Search This Blog

Showing posts with label Development. Show all posts
Showing posts with label Development. Show all posts

Thursday, March 12, 2020

Coronavirus’s economic danger it will economically cripple millions


“We have been always saying that we are sitting on top of an unexploded bomb, but we don’t know what is going to trigger it,” said Emre Tiftik, director of Research for Global Policy Initiatives at the Institute of International Finance, a Washington-based financial industry trade group. “Can the coronavirus be a trigger? We don’t know. Maybe.”

(This article originally appeared on independent.co.uk)

Coronavirus’s economic danger is exponentially greater than its health risks to the public. If the virus does directly affect your life, it is most likely to be through stopping you going to work, forcing your employer to make you redundant, or bankrupting your business.
The trillions of dollars wiped from financial markets this week will be just the beginning if our governments do not step in. And if President Trump continues to stumble in his handling of the situation, it may well affect his chances of re-election. Joe Biden, in particular, has identified Covid-19 as a weakness for Trump, promising “steady, reassuring” leadership during America’s hour of need.
Worldwide, Covid-19 has killed 4,389 with 31 US deaths as of today. But it will economically cripple millions, especially since the epidemic has formed a perfect storm with stock market crashes, an oil war between Russia and Saudi Arabia, and the spilling over of an actual war in Syria into another potential migrant crisis.
Just as important as fighting the virus — if not more important — is vaccinating our economies against the incoming pandemic of panic. Human suffering can come in the form of illness and death. But it can also be experienced as not being able to pay the bills or losing your home.
Small businesses, in particular, are struggling as supply chains dry up, leaving them without products or essential materials. Factory closures in China have led to a record low in the country’s Purchasing Manager’s Index which measures manufacturing output. China is the world’s largest exporter and is responsible for a third of global manufacturing, so China’s problem is everyone’s problem — even in the midst of a trade war between the White House and Beijing. 
All this makes it even more worrying that governments continue to see this as a health crisis, not an economic one. It is time the economists took over from the doctors before the real pandemic spreads. 
It is difficult to imagine Italy not entering a recession (the world’s ninth-largest economy is now on lockdown). It is also difficult to imagine that failing to affect Europe and its largest trading partner, the United States. And it is impossible to see how any of this will not add up to a global downturn unless governments step in faster and harder than they did 12 years ago during the last financial crisis.
The stakes are higher this time, because there seems to be a coordinated effort to economically hurt many Western countries, and warn them away from the aggressive trade policies that Trump has so enthusiastically adopted.
Although China bore the brunt of the virus’s economic and human cost, many in Beijing will see a silver lining in the weakening of the US economy, and a distraction from Trump’s trade wars that appeared to be escalating with no end in sight.
President Trump has pushed through overdue payroll tax cuts and help for hourly workers — measures that will help both employers and employees survive. In the UK, Chancellor Rishi Sunak today unveiled a ‘Coronavirus Budget’. But everyone needs to think bigger if they want to properly deal with how this new factor changes the status quo.
This is about much more than coronavirus, oil prices, or even the global economy. This is about the balance of power between East and West. The epicentre of this has been, for the last 10 years, Syria. After a decade of conflict on the ground, the face-off seems to have now escalated from proxy war to economic conflict.
The emerging superpowers of Russia and China witnessed what many saw as American irrelevance in Syria. And they are now trying to cement their vision of a truly multipolar world. Rather than allowing US ally Saudi Arabia to lead the oil markets through the OPEC cartel, Russia and China want to reshape global markets — and power balances — to their advantage.
To survive these shifts, the US, UK and others will need to protect the future of their businesses, large and small, and look for opportunities to benefit from the new economic world order, not deny it. Ignoring these changes will be even more damaging than any flu pandemic.
Author - Omar Hassan (An economic development specialist and co-founder of UK: MENA Hub)
கொ ரோனா வை ரஸ் இலங்­கையின் பொ ரு­ளா­தா­ரத் ­தையும் ட்டிப் படைக்கும் நி லை ஏற்பட்டுள்­ளது. பெரும்­பா­லான மூலப்­பொருட்கள் சீனா­வி­லி­ருந்தே இலங்­கைக்கு இறக்குமதி செய்­யப்­பட்டு வரு­கின்­றன.

அந்தவகையில் இலங்­கையின் ஆடை உற்­பத்­திக்குத் தேவை­யான மூலப்­பொ­ருட்­களை சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதில் ஏற்­பட்­டுள்ள நெ ருக்­கடி கா ­­மாக இங்­குள்ள பிர­­­மான சுமார் ஐம்­­துக்கும் மேற்­பட்ட ஆடை உற்­பத்தி நிலை­யங்­களை ற்­கா ­லி­­மாக மூ வேண்­டிய து ர்ப்­பாக் ­கிய நி லை ஏற்­பட்­டுள்­ளது.



அத்­துடன் அங்கு தொழில் புரிந்த ஆயி­ரத்­துக்கும் மேற்­பட்டோர் தொழில் வாய்ப்பை ழக்கும் நி லையும் ஏற்­பட்­டுள்­ளது.

இது குறித்து கருத்து தெரி­வித்­துள்ள ஆடை ஏற்­று­­தி­யா­ளர்கள் சங்­கத்தின் தலைவர் ரொஹான் ­க் ஷானி, தற்­போது ஏற்­பட்­டுள்ள கொ ரோனா ச்சம் கார­­மாக இலங்­கையின் ஆடை உற்­பத்­திக்குத் தேவை­யான மூலப்­பொ­ருட்­களை சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­வதில் பெரும் சி க்கல் ஏற்­பட்­டுள்­ளது.



இதனால் ஐம்­­துக்கும் மேற்­பட்ட ஆடை உற்­பத்தி நிலை­யங்­களின் உற்­பத்தி ­­டிக்­கைகள் பாதிக்­கப்­பட்­டுள்­ளன.

இவற்றில் சில நிலை­யங்கள் இம் மாதம் முதல் ற்­கா­லி­­ மாக மூ டப்­­­வுள் ­­துடன், ஏனை­யவை ஏப்­ரல் மாத விடு­மு­றையின் பின்னர் மூ டு­­தற்கு தீ ர்­மா­னிக்­ ப்­பட்­டுள்­­தாக தெரி­வித்தார்.




இதனால் எதிர்வரும் மே மாதம் அளவில் சுமார் ஒன்பதரைக் கோடி ரூபா வரை ஷ்டம் ஏற்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.



Thursday, June 27, 2019

உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் வருமான பரிசோதகர்/ வருமான நிர்வாகிகளின் பணிகளும், பணிப் பொறுப்பும்


Valleeth Mohamed
i. அதிகாரத்திற்குட்பட்ட சொத்துக்களை கணக்காய்வு செய்தல்
ii. சொத்துக்கள் பாவனையிலான வித்தியாசத்தினை இனங்கண்டு கொள்ளல்
iii. மதிப்பீட்டு அறிவித்தலை சேர்ப்பித்தல்
iv. வரிப்பணத் தொகையைத் திரட்டல்
v. ஏனைய வருமானங்கள் தொடர்பான அறிவித்தல்களை சேர்ப்பித்தல்
vi. ஏனைய வருமானங்களை ஒன்று திரட்டல்
vii. ஆதன மதிப்பீட்டு வரிகளைச் செலுத்தத் தவறுபவர்களை இனங்காணல்.
viii. வழங்கப்பட்ட அதிகாரத்தின் கீழ் ஆதன மதிப்பீட்டு வரி செலுத்தத் தவறுபவர்களின் சொத்துக்களை கைப்பற்றுதல்
ix. நிலுவை வாடகையை வைத்துள்ளவர்களை அடையாளம் காணல்
x. உடன்படிக்கைக்கு ஏற்ப செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு உதவுதல்
xi. வேறு வருமானங்களில் நிலுவை வைத்துள்ளவர்களை அடையாளம் காணல்
xii. முறையான விதத்தில் நீதிமன்றத்திற்கு அறிவித்தல்
xiii. போக்குவரத்து உத்தியோகத்தர்களின் சேவைகளை மேற்பார்வை செய்தல்
xiv. தனியார் பேருந்து தரிப்பிடங்கள் சோதனை செய்தலும் நிலுவைக் கட்டணங்களை அறவிடலும்
xv. கட்டட விண்ணப்பப்படிவம் தொடர்பான அடிப்படை பரிசோதனை நடவடிக்கைகள் மற்றும் மதிப்பீட்டுத் திணைக்களத்தின் அனுமதி ஒப்புதலின் கீழ் (முன்னர் கொண்டுவரப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலான) மதிப்பீட்டு நடவடிக்கை
xvi. ஆதன மதிப்பீட்டு வரி ஆவணம் மற்றும் ஏனைய வருமான ஆவணங்கள் பெயர் மாற்றம் தொடர்பில் சோதனை செய்தல் மற்றும் பரிந்துரை வழங்கல்
xvii. வரி நிவாரணத் திட்டமிடல் தொடர்பாக பரிசோதனை செய்தல், அறிக்கை வழங்கல் மற்றும் பரிந்துரை செய்தல்
xviii. விளைச்சலைக் குத்தகைக்கு விடல் மற்றும் ஏலமிடல் தொடர்பில் பரிந்துரை செய்தல்
xix. களியாட்ட வரி தொடர்பாக பரிசோதனை செய்தல் மற்றும் நாளாந்த அறிக்கை சமர்ப்பித்தல்
xx. விலங்கு மற்றும் வாகன வரி அறவிடல் மற்றும் சுற்றிவளைப்பு நடவடிக்கை
xxi. உரிய வரி மற்றும் கட்டணம் செலுத்தத் தவறுபவர்கள் தொடர்பாக சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுத்தல்
xxii. நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய அனுமதிப்பத்திர கட்டணம், வியாபார வரி தொடர்பாக பரிசோதனை செய்து அறிக்கை வழங்கல், அறவிடல் மற்றும் நீதிமன்றத்திடம் அறிக்கை சமர்ப்பித்தல்
xxiii. விளம்பர அறிவித்தற் பலகை மற்றும் தற்காலிக பதாகைகள் போன்றவற்றைப் பரிசோதனை செய்து அறிக்கை வழங்கல் மற்றும் உரிய கட்டணத்தை அறவிடுவதற்கு நடவடிக்கை எடுத்தல்
xxiv. மதிப்பீடு செய்யப்படாத கட்டடங்கள் தொடர்பாக தெரிவித்தல்
xxv. மதிப்பீட்டு மறுபரிசீலனைகளின் போது மதிப்பீட்டு அதிகாரிகளின் நடவடிக்கைகளுக்கு உதவிசெய்தல்
xxvi. வருடாந்தம் அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ள வேண்டிய மற்றும் வியாபார வரி செலுத்தவேண்டிய இடங்கள் தொடர்பில் வருடாந்த மீளாய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கையிடல்.
xxvii. புதிய வருமான வழிகளை இனங்காணல்
xxviii. களத்தில் சேகரிக்கப்படும் வரிப்பணம் மற்றும் கட்டணங்களை அன்றைய தினமோ அல்லது அதற்கு அடுத்து வரும் வேலை நாளிலோ தாமதமின்றி சபையின் நிதியில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்
xxix. பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து சந்தர்ப்பங்களிலும் முழுமையான சீருடை அணிந்திருத்தல்
xxx. தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தின் அடிப்படையில் நீதிமன்றத்திற்கு சமுகமளித்தல்,; நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜராகி முறைப்பாடு வழிநடாத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் (வழக்கறிஞர் ஒருவர் இல்லாது)
சபையின் வருமான நிர்வாகிகளுக்கு மேலதிகமாக பிரதான வருமான பரிசோதகர் ஒருவர் இருப்பாராயின், அவரால் அப்பிரிவின் ஏனைய உத்தியோகத்தர்களுடைய பணிகள் மேற்பார்வை செய்யப்படல் வேண்டும்

Friday, November 9, 2018

இலவசங்கள் - என் பார்வை.


Sivarajah Ramanathan
தமிழக அரசுகளின் இலவசங்கள் பற்றி சர்கார் சினிமா நெகட்டிவ் ஆக பேசுவது ஒரு புறம் இருக்கட்டும். நானும் சில மாதங்கள் முன்பு வரை இந்த இலவசங்கள் பற்றி மிகக் கடுமையான எதிர் நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தேன். ஒரு கட்டத்தில் அது பற்றி தெளிவாக அறிய முற்பட்டேன். ஏராளமான தரவுகள், வாசிப்புகள், வாதங்கள், நேர்-எதிர் உரையாடல்கள்....பகுத்தறிந்த சீராய்வுக்கு பின் எனது புரிதல் எப்படி இருந்தது என்பதை இங்கே தந்துள்ளேன். இதை ஒரு myths & truths analysis என்றும் கூட சொல்லலாம். சற்றே நீளமான பதிவு.
Myth 1: இலவசங்கள் மக்களை சோம்பேறியாக்குகின்றன.
Truth: மேலோட்டமாக பார்த்தால் உண்மை போலத்தான் தோன்றும். ஆனால் நான் பேசிய அளவில் எந்த ஏழையும் அல்லது அடித்தட்டு பயனாளியும் அரசின் இலவசங்களை தங்கள் வாழ்வாதார தேவைகளுக்கான அடிப்படையாக நினைக்கவே இல்லை. அது ஒரு பரிசு. ஒரு தேவையை பூர்த்தி செய்யும் நல்ல பரிசு. அதன் மூலம் தன்னிடம் இல்லாத -வசதியானவர்களிடம் இருக்கும் ஒன்றை - பயன்படுத்தும், பயன் பெரும் திருப்தி. அவ்வளவே. இலவசங்களை வாழ்வாதாரமாக நம்பி வாழ்க்கையை அடித்தட்டு மக்கள் இழக்கும் நிலையை தரவுகளும் காட்டவில்லை.அவர்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள். இது ஒரு எதிர் சித்தாந்த கற்பிதம்.
Myth 2: இந்த இலவச திட்டங்கள் ஊழல் செய்வதற்கும் ஓட்டு வாங்குவதற்கும் மட்டுமே அறிவிக்கப்படுகின்றன.
Truth: நீதிக்கட்சியும், காமராசாரும் கூட இத்தகைய சமூக நலத்திட்டங்களின் முன்னோடிகள் தான். அவர்கள் ஊழல் விமர்சனத்துக்கு முற்றிலும் அப்பால் பட்டவர்கள். எம்.ஜி.ஆர், கலைஞர், ஜெயலலிதா ஆகிய பிற்கால முதல்வர்களின் திட்டங்கள் பலவும் (பட்டியல் அனைவருக்கும் தெரியும் என்று நம்புகிறேன்) மிகவும் புதுமையான முன்னோடித் திட்டங்கள் என்றால் அது மிகையாகாது. அவற்றில் பல பல்வேறு மாநிலங்களுக்கும் ஏன் நாடுகளுக்கும் கூட முன்னுதாரணமாக அமைந்தன. இவற்றை வாக்கு அரசியலுக்கும் அவர்கள் பயன் படுத்திக் கொண்டனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. அதில் தவறு இருப்பதாக நான் மட்டுமல்ல உச்ச நீதி மன்றம் கூட நினைக்கவில்லை. தி.மு.க /அ .தி.மு.க காலங்களில் ஊழல் நடந்தது என்ற கோணத்தில் பார்த்தால் கூட மொத்த சமூகநல திட்டத்தில் ஊழல் என்ற ஒரு பகுதி தான் பிரச்சினையே தவிர இந்த சமூக நல திட்டங்கள் அல்ல. தலையில் பேன் இருக்கிறது என்பதற்காக தலையை வெட்டித்தள்ள முடியாது.
Myth 3: இலவசங்களால் பொதுமக்கள் யாருக்கும் பயன் இல்லை.
Truth: இது எதிர் சித்தாந்த பிரச்சாரகர்களால் கையில் காசுள்ளவர்களிடம் திணிக்கப்பட்ட எண்ணம். இவர்கள் வசதி இல்லாதவர்களின் அன்றாட வாழ்க்கையை அருகிலிருந்து ஒரு நாளும் பார்த்திருக்க மாட்டார்கள். மதிய உணவு, முட்டை, சைக்கிள், பஸ் பாஸ், நோட்டு, புத்தகம், லேப்டாப், மிக்சி, கிரைண்டர், டிவி, ஸ்கூட்டி, நிலம், கால்நடைகள், மின்சாரம், ரேசன் என ஒவ்வொன்றும் பெரும்பான்மையான பயனாளிகளின் வாழ்க்கை முறைகளில் பல மாற்றங்களை, நல்ல உணர்வுகளை கொண்டு வந்திருப்பதை அவர்களோடு பேசிப்பார்த்து தெரிந்து கொள்ளலாம். ஒரு மாநிலத்தின் முன்னேற்றம் என்பது எல்லா தரப்பு மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டையும் பொறுத்துள்ளது. தமிழ்நாடு பல ஆண்டுகளாக அணைத்து தட்டு மக்களையும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் இட்டுச்செல்ல முயன்றிருக்கிறது. இது ஒரு unique socio -economical innovation by Tamilnadu. இதுவே காலப்போக்கில் மகிழ்வான ஒரு சமூகத்தை கட்டமைக்க உதவும் அணுகுமுறையாகும். சமூகம் என்பது மனித உடல்களின் தொகுப்பல்ல அது மனங்களின் தொகுப்பு. வசதி வாய்ப்பு இல்லாத மனங்கள் இருக்கும் மனிதர்களை பார்த்து விரக்தியடையக் கூடாது. மீன் பிடிக்க கற்றுக் கொடுக்கும் முன் அவன் பசி தணிந்து கற்கும் மனநிலைக்கு வரவேண்டுமல்லவா? அதுதான் சமூகநலத்திட்டங்களின் (இலவசங்களின்) அடிப்படை.
Myth 4: பெரும்பாலாலானவர்கள் இலவசங்களை வாங்கி விலைக்கு விற்கவே செயதனர். அல்லது பரணில் போட்டனர்.
Truth: இது ஒரு சிறு சதவிகிதம் உண்மை. எல்லா சமுகநலத் திட்டங்களும் 100% நோக்கங்களை அடைவதில்லை. Critical Mass இலக்கு அடையப்பட்டிருக்கிறதா என்பது தான் முக்கியம். அந்த வகையில் விற்ற அல்லது வீணாக்கிய விகிதம் புறம் தள்ளத்தக்கதே. ஆயினும் பயனாளிகள் தகுதியை ஆராய்ந்து வழங்க நிர்வாக மேம்பாடு தேவை என்பதிலும் மாற்றுக்கருத்தில்லை.
Myth 5: மக்களை பிச்சைக்காரர்கள் போல் கையேந்த வைத்தார்கள். பிற மாநில மக்களும் வெளிநாட்டவரும் பார்த்து சிரிக்கிறார்கள்.
Truth: இதுவும் ஒரு எதிர் சித்தாந்த அமைப்புகளால் ஊதிப் பெருக்கப்பட்ட பிரச்சாரம் தான். ஆங்காங்கே சில நலத்திட்ட வினியோகங்களின் போது மக்கள் முண்டியடித்து நெரிசலில் சண்டை போட்ட வீடியோக்களையும் செய்திகளையும் பார்த்திருப்போம். இது நிர்வாக குறைபாடு சம்பந்தப்பட்ட பிரச்சினை தானே தவிர குறிப்பிட்ட சமூக நலத் திட்ட அடிப்படைகள் பற்றிய பிரச்சினை அல்லவே. பிற மாநிலத்தவர் சிரிக்கும் முன் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம், பெண்கள் முன்னேற்றம், அடித்தட்டு மக்களின் முன்னேற்றம் என்று பல தரவுகளையும் தங்கள் மாநிலங்களோடு ஒப்பிட்டு பார்த்து விட்டு சிரிக்கலாம். அதே வேளை இது போன்ற தரக்குறைவான விநியோக முறைகள் முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியவை. கொடுக்கும் முறைகள் கொச்சையாக இருக்கக் கூடாது. இவை பிச்சை இல்லை. காலங்காலமாக ஏமாற்றப்பட்ட மக்களுக்கான சிறு ஆறுதலும் இழப்பீடும் தான்.
Myth 6: இலவசங்கள் மட்டுமே கொடுத்து மாநிலத்தை முன்னேற விடாமல் செய்து விட்டார்கள்.
Truth: இதற்கான பதிலை மத்திய அரசும் மற்றும் பல மதிப்பு வாய்ந்த நடுநிலை நிறுவனங்களும் நடத்தும் ஆராய்ச்சி மற்றும் தரவுகளுக்கான இணைய தளங்கள் தெளிவாகத் தருகின்றன. சுருக்கமாக கூற வேண்டுமானால் பெரும்பாலான ஒப்பிடுகளில் தமிழகம் முதல் மூன்று இடங்களுக்குள் தான் இருக்கிறது. எனவே இலவசங்கள் என்று சொல்லப்படும் சமூக நலத்திட்டங்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி இருக்கின்றனவே தவிர மாநில வளர்ச்சியை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
Myth 7: கட்சிக்காரர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு மட்டுமே இவற்றை கொடுத்து அடித்தட்டு மக்களுக்கு கொடுத்ததாக கணக்கு காட்டி விடுவார்கள்.
Truth: கட்சிக் காரர்களின் தலையீடு மற்றும் ஊழல் என்பது இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அதுவும் குறிப்பிட்ட சிறு விகிதமாகவே இருக்ககைகூடும் என்பது நான் உரையாடிய சில கீழ்மட்ட கட்சிக்காரர்களின் கருதத்து. ஒவ்வொரு பகுதி கட்சி காரருக்கும் இந்த திட்டங்களின் சமூக நோக்கங்கள் தெரியாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் பகுதி சார்ந்த அடித்தட்டு மக்களை திருப்தி செய்ய வேண்டும் என்பதுவும் இல்லா விட்டால் அது தேர்தலில் பாதிப்பை உருவாக்கும் என்பதுவும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும். மேலும் அடித்தட்டு மக்கள் நடுத்தர மனிதர்களைப்போல் இது போன்ற விடயங்களில் ஒதுங்கிப் போகக்கூடியவர்கள் அல்ல. இந்த இடத்தில் நான் கட்சி காரர்களின் ஊழலை நியாயப்படுத்த முயற்சி செய்யவில்லை. அவர்களில் பெரும்பான்மை ஊழல் வாதிகள் என்பதில் சந்தேகம் எதுவும் இல்லை. ஆனால் நான் நிறுவ முயற்சிப்பது இந்த சமூக நலத் திட்டங்கள் கட்சிக் காரர்கள் கொள்ளை அடிப்பதற்கு மட்டுமே அல்ல என்பதை தான்.
ஆனால் இந்த "கட்சிக்காரர்களின் ஊழல்" என்ற பொதுவான உண்மை தான் பல்வேறு ஆக்கப்பூர்வமான சமூக நலத் திட்டங்களையும் கேலி செய்வதற்கும் தூற்றுவதற்கும் முழு முதல் காரணமாக அமைகிறது. திராவிட கட்சிகள் ஜெயலலிதா காலம் வரை பல சமூகநலத் திட்ட சாதனைகளை செய்திருக்கின்றன. ஆனால் அண்மைக்காலங்களில் தமிழகத்தின் பல அளவீடுகள் இறங்குமுகத்தில் இருப்பதையும் ஊழல் பூதாகரமாக தெரிவதையும் மறுப்பதற்கில்லை. இந்திய அளவிலான ஒப்பீட்டு தரவுகளின் கூட எல்லா குறியீடுகளிலும் முன்னணி வரிசையில் நிற்கும் தமிழகம் ஊழல் மற்றும் வெளிப்படைத் தன்மையில் மட்டும் கடைசியில் நிற்கிறது.என்னைப்பொருத்த வரை இந்த ஊழல் பிரச்சனை ஒட்டு மொத்த சமூகமும் ஒருங்கிணைந்த வளர்ச்சிப்பாதையில் செல்லும் போதும் தொழில்நுட்ப தீர்வுகள் அரசாட்சி நிர்வாகத்தில் (governance) அதிகளவில் ஈடுபடுத்தப் படும் போதும் இயல்பாகவே குறையக் கூடிய ஒன்று. அதற்கான உறுதியான செயல்பாடுகளும் கலாச்சார மாற்றங்களும் வர வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருதும் இல்லை. ஆனால் ஊழல் என்ற ஒரு பிரச்சினையை மட்டும் பிடித்துக்கொண்டு சமூக நலத்தையும் சமூக நீதியையும் வலுவிழக்க செய்யும் முயற்சிகளை கண்டிப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது.

Myth 8: கஞ்சிக்கே வழி இல்லாதவர்களுக்கு மிக்சியும் டிவி யும் ம் எதற்கு?
Truth: இந்த மனப்பான்மை அதீத வலது சாரி அல்லது உயர்சாதி ஆணவச் சிந்தனையே தவிர வேறென்றும் இல்லை. எனக்கு தெரிந்த சில பெரும் பணக்காரர்கள் சில தனிப்பட்ட விவாதங்களில் என்னிடமே இப்படி விவாதம் செய்ததை கவனிதிருக்கிறேன். கீழ் மட்டத்தில் உள்ளவர்களும் உயர்ந்து மேலே வரவேண்டும் என்பதுவும் அவர்களது அன்றாட வாழ்க்கையும் குறைந்த பட்ச செழுமையுடன் அமைய வேண்டும் என்பதுவும் தான் சமூக நீதியின் முதல் படி. அவர்களை நீண்ட கால அடிப்படையில் உயர்த்தி தற்சார்பு அடைய வைப்பது கல்வி மற்றும் வேலையில் இட ஒதுக்கீடு. அதை பயன்படுத்த ஏதுவாய் இலவச நோட்டு, புத்தகங்கள், மதிய உணவு, பள்ளி செல்ல சைக்கிள், தொழில்நுட்பம் பயில லேப்டாப்.
இது போக வசதி மறுக்கப்பட்டவர்கள் வளமாய் உணர வீட்டுக்கு தேவையான இன்ன பிற இலவச பொருட்களும் சேவைகளும் தரப்படுகின்றன. முதலில் பசிக்கு சோறு. பின்னர் சோற்றுக்கு வழி. இதெல்லாம் என்ன சித்தாந்தம் என்று கேட்டால் தமிழ் நாட்டு சமத்துவ சித்தாநத்தம் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.. இடதா வலதா என்று ஆராய்ந்தால் இரண்டும் உண்டு எது எங்கு தேவையோ அது அங்கே.

myth 9: நல்ல அரசாங்கம் என்பது இந்த பொருட்களை எல்லாம் எல்லாம் வாங்க அந்த ஏழைகளுக்கு வேலை தான் தரவேண்டும். நேரடியாக இலவச பொருட்களை அல்ல.
Truth: இது பற்றி ஏற்கனவே மேலே பேசியாகி விட்டது. சில தீர்வுகள் நீண்ட கால அடிப்படையிலானவை. சில குறுகிய கால தீர்வுகள். தமிழகத்தின் சமூக பொருளாதார வழிமுறையானது தண்டவாளம் போன்றது. ஒரு கம்பி சமூக நீதி மற்றொன்று சமூக நலத் திட்டங்கள். இது மிகவும் தனித்தன்மையானது. இந்திய தேசம் பின்பற்றினால் வல்லரசாகலாம்.
Myth 10: இலவசங்கள் தான் திராவிட அரசியலின் கண்டுபிடிப்பு.
Truth: முதலில் நீதிக் கட்சி, பின்பு காங்கிரஸ் ஆட்சியில் காமராசர், அதன் பின்பு வரிசையாக வந்த திராவிட கட்சிகள் என எல்லோரும் வேறு வேறு கோணத்தில் தொட்டது தான் இந்த சமூக நலத் திட்டங்கள். அவற்றில் பெரும்பான்மையான வெற்றித் திட்டங்கள் திராவிட கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் வந்ததாலும் அதிகாரத்தைக் கைப்பற்ற இந்த திட்டங்களும் ஒரு காரணமாக இருந்ததாலும் திராவிடத்துக்கு எதிரானவர்கள் திராவிடம் என்றால் "கடவுள் மறுப்பு" என்று எப்படி திரித்தார்களோ அதேபோல் திராவிட ஆட்சி என்றால் "கேவலப்படுத்தும் இலவசம்" என்றும் திரித்தார்கள். இந்த இரண்டு திரிப்புகளையும் சமன் படுத்தினால் அவற்றில் ஊடுருவி நிற்கும் ஆழமான உண்மை என்பது "சமத்துவதை நோக்கிய பயணம்" என்பதாகத் தான் இருக்கும்.எனவே எனது முடிவானது திராவிடதின் கண்டுபிடிப்பு சமத்துவ சமூகம் என்பது தானே தவிர மற்றவை எல்லாம் திரிபு மயக்கங்களே.
முடிவுரை:
நான் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் கூறியது போல முன்னர் மேம்போக்கான பார்வைகளின் காரணமாக திரிபுகளை நம்பி,ஊடுருவி நிற்கும் விழுமியங்களை பார்க்க தவறி விட்டேன். பகுத்து அறிய சற்றே நேரத்தை செலவிட்ட போது ஒரு சரியான புரிதல் எனக்குள் உருவானது. அதைத்தான் இங்கே தொகுதிருக்கிறேன்.

நான் திராவிடக் கட்சிகளுக்கோ சார்பாகவோ அல்லது தேசிய கட்சிகளுக்கு எதிராகவோ இதை எழுதவில்லை. எனது நோக்கம் தமிழ்நாட்டிற்க்கென ஒரு தனித்தன்மையான சமூக-பொருளியல் பாதை ஏறத்தாழ நூறு ஆண்டுகளாக உருவாக்கப் பட்டிருக்கிறது. அதில் ஊழல் என்பது சில இடங்களில் இருக்கும் மேடு பள்ளம். அதை சீர் செய்வது ஒரு வேலை தான் என்றாலும் சாத்தியமே. ஆனால் தமிழகத்தில் வளர்ச்சிப்பாதையே இல்லை, இனிமேல் தான் உருவாக்க வேண்டும் என்று தத்தமது சித்தாந்த மண்வெட்டிகளுடனும் பெரும் எக்ஸ்கவேட்டர் இயந்திரங்களுடனும் வருபவர்களை பார்த்தால் சிரிப்பாகவும் அவர்களை நம்பும் நம் சொந்த மக்களைப் பார்த்தால் வேதனையாகவும் இருக்கிறது.
அதே வேளை மாற்றம் எதுவும் தேவை இல்லை என்ற வாதத்தையும் நான் வைக்க விரும்பவில்லை. தற்கால மனிதர்களின் வாழ்வில் வரும் midlife crisis போல் தமிழக அரசியலிலும் ஒரு ageing crisis தற்போது உருவாகியுள்ளதை மறுக்க முடியாது. திராவிடம் என்ற கருத்தியல் சார்ந்த அரசியல் சற்றே ஒரு flatness நிலையை அடைந்திருக்கிறது என்று தோன்றுகிறது. அது மாபெரும் ஆளுமைகளின் மறைவினால் இருக்கலாம், மாற்று சிந்தனையாளர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம், அது ஊழலாக இருக்கலாம், தலைமைக்கான வெற்றிடமாக இருக்கலாம், முற்றிலும் புதுமையான ஆளுமைக்கான எதிர்பார்ப்பாக இருக்கலாம். இவை அனைத்தும் சேர்ந்ததாகவும் இருக்கலாம். அல்லது வெறும் மாயையாகக் கூட இருக்கலாம். இதுபற்றிய பொதுமக்களின் மனநிலையை வரும் தேர்தல்கள் தான் சொல்லமுடியும். ஆனால் நண்பர் ஆழி செந்தில்நாதன் சொல்வது போல் ஒரு post dravidianism தளம் தேவைப்படுகிறது என்பது காலத்தின் கட்டாயம் என்றே தோன்றுகிறது. மிக வலுவான அடித்தளம் தந்த திராவிட சமூக-அரசியல்-பொருளாதார தளத்தில் காலூன்றி காலத்தை வெல்லும் கட்டிடங்களை உருவாக்கும் சிற்பிகள் ஒருங்கிணைய வேண்டிய காலம் இது - தேர்தல் அரசியலைத் தாண்டி.
-----------------------------------------------------------------------
Suresh Sambandam, Aazhi Senthil Nathan, Ravishankar Ayyakkannu, Narain Rajagopalan, Balasubramanian AJ ஆகியோர்களின் ஆழமான தொடர்ந்த பகிர்வுகளுக்கு நன்றிகள். இந்த பதிவில் தண்டவாளம் பற்றிய உதாரண விளக்கத்துக்கு Govi Lenin அவர்களுக்கு நன்றி.

Monday, October 8, 2018

கட்சிசார் அரசியல் இலங்கை தமிழர்களுக்கு அவசியமற்றது.......


இன்று எம்முன் இருக்கும் ஒரே தெரிவு. உரிமை அரசியலை வினைத்திறனுடனும் ராஜதந்திரவழியுனூடாக கொண்டு சென்று இலக்கை எட்டும் அரசியல் அனுபவசாலிகளை ஒருமுகபடுத்துவதே.
நல்லாட்சி அரசுக்கு த தே கூட்டமைப்பு கண்மூடித்தனமாக ஆதரவை வழங்கி இன்று அது தனது சர்வதேச நெருக்கடிகளில் இருந்து மீண்டு பொருளாதார சிக்கலை தவிர்த்துக்கொள்ள போராடுகிறது.
நெருக்கடியில் இருந்து மீண்டுவர உதவிய
த தே கூட்டமைப்பு. தீர்வும் இன்றி அபிவிருத்தியும் இன்றி. வெறுமை அடைந்த நிலையில் மக்களுக்கு எதை சொல்லி சாமாளிச்சு மீண்டும் கட்சிசார் வியாபார. அரசியலை முன்னேடுப்பது என்று அங்கலாய்ப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில் தனிப்பட்ட கட்சி நலன்சார்ந்து சிந்திப்பதை தவிர்த்து கூட்டாக சேர்ந்து குறிப்பாக கொள்கை அளவில் இணங்கி செல்வோர் ஒருமித்து செயல்படும் போதே தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறமுடியும். அதை விடுத்து ஆளுக்கொரு திசையில் பயணித்தால் மீண்டும் இஸ்லாமிய சிங்கள சகோதரர்களின் ஆதரவில் தமிழரசு கட்சி ஆட்சியை கைபற்றும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் அரசு தான் நினைக்கும் விடயங்களை இலகுவாக நிறைவேற்றும். இதை தடுப்பதற்கு கட்சிசார் அரசியல் ஆதாயங்களை மறந்து மக்கள் ஆதரவு இருக்கும் கட்சிகள் கொள்கைரீதியாக ஒன்றுபடவேண்டும்.
மாகாணசபையில் எதிர்கட்சியாக இருந்து எந்த பயனும் கிட்டாது.

T N A ,,,,, E P D P,,,, U N P,,,, கூட்டுச்சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பர். ஏனேனில் அவர்களுக்கும் கணிசமான வாங்கு வங்கியுள்ளது. இவற்றை எதிர்கொள்ள நாம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற வேண்டும். தனித் தனியாக பயணித்தால் அரசு ஆதரவுக் குழு ஆட்சி அமைக்கும்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ் மக்கள் கட்சிகளை சபிக்கும் நிலை ஏற்படும்.
எனவே த தே கூ எதிர்கொள்ள உங்களுக்குள் இருக்கும் வறட்டு கௌரவங்களை உதறிவிட்டு கொள்கைரீதியாக பயணிக்கும் அனைவரும் ஒரணியாகி திரண்டு தமிழ் மக்களின் தலைமை மாற்றத்துக்கு உதவுங்கள்.

நாம் ஒன்று பட்டால் போலிக்கூட்டை உடைத்தெறியலாம்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

Sunday, September 9, 2018

இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள்!!!


1) உயரமான போர்களத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கிறது:: உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்சென் கிளேசியர் (Siachen Glacier) இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது. இதன் உயரம் கடல் மட்டத்தில் இருந்து 5,000 மீட்டர்களுக்கும் மேலாகும். கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் இந்தியா பாகிஸ்தான் ஆகிய நாடுகள் இங்கு போரிட்டதுக் குறிப்பிடத்தக்கது.
2) தன்னார்வம் அதிகம்:: உலகிலேயே அதிகமான தன்னார்வ வீரர்கள் கொண்ட ராணுவப்படை இந்தியாவுடையது என்பது பெருமைக்குரிய விஷயமாகும்.
3) மலை பகுதிகளிலும், உயரமான பகுதிகளிலும் செயல்படுவதில் நமது இந்திய ராணுவ வீரர்கள் உலகளவில் சிறந்து விளங்குகின்றனர்.
4) கடந்த 2013 ஆம் ஆண்டு உலகிலேயே மிகப்பெரிய மீட்புப் பணியாகக் கருதப்படும் ஆப்ரேஷன் ராஹத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தவர்கள் நமது இந்திய ராணுவப்படை வீரர்கள். இது, உத்தரகாண்ட் பகுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குக் காரணமாக நடந்தது.
5) கேரளத்தில் இருக்கும் எழிமலாக் கப்பற்படை (Ezhimala Naval Academy) தான் இதன் பிரிவில் ஆசியாவிலேயே பெரியது ஆகும்.
6) உலகிலேயே மிகவும் பழையப் படையாக கருதப்படும் மூன்றில் ஒன்றான குதிரைப்படை இன்னமும் நமது இந்திய ராணுவத்தில் செயல்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.
7) இந்திய ராணுவம் கட்டமைத்த பெய்லி பாலம் தான் உலகிலேயே ராணுவ வீரர்களால் மிக உயரத்தில் கட்டப்பட்ட பாலம் ஆகும். இது கடந்த 1982ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கட்டமைக்கப்பட்டது ஆகும்.
9) கடந்த 1971ஆம் ஆண்டு இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நடந்த போரில் 93,000 எதிர் நாட்டு (பாகிஸ்தான்) வீரர்கள் சரணடைன்ததே, ஓர் போரில் சரணடைந்த வீரர்களின் அதிகப்படியான எண்ணிக்கை ஆகும்.
10) உலகிலேயே பெரிய ராணுவ பிரிவுகளில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கிறது. முதல் இரண்டு இடங்களில் முறையே அமெரிக்காவும், சீனாவும் இருக்கின்றன. நமது நாட்டில் 13,25,000 பட்டாளங்களும், 9,60,000 ரிசர்வ் படைகளும் இருக்கின்றன.
11) அக்னி ஏவுகணை உலகிலேயே சிறந்த ஏவுகணைகளில் இந்தியாவின் அக்னி எவுகனைவும் ஒன்றென்பதுக் குறிப்பிடத்தக்கது.
12) வேகமான ஏவுகணை ப்ராஹ் மோஸ் 2 (BrahMos-2) என்ற நமது ஏவுகணை தான் உலகிலேயே வேகமான ஹைப்பர்சோனிக் ஏவுகணை ஆகும்.
13) இந்திய ராணுவப்படை கடந்த 1776ஆம் ஆண்டு கிழக்கிந்திய நிறுவனத்தினால் கொல்கத்தாவில் துவங்கப்பட்டது.
14) உலக அமைதிகாக ஐ.நாவிற்கு பங்களிப்பு தரும் பட்டாளங்களில் இந்திய பட்டாளம் தான் பெரியது என்பது பெருமைக்குரியது.
THANKS ONE INDIA....

Saturday, June 30, 2018

எப்படி பொருளாதார நிபுணராக ஆகமுடியும்?

"எப்படி பொருளாதார நிபுணராக ஆகமுடியும்?" என்பதுதான்.......
அவர்களுக்காக …..!!! என் நினைவுகளிலிருந்து!!
நீண்ட பதிவு முழுமையாக வாசியுங்கள்!
Facebook நண்பர் Boopal Chinappaவின் இன்றய கருத்தீடு இதற்கு பொருத்தமாக அமைகிறது!!
„முயல்பவனுக்கு தட்டிக்கொடு, இல்லாதவனுக்கு விட்டுக்கொடு, கேட்பவனுக்கு சொல்லிக்கொடு, வாழ்வில் விழுந்தவனை தூக்கிவிடு !! -இது தர்மம்.“
1700ம் ஆண்டுகளில், பொருளாதாரம் என்பது வெறுமனே நாடுகளின் செல்வம் பற்றி படிப்பது என்ற நிலையிலிருந்து, பல படிகளை கடந்து வந்துள்ளது. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம்ஸ்மித் அவ்வாறு கருதினார்.
சுமேரியர்கள் பொருளாதாரத்தைப் பொருள் பணத்தின் அடிப்படையில் உருவாக்கினர்; அதே போல பாபிலோனியர்களும் பொருளாதார அமைப்பை, கடன் மீதான விதிகள்/சட்டங்கள் வரையறைகளில், சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் வணிக முறைகளின் சட்ட விதிகள் மற்றும் தனியுடைமை வரையறைகளில் உருவாக்கினர்.
இன்று பொருளாதாரம் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல பொருளாதார வரலாறு அல்லது பொருளாதாரப் புவியியல் ஆகியன அடங்கியுள்ளன.
"பொருளாதாரத்தின் உலகம்"
பொருளாதாரம் என்பது, Micro and Macro Economics என்று வகைப்படுத்தப்படுகிறது. Micro Economics , கூட்டுத்திரள் தொகுப்பு நிலையிலான நடத்தையுடன் தொடர்புடையது.
இந்த நிலையில், பொருளாதார வல்லுநர்கள், ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக, வளர்ச்சி, விரிவாக்கம், இணைப்பு மற்றும் ஈட்டுதல் வாய்ப்பு ஆகியவை குறித்து மதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
அதேசமயம், Macro Economics என்பது, பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக ஆய்கிறது. ஒரு நாட்டின் வரவு மற்றும் உற்பத்தி, அதன் வேலைவாய்ப்பு விகிதம், பணவீக்கம், செலவு போன்ற விவகாரங்கள், Macro Economics கீழ் வருபவை.
இவை இரண்டையும் தாண்டி, Development Economics என்ற பிரிவு, சமீப ஆண்டுகளில் பிரபலமடைந்து வருகிறது. பொருளாதார நிபுணர்கள் என்பவர்கள், NGOக்கள், ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள்(Government, Finance Ministry, Central Bank) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய தரவுகளை சேகரித்தல், அந்த விஷயத்தைப் பற்றிய போக்கை ஆய்வுசெய்து ஒரு தீர்வை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக, பொருளாதார நிபுணர்கள், மேற்கண்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
"பொருளாதார அளவீடுகள்"
தேசத்தின் பொருளாதாரத்தின் நடவடிக்கையை அளவீடு செய்ய எண்ணற்ற வழிகளுள்ளன. இத்தகைய பொருளாதார நடவடிக்கையை அளவீடு செய்யும் வழிமுறைகளில் உள்ளிட்டவை:
நுகர்வோர் செலவு, வெளிநாட்டு நாணய பரிமாற்று விகிதம், உள்நாட்டு மொத்த உற்பத்தி, மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, பங்குச் சந்தை, வட்டி விகிதங்கள், தேசிய கடன், விலையுயர்வு விகிதம், வேலைவாய்ப்பின்மை, வர்த்தகச் சமநிலை.
"ஒரு பொருளாதார நிபுணராக உருவாதல்"
பொருளாதார நிபுணர்கள், பொதுவாக, பொருளாதாரம் அல்லது துணைநிலை பொருளாதாரம் அல்லது சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றவராக இருப்பார்.
ஜரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, ஒருவர், Econometrics, Micro Economics அல்லது Macro Economics ஆகிய ஏதேனும் ஒன்றில் விசேட படிப்பாக செய்திருக்கலாம். அதேசமயம், வெளிநாட்டில், Industrial economics, Game theory, Applied economics, Financial economics மற்றும் International Business போன்ற விசேட துறைகள் பிரபலம்.
ஏன் பொருளாதார படிப்பை தேர்வுசெய்ய வேண்டும்?
ஒரு பாடமாக, பொருளாதாரம் என்பது சர்வதேச பயன்பாடு கொண்டது. பொருளாதார வல்லுநர்கள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள். அவர்கள், உலக விவகாரங்கள் குறித்து up-to-date நிலையில் இருக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள், ஒரு நல்ல நிதி திட்டமிடுநர்களாகவும் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில்...
Economics படிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள், அத்துறையில் சாதிக்க, அதிகமாக படிப்பது அவசியம். அது மாணவராக இருக்கும்போதும் சரி, அந்த காலகட்டத்தை கடந்துவிட்டபிறகும் சரி.
பொருளாதாரப் படிப்பு என்பது, உயர்நிலைக் கல்வி அளவில் அதிகம் கணிதம் தொடர்பானது. எனவே, எண்கள் மீது ஆர்வம் இல்லாதவர்கள், இப்படிப்பை அனுபவிக்க முடியாது. இத்துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்கள், தங்களின் முதல் பணி வாய்ப்பை பெறுவது சற்று கடினமாக காரியம்தான். ஏனெனில், இத்துறையின் பட்டதாரி, தன்னை ஒரு தொழில் நிபுணராக மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. பணி நேரங்கள் சில சமயங்களில் மிக அதிகமாக இருக்கும். மேலும், இந்த வகைப் பணியானது, வெறுமனே அலுவலகத்தில் இருப்பது மட்டுமாகாது. மாறாக, பயணம் செய்தல் மற்றும் களப் பணி ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்கலாம்.
இத்துறை தொடர்பான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால், ஒருவர் தனக்கான நல்ல பணியைப் பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஒவ்வொரு நிறுவனத்திற்கு பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், குறைவான எணணிக்கையில் மட்டுமே. எப்போது தேவை இருக்கிறதோ, அப்போது மட்டுமே Economist பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். மேலும், தற்போதைய நடப்பு நிகழ்வுகளைக் கொண்டு, எதிர்கால சூழல் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஒரு Economist மதிப்பிடுவார்.
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் தருணத்தில், சிறந்த பொருளாதார நிபுணரின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது.
பணி வாய்ப்பு துறைகள்:
வங்கியியல், Finance, Marketing, Business, Politic Accountancy, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், Governments
தேவையான திறன்கள்:
கூர்மையான பகுப்பாய்வு மற்றும் கணித திறன்கள், சிறப்பான கவனம் மற்றும் ஆர்வம் இருப்பதோடு, நிறைய படிக்கக்கூடிய மனப்பக்குவமும் இருக்க வேண்டும்.
பொருளாதார படிப்பிற்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள்:
Stanford University, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் – பிரிட்டன், ஹாவர்டு பல்கலைக்கழகம் - அமெரிக்கா., University of Oxford, Yale University, University of Cambridge, National University of Singapore, University of Toronto, ETH Zurich - Swiss Federal Institute of Technology, University of Amsterdam, Ludwig-Maximilians-Universität Germany, Rheinische Friedrich-Wilhelms-Universität Bonn, Germany இப்படிப் பல.
பலருக்கும் நான் பதிவேற்றும் படங்களை பார்த்ததும் ஏளனச் சிரிப்பும், நகைப்பும், மலினப்படுத்தும் கருத்தீடலும்.... ஏதோ உலகம் சுற்றுவதான நினைப்பும் தான் தோன்றும். பலர் நேரடியாகவே கூறுவதுண்டு. அவர்களது அறியாமையால் நான் கோபப்படுவதுமுண்டு!!
இவையனைத்தையும் கடந்துதான் எனது தொழில் சர்வதேச ரீதியாக செய்யமுடிந்திருக்கிறது. எனது திறமையில் இவ்வளவு நாடுகள் நம்பிக்கை வைத்து என்னோடு ஒத்துழைக்கிறார்கள் என்றால் எனது இந்த கல்வி, அறிவு, செயற்திறன், அரசியல், பொருளாதார சமூக ஆளுமை, ராஜதந்திரங்களே.
இன்னும் பலவற்றை சமூகங்களிடம் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் நான் என்றும் மாணவனேயொழிய நிறைவுபெற்ற நிபுணனாக இருக்கமுடியாது.
அதேபோல் உங்களிடம், உங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் கணிதத் திறமையை, உங்களின் சமூக அறிவுடன் ஒருங்கிணைத்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உங்களால் திறம்பட பங்களிப்பு செய்ய முடிந்தால், சமூகம் உங்களைப் போற்றும். என் இனத்தின் வாழ்வு சிறக்கும்.
- புலோலியூரான்-

Sunday, April 22, 2018

21 ம் நூற்றாண்டின் பென்னிvகுயிக் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!!


நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம்.
அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.
ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன.
2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார்.
அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம்.
சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில் தான்.
2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.
பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.
ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார்.
அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.
சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி அது.
அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை.
ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும்.
நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது.
அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது.
இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி
அழிந்தே போனது.
எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர்
ககன்தீப் சிங் பேடி.
சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி.
அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது.
ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.
வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை.
அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை.
எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன்தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது.
ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.
தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார். ஆனால் இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை.
இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது .
பொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், வெறுத்துப் போய் கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்.
ஆனால் அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வரவே இல்லை வரவும் வராது.
வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க.
ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது.
நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.
பணி தொடங்கியது
ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.
1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது.
துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் :
கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது.
12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது.
சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு விவசாயிகள்.
ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது.
ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.
ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி,
"ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க.
எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.
எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.
கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை.
ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது.
ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.
பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர்.
அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.
கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார்.
இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது.
இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம்.
திட்டத்துக்கு வித்திட்ட ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார்.
அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும் என்றார்.
தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன.
அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.
கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும் அழிந்திருக்கின்றன.
மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம்.
பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம்.
மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் எனது பங்காளிகளே.
சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களுக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி சொல்வார்களா நம் மக்கள்?
ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
(*** இந்த செய்தியை முழுமையாக படித்தமைக்கு நன்றி ***)