Search This Blog

Sunday, November 15, 2020

இலக்கியம் ‘முரண்பட்டவனின் வெளிப்பாடு’

 எழுத்து என்பது எப்போதுமே ஓர் ஒவ்வாமையிலிருந்துதான் எழுகிறது.இன்றிருக்கும் சமூகச்சூழல், பண்பாட்டுச்சூழல், அரசியல்சூழல் பற்றிய ஆழமான ஓர் ஒவ்வாமை, ஓர் உடன்படாமை எழுத்தாளனுக்குள் உள்ளது. அதுதான் அவனை எழுதவைக்கிறது. ஒரே வரியில் இலக்கியத்தை ‘முரண்பட்டவனின் வெளிப்பாடு’ என்று சொல்லிவிடலாம்.

அது நேற்றும் அப்படித்தான் இருந்தது. நேற்றைய இலக்கியம் மெல்லமெல்ல அமைப்பின் பகுதியாகி ஏற்படைகிறது. தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றை எண்ணிப்பாருங்கள். முடியுடை மூவேந்தருடன் முரண்பட்டு பாரியுடன் நின்று பாரிமகளிரை அழைத்துக்கொண்டு அலைந்த கபிலரின் இயல்பு என்ன?
தமிழ் என்றென்றும் போற்றும் பெருங்காவியத்தை எழுதியபின் ஒட்டக்கூத்தன் முதலிய அவைக்கவிஞர்களால் சிறுமைசெய்யப்பட்டு, அரசனிடம் பூசலிடு, சேரநாடு சென்று ஒளிந்துவாழ்ந்து, பிடிபட்டு அரசனால் கொல்லப்பட்ட கம்பனின் இயல்பு என்ன?
எட்டையபுரம் மன்னனிடமும் பிரிட்டிஷ் அரசிடமும் முரண்பட்டு தலைமறைவாக பாரதியை வாழச்செய்தது எது? நடிப்புச் சுதேசிகள் என தன் கட்சிக்காரரையே வசைபாடச் செய்தது எது?
மலையாளக் கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன் ஆரம்பகால முற்போக்கு இலக்கியவாதி. அவர் ஒருமுறை எழுதினார் “நல்ல நாளை ஒன்றுக்காக போராடுபவர்களுடன் நிற்பது என் கடமை. ஆனால் அப்படி உண்மையிலே பொன்னுலகு ஒன்று வந்தால்கூட நான் கோழிக்குஞ்சை பிடித்து கதறக்கதறக் கிழித்துச் சாப்பிடும் காகத்தைக் கண்டு கண்ணீருடன் மா நிஷாத என்று சொல்பவனாகவே நீடிப்பேன்”
பறவையிணையை கொல்லத்துணியும் வேட்டைக்காரனைக் கண்டு “நிறுத்து காட்டளனே” என்று கூவிய வால்மீகியே ஆதிகவி என்று நம் மரபு சொல்கிறது. தீது கண்டு அநீதி கண்டு எழும் கொந்தளிப்புதான் இலக்கியத்தின் அடிப்படையாக இருக்கமுடியும். அதற்கு இருக்கும் ஒரே தரப்பு அதுதானே ஒழிய, எந்த அரசியல் கருத்தியல் தரப்பும் அல்ல.
அந்த முரண்படும் இயல்பு, மீறல்தான் இலக்கியத்தின் அடிப்படை. அதையே புதுமைப்பித்தன் முதல் இன்று வரையிலான எழுத்தாளர்களிடம் காண்கிறோம். அவர்கள் சமூகமனநிலைக்கு எதிராக நிலைகொள்கிறார்கள். பண்பாட்டின் பொதுப்போக்கை எதிர்க்கிறார்கள். அரசை ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்.
- ஜெ
Thanks :

Karunakaran Sivarasa

Friday, November 13, 2020

Global Warming will Continue No Matter What We Do Even if humanity stopped emitting greenhouse gases today

"Even if humanity stopped emitting greenhouse gases tomorrow, Earth will warm for centuries to come and oceans will rise by metres, according to a controversial modelling study published Thursday.
Natural drivers of global warming—more heat-trapping clouds, thawing permafrost, and shrinking sea ice—already set in motion by carbon pollution will take on their own momentum, researchers from Norway reported in the Nature journal Scientific Reports."
Why permafrost releases carbon as it thaws.

O. Roger Anderson, a biologist at the Earth Institute’s Lamont-Doherty Earth Observatory, explained

why permafrost releases carbon as it thaws.

The ‘active layer’ of soil on top of the permafrost, which may be two to 13 feet deep, thaws each summer and can sustain plant life. This layer releases carbon from the roots of plants that respire out CO2, and from microbes in the soil. Some microbes break down the organic matter into CO2. Others, called archaea, produce methane instead, when conditions are anaerobic—when the soil is saturated with water or no oxygen is available. Methane is 20 to 30 times more potent than carbon dioxide at exacerbating global warming, but it remains in the atmosphere for less time.

As permafrost thaws, the active layer deepens. The microbes become active and plant roots can penetrate further down, resulting in the production of more CO2. The amount of methane generated depends on how saturated the ground is.

Scientists don’t know the relative proportions of carbon dioxide and methane emissions that might result from largescale thawing permafrost, said Anderson, because this has never happened in human history. However, research on the upper layer of the tundra (treeless plains overlying the permafrost) suggests that the average carbon dioxide emissions are about 50 times higher than those of methane.

“And we know that for every 10 degrees Celsius that the soil warms up, the emission of CO2 will double,” said Anderson.

Robert Stonjek

https://phys.org/news/2020-11-greenhouse-gas-emissions-global.html?fbclid=IwAR1lgiveF5pYpbHA1LNBIArUfvw4FSEy4IONRmNvXvx_OEMpDebpY9bwy1k https://blogs.ei.columbia.edu/2018/01/11/thawing-permafrost-matters/

Wednesday, November 11, 2020

ஷீரடி சாய்பாபாவின் கதை | Real Story of Shirdi SaiBaba


Shirdi Sai Baba, also called Sai Baba of Shirdi, (born 1838?—died October 15, 1918), spiritual leader dear to Hindu and Muslim devotees throughout India and in diaspora communities as far flung as the United States and the Caribbean. The name Sai Baba comes from sai, a Persian word used by Muslims to denote a holy person, and baba, Hindi for father.

Sai Baba’s early years are a mystery. Most accounts mention his birth as a Hindu Brahman and his subsequent adoption by a Sufi fakir, or mendicant. Later in life he claimed to have had a Hindu guru. Sai Baba arrived in Shirdi, in the western Indian state of Maharashtra, about 1858 and remained there until his death in 1918.

At first denounced by the villagers of Shirdi as a madman, by the turn of the century Sai Baba had a considerable following of Hindus and Muslims, attracted by his compelling teachings and his performance of apparent miracles, which often involved the granting of wishes and the healing of the sick. He wore a Muslim cap and for the better part of his life lived in an abandoned mosque in Shirdi, where he daily kept a fire burning, a practice reminiscent of some Sufi orders. Yet he named that mosque Dvarakamai, a decidedly Hindu name, and is said to have had substantial knowledge of the Puranas, the Bhagavadgita, and various branches of Hindu thought. Sai Baba’s teachings often took the form of paradoxical parables and displayed both his disdain for the rigid formalism that Hinduism and Islam could fall prey to and his empathy for the poor and diseased.

https://www.britannica.com

குரு பெயர்ச்சி லக்னங்கள், நட்சத்திர, ராசி பலன்கள் 2020-21 | Guru Peyarchi Palangal

வாக்கிய பஞ்சாங்கப்படி குரு தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு சார்வரி வருடம் ஐப்பசி மாதம் 30ம் தேதி - 15.11.2020 அன்று இரவு 9.55 க்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

அதுவே திருக்கணித பஞ்சாங்கத்தின் படி 2020 நவம்பர் 20 (20/11/2020) கார்த்திகை மாதம் 5ம் தேதி நடைபெற உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


அஸ்வினி:
குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.

******************************

பரணி:
வீடு வாங்கும் யோகம் உண்டாகும்.

*************************

கார்த்திகை:
உறவுகளால் நன்மைகள் ஏற்படும்.

**************************

ரோகிணி:
தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

*****************************

மிருகசீரிஷம்:
சேமிக்கத் தொடங்குவீர்கள்.

***************************

திருவாதிரை:
விட்டுக்கொடுத்துச் சென்றால் வெற்றி நிச்சயம்.

**********************

புனர்பூசம்:
மனதில் பட்டதை பளிச்சென்று சொல்வீர்கள்.

*************************

பூசம்:
பணப்புழக்கம் இருக்கும்.

********************

ஆயில்யம்:
எடுத்த காரியம் கைகூடும்

**************************

மகம்:
சுபகாரியங்கள் நடந்தேறும்.

***************************

பூரம்:
நட்பும் உறவும் நெருக்கமாகும்.

**************************

உத்திரம்:
பதவி உயர்வு தேடி வரும்.

*********************

அஸ்தம்:
தொழிலில் ஏற்றம் உண்டு.

****************************

சித்திரை:
முயற்சி பலன்கள் தரும்

*************************

சுவாதி:
பொருளாதாரம் உயரும்

**********************

விசாகம்:
மதிப்பு மரியாதை கூடும்

***************************

அனுஷம்:
பரஸ்பரம் அன்பும் பாசமும் அதிகரிக்கும்

*********************

கேட்டை:
உத்தியோகத்தில் முன்னேற்றம் உண்டு

**************************

மூலம்:
நற்பெயர் கூடும்; சம்பள உயர்வு நிச்சயம்

*************************

பூராடம்:
தொழிலில் வளர்ச்சி; அபரிமித லாபம்

*********************

உத்திராடம்:
தொழிலில் அனுகூலம்; எதிரிகள் பலமிழப்பார்கள்

********************

திருவோணம்:
புதிய ஒப்பந்தங்களால் லாபம் உண்டு

********************

அவிட்டம்:
இழந்த சொத்துகள் மீண்டும் வந்து சேரும்.

*************************

சதயம்:
வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்பப் பிரச்சினை தீரும்

**********************

பூரட்டாதி:
தேவைகள் பூர்த்தியாகும்

***********************

உத்திரட்டாதி:
ஆபரணங்கள் வாங்குவீர்கள்; சேமிப்பு கூடும்

***************************

ரேவதி:
உத்தியோகத்தில் வளர்ச்சி; தடைகள் அகலும்

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


Tuesday, November 10, 2020

African warrior women


Portrait of the most famous African warrior women, The Dahomey Amazon Warriors circa 1890's. They remain the only documented frontline female troops in modern warfare history. A sub-saharan band of female terminators who left their European colonisers shaking in their boots.

இந்திய பெண் முதுகலை மருத்துவர் ஆனந்தி கோபால் ஜோஷி


"உங்க பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறேன், ஆனா ஒரே கண்டிஷன். அவளை படிக்க வைப்பேன் நீங்க தடுக்க கூடாது " என்ற கோபாலை பார்த்து அதிர்ச்சி அடைந்த யமுனாவின் அம்மா தன் கணவனின் காதில், "இந்த கிறுக்கனை வெளியே அனுப்புங்க. பிரிட்டிஷ் அரசாங்கத்து போஸ்ட் ஆபீஸ் குமாஸ்தாவாக இருக்கும் ஒரே காரணத்திற்காக இவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியாது" என்கிறாள். "சும்மா ஒப்புக்கு ஒத்துப்போம். பின்னாடி பாத்துக்கலாம்" என்று சமாதானம் சொல்கிறான்.
கல்யாணமும் ஆகி விடுகிறது. பத்து வயதே ஆன யமுனாவிற்கு பஜ்ஜி சுடுவது பத்து பாத்திரம் தேய்ப்பது போன்ற அரிய கலைகளை அவள் அம்மா சொல்லி கொடுத்து கொண்டிருக்க,  அடுக்களையிலிருந்து அவளை வெளியே இழுத்து ஒரு பத்து புத்தகத்தை கையில் கொடுத்து, இதை படித்து முடித்தால்தான் நான் உன்னுடன் சேர்ந்து வாழ்வேன் என்று சொல்லிவிட்டு போய் விடுகிறான்.
கணவனுடன் சேர்ந்து வாழும் ஆசையில் அம்மாவிற்கு தெரியாமல் ரகசியமாய் படிக்கிறாள். அந்த புத்தகத்தை படித்து முடிப்பதற்குள் அவள் வயதுக்கே வந்து விடுகிறாள்.
இனி இந்த பெண்ணை வீட்டில் வைத்திருக்க முடியாது, நீங்கள் கூட்டிக்கொண்டு சென்றாக வேண்டும் என்று கட்டாய படுத்தி யமுனாவை கோபாலுடன் அனுப்பி வைக்கிறார்கள்
முதல் இரவு அறைக்குள் இருவரையும் தள்ளி தாளிட்டு, இந்த கிறுக்கனை நம்ப முடியாது என்று கதவில் காதை வைத்து உள்ளே எதாவது நடக்கிறதா என்று ஒட்டு கேட்க ஆரம்பிக்கிறாள் யமுனாவின் அம்மா.
அதை அறிந்த கோபால் கட்டிலை தன் கையை வைத்து ஆட்டியபடி, " நீ படித்த 10 ஆம் பெருக்கல் டேபிளை சொல்லு " என்று பள்ளி அறையை பரிட்சை அறை ஆக்குகிறான்.
அவள் முப்பதாவது டேபிளையே அனாசயமாக சொல்லிவிட்டு
"கட்டிலை ஆட்டாமலே கேட்கலாம்ல" என்று அப்பாவியாய் கேட்பவளை ஆனந்தமாய் பார்த்து, "இன்று முதல் உன் பெயர் கரைக்குள் அடங்கும் யமுனா அல்ல. கரையில்லா ஆனந்தி" என்கிறான். 
தினமும் இரவு பள்ளி அறையில் இவன் பாடம் சொல்லி கொடுக்கிறான். வேண்டா வெறுப்பாய் கற்கிறாள். காலை முதல் வீட்டு வேலை செய்து களைப்பாக இருப்பதாக சொல்லி படிக்க முடியாது என்று அடம் பிடித்து  தூங்க ஆரம்பிக்கிறாள்.
மறுநாள் எழுந்து பார்த்தால் அவனே சமையல் வேலையை முடித்து வைத்து "இப்போ என்ன செய்வ?" என்பதை போல் பார்த்து விட்டு வேலைக்கு செல்கிறான். இரவு வந்த பொழுது அவள் தூங்கி கொண்டிருப்பதை பார்த்து கோபமாகி,  எழுப்பி அறைய போகும் பொழுது தடுத்து கர்ப்பமாய் இருப்பதாக சொல்லிறாள்.
கர்ப்பமாய் இருப்பதை விட இந்த சாக்கில் படிக்காமல் இருக்கலாம் என்று சந்தோசம் ஆகிறாள்.  அவளை ஒரு ஆங்கிலேய ஆண் கைனக்காலஜிஸ்டிடம் கூட்டி செல்கிறான். அவள் மிகவும் சங்கோஜப்படுகிறாள்.
"பெண் டாக்டராய் இருந்தால் நன்றாக இருக்கும்" என்கிறாள் திரும்பி வரும் பொழுது. "பெண்கள் படித்தால்தானே?" என்கிறான் புன்னகையுடன்.
இவளுக்கு பிரசவம் பார்த்த கையோடு தன் சொந்த ஊருக்கு விடுப்பில் போகிறார் அந்த டாக்டர்.
பத்தாவது நாளில் குழந்தை மிகுந்த காய்ச்சலில் அழுது கொண்டே இருக்கிறது. பக்கத்தில் வேறு ஆங்கிலேய மருத்துவர்கள் இல்லாததால் ஒரு கை வைத்தியரை கூப்பிட்டு வருகிறான். அவனிடம் மகிழ்ச்சியாக,  அரை மணி நேரம் முன்பு வரை கத்திக்கொண்டிருந்த தன் மகள் இப்பொழுது அமைதியாக தூங்குகிறாள் என்றாள். நாடியை பார்த்து விட்டு இறந்து விட்டதாக கூறுகிறான். அதிர்ச்சியில் உறைகிறாள்.
"குழந்தையை காப்பாற்ற முடியாமல் போன காரணம் என்ன? " என்று கோபாலிடம் கேட்டு புலம்புகிறாள். படித்த டாக்டர் பக்கத்தில் இல்லாததே என்கிறான். அவள் கண்களை துடைத்து கொண்டு, ஒரு உறுதியுடன், "என்னை டாக்டர் ஆக்குங்கள்" என்கிறாள்.
அவளை பள்ளியில் சேர்ப்பதற்காக அலைந்து திரியும் இவனை "மனு நீதியை மதிக்காத இவனெல்லாம் பிராமணன் இல்லை, பித்தன்" என்று ஊர் பழிக்கிறது.
1880 இல் கிறிஸ்டியன் மிஷனரிகளே பெண்களுக்கான பள்ளிகளை நடத்தி வருகிறது. பெரும்பாலும் அது வெள்ளைய பெண்களுக்கே. 
இவன் விடுவதாக இல்லை. அந்த பள்ளியின் பாதரை பார்த்து,  இயேசு அடிக்கடி கனவில் வருவதாகவும், தான் கிருஸ்துவத்துக்கு மாற விரும்புவதாகவும், அதை புரிந்து கொள்ளும் அளவிற்கு தன் மனைவிக்கு படிப்பறிவு இல்லை, அவளை பள்ளியில் சேர்ந்து படித்தால் அதை புரிந்து கொண்டு தான் குடும்பத்துடன் கிறிஸ்துவத்திற்கு மாற உதவியாய் இருக்கும் என்று புருடா விட்டு சீட்டை வாங்கி விடுகிறான்.
சீட்டு வாங்கினாலும் சீட்டு இல்லை. கருப்பு பெண் என்று பழிக்க பட்டு தரையில் உட்கார வைக்க படுகிறாள். அவள் அதை பொருட் படுத்தாமல் படிப்பில் முனைப்பாய் இருக்கிறாள்.
அதற்குள் ஊர் பஞ்சாயத்து கூடி, மனு தர்மத்தின் படி பெண்கள் படிப்பது பாவச்செயல் என்பதால் இவன் குடும்பத்தை தீண்ட தகாத குடும்பமாய் அறிவிக்கிறது.
தெரியாமல் ஒரு முறை பெஞ்சில் உட்கார்ந்து விட்டதனால் இவளை சீட்டை கிழித்து வீட்டுக்கு அனுப்புகிறது பள்ளி. ஒரே சமயத்தில் மத மற்றும் இன பேதங்களால் இரு முனையிலும் அவமான படுத்த படுகிறாள்.
இவர்கள் என்ன நம்மை புறக்கணிப்பது. நாம் இவர்களை புறக்கணிப்போம் என்று மஹாராஷ்டிரத்தை விட்டு கல்கத்தாவிற்கு வந்து இவளை பள்ளி படிக்க வைக்கிறான்.
அமெரிக்கா நாட்டில் உள்ள பல்கலை கழகங்கள் மற்றும் மிஷனரிகளுக்கு சலிக்காமல் கடிதம் எழுதுகிறான்.
நியூ ஜெர்சியில், பல் வலி தாங்க முடியாமல் இருக்கையில் நெளிந்து கொண்டிருக்கிறாள் தியோடிஸியா.
அந்த பல் டாக்டருக்கோ கூட்டம் அதிகம், காத்திருந்துதான் ஆக வேண்டும் என்று அலுத்துக்கொண்டே அந்த வரவேற்பு அறையில் உள்ள அந்த பத்திரிக்கையை எடுத்து உத்தேசமாக ஒரு பக்கத்தை பிரித்தால்,  அதில் ஆனந்தி என்ற இந்திய  பெண் மருத்துவ படிப்பு படிக்க வாய்ப்பில்லாமல் சிரம படுவதை பற்றி அவள் கணவன் எழுதிய கடிதத்தை வைத்து ஒரு கட்டுரையை படித்த ஆச்சரியத்தில்,  அவளுக்கு பல் வலியே மறந்து,  அந்த முகம் தெரியாத ஆனந்தி மேல் ஒரு நேசம் வந்து விட்டது.
அவர்கள் விரைவில் கடித நண்பர்கள் ஆனார்கள். தியோடிஸியை சித்தி என்றே அழைப்பாள் ஆனந்தி. அது தியோடிஸிக்கு விநோதமாகவும், மிகவும் பிடித்தும் இருந்தது. அவள் ஆனந்திக்கு பென்சில்வேனியா மருத்துவ காலேஜில் சேருவதற்கு உதவி செய்தாள்.
இவள் அமேரிக்கா பயணப் படுவதற்கு அதே மனு தர்மத்தை வைத்து பெண் படிப்பே பாவம் அதுவும் கடல் கடந்து படிப்பது பெரும் பாவம் என்று கலாட்டா செய்தவர்களை பார்த்து
"ஹிந்து பெண் டாக்டர்கள் இல்லாததாலேயே ஹிந்து பெண்கள் பலர் இறக்கிறார்கள். அவர்களை காப்பதற்காக நான் படிக்க போகிறேன். ஹிந்து பெண்கள் சாவதை வேடிக்கை பார்ப்பதுதான் உங்கள் தர்மம் என்றால் அதை ஏற்க போவது இல்லை " என்று தெளிவாக சொல்லி விட்டு படகு எறியவளை என்ன சொல்லி தடுப்பது என்று ஸ்தம்பித்தது, அந்த கும்பல்.
அமெரிக்கா சென்று டாக்டர் மட்டும் அல்ல எம். டி ஓ. ஜி யும் முடித்து விட்டு ஊர் திரும்பிய போது அதே கும்பல் அவளை தன் தலை மீது தூக்கி வைத்து கொண்டாடியது.
டிபி யில், தன் 22 ஆம் வயதில் மரண படுக்கையில், "நான் மெனக்கெட்டதெல்லாம் வீணாகி விட்டதே. பலருக்கும் மருத்துவம் பார்க்க முடியாமல் இறக்க போகிறேனே?" என்று விரக்தி அடையும் பொழுது, கோபால் சொல்கிறான் " நீ வீண் அல்ல. துருவ விண்மீன். உன்னை வழிகாட்டியாக கொண்டு, கோடி பெண்கள், பல்வேறு துறைகளிலும் திறக்காத கதவுகளை உடைத்து திறப்பார்கள்"
முதல் இந்திய பெண் முதுகலை மருதுவரானா ஆனந்தி கோபால் இன்றும் பலருக்கு வழிகாட்டியே.
( படம் : ஆனந்தி கோபால், மொழி : மராத்தி, உபயம் : zee 5 )