Search This Blog

Saturday, April 23, 2011

ஒரு துளித் தனிமை

நேசமாய்த் தான் இருந்தேன்.
ஒவ்வோர் இதழ்களிலும்
மெல்லியத் தழுவல்,
செடியின்
கால்களுக்குக் காயம் தராத
தண்ணீர் பாசனம்.

ஆனாலும்
பூக்கள் புகார் செய்ததில்
என் தோட்டக்காரன் வேலை
தொலைந்து போய் விட்டது.

எந்தச் சிறகையும்
சிக்கெடுக்கும் நேரத்திலும்
சிதைத்ததில்லை.
எந்த அலகிலும்
முத்தம் இட மறந்ததில்லை.

இருந்தாலும்
அத்தனை பறவைகளும்
என்னை விட்டுப் பறந்து
எங்கோ போய்விட்டன.

நீந்தி வந்து
இரைகொத்தும் என்
நீச்சல் குள மீன்கள் கூட
சத்தமின்றித்
தோணியேறி
அடுத்த ஆற்றுக்கு
அவசரமாய் சென்று விட்டன.

என்னிலிருந்து
நான் பிரிந்த
தனிமை எனக்கு.

என் கிளைகள் எல்லாம்
காய்ந்தாலும்
இன்னும்
மிச்சமிருக்கிறது என்னிடம்
மூன்று தலைமுறைக்கான
விதைகள்.

No comments:

Post a Comment