Search This Blog

Monday, April 11, 2011

நேரமிருந்தால் : படித்ததில் பிடித்தது


- கணேசகுமாரன்

வீதிகளில் திரியும் 
மனநிலை தவறிய ஒருவனின்
கண்களை உற்றுப் பாருங்கள் 
அவன் அழுக்கு ஆடைகளை
முகர்ந்து பாருங்கள்
மனநிலை தவறியவர் 
பெண்ணெனில்
அவள் நிர்வாண அலட்சியத்தைப் பாருங்கள்;
ரசிக்காதீர்கள்
எவருக்கும் புரியாத மொழியில் 
இறைவனை அழைத்து
சுருங்கி காய்ந்து வெடித்த
தன் முலைகளை சுட்டி 
முறையிடுபவளை நிதானியுங்கள்
உதிரம் உறைந்த யோனியை 
ஒரு கையால் தட்டித் தட்டி 
தரை அதிர நடக்கும் அவளின் 
புட்டத்தின் மீதிருக்கும் 
சூட்டுத் தழும்பினை 
கவனித்து அதிருங்கள் 
உங்களுக்கு 
இந்தக் கவிதை கிடைக்கலாம்

No comments:

Post a Comment