான உறவுதான். இரண்டுமே உண்மையான மதிப்பின் அலகுகளில் அளவிடப்படுகின்றன.
உழைப்பு ஒப்பந்தம், சுதந்திரமானதாக இருந்தாலும் தொழிலாளருக்குக் கிடைக்கும் வருமானம் அவர் உற்பத்தி செய்யும் பொருட்களின் உண்மை மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை; மாறாக, அவரது குறைந்தபட்ச தேவைகளாலும், முதலாளிகளின் உழைப்பு சக்திக்கான தேவையை நிறைவு செய்ய போட்டி போடும் தொழிலாளர்களின் எண்ணிக்கையாலும் தீர்மானிக்கப்படுகின்றது. கோட்பாட்டில்கூடத் தொழிலாளருக்கான ஊதியம், அவர் உற்பத்தி செய்யப்படும் பொருளின் மதிப்பால் தீர்மானிக்கப்படுவதில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
தனியார் மூலதனம் ஒரு சிலரிடம் குவியும் போக்கு காணப்படுகிறது. ஒரு பக்கம் முதலாளிகளுக்கிடையேயான போட்டி, இன்னொரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றமும், அதிகரிக்கும் உழைப்புப் பிரிவினையும் சிறு உற்பத்திக் கூடங்களை அழித்து விட்டுப் பெரும் தொழிற்சாலைகள் உருவாவதை ஊக்குவிப்பது இதற்குக் காரணமாகின்றன. இந்த வளர்ச்சிகளின் விளைவாக ஜனநாயகரீதியில் அமைப்பாக்கப்பட்ட அரசியல் சமூகத்தால்கூடக் கட்டுப்படுத்த முடியாத தனியார் மூலதன சிறு கும்பலின் சர்வாதிகாரம் தோன்றுகிறது.
சட்டமியற்றும் அவைகளின் உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்; தனியார் முதலாளிகள் அவர்களுக்குப் பெருமளவு நிதி உதவி அளித்து அவர்கள் மீது தாக்கம் செலுத்துகின்றனர்; இதன் மூலம் அனைத்து நடைமுறை விஷயங்களைப் பொருத்தவரையில் வாக்காளர்களைச் சட்டமியற்றும் அவையிலிருந்து பிரித்து வைத்து விடுகின்றனர். இதன் விளைவு என்னவென்றால், மக்களின் பிரதிநிதிகள், மக்கள் தொகையின் நலிவுற்ற பிரிவினரின் நலன்களைப் போதுமான அளவு பாதுகாப்பதில்லை.
மேலும், தனியார் முதலாளிகள்  நேரடியாகவும், மறைமுகமாகவும் தகவல் தொடர்பின் முக்கியமான ஊடகங்களான பத்திரிகைகள், வானொலி, கல்வி போன்றவற்றைக் கட்டுப்படுத்துகின்றனர். எனவே, ஒரு தனிப்பட்ட குடிமகன் புறநிலையைச் சரியாக புரிந்து கொண்டு முடிவு எடுப்பதும் தனது அரசியல் உரிமைகளை அறிவுபூர்வமாகப் பயன்படுத்துவதும் பெரும்பாலான நேரங்களில் மிகக் கடினமாகவோ, அல்லது சாத்தியமற்றதாகவோ உள்ளது.
மூலதனத்தில் தனியுடைமை என்ற அடிப்படையிலான பொருளாதாரத்தில் நிலவும் நிலைமை இரண்டு முக்கிய கோட்பாடுகளை கொண்டிருக்கிறது : முதலில், உற்பத்திச் சாதனங்கள் (மூலதனம்) தனியாருக்குச் சொந்தமாக உள்ளன. அவற்றின் உடைமையாளர்கள் தம் விருப்பப்படி அவற்றைப் பயன்படுத்துகின்றனர். இரண்டாவதாக, உழைப்பு ஒப்பந்தம் சுதந்திரமானதாக உள்ளது.
இந்த வகையில் தூய்மையான முதலாளித்துவ சமூகம் என்ற ஒன்று நிச்சயமாக இல்லைதான். குறிப்பாக, தொழிலாளர்கள் நீண்ட, கடுமையான அரசியல் போராட்டங்களின் மூலம் குறிப்பிட்ட வகை தொழிலாளர்களுக்குச் “சுதந்திர உழைப்பு ஒப்பந்தத்தின்” மேம்பட்ட வடிவத்தைப் பெறுவதில் வெற்றியடைந்திருக்கிறார்கள். ஆனால், ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இன்றைய பொருளாதாரம், “தூய்மை”யான முதலாளித்துவத்திலிருந்து பெருமளவு வேறுபடவில்லை என்று தெரிகிறது.
“உற்பத்தி இலாபத்துக்காகச் செய்யப்படுகிறது. பயன்பாட்டுக்காக இல்லை. “வேலை செய்ய திறமையும் விருப்பமும் உடைய எல்லோருக்கும் வேலை கிடைப்பதற்கு எந்த வழிவகையும் இல்லை; வேலை இல்லாதவர்களின் படை ஒன்று எப்போதுமே இருக்கிறது.
“எப்போது வேலை போகுமோ என்ற  பயத்தில்தான் தொழிலாளர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.”
வேலையில்லாதவர்களும் குறைவான சம்பளம் பெறும் தொழிலாளர்களும் இலாபகரமான சந்தையாக அமைவதில்லை என்பதால் நுகர்வு பொருட்களின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படுகிறது; அதன் விளைவாக பெருமளவு சிரமங்கள் ஏற்படுகின்றன. தொழில்நுட்ப முன்னேற்றம், அனைவரது வேலைச் சுமையையும் குறைப்பதற்கு மாறாக, கூடுதல் வேலை இழப்பை உருவாக்குகிறது.
இலாப நோக்கமும், முதலாளிகளுக்கிடையேயான போட்டியும், மூலதனத்தை ஒன்று குவிப்பதிலும் பயன்படுத்துவதிலும் நிலையற்ற தன்மைக்குக் காரணமாக உள்ளது. இது கடும் பொருளாதார மந்தங்களுக்கு இட்டுச் செல்கிறது. கட்டற்ற போட்டி பெருமளவு உழைப்பை வீணாக்குவதற்கும் மேலே குறிப்பிட்ட தனிநபர்களின் சமூக உணர்வை முடக்கிப் போடுவதற்கும்  இட்டுச் செல்கிறது.
தனிநபர்களை முடக்கிப் போடுவது, முதலாளித்துவத்தின் மிக மோசமான தீங்கு என்று நான் கருதுகிறேன். தமது எதிர்கால வாழ்க்கைப் பணிக்குத் தயாராகும் மாணவர்கள், பொருள் ஈட்டுவதில் அடையும் வெற்றியை வியந்து வழிபடும் மனோபாவத்தின் அடிப்படையிலான, ஒரு அதீதமான போட்டி மனப்பான்மைக்குப் பயிற்றுவிக்கப்படுகிறார்கள்.
இந்த சாகடிக்கும் தீங்குகளை ஒழித்துக் கட்டுவதற்கு ஒரே வழிதான் உள்ளது என்று நான் உறுதியாக நம்புகிறேன். சமூக இலக்குகளை நோக்கியதான கல்வி முறையுடன் கூடிய ஒரு சோசலிச பொருளாதாரத்தை கட்டியமைப்பதுதான் அந்த வழி. அத்தகைய ஒரு பொருளாதாரத்தில் உற்பத்தி சாதனங்கள் சமூகத்துக்கு சொந்தமாக்கப்பட்டு, திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றன.
சமூகத்தின் தேவைகளுக்கேற்ப உற்பத்தியை முறைப்படுத்திக் கொள்ளும் ஒரு திட்டமிட்ட பொருளாதாரம், வேலை செய்ய திறன் உடைய அனைவருக்கும் வேலையைப் பகிர்ந்து கொடுத்து, ஒவ்வொரு ஆண், பெண், குழந்தைக்கும் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும். ஒரு மனிதருக்கு வழங்கப்படும் கல்வி, அவரது உள்ளார்ந்த திறமைகளை வளர்ப்பதோடு, சக மனிதர்கள் மீதான பொறுப்புணர்வையும் வளர்க்கும். இப்போதைய சமூகத்தில் ஊக்குவிக்கப்படும் அதிகாரத்தையும் வெற்றியையும் வழிபடுவதற்கு மாற்றாக அது இருக்கும்.
இருப்பினும் திட்டமிட்ட பொருளாதாரம் மட்டுமே சோசலிசம் ஆகி விடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ஒரு திட்டமிட்ட பொருளாதார அமைப்போடு தனிநபரை முழுமையாக அடிமைப்படுத்துவது இணைந்திருக்கலாம். உண்மையான சோசலிசத்தைச் சாதிப்பற்கு மிகக் கடினமான சில சமூக-பொருளாதார பிரச்சனைகளுக்கு விடை தேட வேண்டியிருக்கிறது; அனைத்தும் தழுவிய அரசியல் பொருளாதார அதிகாரத்தின் மையப்படுத்தலை அமல்படுத்தும் போதே அதிகார வர்க்கம் சர்வாதிகாரம் படைத்ததாகவும், அனைத்துக்கும் மேலே தன்னை நிறுத்திக் கொள்வதாகவும் மாறுவதை எப்படித் தடுப்பது? தனிமனிதரின் உரிமைகளை எப்படிப் பாதுகாப்பது, அதன் மூலம் அதிகார வர்க்கத்தின் அதிகாரத்துக்கு ஒரு ஜனநாயக எதிர்சக்தியை உருவாக்குவதை எப்படி உறுதி செய்வது?
மாறிச் செல்லும் கட்டத்தில் இருக்கும் நமது காலத்தில் (1949-ல் எழுதியது) சோசலிசத்தின் நோக்கங்கள் குறித்தும் அது சந்திக்கும் பிரச்சனைகள் குறித்தும் தெளிவு ஏற்படுத்திக் கொள்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று. இந்தப் பிரச்சனைகள் குறித்த சுதந்திரமான, தடையற்ற விவாதங்கள் முடக்கப்பட்ட இப்போதைய நிலைமைகளில்,(பார்க்க அடிக்குறிப்பு 2) இந்த பத்திரிகையை (monthly review)  தொடங்குவது மிக முக்கியமான பொதுச் சேவை என்று நான் கருதுகிறேன்.
மொழியாக்கம்: அப்துல்
http://www.vinavu.com

Wednesday, November 8, 2017

தன்னிறைவான சூழலியல் கூட்டு வாழ்வு (Eco Village)

திட்டம் தொடர்பான சில குறிப்புகள்.
முதலில் குறிப்புகளை வாசியுங்கள். உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். ஆர்வமுள்ளவர்களை ஒன்றாக இணைத்து குழுவாக உரையாடுவோம். அங்கிருந்து எவ்வாறு செயற்பாட்டை நோக்கிச் செல்வது என்பதை ஆராய்வோம்.


Eco-villages, future of rural India
The sustainable village project has not got off to a good start in the country. This is primarily because of a lack of focus at Government levels and the faulty implementation of rural employment guarantee schemes
India’s population of 1.27 billion has put unimaginable stress on the available resources. The urban areas have emerged as the epicentre of the problem where intense population pressure meets dwindling resources. People migrating from rural India to the cities has made the situation worse. Drying farm incomes and paucity of employment opportunities amid a gloomy rural economy have triggered a distress migration that is unprecedented in India’s history. For instance, nearly half the people in States like Tamil Nadu already live in urban settlements.
Deteriorating environment and unpredictable weather conditions have induced an agrarian crisis resulting in the collapse of livelihoods. Once the drivers of the rural economy, the farmers are finding themselves at the mercy of insurmountable debts, leading to painful instances of farmer suicides. Measures such as the multi-billion dollar jobs guarantee scheme have checked the migration of workers from villages to cities to some extent, but they have also drawn the rural population away from the principal occupation of agriculture. This is not in the long-term interests of rural India.
Being employed in non-permanent and non-core activities under employment guarantee schemes does not augur well for the rural scenario, as neither the village economies are strengthened nor any long-term positive contribution is made towards conserving the environment. For instance, the workers employed under the rural employment guarantee scheme projects are engaged in digging ponds for retaining water, which evaporates fast and renders the effort purposeless in the end. These schemes may not be sufficient to arrest the downward spiral of the rural economy. A serious effort is required to rejuvenate rural India and make it self-reliant and resourceful.
Villages have the best environment that is pollution-free and access to sufficient natural resources that are not contaminated. These are excellent building blocks in the process of creating ‘Eco-villages’. The concept of Eco-villages can help revitalise rural India by transforming the nearly 7,00,000 villages into efficient and manageable communities with a goal to become economically and ecologically sustainable human inhabitations.
This initiative would also strengthen the resolve of the community to undertake initiatives that are in the best interests of the environment — for example, seek alternatives to ecologically destructive electrical, water, transportation, and waste-treatment systems, as well as the larger social systems that mirror and support them.
The Eco-villages can be powered by renewable energy such as biomass and solar power. This helps the villages to be self-powered and be independent of external grids. For instance, village Freiamt in Germany, with 4,300 inhabitants, is an Eco-village that uses all forms of renewable energy including a biogas plant, solar power, wind and water energy to produce about 14 million kWh energy annually — about 3 million kWh more than that is needed.
In early 2013, India too saw an enthusiastic response to the concept of Eco-villages, with as many as 753-gram panchayats from Pune district signing up for the Eco-village scheme, launched by the Government. The scheme for the rural areas aimed at conserving the environment, besides encouraging the use of solar power. However, the evolution curve for the concept seems to be taking forever, with no new notable development happening since 2013. The absence of a determined approach is evident from that fact that, instead of setting ambitious goals of achieving energy-sufficiency and self-reliance from overland power grids, the villages enrolled in the Eco-village scheme stuck to clichéd activities of tree plantation and building drainage systems. Elsewhere in the world, the concept of Eco-village has made tremendous progress, and countries such as Germany have proved the potential of such villages.
For instance, Wildpoldsried, a municipality in the district of Oberallgäu in Bavaria, has a population of only 3,000 inhabitants. But Wildpoldsried produces 321 per cent more energy than it needs — and it is generating 4.0 million Euro (the US $5.7 million) in annual revenue by selling it back to the national grid. As a result of its success, Wildpoldsried has received numerous national and international awards for its conservation and renewable energy initiatives known as Klimaschutz (climate protection).
The UPA Government had excessively concentrated on employment guarantee schemes such as the Mahatama Gandhi National Rural Employment Guarantee scheme, as a possible strategy to increase its vote-share. In the process, it completely eroded the very essence and fabric of the Indian village system and its economy. The NDA regime must recover the situation. This can be possible only if villages are transformed into true Eco-villages that are ecologically secure, economically stronger and socially integrated.

குழந்தைகள் பராமரிப்பு






....ஒவ்வொரு குடும்பத்திலும் அம்மா அப்பா என இருவரும் சேர்ந்தால் இக் குழந்தைகளைப் பராமறிக்க இருநூறு பேர் வேலை செய்கின்றார்கள். அல்லது ஆகக் குறைந்தது நூறு பெண்களாவது முழுநேரமாக வேலை செய்கின்றார்கள். இது அவசியமற்றது. இதற்கு மாறாக குழந்தை வளர்ப்பில் விருப்பம் ஆர்வம் ஆற்றல் மற்றும் அறிவுள்ளவர்கள் இப் பொறுப்பினை எடுக்கலாம். இதற்கு ஆகக் குறைந்தது இருபதிலிருந்து முப்பது பேர்வரை போதும். அல்லது ஆகக் கூடியது ஐம்பது பேர் இருந்தாலும் போதும். இதன்மூலம் பல பெண்களை குழந்தை பராமரிப்பிலிருந்து விடுவித்து அவர்களுக்கு ஆர்வமான துறைகளில் முன்னேற ஊக்குவிக்கலாம். மேலும் பல குழந்தைகள் தாய் தந்தையை இழந்தமையினாலோ அல்லது வறுமையினாலோ சிறுவர் இல்லங்களிலும் அநாதைகளா வாழ்கின்றார்கள். இவர்களை இதற்குள் உள்வாங்கி பல பெற்றோர்களுடன் வாழும் சூழலை உருவாக்குவது. இதன் மூலம் எனது குழந்தை என்ற பற்றிலிருந்து நமது குழந்தைகள் என்ற பற்றை உருவாக்கும் செயற்பாட்டிற்கும் இது வழிவகுக்கலாம்......
முதியவர்கள் பராமரிப்பு






இன்றைய புலம் மற்றும் புலம் பெயர்ந்த சூழல்களைக் கவனத்தில் கொண்டால் பெரும்பாலான முதியவர்கள் தனிமையில் எந்தவிதமான உதவிகளுமின்றி கைவிடப்பட்டுள்ளார்கள். தனிமை அவர்களை வாட்டுகின்றது. அவர்களது விருப்பங்கள் நிறைவேற்றப்படுவதில்லை. அவர்களுடன் உரையாட, அவர்கள் கதைப்பதைக் கேட்க ஒருவருமில்லை. ஏக்கத்தில் தவிக்கின்றனர். இவர்களை உழைப்பிற்காகப் பராமரிப்பவர்களோ கடமைக்காக இயந்திரத்தனமாகவே செயற்படுகின்றார்கள். மேலும் சில முதியவர்கள் தமது பேரப்பபிள்ளைகளைப் பார்ப்பதற்காக கட்டாயப்படுத்தப்படுகின்றார்கள். சுரண்டப்படுகின்றார்கள். துன்புறுத்தப்படுகின்றார்கள். இவர்களைப் பராமரிப்பது நம் ஒவ்வொருவரதும் பொறுப்பு. ஆனால் இன்றைய இயந்திர சூழலும் தனிக் குடும்ப கட்டமைப்புகளாலும் இதனை செய்யமுடியாத கையறு நிலையிலும் பலர் இருக்கின்றனர். ஆகவே கம்யூன் அல்லது சூழலியல் கிராமத் திட்டமானது இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை எடுக்கும். இந்த வேலையில் அக்கறையும் ஆர்வமும் உள்ளவர்களிடம் அப் பொறுப்பை ஒப்படைக்கலாம். முதியவர்கள் தமது இளமைக் காலங்களை முழுவதையும் நமக்காகவும் சமூக வளர்ச்சிக்காவும் அர்ப்பணித்தவர்கள் இப்பொழுது தங்கி வாழ்பவர்கள் என்ற புரிதலிலும் அவர்களைப் பொறுப்பெடுத்து மரணம் வரை நன்றாக ஆனந்தமாக வாழ்வதை உறுதி செய்வது நமது பொறுப்பாகும். இந்த நூறு குடும்பங்களிலும் இருக்கின்ற முதியவர்களை தனித்தனியவோ அல்லது அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப ஜோடியாகவோ குழுவாகவோ வாழ ஒழுங்கு செய்யலாம். இது இவர்களின் தெரிவாக இருந்தபோதும் இவர்களுக்கு இடையில் புதிய உறவுகளை உருவாகுவதை ஊக்குவிக்க வேண்டும். இன்று நம் பெற்றோர்கள் முதியவர்கள். நாளை நாம் முதியவர்கள் என்ற சிந்தனை பிரக்ஞை மட்டுமே இருந்தால் போதும் இதனை செயற்படுத்தலாம்.
சமையல்






ஒரு குடும்பத்திற்கு ஒருவர் வீதம் நூறு குடும்பங்களிலும் நூறு பேர் சமையல் வேலையில் ஈடுபடுகின்றார்கள். இவ்வாறு ஈடுபடுகின்ற அனைவருக்கும் சமையலில் விருப்பம் இருக்கும் என்பதில்லை. பெரும்பான்மையானர்வகள் இது தமக்கு சுமத்தப்பட்ட சுமை கடமை என உணர்ந்தே செய்கின்றார்கள். இதனால் இதில் ஈடுபடுகின்ற பெரும்பாலான பெண்கள் தமது பிற விருப்பங்களை நிறைவேற்ற முடியாதவர்களாக இருக்கின்றர். ஒரு குடும்பத்தில் குறைந்தது நான்கு அங்கத்தவர்கள் என்ற கணக்குப்படி நூறு குடும்பங்களிலுள்ள நானூறு அல்லது ஐநூறு பேர்களுக்கு வெறுமனே இருத்தைந்து பேர்கள் சமைத்தாலே போதுமானது. அதுவும் சமையலில் ஆர்வமுள்ள ஆண்கள் பெண்களை இணைத்தே இச் செயற்பாட்டை செய்யலாம். இவ்வாறு செய்வதனுடாக இதிலிருந்தும் 75 வீதமான பெண்களை விடுவித்து தமக்கு விருப்பமான துறைகளில் தமது ஆற்றல்களைப் பயன்படுத்த ஊக்குவிக்கலாம். அல்லது அதற்கான வாய்ப்புகளை உருவாக்கலாம்.....

http://www.dailypioneer.com/columnists/oped/eco-villages-future-of-rural-india.html

Saturday, August 12, 2017

How to improve Environmental Impact Assessment (EIA) Effectiveness

John Kakonge                                                                                                                                                            
In this piece John Kakonge unpicks the necessary but unforced task of carrying out Environmental Impact Assessments for development programming.
Environmental impact assessment (EIA) is now a global tool for ensuring that environmental concerns are integrated into the development project or programme planning process. In Africa, for example, it had started to be widely used after African ministers of environment endorsed its operability at the ministerial conference (AMCEN) in 1995. The effectiveness of EIA has been mixed and, in some cases, has fallen below expectations. There are many reasons for this. Given that a great deal has already been written on this subject, this article will focus on only a few of the related concerns, namely, corruption and management, the quality of the EIA, follow-up mechanisms, capacity-building and communication of EIA results.

Corruption and mismanagement
One of the challenges in explaining why EIA has not been effective involves civil and corporate corruption, , and mismanagement of the EIA process. For example, Shepherd (2012) notes that in Thailand, the EIA practise is frequently seen as illegitimate and fraudulent and the resultant recommendations are often overlooked unless complaints are taken up in the form of legal challenges. Shepherd adds that many developers negotiate in an opaque manner, that is behind closed doors, and local residents are rarely consulted. Similarly, Ridl (2012) acknowledges that KwaZulu-Natal Wildlife, a conservation agency in South Africa that was formerly an organization with international standing and prestige, is now corrupt and its officials are arrogant and at times openly obstruct the EIA process by refusing to adhere to the statuary time frames for responses. In addition, in Nigeria, Yusuf (2008) indicates his disappointment that the EIA practice has become a showcase for corruption and infraction of the EIA Act of Nigeria. This is due to the regulatory authority, which is the Ministry of Environment, Housing and Urban Development, being not fully transparent in terms of providing relevant information and data. According to Yusuf, the Ministry exercises power arbitrarily and unlawfully, resulting in corruption and blithe disregard for EIA regulations. As explained by King (2009), many EIAs have come to be mismanaged and corrupt and are often used to “lull government agencies and the public alike into thinking all’s well with a proposed project, while serious environmental impacts are swept under the rug”. Conversely, King (2009) argues that, in the United States, the consulting firms that prepare EIAs and other related work often end up forming part of their clients’ planning teams and their clients are almost invariably the proponents of the very projects that they are analysing. Accordingly, their analyses and results often end up being influenced by this relationship. This is most unfortunate, as it makes a mockery of the whole exercise and represents a breach of contract.
Generally, developing countries are particularly prone to mismanagement and environmental impact often has a low priority in their national policy and the required skills are not readily available. As stipulated by Winbourne (2002), leaders from developing countries “would rather sacrifice clean air and water, bio-diversity and forests if they can turn them into profitable businesses and support short-term political agendas and medium-term economic benefits”. Such actions, however, are especially detrimental, in that they perpetuate the mismanagement of the EIA process while leaving the country vulnerable to corruption and unexpected environmental consequences in the future.
Instead, EIAs should be properly managed to ensure the health and future sustainability of the environment and its resources. As demonstrated by Abaza (2004), environmental impact management is not implemented solely for future reward; it can also cut current costs dramatically and improve stakeholder relations. Accordingly, if managed appropriately, EIAs can provide for a healthier environment and sustainable economic growth, benefiting both present and future generations.
Quality of EIA reports
A second reason for the continued ineffectiveness of the EIA process can be attributed to the low quality and inconsistency of the EIA reports. From the available information, it can be seen that the quality of EIA reports vary widely from project to project. According to UN/ECA et al. (2007), some EIA reports are of very low quality and may also be excessively long and hard to understand regardless of the reader’s level of education or expertise. For instance, the EIA for the Tana Delta Integrated Sugar Project in Kenya is 412 pages long and couched in turgid technical and scientific language, with extensive chemical equations, complex economic graphs and Latin binomial species nomenclature (Mumias, 2007). This kind of report is way beyond the comprehension of many local officials and leaders.
In addition, independent comments received from the Kenya Wetland Forum in 2008 noted that the Tana Delta EIA study had huge gaps in vital information relating to hydrology and biodiversity, thus calling into question the report’s scientific soundness and accuracy. Another example may be seen in India, in the 1996 EIA for the Allain Duhangan project which was limited to a technical assessment of geological and engineering components, with little discussion of impact, in addition to a number of other flaws (Martin, 2007). Interestingly, even with these limitations, the Government of India gave its approval for the project to go ahead. As revealed by Lawrence (2003), many EIA reports fail to provide explicit and comprehensive solutions to negative envrionmental effects. In addition, lack of transparency on how to mitigate and monitor the environmental impact of projects has resulted in widespread frustration, thus also causing “inconsistencies in EIA quality and an EIA process that can be difficult to understand or reproduce.”
There are many reasons behind the poor quality of EIA reports, but one major cause stems from the simple fact that too many EIA reports are prepared with limited environmental information and data. As noted by the World Bank (2012), “the need for vast numbers of EIAs coupled with an absence of baseline environmental data resulted in mass production of EIAs of poor quality and little value.” In this context, we can refer to the recent South African conference on the topic “Ten Years of EIA in South Africa”, which was specifically designed to review the effectiveness of EIAs and whether or not they are worth the investment (Komen, 2011). Although the conference recognized the inadequacies of many EIAs (e.g., lack of environmental resources and government support), it concluded that EIAs are marginally effective and still a worthy investment. The World Bank (2012) also revealed that poor EIA reports are the products of poorly trained EIA practitioners. Too many EIAs are being conducted by practitioners with limited capacity and environmental information, resulting in poor-quality reports.
Nevertheless, the aforementioned examples seem to illustrate that there is no consensus regarding the quality of EIA reports. As O’Riordan and Turner (1983) point out, “it is not easy to produce good environmentally sensitive proposals which are satisfactory to all reasonably minded people, let alone to placate the objections of the less reasonably minded”. Regardless of the various viewpoints and acknowledging that no EIA report will ever be entirely infallible – there will always be an element of subjectivity in their preparation – there is still a need for more training packages for environmental practitioners, for not only to upgrade the quality of EIA reports but also to make the EIA process more effective.
Follow-up mechanism
To continue to have EIAs that are useful and strategically significant, there must be adequate follow-up mechanisms. Lack of these mechanisms is currently one of the weaknesses of the EIA process. Once an EIA has been prepared and approved by government authorities, it is supposed to include an environmental management plan for follow-up implementation. There are several reasons why EIA management plans are not subsequently implemented, including allocation of funds by the proponents, lack of enforcement staff from the government to make sure that this is done, lack of quality information and data, and lack of government commitment to carry out the follow-up activities, given other competing priorities.
Interestingly, Harmer (2005) notes that, even in the United Kingdom, the effectiveness of EIA follow-up needs to be revisited. According to Harmer’s study, the EIA consultants whom she interviewed, confirmed that there were sufficient controls elsewhere to ensure that follow-up was performed and there was therefore no need to spend time and more money on gathering new data. Thus, Harmer concludes that in order to lend credibility to the follow-up of the EIA system, the follow-up process should be made mandatory. In a similar vein, a workshop of African experts on the effectiveness of the EIA process, organized by the United Nations Economic Commission for Africa (UN/ECA) along with other organizations, also concluded that the responsibility should rest not only with the regulatory body but also with the private sector, working as a team ( UN/ECA et al., 2007).
As observed by Morrison-Saunders (2007), monitoring and evaluating the impacts of a project are “essential for determining the outcomes of EIA. By incorporating feedback into the EIA process, follow-up enables learning from experience to occur. It can and should occur in any EIA system to prevent EIA being just a pro forma exercise” (Morrison-Saunders, 2007). The report on the African Experts Workshop on Effectiveness of EIA
Systems 2007 also explains that “effective and efficient follow-up requires the capability to easily verify environmental management conditions” (UN/ECA et al., 2007). For this reason, an effective follow-up process requires a certain level of skill and capacity, which can really only be obtained through experience. Thus, follow-up not only boosts the effectiveness of current projects but also ensures the heightened effectiveness of future projects in that they have the added value of learning and skill development.
Capacity-building
Many developing countries can draw on the services of professionals with knowledge of EIAs and other related areas. The challenge faced by these countries, however, is that, after completing college or university, some of these professionals gain no practical experience and are not involved in projects requiring the conduct of EIAs. According to the above-mentioned report on the African experts workshop on EIA effectiveness (UN/ECA et al., 2007), the capacity building problem cuts across the entire Africa region and, to address it, the experts recommend that EIA practitioners and experts should be accredited in consultation between the government and the private sector. The information provided by experienced and seasoned EIA experts should be referred by the government and regional bodies or organizations.
Moreover, in some cases, the national and regional EIA experts should team up with more experienced or seasoned experts from other regions in carrying out EIA reports. Case histories from Bangladesh and Guatemala show how many agencies have established registers of consultants, technical specialists and firms to carry out EIAs (World Bank, 2012). The World Bank (2012) adds that, in the above countries, the environmental agencies seek to issue certification or provide courses for EIA practitioners in order to improve the queality of EIAs. In fact, the Review of the Application of Environmental Assessments in Selected African Countries (2005) concluded, among other things, “Overcoming capacity constraints remains a major obstacle to the effective institutionalization and application of EIA in Africa”. The required capacity for the conduct of EIAs should include knowledge of procedures, analytical work, and technical and social skills. Consequently, the World Bank (2012) recognized that, “capacity building should be accompanied by practical experience development through integration and engagement of local expertise in undertaking EIA for large-scale development assistance projects”.
On the other hand, the capacity within the approving regulatory agencies in many of the developing countries is very important. A number of studies indicate, however, that many developing countries lack the capacity to review the EIA reports submitted to them and this in turn has resulted in a serious backlog. For example, in El Salvador, the World Bank (2012) noted that, in 2007, there was a backlog of 2,500 EIAs and this turned the EIA process into a bottleneck. Ideally, where the agencies do not have the capacity, funds should be made available to engage independent consultants to review these EIAs. In addition, the staff of these agencies should be upgraded to enable them to carry out their work faster and more effectively.
Communicating EIA results
In most African States, there are still challenges related to relaying EIA results to the stakeholders, communities and decision makers. Although the EIA reports are published for public inspection, this alone is not sufficient as a means of communicating the substance of the EIA and, as a consequence, the EIA loses its value and ends up being merely a fruitless legal requirement (Wood, 2003; Kakonge, 2006). There is no question that the communication of EIAs both horizontally and vertically plays a crucial role in reducing confusion, conflict and misconceptions about the project. This view is supported by Hughes (1999) who argues that communication of the EIA ensures that the EIA process addresses the main issues, harnesses local knowledge, improves the project’s capability to respond to the communities’ needs, reduces transaction costs (of conflict) and improves the acceptability of projects. The ineffective communication of EIAs in Africa can be primarily attributed to factors such as the complex and technical form in which the EIA reports are presented, language barriers, illiteracy, lack of availability of the reports for public review, and over-reliance on foreign experts in the EIA process (Wood, 2003, Kakonge, 2006). Admittedly, such reports and studies will never be mass circulated, or become best-sellers, yet attempts must be made to make them available to a wider audience.
One of the main impediments to the efficacy of EIAs in developing countries is the elaborate and technical manner in which the results are presented. For example, EIAs for complex technical or scientific projects such as infrastructure, industry (mining, oil and extraction) or hydropower production are presented in large volumes written in recondite scientific language. Unfortunately, this makes it difficult for both the local government authorities and the local communities to decipher them (Wood, 2003, Kakonge, 2006). A typical example is the 412-page EIA report on the Tana Delta Integrated Sugar Project described earlier (Mumias, 2007). The presentation of EIAs in such a technical form fails to communicate their message to readers who are not specialists and does not adhere to the United Nations Environment Programme principle of “providing (EIA) information in a form useful to decision makers” (UNEP, 1999).
Secondly, there are no formal requirements in most African countries for the systematic communication of EIAs to the stakeholders and the public (Wood, 2003; Omondi, 2008). Various strategies have been propounded in order to ensure effective communication in the EIA process. Wood (2003, p. 11) and Omondi (2008, p. 75) suggest the use of local experts to prepare EIA reports in Africa, as these experts would be able to engage in dialogue with local communities and leaders about the local impacts of the projects. This has clear advantages since local leaders and experts would have a better appreciation of the main issues and the reports would be more receptive to input from the communities. The EIA executive summary should also be provided to the media so that it can be published in the relevant local languages. The governmental environment agencies should also translate and post the relevant information by using printed media, newsletters, leaflets and/or booklets for the benefit of stakeholders and those members of the public (teachers, pastors, local counsellors, chiefs and others) who are literate. In order to reach the illiterate members of the community, however, it is important that other forms of mass media be used. These could include public debates, public enquiries, use of visual aids, billboards, television programmes, theatrical shows and radio broadcasts to reach as many people as possible (Robinson, 1996; Kakonge, 2006).
Conclusion
Clearly, the application of the EIA process and its practise vary from country to country and the process often serves solely to gain planning approval. Ironically, because of financial costs, there is no compliance at all with some of the EIA elements. For example, in Belize, there is no procedural provision to hold a public meeting, which limits the opportunity for the public to question or give comments on the project in question (World Bank, 2012). Public participation is, however, made possible through judicial review, but this does not lead to the revision of a decision. In the case of Jamaica, the National Resource Conservation Authority (NRCA) manages EIA procedures without formal requirements, meaning that NRCA has the discretion to decide whether an EIA is necessary or not (World Bank, 2012).
Moreover, the quality of EIA reports depends on whether the predictions contained in them can be monitored or audited. Regrettably, most of the available EIA reports are not easy to interpret and some suffer from information gaps. Although many training efforts have been made to upgrade the skills of EIA experts in developing countries, there has been little visible benefit obtained from this training, partly because of the heavy turnover of staff. Ways and means should be found to retain the available and experienced EIA experts. The regulatory ministry or agencies should provide incentive packages to EIA experts, including bonuses from planning permits and fines paid for those developments that do not meet the approval permit recommendations.
As mentioned earlier, developers or proponents are concerned more with the costs of EIA studies and the associated long delays before receiving approval from government authorities to proceed with the project. If the governments of developing countries are committed to the EIA process, they should build capacity in their regulatory agencies or ministries to ensure that the entire EIA is not only adhered to but it is also transparent, efficient and effective. In addition, once the results of EIA studies are available, the media should enter the process as a stakeholder and help to have the summaries of these studies translated into the necessary official and local languages and communicated to the public.
In short, EIAs are inevitably costly in terms of both money and time but, regardless of this, the process should be taken seriously and should not be compromised. At the same time, there is no pressure to carry out the EIA if it is not a legal requirement, including enforcement responsibility. Be that as it may, as recommended by the International Association for Impact Assessment/Institute of Environmental Assessment (IAIA/IEA 1999), there is a need to develop best-practice examples of EIAs, and the entire process should, among other things, be practical, cost effective, efficient, focused, participatory, interdisciplinary and transparent. Considerations well worth taking on board by both governments and practitioners alike.

Thanks http://www.globalpolicyjournal.com
References
Abaza, H. (2004). “Environmental Impact Assessment and Strategic Environmental
Assessment: Towards an Integrated Approach.” UNEP. Available from
http://www.unep.ch/etu/publications/textONUbr.pdf
ECA, CLEAA, IUCN EARO and The Cadmus Group. (2007). “African Experts Workshop
on Effectiveness of Environmental Impact Assessment Systems.” Available from
http://www.encapafrica.org/documents/cleaa/African_Experts_Workshop_on_Review_of_Effectiveness_of_EIA_Systems_April_2007.pdf
Harmer, C. (2005). “Is Improving the Effectiveness of Environmental Impact Assessment
in the UK Dependent on the Use of Follow-up? Views on Environmental Consultants.” Available from
http://www.uea.ac.uk/env/all/teaching/eiaams/pdf_dissertations/2005/Harmer_Clare.pdf
Hughes, Ross (1999). “Environmental Impact Assessment and Stakeholder Involvement.”
International Institute for Environmental Development. Available from
http://pubs.iied.org/pdfs/7789IIED.pdf
International Association for Impact Assessment and Institute of Environmental
Assessment. (1999). Available from
http://www.iaia.org/publicdocuments/specialpublications/Principles%20of%20IA_web.pdf
Kakonge, J. O. (2006). “Environmental Planning in Sub-Saharan Africa: Environmental Impact Assessment at Crossroads.” Yale School of Forestry & Environmental
Studies, United States. Available from
http://environment.research.yale.edu/documents/downloads/vz/wp_9_africa_eia.pdf
King, T. (2009). “The Corruption of Cultural Resource Management and Environmental
Impact Assessment and What to Do about It.” Rowman and Littlefield Publishing Group. Available from http://rowmanblog.typepad.com/rowman/2009/01/the-corruption-of-cultural-resource-management-and-environmental-impact-assessment-and-what-to-do-ab.html
Komen, M. (2011). “Review of Environmental Assessment & Management.” Available
from http://www.custodianproject.co.za/index.php?option=com_k2&view=item&id=8:strategy-for-environmental-assessment-management
Lawrence, D. (2003). “Environmental Impact Assessment: Practical Solutions to Recurrent
Problems.” Available from
http://www.wosco.org/books/Ecology/Lawrence_D.P.,Lawrence%20B.Environmental_Impact.pdf
Martin, T. (2007). “Muting the Voice of the Local in the Age of the Global: How
Communication Practices Compromised Public Participation in India’s Allain Dunhangan Environmental Impact Assessment.” Available from
www.bicusa.org/proxy/Document.10857.aspx
Mumias, S. (2007). “Environmental Impact Assessment Study Report for the Proposed
Tana Integrated Sugar Project in Tana River and Lamu Districts, Coast Province,
Kenya.” Available from
http://www.tanariverdelta.org/tana/967DSY/version/default/part/AttachmentData/data/MUMIAS_Tana_EIA_part1.pdf
Omondi, N. O. (2008). “Improving Kenya’s Environmental Impact Assessment and Strategic Environmental Assessment for Sustainable Development.” Available
from http://www.academia.edu/1037573/improving_kenyaaes_environmental_impact_assessment_and_strategic_environmnetal_assessment_for_sustainable_
Ridl, J. (2012). “Ezemvelo KZN Wildlife on Its Knees.” The Nation. Available from
http://www.witness.co.za/index.php?showcontent&global%5B_id%5D=88784
Robinson, J. R., Ross, A., Walton, W. and Rothnie, J. (1996). “Public Access to
Environmental Information: A Means to What End?” Journal of Environmental Law (8)1:19-42.
Shepherd, J. (2012). “One Way or Another, EIA Process Must Change.” The Nation, 26 November. Available from http://www.nationmultimedia.com/opinion/One-way-or-another-EIA-process-must-change-30195006.html
The World Bank. (2012). Guidance Notes on Tools for Pollution Management. In Getting
to Green: A Sourcebook of Pollution Management Policy Tools for Growth and Competitiveness. Available from http://siteresources.worldbank.org/ENVIRONMENT/Resources/Getting_to_Green_web.pdf
Winbourne, S. (2002). “Corruption and the Environment.” United States Agency for
International Development. Available from
http://pdf.usaid.gov/pdf_docs/PNACT876.pdf
Wood, C. (2003). “Environmental Impact Assessment in Developing Countries: An
Overview.” Available from
http://www.sed.man.ac.uk/research/iarc/ediais/pdf/Wood.pdf
Yusuf, T. A. (2008). “The Environmental Impact Assessment Practice in Nigeria: The Journey So Far.” Available from http://www.nigeriansinamerica.com/articles/3105/1/The-Environmental-Impact-Assessment-Practice-In-Nigeria-The-Journey-So-Far-/Page1.html