Search This Blog

Thursday, December 17, 2015

Big moves in protein structure prediction and design


Custom design with atomic level accuracy enables researchers to craft a whole new world of proteins



The potential of modular design for brand new proteins that do not exist in the natural world is explored Dec. 16 in the journal Nature. The reports are the latest in a recent series of developments toward custom-designing proteins.
Naturally occurring proteins are the nanoscale machines that carry out nearly all the essential functions in living things.
While it has been known for more than 40 years that a protein's sequence of amino acids determines its shape, it has been challenging for scientists to predict a protein's three-dimensional structure from its amino acid sequence.
Conversely, it has been difficult for scientists to devise brand new amino acid sequences that fold up into hitherto unseen structures. A protein's structure dictates the types of biochemical and biological tasks it can perform.
The Nature papers look at one type of natural construction: proteins formed of repeat copies of a structural component. The researchers examined the potential for creating new types of these proteins. Just as the manufacturing industry was revolutionized by interchangeable parts, originating protein molecules with the right twists, turns and connections for their modular assembly would be a bold direction for biotechnology.

What high blood pressure (hypertension) can do


High blood pressure is a major cause of heart disease and strokes, but it also cause kidney disease, some types of dementia and eye problems.
Your brain
High blood pressure is one of the leading causes of strokes, and can lead to a form of dementia called vascular dementia:
Your heart and arteries
High blood pressure can severely damage your arteries and blood vessels. It can also cause heart disease and enlargement of the heart muscle, which can be very dangerous to your health:
Your kidneys
Your kidneys have a very important role in removing waste products from your body. High blood pressure can damage your kidneys and, in addition, damage to your kidneys can raise your blood pressure:
Your eyes and limbs
High blood pressure does not just affect your internal organs. It can also damage the blood vessels in your eyes and limbs, causing sight and mobility problems:
control high blood pressure without medication
1. Blood pressure often increases as weight increases. Being overweight also can cause disrupted breathing while you sleep (sleep apnea), which further raises your blood pressure.
2. Regular physical activity — at least 30 minutes most days of the week — can lower your blood pressure by 4 to 9 millimeters of mercury (mm Hg). It's important to be consistent because if you stop exercising, your blood pressure can rise again.
3. Eating a diet that is rich in whole grains, fruits, vegetables and low-fat dairy products and skimps on saturated fat and cholesterol can lower your blood pressure by up to 14 mm Hg. This eating plan is known as the Dietary Approaches to Stop Hypertension (DASH) diet.
4. Reduce sodium in your diet
Even a small reduction in the sodium in your diet can reduce blood pressure by 2 to 8 mm Hg.
இரத்த அழுத்தம் என்றால் என்ன
உடலில் உள்ள திசுக்களுக்குத் தேவையான உணவும் பிராண வாயும் எப்பொழுதும் கிடைக்கச் செய்யவும், அந்த திசுக்கள் உண்டாக்கும் கழிவுப் பொருட்களை வெளியேறச் செய்யவும் ஒரு அமைப்பு நம் உடலுக்குத் தேவைப்படுகிறது. இந்த அமைப்புதான் இரத்த ஓட்டம் என்பது. இந்த இரத்த ஓட்டம் ஒருவித அழுத்தத்தினால்தான் ஓடிக்கொண்டு இருக்கிறது. இதற்குத்தான் இரத்த அழுத்தம் என்று (Blood pressure) பெயர் .
உயர் இரத்த அழுத்தம் உண்டாவதற்கான காரணங்கள்
உயர் இரத்த அழுத்தத்திற்கு எந்தக் காரணமும் கண்டுபிடிக்க முடியாத நிலையில் அதற்கு முதல் நிலை உயர் இரத்த அழுத்தம் (Essential hypertension) என்று பெயர். இதில் பரம்பரை மரபு அணுகோளாறும் அடங்கும். மற்ற காரணங்களால் உண்டாகும் உயர் ரத்த அழுத்தத்திற்கு இரண்டாவது நிலை உயர் இரத்த அழுத்தம் (Secondary hypertension) என்று பெயர்.

எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்:விளக்கு ஏற்றும் முறை


விநாயகருக்கு தேங்காய் எண்ணெய், மகாலட்சுமிக்கு பசுநெய், குலதெய்வத்துக்கு வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய், பைரவருக்கு நல்லெண்ணெய், அம்மனுக்கு விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த 5 கூட்டு எண்ணெய், பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்களுக்கு ஒளி வடிவான இறைவனை தீபம் ஏற்றி வழிபடுவது எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வைப் பிரகாசிக்கச் செய்யும். வேத புராணங்களும்கூடவிளக்கேற்றுவதே மிகச் சிறந்த பலன் தரும் என்கின்றன. எத்தனை எத்தனையோ அரசர்கள், கோயில்களில் தீபம் ஏற்றுவதையே மிகச் சிறந்த திருப்பணியாகச் செய்துள்ளனர். எல்லா நாளுமே தீபம் ஏற்றி வழிபடுவது உயர்வான பலன் தரும் என்றாலும், கார்த்திகை மாதத்தில் ஆலயங்களில் தீபம் ஏற்றி வைப்பதும், இல்லத்தில் இருவேளைகளில் விளக்கேற்றுவதும் எல்லா மங்களங்களையும் தந்து வாழ்வை ஒளிமயமாக்கும்.
கார்த்திகை மாதம் முழுதும் தினமும் மாலையில் வீடுகளிலும் ஆலயங்களிலும் விளக்கேற்றி வழிபடுவது, அக்கினியின் வாயிலாக ஆண்டவனுக்கு அவிர்பாகம் அளிக்கும் பெரும் யாகத்திற்கு நிகரான பலன் தரக்கூடியது. தினமும் விளக்கேற்ற இயலாதவர்கள் துவாதசி, சதுர்த்தசி, பவுர்ணமி ஆகிய மூன்று தினங்களில் மட்டுமாவது கண்டிப்பாக தீபம் ஏற்ற வேண்டும். கார்த்திகை மாதத்தின் தொடக்கத்திலும் முடிவிலுமாக இரு நாட்களில் கார்த்திகை நட்சத்திரம் வருமாயின், இரண்டாவதாக வரும் நாளில் கொண்டாடுவது மரபு.
வீட்டின் சுவாமி அறை மட்டுமல்லாது நடு முற்றம், சமயலறை, துளசி மாடம்
போன்ற இடத்திலும் தீபங்களை ஏற்றலாம் மாலை நேரம் நடு முற்றத்தில் மாக்கோலம் போட்டு மஞ்சள் திரி வைத்து நெய் தீபம் ஏற்றினால் அந்த குடும்பம் வறுமையின் ஆழத்தில் கிடந்தாலும் மிக கண்டிப்பாக செல்வ செழிப்பின் உச்சத்திற்கு வருமென்று சாஸ்திரங்கள் உறுதியாக சொல்லுகின்றன.
தீபம் ஏற்றும் நேரம்
தீபம் எற்றுவதற்கு உகந்த நேரமாக கருதப்படுவது அதிகாலை பிரம்ம முகூர்த்தமான நான்கு மணி முதல் ஆறு மணி வரையும் (சூரிய உதயதிற்கு முன்) மாலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை (சூரிய உதயதிற்கு பின்).
காலையில் ஏற்றி வழிபட்டால் அனைத்து செயல்களும் நன்மையைத் தரும், மற்றும் பெரும் புண்ணியம் உண்டாகும். முன்வினைப் பாவம் விலகும். மாலையில் 4.30-6க்கு இடையே உள்ள பிரதோஷ வேளை சிவபெருமானுக்கும், நரசிம்ம மூர்த்திக்கும் மிகவும் உகந்தவை. இவ்வேளையில் தீபமேற்றினால் திருமணத்தடை, கல்வித்தடை நீங்கும் என்பது ஐதீகம் மற்றும் வீட்டில் லெட்சுமி வாசம் செய்வாள்.
விளக்கு ஏற்றும் முறை
ஒரு முகம் ஏற்றினால் - நினைத்த செயல்கள் நடக்கும்.
இரு முகம் ஏற்றினால் - குடும்ப ஒற்றுமை கிட்டும்.
முன்று முகம் ஏற்றினால்- புத்திரதோஷம் நீங்கும்.
நான்கு முகம் ஏற்றினால் - பசு,பூமி,செல்வம், சர்வபீடை நிவர்த்தி ஆகும்.
ஐந்து முகம் ஏற்றினால் - சகலநன்மையும்,ஐஸ்வர்யம் பெருகும்.
விளக்கேற்றும் திசை
கிழக்கு - துன்பம் நீங்குதல், குடும்ப அபிவிருத்தி
மேற்கு - கடன், தோஷம் நீங்கும்
வடக்கு - திருமணத்தடை அகலும்
தெற்கு நோக்கி விளக்கேற்றக்கூடாது (மரணபயம் உண்டாகும்)
எண்ணெயின் பலன்
தீபமேற்ற பயன்படுத்தும் எண்ணெயின் பலனைப் பொறுத்தும் பலன் கிடைக்கும்.
நெய் - செல்வவிருத்தி, நினைத்தது கைகூடும்
நல்லெண்ணெய் - ஆரோக்கியம் அதிகரிக்கும்
தேங்காய் எண்ணெய் - வசீகரம் கூடும்
இலுப்பை எண்ணெய் - சகல காரிய வெற்றி
விளக்கெண்ணெய் - புகழ் தரும்
ஐந்து கூட்டு எண்ணெய் (விளக்கெண்ணை, இலுப்பை எண்ணை, நெய், நல்லெண்ணை, தேங்காய் எண்ணை ) - அம்மன் அருள்
வேப்பெண்ணை - கணவன் மனைவி உறவு நலம் பெறவும், மற்றவர்களின் உதவி பெறவும்
ஆமணக்கு எண்ணை - அவரவர்கள் தங்கள் குல தெய்வத்தின் முழு அருளையும் பெற வழி செய்வது
கடலை எண்ணை, கடுகு எண்ணை, பாமாயில் போன்றவைகளைக் கொண்டு ஒருபோதும் விளக்கேற்றவே கூடாது. மனக்கவலையையும், தொல்லைகளையும், பாவங்களையுமே பெருக்க வல்லவை இந்த எண்ணையின் தீபங்கள்.
எண்ணெய்க்கு உகந்த தெய்வங்கள்
விநாயகர் - தேங்காய் எண்ணெய்
மகாலட்சுமி - பசுநெய்
குலதெய்வம் - வேம்பு, இலுப்பை, பசுநெய் கலந்த எண்ணெய்
பைரவர் - நல்லெண்ணெய்
அம்மன் - விளக்கெண்ணெய், வேம்பு, தேங்காய், இலுப்பை, பசுநெய் சேர்ந்த
5 கூட்டு எண்ணெய்
பெருமாள், சிவன், முருகன், பிற தெய்வங்கள் – நல்லெண்ணெய்
திரிகளின் வகைகளும் அவை தரும் பலன்கள்
திரிகள் புதிதாகவும், கெட்டியானதாகவும் இருக்க வேண்டும். திரிகளும்,பயன்களும் குத்துவிளக்கிற்கு பயன்படுத்தும் திரிகளாலும் பயன்கள் மாறுபடுகின்றன.
பருத்திப் பஞ்சு - குடும்பம் சிறக்கும், நற்செயல்கள் நடக்கும்.
வாழைத் தண்டின் நார் - முன்னோர் சாபம், தெய்வ குற்றங்கள் நீங்கி அமைதி உண்டாகும்.
தாமரைத்தண்டு நூல் - முன்வினைப் பாவங்கள் நீங்கி, நிலைத்த செல்வம் கிடைக்கும்.
வெள்ளை எருக்கம்பட்டை - செல்வம் பெருகும்.
புதிய மஞ்சள் துணி - நோய்கள் குணமாகும்.
புதிய சிவப்பு வண்ண துணி - குழந்தையின்மை தொடர்பான தோஷம் நீங்கும்.
புதிய வெள்ளை துணி திரி - அனைத்து நற்பலன்களும் கிடைக்கும்.
(துணியின் மீது பன்னீர் தெளித்து காயவைத்து பின்பு திரியாக்கி விளக்கேற்றுவது மிகவும் நல்லது.)
விளக்கின் தன்மை
மண்ணால் செய்யப்பட்ட விளக்கு – பீடை விலகும்
வெள்ளி விளக்கு – திருமகள் அருள் கிடைக்கும்
பஞ்ச லோக விளக்கு – தேவதை வசியம் உண்டாகும்
வெண்கல விளக்கு - ஆரோக்கியம் உண்டாகும்
இரும்பு விளக்கு – சனி கிரக தோஷம் விலகும்.
திருவிளக்கின் சிறப்பு
திருவிளக்கில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி ஆகிய சக்திகள் உள்ளனர். தீப ஒளி தீய சிந்தனைகள் ஏற்படா வண்ணம் தடுக்கிறது. இதன் அடிப்பாகத்தில் பிரம்மா, தண்டு பாகத்தில் மஹாவிஷ்ணு, நெய், எண்ணெய் நிறையும் இடத்தில் சிவபெருமான் வாசம் செய்கின்றனர்.
விளக்கு துலக்க நல்ல நாள்
குத்துவிளக்கை ஞாயிறு, திங்கள், வியாழன், சனிக்கிழமைகளில்துலக்குவது நல்லது. இதற்கு காரணம் உண்டு. திருவிளக்கில் திங்கள் நள்ளிரவு முதல் புதன் நள்ளிரவு வரையில் தனயட்சணி (குபேரனின் பிரதிநிதியான பதுமநிதியின் துணைவி) குடியிருக்கிறாள். செவ்வாய், புதன் கிழமைகளில் விளக்கை கழுவினால் இவள் வெளியேறிவிடுவாள் என்பது ஐதீகம். வியாழன் நள்ளிரவு முதல் வெள்ளி நள்ளிரவு வரை விளக்கில் குபேர சங்கநிதி யட்சணி (குபேரனின் பிரதிநிதியான சங்கநிதியின் துணைவி) குடியேறுகிறாள். எனவே வெள்ளிக்கிழமை துலக்குவதைத் தவிர்த்து, வியாழன் முன்னிரவில் துலக்குவது நல்லது.
விளக்கு துலக்கும் நாட்களுக்குரிய பலன்
ஞாயிறு - கண் நோய் குணம், பார்வை பிரகாசம்.
திங்கள் - மனசஞ்சலம், குழப்பம் நீங்குதல், மன அமைதி, தீர்க்கமாக முடிவெடுக்கும் பண்பு வளர்தல்.
வியாழன் - குருபார்வையால் கோடி நன்மை, மன நிம்மதி.
சனி - வீட்டிலும், பயணத்திலும் பாதுகாப்பு, இழந்த பொருள் கிடைத்தல்.
தீபத்தை குளிர வைக்கும் முறை
பொதுவாக தீபம் ஏற்றினால் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விட்டு விடக் கூடாது. இது கெடுதலைக் கொடுக்கும். தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும்.
விளக்கை குளிர்விக்கும் போது, கைகளை உயர்த்தி அணைக்கக்கூடாது. வாயால் ஊதி அணைக்கக்கூடாது.
பூவால் குளிர்விக்கலாம். தூண்டும் குச்சியால் லேசாக அழுத்தலாம். இதற்கென பித்தளை குச்சிகள் கடைகளில் கிடைக்கின்றன.
தீபத்தை குளிர வைக்க, திரியின் அடிப்பகுதியை (எண்ணெய் அமிழ்ந்திருக்கும் நுனியை) ஓம் சாந்த ஸ்ரூபிணே நம என்று சொல்லி பின்புறமாக இழுக்க வேண்டும். அப்பொழுது தீச்சுடர் சிறிது சிறிதாக குறைந்து திரி எண்ணெயில் அமிழ்ந்து தீபம் குளிரும். விளக்கேற்றலாம்.

அஜீரண பிரச்னைக்கு - பாட்டி வைத்தியம்


* இஞ்சி சாற்றில் சம அளவு எலுமிச்சை சாறு கலந்து சிறிது உப்பு சேர்த்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
* இஞ்சிச்சாறு கொதிக்க வைத்து அதில் சம அளவு தேன் கலந்து தினமும் காலை, இரவு இரண்டு வேளையும் உணவுக்குப் பின்னர் குடித்தால் பெருத்த வயிறு குறையும்.
* தோல் நீக்கப்பட்ட இஞ்சியை உப்பு சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் குணமாகும்.
* இஞ்சியுடன் தேங்காய் மற்றும் வெல்லம் சேர்த்து சாப்பிட்டால் அஜீரணக் கோளாறு சரியாகும்.
* எலுமிச்சை பழச்சாறு, வெள்ளரிப்பிஞ்சு, உப்பு மூன்றையும் சேர்த்து சாப்பிட்டால் செரிமா னத் தொல்லைகள் தீரும்.
* ஏலக்காய் விதை, ஓமம், சீரகம் ஆகியவற்றில் தலா 100 கிராம் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை மூன்று வேளையும் உணவுக்குப் பின் மூன்று கிராம் அளவுக்கு சாப்பிட்டால் அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
* கடுகு கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் ஜீரணக்கோளாறுகள் சரியாகும்.
* சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடி செய்து கொள்ளவும். இதை கஷாயம் வைத்துக் குடித்தால் அஜீரணக் கோளாறுகள் சரியாகும்

Yesterday's "JUNK DNA" provides Today's Miracle Cures:


A study released today shows that blocking a type of RNA produced by what used to be called "junk DNA" can prevent a significant portion of the neural destruction that follows a stroke.
The research points toward a future treatment for post-stroke damage, which is often more extensive than the initial destruction that results when blood to the brain is temporarily shut off.
The research also links two mysteries: Why does the majority of damage follow the restoration of blood supply?
And what is the role of the vast majority of the human genome, which was once considered junk because it does not pattern for the RNA that makes proteins?
The emerging evidence suggests that there may be more genes encoding regulatory RNAs than encoding proteins in the human genome, and that the amount and type of gene regulation in complex organisms has been substantially misunderstood for most of the past 50 years.
The application of genome tiling array technology and deep sequencing to the characterization of the transcriptome showed that there are tens of thousands of loci in mammals that express large transcripts that do not encode proteins, located intergenic, intronic and antisense to protein-coding genes.
The vast majority (at least 80%) of the human and mouse genomes are differentially transcribed in one context or another, with other studies reporting similar findings in all organisms examined. Indeed, it seems most intergenic (and by definition intronic) sequences are differentially transcribed, and therefore that the extent of the transcriptome expands with developmental complexity163.
"Less than 2 percent of the RNAs formed from the genome code for proteins, leaving 98 percent that we call 'noncoding RNA,'" says senior author Raghu Vemuganti, a professor of neurological surgery at the University of Wisconsin-Madison.
Moreover, those loci expressing lncRNAs show all of the hallmarks of bona fide genes4, including conservation of promoters indicative chromatin structure and regulation by conventional morphogens and transcription factors LncRNAs have been found to have a similar range of cellular half-lives as mRNAs and to be differentially expressed in a tissue-specific manner with higher resolution in the brain19
It has also become evident that many if not most protein-coding transcripts are targets for miRNA regulation that miRNAs can, in some cases, regulate large numbers of target mRNA , and reciprocally that many mRNAs contain target sites for many miRNAs although the implied regulatory logic of this complex multiplex arrangement has not been explained. The targets of miRNAs are usually thought to be mRNAs, but may also include other RNAs
In the study just published in the Journal of Neuroscience, Vemuganti and colleagues blocked one variety of long noncoding RNA (lncRNA), which exists in at least 40,000 unique varieties—possibly as many as 100,000.
"This lncRNA can bind to other RNA, to a protein, or to a protein on one side and DNA on the other," says first author Suresh Mehta "Among many other jobs, lncRNAs can regulate gene activity.

'Tiny Computers' Embedded In Human Skin

"We like to think that all our smarts are contained in our brain, but researchers at Umea University in Sweden have found that the neurons that extend into our fingertips perform the same sorts of calculations that take place in the cerebral cortex.
In other words, what we’ve been told about our entire nervous system acting as a sort of network of data-collecting sensors that send that data back to the brain to be processed might not be quite right.
In the abstract for a study published online August 31 by the journal Nature Neuroscience, J Andrew Pruszynski & Roland S Johansson write: “We submit that peripheral neurons in the touch-processing pathway, as with peripheral neurons in the visual-processing pathway, perform feature extraction computations that are typically attributed to neurons in the cerebral cortex.” "

President Lincoln. REAL photography taken in 1862, that was later colored.


Amazing!


Wednesday, December 16, 2015

இறப்பு (அப்துல் கையூம்)


நான் மரணிக்கிறேன்….
கைகளை அசைக்க எத்தனிக்கிறேன்
கால்களை நகர்த்த முயற்சிக்கிறேன்
இத்தனைக் காலம் …
என்னோடு பழகிய உறுப்புக்கள்
என் பேச்சையே செவிமடுக்க
ஏன் மறுக்கின்றன..?
வாய்கிழிய பேசும் எனக்கு
வார்த்தைகளே வெளிவர மாட்டேன்கிறதே?
யாரங்கே..?
காரிருளை என் கண்களுக்குள்
களமிறக்குவது யார்?
திறந்துமூடும் என் இமைகளை
திணறடிப்பது யார் வேலை?
நாடித் துடிப்புகளை
நாசுக்காய் குறைப்பது யார்?
பழகிப்போன மூச்சுகூட
பழுதாகிப் போகின்றதே!
உள்ளங்காலில் தொடங்கும் கடுப்பு
ஒவ்வொரு அங்குலமாய்
உச்சந்தலைவரை ஏறுகிறதே..!
நினைவுவந்த நாள் முதலாய்
எனக்கும் என் உடம்புக்குமிருந்த
இறுக்கமான அன்னியோன்யத்தை
யார் பிரித்துப் பார்ப்பது ?
எதோ ஒரு இழுபறி
எனக்குள் நடப்பது
எனக்கே புரிகின்றது!
போதும் போதும்…
யாராவது நிறுத்துங்களேன்!!
இப்படியொரு வேதனையை
இதுவரையில் நான்
எதிர்கொண்டதே இல்லையே..?
வீறாப்பாய் விறைத்தும் முறைத்தும்
வெட்டி கெளரவம் பார்த்த என்தேகம்
விரைவாய் விறைக்கின்றதே?
மணக்க மணக்க
திரவியம்பூசும் என்மேனி
கனத்துப்போய் நாறுமோ இனி?
“மரணத்தை தழுவினான்”
என்று எழுதுகிறார்களே!
தழுவுவது சுகமல்லவா? – இது
தண்டனை போலல்லவா இருக்கிறது.?
ஊசி முனை ஓட்டையில்
ஒட்டகத்தை இழுப்பது
இலகுவான காரியமா என்ன..??
அப்துல் கையூம்

Tuesday, December 15, 2015

New Cardio treatment method of angiography which directly removes block. Only at the cost of Rs.5000 at J. J. HOSPITAL. MUMBAI. ... Please help someone.. Who waiting for it. very effective 4 in 1



New method of angiography which directly removes block. Only at the cost of Rs.5000 at
J. J. HOSPITAL. MUMBAI. ... Please help someone.. Who waiting for it.

போஸ்ட் மார்ட்டத்தின் சரித்திரம்


போஸ்ட்மார்ட்டம் என்பது இறந்தவர் உடலை அறுவை செய்து ஆராய்ந்து, மரணத்துக்கான காரணத்தைத் தீர்மானிப்பது. ஆட்டோப்ஸி, நெக்ரோப்ஸி, அப்டக்ஷன் என வேறு பெயர்களும் இதற்கு உண்டு. இதைச் செய்யும் மருத்துவர் Pathologist. Forensic Autopsy என்பது சந்தேகத்துக்குரிய முறையில் மரணமுற்றவரை ஆராய்ந்து, அது நிகழ்ந்திருக்கும் விதத்தைச்சொல்வது. Clinical Autopsy என்பது நோய்வாய்ப்பட்டு இறந்தவரை ஆராய்ந்து மரணத்துக்கான காரணத்தைக் கண்டுபிடிப்பது. போஸ்ட்மார்ட்டம் செய்ய இறந்தவரின் நெருங்கிய உறவினரிடம் எழுத்துபூர்வ ஒப்புதல் பெறுவர். முடிந்த பின் உடலைத் தைத்து திருப்பித் தருவார்கள்.
முதலில் போஸ்ட்மார்ட்டம் செய்தவர்கள் கற்கால வேட்டைக்காரர்கள், இறைச்சி வெட்டுபவர்கள், சமையல்காரர்கள்தாம். இவர்கள் மிருக உடல்களில் எந்த உறுப்புகள் உண்பதற்கு ஏற்றவை எனக் கண்டறிய போஸ்ட்மார்ட்டம் செய்தனர்.
பண்டைய பாபிலோனில் (கி.மு. 3,500) விலங்குகளின் உடல்கள் அறுக்கப்பட்டன, ஒரு விசித்திரக் காரணத்துக்காக. அவற்றின் குடல் மற்றும் ஈரல் பகுதிகளில் புனித ஆவிகளின் செய்திகள் எழுதப்பட்டிருப்பதாகவும், அதன் மூலம் எதிர்காலத்தை அறிய முடியும் எனவும் அவர்கள் நம்பினர்.
கி.மு 4ம் நூற்றாண்டில் கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில் நரம்புகளையும், தசைநார்களையும், ரத்தக்குழாய்களையும் படங்களாக வரைந்தார். கி.மு 300ல் கிரேக்க மருத்துவர்களான ஹெரோஃபிலஸ், எராசிஸ்ட்ரடஸ் இருவரும், இறந்த உடல்களை அறுத்துப் பார்த்து உறுப்புகளையும் நரம்புகளையும் படம் போட்டனர்.
2ம் நூற்றாண்டில் ஹிப்போக்ரேடஸின் சீடரான கிரேக்க மருத்துவர் காலென், உடல்களை அறுத்து நோய்க்கூறுகளை ஆராய்ந்தார். அப்போது மனித உடலை அறுப்பது தடை செய்யப்பட்டிருந்ததால், அவர் பெரும்பாலும் மிருகங்களையே ஆராயப் பயன்படுத்தினார். தன் செல்வாக்கைப் பயன்படுத்தி மரணித்த க்ளேடியேட்டர்களின் உடல்களைப் பெற்றும் ஆராய்ச்சி செய்தார். பிரமாண்ட ஜனத்திரள் முன் இதை ஒரு கலை நிகழ்ச்சி போல் செய்தார் காலென். ஒரு பன்றியின் தண்டுவட இயக்கத்தை விளக்க, அதைக் கொஞ்சம் கொஞ்சமாய் வெட்டுவார். முதலில் அதன் கால்கள் செயலிழக்கும், பின்னர் மேல்பகுதியின் முன்பக்கம், கடைசியாய் உயிர் மொத்தமும் துடித்தடங்கும்.
காலென் மனித உடல் குறித்து 434 பாகங்கள் கொண்ட ஒரு பிரமாண்ட நூலை எழுதினார். அடுத்த 1300 ஆண்டுகளுக்கு ஐரோப்பாவில் அதுவே உடற்கூறியலின் பைபிளாக இருந்தது.
என்னதான் முன்னோடியாக இருந்தாலும், அவரது கண்டுபிடிப்புகளில் நிறைய குறைகளும் பிழைகளும் இருந்தன. உதாரணமாக, உடலில் ஆன்மா எங்கே இருக்கிறதெனக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவித்தார்!
பண்டைய எகிப்தியர்கள் சடலங்களிலிருந்து சில உறுப்புகளை மட்டும் எடுத்துப் பாதுகாத்தனர். பண்டைய கிரேக்கர்களும் இந்தியர்களும் பிணங்களை ஏதும் செய்யாமல் அப்படியே எரியூட்டினர். பண்டைய ரோமானியர்கள், சீனர்களுக்கு பிணத்தை அறுக்க மதத் தடை இருந்தது.
13ம் நூற்றாண்டில் இரண்டாம் ஃப்ரெட்ரிக், ‘மரண தண்டனை பெற்ற இரு கிரிமினல்களின் உடல்கள் மருத்துவக் கல்லூரிகளுக்கு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்பட வேண்டும்’ என சட்டம் பிறப்பித்தார். அதில் நடக்கும் பிரேதப் பரிசோதனையை அனைத்து மருத்துவர்களும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். 1302ல் பொளங்கா பல்கலைக்கழகத்தில் மாஜிஸ்ட்ரேட் உத்தரவுப்படி முதல்முறை ஃபாரன்ஸிக் போஸ்ட்மார்ட்டம் நடத்தப்பட்டது. 1315ல் மான்டினோ டி லியூஸ்ஸி முதல்முறையாக மக்கள் முன்னிலையில் போஸ்ட்மார்ட்டம் நிகழ்த்தினார். 14ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் பல இடங்களில் பிணமறுப்பது குற்றமெனக் கருதப்பட்டதால் மருத்துவ மாணவர்கள் பிணங்களைத் திருடினர். சிலர் மாட்டிக் கொண்டனர்! 15ம் நூற்றாண்டின் இறுதியில் போப் ஏழாம் சிக்ஸ்டஸ், மருத்துவ மாணவர்கள் உடல்களை அறுப்பதை அங்கீகரித்து உத்தரவிட்டார்.
16ம் நூற்றாண்டில் பெல்ஜிய மருத்துவர் ஆன்ட்ரியாஸ் வெசாலியஸ் பிரேதத்தை அடுக்கடுக்காக உரித்து மனித உடலமைப்பை ஆவணப்படுத்தினார். காலெனின் கண்டுபிடிப்புகளுக்கு எதிராக புறப்பட்ட முதல் குரல் இது. இதனால் இவர் பலத்த எதிர்ப்பை சந்திக்க வேண்டி இருந்தது. இவர் தனது பிரேத பரிசோதனைக்கண்டுபிடிப்புகளை வரைந்து தொகுத்து De Fabrica Corpora Humani என்ற நூலாக்கினார். காலெனைப் போல் இவரும் பொதுமக்களுக்கு போஸ்ட்மார்ட்டம்களை ஒரு கண்காட்சியாக நிகழ்த்தினார். இறந்த உடலுக்குள் கைகளைச் செலுத்தி, இதயத்தை வெளியே எடுத்துக் காட்டி ஆச்சரியப்படுத்தினார்.
1533ல் ஹிஸ்பேனொலா கத்தோலிக்க தேவாலயம், ஒட்டிப்பிறந்த இரட்டையர்கள் (மாற்றான்!) ஜோவனா, மெல்ஷியோரா இருவருக்கும் ஒரே பொது ஆன்மா இருந்ததா என போஸ்ட்மார்ட்டம் செய்து கண்டுபிடிக்க ஆணையிட்டது. அறுத்துப் பார்த்ததில் இரண்டு தனித்தனி இதயங்கள் இருக்கவே, இரு ஆன்மாக்கள் இருந்ததாக முடிவு கட்டினர். (கிரேக்க தத்துவஞானி எம்பெடாக்கிள்ஸ் கருத்துப்படி, ஆன்மா இதயத்தில்தான் குடி கொண்டுள்ளது).
லியனார்டோ டாவின்சி 30 உடல்களை அறுத்துப் பரிசோதித்து அதனடிப்படையில் அசாதாரண உடற்கூறியல் குறித்து எழுதினார். ஓவியர் மைக்கேலேஞ்சலோவும் பல பிரேதப் பரிசோதனைகளை நிகழ்த்தியுள்ளார்.
16ம் நூற்றாண்டு வரை இங்கிலாந்தில் ஆட்டோப்ஸி தடை செய்யப்பட்டிருந்தது. பின், சில குறிப்பிட்ட மருத்துவக் குழுக்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது. அவர்களும் ஆண்டுக்கு 10 பிணங்கள் என்ற ரேஷன் முறையில்தான் அறுக்க வேண்டும். பின்பு, தொடர் கோரிக்கைகளால் 1752ம் ஆண்டில், ‘மரண தண்டனை பெற்றவர் உடல்களை ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தலாம்’ என அனுமதி தரப்பட்டது.
19ம் நூற்றாண்டில் மருத்துவக் கல்லூரிகளின் அதீதப் பெருக்கத்தின் காரணமாக, ஆராய்ச்சிப் பிணங்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால் கள்ள மார்க்கெட்டில் பிணங்கள், உடல் உறுப்புகளை வாங்கி மாணவர்கள் படித்தனர். பிணத்திருட்டுகள் பெருகின. இதன் உச்சமாக 1827, 1828ல் பிரசித்தி பெற்ற புர்க் மற்றும் ஹார் கொலைகள் நிகழ்ந்தன. அதாவது, 17 பேரைக் கொன்று உடல்களை பிரேதப் பரிசோதனைக்கு விற்றது அம்பலமானது. 1832ல் உடற்கூறியல் சட்டம் பிறப்பிக்கப்பட்டு மருத்துவக்கல்வி பிரேதசப்ளையை முறைப்படுத்தியது.
19ம் நூற்றாண்டில் வியன்னாவின் அல்ஜெமெயின் க்ரான்கென்ஹாஸ் மேற்கத்திய உலகின் சிறந்த மருத்துவக்கூடமாகக் கருதப்பட்டது. கார்ல் ரோகிட்டன்ஸ்கியின் தலைமையில் இயங்கிய அதன் பேத்தாலஜி மையம் அதற்கு முக்கியக் காரணம். கிட்டத்தட்ட வியன்னாவில் இறந்த அத்தனை பேரின் உடலும் அங்கு பிரேதப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. ரோகிட்டன்ஸ்கி தன் 45 வருட கால அனுபவத்தில் 30,000 ஆட்டோப்ஸிகள் செய்தார். பரிசோதனைகளில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தவில்லை என்பதால் அவரது சில முடிவுகள் பிழைபட்டதாய் இருந்தன.
அதே நூற்றாண்டின் பிற்பகுதியில் ருடால்ப் விர்ச்சௌ என்ற ஜெர்மானிய பேத்தாலஜிஸ்ட் தன் பிரேதப்பரிசோதனையில் மைக்ரோஸ்கோப் பயன்படுத்தினார். நோய்த்தொற்று செல்களை ஆராயும் செல்லுலர் பேத்தாலஜியே இவர் ஆய்வின் அடிப்படை. இதனால் மருத்துவத் துறையில் மெல்ல மெல்ல வியன்னாவைப் பின்னுக்குத் தள்ளி பெர்லின் முன்னுக்கு வந்தது.
அக்காலத்தில் பெர்லினில் படித்த மாணவர்கள், பிற்பாடு வட அமெரிக்கா முழுக்க கைதேர்ந்த மருத்துவர்களாகப் பரவினர். அவர்களில் அமெரிக்கா, கனடாவில் பணியாற்றிய சர் வில்லியம் ஓஸ்லர் குறிப்பிடத் தகுந்தவர். ரோகிட்டன்ஸ்கி, விர்ச்சௌ இருவரிடமும் பயின்ற இவர் பிரேதப் பரிசோதனை அடிப்படையில் மருத்துவம் செய்தார். அந்திமக் காலத்தில், தனக்கு போஸ்ட்மார்ட்டம் செய்ய தனிக்குறிப்புகளும், அதன் முடிவு குறித்த அனுமானங்களையும் எழுதி வைத்தார். இறந்த பின் அவர் பிரேதத்தைப் பரிசோதித்தபோது அது சரியாக இருந்தது!
20ம் நூற்றாண்டு பிரேதப்பரிசோதனைகளில் பல முக்கிய முன்னேற்றங்களைக் கொண்டுவந்தது. 1987ல் விஷத்தை ஆராயும் டாக்ஸிக்காலஜி முறை மூலம் ஓஹியோவில் நடத்தப்பட்ட ஒரு பிரேதப்பரிசோதனையில் முதல்முறையாக சயனைடு மூலம் மரணம் நிகழ்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2005 முதல் 2007 வரை இத்தாலியில் 5300 வருடத்திற்கு முந்தைய டூட் அரசன், ஓயெட்ஸி இருவரது சடலங்களையும் சிடி ஸ்கேன் செய்து பிரேதப்பரிசோதனை செய்ததில், ‘அவர்கள் கொலை செய்யப்படவில்லை, நோய் வந்த கால்களின் காரணமாகவே மரணம் நிகழ்ந்திருக்கிறது’ என்று தெரியவந்தது. சரித்திரம் திருத்தி எழுதப்பட்டது.
21ம் நூற்றாண்டில் கணிப்பொறி மூலம் கிராஃபிக் பிம்பங்களாக மனித உடல் உறுப்புகள் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன. 2000ல் துவங்கப்பட்ட இங்கிலாந்தின் பெனின்சுலா மருத்துவக் கல்லூரி முதல்முறையாக பிரேதங்கள் பயன்படுத்தாமல் இம்முறையில் மாணவர்களுக்கு உடற்கூறியலைக் கற்பித்தது.
2010ல் ஜெய்ப்பூரில் மானஸ் தியோ என்பவர் கார் விபத்துக்குள்ளாகி, சிகிச்சை பலனளிக்காமல் இறந்ததாக மருத்துவசான்றளிக்கப்பட்டு, பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட அங்கு ஆட்டோப்ஸி டேபிளில் எழுந்து உட்கார்ந்து விட்டார். 2007ல் வெனிசுலாவில் இதே போல் ஆட்டோப்ஸியில் உடம்பில் கத்தி வைத்துக் கீறிய வலியில், பிணமாகக் கருதப்பட்டவர் எழுந்து அதிர்ச்சியூட்டினார். கொலையில், தற்கொலையில், விபத்தில், நோயில், சடலச்சோதனை சாஸ்வதமாகும்.
.
Stats சவீதா
# கடந்த 25 ஆண்டுகளில் அமெரிக்காவில் போஸ்ட்மார்ட்டம் எண்ணிக்கை 50% குறைந்துள்ளது
# அமெரிக்காவில் 60% தற்கொலைகள் போஸ்ட்மார்ட்டம் செய்யப்படுகின்றன.
# 15 முதல் 24 வயதுக்காரர்களின் மரணங்களே அதிகம் ஆட்டோப்ஸி செய்யப்படுகின்றன.
# 85 வயதுக்கு மேற்பட்டவர்களின் மரணங்களில் 0.8% மட்டுமே ஆட்டோப்ஸி நடக்கிறது.
.
நன்றி - குங்குமம்
.
குறிப்பு:
.
நம் தவறான வாழ்கைமுறையால் ஏற்படும் தொந்தரவுகளுக்கு எந்த மருந்துக்களாலும் மருத்துவமுறைகளாலும் நிரந்தராமான தீர்வை தர இயலாது.
சரியான வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலமாக மட்டுமே ஆரோக்யமாக வாழ்வது சாத்தியமாகும்.
உதாரணமாக நம் தவறான வாழ்க்கைமுறையினால் ஏற்படும் சர்க்கரை மற்றும் ரத்த அழுத்தம் போன்ற தொந்தரவுகளுக்கு மருத்துவ சிகிச்சையால் எவ்வாறு நிரந்தர தீர்வு அளிக்க முடியும்.
.
ஒரு மாதத்திற்கான உணவை ஒரேநாளில் உண்பது எவ்வாறு சாதியப்ப்படும்?
இதை மக்களுக்கு புரியவைத்து மருந்துக்களின்றி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்குவதே எனது நோக்கம்.
.
கழிவின் தேக்கம் வியாதி
கழிவின் வெளியேற்றம் குணம்
.
சரியான வாழ்க்கை முறையை கடைபிடிக்கும் பொழுது கண்டிப்பாக அனைத்து வியாதிகளியிலிருந்தும் நம்மை முழுமையாக பாதுகாத்துக் கொண்டு ஆரோக்யமாக வாழ முடியும்.
.
(http://reghahealthcare.blogspot.in/…/08/to-live-healthy.html)
.

கண் குறைபாடுகள், கண்ணாடி அணிவதிலிருந்து விடுதலை – அமைதியாய் ஒரு புரட்சி




[புகைபடம் அளித்த தோழமைக்கு மிக்க நன்றி ] God bless you
என் 9 வயது குழந்தைக்கு இடது கண்ணில் பார்வை குறைபாடு இருப்பது சமீபத்தில் தான் தெரிய வந்தது. வலது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு மற்றொரு கண்ணால் 10 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்கவைத்துப் பார்த்த போது அவனால் படிக்க முடியவில்லை. ஆனால் அதே இடது கண்ணை கைகளால் மூடிக் கொண்டு வலது கண்ணால் 20 அடி தூரத்தில் இருக்கும் எழுத்துக்களை படிக்க முடிகிறது. இரண்டு கண்களாலும் பார்க்கும் போது இந்த குறைபாடு தெரியவதில்லை. ஆனால் பள்ளியிலே கரும்பலகையில் எழுதும் வரிகளைப் படிக்கும்போது சிரமப் படுகின்றனர். ஆனால் அதை அவர்கள் சொல்வதில்லை. எல்லோருக்கும் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்துவிடுகின்றனர்.
ஈரோட்டில் உள்ள மிகப் பெரிய கண் மருத்துவமணையில் பரிசோதித்த போது, நிரந்தரமாக கண்ணாடி அணிய வேண்டும் என்று சொல்லிவிட்டனர். கண்ணாடியும் வாங்கி கொடுத்துவிட்டேன்.
அடுத்த சில நாட்களில், என்னுடைய பள்ளித் தோழர் ஒருவரை சந்தித்தேன். பள்ளி நாட்களிலேயே பெரிய சோடாபுட்டிக் கண்ணாடி அணிந்திருந்தார். -6 என்ற அளவில் கண் பார்வைக் குறை அவருக்கு இருந்தது. ஆனால் நான் சந்தித்த அன்று கண் கண்ணாடி அணியாமல், பைக் ஓட்டிவந்ததை பார்த்தவுடன் மிகவும் ஆச்சரியமடைந்தேன்.
என்னப்பா, கண்ணாடி போடாத உன்னை அடையாளமே தெரியவில்லை…கண்களுக்கான அறுவைசிகிச்சை செய்து கொண்டாயா? அல்லது காண்டாக்ட் லென்ஸ்ஸா? என்று கேட்டேன்.
பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்தில் கண்பார்வை குறை பாடுகளை நீக்க பயிற்சி அளிக்கின்றனர். அதில் போய் பயிற்சி பெற்று வந்தேன். கடந்த இரண்டு மூன்று வருடங்களாக கண்ணாடி அணிவதில்லை என்றதை கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனேன்.
அவரிடம் மேலும் தகவல்களை வாங்கிக் கொண்டு இளவலை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்து சேர்ந்தேன்.
பாண்டிச்சேரி, கடற்கரை சாலையின், வடக்கு மூலையில், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு எதிரில் இந்த பள்ளி அமைந்திருக்கிறது.
திங்கட்கிழமை மதியம் 12 மணியளவில் அந்த பள்ளிக்குச் சென்றேன். அப்பள்ளிக்கு ஒவ்வொரு திங்கட்கிழமையும் விடுமுறை. ஞாயிற்றுக் கிழமை வேலை செய்கிறார்கள். எனவே மறுநாள் காலை 8 மணிக்கு வரச்சொன்னார்கள். இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயிற்சி பெற எந்த கட்டணமும் வசூலிப்பதில்லை, நாம் விருப்பப்பட்டு கொடுக்கும் நன்கொடையை மட்டும் ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவிக்கப் பட்டது.
விடுமுறை தினமாக இருந்த போதும், அங்கிருந்த ஒரு உதவியாளர், எங்கே தங்கியிருக்கிறீர்கள்? என்று கேட்டார். இனிதான், ஏதாவது ஹோட்டலில் அறை எடுக்க வேண்டும் என்றேன். அவசியமில்லை, ஆசிரமத்தின் விடுதியில் தங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி ஆசிரம விடுதியின் தொலைபேசி எண்ணை கொடுத்தார்.
அழகான தனியறை. குளியலறை இணைந்த, இரண்டு படுக்கைகள், கொண்ட அந்த அறைக்கு வாடகை நாள் ஒன்றுக்கு ரூ.70/- மட்டுமே.
செவ்வாய்கிழமை காலை 8 மணிக்கு அங்கு சென்றேன். ஆரம்ப கட்ட பெயர் பதிவு, பரிசோதனை ஆகியவற்றை முடித்து, பயிற்சி தொடங்கப் பட்டது. சுமார் 2 மணி நேரம் பயிற்சி அளித்தனர்.
கிட்டப் பார்வை, தூரப்பார்வை, போன்ற அனைத்து கண் குறைபாடுகளுக்கும் பயிற்சி அளிக்கின்றனர். நான் சென்ற போது ஹைதராபாத்திலிருந்து ஒரு தம்பதியினர் தங்கள் இரண்டு பெண்குழந்தைகளை அழைத்து வந்திருந்தனர். 8, 4 வயதுடைய அந்த இரண்டு குழந்தைகளும் கண்ணாடி அணிந்திருந்தனர். அக் குழந்தைகளின் தந்தையும் கண்ணாடி அணிந்திருந்தார்.
அவரின் நண்பரின் ஆலோசனையின் பேரில் குழந்தைகளை அழைத்துவந்திருப்பதாக சொன்னார். நேரம் ஆக ஆக, பல குழந்தைகள், நடுத்தரவயதினர், வயதானவர்கள் என்று சுமார் 30 அல்லது 40 பேர்கள் பயிற்ச்சிக்கு வந்திருந்ததை பார்க்க முடிந்தது. இதில் பல வெளிநாட்டவர்களும் அடக்கம்.
செய்வாய் முதல் ஞாயிறுவரை 6 நாட்கள் இப்பயிற்சியை நடத்துகின்றனர். காலை 8 மணிமுதல் 10 மணிவரை, மாலை 3 மணிமுதல் 5 மணிவரை. நாள் ஒன்றுக்கு 4 மணிநேரம் பயிற்சி கொடுக்கின்றனர். முறையான கண் சிமிட்டுதல், தூரத்தில் இருப்பதை படிப்பது, இருட்டு அறையில் மெழுகுவர்த்தியின் வெளிச்சத்தில் சிறு எழுத்துக்களை படிப்பது போன்ற பல பயிற்சிகள்.
ஆச்சரியப் படும் விதமாக, பயிற்சி முடிந்த ஆறாவது நாள் அங்கேயே கண் பரிசோதனை செய்து பார்த்ததில் பார்வையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. தொடர்ந்து ஆறுமாதம் பயிற்சியை தொடருங்கள் பின் கண் பரிசோதனை செய்து பாருங்கள். கண்ணாடி அணிய வேண்டிய அவசியமே வராது என்று பயிற்சியாளர் சொன்னார்.
கடந்த 40 ஆண்டுகளாக இந்த பள்ளி நடப்பதாகவும், இதுவரை ஆயிரக்கணக்கானோர் பயன்பெற்றிருப்பதாகவும் அறிந்து கொண்டேன். முன்கூட்டியே பதிவு செய்து கொண்டு செல்வது நல்லது. மார்ச் முதல் வாரம் முதல் ஜூன் முதல்வாரம் வரையிலான பள்ளிக்கூட விடுமுறை நாட்களில், அதிகமான கூட்டம் வருவதால் அந்த காலகட்டத்தில் செல்ல விரும்புபவர்கள் முன் கூட்டியே பதிவு செய்தால் தான் இடம் கிடைக்கும்.
தங்கும் விடுதி குறித்த தகவல்கள்:
http://www.sriaurobindoashram.org/vi
use/ghlist.php
மேலும் அதிக தகவல்களுக்கு:
http://www.motherandsriaurobindo.org/Content.aspx
பயிற்சி குறித்த மேலும் விவரங்கள்:
SCHOOL FOR PERFECT SIGHT
PONDICHERRY
PHONE: 0413-2233659
EMAIL: auroeyesight@yahoo.com
.
அருமையான தகவல் மேல் கொடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் பயன்படும். தவறாது படியுங்கள
வாழ்கவளமுடன் & நலமுடன்
[படித்ததை பகிர்ந்தது]

3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு Chand Baori – One of the Deepest, Oldest and Largest Step Well in the World

Chand Baori is famous step well situated in the village of Abhaneri near Jaipur in the Indian state of Rajisthan. It is one of the oldest, deepest and largest step well in India. Chand Baori is also considered to be among the oldest, deepest and biggest step wells in the world.Chand Baori is one of the most remarkable landmarks in India. It was built between the 8th and 9th century by King Chanda of the Nikumbha Dynasty. Located opposite to Harshat Mata Temple, the well was dedicated to Hashat Mata, Goddess of Joy and Happiness upon completion.Chand Baori is an incredible square structure. There are 3,500 narrow steps in 13 stories lined along the wall on three sides of the well that extend 100 feet into the ground. The steps are arranged in perfect symmetry and descends to the bottom of the well to a puddle of water.
3500 படிக்கட்டுகள் கொண்ட உலகிலேயே ஆழமான கிணறு ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அபனேரியில் இருக்கிறது. 1200 ஆண்டுகள் பழமையானது.
இந்தியாவிலுள்ள அதிசியங்கள் என்ன என்று கேட்டால் அஜந்தா, எல்லோரா, அமர்நாத் குகை, தாஜ் மஹால், மீனாட்சி கோவில், பனிமூடிய இமய மலை என்று அடுக்கிக் கொண்டே போவார்கள்- கட்டாயம் நூற்றுக்கும் மேலே வரும். ஆனால் நம் நாட்டிலுள்ள உலகிலேயே ஆழமான கிணறு அந்தப் பட்டியலில் வருமா என்பது சந்தேகமே. ஏனெனில் கின்னஸ் சாதனை நூல் போன்றவற்றைப் பார்ப்பவர்களுக்குத் தான் இத்தகைய விஷயங்கள் கண்ணில் அகப்படும். படிக்கட்டுகளை உடைய கிணறுகளில் மிகவும் ஆழமானது (Deepest Step well in the World) என்ற வகையில் இது சாதனை நூலில் இடம்பெறும்.
இந்த அதிசியக் கிணறு இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கிறது. இந்தக் கிணறு ஆழமானது மட்டும் அல்ல, மிக அழகானதும் கூட. ராஜஸ்தானில் ஜெய்ப்பூர் நகரிலிருந்து சிறிது தொலைவில் அபநேரி (Abhaneri) என்ற கிராமத்தில் இந்தக் கிணறு உள்ளது. 13 அடுக்குகளாக 3500 படிகலைக் கொண்டது இது. ஆழம் சுமார் நூறு அடி. கிணற்றின் பக்கங்கள் சுமார் 110 அடி (35 மீட்டர்) நீளம் உடைய சதுரமான கிணறு.
இது ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு உடையது. கி.பி 850ல் மன்னர் ராஜா சந்த் என்பவர் இதைக் கட்டினார். இந்த அபநேரியின் உண்மையான பெயர் அப நகரி (ஒளிமயமான நகரம்). ராஜா சந்த் கட்டியதால் கிணற்றின் பெயர் சந்த் பவ்ரி (பவ்ரி, பவ்டி என்ற சொற்கள் கிணற்றை குறிக்கும்).


இங்குள்ள பாமர மக்கள் இந்த கிணற்றை ஒரே இரவில் பூதங்கள் கட்டியதாக நம்புகின்றனர். ஏனென்று கேட்டால் இவ்வளவு ஆழமான கிணற்றை மனிதர்கள் கட்ட முடியாதென்று பதில் கூறுகின்றனர். உண்மையில் இதைப் பற்றிப் படிப்பதை விட பார்ப்பதே மேல்—காதால் கேட்பதைவிட கண்ணால் காண்பதே இதன் பெருமையைப் புலப்படுத்தும்.
இந்தக் கிணறு ஹர்சத் மாதா (Harshat Mata temple) கோவிலுக்கு முன்னால் இருப்பதால் இதில் மத நம்பிக்கைகளும் கலந்திருக்கலாம். ஆனால் முஸ்லீம் படை எடுப்புகளின் போது பல சின்னங்களும் அழிக்கப்பட்டுவிட்டதால் முழு விவரமும் இப்போது கிடைக்கவில்லை. ஹர்சத் மாதா என்பதன் பொருள் “மகிழ்ச்சி தரும் அன்னை”. கோவிலை மட்டும் அல்ல, இந்தக் கிணற்றைப் பார்க்கும்போதும் இந்தியர்களின் கட்டிடக் கலைத்திறனையும் கணிதப் புலமையையும் எண்ணி எண்ணி மகிழ்ச்சி அடைவோம் என்பதில் ஐயமில்லை.
ராஜஸ்தான் மாநிலம் தண்ணீர் பற்றாக்குறை நிறந்த மாநிலம். பெரும்பாலும் பாலைவனப்பகுதி. ஆகையால மழை நீரைச் சேமிப்பதற்கு இப்படி கிணறுகள் வெட்டுவது வழக்கம் என்றும் தெரிகிறது. ஜோத்பூர் அருகில் கடன் வாவ் என்னும் இடத்தில் மற்றொரு கிணறுஉள்ளது. ஆனாலும் அபநேரி கிணற்றின் அழகுக்கு ஈடு இணை இல்லை.
அபநேரியின் ஆழமான கிணற்றுக்கு மேலே மொகலாயர்கள் சில மண்டபங்கள், கட்டிடங்களைக் கட்டியிருக்கிறார்கள். மோர்னா லிவிங்ஸ்டன் என்பவர் ராஜஸ்தான் மாநிலப் படிக் கிணறுகள் பற்றி ஆய்வு செய்து புத்தகம் எழுதியுள்ளார்,,,ராஜா!!!

2016 இன் இராசிபலன்கள். யாருக்கு நன்மை…??? - 2016 Horoscopes



01.01.2016, வெள்ளிக்கிழமை அன்று ஆங்கில புத்தாண்டு பிறக்கிறது. வெள்ளி என்றாலே ஸ்ரீமகாலஷ்மிக்கு விருப்பமான நாள். அருமையான தினத்தன்று புத்தாண்டு பிறக்கிறது. இந்த புத்தாண்டு பிறப்பின் விசேஷம் என்னவென்றால், 12 இராசிகாரர்களுக்கும் “கெஜகேசரி யோகம்” என்கிற சிறப்புக்குரிய யோகத்தை கொடுத்து மகிழ்விக்க போகிறது.
சிம்ம இராசி, கன்னி லக்கினம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறக்கும் ஆங்கில புத்தாண்டு, அமோகமாக இருக்கும். செவ்வாய், சுக்கிரன் பரிவர்த்தனை பெறுவதால், நாட்டில் தொழில் வளம் விருத்தியாகும். அன்னிய நாட்டவரின் அதட்டல் அடங்கிவிடும். விண்வெளி ஆராய்ச்சிகள் வெற்றி பெறும். மக்களுக்கு தேவையான வசதிகள் பெருகும். விவசாயம் செழித்தோங்கும்.
இப்படி மகிழ்ச்சியான புத்தாண்டாக இருப்பினும், லக்கின இராகு நோய் நொடிகளை கொடுக்கும். ஆனாலும் பெரிய பாதிப்பு இல்லாமல் தக்க நடவடிக்கையால் அமுங்கி விடும். ஸ்ரீதுர்காதேவி அனுகிரகத்தால் குருவும், சந்திரனும் அனுகூலமான சேர்க்கையால் யோகத்தை தரும். எப்படிபட்ட பிரச்னையாக இருந்தாலும் தாக்காது. ஸ்ரீதுர்காதேவியை வணங்குவோம், ஆனந்தம் அடைவோம். நல்வாழ்த்துக்கள்!
மேஷ இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு பஞ்சஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், எதிர்பாரா யோகம் வந்தடையும். தடைபட்ட காரியங்கள் கைக்கு வந்து சேரும். 5-க்குரிய சூரியன்,9-ஆம் இடத்தில் உள்ளார். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. 12-ஆம் இடத்தில் உள்ள கேது, தெய்வ ஸ்தலங்களுக்கு சென்று வரும் பாக்கியத்தை தருவார். 6-இல் இராகு இருப்பதால், கடன் பிரச்னை சற்று குறையும். 10-ஆம் இடத்தில் உள்ள புதன், தடைபட்ட கல்வியை தொடரச் செய்யும். புதிய தொழில் துவங்குவீர்கள். தளர்ந்த தொழில் புத்துயிர் பெறும். அஷ்டம சனியாக இருப்பதால், ஜாமீன் கையெழுத்து, கூட்டாளி விஷயங்களில் கவனம் தேவை. ஸ்ரீதுர்கா தேவி அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கை பொங்கும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : ஸ்ரீதுர்கை அம்மனுக்கு, செவ்வாய் கிழமையில் எழுமிச்சை தீபம் ஏற்றுங்கள். அத்துடன், மாதத்தில் ஒரு செவ்வாய்கிழமை இராகுகாலத்தில் ஸ்ரீதுர்கைக்கு எழுமிச்சை மாலை அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கையில் வசந்த காற்று வீசும்.
ரிஷப இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சுகஸ்தானத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட கட்டட வேலை வேகமாக கட்டி முடிக்கப்படும். வாகனம் விருத்தி உண்டு, குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அமையும். 6-ஆம் இடத்தில் செவ்வாய் இருப்பதால், நீண்ட நாட்களாக வாட்டி வதைத்த நோய் நொடி நீங்கும். விரோதியும் அடி பணிவான். அஷ்டமஸ்தானத்தில் சூரியன் உள்ளதால், குடும்பத்தில் சற்று சிறு,சிறு பிரச்னைகள் எழலாம். ஆனாலும் பெரிய பாதிப்பு வராது. பஞ்சமஸ்தானத்தில் இராகு அமையப்பெற்றுள்ளார். பூர்வீக சொத்தால் லாபம் வரும். சப்தமத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால், கூட்டு தொழில் லாபம் பெறும். 2016-ஆம் ஆண்டு உங்களுக்கு முருகன் அருளால் முன்னேற்றமான வாழ்க்கையாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். ஒரு முறையாவது திருத்தணிக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். செவ்வாய்கிழமையில் முருகனுக்கும், செவ்வாய் பகவானுக்கும் வாசனை மலர்களை சமர்ப்பியுங்கள். முருகப்பெருமானின் ஆசியால் தடை கற்கள் படிகல்லாக மாறி உங்கள் வாழ்க்கையில் ஏற்றம் ஏற்படும்.
மிதுன இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 3-ஆம் இடமான வெற்றி, புகழ்-கீர்த்தி ஸ்தானத்தில் குரு, சந்திரன் அமர்ந்து, கெஜகேசரியோகத்தை தந்துள்ளனர். இந்த கெஜகேசரி யோகமானது உங்களுக்கு புகழ், கீர்த்தி ஸ்தானத்தில் அமைந்திருப்பதால், மற்றவர்கள் பெருமைபட வாழ்வீர்கள். சகோதரவர்கத்தால் நன்மை கிடைக்கும். இருப்பினும், சுகஸ்தானத்தில் இராகு இருப்பதால் உடல் நலனில் கவனம் தேவை. 6-ஆம் இடத்தில் சனி, சுக்கிரன் இணைந்து இருக்கின்ற காரணத்தால், எடுத்த காரியத்தை வெற்றி பெறச் செய்யும். திருமணம் நடைபெறும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சி நடக்கும். அஷ்டமஸ்தானத்தில் புதன் உள்ளதால், அயல் நாட்டு தொழில் தொடர்பு வர வாய்ப்புண்டு. வெளிநாட்டில் வேலை வாய்ப்பு வரலாம். 10-ஆம் இடத்தில் கேது இருப்பதால், செய்யும் தொழிலில் நிதானம் தேவை. அகலகால் வைக்கக் கூடாது. விநாயகப் பெருமானை வணங்குங்கள், அனைத்தும் நன்மையாக வந்தடையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் மாலை அணிவியுங்கள். வியாழக்கிழமையில் விநாயகர் கோயிலுக்கு சென்று தேங்காயை இரண்டாக உடைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுங்கள். எடுக்கும் காரியம் தேங்காமல் கணபதியில் அருளால் சட்டேன்று நிறைவேறும். சூரத்தேங்காயும் உடைத்தால் கூடுதல் பலன் கிடைக்கும்.
கடக இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு தனஸ்தானம் என்கிற இரண்டாம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் சுபிட்சமான செலவுகள் ஏற்படும். கடன் சுமை தீரும். புதிய தொழில் உருவாகும். எதிர்பார்த்த நற்காரியங்கள் நிறைவடையும். சுகஸ்தானஸ்தில் செவ்வாய் உள்ளார். வாகன விஷயங்களில் செலவுகள் வரலாம். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டு. பஞ்சமஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமையப்பெற்றுள்ளதால், கவலையே வேண்டாம். வழக்கு பிரச்னை அனைத்தும் பஞ்சு போல் பறந்து விடும். பணம் தாராளமாக வந்தடையும். பாக்கிய ஸ்தானத்தில் ஞானகாரகனான கேது அமையப்பெற்றுள்ளார். குலதெய்வம் அருளால் நன்மைகள் தேடி வரும். 6-ஆம் இடத்தில் குடும்பாதிபதியான சூரியன் இருப்பதால், யாருக்கும் பெரிய அளவில் கடன் கொடுக்கும் வேலை வேண்டாம். மற்றபடி இந்த 2016-ஆம் ஆண்டில் உங்கள் குலதெய்வத்தின் அருளால் மகிழ்ச்சியான வாழ்க்கையாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : உங்கள் குலதெய்வத்திற்கு பால் அபிஷேகம், சந்தனம், பன்னீர் அபிஷேகமும், குங்கும அர்ச்சனையும் செய்து, வஸ்திரம் அணிவியுங்கள். முடிந்தால் பொங்கல் வைத்து வழிபடுங்கள். குலதெய்வத்தின் அருளால் உங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் மகிழ்ச்சி பொங்கும்.
சிம்ம இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் ஜென்ம இராசியில் சந்திரனுடன், குருவும் இணைந்து, கெஜகேசரி யோகத்தை உண்டாக்குவதால், புதிய உத்வேகம் எழும். குடும்பத்தில் சுபிட்சம் பெருகும். தடைப்பட்டு வந்த திருமணம், தடை இல்லாமல் நடக்கும். தனஸ்தானத்தில் இராகு இருக்கின்ற காரணத்தால், குடும்பத்தினரை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். கீர்த்தி ஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். மற்றவர்கள் பாராட்டும் படி சாதனை படைப்பீர்கள். சுகஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இணைந்திருப்பதன் காரணத்தால், சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. 6-ஆம் இடத்தில் புதன் உள்ளார். கடன் பிரச்னை சற்று இருக்கலாம். தேவை இல்லாமல் விரோதம் வளர்க்க வேண்டாம். பரபரப்பு அவசரம் கூடாது. காரணம், இந்த தன்மைகளை புதன் உருவாக்குவார். ஆகவே கவனம் தேவை.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : வெள்ளிக்கிழமையில், சுக்கிர பகவானை வணங்குங்கள். சனிக்கிழமையில் பெருமாளை வணங்குங்கள். பெருமாளுக்கு கல்கண்டு படைத்து வணங்கி, அந்த பிரசாதத்தை சாப்பிடுங்கள். முடிந்தளவில் தயிர் சாதத்தையும் படையுங்கள். இறைவனின் அருளால் உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் உருவாகும்.
கன்னி இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில்,குரு, சந்திரன் இணைந்து கெஜகேசரி யோகத்தை தந்தனர். முக்கியமாக வெளிநாட்டில் தொழில் தொடர்புகளும், வேலை வாய்ப்பும் தரும் யோகம் இது. ஜென்மத்தில் இராகு உள்ளார். தேவைக்கு அதிகமாக கடன் வாங்காதீர்கள். குடும்பஸ்தானத்தில் செவ்வாய் இருப்பதால், இதுநாள் வரையில் குடும்பத்தில் இருந்த குழப்பம் தீரும். கீர்த்தி ஸ்தானத்தில் சனி, சுக்கிரன் உள்ளனர். சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. சுகஸ்தானத்தில் சூரியன் அமைந்ததால், கல்வியில் தடை ஏற்படுத்தச் செய்வார். இறைவன் அருளால், குரு பார்வை இருப்பதால் எப்படியும் கல்வியை தொடர்வீர்கள். பஞ்சமஸ்தானத்தில் புதன் இருக்கின்ற காரணத்தால், பூர்வீக சொத்தில் சிறு வாக்கு வாதம் உருவாகி பிறகு சுமுகமாகும். சப்தமஸ்தானத்தில் கேது அமைந்ததால், கூட்டு தொழில் விஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் சுப நிகழ்ச்சிக்காக கடன் ஏற்படும். சிவபெருமான் அருளால் சிறப்பான ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : திங்கட் கிழமையில் ஈஸ்வரன் ஆலயத்திற்கு சென்று வில்வ இலையை சிவலிங்கத்திற்கு அணிவியுங்கள். விநாயகப்பெருமானுக்கு அருகம்புல் அணிவித்து வணங்குங்கள். ஒருவருக்காவது, உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் அன்னதானம் செய்யுங்கள். உங்களை வாட்டி வதக்கும் கஷ்டங்கள் விலகி இறைவனின் அருளால் நன்மைகள் தேடி வரும்.
துலா இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து லாபத்தில் உள்ளனர். ஆகவே, இந்த கெஜகேசரி யோகத்தால் முன்னேற்ற பாதைக்கு வழி தெரிந்து விட்டது. இனி யோக காலம்தான். தொழில்துறையில் மாற்றம் உண்டு. உத்தியோகத்தில் இடபெயர்ச்சி ஏற்படுத்தும். திருமணம் நடைபெற சாத்திய கூறு உண்டு. ஜென்ம இராசியில் செவ்வாய் இருப்பதால், உடல்நலனில் கவனம் தேவை. முன்கோபம் வேண்டாம். ஏழரை சனி உள்ளதால், குடும்பத்தில் சலசலப்பு ஏற்படுத்தும். ஆகவே மௌனம் தேவை. கீர்த்தி ஸ்தானத்தில் சூரியன் அமைந்த காரணத்தால், எடுத்த காரியத்தை போராடி நிறைவேற்றுவீர்கள். சுகஸ்தானத்தில் புதன் உள்ளார். கல்வியால் பலன் உண்டு. உறவினர் வருகையால் சிறு பிரச்னை உருவாக்கும். 6-ஆம் இடத்தில் உள்ள கேது பகவான், வழக்கில் சற்று இழுப்பறி தருவார். ஸ்ரீஆஞ்சனேயரின் அருளால் இந்த ஆண்டு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : சனிக்கிழமையில் சனிஸ்வர பகவான் சன்னதி சென்று எள் தீபம் ஏற்றுங்கள். காக்கைக்கு எள் சாதத்தை சனிக்கிழமைதோறும் வையுங்கள். ஸ்ரீஆஞ்சனேயர் கோயிலுக்கு சென்று உங்கள் பெயருக்கு அர்ச்சனை செய்யுங்கள். உங்கள் வாழ்க்கை சிறப்பாக அமைய இறைவன் அருள் பரிவான்.
விருச்சிக இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு 10-ஆம் இடத்தில் குரு, சந்திரன் இணைந்து, “கெஜகேசரி யோகம்” அமைந்ததால், மனமகிழ்ச்சி ஏற்படும். தடைகள் நீங்கும். பொன் – பொருள் சேரும். குடும்பத்தில் சுபகாரியம், திருமணம் நடைபெறும். தனஸ்தானமான இரண்டாம் இடத்தில், சூரியன் உள்ளார். இதனால், செலவுகள் அதிகம் ஏற்படும். உடல்நலனில் கவனம் தேவை. விரயஸ்தானத்தில் செவ்வாய் அமைந்ததால், முன் கோபத்தை தரும். பஞ்சமஸ்தானத்தில் கேது உள்ளார். அயல்நாட்டுக்கு செல்லும் வாய்ப்பு வரும். தொழில்துறை வாய்ப்புகளும், உத்தியோகமும் அயல் நாட்டில் அமையலாம். உங்கள் இராசிக்கு லாபஸ்தானமான 11-ஆம் இடத்தில் இராகு இருப்பதால், அரசாங்க ஆதரவு கிடைக்கும். இதுநாள் வரை இருந்த கடன் தொல்லை நீங்கும். சகோதர வர்க்கத்தால் சற்று மனக்கசப்பு வரலாம். ஆகவே சகோதர-சகோதரிகளிடம் பொறுமை தேவை. முருகன் அருளால் முன்னேற்றம் உண்டு யோகமான ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : முருகப்பெருமானை வணங்குங்கள். செவ்வாய்க்கிழமையில் கந்த சஷ்டி கவசத்தை பாராயணம் செய்யுங்கள். முருகப்பெருமானின் அருளால் முன்னேற்றம் கிடைக்கும்.
தனுசு இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து உங்களுக்கு கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், தடைபட்ட காரியங்கள் இனி தடை இல்லாமல் நடைபெறும். பொன், பொருள் வீடு, மனை அமையும். ஜென்ம இராசியில் சூரியன் உள்ளதால் உழைப்பு அதிகமாகும். தனஸ்தானத்தில் புதன் இருக்கிறார். குடும்ப செலவு அதிகமாகும். சுகஸ்தானத்தில் கேது அமைந்ததால், உடல் நலனில் கவனம் தேவை. உங்களுக்கு தற்போது விரய சனி நடைப்பெற்று வருகிறது. ஆகவே, யாரிடமும் வாக்கு வாதம் வேண்டாம். லாபஸ்தானத்தில் செவ்வாய் உள்ளார். சோதனை எல்லாம் சாதனையாக மாற வாய்ப்புண்டு. சுபகாரியங்கள் நடைபெறும். 10-ஆம் இடத்தில் இராகு அமைந்து தொழில் துறையில் வளர்ச்சி கிடைக்க காரணமாக இருப்பார். வேலை வாய்ப்பு அமையும். ஆனாலும், கடன் சுமை இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். காரணம் இப்போது உங்களுக்கு 7½ சனியில் விரய சனி நடக்கிறது. வம்பு வந்தாலும் ஒதுங்கிக் கொள்ளுங்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டு. பைரவர் அருளால் லாபமான ஆண்டாக இருக்கும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : பைரவர் சன்னதிக்கு சென்று பைரவரை வணங்குங்கள். பைரவருக்கு மிளகு தீபம் ஏற்றுங்கள். கஷ்டத்தை நீக்கி மகிழ்ச்சியானதாகவும், லாபகரமான ஆண்டாகவும் அமைய பைரவர் உங்களுக்கு அருள் புரிவார்.
மகர இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். அஷ்டமத்தில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், பல நாட்களாக இழுத்துக் கொண்டு வந்த சுபகாரியங்கள், சுபிட்சமாக நிறைவடையும். வாகன விருத்தி, வீடு அமையும் யோகம் அத்தனையும் நடைபெறும். உடன் பிறப்பால் பலன் உண்டு. லாபஸ்தானத்தில் சனி, சுக்கிரன் அமைந்ததால், படிப்படியாக வாழ்க்கை உயரும். உறவினர்களால் நன்மைகள் ஏற்படும். ஜீவனஸ்தானத்தில் செவ்வாய் இருக்கிறார். வியபாரம் வளரும். புதிய வருமானத்திற்கு வழி பிறக்கும். தடைபட்ட கல்வி தொடரும். கடன் சுமை குறையும். பாக்கியஸ்தானத்தில் இராகு உள்ளார். பூர்வீக சொத்தில் சற்று வில்லங்கம் ஏற்படுத்தும். வழக்கு இருந்தால் வெற்றி அடையும். விரயஸ்தானத்தில் உள்ள சூரியன், சற்று குடும்பத்தில் பிரச்னையை உருவாக்குவார். ஆகவே நிதானம் தேவை. சிவபெருமானின் அருளால் இவ்வாண்டு உங்களுக்கு அருமையான ஆண்டாக அமைய வாழ்த்துக்கள்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : ஞாயிற்று கிழமையில், கோதுமையால் தயாரித்த உணவை தானம் செய்யுங்கள். ஞாயிற்று கிழமையில், சூரிய பகவானை வணங்குங்கள். சூரிய பகவானுக்கு உகந்த காயத்திரி மந்திரத்தை 9 முறை உச்சரிக்கவும். பாதகங்களும் சூரிய பகவானின் அருளால் சாதகமாக மாறி உங்கள் வாழ்க்கையை ஜொலிக்க வைப்பார்.
கும்ப இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், உங்கள் இராசிக்கு சப்தமதில் குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை ஏற்படுத்தி தருவதால், தொட்டது துலங்கும். மண்ணும் பொன்னாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிக்கான காரண காரியங்கள் உருவாகும். தனஸ்தானத்தில் உள்ள கேது பகவான், விரயங்களை அதிகரிப்பார். அஷ்டமத்தில் உள்ள இராகு விரோதத்தை தேடி தருவார். ஆகவே, எதிலும் கவனமாக இருக்க வேண்டும். பாக்கியஸ்தானத்தில் செவ்வாய் அமைந்த காரணத்தால், வீடு, மனை வாங்கும் வசதி கிடைக்கும். லாபஸ்தானத்தில் உள்ள சூரியன், கல்வி, தொழில்துறை, உத்தியோகம் இவற்றில் நன்மை ஏற்படுத்தும். விரயஸ்தான்த்தில் உள்ள புதன், உறவினர் வருகையால் சற்று செலவுகளை அதிகரிப்பார். உடல் நலனில் கவனம் தேவை. தாய்மாமன் விஷயத்தில் பொறுமை தேவை. தேவை இல்லாமல் குழப்பம் ஏற்படுத்தும். ஜீவனஸ்தானத்தில் சனி, சுக்கிரன் இருப்பதால் நன்மைகளும் தேடி வரும். ஸ்ரீதுர்கை அம்மனின் அருளால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : புதன்கிழமை தோறும் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று உங்களால் முடிந்தளவு நெய் தானம் செய்யுங்கள். திருக்கோயிலில் உள்ள விளக்குகள் நெய் தீப ஒளியில் மின்னட்டும். உங்கள் பொருளாதார வளர்ச்சியும் இதனால் அதிகரிக்கும். தோஷங்கள் விலகி வெற்றி கிட்டும்.
மீன இராசி
அன்பர்களே… ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த 2016-ஆம் ஆண்டில், குரு, சந்திரன் இணைந்து, கெஜகேசரி யோகத்தை தந்திருப்பதால், நீங்கள் கண்ட கனவு பலிக்கும். விட்டது, விலகியது அனைத்தும் கைக்கு வந்தடையும். குடும்பத்தில் சுபகாரியம், திருமண விஷயங்கள் பிரமாதமாக நடைபெறும். பாக்கியஸ்தானத்தில் அமைந்துள்ள சனி, சுக்கிரன், புதிய கட்டடம் கட்டும் யோகத்தை தருவார்கள். பொன், பொருள் வாங்கும் பாக்கியம் கிடைக்கும். வீடு, மனை அமையும். உறவினர் வருகை அதிகரிக்கும். கடன்கள் தீரும். வேலை வாய்ப்பு அமையும். நசிந்த தொழில் நிமிர்ந்து நிற்க உதவிகள் கிடைக்கும். நண்பர்களால் யோகம் உண்டு. லாபஸ்தானத்தில் புதன் அமைந்திருப்பதால், நோய் நொடி நீங்கும். 10-ஆம் இடத்தில் அமைந்துள்ள சூரியன், மனமகிழ்ச்சியை வாரி வழங்குவார். பொதுவாக இந்த ஆண்டு உங்களுக்கு மகிழ்ச்சி பொங்க செய்யும் ஆண்டாக அமையும்.
உங்கள் இராசிக்கான பரிகாரம் : சூரிய பகவானுக்கு ஞாயிற்று கிழமைகளில் சிகப்பு மலர்களை அணிவித்து சூரிய பகவானை வணங்குங்கள். அத்துடன், உங்கள் ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில், சூரிய பகவானுக்கு சிகப்பு நிற வஸ்திரம் அணிவியுங்கள். உங்கள் வாழ்க்கை பிரகாசமாக ஜொலிக்கும்.

5000+ years old underwater Hindu Temple at Bali-Indonesia

Hinduism (Sanatan Dharma) is world’s oldest Civilization having history over 12000 years; had influence almost across the World till western Abrahmic religions formed some 2500 years back which are rejecting/destroying great ancient human heritage wherever they spread!


See 5000+ years Hindu Devata Vishnu’s temple found underwater near Bali, Indonesia. Local call this new Scuba diving spot at Pemuteran Beach as “Underwater Temple Garden – Bali”

Don’t be surprise! All over East Asia you will find 5000+ to 1000 years old Hindu/Buddhist ancient temples Angor wat (Combodia), Indonesia, Vietnam, Thailand, Myanmar, Korea, Japan, China, etc.

Also it is now proved that Indian & Arabic Ocean Sea level has risen over 500 meters in last few thousand years submerging Ram-Setu bridge between Srilanka & India, Sri Krishna’s Dwaraka city at Gujarat India, Bali Islands and coastal areas near Oman/Quatar, etc.

See beautiful underwater 5000 + years old Vishnu Temple at Bali