Search This Blog

Thursday, December 17, 2015

Yesterday's "JUNK DNA" provides Today's Miracle Cures:


A study released today shows that blocking a type of RNA produced by what used to be called "junk DNA" can prevent a significant portion of the neural destruction that follows a stroke.
The research points toward a future treatment for post-stroke damage, which is often more extensive than the initial destruction that results when blood to the brain is temporarily shut off.
The research also links two mysteries: Why does the majority of damage follow the restoration of blood supply?
And what is the role of the vast majority of the human genome, which was once considered junk because it does not pattern for the RNA that makes proteins?
The emerging evidence suggests that there may be more genes encoding regulatory RNAs than encoding proteins in the human genome, and that the amount and type of gene regulation in complex organisms has been substantially misunderstood for most of the past 50 years.
The application of genome tiling array technology and deep sequencing to the characterization of the transcriptome showed that there are tens of thousands of loci in mammals that express large transcripts that do not encode proteins, located intergenic, intronic and antisense to protein-coding genes.
The vast majority (at least 80%) of the human and mouse genomes are differentially transcribed in one context or another, with other studies reporting similar findings in all organisms examined. Indeed, it seems most intergenic (and by definition intronic) sequences are differentially transcribed, and therefore that the extent of the transcriptome expands with developmental complexity163.
"Less than 2 percent of the RNAs formed from the genome code for proteins, leaving 98 percent that we call 'noncoding RNA,'" says senior author Raghu Vemuganti, a professor of neurological surgery at the University of Wisconsin-Madison.
Moreover, those loci expressing lncRNAs show all of the hallmarks of bona fide genes4, including conservation of promoters indicative chromatin structure and regulation by conventional morphogens and transcription factors LncRNAs have been found to have a similar range of cellular half-lives as mRNAs and to be differentially expressed in a tissue-specific manner with higher resolution in the brain19
It has also become evident that many if not most protein-coding transcripts are targets for miRNA regulation that miRNAs can, in some cases, regulate large numbers of target mRNA , and reciprocally that many mRNAs contain target sites for many miRNAs although the implied regulatory logic of this complex multiplex arrangement has not been explained. The targets of miRNAs are usually thought to be mRNAs, but may also include other RNAs
In the study just published in the Journal of Neuroscience, Vemuganti and colleagues blocked one variety of long noncoding RNA (lncRNA), which exists in at least 40,000 unique varieties—possibly as many as 100,000.
"This lncRNA can bind to other RNA, to a protein, or to a protein on one side and DNA on the other," says first author Suresh Mehta "Among many other jobs, lncRNAs can regulate gene activity.

'Tiny Computers' Embedded In Human Skin

"We like to think that all our smarts are contained in our brain, but researchers at Umea University in Sweden have found that the neurons that extend into our fingertips perform the same sorts of calculations that take place in the cerebral cortex.
In other words, what we’ve been told about our entire nervous system acting as a sort of network of data-collecting sensors that send that data back to the brain to be processed might not be quite right.
In the abstract for a study published online August 31 by the journal Nature Neuroscience, J Andrew Pruszynski & Roland S Johansson write: “We submit that peripheral neurons in the touch-processing pathway, as with peripheral neurons in the visual-processing pathway, perform feature extraction computations that are typically attributed to neurons in the cerebral cortex.” "

President Lincoln. REAL photography taken in 1862, that was later colored.


Amazing!


Wednesday, December 16, 2015

இறப்பு (அப்துல் கையூம்)


நான் மரணிக்கிறேன்….
கைகளை அசைக்க எத்தனிக்கிறேன்
கால்களை நகர்த்த முயற்சிக்கிறேன்
இத்தனைக் காலம் …
என்னோடு பழகிய உறுப்புக்கள்
என் பேச்சையே செவிமடுக்க
ஏன் மறுக்கின்றன..?
வாய்கிழிய பேசும் எனக்கு
வார்த்தைகளே வெளிவர மாட்டேன்கிறதே?
யாரங்கே..?
காரிருளை என் கண்களுக்குள்
களமிறக்குவது யார்?
திறந்துமூடும் என் இமைகளை
திணறடிப்பது யார் வேலை?
நாடித் துடிப்புகளை
நாசுக்காய் குறைப்பது யார்?
பழகிப்போன மூச்சுகூட
பழுதாகிப் போகின்றதே!
உள்ளங்காலில் தொடங்கும் கடுப்பு
ஒவ்வொரு அங்குலமாய்
உச்சந்தலைவரை ஏறுகிறதே..!
நினைவுவந்த நாள் முதலாய்
எனக்கும் என் உடம்புக்குமிருந்த
இறுக்கமான அன்னியோன்யத்தை
யார் பிரித்துப் பார்ப்பது ?
எதோ ஒரு இழுபறி
எனக்குள் நடப்பது
எனக்கே புரிகின்றது!
போதும் போதும்…
யாராவது நிறுத்துங்களேன்!!
இப்படியொரு வேதனையை
இதுவரையில் நான்
எதிர்கொண்டதே இல்லையே..?
வீறாப்பாய் விறைத்தும் முறைத்தும்
வெட்டி கெளரவம் பார்த்த என்தேகம்
விரைவாய் விறைக்கின்றதே?
மணக்க மணக்க
திரவியம்பூசும் என்மேனி
கனத்துப்போய் நாறுமோ இனி?
“மரணத்தை தழுவினான்”
என்று எழுதுகிறார்களே!
தழுவுவது சுகமல்லவா? – இது
தண்டனை போலல்லவா இருக்கிறது.?
ஊசி முனை ஓட்டையில்
ஒட்டகத்தை இழுப்பது
இலகுவான காரியமா என்ன..??
அப்துல் கையூம்

Tuesday, December 15, 2015

New Cardio treatment method of angiography which directly removes block. Only at the cost of Rs.5000 at J. J. HOSPITAL. MUMBAI. ... Please help someone.. Who waiting for it. very effective 4 in 1



New method of angiography which directly removes block. Only at the cost of Rs.5000 at
J. J. HOSPITAL. MUMBAI. ... Please help someone.. Who waiting for it.

போஸ்ட் மார்ட்டத்தின் சரித்திரம்


போஸ்ட்மார்ட்டம் என்பது இறந்தவர் உடலை அறுவை செய்து ஆராய்ந்து, மரணத்துக்கான காரணத்தைத் தீர்மானிப்பது. ஆட்டோப்ஸி, நெக்ரோப்ஸி, அப்டக்ஷன் என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதைச் செய்யும் மருத்துவர் Pathologist. Forensic Autopsy என்பது சந்தேகத்துக்குரிய முறையில் மரணமுற்றவரை ஆராய்ந்து, அது நிகழ்ந்திருக்கும் விதத்தைச்சொல்வது. Clinical Autopsy என்பது நோய்வாய்ப்பட்டு இறந்தவரை ஆராய்ந்து மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது. போஸ்ட்மார்ட்டம் செய்ய இறந்தவரின் நெருங்கிய உறவினரிடம் எழுத்துபூர்வ ஒப்புதல் பெறுவர். முடிந்த பின் உடலைத் தைத்து திருப்பித் தருவார்கள்.
முதலில் போஸ்ட்மார்ட்டம் செய்தவர்கள் கற்கால வேட்டைக்காரர்கள், இறைச்சி வெட்டுபவர்கள், சமையல்காரர்கள்தாம். இவர்கள் மிருக உடல்களில் எந்த உறுப்புகள் உண்பதற்கு ஏற்றவை எனக் கண்டறிய போஸ்ட்மார்ட்டம் செய்தனர்.
பண்டைய பாபிலோனில் (கி.மு. 3,500) விலங்குகளின் உடல்கள் அறுக்கப்பட்டன, ஒரு விசித்திரக் காரணத்துக்காக. அவற்றின் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் புனித ஆவிகளின் செய்திகள் எழுதப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் எதிர்காலத்தை அறிய முடியும் எனவும் அவர்கள் நம்பினர்.
கி.மு 4ம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் நரம்புகளையும், தசைநார்களையும், ரத்தக்குழாய்களையும் படங்களாக வரைந்தார். கி.மு 300ல் கிரேக்க மருத்துவர்களான ஹெரோஃபிலஸ், எராசிஸ்ட்ரடஸ் இருவரும், இறந்த உடல்களை அறுத்துப் பார்த்து உறுப்புகளையும் நரம்புகளையும் படம் போட்டனர்.
2ம் நூற்றாண்டில் ஹிப்போக்ரேடஸின் சீடரான கிரேக்க மருத்துவர் காலென், உடல்களை அறுத்து நோய்க்கூறுகளை ஆராய்ந்தார். அப்போது மனித உடலை அறுப்பது தடை செய்யப்பட்டிருந்ததால், அவர் பெரும்பாலும் மிருகங்களையே ஆராயப் பயன்படுத்தினார். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மரணித்த க்ளேடியேட்டர்களின் உடல்களைப் பெற்றும் ஆராய்ச்சி செய்தார். பிரமாண்ட ஜனத்திரள் முன் இதை ஒரு கலை நிகழ்ச்சி போல் செய்தார் காலென். ஒரு பன்றியின் தண்டுவட இயக்கத்தை விளக்க, அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டுவார். முதலில் அதன் கால்கள் செயலிழக்கும், பின்னர் மேல்பகுதியின் முன்பக்கம், கடைசியாய் உயிர் மொத்தமும் துடித்தடங்கும்.
காலென் மனித உடல் குறித்து 434 பாகங்கள் கொண்ட ஒரு பிரமாண்ட நூலை எழுதினார். அடுத்த 1300 ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் அதுவே உடற்கூறியலின் பைபிளாக இருந்தது.
என்னதான் முன்னோடியாக இருந்தாலும், அவரது கண்டுபிடிப்புகளில் நிறைய குறைகளும் பிழைகளும் இருந்தன. உதாரணமாக, உடலில் ஆன்மா எங்கே இருக்கிறதெனக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தார்!
பண்டைய எகிப்தியர்கள் சடலங்களிலிருந்து சில உறுப்புகளை மட்டும் எடுத்துப் பாதுகாத்தனர். பண்டைய கிரேக்கர்களும் இந்தியர்களும் பிணங்களை ஏதும் செய்யாமல் அப்படியே எரியூட்டினர். பண்டைய ரோமானியர்கள், சீனர்களுக்கு பிணத்தை அறுக்க மதத் தடை இருந்தது.
13ம் நூற்றாண்டில் இரண்டாம் ஃப்ரெட்ரிக், ‘மரண தண்டனை பெற்ற இரு கிரிமினல்களின் உடல்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டும்’ என சட்டம் பிறப்பித்தார். அதில் நடக்கும் பிரேதப் பரிசோதனையை அனைத்து மருத்துவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 1302ல் பொளங்கா பல்கலைக்கழகத்தில் மாஜிஸ்ட்ரேட் உத்தரவுப்படி முதல்முறை ஃபாரன்ஸிக் போஸ்ட்மார்ட்டம் நடத்தப்பட்டது. 1315ல் மான்டினோ டி லியூஸ்ஸி முதல்முறையாக மக்கள் முன்னிலையில் போஸ்ட்மார்ட்டம் நிகழ்த்தினார். 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல இடங்களில் பிணமறுப்பது குற்றமெனக் கருதப்பட்டதால் மருத்துவ மாணவர்கள் பிணங்களைத் திருடினர். சிலர் மாட்டிக் கொண்டனர்! 15ம் நூற்றாண்டின் இறுதியில் போப் ஏழாம் சிக்ஸ்டஸ், மருத்துவ மாணவர்கள் உடல்களை அறுப்பதை அங்கீகரித்து உத்தரவிட்டார்.
16ம் நூற்றாண்டில் பெல்ஜிய மருத்துவர் ஆன்ட்ரியாஸ் வெசாலியஸ் பிரேதத்தை அடுக்கடுக்காக உரித்து மனித உடலமைப்பை ஆவணப்படுத்தினார். காலெனின் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக புறப்பட்ட முதல் குரல் இது. இதனால் இவர் பலத்த எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்தது. இவர் தனது பிரேத பரிசோதனைக்கண்டுபிடிப்புகளை வரைந்து தொகுத்து De Fabrica Corpora Humani என்ற நூலாக்கினார். காலெனைப் போல் இவரும் பொதுமக்களுக்கு போஸ்ட்மார்ட்டம்களை ஒரு கண்காட்சியாக நிகழ்த்தினார். இறந்த உடலுக்குள் கைகளைச் செலுத்தி, இதயத்தை வெளியே எடுத்துக் காட்டி ஆச்சரியப்படுத்தினார்.
1533ல் ஹிஸ்பேனொலா கத்தோலிக்க தேவாலயம், ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் (மாற்றான்!) ஜோவனா, மெல்ஷியோரா இருவருக்கும் ஒரே பொது ஆன்மா இருந்ததா என போஸ்ட்மார்ட்டம் செய்து கண்டுபிடிக்க ஆணையிட்டது. அறுத்துப் பார்த்ததில் இரண்டு தனித்தனி இதயங்கள் இருக்கவே, இரு ஆன்மாக்கள் இருந்ததாக முடிவு கட்டினர். (கிரேக்க தத்துவஞானி எம்பெடாக்கிள்ஸ் கருத்துப்படி, ஆன்மா இதயத்தில்தான் குடி கொண்டுள்ளது).
லியனார்டோ டாவின்சி 30 உடல்களை அறுத்துப் பரிசோதித்து அதனடிப்படையில் அசாதாரண உடற்கூறியல் குறித்து எழுதினார். ஓவியர் மைக்கேலேஞ்சலோவும் பல பிரேதப் பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
16ம் நூற்றாண்டு வரை இங்கிலாந்தில் ஆட்டோப்ஸி தடை செய்யப்பட்டிருந்தது. பின், சில குறிப்பிட்ட மருத்துவக் குழுக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களும் ஆண்டுக்கு 10 பிணங்கள் என்ற ரேஷன் முறையில்தான் அறுக்க வேண்டும். பின்பு, தொடர் கோரிக்கைகளால் 1752ம் ஆண்டில், ‘மரண தண்டனை பெற்றவர் உடல்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாம்’ என அனுமதி தரப்பட்டது.
19ம் நூற்றாண்டில் மருத்துவக் கல்லூரிகளின் அதீதப் பெருக்கத்தின் காரணமாக, ஆராய்ச்சிப் பிணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கள்ள மார்க்கெட்டில் பிணங்கள், உடல் உறுப்புகளை வாங்கி மாணவர்கள் படித்தனர். பிணத்திருட்டுகள் பெருகின. இதன் உச்சமாக 1827, 1828ல் பிரசித்தி பெற்ற புர்க் மற்றும் ஹார் கொலைகள் நிகழ்ந்தன. அதாவது, 17 பேரைக் கொன்று உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு விற்றது அம்பலமானது. 1832ல் உடற்கூறியல் சட்டம் பிறப்பிக்கப்பட்டு மருத்துவக்கல்வி பிரேதசப்ளையை முறைப்படுத்தியது.
19ம் நூற்றாண்டில் வியன்னாவின் அல்ஜெமெயின் க்ரான்கென்ஹாஸ் மேற்கத்திய உலகின் சிறந்த மருத்துவக்கூடமாகக் கருதப்பட்டது. கார்ல் ரோகிட்டன்ஸ்கியின் தலைமையில் இயங்கிய அதன் பேத்தாலஜி மையம் அதற்கு முக்கியக் காரணம். கிட்டத்தட்ட வியன்னாவில் இறந்த அத்தனை பேரின் உடலும் அங்கு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ரோகிட்டன்ஸ்கி தன் 45 வருட கால அனுபவத்தில் 30,000 ஆட்டோப்ஸிகள் செய்தார். பரிசோதனைகளில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தவில்லை என்பதால் அவரது சில முடிவுகள் பிழைபட்டதாய் இருந்தன.
அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் ருடால்ப் விர்ச்சௌ என்ற ஜெர்மானிய பேத்தாலஜிஸ்ட் தன் பிரேதப்பரிசோதனையில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தினார். நோய்த்தொற்று செல்களை ஆராயும் செல்லுலர் பேத்தாலஜியே இவர் ஆய்வின் அடிப்படை. இதனால் மருத்துவத் துறையில் மெல்ல மெல்ல வியன்னாவைப் பின்னுக்குத் தள்ளி பெர்லின் முன்னுக்கு வந்தது.
அக்காலத்தில் பெர்லினில் படித்த மாணவர்கள், பிற்பாடு வட அமெரிக்கா முழுக்க கைதேர்ந்த மருத்துவர்களாகப் பரவினர். அவர்களில் அமெரிக்கா, கனடாவில் பணியாற்றிய சர் வில்லியம் ஓஸ்லர் குறிப்பிடத் தகுந்தவர். ரோகிட்டன்ஸ்கி, விர்ச்சௌ இருவரிடமும் பயின்ற இவர் பிரேதப் பரிசோதனை அடிப்படையில் மருத்துவம் செய்தார். அந்திமக் காலத்தில், தனக்கு போஸ்ட்மார்ட்டம் செய்ய தனிக்குறிப்புகளும், அதன் முடிவு குறித்த அனுமானங்களையும் எழுதி வைத்தார். இறந்த பின் அவர் பிரேதத்தைப் பரிசோதித்தபோது அது சரியாக இருந்தது!
20ம் நூற்றாண்டு பிரேதப்பரிசோதனைகளில் பல முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுவந்தது. 1987ல் விஷத்தை ஆராயும் டாக்ஸிக்காலஜி முறை மூலம் ஓஹியோவில் நடத்தப்பட்ட ஒரு பிரேதப்பரிசோதனையில் முதல்முறையாக சயனைடு மூலம் மரணம் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2005 முதல் 2007 வரை இத்தாலியில் 5300 வருடத்திற்கு முந்தைய டூட் அரசன், ஓயெட்ஸி இருவரது சடலங்களையும் சிடி ஸ்கேன் செய்து பிரேதப்பரிசோதனை செய்ததில், ‘அவர்கள் கொலை செய்யப்படவில்லை, நோய் வந்த கால்களின் காரணமாகவே மரணம் நிகழ்ந்திருக்கிறது’ என்று தெரியவந்தது. சரித்திரம் திருத்தி எழுதப்பட்டது.
21ம் நூற்றாண்டில் கணிப்பொறி மூலம் கிராஃபிக் பிம்பங்களாக மனித உடல் உறுப்புகள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. 2000ல் துவங்கப்பட்ட இங்கிலாந்தின் பெனின்சுலா மருத்துவக் கல்லூரி முதல்முறையாக பிரேதங்கள் பயன்படுத்தாமல் இம்முறையில் மாணவர்களுக்கு உடற்கூறியலைக் கற்பித்தது.
2010ல் ஜெய்ப்பூரில் மானஸ் தியோ என்பவர் கார் விபத்துக்குள்ளாகி, சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாக மருத்துவசான்றளிக்கப்பட்டு, பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட அங்கு ஆட்டோப்ஸி டேபிளில் எழுந்து உட்கார்ந்து விட்டார். 2007ல் வெனிசுலாவில் இதே போல் ஆட்டோப்ஸியில் உடம்பில் கத்தி வைத்துக் கீறிய வலியில், பிணமாகக் கருதப்பட்டவர் எழுந்து அதிர்ச்சியூட்டினார். கொலையில், தற்கொலையில், விபத்தில், நோயில், சடலச்சோதனை சாஸ்வதமாகும்.
.
Stats சவீதா
# கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவில் போஸ்ட்மார்ட்டம் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது
# அமெரிக்காவில் 60% தற்கொலைகள் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படுகின்றன.
# 15 முதல் 24 வயதுக்காரர்களின் மரணங்களே அதிகம் ஆட்டோப்ஸி செய்யப்படுகின்றன.
# 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரணங்களில் 0.8% மட்டுமே ஆட்டோப்ஸி நடக்கிறது.
.
நன்றி - குங்குமம்
.
குறிப்பு:
.
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.
சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.
உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.
.
ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?
இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
.
சரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் பொழுது கண்டிப்பாக அனைத்து வியாதிகளியிலிருந்தும் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொண்டு ஆரோக்யமாக வாழ முடியும்.
.
(http://reghahealthcare.blogspot.in/…/08/to-live-healthy.html)
.

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி




[புகைபடம் அளித்த தோழமைக்கு மிக்க நன்றி ] God bless you
என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.
ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.
அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.
என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.
பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.
பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.
திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.
விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.
அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.
செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.
கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.
அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.
செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.
ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள். கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.
தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vi
use/ghlist.php
மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx
பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY
PHONE: 0413-2233659
EMAIL: auroeyesight@yahoo.com
.
அருமையான தகவல் மேல் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள
வாழ்கவளமுடன் & நலமுடன்
[படித்ததை பகிர்ந்தது]

3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு Chand Baori – One of the Deepest, Oldest and Largest Step Well in the World

Chand Baori is famous step well situated in the village of Abhaneri near Jaipur in the Indian state of Rajisthan. It is one of the oldest, deepest and largest step well in India. Chand Baori is also considered to be among the oldest, deepest and biggest step wells in the world.Chand Baori is one of the most remarkable landmarks in India. It was built between the 8th and 9th century by King Chanda of the Nikumbha Dynasty. Located opposite to Harshat Mata Temple, the well was dedicated to Hashat Mata, Goddess of Joy and Happiness upon completion.Chand Baori is an incredible square structure. There are 3,500 narrow steps in 13 stories lined along the wall on three sides of the well that extend 100 feet into the ground. The steps are arranged in perfect symmetry and descends to the bottom of the well to a puddle of water.
3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபனேரியில் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையானது.
இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.
இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.
இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).


இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.
இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.
ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.
அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார்,,,ராஜா!!!

2016 இன் இராசிபலன்கள். யாருக்கு நன்மை…??? - 2016 Horoscopes



01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது.
சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய நாட்டவரின் அதட்டல் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள் பெருகும். விவசாயம் செழித்தோங்கும்.
இப்படி மகிழ்ச்சியான புத்தாண்டாக இருப்பினும், லக்கின இராகு நோய் நொடிகளை கொடுக்கும். ஆனாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் தக்க நடவடிக்கையால் அமுங்கி விடும். ஸ்ரீதுர்காதேவி அனுகிரகத்தால் குருவும், சந்திரனும் அனுகூலமான சேர்க்கையால் யோகத்தை தரும். எப்படிபட்ட பிரச்னையாக இருந்தாலும் தாக்காது. ஸ்ரீதுர்காதேவியை வணங்குவோம், ஆனந்தம் அடைவோம். நல்வாழ்த்துக்கள்!
மேஷ இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு பஞ்சஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், எதிர்பாரா யோகம் வந்தடையும். தடைபட்ட காரியங்கள் கைக்கு வந்து சேரும். 5-க்குரிய சூரியன்,9-ஆம் இடத்தில் உள்ளார். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. 12-ஆம் இடத்தில் உள்ள கேது, தெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியத்தை தருவார். 6-இல் இராகு இருப்பதால், கடன் பிரச்னை சற்று குறையும். 10-ஆம் இடத்தில் உள்ள புதன், தடைபட்ட கல்வியை தொடரச் செய்யும். புதிய தொழில் துவங்குவீர்கள். தளர்ந்த தொழில் புத்துயிர் பெறும். அஷ்டம சனியாக இருப்பதால், ஜாமீன் கையெழுத்து, கூட்டாளி விஷயங்களில் கவனம் தேவை. ஸ்ரீதுர்கா தேவி அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை பொங்கும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : ஸ்ரீதுர்கை அம்மனுக்கு, செவ்வாய் கிழமையில் எழுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அத்துடன், மாதத்தில் ஒரு செவ்வாய்கிழமை இராகுகாலத்தில் ஸ்ரீதுர்கைக்கு எழுமிச்சை மாலை அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்த காற்று வீசும்.
ரிஷப இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேகமாக கட்டி முடிக்கப்படும். வாகனம் விருத்தி உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். 6-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடி நீங்கும். விரோதியும் அடி பணிவான். அஷ்டமஸ்தானத்தில் சூரியன் உள்ளதால், குடும்பத்தில் சற்று சிறு,சிறு பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு வராது. பஞ்சமஸ்தானத்தில் இராகு அமையப்பெற்றுள்ளார். பூர்வீக சொத்தால் லாபம் வரும். சப்தமத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால், கூட்டு தொழில் லாபம் பெறும். 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு முருகன் அருளால் முன்னேற்றமான வாழ்க்கையாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். ஒரு முறையாவது திருத்தணிக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்கிழமையில் முருகனுக்கும், செவ்வாய் பகவானுக்கும் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். முருகப்பெருமானின் ஆசியால் தடை கற்கள் படிகல்லாக மாறி உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும்.
மிதுன இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 3-ஆம் இடமான வெற்றி, புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் குரு, சந்திரன் அமர்ந்து, கெஜகேசரியோகத்தை தந்துள்ளனர். இந்த கெஜகேசரி யோகமானது உங்களுக்கு புகழ், கீர்த்தி ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், மற்றவர்கள் பெருமைபட வாழ்வீர்கள். சகோதரவர்கத்தால் நன்மை கிடைக்கும். இருப்பினும், சுகஸ்தானத்தில் இராகு இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. 6-ஆம் இடத்தில் சனி, சுக்கிரன் இணைந்து இருக்கின்ற காரணத்தால், எடுத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அஷ்டமஸ்தானத்தில் புதன் உள்ளதால், அயல் நாட்டு தொழில் தொடர்பு வர வாய்ப்புண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரலாம். 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால், செய்யும் தொழிலில் நிதானம் தேவை. அகலகால் வைக்கக் கூடாது. விநாயகப் பெருமானை வணங்குங்கள், அனைத்தும் நன்மையாக வந்தடையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவியுங்கள். வியாழக்கிழமையில் விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். எடுக்கும் காரியம் தேங்காமல் கணபதியில் அருளால் சட்டேன்று நிறைவேறும். சூரத்தேங்காயும் உடைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
கடக இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் சுபிட்சமான செலவுகள் ஏற்படும். கடன் சுமை தீரும். புதிய தொழில் உருவாகும். எதிர்பார்த்த நற்காரியங்கள் நிறைவடையும். சுகஸ்தானஸ்தில் செவ்வாய் உள்ளார். வாகன விஷயங்களில் செலவுகள் வரலாம். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. பஞ்சமஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமையப்பெற்றுள்ளதால், கவலையே வேண்டாம். வழக்கு பிரச்னை அனைத்தும் பஞ்சு போல் பறந்து விடும். பணம் தாராளமாக வந்தடையும். பாக்கிய ஸ்தானத்தில் ஞானகாரகனான கேது அமையப்பெற்றுள்ளார். குலதெய்வம் அருளால் நன்மைகள் தேடி வரும். 6-ஆம் இடத்தில் குடும்பாதிபதியான சூரியன் இருப்பதால், யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்கும் வேலை வேண்டாம். மற்றபடி இந்த 2016-ஆம் ஆண்டில் உங்கள் குலதெய்வத்தின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : உங்கள் குலதெய்வத்திற்கு பால் அபிஷேகம், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், குங்கும அர்ச்சனையும் செய்து, வஸ்திரம் அணிவியுங்கள். முடிந்தால் பொங்கல் வைத்து வழிபடுங்கள். குலதெய்வத்தின் அருளால் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
சிம்ம இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் ஜென்ம இராசியில் சந்திரனுடன், குருவும் இணைந்து, கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், புதிய உத்வேகம் எழும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். தடைப்பட்டு வந்த திருமணம், தடை இல்லாமல் நடக்கும். தனஸ்தானத்தில் இராகு இருக்கின்ற காரணத்தால், குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். மற்றவர்கள் பாராட்டும் படி சாதனை படைப்பீர்கள். சுகஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இணைந்திருப்பதன் காரணத்தால், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 6-ஆம் இடத்தில் புதன் உள்ளார். கடன் பிரச்னை சற்று இருக்கலாம். தேவை இல்லாமல் விரோதம் வளர்க்க வேண்டாம். பரபரப்பு அவசரம் கூடாது. காரணம், இந்த தன்மைகளை புதன் உருவாக்குவார். ஆகவே கவனம் தேவை.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வணங்குங்கள். சனிக்கிழமையில் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கல்கண்டு படைத்து வணங்கி, அந்த பிரசாதத்தை சாப்பிடுங்கள். முடிந்தளவில் தயிர் சாதத்தையும் படையுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உருவாகும்.
கன்னி இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில்,குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்தனர். முக்கியமாக வெளிநாட்டில் தொழில் தொடர்புகளும், வேலை வாய்ப்பும் தரும் யோகம் இது. ஜென்மத்தில் இராகு உள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள். குடும்பஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், இதுநாள் வரையில் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். கீர்த்தி ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் உள்ளனர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுகஸ்தானத்தில் சூரியன் அமைந்ததால், கல்வியில் தடை ஏற்படுத்தச் செய்வார். இறைவன் அருளால், குரு பார்வை இருப்பதால் எப்படியும் கல்வியை தொடர்வீர்கள். பஞ்சமஸ்தானத்தில் புதன் இருக்கின்ற காரணத்தால், பூர்வீக சொத்தில் சிறு வாக்கு வாதம் உருவாகி பிறகு சுமுகமாகும். சப்தமஸ்தானத்தில் கேது அமைந்ததால், கூட்டு தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்காக கடன் ஏற்படும். சிவபெருமான் அருளால் சிறப்பான ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : திங்கட் கிழமையில் ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்று வில்வ இலையை சிவலிங்கத்திற்கு அணிவியுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் அணிவித்து வணங்குங்கள். ஒருவருக்காவது, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அன்னதானம் செய்யுங்கள். உங்களை வாட்டி வதக்கும் கஷ்டங்கள் விலகி இறைவனின் அருளால் நன்மைகள் தேடி வரும்.
துலா இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து லாபத்தில் உள்ளனர். ஆகவே, இந்த கெஜகேசரி யோகத்தால் முன்னேற்ற பாதைக்கு வழி தெரிந்து விட்டது. இனி யோக காலம்தான். தொழில்துறையில் மாற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடபெயர்ச்சி ஏற்படுத்தும். திருமணம் நடைபெற சாத்திய கூறு உண்டு. ஜென்ம இராசியில் செவ்வாய் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். ஏழரை சனி உள்ளதால், குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தும். ஆகவே மௌனம் தேவை. கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த காரணத்தால், எடுத்த காரியத்தை போராடி நிறைவேற்றுவீர்கள். சுகஸ்தானத்தில் புதன் உள்ளார். கல்வியால் பலன் உண்டு. உறவினர் வருகையால் சிறு பிரச்னை உருவாக்கும். 6-ஆம் இடத்தில் உள்ள கேது பகவான், வழக்கில் சற்று இழுப்பறி தருவார். ஸ்ரீஆஞ்சனேயரின் அருளால் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு எள் சாதத்தை சனிக்கிழமைதோறும் வையுங்கள். ஸ்ரீஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் அருள் பரிவான்.
விருச்சிக இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 10-ஆம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து, “கெஜகேசரி யோகம்” அமைந்ததால், மனமகிழ்ச்சி ஏற்படும். தடைகள் நீங்கும். பொன் – பொருள் சேரும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடைபெறும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில், சூரியன் உள்ளார். இதனால், செலவுகள் அதிகம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. விரயஸ்தானத்தில் செவ்வாய் அமைந்ததால், முன் கோபத்தை தரும். பஞ்சமஸ்தானத்தில் கேது உள்ளார். அயல்நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு வரும். தொழில்துறை வாய்ப்புகளும், உத்தியோகமும் அயல் நாட்டில் அமையலாம். உங்கள் இராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், அரசாங்க ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை இருந்த கடன் தொல்லை நீங்கும். சகோதர வர்க்கத்தால் சற்று மனக்கசப்பு வரலாம். ஆகவே சகோதர-சகோதரிகளிடம் பொறுமை தேவை. முருகன் அருளால் முன்னேற்றம் உண்டு யோகமான ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமானின் அருளால் முன்னேற்றம் கிடைக்கும்.
தனுசு இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து உங்களுக்கு கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட காரியங்கள் இனி தடை இல்லாமல் நடைபெறும். பொன், பொருள் வீடு, மனை அமையும். ஜென்ம இராசியில் சூரியன் உள்ளதால் உழைப்பு அதிகமாகும். தனஸ்தானத்தில் புதன் இருக்கிறார். குடும்ப செலவு அதிகமாகும். சுகஸ்தானத்தில் கேது அமைந்ததால், உடல் நலனில் கவனம் தேவை. உங்களுக்கு தற்போது விரய சனி நடைப்பெற்று வருகிறது. ஆகவே, யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். லாபஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். சோதனை எல்லாம் சாதனையாக மாற வாய்ப்புண்டு. சுபகாரியங்கள் நடைபெறும். 10-ஆம் இடத்தில் இராகு அமைந்து தொழில் துறையில் வளர்ச்சி கிடைக்க காரணமாக இருப்பார். வேலை வாய்ப்பு அமையும். ஆனாலும், கடன் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் இப்போது உங்களுக்கு 7½ சனியில் விரய சனி நடக்கிறது. வம்பு வந்தாலும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பைரவர் அருளால் லாபமான ஆண்டாக இருக்கும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : பைரவர் சன்னதிக்கு சென்று பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். கஷ்டத்தை நீக்கி மகிழ்ச்சியானதாகவும், லாபகரமான ஆண்டாகவும் அமைய பைரவர் உங்களுக்கு அருள் புரிவார்.
மகர இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். அஷ்டமத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த சுபகாரியங்கள், சுபிட்சமாக நிறைவடையும். வாகன விருத்தி, வீடு அமையும் யோகம் அத்தனையும் நடைபெறும். உடன் பிறப்பால் பலன் உண்டு. லாபஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமைந்ததால், படிப்படியாக வாழ்க்கை உயரும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். ஜீவனஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். வியபாரம் வளரும். புதிய வருமானத்திற்கு வழி பிறக்கும். தடைபட்ட கல்வி தொடரும். கடன் சுமை குறையும். பாக்கியஸ்தானத்தில் இராகு உள்ளார். பூர்வீக சொத்தில் சற்று வில்லங்கம் ஏற்படுத்தும். வழக்கு இருந்தால் வெற்றி அடையும். விரயஸ்தானத்தில் உள்ள சூரியன், சற்று குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். ஆகவே நிதானம் தேவை. சிவபெருமானின் அருளால் இவ்வாண்டு உங்களுக்கு அருமையான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : ஞாயிற்று கிழமையில், கோதுமையால் தயாரித்த உணவை தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமையில், சூரிய பகவானை வணங்குங்கள். சூரிய பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்கவும். பாதகங்களும் சூரிய பகவானின் அருளால் சாதகமாக மாறி உங்கள் வாழ்க்கையை ஜொலிக்க வைப்பார்.
கும்ப இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சப்தமதில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை ஏற்படுத்தி தருவதால், தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான காரண காரியங்கள் உருவாகும். தனஸ்தானத்தில் உள்ள கேது பகவான், விரயங்களை அதிகரிப்பார். அஷ்டமத்தில் உள்ள இராகு விரோதத்தை தேடி தருவார். ஆகவே, எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமைந்த காரணத்தால், வீடு, மனை வாங்கும் வசதி கிடைக்கும். லாபஸ்தானத்தில் உள்ள சூரியன், கல்வி, தொழில்துறை, உத்தியோகம் இவற்றில் நன்மை ஏற்படுத்தும். விரயஸ்தான்த்தில் உள்ள புதன், உறவினர் வருகையால் சற்று செலவுகளை அதிகரிப்பார். உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் விஷயத்தில் பொறுமை தேவை. தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்தும். ஜீவனஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால் நன்மைகளும் தேடி வரும். ஸ்ரீதுர்கை அம்மனின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று உங்களால் முடிந்தளவு நெய் தானம் செய்யுங்கள். திருக்கோயிலில் உள்ள விளக்குகள் நெய் தீப ஒளியில் மின்னட்டும். உங்கள் பொருளாதார வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும். தோஷங்கள் விலகி வெற்றி கிட்டும்.
மீன இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், நீங்கள் கண்ட கனவு பலிக்கும். விட்டது, விலகியது அனைத்தும் கைக்கு வந்தடையும். குடும்பத்தில் சுபகாரியம், திருமண விஷயங்கள் பிரமாதமாக நடைபெறும். பாக்கியஸ்தானத்தில் அமைந்துள்ள சனி, சுக்கிரன், புதிய கட்டடம் கட்டும் யோகத்தை தருவார்கள். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். கடன்கள் தீரும். வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்க உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் யோகம் உண்டு. லாபஸ்தானத்தில் புதன் அமைந்திருப்பதால், நோய் நொடி நீங்கும். 10-ஆம் இடத்தில் அமைந்துள்ள சூரியன், மனமகிழ்ச்சியை வாரி வழங்குவார். பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி பொங்க செய்யும் ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : சூரிய பகவானுக்கு ஞாயிற்று கிழமைகளில் சிகப்பு மலர்களை அணிவித்து சூரிய பகவானை வணங்குங்கள். அத்துடன், உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கும்.

5000+ years old underwater Hindu Temple at Bali-Indonesia

Hinduism (Sanatan Dharma) is world’s oldest Civilization having history over 12000 years; had influence almost across the World till western Abrahmic religions formed some 2500 years back which are rejecting/destroying great ancient human heritage wherever they spread!


See 5000+ years Hindu Devata Vishnu’s temple found underwater near Bali, Indonesia. Local call this new Scuba diving spot at Pemuteran Beach as “Underwater Temple Garden – Bali”

Don’t be surprise! All over East Asia you will find 5000+ to 1000 years old Hindu/Buddhist ancient temples Angor wat (Combodia), Indonesia, Vietnam, Thailand, Myanmar, Korea, Japan, China, etc.

Also it is now proved that Indian & Arabic Ocean Sea level has risen over 500 meters in last few thousand years submerging Ram-Setu bridge between Srilanka & India, Sri Krishna’s Dwaraka city at Gujarat India, Bali Islands and coastal areas near Oman/Quatar, etc.

See beautiful underwater 5000 + years old Vishnu Temple at Bali

நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதை

30 வருடங்களுக்கு முன்னால் கண்ணதாசனை பார்த்து நீ கவிஞனா? என கருணாநிதி கேட்டதற்கு கண்ணதாசன் எழுதிய கவிதையை பாருங்கள்...
அஞ்சாதா சிங்கமென்றும்
அன்றெடுத்த தங்கமென்றும்
பிஞ்சான நெஞ்சினர் முன்
பேதையர்முன் ஏழையர் முன்
நெஞ்சாரப் பொய்யுரைத்து
தன்சாதி
தன்குடும்பம்
தான்வாழ‌ தனியிடத்து
பஞ்சாங்கம் பார்த்திருக்கும்
பண்புடையான் கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌.
பகுத்தறிவை ஊர்க்குரைத்து
பணத்தறிவை தனக்குவைத்து
தொகுத்துரைத்த‌ பொய்களுக்கும்
சோடனைகள் செய்து வைத்து
நகத்து நுனி உண்மையின்றி
நாள்முழுதும் வேடமிட்டு
மடத்தில் உள்ள சாமிபோல்
மாமாய‌ கதையுரைத்து
வகுத்துண‌ரும் வழியறியா
மானிடத்து தலைவரென்று
பிழைத்திருக்கும் ஆண்மையில்லா
பேதையனே கவிஞ‌னெனில்
நானோ கவிஞ‌னில்லை
என்பாட்டும் கவிதையல்ல‌

Fukang meteorite 4.5 billion years old.

The Fukang meteorite that was found in the mountains near Fukang, China in 2000. It is estimated to be 4.5 billion years old.


Monday, December 14, 2015

Severe Acute Respiratory Syndrome [ SARS ] ::


Severe acute respiratory syndrome (SARS) is a viral respiratory disease caused by the SARS Coronavirus.


Facts
1. SARS is caused by a coronavirus (SARS-associated coronavirus or SARS-CoV).
2. This infection can be spread easily from close person-to-person contact.
3. There is no medication that is known to treat SARS. Treatment is supportive.
4. During the 2003 outbreak, approximately 25% of people had severe respiratory failure and 10% died.
Risk Factors
1. Recent travel to mainland China, Hong Kong, or Taiwan or close contact with ill people with a history of recent travel to these areas
2. Employment in an occupation at risk for SARS-CoV exposure, including a health-care worker with direct contact with a patient having SARS-CoV, or a worker in a laboratory that contains live SARS-CoV
3. Relationship with a cluster of cases of atypical pneumonia without an alternative diagnosis.

வறட்டு இருமல் பாடாய் படுத்துகிறதா? அதை சரிசெய்ய இதோ சில வழிகள்!!!

The Bridge of Immortals...China....the highest bridge in the world...


ராஜேந்திரசோழன் சமாதி




செய்யாறு அருகே ராஜேந்திர சோழன் புதைக்கப்பட்ட இடம்திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு தாலுக்காவிலிருந்து முப்பது கி.மீ தொலைவில் இருக்கிறது நாட்டேரி என்ற அழகான கிராமம். நாட்டேரிக்குப் பக்கத்தில் பிரம்மதேசம் என்னும் ஊர். இந்த ஊரின்வெளிப்புறத்தில் பசுமையான வயல்வெளிக்கு மத்தியில் ஒரு செங்கல் கோபுர நுழைவாயிலின் எதிரில் இரண்டடுக்குக் கோபுரம் கொண்ட ஒரு பழங்காலக் கோயில் இருக்கிறது. பல நூற்றாண்டுகளைக் கடந்த அந்தக் கோயில் கட்டடம் கவனிப்பின்றிக் கிடக்கிறது. கைவிடப்பட்ட அநாதையைப் போல் நின்றுகொண்டிருக்கிறது. அந்தக் கோயில் கட்டடம் சாதாரணமான ஒன்றல்ல. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. தஞ்சைப்பெரிய கோயிலைக் கட்டிய சோழப் பேரரசன் ராஜராஜ சோழனின் மகன், ‘கங்கை கொண்ட சோழன்’ ‘கடாரம் கொண்டான்’ என்றெல்லாம் புகழப்பட்ட ராஜேந்திரனின் கல்லறைதான் அந்தக் கட்டடம். தற்போது அந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தைக் கண்டறிந்துள்ள இந்தியத் தொல்பொருள் துறை சுற்றுச்சுவர் அமைக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.ராஜேந்திர சோழன் கல்லறை குறித்து நாட்டேரி கிராம மக்கள் பெரும்பாலானவர்களுக்குத் தெரியவில்லை. அவர்கள் அதை ‘மடவலத்துக் கோயில்’ என்றுதான் சொல்கிறார்கள். சிலர் “கலெக்டர் எல்லாம் வந்து பார்த்துட்டுப் போனாங்களே அந்தக் கோயிலா?” என்றுஅடையாளப்படுத்துகிறார்கள். சிலர் இதைச் சந்திர மௌலீஸ்வரர் கோயில் என்கிறார்கள். மிக அரிதாக யாரேனும் ஒருவர்தான் ராஜேந்திரசோழனின் சமாதி என்று சொல்கிறார்கள்.ராஜேந்திர சோழன் தன்னுடைய எண்பதாவது வயதில் நாட்டைச் சுற்றிப் பார்க்க வந்தபோது இங்கே இறந்துவிட்டதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடப்படுகிறார்கள். இந்த இடத்தைத் தொல்பொருள் துறை கையகப்படுத்தியிருந்தாலும் அதைப் பாதுகாப்பதற்கான முறையான ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என்றே தெரிகிறது. தொல்பொருள் பாதுகாப்புத் துறையிடம் கேட்கலாம் என்று சென்றால், இங்குள்ள தொல்பொருள் பாதுகாப்புத் துறை அலுவலகம் பெரும்பாலும் மூடியே கிடக்கிறது.ராஜராஜ சோழனுக்குப் பிறகு சோழப் பேரரசை ஆண்டவன். தன் தந்தையுடன் பல களங்களில் பங்கேற்றவன். பல போர்களில் வெற்றி வாகைசூடியவன். ‘பண்டித சோழன்’ என்றெல்லாம் வரலாற்றில் புகழப்பட்டவன்.இத்தனை பெருமைகள் பெற்ற ராஜேந்திரனின் கல்லறையை, அதைச் சுற்றி வாழும் கிராமத்து மக்களாலேயே அடையாளம் காண முடியாமல் அநாதையாகக்கிடக்கிறது. இதைப் பார்க்கும்போது “மன்னவன் ஆனாலும் மாடோட்டும் சின்னவன் ஆனாலும் மண்ணில் பிறந்தால் ஒரு நாள் மண்ணுக்கிரைதானே...” என்னும் பாடல்தான் நினைவுக்கு வருகிறது.எவ்வளவு சிறப்பான வாழ்க்கை என்றாலும் தனிமனித வாழ்வு என்பது எல்லைக்குட்பட்டது. ஆனால் வரலாறு அப்படி அல்ல. ராஜேந்திர சோழன் வரலாற்றில் தடம் பதித்தவன். அவன் நினைவைப் போற்றுவது வரலாற்றை நினைவுகொள்வதாகவே அமையும். அரசு நிர்வாகமும் சமூகமும் இதை மனதில் கொள்ள வேண்டும்.

பாரதி..! ஒளிமிக்க யுகபுருஷன்

பாரதி..!
--------


புதிய காலத்தின் பிறப்பை அறிவித்த
--------------------------------------------------- 
ஒளிமிக்க யுகபுருஷன்
-------------------------------
- சோழ. நாகராஜன்

‘எமக்குத்தொழில் கவிதை, நாட்டுக் குழைத்தல், இமைப்பொழுதும் சோராதிருத்தல்!’
- தமிழ் மகாகவி பாரதியின் பிரகடனம் இதுவென்று சொல்லத்தேவையில்லை. தான் சொன்னதுபோல் நடந்து கொண்டவன் அவன். எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் எந்த வித வித்தியாசமும் இன்றி வாழ்ந்தவன் மகாகவி பாரதி. தமிழன்னையின் ஈராயிரமாண்டுத் தவப்பயன் அவனை அவள் புதல்வனாகப் பெற்றது என்று சொன்னால் அது மிகையல்ல.

‘இயன்றவரை தமிழே பேசுவேன், தமிழே எழுதுவேன், சிந்தனை செய்வது தமிழிலே செய்வேன்’ - என்று தனது உறுதிமொழிதனை எழுதிவைத்தவன் பாரதி.

பாரதியின் பன்முக ஆளுமை என்பது இன்றைக்கும் தமிழுலகத்தை வியப்பில் ஆழ்த்துகின்ற ஒன்றுதான். தமிழ்மொழிக்கு புத்தம்புதிய ரத்தம் பாய்ச்சிய அவனது இலக்கியப் பங்களிப்பு மகத்தானது. பக்திமயமாகவும், சிற்றரசர்களை - பிரபுக்களை ஏற்றிப்பாடிப் பரிசில்கள் வேண்டிநின்ற சிலேடைகளுமாகவும் நோய் பீடித்து இளைத்துக்கிடந்த தமிழன்னைக்குப் புத்துயிர்கொடுத்த தனயன் பாரதிதான். அவனால் தமிழுக்குப் புதிய ஞானமும், ஒளியும் தோன்றிற்று, இது மறுக்க முடியாத உண்மை.

வெறும் வெள்ளை ஏகாதிபத்திய எதிர்ப்பு அரசியலைமட்டும் அவனது தேசியப்பார்வை கொண்டிருக்கவில்லை. மாறாக, தேசத்தின் அரசியல் விடுதலையோடு சமூக விடுதலையையும் இணைத்தே நோக்குகிற தெளிவு அவனுக்கு இருந்தது.

“இந்நாட்டவன் என்ற நாட்டுரிமை உணர்வு இல்லாமல் அரசியல் உணர்வு இருக்கமுடியாது. எங்கே சாதி அமைப்புமுறை பரவி இருக்கிறதோ, அங்கே நாட்டுரிமை உணர்வு இருக்காது...” - ‘இந்து’ பத்திரிகையிலே அவன் எழுதிய ஆங்கிலக் கடிதங்களில் ஒன்று இவ்வாறு தொடங்குகிறது. அதில் பாரதி மேலும் சொல்கிறான்:

“இங்கிலாந்தில் உரிய தகுதிகள் வாய்க்கப்பெற்ற, அந்நாட்டுக் குடிமகனாகிய சக்கிலியின் மகன் ஒருவன் பிரதம மந்திரியாவதற்கு எவ்விதத் தடைகளும் கிடையாவென்பதைப் பற்றி அங்குள்ள மக்களில் எவனும் ஐயப்படமாட்டான். சமஸ்கிருத சாஸ்திரங்களில் ஈடு இணையற்ற அறிவும், விழுமிய ஒழுக்கப் பண்பும், பக்தியும் கொண்ட சூத்திரன் ஒருவன் சிருங்கேரி மடத்தின் பீடாதிபதியாக வரமுடியும் என இந்தியாவில் எவனாவது நம்பினால், அது தேசத்துரோகமாகக் கருதப்படும் அல்லவா? (சூத்திரனே வர முடியாது என்றால், பஞ்சமனைப் பற்றிச் சொல்லவே வேண் டாம்.) மக்கள் ஏன் வேண்டுமென்றே தம் கண்களை இறுக மூடிக்கொள்கிறார்கள்? மலைக்கும் மண் புற்றுக்கும் உள்ள வேறுபாட்டை அவர்கள் கண்டுணர மறுப்பது ஏன்? மகத்தான இங்கிலாந்துப் பேரரசு எங்கே? அந்தோ, இந்தியா எங்கே?”

- இப்படிக்கூறுகிற துணிவு இன்றைக்கு நமக்கு இருக்கலாம். இது கணினியுகம், 21ஆம் நூற்றாண்டின் அறிவியல் யுகம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு - சமுதாயத்தில் இருள் மண்டிக்கிடந்த அன்றைய அடிமைத் தேசத்தில், சாதியத்தின் பிடிப்பு இறுகிக் கிடந்த காலத்தில் இதைச் சொல்ல எவ்வளவு ஆன்மபலம் தேவைப்பட்டிருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெறும் அரசியல் விடுதலை கோரி நின்றவர்களும், சமூக சீர்திருத்தம் மட்டுமே போது மென்றிருந்தவர்களும் எதிரெதிர் முகாம்களாகப் பிரிந்து நின்று, ஒருவரை ஒருவர் பலவீனப்படுத்திக்கொண்டிருந்த சூழலில், பாரதியின் சிந்தனை மட்டுமே அரசியல் விடுதலையைச் சமூக விடுதலையோடு இணைக்க முயன்றது. அவன்தான் விடுதலை என்பதை பறையருக்கும், புலையருக்கும், பரவருக்கும், குறவருக்கும், மறவருக்குமானது என்று ஓங்கி முழங்கினான். “முப்பது கோடியும் வாழ்வோம்! வீழின், முப்பது கோடி முழுமையும் வீழ்வோம்!” - என்றவன் அவனல்லவா?

ஏற்றத்தாழ்வின் அடிப்படைகளைக் கிள்ளி எறியச் சொன்னான். மனிதர் உணவை மனிதர் பறிக்கும் வழக்கம், மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனி இருத்தலாகாது என்றவன், சாதிகள் இல்லையடி பாப்பா, குலத் தாழ்ச்சி - உயர்ச்சி சொல்லல் பாவம் என்றான். சாதியால் ஒருவனைத் தாழ்வாகப் பேசுவதுமட்டும் பாவமல்லவாம்!. உயர்ந்தவன் என்று தண்டனிட்டு அடிமை செய்வதும்கூடப் பாவமாம்! இப்படியொரு முழுமையான சீர்திருத்தக் கோட்பாட்டினை அழுத்தமாக முன்வைத்த முன்னோடி பாரதி. ‘காக்கை, குருவி எங்கள் சாதி, நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்!’ - என்று ஒரு பிரபஞ்ச தரிசனத்தை முன் மொழியும் தகுதியை அதனாலேயே அவன் பெறுகிறான்.

சமூக விடுதலையின் பிரிக்கமுடியாத அம்சங்களான தலித் விடுதலை, பெண் விடுதலை ஆகியவற்றை அந்த நாளிலேயே இவ்வளவு துணிவுடனும், நேர்படவும் பாரதி மட்டுமே பேசி, அந்த மரபைத் துவக்கி வைக்கிறான்.

சாதிய அமைப்புக்கு எதிரானது சாதியக் கலப்பு. சாதியக் கலப்புக்கு வழிவகுப்பது காதல். எனவே காதலுக்கு மரியாதை செய்தவன் பாரதி. “காதல் செய்வீர் உலகத்தீரே! அதுவன்றோ தலைமை இன்பம்!” என்று அறை கூவி அழைக்கிறான் பாரதி. இளம் விதவைப் பெண்களை இந்நாட்டு இளைஞர்கள் மனமுவந்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று அவன் வேண்டுகிறபோது, அவனது மனம் இன்னும் விசாலமானதென்று புரிகிறது.

அதேபோலத்தான் ஆண் - பெண் சமத்துவம் கோரித் தடம்பதிக்கிறது அவனது பெண் விடுதலைக்கான பயணத்தின் பாதையும். கற்பு என்று ஒன்று வலியுறுத்தப்படுமாயின் அதனை ஆண் - பெண் இருபாலருக்கும் பொதுவானதாக வைக்கவே வலியுறுத்துகிறான் அவன். அதாவது, வரலாற்றில் முதன் முதலாக கற்பென்ற கருதுகோளை ஆணுக்கும் வலியுறுத்திய தலையாய ஆண்மகன் அவனே!

பாரதியின் இத்தனை சிறப்புகளுக்கெல்லாம் சிகரம் எது தெரியுமா? அவன் நூறு ஆண்டுகளுக்கு முன்னரே துவக்கிவைத் திட்ட சுயசாதி விமர்சனம். ஆம்! இன்று வரையில் அவனளவுக்கு வேறு ஒருவர் தம்சாதி குறித்து இத்தனை தெளிவாகப் பேசியிருக்கிறாரா?

‘பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே!’ என்று விடுதலை பெற்ற புதிய காலத்தைக் கும்மி கொட்டிக் குதூகலித்து வரவேற்க அன்று எவ்வளவு தைரியம் வேண்டும்? எண்ணிப் பார்த்தால் மலைப்பாகத்தானே இருக்கிறது! அது மட்டுமா? ‘பேராசைக்காரனடா பார்ப்பான்!’ - என்று, தான் பிறந்த சாதியின் மீதே தயங்காமல் குற்றம் சுமத்த வேறு எவரால் இன்று வரையில் இயன்றிருக்கிறது?

இப்படியும் அவன்தானே சொன்னான்:

‘சூத்திரனுக்கு ஒரு நீதி - தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி
சாத்திரங்கள் சொல்லுமாயின் அவை
சாத்திரங்கள் அல்ல சதியென்று கண்டோம்!’

பாரதி தன்னலத்தோடு சற்றே நினைத்திருப்பானேயானால், அவனது சுடரொளி வீசிய அறிவுக்கும், அவன் பிறந்த சாதிக்கு அன்று இருந்த செல்வாக்கிற்கும் ஆங்கில அரசிடம் எத்தனை பெரிய பதவியை அடைந்திருக்க முடியும்? இப்படியா பெண்டு, பிள்ளைகளைப் பட்டினி போட்டுவிட்டு, ஒரு பரதேசிபோல அலைந்திருக்க வேண்டும்? அவனிடம் சுய நலமும் இருந்ததில்லை! சுயசாதிப் பற்றும் இருந்ததில்லை! இதுதானே உண்மை? நிலைமை இப்படியிருக்க, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்துவிட்ட காரணத்தினாலேயே அவனை வெறுத்து ஒதுக்க நினைப்பதுவும் இன்னொரு வகை வர்ணாசிரமம் ஆகாதா?

இன்றைய நம் சமூகத்தில் பெருநோயாகப் புரையோடிக்கிடப்பது சாதிய ஏற்றத்தாழ்வு அல்லவா? அதனை அன்றைக்கே சாடத் துணிந்த பாரதி நமக்கெல்லாம் என்ன செய்தியை விட்டுச்சென்றிருக்கிறான்? நாம் ஒவ்வொருவரும் நாம் சார்ந்திருக்கும் சாதியை அவனைப்போல விமர்சனப்பூர்வமாக அணுகியிருக்கிறோமா? இப்படி நம்மை நாமே கேட்டுக் கொள்வது, இன்றைய நம் சமுதாயச் சிக்கல்களைக் களைவதற்கான ஒரு துவக்கமாக இருக்கும்தானே?

இந்திய சமூகத்தில் சாதிய முறையானது படிநிலை - ஏணிப்படி போன்ற அமைப்பாகத்தானே இருக்கிறது! கடைக்கோடியில் எல்லா சாதிகளும் அமுக்கி அழுத்திக்கொண் டிருக்கும் தலித்துகளை தவிர, மற்ற எல்லா சாதியினரும் தமக்குக் கீழே ஏறி மிதிக்க ஒரு சாதி உண்டு என்ற நினைப்பில் அல்லவா வாழ்கின்றனர்? இந்தப் பெருமித நினைப்பைக் கேள்விக்குள்ளாக்காமல் எப்படி சாதிய ஏற்றத்தாழ்வு ஒழியும்?

வரலாற்றின் அடிப்படையில் இட ஒதுக்கீடு என்ற நியாயமான ஏற்பாட்டை ஒட்டி மட்டுமே சாதி என்ற அடையாளம் தேவைப்படுகிறது. இந்த ஒரு தேவையைத் தாண்டி, சாதியின் நீடிப்புக்கு வேறு எந்தக் காரணமும் இருக்க நியாயம் இல்லை. எனவே, உயர்சாதி தொடங்கி எந்தச் சாதியானாலும் சாதியப் பெருமிதம் என்பது நாகரிக சமுதாயத்தில் வெட்கக்கேடான ஒன்றல்லவா?

ஒரு புதிய காலத்தின் பிறப்பை அறிவிக்கிற ஒளிமிக்க யுகபுருஷனாகத் தோன்றியவன் பாரதி. அவனுள் நிறைய முரண்களும் இருக்கவே செய்கின்றன. கூர்ந்து நோக்கினால் அந்த முரண்கள் அவன் தோன்றிய சாதி - சமூக - கால சூழ்நிலைமைகளின் பிரதிபலிப்புகள் என்பதைப் புரிந்துகொள்ளலாம். அவன் காலத்து மனிதர்களில் ஆகப் பெரும்பாலானவர்களிடத்தில் மண்டிக்கிடந்த இருளுடன் புழங்கிய பாரதிதான் அதனைக் கிழித்துக்கொண்டு ஒளிமிக்க ஞானச்சுடராகக் கிளம்பிவந்தான் என்ற நேர்மறை அணுகுமுறையுடன் அவனைப் பார்ப்பதே மிகச்சரியான அறிவியல் பார்வையாக இருக்கமுடியும்.

பாரதியின் மகத்தான அறிவு, அவனது உழைப்பு, எதிலும் ஊடுருவி நின்ற அவனது பார்வை, அவன் பேணிய மனிதநேயம், அதனடிப்படையிலான சமூகநீதியை முன்மொழியும் அவனது தேசபக்தி இவை எல்லாமே இன்றைக்கும் நமக்கு வியப்பையும், வழிகாட்டுதலையும் தரக்கூடியனவாகவே திகழ்கின்றன.

 (டிச 11) மகாகவி பாரதி பிறந்தநாள்

சோழ. 
நாகராஜன் 

தமிழ் மொழி




தமிழ் மொழியின் பழமையை சொன்னால் கேட்பவர் தமிழராக இருந்தாலும் கூட நம்புவதற்கு சிறிது தயக்கம் காட்டுவது தான் இங்கே நிகழ்கிறது. கேட்பவர்களில் நிறைய பேர் மனதில் தவறாக இருக்குமோ? அல்லது பொய்யாக இருக்குமோ? என்ற சந்தேகம் எழுவதும் பார்க்கக் கூடிய ஒன்றாக இருக்கிறது. உலகின் பழமையான மொழி என்ற பெருமையை பெறுகிற மொழிகள் எல்லாம் இன்று வழக்கொழிந்து செத்த மொழியாகி விட்டன. ஆனால் இந்த செத்த மொழிகளினும் பழமை கொண்ட தமிழ் மட்டும் இன்றும் இளமையுடன் சீரும் செழுமையும் கொண்டு சிறந்து விளங்கினாலும் ஏன் இந்த நிலமை. இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக அந்நிய மொழி மீதான மோகத்தினை உண்டாக்கி வைத்திருக்கும் சூழலே இதற்கு காரணம். தமிழின் பெருமையை இவர்களுக்கு புரிய வைக்கும் செயலில் எற்பட்டிருக்கிற தொய்வும் மற்றொரு காரணம். இன்றைய குழந்தையிடம் ஐந்து என்று சொன்னால் fiveவா என்று ஆங்கிலத்தில் கேட்டு உறுதிபடுத்திக் கொண்டுதான் புரிந்து கொள்கிறது. இது தான் இன்றைய யதார்த்த நிலை. இந்த நிலை மாற வேண்டுமானால் தமிழின் பெருமையை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். அபோது தான் நிலமையில் மாற்றம் கொண்டுவர முடியும். சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழிலிருந்த ஒரு நடைமுறை இன்று வழக்கொழிந்து விட்டது. அது பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம். சில சொற்கள் சுருக்கு வடிவத்தில் (short form) பயன்படுத்தப்பட்டு வந்தன. இன்று அது எத்தனை பேருக்கும் தெரியும் என்று தெரியவில்லை. படத்தில் காணப்படுகிற அட்டவணையை பாருங்கள். அட்டவணையில் கண்டவாறு சுருக்கு வடிவங்கள் பயன்பாட்டில் இருந்தன.
1ல் நாள்
2ல் மாதம்
3ல் வருடம்
4ல் பற்று
5ல் வரவு
6ல் மேற்படி
7ல் ரூபாய்
8ல் எண்ணம்
இப்படி நம்மால் அறியப்படாத எத்தனையோ தமிழில் புதைந்து கிடக்கின்றன அதன் பெருமையை முழுமையாக புரிந்து கொள்ளாப்படாமலேயே.