Search This Blog

Monday, August 22, 2011

JOKES


மாப்பிள்ளை டிவியில எல்லாம் வராரு”
“அடேடே… எந்த நிகழ்ச்சியிலே?”
“குற்றம், நிஜம் நிகழ்ச்சிகள்ளே குத்தவெச்சி உட்கார்ந்திருப்பாரே, பார்த்ததில்லை?”
 ==================================================================
...  டி வி யில எங்கே பார்த்தாலும்,   ஒரே அழுகை , அழுகை... ஏன்..? இம்புட்டு வெறி? எவன் ஆரம்பிச்சு வைச்சான்..?
முதலில் மெகா சீரியல்களில் ஆரம்பித்தது அழுகை.
அழுகாச்சிக்கு இருக்கும் மார்க்கெட் வால்யூவைப் பார்த்துவிட்டு அழுகாச்சி ஸ்பெஷலாக நடிகை லட்சுமி ‘கதையல்ல நிஜம்’ ஆரம்பித்தார்.
தாய்மார்களும் வீட்டில் வேறே வேலை இல்லாமல் இருக்கிறவர்களும் பிசியாக அழ ஆரம்பித்தார்கள்.
அப்புறம் விசுவின் டாக் ஷோவில் அழுதார்கள்.
அதற்கப்புறம் சூப்பர் சிங்கர் உள்ளிட்ட பாட்டுப் போட்டிகளில் அழுகை, நீயா நானாவில் அழுகை என்று அழுகாச்சியின் ஆட்சி பரவ ஆரம்பித்தது.  டீலா நோ டீலா நிகழ்ச்சியில் கூட  அழுகிறார்கள்!

இப்படியே போனால் செய்திகள், ராசிப்பலன் நிகழ்ச்சியில் கூட அழுவார்கள் போலிருக்கிறது.

ராசிப்பலன்களில் விஷால் கண் சிவக்க தோன்றுகிறார்.
“கன்னி ராசி நேயர்களே……” தொண்டை அடைத்து கண்ணில் நீர் முட்டி பேச்சு நின்று விடுகிறது.
அப்புறம் மணிரத்னம் படம் போல கொஞ்சம் காற்றும் கொஞ்சம் வார்த்தைகளுமாக
“உங்களுக்கு நண்பர்களால்….. நண்பர்களால்……..” முஸ்க்… முஸ்க் என்று விம்மல். அப்புறம் பேச்சே இல்லை. ’ஜாக்கிரதையா இருங்க’ என்கிற அர்த்தத்தில் கை ஜாடை மட்டும் காட்டுகிறார்.

செய்திகளில் தலைவிரி கோலமாக ஜெயஸ்ரீ .
“நேற்று நடந்த அரை இறுதிப் போட்டியில் சானியா மிர்ஸா தோல்வி அடைஞ்சிட்டாங்கய்யா….. தோல்வி அடைஞ்சிட்டாங்க” என்று தலையை விரித்துப் போட்டுக் கொண்டு புரண்டு புரண்டு அழுகிறார்.

 ===================================================================
பைத்தியக்கார ஆஸ்பத்திரியை ஒரு தரம் பார்க்கணும்ன்னு என் நண்பர் கிட்டே சொன்னேன்.
“என்னிக்கோ ஒரு நாள் போகத்தான் போறே, இன்னிக்கே போறதிலே தப்பில்லே” ன்னு கூட்டிக்கிட்டுப் போனாரு.
“ஓரளவு குணமானவங்களை பார்த்தா போதும். ரீசன்ட்டா அட்மிட் ஆனவங்கல்லாம் வேண்டாம்”
“அதிலே கூட ரிஸ்க் இருக்கு”
“அதிலே என்ன ரிஸ்க்கு?”
“வின்ஸ்ட்டன் சர்ச்சிலொட பையன் உன் மாதிரிதான் குணமானவங்களை பார்க்கப் போனாராம். ஒருத்தன் அவரைப் பார்த்து நீ யாருன்னு கேட்டானாம். இவர், நான்தான் சர்ச்சிலொட பையன்னாராம். அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமா?”
“என்ன சொன்னான்?”
“உனக்கு சீக்கிரம் சரியாய்டும். நான் வர்றப்போ சர்ச்சிலே நாந்தான்னு சொல்லிக்கிட்டு வந்தேன்னானாம்.”
“ஐயய்யோ, என்னை யாராவது நீ யாருன்னு கேட்டா என்ன பண்றது?”
“உனக்கந்த கவலை இல்லே. உன்னை யாரும் கேட்க மாட்டாங்க”
“ஏன்?”
“எப்டி இருந்தாலும் ரொம்ப நாள் கூட இருக்கப் போறான், மெதுவா கேட்டுக்கலாம்ன்னுதான்”
நாங்க முதல்லே பார்த்த ஆள் கிட்டே “நீ எப்படி பைத்தியம் ஆனே?” ன்னு கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
அடப்பாவமேன்னு அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
ஓ… ஒரே மாதிரி ரெண்டு கேசா!
அடுத்த ஆளைக் கேட்டோம்.
“விமலாவைக் காதலிச்சேன். காதல் தோல்வி. அதான் பைத்தியமாயிட்டேன்” ன்னான்.
என்னடா இது!
மூணு நாலு அஞ்சுன்னு எல்லாரும் இதே பதிலைச் சொல்ல எங்களுக்கு அலுப்பாயிடிச்சு.
ஆறாவது ஆளும்
“விமலாவைக் காதலிச்சேன்…..” ன்னு ஆரம்பிச்சான்.
நான் வெறுத்துப் போய் “காதல் தோல்வியா?” ன்னு கேட்டேன்.
“இல்லே.. வெற்றி. அவளைக் கல்யாணம் பண்ணி கிட்டேன். அதான் பைத்தியமா ஆயிட்டேன்” ன்னான்.
என் நண்பர் என்னைப் பார்த்து சிரிச்சி “இதுலேர்ந்து நாம அறிகிற நீதி என்ன?” ன்னார்.
“தெரியலையே?”
“ஒரு மாதிரி இருக்கிறதெல்லாம் ஒரே மாதிரி இல்லே”
பட்டி மன்றப் பேச்சாளர் திரு.அறிவொளி சொன்னது.
 ============================================================
 ஏன்யா. நெஜமாவே ரூம் போட்டுத் தான் யோசிக்கிறீங்களோ..? 

ஒன்று : காதலிக்காதீர்கள். அது நேர விரயம்

இரண்டு : ஒருவேளை காதலிக்கத் தொடங்கி விட்டால் அதற்காக எதையும் தியாகம் செய்யாதீர்கள்

மூன்று : காதல்தான் வெற்றி. கல்யாணம் தோல்வி.

நான்கு : காதலிக்கிறவர் உங்களிடம் எதையுமே மறைப்பதில்லை என்று நினைத்து ஏமாறாதீர்கள்.(மறைக்க வேண்டியதை மறைக்காமல் இருக்கிற எல்லாரும், மறைக்கக் கூடாததை மறைக்காதவர்கள் அல்ல)

ஐந்து : நீங்கள் காதலிக்கிறவரிடம் எதையுமே மறைக்கக் கூடாது என்றெண்ணி ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

ஆறு : காதல் தெய்வீகமானதோ, புனிதமானதோ அல்ல. ஒரு கேளிக்கை. அவ்வளவுதான்.

ஏழு : காமமும் காதலும் வெவ்வேறு அல்ல. காதல் பொட்டேன்ஷியல் எனர்ஜி காமம் கைனடிக். சட்டியில் இருப்பதுதான் அகப்பையில் வரும்.

எட்டு : நெருக்கமாகப் பழகும் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பரிசுத்தமான நட்பைத் தவிர வேறொன்றுமில்லை என்பது மாதிரி உலக ஏமாற்று வேறே கிடையாது.

ஒன்பது : காதலர்கள் செத்தால் மட்டுமே காதல் வாழும். காதலர்கள் வாழ்ந்தால் காதல் செத்துப் போகும்.

பத்து : காதலித்துக் கல்யாணம் செய்த எல்லாருக்குமே இரண்டாவது காதல் வரும் (சில சமயம் மூன்றாவது கூட!)

Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_821.html#ixzz1VkNEvSD3

LOVE

 ஏன் நமக்கு இந்த பிறவி என்பதை தேடி உணர்வது ஒவ்வொரு ஆத்மாவின் கடமை. அதே சமயத்தில் , கடவுளை தேடுகிறேன் , தன்னைத் தேடுகிறேன் பேர்வழி என்று வாழும் கால கட்டத்தில் , சக உறவுகளை மதிக்க தவறி விடாதீர்கள். உறவுகளை நேசியுங்கள்.
உங்கள் வீட்டில் , ஒரு சின்னத் தொட்டியிலாவது - ஒரு சிறிய பூஞ் செடியோ, துளசி செடியோ வளர்த்து வாருங்கள். உங்கள் கையால் தண்ணீர் ஊற்றி வாருங்கள். அந்த செடி வளர , வளர உங்கள் மனதிலும் ஒரு மகிழ்ச்சி , நிம்மதி பரவும். எதோ சந்தர்ப்ப சூழ்நிலையில், நீங்கள் தண்ணீர் ஊற்ற முடியாத நிலை வரும்போது , அந்த செடி வாடி நிற்கும்போது - உங்கள் மனதில் ஒரு சின்ன வலி , வேதனை வரும் பாருங்கள் !

ஒரு செடிக்கே அப்படி இருக்கும்போது.. உங்களை வளர்த்தவர்களை , அல்லது நீங்கள் வளர்த்தவர்களை - காயப்படுத்தும்போது, கோபத்தில் குதிக்கும்போது  , வார்த்தைகளால் வறுத்தெடுக்கும்போது, அவர்களை குத்திக் கிழிப்பதை நாம்  உணர்வதில்லை.நாம சொல்றதுதான் எப்பவுமே சரியாம். அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாதாம்..!

 கல்யாணம் செய்து ஆரம்ப காலத்தில் இருக்கும் நேசம், சில வருடங்கள் கழித்து - அதே அளவு (?)  இருந்த போதும், அதை வெளிப்படுத்த முடியாமல் , எதோ ஈகோ தடுக்கிறது. முதல் இரண்டு வருடங்களில் நீங்கள் பாசத்துடன் எத்தனை முத்தம் கொதித்து இருப்பீர்கள் , மீதி இருக்கும் அம்பது வருடங்களில் அதில் பாதி கூட கொடுப்பீர்களோ ? என்னவோ ? ஏன்..? அது ஒரு முக்கியமான விஷயமா , நமக்குத் தோணுவதில்லை. அவங்களுக்கும் தோணாதுன்னு  நாமளே , அவங்க சார்பாகவும், முடிவெடுத்து விடுவதுதான் இதில் கொடுமை.
எல்லாத்தையும் விட்டுத் தள்ளுங்க பாஸ். கல்யாணம் ஆகியிருந்தா , உங்க குடும்பத்தோட.. இன்னும் கல்யாணம் ஆகலையா, அப்பா அம்மாவோட -. ஒரு  ரெண்டு நாள் ... சந்தோசமா , பொழுதைக் கழிச்சிட்டு வாங்க. உங்கள் பார்வையிலும், சொல்லிலும் செயலிலும் அன்பு பொங்கி வழியட்டும். வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் இந்த சந்தோசத்தை அனுபவியுங்கள். மாதம் அல்லது   இரண்டு மாதத்திற்கு ஒருமுறையாவது இது இருக்கட்டும்.

 அடுத்த நொடி என்ன நடக்கும்னு , யாருக்குமே தெரியாது . கிடைக்கிற ஒவ்வொரு நிமிஷமும் சந்தோசமா இருக்க ட்ரை பண்ணுவோம்..

 திரு. ராம் சுரேஷ் அவர்கள் எழுதியுள்ள கல்யாணச் சாவு கட்டுரையை கீழே கொடுத்துள்ளேன். படித்துப் பாருங்கள். வளைகுடா நாடுகளில் பணியில் இருப்பவர். படித்து முடித்ததும், மனதளவில் உங்களில் ஒரு மாற்றம் நிகழும் என்ற நம்பிக்கையுடன், பகிர்ந்து கொள்கிறேன்...
====================================================


சந்தோஷம் என்பதை இருக்கும்போது உணர முடியாது என்று ஒரு வசனம்..
எவ்வளவு விஷயங்களை taken for granted ஆக எடுத்துக்கொண்டிருக்கிறேன்..
வெளியூரில் இருக்கையில் வெள்ளிக்கிழமை சம்பிரதாய ஃபோன் காலில் சக்கரை அளவு எண்களை (Sugar level)  மட்டும் கேட்டுக்கொண்டு " பார்த்துக்கோம்மா" வுடன் விட்ட நாட்கள்.
ஊரில் இருக்கையில், நண்பர்களைப் பார்க்க, அரட்டை அடிக்க, ஊர்சுற்ற என்ற நேரம் ஒதுக்கி சாய்வு நாற்காலியைப்பற்றிச் சிந்திக்காமல் விட்ட நாட்கள்..
7 மணிக்கு எழுந்தாலும் தூக்கம் வராமல் நாலரைக்கே எழுந்தாலும் சூடான காபிக்காக அவளை உருட்டிய நாட்கள்..
எனக்குப் பிடித்த கறிகாய் சமைத்து சாப்பிடும்போது முகத்தையே பார்க்கும்போது, எதிர்பார்ப்பது என்ன என்று தெரிந்தும் "சச்சின் அந்த ஷாட் ஆடியிருக்கக்கூடாது" என்று அவள் anxiety ஐ அதிகப்படுத்திய நாட்கள்..
தொடர்களின் ஆழத்தில் அமிழ்ந்துவிட்டவளைத் தொடரின் தரத்துக்காகக் கிண்டல் அடித்த நாட்கள்..
வெளியூரின் மழை குளிரிலும் மேடு பள்ளங்களிலும் எங்கள் மகிழ்ச்சிக்காக உடன் வந்தவளின் உபாதைகளைச் சிந்திக்காமல் கும்மாளம் போட்டு வேகமாக வரச் சொன்ன நாட்கள்..
சில்லறை ஆசைகளை அலட்சியப்படுத்தி உனக்கென்ன தெரியும் என் priorities என்று எடுத்தெரிந்து பேசிய நாட்கள்..
நினைவின் அடியாழத்து வறுமை நாட்களில் உணவுப்பங்கீட்டில் தன்னைத் துறந்தும் மற்றோர் சாப்பிடாததற்கு எரிந்து விழுந்த நாட்கள்..
எல்லா நாட்களும் மறந்து..
பால்கலசத்தை தலையிருந்த இடத்தில் அழுத்தி இடதுகையால் அஸ்தியை எடுத்துக் கரைத்த நாள் மட்டுமே நினைவில் தங்கியிருக்க..
பேரன் பேத்தி எல்லாம் பாத்துட்டுதானே போயிருக்கா.. கல்யாணச்சாவுதான் என்றவர்க்கு எப்படிச் சொல்வேன் இத்தனை விஷயங்களும்?


Read more: http://www.livingextra.com/2011/08/blog-post_22.html#ixzz1VkMjX6sv

பிஸியோதெரபி



===============
மன இறுக்கம், மன அழுத்தம் மற்றும் மனச் சோர்வு (tension, stress and depression) போன்றவை பூசணி, பரங்கி, கிர்ணீப் பழம் போல் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவைதான். ஆனால் சில வேறுபாடுகள் உண்டு.
மிக நெருங்கிய உறவினர் அல்லது நண்பரை நிரந்தரமாகப் பிரிந்தால் உருவாகும் வெற்றிடம் மன இறுக்கம்.
நம் சக்தியை மீறிய குறிக்கோள் மன அழுத்தத்தைத் தரும்.
ஒரே மாதிரியான வேலை, சூழலில் உள்ள மங்கல்தன்மை (dullness) போன்றவை மனச்சோர்வை அளிக்கும்.
மன அழுத்தத்தைக் குறைக்க மூச்சுப் பயிற்சி, யோகா மற்றும் தியானம் போன்றவை பயன்படும்.
ஆனால், நிபுணர்கள் மேலும் சில நுணுக்கங்களைக் கூறுகிறார்கள். இது போன்ற சமயங்களில் நாம் மூன்று வகையாக இயங்குகிறோம்.
1) Over Excited Stress Response : அதீத எதிர்வினை - பதட்டம், கை கால் நடுக்கம், "சுள்" என்று கோபப்படுவது போன்றவை
2) Under Excited Stress Response : சுணக்கம் கொள்வது. தனித்திருப்பது, சோர்வு, ஆர்வம் இல்லாமல் இருப்பது போன்றவை
3) Mixes Response : சில விஷயங்களில் பதைபதைப்பும், வேறு சில விஷயங்களில் கூட்டுக்குள் முடங்கி விடுவதும் இந்த வகையின் கீழ் வரும்.
முதல் வகைக்கு யோகா போன்று மனதை அமைதிப்படுத்தும் வழி முறைகள் சரியே.
ஆனால் இரண்டாம் வகைக்கு அது தேவையான பலனைத் தராது. உடல் இயக்கம் துரிதமாக இருக்கும்படியான செயல்களில் நாம் ஈடுபட வேண்டும். நடைப் பயிற்சி, மெதுவான கதியில் ஓட்டம், பழைய அல்லது நமக்கு முற்றிலும் புதிதான ஒரு பொழுதுபோக்கில் ( hobby ) ஈடுபடுவது போன்றவை அபரிமிதமான பலனைத் தரும்.
மூன்றாவதைக் கையாள, மேலே கூறப்பட்ட இரண்டையும் கலந்து செய்யவேண்டும்.
நம்மில் பெரும்பாலானவர்களுக்கு மூன்றாம் வகையே பயன்தரும். நாள் முழுவதும் ஒரே இருக்கையில் அமர்ந்து பணி புரிபவர்களுக்கு இது ஒரு வரம்.
வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் நம்மை, சில நடவடிக்கைகளில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அதாவது busy யாக இருக்க வேண்டும் அதுதான் BUSY-O-THERAPY !!! .......ஹா ஹா ஹா !!

35 Amazing Illustrations

Our new section 1000px has the best examples of digital art and photography, all at big resolutions so you won’t miss any beautiful detail. We gathered today some amazing illustrations and we invite you to admire them after the break. Click on any of them for 1000px width and awesome details. Be inspired.
Breathe me
How to train your creature
Blowing Bubbles
I don’t come from a forest
Cupido
It will come off with soap
BIGUNICORN
Fingon rescues Maedhros
Heart of the Forest
The Gentle Giant
The City Fishing
Atlantis by Andreas Rocha
Bat Jump
Special Meeting
Chasing Butterflies
The Cyclops and the 3-D Movie
Charon and the Coast Guard
Triton and the Fishing Net
Melody of Paderne
Great destination
Kite Fish Ride
Save. Our. Souls.
Peaceful Days
Primrobb’s Threshold
Don’t Worry, I Have it Covered
Robot Love
The Hanging Gardens Of Babylon
Budapest – Fantasy Landscape
Paris in the Twentieth Century
Fairy Queen
Truong Huyen
Their Tree
Deep in the Sea
Jason Chan
Sam Nielson

பழக்க வேஷம்

பழக்க வேஷம் 

பறக்கும் காற்றாடியை கீழே இறக்கியாகி விட்டது. நூற்கண்டைச் சுற்றுகிறான் ஒரு சிறுவன். உருண்டை கொஞ்சம் கொஞ்சமாகப் பெரிதாகி வருகிறது. "சட்"டெனக் கையிலிருந்து நழுவி, கீழே விழுந்து உருண்டு செல்கிறது. சுற்றப்பட்ட நூல் கொஞ்சம் பிரிந்து விடுகிறது. " ஹும்.......மீண்டும் சுற்றவேண்டும்..." என்னும் அலுப்பு வருகிறது அவனுக்கு.

ஒரு பழக்கத்தை ஏற்படுத்துவதோ, விடுவதோ அல்லது ஒரு மாற்றுப் பழக்கத்தை உருவாக்குவதோ சற்றுக் கடினமான விஷயந்தான். ஆனால் முடியவே முடியாத காரியம் அல்ல. 19ஆம் நூற்றாண்டில் William James என்னும் உளவியல் அறிஞர் இதற்கு ஒரு உபாயம் சொல்கிறார். 21 நாள் பத்தியம் அது. ( ஒரு சிலர் இதை 66 நாட்கள் என்றும் கூறுகின்றனர் )

ஒரு புதிய பழக்கத்தை உருவாக்க முதலில் அதை 21 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். எந்த நாளும் விதி விலக்கு கிடையாது. இடைவெளி இல்லாமல் செய்ய வேண்டும். அப்படிச் செய்தால் அது நம் நரம்புகளில் குடிகொண்டு விடும். பின்னர் நம்மை விட்டு விலகாது. 

ஆனால், அதை அமல் படுத்த, கிடைக்கும் முதல் வாய்ப்பையே பயன்படுத்திவிட வேண்டும். தள்ளிப் போட்டால் சுருதி குறைந்து போகும். .Stimuli எனப்படும் தூண்டும் உணர்வை முழுமையாக்க வேண்டும். அப்போதுதான் reflex எனப்படும் எதிர்விளைவு நம்முள் ஊன்றி நிற்கும். 

பழக்கம் சம்பந்தப்பட்ட அறிமுகமும் புரிதலும் பெரும்பாலும் ஒருதலைப் பட்சமாகவே இருக்கிறது. நல்ல பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று பொதுவாகச் சொல்வார்கள். ஆனால், தீய பழக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் பொழுதோ அரக்கன், பேய் என்று அடைமொழி தந்து விடுவார்கள். 

இது உண்மையே எனினும், தீய பழக்கத்தை வெல்ல நினைக்கும் நமக்கு, அதற்கு இணை இல்லாத எதிரியாக நம்மைக் கருதும் வாய்ப்பு உண்டு. பழக்கம் என்ற விஷயத்தில், நல்லது தீயது இரண்டுமே ஒரே பாதையில்தான் பயணிக்கின்றன. தூண்டல் / எதிர்வினை பொதுவானது.

நாம் அடிமையாகி விட்ட ஒரு தீய பழக்கத்தை, மனமானது ஆசையோடு ஆலிங்கனம் செய்து கொள்கிறது. ஆனால், அதை விடவேண்டும் என்னும் முயற்சியில் அரவணைப்பு தானாக சுரப்பதில்லை. முனைந்து செய்ய வேண்டியுள்ளது. 21 நாட்களுக்குப் பின் தூ / எ தானாக உருவாகிறது. இதுதான் ரகசியம்.

ஒரு செயல், பழக்கம் என ஆகும் வரை, அதை, பழக்கம் போல "பாவித்து"ச் செய்ய வேண்டும். அந்த முகமூடியை, வேஷத்தை நாம் போட்டுக் கொள்ள வேண்டும்..... முதலில் பழக்க வேஷம்.... பின்னர் அதுவே நம் இயல்பாகி ( second nature ) விடும். 

காலையில் கடிகாரத்தின் " விழிப்பு மணி " அடிக்கிறது. நாம் பொருத்தி வைத்த நேரம்தான். ஆனால், அதன் தலையில் தட்டி விட்டு, நாம் மீண்டும் உறங்கச் சென்றால் நமது தூண்டும் சக்தி வலிமையற்று இருக்கிறது என்று பொருள். வைராக் கியத்தைத் திடப்படுத்தினால் விழிப்பும் வரும்.... வாழ்க்கையில் விடியலும் வரும் !!



Vetri Vidiyal Srinivasan
ரசித்ததும் புசித்ததும்


The Giraffe Test




1. How do you put a giraffe into a refrigerator?
 

Stop and think about it and decide on your answer before you scroll down.
   

The correct answer is: Open the refrigerator, put in the giraffe, and close the door. This question tests whether you tend to do simple things in an overly complicated way.




2 How do you put an elephant into a refrigerator?
   
Did you say, Open the refrigerator, put in the elephant, and close the refrigerator?

Wrong Answer.


Correct Answer: Open the refrigerator, take out the giraffe, put in the elephant and close the door. This tests your ability to think through the repercussions of your previous actions.







3.
The Lion Kingis hosting an animal conference. All the animals 
attend .... Except one. Which animal does not attend?









 

Correct Answer : The Elephant. The elephant is in the refrigerator. Didn't you just put him in there? This tests your memory. Okay, even if you did not answer the first three questions correctly, you still have one more chance to show your true abilities.






4. There is a river you must cross but it is used by crocodiles, and
 
you do not have a boat. How do you manage it?






   
Correct Answer: You jump into the river and swim across. Have you not been listening? All the crocodiles are attending the Animal Meeting. This tests whether you learn quickly from your mistakes.


According to Anderson Consulting Worldwide, around 90% of the
 
professionals they tested got all questions wrong, but many preschoolers got several correct answers. Anderson Consulting says this conclusively disproves the theory that most professionals have the brains of a four-year-old.



Now send this out to frustrate all of your smart friends.
 

Do We Really Need a 250 GB Tablet?



When tablet and traditional computing awkwardly merge.


The Archos G9.
Archos is putting out a new tablet in September. Dubbed the Archos G9, it will run the Android "Honeycomb" operating system, will pack a 1.5GHz Texas Instruments OMAP 4460 dual-core processor, and will come in both 8-inch and 10-inch models (priced at $370 and $470, respectively). But those specs aren't what's most interesting about the Archos G9. The tablet, CNET notes, has a massive hard disk drive--250 GB.
It's an unusual move, for tablet computing. 250 GB is a lot of storage, a number more typically associated with laptop and desktop computers. For comparison's sake, the iPad maxes out at 64 GB of storage; and there are some models that ship at just 16 GB. Also breaking with tablet tradition, the Archos uses a hard disk drive in place of a flash drive. The G9 is expected to use the Seagate Momentus Thin hard drive, though Archos has altered it slightly so that 4 GB of flash storage sits on top of the hard disk drive, allowing quick access to most-used data.
Archos's new device seems like a worthy experiment, and we'll see in September if there's a market for it, as Archos apparently believes. But it also seems as if Archos is missing the mark with this device. Tablet computers are fundamentally mobile things, intended to take advantage of an era when our data resides more fully in the cloud.
The whole point of a tablet, it seems (for many people, at least), is that it's lightweight and nimble, another handy portal into the vast stores of data that live on the Internet or in one's own cloud storage. When people complain about the limited storage capabilities of most tablets, often they are really complaining about features external to the tablet--spotty Wi-Fi that impedes access to data, or the fact that they haven't taken the plunge to storing their music library on the cloud.
Until cloud storage and reliable wireless are as taken for granted as the air we breathe, there might indeed be a sizable market for the Archos G9. But when those services become more ubiquitous and reliable, a large hard disk drive--which is likely to add weight to a device and lessen battery life--can only be seen as a hindrance.