Search This Blog

Saturday, June 16, 2018

சொல் உலகம் (ஸப்த பிரபஞ்சம்),பொருள் உலகம் (அர்த்தப் பிரபஞ்சம்)

உலகமானது சொல்வடிவம், பொருள் வடிவம் என்று இரண்டு வகையாக உள்ளது.
சொல் உலகம் //ஸப்த பிரபஞ்சம்// என்றும்,
பொருள் உலகம் //அர்த்தப் பிரபஞ்சம் // என்றும் அழைக்கப்படும்.
சொல்உலகம் எழுத்துக்களை உறுப்புகளாகக் கொண்ட சொற்களாகும்.எழுத்துக்கள்,
வர்ணம்,
பதம்,
மந்திரம்,
என்று மூன்று வகைப்படும் என்று ஆகமாந்தம் கூறுகின்றது.
இங்கு கூறப்பட்ட எழுத்து, சொல் என்பது எல்லா மொழிகளிலும் உள்ள எழுத்துக்களையும், சொற்க்களையும் குறிக்கும் என்பது சிவாகமங்களின் கொள்கை.
சொல் உலகம் என்ற ஸப்த பிரபஞ்சம் அறிவுக்கு காரணமாய் உள்ளதால் அது சுத்தமாயையின் காரணமாகும் என்பது சித்தாந்த முடிபாகும்.
இந்த சொற் பிரபஞ்சமே, நாம் பேசும்
*//வாக்கு *//எனப்படும்.
இந்த வாக்கு நான்கு வகைப்படும்.
1) சூக்குமை
2) பைசந்தி
3)மத்திமை
4) வைகரி
என்பனவாகும்.
நமது மூலாதாரத்தில் இருந்தும், நாபிக்கமலத்தில் இருந்தும் ஓசை ஒன்று எழும்.அந்த ஓசையை எழுப்பும் காற்றுக்கு
*//உதானன் *// என்று பெயர்.
இவ்வாறு தோன்றும் உதானன் என்ற ஓசையானது, மூலாதாரத்தில் இருந்து எழும்பி,
பரை, பைசந்தி, மத்திமை, வைகரி, என்ற நான்கு நிலைகளில் சென்று நாம் பேசும் வாக்காக உருவெடுக்கின்றது.
இதில் முதலில் வரும்,
சூக்குமை என்பது பரை என்றும், நாதம் என்றும் அழைக்கப்படும்.இவ்வாக்கு காரணநிலையிலேயே அழிவின்றி நிற்பதாகும்.அதாவது, இந்த ஓசை(சப்தம்) தான் உற்பத்தியான மூலாதாரத்திலேய அசைவற்று நிற்க்கும். இதையே சூக்குமை அல்லது பரா வாக்கு என்பர்.
பின் இந்த சப்தமானது உதானன் என்ற வாயுவினால் மேலே எழும்பி வரும்பொழுது நாபீக்கு அருகில் வந்தவுடன், எழுத்துக்களின் வடிவில் நன்கு விளங்கித் தோன்றாது, பொதுப்படையாக தோன்றும்.இதனை பைசந்தி வாக்கு என்பார்கள்.
இதற்க்கு உதாரணம், மயில் முட்டையில் உள்ள நீரின் உவமையை கூறுவார்கள்.அதாவது, மயிலிடம் காணும் நிறங்கள் பலவும், மயில் முட்டையில் தெரிந்தும், தெரியாது இருத்தல் போல என்பர்.
மூன்றாவது வாக்கு மத்திமை.நாபியில் இருந்து எழுந்த வாயுவானது, இருதயம் பக்கம் வந்தவுடன், எழுத்து வடிவில் நன்கு விளங்கத் தோன்றி, இருதயத்தில் இருந்து உதானன் என்ற வாயுவால் உந்தப்பட்டு மிடறு அதாவது கண்டத்தில் நின்று மெல்ல ஒலிக்கும் வாக்காகும்.இது மத்யமா என்று பெயர் பெரும்.
இந்த வாக்கைதான் நாம் உலகவாழ்வில், தொண்டைக்குழி வரை வந்துவிட்டது, வாயில் வரவில்லை என்கிறோம்.இவ்வாக்கு பைசந்திக்கும், வைகரிக்கும் இடையில் நிற்ப்பதால், மத்திமை என்றப் பெயர் பெற்றது.
நான்காவதாக மிடற்றில் நின்ற உதானன் என்ற வாயு, அதாவது எழுத்துவடிவ சொற்க்கள், வாயின் வழியாக "பிராணன் "" என்ற காற்றின் மூலமாக வாய் வழியாக வெளியேறுகிறது.இது வைகரி வாக்கு எனப்படும்.
இந்த வைகரீ வாக்கே நாம் பேசும் சொல்லாகும்.எனவே நாம் பேசும் ஒரு சொல் கடந்து வரூம் நிலை இதுவேயாகும்.இந்த வைகரீ வாக்கே சொல்பவர் செவிக்கும், கேட்போர் செவிக்கும் புலனாவது.
இதில் சொல்பவர் காதில் மட்டும் கேட்பது
"சூக்ஷும வைகரி " என்று கூறுவர்.இது உலகவழக்கில் முனு முனுத்தல் என்பதாகும்.
கேட்போர் செவிக்கும் சொல்பவர் வாக்கு கேட்குமாயின் அது "ஸ்தூல வைகரி "என்று கூறுவர்.இது உலகவழக்கில் சொல்லாடல் என்பதாகும்.
மூலாதரத்தில் இருந்து ஓசையானது வாக்காக மாறும் இப்படிநிலை பற்றிய விபரங்கள் //அந்தணர்கள் ஓதும் வேதங்களில் விரிவாக உள்ளன என்று,
தமிழின் முதல் நூலாகிய தொல்காப்பியம் எழுத்ததிகாரத்தில் கூறப்பட்டுள்ளது.அப்பகுதி,
//எல்லா எழுத்தும் வெளிப்படக் கிளந்து
சொல்லிய பள்ளி எழுதரு வளியின்
பிறப்பொடு விடுவழி உறழ்ச்சி வாரத்து
அகத்து எழு வளி இசை அரில்தப நாடி
அளபிற் கோடல் "அந்தணர் மறைத்தே "
அஃது, இவண் நுவலாது எழுந்து புறத்து இசைக்கும்
மெய்தெரி வளியிசை அளபு நுவின்றிசினே //
என்று பாடுகின்றார்.
மூலாதாரத்தில் உள்ள காற்றில் இருந்து தோன்றும் எழுத்துகளும் சொற்களும் படிநிலை கடந்து வாய்வழியாக வாக்குகளாக வெளிப்படும்.இவ்வாறு வெளியாகும் வாக்குகளின் தன்மை, வேதங்களில் ஓதும் முறையாக உள்ள உதாத்தம், அனுதாத்தம், ஸ்வரிதம், ப்ரசயம் என்னும் நிலைகளில் அமையும் என்றும் இதன் விவரங்கள் அந்தணர்களின் வேதங்களில் விரிவாக உள்ளன என்பதை "அந்தணர் மறைத்தே " என்று தொல்காப்பியர் சிறப்பித்து கூறுகின்றார்.
தொல்காப்பியம் போற்றும் அந்தணர் வேதம்.
தொல்காப்பியர் காலம் முதலே வேதங்களை போற்றுவது தமிழகத்தில் இருந்துவந்துள்ளது.எனவேதான் பாரதி வேதம் நிறைந்த தமிழ் நாடு என்றார்.
சிவார்ப்பணம்.
@தில்லை கார்த்திகேய சிவம்.

Tuesday, June 5, 2018

'பல் கலைக் கழகம்'-University


Rajeswary Balasubramaniam

18.5.18,முள்ளிவாய்க்கால் நினைவு நாளன்று, நான் லண்டனிலிருக்கவில்லை. உலகத்தின் மிகப் புராதான தீவுகளில் ஒன்றான 'மால்ட்டா'வுக்குச் சென்றிருந்தேன்.
பத்தாயிரம் வருடங்களுக்கு மேலான சரித்திரத்தைக் கொண்ட அந்தத் தீவில் பிரயாணங்களைத் தொடர்ந்து கொண்டிருந்தபோது,இலங்கையில் நடந்து கொண்டிருக்கும் முள்ளிவாய்க்கால் நினைவு நாள் நிகழ்ச்சிகளையும் அவ்வப்போது படித்துக் கொண்டிருந்தேன்.

இன்று,'மனிதப் பேரவலம் ஒன்றை நினைவு கூரும் இடத்தில் இன்னொரு பேரலவத்தை அரங்கேற்றம் 'வல்லமை'தமிழர்களுக்கு மாத்திரம்தான் உண்டு' என்ற ப.தெய்வீகனின் வார்த்தைகள் நெஞ்சில் நெருப்பாய்ச் சுட்டன. (தேனியில் வந்த கட்டுரை).

அத்துடன், முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்ச்சிகளில் திருகோணமலை, மட்டக்களப்புப் பிராந்தியத்தைச் சேர்ந்த எவரும் கலந்து கொள்ளக் கூடாது' என்ற கட்டளையும் அங்கு பிறப்பிக்கப் பட்டதான செய்திகளும் வந்து விழுந்தபோது எனக்கு வந்த அதிர்ச்சியையும் துயரையும் விளங்கப்படுத்த எந்த வார்த்தைகளும் கிடைக்கவில்லை.

முப்பதாண்டு போரில்,கிழக்குவாழ்; தமிழர்கள் உயிர், உடமைகளை இழக்கவில்லையா, ஆயிரக் கணக்கில் போராளிகளாக வீரமரணத்தைத் தழுவிக் கொள்ளவில்லையா?காணாமற்போன தங்கள் குழந்தைகளை, கணவன்மாரை, சகோதரங்களைத் தேடி அவர்கள் கதறுவது யாழ்ப்பாண மாணவர்களின் புலன்களை எட்டவில்லையா, கிழக்கிலுள்ள,(முக்கியமாக அம்பாரை மாவட்டத்திலுள்ள) 48;.000 விதவைகளின் அவல நிலை முள்ளியாவளை நினைவு நாளில் ஆணைகள் பிறப்பித்துக் கொண்டிருந்த கறுப்புச் சட்டை வீரர்களின் கருத்துக்களில் பதிந்திருக்கவில்லையா?

எனக்குள் வந்து கொண்டிருக்கும் பல கேள்விகளுக்குப் பதில்களை யாரிடம் எதிர்பார்ப்பது?
'பல் கலைக் கழகம்' என்பது ஒரு மாணவன் குறிவைத்துச் செல்லும் பாடத்தில் மட்டுமல்லாது பல உயர்நிலைக் கல்விகளின் ஒன்றுகூடலின் சங்கமத்தில் தன்னைப் பிணைத்துக் கொண்டு பல்லறிவு பெறும் கழகம் என்பதுதான் எனது அனுபவம்.

1985ம் ஆண்டு,நான் லண்டன் திரைப்படக்கல்லுரி மாணவியாக,பலதரப்பட்ட மாணவர்களுடன் எனது வாழ்க்கையின் 'இரண்டாம்' கட்ட மேற்படிப்புக்குச் சென்றேன். ஏற்கனவே எனது வாழ்க்கையிற் பெரும்பாலான காலம் முற்போக்கு சிந்தனைகளால் சீரமைக்கப் பட்டிருந்ததால்,திரைப்படக் கல்லூரிக்குச் சென்றதும் அங்கு காணப்பட்ட'சமுதாய,திரைப்பட புரட்சிகர' சூழ்நிலை' என்னை ஆச்சரியப் படுத்தவில்லை.

நானும் எனது சக மாணவர்களும்;,80ம் ஆண்டுகளில் லண்டன் தெருக்களில் தென்னாபிரிக்க வெள்ளையாதிக்கத்துக்கு எதிராக மோதியலைந்த பல்லாயிரம் பிரித்தானியப் பொது மக்களுடன் எங்களையும் பிணைத்துக் கொண்டோம்;. எங்களது முதலாவது' டாக்குயமென்டரி' தென்ஆபிரிக்க வெள்ளையாதிக்கக் கொடுமையை எதிர்ப்பதை அடிப்படையாகக் கொண்டது.

அதைத் தொடர்ந்து,இலங்கைத் தமிழர் படும் அவலத்தை முன்னெடுத்து, 'எஸ்கேப் புறம் ஜெனசைட்' என்ற 'டாக்குயுமென்டரியைத்' தயார் செய்தேன்.
இலங்கையிலிருந்து உயிர் தப்பியோடிவரும் தமிழர்களுக்காக,' தமிழர் அகதி ஸ்தாபனம், தமிழர் அகதிகள் வீடமைப்பு' போன்ற ஸ்தாபனங்களை பிரித்தானிய தொழிற் கட்சியின் உதவியுடன் நிறுவி அதன் தலைவியாகவிருந்து என்னால் முடிந்த உதவிகளை எங்கள் தமிழ் மக்களுக்குச் செய்தேன். இந்தியா சென்று,இலங்கையிலிருந்து தப்பிச் சென்று அங்கு வாழும் இலங்கைத் தமிழர்களைப் பற்றிய புகைப்படக் கண்காட்சியை லண்டனில் நடத்தினேன். இவையத்தனையும் நான் மாணவியாக இருந்த காலத்தில் எனது சமுதாயத்திற்காகச் செய்த கடமைகள்.

அப்போது லண்டனுக்கு அகதிகளாக வந்த தமிழர்களில் நான் ஒரு கிழக்கிலக்கிங்கைத் தமிழரையும் சந்திக்கவில்லை. எனக்கு.வடக்கு கிழக்கு, என்ற பிராந்திய உணர்வு ஒரு நாளும் இருந்ததில்லை. மனித நேயம்தான் எனது தாரக மந்திரம்.

இன,மத,நிற,வர்க்க பேதமற்ற மாணவர்களில் ஒருத்தியாக பன் முகத் திறமைகள்; கொண்ட மாணவர்களுடன் லண்டனில் என்னைப் பிணைத்துக் கொண்டபோது, 1960ம்-70ம் ஆண்டுகளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், கொழும்பு பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் முன்னெடுத்த பல முற்போக்கு சிந்தனைகள் என் மனதில் நிழலாடின.

1960-ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து,அமெரிக்கரின் கொடிய போர்த் தந்திரங்களால் வியட்நாமிய மக்கள் கொடுரமாக் கொலை செய்யப்படுவதை எதிர்த்து கொழும்பு பல்கலைக் கழக மாணவர்கள மட்டுமல்லாது இலங்கையிலுள்ள பல பல்கலைக்கழக மாணவர்கள்,பல்லாயிக் கணக்காகத் திரண்டு கொழும்புத் தெருவிலிறங்கிப் போராடியதால் போலிசாரின் தடியடிக்கு ஆளாகினார்கள்.

அதே கால கட்டத்தில் 1967ல் யாழ்ப்பாணம் மாவிட்டபுரத்தில் ஒடுக்கப் பட்ட மக்களுக்காகக் கோயில் திறக்கப் படவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்த போராட்டத்தில், கொழும்பிலிருந்தும் கண்டி பேராதனைப் பல்கலைக் கழகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கான முறபோக்கு,இடதுசாரி தமிழ்மமாணவர்கள், மாவிட்டபுரம் சென்று ஒடுக்கப் பட்ட மாணவர்களின் உரிமைகளுக்காகப் போரடினார்கள்.(எனது 'ஒருகோடை விடுமுறை'நாவல் வாசித்தவர்கள் புரிந்து கொள்வார்கள்)

அக்கால கட்டத்தில்,யாழ்ப்பாணப் பல்கலைக் கழகம் மனித உரிமைப் போராட்டத்தில்,முற்போக்கு இலக்கியப் பாதையில்,சமூகவளர்ச்சி சிந்தனைகளில் தனது முத்திரையைப் பதித்துக் கொண்ட ஒரு பெரும் தகமையுடன் இலங்கையில் கௌரவம் பெற்றிருந்தது. அதற்குக் காரணம் அக்காலத்தில் அங்கு செயற் பட்ட வடபுலத்தின் தலைசிறந்த முற்போக்குவாதிகளில் ஒருத்தரான,திரு.மு. கார்த்திகேசு' மாஸ்டரின் மாணவன் கலாநிதி கைலாசபதி போன்றவர்கள் யாழ் பல்கலைக்கழகத்தின் வழிகாட்டிகளில் ஒருத்தராகவிருந்ததாகும்.

'பல் கலைக் கழகம்' என்ற 'பன்முறைத் தகமையின் ஆளுமையின்; தார்ப்பரியத்தைச் செயலிற் காட்டிய சிறந்த கல்விமான்களுடன் வளர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களா இன்று 'தமிழர்களுக்கான ஒரு பொது நினைவு நாளில்' இவ்வளவு கேவலமான பிராந்திய வெறியுடன் நடந்து கொண்டார்கள்?

இந்தச் செய்தியைச் சீரணிக்க முடியாமல் எனது நெஞ்சம் பதறுகிறது. இவர்களை இப்படி ஒரு குறுகிய வழியில் செயற் படுத்துபவர்கள்யார்?

இன்று இலங்கைத் தமிழ் மக்கள்,தமிழ் மக்களின் வாழ்வாதரத்தை மேன்படுத்தும், தமிழர் சமூகத்தை வளம் படுத்தும், இளம் தலைமுறையை நல்வழிக்கு இட்டுச் செல்லும் ஒரு நேர்மையான அரசியற் தலைமையின்றித் தவிக்கிறார்கள். தமிழ்த் தலைவர்கள் என்று தமிழ் மக்களின் வாக்குகளை வாங்கிக் கொண்டு பதவிக்கு வருபவர்களுக்கு,' மக்களால் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்றவாதியின் கடமைகள்' என்னவென்ற ஒரு கோட்பாட்டின் விளக்கம் தெரியாது.

1948ம் ஆண்டு தொடக்கம் 'தமிழ்ப் பிரச்சினை' என்ற ஒரு கருத்தை முன்வைத்து பதவிக்கு வரும் மேல்மட்டத் தலைவர்கள் சாதாரண தமிழ் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தால், தமிழ் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாக வளர ஆரம்பிக்கும், அதன்பின் 'தமிழர் பிரச்சினை' சொல்லி பதவிக்கு வரமுடியாது என்ற தெரியும்.அதனால் தங்கள் வசதியான வாழ்க்கையைத் தக்கவைத்துக் கொள்ள எப்படியும் ஏதோ ஒரு வழியில் தமிழர் பிரச்சினைகளைத் தொடர்ந்து பேசிக்கொண்டிருப்பார்கள்

அந்தப் பிரச்சினைகளைத் தொடர அவர்களின் பாவிப்பு ஆயுதங்களாக, சாதி, சமயம்,பிராந்திய ,இனவெறிகளைத் தூண்டிக் கொண்டேயிருப்பார்கள்.அவற்றைப் பாவித்துத் தங்கள் சொகுசு வாழ்க்கையை, தமிழ் மக்களின் எதிரி என்று அவர்களால்ச் சுட்டிக் காட்டப் படும் இலங்கை அரசின் பாதுகாப்புப் படையின் உதவியுடன் தொடர்ந்த கொண்டிருப்பார்கள்.

அதற்காக அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தில் யாரையும் எதையும் பாவிக்கத் தயங்க மாட்டார்கள்.இன்று அவர்களின் பகடைக்காய்களாக மாறிவிட்டிருப்பவர்கள் அப்பாவிப் பொது மக்களும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும் என்று பேசிக்கொள்கிறார்கள்..

யூதர்களில் உள்ள இனவாதத்தால், ஹிட்லர் தனது வெறிபிடித்த கொள்கையால் தனது மக்களைத் தவறாக வழிநடத்தியதால் அதன் நீட்சியாக,இரண்டாம் உலகப்போர் வந்து உலகம் பல மோசமான அழிவுகளை முகம் கொடுக்க நேரிட்டது. கடைசியாக ஹிட்லரும் அழிந்து அவனின் நாடும் சிதைந்தது. அவனது மிகப் பெரும் பலமாக இருந்தவர்கள் மாணவர்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இன்று,பலநாடுகளில் பணபலத்தால் படடோபமாக வாழும் சில புலம் பெயர் தமிழர்கள், 'தமிழர்' பெயர் சொல்லி மேடையேறவும், பிரமுகர்களாக வலம் வரவும் அப்பாவி இலங்கைத் தமிழர்களைப் பணயம் வைத்து விளையாடுவதை இலங்கைத் தமிழ் மக்கள் புரிந்து கொள்ளுங்கள்.
சில புலம் பெயர் தமிழர்கள்,தங்கள் பிள்ளைகளுக்கு உயர்படிப்பை வழங்கிக்கொண்டு, தாய்நாட்டில் வளரும் இளமனங்களில் விஷவிருட்சத்தை வளர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

புலம் பெயர் தமிழர்கள் இலங்கை வாழ் தமிழ் மக்களில் உண்மையான அக்கறை வைத்தால், சிதைந்துபோன இலங்கைத் தமிழரின் வாழ்வாதாரத்தை மேன்படுத்தவும், கல்வித்துறையில் மற்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஈடாகப் போட்டிபோட்டு உலகதரத்தில் பெருமைபெற முடியும். ஆனால் சுயநலம் பிடித்த இலங்கைத் தமிழ்த் தலைவர்களும், மற்றவர்கள் துன்பத்தில் மகிழ்ச்சி காணும் சில புலம் பெயர் ;சாடிஸ்ட்' தமிழர்களும் சட்டென்று உணர்ச்சி வயப்படும் இளவயதினரைத் தங்கள் தேவைகளுக்குப் பாவித்து விட்டுத் தூக்கியெறிவார்கள்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக,மாணவர்களே தயவு செய்து உங்கள் பல்கலைக்கழகத்தின் பாராட்டுக்குரிய பழைய சரித்திரத்தை ஒரு தரம் புரட்டிப் பாருங்கள். இலங்கையில் முற் போக்குத் தமிழ் சிங்கள மாணவர்கள், அமெரிக்க-வியட்நாம் போருக்கும் யாழ்ப்பாணத்தில் சாதிக் கொடுமைக்கும் குரல் எழுப்பிய அதே காலகட்டத்தில்,1968ம் ஆண்டு பாரிசில் நடந்த மாணவர்களின் புரட்சியால் நடந்த பல முன்போக்கான மாற்றங்களைப் படியுங்கள்.

உங்களின் கல்வி பலம் மகத்தானது. இளம் வயதுச் சிந்தனை சக்தி மிகப் பிரமாண்டமானது. வளரும் வயதின் அறிவு ஆழம் தெரியாத கடல்போல் மிக மிக ஆழமானது,மனதை நெருடும் தென்றலைப்போல் தௌ;ளிய கருத்துக்களை உங்கள் இளம் மனதில் தாலாட்டக்கூடியது.

தங்கள் சுயநலத்தை முன்னெடுக்கும் அரசியல்வாதிகளுக்காக உங்களின் அபரிமிதமான ஆளுமையை மாசுபடுத்தாதிர்கள்.அவர்களுக்காக ஒத்துப் பாடும் குறுகிய அறிவுள்ள ஊடகங்களின் பதிவுகளை 'பல் கலைக் கழக மாணவர்கள்' என்ற பார்வையில் பன்முகத்துடன் அலசிப்பாருங்கள்.

'பல் கலைக் கழக' மாணவர்கள் எதிர்காலத்தின் சமூகக் காவலர்கள், சிந்தனையாளர்கள், சீர்திருத்தவரிகள்.அரசியல் வாதிகள்,ஆளுமையைக் கையிலெடுக்கப் போகிறவர்கள். உங்களின் கையில் பாடப்புத்தங்களையம் கருத்தில் மனித தர்மத்தின் அடிப்படைத் தத்துவங்களையும் எதிர்காலக் கருவிகளாகப் பாவிக்கப் பழகுங்கள். இடறுவது தற்செயல்,ஏறுவது முயற்சி என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

எங்கள் சமுதாயத்தை முன்னேற்ற உங்கள் பணிகள் இன்றியமையாதது.இரண்டாம் உலக யுத்தத்தால் சிதிலமடைந்த ஜேர்மனி, ஜப்பான் போன்ற நாடுகள் தலைநிமிர அந்நாட்டு அரசியல்வாதிகள் மக்களை எந்தவித பேதமுமின்றி ஒன்று சேர்த்து உழைத்தார்கள். ஓரு சொற்ப கால கட்டத்தில்; அவ்விருநாடுகளும்,தொழில் உற்பத்தி,விஞான விருத்திகளில் அபரிமிதமாக முன்னேறியதை நீங்கள் படித்திருப்பீர்கள்.

இலங்கைத் தமிழர்களை ஒன்று சேர்த்து எதிர்கால வளர்ச்சிக்கு அத்திவாரம்போடுவது இளம் தலைமுறையினர் கைகளிற்தானிருக்கிறது. அதை மறந்துவிட்டு,சாதி,மத.பிராந்திய,இன வெறியுடன் பொதுக்கடமைகளில் ஈடுபடுவது மாணவ வாழ்க்கையின் ஆக்க நோக்கைச் சீரழிக்கும். வெற்று வார்த்தைகள் எதையும் கட்டியமைக்கப் போவதில்லை.

பொருளாதாரத்தில்,கல்வியில், மனிதநேயக் கருத்துக்களில் வளர்ந்த மேற்கு நாடுகளில், தனி மனித திறமைக்கு மதிப்புண்டு. தேசியத்தின் வளர்ச்சிக்கு அது உதவுகிறது.வளர்ந்த நாடுகளின் சரித்திரத்தை ஒருதரம் புரட்டிப் பாருங்கள். மக்களின் ஒட்டுமொத்த ஓற்றுமை என்பது அவர்கள் வாழும் சமுதாயத்தின் வலிமையின் அடிப்படைத் தளமாகும். தமிழர்களின் பல்வேறுபட்ட திறமைகளை ஒன்றிணைத்து ஒரு புதிய சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் இளம் மாணவர்களை குறுகிய வழிகாட்டித் தங்கள் தேவைகளுக்குப் பாவிக்கும் அரசியல் சூத்திரங்களுக்கு அடிபணிவது வலிமையற்ற மனவளர்ச்சியின் பிரதிபலிப்பாகும்.

MSM...ஸ்டெர்லைட்ஆலை ஒரு பார்வை


1.உரிமையாளர்-அனில் அகர்வால்
2.தலைமையிடம்-இலண்டன்
3.நிறுவனப் பெயர்- வேதாந்தா ரிசோர்ஸ்
4.அமைத்துள்ள இடம் - தூத்துக்குடி
5.முக்கிய உற்பத்தி- தாமிரம் (copper )
6.கழிவு உற்பத்தி- தங்கம், சல்ப்யூரிக் அமிலம் , பாஸ்ஃபோரிக் அமிலம்
7.முதலில் தேர்ந்த இடம்- குஜராத்
8.அனுமதி மறுத்த மாநிலங்கள் -குஜராத், கோவா, கர்நாடகா, கேரளா
9.அனுமதி தந்து பிரச்சினை சந்தித்த இடம் - மகாராஷ்டிரா , ரத்னகிரி
10.அப்போதைய மகராஷ்ர முதல்வர் - சரத்பவார்
11.அனுமதி தந்த மாநிலம்- தமிழ்நாடு
12.அப்போதைய முதல்வர்-ஜெ.ஜெயலலிதா
13.அனுமதிக்க காரணம்- தூத்துக்குடி துறைமுகம்
14.முதல் உண்ணாவிரத போராட்டம் -1996
15.போராட்டம் நீர்த்த காரணம் - தென் மாவட்ட சாதிசண்டை
16.தண்ணீர் எடுக்கப்படும் ஆறு - தாமிரபரணி
17.ஆலைக்கு எதிரான முதல் வழக்கு-1997 நவம்பர்7
18.முதல் விபத்து- ஏழு சிலிண்டர் வெடிப்பு (1997)
19.இரண்டாம் விபத்து- கந்தக குழாய் வெடிப்பு (பலி-1)
20.மூன்றாவது விபத்து-செப்புக்கலவை வெடிப்பு(பலி-3)
21.நான்காம் விபத்து-சல்ப்யூரிக் அமில குழாய் வெடிப்பு (பொறியாளர்-5,கூலித் தொழிலாளி -12
22.ஐந்தாம் விபத்து-ஆயில் டேங்க் வெடிப்பு
23.ஆறாம் விபத்து -நச்சுப்புகை வெளியேற்றும்
அனுமதிக்கப்பட்ட உற்பத்தி அளவு -70000டன்
24.உற்பத்தி செய்தது-2லட்சம் டன் (2005 கணக்கில்)
25.ஆலையை மூட முதல் தீர்ப்பு -2010 செப்டம்பர் 28
26.தொடக்கம் முதல் எதிர்க்கும் கட்சி-மதிமுக
27.ஆலையை எதிர்த்து வாதாடியவர்-வை.கோ(1998)
28.ஆலை மூட உத்தரவிட்டவர்-ஜெ.ஜெயலலிதா
29.100 கோடி அபராத்துடன் மீண்டும் ஆலை திறக்க அனுமதித்து-உச்சநீதிமன்றம்
30.தமிழ்நாடு பசுமை வாரிம் -தடை
31.தேசிய பசுமை வாரியம்- அனுமதி

ஹிந்தித் திரைப்படம் பிங்க்.(PINK)



உமா வரதராஜன்
முக்கியமான ஹிந்தித் திரைப்படம் பிங்க்.(PINK).
பணக்காரப் பையன்கள் போல் தோன்றும் மூவர் அருகிலிருக்கும் ஒரு மருத்துவமனைக்கு தங்கள் வாகனத்தில் அவசர அவசரமாக சென்று கொண்டிருக்கிறார்கள் . அவர்களில் ஒருவனது தலையிலிருந்து இரத்தம் வடிந்து கொண்டிருக்கிறது .
அதே நகரத்தின் இன்னொரு புறத்தில் ,அதே இரவில் நவநாகரீகத் தோற்றம் கொண்ட மூன்று இளம் பெண்கள் வாடகைக் காரில் தங்கள் அபார்ட்மென்டுக்கு பதட்டத்துடன் விரைகிறார்கள் . தங்கள் மனைக்குள் நுழையும் அவர்கள் தங்கள் நடுக்கத்தைக் கை விட்டு இயல்பு நிலைக்கு மீள முயல்கிறார்கள். இயல்பிலேயே சுதந்திர மனநிலையையும் , தன்னம்பிக்கையையும் கொண்ட அந்தப் பெண்களுக்கு அன்றைய இரவு சோதனை மிக்கதாக அமைந்து விட்டது.
சற்று முன் ஹோட்டேலொன்றில் நிகழ்ந்த ரொக் இசை நிகழ்ச்சியின் போது அறிமுகமான அந்த மூன்று இளைஞர்களும் தோழிகள் மூவரையும் ‘டின்னருக்கு’ அழைக்கின்றனர். இரவுணவுக்கு முன்னர் அனைவரும் மதுவருந்துகின்றனர். இந்த சூழ்நிலையைப் பயன் படுத்திக் கொள்ள நினைக்கும் ரஜ்வீர் –அந்த மூன்று இளைஞர்களில் ஒருவன் – மூன்று தோழியர்களில் ஒருத்தியான மினாலிடம் பாலியல் ரீதியாக அத்துமீற முயல்கின்றான் . அவள் தன் சம்மதமின்மையைத் தெரிவித்த போதும் அவன் அவளை வன்முறை மூலம் அடையலாம் என எண்ணுகிறான். நிலைமையின் விபரீதத்தை உணரும் மினால் தன் கையில் கிடைத்த போத்தலொன்றால் அவனுடைய தலையில் ஓங்கி அடித்து விட்டு தன் தோழிகளுடன் அங்கிருந்து தப்பித்து தன் அபார்ட்மென்ட்டை அடைந்திருக்கிறாள்.
காயமடைந்த ரஜ்வீர் அந்தப் பகுதி எம்.எல்.ஏ. யின் மருமகன்; அவருடைய மகளைத் திருமணம் செய்தவன். காவல்நிலையத்துக்கு சென்று முறைப்பாடு கொடுத்து இந்த செய்தி வெளியுலகுக்குப் பரவுவதை அவன் விரும்பவில்லை. தலைக் காயத்தை விட ,தான் ஆண் என்ற இறுமாப்பு மனதுக்குக் கிடைத்த அடி அவனை வாட்டியெடுக்கிறது. மினாலையும்,தோழிகளையும் பழி தீர்க்க வேண்டுமெனத் துடித்துக் கொண்டிருக்கிறான். இதனால் தோழிகள் மூவரும் வெவ் வேறு அச்சுறுத்தல்களை சந்திக்கின்றனர்.
இவர்களின் அயல்வாசியான தீபக் என்ற முதியவர் இவர்கள் மூவரின் நடவடிக்கைகளையும் தொடர்ந்து அவதானித்து வருபவர். ‘இவர்களுக்கு ஏதோ பிரச்சினை ‘ என்ற உள்ளுணர்வின் உந்தலால் தீபக் அவர்களிடம் சென்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ளுகிறார் . அவர் ஓய்வு நிலையில் இருக்கும் மதிப்பு மிக்க வழக்கறிஞர் என்பதைத் தோழிகள் அறிந்து கொள்ளுகின்றனர் .தங்கள் பிரச்சினையைத் தீர்க்க அவருடைய உதவியை நாடுகின்றார்கள் . அவருடைய ஆலோசனையின் பிரகாரம் முறைப்பாடு செய்ய காவல் நிலையம் செல்கின்றனர் . உள்ளூர் காவல்நிலையம் இவர்கள் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றது. அவர்கள் முறைப்பாட்டைத் தட்டிக் கழிக்க வேண்டும் என்ற முன்தீர்மானத்துடன் காவல் நிலையம் இருப்பது போல் தோன்றுகின்றது. காரணம் , ரஜ்வீரின் மாமனார் அப் பிரதேசத்தில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கும் ஓர் அரசியல்வாதி .
மூவரில் ஒருத்தியான மினால் வழமை போல் அதிகாலையில் தன் ஓட்டப் பயிற்சியை மேற் கொண்டிருக்கும் போது வாகனமொன்றில் வரும் அந்த மூன்று இளைஞர்களாலும் கடத்தப் படுகிறாள் . ஓடிக் கொண்டிருக்கும் வாகனத்தில் வைத்து மிரட்டப் படுகிறாள். தங்கள் பலப் பிரயோகத்தின் மூலம் பல்வேறு முறைகளிலும் மினாலை அவர்கள் இம்சை செய்து இழிவு படுத்துகிறார்கள். காவல் நிலையத்தில் தங்களுக்கெதிராகப் புகார் அளிக்கும் முயற்சிகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையுடன் அவள் சற்று நேரத்தில் வாகனத்திலிருந்து இறக்கி விடப் படுகிறாள் .
இது நடந்து சில நாட்களுக்குள் காவல்துறையினர் மினாலின் அபார்ட்மென்டுக்குள் நுழைகின்றனர். மினால் ஒரு பாலியல் தொழிலாளி எனவும் பணம் கறக்கும் நோக்கத்துடன் தன்னை அணுகியதாகவும் ,தான் அதற்கு இணங்காததால் தன்னை அடித்துக் கொலை செய்ய முயற்சித்ததாகவும் ரஜ்வீர் அளித்த பொய்முறைப்பாட்டின் பேரில் இப்போது மினால் கைது செய்யப் படுகிறாள். வழமை போல் அரசியல் பலம் உண்மையின் குரல்வளையை நெரிக்க முயல்கிறது.
‘ இது வரை பொறுத்தது போதும் ‘ என்று சொல்லிய வாறு இப்போது தீபக் களத்தில் நேரடியாக இறங்குகிறார் . அவளைப் பிணையில் வெளியே எடுப்பதோடல்லாமல் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் உண்மைத் தன்மையை அம்பலப் படுத்துகிறார் .
**********************************************
இந்தப் படத்தின் நீதிமன்றக் காட்சிகளில் தீபக் முன் வைக்கும் வாதங்கள் மறக்க முடியாதவை .
நீண்ட இடைவெளிக்குப் பின் தளர்வான நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகும் தீபக்கின் குரல் நீதிபதிக்குப் புரியவில்லை . ‘‘சற்று சத்தமாக பேச முடியுமா ? ‘’ என நீதிபதி கேட்டுக் கொள்கிறார் . தொண்டையைச் செருமிக் கொண்டு தீபக் பேசத் தொடங்குகிறார் . அதன் பின் வரும் காட்சிகளும் , வாதங்களும் நம்மை இந்தத் திரைப்படத்துடன் ஒன்றிக்கச் செய்பவை. ‘தீபக்’காக நடிக்கும் அமிதாப் பச்சனின் திரையுலக வரலாறில் இந்தப் படத்துக்கும் முக்கியமான இடமிருக்கும். அவருடைய உடல் மொழி, குரலின் ஏற்ற இறக்கங்கள் உணர்வு ரீதியான அதிர்வுகளை ஒரு ரசிகனுக்குள் ஏற்படுத்தக் கூடியவை. தீபக் தன் வாதத்தில் முன் வைக்கும் விஷயங்கள் நம் முகத்தில் அறைபவை.
‘ இல்லை .. முடியாது ...வேண்டாம் ‘ என்று சொல்லுகின்ற பெண்களின் உரிமைக்குத் தீபக் தன் வாதத்தில் முக்கியத்துவம் அளிக்கிறார்.
‘ஒரு பெண் இரவில் வீட்டுக்குத் தாமதமாக வந்தால் அல்லது வீட்டிலிருந்து வெளியேறி வாழ்ந்தால் அல்லது சுதந்திரமாக இருக்க முயற்சித்தால் அல்லது மதுவருந்தினால் விமர்சிக்கப் படுகிறாள் .உரையாடல்களின் போது பெண்ணொருத்தி புன்னகைக்கக் கூடாது.கைத் தொலைபேசிகள் பெண்களுக்கு ஆகாதவை. அவர்களைப் படிப்பிக்கத் தேவையில்லை .முடிந்தளவுக்கு விரைவாக அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்து விட வேண்டும். ஆனால் ஆண்களோ இந்த அளவுகோல்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர்களாக இருக்கிறார்கள் ’ என தீபக் சாடுகின்றார் .
தீபக் இறுதியாகக் கூறுகின்றார் . ‘’ மினால் வேண்டாம் என்றாள். வேண்டாம் என்பது சும்மா ஒரு வார்த்தை அல்ல. அது முழுமையான ஒரு வாக்கியம். இதற்கு மேலதிக விளக்கம் எதுவும் தேவைப் படாது. வேண்டாம் என்றால் வேண்டாம்தான் ...’’


Friday, May 25, 2018

மட்டக்களப்பு வேடுவர் ஆய்வின் முன்னோடி செலிக்மன்





-என்.சரவணன்-
இலங்கையின் இனவரைவியல் பற்றிய ஆய்வுகளில் வேடுவர் பற்றி ஆய்வு செய்த செலிக்மன் தம்பதிகளின் ஆய்வு இன்று வரை மானுடவியலாளர்கள், இனவியலாளர்கள் போன்றோரால் போற்றப்பட்டு வருகிறது.
செலிக்மன் (Charles Gabriel Seligman) தனது ஆய்வை மேற்கொள்வதற்காக 16.12.1907 அன்று தனது துணைவியுடன் (Brenda Zara Salaman) இங்கிலாந்திலிருந்து இலங்கை வந்தடைந்தார். மொத்தம் மூன்று ஆண்டுகள் மட்டுமே அவர் தங்கியிருந்து நாடு முழுவதும் அலைந்து திரிந்து தனது ஆய்வை முடித்துக் கொண்டார். அவர் மேற்கொண்ட ஆய்வு 1911 ஆம் ஆண்டு “The Veddas” (வேடுவர்) என்கிற தலைப்பில் 623 பக்கங்களில் நூலாக வெளிவந்தது. அதை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம் லண்டனில் வெளியிட்டது. இந்த நூல் உலகளவில் பிரசித்தம் பெற்றது.
இந்த நூலுக்காக செலிக்மன் தம்பதிகள் பல மாதங்கள் வேடுவர்களுடனேயே வாழ்ந்திருக்கிறார்கள். காடுகளிலும், குகைகளிலும் அவர்கள் கண்டவை, கேட்டவை என்பவற்றை விஞ்ஞானபூர்வமான ஆய்வுக்குட்படுத்தினார்கள். வேடுவர்களின் இசையை பதிவு செய்திருக்கிறார்கள். செலிக்மன் எடுத்த புகைப்படங்களும், ஓவியங்களும், விளக்கப் படங்களும் அந்த நூலில் பல இடங்களில் காணக் கிடைக்கிறன.
செலிக்மனும் அவரது துணைவி பிரண்டா சாராவும் அந்தப் பெரு நூலின் ஆசிரியர்கள். 98 ஆண்டுகள் கழித்து 2009 இல் இந்த நூலை இலங்கையில் சிங்களத்திற்கு மொழிபெயர்த்து (மொழிபெயர்ப்பு: நிஸ்ஸங்க பெரேரா) கொடகே பதிப்பகம் வெளியிட்டது. அதே ஆண்டு சிங்களத்தில் “பாஸ்ட் பப்ளிஷன்” (மொழிபெயர்ப்பு: சந்திரசிறி ரணசிங்க) என்கிற நிறுவனமும் வெளியிட்டது. தமிழில் செலிக்மன் பற்றி எங்கு தேடினாலும் சிறு தகவல் கூட கிடைப்பதில்லை.
ஆனால், அவரது ஆய்வை சிங்கள பேரினவாதிகள் போற்றுவதில்லை. அதற்கான காரணமும் இலங்கை சிங்கள நாடு என்கிற ஐதீகத்தை உடைக்கும் பல சான்றுகளும் அவரது ஆய்வில் புதைந்து கிடக்கின்றன. உதாரணத்திற்கு புத்தர் இலங்கைக்கு வந்திறங்கியது யாழ்ப்பாணத்திலிருக்கும் நாகதீபத்தில் என்கிற வரலாற்றுப் புரட்டை இன்றைய ஆய்வாளர்கள் பலர் மறுக்கிறார்கள். சமீபத்தில் கூட பௌத்த மதத் தலைவர்களில் ஒருவரான வல்பொல கல்யாணதிஸ்ஸ மஹா தேரோ ஆற்றிய ஒரு உரையில் “மகாவம்சத்தில் குறிப்படப்படும் நாகதீபம் என்பது யாழ்ப்பாணத்தில் இருப்பதல்ல. அது மகியங்கனைக்கு அருகில் இருக்கிறது என்றும். சில அரசியல் வரலாற்றுக் காரணங்களினால் அந்த உண்மை மறைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போது அந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டியிருக்கிறது.” என்று கூறியிருந்தார்.
செலிக்மன் தனது நூலில் நாகதீப என்கிற இடத்தைத் தான் மதவாச்சி என்று அழைத்து வந்திருக்கிறார்கள் என்று ஹென்றி பார்க்கரை ஆதாரம் காட்டுகிறார். ஹென்றி பார்க்கர் (Henry Parker) கிட்டத்தட்ட செலிக்மன் காலத்திலேயே “சிங்கள பழங்குடிகளின் வாய்மொழி நாட்டுப்புற கதைகளை ஆய்வு செய்து 1910இல் “Village folk-tales of Ceylon” என்கிற நூலை எழுதியவர். செலிக்மன் ஹென்றியை அவரின் நூலில் 122 இடங்களில் ஆதாரம் காட்டுகிறார். அதுபோல ஹென்றி பார்க்கர் 1909 இல் வெளியிட்ட முக்கிய நூலான புராதன இலங்கை (Ancient Ceylon) என்கிற நூலில் செலிக்மனின் ஆய்வை பல இடங்களில் பிரஸ்தாபிக்கிறார்.
செலிக்மன் தனது ஆய்வின் விபரங்களை (வரைபடத்துடன்) 23.05.1908 அன்று “இலங்கை றோயல் ஆசிய கழகத்தின்” கூட்டத்தில் உரையாற்றியிருக்கிறார்.[i] கூட்டத்தின் போது நிகழ்ந்த கலந்துரையாடலும் அவரின் பரிந்துரைகளும் அக்கழகத்தின் சஞ்சிகையில் வெளிவந்திருக்கின்றன. அப்போது அந்தக் கழகத்தின் தலைவராக இருந்தவர் ஜோன் பெர்கியுசன். அவர் தான் செலிக்மனை தேசாபதியின் வேண்டுகோளின் பேரில் இலங்கைக்கு வரவழைத்தவர். இலங்கையின் தேசாதிபதி ஹென்றி மக்கலம் (Sir Heney McCallum) அந்த அவைக்குத் தலைமை தாங்கியிருக்கிறார். அக்கூட்டத்தை ஆரம்பித்து அவர் உரையாற்றும் போது “இலங்கையில் வேடுவர் இனம் மிகவும் வேகமாக அழிந்துவந்திருக்கிறது. இதப் பற்றிய விரிவான ஒரு சமூக ஆய்வொன்றின் அவசியம் கருதி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹட்டன் (Haddon) அவர்களைக் கொட்டுக்கொண்டேன் அவர் இந்த விடயத்துக்கு பொருத்தமானவராக பேராசிரியர் செலிக்மனை எமக்கு பரிந்துரைத்தார்” என்றார். அப்போது அந்தக் கூட்டத்தின் இறுதியில் அக்கழகத்தின் உபதலைவராக இருந்த சேர் பொன் அருணாச்சலம் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்து ஆமோதித்தார்.[ii]
செலிக்மன் தனது ஆய்வை முடித்து விட்டுத் திரும்பியதன் பின்னர் பல உலக நாடுகளில் இலங்கையின் வேடுவர் குறித்தும் அவர்களின் எதிர்காலம் குறித்தும் விரிவுரைகளை நிகழ்த்தியிருப்பதை அறிய முடிகிறது. [iii]
பின்வந்த ஆய்வாளர்கள் பலருக்கும் கைகொடுத்த நூல் அது. இனவரைவியல் மாத்திரமல்ல, தொல்லியல், சாதியம் பற்றிய ஆய்வுகளுக்கு கூட அவரது இந்த நூலை கையாண்டிருப்பதை பல இடங்களிலும் காண முடிகிறது.
இந்த ஆய்வைத் தூண்டிய காரணிகள் பற்றி அவரது முன்னுரையில் காணக் கிடைக்கிறது.
வேடர்களுக்கும் தமிழ் சிங்கள மக்களுக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது பற்றிய ஆழமான ஆய்வு விபரங்களை அவர் முன்வைத்தார். அவரது நூலைப் பார்த்தால் அவருக்கு இது தொடர்பில் உசாத்துணையாக பயன்படுத்துமளவுக்கு அவருக்கு முந்திய நூல்கள கிடைக்கவில்லை என்பதை அறிய முடியும். ஆனால் அவருக்கு பின்வந்தோர் பலர் செலிக்மனின் ஆய்வைக் கொண்டாடுவதைக் காண முடியும்.
அவர் ஆய்வு செய்தது ஒட்டுமொத்த இலங்கையின் ஆதிவாசிகளை பற்றித்தான் என்றாலும் ஒரு தனியான அத்தியாயம் (12வது) கிழக்கிலங்கை கடல் வேடுவர் பற்றியது. இலங்கையின் கராவ (சிங்கள சமூகத்தில்), கரையார் (தமிழ் சமூகத்தில்) ஆகிய சாதிகளை ஆராய்ந்தவர்களும் இந்த ஆய்வை உன்னிப்பாக கையாண்டுள்ளனர்.
இலங்கையின் பழங்குடிகளை ஆராய்பவர்கள் நூற்றாண்டுக்கு முன்னரேயே அது பற்றிய குறிப்புகளை எழுதிய Robert knox,John Davy, D.Pridham, Sir Emerson Tennent, B.F.Hartshorne, John Bailey, C.S.V.Stevens போன்றோரின் குறிப்புகளையும் கையாள்வார்கள். இலங்கையின் பழங்குடிகள் பற்றி இவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் பற்றிய விபரங்களைப் பற்றி 1899 இலேயே பேராசிரியர் W.M.TURNER, எழுதிய“Contributions to the Craniology of the people of the Empire of India” என்கிற நூலில் நிறையவே எழுதியிருக்கிறார். செலிக்மன் போல அதை ஒரு ஆழமான, விஞ்ஞானபூர்வமான விடயதானமாக எடுத்து கள ஆய்வுகள் செய்து பன்முக கோணத்தில் விரிவான விஞ்ஞானபூர்வமான ஆய்வாக முன்வைத்தது இல்லை.
அவர் மட்டக்களப்பு வேடுவர் குறித்து குறிப்பாக கடல் வேடுவர் குறித்து எழுதியவற்றை அடுத்த வாரம் பார்ப்போம்.

Wednesday, May 23, 2018

How to Calculate a Plane Concrete Quantity




The formula for calculation of materials for required volume of concrete is given by:
quantities-of-mateirals-for-concrete-formula
Where, V.c Absolute volume of fully compacted fresh concrete
W =Mass of water
C = Mass of cement
Fa = Mass of fine aggregates
Ca = Mass of coarse aggregates
Sc, Sfa and Sca are the specific gravities of cement, fine aggregates and coarse aggregates respectively.
The air content has been ignored in this calculation.
This method of calculation for quantities of materials for concrete takes into account the mix proportions from design mix or nominal mixes for structural strength and durability requirement.
Now we will learn the material calculation by an example.

Calculating Quantities of Materials for per cubic meter or cubic feet or cubic yards concrete

Consider concrete with mix proportion of 1:1.5:3 where, 1 is part of cement, 1.5 is part of fine aggregates and 3 is part of coarse aggregates of maximum size of 20mm. The water cement ratio required for mixing of concrete is taken as 0.45.
Assuming bulk densities of materials per cubic meter, cubic feet and cubic yards as follows:
Cement = 1500 kg/m= 93.642 lb/ft3 = 3.4682 lb/cubic yards
Sand = 1700 kg/m= 105 lb/ft3 = 3.89 lb/cubic yards
Coarse aggregates = 1650 kg/m= 105 lb/ft3 = 3.89 lb/cubic yards
Specific gravities of concrete materials are as follows:
Cement = 3.15
Sand = 2.6
Coarse aggregates = 2.6.
The percentage of entrained air assumed is 2%.
The mix proportion of 1:1.5:3 by dry volume of materials can be expressed in terms of masses as:
Cement = 1 x 1500 = 1500
Sand = 1.5 x 1700 = 2550
Coarse aggregate = 3 x 1650 = 4950.
Therefore, the ratio of masses of these materials w.r.t. cement will as follows =
Ratio of masses of cement, sand and coarse aggregates
= 1 : 1.7 : 3.3
The water cement ratio = 0.45
Now we will calculate the volume of concrete that can be produced with one bag of cement (i.e. 50 kg cement) for the mass proportions of concrete materials.
Thus, the absolute volume of concrete for 50 kg of cement =
Volume of concrete for 1 bag of cement
Thus, for the proportion of mix considered, with one bag of cement of 50 kg, 0.1345 m3 of concrete can be produced.
We have considered an entrained air of 2%. Thus the actual volume of concrete for 1 cubic meter of compacted concrete construction will be = 1 -0.02 = 0.98 m3.
Thus, the quantity of cement required for 1 cubic meter of concrete = 0.98/0.1345 = 7.29 bags of cement.
The quantities of materials for 1 m3 of concrete production can be calculated as follows:
The weight of cement required = 7.29 x 50 = 364.5 kg.
Weight of fine aggregate (sand) = 1.5 x 364.5 = 546.75 kg.
Weight of coarse aggregate = 3 x 364.5 = 1093.5 kg.