Search This Blog

Thursday, September 12, 2013

"காது" கொடுத்துக் கேளுங்க...!




ஒரு நாளைக்கு ஒருவர் இவ்வளவு ஒலியைத்தான் கேட்க வேண்டும் என்று வரையறை உள்ளது. இதைவிட அதிகமான சத்தத்தை கேட்கும் போது நரம்பு செல்களை பாதித்து செவிட்டுத்தன்மை உருவாகிறது. ஒலியின் அளவு டெசிபல் குறியீடுகளால் அளவிடப்படுகிறது. சாதாரணமாக 60 முதல் 70 டெசிபல் சத்தத்தை கேட்பதால் பிரச்சினை ஏற்படுத்துவதில்லை. அதற்கு மேல் மிகையான சத்தத்தை கேட்கும் போது காது நரம்புகள் பாதிப்படைகின்றன.

அதிக இரைச்சல் மிகுந்த இயந்திரத்தில் பணியாற்றும் போது, சத்தத்தை குறைத்துக் கொடுக்கும் உபகரணங்களை பயன்படுத்துவது அவசியம். வேலையின் இடையே குறிப்பிட்ட மணி நேரத்திற்கு ஒருமுறை சற்று நேரம் இரைச்சல் இல்லாத இடங்களில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.

குழந்தை பிறந்து ஒரு வயதானவுடன் பேசத் தொடங்கி விடுகிறது. அப்படி மழலை மொழியில் குழந்தை பேசவில்லை என்றால் உடனே மருத்துவரை அணுக வேண்டும். குழந்தைக்கு பேச்சுத்திறமை கிடைக்கவில்லை என்று இரண்டு மூன்று வயது வரை காத்திருக்கின்றனர். கிராமத்திலோ 10 வயதுவரையில் டாக்டரிடம் காண்பிக்காமல் இருக்கின்றனர். ஒரு வயதிலேயே இதை கண்டுபிடிக்கும் போது காது கேட்கும் கருவியின் மூலம் கேட்கும் சக்தியை கொடுக்க முடியும்.

தீபாவளி, கோவில் விழாக்கள், பண்டிகைகள், ஊர்வலங்களில் வெடி வெடிக்கும் போது அதன் அருகில் நிற்பதும் காதுக்கு ஆபத்தை தரும். வெடிப்பதன் மூலம் உருவாகும் மிகை ஒலி காதுசவ்வை கிழிக்கவும் அல்லது காது நரம்புகளை பாதிக்கவும் செய்யலாம்.

காதுக்குள் அழுக்கு சேர்ந்தால் "பட்ஸ்" மூலம் சுத்தம் செய்வதை பார்த்திருப்போம். ஆனால் பட்ஸ் மூலம் சுத்தம் செய்வது தவறான பழக்கம். அழுக்கை வெளியே எடுப்பதற்கு பதிலாக "பட்ஸ்" மூலம் காதுக்குள் தள்ளிவிடும் வாய்ப்பு அதிகம். பொதுவாக அழுக்கு தானாகவே வெளியேறும் விதத்தில் காதின் அமைப்பு அமைந்துள்ளது. அப்படி இருந்தும் காதுக்குள் அழுக்கு அதிகமாக இருப்பதாக உணர்ந்தால் டாக்டரை தொடர்பு கொண்டு சுத்தம் செய்யலாம். 6 மாதங்களுக்கு ஒருமுறை சுத்தம் செய்வது நல்லது.

காது எப்போது கேட்கும் திறனை இழக்கிறது?

* நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்து கொண்டு பிறக்கும் குழந்தைக்கு கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படலாம்.

* கருவுற்றிருக்கும் சமயத்தில் வியாதிகளுக்கு தாய் உட்கொள்ளும் மருந்துகள் குழந்தையின் கேட்கும் திறனில் பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.

* கருவுற்றிருக்கும் சமயத்தில் தாய்க்கு வைரஸ் நோய் அல்லது அம்மை நோய் பாதிப்பு இருந்தால் அது குழந்தையின் கேட்கும் திறனை பாதிக்கலாம்.

* பரம்பரை நோய் காரணமாகவும் கேட்கும் திறன் பாதிப்படையலாம்.

மேற்கண்ட காரணங்கள் யாவும் நரம்பை பாதித்து அதன் மூலம் கேட்கும் திறன் குறைந்துவிடுகிறது. இதுதவிர காது சவ்வு பாதிப்பு, காது எலும்புகள் பாதிப்பு, காதில் சீழ்பிடித்தல், காது சவ்வில் ஓட்டை விழுதல், அதிக இரைச்சல் காரணமாக காதுகேட்கும் திறன் பாதிப்படைகிறது. அதாவது சத்தத்தை சரியாக நடத்திச் செல்ல இயலாத காரணத்தால் இத்தகைய பாதிப்புகள் ஏற்படுகின்றன. காதுக்குள் இருக்கும் எலும்புகள் சரியாக "மூவ்" ஆகாமல் இருந்தாலும் கேட்கும் திறமை பாதிப்படையும்

சிலப்பதிகாரத்தை நாங்க மறக்கல பாஸ் அப்படின்னு சொல்றவங்க லைக் பண்ணுங்க... மத்தவங்க ஷேர் பண்ணுங்க....

காவிரிப்பூம்பட்டினத்து பெரு வணிகன் மாசாத்துவானின் மகன் கோவலன். இவன் கலையுணர்வும், வறியோர்க்கு உதவும் நற்பண்பும் மிக்கவன். காவிரிப்பூம்பட்டினத்துப் பெருவணிகன் மாநாய்கனின் மகள் கண்ணகி. இவள் திருமகள் போன்ற அழகும்,அழகிய பெண்கள் போற்றும் பெருங்குணச்சிறப்பும், கற்புத்திறமும் கொண்டவள். இவ்விருவரும் மனையறம் பூண்டு, இன்புற்று வாழ்ந்தனர்.
கோவலன் ஆடலரசி மாதவியை விரும்பிக் கண்ணகியை விட்டுப் பிரிந்தான். அவன் மாதவி இல்லத்திலேயே தங்கித் தன் செல்வத்தையெல்லாம் இழந்தான். மாதவி இந்திர விழாவில் கானல் வரிப் பாடலைப் பாடினாள். பாடலின் பொருளைத் தவறாகப்ப் புரிந்து கொண்ட கோவலன், மாதவியை விட்டுப் பிரிந்தான், பிரிந்தவன் தன் மனைவி கண்ணகியிடம் சென்றான். தான் இழந்த செல்வத்தை ஈட்ட எண்ணினான்.வணிகம் செய்தற்பொருட்டுக் கண்ணகியுடன் மதுரைக்குச் சென்றான். அவர்களுக்கு வழித்துணையாகக் கவுந்தியடிகள் என்னும் சமணத் துறவி சென்றார்.அவர்,மதுரை நகர்ப்புறத்தில் மாதரி என்னும் இடைக்குல மூதாட்டியிடம் அவ்விருவரையும் அடைக்கலப்படுத்தினார். கோவலன் சிலம்பு விற்று வர மதுரை நகரக் கடை வீதிக்க்குச் சென்றான். விலை மதிப்பற்ற காற்சிலம்பு ஒன்றைக் கோவலன் விற்பதைப் பாண்டிய மன்னனின் பொற்கொல்லன் அறிந்தான்.
பாண்டிமாதேவியின் காற்சிலம்பைக் களவாடிய பொற்கொல்லன், பொய்யான பழியைக் கோவலன் மேல் சுமத்தினான். அதனை ஆரய்ந்து பாராத மன்னன் அவனைக் கொன்று, சிலம்பைக் கொணர்க என்று ஆணையிட்டான். கோவலன் கொலை செயப்பட்ட செய்தியை மாதரி மூலம் அறிந்த கண்ணகி; பெருந்துயருற்றாள். அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள்.மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகர் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே! ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்க்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி, நான். கண்ணகி என்பது என் பெயர் " என்று கூறினாள். பாண்டிய மன்னன் கண்ணகியிடம்" கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே! என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது" என்றாள். அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே! எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து, அவள் முன் வைத்தான்.வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய, நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது. என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி, உடல் நடுங்கி,கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்.

தமிழின் நவீனத்துவம் - பிரமிள்


படைப்பாளியின் முன் இன்று, கவிதை, உரைநடை இரண்டிலும் இருந்து பிரச்னைகள் பிறந்துநிற்கின்றன.
தமிழ் மொழிப்பிரயோகம் பற்றிய பிரச்னையை எடுத்தால், இதைத் தொடமுயற்சிக்கிற நான், 1957 அளவில் ஒரு சிறிது காலம், “தனித்தமிழில், அதாவது பிறமொழிச் சொற்கள் கலக்காத தமிழில் எழுதுவதே சிறப்பு,” என்ற கொள்கையைச் சார்ந்து இருந்தவன் என்பதை, இங்கே மனம்விட்டுச் சொல்லிவிடவேண்டும். இந்த எனது சார்பைச் சிதறடித்தவை, புதுமைப்பித்தனது இலக்கியமும் சிந்தனைக் கட்டுரைகளும்தான்.
பாஷை, வெறும் சொற்களில் மட்டும் தங்கி நிற்கிற ஒன்றல்ல. சொற்கள் தம்முடைய ஸ்தூல நிலையில், வெறும் சப்தம்தான். அவற்றுக்குக் கிடைக்கும் அர்த்தம், அவற்றை உபயோக்கிற ஒப்புதல்களை இயல்புபடுத்துதல் ஆகும். ஒரே சப்தம், ஒரு மொழியில் பெறும் பொருள் வழக்கை இன்னொரு மொழியில் கொள்வதில்லை. இதனால்தான், இயல்பான ஒப்புதல் என்பது ‘வழங்கப் படுதல்’ என்ற நிலைமைக்கு சார்பாகி, ‘வழக்கொழிந்த சொற்கள்’ என்று ஒரு பகுதியைPiramil 2_thumb[2]பிரித்துவிடுகிறது. இதன் தவிர்க்கமுடியாமையை ஏற்காத உள்ளங்கள், உயிர்த் தன்மையற்றதாகவே இருக்கும். உபயோகம்தான் மொழியின் இயக்கம் – உயிர் – என்று கொள்ளும்போது, வலிந்து ஏற்கும் உபயோகத்தை அல்ல, இயக்கத்தின் இயற்கை ஏந்திவரும் உபயோகத்தையே நாம் ஏற்கவேண்டும். வழக்கொழிந்த சொற்கள், இந்த இயக்கத்தின் இயற்கையினின்றும் பின்தங்கிவிட்டவை. இதனாலேயே, பழந்தமிழ்ச் சொற்களை மீண்டும் உபயோகிப்பதென்ற தனித்தமிழ் இயக்கம், இயற்கைத்தன்மையோ உயிரோ அற்று, நவீன அனுபவங்களையும் சந்திக்க இயலாமல் நின்றுவிடுகிறது.
இயக்கத்தின் இயற்கை மூலம் ஏற்றுக்கொள்ளப்படுவதால், பிறமொழிச் சொற்கள் இன்றைய தமிழில், நவீனமான விஷயங்களையும் அனுபவங்களையும் சொல்ல உதவுகின்றன. தமிழின் நவீன – அதாவது இன்றைய காலத்திய – படைப்பியக்கம், வழக்கொழிந்த சொற்கள் மூலம் அல்ல, இயங்கும் சொற்களின் மூலமாக மட்டுமே சாத்யமாகி இருக்கிறது.
மொழியின் ஸ்தூலமான சொற்களின் விஷயத்தில் ‘தூய்மை’ பாராட்டியவர்கள், சிந்தனை, அனுபவம் என்பவற்றால் உந்தப்படவில்லை. இவர்களது எழுத்துக்களில், பழம்பெருமை, பொதுப் புத்தியை மீறாத ஒழுக்கவியல், இவற்றை ‘அழகாக’ கூறுவதாக எண்ணிக் கையாளப்பட்ட சொல்ஜோடனை ஆகியவைதாம் இருந்தன; இருக்கின்றன. இவர்களது சமகாலத்திய சிருஷ்டி கர்த்தாக்களிடமோ, வாழ்வின் உண்மைத்தன்மைகளும் சமூகவரம்புகள், ஒழுக்கங்கள், நீதி அநீதிகள் ஆகியவற்றை அனுபவசாத்யத்தின் தளத்தில் நிறுத்திச்செய்கிற விசாரணைகளும், இவற்றை எந்தவிதமான உள்ளம் சந்திக்கிறதோ, அதன் பாத்திய இயல்புக்கு ஏற்ற மொழிப் பிரயோகத்தில் எழுதப்பட்டன. ‘கருத்தைப் பிரதானமாக வைத்து’ப் புதுமைப்பித்தன் எழுதியவை, இந்தவகை இயக்கத்தின் சிகரமாகும். புதுமைப்பித்தனின் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களது தமிழ், இதனாலேயே ஜீவத்துடிப்புள்ள தமிழ் என்று ஆகிறது. இன்னொருபுறம், பரவலான வாசகத் தேவைகளையும் வியாபாரத்தையும் இலக்காக்கி, ‘கல்கி’ ரா.கிருஷ்ணமூர்த்தி போன்றோர் எழுதியவை, ஆழமற்ற சில்லரைத்தளம் ஒன்றில் தமிழ் எழுத்தைச் செயல்படவைத்துள்ளன. இதை, பத்திரிகை ஒன்றில் தமிழ் என்ற அதன் உடனடிப் பரிவர்த்தனைக்காக ஏற்றுக்கொள்ளும்போதே, இதன் இயல்பான வெகுஜனத்தன்மையை இலக்கிய இயக்கத்தின் தன்மைகளிலிருந்து பிரித்துக் கண்டுகொள்ள வேண்டும்.
உணர்ச்சிவெளியீட்டைப்  பொறுத்தவரையில்கூட, தனித்தமிழ், சிருஷ்டி, வியாபாரம் என்ற மூன்றுதளங்களும் சுத்தமாகப் பிரிந்துநிற்கின்றன. தனித்தமிழ் இயக்கத்தில் அரசியலின் பாமரத்தன்மையும், சிருஷ்டி இயக்கத்தில் முதிர்ந்து புடமிடப்பட்ட செம்மையும், வியாபார எழுத்தில் கவர்ச்சித்தன்மையும், உணர்ச்சி வெளியீட்டை நிர்ணயித்துள்ளன. ஒருவகையில், உணர்ச்சி வெளியீட்டுத் தளத்திலேயே முதன்மையாக இந்த மூன்று தமிழ்களின் குணங்களும் பிணங்க ஆரம்பித்து, அனுபவம், சிந்தனை ஆகிய துறைகளில் இந்தப் பிணக்கு இவற்றிடையே நீடிக்கிறது என்றும் கூறலாம்.

எழுத்து : நிர்.16 (ஏப்ரல் 1960) தாங்கிவந்த, எனது முதலாவது கட்டுரையான ‘சொல்லும் நடையும்’ பெற்றுள்ள புனர்வடிவம்தான் மேலுள்ள பகுதி. மூலத்திலுள்ள எந்த அபிப்ராயத்திலுமிருந்து மாறுபட்டவை, இந்த புனர்வடிவில் இல்லை. ஆனால், பிரயோகங்களின் கூர்மையும் ஓரிரு விளக்கங்களும், முழுமொத்தமான கட்டுரையின் சுருக்கமுமாக இந்த வடிவம் பிறந்துள்ளது.
மேற்படி கட்டுரையின்  பார்வைகள், ஒரு நவீன உணர்விலிருந்து பிறந்தவை. இந்த உணர்வு என்னிடத்தே தோன்றுவதற்கு, புதுமைப்பித்தனது எழுத்துக்கள்தான் மூலகாரணம். ஆங்கிலத்தின் வழி, பழைமை புதுமை என்ற பாகுபாடு அற்று இருந்த எனது வாசக ஈடுபாட்டுக்கு ஒரு விமர்சனநோக்கைத் தருமளவு, புதுமைப்பித்தனது படைப்புகள் எனது இளம் உள்ளத்தைப் பாதித்தன. கல்கியின் ‘பிரமாண்டமான’ சரித்திர நாவல்களினால் சிருஷ்டிக்க இயலா திருந்த ஒரு நிதர்சனத்தை, ‘சில்பியின் நகரம்’ என்ற சிறுகதையில் புதுமைப்பித்தன் சிருஷ்டித்ததை உணர்ந்தபோது ஏற்பட்ட விழிப்பு அது. அதாவது, இந்த விருப்பை எனக்கு விமர்சனம் அல்ல, ஒரு படைப்பு ஏற்படுத்திற்று. அதுவரை வெறும் வாசிப்பாக இருந்த ஈடுபாட்டினூடே, வெறும் சப்தக்குவியலினுள் உந்நத இசையின் குரலை, தனித்து உணரும் சுரணையாக ஏற்பட்ட விழிப்பு அது.
இன்று மேற்படி கட்டுரைக்குப்  பிற்சேர்க்கையாக, தமிழகத்தின் நேரடி அனுபவங்கள் சில ஏற்படுத்திய பார்வைகளைத் தரவேண்டியுள்ளது.
‘தனித்தமிழ் இயக்கம்’ என்பது, தமிழ்ப்பழமையினை வழிபடும் அரசியல்வகைதான்; இது, வெறும் மொழி சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. பகிரங்கத்திலும் எழுத்திலும், மழுப்பலாகச் சுற்றி வளைத்து, ‘தமிழில் என்ன இருக்கிறது?” என்றும் மறைவாகத் தமக்குள்ளே ‘தமிழ் கிமிழ்’ என்றும் பரிகஸிக்கும் சமஸ்கிருத மனோபாவங்களுக்கு எதிரான இயக்கமே, ‘தனித்தமிழ்’ இயக்கம். இந்தப் பழிப்பின் அடியில்கூட, மொழியறிவோ அறிவு வேட்கையோ கிடையாது.
நான் மேலே, ‘சமஸ்கிருத மனோபாவம்’ என்று கூறியுள்ளது, உபசாரப் பிரயோகமே யன்றி வித்வத்தினைக் குறிப்பிட்டல்ல. அதாவது, ‘தமிழைவிட சமஸ்கிருதம் சிறந்தது’ என்ற மனோபாவத்தையே, அவ்விதம் குறிக்கிறேன்.
தமிழ்ப் பழமை வழிபாடு  எவ்வளவுக்குப் பாமரமானதோ, அவ்வளவு பாமரத்தனம்தான் மேலுள்ள வகையான சமஸ்கிருத மனோபாவமும். இரண்டுமே, இந்தியத்தின் சாபக்கேடான ஜாதியத்தில் வேரூன்றிப் பிறந்தவை. எனது உணர்வின் நவீனத்துவம், இத்தகைய விஷ நிலத்திலிருந்து விளைந்த ஒன்றல்ல. இந்த விஷநில விளைச்சல்களுக்கு, நான் ‘தனித்தமிழ்’ இயக்கத்தை விமர்சித்த பார்வை உபயோகமாகிவிட, இதனால் இடமற்றுவிடுகிறது. எனது முன்னோடியான புதுமைப்பித்தனைப் பொறுத்தும், இதையே கண்டுகொள்ள வேண்டும். சமஸ்கிருத சநாதனத்துக்கு ‘உபயோகமாகாத’ ஒரு வெளிப்படையான தீவிர நிலையாக, என் நேர்ப்பேச்சுக்கள் தென்பட்டுள்ளன. விளைவு? என்னைப் போன்றோருடன் இணங்கித் தமிழ்ப் பழைமைவாதிகளை மறுத்த நவீனவாதிகள்,  உண்மையில் நவீனத்தோல்போர்த்த சநாதன நரிகள் என அம்பலமாகியுள்ளமை. இதன் விபரங்களைப் பல கட்டுரைகளில் சர்ச்சித்துள்ளேன். இங்கே நாம் வேறு பரிமாணங்களைக் கவனிப்போம்.

ஒரு மொழியின் சிறப்பு, அதன் உபயோகத்தைச் சார்ந்தது. கிரீஸின் பரிபாலான காலத்தைத் தொடர்ந்த ரோம சாம்ராஜ்யத்தில், கிரீஸின் மொழியான கிரேக்கம்தான் உயர்ந்ததாக கணிக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கணிப்பைப் புறம்தள்ளியவர்கள் ரோமின் லத்தீன் கவிஞர்கள், நாடகாசிரியர்கள். தொடர்ந்து ஐரோப்பாவில் பேக்கனின் காலம்வரை, லத்தீன் உயர்ந்த உபயோகங்களைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக்காலத்தில், லத்தீனையன்றிச் சுயமொழியையே, சிருஷ்டிகளுக்கும் இதர படைப்புகளுக்கும் உபயோகிக்கிற விழிப்பு ஏற்படலாயிற்று. இதன் அடிப்படை, சுய அனுபவத்தை – தர்சனத்தை – தனது மன இயக்கத்துடன் நெருங்கித் துடிக்கிற ஒரு சுயமொழியில் தரும் இயற்கையாகும். ஆங்கிலத்தை, பிரெஞ்சை, ஜெர்மனை, ரஷ்யனைவிட லத்தீன் உயர்வானது என்றோ, லத்தீனைவிட கிரீக் உயர்ந்தது என்றோ, ஐரோப்பிய நகரங்களின் வாடகை ரூம்களில், லத்தீனியப் பூணூல், கிரேக்கப் பூணூல் அணிந்த சநாதனிகள் பேசிக்கொண்டு காலம்கழிப்பதை நாம் காணமுடியாது. ஆனால், “தமிழைவிடச் சமஸ்கிருதம் உயர்ந்தது. தமிழ் காட்டுமிராண்டி பாஷை என்று அவங்க பெரியாரே சொல்கிறாரே!” என்று கதை அளக்கும் ‘நவீன சநாதனிகளை’ நான் கண்டிருக்கிறேன் – நமது பாரதத்துச் சென்னை நகர் வாடகை ரூம்களில். இவர்களது குழுக்கள், ‘நவீன’ இலக்கிய இயக்கங்களாகக்கூட முனைப்புப் பெற்றுள்ளன. இத்தகையோருக்கு, நான் சில சமயங்களில் நேரில் தந்த மறுப்பு உட்பட்ட வாதங்கள், இங்கே பதிவு பெறுவது அவசியம்.
ஒரு மொழியைவிட இன்னொரு  மொழி உயர்வானது என்று கூறுவதைவிட மொழிகளின் உபயோக சாத்யத்தைப்  பற்றிப் பேசுவதே பொருந்தும். தமிழ் இன்றைய மொழி. அதாவது, நான் தமிழ் பழமைவாதத்தை நிராகரித்துக் கூறுவது இது. இன்றைய மொழி எனும்போது, அது பழந்தமிழாக அன்றி, சமஸ்கிருதம் போன்ற ஒரு மொழியின் சொற்களைக்கூட ஜீரணித்துத் தமிழாக இயங்குகிறது என்பதையே அர்த்தம் கொள்கிறேன். இந்த ஜீரணிப்புக்கு ஏற்றவகையாக, தனது பிரயோகக் கட்டுமானங்களைப் புதுப்பித்து நிற்கிற உரம் தமிழுக்கு இருக்கிறது; சமஸ்கிருதத்துக்கு இல்லை. உதாரணமாக, அது இன்றைய அனுபவங்களைச் சரளமாகப் பரிவர்த்தனை செய்யக்கூடிய இயற்கை வளர்ச்சியை சமஸ்கிருதம் அடையவில்லை. ‘அல்ல, அதை இன்றைய உபயோகத்துக்குக் கொண்டு வரலாம்,’ என்று வாதித்தால், அது தமிழ்ப் பழமைவாதத்திலிருந்து வேறுபட்ட ஒன்றாகாது. அத்தகைய வாதத்தை, மேலுள்ள என் முதல் கட்டுரையே மறுக்கிறது.
தமிழைக்  ‘காட்டுமிராண்டி பாஷை’ என்று கூறிய பெரியார், கடுமையான ஆனால் கூர்மையற்ற ஒரு முரட்டு சுயமறுப்பை வெளியிட்டுள்ளார். அதாவது, அவரது கூற்றை ஒரு பொருட்டாக நாம் ஏற்கக்கூடிய ஒரே தளம் அதுதான். இந்த சுயமறுப்பின் விளைவாக, தமிழ் நவீனத்துவம் பெற்று வளரவேண்டும் என்ற வற்புறுத்தலே பிறக்கலாம். ‘தமிழைவிட சமஸ்கிருதம் நவீனமானது,’ என்பதுக்கு அவரது கூற்று ஆதாரமாகாது. மேலும், சமஸ்கிருதத் தைப் பழந்தமிழுடன் ஒப்பிடும்போதுகூட, Primitive -ஆன குணங்களையே அது காட்டுகிறது என்கின்றனர் மொழியியலாளர்கள். ‘பிரிமிடிவ்’ என்பது ‘காட்டுமிராண்டி’ என்றாகாது என, நாம் இங்கே கண்டுகொள்ள வேண்டும். ‘நவீனச் சாயல்பெறாத ஆரம்பநிலை’ என்பதே ‘பிரிமிடிவ்’. ‘தமிழ் அல்ல, சமஸ்கிருதமே காட்டுமிராண்டி பாஷை,’ என நான், பிதற்றலுக்கு எதிர்பிதற்றல் எழுப்புவதாக தொனிக்கக்கூடாது என்று, இந்த விளக்கத்தைத் தருகிறேன்.
‘பிரிமிடிவ்’ மொழிகளுள் சமஸ்கிருதம் மட்டுமல்ல, கிரேக்கமும் அடங்கும். எவ்வளவுக்கு ஒரு மொழி ‘பிரிமிடிவ்’ என்பது, எவ்வளவுக்கு அதன் இலக்கணம் சிக்கலானது என்பதையே பொறுத்தது. இலக்கணம் சிக்கலாக இருப்பது என்பதே ஒரு மொழியின் சிறப்பு என்ற வாதத்தின் அர்த்தமின்மையும், இங்கே குறிப்பிடப்பட வேண்டும். தெளிவுடனும் பரிமாண விஸ்தீரணத் துடனும், உடனடியாக ஒரு நவீன விஷயத்தைக் கூறும் குணம்தான் சிறப்பு. இலக்கணம் சிக்கலாக இருப்பது, இந்நிலைக்கு உதவாது.
பிரிமிடிவ் மொழிகளின்  இலக்கணச் சிக்கலுக்கு, ஒருமை, இருமை பன்மை என்ற அம்சம் ஒருபுறம்; அல்திணையில், நவீனமொழிகள் கொள்ளும் மேஜை நாற்காலிகள்கூட ஆண், பெண் பால்களில் அடங்குவது மறுபுறமுமாக, பல்வேறு பிரச்னைகள் பிறக்கின்றன. இவ்வகையில், தமிழ் நவீனமான மொழியாகவே கணிக்கப்படலாகும்.
சமஸ்கிருதத்தைக் கற்பது மனஆழத்தைத்தரும் என்றுகூட ஒரு வாதம். ஒரு சில மாதங்களின் முன்பு, வாரணாசியில் சமஸ்கிருத வித்வானாகிய ஒரு ஜெயில் அதிகாரி, தனது கண்காணிப்பின் கீழ்வந்த சிறு குற்றவாளிகள் மீது, சட்டத்தையும் மனிதத்தனத்தையும் மீறிய குரூரங்களைக்காட்டி உடல் ஊனம் உண்டாக்கிய செய்தி, மேற்படி வாதத்துக்கு முரணாகவே நிற்கிறது. மன ஆழம், நவீன மான மதிப்பீடுகளையும் அவற்றை ஏற்கக்கூடிய விசாலமான உள்ளத்தையும் பொறுத்ததாகும். கற்கும் மொழியினின்றும் பிறிதான ஒரு பண்பு இது. சமஸ்கிருதமோ ஆங்கிலமோ என்ன, சுயமான தமிழைக்கூடப் படிக்கக்கற்றிராத ‘பாமரமான’ ஒரு கிழவியை நான் நேரில் அறிவேன். அவள், சமஸ்கிருத வித்வா னாகப்பட்ட ஜெயில் வார்டனிலிருந்து ‘நவீன சநாதன தமிழ் இலக்கிய ஜாம்பவான்கள்’வரை, எவரும் தீர்வுகாணாத அகப் பிரச்னையைத் தீர்த்துப் பெருநிலையை எய்தியவள். எனவே, மொழியை உள்ளத்தின் பண்புடன் இணைக்கும் வாதங்கள், வக்ரமான அரசியல் மனோபாவங்களையே வெளியிடுவனவாகும்.
இதற்கு அடுத்ததாக, ‘தமிழில் என்ன இருக்கிறது?’ என்ற கேள்வியை எடுத்துக் கொள்ளலாம். இது மிகமிக வக்ரமான ஒரு கேள்வி. ஜாதீய இனரீதியான மரபுகளை அநுசரிக்காத, இயல்பான வெளியீட்டியக்கத்தினால் பெற்ற பொக்கிஷங்கள் தமிழில் உள்ளன. சமஸ்கிருதத்தின் பொக்கிஷங்கள் பெருமளவுக்கு, ரகஸ்யக் கல்வி முறைகளினாலேயே பரிபாலிக்கப்பட்டவை. வானவியல், கணிதம் முதலிய அறிவியல் கல்விகள் இவ்வகையில் சமஸ்கிருதத்தின் எல்லையினுள்ளேயே நிகழ்ந்துள்ளன. அன்றைய கல்வி, மரபுகளின் வக்ரமான பட்டிஅடைப்பு முறைகளினால் நிர்ணயிக்கப்பட்டு, பிறமொழி மாணவர்களும் சமஸ்கிருதத்திலேயே இவற்றை கற்றுள்ளார்கள். சுயமொழிகளில் அந்த இயல்களைப் பெயர்த்து அளிக்கும் அளவுக்கு, இந்திய மக்களிடையே, ஐரோப்பாவில் நிகழ்ந்தது போன்ற விழிப்பு ஏற்படவில்லை. இதற்கும் காரணம், சமஸ்கிருத கேந்திரத்தின் சநாதன ஆதிக்கம்தான். இவ்வளவு கீழ்த்தரமான ஒரு சரித்திரப் பின்னணியை மழுப்பியபடி, “தமிழில் என்ன இருக்கிறது?” என்றும் கேட்கிற மனோபாவம், எவ்வளவு வக்ரமானது!
“தமிழ்மூளையினால் மேற்படி இயல்களைத் தமிழிலேயே உருவாக்க முடியவில்லையே?” என்று கேட்பதும், இதே வகையான மழுப்பலின் முனைப்புத்தான். ஏனெனில், எந்த ஒரு விஞ்ஞானத்துறையும் ஒரே மொழியின் விளைவல்ல. சமஸ்கிருதம் கூட, தனது அறிவியலை, பாபிலோன், எகிப்து, கிரீஸ் ஆகிய நாடுகளுடன் ஏற்பட்ட தொடர்புகள் மூலமே பெற்றிருக்கிறது. மேலும், ‘தமிழ் மூளைகள்’ சிருஷ்டித்துள்ள பண்டைத் தமிழ் இலக்கியங்களில், அந்த இலக்கியகர்த்தாக்களது அறிவியல் கல்வி ஞானம் பிரதிபலிக்கவே செய்கிறது. அத்தகையவர்கள், சமஸ்கிருதத்தின் வழி அறிவியல் ஆக்கவேலைகளிலும் இயங்கியிருக்கக்கூடிய ‘தமிழ்மூளை’கள்தாம்.
“தமிழ் வெறும் வழிபாட்டு (Cult) மொழி, கலாச்சார (Culture) மொழியல்ல” என்று, ஒரு நவீன சநாதன இலக்கிய ஜாம்பவான், எனக்குத் தெரிந்த ஒருவரிடம் கூறியதை எடுத்தால், இது என்ன சங்கதி என்றே புரியவில்லை. உண்மையில், சகலவிதமான வழிபாட்டு முறைகளுக்கும் உபயோகமாவது சமஸ்கிருதம்தான் என்பது, மூடர்கள்கூட அறிந்த விஷயம். தமிழில் தேவார பாராயணங்கள் மட்டுமே இருக்கின்றன என்ற ஞானசூன்யத் திலிருந்து வேண்டுமானால், மேற்படி ஜாம்பவானின் கருத்து தோன்றியிருக்கக்கூடும். மற்றபடி, சமஸ்கிருதம், தமிழ் இரண்டுமே கலாச்சாரமொழிகள்தாம். இதற்கு வாதங்கள் ஏதும் வேண்டியதில்லை.
“ஆங்கிலத்தில் Orgasam (உச்சகட்ட காமானுபவம்) என்ற வார்த்தை உண்டு. தமிழில் இல்லை. என் நாடக பாத்திரம் இது விஷயமாகப் பேசுகிறபோது ஆங்கில வார்த்தையையே உபயோகித்துவிட்டேன். தமிழனுக்கு Orgasam வாராதோ?” என்கிறார் ஒரு பெண் எழுத்தாளர். உச்சகட்ட அனுபவம், ‘தமிழன்’ என்பதில் உள்ள ஆண்பால் பிரகாரம், ஆண்களின் பிரச்னை அல்ல பெண்களின் பிரச்னையே என்ற, காமவியல் ஞானம் பற்றிய இந்தச் சங்கதி ஒருபுறம் இருக்கட்டும். தமிழில் Appedix-க்கு வார்த்தை இல்லை; எனவே, தமிழனுக்கு Appedix கிடையாது என்ற முடிவுக்கும் மேற்படி மேதைகள் வரக்கூடும். இத்தகையவர்கள், மருத்துவத்துறைக்குப் போய்விடக்கூடாதே என்பது என் பிரார்த்தனை. மேலும் ஒன்று சொல்லலாம். ஜப்பானியமொழியில், ‘மனிதத்வம்’ என்ற பதம்தான் உண்டு என்றும் ‘மனிதன்’ என்பதுக்கு வார்த்தை கிடை யாது என்றும், எங்கோ படித்திருக்கிறேன். எனவே ஜப்பானில் மனிதர்களே இல்லை! எஸ்கிமோக்கள், தங்களது இனத்தை ‘மனிதர்கள்’ என்று தங்கள் மொழியில் குறிப்பிடுகிறார்கள். எனவே, உலகிலுள் மற்ற மனித இனத்தவர் யாரும் மனிதர்களல்ல! தமிழில் skeep, hang – இரண்டுக்கும் ‘தூங்கு’ என்ற ஒரே வார்த்தை இருக்கிறது. ஆகவே தூக்கம் வந்தால் உத்தரத்தில் கயிற்றைக் கட்டித் தூக்குப்போட்டுக்கொள்வது தமிழர் வழக்கம்!
இந்தத் திசையில் ஓடுகிறது, புரட்சிகரமான நமது நவீன எழுத்தாளர்களின் மூளைகளிலிருந்து கிளம்பும் ஆராய்ச்சிப் பிரவாகம். ஒரு சுப்ரமணிய பாரதியின் அப்பழுக்கற்ற தமிழ் மொழிப்பற்று, அவரை உந்திய மனிதப் பண்பு, சுயஉணர்வும் தன்மதிப்பும் அற்று வாழும் சகஜீவர்கள் மீது அவர் கொண்டிருந்த கருணை – இதில் எதுவுமே இன்றைய மேற்படி ரகமான எழுத்தாளர்களிடம் இல்லை. பாரதி, வெறுமே உணர்ச்சிவசப்பட்டு தமிழ் பற்றி ஏதோ எழுதினார்; இவர்களுக்கு உள்ள பாஷா ஞான சமுத்ரம் அவருக்கு எட்டவில்லை என்றெல்லாம் முடக்குவாதம் பண்ணிவிட முடியாத முதல் தரப் பன்மொழி ஞானம் அவருடையது. இந்த லட்சணத்தில், ‘தமிழில் நாடகம் இல்லை. தத்துவம் இல்லை’ என்றெல்லாம் மூலைக்கு ஒரு கூப்பாடு. மனிதப் பண்போ கருணையோ அற்ற உங்களுக்கு, என்ன இருந்தென்ன என்றே, இவர்களை நோக்கி நாம் கேட்க வேண்டியுள்ளது.
ஒரு துறையில் இல்லாத செழிப்புக்கு ஈடுகட்டுகிற  வேறுவகை உக்கிரங்கள், ஓரொரு சமூகங்களில் இருக்கவே செய்கின்றன. நாடகம், சிற்பம் போன்றவை முஸ்லீம் கலாசாரத்தில் இல்லை. ஜப்பானில் தத்துவச் சிந்தனை கிடையாது. ஆனால், முஸ்லீம்கள் அற்புதமான கட்டடக் கலையையும் ஜப்பானியர்கள் இயற்கையுடன் இணைந்து இன்றும் அற்புத நவீன வடிவில் அமைந்துள்ள ஒரு தியான வாழ்வு முறையையும் சாதித்தவர்கள்.
இறுதியாக ஒரு வார்த்தை. ரமணருடன் சம்பாஷித்த நிகழ்ச்சியை  நினைவு கூர்ந்த புரொபஸர் எஸ்.சுவாமிநாதன் (The Collected Works of Mahatma Gandhi நிறுவனத்தின் எடிட்டராக அவர் இருந்தபோது, 1972-ல்), என்னிடம் கூறியது இது: “ரமணர், தமிழ்மொழியை ஒரு ஆன்மீகமொழி என்று கூறுகிறார். இதற்கு அவர் எடுத்துக்காட்டிய வற்றுள் முக்கியமான உதாரணம், சமஸ்கிருதம் உட்பட அவர் அறிந்த வேறுமொழிகளில் இல்லாத உதாரணம். ‘உள்ளல்’ என்ற வார்த்தை. ‘உள்’ என்றால் இரு. be என்ற வகைப் பொருள் தரும். ‘உண்மை’ என்பதன் தாதுவும் இதுதான். ‘உள்’ என்ற வினைச் சொல்லுக்கு நிகழ்கால வடிவம் மட்டுமே உண்டு; ஏககால வடிவம் மட்டுமே உண்டு. ‘உள்ளினான்’, ‘உள்ளுவான்’ என்ற வடிவங்கள் இல்லை. அதாவது ‘இருப்பு’ being என்பது நிகழ்காலநிலை மட்டுமே. எத்தகைய ஆழ்ந்த மனோபாவங்களிலிருந்து தமிழ் மொழி தழைத்திருக்க வேண்டும் என, ரமணர் வியப்படைந்து இதைக் கூறியிருக்கிறார்.”
‘உள்ளல்’ என்ற வார்த்தையின் பரிமாண விஷேசத்தை, ரமணர் இயற்றிய ‘உள்ளது நாற்பது’ என்ற செய்யுள் வடிவான ஆன்ம விசார நூலிலும் அவர் கொண்டு வந்துள்ளார் என்பது, மேற்படி விபரத்தை உறுதிப்படுத்தும்.                                                                             
(படிமம். 1981)
பதிப்பக அலமாரி – நற்றிணை பதிப்பகம் தொகுப்பாசிரியர்: கால  சுப்ரமணியம்
நன்றி: மலைகள்.காம்

International Symposium on Community Governance Practices (ISCGP)

International Symposium on Community Governance Practices (ISCGP)

July, 04 – 05, 2013, Colombo, Sri Lanka

 INTRODUCTION
The International Symposium on Community Governance Practices (ISCGP) is a collaborative effort of CARE international – Sri Lanka (CARESL), the Department of Economics of the University of Sri Jayewardenepura (DoEUSJP) and Practical Action Sri Lanka to be held on July, 04 – 05, 2013 in Colombo, Sri Lanka. The symposium aims at creating a forum for practitioners and academics to present and discuss various community governance approaches and contribute to a policy dialogue which will culminate with formulation of policy inputs that can be adopted in framing of a community governance system for the country. These inputs will be fed into a regional program aims at developing a community governance framework for South Asia.
CARE Sri Lanka has been implementing projects that strengthen community governance process in last few decades with the intention of addressing the issues related to poverty and social injustice in the country. Local efforts for Empowerment and Development Project (LEaD) is one such project funded by the OAK Foundation and implemented in the Southern dry zone of Sri Lanka. Life span of this particular project is six years and to be ended by August 2013. Project introduced and promoted a participatory community governance model in 170 selected communities in the Moneragala and Hambantota districts to enhance the community participation in decision making processes. As the project approaches are proven to be instrumental in enhancing community governance, it was decided to share its experiences, knowledge and the results with a wider audience through a national event.
Similarly, Practical Action posses an ample practical exposures in the area of community  governance in urban context in the South Asian region that they have obtained through their projects, namely  Community Governance in Infrastructure Services in South Asia and Delivering Decentralization, that are co-financed by the European UnionThe ultimate target of both these initiatives is to contribute to a regional framework for community governance which will enhance the policy formulation discourse on community governance in the countries of the South Asia region.
The collaboration between CARE, Practical Action and the University in the Symposium expected to deliver a comprehensive knowledge base including both practical and theoretical aspects in community governance which will feed into both national and regional policy dialogues.























OBJECTIVES OF THE ISCGP
  1. To create a forum to bring and share knowledge and experiences of practitioners, professionals and academics on currently important themes of community governance models/practices.
  2. To share the community governance experience, best practices, lessons learnt and the achievements of CARESL’s LEaD project, Practical Action and other stakeholders with the state, non-state actors, academics, practitioners and professionals in the discipline of community governance.
  3. To compile and share local and international best community governance practices generated as a result of the symposium with practitioners, professionals, academia, and governmental and non-governmental organizations involved in community governance.
  4. To develop sound policy recommendations and propose inputs for a Community Governance Policy for Sri Lanka that will be fed in to the South Asian Regional level policy framework
PRESENTATIONS
Presentations of the symposium consist of three main parts, namely:
  1. Community governance model introduced by CARE under the LEaD project :
    Presentation of community governance model developed and implemented by CARE under the LEaD Project
  2. Evaluation of the LEaD community governance model by independent researchers
    Competitive project Grants proposals for a maximum of LKR 300,000 are invited from eligible researchers to evaluate the above model.
  3. Research papers on community governance.
    Research papers are invited on different practices and perspectives to cover selected thematic areas

ஆண்மையை பெருக்கும் அமுக்கிரா(அஸ்வகந்தா) கிழங்கு !!

அமுக்கிரா (Ashwagandha)
Ashvagandha.jpg

உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
தாவரம்
துணைத்திணை:Tracheobionta
பிரிவு:பூக்கும் தாவரம்
வகுப்புஇருவித்திலையி
துணைவகுப்பு:Asteridae
வரிசை:கத்தரி வரிசை
குடும்பம்:கத்தரிக் குடும்பம்
பேரினம்:Withania
இனம்:W. somnifera
இருசொற்பெயர்
Withania somnifera
(லி.) Dunal, 1852
வேறு பெயர்கள்
Physalis somnifera



ஆண்மையைசெயல்பட வைக்கும் மூலிகை வேர்தான் அஸ்வகந்தா என்று அழைக்கப்படும் அமுக்கிரா கிழங்கு ஆகும்.



ஆண்குறின் இரத்த ஒட்டத்தை பெருக்கி உடலுறவின் போது அதீத உத்வேகத்தைத் தரும். இது சீமை அமுக்கிரா, நாட்டு அமுக்கிரா என்று இரண்டு வகைப்படும்.இதில் சீமை அமுக்கிரா கிழங்கு ஆண்கள் உடலுறவு கொள்ளும் போது அதிக நேரம் தாக்குப்பிடிக்க இது உதவுகிறது. இதை ஒரு மூலிகை “வயாக்ரா” சொன்னால் அது மிகையாகாது.அமுக்கிரா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றில் இருந்து மூளை விடுபட பெரிதும் உதவுகின்றது. சீமை அமுக்கிர பொடியை நெய்யுடன் கலந்து கலந்து சாப்பிட்டால் விந்து பெருகும். குழந்தை பேரு இல்லாதவர்கள் இதை பொடி செய்து தேனுடன் சாப்பிட்டு வந்தால் குழந்தை பேரு உண்டாகும்.

உடல் ரீதியாக, மன ரீதியாக ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை இது தீர்க்க உதவும். இது உடலின் வலிமையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்க வல்லது. மூளையின் செயல்பாட்டினை அதிகரித்து ஞாபக சக்தியை உண்டாக்கும். நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும் அதே வேளையில் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைத்து மூட்டு வலிக்கு சிறந்த நிவாரணமாக விளங்கும்.

கோல 

நகுட வெருண்டுதிர நாட்டுவையேன் மேலை 

நகுட வெருண்டு று வாழ் நாள் .. அகத்தியர் குணபாடம்.



சமீப கால ஆராய்ச்சிகளிலிருந்து அஸ்வகந்தா மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. மூளையின் அழற்ச்சி, வயோதிகம், போன்றவற்றிற்கு பெரிதும் உதவுகின்றது எனவும் உடலில் உள்ள Free Radicals ஐ வெளியேற்றி உடலை உற்சாகமாகவும் ஆரோக்கியமாகவும் வைக்க உதவுகிறது என கண்டறியப்பட்டுள்ளது.
அஸ்வகந்தா பல ஆராய்ச்சிகளில் ஜின்செங்கை (Panax Schinseng) ஒத்த செயல்பாடுகளை உடையதாகவும் கண்டறியப்பட்டுள்ளது
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்படக் கூடிய பல பிரச்சனைகளை சரி செய்யவல்லது அஸ்வகந்தா
அஸ்வகந்தாவின் நன்மைகள்
· உங்கள் திறமைகளையும் உடல் வலிமையையும் அதிகரிக்கும்.
· உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
· உங்கள் மூளையின் செயல்பாட்டினை பெருக்கும், ஞாபக சக்தி மற்றும்        திறமையை அதிகரிக்கும்.
· உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
· உங்கள் மூட்டுகளின் வீக்கத்தைக் குறைக்கும்
· உங்களுக்கு குதிரை போன்ற உடல் வலிமையைத் தரும்
· உங்களது இன பெருக்க உறுப்புகளுக்கு இரத்த ஒட்டத்தை பெருக்கி           உத்வேகத்தைத் தரும் (குறிப்பாக ஆண்களுக்கு)
மருத்துவ குணங்கள்
அஸ்வகந்தாவின் முழுச்செடியுமே மருத்துவ குணங்கள் கொண்டது. ஆயுப்வேத மருத்துவத்தில் அஸ்வகந்தாவின் வேர்கள் (கிழங்குகள்) மட்டுமே பயன்படுத்தப்படுகின்றது. அஸ்வகந்தாவின் பழங்கள் பாலை சீஸ்1£ க மாற்ற பாலை கட்டிப்படுத்த பயன்படுகிறது. சமஸ்கிருத மொழியில் அஸ்வகந்தா என்பது குதிரையின் நாற்றம் என பொருள்படும்.

கணினியைப் பார்க்கும் கண்களுக்குப் பயிற்சி..!



எந்தவொரு உடல் உறுப்பும், ரத்தம் அதிகமாக செல்லாமல் இருந்தோலோ, அதிகப்படியான வேலையை செய்யும்போதோ அதில் பாதிப்பு ஏற்படுகிறது.

உடல் உறுப்பில் மிக முக்கியமானது கண். சாதாரணமாக நாம் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. 
ஆனால், கண்களுக்கு மிக அருகில் அதிக ஒலியுடன் கூடிய கணினியைத் தொடர்ந்து பல மணிநேரங்கள் பார்த்துக் கொண்டிருப்பதால் கண் பாதிக்கப்படுகிறது.

கண்களுக்கு ஓய்வு என்றால் கண்களுக்கு இருளைக் கொடுக்க வேண்டும். கண்களுக்கு இருளைக் கொடுப்பது மட்டுமல்லாமல், மனதின் சிந்தனையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும்.

கண்களுக்கு ஓய்வளிக்க பல ஆசனங்கள் உள்ளது. கண்களுக்கு அதிக ரத்த ஓட்டம் அளிக்க தலைகீழ் ஆசனம் உள்ளது. சிரசாசனம் செய்வதால் கண்களின் பார்வை அதிகரிக்கும்.

மேலும், கண்களுக்கு திராடகம் என்ற ஒரு பயிற்சி உள்ளது. அதாவது, ஒரு இருளான அறையில் மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து அதைப் பார்த்துக் கொண்டே இருந்தால் கண்களுக்கு அதிகமான சக்திக் கிடைக்கும்.

சூரியநமஸ்காரம் செய்வதாலும் கண் பார்வை அதிகரிக்கும். அதற்குத்தான் கண் கெட்ட பிறகு சூரியநமஸ்காரமா என்று கேட்பார்கள். எனவே சூரியநமஸ்காரம் செய்வதால் கண் பார்வை அதிகரிக்கும்.பொதுவாக சூரியநமஸ்காரத்தை அதிகாலையில் சூரியன் உதயத்திற்கு முன்பாக செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரத்தை வெவ்வேறு வேளைகளில் செய்வதால் வெவ்வேறு பலன்கள் கிட்டும்.

முக்கியமான விஷயம் என்னவென்றால், தினமும் 8 மணி நேரம் நிம்மதியாகத் தூங்க வேண்டும். அதுவும் மிகவும் இருளான ஒரு அறையில் தூங்குவதே கண்களுக்கு ஒரு நல்ல ஓய்வாக அமையும். பின் தூங்கி முன் எழுதல் மிகவும் நல்லது. அதாவது சீக்கிரமாகத் தூங்கி அதிகாலையில் எழுவது உடலுக்கும் புத்துணர்ச்சி கிட்டும்.

அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் போது இடையே உங்கள் கண்களுக்கு ஓய்வு தேவைப்படும்போது, உள்ளங்கைகள் இரண்டையும், நமது கண்களில் அழுத்தி சிறிது நேரம் வைத்திருந்து மூச்சை உள்ளிழுத்து வெளிவிட்டால் நல்ல பலன் கிடைக்கும். அப்படி செய்யும்போது உள்ளங்கைகளை எடுத்துவிட்டு சிறிது நேரம் கழித்து மெதுவாக கண்களைத் திறக்க வேண்டும்.

மேலும், இதனை வேறு முறையிலும் செய்யலாம். அதற்கு அதிக பலன் கிட்டும். அதாவது, ஒரு ஈரத் துணியை நனைத்து பின்பக்க கழுத்தில் போட்டுவிட்டு சிறிது எண்ணெயை புருவங்களில் தடவிவிட்டு இரண்டு உள்ளங்கைகளையும் கண்களில் அழுத்தும்போது உங்களது கண்களுக்கு குளிர்ச்சியும், ஓய்வும் ஒரு சேர கிடைக்கும்.

புருவம் என்பது, கண்களுக்குத் தேவையான வெப்பத்தை சீராக வைத்திருக்க அமைக்கப்பட்ட ஒரு இயற்கை கொடையாகும். புருவங்களின் சூட்டினால்தான் கண்களின் குவியங்கள் எளிதாக சுருங்கி விரிகின்றன. ஆனால், அதை விட அதிகமான வெப்பத்தை நம் கண்கள் கணினியில் இருந்து பெற்று வருகிறது. எனவே அந்த வெப்பத்தைக் குறைக்க புருவங்களில் எண்ணெய் வைப்பது கண்களுக்கு குளிர்ச்சியை அளிக்கும்.

பொதுவாக கண்களுக்கு ஓய்வு என்றால், எதையும் உற்று அல்லது கூர்ந்து பார்க்காமல் இருந்தாலேப் போதும். அதாவது சாதாரணமாக கண்களால் எந்தப் பொருளையும் பார்ப்பதால் கண்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் எதையாவது உற்றுப் பார்க்கும் போதுதான் அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது. சிறிது நேரம் எந்தப் பொருளையும் உற்றுப் பார்காகமல், எதைப் பற்றியும் சிந்திக்காமல் இருப்பதும் நல்ல பயிற்சிதான்.

அதேப்போல மதியம் உணவு இடைவேளையின் போது சாப்பிட்டுவிட்டு உடனடியாக கணினி முன் அமர்வதைவிட, சாப்பிட்ட பின் ஒரு 15 நிமிடம் அமரும் நாற்காலியிலேயே தளர்வாக அமர்ந்தபடி கண் மூடி இருப்பது ஏன் 10 நிமிடம் தூங்குவது கூட மிகவும் நல்லது. ஒரு நாளைக்குத் தேவையான சக்தியை இந்த 15 நிமிட தூக்கத்தில் உடல் பெற்று விடும். அதற்காக படுக்கையில் படுத்து தூங்கக் கூடாது. அமர்ந்த படி தளர்வாக 15 நிமிடம் அமர்ந்திருந்தாலும் கூட நல்லது. இப்படி செய்வதால் மாலையிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்க முடியும்.

Wednesday, September 11, 2013

மகாகவி பாரதியின் சொல்லாட்சி.




மகாகவி பாரதியின் சொல்லாட்சி.
கட்டுரை: ஆக்கியோன் தஞ்சை வெ.கோபாலன்
இயக்குனர், பாரதி இலக்கியப் பயிலகம்,
-------------------------------------------
பழமைப் புழுதியில் புரண்டு கொண்டும், மகா பண்டிதர்களின் புரியாத கடின தமிழ் நடையில், சொற்களைக் கோத்துக் கோத்து புலவர்களுக்கு மட்டுமே பொருள் விளங்கும் செய்யுள்களை இயற்றிக் கொண்டும், தமிழறிஞர்கள் வாழ்ந்து கொண்டிருந்த இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ் நாட்டின் மொழி இருளை நீக்க இளசையில் உதித்த கதிரவன்தான் மகாகவி பாரதி. பாரதிதாசன் சொற்களால் சொல்லவேண்டுமென்றால் அவன் ஓர் வையத்து மாகவிஞன், புது நெறிகாட்டிய புலவன், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும் தலைவன், பைந்தமிழ்த் தேர்ப்பாகன், செந்தமிழ் தேனீ, சிந்துக்குத் தந்தை இப்படிப் பலப்பல சொல்லிக்கொண்டே போகலாம்.

ஒரு மொழி உயிர்ப்போடு சிலிர்த்தெழ வேண்டுமானால் புதுப்புதுச் சொற்கள், புதிய புதிய இலக்கியங்கள், பிறமொழியிலிருந்து பெயர்த்துக் கொணர்ந்த புத்தம் புதிய மொழியாக்கங்கள் இவைகளைக் கொண்டு நாளுக்கு நாள் மொழியின் கட்டமைப்பை இளமைத் துடிப்போடு வைத்திருக்க வேண்டும். அந்தப் பணியைத் துவக்கி வைத்த பெருமை நம் மகாகவிக்கே உரித்தானது. அவன் படைப்புகளில்தான் எத்தனை யெத்தனை புதிய சொற்கள், எளிய சொற்கள், அதுமட்டுமல்லாமல் பழைய சொற்களை கையாண்ட விதம், தனித்து எழுதினால் பொருள் கிடைக்காத பல ஒலிச் சொற்களுக்கு புதிய பொருளைக் கொடுத்தது, இப்படி பற்பல பெருமைகளுக்கு உரியவன் மகாகவி பாரதி. அந்த வகையில் மகாகவி பயன்படுத்திய புதிய சொல்லாக்கம் சிலவற்றையும் அவன் எழுத்துக்கள் அமைத்துக் காட்டிய எழிலுறு சித்திரங்கள் சிலவற்றையும் இந்த கட்டுரையில் காணலாம்.

மகாகவியின் பெருமையை உலகறியும்படிச் செய்தவர்கள் பலர். அவர்களில் சிலர் அவன் காலத்திலேயே அவனது பெருமையை உணர்ந்தவர்கள், அதனை உலகறியப் பறை சாற்றியவர்கள். அப்படிப்பட்ட சிலரில் எஸ்.ஜி.இராமானுஜுலு நாயுடு என்பவர் ஒருவர். அந்தக் காலத்தில் வெளிவந்த "அமிர்த குண போதினி" எனும் பத்திரிகையில் 1928, 1929 ஆண்டுகளில் வெளியான தொடர் கட்டுரையில் அவர் மகாகவியின் ஆற்றலையும், பெருமையையும் போற்றிப் புகழ்ந்திருப்பதைக் காணலாம். பர்மா மாகாணம் இந்திய நாட்டின் ஒரு பகுதியாக இருந்ததும், அங்கு மகாகவியின் பாடல்கள் தடை செய்யப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வரலாறும், அந்த பறிமுதல் நிகழ்ச்சியின் எதிரொலியாக சென்னை மாகாண சட்டசபையில் தீரர் சத்தியமூர்த்தியின் எதிர்ப்புக் குரல் ஓங்கி முழங்கியதையும் பழைய ஆவணங்களிலிருந்து அறிய முடிகிறது. மகாகவியின் சொற்கள் எவ்வளவு வலிமையுடையதாக இருந்திருந்தால் இப்படிப்பட்ட தடையுத்தரவும் பறிமுதல் நிகழ்ச்சியும் நடந்திருக்கும்? அது மட்டுமா? தன் கட்டுரையில் இராமானுஜுலு நாயுடு குறிப்பிடும் வேறு சில நிகழ்ச்சிகளும் மகாகவியின் சொற்களின் ஆற்றலை வெளிப்படுத்துவதாக இருக்கிறது. அவர் சொல்கிறார்:

"இந்தியா பத்திரிகை பிரபலப்பட்ட பொழுது அது மிகவும் உக்கிரக வாசமுள்ளதாயிருந்தது. சிறிதும் அச்சமின்றி எழுதப்படலானது. அந்த அம்ஸம்தான் கடைசியில் அப்பத்திரிகைக்கு ஆபத்தாய் முடிந்தது. பத்திரிகை என்றைக்கும் நடக்கும்படியான ரீதியில் சாந்தமாய் சட்ட வரம்புக்கு உட்பட்டு நடக்கும்படி பல நண்பர்கள் கூறியும் பாரதியாரின் எழுதுகோல் பழையபடியே இருந்தது. பத்திரிகைக்கு ஆபத்து நிச்சயமென்று பலர் கூறினர். ஒரு சமயம் பாரதியார் டிராம் வண்டியில் செல்லுகையில் 'இந்தியா' பத்திரிகையைப் படித்துக் கொண்டிருந்த ஒரு உத்தியோகஸ்தர் மிக்க கோபாவேசமாய் இப்பத்திரிகையின் ஆசிரியரை அவசியம் தண்டிக்க வேண்டுமென்று பாரதியாரிடமே கூறினார். பாரதியார் பதிலுக்கு "அப்படியா?" என்றார். இந்த ஸம்பவத்திற்குப் பிறகு 'இந்தியா' பத்திரிகை தனக்கென்று ஒரு புது காரியாலயமும் அச்சுக்கூடமும் அமைத்துக்கொண்டு வேறாய் விட்டது. பத்திரிகையே வேறு கை மாறினும் அதன் கொள்கை எப்போதும்போல் இருக்கும் என்று ஒரு தனிக்குறிப்பும் வெளியிடப்பட்டது".

அடுத்து, நாயுடு அவர்கள் மற்றொரு சம்பவத்தையும் விளக்குகிறார். அது: "இந்தியா பத்திரிகை வரவர 'காரமாகிவிட்டது'. சிவாஜி தன் சைநியத்தாருக்குக் கூறியது என்று அகவல் ரூபமாய் 'பாஞ்சாலி சபதம்' போல் பெருங்காவியமாகத் தொடர்ச்சியாய் பத்திரிகையில் எழுதி வந்தார். அது முற்றும் வீர ரஸமாய் இருந்தது. அதனைத் தனிப் புஸ்தக உருவமாய் வெளியிடுவதற்குப் பாரதியார் விரும்பினார். அது ஆபத்தென அவரது நண்பர்களால் தடுக்கப்பட்டது. 'இந்தியா' பத்திரிகைக்குப் பாரதியார் அந்தரங்கத்தில் ஆசிரியராக இருந்தாரேயன்றி வெளிப்படையாக அன்று. ஸ்ரீ ஸ்ரீநிவாஸன் என்பவர் ஆசிரியரும் பிரசுரிப்பவருமென்று பத்திரிகைகளில் வெளிவந்து கொண்டிருந்தது. பாரதியார் ஒரு நிருப நேயர் போன்று, இந்தியா பத்திரிகையில் பாடல்களை மட்டும் தமது பெயருடன் வெளியிட்டு வந்தார். 1907ஆம் வருஷத்தில் ஸ்ரீ லஜபதிராயைத் தேசப்பிரஷ்டம் செய்த காலையில் அவர் தம்மைப் பற்றி இரங்கிப் பிரலாபிப்பதாகப் பாரதியார் 'இந்தியா பத்திரிகையில் அரிய பாடல்களை வரைந்து அதற்குத் தெளிபொருள் விளக்கமும் குறிப்பிட்டார். அந்த விளக்கம் இப்போது வெளிவந்துள்ள அவரது நூல்களில் இல்லை. பாடல்கள் மட்டுமே உள்ளன."

'இந்தியா' பத்திரிகையில் மகாகவிதான் எழுதி வந்தாரேயன்றி, அதன் ஆசிரியராகவும், பிரசுரம் செய்பவராகவும் அரசாங்க இலாகாக்களில் பதிவு செய்யப்பட்டிருந்த ஸ்ரீ ஸ்ரீநிவாசன் அல்ல. எனினும் 'இந்தியா' பத்திரிகையின் கடுமையான விமரிசனங்களைத் தாங்கமுடியாத அரசாங்கம், அதன் ஆசிரியரைக் கைது செய்வது என்று வந்தபோது ஸ்ரீ ஸ்ரீநிவாசன்தான் கைதானாரேயன்றி, மகாகவி அல்ல. இதன் காரணமாகவே நண்பர்கள் ஆலோசனைகளின்படி மகாகவி புதுச்சேரி செல்லும்படி நேர்ந்தது என்பது வரலாற்றுச் செய்தி.

'இந்தியா' பத்திரிகை ஆசிரியர் மீது நடந்த விசாரணை, தீர்ப்பு இவற்றைப் பற்றி 16-11-1908இல் வெளிவந்த 'சுதேசமித்திரன்' ஒரு துணை தலையங்கம் எழுதியது. எழுத்தின் வலிமை எப்படிப்பட்டது, அந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் யார் என்பதை ஓரளவு மறைமுகமாக அந்தத் தலையங்கம் சுட்டிக்காட்டியிருக்கிறது. அது வருமாறு:

"சென்னையிற் பிரசுரமாய் வந்த 'இந்தியா' வென்ற வாராந்தர தமிழ் பத்திரிகையில் சென்ற மார்ச்சு மாதம் முதல் ராஜத் துவேஷமான வியாசங்கள் தோன்றி வருவதாக அதன்பேரில் ராஜத்துவேஷக் குற்றஞ்சாட்டி, அதை அச்சிட்டுப் பிரசுரப்படுத்துவோரான (Printer & Publisher) ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்காரைக் கைதிப்படுத்தி, விசாரணை செய்ததில் ஐகோர்ட்டில் அவருக்கு ஐந்து வருஷ தீவாந்தர சிக்ஷை விதிக்கப்பட்டது. இப்படி விதிக்கப்படுமென்றே பொதுவாக எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ராஜத் துவேஷக் குற்றம் செய்ததாகக் கவர்ன்மெண்டார் யாரை நினைக்கிறார்களோ அவர்களைப் பிடித்து விசாரணைக்குக் கொண்டு வருவதும் ஜட்ஜுகள் கொடுந்தண்டனை விதிப்பதும் இப்போது சாதாரணமாய்விட்டது. குற்றஞ் செய்தவர்களைத் தண்டித்தல் அவசியமென்று எல்லோரும் ஒப்புக் கொள்வார்கள். ஆனால் ராஜத்துவேஷக் குற்றம் செய்கிறவர்கள் படித்தவர்காளாயும் கெளரவமான நிலைமையில் இருப்பவர்களாயும் இருப்பதால், அவர்களிடத்தில் கவர்ன்மெண்டாரும் ஜட்ஜுகளும் அவ்வளவு கொடுமை காட்டாமல் இருக்கக்கூடும். ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்கார் குற்றமுள்ள வியாசங்களை யெழுதினவரல்ல; எழுதினவரும் அந்தப் பேப்பருக்குச் சொந்தக்காரரும் அகப்படாமல் மறைந்து போனார்கள். ஸ்ரீ ஸ்ரீநிவாஸய்யங்கார் பெயர் போலீஸ் ஆபீசில் பதிவு செய்யப்பட்டிருந்ததால் அவர் அகப்பட்டுக் கொண்டாரே யன்றி, குற்றத்துக்கு முதல் உத்திரவாதம் அவர் பேரில் தாங்கியதல்ல. இந்த ஒரு காரணத்தினாலேயே அவருக்குக் கொடுந்தண்டனை விதிக்காமல் இலகுவான தண்டனை விதித்திருக்கக்கூடும் அல்லது இந்தியா பத்திரிகையில் ராஜத்துவேஷக் குற்றமுள்ள வியாஸங்கள் தோன்றின துவக்கத்திலேயே கவர்ன்மெண்டார் எச்சரித்திருந்தார்களானால், இப்போது ஓடிப் போயிருக்கிற எடிட்டரும் புரொப்பரைட்டரும் அப்படிப்பட்ட வியாஸங்கள் தோன்ற இடங்கொடுத்திருக்க மாட்டார்கள். அவைகளால் விளையும் தீங்கும் குறைந்திருக்கும்" இதில் ஓடிப்போய்விட்ட 'இந்தியா' பத்திரிகை ஆசிரியராக வர்ணிக்கப்படுபவர் நமது மகாகவி பாரதியார்தான்.

இப்படிப் போகிறது அந்தத் தலையங்கம். இதிலிருந்து மகாகவி அதன் ஆசிரியராக இருந்து, அவர் இந்தியாவில் எழுதிய கட்டுரைகளின் கடுமை காரணமாக அரசாங்கம் விதித்த தண்டனையை ஸ்ரீநிவாசன் என்பவர் ஏற்றுக் கொள்ளும்படியும், மகாகவி புதுச்சேரி சென்று தங்கும்படியாகவும் ஆயிற்று. இவ்வளவுக்கும் அவரது கட்டுரையில் அவர் கையாண்ட 'சொற்கள்' அவைகளின் ஆற்றல், வலிமை இவைகள்தான் என்பது தெளிவு. இந்தச் செய்திகள் அனைத்தும் இப்போது அனைவருக்கும் தெரிந்த உண்மைகள்தான் என்றாலும்கூட, அவர் காலமான ஒரு சிறிது காலத்திலேயே கட்டுரை வடிவில் கொடுத்திருக்கும் ஸ்ரீ ராமானுஜுலு நாயுடு தரும் தகவல்கள் உண்மையாகவும், அவர் காலத்திய பிரதிபலிப்பாகவும் இருப்பதை உணரலாம்.

இனி மகாகவி தனது பாடல்களில் கையாண்டுள்ள ஒருசில சொற்களையும், அவை கொடுக்கும் புதிய உத்வேகம், புத்துணர்ச்சி, அவர் கூற்றால் சொல்ல வேண்டுமானால், புதிய சொற்கள், புதிய சிந்தனை இவற்றைப் படித்து மகிழ முடியும். 'பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி' என்றொரு பாடல். குவளை கிருஷ்ணமாச்சாரியின் தாயார் மகாகவியை ஓர் திருப்பள்ளியெழுச்சி பாடும்படி கேட்க, அன்று மடுவுக்குச் சென்று குளித்துவிட்டுத் திரும்பும்கால் களியாட்டத்தோடு இந்த கவிதையைப் பாடி முடித்ததாக பாரதிதாசன் குறிப்பிடுகிறார். அந்தக் கவிதையில் "எழுபசும் பொற்சுடர்" என்று காலைக் கதிரவனைக் குறிப்பிடுகிறார். காலைக் கதிரவன் எழுகிறான். கதிரவனின் கிரணங்கள் சூடானவை. காலை வேளையென்பதால் உதிக்கின்றபோது அவன் கிரணங்கள் பொன்னிறமாக இருக்கிறது, ஆனால் அது எப்படிப் பசும்பொற் கிரணங்களாகிறது. அதுதான் சூடான கதிரவன் கிரணங்களையும்கூட பசுமையும் குளுமையும் உள்ளதாக நம்மை உணரச்செய்கிறது. புற உடம்பில் சுடும் அக்கிரணம், மனதைக் குளுமைப்படுத்தும் பசும் பொற்கிரணமாக அந்த மகா கவிஞனுக்குத் தோன்றுவதில் என்ன வியப்பு? எழும் ஞாயிறை வணங்குகிறான். உடனே மலருக்கு எங்கே போவது. அவனுக்குக் கிடைத்த "கனிவுறு நெஞ்சம்" எனும் மலர்கொண்டு கதிரவனைப் போற்றுகிறான். மனமே மலர். அந்த மனத்தைக் கனிவும், இரக்கமும், கருணையும், அன்பும் உள்ளதாக வைத்துக் கொண்டால், அந்த மனம் கொண்டே இறைவனை அர்ச்சிக்க முடியும். என்னே அவன் சொல்லாட்சி!

புத்தம் புதிய வார்த்தை ஜாலங்களை பரவ விட்டிருக்கும் மகாகாவியம்தான் "குயில் பாட்டு". இந்த அரிய காவியத்தில் அவன் தூவியிருக்கும் அரிய சொற்கோவைகள், அடடா! படித்துப் படித்து இன்புறத்தக்கன. காலைப் பொழுது. கீழைக் கடற்கறை. கதிரவன் உதிக்கும் காட்சி, நீலக்கடலில் நெருப்பு எழும் நேர்த்தியான காட்சிஅவன் மனதை உருக்குகிறது. அந்த நாள், பறவைகளுக்கு விருந்துத் திருநாள். ஏன் தெரியுமா? அவைகளை வேட்டையாட வேடர்கள் வராத நாள். அதனாலேயே அந்த நாளை அந்தப் பறவைகள் விருந்துத் திருநாளாகக் கொண்டாடுகின்றன. அங்கே ஓர் மரக்கிளையில் ஓர் சின்னக் குயில் "மேனி புளகமுற; ஆற்றல் அழிவுபெற; உள்ளத்தனல் பெருக" தன் தேனினும் இனிய குரலெழுப்பி காதல் கீதம் இசைக்கிறது. அக்கீதம் 'இன்னமுதைக் காற்றிடை கலந்ததுபோல்' சுவைக்கிறது. அது சரி! அமுதை காற்றில் கலப்பது எப்படி? அதுதான் மகாகவியின் சொல்லோவியம்.

மனத்தில் இன்ப வெறி. அத்தோடு துன்பம் எனும் சோக கீதம் உள்ளத்தின் ஆழத்தில் ஒலிக்கிறது. இன்பத்திற்குக் காரணமான இசை, அதனை எழுப்பும் குயில் தனக்கு வசப்படவில்லையே என்ற ஏக்கம் தரும் சோகம், இவை ஒருங்கிணைந்து தரும் "இன்ப வெறியும் துயரும்" எனும் சொல்லாட்சி. 'தீ' உஷ்ணமானது. அது சுடுவது. துன்பத்தைத் தருவது. குளிரில் அதே தீயின் சுடர்கள் உடலுக்கு சுகம் தருவது. அது என்ன "இன்பத் தீ"? இது எங்ஙனம் சாத்தியமாகும்? அக்குயிலின் இசை கவிஞரின் மனத்தில் 'இன்பத் தீயை' மூட்டி வதைக்கிறது. கானகத்தில் மரங்களிலும், கிளைகளிலும் தங்கியுள்ள பறவைகள் குரலெழுப்புகின்றன. எத்தனையெத்தனை வகை பறவைகள், அத்தனை யத்தனை குரல் ஒலிகள். அவை 'கலகலெனும்' ஓசைகளாக கவிஞன் காதில் விழுகின்றன. ஒருங்கிணைந்த பறவைக் குரல்கள், அதன் ஒலி 'கலகல' வென்கிறது.

பாட்டில்தான் எத்தனை வகை. மனிதன் தன் உழைப்பின் வருத்தம் தெரியாமலிருக்க பாட்டிற் மனம் பதித்த அரிய செயல். கைகொட்டிப் பண் இசைக்கும் பழகு தமிழ் கும்மி, கோலாட்டப் பாடல்கள், இப்படிப் ஏற்றம் இறைக்கும் பாட்டு, நெல்லிடிக்கும் பாட்டு, இது நடுவில் உரலை வைத்து இரு புறமும் பெண்கள் கையில் உலக்கைகளை ஏந்தி மாற்றி மாற்றி நெல்லை இடிக்கும்போது அந்த இசையின் காலப் பிரமாணமும், உரல் வயிற்றில் உலக்கை விழும் சமச்சீர் நேரக் கணக்கும், இசையினால் விளைவதன்றோ? சுண்ணமிடிப்பார் தம் சுவை மிகுந்த பாடல்கள், பண்ணையில் பணிபுரியும் பெண்டிர் பாடும் பாடல்கள், பெண்கள் பற்பல இசை வடிவங்களைப் பட்டியலிட்டு, நமது பாரம்பரிய மரபு வழி இசை நாட்டத்தை மகாகவி அரிதான சொற்களால் விளக்குவதைப் படித்து இன்புறமுடிகிறது.

காதல் இனியது. காதலினால் மனிதர்க்குக் கலவியுண்டு; கலவியினால் மானுடர்க்குக் கவலை தீரும்; காதலினால் கவிதையுண்டாம்; கானமுண்டாம்; சிற்பமுதல் கலைகளுண்டாம்; ஆதலினால் காதல் செய்வீர் உலகத்தீரே என்று பறை சாற்றிய மகாகவி குயிலியின் மீது கொண்ட காதலினால் அனுபவித்தது "வெம்மைக் கொடுங்காதல்". இது சாத்தியமா? காதல் வெம்மையானதா? கொடுமையானதா? ஆம், கோவலனைப் பிரிந்த மாதவி கடற்கரையில் குளுமையான முழுமதியின் ஒளிகூட பிரிந்தவர்க்கு 'வெங்கதிராக' மாறியதாகவும், கூடியவர்க்கு 'தண்ணொளி'யாக இருப்பதாகவும் கூறியதிலிருந்து, காதல் நிறைவேறாதாருக்கு அது 'வெம்மைக் கொடுங்காதல்' என்பதை மகாகவி சிறப்பாக எடுத்துரைக்கிறார்.

ஓர் ஆங்கில கவிதையின் தாக்கம். மகாகவியின் சொல்லோவியத்தில் பிரதிபலிக்கிறது. இசையின் ஆற்றல் என்ன தெரியுமா? காட்டில் விலங்கறியும், கைக்குழந்தை தானறியும், பாட்டின் சுவைதனை பாம்பறியும்" என்றுரைப்பர் என்பதால் இது ஓர் கவிதையின் எடுத்துக்காட்டு என்கிறார். காதல் மனத்தின்பாற்பட்டது. பேசியோ, எழுதியோ காதல் உணர்வுகளை வெளிக்கொணர முடியுமா? எனவேதான் "பேசமுடியாப் பெருங்காதல்" என்ற சொற்றொடரை உதிர்க்கிறார். 'கண்ணோடு கண் ஒன்று பட்டால்" அங்கு வாய்ச் சொற்களுக்குப் பயன் என்ன?

தங்கத்தை உருக்கி, தழலைக் குறைத்து மிதமான சூட்டில் அந்தத் தங்கக் குழம்பை எங்கும் பரப்பினால் எப்படியிருக்கும்? மகாகவி விவரிக்கும் அந்த மாலைப்பொழுது நம் மனக்கண்ணில் அந்த வானத்துக் காட்சியைக் கொண்டு வந்து நிறுத்துகிறது. கதிரவன் செயல்பாடுகள்தான் எத்தனை? புல்லை நகையுறுத்துகிறான், பூவை வியப்பாக்கி உருவாக்குகிறான்; மண்ணை தெளிவாக்குகிறான், நீரில் வெளிச்சம் தருகிறான், விண்ணை வெளியாக்குகிறான். கதிரவனின் ஜோதி செய்யும் மாயா ஜாலங்களைத் தன் வார்த்தை ஜாலங்களால் மகாகவி விளக்கும் இடங்கள் இவை.

அமைதியில் இன்பமுண்டா? உயிர்கள் இருக்குமிடங்களில் உயிர்ப்பும் உண்டு. எங்கும் மயான அமைதி இருக்குமானால் மனத்தில் பீதி உண்டாகும். இயங்கும் உயிர்கள் ஆர்ப்பரிப்புக்கு இடையே மனிதன் தனித்து இருந்தாலும் அந்த உயிர்களின் நாதங்கள் ஓங்கி ஒலித்திடவும், இன்பக் களி இயல்பாக வந்து சேர்ந்து இந்தப் புவி இயங்கிடக் காண முடியும்.

இறைவன் இந்தப் பிரபஞ்சத்தைப் படைத்தான். உலகத்தைப் படைத்தான். இந்த உலகத்தில் நீர் நெருப்பு, ஆகாயம், காற்று, மண் இவற்றையும் படைத்தான். இந்த பஞ்ச பூதங்கள் ஒருங்கிணைந்த பற்பல தோற்றங்களை, உயிர்களைத் தோற்றுவித்தன. இவற்றில் எதுவும் புதிதாகத் தோன்றுவதுமில்லை, அழிவதுமில்லை. இந்த பஞ்ச பூதங்கள் மட்டுமே மாறி மாறி, உருமாறி இருப்பதும், பின்னர் மாறுவதும், வேறொரு உருவெடுப்பதுமாக இயக்குகின்றது. இதைத்தான் நீரைப் படைத்து, நிலத்தைத் திரட்டி வைத்தான், நீரைப் பழைய நெருப்பில் குளிர்வித்தான், காற்றை முன்னே ஊதினான், கான்றிய வானவெளி தோற்றுவித்தான் என்று இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்தைத் தன் வாக்கு வன்மையில் விவரிக்க முன்வந்தான் மகாகவி. மண்ணைத் தெளிவாக்கி, நீரில் மலர்ச்சி தந்து, விண்ணை வெளியாக்கி விந்தை செய்யும் காட்சியை விமரிசையாக விளக்குகின்றான்.

உலகத்தில் எத்தனையோ அதிசயங்கள். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். இவ்வதிசயங்களில் எல்லாம் பேரதிசயமாக விளங்குகின்றது இசை என்ற இறைவன் நமக்களித்த வரம். மகாகவியின் வாக்கால் இந்த செய்தியை "இறைவனின் அதிசயங்கள் யாவினும் கானாமுதம் படைத்த காட்சி விந்தை", "பாட்டு என்று ஒன்று உண்டானதைப் போன்ற அதிசயம் வேறு எதுவுமில்லை", "நாதங்கள் சேரும் நயத்துக்கு எது நிகர்?", "ஓசை தருகின்ற இன்பத்துக்கு எதுதான் நேராகும்?" இவையெல்லாம் கவிஞரைப் பொறுத்தவரை "உவமையிலா இன்பம்".

மழை பொழிந்துகொண்டுதான் இருக்கின்றது. நமக்கு அது ஒன்றும் புதிதல்ல. எனினும் அந்த மழையை மகாகவி பார்க்கும் பார்வை என்ன? மின்னலடிக்கிறது. இடி முழங்குகின்றது. இவையெல்லாம் இயற்கையின் வெளிப்பாடுகள். இவைகள் சில நேரம் அச்சம் தருவனவாகவும் இருக்கிறது. கவிஞருக்கு இவை தரும் உணர்வு என்ன? அவர் சொல்லுகிறார், இடியின் நாதம் தாளவாத்தியத்தின் 'தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட, தீம்தரிகிட' என்று இசையின் முழக்கமாகத் தெரிகிறதாம். மழையின் காரணமாக எங்கும் வெள்ளம், பள்ளங்கள் எல்லாம் நீரால் மூழ்குகின்றன. அவைகளின் தாளகதி 'தக்கத் ததிங்கிடத் தோம்' என்று கவிஞருக்குத் தோன்றுகிறது. காற்று அடிப்பதைத்தான் நாம் பார்ப்போம், உணர்வோம். அது 'கூ கூ' வென்று அழகிய ஓசை நயத்தோடு வெளிப்படுவதை எத்தனை பேர் கூர்ந்து கவனித்திருக்கிறோம். இடி முழக்கம் நமக்கெல்லாம் பழக்கப்பட்ட ஓசைதான். அதன் ஓசையை, ஒலி வடிவத்தை எழுத்தில் வடிக்க முடியுமா? முடியுமாம் மகாகவிக்கு. அந்த இடியோசை அவருக்குச் 'சட்டச்சட, சட்டச்சட, சட்டச்சட டட்டா" என்று கேட்கிறது. ஒரு முறை முழங்கிப் பாருங்கள், இடியோசை உங்கள் காதுகளில் ஒலிக்கும்.

முன்பே குறிப்பிட்டதைப் போல சில பொருளற்ற ஒலிகள்கூட கவிஞன் வாக்கால் உயிர் பெற்று விளங்குகின்றன. அவ்வொலிக் குறிப்புகள் பொருள் சேர்ந்து வெளிப்படுகின்றன. ஓர் தென்னை மரம். அதன் படர்ந்த மட்டையின் மீது அமர்ந்த செல்வப் பசுங்கிளி. அருகே 'கீச்சிட்டுப்' பாயும் சின்னஞ்சிறு குருவி. அது கிளைவிட்டுத் தாவி மேலே மேலே பறந்து ஏறுகிறது எப்படி? 'ஜிவ்' வென்று பாய்கிறது. இந்த 'ஜிவ்' எனும் ஒலி, இங்கே அந்தக் குருவி பறந்து செல்லும் விரைவின் வெளிப்பாடு அன்றோ?

'ரிக்' வேதம் பழமையானது. அதுதான் முதல் வேதம். மனிதன் இயற்கையைக் கண்டு மனதில் அச்சம் கொண்டான். சூரிய சந்திரர்களைக் கண்டு பயந்தான். இடியும் மழையும் மின்னலும் அவனுக்கு அச்சம் தந்தன. காற்றும் தீயும் பஞ்ச பூதங்களின் அங்கம் என்பதை அவன் முதலில் உணரவில்லை. இவற்றை எல்லாம் கண்டு அச்சம் கொண்டான். அவற்றை தங்கள் சக்திக்கு மீறியவைகளாக இருப்பதால் தெய்வங்களெனப் போற்றினான். அதன் வெளிப்பாடுதான் 'ரிக்' வேதம். ஆதிமனிதனின் அறிவுலகப் பிரவேசம். 'ரிக்' வேதத்தின் 100 பாடல்களை (ஸ்லோகங்களை) ஸ்ரீ அரவிந்தரிடம் பாடம் கேட்ட மகாகவியின் கற்பூர புத்தி அவற்றை சுவீகரித்துக் கொண்டது. விளைவு? ஞாயிறு என்றும், சக்தி என்றும், காற்று என்றும், கடல் என்றும் ஜகத்சித்திரம் வரைத்து வைத்துவிட்டார். ரிக் வேதம் ஓசை நயத்துடன் பாடப்படுபவை. அதே ஏற்ற இறக்கத்தோடு மகாகவியின் வசன கவிதைகளைப் பாடிப் பார்த்தால் என்ன? பாடிப்பார்த்தீர்களா? என்ன கண்டீர்கள்? ஆம் அதே ரிக் வேத ஒலி அமைப்புக்களோடு ஏற்ற இறக்கங்களோடு பாடத்தகுந்த படைப்புகள் அவை. மகாகவியின் பரிமாணம்தான் என்ன. தோண்டத் தோண்ட உட்புக உட்புக, பாரதியின் வீச்சு, வானத்தின் எல்லைகளையும் தாண்டி எங்கோ எங்கோ போய்க்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. மகாகவியை முழுமையாக ஆய்வு செய்து புரிந்து கொள்வதுதான் எப்போது? அது இன்னும் பல தலைமுறைகள், புதிய புதிய அறிவாளிகள் படித்துப் படித்துத் தெளிந்து பதில் சொல்ல வேண்டிய கேள்வி. பார்க்கலாம். என்றாவது ஒரு நாள் மகாகவி பற்றிய ஆய்வு நிறைவு பெற்றதா என்று தெரிந்து கொள்ளலாம்.

நாமெல்லாம் இப்பூவுலகின் பிரளயகால அழிவைப் பார்க்கப்போகிறோமா. அல்லது இன்னும் பல நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டுமா? தெரியவில்லை. ஆயினும் அந்த பிரளய கால தோற்றத்தைப் பாஞ்சாலி செய்த சபதத்தின் முடிவில் இப்பூவுலகம் கண்டதாக மகாகவி கூறும் சொற்கள் இதோ. 'ஓம் ஓம்' என்று உரைத்தனர் தேவர். வானம் உறுமிற்று - அதுவும் 'ஓம் ஓம்' என்றுதான் உறுமிற்று. பூமி அதிர்ச்சி உண்டாச்சு, விண்ணைப் பூழிப் படுத்தியது சுழற் காற்று. பிரளய காலம். மறுபடி அழிவு, மறுபடி உதயம், பிரபஞ்சத்தின் தடைபடாத சக்தி விளையாட்டை மகாகவி மிகச் சுலபமாக நமக்கு உருவகப் படுத்திக் காட்டிவிட்டார்.

மகாகவியின் சொற்சித்திரங்களை, சொல் பிரயோகங்களை நாளெல்லாம் வியந்து பாராட்டிக் கொண்டே இருக்கலாம். வருங்கால தலைமுறையினர் அந்த ஆய்வை மேற்கொள்ளட்டும். மேன்மேலும் புதிய கண்டுபிடிப்புக்களை வெளிஉலகுக்குக் கொண்டு வரட்டும். வாழ்க மகாகவியின் புகழ்!

Jatayu - mystical bird, king of vultures



Jatayu, the king of vultures, was not a ordinary bird, but a religious mystical bird, like a sage, fully acquainted with the rules of dharma.

Vinita, the wife of the sage Kashyap had 2 sons, Garuda and Arun. Garuda became the vehicle of Lord Vishnu, while Arun became the charioteer of Surya (the sun God). Arun had 2 sons- Sampati and Jatayu.

Once in their childhood, Sampati and Jatayu decided to reach to the sun. So they began to fly higher and higher. But very soon, Jatayu seemed to have lost his tolerance to the heat of the sun. Hence to save him, his elder brother Sampati spread his wings over the younger Jatayu. He did save his younger brother but got his own wings burnt by the heat and he fell at the seashore. Later Jatayu came to stay in Panchavati. Later on king Dasharatha came to the forests for hunting, where he met and made friends with Jatayu.

When Ravana, after abducting Sita, was on his way to Lanka on his Pushpak vimana, he encountered Jatayu. Jatayu fought a fierce battle with Ravana and smashed his aerial cart. But Ravana cut his wings and he fell on the ground.

On their way to find Sita, Rama meets Jatayu for the first time though Jatayu had known Rama from earlier times. Jatayu was then breathing his last. He said : "O Lord, the demon king Ravana has forcibly taken Sita towards the south. I have been holding my breath to have a sight of you. Now, I desire to breath my last, so kindly allow me to leave now". Shri Rama performed Jatayu's last rites and respectfully cremated his body and then offered libations for him. It was indeed a high fortune for Jatayu, that Lord Rama who could not perform his father's last rites came to perform the last rites of Jatayu.




"Markandeya said, 'That heroic king of the vultures, Jatayu, having Sampati for his uterine brother and Aruna himself for his father, was a friend of Dasaratha. And beholding his daughter-in-law Sita on the lap of Ravana, that ranger of the skies rushed in wrath against the king of the Rakshasas.

And the vulture addressed Ravana, saying, 'Leave the princess of Mithila, leave her I say! How canst thou, O Rakshasa, ravish her when I am alive? If thou dost not release my daughter-in-law, thou shalt not escape from me with life!' And having said these words Jatayu began to tear the king of the Rakshasas with his talons.

And he mangled him in a hundred different parts of his body by striking him with his wings and beaks. And blood began to flow as copiously from Ravana's body as water from a mountain spring. And attacked thus by that vulture desirous of Rama's good, Ravana, taking up a sword, cut off the two wings of that bird. And having slain that king of the vultures, huge as a mountain-peak shooting forth above the clouds, the Rakshasa rose high in the air with Sita on his lap.

And the princess of Videha, wherever she saw an asylum of ascetics, a lake, a river, or a tank, threw down an ornament of hers. And beholding on the top of a mountain five foremost of monkeys, that intelligent lady threw down amongst them a broad piece of her costly attire. And that beautiful and yellow piece of cloth fell, fluttering through the air, amongst those five foremost of monkeys like lightning from the clouds.

And that Rakshasa soon passed a great way through the firmament like a bird through the air. And soon the Rakshasa beheld his delightful and charming city of many gates, surrounded on all sides by high walls and built by Viswakrit himself. And the king of the Rakshasa then entered his own city known by the name of Lanka, accompanied by Sita.' "And while Sita was being carried away, the intelligent Rama, having slain the great deer, retraced his steps and saw his brother Lakshmana (on the way).

And beholding his brother, Rama reproved him, saying, 'How couldst thou come hither, leaving the princess of Videha in a forest that is haunted by the Rakshasa?' And reflecting on his own enticement to a great distance by that Rakshasa in the guise of a deer and on the arrival of his brother (leaving Sita alone in the asylum), Rama was filled with agony. And quickly advancing towards Lakshmana while reproving him still, Rama asked him, 'O Lakshmana, is the princess of Videha still alive? I fear she is no more!' Then Lakshmana told him everything about what Sita had said, especially that unbecoming language of hers subsequently.

With a burning heart Rama then ran towards the asylum. And on the way he beheld a vulture huge as a mountain, lying in agonies of death. And suspecting him to be a Rakshasa, the descendant of the Kakutstha race, along with Lakshmana rushed towards him, drawing with great force his bow to a circle. The mighty vulture, however, addressing them both, said, 'Blessed be ye, I am the king of the vultures, and friend of Dasaratha!' Hearing these words of his, both Rama and his brother put aside their excellent bow and said, 'Who is this one that speaketh the name of our father in these woods?' And then they saw that creature to be a bird destitute of two wings, and that bird then told them of his own overthrow at the hands of Ravana for the sake of Sita. Then Rama enquired of the vulture as to the way Ravana had taken. The vulture answered him by a nod of his head and then breathed his last. And having understood from the sign the vulture had made that Ravana had gone towards the south, Rama reverencing his father's friend, caused his funeral obsequies to be duly performed.
Jatayu - mystical bird, king of vultures

Jatayu, the king of vultures, was not a ordinary bird, but a religious mystical bird, like a sage, fully acquainted with the rules of dharma.

Vinita, the wife of the sage Kashyap had 2 sons, Garuda and Arun. Garuda became the vehicle of Lord Vishnu, while Arun became the charioteer of Surya (the sun God). Arun had 2 sons- Sampati and Jatayu.

Once in their childhood, Sampati and Jatayu decided to reach to the sun. So they began to fly higher and higher. But very soon, Jatayu seemed to have lost his tolerance to the heat of the sun. Hence to save him, his elder brother Sampati spread his wings over the younger Jatayu. He did save his younger brother but got his own wings burnt by the heat and he fell at the seashore. Later Jatayu came to stay in Panchavati. Later on king Dasharatha came to the forests for hunting, where he met and made friends with Jatayu.

When Ravana, after abducting Sita, was on his way to Lanka on his Pushpak vimana, he encountered Jatayu. Jatayu fought a fierce battle with Ravana and smashed his aerial cart. But Ravana cut his wings and he fell on the ground.

On their way to find Sita, Rama meets Jatayu for the first time though Jatayu had known Rama from earlier times. Jatayu was then breathing his last. He said : "O Lord, the demon king Ravana has forcibly taken Sita towards the south. I have been holding my breath to have a sight of you. Now, I desire to breath my last, so kindly allow me to leave now". Shri Rama performed Jatayu's last rites and respectfully cremated his body and then offered libations for him. It was indeed a high fortune for Jatayu, that Lord Rama who could not perform his father's last rites came to perform the last rites of Jatayu.