THE UNIVERSITY OF MELBOURNE |
A ‘can do’ attitude is the key to a healthy lifestyle, University of Melbourne economists have determined.
Researchers from the Melbourne Institute of Applied Economic and Social Research analysed data on the diet, exercise and personality type of more than 7,000 people. The study found those who believe their life can be changed by their own actions ate healthier food, exercised more, smoked less and avoided binge drinking. Professor Deborah Cobb-Clark, Director of the Melbourne Institute of Applied Economic and Social Research, said those who have a greater faith in ‘luck’ or ‘fate’ are more likely to live an unhealthy life. “Our research shows a direct link between the type of personality a person has and a healthy lifestyle,“ she said. Professor Cobb-Clark hoped the study would help inform public health policies on conditions such as obesity. “The main policy response to the obesity epidemic has been the provision of better information, but information alone is insufficient to change people’s eating habits,” she said. “Understanding the psychological underpinning of a person’s eating patterns and exercise habits is central to understanding obesity.” The study also found men and women hold different views on the benefits of a healthy lifestyle. Men wanted physical results from their healthy choices, while women were more receptive to the everyday enjoyment of leading a healthy lifestyle. Professor Cobb-Clarke said the research demonstrated the need for more targeted policy responses. “What works well for women may not work well for men,” she said. “Gender specific policy initiatives which respond to these objectives may be particularly helpful in promoting healthy lifestyles.” The study used data from the Household, Income and Labour Dynamics in Australia (HILDA) Survey.
Editor's Note: Original news release can be found here.
|
Search This Blog
Monday, September 17, 2012
Study: attitude controls health
சோழர்களும் அவர்களின் வரலாறும்
சோழர்கள் பற்றி கேள்விப்படாத தமிழர்களே இருக்க முடியாது. அப்படிப்பட்ட சோழப்பேரரசின் வரலாற்றையும் கலைசிறப்பையும் நான் கற்று தெரிந்தவற்றிலிருந்தும், சில இணையங்களில் இருந்து பெற்றதையும் அடிப்படையாக கொண்டு என்னால் முடிந்தவரை ஓர் தொடர் தொகுப்பை வரையலாம் என நினைக்கிறேன் .
சோழர்களின் தோற்றம் என்பது காவிரியாற்றின் கரையோர பகுதிகளிலும் அவற்றின் கிளையாற்றுப் பிரிவுகளின் அருகாமையிலும் உருவாகியது என்கின்றது வரலாறு. சோழர்களைப் பொறுத்த மட்டில் கரிகால சோழன், இளஞ்செட்சென்னி சோழன் போன்ற கி.பி 2 ஆம் நூற்றாண்டிற்கு முன் வாழ்ந்த சோழமன்னர்களால் சோழர் குலம் பெருமை எய்தி காணப்பட்ட போதும் கி.பி 2 ஆம் நூற்றாண்டிற்கு பின்னர் வந்த சோழ மன்னர்கள் சிற்றரசர்கள் எனும் நிலைக்கு தாழ்ந்து போயினர்.
______________________________ _______________
கரிகாலன் காலத்து சோழர் ராஜ்ஜியம் கி.பி 120
பிற்காலத்தில் கி.பி 9 ஆம் நூற்றாண்டளவில் மீண்டும் சோழர்கள் வலிமைபெற்று விளங்கத் தொடங்கினர்.வரலாற்று ஆய்வாளர்களைப் பொருத்தமட்டில் கி.பி 2 ஆம் நூற்றாண்டிலும் அதற்க்கு முந்தைய காலப் பகுதிகளிலும் வாழ்ந்த சோழர்கள் முற்காலச் சோழர்கள் என்றும் கி.பி 9 ஆம் நூற்றாண்டிலும் அதற்க்கு பின்னருமான காலப் பகுதிகளில் வாழ்ந்த சோழர்கள் பிற்காலச் சோழர்கள் என்றும் இனம் காணப் படுகின்றார்கள்.
வரலாற்று சான்றும் சோழர் எனும் பெயர் விளக்கமும்
கிறிஸ்துவுக்கு முன்வாழ்ந்த சோழர்களின் பெயர்களை இலகியம்களும் நூல்களும் கூறினாலும் சோழர்களின் தோற்றத்தையும் அதன் காலப் பகுதியையும் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்ள போதிய வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றே கூற வேண்டும். இருந்தாலும் சங்க கால இலக்கியம்களில் இருந்தும் பிற பல வரலாற்று நூல்களில் இருந்தும், கல்வெட்டு மற்றும் செப்பு பட்டயங்களில் இருந்தும் கிறிஸ்துவுக்கு பின் வாழ்ந்தசோழ மன்னர்களின் பெயர்களுடன் அவர்களின் ஆட்சி காலப் பகுதிகளும் அறியப் படுகின்றன. மேலும் இலங்கையின் மகாவம்சம், தொலமி எனும் புவியியல் ஆராட்சி நிபுணரின் குறிப்புகள், 1 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அலெக்ஸ்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் வழிகாட்டி நூலான " PERIPLUS OF THE ERYTHRAEAN SEA " போன்ற சான்றுகளும் சோழர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலப் பகுதியையும் தெளிவாக அறிய உதவுகின்றன.
சோழர்கள் எனும் பெயர் உருவானது எப்படி என்று பலர் பல விதமாக தங்கள் கருத்தை முன் வைத்தாலும் தேவநேயப் பாவாணர் மற்றும் பரிமேலழகர் என்பவர்களின் கருத்துக்களே குறிப்பாக நோக்கப் படுகின்றன. நெல் மிகையாக விளையும் நாடு சோழநாடு என்றும் நெல்லின் மறு பெயரான "சொல்" என்பதே மொழிப் பாவனையால் திரிபுற்று "சோழ" என்று மருவிற்று என்பது தேவநேயப் பாவாணர் கருத்தாகும். பரிமேலழகரை பொறுத்த வரையில் பாண்டியர் குலம்,சேரர் குலம் போன்று சோழர்களும் ஒரு ஆண்டு வந்த குலப் பெயர் ஆகும் என்பது அவரின் கருத்தாகும்.
தொடரும்..............
எதாவது தவறுகள் இருப்பின் அறியத்தரவும்.............
______________________________
கரிகாலன் காலத்து சோழர் ராஜ்ஜியம் கி.பி 120
பிற்காலத்தில் கி.பி 9 ஆம் நூற்றாண்டளவில் மீண்டும் சோழர்கள் வலிமைபெற்று விளங்கத் தொடங்கினர்.வரலாற்று ஆய்வாளர்களைப் பொருத்தமட்டில் கி.பி 2 ஆம் நூற்றாண்டிலும் அதற்க்கு முந்தைய காலப் பகுதிகளிலும் வாழ்ந்த சோழர்கள் முற்காலச் சோழர்கள் என்றும் கி.பி 9 ஆம் நூற்றாண்டிலும் அதற்க்கு பின்னருமான காலப் பகுதிகளில் வாழ்ந்த சோழர்கள் பிற்காலச் சோழர்கள் என்றும் இனம் காணப் படுகின்றார்கள்.
வரலாற்று சான்றும் சோழர் எனும் பெயர் விளக்கமும்
கிறிஸ்துவுக்கு முன்வாழ்ந்த சோழர்களின் பெயர்களை இலகியம்களும் நூல்களும் கூறினாலும் சோழர்களின் தோற்றத்தையும் அதன் காலப் பகுதியையும் சந்தேகம் இல்லாமல் தெரிந்து கொள்ள போதிய வரலாற்று ஆதாரங்கள் இல்லை என்றே கூற வேண்டும். இருந்தாலும் சங்க கால இலக்கியம்களில் இருந்தும் பிற பல வரலாற்று நூல்களில் இருந்தும், கல்வெட்டு மற்றும் செப்பு பட்டயங்களில் இருந்தும் கிறிஸ்துவுக்கு பின் வாழ்ந்தசோழ மன்னர்களின் பெயர்களுடன் அவர்களின் ஆட்சி காலப் பகுதிகளும் அறியப் படுகின்றன. மேலும் இலங்கையின் மகாவம்சம், தொலமி எனும் புவியியல் ஆராட்சி நிபுணரின் குறிப்புகள், 1 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அலெக்ஸ்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் வழிகாட்டி நூலான " PERIPLUS OF THE ERYTHRAEAN SEA " போன்ற சான்றுகளும் சோழர்களின் பெயர்களையும் அவர்களின் ஆட்சி காலப் பகுதியையும் தெளிவாக அறிய உதவுகின்றன.
சோழர்கள் எனும் பெயர் உருவானது எப்படி என்று பலர் பல விதமாக தங்கள் கருத்தை முன் வைத்தாலும் தேவநேயப் பாவாணர் மற்றும் பரிமேலழகர் என்பவர்களின் கருத்துக்களே குறிப்பாக நோக்கப் படுகின்றன. நெல் மிகையாக விளையும் நாடு சோழநாடு என்றும் நெல்லின் மறு பெயரான "சொல்" என்பதே மொழிப் பாவனையால் திரிபுற்று "சோழ" என்று மருவிற்று என்பது தேவநேயப் பாவாணர் கருத்தாகும். பரிமேலழகரை பொறுத்த வரையில் பாண்டியர் குலம்,சேரர் குலம் போன்று சோழர்களும் ஒரு ஆண்டு வந்த குலப் பெயர் ஆகும் என்பது அவரின் கருத்தாகும்.
தொடரும்..............
எதாவது தவறுகள் இருப்பின் அறியத்தரவும்.............
Vallabha Ganapathi
Bheeja pooragadekshukarmukarujaa chakrabja pasthpala,Vrehygraswavishana rathna kalasa prodhyuth karamboruha,Dhyoyo vallabhaya cha padmakarayaslishto jwalath bhooshaya,Viswothpathi vinasa samsthithikaro vigno visishtarthadha.
It is necessary to meditate on that God who prevents bottlenecks,Who holds in his eleven hands things like lemon, mace,Bow, sugarcane, spear, holy wheel, lotus flower, rope,The black bel flower, the paddy bunch, his own tusk and pot of gems,Who is being embraced by his wife who is well ornamented,And having in her hand a lotus flower,Who does the creation, upkeep and destruction of the universe,And who blesses all with the extraordinary wealth.
Viswothpathi vinasa samsthithikaro vigno visishtarthadha.
It is necessary to meditate on that God who prevents bottlenecks,
Who holds in his eleven hands things like lemon, mace,
Bow, sugarcane, spear, holy wheel, lotus flower, rope,
The black bel flower, the paddy bunch, his own tusk and pot of gems,
Who is being embraced by his wife who is well ornamented,
And having in her hand a lotus flower,
Who does the creation, upkeep and destruction of the universe,
And who blesses all with the extraordinary wealth.
ரூ.10ல் சிறுநீரகக்கல்லுக்கு தீர்வு..!
நான் மருத்துவம் படித்த மருத்துவர் அல்ல. எனது அனுபவத்தில் நான் மேற்கொண்ட, பலனைத்தந்த வீட்டுச் சிகிச்சையை எழுதியிருக்கிறேன்.
இன்றைய உணவுப்பழக்கத்தினால், சிறுநீரக கல் பிரச்சினை என்பது பெரும்பாலானவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது.
இதனால் உண்டாகும் வலியானது, எனது அனுபவத்தில் வேறு எந்த வலியோடும் ஒப்பிடமுடியாதது.
எனக்கு நான்கு வருடங்களுக்கு முன், இடுப்பில் வலி ஏற்பட்ட போது முதலில் வாயு பிரச்சினையாக இருக்கும் என்று நினைத்தேன், ஆனால் வலியின் அளவு
கூடிக்கொண்டே போய் தாங்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. மருத்துவரிடம் சென்றால் ஸ்கேன் எடுக்க பரிந்துரைத்தார்.
ஸ்கேன் ரிப்போர்ட்டில் எனக்கு, 5mm மற்றும் 9mm-ல் இரண்டு கற்கள் சிறுநீரகத்தில் இருப்பதாகவும், இதை அறுவை சிகிச்சை மூலம்தான் அகற்றமுடியும் என்றும் மருத்துவர் சொன்னார்.
மருத்துவச் செலவாக `30,000/- ஆகுமென்றும் சொன்னார். சரி இந்த அறுவை சிகிச்சை செய்துவிட்டால், இனிமேல் இந்த பிரச்சினை வராதா என்று கேட்டால், அதற்கு உத்திரவாதம் இல்லை, உங்களின் உணவு முறை மற்றும் நீங்கள் தினமும்
அருந்தும் தண்ணீரின் அளவைப் பொறுத்தது என்றார்.
சரி நாளை வருகிறேன் என்று வீடு வந்தேன். இத்தனைக்கும், என் நண்பன் ஒருவனுக்கு இதே பிரச்சினை வந்ததிலிருந்து வாழைத்தண்டு சாரும்,
வாழைத்தண்டு பொறியலும் அடிக்கடி சாப்பிட்டு வந்தேன், இருந்தாலும் எனக்கு தண்ணீர் அருந்தும் பழக்கம் குறைவானதால் வந்துவிட்டது போலும்.
எனவே கூகுளிடம் சரண்டர், ஒரு மணி நேரத்தேடலுக்குப் பிறகு, சிகிச்சை பெற்ற
ஒரு புண்ணியவான் அந்த காய்கறி பெயர்+ திரவத்தின் பெயரை வெளியிட்டிருந்தார்
அந்த காய்கறியின் பெயர் ஃபிரஞ்சு பீன்ஸ்(French beans) , திரவத்தின் பெயர் தண்ணீர் (அட வீட்ல நாம தினமும் குடிப்பது தான்).
( ¼ ) கால் கிலோ ஃபிரஞ்சு பீன்ஸ் ( எல்லா கடைகளிலும் கிடைக்கிறது ) `ரூ10-க்கு வாங்கி, விதை நீக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து (குறைந்தது 2
மணிநேரம்), மிக்ஸியில் நன்றாக அரைத்து குடித்து விட்டு, 10 நிமிடம் கழித்து, 2 லிட்டர் நீரை ( ஒரே முறையில் குடிக்க முடியவில்லையென்றால்
சிறிது நேரம் விட்டு விட்டு) குடிக்க வேண்டும், இன்னும் அதிகமாக குடிக்க
முடிந்தால் நலம்.
நான் இதை குடித்தவுடன் (மாலை 5 மனிக்கு) , விடியற்காலை 3 ½ மணிக்கு (அதுவரை அடிக்கடி நீர் அருந்திகொண்டிருந்தேன், வலியில் எங்கே தூங்குவது...) 5 சிறு கற்களாக சிறுநீர் போகும்போது வெளிவந்தது.
கல்லானது சிறுநீரகத்திலிருந்து சிறு பைப் வழியாக சிறுநீர்பைக்கு சென்றடைகிறவரையிலும் வலி கொடுமையானதாக இருக்கும், அதன் பின் சிறுநீர் பையிலிருந்து வெளி வருகிறவரை, சிறுநீர் பாதையை அடைத்துக் கொண்டு, சிறுநீர் வரும்.. ஆனால் வராது... என்ற கதையாகிவிடும்,
பயந்துவிடாமல், நாம் பருகும் நீரின் அளவை அதிகரிக்க வேண்டும், சிறுநீர்பை நிறைந்து சிறுநீர் கழிப்பது கட்டுபடுத்தாத நிலைவரும்,
அப்போது, நாம் அதிக அழுத்ததுடன் சிறுநீர்கழித்தால் , வெளியே வந்துவிடும். கற்கள் ஒரு ஸேப் (SHAPE) இல்லாமல் இருப்பதால், உள்பாதையில் கிழித்து
ரத்தமும் வரலாம், ஒரு நாளில் சரியாகிவிடும்.
மறுநாள் எடுதத ஸ்கேனில் கற்கள் இல்லையென்று ரிப்போர்ட் வந்தது.
அதிலிருந்து வாரம் ஒருமுறை இதை சாப்பிடுகிறேன், எனக்கு கல் பிரச்சினை
போயே போயிந்தி.. இட்ஸ் கான்...
இனிமேல் கல் உருவாகாமல் பார்த்துக்கொள்ளலாம். தினமும் 3 லிட்டர் வரையிலும் தண்ணீர் குடித்து விடுங்கள்.
சிறுநீரக்கல் வலி வந்த பிறகு அது தொடர்பாக நான் இணையதலத்தில் படித்ததில் சில :
துளசி இலை(basil) : இந்த இலையின் சாருடன் , தேன் கலந்து ஆறு நாட்கள் உண்டால், கல் உடந்து விடுமாம்.( கல்வலி வந்த பிறகு ஆறு நட்கள் என்பது மிக அதிகமான காலம், அதனால், இதை நாம் கல்உருவாவதை தடுக்கும் முன்னெச்சரிக்கைக்காக அருந்தலாம்)
ஆப்பிள்(Apple) : அடிக்கடி சாப்பிட்டாலும் கல் உருவாகாதாம்.
திராட்சை ( Grapes) : இதில் உள்ள, நீரும், பொடாசியம் உப்பும், கல் உருவாகுவதை தடுக்குமாம். மேலும் இந்த பழத்தில் உள்ள ஆல்புமின் மற்றும் சோடியம் குளோரைடு கல் பிரச்சினக்கு நல்ல தீர்வாக இருக்குமாம்.
மாதுளம் பழம்(pomegranate ): இந்த பழத்தின் விதையைப் பிழிந்து, ஒரு டேபில் ஸ்பூன் அளவு எடுத்து, அதனுடன் 2 ஸ்பூன் கொள்ளு சாருடன்(
குதிரைக்கு பிடித்தது..!!) சேர்த்து சாப்பிட்டால் , கல் பிரச்சினை தீருமாம்.
அத்திப்பழம்(Figs) : இந்த பழத்தை, நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி, ஒரு மாதம் தொடர்ந்து, காலையில் காலி வயிற்றில், பருகினால் பலன் தருமாம்.
தண்ணீர்பழம்(water melon ): நீரின் அளவு அதிகம் உள்ள பழம், பொட்டாசியம் உப்பின் அளவும் அதிகமாம், அதிகம் உண்பதால் கல் பிரச்சினை தீருமாம்.
இளநீர் : இளநீர் அதிக அளவு சேர்த்துக் கொல்வதாலும் கல் உருவாவதை தடுக்கலாமாம்.
வாழைத்தண்டு ஜூஸ் : வாழைத்தண்டு ஜூசுக்கு கல் உருவாவதை + கல் உருவானதை உடைக்கும்(diffuse) திரன் உள்ளதாம்.
மேற்சொன்னதை எவ்வளவு உட்கொண்டாலும், குடிக்கும் தண்ணீரின் அளவு (தினமும் 2 லிட்டரிலிருந்து 3 லிட்டர் வரை) குறைந்தால் கல் உருவாவது நிச்சயம் என்கிறார்கள்.
பின் குறிப்பு 1 : கல் ஏற்பட்ட பின் வலியை பொருக்கமுடியாதவர்கள் மருத்துவரிடம் சென்றுவிடுவதே நல்லது.
பின் குறிப்பு 2 : இந்த முறையில் பக்க விளைவுகளுக்கு சாத்தியமே இல்லையென்பதால், தைரியமாக பின்பற்றலாம். இதுவரை கல் பிரச்சினை வராதவர்களும் பின்பற்றலாம்.
(இந்த தகவலை பகிர்ந்த அந்த நல்லுள்ளதிர்க்கு "தேடலின்" மனமார்ந்த நன்றிகள் ...!)
சர்க்கரை நோய்க்காண மிக எளிய மருந்து...!
1. ஓமம் 50 கிராம்
2. சீரகம் 50 கிராம்
2. சீரகம் 50 கிராம்
3. கருஞ் சீரகம் 50 கிராம்
4. வெந்தயம் 100 கிராம்
தனித் தனியாக பொன் நிறமாக வருத்து
பின்னர் ஓன்றக கலந்து mixer கிரைண்டர் இல் பொடி செய்து கொள்ளவும்
அதி காலை வெறும் வயிற்றில் ஓரு தேக் கரண்டி இளஞ் சூடு வெந்நீர் உடன் கலந்து பருகவும்
இப்படி செய்து வர நால்ளடைவில் சர்க்கரை கட்டுப்பட்டு குறையும்...
4. வெந்தயம் 100 கிராம்
தனித் தனியாக பொன் நிறமாக வருத்து
பின்னர் ஓன்றக கலந்து mixer கிரைண்டர் இல் பொடி செய்து கொள்ளவும்
அதி காலை வெறும் வயிற்றில் ஓரு தேக் கரண்டி இளஞ் சூடு வெந்நீர் உடன் கலந்து பருகவும்
இப்படி செய்து வர நால்ளடைவில் சர்க்கரை கட்டுப்பட்டு குறையும்...
What is Sankashti Chaturthi?
============================== =======
Sankashti Chaturthi is a special day of the month in the Hindu calendar when Ganesha’s devotees invoke His blessings to rid themselves of problems and impediments. This sacred time falls on the fourth day after the full moon. “Sankata” in Sanskrit means difficulty, crisis or obstacle, while “hara” refers to removal or elimination. On this day, devotees fast from morning until moonrise. In the evening, after a ritual bath, Ganesha is worshipped with sacred Durva grass. Devotees recite His prayers – the Ganesha Gayatri, the Ashtothram Shatanamavali (His 108 names) and the Ganesha Atharvashirsha Avartan. The moon is also worshipped with offerings of flowers and sandalwood paste
On Sankashti Chaturthi, Ganesha temples close down about an hour before moonrise. The idol is bathed with milk and rosewater to the chants of Vedic prayers. Ganesha is offered steamed modaks and His other favored foods. Performing this puja is believed to liberate the worshipper’s soul from the cycle of birth and death.
டிகாக்ஷன் போடும் கலை!
டிகாக்ஷன் போடுவது அப்படி ஒன்றும் பெரியதொரு காரியமல்ல என்று நினைத்துக் கொண்டிருந்தேன் – அந்தச் சந்தர்ப்பம் வரும் வரையில்.
மனைவி பாத்ரூமில் வழுக்கி விழுந்து கணுக்காலில் லேசான (அவள் பாஷையில் பயங்கரமான) வலி. வெறும் ஸ்டெரெய்ன்தான் – இரண்டு நாள் ரெஸ்ட்டாக இருந்தால் போதும் என்று டாக்டர் சொல்லிவிட்டார்.
ரெஸ்ட் என்பதில் காப்பி கூடப் போடக்கூடாது என்பதும் அடங்கும் என்பது எனக்குத் தெரியாது. அதனால் வழக்கம்போல் காலை ஐந்தரை மணிக்குக் காப்பி எதிர்பார்த்துக் காத்திருந்தேன்.
ரிஸல்ட்டுகளை எலக்ட்ரானிக் யந்திரம் வினாடி நேரத்தில் அறிவிக்கும் காலம் இது...மனைவி காப்பி போடுவாளா, மாட்டாளா என்ற ரிஸல்ட் ஆறு மணிக்கு மேல்தான் தெரிந்தது.
”டிகாக்ஷன் நீங்களே போட்டு விடுங்கள். பாலையும் ஸிம்மிலே வெச்சு நிதானமாகக் காய்ச்சி விடுங்க” என்று சொல்லிவிட்டு தனது தூக்கத்தின் இன்ப எல்லைக்குள் பிரவேசித்து விட்டாள்.
நான் காப்பி குடித்துப் பழகியிருக்கிறேனே தவிர போட்டுப் பழகாதவன்.
ஓரளவு காப்பி நடவடிக்கைகளை எட்ட இருந்து கவனத்திருக்கிறேன் என்றாலும் அதைத் தெரிந்து கொள்ள எந்த ஆர்வத்தையும் வளர்த்துக் கொள்ளாதவன்.
மனைவி போடும் காப்பி, கிரிக்கெட் ஆட்டம் மாதிரி சில சமயம் நன்றாயிருக்கும். சில சமயம் சுமாராக இருக்கும். இன்னும் சில சமயம் நாம எதைக் குடித்தோம் என்றே தெரியாது.
மனைவி அமைவதெல்லாம் மாதிரி காப்பி அமைவதெல்லாம் டிகாக்ஷன் தந்த வரம்.
காப்பிப் பொடியை எந்த இடத்தில் வைப்பது என்ற அடிப்படை அறிவு சமையலறையில் புழங்குபவருக்கு இருக்க வேண்டும்.
மழை மறைவுப் பிரதேசம் மாதிரி கடலைமாவு பாட்டிலின் பின்னால் அதை ஒளித்து வைத்திருந்தால் எனக்கெப்படித் தெரியும். பக்கத்து வீட்டு அம்மாள் கண்ணில் நம்ம வீட்டுப் பாட்டில் ·புல் காப்பிப் பொடி பட்டால் திருஷ்டிபட்டுவிடும் என்பதாக ஒரு நம்பிக்கை. அவர்கள் வீட்டில் இரண்டு கார் இருக்கிறது. அதன் மேலெல்லாம் நம்ம திருஷ்டி படும் என்று அவர்கள் நினைத்து காரில் கண் திருஷ்டி கணபதி ஒட்டி வைப்பதில்லை.
ஆனால் நம்ம வீட்டு அற்ப காப்பிப் பொடியைப் பார்த்துப் பக்கத்து வீட்டம்மாள் கண் போட்டு விடுவாளாம். எல்லாம் சைக்கோ கேஸ்.
‘காப்பிப் பொடி எங்கே…’ என்றதும் அதன் இருப்பிடத்தை முணகினாள். அத்தோடு அலை வரிசை ஆ·ப் ஆகிவிட்டது.
காப்பிப் பொடியை ·பில்ட்டரில் போடவேண்டும என்பதெல்லாம் தெரியாத மூடனல்ல நான். அதையும் மேல் பில்ட்டரில் போட வேண்டும் என்கிற அளவுக்கு விஷயம் தெரிந்த ஞானஸ்தன்.
ஆனால் எந்த ·பில்ட்டர் என்பதில் ஒரு புதிர் வைத்திருந்தாள். ஒவ்வொருத்தருடைய ஹாபி எதையாவது கலெக்ட் செய்வது. சிலதுகள் கீ செயின் சேகரிக்கும். சில பேர் இருபது ரூபாய் நோட்டாக சேகரிப்பார்கள். சிலர் காதுக்கு மாட்டிக் கொள்ளும் ஏதோ ஒரு அயிட்டம். பொட்டு தினுசுகள், பெட்டி வகையறா…
மனைவி ஒரு ·பில்ட்டர் கலெக்டர். பல வகையான ·பில்டர்கள் வைத்திருக்கிறாள். சுமார் ஒன்பது பத்து இருக்கும்.
அது அது ஒழுங்காக அது அதனுடைய ஜோடியுடன் பொருத்தி குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தால் சட்டென்று நாம் எடுத்து விட முடியும்.
மேலுதுகளும் கீழுதுகளும் தனித் தனியாக ஒரு கூடையில் பளபளத்துக் கொண்டிருந்தன. மனைவி அதை ஸெட் செய்து வைப்பதற்குள்தான் ஆக்ஸிடென்ட்(?) ஆகிவிட்டது.
எந்த பாட்டத்துக்கு எது மேல் பாகம் என்று கண்டு பிடித்து அடுக்கி வைப்பதற்கே டங்குவார் அறுந்துவிட்டது. அதற்கப்புறம் அதற்கு மூடிப் பொருத்தம் பார்ப்பதற்குள் முகூர்த்தமே முடிந்து விடும் போலாகிவிட்டது.
நல்ல வேளை, அவ்விடத்திலிருந்து, ‘இன்னுமா காப்பி போட்டாகிறது’ என்று குரல் வரவில்லை.
சற்று கணிசமான ஒரு பில்டரை தேர்ந்தெடுத்தபின், காப்பிப் பொடி போட ஸ்பூன் தேடியதில் சகல ஸ்பூன்களையும் தேய்க்கப் போட்டிருப்பது தெரிந்தது. (ஆனால் நான் கொஞ்சம் சூட்சும மூளைக்காரனாதலால் வேறு பாட்டில் ஒன்றிலிருந்த ஸ்பூனை எடுத்து உபயோகித்தேன். மேற்படி பாட்டிலில் இருந்தது மஞ்சள் தூளாதலால் அதன் வாசனை காப்பிப் பொடியில் பற்றிக் கொண்டு விடப் போகிறதென்று அலம்பிவிட்டு – சே! என்ன அவசரம், ஏன் ஆர்வம் – காப்பிப்பொடி பாட்டிலில் ஈரமாகவே நுழைத்து விட்டேன். அது ஒன்றும் சிரச் சேதத்துக்குரிய மாபெரும் குற்றமில்லாவிட்டாலும்; நாளைக்கு கோர்ட் முன் பதில் சொல்லியாக வேண்டிய கட்டாயம் உள்ளது. மனைவியின் குறுக்குக் கேள்விகளும் என் நறுக்கு பதில்களும். (கற்பனைதான்).
நீங்க எந்த ஸ்பூனைப் போட்டீர்கள்?
ஏதோ ஒரு ஸ்பூன்.
மிளகாய்ப் பொடி ஸ்பூனா?
அந்த அளவு முட்டாளில்லை. மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூன். எல்லாம் அலம்பிட்டுத்தான் போட்டேன்.
துடைச்சீங்களா?
ஊம்… ஊம்…
சரியாச் சொல்லுங்க. துடைக்காமலேயே போட்டிருக்கீங்க.
சரியான ஞானக் கண்ணி!
காப்பிப் பொடியெல்லாம் பிசுபிசுன்னு… சே! அப்புறம் ஏன் பாட்டிலை மூடலை?
மஞ்சள் தூள் பாட்டிலையா? நல்லா மூடினேனே.
நான் கேட்டது காப்பிப் பொடி பாட்டிலை. எல்லா வாசனையும் போச்சு. புளியங்காப் பொடியாட்டும் ஆயிடுட்டுது…
ஒரே நாளில் இவ்வளவு பெரிய மண மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்று நம்ப இடமில்லாவிட்டாலும் தப்பு, தப்புத்தானே….
இப்படியெல்லாம் கற்பனை செய்து கொண்டு, மஞ்சள் பொடி பாட்டில் ஸ்பூனை ஈரம் போக வேஷ்டியிலேயே துடைத்துக் காய்ந்திருப்பதைச் சரிபார்த்துக் கொண்டுதான் பாட்டிலில் போட்டேன்.
சே! காப்பிப் பொடிப் பாட்டிலுக்குள்ளே ஏற்கனவே ஒரு சிறு ஸ்பூன் ஒளிந்து கொண்டிருந்தது. அதுதான் அளவு ஸ்பூனாக இருக்க வேண்டும். சில சமயம் அந்தச் சின்ன அலுமினிய பழைய ஸ்பூனை நான் சந்தித்திருக்கிறேன். சனியனைத் தூக்கி எறி முதலில் என்று கூடச் சொல்லியிருக்கிறேன். எங்க வீட்டிலே அம்மா ஆசையாக் கொடுத்தது. பாட்டி காலத்திலிருந்த ஆக்கிவந்த ஸ்பூனா இருந்துண்டிருக்கு – உங்க கண்ணை ஏன் உறுத்துது எட்ஸெட்ரா.
அந்த பாரம்பர்ய ஸ்பூனாலேயே போட்டுவிடலாம். நாளைக்கு விசாரணைக் கமிஷன் எந்த ஸ்பூனைப் போட்டீங்க என்று கேள்வி கேட்டால் கேள்விக்குப் பதில் சொல்ல சாதகமாயிருக்கும்.
ஸ்பூனால் எத்தனை போடுவது என்பது பிரசினை. வாய்ஸ் கொடுக்கலாமா? ‘நீங்க பெரிய ரஜினி? வாய்ஸ் குடுக்கறீங்களா வாய்ஸ்?’ என்று எழுப்பப்பட்ட புலி உறுமக் கூடும்.
இரண்டு ஸ்பூன் காப்பிப் பொடியை (குமாச்சியா) போட்டாயிற்று.
அப்புறம் ஞாபகம் வந்தது. பில்ட்டரில் கொஞ்சம் சர்க்கரை போடுவாள். அப்போதான் நன்றாக இறங்குமாம்.
ஒரு குண்சாகச் சர்க்கரை போட்டேன். சாதனையில் மாபெரும் பகுதி முடிந்தது.
பாலைக் காய்ச்ச வேண்டியது. டிகாக்ஷனுடன் கலக்க வேண்டியது. சர்சர்ரென்று நுரை பொங்க ஆற்றிக் குடித்துவிட்டு அவளுக்கும் தர வேண்டியது.
பாலைக் காய்ச்சுவதில் ஒரு சின்ன இக்கு வந்து சேர்ந்தது.
சிறிது சூடானதும் பாலில் வினோதமான கொப்புளங்கள் கிளம்பி டுப், டப் என்று வெடித்தன.
உடம்பெல்லம் நடுங்கிப் போச்சு. ‘இறைவா, தெரிந்தோ தெரியாமலோ செய்த பிழையெல்லாம் பொறுத்தருள்வாயப்பா’ என்ற பிரார்த்தனை எடுபடவில்லை.
இத்தனைக்கும் அறிவுக்கெட்டிய விதத்தில் பால் பாத்திரத்தை நன்றாகத் தேய்த்துத்தான் அடுப்பேற்றினேன்.
இதற்குள் எந்த அன்னப் பறவையின் தலையீடும் இல்லாமல் பால் வேறு நீர் வேறு என்றாகி கட்டி தனி, தண்ணி தனி, இரண்டும் கலந்த தொகுதி தனி எனக் கூட்டு சேராக் கூட்டணி மாதிரி பால் அது இஷ்டத்துக்குத் திரிந்துகொண்டிருந்தது.
மிக அபாய கட்டம். இதை மேலிடத்துக்கு ரிப்போர்ட் செய்தால் காலையில் மாபெரும் மகாபாரத யுத்தம்தான் நிகழும், ஈராக்கிய கைதியை நிர்வாணமாக்கி அமெரிக்கப் பெண் ஸோல்ஜர் கழுத்தில் கயிறைக் கட்டி இழுத்துப் போன பயங்கரக் காட்சி கண் முன் வந்தது.
அமெரிக்கப் படையினரளவு கல் நெஞ்சுக்காரியல்ல என் அன்பு மனைவி என்றாலும் சேதாரம் செப்டம்பர் இருபத்து நாலு ஆச்சே.
ஒரு லிட்டர் பாலையும் திரிய வைத்துவிட்டேனே…
இப்போதுதான் எனது பழைய எதிர்பார்ப்பு அழைப்பு வந்தது. ”இன்னுமா காப்பி போடறீங்க?”
”தோ ஆச்சு!”
”நான் வரட்டுமா?”
”வேணாம், வேணாம்” அவசரமாக அவள் வருகையை ரத்து செய்தேன்.
முக்கியமான சடங்கு ஒன்று இருக்கிறதே. கட்டி தட்டிய ஒரு லிட்டரின் பூத உடலை உடனடியாக மறைத்தாக வேண்டும். புழக்கடை செடிக்குக் கொண்டு போய்க் கொட்டலாம். ஆனால் போகிற வழியில் மனைவியின் ‘என்னத்துக்குப் புழக்கடைக் கதவைத் திறக்கறீங்க?’ என்றால் விபரீதம். கொலை செய்வதைவிட அதை மறைப்பது கடினமான வேலை என்பார்கள். பாலைத் திரிய வைப்பதைவிட, திரிந்த பாலை மனைவிக்குத் தெரியாமல் கொட்டுவது கஷ்டமான வேலை.
அதை ஒரு வழியாக சமையலறைத் தொட்டியிலேயே ஊற்றி, பாலின் சுவடே தெரியாமல் குழாய் நீரைக் கணிசமாக ஓடவிட்டு, மேற்படி பாத்திரத்தை புத்தி சக்திக்கு எட்டியவாறு அவசரத் தேய்ப்பு செய்து அலமாரியில் கவிழ்த்துவிட்டுப் புதிய பாத்திரத்தில் புதியதாகப் பாலை ஊற்றி ஒரு வழியாகப் பால் காய்ச்சும் படலம் முடிந்தது.
இனி பில்ட்டரில் உள்ள டிகாக்ஷனுடன் கலப்புத் திருமணம்தான்.
பில்ட்டரை எடுப்பது மகாக் கடினமான வேலை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்னும் பழமொழிக்குச் சிறந்த உதாரணம் – பில்ட்டரைக் கழற்றுவதுதான்.
எவ்வளவு அழுத்தமாக மூடினோமோ அவ்வளவுக்கு அந்தச் சனியனைத் திறக்க முடியாது. சூடு வேறு பற்றிக் கொள்கிறதா, ஒரு வழியாக வேட்டி, துணி, பிடி துணி என்று பல வகை சாதனைகளைப் பயன்படுத்தியும் விட்டுத் தொலைத்துக் கொண்டால்தானே.
இடுக்கியை எடுத்து பில்ட்டரின் மேல் புறத்தைத் தாஜா செய்தேன். அப்புறம் கீழ்ப்புறம். சட்டென்று ஒரு ஐடியா. சூடாக இருப்பதால் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கலாம்… ஒரு பாத்திரத்தில் தண்ணீர் பிடித்து அதில் பில்ட்டரை இளைப்பாற வைத்தேன்.
அதற்குள் மனைவியிடமிருந்து ‘என்னாச்சு! நான் வரட்டுமா?’ என்று மூன்று கால்கள். (மனைவிக்கு இரண்டு கால்கள்தான்).
”இதோ ஆச்சு!” என்று சமாதானக் குரல் தந்துவிட்டு, முழுப் பலத்தையும் பயன்படுத்தி, விபீஷணன் ராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பிடுங்கப் பார்த்த மாதிரிப் பெரு முயற்சி செய்து, கடைசியில் டமால் என்று ஜோடி பிரிந்தது.
செய்கூலி சேதாரம் போக கீழ் பில்ட்டரில் அரை பில்ட்டருக்கு டிகாக்ஷன்.
பிழைத்தேண்டா சாமி என்று பாலில் அதைக் கொட்டி சர்க்கரையையும் அள்ளிப் போட்டு கலக்கி மனைவிக்குக் கொண்டு செலுத்திவிட்டு, சமையலறைக்கு திரும்புவதற்குள், ‘தூ தூ… என்று மனைவியின் கூப்பாடு.
”அழுத்தவே இல்லியா…” கூவினாள் – காட்டாளி டார்ஸான் கூட யானைக் கூட்டத்தை இத்தனை நீட்டி, உரக்க அழைத்திருக்க மாட்டான்.
”எதை அழுத்தலையா?” செயற்கையான வீரத்துடன் காளிமாதாவிடம் மோதினேன்.
”மனுஷி குடிப்பாளா?” என்று ஆற்றிக் காட்டினாள்.
மணல் மாரி! கறுப்பு மணல் டம்ளரிலிருந்து டபராவுக்கு மாறிக் கொண்டிருந்தது.
”அழுத்தவே இல்லியா? காப்பிப் பவுடர் பூரா அப்படியே இறங்கித் தொலைத்திருக்கிறது! அழுத்தணும்னு தெரியாது?”
”எதை?”
”என் தலையை!” மனைவி படுக்கையிலிருந்து கோபாவேசத்துடன் எழுந்தாள். என்னை ஒரு தள்ளு தள்ளிக் கொண்டு சமையலறைக்குப் போய் பில்ட்டரை ஆராய்ந்தாள்.
”ஒரு வாய்ச் காப்பிப் போட லாயக்கில்லை. மாடு கன்னுப் போட்ட இடம் மாதிரி மேடையைக் கோரம் பண்ணி வெச்சிருக்கீங்க. அழுத்தணும்னு தெரியாது. மனுஷி எப்படிக் குடிக்கிறதாம்.
”எதையடி அழுத்தணும்…?”
”காப்பிப் பொடியைப் பில்டரில் போட்டுட்டு கடனேன்னு அப்படியே வென்னீரை ஊத்தினீங்களாக்கும் – வேலை முடிஞ்சிதுன்னு.”
நான் மகா சிரத்தையுடன் செய்த காரியத்தை அவள் கடனே என்று செய்ததாகக் கூறியதற்கு வருத்தம் தெரிவித்தேன்.
அதற்குள் அவள் வேறு புது பில்ட்டரை எடுத்துப் புதுசாகக் காப்பிப் பவுடரை… ”இதனுடைய மேல் பில்ட்டர் எங்கே… அட ராமா! நாலு ஸ்பூன் பில்ட்டருக்கு இரண்டு ஸ்பூன் பாட்டத்தைப் போட்டுத் தொலைச்சி காப்பிப் பொடியையும் சரியாக அழுத்தாமல்….”
”காப்பிப்பொடியை அழுத்தணுமா, சர்க்கரைகூடப் போட்டேன். நீ போடுவியே அதே மாதிரி.”
”உங்க தலை. காப்பிப் பொடியை அழுத்தி விடணும். உங்களுக்கு என்ன இழவு தெரிகிறது? நாலு ஸ்பூன் அடிக்கிற காப்பிப்பொடி பில்ட்டரில் இரண்டு ஸ்பூன் பொடியைப் போட்டு அதையும் அழுத்தாமலே…”
”அழுத்தினேனே. பில்ட்டர் விட்டுக்கவே மாட்டேன்கிற அளவு அழுத்தினேனே.”
”காப்பிப் பொடியை அழுத்தணும்… இந்த வீட்டிலே ஒருத்தி செத்தால் கூட அவளுக்கு ஒரு வாய் காப்பிப் போட்டுத்தர ஆள் இல்லை.”
”செத்தால் ஒரு வாய் அரிசிதான் போடுவார்கள்,” என்று சொல்லியவாறு (மனசில்) நைஸாக ஸ்தலத்தைவிட்டு நழுவினேன்.
கால்மணியில் மனைவி காப்பியோடு வந்தாள். நிஜமாவே காப்பி பிரமாதமாயிருந்தது.
”போடறவா போட்டாத்தாண்டி எல்லாமே நல்லாருக்கு!” என்று பாராட்டினேன். ”எனக்கும் காப்பி போட முறைப்படி கத்துக் கொடுத்துடு” என்றேன்.
”கத்துக் குடுக்கறாளாக்கும் கத்து? கண் பார்த்தா கை வேலை செய்யணும். காப்பின்னா பொண்டாட்டிதான் போடணும் என்கிறது வடிகட்டின மேல ஷாவனிஸம்!”
”வாஸ்தவமான பேச்சு…” என்று நைஸாக நகர்ந்தேன். ஓட்டல்களில் ஆண்கள்தான் காப்பி போடுகிறார்கள் மேலாவது ஷாவனிஸமாவது. உளறல்.
-பாக்கியம் ராமசாமி-
|
Sunday, September 16, 2012
2012 இல் அதிகம் சம்பாதித்த 30 இணையத்தளங்கள் விபரம்
1. Google
முதலாம் இடத்தில் இருப்பது Google தான்.
நிறுவுனர்கள் : Larry Page and Sergey Brin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$691.29
வருடாந்த சராசரி வருமானம் :$22,000,000,000
2. Amazon
நிறுவுனர் : Jeff Bezos
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$607.05
வருடாந்த சராசரி வருமானம் :$19,200,000,000
3. Yahoo
நிறுவுனர் : Jerry Yang and David Filo
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$228.31
வருடாந்த சராசரி வருமானம் :$7,200,000,000
4. eBay
நிறுவுனர் : Pierre Omidyar
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$199.45
வருடாந்த சராசரி வருமானம் :$ 6,300,000,000
5. Msn/Live
நிறுவுனர் : Nathan Myhvoid
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$102.00
வருடாந்த சராசரி வருமானம் :$ 3,200,000,000
6. Paypal
நிறுவுனர் : Luke Nosek, Max Levchin and Peter Thiel
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$71.40
வருடாந்த சராசரி வருமானம் :$2,250,000,000
7. iTunes
நிறுவுனர் : Jeff Robin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000
8. Rueters
நிறுவுனர் : Marshal Vace
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$60.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,900,000,000
9. Priceline
நிறுவுனர் : Jesse Fink
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$59.6
வருடாந்த சராசரி வருமானம் :$1,850,000,000
10. Expedia
நிறுவுனர் : Added Mark Schroeder
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$46.00
வருடாந்த சராசரி வருமானம் :$1,450,000,000
11. NetFlix
நிறுவுனர் : Reed Hastings
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000
12. Travelocity
நிறுவுனர் : Terry Jones
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$38.00
வருடாந்த சராசரி வருமானம் :$1.100.000,000
13. Zappos
நிறுவுனர் : Nick Swinmurn
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000
14. Hotels.com
நிறுவுனர் : David Litman
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$31.70
வருடாந்த சராசரி வருமானம் :$1,000,000,000
15. AOL
நிறுவுனர் : Erik Prince
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$30.50
வருடாந்த சராசரி வருமானம் :$960,000,000
16. Orbitz
நிறுவுனர் : Jeff Katz
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$28.00
வருடாந்த சராசரி வருமானம் :$870,000,000
17. Overstock
நிறுவுனர் : Robert Brazell
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$27.00
வருடாந்த சராசரி வருமானம் $834,000,000
18. Myspace
நிறுவுனர் : Tom Anderson
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$25.00
வருடாந்த சராசரி வருமானம் $800.000.000
19. Skype
நிறுவுனர் : Niklas Zennstrom
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$18.00
வருடாந்த சராசரி வருமானம்: $550,840,000
20. Sohu
நிறுவுனர் : Zhang Chaoyang
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$14.00
வருடாந்த சராசரி வருமானம்: $430,000,000
21. Buy.com
நிறுவுனர் : Robb Brock
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$12.68
வருடாந்த சராசரி வருமானம்: $400,000,000
22. StubHub
நிறுவுனர் : Eric Baker
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $13.00
வருடாந்த சராசரி வருமானம்: $ 430,000,000
23. Alibaba
நிறுவுனர் : Jack Ma
செக்கன் ஒன்றிற்கான வருமானம் : $10.00
வருடாந்த சராசரி வருமானம்: $315,000,000
24. Facebook
நிறுவுனர் : Mark Zuckerberg
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000
25. YouTube
நிறுவுனர் : Chad Hurley, Jawed Karim and Steve Chen
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.50
வருடாந்த சராசரி வருமானம்: $300,000,000
26. Blue Nile
நிறுவுனர் : Mark Vadon
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$9.40
வருடாந்த சராசரி வருமானம்: $295,000,000
27. Tripadvisor
நிறுவுனர் : Stephen Kaufer
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$8.20
வருடாந்த சராசரி வருமானம்: $ 250,000,000
28. Getty Images
நிறுவுனர் : Mark Getty
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$7.40
வருடாந்த சராசரி வருமானம்: $230,000,000
29. Bidz
நிறுவுனர் : Garry Itkin
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.70
வருடாந்த சராசரி வருமானம்: $200,000,000
30. NYTimes
நிறுவுனர் : Henry Jarvis Raymond
செக்கன் ஒன்றிற்கான வருமானம் :$6.00
வருடாந்த சராசரி வருமானம்: $175,000,000
அலன் மாத்திசன் டூரிங்.. இவரை எத்தனை பேருக்கு தெரியும்?
இன்று கணனித்திரையில் நாம் எமது பணிகளை செய்கிறோமென்றால் அதற்கு காரணம் இந்த அற்புத மனிதர்தான். இவர் இல்லாவிட்டால் என்னால் கணனித்திரையில் இதை எழுதவும் முடியாது. உங்களால் படிக்கவும் முடியாது. Binary எண்களாக பகுத்தெழுதி கணிப்பு நடத்த முடியும் என்று நிரூபித்து காட்டியவர். சுருக்கமாக கூறினால் நவீன கணனியின் தந்தை.
மூச்சு விடுவதுகூட கணனி என்று ஆகியிருக்கும் இக்காலத்தில் அலன் மாத்திசன் டூரிங்கை யாருக்கும் தெரியாமல் இருப்பது கொடுமைதான்.
1912 ஆம் ஆண்டு இப் புவியில் அவதரித்த அலன் டூரிங் அமெரிக்காவின் புகழ்வாய்ந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் 1938 ஆம் ஆண்டு கணிதத்தில் முனைவர் பட்டம் பெற்றுக்கொண்டார். அந்த காலகட்டம் இரண்டாம் உலகப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியாகையால் அலன் பல்கலைக்கழகத்தில் இருந்து தன் தாய் நாடான பிரிட்டனுக்கு திரும்பி, அங்கே ஜேர்மனியர்களின் போர்க்கால சங்கேதங்களை தகர்க்கும் வேலையில் சேர்ந்தார்.
இரண்டாம் உலகப்போரின்போது ஜெர்மனியின் எனிக்மா இயந்திரம் அதனுடைய சங்கேதங்களை மாற்றிக்கொண்டேயிருக்க எந்த வகையிலும் ஜேர்மனியர்களின் தகவல்களை புரிந்துகொள்ளமுடியாமல் இருந்தது. அப்போது டூரிங் தயாரித்த கணனி செய்முறைகளை (Algorithmas) கொண்டு எந்த அடிப்படையில் எனிக்மாவின் சங்கேதங்கள் மாறுகின்றன என்பதை துல்லியமாக கணிக்க முடிந்தது. விளைவாக ஜேர்மனியரின் A+-போட் என்ற நீர்மூழ்கியின் சங்கேதங்களைப் பிரிட்டானியர்கள் புரிந்துகொள்ள, அந்த நீர்மூழ்கி முறியடிக்கப்பட்டு போரில் நேச நாடுகளுக்கு வெற்றி கிடைத்தது. இரண்டாம் உலகப்போரில் இது ஒரு முக்கிய நிகழ்வாகும். கிட்டத்தட்ட இதுதான் உயர்தொழில்நுட்ப அடிப்படையிலான போர்த்தந்திரத்துக்கு கிடைத்த முதல் வெற்றி)
தொடர்ந்து எண்கணிதம் (Number Theory), நேரிலி கணக்கீடு (Nonlinear computation), நேரிலிக்கணக்கீட்டின் அடிப்படையில் உயிரியல் பெருக்கங்களை வடிவாக்கல், பிணைப்பு வலைகள் (Neural Networks) என்று பலதுறைகளில் அலன் டூரிங் மிக முக்கியமான பங்களிப்பைத் தந்தார்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க இவரது தனிப்பட்ட வாழ்வு சோகம் மிகுந்ததாகவே இருந்தது. அலன் டூரிங்கிற்கு இயற்கையிலேயே ஓரினச்சேர்க்கைமீது நாட்டமிருந்தது. அக்காலத்தில் ஓரினச்சேர்க்கையாளர்களை உலகம் வெறுத்து ஒதுக்கிய காலம். அரசுகளினால் கூட ஓரினச்சேர்க்கை தடை செய்யப்பட்டிருந்தது. ஓரினச்சேர்க்கையில் ஈடுபடுவோர் சமூக விரோதிகளாகவே நோக்கப்பட்டனர். அலன் டூரிங் 1952 ம் ஆண்டு மான்செஸ்டர் நகரில் இன்னொரு ஆணுடன் உறவுகொள்ள முயற்சித்தபோது போலீசாரால் பிடிக்கப்பட்டார்.
ஓரினச்சேர்க்கையாளர்கள் கைது செய்யப்பட்டால் அவர்களுக்கு சிறைத்தண்டனை கொடுப்பதே வழமை. அல்லது பெண்களுக்கு இயற்கையில் சுரக்கும் எஸ்ட்ரோஜன் ஹார்மோனை ஒருவருடத்திற்கு ஊசிமூலம் செலுத்திகொள்ள வேண்டும். சிறையை தவிர்ப்பதற்காக அலன் டூரிங் ஹார்மோன் செலுத்த ஒத்துக்கொண்டார்.
தன்னைக்கவர்ந்திழுக்கும் தொழில்நுட்பம் ஒருபுறமும், ஓரினச்சேர்க்கை ஆர்வம் மறுபுறமும், இயற்கைக்கு மாறாக உடலில் செலுத்தப்பட்ட ஹார்மோன் இன்னொரு புறமும் என்று இழுக்க அலன் டூரிங்கின் வாழ்வு அவலமாகிப்போனது.
தூங்க முடியாத வேதனையில் இரண்டு வருடங்களுக்கு பிறகு கணிதம், இயற்பியல், உயிரியல் என்று முடிக்கப்படாத பல சித்தாந்தங்களை உலகிற்கு விட்டுவிட்டு சயனைட் கலந்த அப்பிளை உட்கொண்டு தன் வாழ்வை முடித்துக்கொண்டார். எந்த பிரிட்டானிய சமூகத்தை தன் அறிவால் போரில் காப்பாற்றினாரோ அதே சமூகத்தின் ஓரினச்சேர்க்கை வெறுப்பினால் துரத்தியடிக்கப்பட்டு அவருடைய வாழ்வு முடிந்துபோனது.
அவருடைய ஆராய்ச்சிகள், கணிதம், இயற்பியல், தர்க்கம், தத்துவம், உயிரியல், சங்கேதம் என்று பல் துறைகளில் பரவி நிற்கிறது. அவருடைய மறைவுக்கு பிறகு 1969 இல் வெளியிடப்பட்ட Intelligent Machines என்ற ஆராய்ச்சிக் கட்டுரை, இன்றைக்கு நாம் அறியும் செயற்கை ஒட்பம் (Artificial Intelligence) என்ற துறைக்கு வித்திட்டது. மனித மூளையின் செயற்பாடுகளை முற்றாகவோ, கிட்டத்தட்ட முழுமையாகவோ நிகழ்த்தவல்ல இயந்திரங்களைப் படைப்பது சாத்தியம் என்று அலன் டூரிங் முழுமையாக நம்பினார். அத்தகைய புத்திசாலி இயந்திரங்களை உளவியல் ரீதியாக கையாள்வதற்கு மனிதனுக்கு இருக்கும் தயக்கங்களையும் முன்மொழிந்தார்.
1950 இல் டூரிங் சோதனை என்ற கட்டுரையை வெளியிட்டார். அதில் செயற்கை ஒட்பத்தை அடையாளம் காணும் வழியை விளக்கியிருந்தார். மொத்தத்தில் நவீன இரண்டடிமான (Binary) கணனி, செயற்கை ஒட்பம், சங்கேதவியல் போன்ற துறைகளை நமக்கு உருவாக்கி கொடுத்தவர் அலன்.
Subscribe to:
Posts (Atom)