Search This Blog

Thursday, July 14, 2016

The Impossible (2012 film)






“When I came to the surface I wrapped myself around a tree and clung on.
"It was so hard to work out what things were because nothing looked normal.”
Maria had deep gashes to her chest and a terrible wound on her right thigh.
But through the agony and confusion she saw something that gladdened her heart.
Maria says: “About 15 metres away I could see a little head, and I thought ‘My goodness, I think it’s Lucas’.
"After that I heard him screaming for me so I went to get him.
“In that moment it felt like the most blessed vision I have ever had. You forget about yourself completely.
"You just think about saving them. I swam across the current and grabbed him. We held on to a tree trunk.
“I was dying, I could feel it happening to me. When I was up the tree, bleeding very heavily with very deep wounds, I could feel the dying process.
"I had really bad internal bleeding as well as the external wounds.”
Traumatised and fearing another huge wave, Maria and Lucas were found in the tree by a Thai man who ensured they got to hospital.
Maria says: “The man wouldn’t allow me to die. He dragged me through the mud for a long time until he was sure I was in good hands.”
But Maria was convinced the rest of the family could not have been so lucky.
She says: “Not for one second did I believe Quique and my other boys would be alive.”
After the tsunami struck, Quique had lost the youngest sons who had been in his arms until the extreme force of the wave sent him crashing into a column on the ground floor of the hotel.
He got washed away but grabbed a tree and clung on for half an hour.
The dad wept, sure the others were drowned.
Then, many agonising minutes later, he heard Tomas’ voice shouting: “Papa! Mama! Lucas! Simon!”
The pair were reunited and perched on the branch of another tree for half an hour.
Then, amazingly, they heard little Simon yelling for help above the roar of rushing water.
Still convinced his wife and Lucas were dead, Quique nevertheless teamed up with another grieving husband and decided to search.
Quique had to make the heartbreaking decision to leave Simon and Tomas in the care of strangers on the roof of the hotel.


After hours traipsing through hospitals full of the wounded, the dying and the bereaved, Quique could hardly believe his eyes when he found his wife and Lucas.
Maria was not out of the woods – even after leaving Thailand she spent 14 months in hospitals in Singapore and their homeland Spain – but the family’s astonishing survival was a rare example of good luck.
The tsunami killed 230,000 people across Thailand, Sri Lanka, Indonesia and 11 other countries.
Eight years have passed since the tragedy but The Impossible is a reminder of how the terror wave affected so many.
The film, the first movie dramatisation of the disaster, is tipped for Oscar success. Kent-born Naomi Watts plays Maria and Ewan McGregor is her husband.
Lucas, who is now 18 and studying medicine at University College London, is played by rising British actor Tom Holland, 16.
The stunning recreation of the moment the wave came crashing down on the luxury hotel in Khao Lak is horrific.
It took a year to put together the 10-minute sequence.
During the course of filming Maria and Naomi, 44, became close. And as part of the filming process, the family returned to the hotel which has been rebuilt after being flattened by the wave. Amazingly, Maria says the trip “wasn’t difficult at all”.

She says: “We also went to the hospital. It was good to close the whole process.
"None of us is scared of the sea – it wasn’t the sea’s fault. Post-traumatic stress is difficult to move on from. But you have to move on.”
Tomas, who is also studying in Britain, has certainly moved on – he wants to be a beach life guard.
Maria says they rarely talked about the tsunami when they were back in Spain – and when they did, people didn’t believe they had experienced it.
Their incredible survival was turned into the film after the director, Juan Antonio Bayona, heard her on radio.
“We were terribly lucky in a good and a bad way,” Maria says.
“Carrying this luck for life is difficult.
"We stayed in touch with the man my husband travelled with while he looked for us. But it is hard because the man lost his two babies.
“I learnt what real generosity was through the tsunami. People who didn’t know me spent hours looking for my family.
“I was always afraid of things. The tsunami was an incredible gift. I embrace life. My whole life is extra time.”

Film review by David Edwards

Aside from Clint Eastwood’s underpowered Hereafter, the legacy of 2004’s Boxing Day tsunami has yet to get the film it deserves... until now.
A sensory overload of emotion and spectacle, The Impossible is a disaster movie much, much better than the usual overblown fare pumped out by Hollywood.
Ewan McGregor and Naomi Watts are Henry and Maria who, with their three sons, journey to Thailand for a Christmas getaway.
Of course, their holiday turns into a nightmare when the tsunami comes crashing into their resort on December 26, leaving them battered, bruised and scattered.
As the relief effort gets underway, Maria and her eldest, Lucas (an impressive Tom Holland), struggle to survive while attempting to discover the fate of Henry and the twins.
While it’s based on the true story of a Spanish family, director Juan Antonio Bayona hasn’t been afraid to tweak the facts to maximise the drama.
Just go with it, however, and you’ll enjoy an intensely emotional disaster movie.
The tsunami itself is terrifically realised with Mother Nature’s fury portrayed in all its terrifying, indiscriminate fury.
As the waves recede, the family’s horrifying situation is realistically captured by Watts and McGregor, who are better than they’ve been in a long time.
Scenes capturing the pair in an overstretched, blood-marked hospital are profoundly moving, while a sequence where Henry phones home will choke you up.
You can accuse the film of having a thin storyline, and later episodes where the family keep missing one another despite being in the same spot are overdone, but it earns a whole lot of points for its realism and technical craft.

கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் அமைந்திருக்கும் சிவாலயங்கள்.

சிலர் இதை அறிதிருக்கலாம், சிலர் இதை அறியாமல் இருக்கலாம். ஆனால், இது அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டிய ஓர் அறிவியல் கலந்து ஆன்மீக விஷயமாகும்.
எந்தவொரு அறிவியல் நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப கருவிகளும் இல்லாத பண்டைய காலத்திலேயே சிவனின் பஞ்சபூத ஸ்தலங்கள் என கூறப்படும் ஐந்து கோவில்களும், இந்தியாவில் ஒரே நேர்கோட்டில் கட்டப்பட்டிருக்கின்றன.
மிக கச்சிதமாக ஒரே நேர்கோட்டில் அமைந்திருக்கும் இதை எளிதாக எதிர்பாராமல் நடந்த விஷயமாக கருத முடியாது.
கேதார்நாத்லிருந்து, ராமேஸ்வரம் வரை நேர்கோட்டில் கோவில்களை எப்படி அந்த காலத்தில் கட்டினார்கள் என்பது இன்றளவும் நீடிக்கும் மர்மமாகவே இருந்து வருகிறது.
நிலம் - காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில்நெருப்பு - திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் நீர் - திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயில்ஆகாயம் - சிதம்பரம் நடராசர் கோயில்காற்று - திருக்காளத்தி காளத்தீசுவரர் கோயில்
 சிவனின் இந்த பஞ்சபூத ஸ்தலங்களும் ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த கோவில்கள் ஆகும். அப்போது, எந்தவொரு தானியங்கி அல்லது செயற்கைக்கோள் உதவிகளும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 இந்த பஞ்சபூத ஸ்தலங்கள் மட்டுமின்றி இமாலயத்தில் இருக்கும் கேதார்நாத்தும் கூட இதே நேர்கோட்டிலான தீர்க்கரேகையில் (longitude ) அமைந்திருப்பது வியப்பின் உச்சத்திற்கு கொண்டு செல்கிறது.
கேதார்நாத்திலிருந்து இராமேஸ்வரம் வரை இடைப்பட்ட தொலைவு ஏறத்தாழ 2383 கிலோமீட்டர்கள் ஆகும்.
இவ்வளவு இடைப்பட்ட தூரத்தில் இடையிடையே அமைந்திருக்கும் இந்த சிவாலயங்கள் ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருப்பது மர்மம் விலகாமலேயே நீடித்து வருகிறது.
1) கேதார்நாத் - கேதார்நாத் கோயில் (30.7352° N, 79.0669)2) காலேஷ்வரம் - காலேஷ்வரா முக்தீஷ்வரா சுவாமி கோயில் (18.8110, 79.9067)3) ஸ்ரீ காலஹஸ்தி - ஸ்ரீ காலஹஸ்தி கோயில் (13.749802, 79.698410)4) காஞ்சிபுரம் - ஏகாம்பரநாதர் கோயில் (12.847604, 79.699798)5) திருவானைக்காவல் - ஜம்புகேஸ்வரர் கோயில் (10.853383, 78.705455)6) திருவண்ணாமலை - அண்ணாமலையார் கோயில் (12.231942, 79.067694)7) சிதம்பரம் - நடராஜர் கோவிலில் (11.399596, 79.693559)8) ராமேஸ்வரம் - ராமநாத கோயில் (9.2881, 79.3174)

thanks  http://www.newstig.com

Food is linked to NCDs உடலை உண்ணும் உணவு எனும் தலைப்பில் மருத்துவர் கு.சிவராமனின் அருமையான உரை!


The rising global burden of nutrition-related diseases calls for concerted action. There is an emerging urgent need to resolve acute and chronic hunger, malnutrition, and under nutrition. In particular, compromised nutritional status of mothers and children very early in life has significant impact on the future occurrence of chronic diseases such as heart disease and type 2 diabetes. Concurrently, populations are faced with increasing implications of overweight and obesity. The World Health Organization (WHO) estimates that in 2005, more than 1 billion people were overweight and 300 million obese, with projections of 1.5 billion people overweight by 2015. Worldwide, 44 percent of diabetes burden, 23 percent of ischemic heart disease burden, and 7 to 41 percent of the burden of some cancers can be attributed to overweight and obesity

  let’s examine what food security really is. In 1996, the Food and Agriculture Organization defined it as: “Food security, at the individual, household, national, regional and global level [is achieved] when all people, at all times, have physical and economic access to sufficient, safe and nutritious food to meet their dietary needs and food preferences for an active and healthy life.”

The definition includes all aspects of the malnutrition spectrum, and while underweight and stunting are more traditional concerns, we must pay greater attention to obesity and its consequences. It is no longer rare to see overweight children with nutrient insufficiency.
There are natural links between food security and non-communicable diseases (NCDs) like cardiovascular disease, chronic respiratory disease, diabetes and cancer, which together cause nearly two out of three deaths in the world (80 percent of those in developing countries). People everywhere have increasingly similar diets and increasingly similar health risks. Even very poor populations are showing high rates of high blood pressure, diabetes and other diet-related NCDs -– while still facing hunger and traditional food insecurity.

Wednesday, July 13, 2016

நமது 'திருமந்திரம்' உலக அரங்கில்


மின்சாரத்தைக் கண்டு பிடித்தவர் நம் குள்ள முனிவர் அகத்தியர் என்றால் நம்புவீர்களா?


குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.
முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம். இவர் தாங்க "அகத்தியர்". ஒரு சிலர் படத்தைப் பார்த்ததும் யூகித்திருப்பீர்கள்! சரி இவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்மந்தம் என்பதைப் பார்க்கலாம்.
தமிழர்கள் மற்றும் இந்தியர்களின் பழங்கால அறிவியல் தொழில் நுட்பத்தைப் பற்றி ஏற்கனவே ஒரு சில பதிவுகளை நாம் தந்திருந்தோம். சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.
"சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்"
புரியலை நா விட்டுடுங்க..., நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.
இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்,
"ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்"
மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? சித்தர்கள் தவமிருந்து கிடைக்கிற சக்தியா?
Rao Saheb Krishnaji Vajhe (சுருக்கமாய் கிருஷ்ணாஜி) 1891 ஆம் ஆண்டு புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, தமது துறை சார்ந்த விடயங்களை பண்டைய கால படைப்புகளில் தேடலைத் தொடங்கினார். அப்போது உஜ்ஜெய்னி மாகாணத்தைச் சேர்ந்த Damodar Tryambak Joshi (சுருக்கமாய் ஜோஷி) ஜோஷியிடம் ஒரு சில பண்டைய ஆவனங்களைப் பெற்றுத் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார். அது சுமார் கி.மு 1550 ஆம் ஆண்டின் ஆவணம்.
நாம் மேலே பார்த்த அந்த வரிகளைப் படித்த உடன் அதைப் பற்றி தெரிந்து கொள்ள சமஸ்கிருத வல்லுனரான Dr.M.C.Sahastra buddhe (சுருக்கமாய் புத்தே) அவர்களை அணுகினார். புத்தே அப்போது நாக்புர் பல்கலைக்கழக சம்ஸ்கிருதத் துறைத் தலைவர். அவர் இதைப் படித்துப் பார்த்ததும் ஆச்சரியத்துடன் அதிர்ந்து போய் இது ஏதோ ஒரு டேனியல் செல்லைப் போன்ற மின்கலத்தின் கட்டுமானத்தைப் போன்று இருக்கிறது என்றார்.
சரி இதை மேலும் ஆராய வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ள புத்தே அதை நாக்பூரைச் சேர்ந்த பொறியியல் வல்லுனர் P.P. Hole (ஹோல்) அவர்களிடம் அதைக் கொடுத்து ஆராயச் சொன்னார். இதைக் கேட்டதும் நமது கிருஷ்ணாஜிக்கு உற்சாகம் பீறிட்டு வர அவரும் களத்தில் குதித்தார்.
ஒவ்வொன்றாய் படித்து படித்து அதில் கூறப்பட்டதைப் போன்றே தனது மின்கலத்தை வடிவமைக்கும் போது அவர் வந்து முட்டி மோதி நின்ற இடம் சிகிக்ரிவம் என்ற சொல். நாமும் கூட அதை படிக்கையில் என்ன அது என்று சற்று யோசித்திருப்போம். அவர்களும் இது என்னவாய் இருக்கும் எனத் திணரும் போது ஒரு சமஸ்கிருத அகராதியில் "மயிலின் கழுத்துப் பகுதி" என்று இருந்ததைப் பார்த்தார்கள்.
உடனே அவர்கள் இருவரும் பக்ஹ் என்ற ஒரு மயில் சரணாலயத்தில் தலைமைப் பொருப்பாளராய் இருந்தவரிடம் போய் ஏதாவது இறந்த மயில்கள் உள்ளதா அல்லது இங்கிருக்கும் மயில்கள் எப்போது சாகும் என கேட்க அவருக்கு கோபமே வந்துவிட்டது. பிறகு இவ்விருவரும் நிலைமையை விளக்கிக் கூற உடனே பக்ஹ் சிரிக்க ஆரம்பித்துவிட்டார். இருவரும் திகைப்புடன் அவரை நோக்க பக்ஹ் சொன்னார் "அது மயிலின் கழுத்து அல்ல மயிலின் கழுத்தைப் போன்ற நிறம் உள்ள பொருள்". இதைக் கேட்டதும் அவர்களுக்கு சிந்தனை முளைத்தது. ஆஹா! ஆம்! அது தான் அது!, மயிலின் கழுத்து நிறம்! அதே தான். காப்பர் சல்ஃபேட்! கண்டுபிடித்தாகிவிட்டது.
அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்! வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.
இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.
என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் "தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ்' தொட்ரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.
இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திடல.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..
அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார். இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார். அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால "electroplating" என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப்பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிடம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டுபிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

Monday, July 11, 2016

Healing for Children


We believe children are here to teach us unconditional love. Children love - they also absorb energy/emotions and feelings of others like sponges. Yet, children can not process adult emotions. Because they love unconditionally - this is exactly what they will attempt to do. Our children become the environment in which they live, especially the emotional make-up of the people closest to them. Unfortunately, the energetic dynamics of their world can become chaotic and overwhelming. Children then become emotionally distraught, acting out in various ways; they can also become physically ill.
For this reason, it is important to help your children release the emotions/feelings/projections that do not belong to them. Before you work with any child,, you should pull your energetic field into your own space. (You can use the clearing technique to do this) By being in your own space it's easier to sense chaotic energy. Wait until your child is resting, perhaps watching television or looking at a book. Place your open 'pulling' hand, palm side down, on their lower back, just above their waist. If it is more convenient, place your open hand gently on their stomach. Men will use their right hand and women will use their left hand. Spread your fingers wide open to receive the energy easily.
Use your intention to release any emotions, feelings, thoughts or any other energy that is not of clear light from your child. It's not necessary for you to say any words, but you can if you feel your child would understand. If you have older children and they ask what you are doing - allow them to know that you are helping them to feel better.
Releasing this energy may feel like thousands of tiny 'hits' on the palm of your hand. Leave your hand on the child until you are certain there is nothing more to be released.
You can also use your 'pulling' hand on your child's forehead when they have a headache, or any other part of their body that is hurting. Energy can be released each and every time.
Ken Page

சாய்பாபா‬ பற்றி இதுவரை பலரும் அறியாத ‪ அதிசய‬ ‪தகவல்கள்‬.


ருத்ராட்ச முகத்தில் உள்ள தேவதைகளால் விலகும் பாவங்களை தெரிந்து கொண்டு பயன்படுத்துவீர் :


ஒரு நாள் ஜமதக்கினி மகரிஷியின் வயலில் ஒரு பசு மேய்ந்து கொண்டிருந்தது. அவர் ஒரு நெற்கதிர் எடுத்து விரட்டினார். அந்தப்பசு இறந்துவிட்டது. இதனால் பாவம் செய்து விட்டோம் என்று கருதி அவர் சுகமகரிஷியிடம் சென்று தன் துன்பத்தை கூறினார். உடனே அவர், ஜமதக்கினி நீ காசிக்கு சென்றால் ஒரு முக ருத்ராஷம் கிடைக்கும். அதை நீ அணிந்துக் கொண்டால் உன்னுடைய ‘கோ ஹத்திய தோஷம்’ நீங்கும் என்று கூறினார்.
ஒவ்வொரு முகத்திற்கும் ஒவ்வொரு தேவதை அதிபதியாக இருப்பார்கள். அவரவர் அந்தந்த பாவங்களை அழித்து விடுவார்கள். இந்த ருத்ராஷம் குடும்பத்தில் உள்ளவர்களின் பாவத்தை அழிக்கும் என்று சொன்னாராம்.
ஒரு முகம்:
ஒரு முகம் கொண்ட ருத்திராட்சம் பிரம்ம ஹத்திய தோஷம் அழிக்கும். இது சிவனின் மற்றொரு உருவம் என்று கருதப்படுகிறது. இதை அணிந்தால் சிவனைப் பூஜை செய்த பலன் கிடைக்கும்.
இரண்டு முகம்:
இரண்டு முக ருத்ராஷம் அர்த்த நாரிஸ்வர சொரூபம். அனைத்து பாவங்களையும் அழிக்கும். இதை அணிந்தால் சிவனையும், சக்தியையும், பூஜை செய்த பலன் கிடைக்கும்.
மூன்று முகம்:
மூன்று முகம் ருத்ராஷத்திற்கு அக்னிதேவன் அதிபதி. இந்த ருத்ராஷம் ஸ்ரீ ஹத்தியா தோஷத்தை நீக்கும். (ஒரு பெண்ணை கொன்றால் வரும் பாவம்). மும்மூர்த்திகளையும் பூஜை செய்த பலன் கிடைக்கும் மூன்று முக ருத்ராஷம் மணமானப் பெண்கள் அவர்களின் தாலிக்கொடியில் அணிந்தால் பூவும், பொட்டும் நிலைத்து மகிழ்ச்சியை அளிக்கும்.
நான்கு முகம்:
நான்கு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி பிரம்மன். ஞாபசக்தியை பெருக்கும் சர்வஹத்தியா தோஷம் நீங்கும்.
ஐந்து முகம்:
ஐந்து முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி காலாக்கினி ருத்திரன். இது அனைத்து பாவங்களையும் அழிக்கும். மனதிற்கு சாந்தி தரும். இரத்த அழுத்தத்தை நீக்கும். அஜீரணத்தைப் போக்கும் மார்பு வலியை நீக்கும். தூக்கம் இல்லாமல் துன்பப்படுபவர்கள் ஒரு ருத்ராஷக்கொட்டை எடுத்து அதை பால்விட்டு இழைத்து அந்த சாந்தை எடுத்து கண்ணின் இமையின் மீது தடவினால் நல்ல உறக்கம் வரும். விஷ பூச்சிகள் தீண்டினால் உடனே ஒரு ருத்ராஷக் கொட்டை எடுத்து எலுமிச்சைப் பழச்சாரில் குழைத்து அந்த சாந்தை எடுத்து தீண்டிய இடத்தில் தடவினால் வலி குறைந்து குணமாகும். காய்ச்சிய நீர் அல்லது காய்ச்சியை பாலில் இரண்டு ருத்ராஷக் கொட்டைப் போட்டு உடன் எடுத்து விட வேண்டும். அப்படி எடுத்த நீர் அல்லது பாலை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் எந்த விஷ பூச்சிகளும் அருகில் நெருங்காது. 32 கொட்டை கொண்ட மாலையை அணிந்தால் விரோதி கூட மரியாதை செலுத்துவான்.
ஆறு முகம்:
ஆறு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி கார்த்திகேயன் பனிரெண்டு ருத்ராஷ கொட்டை கையில் (மணிக்கட்டில்) அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும். ஹிஸ்டீரியா போன்ற வியாதிகளை வராமல் காக்கும். மாணவர்கள் அணிந்தால் ஞாபசக்தி பெருகும் கண்திருஷ்டியைப் போக்கும்.
ஏழு முகம்:
ஏழு முகம் ருத்ராஷத்திற்கு இதற்கு அணங்கம் என்று பெயர். இதற்கு அதிபதி காமதேவன். ஜாதகம் சரி இல்லாதவர்கள் இதை அணியலாம். இதை அணிந்தால் அகால மரணம் வருவதைத் தடுக்கும்.
எட்டு முகம்:
எட்டு முகம் ருத்ராஷத்திற்கு அதிபதி விக்னேஷ்வரன். பஞ்ச மகா பாதகத்தை அழிக்கும். மன தைரியம் உண்டாக்கும். கணேசனை பூஜை செய்த பலன் கிடைக்கும். காய்ச்சியப் பாலில் இதைப்போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்தினால் பக்கவாதம் மூன்று மாதங்களில் குணமாகும்.
ஒன்பது முகம்:
ஒன்பது முக ருத்ராஷத்திற்கு அதிபதி பைரவன். இதற்குள் ஒன்பது சக்தி இருக்கிறது. ஒரு கொட்டை அணிவதாக இருந்தால் வலது கையில் அணியலாம். துர்கை பூஜை செய்பவர்களும் இதை அணியலாம். மனிதன் கிரக சாந்திக்காக நவரத்தினங்களை மோதிரமாக அணிகின்றான். நவரத்தின மாலை அணிகின்றான். நவகிரக பூஜையும் செய்கிறான். இவையாவும்; ஒரு ஒன்பது முக ருத்ராஷக் கொட்டை அணிந்தால் கிடைக்கும்.
பத்து முகம்:
பத்துமுக ருத்ராஷத்திற்கு ஜனார்த்தனம் என்று பெயர். இதற்கு அதிபதி ஸ்ரீ மகா விஷ்ணு அனைத்து கஷ்டத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு. பாம்பு மற்றும் விஷபூச்சிகளில் இருந்து நம்மை காக்கும் சக்தி இதற்கு உண்டு. காய்ச்சியப் பாலில் இந்த ருத்ராஷக் கொட்டையைப் போட்டு எடுத்துவிட்டு அந்தப் பாலை குழந்தைகளுக்கு கொடுத்தால் கக்குவான் வராமல் தடுக்கும். ஒரு முக ருத்ராஷம் எப்படி சிவசொரூபமோ, அதேபோல் தஸமுகி ருத்ராஷம் சம்பூர்ண விஷ்ணு சொரூபம். இது மிகமிக குறைவாக கிடைக்கிறது.
பதினொன்று முகம்:
பதினொன்று முக ருத்ராஷம் ஏகாதஸ ருத்ர சொரூபம். இதை அணிந்தால் அசுவமேத யாகப்பலன் கிடைக்கும். முனிவர்களின் பத்தினிகள் கூட இதை அணிந்து கொண்டார்களாம். இதைப் பெண்கள் அணிவதால் இரக்கக்குணம் உண்டாகும்.
பனிரெண்டு முகம்:
பனிரெண்டு முகம் ருத்ராஷம் ஆதித்தியம் ஆகும். இதற்கு அதிபதி சூரிய பகவான். இதை காதில் அணிந்தால் சூரியனின் கருணை நமக்கு கிடைக்கும்.
பதிமூன்று முகம்:
பதிமூன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் கார்த்திகேயன், காமதேவன், இதை அணிந்தால் மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.
பதினான்கு முகம்:
பதினான்கு முக ருத்ராஷம் பரமசிவனுக்கு நிகரானது.
பதினைந்து முகம்:
பதினைந்து முக ருத்ராஷம் கடவுளின் மேல் பக்தியை உண்டாக்கும் சக்தி இதற்கு உள்ளது.
பதினாறு முகம்:
பதினாறு முக ருத்ராஷம் தந்திரம் செய்பவர்களுக்கு இந்த ருத்ராஷம் பயன் தரும்.
பதினேழு முகம்:
பதினேழு முக ருத்ராஷத்திற்கு அதிபதி விஸ்வகர்மா. இதை அணிந்தால் சகல வசதி கிடைக்கும்.
பதினெட்டு முகம்:
பதினெட்டு முக ருத்ராஷத்திற்கு அதிபதி பூதேவி.
பத்தொன்பது முகம்:
பத்தொன்பது முக ருத்ராஷம் அணிந்தால், ஞானம் பெருகும். சாந்திக் கிடைக்கும்.
இருபது முகம்:
இருபது முக ருத்ராஷத்திற்கு அதிபதிகள் பிரம்ம தேவன். சரஸ்வதி இதை அணிந்தால் ஞானம் பெருகும். மனதிற்கு சாந்தி தரும்.
இருபத்தி ஒன்று முகம்:
இருபத்தி ஒன்று முக ருத்ராஷத்திற்கு அதிபதி குபேரன். சொத்து சுகம் கிடைக்கும். எல்லா பாவத்தையும் அழிக்கும் சக்தி இதற்கு உண்டு.
ருத்திராஷம் கொட்டையின் உட்பகுதியில் வெற்றிடம் உள்ளது. இதனால் புதிய ருத்திராஷம் தண்ணிரில் மிதக்கும். பயன்படுத்த பயன்படுத்த ருத்திராஷத்திற்கு எடை கூடும். இதனால் ருத்திராஷம் நிரில் முழ்கும். ருத்ராஷக் கொட்டை அணிவதற்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது நாம் எந்த நிலையிலும் ருத்திராஷத்தை பயன்படுத்தலாம். இதனால் எவ்விதத்திலும் ருத்திராஷத்திற்கு சக்தி குறையாது. ஆனால் மனதிற்கு தவறு என்று நினைத்தால் ருத்திராஷத்தை அணிய வேண்டாம்.
நாக ருத்திராட்சம்
இந்த ருத்திராட்சம் மிகவும் அரிதான ஒன்று எவருக்கும் எளிதில் கிடைக்காது. அதிலும் உண்மையான நாக ருத்திராட்சமாக இருக்க வேண்டும் மற்றும் பயன்படுத்தும் முறையை தெரிந்து வைத்திருக்க வேண்டும். இது ஒருமுக ருத்திராட்சத்துடன் பாம்பு படம் எடுப்பது போல் ஒட்டியிருக்கும். இது மிகவும் குறைந்த அளவே கிடைக்கும். இதன் பயன்பாட்டை அறிந்து அணிவது நலம். ஒரு ருத்திராட்ச மரத்தில் நாகம் ஏறினால் அந்த மரத்தில் ஒரு ருத்திராட்ச கொட்டையில் மட்டும் நாகம் இருப்பது போல் உருவாகும். பின்பு அம்மரத்தில் ருத்திராட்ச கொட்டை உருவாகாது மேலும் அம்மரத்தை வெட்டி விடுவார்கள்.
ஒரு ருத்திராட்சக் கொட்டையை அணிந்தால் பயனில்லை 108 அல்லது 54 கொட்டை மாலையின் நடுவில் ஒரு பெரிய ருத்திராட்சம் போடவேண்டும். அப்பொழுது தான் முழுமையான பலன் கிடைக்கும். உண்மையான ருத்திராட்சத்திற்கு புஜத்துவாரம் தட்டையாகத்தான் இருக்கும். போலி ருத்திராட்சம் புஜத்துவாரம் உருண்டையாக இருக்கம். இதை வைத்தது போலியைக் கண்டுபிடித்து விடலாம்.

Sunday, July 10, 2016

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்-பாமா

தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகளே ஆயுதம்
நீங்கள் நிறைய கெட்ட வார்த்தைகளை (வசவு) எழுதுறதா விமர்சன வட்டாரத்திலே ஒரு முணுமுணுப்பு இருக்கே...?
bama பாமா படிச்ச பொண்ணுதானே நிறைய கெட்ட வார்த்தைகளை எழுதியிருக்கேன்னு சொல்றாங்க. தலித் பெண்களுக்கு கெட்ட வார்த்தைகள் தான் ஆயதம் எங்களாலே கத்தி வச்சுகிட்டு சண்டை போடமுடியாது. தற்காப்புக்கும் கெட்ட வார்த்தைகள் தான். அடிக்கிறவன் வேணுமானா நல்ல வார்த்தையா பேசலாம் அடிபட்டவன் என்ன வார்த்தையை பேசுவான்? அப்படித்தான் பேசமுடியும். நீங்க எப்படி எங்ககிட்டேருந்து நல்ல வார்த்தையை எதிர்பார்க்கிறீங்க காலம் முழக்க சாதியைச் சொல்லி அடிக்கிறே, பெண்ணுன்னு சொல்லி ஒதுக்குறே, பொருளாதார ரீதியா  ஒடுக்குறே, கலாச்சார ரீதியா இழிவுபடுத்துறே இவ்வளவுவையும் தாங்கிகிட்டு நாங்க நல்ல வார்த்தை தான் பேசணும்னா சாத்தியம் இல்லே அப்படி எழுதினா அது உண்மைக்குப் புறம்பா எழுதுற விசயம் தான்.
இப்போது நிறைய பெண் கவிஞர்கள் எழுத வந்திருக்காங்க அவர்களின் பெண்மொழி சமூகத்தில் சில அதிர்வுகளை ஏற்படுத்தக்கூடியாதா இருக்கு. இது பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?
நிறைய பெண் கவிஞர்கள் பெண் உடல் சார்ந்து, பெண் பிரச்சினைகள், பெண்பாலியல் சார்ந்து நிறைய கவிதைகள் எழுதுறாங்க. அதை நான் குறைச்சு மதிப்பிடல. அதே சமயத்துல பெண்களுக்கு வாழ்வியல் ரீதியான பிரச்சினைகள் இருக்குதில்லே.. பிரசவம், குழந்தைப்பேறு பாலுட்டுவது, தாய்மை, குழந்தையை வளர்ப்பது, வயசுக்கு வருவது இந்த மாதிரி விசயங்கள் இவையெல்லாம் என்னைப்பொறுத்தவரை ஒரு தலித் பெண்ணுக்கு பிரச்னைகளே இல்லை. இதைவிட பயங்கரமான பிரச்னைகளெல்லாம் இருக்கு. நிறைமாச கர்ப்பத்தோட வயல்ல குனிஞ்சு நட்டுகிட்டு வர்ற பெண்களை பார்த்திருக்கேன். மரத்திலே தொட்டி கட்டி போட்டு குழந்தை பசியோட கத்திக்கிட்டே கிடக்கும் வேலையை முடிச்சிட்டுதான்  பாலுட்டவே முடியும். இப்படியெல்லாம் பிரச்னை இருக்கும் போது இதெல்லாம் ஒரு பிரச்னைன்னு இவங்க எழுதுறாங்களேன்னு. ஒருகனமில்லத விசயமாத்தான் எனக்குப்படுது அதனால இதையெல்லாம் சிலாகிச்சு என்னால பாராட்ட முடியல.
உங்கள் தலித் மொழிநடைக்கு நிறைய விமர்சனங்கள் வந்ததில்லையா..?
இதுவரை தமிழ்ப்படைப்பாளிகள் எல்லாம் ஆண் மொழியில் தான் எழுதிகிட்டிருந்தாங்க இவங்க என்னுடைய தலித் மொழியை ஏற்றுக் கொள்வதற்கு ரொம்ப கஷ்டப்படுறாங்க. தமிழ் இலக்கிய பிhதாமகர்கள் ஒரு வகையான மொழிநடை சுகமான வாசிப்பு என்று வைத்திருக்கிறார்கள். அதைத்தான் எல்லாரும் கடைப்பிடிக்கணும் என்கின்ற எதிர்பார்ப்பு இவங்களுக்கு இருக்கு. ஏன் ஏன் அப்படித்தான் இருக்கணும்? புதியமொழி, புதியநடை, புதிய சொல்லாடல் இருக்க்கூடாதா? இதை ஏன் இவங்களாலே சகிக்க முடியல்லே  இதையே ஆதிக்க சாதியினரோ ஆண்களோ எழுதியிருந்தால் சிலாகித்திருப்பார்கள்.
இன்றைய குடும்ப அமைப்பு பற்றிய உங்கள் கருத்து என்ன?
இப்போது இருக்கிற குடும்ப அமைப்பு பெண்கள் வளர்ச்சியைத் தடைப்படுத்தக்கூடியது Bama (1) இன்றைய சராசரி வளர்ப்பு முறையில் பெண்குழந்தை பிறந்தால் பெற்றோர்களுக்கு கல்யாணக் கவலை வந்துவிடுகிறது. இது மாறணும் பெண் குழந்தைகள் திருமணத்துக்காக வளர்க்கபப்பட வேண்டிய ஒரு  பொருள்  என்கிற கண்ணோட்டத்தை விட்டு;ட்டு வளர்த்து வந்தோம்னா அது வளர்ந்த பிறகு அதுவே முடிவு செய்து கொள்ளும்.
உங்க கருக்கு நாவல் இலக்கிய வட்டாரத்திலே  எந்த மாதிரியான  கவனிப்பை பெற்றது?
நான் எதிர்பாராத அளவுக்கு பெரிய வீச்சு கிடைச்சுது. அதன் வடிவம் மொழிநடை, விசயம் எல்லாம் புதிசா இருக்கிறதா பரவலா ஏத்துகிட்டாங்க சில பேர் இது நாவலா? என்ன மொழி நடை இது என்கிற மாதியான விமர்சனத்தை வைச்சாங்க  அதைப் பற்றி எல்லாம் நான் பெரிய அளவுக்கு கவலைப்படலே. ஏன்னா நான்  இலக்கியவாதிகளுக்காக அதை எழுதல அதனால எனக்கு அது பெரிய விசயமா தெரியல. சர்ச் சைடுலேருந்து பெரிய எதிர்ப்புக்கள் வந்துச்சு அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நடந்தைத்தானே எழுதியிருந்தேன்.
சங்கதி நாவல்லே கடைசி அத்தியாயத்திலே நானு பறச்சியாய் பெறந்தது ரொம்ப நல்ல காரியமாத்தான் தெரியுது. ஆனா எம்புட்டுத் தடவ இந்தச் சாதில பெறந்ததுக்காக  வெக்கப்பட்டுக்கிட்டு வருத்தப்பட்டு இருந்திக்கேன்னு நினைச்சு கிட்டேன்னு பெருமையா சொல்லியிருக்கீங்க. நீங்கள் சங்கதியில் வாசகர்களுக்கு சொல்ல வந்த சங்கதி இது தானா?
இந்த மாதியான கஷ்டமான சூழலிலே நாங்கள் இருந்தாக் கூட அதையெல்லாம் உடைச்சிகிட்டு வாழ்ந்து காட்டக்கூடிய பாத்திரப் படைப்புக்கள் அதிலே இருக்கு. அந்தப் பலத்துக்கு காரணம் தலித் பண்பாடு என்பதை கோடிட்டு காட்டுறேன்.  அந்தப் பண்பாட்டு ரீதியான புரட்சியை செய்யும் போது இந்த மாதிரிப்பட்ட ஒரு கஷ்டத்திலேயும் கூட விடுதலை அடைந்த பெண்களோட சரித்திரம் தான் இது என்கிற மெஸேஜா இருக்கு.
இப்போது உங்களுக்கும் உங்கள் கிராமத்துக்கும் ஆன தொடர்பு எப்படி இருக்கு?
நான் எட்டாவது படிச்சுட்டு 13 வது வயதிலேயே கிராமத்தை விட்டு வெளியே போயிட்டேன். அதுக்கு பிறகு லீவுக்கு போறது தான் அதுக்கு பிறகு நிரந்தரமா அங்கு போய் வாழ்றது இல்லே. நான் பிசிக்கலா இங்க இருக்கேன்னாலும் உணர்வுரீதியா அங்கே தான் இருக்கேன்.. சமூக தளத்திலே இல்லன்னா எழுதுறது கஷ்டம்.
கருக்கு 1992ல் வந்தது சங்கதி 1994ல் வந்தது. இடையிலே நிறைய கதைகள் எழுதியிருக்கீங்களே?
bam4 சிறுகதை எழுத முடியும்னு நான் நினைக்கலே அதுக்காக நான் முயற்சியும் பண்ணலே. கருக்கு வந்த பிறகு இந்திய டுடெல தான் இலக்கிய மலருக்காக ஒரு சிறுகதை கேட்டாங்க அப்போதான் அண்ணாச்சி என்கிற கதையை எழுதினேன். அது எல்லோருக்குமே பரவலா புடிச்சிருந்தது. எல்லாரும் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. அது எனக்கு ரொம்ப தெம்பா இருந்தது. அந்தக் கதை தான் என்னால கதை எழுத முடியும் என்கிற நம்பிக்கையை உண்டாக்கிச்சு.
உங்க ஊர் மக்கள் என்ன மாதிரி பீல் பண்ணாங்க?
கடுமையான எதிர்ப்பு வந்தது அது நான் எதிர்பார்க்காத ஒண்ணு. ஊருபேரை மட்டும் மாற்றி எழுதியிருந்தேன். ஆனா லொககேசனை வைச்சு இந்த ஊர்தான்னு புரிஞ்சிருக்கலாம்.மனுசங்க பேரையெல்லாம் அப்படி அப்படியே வைச்சிருந்தேன். பட்டப் பெயரையெல்லாம் வைச்சு எழுதிட்டேன். அது அவங்களுகுகு கஷ்டமாயிடுச்சு அங்கே ரொம்ப பேருக்கு வாசிக்கத் தெரியாது. வாசிச்ச கொஞ்சப் பேரும் இத எவ்வளவு பேரு படிப்பாங்க என்கிற மாதிரி ஏத்தி விட்டுட்டாங்க நான் வெளியூருல இருந்ததால எங்க அப்பாவைக் கூப்பிட்டு சண்டை போட்டுருக்காங்க எங்க ஊருக்குள்ளேயே நான் போக முடியல.
உங்க கருக்கு நாவல் தமிழின் முதல் தலித் தன் வரலாற்று நாவலா கருதப்படுது. அதுக்கு தமிழ் இலக்கிய வட்டாரத்திலே பிரமாதமான வரவேற்பும் கிடைச்சிருக்கு அந்த நாவலை நீங்க எந்தச் சூழல்ல எழுதுனீங்க.?
1990ல் கருக்கு வந்தது. அதை நாவல்னோ சுயசரிதைன்னோ நான் எழுதல. என் மன ஆறுதலுக்காக எழுதினது. 1985ல்; ஒரு பள்ளிக்கூடத்தில் டீச்சரா வேலை பார்த்துக்கிட்டிருந்த நான் கிறிஸ்துவ மடத்திலே சிஸ்டரா போனா தலித் பிள்ளைகளுக்கு உந்துசக்தியா இருக்கலாம் சுதந்திரமா செயல்படலாம்னு நெனைச்சு அதில சேர்ந்தேன்.  மூணுவருசம் சிஸ்டர் ஆகுறதுக்கான பயிற்சி. சிஸ்டரான பிறகு நாலுவருசும் அங்கு ஆசிரியராக  வேலை பார்த்தேன். நான் எந்த நோக்கத்துக்காக போனேனோ அந்த நோக்கம் நிறைவேறுவதற்கான சாத்தியமே அங்கு இல்லே. பணக்காரங்க பிள்ளைங்க படிக்கிற ஸ்கூலுக்கு ஆசிரியராத்தான் இருக்க முடிஞ்சுது. மேல்மட்டத்து ஆட்களை மேலும் மேலும் தூக்கிவிடுகிற காரியத்தைத் தான்  அவங்க செஞ்சுகிட்டிருந்தாங்க. என்னைப் போன்ற கஷ்டப்படும் தலித் மக்களுக்கு என்னால எந்தப் பிரயோஜனமும் இல்லங்கிறது ரொம்ப வேதனையா இருந்தது. என்னோட தலித் கலாச்சாரத்துக்கும் அங்குள்ள கான்வென்ட் கலாச்சாரத்துக்கும் கொஞ்சம் கூட ஒத்துப் போகல எங்களோடது வெள்ளத்தியான கலாச்சாரம.; அவங்களது அப்படி கெடையாது. பூடகமா வேஷம் போடுகிற மாதிரிதான் எனக்குப் புரிஞ்சுது. என்னால அப்படி வேஷம் போட்டுகிட்டு இருக்க முடியல எனக்குப் பொருத்தமில்லாத இடம்னு என் மனசுல பட்டது. அங்கிருந்து 1992லே வந்தேன்.
வெளியே வரும் போது வேற வேலை இல்ல. சேமிப்போ சொத்து சொகமோ எதுவும் கிடையாது. வெறுமனே வெறுங் கையோட வெளியே வர்றேன். ஏழவருசம் உள்ளேயே கிடந்துட்டேன்ல சாதராண மனிதர்களோட உறவு கொள்ளவோ சமுதாயரீதியான வாழ்க்கைக்கோ தகுதி இல்லாத மாதிரியான உணர்வு எனக்கு இருந்தது. அது தான் எனக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு  எதிர்காலம் பத்தின கனவு இல்லன்னாலும் அந்த நிகழ்காலத்துல வாழ்றதுக்கு கூட வழிவகை ஒண்ணும் தெரியல. அப்படிப்பட்ட இக்கட்டான சூழல். என்ன பண்றதுன்ட்டு  சின்னதா ஒரு வேலை பார்த்துகிட்டு ஜீவிதம் bama_0427 பண்ணிக்கிட்டிருந்தேன். என் கிராமத்து சந்தோசமான கலகலப்பான சூழல் எல்லாமே இழந்து போய் இன்னிக்கு இப்படி உட்காந்து இருக்கோமே என்கிற ஒரு புரிதல் எனக்கு ஏற்பட்டுச்சு. மறுபடியும் அந்த வாழ்க்கைக்கு ஏங்குகிற மாதிரியான சூழல் .எங்க குடும்ப நண்பர் மாற்குவிடம் என் சூழ்நிலையைச் சொன்னேன் வாழ்க்கையிலே ஒருபிடிமானமே இல்லாம அந்தரத்திலே இருக்கிற மாதிரி இருக்குன்னு சொல்லி அழுதேன். அப்போதான் இதையெல்hம் ஒரு நோட்டுல எழுதி வை மனசுக்கு ஆறுதலா இருக்கும்னு மாற்கு சொன்னார்.  ஓரு ஆறு மாசம் மனசுக்கு என்ன என்ன  பட்டதோ அதையெல்லாம் ஒரு நோட்டுல எழுதினேன். பிறகு வாசிச்சபோது எனக்கு நல்லா இருந்தது. அதை புத்தகமா போடலாம்னு சொன்னாங்க. ஆனா எனக்கு அதிலே உடன்பாடு இல்ல. என் விசயம் மட்டுமல்ல அது ஊர்மக்கள் பலரோட விசயங்களும் கலந்து ஒரு கலவையா வந்திருந்தது.  அது தலித்மொழி பொதுமொழி  என ரெண்டு மொழியிலேயும் கலந்து எழுதியிருந்தேன். ரெண்டு மூணுநண்பர்களும் வாசிச்சிட்டு இந்த தலித் மொழிநடை புதுசா இருக்கு மொத்தத்தையும் இதே மொழிநடையிலேயே கொண்டு வந்துட்டா நல்லா இருக்கும் என சொன்னாங்க. மறுபடியும் வந்துட்டா. எழுதி எடிட் பண்ணி கொடுத்தேன். புத்தகமா அவங்களே போட்டாங்க அப்படி வந்தது தான் கருக்கு.
மேல் சாதிக்காரங்களோட ரியாக்சன் எப்படி இருந்தது?
அவங்கள்ல சில பேரு படிச்சிருக்காங்க ஆனா நேரடியா மோதல. எங்க சனங்க அவங்ககிட்ட வேலைக்குப் போகும் போது ரொம்ப குத்தலா பேசி திருப்பி அனுப்பியிக்;காங்க.
உங்க ஊர் எதிர்ப்பை எப்படி எதிர்கொண்டீங்க?
எங்க ஊருலே என்னை அடிக்கணும்கிற மாதிரித் திட்டம் போட்டிருக்காங்க ஒரு பையன் எனக்கு கடிதம் போட்டிருந்தான் கருக்கு பற்றி ஒரு ஆயவுக் கடிதம் எழுதி உங்களைப் போல வேறு யாரும் நம்ம விசயங்களை இப்படி எழுதினது கிடையாது. நீங்க மட்டும் தான் எழுதியிருக்கீங்க. இவங்க தவறா புரிஞ்சிகிட்டாங்க நான் அவங்களுக்கு விளக்கிச் சொல்றேன்னு எழுதியிருந்தான். அவன் கல்லூரி மாணவர்களை  எல்லாம் கூப்பிட்டு தெருவிளக்கு வெளிச்சத்திலே உட்கார வைச்சு சத்தமா வாசிச்சு ஒவ்வொரு விசயத்தையும் இந்த விசயத்த தான் இப்படி இப்படி எழுதியிருக்கான்னு  புரிய வைச்சுருக்கான் பிறகு கொஞ்சம் கொஞ்சமா ஒரு மாதிரி புரிஞ்சிக்கிட்டாங்க. எங்க ஊரிலே அம்பேத்கார் சிலை ஒன்னு வைச்சாங்க அந்த நிகழ்ச்சிக்கு என்னைக் கூப்பிட்டிருந்தாங்க எனக்கு கருக்கு பாமா-ன்னு அடைமொழி வைச்சி அழைப்பிதழ் போட்டிருந்தாங்க. எனக்குப் பாராட்டும் நடத்தினாங்க அந்த மண்ணைவிட்டுப் பிரிஞ்சு வந்து ரொம்ப நாளாகி  இருந்தது ஆனா இந்த நிகழ்சிக்குப் பிறகு என் கிராமத்துக்கும் எனக்கும் ஒரு ஆழமான நெருக்கம் உறவு ஊரே சொந்தமான மாதிரி ஒர் உணர்வு ஏற்பட்டிருக்கு
உங்க படைப்புக்கள் எந்தெந்த மொழிகளிலே வந்திருக்கு?
கருக்கு,சங்கதி ரெண்டும் இங்கிலீஸ்லே வந்திருக்கு சங்கதி பிரெஞ்சிலே வந்திருக்கு. அதோட வெளியீட்டு விழாவுக்கு நான் பாரிசிக்குப் போயிருந்தேன். நாவல் நல்லா இருக்குன்னு சொன்னாங்க. வன்மம் நாவலும் கிசும்புக்;காரன் சிறுகதைத்தொகுதியும் ஆங்கிலத்தில் வரப்போகுது. அண்ணாச்சி சிறுகதை 16 இந்திய மொழிகள்லே வந்திருக்கு.
உங்க மன ஆறதலுக்காக உங்களுக்கு நீங்களே எழுதிகிட்டது தான் கருக்குன்னாலும் ஒரு அற்புதமான மொழிநடை அதிலே உங்களுக்கு கைவந்திருக்கு சமூகம் பற்றி தெளிவான புரிதலும் உங்களுக்கு இருந்திருக்கு பிரச்சினைகளை எந்தவித தயக்கமோ கூச்சமோ இல்லாம எழுதியிருக்கீங்க ஆக எழுத்துப் பயிற்சியும் தீவிர வாசிப்பும் ஏற்கனவே உங்களுக்கு இருந்திருக்ககின்னு  நினைக்கிறேன்.?
ஆரம்பகால வாசிப்பின்னா நான் ஹைஸ்கூல்ல படிக்கும் போது அண்ணன் (ராஜ் கௌதமன்)  காலேஜ் படிச்சுட்டு வீட்டில இருந்தாங்க. அப்போ எங்க ஊர் பக்கத்துல இருந்த லைப்ரரியிலேயிருந்து நிறைய புத்தகங்களை எடுத்துகிட்டு வந்து படிப்பாங்க. இந்திரா பார்த்தசாரதி, நா.பார்த்தசாரதி, அகிலன,; ஜெயகாந்தன், இந்த மாதிரி நாவல்கள் தான். அப்போதெல்லாம் தேடிப்பிடித்துப் படிக்கிற பழக்கமில்லே. கிடைக்கிறதைப் படிக்கிறது. அப்போது எனக்கு ரொம்பப் பிடிச்சது ஜெயகாந்தன் நாவல்கள். ஜெயகாந்தன் bama1 மற்ற எழுத்தாளர்கள்லே இருந்து வேறுபட்டு நிக்கிறாரு என்பது மட்டும் அப்போ புரிஞ்சது. இப்போ நினைக்கும் போது மற்றவர்கள் பாலியில் ரீதியான, உளவியல்ரீதியான, மேல்தட்டு வர்க்கம் சார்ந்த விசயங்களை பதிவு செய்த போது இவர் நம்மள மாதிரி கஷ்டப்படுகிற உழைக்கும் அடித்தட்டு சனங்களைப் பற்றி எழுதுறாருன்னு தோணியிருக்கு. கல்லுரிக்குப்  போனபிறகு சிவசங்கரி, இந்துமதி, லக்சுமி இப்படியான புத்தகங்களை வாசிச்சிருக்;கேன். இப்படித்தான் என் ஆரம்பகால வாசிப்பு இருந்தது.கருக்கு வெளிவந்த பிறகு வந்த விமர்சனங்களுக்குப் பிறகு தான் இவங்க சொல்ற நாவல்லாம் எப்படியிருக்குன்னு தெரிஞ்சிக்கலாம்னு பரவலா  படிக்க ஆரம்பிச்சேன். என் ஆரம்ப கால எழுத்தைப் பற்றி கேட்டிங்கள்லே கல்லுரி நாட்களிலே கவிதைகள் எழுதியிருக்கேன். இயற்கையை பொருளாதார ரீதியான ஏற்றத்தாழ்வுகளை கவிதைகளாக்கி இருக்கேன். ஆனா எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பினது கிடையாது. கல்லூரி மலரிலே நியை வெளிவந்திருக்கு.
இதுவரை 29 கதைகள் எழுதியிருக்கீங்க ஒவ்வொரு கதையிலேயும் பழைமையை உடைச்சு புதுமையை புகுத்துற மாதிரியான ஒரு ஃபார்மட் இருக்கு குறிப்பா அந்த காலத்தில்னு ஒரு கதை அதிலே தலித்துகளிடம் அந்தக்காலத்திலிருந்தே எதிர்ப்;புணர்வு இருந்திருக்கு என்கிற விசயத்தை பதிவு செஞ்சிருக்கீங்க?
அந்தந்த வாழ்நிலைச் சூழலில் நடந்த சம்பவங்களை நான் ஹைலைட் பண்ணம்னு நெனைக்கிறேன். ஓட்டுமொத்தமான புரட்சின்னு இல்லைன்னாலும்  சின்னச்சின்ன விசயங்கள் நிறைய நடந்துகிட்டிருக்கு. இப்பதான் தலித் எழுச்சி ஏற்ட்டிருக்கின்னு சொல்றோம். ஆனால் அப்போதே சின்னச் சின்ன நிகழ்ச்சிகள் நடந்திருக்கு. அதெல்லாம் பதிவு பண்ணப்படல அப்போ தலித்துகளுக்கு படிப்பறிவு இல்லே. அப்போது எழுதிய ஆதிக்க சாதியினர். அவர்களுக்கு எதிரான விசயங்களை பதிவு பண்ணுவாங்களா. என் கதைகளைப் படிச்சுட்டு நிறைய பேரு இப்படி நடக்குமான்னு கேட்கிறாங்க. இதுல என்ன தெரியுதுன்னா சமூகத்தில் அடிமட்டத்துல நடக்கிற எந்த விசயமும் அவங்களுக்குத் தெரியல என்கிறது தான். தெரிஞ்சுக்;கிறதுக்கான முயற்சிகளையும் அவங்க எடுத்துக்கிறதில்லை. நான் எழுதியிருக்கிறது. கொஞ்சம் இன்னும் எவ்வளவோ கொடுமைகள் நடக்குது. திண்ணியத்திலே மலத்தை வாயிலே திணிக்கல்லையா?  இதைவிட காட்டுமிராண்டித்தனம் என்ன இருக்கு.. இப்படி கேவலமான விசயம் ஏராளம் நடந்துகிட்டுதான்  இருக்கு வெண்மணிச்சம்பவம் நடக்கலியா? இப்படி நடக்குமான்னு கேட்கும்போது எனக்கு எரிச்சல் தான் வருது?
உங்க சிறுகதைகளை ஒரு தொகுப்பா படிக்கும் போது ஒரு நாவலைப் படிச்ச அனுபவம் ஏற்படுது. ஏன்னா உங்க வாழ்ககையில் நடந்த உண்மைச் சம்பவங்களைத்தான் கதைகள்லயும் கொண்டு வந்திருக்கீங்க ஆனா உங்க நாவல்  பேசப்பட்ட அளவுக்கு சிறுகதைகளெல்லாம் பெரிய அளவுக்கு பேசப்படலியே?
அண்ணாச்சி, கிசும்புக்காரன், பொன்னுத்தாயி மாதிரியான பல சிறுகதைகள் பத்திரிகைகளில் வந்தபோது நிறைய பேசப்பட்டிருக்கு பொன்னுத்தாயி கதையை அறிவொளி மூலமா பரவலா எடுத்துகிட்டு போனாங்க. எல்லா கதைகளும் பரவலா பேசப்படல. என்பது உண்மைதான் ஆனா ஆராய்ச்சி மாணவர்களும் எல்லாக்கதைகளையும் ஆய்வு செய்துகிட்டுதான் இருக்காங்க.
கருக்கு போலவே சங்கதியிலேயும் அதே மாதியான மொழிநடை வாழ்க்கைச் சூழலைக் கொண்டு வந்திக்கீங்களே?
இது வேணுமினே பண்ணதுதான் மொழிநடையில் கருக்கு  அதுவா அமைஞ்சது. சங்கதி வேணுமின்னே பண்ணது. சங்கதி புத்தகமா வெளியிடணும்கிற திட்டத்தோடயே எழுதின நாவல் நான் சந்தித்த நான் பார்த்த நான் கேள்விப்பட்ட தலித் பெண்கள்  பற்றி எழுதப்பட்டது. 2 நாவல்களிலேயும் மொழிநடையை மட்டும் தான் ஒன்னுன்னு சொல்லலாம்.கருக்கிலே இருக்கிற விசயங்கள் வேற சங்கதியிலே இருக்கிற விசயங்கள் வேற கருக்கிலே ஆரம்பத்தில் இருந்து கடைசி வரைக்கும் நான் போய்கிட்டே இருப்பேன். என்னோட வாழ்க்கை நூலிழை மாதிரி போய்கிட்டே இருக்கும் அதைச் சுத்தி மற்ற கதாபாத்திரங்களை பின்னி இருப்பேன். ஆனா சங்கதி அப்படி இல்லை. அதிலே மூணு தலைமுறை வரும். குழந்தைப்பருவம,; அடலசண்ட் பருவம், தற்காலத்தில் நான் என்கிற மாதிரி இருக்கும்.
சங்கதி நாவலின் முன்னுரையில் இதனைப் படிக்கும் தலித்பெண்கள் வீறுகொண்டு எழுந்து வெற்றிநடைபோட்டு புதியதொரு சமுதாயம் உருவாக்கும் முன்னோடிகளாக புரட்சியைத் தொடங்கித் தொடர வேண்டும் என்ற ஆசையில் நம்பிக்கையில் எழுதியிருப்பதாக கூறியிருக்கிறீர்கள்;. உங்கள் ஆசை எந்த அளவுக்கு நிறைவேறியிருக்கு?
நான் புரட்சின்னு சொல்ல வந்தது. இயக்கரீதியான புரட்சி இல்லை பண்பாட்டுரீதியான புரட்சி. அப்படியான புரட்சி நடந்தது. நடந்துகிட்டிருக்கு. சங்கதியில் வர்ற கேரக்டர்களை பார்த்தீங்கன்னா அவங்க வாழ்க்கையிலே புரட்சி நடந்திருக்கு அவங்க விடுதலை பெற்ற பெண்மணிகளா அவங்க வாழ்க்கையிலே இருக்காங்க. அதுக்காக அவங்க சராசரி பெண்ணோட வாழ்க்கையிலேருந்து முற்றிலுமா வேறுபட்டாங்கன்னு சொல்ல வரலே. அன்றாடம் கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதிலேயும் அந்தப் பண்பாட்டுப் புரட்சியிலே ஒரு சுதந்திரமான ஜீவிதத்தை கண்டு பிடிக்கிறாங்க. திருமணம், குடும்பம் என்பது நம்மை தடைப்படுத்தக் கூடிய விசயம் என்பதை பல பெண்கள் புரிஞ்சிகிட்டு என்னை ஒரு மாடலா வைச்சுகிட்டு இருக்காங்க.
உங்கள் வன்மம் நாவலில் பள்ளர் பறையர்களுக்கிடையேயான  பிரச்சனைகளை எழுதியிருக்கீங்க. தலித் ஒற்றுமை அதிகாரத்தைக்  கைப்பற்றுவது என்பதை வலியுறுத்தி இருக்கீங்க தலித் ஒற்றுமையின் மூலமா மட்டுமே அதிகாரத்தைக் கைப்பற்ற முடியும்னு நம்புறீங்களா?
வன்மத்திலே சொல்லப்பட்டிருக்கின்ற முக்கிய விசயம் வேறு தலித் உட்பிரிவுகளுக்கும் சரியான புரிதல் இல்லாத இளைஞர்கள் வளர்ந்து வரும் தலைமுறை எவ்வாறு பாதிக்கப்படுகிறது. என்பதைத்தான் சொல்லியிருக்கிறேன்bama2 உட்பிரிவுகள்  ஒற்றுமையோடு சேர்ந்து நிற்கும் போது அதிகாரத்தை நோக்கி நகர்வதற்கு வாய்ப்பு இருக்கிறது. என்பதைச் சொல்கிறேன். வன்மம் பழங்கதை கிடையாது. சமகாலப்பிரச்சினை கண்ணாம் பட்டி என்கிற கிராமத்துக்குள்ளே மட்டும் அடங்கிப்போன விசயம் ஒரு வீட்டுக்குள்ளே ரெண்டு பேருக்கு  இடையிலே நடக்கிற பிரச்சினை மாதிரி. என்னுடைய ஆதங்கம் என்னன்னா  இந்தக் கலவரங்களாலே  வளருகின்ற தலைமுறை ஒரு பகைமை உணர்வோடு வன்மத்தோடு வளர்ந்துகிட்டு வருது. இதனால் அவர்களை அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் செல்வதற்கான சாத்தியக்கூறுகளை அழித்துக்கொண்டே வருகிறோமே என்பதைச் சொல்வது தான் வன்மம்.
தலித் இயக்கங்கள் இப்போது தான் வளர ஆரம்பிச்சிருக்கு அதுக்கு முன்னாடி தலித்துகளுக்காக போராடின பொதுவுடைமை இயக்கங்கள் திராவிட இயக்கங்கள் பற்றிய எந்த பதிவும் உங்கள் படைப்புகளிலே காணோமே?
பொதுவுடமை இயக்கம,; திராவிட இயக்கம் இரணடும் வண்மம் கதை நடந்த அந்த ஊரில் இருந்தது. இப்போதும் இருக்கிறது. போதுவுடமை இயக்கத்தில் தலித் மக்கள் அதிகமாக இருக்காங்க. பொதுவுடமை இயக்கங்கள் இப்போதான் சாதியைப்பற்றி வெளிப்படையாக பேசுகிறார்கள். ஆனாலும் வர்க்கத்துக்கு கொடுக்கிற முக்கியத்துவம் சாதியத்துக்கு கொடுக்கிறதில்லே. வர்க்கம் ஒழிந்தால் சாதி தானாக ஒழியும்கிறாங்க.  அதில எனக்கு நம்பிக்கை இல்லே. என்னதான் வசதியிருந்தாலும் கோடீஸ்வரனாக இருந்தாலும் சாதிய முத்திரைப் போகல. சில பேரு நகர்புறங்களில்  சாதிய உணர்வு இல்லைங்கிறாங்க. அப்படியெல்லாம் நிச்சயமா கெடையாது. நகர்புறத்துக்கும் வடிவங்கள்தான் மாறி இருக்கிறதே தவிர மற்றப்படி சாதிய அடையாளம் என்பது செத்து மணண்ணுக்குள்ளே போகிற வரைக்கும் இருக்கத்தான் செய்யுது. அதிலே எந்த மாற்றுக் கருத்தும் எனக்கு இல்லே. வர்க்;கரீதியாக விடுதலையாகிட்டீங்கன்னா யாரையும் சார்ந்திருக்க வேண்டியதில்லை. என்பது தான் உண்மை. ஆனால் வர்க்கப்ப் போராட்டத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறோமோ அந்த அளவுக்கு சாதி ஒழிப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்தாகணும் தலித் பெண்களுக்கு விடுதலை கிடைத்துவிட்டால் அனைவருக்குமே விடுதலை கிடைத்துவிடும்.
உங்க தலித் மொழியை மற்ற மொழிகளுக்கு எந்த அளவுக்கு நுட்பமா கொண்டு போக முடிஞ்சிருக்கு?
தமிழிலேருந்து தெலுங்குக்கும், மலையாளத்துக்கு பண்ணும் போது மொழிநடையை ஓரளவுக்கு மெய்ன்டன் பண்ணமுடியுது. ஆங்கிலம் என்று போகும் போது கொஞ்சம் அடிபடத்தான் செய்யுது. அதுக்காக மொழி பெயர்க்காமலும் இருக்க முடியாது. மோழிபெயர்ப்பின் மூலமாத்தான் தமிழ்நாட்டு தலித் பிரச்சனையை இந்திய அளவிலே சர்வதேச அளவிலே பேசமுடியுது.
லட்சியம்னு ஏதாவது வைச்சிருக்கீங்களா?
எழுதுவது எனக்கு தொழில் கிடையாது. இப்படியான பிரபலம் நான் எதிர்பார்க்காதது அது பாதிக்காததாலே தான் இன்னமும் எழுதமுடியுது. நான் இங்கே ஒரு சாதாரண ஆசிரியை சாதாரணமா இங்கே குடியிருக்கேன் நான் ஒரு தலித் என்பதாலே தலித் மக்களுக்கு உதவி செய்யணும்கிற எண்ணம் இயல்பாகவே இருக்கு என் ஸ்கூல் பிள்ளைகளுக்கு என் வாழ்க்கையைத்தான் முன் மாதிரியா சொல்றது. நானும் உங்களை மாதிரி கிராமத்திலிருந்து வந்தேன் கல்வியினாலே நாம் விழிப்புணர்வு அடையலாம் இயற்கையிலே இருக்கிற போராட்ட குணத்தை இன்னும் கூர்மைப்படுத்தலாம். போராடி வாழலாம் என்கிற மாதிரியான தன்னம்பிக்கையை ஊட்டுறேன். இங்கே யாருக்கும் நான் எழுத்தாளரா தெரியாது. அப்படி பெரிய எழுத்தாளரா நான் காட்டிக்கிறதும் கிடையாது. மளிகைக்டைக்காரர், முட்டைக்கடைக்காரர் பேப்பரிலே என் போட்டோவைப் பார்த்துட்டு நீங்க கதை எழுதுகிறவங்களான்னு கேட்பாங்க. அவ்வளவுதான் மக்கள் பிரச்சினையை எழுதணும் வெளிப்படுத்தணும் என்பது தான் முக்கியம் என்னைப் பாதிக்கிற விசயங்களை எழுதுவேன். விமர்சனங்களுக்காக நான் என்னை மாற்றிக்கிட்டு சமரசம் பண்ணிக்க மாட்டேன். விருதுக்காகவோ, அங்கீகாரத்துக்காகவோ எழுதமாட்டேன். விமர்சிப்பது அவர்கள் சுதந்திரம் எழுதுவது என்கடமை.
மகளிர்தினம் பற்றி?
மகளிர்க்கான பிரச்சினைகளை அந்த ஒரு நாளிலாவது எல்லோரும் யோசிக்க வேண்டிய கடப்பாடு இருக்கு. கூட்டங்கள் பேரணிகள் நடக்கும். பெண்களிடமிருந்து புதிய படைப்புக்கள் வரும். அந்த நாளில் மட்டுமில்லாமல் தொடர்ந்து விழிப்புணர்வு வேணும். பெண்களை இழிவுபடுத்துகிற மாஸ்மீடியா மதங்கள் குடும்ப அமைப்புகள் இவற்றில் மாற்றம் ஏற்பட இந்த தினம் பயன்படணும்.
(நன்றி: புத்தகம் பேசுது)

Saturday, July 9, 2016

Feminine and Masculine Energy: Moments of Reconciliation and Integration


Lorna Wilson

We all have feminine and masculine energy within, we all have an inner desire for peace and reconciliation that leads us to seek and seek to live better by healing that which limits us. However, most of us forget again and again that the only place where we have to return is to the centre, to the uterus or hara, to the entrails that inhabit the depths of our being where all our ancestral wisdom resides, both our own wisdom and that of our lineage.
The feminine and the masculine, understood in the Western duality, are two forces walking separately as a string with two ends, each of which pulls towards the other pole till, sometimes, it breaks apart, leaving pieces in its way. At this moment where the resurgence of healthy masculinity roars loudly and the need for a woman at peace with herself is everywhere, duality begins to be unity and balance. The broken pieces are being mended in commitment and responsibility to both oneself and the life that one leads.
There was a time far from the current one, where were led to believe that our life was in the hands of circumstances, but now, every day we are becoming more aware that we are the co-creators of our existence and our personal, mental and emotional power has an unmatched ability. The string is transformed into an elastic band that allows flexibility and the flow of life, a healthy feminine that walks with a sacred masculine. Over here is where we begin to remember that feminine and masculine are born to convene /to meet each other. The wars that we starred may end up by honouring both our peers as well as people of the opposite sex. If we honour another woman, we honour our feminine side (regardless you being male or female and beyond your sexual orientation).
If we honour another man, we are honouring our masculine side (regardless you being male or female and beyond your sexual orientation). This elasticity and plasticity is reflected in a vigorous and free health, vibrant chakras that radiate joy and fulfilment, materialization of wealth and confidence. In certain cultures, the feminine is flowing, the water, that which receives, creativity, and the masculine is the fire, directionality, presence, materialization. Both energies are within you, whether you are male or female and beyond any sexual preference, in this sense we are talking about energy. When you learn to realize their dance, their act of love / lovemaking, his communion within yourself, you will easily find yourself living in the fullness and alliance of the sacred couple.
The practice of love towards yourself in everyday life is one of the most necessary medicines in our times. I invite you right now you go to a mirror and look at you, observe yourself and feel yourself. Love every cell of your body, accept every part of you, recognize all your parts and love them with an open heart. Forget any exigence, limitation or expectation. Open your heart and fall in love with yourself. Observe yourself with a look of love, desire and passion. Feel fulfilled and vibrant. Connect with this feeling and radiate it back wherever you go. The universe moves by vibration, no need to speak, your vibration will emanate your so needed frequency all around you. This will be a true act of love.
We were educated to the look "outside" and the intention is to return "inside". Since we were children we were invited to please and be likeable to others, it is time to like-us and please-us. Many relationships where the female and male energies were lived as two separate energies, they needed each other to exist. Far from that conception, we can envision both energies within each being, we can go for that act of love at internal and profound level and from there, share your energy with the person you feel and how you choose, from a personal choice based on your freedom instead of a need which will only attract dependence and eventually, a certain difficulty to love from a place of fullness. If you have the courage to explore both your energies to finally become one, you will not need anyone because you have you, every day of the year, every hour. And of course you will like to love and to be loved but from a place of the abundance, fulfilment, peace, high energy and sacredness. From that vibrational place it will be easy to find your equal. Relationships based on self-aware people work. Relationships based on delusions, dependencies and needs, fortunately break.
Love is directional in a common path, not from exigence but from freedom of choice, it is sweet, it is healthy. Any act of sacrifice, even if it is socially accredited is not healthy. Nobody said that growing is always easy as sometimes we have to face acts that we avoid. Remember that after that act of courage there is always a great reward.
Love makes you laugh, dis-love makes you suffer. If you listen to songs, you can observe the continuous invitation to a love that allows suffering, if you are in any given conversation you can guess that social acceptance, but all this can change. Simply trust that part of you that thinks and feels that healthy Love exists, go there and let it brew within you. Even if you are in a relationship, there are always aspects that you can transform into more love.
With this article I wish you dare to give yourself the world you feel, joining your creative side to give yourself joy in every aspect of your life (feminine energy) with the specific direction of ‘in what aspects’ you would like to do the transformation and realization (masculine energy) of that act of love (merging of the two energies). Thanks to your happiness you will impregnate your whole environment with that vibration, sharing that ‘everyday medicine’ wherever you go, so each of us can inject a dose of Love in each heart, and heart by heart, we transform the world into Oneness, Balance and Peace.
Isabella Magdala

இலங்கையில் தமிழினம் அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக சமுதாயமருத்துவ நிபுணர் எச்சரிக்கிறார் !!!

சமுதாயமருத்துவ நிபுணர்வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன்:-

யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கம் 26.06.2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்த ‘தமிழரின் எதிர்காலம்:ஒரு குடித்தொகையியல்நோக்கு’ என்றகருத்தரங்கில் உரையாற்றிய சமுதாயமருத்துவ நிபுணர்வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் இலங்கையில் தமிழினம்அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சி வீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது:யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கம் 26.06.2014 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் ஒழுங்கு செய்த ‘தமிழரின் எதிர்காலம்:ஒரு குடித்தொகையியல்நோக்கு’ என்றகருத்தரங்கில் உரையாற்றிய சமுதாயமருத்துவ நிபுணர்வைத்திய கலாநிதி முரளிவல்லிபுரநாதன் இலங்கையில் தமிழினம்அழிவு அபாயத்தை எதிர்நோக்குவதாக கடந்தகால தமிழர் குடித்தொகை வளர்ச்சி வீதத்தையும் ஏனைய தரவுகளையும் அடிப்படையாகக் கொண்டு தெரிவித்தார்.

2008 ஆம் ஆண்டு மேற் கொள்ளப்பட்ட ஒரு ஆய்வு மதிப்பீட்டின்படி உலகில் 50 நாடுகளில் 75 மில்லியன் தமிழர்கள் பரந்து வாழ்வதாக அறியப்பட்டுள்ளது. ஆயினும் ஒரு இனத்தின் எதிர்காலம் அவர்களின் கருவளத்திலேயே பிரதானமாக தங்கி இருக்கிறது. ஒரு இனம் தன்னை தக்கவைத்துக் கொள்ள வேண்டுமெனின் அவ்வினத்தின் மொத்தகருவள வீதம்2.1இலும் அதிகமாக இருக்கவேண்டும். அதாவது சராசரியாக ஒரு பெண் 2 பிள்ளைகளுக்கு மேலாக 2.1 அளவில் பெற்றால் மாத்திரமே அதை மாற்றீடு செய்யும் கருவளவீதம் அதாவது குடித்தொகை குறையாமல் இருக்கும்ஒருநிலை என்று கூற முடியும். ஏனெனில் ஒரு குறிப்பிட்ட இனத்தில் ஒரு சோடி பெற்றோர் 2 பிள்ளைகளுக்கு அதிகமாக பெறுவரெனில் மாத்திரமே இருபிள்ளைகள் ஆவது இளம் வயதை அடைந்து குடித்தொகையை தக்கவைக்க முடியும்.
மேலும் 2008 இல் வெளியிடப்ட்ட முஸ்லீம்களின் குடித்தொகைப் பரம்பல் ‘Muslim demographics’ (https://www.youtube.com/watch?v=6-3X5hIFXYU) என்னும்youtube விடியோ உலக அளவில் முஸ்லிம்களின் குடித்தொகை அவர்களது அதிகரித்தகருவளம் காரணமாக அதிகரிப்பதைக் காட்டுகிறது. ஏனைய இனங்களின் கருவளவீதம் நன்றாககுறைந்து விட்டநிலையில் அதிகரித்து வரும் முஸ்லிம்களின் குடிதொகையும் பரம்பலும் 2050 இல் உலகில் பெரும்பான்மையான நாடுகளில் முஸ்லீம்களே பெரும்பான்மையினராக இருப்பார்கள் என்று காட்டுகிறது. பிரான்சு நாட்டில் பிரான்சியர்களின் கருவள வீதம் 1.8 ஆக இருக்க அங்கேகுடி பெயர்ந்து சென்ற முஸ்லிம்களின் கருவளவீதம் 8.1 ஆகக்காணப்படுகிறது. இந்தநிலை தொடர்ந்தால் இன்னும் 34 வருடங்களில் பிரான்ஸ் இஸ்லாமியக்குடியரசாகமாறிவிடும். கடந்த 30 வருடங்களில் ஐக்கிய இராச்சியத்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 30 மடங்காக அதிகரித்துஇருக்கிறது. இன்னும் 11 வருடங்களில் நெதர்லாந்தில் முஸ்லிம்களின் எண்ணிக்கை பாதிக்குமேலாக அதிகரித்துவிடும். 1970 இல் ஒரு இலட்சம் முஸ்லிம்கள்அ மெரிக்காவில் இருந்தனர். ஆனால் 2008 இல் 9 மில்லியனாக அதிகரித்தனர். இன்னும் சில ஆண்டுகளில் ரஸ்யா இராணுவத்தில் 40 சதவீதம் முஸ்லிம்களே இருப்பர்.

இலங்கையைப் பொறுத்தவரையில் 1911 ஆம் ஆண்டு முதன் முறையாக இலங்கைத் தமிழர்‚ இந்திய வம்சாவழித் தமிழர் என்று தமிழர்கள் பாகுபடுத்தப்பட்டு குடித் தொகை மதிப்பீடு மேற்கொள்ளப்பட்ட காலத்தில் இருந்து இரு தமிழ் இனங்களின் வீதம் குறைந்துவரும் அதே வேளை சிங்களவர்களினதும் முஸ்லிம்களினதும் வீதம் தொடர்ச்சியாக அதிகரித்துவந்துள்ளது.
இந்தநிலை நீடித்தால் புள்ளிவிவரவியல் எதிர்வு கூறலின்படி இன்னும் 12 வருடம்அளவில் இலங்கையில் முஸ்லிம்களின் குடித்தொகை தமிழரின் குடித் தொகையை விட அதிகமாகிவிடும். அதாவது 2031 இல் குடித்தொகைக்கணிப்பீடு மேற்கொள்ளப்படும் போது தமிழர்கள் மூன்றாவது சிறு பான்மையினமாகிவிட்டதை வெளிப்படுத்தும். இலங்கையில் முஸ்லிம்களின் அதிகரிப்புக்குக் காரணம் பல தாரமணம் ஏற்றுக்கொள்ளப்பட்டமையும் இளம் வயதிலேயே திருமணம் செய்து அதிகமான பிள்ளைகளைப் பெறுவது மேயாகும்.

மருத்துவநிபுணர் மேலும் தெரிவிக்கையில் வடகிழக்கில் கடந்தசில ஆண்டுகளாக முன்னெடுக்கப்படும் கட்டாய கருத்தடையையும் அதற்கு வடக்குமாகாணசபை மக்கள்பிரதிநிதிகள் உண்மைக்குமாறான அறிக்கைகள்வெளியிட்டமையையும் வருத்தத்துடன் குறிப்பிட்டார். வலைப்பாடு‚ வேரவில்‚ கிராஞ்சி முதலான இடங்களில் பெண்கள் போசாக்குத் தொடர்பான மருத்துவ முகாம் என்று கூறிஅழைக்கப்பட்டு ஏமாற்றப்பட்டு கருத்தடை செய்ய சம்மதிக்கவைக்கப்பட்டார்கள் என்பதை பாதிக்கப்பட்ட பெண்களின் நேர்காணல் ஆதாரத்துடன் தனது கருத்துரையின் போது வெளிப்படுத்தினார்.


அரச புள்ளிவிவரத்தின் படி 2012 இல் 2877 சிங்களவர்களுக்கும் 1035 தமிழர்களுக்கும் 450 முஸ்லிம்களுக்கும் கருத்தடை செய்யப்பட்டது. இருப்பினும் இன விகிதாசார அடிப்படையில் தமிழர்களுக்கு அதிகமாகவே கருத்தடை செய்யப்பட்டுள்ளது.

மலையகத் தமிழர்கள் வாழும் பகுதிகளில் கடந்த பல தசாப்தங்களாகத் திட்டமிட்ட முறையில் கருத்தடை செய்யும் நடை முறை இருந்து வருகின்றமையையும் நிரந்தரக் கருத்தடைக்கு 500 ரூபா சன்மானமும் வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டினார். இதேவேளை 2009 இலிருந்து அனைத்து ஆயுதப்ப டையினருக்கும் மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக் கொண்டால் ஒரு இலட்சம் ரூபா ஊக்கத் தொகையை அரசு வழங்கி இனத்தை பெருக்குகிறது.

தமிழனத்தின் பிறப்பு வீதம் குறைந்தமைக்கு மேலும் பல காரணங்களை வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் முன்வைத்தார். தமிழ் ஆண்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பெண்கள் தமக்குப் பொருத்தமான துணையைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு குறையக் காரணமாக உள்ளது. பெண்கள் பலர் உயர்கல்வி முதலான காரணங்களால் 30 வயதிற்குப் பின்னரே திருமணம் செய்கின்றனர். இயற்கையாக பெண்களின் கருவளம் 30 வயதுக்கு பின்னர் வீழ்ச்சி அடைவதனால் தாமதமாகத் திருமணம் செய்வோருக்கு பிள்ளைகள் பெறுவதற்கான வாய்ப்புக் குறைகின்றது. தமிழ்ச் சமூகத்தில் மீண்டும் தலை தூக்கியுள்ள சாதியப்பாகுபாடுகள், உயர்வடைந்து செல்லும் சீதனம் முதலானவையும், இடப்பெயர்வுகளும் வாழ்வாதாரம் அற்ற நிலையும் திருமணமாதவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது அல்லது தாமதமான திருமணத்துக்கு இட்டுச் செல்லுகின்றது.

போருக்குப் பின்னரான குழந்தைகளின் பிறப்பு வீத அதிகரிப்பு (Baby Booming) தமிழ்ப்பகுதியில் நிகழவேயில்லை. அதிகமான ஆண்கள் யுத்தத்தில் கொல்லப்பட்டமையும் அதிகமானோர் காணமற் போயிருப்பதும் இந்நிலைக்குக்காரணமென வைத்திய நிபுணர் தெரிவித்தார்.

வடகிழக்கில் 89000 பெண்கள் ஆண்துணையை இழந்துள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்ச் சமூகம் இவர்களுக்கு கோழிவளர்ப்பு முதலான சுயதொழில் வாய்ப்புப் பற்றியே சிந்திக்கிறது. 18 – 40 வயது வரையான பெண்களுக்கு மறுவாழ்வு அழிப்பது பற்றி சமூக சமயத் தலைவர்களோ அரசியல் வாதிகளோ சிந்திப்பதில்லை. இப்பெண்களுக்கான இயற்கையான பாலியல்தேவை பற்றி தமிழ்ச் சமூகம் சிந்திக்க மறுக்கிறது. இப்பெண்கள் மாற்று இனத்தவர்களால் விபசாரத்துக்கு உட்படுத்துவது பற்றி கதைப்பது சமூகத்தின் பொறுப்பற்ற தன்மையே காண்பிக்கிறது.

இஸ்லாமியர்களுக்கு உள்ள சட்டங்களைப் போல் தமிழர்களும் போருக்குப் பின்னரான நிலையை எதிர்கொண்டு சமூகத்தை நிலைநிறுத்த சட்டங்களை உருவாக்க வேண்டும். பலதாரமண திருமணச் சட்டத்தை பெண்களுக்கான பாதுகாப்புடன் உருவாக்கல் குறித்து சிந்திக்க வேண்டும். இந்திய வரலாற்றில் இந்து சாம்ராஜ்ஜியங்கள் தோல்வியடைந்த போது தீவளர்த்து பெண்கள் கூட்டாகத் தீயில் பாய்ந்து அழித்துக் கொண்ட வரலாறுகள் உண்டு. இதே வேளை முஸ்லிம்கள் போரின் பின்னர் கணவனை இழந்த அனைத்துப் பெண்களையும் மறுமணம் செய்தார்கள். பிரிட்டிஸ்காரர் இந்தியாவைக்கைப்பற்றியிருக்காவிடில் இன்று இந்தியா இஸ்லாமியக்குடியரசாக இருந்திருக்கும் என்று சில வரலாற்றாசிரியர்கள் கூறுவதும் நோக்கத்தக்கது.

ஏனைய இனங்கள் தங்கள் பிறப்பு வீதத்தை அதிகரிக்க‚ இனத்தைப் பாதுகாக்க அக்கறை காட்டும் வேளையில் போரினால் அழிவடைந்துள்ள தமிழினத்தின்தலைவர்கள் என்று கூறிக்கொள்வோர் தமிழினத்தின் அழிவுகுறித்து இதுவரை சிந்திக்காதிருப்பது இனத்தின் துரதிஷ்டம் என்கிறார்.
அழிவடைந்த தமிழனத்தின் பிறப்பு வீதத்தைக் கூட்ட மூன்றாவது பிள்ளையைப் பெற்றுக்கொள்வோருக்கு ஊக்குவிப்பு வழங்க தமிழரசியல்தலைமையோ அல்லது வேறு எவருமோ இதுவரை முன்வரவில்லை. இலங்கையில் இந்நிலை நீடிக்குமெனில் கடந்த காலத்தில் பெருமையுடன் வாழ்ந்து தற்போது அழிவு அபாயத்தை எதிர்நோக்கும் காட்டுயானை, சிறுத்தை, திமிங்கிலம் முதலான உயிரினங்கள் இனங்கள் போல் தமிழினமும் ஆகிவிடும் என்று கூறி தனது கருத்துரையை நிறைவு செய்தார்.
 
இந்த கருத்துக்கள் யாவும் - சமுதாயமருத்துவ நிபுணர்வைத்திய கலாநிதி முரளி வல்லிபுரநாதன் அவர்களுடையதே....

உலகத்தை உலுக்கும் ஒரு சினிமா!


'இல்லாத கடவுள்: நம்பிக்கைகளுக்கு அப்பால்' ஆவணப்படத்தை மிக்கேல் லாஞ்சர் இயக்கியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக ஆவணப்படத் துக்கான தயாரிப்புப் பணிகள் தொடங்கப்பெற்றன. ஆரம்ப கட்ட படப்பதிவுப் பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பாக தொடங்கின.
ஆவணப்படத்தை முன்னெடுப்பதற்காக இணைய தளத்தின் வாயிலாக ஆதரவாளர் களிடம் நிதி உதவி கோரப்பட்டது.
பகுத்தறிவாளர், 'தி காட் டெலியூஷன்' நூலாசிரியர் எழுத்தாளர் மற்றும் பகுத்தறிவு மற்றம் அறிவியலுக்கான ரிச்சர்ட் டாக்கின்ஸ் பவுண்டேஷன் நிறுவனர், உயிரியல் அறிவியலாளர் ரிச்சர்ட் டாக்கின்ஸ்,
சமூகவியல் பேராசிரியரும், 'மதசார்பற்ற வாழ்¢வாக வாழ்வது பழைய கேள்விகளுக்கு புதிய பதில்கள்Õ நூலாசிரியருமான பில் சுக்கர்மேன், பத்திரிகையாளரும், இணையத் தின் வாயிலாக அரசியல் அலசல்களைக் கொண்ட வலைக்காட்சி 'இளம்துருக்கியர்' இணையதள அமைப்பின் நிறுவனரும், அமெரிக்காவுக்கான மதசார்பற்ற கூட்டணி அமைப்பின் நிறுவனர் ஹெர்ப் சில்வர்மேன், பகுத்தறிவுக் கூட்டணி அமைப்பின் செயல் இயக்குநர் ஜேசன் ஹீப்,
ஸ்டீஃபெல் சுதந்திர சிந்தனை அறக்கட்டளை நிறுவனரும், 'வெளிப் படையான மதசார்பின்மை' பிரச்சாரத்தைத் தொடங்கியவருமாகிய டாட் ஸ்டீஃபெல் என ஏராளமான பகுத்தறிவு, மதசார் பின்மை கருத்துகளைக்கொண்ட அமெரிக்க வாழ் பிரபலங்கள், மாணவர்கள், மதம் சார்ந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும் ஆவணப்படத்தில் பதிவு செய்துள்ளார்.
இன்றைய உலகில் நாத்திகர்களாக இருப்பதில் உள்ள போராட்டங்கள்குறித்து 'இல் லாத கடவுள்: நம்பிக்கைக்கு அப்பால் இருக்கும் உண்மை' (கடவுள் இல்லாமல் நன்றாக இருக்க முடியுமா?) எனும் புதிய ஆவணப் படத்தில் விளக்கப்பட்டுள்ளது.
நாத்திகர்கள் நம்மிடையே இருந்து வருகிறார்கள். ஆனால், அவர்களை வெளிப்படுத்திக் கொள்ள அச்சப் படுகிறார்கள்.
விமர்சனத்துக்கு ஆளாகக் கூடியவர் களாக நாத்திகர்கள் இருக்கின்றனர். அமெரிக்காவில் 50 விழுக்காட்டளவில் நாத்திகர்களாக இருக்கிறார்கள் என்பதால் 49 விழுக்காட்டளவில் உள்ள கடவுள், மத நம்பிக்கையாளர்களாக இருப்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளதாம். அவர் களின் குடும்பத்தினர் எவரும் நாத்திகர் களை மணம்புரிந்து கொண்டால் என்ன ஆவது என்று கவலை கொள்கிறார்களாம்.
பன்னாட்டளவில் 13 நாடுகளில் நாத் திகர்ளாக இருப்பதாகக் கூறினால் அவர் களுக்கு மரணதண்டனை என்று உள்ளது.
அமெரிக்காவில் காங்கிரசில் நாடாளு மன்ற உறுப்பினர்கள் 40பேர் தங்களை நாத்திகர்கள் என்று வெளிப்படுத்திக் கொள்ளாமல் நாத்திகர்களாக இருந்து வருகிறார்கள்.
தாராளமாக இருக்கக்கூடிய, நவீன மயமான இன்றைய காலத்தில்கூட, நாத்திகர்களாக இருப்பது மிகவும் கடின மானது. ஆவணத் திரைப்பட இயக்குநர் 'இல்லாத கடவுள்:நம்பிக்கைக்கு அப்பால்' ஆவணப்படத்தில் நாத்திகர்கள் சந்திக் கின்ற அறைகூவல்கள்குறித்து படம் பிடித்துக்காட்டியுள்ளார்.
நாத்திகர்களாக இருப்பவர்களிடையே அற்புதமாக நேர்காணல் கண்டு, அவர்கள் எதிர்கொள்ளும் எதிர்ப்புகள், போராட் டங்கள்குறித்தும், அவர்களது விருப்பம் குறித்தும், கடவுள் இல்லாமல் இருப்பதை நிரூபிப்பதுகுறித்து பேச வைத்துள்ளார். அதேநேரத்தில் அனைத்து மத நம்பிக் கையாளர்கள் மற்றும் மதசார்பின்மைக் குழுக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள்குறித்தும் பேச வைத்துள்ளார்.
ஒரு காட்சியில், கடவுள் இல்லை என்றால், நீதி நெறிமுறைகள் எப்படி இருக்கும் என்று பொதுவாக பேசப்படு கின்ற பதிவுடன், அமெரிக்காவில் கடவுள் நம்பிக்கை மிகுந்துள்ள 12 மாநிலங்களி லிருந்து எடுத்துக்காட்டாக கூறப்பட் டுள்ளது. அம்மாநிலங்களில் அதிகமான அளவில் கொலைகள், வீடுகளில் முறைகேடுகள் மற்றும் பிற குற்ற செயல்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் காட்சிப் பதிவுகளாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
மதத்தை அடிப்படையாகக் கொண்டு பரவிவருகின்ற வன்முறைக் கலாச்சாரங் கள்குறித்தும் உள்ள எழுத்துப் பதிவுகள் ஆவணப்படத்தில் விரிவாக இடம் பெற்றுள்ளன.
உலகமே ஒரு குடும்பமாக திகழும் இந்த காலக்கட்டத்தில் பன்னாட்டளவில் நிகழ்ந்து வரும் போர்குறித்த பதிவுகள் ஆவணப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
ஓர் இலட்சம் டாலர் மதிப்பை இலக் காகக் கொண்டு 1300 பேர் ஆவணப் படத்துக்கு பொருளாதாரத்தை அதிகரித் திட ஆதரவாக இருக்கிறார்கள். ஆவணப் படத்துக்கு 70 விழுக்காடு மிஸீபீவீமீரீஷீரீஷீ.நீஷீனீ இணையத்தின் சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புவிப்பந்தில் நாத்திகம்குறித்து தவறான புரிதல்கள்குறித்து விளக்கக்கூடிய சக்தி வாய்ந்த ஆவணப்படமாக 'இல்லாத கடவுள்: நம்பிக்கைக்கு அப்பால் இருக்கும் உண்மை' புதிய ஆவணப் படம் வெளியா கிறது.
6 வயது முதல் 13 வயது வரை உள்ள சிறுவர்கள் பங்கேற்கும் ஒரு நிகழ்ச்சி 2016இல் நடந்தது. கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சீசிடம் 26 நாடுகளைச் சேர்ந்த 250 மாணவர்கள் கேள்வி கேட்டு கடிதம் எழுதியிருந்தனர். அதில் 50 கேள்விகள் தேர்வு செய்யப்பட்டு அதற்கான பதிலும் போப்பிடமிருந்து பெற்று ஒரு சிறு நூலக வெளியிடப்பட்டது. (நூலின் பெயர் ‘டியர் போப் பிரான்சிஸ்’ வெளியிடப்பட்டது 1.3.2016). தேர்வு செய்யப்பட்ட 50 சிறுவர்களில் கனடா நாட்டைச் சேர்ந்த ரியான் என்பவனும் ஒருவன். போப்பிடம் அந்தச் சிறுவன் கேட்ட கேள்வி சுவையானது.
“உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் கடவுள் என்ன செய்து கொண்டு இருந்தார்? எதுவும் படைக் கப்படுவதற்கு முன்னர் உலகமே வெறுமையாகத்தானே இருந்து இருக் கும்? அப்பொழுது கடவுள் தனியாக இருந்தது போன்று உணர்ந்தாரா?” என்பதுதான் ரியான் என்ற சிறுவன் கேட்ட கேள்வியாகும்.
அதற்கு போப் அளித்த பதில் பொருத்தமானதாக இல்லை. உலகத்தைப் படைப்பதற்கு முன்னர் காலத்தை படைத் தார் கடவுள் என்றும், இவையெல்லாம் படைக்கப்படுவதற்கு முன்னர் கடவுள் அன்பை விரும்பினார், அன்புதான் கடவுள் என்றும் வெற்று வார்த்தைகளை போப்பால் கூற முடிந்ததே தவிர சிந்திக்கத் தக்க பதிலை அளிக்க முடியவில்லை.
சிறுவர்களேகூட கடவுள்பற்றிக் கேள்வி கேட்கத் துணிந்துள்ளதை இது காட்டுகிறது.
உலகில் நாத்திகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது, சீனா 90, ஜெர்மன் 60, இஸ்ரேல் 57 சதவீதம் பேர் நாத்திகர் களாக உள்ளனர் என்கிற தகவலை ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளேடு (22.3.2016) வெளியிட்டிருந்தது. முசுலிம் நாடான சவுதியில்கூட 600க்கு மேற்பட்டோர் டிவிட்டரில் தங்களை நாத்திகர்கள் என்று பதிவு செய்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இனிவரும் காலம் கேள்வி கேட்கும் காலமாகும். கேள்வி கேட்கும் காலம் என்றால் கடவுளும், மதமும், சாத்திரங் களும் அதிலிருந்து தப்பிக்க முடியாது - ஆம், தப்பிக்கவே முடியாது.
வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

சினிமாக்களில் காட்சிப்படுத்தபடும் பெண்கள் மீதான வன்முறை குறித்த ஒரு அலசல்

சில ஆண்டுகளுக்கு முன்னதாக வெளிவந்தது 7ஜி ரெயின்போ காலனி என்ற திரைப்படம். அந்த திரைப்படத்தில் கதாநாயகன் துரத்தி துரத்தி கதாநாயகியான சோனியா அகர்வாலை காதலிப்பார். கதாநாயகன் கிருஷ்ணா வேலை வெட்டி இல்லாமல் ஊர் சுற்றுவார். பல பெண்களை பாலியல் கண்ணோட்டத்துடன் இம்சை அளிக்கும் நபர். பால் பூத் வரிசையில் நிற்கும் முதியவர்களிடம் தனக்கு சேர்த்து பால் வாங்க வேண்டும். இல்லாவிட்டால் அவருடைய மகளையும் மனைவியையும் கரெக்ட் பண்ணுவேன் என்று மிரட்டல் விடுத்து அவர்களை தனது தேவைகளை நிறைவேற்ற வைக்கும் அளவுக்கு கேவலமான நபர். ஆனால் பல சமயங்களில் கதாநாயகியை விரட்டி விரட்டி காதல் என்ற பெயரில் துன்புறுத்துவதை தாங்க முடியாமல் கதாநாயகியால் பொறுக்கி என்று திட்டப்பட்டாலும் கதாநாயகனை ஒரு கட்டத்தில் அவர் காதலிக்க தொடங்கி விடுவார்.பெண்ணின் மனதை தொட்டு என்ற படத்தில் கதாநாயகன் பிரபு தேவா கல்லூரியின் மைதானத்தில் கதாநாயகியை தூணில் கட்டி வைத்து கன்னத்தில் அறைந்தவுடன் அவர் மீது கதாநாயகிக்கு காதல் பிறக்கும்.குணா படத்தில் மனநோயாளியாக நடிக்கும் கமல் கதாநாயகியை கடத்திச் சென்று காதலிக்க வைப்பார். இதற்கெல்லாம் மேலாக கேவலமான பீப் பாடலை பாடிய சிம்பு, வல்லவன், மன்மதன், தம் மற்றும் ஒஸ்தி என அவர் நடித்த எந்த படங்களிலும் அவர் துரத்தாத கதாநாயகியே கிடையாது. அவர் எந்த கதாநாயகியையும் போடி வாடி என்று அழைக்காமலும் இருந்ததில்லை. ஆனால் அவர் மீது நமது கதாநாயகிகளுக்கு காதல் ஊற்றெடுக்கும். இதற்கு எந்த அளவும் குறையாத அளவில் தனுஷ் படங்களில் கதாநாயகியை துரத்துவதையும் அவரை மரியாதையின்றி போடி வாடி என்று அழைப்பதும் ஒரு கலையாகவே மாற்றி இருப்பார். அந்த பெண் அடுத்தவரின் காதலியாக இருந்தாலும் (குட்டி -திரைப்படம்) அவரை விடாமல் துரத்தி அடிபணிய வைத்து கதாநாயகிகளை உருகி காதலிக்க வைத்துவிடுவார்.பெண்கள் சித்ரவதையாக நினைத்தாலும் அவர்கள் பொறுக்கி என்ற திட்டினாலும் அவர்களை விடாமல் துரத்தி கேவலமான முறையில் ஈவ் டீசிங் செய்து காதலிப்பது கமல், ரஜினி எனத் தொடங்கி சூர்யா(வாரணம் ஆயிரம் என்ற படத்தில் கதாநாயகியை துரத்திக் கொண்டு அமெரிக்கா வரை சென்று விடுவாhர் அங்கே அவரை காதலிக்கவும் வைத்து விடுவார்)- விஜய், சிம்பு, தனுஷ் என பட்டியல் எழுத முடியாதபடி நீளுகிறது.ஆனால் ஆணாதிக்க பார்வையில் வேறுவகையான கொடூரமான சித்தரிப்பும் மேற்கொள்ளப்படுகிறது.
மிக அரிதாக தனது காதல் விருப்பத்தை தெரிவிக்கும் பெண்கள் மிக மோசமான வில்லிகளாகவே சித்தரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நீலாம்பரிகளாகவும் (படையப்பா)இல்லாவிட்டால் திமிர் பிடித்த பெண்ணாக தீ வைத்து கொளுத்திக் கொண்டு சாவதாக (ஷிரியா ரெட்டி, திமிர் படத்தில்)படைக்கப்படுவார்கள்.இதன் நோக்கம், பெண்கள் தங்களின் விருப்பங்களைத் தெரிவித்தால் அவர்கள் இப்படித்தான் திமிர் பிடித்தவர்களாக மட்டுமே இருப்பார்கள் என்பது போன்ற ஒரு சித்திரத்தை உருவாக்குவது. அதன் மூலம் ஆழ்மனதில் ஆணாதிக்கம் உறைந்து கிடக்கும் ஒரு சராசரியான ஆணின் மனதில் ஒரு பயத்தை உருவாக்குவதுதான். இதில் அவர்கள் எப்போதுமே வெற்றி கண்டுள்ளார்கள். இன்றைக்கு புதிதாக வந்திருக்கும் சில இளைய தலைமுறை இயக்குநர்கள் நீங்கலாக பெரும்பாலும் ஆணாதிக்கம் நிரம்பி வழியும் இடமாக தமிழ்த் திரைப்படங்கள் உள்ளன. ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து பெரும்பாலான இயக்குநர்களின் பார்வையும் இதே போன்றே அமைந்துள்ளதுதான் வேதனை . திரைப்படங்களில் பெண்கள் மீதான வன்முறை என்பது மிகச்சாதாரணமாக பெண்களையே ஏற்றுக்கொள்ள வைக்கிற, அதை ரசிக்கிற நிலைக்கும் எப்போதோ கொண்டு வந்துவிட்டனர் என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய விஷயம்.பெண் என்பவர் அறிவும் மனமும் உணர்ச்சிகளும் நிறைந்த ஒரு மனிதப்பிறவி அல்ல; வெறும் சதைப்பிண்டம்தான்; அனுபவித்து விட்டு தூக்கி எறியப்படும் மோகப்பொருள் என்ற உள்ளார்ந்த அர்த்தத்தை கொண்ட பிகர் என்ற வார்த்தையை ஒரு பெண்ணையே ரசித்து கூற வைப்பதும், அது மட்டுமின்றி பாலியல் இச்சைக்கு மட்டும்தான் பெண் என்பதைக்குறிக்கும் ஐட்டம், மேட்டர் என்பதையும் பெண்களையே (துப்பாக்கி) கூற வைத்த பெருமையும் நமது மகா கனம் பொருந்திய தமிழ் சினிமா இயக்குநர்களையே சாரும். எனவே எவன்டி ஒன்னை பெத்தான், என் கையில் செத்தான், அடிடா அவளை போன்ற எண்ணற்ற பாடல்களில் மட்டுமல்ல பெண்கள் குறித்த வார்த்தைகளையே இழிவாக பயன்படுத்தி அவற்றை சமூகத்தில் புழக்கத்திற்கும் கொண்டு வந்து விட்டனர்.எனவே பெண்கள் காதலிக்க மறுத்தால் அவர்கள் மீது ஆசிட் வீசுவது அரிவாளால் வெட்டுவது என்பது வினோதினிகளோடும் சுவாதிகளோடும் முடிந்து விடும் என்று மட்டும் எண்ணி விட வேண்டாம். கோடம்பாக்கத்தில் பெண்களைப் பற்றி இது போன்ற பார்வை கொண்ட இயக்குநர்கள் எப்போதோ இதற்கான விதைகளை ஊன்றி விட்டனர் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.பெண்ணின் விருப்பம் ஒரு பொருட்டே அல்ல; அவர்கள் வெறுத்தாலும் அவர்களை உளவியலாகவும் பயமுறுத்தியும் அடித்து துன்புறுத்தியும் பணிய வைக்க முடியும் என்பதை சுவாதியின் கொலையாளிக்கு கற்பித்தது திரைப்படம் என்ற கூர்மையான ஊடகமே.பெண்களை பகடி செய்வதும் துரத்துவதும் வார்த்தைகளால் வதைப்பதும் எனத் தொடங்கி பின்னர் அவள் படிந்து அவனின் வாழ்க்கையில் வந்த பின்னர் என்ன சித்ரவதை செய்தாலும் கணவரையே ஏற்றுக் கொண்டு அவனின் லட்சியங்களுக்கு பாடுபடுவது (மயக்கம் என்ன?) என்பதாகவே திரைக்கதை அமைக்கப்படுவது எப்போது ஒழிகிறதோ அப்போதுதான் பெண்ணை மரியாதையாகப் பார்க்கிற ஒரு இளம் தலைமுறையை உருவாக்க உதவும்.
சேது
தீக்கதிர் , 08-07-2016