Search This Blog

Friday, August 12, 2011

நோ நோ.....குச்சி எல்லாம் தேடக்கூடாது..


நீண்ட நாள் உயிரோடு வாழ என்ன செய்யணும்?

ம்ம்ம் சாகாம இருக்கணும்..




எலக்ட்ரிக் ஒயர்ல 3 எறும்பு போயிட்டு இருந்தது... அதுல ரெண்டு எறும்புக்கு மட்டும் ஷாக் அடித்தது.. ஒரு எறும்புக்கு அடிக்கல. ஏன்?

ஏன்?

ஏன்னா... அது கட்ட எறும்பு...



ஒரு மனிதன் எப்போது முழு மனிதன் ஆகிறான்?

கடைசி சென்டிமீட்டர் வரை வளர்ந்ததும்..



வாழ்க்கைல வழுக்கி விழுந்தவங்களுக்கு நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?

இனிமேலாவது நடக்கும்போது ஜாக்கிரதையாய் நடங்க...

ஏன் அவர் தலைகீழ கையால நடந்து வரார்..?

அவர் தண்ணி அடிச்சிருக்கார்.. நேரா நடந்த எல்லாம் தலைகீழா தெரியுதாம்....

சீக்கிரமா ஒரு பேப்பர் தோசை கொண்டு வாப்பா....

சீக்கிரம் நா நேத்திய இஷ்யு தான் கெடைக்கும் பரவாயில்லையா?

கேரட் பச்சையா சாப்பிட்டா கண்ணுக்கு நல்லதுன்னு சொன்னாங்க னு எல்லா கடைலயும் தேடி பார்த்தேன்,, கிடைக்கவே இல்ல

அப்படியா?

அமாம்... எல்லா கடைலயும் கேரட் ஆரஞ்சு கலர் ல தான் இருக்குது 

நோ நோ.....குச்சி எல்லாம் தேடக்கூடாது....
சிரிச்சிட்டு பாவம் சின்ன புள்ள னு விட்டுட்டு போய்டணும்...


நட்புடன்
Join Only-for-tamil

No comments:

Post a Comment