Search This Blog

Tuesday, December 10, 2013

அசோகமித்திரன் - நேர்காணல்

தமிழ் இலக்கியவெளியில் அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக இயங்கிவரும் ஆளுமை அசோகமித்திரன். சாகித்ய அகாதெமி விருது (1996) டால்மியா மத நல்லிணக்க விருது (1995) தேவன் விருது (1997) என்று பல விருதுகள் பெற்றவர். இதில் டால்மியா விருதை அன்னை தெரசா வழங்கி கெளரவித்தார். எழுபத்தைந்து வயதைத் தாண்டியும் பங்களிப்பு செய்பவர். தண்டீஸ்வர் நகரில் இருக்கும் அவரது இல்லத்தில் தீராநதிக்காக சந்தித்தோம். மூன்று மணி நேரத்திற்கும் மேலாக நீண்ட அவரின் பேச்சில் மையப் புள்ளியாக Non violence கருத்து வலியுறுத்தப்பட்டுக்கொண்டே இருந்தது. இதை இந்த நேர்காணலும் உணர்த்தவே செய்யும்.e6845d5f-0c25-4911-89d5-8a50f3ab7827-ashokamithran-02
தீராநதி :1972_ல் உங்களின் ‘வாழ்விலே ஒரு முறை’ வெளியானது. இதையொட்டி ‘காலமும் ஐந்து குழந்தைகளும்...’ 1988_ல் மீண்டும் அது மறுபதிப்பு கண்டது. அது பரவலாக விற்பனைக்குப் போகும் முன்னதாக எலிக்கும், கறையானுக்கும் உணவாகிப் போனதாக ஒருமுறை வருந்தி எழுதியிருந்தீர்கள். ஆனால், இன்று தமிழ் பதிப்பகங்கள் சர்வதேச தரத்திற்கு வளர்ந்திருக்கின்றன. இம்மாற்றத்தை எப்படி உணருகிறீர்கள்?
அசோகமித்திரன்: முதல் தொகுதி ‘வாழ்விலே ஒரு முறை’ இருக்கே அது ரொம்பக் கொறச்சலா 500 பிரதிகள் தான் போட்டோம். முன் கூட்டியே முன்பதிவு செஞ்சியிருந்தவங்களுக்கு அதைக் கொடுத்துட்டோம். பெரிய பதிப்புன்னு சொல்ல முடியாது இதை. ‘காலமும் ஐந்து குழந்தைகளும்’ நூல் அதுதான் முறையான பதிப்பாளர் கலைஞன் வெளியிட்டார். கலைஞன் மீது அதுக்காக இன்றைக்கும் நான் ரொம்ப நன்றியுடன் இருக்கேன். 1974_ல் வெளியிட்டார். அப்ப என்ன ஆயிடுத்துன்னா பதிப்பகம் சின்ன எடமா இருந்ததால எலியும் கறையானும் அரிச்சிடுது. அப்ப அவர் மாடிமேல இருந்தார். மழை வேற பெய்ஞ்சு தண்ணில நெனைஞ்சு பாதிக்கு மேல பாழாப்போயிடுத்து. அவரு அன்போடயும் ஆர்வத்தோடயும் வெளியிட்டார். நான் ரொம்ப விற்கக்கூடிய எழுத்தாளன் இல்லன்னு அவருக்குத் தெரியும். தெரிஞ்சும் தைரியமா வெளியிட்டார் .அதுக்காகத்தான் என்னோட வருத்தமெல்லாம். நம்மலால ஒருத்தர் நஷ்டமாயிட்டாரேன்னு வருத்தம். இன்னைக்கு எவ்வளவோ மாறிடுத்து. சுயமா வெளியிட்டுக்குறாங்க. இப்படி சுயமா வெளியிட்டுக்குறதுல சங்கடங்கள் என்னான்னா, அவங்க வந்து இதை விமர்சனப் பூர்வமா செய்ய முடியாது. பப்ளீஷருக்கு என்ன பெரிய விமர்சனம் தெரியும்னு நாம கேட்கலாம். பப்ளீஷரோட தேர்வு இருக்கே அந்தத் தேர்வே ஒரு விமர்சனம். இந்தப் புத்தகம் போடலாம். இந்தப் புத்தகம் போடமுடியாதுன்னு கணிக்குறதே விமர்சனம்தான். ஆகவே, ரொம்ப பேரு என்னது விற்காதுன்னு சொல்லி அனுப்பிச்சிட்டாங்க. அதை ஒண்ணும் தவறா நெனைக்கல. ஏன்னா அது அவங்களோட விமர்சனம். இவருக்கும் (கலைஞன்) பெருசா விற்கும்னு நம்பிக்கை கிடையாது. இருந்தும் மிக்க அன்புடன் போட்டார். பதிப்பகங்கள் வளர்ச்சியில எனக்கு என்னைக்குமே ஒரு மகிழ்ச்சி உண்டு. ஆனா படிக்கப்படணும். நெறைய புத்தகங்கள்லாம் வருது. பாத்தீங்கன்னா தடிதடி புத்தகங்கள்லாம் வருது. இதெல்லாம் படிக்கப் படறதான்னு தெரியுல. ஜெயமோகன், ராமகிருஷ்ணன் எழுதுறதெல்லாம் பார்த்தா எனக்குப் பயமா இருக்கும். 500 பக்கம் 600 பக்கம் எழுதுறாங்க எப்படி? களைச்சுப் போயிடும். அதாவது இன்னைக்கு ஒரு விதத்துல படிக்குறத தவிர வேற அறிவு பூர்வமா ஒரு பயிற்சி தரக்கூடிய ஈடுபாடுகள் கிடையாது.இப்ப எதை நீங்க தவிர்த்தாலும் தவிர்த்துடலாம். பத்திரிகைகளைத் தவிர்க்க முடியாது. ரொம்பக் கஷ்டம் அது. பத்திரிகைகள் படிச்சா பெரிய அளவுக்கு விஷயங்கள் இல்லாத மாதிரி தெரியும். அதேபோல, நீங்க பத்திரிகை படிக்கலைன்னா வாழ்க்கையோட தொடர்பு இல்லாம போயிடும். அது எந்த மாதிரி பத்திரிகையினாலும் தேவல. கட்சி சார்ந்ததா கூட படிக்க வேண்டியது இருக்கு. அந்தச் சமயத்துல இவ்வளவு பெரிய பெரிய புத்தகங்கள் வருது. இது படிக்கப்படணும். படிச்சாங்கன்னா ரொம்ப சந்தோஷம்தான். இதுக்கெல்லாம் ஒரு வாசகத்தளம் இருக்குதான்னு எனக்குத் தெரியுல. விற்கறது கூட வித்துடுறாங்க. நெறைய விற்பனை ஆயிடறதா சொல்றாங்க. என்னோட அனுபவத்துலேயே பார்த்தேன். நெறைய பேரு பேர தெரிஞ்சு வெச்சி இருக்காங்க. முகத்த தெரிஞ்சு வெச்சிருக்காங்க. உங்களை டி.வி.ல பார்த்தேன். பத்திரிகையிலே பார்த்தேங்குறாங்க. ஆனா படிக்கறத பத்தி ஒரு கதைய பத்தி, ஒரு வார்த்தை வரவே வராது. அவரோட ஒரு மணி நேரம் பேசினாக்கூட நம்ம படைப்பைப் பத்தி அபிப்ராயமே வராது. அப்படின்னா என்ன அர்த்தம்? அவர் படிக்கலன்னு அர்த்தம். பத்திரிகையில வரக் கூடிய அளவுக்குப் பிரபலமானவர்_ இதுதான். ஆகவே ஒரு எழுத்தாளனுக்குக் கிடைக்கக் கூடிய விஷயம் என்னான்னா, அவனோடதை படிச்சிட்டு நன்னா இருக்குன்னு சொன்னா போதும். அப்புறம் இந்த பப்ளீஷிங் இருக்கே, நெறைய வெளியிடுறது, விற்பனை ஆறதுயெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா இந்த ஒரு கவலையும் இருக்கு. படிக்கப்படணுமே.
தீராநதி: பல எழுத்தாளர்களின் Style படைப்பின் இடை இடையே குறுக்கிடுவதாகவே இருக்கும். அந்தத் தன்மை உங்களிடம் அறவே இல்லாத மாதிரி தோணுகிறது. பொதுவாக Style _ல் உங்களுக்கு உடன்பாடு இல்லையா?
அசோகமித்திரன்: பொதுவா Style _ல பத்தி சொல்வாங்க. Style தான் ஒரு மனிதன்னு. Style of the Men. Style in the writer ன்னு. Style இல்லாம எழுதுறதே ஒரு Style தான். Style இல்லாம இருக்குறதுக்கும் ஒரு பயிற்சி வேணும். இதெல்லாம் அவ்வளவு எளிதில் வந்த ஒரு விஷயம் இல்ல. ஏதேதோ பயிற்சி செய்துதான் வந்தது. படிச்சு, எழுதி எழுதி வந்தது. ஒரு இடைவெளி இருக்கக் கூடாது. அதான் ஒரு முயற்சி. எழுத்துல வர்ற அனுபவத்துல இடைவெளி அதிகம் இருக்க கூடாதுன்னு முயற்சி செய்தேன். இந்த முயற்சில எந்த அளவுக்கு வெற்றி அடைஞ்சி இருக்கேன்னு அதெல்லாம் சொல்ல முடியாது. அம்பது வருஷம் அதுக்கு மேலேயே ஆயிடுத்து நான் எழுத ஆரம்பிச்சு. ஞாபக மறதி வேற வந்துடுத்து. இன்னும் இதை என்னால உறுதியா சொல்ல முடியல, இன்னும் அதுல நான் வெற்றி அடைஞ்சுட்டேன்னு. என்னோட இயல்பா இதை எடுத்துக்கலாம். இப்ப உங்ககிட்ட என்ன மாதிரி உறவு வெச்சிக்கிறனோ அதை மாதிரி தான் என் எழுத்துலயும் வெச்சியிருக்கேன். எழுத்துல வந்து வேற மாதிரியா வெச்சிக்க முயற்சி செய்யல. Style இருக்கே அதை நான் நிராகரிக்கல. நான் அதைச் செய்யல. Style இல்லாம இயங்குறதுல எனக்கு ஒரு நிறைவு இருக்கு, அப்படி செஞ்சும் கதை புரியலங்குறாங்க. பார்த்தீங்கன்னா ‘அமுதசுரபி’ யில இப்ப ஒரு கதை வந்தது. அதுல கிழவர் ஒருத்தர் இலந்த பழம் விற்பார். இலந்தப் பழம் விற்குறவருன்னா நாம் வந்து அவரை பரம ஏழைன்னு நெனைப்போம். அதெல்லாம் இல்ல. பெரிய ஒரு பங்களாவுக்கே அவர்தான் Êஓனர்னு கதை போகும். நல்ல கதை. ஆனா யாருமே அதப்பத்தி சொல்லல. அந்தப் பத்திரிகை ஆசிரியரே கூட சொல்லல.
தீராநதி: ஆரம்பகாலங்களில் ஜெமினி ஸ்டுடியோவில் PRO _வாக பணி செய்திருக்கிறீர்கள். பழைய நாடகங்களில் கூட பங்களிப்பு செய்திருப்பதாக நினைக்கிறேன். இன்றைக்கு நடத்தப்படும் நவீன நாடகங்கள் குறித்தும், தமிழ் சினிமா குறித்தும் உங்களின் மதிப்பீடு என்ன?
அசோகமித்திரன்: இந்த ஸ்டுடியோ பணி இருக்கே ... நான் என்ன செய்றதுப்பா? எங்க அப்பா வந்து அவருக்கு நண்பரா இருந்தாரு. திடீர்னு ஒரு நாள் அப்பா செத்துப் போயிட்டார். வீட்ல ரொம்ப கஷ்டம். அந்த நாள்லயெல்லாம் பெரிய பாதுகாப்பெல்லாம் கிடையாது. நான்தான் வீட்ல மூத்தவன். வேலைக்குப் போகவேண்டிய கட்டாயம். ஏதோ நான் மட்டும் கஷ்டப் பட்டுருக்கேன்னு சொல்ல வர்ல. என்னைவிட கஷ்டப்பட்டவன்லாம் இருக்காங்க. வீட்ல பொண்ணுங்க இருக்கு. ஒரு அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. ஆனாலும் அவ்வளவு சந்தோஷமா இல்ல. வேலைக்கும் போயிட்டேன். அவருக்கு என்ன வேலை எனக்கு தர்றதுன்னே தெரியுல. எனக்கும் தயக்கம், சினிமா கம்பெனியாச்சே. அங்க இருந்தா நமக்கும் சினிமாத்தனமெல்லாம் வந்துடுமே. எழுத்தோடயே சம்பந்தப்பட்ட வேலையா இருந்தா நல்லது. அதான் PRO வேலை. நான் சேர்ந்த போதும் ஒருத்தர் இருந்தார். ரெண்டு மூணு வருஷத்துல அவருக்கு வேற வேலை. செகரட்ரியா போயிட்டார். என்னோட வெறும் டெசிகினேஷன் தான் PRO. அதை வந்து நான் பெரிய பதவியா நெனைக்கல. பெரிய சினிமா அனுபவமெல்லாம் கிடையாது. எல்லோரையும் போல சினிமா பார்த்தேன், அவ்வளவுதான். மாறுபட்ட தன்மையோ பார்வையோ எனக்குக் கிடையாது. ஆனா நாடகங்களோட பரிச்சயம் உண்டானதுக்கு ஞாநிதான் காரணம்.ஞாநி ஒரு பத்திரிகைக்காரர். இந்திரா பார்த்தசாரதியை ஒரு தடவை பேட்டி கண்டு எழுதி இருந்தார். அப்ப ஞாநியை ரொம்ப பிடிச்சுப் போச்சு. இந்த மாதிரி ஒரு ஆள் பத்திரிகையில இருக்குறது எவ்வளவு நல்ல விஷயம்னு தோணுச்சு. அப்புறம் அவரே நாடகம் போடணும்னு இறங்கினார். அவரே நாடகங்களும் எழுதி இருக்கார். அதேபோல நான் மொதல்ல எழுதுறதுக்கு தூண்டுதல இருந்தவர் ஒரு நாடகக்காரர். ராஜாமணின்னு பேரு. நெறைய படிச்சவர். அவரு என்ன ஒத்துண்டதே கிடையாது அவரு இருந்த வரைக்கும். சீக்கிரமே செத்துப் போயிட்டார். அதிக நாள் இல்லை. அப்ப நான் எழுதின கதைகள்லாம் கூட படிச்சிட்டு ‘இல்ல, இல்ல நீ மறுபடியும் இதைத் திரும்ப எழுதணும்னு சொல்லுவார். பப்ளீஷ் ஆன கதையையும் கூட, இதெல்லாம் போதாதும்பார். அந்த அளவுக்கு உரிமை என் மேல எடுத்துக்குவார். தமிழ் சினிமா பத்தி எனக்குத் தெரியாது. ஆனா 14 வருஷம் அந்தத் துறையில இருக்குறவனுக்கு அதுல விஷயம் இருக்கும் இல்லையா? இதெல்லாம் அசாதாரணமான நிகழ்ச்சிகளா நான் நெனைக்கல. இந்த மாதிரி நான் வேற ஒரு துணி உற்பத்தி செய்யறதுல இருந்தா அது சம்மந்தமா எழுதி இருப்பேன். அரசாங்க சம்மந்தப்படுத்தின வேலையா இருந்தா அதை எழுதி இருப்பேன்.ஆனா நான் யாரையும் இழிவுபடுத்தி எழுதணும்னு நெனைச்சு எழுதினது கிடையாது. ரெண்டு லட்சியங்கள் உண்டு. ஒண்ணு: யாருகிட்டயும் விரோதம் பாராட்டக் கூடாது. ரெண்டு: புறம் பேசக்கூடாது. இன்றைக்கு நவீன நாடகங்கள் எல்லாம் வந்து கிமிக்ஸ் அளவோட நின்னுபோவுது. முகத்துல கோரமா வேஷம் போட்டுக்கிட்டு கிமிக்ஸ் பண்றதுன்னு போயிட்டா பண்ணிகிட்டே போகலாம். வாழ்க்கையில இருக்குற விசேஷத்தன்மை சொல்லப்படல. ஷேக்ஸ்பியரை இன்னைக்கும் ஒரு கவிஞராத்தான் எடுத்துக்க முடியுது. அவரு நாடகத்துல எல்லாம் பெருசா செஞ்சார்னு சொல்ல முடியாது. 200, 300 வருஷங்கள் பின்னால வந்தவங்கதான் செஞ்சி இருக்காங்க. ஷெரிடன்னு ஒருத்தர் செஞ்சியிருக்கார். அப்புறம் இப்சன்னு ஒருத்தர் செஞ்சி இருக்கார். ஷேக்ஸ்பியர் நாடகமெல்லாம் பொன்மொழிகளாகத்தான் இருக்கு. நாடகமாப் பெருசா ஒண்ணும் இல்ல. தமிழ்லயும் அதிகம் செய்யுல. ஆங்கிலத்துல செஞ்சு நான் பார்த்து இருக்கேன். ‘மெட்ராஸ் பிளேயர்ஸ்’ நிறைய நாடகங்கள் நடத்தி இருக்காங்க. இங்க யதார்த்தத்தை வந்து மட்டமா நினைக்கிறாங்க. அதை யதார்த்தம்னே தெரியாத மாதிரி ஒரு நிகழ்ச்சியை சுவாரஸ்யமா காண்பிச்சு இருப்பாங்க. ஆனா இதெல்லாம் மேல் நாட்டு நாடகங்கள்ல இருந்து எடுத்து செஞ்சி இருக்காங்க.விஜய் டெண்டுல்கர்ன்னு மராத்தியில ஒரு நாடகக்காரர் அவரு பண்ணுவார். ஆனா அதுல தீவிரத்தன்மை இருக்கும். அவரு ஒரு நல்ல நாடகாசிரியர். தமிழைப் பொறுத்த அளவில் நான் எல்லா நாடகத்தையும் பார்த்துட்டேன்னு சொல்ல மாட்டேன். பார்த்த அளவுக்கு அதிகமாக கவர்ல. எனக்கும் வயசாயிடுத்து இல்லையா? ஒரு மணிநேரம் உட்கார்ந்து நாடகம் பார்க்குற நிலையில இப்ப என் உடம்பு இல்ல.தீராநதி : வ.வே.சு. ஐயர். கு.ப.ரா. புதுமைப்பித்தன் என்று மூத்த படைப்பாளிகள் பற்றியும் நகுலன், ஜெயகாந்தன், கோபிகிருஷ்ணன் என்று பெரும் பட்டியலிடும் அளவிற்கு சகபடைப்பாளி பற்றியும் நிறைய எழுதி இருக்கிறீர்கள். இந்த ஆர்வத்திற்கான அடிநாதம் எது?அசோகமித்திரன் : பெரிய ஆர்வமன்னு ஒண்ணு கிடையாது. சிலதைப் படிக்கிறோம் அது நன்னா இருக்கு. அது எல்லாருக்கும் படிக்கக்கூடிய ஒரு வாய்ப்பு இருந்திருக்காது. இந்த மாதிரி நிகழ்ந்திருக்கு சொல்லலாம். ஒரு நூல் இருக்குன்னு சொல் லறதுக்கும் ஒரு எடம் வேணும். அந்த எடம் கிடைச்சது. ஆனா க.நா.சு. ஒரு இயக்கமா இதை நடத்தி வந்தாரு. அடுத்து சி.சு. செல்லப்பா. இலக்கிய விமர்சனம் இலக்கிய படைப்புகள்னு தொடர்ந்து செய்து வந்தாங்க. நான் அந்த மாதிரி இயக்கத் தலைவருன்னுயெல்லாம் என்னை சொல்லிக்க மாட்டேன்.
தீராநதி : அப்படி நீங்கள் எழுதிய விமர்சனங்கள் முன்னுரைகள் கறார்தனம் இல்லாதவை என்று கருத்து நிலவுகிறது. இதை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள்?
அசோகமித்திரன்: முன்னுரையில் நாம அப்படி கறாரா இருக்கக்கூடாது. முன்னுரை எழுதச் சொல்லறதோட நோக்கமே இன்னாரை இந்த நாவல படிக்க வெச்சிடனும் என்பதுதான். அவங்களைப் போய் இது மோசமா இருக்குன்னு சொல்லக்கூடாது. கூடுமான வரைக்கும் அதுல இருக்குற நல்ல அம்சங்களை எடுத்துக்காட்டலாம். சாதாரண படைப்புலயும் எங்கேயாவது ஒரு எடத்துல ஒரு பொறி இருக்கும். அந்தப் பொறியை எடுத்துக்காட்டிப் பேசலாம். இதுல வந்து ஏன் இந்த மாதிரி இருக்கீங்க? அது தவறு இல்லையான்னு கேட்கலாம். அப்படியெல்லாம் ஒண்ணும் கிடையாது. வாழ்க்கையில நெறைய விஷயங்கள் பெரிய நன்மைக்காக சிறிய விஷயங்களைத் தியாகம் பண்ணவேண்டி இருக்கும். அதனால கறாரா செய்யணும்னு, சொல்லணும்னு நெனைச்சா அது ஒரு தன்மைதான். நான் இல்லன்னு சொல்லல. அதனால இந்த முன்னுரைகள்ல பொதுவா எனக்கு நம்பிக்கை கிடையாது. இப்ப வந்து ஒரு அம்மா எஸ்டிடி போட்டு பேசறாங்க. நீங்க முன்னுரை எழுதித் தரணும்னு. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன். ஏன்னா பத்துபக்கம் சேர்ந்தாப்ல படிச்சம்னா பத்தாம் பக்கம் வர்றச்சே முதல் பக்கம் என்ன படிச்சோம்னு மறந்து போயிடுது.
தீராநதி : பாஸிடிவ் அப்ரோச்சான முடிவையே உங்களின் பெரும்பாலான கதைகள் கொண்டிருக்கிறது?
அசோகமித்திரன் : பாசிடிவ் அப்ரோச்ல ஒண்ணும் தவறு கிடையாது. இது என்ன தெரியுமா? பாசிடிவ் அப்ரோச்ன்னாலே ஒரு உண்மையைப் பார்த்து நாம செய்யறோம். சில பேரு எப்ப பார்த்தாலும் நெகடிவ்வாவே பேசுவா. ஜாக்ரதையா போங்க... கீழ விழுந்துடுவேன்னு. இவர் என்ன சொல்றது. போறவனுக்குத் தெரியாதா நாம கீழ விழுந்துடுவோம்னு. அப்படி ஒரு பயமெல்லாம் தேவயே இல்ல. உலகத்துல நெறைய பேரு சங்கடப்படுறாங்க. எனக்கு இன்னும் நெறைய விஷயங்கள் வருத்தமா இருக்கு. நாடு துவேஷம். மொழி துவேஷம். உலகத்த பார்த்தாலும் துவேஷம். யாரை யார் நம்பறதுன்னே தெரியுல. பார்லிமெண்ட் தாக்கப்பட்டப்போது அம்பது பேரு செத்துபோனா. இந்த அம்பது பேருக்கும் அம்மா அப்பா இருக்காங்க. கொழந்தை குட்டி இருக்காங்க. மனைவி இருக்காங்க. எனக்கு வந்து அஃப்சல் குருவ தூக்குல போடணுமா.? தூக்குல போடக்கூடாதாங்குறதுல நான் கலந்துக்கல. அவங்களுக்கு நியாயங்கள் செய்யப்படலேன்னு சொல்றாங்க. இந்த ராணுவத்துக்கு வர்றவங்க இருக்காங்களே... வேற எந்தப் பணிய செய்யமுடியாத நிலையிலே ஆர்மிக்கு வர்றாங்க. திடீர்ன்னு சாவு வர்றதுக்கு வாய்ப்புகள் நெறையா. ராஜீவ்காந்தி அனுப்புன அமைதி படையிலக் கூட 6000, 7000 பேர் செத்துப் போனதா சொல்றாங்க. நாம அவங்களை பலி கொடுத்த மாதிரிதான் ஆயிடுச்சு. என்னத்த பெருசா நம்மலால சாதிக்க முடிஞ்சது? இன்னும் அவங்க சண்டைப்போட்டுகிட்டுதான் இருக்காங்க. இந்த ராணுவ வேலையே அந்த மாதிரிதான். காவல்காரனா இருக்குறானே அவன் என்ன பாவம் செஞ்சான். முதல்ல அவனோட (எதிரிகள்) கண்ணுக்குத் தெரியுறது காவல்காரன்தான். அதனால அவன முதல்ல அடிச்சுடுறது. இராணுவத்துல இருக்குறவன் யாருன்னா காவல்காரன். அவன் எங்கிருந்து வந்தவன்? கிராமத்துல இருந்து வேலை கிடைக்காம ராணுவத்துக்கு வந்தவன். அவன் செத்துப்போறான். என்ன ஒரு ட்ராஜிடி.
தீராநதி : உங்களின் கதை மாந்தர்கள் பெரும்பாலும் நகரவாசிகள். கிராமம் தொடர்பான அனுபவமே உங்களுக்குக் கிடைக்கவில்லையா?
அசோமித்திரன் : எனக்கு கிராம அனுபவமே இல்லன்னுதான் சொல்லணும். சிகந்தராபாத்துல பொறந்து வளர்ந்தவன் நான். அது ஒரு சின்ன கண்டோன்மெண்ட். அதனால எனக்கு எந்த அனுபவம் கொறைவா இருக்கோ, அந்த அனுபவம் கதையில கொறைவா இருக்கும். அதை நான் ஒரு இழப்பா நெனைக்கறதில்ல. நகர வாழ்க்கையில் இருக்குற சின்னச் சின்ன விஷயங்கள் எழுதுறதுக்கு நெறையா இருக்கு. எவ்வளவோ இன்னும் எழுதப்படல. வீடு மாத்திகிட்டு வந்தபோது ரேஷன் கார்டு மாத்த ஏற்பட்ட அனுபவம் இருக்கே, அதை வெச்சி பெரிய நாவலே எழுதலாம். அவ்வளவு தீவிரம் இருக்கும்.
தீராநதி : Commual harmony பற்றி இன்று நிறைய பேசுகிறார்கள். விவாதிக்கிறார்கள். ஆனால் நீங்களோ உங்களின் கதைகள் மூலம் அன்றே அதைச் சாத்தியமாக்கி இருக்கிறீர்கள். இது தன்னியல்பானதா? திட்டமிட்டதா?
அசோகமித்திரன் : நாங்க இருந்த ஏரியா இருக்கே.... அவுங்க அவுங்க அவங்களோட பழக்கத்தை வெச்சிக்குவாங்க. ஆனாலும் ஒண்ணா இருந்துக்குவாங்க. இப்ப சட்டைக்காரங்க இருக்காங்கன்னா அந்தப் பழக்கத்தோட இருப்பாங்க. முடிஞ்சா ஞாயிற்றுக்கிழமயானா சர்ச்சுக்குப் போவாங்க. அதே மாதிரி மூணு முஸ்லிம் இருந்தாங்க. அதுல ஒருத்தர் மட்டும் தமிழ் முஸ்லிம். அப்புறம் முதலியாரு, நாயுடு, அது கலப்படமான எடமா இருந்தது. அதை நீங்க நிர்ணயிக்க முடியாது. நீங்களே ஒரு எடம் இருந்து தனியா தேடிகிட்டுப் போனாதான். இங்க (சென்னை) ஒரு மொழி பெயர்ப்பாளர் அப்துல்லான்னு இருந்தார் _ கோழிக்கோடுக்காரர். அவர் பஷீரை, ஆங்கிலத்துல மொழிபெயர்த்தவர். பஷீர் கூட கோழிக்கோடுகாரர். அவரு (அப்துல்லா) என்னோட நல்ல பழக்கம். 1960_கள்ல இருந்தும் 80 வரைக்கும் இயங்கிட்டு இருந்தார். ஒரியண்ட் லாங்மன்ல வேலை, யுனஸ்கோவுலயே இவரோட மொழிபெயர்ப்பைத்தான் அங்கீகரிச்சு வெச்சி இருக்காங்க. அவரு மாம்பலத்துல குடி இருந்தார். அங்கப் போனப்பதான் தெரிஞ்சுது முஸ்லிம்களுÊக்கு மாம்பலத்துல சுலபமா வீடு கிடைக்காதுன்னு. ஒரு பெரிய அப்பார்ட்மெண்ட் எடுத்து பதினைஞ்சு குடும்பங்க இருந்தாங்க. தாமு ரெட்டி தெருவ எடுத்துக்கோங்க ஒரு வீடு கிடையாது. இப்ப வந்துட்டாங்க அந்தக்காலத்துல முடியவே முடியாது. சாத்தியமே இல்ல... முஸ்லிம்கள்லாம் கறி சமைப்பாங்கன்னு தரமாட்டாங்க. எதுக்கு சொல்றன்னாக்க இந்த மாதிரி ஒரு விஷயங்கள் ‘டக்’குன்னு ஸ்ட்ரைக் (Strike) ஆவுது.அந்த நாள்ல ஒட்டர்கள்னு இருந்தாங்க. அவங்களெல்லாம் நகரசுத்தி வேலை பார்ப்பாங்க. இப்ப வந்து அந்த மாதிரி இல்ல. ட்ரை லாவட்டரின்னு பேரு. ட்ரை லாவட்டரின்னா அன்ன அன்னைக்கு வந்து எடுத்துகிட்டுப் போகணும். எங்க வீட்ல ஒரு அம்மா ஒருத்தி இருந்தா. தினமும் அவளோட சண்டை. அதாவது நாங்க மூணுநாள் வர்லேன்னு சொல்லுவோம். அவ வந்தேன்னு சொல்லுவா. வர்லங்கறது நமக்குத் தெரியும். இருந்தும் சொல்லுவா. நான் அந்த அம்மாவைத் தேடிகிட்டு ஒரு நாள் அவ வீட்டுக்குப் போனேன். அங்க போனப்பதான் தெரியுது அந்தக் காலனியே கம்லீட்டா ஒட்டர்கள்னு. எதுக்கு நான் சொன்னேன்னா தனிப்பட்ட வாழ்க்கைல இருக்க இந்த இழைகள் வந்து எல்லாத்துக்கும் சொல்றதுக்கு முடியுறதில்ல. நான் என்னவோ கொஞ்சம் கொஞ்சம் தான் முயற்சி பண்ணி இருக்கேன்.சிகந்தராபாத்துல இருக்குற முதலியாருங்க இருக்குறாங்களே அவங்க வீட்லயே உருதுதான் பேசுவாங்க. நான் அவங்க வீட்டுக்குப் போவேன். முஸ்லீம் நவாப் மாதிரி டிரஸ் பண்ணிகிட்டு போட்டோ எடுத்து வீட்ல மாட்டி வெச்சியிருப்பாங்க, அவங்கள பார்த்தா முதலியாருன்னே தெரியாது. ஹைதராபாத்துல அப்ப இந்தியாவுடைய டாங்கெல்லாம் (துருப்பு) வந்துடுச்சு. அங்க இருக்குற முஸ்லிம்க சின்னச்சின்ன கத்தி வெச்சிகிட்டு ‘டெல்லி பக்கடோ’ன்னு கத்திகிட்டு திரிவாங்க. ஓட்டை கத்தி கபடா வெச்சிட்டு எப்படி இவங்கள டெல்லிய புடிக்க முடியும். கொஞ்சம் கூட பொருத்தமே இருக்காது. படிக்கல, எப்படி யோசிக்கமுடியும் பாவம். இப்ப பாருங்க ஹைதராபாத்தோட அடையாளமே மாறிப் போச்சு. எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு. ஆகவே, இது எதுவும் திட்டமிட்டப்படி நடக்கல. இயல்பாகத்தான் நடந்தது. இங்க வந்த பிறகுதான் நெனைச்சுப் பாக்குறப்போ நமக்கே தெரிய வருது.
தீராநதி : தமிழிலக்கியப் போக்கில் கணையாழிக்கு ஓரிடமுண்டு. அதோடு இருபத்தைந்தாண்டுகள் சம்மந்தப்பட்டிருந்தவர் என்பதால் கேட்கிறேன். இன்று அப்பத்திரிகை பற்றி உங்களின் அவதானிப்பு என்ன? திருப்தி தரக்கூடிய அளவுக்கு அதன் செயல்பாடுகள் உள்ளதா?
அசோகமித்திரன்: கணையாழிக்கு நான் உரைநடைக்கு மட்டும் பொறுப்பா இருந்தேன். அதுக்கு நெறைய ஆசிரியர்கள் இருந்தாங்க. டெல்லியில இருந்து கடைசி நிமிடம் சொல்லுவாங்க. இதைப் போடுங்க இதை நிறுத்துங்கம்பாங்க. இதைப் போடணுமா போடக்கூடாதான்னு வர்றப்ப சண்டை வந்திடும். அதை நன்னா கொண்டுவரணும்னு எனக்கு ஒரு ஈடுபாடு இருந்தது. ஈடுபாடு இருக்குறச்ச சரியா செய்யலாம். ஆனா, இன்னைக்கு நின்னுப் போச்சுன்னு சொல்லறாங்க.அப்ப நான் இருந்தப்ப நல்ல கதையா இருந்தா எழுதினவனுக்கு லெட்டர் எழுதி சொல்லிடுவேன். கதைய நாங்க எவ்வளவு நாள் தாமதமானாலும் கண்டிப்பா வெளியிடுவோம்னு எழுதுவேன்.கதையில இது சரியா இருக்கு. இத கொஞ்சம் மாத்தணும்னு இருந்தா அதையும் எழுதிடுவேன். தொடர்ந்து பத்திரிகை இயங்க ஒரு துணிவு வேண்டி இருக்கு. அந்தத் துணிவை எடுத்துகிட்டு செஞ்சது. இன்னைக்கு எப்படியோ தெரியுல. என்ன பணி செய்யும்படியா இருந்ததோ அந்தப் பணிய நன்னாச் செய்யணும்னு நினைக்கிறேன். செஞ்ச வரைக்கும் திருப்தியா இருந்தது.
தீராநதி : சிகந்தரபாத்தில் நீங்கள் இருந்த காலகட்டத்தில்தான் இந்தியாவுக்கு சுதந்திரமே கிடைத்தது. சுதந்திரக் கொண்டாட்ட நிகழ்ச்சிகளைக் கேட்க அன்று ரேடியோ மட்டுமே தகவல் சாதனம். ரேடியோவின் வால்வ் சூடேறுவதற்கே நான்கு மணிநேரம் பிடிக்கும். பிறகு தான் செய்தி கேட்க முடியும் என்று எழுதியிருந்தீர்கள். குறைந்த அறிவியல் சாதனங்கள் இருந்த காலமது. ஆனால் இன்றோ சகலமும் ஒளி வேகத்தில்... இரு அனுபவமும் வாய்க்கப்பெற்றவர் நீங்கள். இன்றைய தகவல் யுக வளர்ச்சி பற்றி?
அசோகமித்திரன்: ஆகஸ்ட் 14, 1947_ இராத்திரியெல்லாம் ரேடியோ கேட்டோம். சிகந்தராபாத்தில் எங்க வீட்ல இருந்த ஐந்து வால்வ் ரேடியோ மூலமா சென்னை ஒலிபரப்பு நிலைய நிகழ்ச்சிகளை இராத்திரி வேளையிலதான் ஓரளவுக்குக் கேட்க முடியும். ரேடியோவில் வரும் கரகரப்பு சத்தத்தைப் பொருட்படுத்தாம கேட்போம். ஹைதராபாத்திலயும் ரேடியோ நிலையம் இருந்தது. அது நிஜாம் அரசாங்கத்தின் ரேடியோ. இந்திய சுதந்திரக் கொண்டாட்டங்களை ஒலிபரப்பியே ஆகணும்னு கட்டாயம் அதுக்கு இல்ல.நாங்க இருந்த சிகந்தராபாத்தும் _ நிஜாமின் தலைநகர் ஹைதராபாத்தும் பக்கத்துப் பக்கத்து ஊர்கள் என்றாலும், இரண்டிலும் வேறு வேறு போலீஸ் படைகள். நிஜாம் போலீஸ் முழுக்க உருதுமொழியில் இயங்கும். சிகந்தராபாத் போலீஸ் தெலுங்கு, இங்கிலீஷ்ல இயங்கும். நிஜாம் போலீஸ் நீலக்கலருல யூனிஃபார்ம் போட்டு இருப்பாங்க. சிகந்தரபாத் போலீஸ் காக்கிச்சட்டை. சிகந்தராபாத் போலீஸ் ஸ்டேஷன்ல சைக்கிள் லைசன்ஸ் வாங்கினா அது பித்தளைத் தகட்டில் இங்கிலீஷ் எழுத்துகள்ல எழுதி இருப்பாங்க. ஹைதராபாத் போலீஸ் ஸ்டேஷன்ல அதே லைசன்ஸ் தகரத்தகட்டுல உருதுல எழுதினதா இருக்கும். யாரோ ஒருத்தர்கிட்ட லைசன்ஸ் வாங்கினா ரெண்டு நகரத்துக்கும் போதுமானதா இருந்தது.போலீஸ்காரங்கள விரல்விட்டு எண்ணிடலாம். ஆனாலும் அவ்வளவு கட்டுப்பாடு. ரோட்ல எந்த வண்டியும் ரூல்ஸ்ஸ மீற முடியாது. ஆறு மணிக்கு சூரிய வெளிச்சம் இருந்தாலும் சைகிள்ல விளக்கு ஏத்தியிருப்பாங்க.உண்மையில சொல்லணும்னா. இந்தியாவோட சுதந்திரம் நிஜாம் சமஸ்தானத்துக்கு மகிழ்ச்சியான நிகழ்ச்சியா இல்ல. ஜனவரி 30, 1948_ல் காந்தி செத்துப்போனது எங்களுக்கு ஏழு மணிக்குத்தான் தெரியும். ஆனா அவரு 5.10 க்கு செத்துப்போயிட்டார். ரேடியாவுல 9 மணிக்குதான் நியூஸ். இப்போ மணிக்கு ஒரு தரம் நியூஸ் மாதிரி அன்னைக்கு இல்ல. 10 மணிக்கு ரேடியோவே முடிஞ்சி போயிடும். இப்படி இருந்த சமயத்துலயும் உலக இயக்கத்துல நாங்க பங்கு பெற்றது இருக்கே அது ஒண்ணும் தடைபடலன்னுதான் நான் சொல்லுவேன். இப்ப வந்து டான்டான்னு எல்லாம் தெரிஞ்சுடுது. நாம என்ன என்னமோ பார்க்குறோம். தாமதமா தெரிய வந்தாலும், அந்த அனுபவங்கள் இருக்கே நிஜ அனுபவங்களாகவே இருந்தது. தகவல் சாதனங்களின் வேகம் கொஞ்சம் தாமதமாக இருந்தாலும் உலக இயக்கத்தில் எங்களின் ஒரு பங்கு இருக்கே அது வந்து குறையலன்னுதான் நான் நெனைக்கிறேன்.
தீராநதி: இந்து_முஸ்லிம் சண்டை சச்சரவுகள் கலவரங்கள் பற்றி அதிகம் எழுதி இருக்கும் தமிழ் எழுத்தாளர் நீங்கள். இரு தரப்புகளுக்கும் இன்று பகை தீர்ந்தபாடில்லை என்பது போல ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படுகிறது. இதுவெல்லாம் நிஜமா என்று தெரியவில்லை..? அன்றைய உங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள முடியுமா?
அசோகமித்திரன்: நிஜாம் சமஸ்தானத்தில் அந்த ஆண்டில் (1947) இந்திய சுதந்திரத்தை ஒட்டி விதர்பா ஏழை முஸ்லிம்கள் அகதிகளாக வந்து சேர்ந்தாங்க. நிஜாம் சமஸ்தானத்திலிருந்து ஹிந்துக்கள் பல சமஸ்தானத்தை விட்டு வெளியேறினாங்க. சில குடும்பங்கள் நிரந்தரமாவே வெளியேறிப் போயிட்டாங்க. அதைப் பார்த்ததும் நிஜாம் சர்க்கார் உடனே ஒரு உத்திரவு போட்டது. யாரும் சரியான காரணம் இல்லாம சமஸ்தானத்தை விட்டு வெளியேறக் கூடாதுன்னு. யார் இரயில்ல போக வேண்டுமானாலும் டிக்கெட் வாங்கும் பணத்தோட போலீஸ் பர்மிட்டும் வெச்சிருக்க வேண்டும். இந்தியாவுக்குள்ளாகவே பாஸ்போர்ட் இருந்தாதான் போகமுடியும்.இந்த உத்தரவு போட்டவுடன் சிகந்தராபாத்தில் பதட்டம் இன்னும் ஜாஸ்தியாயிடுத்து. எங்களுக்கு வெளியூர் எங்க போறது... யார் வீட்ல போய் தங்குறதுன்னெல்லாம் யோசிக்க முடியல. ஆனா ஊரைவிட்டுப் போயேயாகணும்னு முடிவெடுத்துட்டோம். பாஸ்போர்ட், பர்மிட் விஷயத்துல தடை வரக்கூடாதுன்னு அப்பாகிட்ட ரெண்டு மனுக்கள் எழுதிக் கொண்டு நான் சிகந்தராபாத் கோர்ட் ஆபீசுக்குப் போனேன். சிகந்தராபாத்தில டிசம்பர் மாதத்துல மழை நின்று போய் பனி பெய்யும். டிசம்பர் பனியில கண் பார்க்கும் எடமெல்லாம் பெரிய ஓவியம் போல இருக்கும்.பெரிய பெரிய காம்பவுண்டுச் சுவர்கள் நிற்கும், ரோட்ல ரெண்டு பக்கமும் இருக்குற மரங்கள் ஒரு குகைமாதிரி தெரியும். அந்தக் குகைக்குள்ள முன்னேறி கோர்ட் ஆபீஸுக்குப் போய் சேர்ந்தேன். அங்கேயேதான் போலீஸ் ஸ்டேஷனும் இருந்துச்சு. அங்க எனக்கு முன்னாலயே டஜன் கணக்குல மக்கள் கூடி இருந்தாங்க. எப்படியோ போராடி பாஸ்போர்ட் வாங்கிட்டோமே தவிர ஊரெதுக்கும் போகல. வட இந்தியாவில் அந்த நாள்ல நடந்த படுகொலைகளை மனம் ஏற்றுக்க மறுத்தது. இருந்தும் உறவினர் வீட்டுக்கு ஒரு லட்டர் போட்டோம். மறு தபாலில் பதில் எழுதிப் போட்டுவிட்டாங்க அவங்க. இங்கு விலைவாசி மிக அதிகம்னு.இதற்கிடையில் இந்திய அரசுக்கும் நிஜாமுக்கும் தற்காலிக ஒப்பந்தம் ஒண்ணு கையெழுத்தாச்சு. ஆனா இது எந்தச் சிக்கலையும் தீர்க்கல. சாதாரண மக்களுக்கு உணவுச் சாமான்கள் கிடைப்பதே அரிதாக இருந்தது. நகரப் பகுதிகள்ல பகிரங்கமாக காஸிம் ரஸ்வி என்ற ஒரு இனவாதத் தலைவரின் ரஜாக்கர் குழுக்கள் ராணுவப் பயிற்சி எடுக்கத் தொடங்கினாங்க. அந்தப் பயிற்சியை வெச்சிகிட்டு மிகச் சாதாரண ராணுவ ஆயுதத்தைக் கூடக் கையாள முடியாதுன்னு ஒரு குழந்தைக்குகூடத் தெரியும். ஆனா அன்று அந்தக் ‘காச் மூச்சு’ கூச்சல் கூப்பாடு இலட்சக்கணக்கான மக்களைக் கதிகலங்க வெச்சது. காரணம் _ அவர்கள் ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்கள் அவ்வளோதான். காந்திஜி சாகும் வரை உண்ணாவிரதம்னு அறிவிச்சது சிகந்தராபாத், ஹைதராபாத்துல இருந்த இந்துக்கள் நிலையைக் கொஞ்சம் தீவிரமாக்கியது. ஆச்சர்யமா இருக்கிறது; இவ்வளவு அமளி துமளியிலயும் அந்த ஊர்ல தெலுங்கு சினிமா படங்கள் வரும். மாசக் கணக்குல ஓடும். நாங்களும் ரெண்டு மாசங்கள் மூன்று மாசங்களுக்கு ஒரு முறை ஊர்வலமாக நடந்து போய் அந்தப் படத்தைப் பார்த்துட்டு வருவோம். ஒரு வாரம் தவறாமல் ஒரு மைல் தள்ளியிருந்த பிள்ளையார் கோவிலுக்கு மறுபடியும் ஊர்வலம் போய் வருவோம். இன்று இதையெல்லாம் திரும்ப நினைத்துப் பார்க்கும்போது அப்போ அனுபவித்த பீதி, கிலியெல்லாம் ஆதாரமற்றதுதானான்னு கூடத் தோன்றும். காலம் கடந்த பின்னாடி துன்பங்கள் அவற்றின் கூர்மையை இழந்துவிடுகின்றன.சமீபத்துல ஒரு இந்திய பெண் எழுத்தாளர் கதையை மொழி பெயர்ப்புல படிச்சேன். ‘இந்துசார் உசேன் ஐ ஆம் வெய்டிங் ஃபார் யூ’ங்கறது கதையோட பேரு. இந்துசார் உசேன் பாகிஸ்தான் ரைட்டர். அந்த அம்மாவோ இண்டியன் ரைட்டர். கதை என்னான்னா இந்த அம்மாவோட அப்பா காணாம போயிடுறார். அவர் கலவரத்துல மாட்டி பாகிஸ்தான் போயிட்டதா தெரியவருது. இந்த அம்மா பாகிஸ்தான்ல இருந்து வர்ற கதைகள்ல தன்னோட அப்பாவ பத்தி ஏதாவது சேதி வந்துருக்கான்னு தொடர்ந்து படிக்குறா. கலவரம் முடிஞ்சு அம்பது வருஷமாயிடுச்சு. ஆனாலும் இன்னும் படிக்கிறா. இதை படிச்சப்போ அந்தப் பத்திரிகைக்கு கதை நல்லா இருக்குன்னு எழுதினேன். முடிஞ்சா அந்த அம்மாவுக்கு இதைத் தெரிவிங்கன்னு சொன்னேன். அந்த அம்மாவுக்குத் தகவல் கிடைச்சு பேசினாங்க. இப்ப நான்கு ஐந்து வருஷமாத்தான் இது மாதிரியா படைப்புகள் நிறைய வருது. அந்தக்கால பிரச்னையை மையமாக வைத்து படைப்புகள் நிறைய வருது. அந்தக்காலத்துல பிரச்னை சண்டைகள் இருந்துச்சு. ஆனா இந்த மாதிரி ஒழிச்சிடணும்னு ஒரு வெறி இருந்ததா எனக்குப்படல.
தீராநதி: சிறுகதைகளின் வெளி தமிழில் சுருங்கி வருவதாக ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. சிறுகதை வளர்ச்சி குறித்துப் பேசுவோமா?
அசோகமித்திரன்: சிறுகதை நெறைய வரலன்னு சொல்ல முடியாது. நெறைய எழுதப்படுறது. ஆனா அதை பத்திரிகைகள் வெளியிடுறதான்னு பார்த்தா கிடையாது. அப்படியே போட்டாலும் ஒண்ணே ஒண்ணுதான். சிறுகதைகள் நெறைய வந்துகிட்டுதான் இருக்கு.
தீராநதி: சிறுபத்திரிகைவாசிகள் ஒரு காலத்தில் வெகு ஜன தளத்தில் பங்கு கொள்ளத் தயங்குவார்கள். இன்றோ நிலை தலைகீழ். சிற்றிதழில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள் வெகுஜன ஊடகத்திலும் பங்களிப்புச் செய்கிறார்கள். இது ஆரோக்கியத்தின் வெளிப்பாடா. நீத்துப் போனதற்கான அடையாளமா?
அசோகமித்திரன்: ஆரம்பத்துல இருந்தே நான் வந்து பத்திரிகைகள்ல பாகுபாடு பாக்குறத வெச்சிகிட்டதே கிடையாது. பத்திரிகைகள்ல துவேஷம் பார்க்கறது கூடாதுன்னு நெனைப்பேன். எல்லோருக்கும் ஒரே போலதான் எழுதுறேன். இவனுக்கு ஒரு கதை. அவனுக்கு ஒரு கதைன்னு எழுதறது இல்ல. ‘மாலதி’ன்னு ஒரு கதை எழுதி 1974_வாக்குல குமுதத்துக்கு அனுப்பி வைச்சிருந்தேன். அந்தக்கதை வெளி வரல. அப்ப வந்து குமுதம் ஆபீஸுக்கே போய் என்ன அறிமுகப்படுத்திகிட்டு என்னோட கதையைப் போடலயினாலும் பரவா இல்லை. என்கிட்ட அதோட காப்பி இல்லை அத கொடுத்துடுங்களேன்னேன். அவங்க இல்ல இல்ல அந்தக் கதை தீபாவளி மலரில வருதுன்னாங்க. எனக்கு நம்பிக்கை வரல. எங்க காட்டுங்க பார்ப்போம்ன்னேன். உடனே காண்பிச்சாங்க. அந்த வருஷம் சொன்ன மாதிரி தீபாவளி மலர்ல வந்துச்சு. இத ஏன் சொல்லறன்ன, அப்ப போட்டோ காப்பியெல்லாம் கிடையாது. ஒரு கதை எழுதுனா, அத படி எடுத்துதான் அனுப்பி வைக்கணும். அதுக்குள்ள அலுத்துப் போயிடும். சிலநேரம் அப்படியே அனுப்பிடுவோம். அது குமுதத்துல வந்ததால எந்த விதத்துலயும் குறைஞ்சு போயிடல. ஆனா சில நேரம் நம்ம கதையோட தலைப்பையே மாத்தி வெளியிட்டுடுவா ‘குமுதம்’. ஒரு கதை அப்படிதான் ‘விட்டேன் ஒரு விதை’ன்னு மாத்தி போட்டாங்க. அப்புறம் ‘கொண்டு வா பெட்ரோல’ன்னு போட்டாங்க. மத்தவங்கயெல்லாம் என்ன கிண்டல் பண்ணாங்க. மாத்துனா என்ன? படிக்குறவனுக்குத் தெரியாதா நல்லதா கெட்டதான்னு சொல்லுவேன். அதனால சிறு பத்திரிகைக்கும் பெரிய பத்திரிகைக்கும் இப்ப வித்தியாசமெல்லாம் இல்லாம போயிடுச்சு. என்ன இவங்களவிட அவன் கொஞ்சம் சினிமா செய்திய அதிகமா போடுவான் அவ்வளவுதான். சிறு பத்திரிகைகள் அத்தியாவசியமா இருந்த ஒரு காலகட்டம் முடிஞ்சுப் போயிடுத்து.
தீராநதி: பேச்சு மொழியில் இருக்கும் ஒலிச்சிதைவை அப்படியே உரைநடையில் பயன்படுத்துவது கடினமாக இருக்கிறது. பூர்ணமாக கையாள முடியவதில்லை. அப்படியே கையாள முடிந்தால் அப்படைப்பு ரசிக்கும் விதமாய் இருக்குமா?
அசோகமித்திரன்: சிலபேரு மண்வாசனைக்காக பண்றோம்ன்னு பண்றாங்க. அது என்ன ஆயிடுறதுன்னா பேச்சுத் தன்மைக்கு அதிகமாகப் போய் புரியாம போயிடுறது. கொஞ்சமா இருந்தா பரவாயில்லை. வரிக்கு வரி புரியாம போயிடுச்சுன்னா ஒரு தொடர்பே ஏற்படுத்திக்க முடியாம போயிடும். மொழி பெயர்ப்பு எடுத்துக்கிட்டா அவனால எப்படி அந்தப் பேச்சு மொழிய, எப்படி மொழி பெயர்க்க முடியும்.என்னதான் நாம பண்ணாலும் ஆங்கிலத்துல இருக்குற ஒரு ஸ்டேண்டர்டு இங்கிலீஷ்லதான் பண்ணமுடியும். முழுக்க முழுக்க பேச்சுலையே அந்த அனுபவத்த தர்றேன்னு வைச்சிகிட்டா கஷ்டம். ஆனா சில தகவல்கள் கொடுத்து புரிய வைக்கலாம். இதுக்கு உங்களுக்கு நீங்களேதான் ஒரு திட்டம் வகுத்துக்கணும். சிலபேர் நிறைய செய்யறாங்க. அதுக்குன்னு பொதுவான மொழியிலேயே எழுதிட்டுப் போயிட்டா இவர் என்ன ஜாதின்னே தெரியாது. இங்க நாம ஜாதின்னு சொல்றப்ப ஒவ்வொரு ஜாதிக்கும் ஒரு அடையாளம் இருக்கும். அதனால அந்தக் கதைக்கு தனித்தன்மை வந்திடுது. அதெல்லாம் இல்லாம போயிட்டா எல்லாமே ஒரே மாதிரி ஸ்டேண்டடா போயிடும்.இப்பக்கூட பாமான்னு ஒரு ரைட்டரோடைய கதையை ஆங்கிலத்துல மொழிபெயர்த்திருக்காங்க. அந்த மொழி பெயர்ப்புக்கே அவார்டெல்லாம் கிடைச்சது. ஆனா அந்த மொழி பெயர்ப்பு மேலயும் விமர்சனங்கள் வர்றது. நான் இரண்டையும் படிச்சேன். தமிழ்ல இதுவரைக்கும் அந்த Form வரல. வெளியில இருந்தும் நாமதான் மொழிபெயர்த்து படிக்கிறோம். அப்ப நம்மளோடத யாரு மொழி பெயர்க்குறாங்க? வெள்ளைக்காரன்தான் பண்ணணும். எந்த வெள்ளைக்காரன் வர்றான் நம்மளேதான் பண்ண வேண்டி இருக்கு. ஆக, ஆங்கிலத்துல இருந்தும் நாமதான் பண்றோம். தமிழ்ல இருந்து ஆங்கிலத்துக்கும் நாமதான் பண்றோம். இது ஒரு விதத்துல சங்கடமானதுதான்.
தீராநதி: இரண்டாம் உலகப்போரின் போது இந்தியர்கள் அனுபவித்த சிராய்ப்புகள் அதிகம். அதைக் கண்கூடாக உணர்ந்தவர் நீங்கள். ரொட்டிக்கும் சீனிக்கும் ரேஷனில் காத்துக்கிடக்க வேண்டி இருந்தது என்றெல்லாம் எழுத படித்திருக்கிறோம். அன்று ஜெர்மனி.. இன்று அமெரிக்கா.. இரண்டாம் உலகப் போர் பற்றிப் பேசுங்களேன்?
அசோகமித்திரன்: தலையை எண்ணித் தானியம் கொடுத்தாங்க. அரிசியெல்லாம் கிடையாது. கோதுமை கிடையாது. சோளம். ரேஷன் கடை, ஆபீஸ், அதிகாரின்னு லஞ்சம் கொடுக்கணும். தெருவிளக்குகள் குல்லாய் மாதிரி ஒன்றைத் தொங்கவிட்டாங்க. வெளிச்சம் கம்பத்தின் கீழே மட்டும் அடிக்கும். வீட்டு வெளிச்சம் இரவில் வெளியே தெரியக் கூடாது. ஜன்னலை மூடிவை. சாலையில் மிலிடெரி வண்டிகளைப் பார்த்தாலே பதுங்கத்தான் வேண்டும். பணம் கிடைச்சவங்க, கிடைக்காதவங்க இருவருமே தடுமாறினாங்க. கண்ணியமங்கறது ரெண்டாம் பட்சமானது. யுத்தம் முடிஞ்சதுன்னு சொன்னவுடனேயே அப்பாடா இனிமே ரேஷன்ல காத்துக்கிடக்க வேண்டியதில்லடான்னு தோணுச்சு. எங்க வீட்ல இருந்து ஒரு மைல் தூரம் நடந்து போய் ரேஷன் வாங்கணும். பிற்பகல் தவறவிட்டுடா அடுத்த நாள் காலை போய் நின்னா நேற்றே எல்லாம் வந்து தீர்ந்துடுச்சுன்னு பதில் வரும். இங்க நம்ம சென்னையில விறகு வாங்குறதுக்கு ரேஷன் கார்டு வேணும் தெரியுமா உங்களுக்கு? அரை குண்டு ஒரு குடும்பத்துக்குன்னு தருவாங்க. ஐரோப்பிய யுத்தம், ஜப்பான் யுத்தம், கொரியா யுத்தம், சூயஸ் யுத்தம், பங்களாதேஷ் யுத்தம், வியட்நாம் யுத்தம் எவ்வளவு யுத்தங்கள். ஆனாலும் இன்று வேறு கவலைகள் அந்த இடத்தை எடுத்துக்கொண்டுவிட்டன. ஆக்சுவலி எதுக்கு சண்டைப் போட்டாங்கன்னு யோசிச்சா சங்கடமா இருக்கு. சமீபத்துல ஒரு போலந்து படம் பார்த்தேன். இது யதேட்சையா நடந்தது. ஜெர்மன் போலந்து மேலதான் முதல்ல படையெடுத்தாங்க. முதல்ல இருந்தே ஜெர்மனோட திட்டம் என்னான்னா ஜூசை எல்லாத்தையும் ஒழிச்சிடனும்ங்கறது. அந்தப் படத்துல வர்றவன் ஒரு ஜூ. அவன் ஒரு பியானோயிஸ்ட். அவன் ஜெர்மன் ஆர்மிகிட்ட மாட்டிக்கிறான். ஆர்மி ‘நீ யாரு’ன்னு கேட்கிறான். இவன் பியானோயிஸ்ட்னு சொல்றான். அப்ப பக்கத்து அறையில இருந்து ஒரு பியானோவ எடுத்து வந்து வாசிக்கத் தர்றான் ஆர்மி. இவன் பியானோ வாசிச்சே பல வருஷங்கள் ஆயிடுச்சு. யுத்தத்துக்கு முன்னாடி வரைக்கும் வாசிக்க அவனுக்கு வாய்ப்பிருந்தது. அப்புறம் மேல இல்லாம போயிடுச்சு. அப்ப ரொம்ப இடைவெளி வந்தாச்சு. அவனோட கையெல்லாம் பரபரக்குது. ஆனாலும் வாசிக்கிறான். பிரமாதமா வாசிக்கிறான். அப்ப அந்த ஆர்மி தன் கோட்டைப் பரிசளிக்கிறான். அவ்வளவு வெறிக்கு மத்தியிலேயும் இசையால் அவன் உயிர் பொழச்சிருக்குறான் _ இது அந்தப்படம். நாம எவ்வளவு உயிரை இழந்தோம். அதனால என்னத்த பெருசா சாதிச்சிட்டோம். ஒண்ணுமே கிடையாது. யாரோ நாலுபேர் ஆட்சி செய்றதுக்காக இவ்வளவு சாவுகள். நம்மலால எழுதத்தான் முடியும். வேற என்ன செய்ய முடியும்.
தீராநதி: புது எழுத்து என்ற உத்வேகத்தோடு நிறைய பிரதிகள் எழுதப்படுகின்றன. தமிழுக்குப் புதிய வளம் சேர்க்கும் கோட்பாடுகளில் பரிசோதனைகள் செய்கிறார்கள். பிரேம்_ரமேஷ், எம்.ஜி.சுரேஷ், சுரேஷ்குமார் இந்திரஜித், சாருநிவேதிதா இவ்வாறு நிறைய.. இதையெல்லாம் படிக்கிறீர்களா? சாருநிவேதிதாவுக்கு வழங்கிய முன்னுரையில் கூட தனக்கு உவப்பாகாத எழுத்து என்பது மாதிரி எழுதி இருந்தீர்கள்?
அசோகமித்திரன்: ஒரு ஷாக் கொடுக்கணும்ங்கறதுக்காக இப்படியெல்லாம் எழுதறாங்களோன்னு தோணும். ரியாலிட்டியில இல்லையான்னு கேட்கலாம். தமிழ் பழைய இலக்கியத்துலயும் இருக்கு. சிலப்பதிகாரத்தை எடுத்துகிட்டா அதுவும் இந்த மாதிரியான உறவை பத்தினதுதான். என்ன ஒரு மேன்மையோட சொல்லப்பட்டிருக்குன்னு பார்க்கணும். மேன்மை இல்லாதபடி இதுக்காகதான்னு நாம எழுதுறது இருக்கே, அதுல எனக்கு பெரிய உவப்பு கிடையாது. இந்தக் கோட்பாடுகளெல்லாம் விமர்சனத்துக்குச் சொல்லக்கூடியதா இருக்கலாம். ஆனா படைப்புக்குத் தேவையில்லைன்னு நெனைக்கிறேன். நான் நெனைக்கிறேன் அவ்வளவுதான். அவங்க வேறமாதிரி சொல்லலாம். அதுல தப்பு கிடையாது. இப்ப நோபல் வாங்கி இருக்கிறாரே பாமுக். அவர பாக்குறச்சே எதிர்ப்புகளைக் காண்பிக்கிற மாதிரிதான் எழுதி இருக்குறாரே ஒழிய, இந்த மாதிரியெல்லாம் எழுதுல. ‘டாக்டர் ஷிவாக்கோ’ன்னு ஒரு ரைட்டர். சோவியத் புரட்சி பற்றி ஒரு நாவல் எழுதினார். அதுக்கு நோபல் பரிசு கொடுத்தா வாங்கக்கூடாதுன்னு சோவியத் அரசே சொல்லிடுச்சு. அவரும் நான் வாங்க மாட்டேன்னு சொல்லிட்டார். அவருக்கு உள்ளுக்குள்ள என்ன பயம்னா அவரை நாடு கடத்திட போறங்கன்னு பயம். ஆனால் நாவல் மிகவும் சிறந்தது.
தீராநதி: மறுமலர்ச்சி அடைந்திருக்கும் தலித் படைப்புகள் குறித்து?
அசோகமித்திரன்: ரொம்ப நாளைக்கு தலித்காரங்ககிட்ட படிப்பே இல்லாம இருந்தது. எழுத்துல இதையெல்லாம் பதிவு செய்யணும். ஓரல் ஹிஸ்டரின்னு இதைச் சொல்லலாம். இப்ப உடனே பதிவு செய்யப்படுறது. சுதந்திரத்துக்குப் பிறகுதான் எல்லோருக்கும் கல்வி சாத்தியமாச்சு. அப்புறம் எழுதுறதுக்கு ஒரு சாத்தியம் வந்திருக்கு. எல்லா தலித் இலக்கியங்களும் பழையபடி துக்கத்தையும், சோகத்தையும் சொல்லிக்கிட்டே இருந்தா போதாது. வேற மாதிரி வரணும். இந்திய மொழிகள்லயே இந்தியும், மராட்டியும் குறிப்பிட்டுச் சொல்லலாம். தயாபவர் _ மராட்டிய எழுத்தாளர். எனக்கு நல்ல நண்பர். அவரு வீட்டுக்கெல்லாம் வரச்சொல்லி போனபோது என் கையிலேயே துரதிருஷ்டவசமா செத்துப்போனார். அவரை மைனாரட்டின்னு நான் சொன்னப்போ, நீயும் மைனாரட்டிதான்னு சொல்லுவார். அவரு நிறைய எழுதி இருக்கார். அவரோட வாழ்க்கை வரலாற்றை எழுதி இருக்கார். இங்கேயும் நல்ல எழுத்தெல்லாம் வர்றது. அதுல இன்னும் பிரிவுகள் எல்லாம் வரும். இதையெல்லாம் நான் வரவேற்கிறேன்.
தீராநதி: சில மாதங்களுக்கு முன் நீங்கள் ஆங்கில பத்திரிகை ஒன்றில் பிராமணர்களுக்கு தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை. தங்களோட கலாசாரத்தை இயல்பாக கடைப்பிடிக்க முடியாம இருக்கிறார்கள் என்ற ரீதியில் எழுதியதாக சர்ச்சை எழுந்தது.. மறுத்திடாமல் பேசுங்கள்?
அசோகமித்திரன்: இந்தப் பேட்டி சங்கடமானது. இப்படித்தான் டெலிபோன்ல பேட்டி எடுத்தாங்க. பேட்டி எடுக்குறவங்களுக்குன்னு ஒரு சில கருத்துக்கள் இருக்கும். அத நம்ம சொன்னதா சேர்த்து சமயத்துல எழுதிடுவாங்க. இதுவும் அப்படித்தான் நேர்ந்திடுச்சு. இல்லப்பா.. இங்கயெல்லாம் கொஞ்சம் கஷ்டமா இருக்குதுன்னேன். என்னோட பையனுங்க அட்மிஷனுக்காக போறப்ப சில கஷ்டங்கள் இருந்தது. ஒரு பையனுக்கும் அவன் கேட்ட குரூப் கிடைக்கல. இதை நாம சொல்றோம். நமக்கு எந்த துவேஷமும் கிடையாது. காந்தியே சொல்லி இருக்கார். கண்ணுக்குக் கண்ணுன்னு நீங்க ஆரம்பிச்சிட்டீங்கன்னா உலகத்துல எல்லாம் குருடனா போயிடுவான்னு. வலியுறுத்த வேண்டியதுதான். சொல்ல வேண்டியதுதான். சில நியாயத்தைச் சொல்றோம். நியாயம்னு நமக்கு உடனே தெரியுறதில்ல. சில காலம் கழிச்சி தெரியும். ஸெரீனா வாழ்க்கையில ரெண்டு மூணு வருஷம் எப்படி ஆயிடுச்சு பாருங்க. இந்த மூணு வருஷமும் திரும்பக் கிடைக்குமா அவளுக்கு? பீகாரை எடுத்துகிட்டா அப்படிதான். எங்க முன்னேற்றம் இல்லையோ அங்க கிரைமும் அதிகமும் இருக்கும். உடனே முன்னேறின நாடுகள்ல கிரைம் இல்லையான்னு கேட்கக் கூடாது. பீகாருல திருடுனானன்னு நெத்தியில ஒருத்தனுக்கு சூடு போட்டாங்க. என்ன கொடுமை இது? _ ஆயுள் முழுக்க நெத்தியில சுமந்துகிட்டு திரியவேண்டியது. இப்படி பலபேர் செத்துப் போனங்க. அப்புறம் கண்ணை குருடடிச்சு விட்டுடுறது. இவன் யாரு அவன் கண்ணை குருடடிக்க. திருடினான்னா உன்னால நிரூபிக்க முடிஞ்சா எவ்வளவு சிறை வாசமோ அதக் கொடுக்க வேண்டியதுதானே. சித்துவ எடுத்துக்குங்க. அவன்கிட்ட பணம் காசு இருக்கு. அப்பாவிங்க என்ன செய்வாங்க. சிலைகளையும், ஏழை எளியவங்களையும் தாக்கறாங்க. இதுவெல்லாம் சரி கிடையாது. ஏதாவது நாம பேசினா நேஷ்னல் ஆக்ட்ல உள்ள போட்டுடுவாங்க. ஒரு வருஷம் வாய் திறக்க முடியாது. உலகத்துலேயே யாருக்கு அதிக சிலைகள் இருக்குன்னு ஒரு புள்ளி விவரம் எடுத்தா, அம்பேத்காருக்குத்தான் இருக்கு. நிறைய சிலைகள் இருந்தா நிறைய விபத்துகளும் நடக்கும். இத இப்படித்தான் நாம எடுத்துக்கனும். இதெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா போராடுறதுன்ணு இறங்கிட்டா காந்தி சொன்ன மாதிரி கண்ணுக்குக் கண்ணுன்னு ஆயிடும்.

பென்ஸ், BMW கார்கள் எங்கே எப்படி தயாராகிறது. தெரிந்து கொள்ளவும்.

ஜெர்மன் நாட்டில் பெர்லின் நகரில் வசிக்கும் நண்பர் ஒருவர், சமீபத்தில் சென்னை வந்து இருந்தார். பெங்களூரு அவரது சொந்த ஊர்.   ஜெர்மனியில் குடியேறி 20 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது.  அங்கு, “பென்ஸ்’ மோட்டார் தொழிற்சாலையில், “பிட்டர்’ ஆக வேலை செய்கிறார். உடைந்த தமிழில் பேசுவார்.
பிட்டராக இருந்தாலும் விபவரமானவர்;  பல சப்ஜெக்ட்களிலும் ஞானம் உள்ளவர். அவரிடம் பேசிக் கொண்டிருந்த போது,   பல அரிய தகவல்கள் கிடைத்தன.   அது: தம்பி… இப்போது இந்தியாவுலே பென்ஸ் கார் 45 லட்ச ரூபாய்க்கு கூட கிடைக்குது.  ஆஹா ஜெர்மன் நாட்டு கார்ன்னு பணக்காரங்களும், பெரிய தொழில் அதிபர்களும் போட்டி போட்டுக்கிட்டு வாங்கறாங்க. இந்தக் கார்ல இருக்கிற பல முக்கியமான பாகங்கள், கியர் பாக்ஸ் உட்பட, இந்தியாவுலே, “டாட்டா’ கம்பெனியிலே செஞ்சு, ஜெர்மனிக்கு வருது. நாங்க, அதை அங்கே பூட்டி, பல நாடுகளுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கிறோம்!   இதுக்கு காரணம் என்ன தெரியுமா?
ஜெர்மனியிலே அந்த பாகங்களை உற்பத்தி செய்ய ஆகும் செலவில் கால்வாசி செலவு தான் ஆகிறது இந்தியாவில்.   நாங்கள், எங்களுக்குத் தேவையான டிசைன் மற்றும் மூலப் பொருட்களைக் கொடுத்து விடுகிறோம்.  இங்கே லேபர், “சீப்!’ அது ஜெர்மானியர்களுக்கு பெரிய, “அட்வான்டேஜ்’ ஆகிப் போகிறது. இந்தியாவில் லேபர் எவ்வளவு, “சீப்’ என்பதற்கு ஒரு உதாரணம் சொல்கிறேன் கேட்டுக்க தம்பி…’ என்றவர்,   தம் சட்டைப் பையில் இருந்து,   ஒரு காகிதத்தை எடுத்துப் படித்துக் காட்டினார்.
ஒரு ஜெர்மன் தொழிலாளிக்கு குடுக்கற சம்பளத்திலே இரண்டு அமெரிக்க தொழிலாளியை வேலைக்கு அமர்த்தலாம்… இல்லே,   தைவான் நாட்டுத் தொழிலாளி ஐந்து பேரையோ,   பிரேசில் நாட்டு தொழிலாளி எட்டுப் பேரையோ வேலைக்கு வைத்துக் கொள்ள முடியும்…   ஆனா, இந்தியாவின் கதையோ அபாரம்… ஒரு ஜெர்மன் தொழிலாளியின் சம்பளத்தில் 128 இந்திய தொழிலாளிகளை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம்ன்னா பாரேன்…
இந்திய    தொழிலாளியின்   குறைந்தபட்ச சம்பளம் மணிக்கு 25 ரூபாய்ன்னா, ஜெர்மன் தொழிலாளியின் சம்பளம் மணிக்கு 1,150 ரூபாய்!    அப்புறம் ஏன் ஜெர்மன் தொழில் அதிபர்கள்,    புதிய பொருளாதாரக்   கொள்கை வந்த பின்னே இங்கே மூலதனத்தைக் கொட்டத் தயங்கப் போறாங்க!   கடந்த, 20 ஆண்டுகளில்,    இந்தியாவில் பல தொழில்களில் முதலீடுகளை செய்துள்ளனர்   ஜெர்மானியர்கள்…
ஆனால், இதில் சோகமான விஷயம் என்னவென்றால்,    சுற்றுப்புறச் சூழ்நிலைக்கும், உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கக் கூடிய பாதுகாப்பு அம்சங்கள் குறைந்த,   ஜெர்மன் சட்டப்படி அங்கு தடை செய்யப்பட்ட தொழில்கள் தான் இங்கு வந்துள்ளன,’   என்றார் அந்த நண்பர்.
புதிய பொருளாதாரக் கொள்கையின் மூலம் வெளிநாட்டு மூலதனத்தை இங்கே குவிப்பதை மட்டுமே அரசு கருத்தில் கொள்ளாமல்,   நம்நாடு குப்பைத் தொட்டிகளின் சங்கமமாகாமல் பார்த்துக் கொள்வதும் மிக, மிக அவசியம்.
தகவல் – இணையம்

சாப்பாடு விஷயத்தில் சாஸ்திரம்... சொல்றதைக் கேளுங்க!



தனக்குத்தானே சோறிட்டுக் கொள்வது ஆயுளைக் குறைக்கும். இஞ்சி, பாகற்காய், கஞ்சி, கட்டித்தயிர், இலைக்கறி (கீரை), நெல்லிக்காய் இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் லட்சுமி அவ்வீட்டில் வாசம் செய்யமாட்டாள். பால்சோறு சாப்பிடலாம்.

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் ஆயுள் வளரும்.
மேற்கு நோக்கினால் பொருள் சேரும்.
தெற்கு நோக்கினால் புகழ் வளரும்.
வடக்கு மட்டும் கூடாது. நோய் வரும்.

சோறு, நெய், உப்பு ஆகியவற்றை கையால் எடுக்கக்கூடாது.
கரண்டி வைத்துக் கொள்ள வேண்டும்.

The effect of Kaliyuga

The brahmacārīs will fail to execute their vows and become generally unclean, the householders will become beggars, the vānaprasthas will live in the villages, and the sannyāsīs will become greedy for wealth. (Śrīmad Bhāgavatam 12.3.33)

Brahmacarya, celibate student life, is practically nonexistent in the age of Kali. In America, many boys' schools have become coeducational because young men frankly refuse to live without the constant companionship of lusty young girls. Also, we have personally observed throughout the Western world that student residences are among the dirtiest places on earth, as predicted here by the word aśaucāḥ.

Concerning householder beggars, when devotees of the Lord go door to door distributing transcendental literature and requesting donations for the propagation of God's glories, irritated householders commonly reply, "Someone should give me a donation." Householders in Kali-yuga are not charitable. Instead, because of their miserly mentality, they become irritated when spiritual mendicants approach them.

In Vedic culture, at the age of fifty, couples retire to sacred places for austere life and spiritual perfection. In countries like America, however, retirement cities have been constructed wherein elderly people can make fools of themselves by wasting the last years of their lives playing golf, ping-pong and shuffleboard and by engaging in pathetic attempts at love affairs even while their bodies are horribly rotting and their minds are growing senile. This shameless abuse of the venerable last years of life denotes a stubborn unwillingness to acknowledge the actual purpose of human life and is certainly an offense against God.

The words nyāsino 'tyartha-lolupāḥ indicate that charismatic religious leaders, and even those who are not charismatic, will proclaim themselves prophets, saints and incarnations to cheat the innocent public and fatten their bank accounts.


The effect of Kaliyuga

The brahmacārīs will fail to execute their vows and become generally unclean, the householders will become beggars, the vānaprasthas will live in the villages, and the sannyāsīs will become greedy for wealth. (Śrīmad Bhāgavatam 12.3.33)

Brahmacarya, celibate student life, is practically nonexistent in the age of Kali. In America, many boys' schools have become coeducational because young men frankly refuse to live without the constant companionship of lusty young girls. Also, we have personally observed throughout the Western world that student residences are among the dirtiest places on earth, as predicted here by the word aśaucāḥ.

Concerning householder beggars, when devotees of the Lord go door to door distributing transcendental literature and requesting donations for the propagation of God's glories, irritated householders commonly reply, "Someone should give me a donation." Householders in Kali-yuga are not charitable. Instead, because of their miserly mentality, they become irritated when spiritual mendicants approach them.

In Vedic culture, at the age of fifty, couples retire to sacred places for austere life and spiritual perfection. In countries like America, however, retirement cities have been constructed wherein elderly people can make fools of themselves by wasting the last years of their lives playing golf, ping-pong and shuffleboard and by engaging in pathetic attempts at love affairs even while their bodies are horribly rotting and their minds are growing senile. This shameless abuse of the venerable last years of life denotes a stubborn unwillingness to acknowledge the actual purpose of human life and is certainly an offense against God.

The words nyāsino 'tyartha-lolupāḥ indicate that charismatic religious leaders, and even those who are not charismatic, will proclaim themselves prophets, saints and incarnations to cheat the innocent public and fatten their bank accounts.

கோதையின் ஐஐயைந்து - 1 - 5


********************
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!*
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
******************************************
பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
_____________________________________________
விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

கோதையின் ஐ ஐந்து ஐந்து - 2
********************
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
******************************************
பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தா மனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவைநோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.
_____________________________________________
விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்.

கோதையின் ஐ ஐந்து ஐந்து - 3
*********************
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
******************************************
பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்.
_____________________________________________
விளக்கம்: ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய திருமாலை வணங்கினால், என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியல் இடுகிறாள். இங்கே தனது தேசப்பற்றை வெளியிடுகிறாள். தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வகை செய்யும் என்று கருத்து தெரிவிக்கிறாள். நாமும், உலக நன்மைக்காக திருமாலிடம் மன்றாடுவோமே.

கோதையின் ஐ ஐந்து ஐந்து - 4
*********************
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்*
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி*
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்*
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்*
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்*
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

கோதையின் ஐ ஐந்து ஐந்து - 5
*********************
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*
தூய பெருநீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்: உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.
கோதையின் ஐஐயைந்து - 1 - 5
*********************www.fb.com/thirumarai
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்!*
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!*
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!*
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்*
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம்சிங்கம்*
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல்முகத்தான்*
நாராயணனே நமக்கே பறை தருவான்*
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.
******************************************
பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும்.
_____________________________________________
விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். 108 திருப்பதிகளில் 106ஐ பூமியில் காணலாம். 108வது திருப்பதியான வைகுண்டத்தில் தான் நாராயணன் வசிக்கிறார். நாம் செய்யும் புண்ணியத்தைப் பொறுத்தே இந்த திருப்பதியை அடைய முடியும். இந்தப் பாடலைப் பக்தியுடன் படித்து, தர்ம செயல்களை மட்டுமே செய்து வந்தால் நாமும் வைகுண்டத்தை அடைந்து பரந்தாமனுடன் கலந்து விடுவோம்.

கோதையின் ஐ ஐந்து ஐந்து - 2
*********************www.fb.com/thirumarai
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச்*
செய்யும் கிரிசைகள் கேளீரோ* பாற்கடலுள்
பையத் துயின்ற பரமனடி பாடி*
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி*
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம்முடியோம்*
செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்*
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி*
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.
******************************************
பொருள்: அன்புத்தோழியரே! அந்த பரந்தா மனையே நம் துணைவனாக அடைய வழி செய்யும் பாவைநோன்பு விரத முறையைக் கேளுங்கள். உணவில் நெய் சேர்க்கவோ, பால் அருந்தவோ கூடாது. சூரிய உதயத்துக்கு முன்பே நீராட வேண்டும். கண்ணில் மை இடக்கூடாது. கூந்தலில் மலர் சூடக்கூடாது தீய செயல்களை மனதால் நினைப்பதையும், தீய சொற்களை பேசுவதையும் தவிர்க்க வேண்டும். பிறரைப் பற்றி கோள் சொல்லக்கூடாது. ஏழைகளுக்கும், பக்தர்களுக்கும் போதுமான அளவு தர்மம் செய்ய வேண்டும்.
_____________________________________________
விளக்கம்: விரதம் இருப்பது என்றால் சும்மாவா! உணவு கட்டுப்பாடு மட்டுமல்ல! மனதையும் கட்டிப் போடச் சொல்கிறாள் ஆண்டாள். நெஞ்சத்தை நல்ல நினைவுகளாலும், வாயை நல்ல சொற்களாலும் நிறைக்க வேண்டும். இப்படி இருந்தாலே பரமன் கைக்கெட்டும் தூரத்துக்குள் வந்து விடுவான் என்கிறாள்.

கோதையின் ஐ ஐந்து ஐந்து - 3
*********************www.fb.com/thirumarai
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி*
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்*
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து*
ஓங்கு பெறும்செந் நெல்ஊடு கயலுகளப்*
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்*
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்க* குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்*
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.
******************************************
பொருள்: தோழியரே! மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, வாமன அவதாரம் எடுத்த பரந்தாமன், இந்த பிரபஞ்சத்தையே அளந்து தன்னுடையதாக்கிக் கொண்டான். அவனது பெருமை குறித்து பாடவும், பாவைக்கு மலர் சாத்தி வழிபடவும் நீராடக் கிளம்புவோம். இந்த வழிபாட்டால் தேசமெங்கும், மாதம் மும்மாரி பெய்யும். வயல்களில் நெல் செழித்து வளரும். வயலுக்குள் மீன்கள் பாய்ந்தோடி மகிழும். குவளை பூக்களில் புள்ளி வண்டுகள் தேன் குடித்து மயங்கிக் கிடக்கும். பசுக்கள் வாரி வழங்கும் வள்ளலைப் போல, தாராளமாக பால் தரும். அள்ள அள்ளக் குறையாமல் செல்வம் பெருகும்.
_____________________________________________
விளக்கம்: ஓங்கி உலகளந்த திரிவிக்ரமனாகிய திருமாலை வணங்கினால், என்னென்ன கிடைக்கும் என்பதை ஆண்டாள் பட்டியல் இடுகிறாள். இங்கே தனது தேசப்பற்றை வெளியிடுகிறாள். தங்கள் ஊர் மட்டுமின்றி தேசமே செழிக்க மார்கழி நோன்பு வகை செய்யும் என்று கருத்து தெரிவிக்கிறாள். நாமும், உலக நன்மைக்காக திருமாலிடம் மன்றாடுவோமே.

கோதையின் ஐ ஐந்து ஐந்து - 4
*********************www.fb.com/thirumarai
ஆழிமழைக் கண்ணா ஒன்று நீகை கரவேல்*
ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறி*
ஊழி முதல்வன் உருவம் போல்மெய் கறுத்துப்*
பாழியந் தோளுடைப் பற்பனாபன் கையில்*
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து*
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்*
வாழ உலகினில் பெய்திடாய்* நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

பொருள்: மேகத்திற்கு அதிபதியான பர்ஜந்யனே! நாங்கள் சொல்வதைக் கேள். உன்னிடம் ஒரு சொட்டு தண்ணீரைக் கூட வைத்துக் கொள்ளாதே. கடல் நீர் முழுவதையும் முகர்ந்து கொண்டு மேலே சென்று, உலகாளும் முதல்வனாகிய கண்ணனின் நிறம் போல் கருத்து, வலிமையான தோள்களையுடைய பத்மநாபனின் கையிலுள்ள பிரகாசமான சக்கரத்தைப் போல் மின்னலை வீசி, வலம்புரி சங்கு ஒலிப்பது போல் இடி ஒலியெழுப்பி, வெற்றியை மட்டுமே ஈட்டும் அவனது சார்ங்கம் என்னும் வில்லில் இருந்து புறப்படும் அம்புகளைப் போல் மழை பொழிவாயாக! அம்மழையால் நாங்கள் இவ்வுலகில் மகிழ்வுடன் வாழ்வோம். மார்கழி நீராடலுக்காக எல்லா நீர்நிலைகளையும் நிரப்பி எங்களை மகிழ்ச்சியடையச் செய்வாயாக.

விளக்கம்: ஆயர் குல சிறுமிகள் மழை, வெயிலுக்குரிய தெய்வங்கள் இன்னதென அறியமாட்டார்கள். ஏனெனில், அவர்களிடம் கல்வியறிவு இல்லை. எனவே பொதுவாக, "ஆழிமழைக் கண்ணா என்று அழைக்கிறார்கள். ஒரு தோற்றத்துக்கு இவர்கள் கண்ணனையே அழைத்தார்களோ என்று எண்ணத்தோன்றும். இது, நாம் சாதாரணமாக ஒரு குழந்தையை அழைக்க பயன்படுத்தும் "கண்ணா என்ற வார்த்தையைப் போல! எனவே "பர்ஜந்யா என்பதற்குப் பதிலாக "கண்ணா என்றழைத்தார்கள். அவனும் வந்தான். அவனிடம் தங்கள் கோரிக்கையை வைத்தார்கள்.

கோதையின் ஐ ஐந்து ஐந்து - 5
*********************www.fb.com/thirumarai
மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்*
தூய பெருநீர் யமுனைத் துறைவனை*
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைத்*
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்*
தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித் தொழுது*
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்*
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்*
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

பொருள்: வியப்புக்குரிய செயல்களைச் செய்பவனும், பகவானும், மதுராபுரியில் அவதரித்தவனும், பெருகியோடும் தூய்மையான நீரைக் கொண்ட யமுனை நதிக்கரையில் விளையாடி மகிழ்ந்தவனும், ஆயர்குலத்தில் பிறந்த அழகிய விளக்கு போன்றவனும், தேவகி தாயாரின் வயிற்றுக்கு பெருமை அளித்தவனும், இவனது சேஷ்டை பொறுக்காத யசோதை தாய் இடுப்பில் கயிறைக் கட்ட அது அழுத்தியதால் ஏற்பட்ட தழும்பை உடையவனும் ஆன எங்கள் கண்ணனை, நாங்கள் தூய்மையாக நீராடி, மணம் வீசும் மலர்களுடன் காண புறப்படுவோம். அவனை மனதில் இருத்தி அவன் புகழ் பாடினாலே போதும்! செய்த பாவ பலன்களும், செய்கின்ற பாவ பலன்களும் தீயினில் புகுந்த தூசு போல காணாமல் போய்விடும்.

விளக்கம்: உன்னைப் பெற்றதனால் அவள் மற்றவராலே போற்றப்பட வேண்டும் என்பது ஒரு தாய்க்கு பிள்ளை செய்ய வேண்டிய கடமை. தேவகி தாய்க்கு கண்ணனை பெற்றதால் பெருமை. "ஈங்கிவனை நான் பெறவே என்ன தவம் செய்து விட்டேன் என்று அவள் பெருமைப்படுகிறாள். குழந்தைகள், பெற்றவர்களுக்கு நல்ல பெயர் வாங்கித் தரவேண்டும் என்பது இதன் உட்கருத்து.

Monday, December 9, 2013

Humans: not smarter than animals


UNIVERSITY OF ADELAIDE   
Share on print
ReinholdLeitner_gibbon_shutterstock
Gibbons, for example, produce 20 different sounds that allow them to communicate across the forest canopy.
Image: Reinhold Leitner/Shutterstock
Humans have been deceiving themselves for thousands of years that they're smarter than the rest of the animal kingdom, despite growing evidence to the contrary, according to University of Adelaide experts in evolutionary biology.
"For millennia, all kinds of authorities - from religion to eminent scholars - have been repeating the same idea ad nauseam, that humans are exceptional by virtue that they are the smartest in the animal kingdom," says Dr Arthur Saniotis, Visiting Research Fellow with the University's School of Medical Sciences.
"However, science tells us that animals can have cognitive faculties that are superior to human beings."
He says the belief that humans have superior intelligence harks back to the Agricultural Revolution some 10,000 years ago when people began producing cereals and domesticating animals. This gained momentum with the development of organised religion, which viewed human beings as the top species in creation.
"The belief of human cognitive superiority became entrenched in human philosophy and sciences. Even Aristotle, probably the most influential of all thinkers, argued that humans were superior to other animals due to our exclusive ability to reason," Dr Saniotis says.
While animal rights began to rise in prominence during the 19th century, the drive of the Industrial Revolution forestalled any gains made in the awareness of other animals.
Professor Maciej Henneberg, a professor of anthropological and comparative anatomy from the School of Medical Sciences, says animals often possess different abilities that are misunderstood by humans.
"The fact that they may not understand us, while we do not understand them, does not mean our 'intelligences' are at different levels, they are just of different kinds. When a foreigner tries to communicate with us using an imperfect, broken, version of our language, our impression is that they are not very intelligent. But the reality is quite different," Professor Henneberg says.
"Animals offer different kinds of intelligences which have been under-rated due to humans' fixation on language and technology. These include social and kinaesthetic intelligence. Some mammals, like gibbons, can produce a large number of varied sounds - over 20 different sounds with clearly different meanings that allow these arboreal primates to communicate across tropical forest canopy. The fact that they do not build houses is irrelevant to the gibbons.
"Many quadrupeds leave complex olfactory marks in their environment, and some, like koalas, have special pectoral glands for scent marking. Humans, with their limited sense of smell, can't even gauge the complexity of messages contained in olfactory markings, which may be as rich in information as the visual world," he says.
Professor Henneberg says domestic pets also give us close insight into mental abilities of mammals and birds. "They can even communicate to us their demands and make us do things they want. The animal world is much more complex than we give it credit for," he says.
Editor's note: Original news release can be found here.

Sperm 'blocking' method found


MONASH UNIVERSITY   
Share on print


A new male contraceptive could be on the horizon after scientists identified a novel way to block the transport of sperm during ejaculation. 
Published in the journal, Proceedings of the National Academy of Science, USA, scientists have found that complete male infertility could be achieved by blocking two proteins found on the smooth muscle cells that trigger the transport of sperm.
The researchers demonstrated that the absence of two proteins in mouse models, α1A-adrenoceptor and P2X1-purinoceptor, which mediate sperm transport, caused infertility, without effects on long-term sexual behavior or function.
Lead researchers Dr Sab Ventura and Dr Carl White of the Monash Institute of Pharmaceutical Sciences believe the knowledge could be applied to the potential development of a contraceptive pill for men.
“Previous strategies have focused on hormonal targets or mechanisms thatproduce dysfunctional sperm incapable of fertilization, but they often interfere with male sexual activity and cause long term irreversible effects on fertility,” Dr Ventura said.
“We’ve shown that simultaneously disrupting the two proteins that control the transport of sperm during ejaculation causes complete male infertility, but without affecting the long-term viability of sperm or the sexual or general health of males. The sperm is effectively there but the muscle is just not receiving the chemical message to move it.
Dr Ventura said there was already a drug that targets one of the two proteins, but they would have to find a chemical and develop a drug to block the second one.
“This suggests a therapeutic target for male contraception. Thenext step is to look at developing an oral male contraceptive drug, which is effective, safe, and readily reversible.”
If successful, it is hoped a male contraceptive pill could be available within ten years.
Researchers from University of Melbourne and the University of Leicester, UK, collaborated on the study.
Editor's Note: Original news release can be found here.

Physical activity saves lives


UNIVERSITY OF SOUTH AUSTRALIA   

Office workers can rest assured – as long as you are physically active, your desk job won’t kill you.
While increasing attention has been paid to the detrimental effects of overall sedentary behaviour in recent years, new research from the University of South Australia shows that long periods spent sitting can be combatted with moderate physical activity.
Published in the international journal Obesity, the study shows a desk job won’t put you at risk of obesity and associated health problems as long as you exercise.
UniSA Postdoctoral Research Fellow Dr Carol Maher says her study is good news for office workers.
“The nice thing about these results is that people with desk jobs can be reassured that as long as they are doing a bit of activity, their desk job isn’t putting them at risk of obesity,” Dr Maher says.
“And our results suggest the amount of physical activity needed is actually very achievable.”
Dr Maher’s study was done on 5083 American adults, taking cross-sectional analyses on a nationally representative sample from the April 2003 to June 2005 US National Health and Nutrition Examination Survey. She undertook the study while she was a visiting scholar at Pennington Biomedical Research Centre in Louisiana last year.
“I looked at how people’s physical activity and sedentary activities were related to the risk of being obese and overweight,” Dr Maher says.
“We classified people into three activity and three sedentary groups – low, medium and high physical activity; and low, medium and high sedentary activity.
“We found that low physical activity was a strong predictor of obesity. People who had low levels of physical activity were up to four times more likely to be overweight or obese than people in the moderate and high activity groups, while sedentary time was unrelated to being overweight.
“Obesity was more strongly related to not being active than either TV time or total sedentary time.”
Dr Maher says the amount of activity needed is ‘achievable’.
“Small differences in daily moderate-to-vigorous physical activity of just five to 10 minutes were associated with relatively large differences in the risk of obesity.”
Editor's note: Original news release can be found here.

சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்! ஹெல்த் ஸ்பெஷல்!!

இன்றைய வாழ்க்கை முறையில் நாம் பார்க்கும் முக்கிய நோய்களில் ஒன்றான சர்க்கரை நோய் இன்றைய தலைமுறையினரை பாடாய்படுத்தி வருகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை குறிப்பிட்ட அளவு இல்லாமல், கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும்.

ஆனால் இதனை உணவு முறை கொண்டும் கட்டுப்படுத்த முடியும். சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம். சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் வைக்க, எதை சாப்பிடலாம், எதை சாப்பிட கூடாது என்பதைப் பற்றி தெரிந்து கொள்வது என்பது மிகவும் முக்கியமான ஒன்று.

சர்க்கரை நோய் இல்லையென்றாலும் சரி அல்லது சர்க்கரையின் அளவு எல்லையில் இருந்தாலும் சரி அல்லது பரம்பரை வியாதி என்றாலும் சரி, சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நோயின் தாக்கத்தில் இருந்து விடுபடுவதோடு தவிர்க்கவும் செய்யலாம்.

இந்தியர்களுக்கு அதற்கான உணவில் கார்போஹைட்ரேட், கொழுப்பு மற்றும் புரதம் 60:20:20 விகிதம் இருக்க வேண்டும். இப்போது சர்க்கரை நோய்க்கான மருத்துவர் மற்றும் உணவியல் வல்லுநர்கள், சர்க்கரை நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கும் முதன்மையான 15 வகை உணவுகளை பற்றி பார்ப்போம்.

1.வெந்தயம்: ஒரு டீஸ்பூன் வெந்தயத்தை, 100 மி.லி. தண்ணீரில் இரவில் தூங்கும் போது ஊற வைத்து விட்டு, மறு நாள் அந்த வெந்தயத்தை சாப்பிட்டால், உடலில் சர்க்கரை அளவானது கட்டுப்பாட்டுடன் இருக்கும்.

2.தக்காளி: நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த, உப்பு மற்றும் மிளகு கலந்த தக்காளி சாற்றை, தினமும் காலை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்

3.பாதாம்: தினமும் தண்ணீரில் ஊற வைத்த 6 பாதாம் பருப்பை சாப்பிட்டால், சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்கும்.

4.தானிய வகைகள்: தானியம், ஓட்ஸ், கொண்டை கடலை மாவு மற்றும் இதர நார்ச்சத்து அடங் கிய உணவுகளை அன்றாடம் சேர்த்துக்கொள்ள வேண்டும். பாஸ்தா அல்லது நூடுல்ஸ் சாப்பிட தோன்றினால், அதனு டன் காய்கறி அல்லது முளைத்த பயறுகளை சேர்த்துக் கொள் ளவும்.

5.பால்: பாலில் கார்போஹைட்ரேட் மற்றும் புரதத்தின் கலவை சரியான அளவில் இருக்கும். அதனால் இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும். எனவே தினமும் இரண்டு முறை பால் குடிப்பது நல்லது.

6.காய்கறிகள்: அதிக நார்ச்சத்துள்ள காய்கறிகளான பட்டாணி, பீன்ஸ், ப்ராக்கோலி மற்றும் கீரை வகைகளை உணவோடு சேர்க்க வேண்டும். இந்த வகையான காய்கறிகள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்க உதவும்.

7.பருப்பு வகைகள்: பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும். கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் ரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

8.ஒமேகா3: ஒமேகா3 மற்றும் மோனோ அன்சாச்சுரேட் கொழுப்பினி போன்ற நல்ல கொழுப்புகள் கலந்த உணவை உட்கொண்டால் உடலுக்கு நல்லது. கனோலா எண்ணெய், சணல் எண்ணெய், கொழுப்பு மீன் மற்றும் பருப்பு வகைகள் போன்றவற்றில் இயற்கையாகவே இந்த கொழுப்புகள் அடங்கியுள்ளன. மேலும் இதில் கொழுப்பு அளவு குறைவாகவே இருக்கும்.

9.பழங்கள்: அதிக நார்ச்சத்துள்ள பழங்களான பப்பாளி, ஆரஞ்சு, பேரிக்காய் மற்றும் கொய்யாப் பழத்தை சாப்பிட வேண்டும். ஆனால் மாம்பழம், வாழைப்பழம் மற்றும் திராட்சை போன்ற பழங்களில் சர்க்கரையின் அளவு கூடுதலாக இருக்கிறது, அதனால் இதை அதிகமாக உண்ணக் கூடாது.

10.உணவு முறை: அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள ரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது. அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும். இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும். வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

11.முக்கியமான உணவுகள்: சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும். இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது. போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

12.இயற்கை இனிப்பு: சர்க்கரை நோயாளிகள், கேக் மற்றும் இனிப்பு பண்டங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேவையான அளவு இயற்கை இனிப்பான தேனை கலந்து கொள்ளலாம்.

13.தண்ணீர் மற்றும் மதுபானம்: நிறைய தண்ணீர், காய்கறி மற்றும் பழச்சாறுகளை பருகவும். மேலும் மதுபானம் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும்.

14.அசைவ உணவு: அசைவ உணவுகளில் மீன் அல்லது சிக்கனை உண்ணலாம். ஆனால் ஆடு மற்றும் மாட்டு இறைச்சியில் அதிக அளவில் தேங்கிய கொழுப்பு இருப்பதால், அதனை தவிர்க்க வேண்டும். மேலும் அதிக கொழுப்புச்சத்து உள்ளவர்கள், முட்டையின் மஞ்சள் கரு, ஆடு மற்றும் மாட்டு இறைச்சியை தவிர்க்க வேண்டும்.

15.உணவு பழக்கம்: இந்தியர்களுக்கான சர்க்கரை நோய் கட்டுப்பாடு உணவில் கார்போஹைட்ரேட், புரதம் மற்றும் கொழுப்புச் சத்து அடங்கியிருக்க வேண்டும். எப்போதும் சமநிலையான உணவு, உடல் ஆரோக்கியத்திற்கு பக்கபலமாக நிற்கும்.

மேற்காணும் உணவுப் பழக்கத்தை தொடர்ந்து கையாண்டு வந்தாலே சர்க்கரை நோயின் பிடியில் இருந்து 100 சதவீதம் தப்பலாம். சர்க்கரை நோய் கண்டவர்கள் தாங்களாகவே மருந்து கடைகளில் மாத்திரைகளை வாங்கி உட்கொள்வதை தவிர்த்து முறையான சிகிச்சையினை டாக்டரிடம் மட்டுமே எடுத்துக்கொள்வது சாலச் சிறந்தது. சர்க்கரை நோயற்ற வாழ்வை பெற முயன்ற அளவு முயற்சிப்போம்.

தகவல் - மாலைமலர்

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை ...!

கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை ...!

படியுங்கள் & பகிருங்கள் (Share)

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரேநிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில் தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில SunUltra II,F50 IBM RS/6000 செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது. (அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள்
வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான
எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர்சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.

கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில்தருகிறது;கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும்
வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள். பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ- மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டேபோகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப்
படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித்துரத்தியிருக்கிறார்கள்.இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள். சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!
Photo: கூகிள் (Google) உருவான சுவாரஸ்யமான கதை ...!

படியுங்கள் & பகிருங்கள் (Share)

கூகிள் எப்படி உருவானது என்று நம்மில் பலருக்கு தெரியாது.அப்படி தெரியாதவர்களுக்காகவே இந்த பதிவு." நாங்க ஜாலியா படம் எடுக்கிறோங்க" என்று சொல்லிட்டு சென்னை 28 என்ற மிகப்பெரும் ஹிட் படம் ஒன்றை எடுத்திருந்தார் வெங்கட்பிரபு. அதுமாதிரிதான் "நாங்க ஜாலியா கம்பனி ஆரம்ம்பிக்கிறோம் " என்று ஆரம்பிக்கப்பட்ட ஒரு சிறிய கம்பனிதான் இந்த கூகிள்.அந்த கம்பனிதான் இணைய உலகில் ஒரு விருட்சமாய் வளர்ந்து நிற்கிறது.

ஷெல் என்பவர் முப்பத்தேழு வயதுப் பெண்மணி. ஒரு பெரிய அமெரிக்கக் கம்பெனியில் பொறுப்பான பதவியில் இருக்கிறார். ஒரு நாள் அலுவலகத்தில் ஒரு பெரிய தப்பு செய்துவிட்டார். அவசரமாக முடிவு எடுத்து, ஆலோசிக்காமல் செயல்பட்டு, அகலக் கால் வைத்துவிட்டார். அவரால் கம்பெனிக்கு பல லட்சம் டாலர் நஷ்டம். தன் மடத்தனம் புரிந்தவுடன் தயங்கிக்கொண்டே முதலாளியிடம் போய் விஷயத்தைத் தெவித்தார்.

இந்த நிலையில் பாஸ் என்ன செய்வார்?

வேறொரு கம்பெனியாக இருந்திருந்தால் உடனே ஷெலுக்கு சீட்டுக் கிழிவதுடன், அவருடைய சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசருக்கு சூப்பர்வைசர் வரை அத்தனை பேருக்கும் அண்டர்வேருடன் நிறுத்தி வைத்து பரேடு நடந்திருக்கும். ஆனால் ஷெலின் பாஸ் புன்னகையுடன், ""அப்படியா, தாங்க்ஸ்!'' என்றார்.""தயங்கித் தயங்கி, ஒரு முடிவும் எடுக்காமல் களிமண் மாதிரி உட்கார்ந்திருப்பவர்கள்தான் தப்பே செய்ய மாட்டார்கள். அடிக்கடி தடுக்கி விழுபவர்கள்தான் நம் கம்பெனிக்குத் தேவை. அவர்கள்தான் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம்!''

இந்த வித்தியாசமான கம்பெனிதான் கூகிள். அதன் வினோதமான முதலாளிதான் லாரி பேஜ். தன் கல்லூரித் தோழர் செர்ஜி ப்ன்னுடன் சேர்ந்து காலேஜ் படிக்கும்போதே கம்பெனி ஆரம்பித்தவர். (படிப்புதான் குட்டிச் சுவராகிவிட்டது!) எட்டு வருடத்தில் உலகத்தின் நம்பர் ஒன் இன்டர்நெட் கம்பெனியாக வளர்ந்து போட்டியே இல்லாமல் இணைய மலையின் உச்சியில் போய் உட்கார்ந்து கொண்டிருக்கிறது கூகிள்.

லாரியும், செர்ஜியும் பிட்ஸா சப்ளை செய்து சம்பாதித்த காசில் மிச்சம் பிடித்து கம்ப்யூட்டர் வாங்கித் தங்கள் ஹாஸ்டல் அறையில் கம்பெனியை ஆரம்பித்தார்கள். பிறகு ஒரு வீட்டு கராஜை வாடகைக்கு எடுத்து ஆறு ஊழியர்களுடன் கம்பெனி நடத்தினார்கள். இன்றையத் தேதிக்கு கூகிளின் மதிப்பு பன்னிரெண்டாயிரம் கோடி டாலருக்கு மேல்.

கணிதத்தில் கூகால் (googol) என்ற ஒரு பெரிய நம்பர். ஒன்று போட்டு நூறு சைபர். எத்தனை கோடி வலைப் பக்கங்கள் இருந்தாலும் தேடித் தந்துவிடுவோம் என்ற அர்த்தத்தில் இந்தப் பெயரை வைத்தார்கள். ஆனால் நம் கதாநாயகர்களுக்கு ஸ்பெல்லிங் கொஞ்சம் தகராறு. (கூகால்) என்பதற்குப் பதிலாக (கூகிள்) என்று தப்பாக எழுதிவிட்டார்கள். யாரும் கவனிக்காததால் அந்தப் பெயரேநிலைத்துவிட்டது.

இதை உருவாக்கி முடித்ததும் இந்த தேடல் நுட்பத்தை Yahoo போன்ற பெரும் தலைகள் யாருக்காவது விற்கலாம் என முடிவெடுத்தனர்.வாங்க யாரும் இல்லாததால் 1998-ல் Google என்ற கம்பெனி உருவானது.1998 நவம்பரில் தான் கூகிள் இணையதளம் முதலாக தலைக்காட்ட தொடங்கி யிருந்தது.ஆரம்பத்தில் பணம் ஒன்றும் அவ்வளவாய் சம்பாதிக்க இயலவில்லை.Sun-னும் IBM-மும் சில SunUltra II,F50 IBM RS/6000 செர்வர்களை தானமாக வழங்கியிருந்தனர்.2001-ல் யாகூ கூகிளை வாங்க விலைப்பேசி கொண்டிருந்ததாம்.தேடல் இயந்திரத்தின் வலிமை அறியா யாகூ ஒரு தேடல் இயந்திரத்துக்கு இத்தனை விலையா ($5 Billion) என ஒதுங்கி விட்டது. (அன்று யாகுவிடம் விலைபோயிருந்தால் கூகிள் என்னவாயிருக்கும்?...யூகிக்க கூட இயலவில்லை.)

நிறுவனத்தில் எட்டாயிரம் பேர் வேலை செய்கிறார்கள். எல்லாம் பொறுக்கி எடுத்த மணி மணியான என்ஜினீயர்கள். அவர்களுடைய கலிபோர்னியா ஆபீசில் போய்ப் பார்த்தால் ஏதோ பல்கலைக்கழகக் கட்டடத்துக்குள் நுழைந்துவிட்ட மாதிதான் இருக்கிறது. இளைஞர் பட்டாளம் ஏக இரைச்சலாகச் சிரித்துக் கொண்டு அடித்துக் கொண்டு கானா பாட்டுப் பாடிக் கொண்டிருக்கிறது. வராந்தாவில் ஊழியர்கள்
வளர்க்கும் செல்ல நாய்கள் உலவிக் கொண்டிருக்கின்றன. ஒரு பக்கம் டேபிள் டென்னிஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். மடியில் குழந்தையை வைத்துக் கொண்டே வேலை செய்யும் தாய்மார்கள், மூடு வருவதற்காகப் பாட்டுக் கேட்கும், பியானோ வாசிக்கும் இளைஞர்கள்... ஆபீஸ் மாதிரியாகவா தெரிகிறது?

கூகிள் ஊழியர்களுக்கு கம்பெனி செலவில் சாப்பாடு, காப்பி இலவசம். கூகிள் கான்டீன் என்பது நம் மியூசிக் அகாதெமி கான்டீன் போல பிரபலமானது. அதைத் தவிர அலமாரி அலமாரியாக நொறுக்குத் தீனிகள், பழங்கள், பானங்கள். கொடுத்து வைத்தவர்கள், பிரித்து மேய்கிறார்கள்!

கூகிள் பிறந்த புதிதில் சர்ச் எஞ்சின் எனப்படும் வலைத் தேடல் இயந்திரமாக மட்டும்தான் இருந்தது. மசால் தோசை என்று தேடினால் இன்டர்நெட்டில் இருக்கும் கோடியோ கோடிக்கணக்கான தகவல் பக்கங்களில் புகுந்து புறப்பட்டுத் தேடி வினாடி நேரத்தில் விடை கொண்டு வந்துவிடும். இந்த மின்னல் வேகத் தேடல் டெக்னாலஜியைக் கண்டுபிடித்தவர்கள் பேஜும் பின்னும்தான். இதைச் செய்ய அவர்கள் பெரிய சூப்பர் கம்ப்யூட்டர்கள் எதையும் உபயோகிக்கவில்லை; சாதாரணமாகக் கடையில் கிடைக்கும் எட்டணா கம்ப்யூட்டர்களை ஏராளமான
எண்ணிக்கையில் வாங்கிப் போட்டு அவற்றை ஒத்துழைக்க வைத்த சாப்ட்வேர்சாணக்கியத்தனம்தான் அவர்கள் செய்தது.

கூகிளில் வேலை செய்பவர்கள் எல்லோருக்கும் வாரம் நாலு நாள் ஆபீஸ் வேலை, ஒரு நாள் சொந்த வேலை. அதாவது, உங்களுக்கு ஏதாவது புது ஐடியா தோன்றினால் அதை முயற்சித்துப் பார்க்க கம்பெனி காசில் வசதி செய்து தருகிறார்கள். கூகிள் அறிமுகப்படுத்தியுள்ள பல புதுமையான சேவைகள் இப்படி ஆளாளுக்கு குருட்டாம்போக்கில் யோசித்து ஆரம்பித்து வைத்ததுதான். ""ஒவ்வோர் ஐடியாவும் ஒரு வைரம்; "தினப்படி வேலையில் பிசியாக இருக்கிறேன், யோசிக்க நேரமில்லை' என்பதனால் எந்த நல்ல ஐடியாவும் வீணாகிவிடக் கூடாது'' என்பது கூகிள் கொள்கை.

கூகிள் ஊழியர்கள் எல்லாரும் கிட்டத்தட்ட சுதந்திரமாக, தமக்குத் தாமே வேலை செய்துகொள்கிறார்கள். பின்கை கட்டிக் கொண்டு பின்பக்கம் உலாத்திக் கண்காணித்துக் கொண்டே இருக்கும் சூப்பர்வைசர்கள் கிடையாது. ""எவ்வளவுக்கு எவ்வளவு மானேஜ்மென்ட் இருக்கிறதோ, அவ்வளவுக்கவ்வளவு தொழிலாளர்களின் உற்பத்தித் திறன் குறைந்துடும். ஃப்ரீயாக விட்டால்தான் எல்லாரும் பொறுப்பாக வேலை செய்வார்கள்'' என்கிறார்கள். (கார்ப்பரேட் சர்வாதிகாரிகளே! கவனித்தீர்களா?)

கூகிள் வருவதற்கு முன்னும் பற்பல தேடல் இயந்திரங்கள் இருந்திருக்கின்றன. அவற்றில் எல்லாம் ஒரே குறைபாடு, குப்பைத் தொட்டியிலிருந்து அள்ளி வந்த மாதிரி சம்பந்தா சம்பந்தமில்லாத வலைப் பக்கங்களையெல்லாம் பீறாய்ந்து கொண்டுவந்து போட்டுவிடும். தங்கள் வெப் சைட்தான் முதலில் வர வேண்டும் என்பதற்காக சர்ச் எஞ்சினை நயவஞ்சகமாக ஏமாற்றுவதற்குப் பலர் சதித் திட்டங்கள் வேறு செய்து வைத்திருந்தார்கள்.

கூகிள்தான் முதல் முதலாக பக்கங்களைத் தரப்படுத்தி மார்க் போட்டு உருப்படியான தகவல்களை முதலில் கொண்டு வந்து தர ஆரம்பித்தது. பேஜ் ராங்கிங் (Page ranking) என்ற இந்த டெக்னிக்கை கண்டுபிடித்தவர் லாரி பேஜ். ஒரு வலைப் பக்கத்தை நிறையப் பேர் சிபாரிசு செய்து இணைப்புச் சங்கிலி போட்டு வைத்திருந்தால், அதிலும் பெரிய மனிதர்கள் சிபாரிசு செய்தால் அதிக மார்க் என்பது இதன் தத்துவம். கூகிளையும் ஏமாற்ற முடியும்; ஆனால் கஷ்டம்.

கூகிள் ஆராய்ச்சிசாலை என்று புதிது புதிதாக என்னவோ கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறார்கள்.கூகிள் நியூஸ் என்பது உலகத்தில் உள்ள அத்தனை செய்திகளையும் ஒரே இடத்தில்தருகிறது;கூகிள் மேப் என்ற சேவையில் அமெரிக்காவின் வரைபடம் மொத்தமும்
வைத்திருக்கிறார்கள். ஏதாவது ஓர் ஏரியாவில் போய் நின்றுகொண்டு இங்கே பக்கத்தில் பிட்ஸா எங்கே கிடைக்கும் என்றால் உடனே காட்டுகிறது.

லட்சக்கணக்கான புத்தகங்கள் கொண்ட இலவச லைப்ரரி நடத்துகிறார்கள்.பி.எச்டி மாணவர்கள் காப்பி அடிக்க ஆராய்ச்சிக் கட்டுரைகள் தேடித் தருகிறார்கள். பறவைப் பார்வையாக சாட்டிலைட்டிலிருந்து உலகத்தைப் பார்க்கவும் வசதி செய்திருக்கிறார்கள் (ஊரான் வீட்டு நெய்யே என்று இந்தியாவின் தலைப்பக்கம் கொஞ்சம் கிள்ளி பாகிஸ்தானுக்குக் கொடுத்திருப்பதுதான் பார்க்கச் சகிக்கவில்லை.)

கூகிள் பயண சேவையில் பஸ், ரயில் நேரங்கள், வழித் தடங்கள் சொல்கிறார்கள். ஒரு குறிப்பிட்ட ஸ்டாப்பில் அடுத்த பஸ் எப்போது வரும் என்பது வரை காட்டுகிறது (ஆழ்வார்பேட்டையில் அல்ல, அமெரிக்காவில்!). கூகிள் செவ்வாய் என்ற ப்ராஜெக்டில் செவ்வாய் கிரகத்தின் நுணுக்கமான போட்டோக்களை கலர் கலராக சேமித்து வைத்திருக்கிறார்கள்.உங்களுக்கே சொந்தமாக இணையத்தில் ஓர் ஒண்டுக் குடித்தனம்- ஒரு வலைப் பக்கம் தேவை என்றால் ஐந்து நிமிடத்தில் அமைத்துக்கொள்ளலாம். டைப் அடிக்கத் தெரிந்தால் போதும்; மற்றதெல்லாம் அவர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஜி மெயில்தான் இப்போது சூடான மெயிலை விட அதிகம் நாடப்படுகிறது. எல்லா இ- மெயில் கம்பெனிகளும் பிசுகிப் பிசுகி ஐம்பது மெகாபைட், நூறு மெகாபைட் என்று இடம் தந்துகொண்டிருந்தபோது கூகிள் மட்டும் ஒரேயடியாக ஆயிரம் எம்.பி. இலவசம் என்று அறிவித்துப் போட்டியாளர்களைப் பதறி ஓட வைத்தார்கள். பிறகு இது இரண்டாயிரத்தைத் தாண்டி இலவசமாக இன்னும் வளர்ந்துகொண்டேபோகிறது.

இன்டர்நெட் பூராவும் அநியாயத்துக்குக் கொட்டிக் கிடக்கும் மற்றொரு விஷயம் செக்ஸ். குழந்தைகள் கூகிளில் தேடும்போது பலான சமாச்சாரங்கள் எதுவும் வந்துவிடக் கூடாதே என்பதற்காக முக்கியமான வார்த்தைகளை வைத்து மேற்படி சரக்கா என்பதை நிர்ணயித்து வடிகட்டி விடுகிறார்கள். ஆனால் படங்களைப் பொறுத்தவரை கம்ப்யூட்டருக்கு கண்ணில்லை. ஒரு படத்தைக் காட்டி பக்திப்
படமா, பலான படமா என்று கம்ப்யூட்டரை சரியாகச் சொல்ல வைத்துவிட்டால் கேள்வி கேட்காமல் டாக்டர் பட்டம் கொடுக்கலாம். சில கூகிள் விஞ்ஞானிகள் சேர்ந்து இதற்கு ஆராய்ச்சி செய்துகொண்டிருக்கிறார்கள்.

மனித வடிவம், தோல் நிறம் எல்லாவற்றையும் எண்களாக மாற்றி ஸ்டாடிஸ்டிக்ஸ் கணக்குப் போட்டு படத்திலிருப்பது சம்திங் சம்திங்தான் என்பதை பெரும்பாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள்.எந்த வார்த்தையை எந்த ஊர் ஜனங்கள் அதிகம் தேடுகிறார்கள் என்று தேதி வாரியாகப் படம் வரைந்து காட்டுகிறார்கள்.அப்துல் கலாம் என்ற பெயரை கோவை மக்கள்தான் அதிகம் தேடுகிறார்கள்.ஷகீலாவை கேரளத்து ரசிகர்கள் கூகிள் பூராத் தேடித்துரத்தியிருக்கிறார்கள்.இந்தியாவின் டாப் டென் என்று பார்த்தால் பொதுவாக நாம் கிரிக்கெட் பற்றித்தான் அதிகம் விசாரித்திருக்கிறோம். அடுத்தபடி சானியா மிர்ஸா, ப்ரியங்கா சோப்ரா, நமீதா வருகிறார்கள். சில படிக்கிற பையன்கள் இந்திரா காந்தி யுனிவர்சிட்டியையும் தேடியிருக்கிறார்கள்.

ஆயிரக்கணக்கான x86 செர்வர்களில் தாங்களே உருவாக்கியுள்ள Linux-ல் தாங்களே உருவாக்கிய வெப்செர்வரில் எல்லாவற்றையும் ஓட்டுகிறார்கள்.அவர்கள் வெப் செர்வர் பெயர் GWS/2.1 அதாவது Google Web Server, current Version 2.1.அதாவது Apache-ன் கூகிள் வடிவம் என்கிறார்கள்.கூகிள் செர்வர்கள் 450,000-ஐயும் ஓட்ட 20 மெகாவாட்டுகள் மின்சாரம் தேவையாம்.அதாவது மாதம் கூகிளுக்கு கரண்ட் பில் $2 மில்லியன்கள்.அம்மாடியோவ்!!

திருமயம் மலைக்கோட்டை

திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் (கிபி 1671-1710) காலத்தில் கட்டப்பட்டது.
வரலாறு
திருமயம் என்ற இந்த சிறு நகரம் பழமையும் நெடிய வரலாற்றையும் கொண்டு திகழ்கிறது. முத்தரையர்கள் கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள்,பல்லவர் , விஜயநகர அரசர்கள், பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள் என்று பலராலும் ஆளப்பட்டுள்ளது.

இந்த ஊர். இராமநாதபுரம் சேதுபதிகள் 16 - 17 நூற்றாண்டுகளில்திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அடுத்து புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது இவ்வூர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இவ்வூர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம்.
மலைக்கோட்டை அமைப்பு
திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன.பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதிகள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.
மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி
ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும்அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பகத் திகழ்கின்றன. உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இவற்றைத் தவிர மலைக் கோட்டையில் வேறு பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் ஏதுமில்லை. எனினும் இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

-குழந்தைவேலு
திருமயம் மலைக்கோட்டை 1676 ஆம் வருடம் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ரகுநாத சேதுபதி என்னும் கிழவன் சேதுபதியின் (கிபி 1671-1710) காலத்தில் கட்டப்பட்டது.
வரலாறு
திருமயம் என்ற இந்த சிறு நகரம் பழமையும் நெடிய வரலாற்றையும் கொண்டு திகழ்கிறது. முத்தரையர்கள் கி.பி. 8-9-ஆம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள்,பல்லவர் , விஜயநகர அரசர்கள், பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள் என்று பலராலும் ஆளப்பட்டுள்ளது. 

  இந்த ஊர். இராமநாதபுரம் சேதுபதிகள் 16 - 17 நூற்றாண்டுகளில்திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அடுத்து புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது இவ்வூர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இவ்வூர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம்.
மலைக்கோட்டை அமைப்பு
திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிகிறது. எனினும் இந்த அகழிகள் பல இடங்களில் தூர்ந்து போய்க் காணப்படுகின்றன.பாதுகாப்பு அரணாக அமைந்த வெளிச்சுற்று மதிகள் சிதைந்த நிலையில் உள்ளன. உள்சுற்று மதிகள் இன்றும் கட்டுக்கோப்பாக உள்ளன. ஏழு சுற்று மதில்கள் இருந்ததாக இங்கே காணப்படும் தொல்லியல் வரலாற்று அறிவிப்பு பலகைகள் சொல்கின்றன. திருமயம் மலைக்கோட்டைக்கு மூன்று நுழைவாயிகள் முறையே தெற்கு, தென் கிழக்கு மற்றும் வடக்கு திசைகளில் உள்ளன.
மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி
ஒரு உயர்ந்த குன்றின் உச்சியில் இயற்கை அரண்களுடனும் கலை நேர்த்தியுடனும்அமைந்துள்ள திருமயம் மலைக்கோட்டையின் உள்கோட்டையைச் சுற்றி உயரமான மதிற்சுவர்கள் கட்டப்பட்டுள்ளன. இன்றும் இந்தச் சுற்று மதில்கள் கட்டுக் கோப்பகத் திகழ்கின்றன. உள்கோட்டைக்கு ஊரின் மேற்குப் பகுதியிலிருந்து தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படுகின்ற நுழைவாயில்கள் உள்ளன. மலைக்கோட்டையின் உச்சியில் ஒரு பீரங்கி மேடையில் கிழக்கு நோக்கி ஒரு பீரங்கி நிறுவப்பட்டுள்ளது. இது போல கோட்டையின் தெற்கு நுழைவாயில் அருகே இரண்டு பீரங்கிகள் உள்ளன. இவற்றைத் தவிர மலைக் கோட்டையில் வேறு பாதுகாக்கப்பட்ட கட்டடங்கள் ஏதுமில்லை. எனினும் இக்கோட்டையிலிருந்து சேகரிக்கப்பட்ட உடை வாள்கள், பீரங்கிக் குண்டுகள், பீரங்கிகள், பூட்டுகள், சங்கிலிப் போர் உடைகள் போன்ற அரிய பல பொருட்கள் புதுக்கோட்டை மாவட்ட அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.

-குழந்தைவேலு

நான் சுவாசிக்கும் என் தமிழ் சினிமா ஒரு பார்வை - நிறைய ஆசிரியங்களுடன் ............!!!!!


இன்றைய தமிழ் சினிமாவின் நிலையை விரிவாககப் பார்ப்பதற்கு மத்தியில் தமிழ் சினிமாவின் வரலாற்றை கொஞ்சமாகப் பார்த்து விடலாம் என்பதே இந்தப் பதிவின் நோக்கம், ஏற்கனவே பல பதிவர்கள் தங்களது பதிவுகளில் தமிழ் சினிமா வரலாற்றைப் பற்றி விரிவாக எழுதியுள்ளனர். எனது இந்தப் பதிவு அவற்றின் சற்று விரிவான “தொகுப்பு” என்று எடுத்துக்கொள்ளலாம். மேலும் வலையுலகில் நான் தேடிப்படித்த பல கட்டுரைகளின் உதவியுடன் இன்னும் சில விஷயங்களையும் இணைத்து இங்கு கொடுத்துள்ளேன். ஆகவே பதிவு வழக்கதைவிட மிகவும் பெரிதாக வந்துள்ளது. ஆனால் நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்.

மேடை நாடகங்களே புகழ் பெற்று விளங்கிய காலகட்டத்தில் முதன்முதலில் எடுக்கப்பட்ட நகரும் படம் எது தெரியுமா?
உலகின் முதல் நகரும் படம். எடுக்கப்பட்ட ஆண்டு கி.பி.1878. குதிரை ஓடும்போது அதன் நான்கு கால்களும் ஒரே சமயத்தில் அந்தரத்தில் இருக்குமா? என்ற கேள்வி மேலோங்க கலிபோர்னியாவின் அன்றைய கவர்னர் Leland Stanford, புகழ் பெற்ற புகைப்படக்கலைஞரான Eadweard Muybridge என்பவரிடம் அந்தக் கேள்விக்கான விடையறியும் பொறுப்பை ஒப்படைத்தார்.

வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 24 கேமராக்களில், ஓடும் குதிரையை புகைப்படமாக எடுத்த Muybridge, அவற்றை தான் கண்டுபிடித்த Zoopraxiscope என்னும் இயந்திரத்தின் மூலம் இணைத்து நகரும் படமாக மாற்றியுள்ளார். 1872 ஆம் ஆண்டிலேயே வேலை ஆரம்பித்து விட்டாலும், 1878 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 15 ஆம் நாள் தான் Muybridge ஓடும் குதுரையைத் திரைப்படமாகக் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் காட்டியுள்ளார். ஆக, அதிகாரப்பூர்வமாக உலகின் முதல் நகரும் படம் (Motion Picture) வெளியிடப்பட்டு கிட்டத்தட்ட 133 ஆம் ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது! இது போல் இன்னும் பல பரிசோதனைகளை இவர் செய்து பார்த்திருக்கிறார். . என்வே இந்த Muybridge தான் உலகின் முதல் “இயக்குனர்” என்று தெரிகிறது.

Muybridgeற்கு அடுத்து இன்னும் கொஞ்ச நேரம் ‘ஓட’க் கூடிய படத்தை எடுத்தவர் ‘Father of Cinematography’ என்றழைக்கப்படும் Louis Le Prince. முதல் பேப்பர் பிலிம் பயன்படுத்தியவரும் இவரே. Single Lens camera மற்றும் Eastman பேப்பர் மூலம் இவர் 1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் எடுத்த Roundhay Garden Scene தான் உலகின் முதல் குறும்படம்

. இவரே வடிவமைத்துப் பயன்படுத்திய கேமராக்களை இன்றும் இங்கிலாந்தில் உள்ள National Media Museum வில் பாதுகாத்து வைதிருக்கின்றனர். ஆனால் 1890ஆம் ஆண்டு ஒரு ரயிலில் ஏறிய Louis Le Prince பின் இறங்கவே இல்லையாம். அதாவது காணாமல் போய்விட்டார்! இவர் காணாமல் போனதாலேயே முதல் கேமராவை, நகரும் படத்தைக் கண்டுபிடித்த பெருமை அடுத்து வந்த எடிசனுக்குப் போய் விட்டது என்கிறது வரலாறு.
உலகின் முதல் அதிகாரப்பூர்வ (Patented) கேமராவைக் கண்டுபிடித்தவர் நமது எடிசன். அதன் பெயர் Kinetograph. இதை மட்டுமா கண்டுபிடித்தார், இன்னும் பலப்பல பொருட்களை கண்டுபிடித்து தள்ளிக்கொண்டே இருந்திருக்கிறார் இந்த மனிதர்.

அதன் பிறகு Lumière சகோதரர்கள் என்றழைக்கப்பட்ட Auguste and Louis Lumière வந்தனர். இவர்களது முதல் நகரும் படம் வெளியான ஆண்டு 1895. 17 அடி நீளமான பிலிமில் இவர்களது படம் ஓடும் நேரம் 50 வினாடிகள்! Lumière தொழிற்சாலையிலிருந்து தொழிலாளர்கள் வெளியே வருவதை படம்பிடித்துக் காட்டினார்கள். இந்த சகோதரர்கள் தான் உலகம் அறிந்த ஆரம்ப கால சினிமா இயக்குனர்கள். ‘Lumière’ என்றால் ‘வெளிச்சம்’ என்று பொருள். உலகின் முதல் வீடியோ கேமராவை கண்டுபிடித்தவர்களும் இவர்களே. ஆண்டு அதே 1895. இவர்கள் கண்டுபிடித்த cinematograph என்னும் கேமராவைக் கொண்டே இவர்களது முதல் படத்தை எடுத்துள்ளனர். அந்தப் படத்தின் பெயர், La Sortie des usines Lumière à Lyon அல்லது ஆங்கிலத்தில் ‘Workers Leaving the Lumiere Factory’
இவர்களது ஆரம்பகால படங்கள் அனைத்தையும்
YouTube வீடியோவில் பார்க்கலாம்.

அந்த கால இயக்குனர்களில் தவறவிடக்கூடாதவர், Georges Méliès. இவரைப் பற்றிய படம் தான் Martin Scorsese எடுத்த படம் தான் HUGO! கருப்பு வெள்ளை பிலிம்களை கைகளாலேயே கலரடித்து, உலகின் முதல் கலர் படம் காட்டியவரும் இவரே!
உலகின் முதல் sci-fi இயக்குனரும் இவரே.

Lumière சகோதரர்கள் லண்டனில் படம் எடுக்க ஆரம்பித்து போதே அவற்றை இங்கு நமது மும்பையிலும் திரையிட்டுக் காட்ட ஆரம்பித்திருந்தனர். ஆக இந்தியாவில் முதல் திரைப்படம் காட்டப்பட்ட ஆண்டு 1895. இடம் அன்றைய மும்பை. இந்தியாவின் முதல் குறும்படத்தை இயக்கியவர், Hiralal Sen, ஆண்டு 1898. அந்தப் படத்தின் பெயர் A Dancing Sceneஇந்தியாவின் முதல் விளம்பரப் படத்தை எடுத்தவரும் இவரே.

1913 ஆம் ஆண்டிற்குள் கிட்டத்தட்ட 40 படங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இந்திய சுதந்திரத்தை முன்னிட்டே பலப் படங்களை எடுத்து வந்த இவரது படச்சுருள்கள் அனைத்தும் இவர் இறப்பதற்கு சிறிது நாட்களுக்கு முன்னே எரிந்து போய்விட்டதாகத் தெரிகிறது., இவர் தனது முதல் படத்தை ஒரு ஆங்கிலேயே துரையிடமிருந்து இரவல் வாங்கிய கேமராவைக் கொண்டே எடுத்துள்ளார்!

இந்தியாவில் வெளியான முதல் இந்தியப் படம் “Shree pundalik” வெளியான ஆண்டு 1912. இயக்கியவர் “இந்திய சினிமாவின் தந்தை” Dadasaheb Torne. இவர் தான் இந்தியாவின் முதல் படத்தை எடுத்தவர். ஆனால் இவரது பெயர் வெளிவராமல், இவருக்கு அடுத்து படம் எடுத்த Dadasaheb Phalke வின் பெயர் இன்றும் பிரபலமாக இருக்கிறது.

இந்தியாவின் இரண்டாவது மெளனப்படத்தை எடுத்தவர் Dadasaheb Phalke. அந்தப் படம் Raja Harishchandra. படம் வெளியான ஆண்டு (1913). இவர் தனது முதல் படத்தை எடுத்த விதத்தைப் பற்றி 2009 ஆம் ஆண்டு “Harishchandrachi Factory” என்னும் மாராத்தி படம் வெளியாகியிருக்கிறது. ஒவ்வொரு சினிமா ரசிகனும் பார்க்க வேண்டிய படம் படம் முழுவதுமாக ஆங்கில சப்-டைடில்களுடன் YouTube லேயே காணலாம் .

இன்று இந்திய சினிமாவின் உயரிய விருதான வாழ்நாள் சாதையாளர் விருது இவரது பெயரில் தான் வழங்கப்படுகிறது. சென்ற ஆண்டு இந்த விருதை வென்றவர் நம் இயக்குனர் சிகரம், கே.பாலச்சந்தர். இதற்கு முன் இந்த விருதை வென்ற தமிழர், சிவாஜி கணேசன், ஆண்டு 1996.இந்தியாவின் முதல் படத்தயாரிப்பாளர், தியேட்டர் ஓனர் Jamshedji Framji Madan. ஆண்டிற்கு 10 படங்கள் தயாரித்து வெளியிட்டார் என்று தெரிகிறது.

இந்தியாவின் முதல் பேசும் படம் வெளியான ஆண்டு 1931. படம் Alam Ara, இயக்கியவர் Ardeshir Irani. இதே ஆண்டு தமிழகத்திற்கும் பேசும் படம் வந்துவிட்ட்து குறிப்பிடத்தக்கது.
இந்திய சினிமாவின் மற்றுமொரு முக்கிய நபர், தெலுங்கு சினிமாவின் தந்தை, Raghupathi Venkaiah Naidu. தென்னிர்ந்தியாவில் முதன்முதலில் சொந்தமாக திரையரங்கு கட்டியவர் இவர் தான், இவரது நினைவாக தெலுங்கு சினிமாவின் உயரிய விருதான் நந்தி விருதுகளில் ஒரு சிறப்பு விருது வழங்கப்படுகிறது.

தமிழகத்தின் முதல் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் திரு. R. நடராஜ முதலியார். இவரது முதல் படம் “கீசக வதம்”, ஆண்டு 1916. தென்னிந்தியாவின் முதல் மெளனப் படம் இதுதான். ஆனால் இந்தப் படம் நம்மிடம் இப்போது இல்லை. கவனிக்கவும், உலகின் முதல் படமான “The Horse in Motion” இன்றும் எங்கும் பார்க்கலாம் ஆனால் தமிழ் சினிமாவின் முதல் படம் இப்போது நம்மிடம் இல்லை. இந்த படம் மட்டுமல்ல இன்னும் பல நூறு ஆரம்பகாலப் படங்களின் ஒரு பிரதி கூட இப்போது நம்மிடம் இல்லை.

குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு முக்கிய நபர், திரு. சுவாமிக்கண்ணு வின்சென்ட். திருச்சி ரயில்வேஸில் பணிபுரிந்து கொண்டிருந்த இவர், ப்ரொஜெக்டர்களையும், மொளனப்படங்களையும் வாடகைக்கு எடுத்து, ஊர் ஊராகச் சென்று கொட்டகையில் படம் காட்டியிருக்கிறார்.

முதல் பேசும் படம் தமிழகத்திற்கு வந்த ஆண்டு 1931. படம் காளிதாஸ். இயக்கியவர் H.M.ரெட்டி.. அக்டோபர் மாதம் 31 ஆம் தேதி மேள தாளத்துடன் மெட்ராஸ் துறைமுகத்திலிருந்து லிபர்ட்டி தியெட்டருக்கு இந்தப் படம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் காளிதாஸ் முழுக்க முழுக்க தமிழ் படம் கிடையாதாம். படத்தின் கதாபாத்திரங்கள் பல மொழிகள் முக்கியமாக தெலுங்கில் அதிகம் பேசியதாகத் தெரிகிறது. காரணம் காளிதாஸ் வெளியாவதற்கு 45 நாட்களுக்கு முன்னரே தெலுங்கில் முதல் பேசும் படம் வெளியாகியிருக்கிறது அதாவது செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி. அந்தப் படம், ‘பக்த பிரகலாதா’. இதை இயக்கியவரும் அதே H.M.ரெட்டி தான். தயாரிப்பாளரும் இவரே. ஆக தென்னிந்தியாவின் முதல் பேசும் படம், பக்த பிரகலாதா! இந்த பக்த பிரகலாதா, காளிதாஸின் பிரதிகளும் நம்மிடம் இன்று இல்லை. ஆனால் Georges Méliès 1902 ஆம் ஆண்டு இயக்கிய ‘A Trip to the Moon’ முழுபடமும் YouTubeலேயே கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

முதல் முழுக்க முழுக்க தமிழ் பேசிய ( பாடிய) திரைப்படம் 1933 ஆம் ஆண்டு வெளியான கலவா. அர்ஜுனனின் பெருமையைச் சொன்ன இந்தப் படத்தை இயக்கியவர், P.P.ரங்காச்சாரி.
S.ராஜம் ராமனாக நடித்த சீதா கல்யாணம் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய மற்றுமொரு திரைப்படம் ஏனென்றால் சீதையாக நடித்தவர் இவரது தங்கை S. ஜெயலக்ஷ்மி, அன்று கலை தான் முக்கியமாக இருந்தது. இன்று? இந்தப் படத்தை இயக்கியவர் Baburao Phendarkar. 1930களில் பெரும்பாலும் சுதந்திர போராட்ட்த்தை முன்வைத்தே பல படங்கள் வெளிவந்ததாகத் தெரிகிறது.

தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் M.K..தியாகராஜ பாகவதரின் முதல் படமான பவளக்கொடி வெளியான ஆண்டு 1934. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் S.D.சுப்புலட்சுமி. மாபெரும் வெற்றி பெற்ற இந்தப் இந்தப் படத்தை இயக்கியவர், K. சுப்ரமணியம்.1934 ஆம் ஆண்டுவரை தமிழ் படங்களை கல்கத்தாவிலோ, மும்பையிலோ தான் தயாரித்துள்ளார்கள். அதன்படி முதன்முதலில் தமிழகத்தில் தயாரான படம் ஸ்ரீநிவாசகல்யாணம்.

குறிப்பிட்டு சொல்லப்பட வேண்டிய மற்றுமொரு முக்கிய படம் 1935ஆம் ஆண்டு வெளியான நந்தனார். இந்தப் படத்திற்கு தான் நம் அவ்வைப் பாட்டி, K.B.சுந்தராம்பாள். தனது குரு சத்யமூர்த்தி இந்தப் படத்தில் கதாநாயகன் வேடத்தில் இவரை நடிக்கக் கேட்டதற்கு நேரடியாகத் மறுக்க முடியாமல் ஒரு லட்சம் சம்பளமாகக் கேட்டுள்ளார். படத்தின் தயாரிப்பாளர் ஓக்.கே சொல்ல தமிழ் நாடே மிரண்டு போயிருக்கிறது. ஏனென்றால் தமிழின் முதல் பேசும் படமான காளிதாஸின் பட்ஜெட் ரூ.30,000. ஆண்டு 1931. நான்கு ஆண்டுகள் கழித்து வெளிவந்த நந்தானாரில் கதாநாயகன் சம்பளம் ஒரு லட்சம்! இந்தப் படத்தின் இயக்குனர் Manik Lal Tandon. இந்தப் படம் அப்பொழுதே நான்கு மொழிகளில் ரீமேக் ஆகியுள்ளது.

ஒரே காட்சியில் இருவர் தோன்றும் (இரட்டை வேடம்) முதல் படம் துருவா வெளியான ஆண்டு 1935.ராணியாகவும்,கைரேகை பார்க்கும் குறத்தியாகவும் ஒரே காட்சியில் ஒருவரே தோன்றியது இந்தப் படத்தில் தான்.
1936 ஆம் ஆண்டு ஆங்கிலேயரான Ellis R. Duncan தமிழ் படங்களை வரிசையாக இயக்கத் தொடங்கினார். இதை விட மிக்கியமாக விஷயம், அதே 1936 ஆம் ஆண்டு வெளியான சதிலீலாவதி எம்.ஜி,ஆரையும், T.S.பாலைய்யாவையும் தமிழ் சினிமாவிற்கு தந்தது. கலைவானர் N.S.கிருஷ்ணனின் இரண்டாம் படமும் இதுவே (முதல் படம் மேனகா, ஆண்டு 1935. தமிழின் முதல் சமூகப்படம் என்ற பெருமையும் இந்தப் படத்திற்கு உண்டு).

தமிழ் சினிமாவின் முதல் காமெடியன் இவர் தான். ஏ.வி.எம்.மெய்யப்ப செட்டியார் சினிமாவில் காலடியெடுத்து வைத்த ஆண்டும் இதே ஆண்டு தான்.

இதே 1936 ஆம் ஆண்டு நடைபெற்ற மற்றுமொரு முக்கிய சம்பவம், தமிழகத்தின் முதல் பெண் இயக்குனரான T.P.ராஜலக்ஷ்மியின் மிஸ்..கமலா வெளியானதும் இதே ஆண்டு தான்.

1944ஆம் வருடம் தான் தமிழ் சினிமாவின் முதல் ஹிட் வருடம். 1944 தீபாவளிக்கு வெளியான M.K..தியாகராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் திரைப்படம் மூன்று தீபாவளிகளைக் கடந்து ஓடியிருக்கிறது. இதுநாள்வரை தமிழ் சினிமா வரலாற்றில் அதிக நாட்கள் ஓடிய படமும் இதுதான். இந்தப் படத்தின் இயக்குனர் Sundar Rao Nadkarni.

சுதந்திரத்திற்குப் பிறகு வெளியான படங்களில் முழு முக்கியத்துவம் பெருவது 1948 ஆம் ஆண்டு வெளியான சந்திரலேகா. இதன் பட்ஜெட் ரூ.30 லட்சம். இயக்கியவர், S.S.வாசன். இந்தியா முழுக்க ஒரே நேரத்தில் வெளியாகி வெற்றியும் பெற்ற முதல் படமும் இதுவே.

1930களிலேயே பேசும் படங்கள் வந்திருந்தாலும் 1945 – 1950களில் தான் பாடல் விடுத்து, வசனத்தில் கவனம் காட்டத் தொடங்கியிருந்தனர் தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள்.

N,S.கிருஷ்ணன் – மருதம் நடித்த நல்லதம்பி 1949ஆம் ஆண்டு வெளியானது. இந்தப் படத்தின் சிறப்பு, இதன் வசனகர்த்தா, திரு.அண்ணாதுரை. அதே போல் 1950ல் எம்.ஜிஆர் – பத்மினி நடிப்பில் மந்திரி குமாரி படம் வெளியானது. வசனம், கலைஞர் கருணாநிதி. இயக்கம் R.குருஷ்ணன், S.பஞ்சு.

அதே போல் 1952 ஆம் ஆண்டு இதே கூட்டணியில் வெளிவந்த மற்றுமொரு வெற்றிப் படம், நடிகர் திலகம் சிவாஜி கணேசனை தமிழ் சினிமா பெற்றெடுத்த படம், பராசக்தி.

சாதாரணமாக ஒரு படத்தில் 10 பாடல்களுக்கு குறைவில்லாமல் வந்து கொண்டிருந்த காலகட்டத்தில் பாடல்களே இல்லாமல் வெளிவந்த முதல் படம், சிவாஜி நடிப்பில் வெளிவந்த அந்த நாள். வருடம் 1954. இயக்கம் திரு.சுந்தரம் பாலச்சந்தர்.

தென்னிந்தியாவின் முதல் முளு நீள வண்ணப்படம் ‘அலிபாபாவும் நாற்பது திருடர்களும்’ வெளியான ஆண்டு 1956. இந்தப் படத்தை இயக்கியவர் Modern Theatres T.R.சுந்தரம். ஆயினும் தமிழ் சினிமா கருப்பு – வெள்ளையிலிருந்து கலருக்கு முற்றிலுமாக மாற இருபது ஆண்டுகள் ஆனது

ஒரே படத்தில் ஒரே நடிகர் அதிகபட்சமாக 9 வேடங்களில் நடித்து வெளிவந்த படம் சிவாஜியின் நவராத்திரி. ஆண்டு 1964, இயக்கியவர் திரு. A.P. நாகராஜன்.

. நான் இங்கு கொடுத்திருக்கும் தகவல்கள் வெறும் விக்கிபீடியா மொழிபெயர்ப்பு அல்ல. பல இணைய பக்கங்களிலிருந்தும், தமிழ் சினிமா தளங்களிலிருந்தும், திரு.பிலிம்.நியூஸ் ஆனந்தன் அவர்களது குறிப்புகளிலிருந்தும் எடுத்து நிஜமாகவே கொஞ்சம் சிரமப்பட்டு, பல மணிநேரங்களை செலவுசெய்துதான் எழுதியிருக்கிறேன். UTV தனஞ்செயன் அவர்களது ‘Best of Tamil Cinema’ புத்தகம் இன்னும் கைக்கு வந்து சேரவில்லை. அதுவும் இருந்திருந்தால் இன்னும் பலப்பல சங்கதிகளை புகைப்படத்துடன் கொடுத்திருப்பேன்.. இன்னும் நிறைய தகவல்கள் இணையத்தில் குவிந்து கிடக்கிறது.

நான் இதுவரை எழுதியிருக்கும் 34பதிவுகளில் இந்தப் பதிவை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன். காரணம், நான் ரசிக்கும் தமிழ் சினிமாவின் வரலாற்றை நானே தேடித் தேடிக் கண்டுபிடித்து, ஆசை ஆசையாக எழுதியிருப்பதால் தான். என் பாட்டன், முப்பாட்டன் வரலாற்றை தேடிக் கண்டுபிடித்திருந்தால் கூட இவ்வளவு மகிழ்ச்சி அடைதிருப்பேனா என்பது சந்தேகம் தான்.

இந்தப் பதிவு பயனுள்ளதாகத் தெரிந்தால் உங்கள் வலைப்பக்கங்களில் இதைப் பகிரவும். என்ன பெருசா எழுதிட்ட என்று கேட்காதீர்கள். என்னைப் பொறுத்தவரை நான் கொஞ்சம் கடினமான தேடலுக்கு பெறகுதான்' எழுதியிருக்கேன்:நிறைய விஷயங்கள் விடுபட்டு இருக்கும் எனது சின்ன மூளைக்கு எட்டிய செய்திகளை மட்டுமே என்னால் எழுத முடிந்தது .

இந்தப் பதிவு, நான் நேசிக்கும் என் தமிழ் சினிமாவிற்கு சமர்பணம்!


திரைப்பட இயக்குனர் மருது பாலன்