Search This Blog

Tuesday, May 24, 2016

ஔவையார்



ஒளவையின் வாழ்க்கை வரலாற்றினை நோக்குங்கல், அவர் 12ம் நூற்றாண்டுக்கு முன்னர் தமிழகத்தில் வாழ்ந்தவர் என்று அறியப்படுகிறது. இவர் தந்தையார் பகவன் எனவும் தாய் ஆதி எனவும், அவர்களுக்கு ஏழாவது குழந்தையாக ஒளவை பாணரகத்தில் அவதரித்ததாகவும் ஒரு குறிப்பு கானப்படுகிறது.
ஆயினும் இவரின் படைப்புகளின் காலக்கட்டங்களை இன்ன பிற புலவர்களின் காலக்கட்டங்களோடு ஒப்பிட்டு நோக்குங்கால், ஒள‌வை பிராட்டியார் காலத்தை வென்று வாழ்ந்தவர் என்று கணிக்க முடிகிறது. இக்கூற்றுக்கு வலு சேர்க்கும் விதமாக அரசன் அதியமான் நெடுமான் அஞ்சி ஒள‌வைக்கு ஈந்த மரணத்தை வெல்லும் வல்லமை படைத்த அற்புத நெல்லிக்கனி கதையும் கூறப்படுகின்றது.
இத்தமிழ் மூதாட்டியின் பெயர் சிறப்பினை நோக்குங்கால், அகர வரிசையில் பதினோராம் எழுத்தாகிய "ஔ" எனும் எழுத்தில துவங்கும் ஒளவை என்ற பெயர் அவ்வா என்ற சொல்லின் திரிபாக கருதப்படுகிறது. அதன் பொருள் மூதாட்டி அல்லது தவப்பெண் என்பதாகும் என்று பழந்தமிழ் அகராதி பகர்கிறது. அத்துடன் பிந்தையகாலத்தில் ஒளவை எனும் சொல், வயது அல்லது அறிவாற்றல் ஆகியவற்றில் முதிர்ச்சி பெற்றவர்க்கு வழங்கப்படும் குறியீடாகவும் அமைந்துள்ளது. இதிலிருந்தே பெரும் சிறப்பு வாய்ந்த தமிழ்ப்புலவி இவர் என்பது வெள்ளிடைமலை.
சிரஞ்சீவியாக வாழ்ந்தவர் ஒளவை என்று எண்ணப்பட்டாலும், வரலாற்று ஆசிரியர்களின் கூற்றின்படி மூன்று பெண்புலவர்கள் 12ம் நூற்றாண்டுக்கு முன் ஒள‌வை எனும் பெயருடனும் ஒருமித்த குணாதிசயங்களோடும், புலமையோடும் வெவ்வேறு காலக்கட்டங்களில் தமிழகத்தில் வாழ்ந்தனர், கவி பாடிச் சென்றுள்ளனர் என்றும் தெரிவிக்கின்றனர்.
மேற்குறிப்பிட்ட வரலாற்று ஆசிரியர்களின் கூற்றுப்படி முதலாம் ஒள‌வை கடைச்சங்க காலத்தில் வள்ளுவர், நக்கீரர் போன்றோரின் காலக்கட்டத்தில் வாழந்ததாகவும், இரண்டாம் ஒள‌வை பக்தி இலக்கியப் புலவர்களாகிய சுந்தரமூர்த்தி நாயனார், சேரமான் பெருமாள் நாயனார் ஆகியோர் காலத்திலும் மூன்றாமவர் கம்பர், புகழேந்தி, செயங்கொண்டார், சேக்கிழார், ஒட்டக்கூத்தர் போன்றோர் வாழ்ந்த காலத்திலும் வாழ்ந்தார் என்றும் சான்று பகர்கின்றனர்.இவையன்றி 14ஆம் நூற்றாண்டிலிருந்து 18ஆம் நூற்றாண்டுக்கு மத்தியிலான காலக்கட்டத்தில் மேலும் இரண்டு ஔவைகள் வாழ்ந்தனர் என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். ஓர் ஒளவை 14ஆம் அல்லது 15ஆம் நூற்றாண்டிலும் அடுத்தவர் 18ஆம் நூற்றாண்டிலும் வாழ்ந்ததாகவும் கூறப்படுகிறது. எனினும் இந்த இரு ஒளவைகளின் வாழ்க்கைக் குறிப்புக்கள் முழுமையாகக் பெறப்படவில்லை.
ஔவையின் தோற்றப்பொலிவுப் பற்றி விவரிக்கையில் அறியப்படும் தகவல்கள் யாதெனில் ஔவை என்பவர் ஒரு விறலி (அதாவது ஒரு பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவள் விறலி என்று அழைக்கப்படுபவராவார்). இவர் மடப்பத்தன்மை பொருந்திய மடவரல். இவர் மைதீட்டிய கண்களும் வாட்டமான நெற்றியும் அமைந்தவராக அறியப்படுகிறார். மேலும் எடுப்பான இலுப்பில் அழகிய அணிகலன்களையும் அணிந்திருந்தார் என அறியப்படுகிறார்.
மனித வாழ்வுக்கேற்ற மகத்தான தத்துவங்களை வாரி வழங்கிய அவ்வையின் பொதுச் சிறப்பியல்புகள் என சில விசயங்கள் கூறப்படுவதுண்டு. அவையாவன ஒளவையானவர் பிறவியிலேயே தமிழறிவுடன் பிறந்தவர், பெற்றோரிடத்தில் வளராதவர், பாணரகத்தில் வளர்ந்தவர்,சிவபரத்துவம் தெளிந்தவர், வரகவித்துவம் வாய்க்கப்பெற்றவர்.இலௌகிகம்,வைதிகம் இரண்டும் தெரிந்தவர். உள்ளம்,உண்மை,மொழி ஆகியவற்றில் உயர்ந்தவர். அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்கும் புரிந்தவர். தமிழ் நாடு முழுதும் திரிந்தவர்.கோவலூரிலும் புல்வேளுரிலும் வெகுநாட்கள் வாழ்ந்தவர். பலரை பற்றி கவிபாடிப் பரிசு பெற்றவர். சிறியோராயினும், வறியோராயினும் தமக்கு பரிசு ஈந்தவரை பெரியோராய் மதித்துப் பாடியவர். பரிசு கொடுத்தாலும் பாட்டுக் கேட்டலிலும் பாராமுகம் காட்டியவரையும், பாடலருமை அறியா மூடரையும் வெறுத்துப் பாடிய‌வர். மேற்கூறிய சிறப்பியல்புகள் அனைத்து ஔவைகளிலும் ஒருமித்து இருந்ததாகக் கூறப்படுகிறது


தமிழ் பாட்டி ஔவையார் - குறிப்புகள்

தமிழ்மொழியிலேயே முதன்முதலில் தோன்றிய நூலாக "அகத்தியம்" என்னும் நூலைச் சொல்வார்கள். அகத்தியரால் இயற்றப்பட்டு விநாயகரால் எழுதப்பட்ட நூல் என்று அருணகிரிநாதரால் திருப்புகழில் குறிப்பிடப்படுவது இந்நூல்தான். ஆனால் தற்சமயம் நம்மிடம் வழங்கும் தமிழ்நூல்களிலேயே மிகப்பழமையான நூல் தொல்காப்பியம். ஆகையால் இன்று நம்மிடம் இருக்கும் தமிழ்நூல்களில் காலத்தால் முதன்மையான நூல் தொல்காப்பியம். தமிழின் சிறப்புவாய்ந்த நூல்களில் திருக்குறþளே முதன்மை வகிக்கிறது. ஆனால் அனைத்து நூல்களுக்கும் இல்லாததொரு விசேஷ சிறப்பு ஒளவையின் நூலான "ஆத்திசூடி"க்கு உண்டு.

ஆத்திசூடிதான் எழுதப்படிக்க ஆரம்பிக்கும்போதே தமிழில் கற்கப்படும் முதல் நூல். தாய்ப்பாலுடன் தமிழ்ப்பால் கலந்து ஊட்டப்படுவது ஆத்திசூடிதான்.

தமிழ்ப்பாட்டி
"தமிழ்த்தாத்தா" என்று நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் பிறந்த உ.வே.சாமிநாதய்யரை அழைக்கிறோம். ஆனால் "தமிழ்ப்பாட்டி" என்று அழைக்கப்படுகின்ற பெருமையைப் பெற்ற ஒளவையோ ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னரேயே தோன்றிவிட்டாள்.

வரலாறு
ஒளவையின் வரலாறு, காலம் ஆகியவை இன்னும் சரியாக வரையறுக்கப்படவில்லை. ஒளவையின் பெயரால் பல பாடல்களும், சில நூல்களும், சில கதைகளும் நிலவிவருகின்றன. அவற்றை வைத்துப்பார்க்கும்போது சுமார் ஆயிரத்தைன்னூறு ஆண்டுக் கால கட்டத்திற்குள் குறைந்தது மூன்று ஒளவையார்களாவது இருந்ததாகத் தோன்றும். அனைத்துக் கதைகளும் இணைக்கப்பட்டு, கதம்பமாக ஒரு வரலாறு பின்னப்பட்டு, அதுவே ஒளவையாரின் வாழ்க்கைச் சரிதமாக, செவிவழி மரபாகக் கூறப்பட்டு வருகிறது.

அவர் ஆதி பகவன் ஆகிய இருவருக்குப்பிறந்து, பிறந்தவுடனேயே பெற்றோராலால் கைவிடப்பட்டு, பாணர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு, வளர்க்கப்பட்டதாக அவ்வரலாறு கூறும். அவர் கன்னிப்பருவத்திலேயே முதுமையையும் துறவறத்தையும் விநாயகபெருமானின் பேரருளால் பெற்றதாகவும் அது கூறும். அதிகமானிடம் நெருங்கிய நட்பு பூண்டு, அவரால் ஆதரிக்கப்பட்டு, அவரிடமிருந்து கருநெல்லிக்கனி ஒன்றைப்பெற்று, உண்டு, அதன்மூலம் அழியாத உடலையும் நீண்ட ஆயுளையும் பெற்றார்; அதிகனுக்காக தொண்டைமானிடம் தூது சென்றார்; தமிழகம் முழுமையையும் நடையிலேயே வலம் வந்திருக்கிறார்; பல மன்னர்களுக்கு ஆலோசனைகளும் புத்திமதியும் சொல்லியிருக்கிறார்; மிக்க மன உரம் மிக்கவர்; அஞ்சாமை, வைராக்கியம், ஈரம், இரக்கம், சொல்வன்மை, இறைவனின் திருவருள், அற்புத ஆற்றல்கள், சித்திகள் முதலியவை படைத்தவர்; எளிமையின் சின்னம்; ஏழையின் தோழி; பொன்னுக்கும் புகழுக்கும் பெரும்பான்மையான புலவர்கள் பாடி வரும்போது கூழுக்கும் பாடியவர்.

காதலில் தோல்வியடைந்த பேயொன்றைத் தன் ஆற்றலால் மீண்டும் "தமிழறியும் பெருமாள்" என்ற பெயரோடு பெரும்பண்டிதையாகப் பிறக்கச்செய்து, அந்தப்பிறவியில், இழந்த காதலை மீண்டும் பெறச்செய்தார். கம்பர், ஒட்டக்கூத்தர் ஆகியோருடன் போட்டியிட்டார். சங்கப்புலவர்களால் முதலில் புறக்கணிக்கப்பட்ட திருக்குறளுக்காக, சங்கப்புலவர்களை மீண்டும் கூட்டி, பொற்றாமரைத் திருக்குளத்தில் சங்கப்பலகையைத் தோன்றச்செய்து, அதன்மீது திருக்குறள் சுவடியை வைத்து, தாங்கச்செய்து, குறளின் சிறப்பை உணர்வித்து, அரங்கேற்றம் பெற உதவினார். பாரி வள்ளலின் இறப்புக்குப்பின்னர், அவரின் உயிர்த்தோழர் கபிலரின் மறைவுக்குப் பிறகு, பாரிமகளிரை திருக்கோவலூர் மலையமான் திருமுடிக்காரி மன்னனுக்கு மணமுடித்து வைத்தார்.

சுந்தரமூர்த்தி நயனாரும் சேரமான் பெருமாள் நாயனாரும் முறையே யானை , குதிரை மீதேறிக்கொண்டு திருக்கயிலைக்குச் செல்லும்போது, விநாயகர் பூஜையைச்செய்து, விநாயகர் அகவலைபாடி, விநாயகப்பெருமானின் ஆற்றலால் அவர்களுக்கு முன்னரேயே உடலுடன் திருக்கயிலையை அடைந்தார். இவையெல்லாம் அந்த மரபுவழிக்கதைகளாலும் பாடல்களாலும் அறியப்படுபவை.

வரலாற்று ஆய்வு
ஆராய்ந்து பார்க்குமிடத்து மூன்று ஒளவையார்களாவது இருப்பது தெரியும்:

சங்க காலத்தில் உள்ள ஒளவையே பாணர் குலத்தில் உதித்த விறலி. பேரழகியாக விளங்கி, பெரும்புலமையுடனும் தைரியத்துடனும் விளங்கியவர்; இவர்தான் கபிலர், பரணர், பாரி, அதிகமான் ஆகியோர் காலத்தில் வாழ்ந்தவர்; அதிகமானுக்காக தூது சென்றவரும் இவர்தான். அதிகமான் தந்த கருநெல்லிக்கனியை உண்டு, நீண்ட காலம் உயிருடன் இருந்தவர்; பாரிமகளிருக்கு மணமுடித்து வைத்தவரும் இவர்தான். இவருடைய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களில் காணப்படுகின்றன.

சில நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சங்ககாலம் முடிவடைந்தது. நீண்ட காலம் உயிருடன் இருக்கும் காயசித்தி ஆற்றலைக் கருநெல்லியின் மூலம் பெற்ற ஒளவை, பின்னர், சங்கம் மருவிய காலத்தில், திருக்குறளை அரங்கேற்றம் செய்ய உதவியிருக்கலாம். இன்னும் சில நூற்றாண்டுகளுக்குப் பின்னர், யோகசாத்திரங்களில் கரை கண்டவராக ஒளவையார் காணப்படுகிறார். அப்போது இவர் விநாயக உபாசனையையும் செய்து வந்திருக்கிறார். விநாயக உபாசனை, குண்டலினி யோகம் ஆகியவற்றைத் தமிழகத்தில் பிரபலப்படுத்துவதில் இவர் பெரும்பங்கு ஆற்றியிருக்கிறார். "ஒளவை குறள்" என்னும் சித்தர் நூலை எழுதியவரும் இவராக இருக்கலாம். சாகாக்கலையைப் பற்றி அந்நூலில் இவர் கூறியுள்ளார். எட்டாம் நூற்றாண்டில், சுந்தரமூர்த்தி நாயனார் காலத்தில் "விநாயகர் அகவலை"ப் பாடியவுடன் விநாயகரின் பேரருளால் தன் உடலுடன் திருக்கயிலையை அடைவதுடன் இந்த ஒளவையாரின் வரலாறு பூர்த்தியாகும்.

கம்பர், ஒட்டக்கூத்தர் காலத்தில் வாழ்ந்த இன்னொரு ஒளவையார், பல தனிப்பாடல்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்.

அதன்பின், சில நூற்றாண்டுகளுக்குப்பிறகு, வேறொரு ஒளவையார் இருந்திருக்கிறார்.

இவரோ அல்லது கம்பர் காலத்து ஒளவையாரோதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன் ஆகிய நூல்களை இயற்றியவர். ஆனால் இவர்களில் கடைசி ஒளவையார்தான் மூதுரையையும் நல்வழியையும் ஆக்கியுள்ளார்.

நூல்களின் சிறப்பு
மிகப்பெரிய பெரிய நீதிநூல்கள் பலவற்றுள் காணப்படும் விஷயங்களின் சாரமாக அமைந்துள்ள அனைத்து நீதிகளையும் நீதிக்கருத்துக்களையும் "ஆத்திசூடி", கொன்றைவேந்தன்" ஆகிய நூல்களில் எளிய சொற்களால் அமைந்த, சிறிய வாக்கியங்களில் காணலாம். இளஞ்சிறார்கள் மிக எளிதாய்ப்படித்து, புரிந்து, மனனம் செய்துகொள்ளும்படி அமைந்தவை அவை. அத்தனை இளவயதில் மனனம் செய்யப்பட்டு விட்டதால், பசுமரத்தாணி போல் அவை மனதில் பதிந்துவிடுகின்றன. அவற்றைப் படித்த மனிதனின் அல்லது சொல்லக்கேட்ட மனிதனின் ஆழ்மனதின் மிக ஆழத்தில் பதிந்து விடுவதால் அந்த மனிதனின் சிந்தனை, செயல் யாவற்றிலும் அவை பிரதிபலிக்கும். சுருங்கச்சொன்னால், அந்த மனிதனின் மனச்சாட்சியை இந்த நீதி வாக்கியங்கள் உருவாக்கி, நிலை பெறவும் செய்கின்றன.

சமுதாயத்தின் எந்த மட்டத்தில் இருப்போரும் இவற்றையெல்லாம் நீதிகளாகக் கற்று, கேட்டு வந்த காலங்களில், தமிழ் சமுதாயத்தினிடத்தில் குற்றச்செயல்களின் விகிதம் இன்றை விட குறைவாகவே இருந்திருக்கின்றது.

"பதஞ்சலி யோகசூத்திர"த்தைப் போன்ற சூத்திரங்களின் வடிவில் இந்நூல்கள் அமைக்கப்பெற்றிருக்கின்றன.

இவற்றில் "ஆத்திசூடி" மிகச்சிறிய வாக்கியங்களாலும் "கொன்றைவேந்தன்" சற்றுப்பெரிய வாக்கியங்களாலும் ஆகியவை. "இன்னதைச்செய்" அல்லது "இன்னதைச் செய்யாதே", "இப்படிச்செய்தால் நல்லது", "இப்படியெல்லாம் செய்தால் தீமை" என்ற பாங்கில் அவை அமைந்திருக்கும்.

"ஆத்திசூடி" என்ற பெயர் "ஆத்திமாலையை அணிந்திருப்பவன்" என்ற பொருளைத் தரும். இந்த இடத்தில் இது விநாயகரைக் குறிக்கிறது.

"கொன்றைவேந்தன்" - சிவன்; அவனுடைய "செல்வன்" - விநாயகன். இந்த இரு பெயர்களுமே முறையே அந்த நூல்களின் கடவுள் வாழ்த்தின் முதல் இரு சொற்களாக அமைந்தவை.

ஆக, இரு நூல்களுமே தம்முள் கடவுள்வாழ்த்துப் பெற்ற கடவுள் நாயகனுடைய பெயரைத் தாங்கியே, காலத்தை வென்று நிற்கின்றன.

"மூதுரை" என்னும் நூல் வெண்பாக்களால் ஆகியது. இது நீதிகளைக்கூறுவதோடு அல்லாமல், உலக உண்மைகளையும், நடப்புகளையும், யதார்த்தங்களையும், விளக்குகின்றது. ஒவ்வொரு கருத்துக்கும் உவமை கூறும் நயம் படைத்தது. முப்பது வெண்பாக்கள் உடையது இந்நூல்.

"நல்வழி" என்னும் நூலும் வெண்பாக்களினால் ஆனதுதான். இதில் உலகியல் வாழ்வின் உண்மையையும், ஊழின் வலியையும், இறை நம்பிக்கையையும் வலியுறுத்துகிறார் ஒளவையார். நாற்பது பாடல்கள் கொண்டது இன்னூல்.

இவையே தமிழ்மொழியின் தலையாய நீதிநூல்கள்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் உள்ள சங்கத்தார் கோயிலில், தமிழ்ச்
சங்கத்தின் தலைவர் "இறையனார்" என்னும் "திரிபுரம் எரித்த
விரிசடைக்கடவுளின்" பக்கத்திலேயே அமர்ந்திருக்கும் பெருமையை
ஒளவையார் பெற்றிருக்கிறார்.

Monday, May 23, 2016

Phytotherapy (herbal treatments)


Herbs have been used as drugs since ages, their medicinal powers were discovered either by experimenting or by chance. Now the medical agents in the herbs are used either directly or after some processing stages. There are also some synthetic and semi-synthetic medicines based on herbs (which currently constitute 95 % of all medicines on the market). Whatever the medicine is, either herbal or chemical, it is always better to choose the natural ones, to be careful and not to use any medicines unless that is really needed. The reason is that most medicines are in fact poisons but, when used in proper doses and in proper circumstances, they exhibit meditional qualities.

As far as the way a medicine acts and its side effects, natural (herbal) ones are always the best because those synthetic and semi-synthetic contain chemical substances that result in the liver over heating and make the liver tired. Live is one of the biggest organs in the body and, according to its functions, it can be considered one of the most important organs.

All medicines that we take, all chemicals that we breathe in with the air or preservatives in the food are subjected to metabolism in the liver and after a series of chemical processes in the liver are thrown away from the body either through the kidneys or via other ways (breathing, bile, skin, etc.). As a result, most chemicals are harmful to the liver, kidneys and other organs.

The most essential function of the liver is to provide energy to our everyday activities (both physical and mental). But the liver gets tired because of the medicines we use, chemicals in the food and in the air, etc. and cannot properly perform its functions. Also, because of the effect of those chemicals, toxic elements (free radicals) are formed in other cells of the body. As a result, one develops acute illnesses, like tiredness, stress, anger, headache as well as chronical, like early ageing, skin paleness, sluggishness, baldness.

Here we are going to explain how all kinds of our daily activities (taking herbal and chemical drugs, nutrition, using of cosmetics, lifestyle) affect our body and, as a result, our physical, emotional and spiritual being. We will explain how we can cure illnesses and improve our health most naturally without using any chemicals, just with the help of phytotherapy, natural nutrition and other natural methods.
How to prepare herbal teas: http://www.sahajayogaportal.org/…/fytother…/herbal-teas.html

இயக்குனர் ராமுடைய படைப்புலகம் ஏற்கவும் முடியாத, நிராகரிக்கவும் முடியாத குழப்பங்கள்.

ஆர்வக்கோளாறான ஒரு சிறுவன் திடீரென்று பிரமாதமாக கவிதை எழுதிவிடுவது இல்லையா? அப்படி எழுதி எழுதியே அவன் கவிஞனும் ஆவதில்லையா? அப்படி கவிஞன் ஆகிவிட்ட பிறகும் அவ்வப்போது அவன் ‘ஆர்வக் கோளாறு’ எட்டிப் பார்க்கும் இல்லையா? அப்படிப்பட்ட ஆர்வக் கோளாறு உடைய ஒருவர் தான் இயக்குனர் ராம் என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.
அதற்கு உதாரணம்: அவருடைய தங்கமீன்கள் புகழ் வசனம். மகள்களைப் பெற்ற அப்பன்களுக்கே தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று. (தங்கமீன்கள் என் நெஞ்சுக்கு மிக நெருக்கமான படம் என்பது வேறு விஷயம்) முத்தத்துக்கும் காமத்துக்கும் என்ன சம்மந்தம்? மனைவியையுமே கூட ஒரு ஆண் எப்போதுமே காமத்தோடு மட்டுமே தான் முத்தமிடுவானா? ஆண் அவ்வளவு மிருகமா? குழந்தைக்குக் கொடுக்கிற முத்தத்தைப் பற்றிப் பேசும் போது ‘காமம்’ ஏன் நியாபகத்துக்கு வருகிறது?
அதே போல் இப்போது தரமணி விளம்பரத்துக்கு நிறைய cute-ஆன one-liners வெளியிட்டிருக்கிறார் ராம். அதில் ஒன்று: ‘அடங்க மறுக்கிற ஒரு நேர்மையான அரேபிய குதிரையின் கதை’. குபீரென்று சிரிப்பு வருகிறது இல்லையா? This is sheer ஆர்வக் கோளாறு. எதுகை மோனையாக பேசினால் எடுப்பாக இருக்கும் என்பதற்காக என்ன வேண்டுமானால் பேசுவதா?
இப்படி அவர் பண்ணுகிற ஆர்வக்கோளாறான lobby, இணையத்தில் அவருக்கு அதீத வெறுப்பை உண்டு பண்ணியிருக்கிறது. எப்பொழுதுமே எதையுமே வித்தியாசமாக விமர்சிக்கத் துடிக்கும் ஒரு கூட்டம் எதற்கு வெறுக்கிறோம் என்று கூட தெளிவில்லாமல் இயக்குனர் ராமின் மீது வெறுப்பைக் கக்கி வருகிறர். இவற்றை எல்லாம் தாண்டி அணுகப் பட வேண்டிய படங்களை எடுத்தவர் இயக்குனர் ராம் என்பதில் சந்தேகமேயில்லை.
முழுதாக ஏற்கவும் முடியாத, முற்றிலும் நிராகரிக்கவும் முடியாத குழப்பங்கள் கொண்டதாக இருக்கிறது இயக்குனர் ராமுடைய படைப்புலகம். ‘Touch me here if you dare’ என்ற டீஷிர்ட் போட்டிருக்கிற பெண்ணை, ‘I dare’ என்று போய் தொட்டுவிடுகிற காட்சி, ஒரு உதாரணம். ‘இப்படிப்பட்ட வாசகங்கள் தாங்கிய ஆடைகளை உடுத்தவே கூடாதா?’ அல்லது ‘இவற்றை போன்ற வாசகங்கள் தான் பாலியல் குற்றங்களுக்கு incitement என்று தீர்ப்பு எழுதிவிடுவதா?’ என்பது முடிவுக்கே வர முடியாத ஒரு விவாதம்.
இந்த குழப்பம் தான் ராமின் படங்கள். ராமைப் போலவே நமக்கும் ‘உலகமயமாக்கல்’ உவப்பானது இல்லை தான்; ஆனால் அது தருகிற எல்லா சௌகரியங்களையும் அனுபவித்துவிட்டு, அதிலிருந்து எங்குதான் தப்பித்து ஓட முடியும்? அதற்காக ராமை ‘வெறும் அதிர்ச்சி மதிப்பீட்டிற்காக, eccentricity-யை வலிந்துத் திணிக்கும், after all - இன்னொரு பாலா’ என்றும் ஒதுக்கி விட முடியாது.
‘திரைமொழியின் லாகவம் கைவந்த ஒரு தேர்ந்த படைப்பாளி’ மற்றும் ‘அரசியல் விவாதங்களைத் தன் படைப்புகள் மூலம் தொடர்ந்து எழுப்பி வருகிறவர்’ ஆகிய இரண்டு முக்கியமான விஷயங்கள் (மட்டுமே) இயக்குனர் ராமைக் காப்பாற்றி வருகின்றன; அவருடைய படங்களை ஸ்வாரஸ்யமாக்கி வருகின்றன.
விவாதங்களை எழுப்புவது என்பது இயக்குனர் ராமுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது. அதை அவர் ஒரு யுக்தியாகவே தொடர்ந்து செய்து வருகிறாரோ என்று கூட தோன்றுகிறது. தரமணி teaser பெரும் சர்ச்சையை உண்டு பண்ணியிருக்கிறது. ஜெயமோகன் தவிர அநேகமாக எல்லாரும் ஒரு round கருத்து சொல்லிவிட்டனர்.
தரமணி திரைப்படத்தின் teaser, அட்டகாசமான ஒரு புன்னகையை வரவழைக்கிறது. அந்த புன்னகையின் அர்த்தம், வெறும் ‘been there – done that’ மட்டுமல்ல; இந்த grey area-வையும் தொட ஆள் வந்து விட்டார்கள் என்ற சந்தோஷம்.
யோசிக்கிற பெண்’ எப்போதுமே ஒரு ஆணுக்கு பதற்றத்தைத் தருகிறாள். ஆதிக்கத்துக்கும் காதலுக்குமான மெல்லிய இடைவெளியைக் கையாளும் நேர்த்தி கைவராத ஒரு பதின்ம இளைஞனின் பதற்றத்தை ரசிக்காமல் இருக்கவே முடியவில்லை.
இது முழுமையான ஆணாதிக்கமோ, அல்லது வெறும் காதலின் அகச்சிக்கலோ அல்ல. இரண்டின் போர்வையிலும் இரண்டும் சிக்கியிருக்கும் ஸ்வாரஸ்யமான பிரச்சனை. இதை இதற்கு முன்னால் ஓரளவு தொட்ட படங்கள் ‘போடா போடி’ மற்றும் ‘மாலை நேரத்து மயக்கம்’.
ஓர் ஆணுக்கு, ஒரு பெண்ணுடன் காதலில் இருப்பது என்பது ‘வெறும் காதல் செய்யும் சந்தோஷம்’ மட்டுமல்ல; ஒரு பெண்ணைக் கவர்கிற, தன்னோடு ஊர் சுற்ற வைக்கிற துப்பு தனக்கு இருக்கிறது என்று அவன் போடுகிற அற்ப தம்பட்டம். To be in love is to flaunt. அவனுடைய அதிக பட்ச தேவையே ஒரு பெண் தான் என்கிற பட்சத்தில், அது தனக்குக் கிடைத்த பின், அதை இழப்பதற்கோ / பிறருடன் பங்கு போட்டுக் கொள்வதற்கான வாய்ப்பைக் கூட அவன் அனுமதிக்கத் தயாராக இல்லை.
தன் பெண் என்பவள் ‘தன் துணை’ மட்டுமல்ல; அவள் தன் செல்வாக்கு; அவள் தன் அதிகாரம்; தனது emolument. தனது மிகப் பெரிய கௌரவமான girlfriend-ஐ, ‘just friend’ ஆக கூட இன்னொரு ஆணுக்கு அவன் பங்கிட்டுக் கொள்ள தயாராக இல்லை. இதை அவன் ‘ஆணாக இருப்பதாலும்’ செய்கிறான். அவளைக் ‘காதலிப்பதாலும்’ செய்கிறான்.
காதலில் இருக்கிற ‘உடைமையுணர்வும்’, ‘தனதாக்கிக்கொள்ளும் தகிப்பும்’ அவனை எல்லா ஆதிக்கங்களையும் செய்ய வைக்கும். இது vice versa என பெண்களுக்கும் பொருந்தும். இதெல்லாம் இல்லா விட்டால் அப்புறம் என்ன ருசி? ஆனால், இதைக் கூட கடந்து வர முடியாத உறவுகள் நிலைப்பதில்லை; அல்லது அடுத்தக்கட்ட இன்பத்தை அனுபவிக்காமலேயே செத்துப் போய் விடுகிறார்கள்.
இதில் எது சரி, எது தவறு என்று தீர்வெல்லாம் சொல்ல முடியாது; சொல்லவும் தேவையில்லை. கண்ணை மூடினால் தோன்றும் எண்ணத்தை எப்படித் திருத்த முடியும்? பழம் நன்கு கனிந்த பின் கிளையிலிருந்து நழுவுவது போல, காதல் கனிய கனிய இந்த பதற்றம் நழுவி மனம் அமைதி கொள்ளும்.
தன் துணை, இன்னொருத்தருடன் சிரித்துப் பேசும் போது தனக்கு வலிக்கிறது இல்லையா? அந்த வலி – தன் காதலைத் தனக்கே உணர்த்தும் சாட்சி இல்லையா? அந்த வலியைத் தனக்குள்ளேயே ரசித்து விட்டு, ஒரு புன்னகையில் கடந்து விடும் பக்குவத்தையும், அதே காதல் கொடுக்கும்.
‘அதிகபட்சம் அந்த பையனுடன் நீ என்ன செய்துவிட முடியும்? கேவலம் செக்ஸ் தானே வைத்துக் கொள்ள முடியும்? நீ அவனுடன் செக்ஸ்-ஏ வைத்துக் கொண்டாலும், அது நீ என்னுடன் வைத்துக் கொள்ளும் செக்ஸ் போல், ஸ்பெஷல் ஆக இருக்காது’
இப்படி யோசிக்க முடிகிற உயர்வுக்கு ஒரு நாள் காதல் இட்டுச்சென்று விடும். அப்போது யார் ஆண் யார் பெண் என்பதெல்லாம் மறந்து போய் விடும்.
- சுந்தர் சீனிவாஸ்

Nanosized Materials Help Electronics Compute Like Real Brains



Small size and new material go into devices that mimic speed and efficiency of neurons
Although processors have gotten smaller and faster over time, few computers can compete with the speed and computing power of the human brain. And none comes close to the organ’s energy efficiency. So some engineers want to develop electronics that mimic how the brain computes to build more powerful and efficient devices.

A team at IBM Research, Zurich, now reports that nanosized devices made from phase-change materials can mimic how neurons fire to perform certain calculations (Nat. Nanotechnol. 2016, DOI:10.1038/nnano.2016.70).
This report “shows quite concretely that we can make simple but effective hardware mimics of neurons, which could be made really small and therefore have low operating powers,” says C. David Wright, an electrical engineer at the University of Exeter who wrote a commentary accompanying the new article.
The IBM team’s device imitates how an individual neuron integrates incoming signals from other neurons to determine when it should fire. These input signals change the electrical potential across the neuron’s membrane—some increase it, others decrease it. Once that potential passes a certain threshold, the neuron fires.
Previously, engineers have mimicked this process using combinations of capacitors and silicon transistors, which can be complex and difficult to scale down, Wright explains in his commentary.
In the new work, IBM’s Evangelos Eleftheriou and colleagues demonstrate a potentially simpler system that uses a phase-change material to play the part of a neuron’s membrane potential. The doped chalcogenide Ge2Sb2Te5, which has been tested in conventional memory devices, can exist in two phases: a glassy amorphous state and a crystalline one. Electrical pulses slowly convert the material from amorphous to crystalline, which, in turn, changes its conductance. At a certain level of phase change, the material’s conductance suddenly jumps, and the device fires like a neuron.
The IBM team tested a mushroom-shaped device consisting of a 100-nm-thick layer of the chalcogenide sandwiched between two electrodes. In one demonstration, they used the neuronlike device to detect correlations in 1,000 streams of binary data. Such a calculation could spot trends in social media chatter or even in stock market transactions, Wright says.
He also points out that the devices fire faster than actual neurons, on a nanosecond timescale compared with a millisecond one. The neuron mimics, Wright says, are another step toward hardware that can process information as the brain does but at speeds orders of magnitudes faster than the organ. “That could do some remarkable things.”
http://www.ooyuz.com/geturl?aid=11669372
http://www.scientificamerican.com/…/nanosized-materials-he…/
http://cen.acs.org/…/Phase-change-material-help-electronics…
Cecile G. Tamura

OHM SRI NAMACHIVAYA NAMAHA

இறைவனிடம்
வரங்கள் கேட்பார்,
இறைவனையே கேட்பார்,
பின்யாமே இறைவன் என்பார்
..

தேடுகின்றேன் திசை எட்டோடு இரண்டையும்,
நாடுகின்றேன் நலமே உடையான் அடி,
பாடுகின்றேன் பரமே துணையாம் என,
கூடுகின்றேன் குறையா மனத்தாலே.

Boney M - Rivers of Babylon - 1978


சனி பகவான் யாருக்கெல்லாம் துன்பம் தருவார்


சனி பகவான் யார் எல்லாம் மற்றவர்களுக்கு துன்பங்கள் செய்கிறார்களே அவர்களை தண்டிக்காமல் விடுவதில்லை.
1. நமச்சிவய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லை.
2. பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதை தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்ப்தில்லை.
3. காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி கருணையுடன் பார்ப்பார்.
4. கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி மிகவும் விரும்புவார். அவர்களை சோதித்தாலும் பாதிப்பதில்லை.
5. ஆச்சார சீலர்கள், அனுதினம் சிவபூஜை செய்பவர்களை சனி நேசிப்பார்.
6. ஸ்திரவாரம் எனும் சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.
7. எள்ளன்னம் வைத்து என்னாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.
8. வலம்புரி சங்குள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லை.
9. ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லை.
10. உலர்த்தாத துணியை உடுத்துபவர்களை கண்டால் சனிக்கு கொள்ளை பிரியம். உடனே பற்றிக் கொள்வார்.
11. ஈரம் சொட்ட சொட்ட வீட்டினுள் செல்பவர்களை பார்த்தால் சனிக்கு அவர்கள் மீது பாசம் அதிகம், உடனே அவர்களை பீடித்துக் கொள்வார்.
12. முதல்நாள் உடுத்திய துணியை மறுநாளும் பயன்படுத்துபவர்களை பாத்தால் சனி மிகவும் பிடிக்கும். எப்படியும் சனி பிடித்துக் கொள்வார்.
13. குளிக்காமல் அசுத்தமாக இருப்பவர்களை கண்டாலும், தலைசீவாமல் தலைவிரி கோலமாக இருப்பவர்களை கண்டாலும் சனிக்கு பிடிக்கும்.
14. விளக்கேற்றப்படாமல் இருள் சூழ்ந்த இடங்கள், எப்போதும் அமங்கல சொற்களை பேசுபவர்களை கண்டால் சனிக்கு மிகவும் பிடித்தமானவர்கள். தன் தீயபார்வையால் எப்படியும் திரும்பி பார்ப்பார்.
15. சுத்தம் இல்லாத இடத்தில் சூன்யம் குடியிருக்குமே தவிர, திருமகள் இருக்க மாட்டாள். ஆனால் சனிக்கு அவ்விடங்கள்தான் அதிகம் பிடிக்கும்.
16. மண்ணாசை, பெண்ணாசை, பொன்னாசை கொண்டு மற்றவரை வஞ்சித்து வாழ்பவரின் வாரிசுகளைகூட வாழவிடாமல் தண்டிக்க சனிக்கு பிடிக்கும்.
17. மாற்றான் மனையாளை பொண்டாள நினைக்கும் சண்டாளர்களை முதலில் ஊக்குவித்து, பின் அவமானப்படுத்திப் பார்ப்பதில் சனிக்கு நிகர் சனியே.
18. அன்றாடம் சுத்தம் செய்யாத வீட்டிலும், அனுதினம் அழுகுரல் கேட்கும் இல்லத்திலும் சனி நீங்காமல் நிரந்தரமாக இருப்பார்.
19. தாய்க்கு அடங்காத பெண்டீர், தகப்பனுக்கு அடங்காத தனயன், உடன்பிறந்தோரை வஞ்சிக்கும் துரோகி, இவர்களை சனி காலநேரம் பார்த்து தண்டிப்பார்.

பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்..!


* புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
* மலச்சிக்கலைப் போக்கும்.
* பித்தத்தைக் குறைக்கும் 
* அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
* கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.
அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.
ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.
பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.
கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.
பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.
தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.
பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.
1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.
2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.
4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.
5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.
6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.
7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.
8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.
9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்

Sunday, May 22, 2016

பிரபஞ்சம் தோன்றியவிதம்----சுவாமி விவேகானந்தர்



இந்து என்ற சொல்லில் எதைக்குறிப்பிடுகிறேனோ அதுவும் வேதாந்தம் என்ற சொல்லும் ஒன்றுதான்

கஸ்மின்னு பகவோ விஜ்ஞாதே ஸர்வ மிதம் விஜ்ஞாதம் பவதி (முண்டக உபநிடதம்1.1.3)எதை அறிந்தால் நாம் எல்லாவற்றையும் அறிய முடியும்? இந்த ஆராய்ச்யையே உபநிடதங்கள் தங்கள் ஒரே கருத்தாக கொண்டிருக்கின்றன.தற்கால மொழியில் சொல்வதானால்,பொருட்களின் ஓர் அறுதி ஒருமையேஉபநிடதங்களின் நோக்கம்
ஏறக்குறைய எல்லா அத்தியாயங்களுமே துவைத உபதேசமான உபாசனையில்தான் ஆரம்பிக்கிறது. இந்த பிரபஞ்சத்தை படைத்து,காத்து,இறுதியில் நம்முள்ளே ஒடுக்கிக்கொள்பவனே இறைவன் என்று முதலில் கற்பிக்கப்படுகிறது. புற அக இயற்கையை வழிநடத்துபவரும் ஆள்பவரும் அவரே,இயற்கைக்கு வெளியே இருப்பதுபோல் தோன்றுகிறார் எனவே அவரை வணங்கவேண்டும் என்று கற்பிக்கப்படுகிறது.
அடுத்தபடியில் அவர் இயற்கைக்கு வெளியில் இல்லை,ஆனால் அந்தர்யாமியாக,அதாவது நமக்குள்ளே ஊடுருவிக்கலந்திருக்கிறார் என்று அதே ஆசிரியர் போதிக்கிறார்,இறுதியில் அந்த இரண்டு கருத்தும் கைவிடப்பட்டு,உண்மையானவை எல்லாம் அவரே,வேறுபாடு என்பது இல்லை என்று போதிக்கப்படுகிறது. தத்துவமஸி ச்வேதகேதோ(சாந்தோக்கிய உபநிடதம் 6.8.7)ச்வேதகேது அதுவே நீ.அனைத்துள்ளும் அந்தர்யாமியாக இருக்கும் அந்த ஒரே பொருள்தான் மனித ஆன்மா. அதுவே நீ,என தெளிவுபடுத்தப்படுகிறது. இங்கு எதற்காகவும் விட்டுக்கொடுத்தல் இல்லை,பிறருடைய அபிப்ராயங்கள் பற்றி பயம் இல்லை,உண்மை தைரியமாக கூறப்படுகிறது.

பிரபஞ்சதோற்றம் பற்றிய கருத்து
---------------
வேதாந்த நெறிகள் அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பது ஒன்று பிரபஞ்சக்கருத்து இரண்டாவது பொதுவான மன இயல் உண்மை.வேறுபட்ட ஆற்றல்களுக்கிடையே ஒற்றுமை இருக்கிறது என்பதை ஏதோ சில காலத்திற்கு முன்புதான் விஞ்ஞானம் கண்டுபிடித்தது.வெப்பம்,காந்தம்,மின்சாரம் என்ற வேறுபட்ட ஆற்றல்கள் அனைத்தும் அடிப்படையில் ஒன்றே என்றும்,இவை அனைத்தையும் அந்த அடிப்படை சக்திகளாக மாற்ற முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.அந்த அடிப்படை சக்தியை எந்த பெயரில் வேண்டுமானாலும் அழைக்கலாம்,ஆனால் இந்தக் கருத்து நமது சம்ஹிதைகளிலேயே சொல்லப்பட்டுவிட்டது.இந்த உலகில் காணப்படும் ஈர்ப்பாற்றல்,விலக்கும் ஆற்றல்,மின்சாரம் உட்பட அனைத்தும் பிராணன் என்னும் அடிப்படை சக்தியிலிருந்தே பிறக்கின்றன

பிராணன் என்றால் என்ன?பிராணன் என்பது ஸ்பந்தனம்,அதிர்வு.(பிராணன் என்றால் மூச்சு அல்ல)இந்த பிரபஞ்சம் எல்லாம் ஒடுங்கி முன்பிருந்ததைப்போல் ஆகும் போது இந்த அளவற்ற ஆற்றல் என்ன ஆகிறது?அது அழிந்துவிடுகிறதென்றா நினைக்கிறீர்கள்?இல்லை,அழிவதில்லை.அவை அழிந்துவிட்டால் அடுத்த அலை எங்கிருந்து தோன்ற முடியும்?இயக்கம் என்பது அலைகளைப்போல் எழுவதும் விழுவதுமாக அல்லவா உள்ளது.
இனி இந்த பிரபஞ்சம் வெளிப்படுவதைக் குறிக்கின்ற சிருஷ்டி என்பதை கவனிக்கவேண்டும்.இதன் பொருள் கிரியேஷன் என்பதல்ல.இதற்கு இணையான ஆங்கில வார்த்தையில்லை,தோற்றத்திற்கு வருதல் என்று சொல்லலாம்.ஒரு கல்பத்தின் முடிவில் எல்லாம் நுண்மையாகி,மேலும் நுண்மையாகி சிருஷ்டிக்கு முன்பிருந்த நிலையை அடைகின்றன,மறுபடியும் வெளிப்பட தயாராக அந்த நிலையிலே அமைதியாக இருக்கின்றன.மீண்டும் அதிலிருந்து வெளிப்படுவதே சிருஷ்டி அல்லது தோற்றத்திற்கு வருதல்.அந்த அமைதிநிலையில் எல்லா ஆற்றல்களும் என்னவாகின்றன? அவைகள் பிராணனில் ஒடுங்கிவிடுகின்றன.இந்த பிராணன் ஏறக்கறைய இயக்கமற்றதாகிவிடுகிறது.முற்றிலுமாக இயக்கமற்று விடுவதில்லை.இதைத்தான் வேத ஸுக்தம்.ஆனீதவாதம்(ரிக்வேதம் 10.129முதல்322)அது அதிர்வுகளின்றி அதிர்ந்தது என்று கூறுகின்றன.
ஜடம் என்று நாம் அழைக்கின்ற பொருள் என்னவாகிறது?ஜடத்திலெல்லாம் சக்திகள் வியாபித்திருக்கின்றன என்பது உங்ளுக்கு தெரியும்..இந்த ஜடம் ஆகாசத்தில் ஒடுங்குகிறது.(ஆகாசம் என்பது வானம் அல்ல).ஆகாசத்தை ஈதர் என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கலாம்.ஆகாசமே ஜடத்தின் மூலநிலை.சக்தியின் மூலநிலை பிராணன் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.இந்த பிராணனின் இயக்கத்தால் ஆகாசம் அதிர்கிறது.அடுத்து சிருஷ்டி ஆரம்பிக்கும் போது இந்த அதிர்வு விரைவாகிறது.அப்போது ஆகாசம் அலையாகத் திரண்டடித்து,சூரியர்கள் சந்திரர்கள் என்றேல்லாம் நாம் அழைக்கின்ற இந்த உருவங்கள் ஆகின்றன.
யதிதம் கிஞ்ச ஜகத் ஸர்வம் ப்ராண ஏஜதி நி:ஸ்ருதம்..(கடோபநிடதம்2.3.2)இந்த பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் பிராணனின் அதிர்வால் தோற்றத்திற்கு வருகின்றன.

பிராணன் ஆகாசத்திற்குக் கொடுக்கும் அடிகளின் பலனாக வாயு அல்லது அதிர்வுகள் உண்டாகின்றன.இந்த அதிர்வுகளின் வேகத்தால் ஏற்படும் உராய்வினால் வெப்பம் அல்லது தேஜஸ் தோன்றுகிறது.இந்த வெப்பம் திரவமாகிறது,இதுவே அப்பு அல்லது நீர்,பின்னர் இந்த திரவம் திடன்கிறது.ஆகாசமும் அதிர்வும் இருந்தது,பின்னர் வெப்பம் வந்தது,பின்னர் அது திடபொருளாகி,தூலப்பொருளாகச்சுருங்கியது,ஒடுங்கும் போது துாலத்திலிருந்து தொடங்கி இதே முறையில் பின்னோக்கி செல்கிறது.இப்படியே பிரபஞ்சம் தோன்றித்தோன்றி ஒடுங்கிய வண்ணம் இருக்கிறது.
ஆகாசத்தின் துணையின்றி பிராணன் மட்டும் தனித்து இயங்க முடியாது.அதிர்வு,எண்ணம்,இயக்கம் என்று நாம் அறியும் சக்திகள் அனைத்தும் பிராணனுடைய பல்வேறு நிலைகள்.உருவங்கள் அனைத்தும் ஆகாசத்தின் பல்வேறு நிலைகள்.ஆதாரப்பொருள் இன்றி பிராணனால் தனித்து இயங்க முடியாது.ஆகாசமே அதன் ஆதாரப்பொருள்.ஜடம் இல்லாத சக்தியையோ,சக்தி இல்லாத ஜடத்தையோ இந்த பிரபஞ்சத்தில் இல்லை இரண்டும்இணைந்திருக்கின்றன.
தூலப்பொருட்கள் ஒவ்வொன்றும் தன்மாத்திரைகள் எனப்படும் நுண் அணுக்களால் ஆனது.ஒரு பூவிலிருந்து மணம் என் மூக்கிற்கு வருகிறது.மலர் அங்கே இருக்கிறது மலரிலிருந்து ஏதோ ஒன்று என் மூக்கை வந்தடைகிறது இதுதான் தன்மாத்திரை எனப்படும்.பஞ்சபூதங்கள் அனைத்தும் இதே போல் தன்மாத்திரைகளால் ஆக்கப்பட்டது.தன்மாத்திரைகளை இன்னும் நுட்பமான அணுக்களாக பிரிக்கலாம்.தன்மாத்திரைகளிலிருந்து தான் நாம் காண்கின்ற உணர்கின்ற பொருட்களான நிலம் நீர் போன்றவை படைக்கப்பட்டுள்ளன.இது உங்கள் மனத்தில் நன்றான பதியவேண்டும்.
இதில் முக்கியமான கருத்து என்னவென்றால் சூட்சுமத்திலிருந்துதான் ஸ்தூலம் பிறக்கிறது.ஸ்தூலமாகிய ஜடம் தான் கடைசியில் தோன்றுகிறது.ஆற்றலில் ஒருமை உள்ளது.அது பிராணன்.ஜடத்தில் ஒருமை உள்ளது அது ஆகாசம்.இனி இவை இரண்டிற்கும் அடிப்படையாக ஏதாவது ஒருமை இருக்கிறதா?இவற்றை சேர்த்து ஒன்றாக்க முடியுமா?தற்கால விஞ்ஞானத்தில் இந்த கேள்விக்கு பதில் இல்லை.இதற்கு பதில் காணும் ஆற்றலை அவை இன்னும் பெறவில்லை.அந்த ஆற்றலை பெற வேண்டுமானால்,பழைய கருத்துக்களாகிய பிராணன்,ஆகாசம் போன்றவற்றை அவை இப்போதுதான் கண்டுபிடித்து வருகின்றன.
பிராணனுக்கும் ஆகாசத்திற்கும் மேலே என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்வதற்று முன் மனத்தை பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

Illuminati இல்லுமினாட்டி - (உலகை ஆழும் நிழல் உலக ராஜாக்கள் )

The Illuminati (plural of Latin illuminatus, "enlightened") is a name given to several groups, both real and fictitious. Historically, the name usually refers to the Bavarian Illuminati, an Enlightenment-era secret society founded on May 1, 1776.
(விரிவான விளக்கம் )


உண்மை சில நேரங்களில் கசக்கும் அனால் அதை ஏற்று கொள்ளவேண்டிய நிலையில் தான் இன்று உள்ளோம் ..

இன்று நமது நாட்டையோ அல்லது எந்த நாட்டை எடுத்துகொண்டாலும் சரி அதை ஆழ்வது மக்களால் தேர்தெடுத்த அரசு தான் என்றால் நீங்கள் இன்னும் நிழலில் தான் வாழ்ந்து வருகிறீர்கள் .

முதல் உலக போர் , இரண்டாம் உலக போர் அனைத்தும் அவர்களின் விளையாட்டே , தீவிரவாதிகள் , ஆப்ரிக்கா நாடுகளில் பஞ்சம் ,என அனைத்திற்கும் இவர்களே முழு காரணம் .

யார் இந்த இல்லுமினாட்டிகள் ? வாருங்கள் காணலாம் .

1700களில் வாழ்ந்த Adam weishaupt சுய சிந்தனையாலர்களுக்காக ஒரு ரகசிய குழுவை உருவாக்கினார் .அவர்களின் நோக்கம் உலகை நேர்த்தி செய்வது மூடநம்பிக்கை யை அழிப்பது .. அதை அன்றே பாவேரியன் அரசு அந்த குழுமத்தை அழித்து விட்டது ..இது தான் இல்லுமிநாட்டி குழுவின் தொடக்கம் என்று நினைத்தால் நீங்கள் இன்னும் சரியாக இவர்களை புரிந்துகொள்ளவில்லை .
முதலில் Illuminati என்பதன் அர்த்தத்தை காண்போம்
Illuminati என்றால் வெளிச்சத்திற்கு வந்தவன் அதாவது ஞானம் பெற்றவன் என்று பொருள் .. இந்த உலகில் சாதாரண மக்குளுக்கு தெரியாத அறிவியல் , ஆன்மிகம் இவை அனைத்தையும் உணர்த்து அதை வைத்துகொண்டு நம்மை இவர்கள் கட்டுபடுத்துகிறார்கள் என்பதே உண்மை .
யூத இனத்தை சேர்த்தவர்களே இல்லுமினாட்டியின் முக்கிய பொறுப்பு களிலும் மேல் பொறுப்புகளிலும் உள்ளனர் .யூத நாடான இஸ்ரேல் தான் உலகின் தலை நகரம் என்று கூட சொல்லலாம் .யூதர்கள் தான் உலகின் பெரும் பொறுப்புகள் அனைத்திலும் உள்ளனர் என்பது ஒரு நிதர்சனமான உண்மை ..
இந்த இல்லுமினட்டி குழுமத்தில் மொத்தம் 13 குடும்பங்கள் உள்ளன (அதாவது ஜாதிகள் என்று நம் மொழியில் கூறலாம் ) இவர்களுக்கு கிழே பல ரகசிய குழுமங்களும் செயல் பட்டு வருகின்றன .
இந்த மொத்த கும்பலையும் குறிக்க பயன்படும் வார்த்தையே இல்லுமிநாட்டி .. இவர்கள் Lucifier என்னும் சாத்தானை வழிபடுபவர்கள் .. மேல் தட்டில் உள்ள இல்லுமினட்டி குடும்பங்களை ஆராய்ந்தால் அவர்களின் வரலாறு எகிப்த்து அரசர்கள் வரை செல்கிறது .. அவர்கள் இன்று மட்டும் நம்மை ஆழ வில்லை .. பல ஆண்டுகளாக மன்னர்களாக இருந்து சிறு இடங்களை நாடுகளை ஆண்ட ராஜ வம்சம் இன்று மறைமுகமாக உலகையே ஆள்கிறார்கள் . இவர்கள் Reptilians என்னும் வேற்று கிரகவாசிகள் என்ற கருத்தும் நிலவுகிறது .. இந்த கருத்தை வெளியிட்டவர் David ICke . சரி இதை பற்றி பின்பு வரும் பதிவுகளில் காண்போம் ..
முதலில் மேல் தட்டு இல்லுமிநாட்டி குடும்பங்களை பற்றி காண்போம் .
The Astor Bloodline
The Bundy Bloodline
The Collins Bloodline
The DuPont Bloodline
The Freeman Bloodline
The Kennedy Bloodline
The Li Bloodline
The Onassis Bloodline
The Reynolds Bloodline
The Rockefeller Bloodline
The Russell Bloodline
The Van Duyn Bloodline
பல குடும்பங்கள் அவர்களின் பெயர் , அடையாளத்தை மறைத்து வாழ்ந்துகொண்டு இருகின்றால்கள் .. இதில் Li குடும்பம் மட்டும் சீன குடும்பம் ஆகும் ..
இன்னும் சில குடும்பங்களையும் குறிபிடலாம்
The Disney Family
The McDOnald Family
The Bush Family

Rothchilds
இவர்கள் தான் உலக பணம், வங்கி போன்ற விடயங்களை கட்டுக்குள் வைத்துள்ளது ..அமெரிக்காவின் Federal Reserve Bank தான் அந்த நாட்டிற்கு இன்று வரை பணத்தை அச்சு அடித்து கொடுக்கும் .. அப்படியே நமக்கு Reserve Bank எப்படி அதே போல் அவர்களுக்கு அது .. இந்த FRB ஒரு தனியார் வங்கி என்பது உங்களுக்கு தெரியுமா ? இதன் பங்குகள் அனைத்தும் இந்த ரோத்சில்த் மற்றும் சில இல்லுமினடி குடும்பங்ககல் தான் உரிமையாளர்கள் .அமெரிக்காவிற்கு பணத்தை அச்சு அடித்து கொடுப்பதே இந்த rothchilds தான் .. அமெரிக்க மட்டும் அல்ல உலகின் பல்வேறு நாடுகளின் வங்கிகள் இவர்களின் கட்டுக்குள் தான் .. என் நம் State Bank இல் இந்த rothchild ஒருவரும் பங்குதாரர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?.. அரபு நாடுகளின் என்னைக்கு என் இவர்களின் DOllar மதிப்பை வைத்துள்ளார்கள் ?. அமெரிக்க எப்படி உலகின் பெரும் வல்லரசாக .மாறியது . ? இந்த இல்லுமினாட்டிகளின் தற்பொழுதைய இருப்பிடம் இந்த நாடு தான் . (சில மேற்கத்திய நாடுகளிலும் இந்த குடும்பங்கள் வசிக்கின்றன .)
Rockerfeller
இவர்கள் தான் உலகின் எண்ணெய் அனைத்தையும் கட்டுக்குள் வைத்து உள்ளார்கள் ..அரபு நாடுகளில் எண்ணையை உறுஞ்சும் எண்ணெய் நிறுவனங்களில் பல இவர்களை நேரடி பெயரிலும் சில பினாமி பெயரிலும் உள்ளது ..
இது போல இந்த ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு துறையை ஆள்கிறார்கள் அவற்றை வரும் பதிவுகளில் விரிவாய் காணலாம் .
சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால் மேற்கத்திய ராஜ குடும்பங்கள் அனைத்தும் இந்த கூட்டங்களின் தலைமை . (எலிசபெத் ராணி , சார்லஸ் , இறந்த ராணி dianaa இன்னும் பலர் )
இது போல ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு துறையை கட்டுக்குள் வைத்துள்ளது .. இதை பற்றி எல்லாம் எதிர்காலத்தில் விவரமாக காணலாம் .
The SKulls and Bones
Yale பல்கலைகழகத்தில் இருந்த ரகசிய குழுஆகும் இது .அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் அரசியல் தலைவர்கள் பலர் yale பல்கலைகழகத்தில் படித்து இந்த குழுமத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர் . முக்கியமாக புஷ் குடும்ப அரசியல் வாதிகள் அனைவரும் இதில் உறுப்பினர்கள் (prescot Bust , GeorgeBush Senior ,GeorgeBush JUnior ) . இதிலும் சாத்தான் வழிபாடு இருந்தது .
The Freemason
14 ஆம் நுற்றாண்டில் Stonemason களுக்காக ஆரம்பிக்கப்பட்ட ஒரு ரகசிய இயக்கம் ஆகும் .. இதில் பொறியாளர்கள் மட்டும் தான் அராம்பத்தில் இருந்தனர் .ஆரம்பத்தில் இந்த இயக்கம் பல்வேறு ஆக்கபூர்வமான விடயங்களை தான் செய்தது ..பின்பு இதன் உள்ளும் சாத்தான் வழிபாடு நுழைந்தது .. இவர்களும் இல்லுமிநாட்டி கும்பலுடன் இணைந்தனர் . கணிதம் ,பொறியியல் என்று சிறந்து விளங்கியவர்கள் இவர்கள் .. சிறிது சிறிதாக இவர்களுள் சாத்தான் வழிபாடு பரவி இன்று இந்த குழுவின் உயர்நிலைகள் அனைத்தும் இல்லுமினட்டி களின் இடமாக மாறியது .. அரசின் உயர்பதவியில் வகிப்பவர்கள் , அரசியல் வாதிகள் என சமுகத்தில் பெரும் இடத்தில் உள்ளவர்கள் பலர் இந்த குழுமத்தில் இருப்பார்கள் . இவர்கள் மூலமாகவே இல்லுமினாட்டிகளின் பல திட்டங்கள் நடத்தப்படும் .
அமெரிக்காவின் founding fathers (ஜார்ஜ் வாஷிங்டன் ) பலர் இந்த குழுவை சேர்ந்தவர்கள் தான் .
சற்று அதிர்ச்சியான செய்தி இந்தியாவின் முதல் பிரதமர் ஜவர்ஹலால் நேரு , விவேகானந்தர் போன்ற பல இந்திய தலைவர்களும் இந்த குழுமத்தில் இடம் பெற்றிருந்தனர் என்று சில செய்திகள் வெளியாகி உள்ளன (விவேகானந்தர் freemason உடையில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது ).. The Knights Templer ,.The Builderberg group போன்றவற்றை எதிர் வரும் பதிவுகளில் தெளிவாக காணலாம் .
The Committee of 300 or The Olympians
1727 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரச கும்பத்தால் தொடங்க பட்ட குழு இது . இது தான் இல்லுமினட்டிகளின் நேரடி கீழ் பார்வையில் இயங்கும் குழுமம் .இதை பற்றியும் தெளிவாக அடுத்த பதிவுகளில் காணலாம் .
அமெரிக்க , மற்றும் பல மேற்கத்திய நாடுகள் , ஆஸ்திரேலியா போன்றவை இல்லுமிநாட்டி களின் முழுமையான கட்டுப்பாட்டிலும் .. ஏனைய நாடுகள் மறைமுகமான கட்டுப்பாட்டிலும் உள்ளது என்பது நிதர்சனமான உண்மை .
இல்லுமினட்டிகளின் குறிக்கோள் NWO (New WOrld Order ) உலக மக்கள் தொகையை 500 மில்லியன் குள் குறைத்து உலகை ஒரு அரசு குள் கொண்டு வருவதே இந்த திட்டம் . இது பொறுமையாக படி படியாக நடைபெறும் இந்த திட்டம் ஏற்கனவே ஆரம்பித்துவிட்டது என்றே கூறலாம் .1990களில் புரட்ச்சிகரமாக பார்க்கப்பட்ட உலக மயமாக்கலே இந்த திட்டத்தின் தொடக்கம் .
நம் இந்தியாவை எடுத்து கொண்டால் 400 வருடங்ளுக்கு முன் சிறிது சிறிதாக பிரித்து கிடந்த பல இடங்களாக இருந்தது .பின்பு இங்கு 400 ஆண்டுகள் மேற்கத்தியர்கள் நுழைந்து பல இடங்களாக பிரிந்து கிடந்த இடங்களை ஒன்றாக ஆக்கி அதற்க்கு ஒரு அரசை நிறுவி இந்தியா என்று பெயர் சுட்டி அதை மறைமுகமாக ஆழ தொடங்கின .இன்று மறைமுகமாக corporate கல் இந்த colony நாடுகளை ஆழ்கின்றன .ஆம் சிறு சிறு பகுதிகளை எல்லாம் தனி தனியாக கட்டு படுத்துவது கடினம் .. இது தான் உலகில் பல நாடுகள் மேற்கத்திய நாடுகளுக்கு அடிமையாக இருந்ததிற்கு காரணம் . எதிர்காலத்தில் அவர்கள் நம்மை ஆள்வதற்கு அவர்கள் விட்ட அஸ்திவாரம் தான் அந்த colony நாட்கள். அந்த அடிமை பட்டு இருந்த நாட்களில் நம் வரலாறை அழித்து மாற்றி நமது அடையாளத்தை திருத்திவிட்டனர் (யாழ்பாணம் நூலகம் ). . . எலிசபெத் ராணி (இல்லுமினட்டிகளின் தலைவி என்று கூட சொல்லலாம் )
கத்தி படத்தில் corporate ஐ எதிர்த்து விஜய் 4 வார்த்தை பேசியதும் கை தட்டி விசில் அடித்து விட்டு அதை அன்றே மறந்துவிட்டு வந்து விடுவோம் .. ஆனால் அது தான் உண்மை .. The Builderberg Group என்பது கத்தி படத்தில் corporate முதலாளிகள் எப்படி கூடி பேசுவார்களோ அதே போல் நிஜத்தில் வருடத்தில் ஒரு முறை நடப்பது இதில் பல நாடுகளை சேர்ந்த அரசியல் வாதிகள் ,பொருளாதார நிபுணர்கள் ,மிடியா வில் பெரும் பொறுப்பில் உள்ளவர்கள் , தொழில் அதிபர்கள் என கலந்துகொள்ளுவார்கள் . இது வரை அந்த The Builderberg Group கலந்துரையாடலில் ஒரு பத்திரிக்கையாளர் கூட அனுமதிக்க பட்டதில்லை .. இவர்கள் இல்லுமினட்டியின் கையில் உள்ள இன்னுமொரு ஆயுதம் .
சுருக்கமாக சொல்ல போனால் மனித பரிணாமத்தை முற்றிலும் அழிவு பாதையில் நடக்க வைத்தது இந்த கூட்டம் தான் .
இவர்கள் நம் உணவில் நஞ்சை கலந்து நம் மூளையை மழுங்க அடிக்கிறார்கள் .. இதற்க்கு சிறந்த எடுத்து காட்டு சமிபத்திய maggi noodles. Nestle நிறுவனத்தின் இந்த உணவு பொருளில் இயம் அளவுக்கு அதிகமாக கலக்கபடுகிறது இதனால் குழந்தைகளின் மூளை மழுங்கடிக்கப்படும் என்று சமிபத்தில் அதிர்ச்சியான விடயங்கள் வெளியாகின ..யோசித்து பாருங்கள் இந்த நஞ்சை கலந்தால் மட்டும் தான் அவர்களின் பொருள் விற்பனை ஆகுமா ? வெறும் சுவையை கூட்ட மட்டும் தான் இதை கலந்து உள்ளார்களா ? கண்டிப்பாக இல்லை எதிர்கால குழந்தைகளின் சிந்திக்கும் திறனை மழுங்கடிக்க ..அவர்கள் சொல்லி கொடுக்கும் அறிவியலை மட்டும் புரிந்துகொண்டால் போதும் அப்பொழுது தான் எதிர்காலத்திய மக்களை சுலபமாக கட்டுபடுத்தலாம் .. " Think out of the box " என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள் அந்த திறனே முற்றிலும் எதிர்காலத்தில் அழிந்து விடும் .
நீங்கள் எந்த பொருள் வாங்கினாலும் அதன் வரலாறை சிறுது ஆராய்ந்து பாருங்கள் ..
மீடியா
உலகில் உள்ள மீடியாக்களில் 90 சதவிகிதம் இவர்கள் கட்டுபாட்டில் தான் உள்ளது .. உண்மையை கூறும்
wikileaks போன்ற இணையங்கள் பல முறை இவர்களால் மறைமுகமாக தாக்கப்பட்டுள்ளது . இந்த 6 பெரும் நிறுவனங்கள் தான் உலகின் 90 சதவிகித மெடியாவை கட்டுக்குள் வைத்துள்ளது .
1 - GE (Comcast ,NBC ,UNiversal PIctures ,)
2 - News Corp ( FOX, Wall street journal ,New york post )
இந்த குழுமத்தின் fox குழுவின் கிளை தான் நமது ஸ்டார் விஜய் தொலைகாட்சி வருகிறது .. இதில் வரும் அனைத்து தொடர்களிலும் ஒரு ஆண் இரு பெண்களோடு சம்பந்த படுத்தியோ அல்லது ஒரு பெண் ஒன்றிற்கும் மேற்பட்ட நபர்களிடம் வெவ்வேறு காலங்களில் காதல் செய்வது போல பல காட்ச்சிகள் இடம் பிடிக்கின்றன .. இது அனைத்தும் நமது நெஞ்சிலும் அந்த முல்லை விதைப்பதர்க்கே ... அதுவும் ஒரு வட இந்திய தொடரை இதில் ஒளி பரப்புகிறார்கள் அதில் ஓரின சேர்க்கை போன்ற விடயங்கள் இடம் பெற்றுள்ளன .. இவை அனைத்தும் நம் குடும்ப பெண்கள் பார்க்கும் தொடரில் காட்ட படுகிறது .
3 - Disnep ( ABC ,ESPN ,MARVEetc )
4 - VIACOM ( MTV ,NICK ,BET,CMT,)
5 - TIMEWARNER ( CNN,HBO , TIME , WARNER BROS )
6 - CBS ( SHOWTIME ,NFL,JEOPARDY ETC)
இந்த நிறுவங்கள் அனைத்தும் இல்லுமினட்டியின் நேரடி கட்டுபாட்டில் உள்ளது .. இதில் காட்டபடுபவை மட்டும் தான் நாம் பார்ப்போம் அதை தான் நாம் நம்புவோம் .. ஊடகங்கள் முலம் தான் அவர்களது பல திட்டங்கள் நிறைவேட்ட்ற படுகின்றன ..
அதுவும் நம் மனதில் சில விடயங்களை நிலை நிறுத்த "SUBLIMINAL MESSAGE' என்னும் விடயத்தை கை ஆள்கிறார்கள் .. உதாரனத்திற்க்கு நீங்கள் ஒரு படம் பார்த்து கொண்டிருக்கும் பொழுது இடையில் ஒரு இமை நேரத்தில் "Hungry ,பசி " என்ற சொல்லை ஓடவிட்டால் உங்களால் அந்த சொல் வந்ததை உணர முடியாது .. ஆனால் உங்கள் மூளை உணர்ந்து உங்களுக்கு பசியை உண்டாக்கும் .. இதே முறை மூலம் தான் இன்று இவர்கள் நம் மூலையில் என்ன ஓட்டங்களை நிறுவுகிறார்கள் . "THE LION KING " என்ற பிரபலமா disnep படத்தில் நிறைய இடங்களில் "SEX " என்ற சொல்மறைவாக காட்டபட்டீருக்கும் . குழந்தைகள் பார்க்கும் இந்த படத்தில் இந்த வார்த்தையை காட்டுவதன் மூலம் அவர்களை எதிர்காலத்தில் குழந்தைகளை சிறு வயதிலேயே காமத்தில் நாட்டம் அதிக நாட்டமுடையவர்களாக ஆக்க முடியும் ..ஆனால் இதை disnep நிறுவனம் அந்த எழுத்து "SEX " அல்ல "VFX " என்று வாதாடியது ... சரி இது போகட்டும் "THE LITTLE MERMAID " என்னும் குழந்தைகளின் படத்தின் போஸ்டரில் disnep கோபுரத்தில் ஒரு இடத்தில் ஆன் குறியை வரைந்து இருப்பார்கள் ..
இது போன்ற பல விடயங்கள் இந்த ஊடகங்களால் காட்டபடுகின்றன .
இந்த SUBLIMINAL MESSAGE காநோளிக்களில் மட்டுமில்லாமல் அதிக அளவில் பாடல்களிலும் உபயோகித்து வருகிறார்கள் .
இல்லுமினட்டிகளின் குறியீடு
- பொதுவாக ஒரு பிரமிட் மிது ஒரு கண் (THE WATCHING EYE )இருக்கும் அதுவே இல்லுமினட்டிகளின் குறியீடு ஆகும் இருந்தாலும் அவர்கள் இன்னும் பலவற்றை பயன்படுத்துவார்கள் .

அவை
-ஒற்றை கண்
-ஆந்தை
- சூரிய உதயம்
-666
இவை பொதுவானவை இன்னும் பல குறீடுகள் இவர்களால் பயன் படுத்த படுகின்றன ... இவை அனைத்தும் அதிகபட்ச்சமான corporate நிறுவனங்களின் logo விலும் மறைமுகமாக காணலாம் .
yo yo hand sign என்பது சாத்தானை குறிக்கிறது .
பல அரசியல் வாதிகள் pop இசை பாடகர்கள் , நடிகர்கள் மற்றும் பலர் சாத்தனின் சின்னத்தை மீடியா வில் கட்டில் நம் மனதில் அவற்றை விதைத்து விட்டார்கள் ..
நாம் சுப்பர் என்று சொல்லுவதற்கு கட்டும் கை விளக்கம் 666.
zionism ,Paganism ,Judism ,satanism போன்ற பல வழிபாடுகள் இவர்களிடம் .உள்ளன Who are the Illuminati?
The original Illuminati group was founded in Bavaria in the 18th century by Adam Weishaupt, an anti-clerical professor who wanted to limit the interference of the Church in public life. He based his secret society on the Freemasons, with a hierarchy and mysterious rituals, and named it the Order of Illuminati to reflect the enlightened ideals of its educated members. The Illuminati was stamped out by a government crackdown on secret societies in the late 1780s, but rumours that it continued to survive as an underground organisation have persisted into the modern day.
What is the New World Order?
In post-war America, right-wing agitators claimed clandestine groups were planning a communist world government but the idea of a powerful modern Illuminati conspiring to rule the world remained a niche belief upheld by a handful of cranks until the 1990s. The spread of the internet changed all that, giving conspiracy theorists a global platform to expound their beliefs and present their evidence to a massive audience.
Theories about how the New World Order operates run from the faintly credible – in light of the Davos summit, a cabal of politicians and business leaders getting together to decide global policies doesn't seem impossible – to the outright bizarre.
Most unbelievable of all is former TV presenter David Icke's claim that the world's leaders are actually super-intelligent lizards in human guise who control our reality from the Moon. Those who remember Icke from his days on Grandstand may be surprised to know his theories about our reptilian overlords – who have included the Rothschilds, Bob Hope and Queen Elizabeth the Queen Mother - have amassed a faithful following on the internet.
Conspiracy theorists obsessively analyse public events for "evidence" of Illuminati influence. The symbols most associated with the Illuminati include triangles, pentagrams, goats, the all-seeing eye – such as the one that appears on US bank notes - and the number 666.
Who is supposedly a member?
As well as being king and queen of the charts, Beyonce and Jay are frequently depicted as lords of the New World Order. Beyonce's immense fame and popularity have long made her a favourite target for conspiracy theorists. Illuminati 'experts' seized upon her half-time performance at the 2013 Super Bowl as an example of her "devil-worshipping" choreography, even accusing her on-stage alter ego Sasha Fierce of being a "demonic entity".
Jay–Z, meanwhile, has been accused of hiding secret symbols such as goat imagery and devil horns in his music videos. Most damningly, the logo for his own music label, Roc-A-Fella Records, is a pyramid – one of the most well-known Illuminati logos. Jay-Z's protege Rihanna has also been put in the spotlight by Illuminati enthusiasts for frequently flashing a triangle hand sign. The playful popstar even joked about the theories in the music video for her hit song S&M, which featured a fake newspaper with a headline declaring her "Princess of the Illuminati".
Other celebrities accused of using Illuminati symbols include Lindsay Lohan (devil tattoo), Celine Dion ('devil horns' hand sign), Emma Watson (photographed circling her eye with her finger in the shape of a number six), Angelina Jolie (all-seeing eye symbol in Tomb Raider) and Will Smith (his children's fondness for esoteric tweeting is seen as evidence they have been brainwashed).
What do celebrities have to say about the theories?
Katy Perry told Rolling Stone that the theory was the preserve of "weird people on the internet" but admitted she was flattered to be named among the supposed members: "I guess you've kind of made it when they think you're in the Illuminati!" But she was tolerant of people who wanted to believe in the theory because: "I believe in aliens".
Madonna, on the other hand, might just be a believer – all the more interesting given that she has frequently been accused of being a member herself. Speaking to Rolling Stone, she hinted that she had secret knowledge of the group. The claim is not so shocking given that she released a single titled 'Illuminati'. She said: "People often accuse me of being a member of the Illuminati, but the thing is, I know who the real Illuminati are."

Everyone has seen it - the so-called "All-Seeing Eye", following the world's population around, controlling it, not allowing people to live their lives in peace. This beady eye is all-seeing, all-knowing and all-powerful - and it is allegedly the symbol of an influential secret society known as the Illuminati.
People may have heard of the concept of the Illuminati, but they cannot be sure whether or not it is the stuff of myth, legend and superstition, or whether this organisation really has infiltrated every aspect of society and controls the population of the world.
Conspiracy theorists would have you believe that the Illuminati is still at large, controlling the world on a global scale due to its presence inside worldwide financial institutions, national governments and even multi-national organisations.