Search This Blog

Tuesday, January 5, 2016

Waste water Treatment

Introduction to Waste water Treatment Processes

Wastewater treatment is closely related to the standards and/or expectations set for the effluent quality. Wastewater treatment processes are designed to achieve improvements in the quality of the wastewater. The various treatment processes may reduce:
  1. Suspended solids (physical particles that can clog rivers or channels as they settle under gravity)
  2. Biodegradable organics (e.g. BOD) which can serve as “food” for microorganisms in the receiving body. Microorganisms combine this matter with oxygen from the water to yield the energy they need to thrive and multiply; unfortunately, this oxygen is also needed by fish and other organisms in the river. Heavy organic pollution can lead to “dead zones” where no fish can be found; sudden releases of heavy organic loads can lead to dramatic “fishkills”.
  3. Pathogenic bacteria and other disease causing organisms These are most relevant where the receiving water is used for drinking, or where people would otherwise be in close contact with it; and
  4. Nutrients, including nitrates and phosphates. These nutrients can lead to high concentrations of unwanted algae, which can themselves become heavy loads of biodegradable organic load Treatment processes may also neutralize or removing industrial wastes and toxic chemicals. This type of treatment should ideally take place at the industrial plant itself, before discharge of their effluent in municipal sewers or water courses.



Widely used terminology refers to three levels of wastewater treatment: primary, secondary, and tertiary (or advanced).
Primary (mechanical) treatment is designed to remove gross, suspended and floating solids from raw sewage. It includes screening to trap solid objects and sedimentation by gravity to remove suspended solids. This level is sometimes referred to as “mechanical treatment”, although chemicals are often used to accelerate the sedimentation process. Primary treatment can reduce the BOD of the incoming wastewater by 20-30% and the total suspended solids by some 50-60%. Primary treatment is usually the first stage of wastewater treatment. Many advanced wastewater treatment plants in industrialized countries have started with primary treatment, and have then added other treatment stages as wastewater load has grown, as the need for treatment has increased, and as resources have become available.
Secondary (biological) treatment removes the dissolved organic matter that escapes primary treatment. This is achieved by microbes consuming the organic matter as food, and converting it to carbon dioxide, water, and energy for their own growth and reproduction. The biological process is then followed by additional settling tanks (“secondary sedimentation", see photo) to remove more of the suspended solids. About 85% of the suspended solids and BOD can be removed by a well running plant with secondary treatment. Secondary treatment technologies include the basic activated sludge process, the variants of pond and constructed wetland systems, trickling filters and other forms of treatment which use biological activity to break down organic matter.
Tertiary treatment is simply additional treatment beyond secondary! Tertiary treatment can remove more than 99 percent of all the impurities from sewage, producing an effluent of almost drinking-water quality. The related technology can be very expensive, requiring a high level of technical know-how and well trained treatment plant operators, a steady energy supply, and chemicals and specific equipment which may not be readily available. An example of a typical tertiary treatment process is the modification of a conventional secondary treatment plant to remove additional phosphorus and nitrogen.
Disinfection, typically with chlorine, can be the final step before discharge of the effluent. However, some environmental authorities are concerned that chlorine residuals in the effluent can be a problem in their own right, and have moved away from this process. Disinfection is frequently built into treatment plant design, but not effectively practiced, because of the high cost of chlorine, or the reduced effectiveness of ultraviolet radiation where the water is not sufficiently clear or free of particles.

Using genes to understand the brain's building blocks

Researchers at the Allen Institute for Brain Science have created a detailed taxonomy of cells in the mouse visual cortex based on single-cell gene expression, identifying 49 distinct cell types in the largest collection of individual adult cortical neurons characterized by gene expression published to date. The work appears in Nature Neuroscience.
The team developed a technique to isolate single cells from the adult mouse brain, and then obtained genome-wide gene expression data from these individual cells. Each cell expresses thousands of genes, making the cell classification problem an enormous computational task.
The team used computational dimension reduction techniques, which collapse genes with similar expression patterns into gene sets. When single cells were analyzed by clustering in this lower-dimensional space, 49 distinct groups appeared based on unique combinations of genes they express, including 42 neuronal cell types and 7 non-neuronal types.
The data from this single cell analysis approach agree with and complement the Allen Brain Atlas: a brain-wide gene expression atlas of the mouse brain.
This work is one more step toward assigning genes to specific cell types and then helping investigate what these genes do, how they work together, and how they ultimately make our nervous systems and us who we are.

Monday, January 4, 2016

சங்குகள் பற்றி.....



சிவாலயங்களில் 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி, அப்புனித நீரால் சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வழக்கம். கார்த்திகை சோமவாரத்தில் நடை பெறும் சங்காபிஷேகத்துக்கு மிகுந்த மகத்துவம் உண்டு.
ஆலய வழிபாட்டில் பொதிந்துள்ள எண்ணற்ற அறிவியல் ரீதியான ஆச்சரியங்களில் இந்த வழிபாடும் ஒன்று. சங்காபிஷேகத்தில் கலந்து கொண்டு இறைவழிபாடு செய்தால் நாம் தொடங்கும் செயல்களில் வெற்றி பெறலாம் என்பது ஐதீகம். சங்காபிஷேகத்துக்கு முன்பு சங்கு பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.
*தேவர்களும், அசுரர்களும் ஒன்றிணைந்து பாற்கடலை கடந்த போது லட்சுமியுடன் சங்கும் சேர்ந்து வெளியில் வந்தது.
இந்த உலகுக்கு சங்கு அறிமுகமானது இப்படித்தான். லட்சுமியின் அழகில் மயங்கி அவளை திருமணம் செய்து கொண்ட மகா விஷ்ணு, சங்குவை இடது கையில் ஏந்தி ‘சங்கு சக்கர தாரி'யாக மாறினார். அன்று முதல் விஷ்ணுவின் படைகளில் ‘சங்குப் படை' முக்கியமானதாக மாறியது என்று விஷ்ணு புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு, லட்சுமி இருவரிடமும் சங்கு நிலை பெற்றுள்ளதால், அது செல்வம், வெற்றி உள்பட அனைத்தையும் தரும் என்று புராணங்கள் சொல்கின்றன.
லட்சுமியின் அம்சமாகக் கருதப்படும் சங்கு, ஓம் எனும் பிரணவ மந்திர வடிவில் அமைந்துள்ளது. சங்கில் இருந்தும் ஓம் எனும் ஒலி எழும். இந்த ஓலி துர்சக்திகளை விரட்டும் ஆற்றல் கொண்டது. எனவேதான் வீட்டில் சங்கு வைத்து வழிபடுவது நல்லது என்று கூறப்படுகிறது. சங்கில் நீர் விட்டு கும்பத்தின் மேல் வைத்து, பூக்கள் போட்டு, பூஜை செய்து ஆராதனை நடத்தி, சங்கில் உள்ள நீரை சாமி சிலைகள் மீது அபிஷேகம் செய்தால் அது தீர்த்தமாக மாறி விடும் என்கிறார்கள்.
இப்படி சாதாரண நீரை, சக்தி வாய்ந்த மகா தீர்த்தமாக மாற்றிவிடும் சக்தி படைத்த சங்கின் முன்பாகத்தில் கங்கை, மத்தியில் வருணன், பின்பாகத்தில் பிரஜாபதி வசிக்கிறார்களாம். இவர்கள் தவிர சங்கில் குபேரன் உள்பட எல்லா தேவதைகளும் வசிப்பதாக சொல்கிறார்கள். இதனால்தான் சைவ, வைணவ ஆலய வழிபாடுகளில் சங்கு பிரதான இடம் வகிக்கிறது.
*சங்கின் பிறப்புக்கு தேவி மகாத்மியத்தில் ஒரு கதை கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணரின் மகனாக சுதர்மன் என்பவன் அவதரித்தான். ராதையின் சாபம் காரணமாக இவன் அசுரகுலத்தில் சங்கசூடன் என்ற பெயரில் பிறக்க நேரிட்டது. சங்கசூடன் தான் பெற்ற வரத்தால் தேவர்களை கொடுமைப்படுத்தினான். இதனால் சிவபெருமான் அவனை சூலத்தால் அழித்து சாம்பலாக்கினார். அவனது எலும்புகள் தான் ஆழ்கடலில் விழுந்து சங்குகளாக மாறியதாக சொல்கிறார்கள். சங்கில் 16 வகை சங்குகள் இருந்தாலும் இடம்புரி சங்கு, வலம்புரி சங்கு, திருகு சங்கு ஆகிய 3 வகை சங்குகள் முக்கியமானவை.
இதில் இடம் புரி சங்குகள் அதிகமாக கிடைக்கும். லட்சத்தில் ஒரு சங்குதான் வலம்புரி சங்காக இருக்கும். ஆலயங்களில் சாதாரணமாக செய்யப்படும் சங்கு, சப்தாகர்ஷண சக்தி பூஜைகளில் இடம்புரி சங்கையே பயன்படுத்துவார்கள். திருகு சங்குகள் திருஷ்டி போக்கவும், வாஸ்து குறைபாடுகளை நீக்கவும் பயன்படும். வலம்புரி சங்கு புனிதமும் ஆற்றலும் நிறைந்தது. இடது கையால் பிடிக்க தகுந்த அமைப்புடன் இருப்பது வலம்புரி சங்காகும்.
ஆழ்வார்களில் முதல் ஆழ்வாரான பொய்கை ஆழ்வார் சங்கின் அம்சமாக அவதரித்தவர் ஆவார். தோஷங்களில் மிக உயர்ந்த தோஷமான பிரம்மஹத்தி தோஷத்தை விரட்டும் ஆற்றல் வலம்புரி சங்குக்கு உண்டு. வீட்டில் வலம்புரி சங்கு வைத்து வழிபட்டு வந்தால் மற்றவர்களுக்கு உதவும் அளவுக்கு நம் பொருளாதார நிலை உயரும். செவ்வாய் தோஷம் இருப்பவர்கள் வலம்புரி சங்கில் பால் வைத்து 27 செவ்வாய்க்கிழமை அம்மனை வழிபட்டு வந்தால் எல்லா தோஷங்களும் நீங்கி விடும்.
சங்குக்கு வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து சங்கு காயத்ரியை 108 முறை ஜெபித்தால் வற்றாத வளம் வந்து சேரும். இத்தகைய சிறப்புகள் கொண்ட சங்கு மூலம் ஈசனுக்கு அபிஷேகம் செய்யும் போது அந்த வழிபாடு இரட்டிப்பு பலன் தருவதாக மாறுகிறது. திருவண்ணாமலை, சிதம்பரம், குற்றாலம், திருவானைக்காவல், திருக்கடையூர் தலங்களில் சிவபெருமானுக்கு செய்யப்படும் சங்காபிஷேகங்கள் புகழ் பெற்றவை. திருவாரூர் தியாகராஜருக்கு தினமும் மாலை நேரத்தில் சங்கு முழங்க தீபாரதணை நடத்தப்படுகிறது.
கார்த்திகை மாதம் 108 அல்லது 1008 சங்குகளில் நீர் நிரப்பி சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படுவதன் பின்னணியில் ஒரு வரலாறு உள்ளது. கார்த்திகை மாதம் முழுவதும் சிவபெருமானை தீப ஒளியால் மகிழ்விக்க வேண்டும் என்று சிவாகம சாஸ்திரங்கள் சொல்கின்றன. தீப ஒளி வழிபாட்டால் இந்த மாதம் சிவனுக்கு வெப்பம் அதிகரித்து விடும்.
இந்த வெப்பத்தை தணிக்கவே சிவபெருமானுக்கு 108 மற்றும் 1008 சங்கு புனித நீரால் அபிஷேகம் நடத்தப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி கார்த்திகை மாதம் சூரியன் தன் பகை வீடான விருச்சிகத்தில் இருப்பார். சந்திரனும் நீச்சம் பெறுவார். இது ஒரு வகை தோஷமாகும். இந்த தோஷத்தை விரட்டவே சங்காபிஷேகம் செய்யும் பழக்கம் ஏற்பட்டதாக சொல்கிறார்கள்.
சாபத்தால் தேய்ந்த சந்திரன், ஈசனுக்கு சங்காபிஷேகம் செய்த பிறகே, அவர் தலை முடியில் இருக்கும் பாக்கியத்தையும், வளரும் பலனையும் பெற்றார். எனவே கார்த்திகை சோமவாரத்தில் விரதம் இருந்து சங்காபிஷேகம் செய்பவர்களுக்கு திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் உண்டாகும். சோழபுரம் கைலாசநாதர் ஆலயத்தில் 1008 சங்காபிஷேகம் செய்தால் மனக்கவலைகள் அனைத்தும் தீரும் என்பது ஐதீகம். பண்ருட்டி திருவதிகையில் உள்ள வீராட் டானேசுவரர் ஆலயத்தில் 14-ம் நூற்றாண்டை சேர்ந்த வலம்புரி சங்கு உள்ளது.
இந்த சங்கை பார்த்தாலே நமது தோஷங்கள் விலகுகிறது. காரைக்குடி அருகில் உள்ள மானகிரி காண்டீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷம் தினத்தன்று 1008 சங்காபிஷேகம் செய்தால் பணப்பிரச்சினைகள் தீரும். பெருமாளுக்கு பால், தேன், இளநீர், சந்த னம் உள்பட 12 வகை பொருட்களை 1008 சங்காபிஷேகமாக செய்தால் நல்ல குணம் உண்டாகும். அது போல சரபேஸ்வரருக்கு 108 சங்குகளால் தேன் அபிஷேகம் செய்தால், எவ்வளவு பெரிய நோய் இருந்தாலும் நீங்கி விடும்.
சங்கு தெய்வீகப் பொருளாகக் கருதப்படுவதால் அதற்கு ‘புனிதமான பாத்திரம்' என்றும் ஒரு பெயர் உண்டு. எனவே தான் அதில் ஊற்றப்படும் நீர் புனிதமானதாக மாறுகிறது. அந்த தீர்த்தத்தை குடித்தால் ஆயுள் பெருகும். ‘யார் ஒருவர் மனம் உருகி சோமவார சங்காபிஷேகம் செய்கிறாரோ, அவர் செய்யும் அபிஷேகம் தேவாமிர்தத்தால் செய்யப்படும் அபிஷேகத்துக்கு இணையானது. அவருக்கு என்னிடத்தில் இடம் கொடுப்பேன்' என்று ஈசனே கூறியுள்ளார்.
சங்கு தீர்த்தம் போலவே சங்கு ஒலியும் மகிமை நிறைந்தது. சங்சொலி கேட்டதும் தீய சக்திகள் ஓடி விடும். எனவே தான் பூஜை தொடங்கும் முன்பு சங்சொலி எழுப்புவது இன்னமும் நடைமுறையில் உள்ளது. சோமவார சங்காபிஷேகத்தை நம்மால் நடத்த இயலாவிட்டாலும் பரவாயில்லை. அந்த அபிஷேகத்தை கண் குளிர தரிசனம் செய்தாலே சங்கடங்கள் நீங்கி விடும் என்பது ஐதீகம். சங்காபிஷேகத்தில் தீர்த்தம் தவிர மூலிகைகள், பச்சிலைகள், வாசனைத் திரவியங்கள் கலந்தும் பயன்படுத்தலாம்.
இத்தகைய சங்கு அபிஷேகங்களை கண்டால் 7 பிறவி பாவங்கள் விலகுமாம். அதோடு இழந்த பொருள், பதவி கிடைக்கும். இம்மை - மறுமை வினைகள் தீரும். சங்காபிஷேக தீர்த்தத்தை அருந்தியவர்களுக்கு அகாலமரணம் என்பது வராது. உடலில் தோன்றும் 4446 வகை நோய்கள் நீங்கும். அபிஷேகப் பிரியரான சிவனை, ஒருவர் எந்த அளவுக்கு சங்காபிஷேகத்தால் மகிழ்ச்சிப் படுத்துகிறாரோ, அந்த அளவுக்கு அவர் ஈசனை நெருங்க முடியும். சங்கு நிலையான தன்மை கொண்டது.
சுட்டாலும் அது வெண்மையேத்தரும். பஞ்சபூதங்களால் சங்கை எந்த மாற்றமும் செய்ய இயலாது. அது போல மனிதனும் மாறாத இயல்புடன் இறைவனை பூஜிக்க வேண்டும் என்பதை உணர்த்தவே இறைவழிபாட்டில் நம் முன்னோர்கள் சங்கை சேர்த்துள்ளனர். சங்காபிஷேகம் நடத்துபவர்களுக்கு தெளிவான மனநிலை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். குறிப்பாக கணவன் - மனைவி இடையே அன்பு அதிகரிக்கும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.
திருக்கழுக்குன்றம் சங்கு தீர்த்தத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு தடவை உருவாகும் சங்கு உலகப் புகழ் பெற்றது. சிவலாயங்களில் புதிய சங்கு வந்ததும், பழைய சங்குகளை ஏலம் விடுவார்கள். அந்த சங்கை வாங்கி வந்து வீட்டில் வைத்து பூஜித்தால் செல்வம் பெருகும். எந்த திருஷ்டியாக இருந்தாலும் ஓடி விடும். சங்குக்கு ஆகாயத்தில் உள்ள வேத மந்திரங்களை ஈர்க்கும் சக்தி உண்டு. சங்கில் உள்ள ஜலதாள யோக ஜோதி சக்தியானது நவக்கிரகங்களின் சக்தியை பெற்றுத் தரும் ஆற்றல் கொண்டது.
சங்கை அருகில் வைத்து எந்த கடவுளை வேண்டினாலும், அந்த இறைவனின் சக்தி நமக்கு முழுமையாக கிடைக்கும். எனவே ஆலயத்தில் நடக்கும் சங்காபிஷேங்களில் கலந்து கொள்வது உங்களை மேன்மைப்படுத்தும். வீட்டிலும் சங்கு வழிபாட்டை உரிய முறையில் செய்தால், இந்த பிறவியில் எல்லா இன்பத்தையும் பெற முடியும்.

Eat your H2O!



Hydrating and scoring antioxidants can be a one-shot deal!
Studies suggest that water can suppress appetite, decrease caloric intake, boost metabolism and even allow you to push harder during workouts. Yes, drinking water is great, but sometimes you need a boost to meet your hydration goals during the summer heat. What could be better than foods that hydrate, keep you full and help you get lean?

Damon Soraya

பராசக்தி.......நடிகர் திலகத்தின் முதல் படம்..... படப்பிடிப்பில்.....


Sunday, January 3, 2016

How a turbocharger works (In 10 easy steps):


The basic idea is that the exhaust drives the turbine (the red fan), which is directly connected to (and powers) the compressor (the blue fan), which rams air into the engine. For simplicity, we're showing only one cylinder. Here then, in summary, is how the whole thing works:
1. Cool air enters the engine's air intake and heads toward the compressor.
2 The compressor fan helps to suck air in.
3. The compressor squeezes and heats up the incoming air and blows it out again.
4. Hot, compressed air from the compressor passes through the heat exchanger, which cools it down.
5. Cooled, compressed air enters the cylinder's air intake. The extra oxygen helps to burn fuel in the cylinder at a faster rate.
6. Since the cylinder burns more fuel, it produces energy more quickly and can send more power to the wheels via the piston, shafts, and gears.
7. Waste gas from the cylinder exits through the exhaust outlet.
8. The hot exhaust gases blowing past the turbine fan make it rotate at high speed.
9. The spinning turbine is mounted on the same shaft as the compressor (shown here as a pale orange line). So, as the turbine spins, the compressor spins too.
10. The exhaust gas leaves the car, wasting less energy than it would otherwise.
Source: ExplainThatStuff

TAMIL PAINTING













‪சிதம்பரம் எனும் அதிசயம்‬




*சிதம்பரத்தில் 9 தங்க கலசங்கள் 9சக்தியை குறிக்கும்
*21600 தங்க ஓடுகள், மனிதன் ஒருநாளில் விடும் மூச்சுகளின் எண்ணிக்கையை குறிக்கும்
*72000 ஆணிகளால் ஓடு கோர்க்கபட்டுள்ளது, அது சுவாசத்துக்கு ஆதாரமாக இருக்ககூடிய நாடிகளை குறிக்கிறது....
*மனித இதயம் உடலுக்கு இடது புறமாக தள்ளியிருக்கிறது, சிதம்பர ஆலய கர்பக்கிரகமும் அப்படியே அமைந்துள்ளது...
*பொற்சபையில் ஆறுகாலம் ஸ்படிகலிங்கத்திற்க்கு அபிஷேகமும்,இரண்டாம் காலத்தில் இரத்தின சபாபதிக்கும் சேர்த்து அபிஷேகம் நடக்கும்...
*இறைவனுக்கு இரத்தின சபாபதி அபிஷேகம் நடக்கும் மண்டபத்தில் 18 தூண்கள் உண்டு இது18 புராணங்களை குறிக்கும்...
*முன்மண்டபத்தில் உள்ள அர்த்தமண்டபத்தில் ஆறு தூண்களும் ஆறு சாஸ்த்திரங்களை அடையாளம் காட்டுகின்றது...
*நடராசமூர்த்தி சன்னதிக்கு அருகே செல்வதற்க்கு அமைந்த ஜந்து படிக்கட்டு இவை பஞ்சாட்சரத்தின் (நம சிவாய)அடையாளம்...
*நடராசமூர்த்தி எழுந்தருளியுள்ள விமானத்திற்க்கு நான்கு தூண்கள் இவை நான்கு வேதங்களின் அடையாளம்...
நடராசமூர்த்தி வலக்கரத்தில் உடுக்கையும்,மற்றொரு வலக்கரத்தில் அபய முத்திரையும்,இடக்கரத்தில் அக்னியையும்,திருவடியை காட்டி தாண்டவ கோலத்தில் காட்சியளிக்கிறார்...
உடுக்கை--சிருஷ்டி--படைத்தல்
அபையகரம்--ஸ்திதி--காத்தல்
அக்னி--சம்ஹாரம்--அழித்தல்
ஊன்றிய திருவடி---மறைத்தலையும்
தூக்கிய திருவடி---அருளளையும் என ஜந்து தொழில்களையும் குறிக்கின்றன...
நெல்லை--முனி தாண்டவம்
திருப்பத்தூர்--கவுரி தாண்டவம்
மதுரை--சந்தியா தாண்டவம்
திருவாலங்காடு--சம்ஹார தாண்டவம்
குற்றாலம்--திரிபுரத்தாண்டவம்
சிதம்பரம் ஆனந்த தாண்டவம்...
பித்த னைப்பெருங் காடரங் காவுடை
முத்த னைமுளை வெண்மதி சூடியைச்
சித்த னைச்செம்பொன் அம்பலத் துள்நின்ற
அத்த னையடி யேன்மறந் துய்வனோ.....

Spicy Thai Chicken Wings


  • 10 Vegan Chicken Wings (Defrosted. We went with the same Chicken Drumsticks from May Wah that we used for the Buffalo Chicken Wingsrecipe, but you can also use Match Vegan Meat's Chicken and put on a Popsicle stick like we did for the Ribs recipe, or even use your favorite vegan chicken product like Gardein or Litelite on a bamboo skewer.)
  • 1/4 Cup Sherry
  • 1/4 Cup Braggs
  • 1/4 Cup Agave Nectar
  • 3 Tablespoons Fresh Cilantro (chopped)
  • 2 Tablespoons Chili Sauce
  • 2 Tablespoons Lime Juice
  • 2 Tablespoons Grated Lime Peel
  • 4 Green Onions (chopped)
  • 3 Cloves Garlic (minced)
  • Olive Oil Cooking Spray

Heat oven to 375.

In a large glass dish or bowl, mix All Ingredients except Vegan Chicken and Cooking Spray until well-blended. Toss in defrosted Vegan Chicken, and with a spoon, make sure the vegan Chicken is completely covered in the Sauce Mix. Marinade for 30 minutes. Depending on how shallow your dish or bowl is, you may want flip the Vegan Chicken a few times to makes sure one side doesn't get more flavor than another.

Spray a glass baking dish large enough to hold your wings with Olive Oil cooking spray. Place marinated Vegan Chicken in the dish. Try to make sure they aren't touching. Pour 1 Tablespoon of the Marinade/Sauce over each Vegan Chicken Wing. Bake uncovered for 30 minutes. Flip Vegan Chicken Wings once half way through baking.

When you serve, put the leftover Marinade/Sauce in a dish to dip in. The fresh Cilantro, Green Onions, Lime Juice and Spiciness are really spectacular and the sauce adds a but more au jus that's messy, but worth it.

உலகெலாம்உணர்ந் தோதற் கரியவன்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப் புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல் ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங் களிறு வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
பொழிப்புரை :
விரும்பத்தக்க பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானைப் பார்வதியோடும் இணைத்துப் பாடியவர்களாய் அருச்சிக்கும் பூவும் அபிடேக நீரும் தலையில் தாங்கித் திருக்கோயிலை நோக்கிப் பெருமானைத் துதித்த வண்ணம் புகும் அடியவர் பின் சென்ற அடியேன் .
கயிலை மலைக்குச் சென்றபோது ஏற்பட்ட உறுப்பழிவின் சுவடு ஏதும் தோன்றாதவகையில் தீங்கு நீங்கிய யாக்கை கொண்டு , கயிலை மலையிலிருந்து கால்சுவடு படாமல் திருவையாற்றை அடைகின்ற பொழுதில் , விருப்பத்திற்கு உரிய இளைய பெண்யானையோடு ஆண்யானை சேர்ந்து இரண்டுமாக வருவனவற்றைக் கண்டு , அவற்றை அடியேன் சத்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் , சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதனவற்றைக் கண்டவனாயினேன் .

போழிளங் கண்ணியி னானைப் பூந்துகி லாளொடும் பாடி
வாழியம் போற்றியென் றேத்தி வட்டமிட் டாடா வருவேன்
ஆழி வலவனின் றேத்தும் ஐயா றடைகின்ற போது
கோழி பெடையொடுங் கூடிக் குளிர்ந்து வருவன கண்டேன்
கண்டே னவர்திருப் பாதங் கண்டறி யாதன கண்டேன்.
பொழிப்புரை :
சந்திரனுடைய பிளப்பாகிய பிறையை முடிமாலையாகச் சூடிய பெருமானை , பூ வேலைகள் செய்யப்பட்ட மெல்லிய ஆடையை அணிந்த பார்வதியோடு இணைத்துப்பாடி , ` அவர்கள் திருவடி வாழ்க ` எனவும் , ` அவர்களுக்கு அடியேனுடைய வணக்கம் ` எனவும் சுழன்று ஆடிக்கொண்டு வரும் அடியேன்
சக்கரப்படையை வலக்கையில் ஏந்தியுள்ள திருமால் நிலையாகப் புகழும் ஐயாற்றை அடையும்போது ஆண்கோழி பெண்கோழியுடன் கூட இரண்டுமாக மகிழ்வுடன் வருவனவற்றைக் கண்டேன் . அவற்றை அடியேன் சக்தியும் சிவமுமாகக் கண்டதனால் திருப்பாதம் சிவானந்தம் ஆகிய முன் கண்டறியாதவற்றைக் கண்டேன் .

அப்பன் நீ அம்மை நீ ஐயனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஓப்புடைய மாதரும் ஒண்பொருளும் நீ
ஒரு குலமும் சுற்றமும் ஒரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என்நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ இம்மணி நீ இம்முத்தமும் நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே... !!!
உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்... !!!
பொழிப்புரை :
எவ்வுயிர்களானும் தம்மறிவால் உணர்தற்கும் ஓதுதற்கும் அரியவனாயும், அங்ஙனம்அரியவனாயினும் தன்னை அடைந்து உய்ய வேண்டும் எனும் பெருங்கருணையினால் பிறைச் சந்திரன் உலாவுதற்கும், கங்கையைத் தாங்குதற்கும் இடனாயுள்ள திருச்சடையை உடையனாயும்,
அளவிறந்த ஒளியுரு உடையனாயும், தில்லைச்சிற்றம்பலத்தே திருக்கூத்து ஆடுகின்றவனாயும் உள்ள கூத்தப் பெருமானின், அன்பர்கள் உள்ளத்தில் என்றும் மலர்ந்து நிற்கின்ற சிலம்பணிந்த திருவடிகளை வாழ்த்தி வணக்கம் செய்வாம்

Awesome!! What a beautiful shot !!!


World's Beautiful Masjid.


Friday, January 1, 2016

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !

1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில்
மொத்தம் 206 எலும்புகள் உள்ளன. ஆனால் அவன்
குழந்தையாக இருக்கும் போது அவனுடைய
உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர
வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற
எலும்புகளுடன் இணைந்து விடுகிறது...
2. நாம் 6
விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம்.
சாதார ணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம்...
3. நமக்கு இரண்டு கால்கள், இரண்டு கண்கள்,
இரண்டு காதுகள், இரண்டு கைகள் இவைகள்
ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில்
சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக
வளர்வதில்லை. இந்த மிகச் சிறிய வத்தியாசம்
தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது. நம்
இடது கால் செருப்பை விட வலதுகாலின்
செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த
சிறு வித்தியாசத்தால் தான்...
4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள்
தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது.
அவனது எலும்பு தொடர்ந்து 4
நாட்களை வரை செயல் படுகிறது. தோல்
தொடர்ந்து 5 நாட்கள் வரை பணி செய்கிறது. கண்
மற்றும் காது தொடர்ந்து 6 மணி நேரம்
பணி செய்கிறது தசைகள் ஒரு மணி நேரம்
செயல்படுகிறது. அவனது சிறுநீரகம்
தொடர்ந்து 6 மணி நேரம் செயல்படுகிறது. ஆக
அவனது உயிர் பிரிந் தாலும் அவனது உடல்
உறுப்புகளின் செயல்பாடுகள் நிறுத்தப்படவில்
லை...
5. 50 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய்
ஆகும் பெண்களுக்கு 300 நாட்களில்
குழந்தை பிறக்கிறது. 28
நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய் ஆகும்
பெண்களுக்கு 280 நாட்களில் குழந்தை பிறக்கிறது.
இது தவிர மாதவிடாய் பிரச்சனைகள் உள்ள
பெண்களுக்கு குழந்தை பிறப்பும்
சற்று முன்னாடியே (குறை பிரச வம்)
அமைந்து விடுகிறது. பெண்கள் இது விஷயத்தில்
கவனம் கொள்ள வேண்டும்...
6. பகலில் 8 மில்லிமீட்டர் சுருங்கி இரவில் 8
மில்லி மீட்டர் உயர்ந்து விடுகிறோம். காரணம்
பகலில் நமது வேலைகள்
செய்யும்போது தண்டு வடத்திலுள்ள
குறுத்தெலும்பு வட்டுகள்
ஈர்ப்பு விசைகாரணமாக அழுத்துகின்றன. இதனால்
உயரம் குறைகிறது. இரவில் எவ்வித விறைப்புத்
தன்மையும் இல்லாமல் படுத்து உறங்குவதால்
நமது உடம்பின் உயரம் கூடுகிறது...
7. நம் இரத்தத்தில் சிவப்பணுக்களின் ஆயுட்காலம்
127 நாட்கள் தான் அதன் பிறகு அது மடிந்து விடும். புது சிவப்பணுக்கள்
உருவாகும். இரத்தத்தில் வெள்ளை அணுக்களின்
ஆயுட்காலம் 120 நாட்கள்...
8. நம்உடலில் சுமார் 20 லட்சம்
வியர்வை சுரப்பிகள் இருக்கின்றன.
அவை ஒரு நாளில் சராசரியாக 5 லிட்டர் முதல் 6
லிட்டர் வியர்வையை வெளிப்படுத்துகின்றன...
9. நமது கைகளில் நடுவிரலில் நகம்
வேகமாகவும், கட்டை விர லில் நக ம் மெதுவாகவும் வளர்கின்றன. நம்முடைய உடல்
பாரத்தால் கை விரல் நகத்தைவிட கால்விரல் நகம்
மெதுவாக வளர்கிறது...
10. நாம் இரவில் தூங்கும் போது அசையாமல்
தூங்குவதில்லை, சுமார் 40 முறை அந்தப் பக்கம்,
இந்த ப்பக்கமாகப் புரண்டு படுக்கிறோம்...
11. நம்முடைய உடல்தோலின் பருமன் மிகக்
குறைந்தபட்சம் ½ மில்லி மீட்டர்
கண்ணிமைகளிலும், அதிகபட்சமாகப் பருமன் 4
முதல் 6 மில்லி மீட்டராக உள்ளங்கைகளிலும், அடிப் பாதங்களிலும் அமைந்திருக்கிறது.
12.மூளை அதிகமாக வேலை வாங்கும் மனித
உறுப்பு கட் டை விரல்கள்...
13. மனித உடலில் மிகவும் கடினமான பாகம்
தாடை எலும்பு...
14. மனித மூளை 80 முதல் 85 சதவீதம்
தண்ணீரைக் கொண்டதாகும்...
15. கல்லீரல் 500 விதமான
இயக்கங்களை நிகழ்த்துகிறது...
16. நம் ஒடல் தசைகளின் எண்ணிக்கை 630...
17. நம் உடலின் மொத்த எடையில் 12 சதவீதம்
பங்கு ரத்தம் உள்ளது...
18. நம் தலைமுடி 1 லட்சத்திலிருந்த
ு இரண்டு லட்சம் வரை உள் ளன. அவை 1
மாதத்திற்குள் 1-1/4 செ.மீ. வளர்கின்றன...
19. மண்டை ஓடு மனிதனின் 80 ஆம்
வயது வரை வளர்கிறது...
20. மனித முகங்களை மொத்தம் 520
வகைகளுக்குள் அடக்கி விடலாம்...
21. மனித நாக்கின் நீளம் 10 செ.மீ...
22. நாம் படுத்திருக்கும் போது 1 நிமிடத்திற்கு 9
லிட்டர் மூச்சுக் காற்றும் உட்கார்ந்திருக்கும்
போது 18 லிட்டர் மூச்சுக்காற்றும், நடக்கும் போது 1 நிமிடத்திற்கு 27 லிட்டர் மூச்சுக்காற்றும்
தேவைப்படுகிறது...
23. நமது சிறு நீரகத்தில் பத்து லட்சத்திற்கும்
மேற்பட்ட வடிகட்டிகள் இருக்கின்றன. இவைகள்
ஊறுகாய், உப்புக்கருவாடு, ஆல்கஹால்
போன்றவற்றால் பாதிப்படைகிறது...
24.பெண்களைவிட
ஆண்களுக்கு மூளை மிகப்பெரியது.
பெண்களை விட சுமார் 4000 உயிரணுக்கள்
ஆண்கள் மூளையில் இருக்கிறது...
25. மனித உடலில் மிகப்பெரிய உறுப்பு தோல்...
26. நமது தலையின் எடை 3.175 கிலோ கிராம்...
27. மூளையின் 100கோடி நியூரான்கள் நமக்கு 4 வயதுக்குள் கிடைத்து விடும்...
28. நாம் ஒரு பொருளை இறுக்கிப்பிடிக்க
நம்கட்டை விரலிலுள்ள 3 தசைகள் தான் பெரும் பங்கு அளிக்கிறது. மனிதனை ஒத்த உருவம் கொண்ட சிம்பன்ஸி குரங்கிற்கு இந்த 3 தசைகள்
கிடை யாது...
29. மூளையின்
மடிப்புகளே அறிவு கூர்மையை தீர்மானிக்கிறது...
30. மனித உடலில் இருக்கும் இரத்தம் 30 அடி தூரம் வரை பீய்ச்சியடிக்கும்...
31. பிறந்த குழந்தைக்கு வெள்ளை /
கறுப்பு நிறங்களை தவிர வேறு நிற
வேறுபாடே தெரியாது...
32. மனித உடலின் தோலின் எடை 27
கிலோ கிராம்...
33. மனித உடலில் 33 முள்ளெலும்புகள் உள்ளன...
34. இதயத்தை, சிறுநீரகத்தை, கல்லீரலை,
முழங்காலை மாற்றலாம். ஆனால்
மூளையை மட்டும் மாற்றவே முடியாது. காரணம்
ஞாபங்கள், நினைவுகள், எதிர்காலத்தில் மாற்ற முடிந்தாலும், மாற்றப்பட்டவன் வேற்று மனிதன்
தான் அவன் அந்நியன் தான்...
35. கண்கள் உலர்ந்து போகாமலிருக்க
இரண்டு வகையான ஈரம் தேவைப்படுகிறது. கண் இமைகள் தான் நம் வைப்பர்கள். அவற்றின்
விளிம்பில் 30 சுரப்பிகள் உள்ளன. கண்சிமிட்டும்
போதெல்லாம் கண்விழி இவற்றின் மூலம்
அலம்புகின்றன. அழுது கண்ணீர் விடும் போது கண் விழிமேல் இருக்கும் சுரப்பிகளிலிருந
்து கண்ணீர் வினியோகம் ஆகிறது...
36. நமது உடலிலுள்ள செல்கள்
பிரிந்து இரண்டாகும் தன்மையு டையது.
ஒரு நாளைக்கு நம் உடலில் 60 கோடி செல்கள்
இறந்து புது செல்கள் பிறக்கின்றன...
37. தலைமுடி 2 வருஷத்திலி ருந்து 4 வருஷம்
வரை வளர்கி றது. அதன்பின் 3 மாதம் வளராமல்
இருந்து உதிர்கிறது. பிறகு புது கேசம்
வளர்கிறது...
38. ஓர் அடி எடுத்து வைக்க உடலெங்கும் 54
தசைகள் பணிபுரிய வேண்டியுள்ளது...
39. 70 வயது வரை வாழும் ஒரு மனிதனின்
இதயம் 250 கோடி தடவை துடிக்கிறது.
ஒரு பம்பின் செயல்பாட்டிற்கு ஒப்பிட்டால் இதயம்
ஒரு நாளைக்கு 18 ஆயிரம் லிட்டர் ரத்தத்தை பம்ப்
செய்கிறது. இதயம் சீராக துடிக்க பொறாமை,
கெட்ட சிந்தனை இவைகளை விட்டொழித்தால்
போது ம், உயிர் வாழும் ஆண்டுகள் அதிகரிக்கும்...
40. நமது நரம்பு மண்டலம் தான் மூளைக்குத்
தகவல்களை அனுப்புகிறது. அது ஒரு நிமிடத்
திற்கு 6 லட்சம் தகவல்களை அனுப்புகிறது...
41. நமது உடலின் நீளமான
எலும்பு தொடை எலும்பு தான்...
42. மனிதன் சிந்திக்கும் வேகம் நிமிடத்திற்கு 500
சொற்கள் என்றும் பேசும் வேகம் நிமிடத்திற்கு 100
சொற்கள் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது...
43. மூளையில் ஏற்படும் வலியை நம்மால்
உணரமுடியாது. ஆனால் மற்ற உறுப்புகளின்
வலியை உணர்த்துவது மூளையே...
44. பெண்களைவிட ஆண்களுக்கு 40 சதவீ தம்
கூடுதலாக வியர்க்கிறது...
45. உயிர்வாழ உடலுக்குத் தேவை 13 வைட்டமின்கள்...
46. உடலில் ரத்தம் பாயாத
பகுதி கருவிழி மட்டுமே...
47. நம் வாழ்நாளில் 50 டன் உணவுப்
பொருளையும் 11 ஆயிரம் காலன் திரவத்தையும்
உட்கொள்கிறோம்..
48. நம் உள்ளங்கைகளில் ஒவ்வொரு சதுர
அங்குலத்திலும் 3000 வியர்வை சுரப் பிகள் இருக்கின்றன...
49. நம்முடைய தலை ஒரே எலும்பால்
உருவானது அல்ல, 22 எலும்புகளில்
உருவானதாகும்...
50. மனித உடலில் 50 லட்சம் முடிக்கால்கள்
உள்ளதாகவும், பெண்களின் முடியை விட
ஆண்களின் முடி வளர்ச்சி விரைவானது என் றும் அறியப்படுகிறது..
51. ஆரோக்கியமான மனிதன் 7 நிமிடங்களில்
தூங்கி விடுகின்றான்...
52. மூளையின் கனபரிமாணம் 1500 கன சென்டி மீட்டர்...
53. மனிதன் பயன்படுத்தும் சொல் தொகுதி 5000 முதல் 6000 வார்த்தைகள் தான். சாதாரண மனிதன்
முதல் விஞ்ஞானிகள் வரை சராசரியாக
இவ்வளவு வார்த்தைகளைத்தான்
பயன்படுத்துகிறார்கள்...
54. மனித உடலில் 97,000 இரத்த நாளங்கள்
உள்ளன...
55. நம் நகம் தினமும் 0.1 மில்லி மீட்டர் வீதம்
வளர்கிறது..
56. நாள் ஒன்றுக்கு நாம் 23,040
தடவை சுவாசிக்கின்றோம்..
57. மனிதனின் உடலிலுள்ள குரோமோசோம்களின் எண்ணிக்கை 46 (23 ஜோடி)..
58. நாம் பேசக்கூடிய வார்த்தை க்கு 72 தசைகள்
வேலை செய்ய வேண்டும். பேச்சை குறைத்தால்
சாதனைகளை நிகழ்த்தலாம்..
59. நமது நுரையீரல் 3 லட்சம் துவாரங்களையும்
இரத்த குழாய்களையும் கொண்டதாக இருக்கிறது.
இவைகளின் நீளம் 2400 கி.மீ. உள்ளது...
60. கண்களில் உள்ள லென்ஸ் ஆயுள் முழுவதும்
வளரும்...
61. ஒரு சொட்டு இரத்தத்தில் 55 லட்சம் இரத்த
சிவப்பணுக்கள் உள்ளன...
62. முளையின் நிறம் பழுப்பான நீலநிறம்.
63. உடலில் பொட்டாசியம் அளவு 70 சதவீதமாக
குறைந்துவிட் டால் அசதி, சோர்வு, வாந்தி,
வயிற்றுப் போக்கு ஏற்படும்.
64. ஒரு மனிதன் தினமும் 2 லிட்டர்
எச்சிலை ஊறச் செய்கிறான். 1.14லிட்டர்
வியர்வை வெளியிடுகிறான்..
65. சிந்தனையின் வேகம்
அல்லது ஒரு யோசனையின் தூரம்
என்று சொல்லுகிறோம் இந்த தூரம் 150
மைல்களாகும்..
66. ஓர் ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம்
அதிகமாக துடிக்கிறது...
67. மணிக்கட்டிலிருந்து நடுவிரல்
நுனிவரை உள்ள நீளமும், மேவாய்
கட்டையிலிருந்து நெற்றி உச்சி வரை உள்ள நீளமும் எல்லாருக்கும் சமமாக இருக்கும்..
68. ஒரு முறை வெளியாகும். ஆணின் விந்தில் 30
கோடி உயி ரணுக்கள் வரை இருக்கும்..
69. உடலில் உண்டாகும் உஷ்ணம்
வெளியேறிவிடாமல் தடுக்கவே ரோமம் உள்ளது..
70. இதயத்திலிருந்து புறப்பட்ட இரத்தம் உடல்
முழுவதும் ஒரு சுற்று சுற்றி விட்டு மீண்டும்
இதயத்திற்குத் திரும்ப எடுத்துக் கொள்ளும் நேரம்
30 செகண்டு ஆகும்...
71. மண்ணீரலில் சுரக்கும் ஒரு வகை நீர்
ரத்தத்தில் கலந்து மூளைக்குச் சென்று சிறிய
அறைகளைப் பாதிக்கிறது. இதனால் தான்
மனிதனுக்கு கோபம் வருகிறது...
72. மனித மூளையில் தாமிரத்தின் அளவு 6 கிராம்
ஆகும்.
73. ஆட்ரினல் சுரப்பி அளவுக்கு அதிகமாக
நீரை சுரக்கத் தொடங்கிவிட் டால்
ஆணுக்கு பெண்குணமும்,
பெண்ணுக்கு ஆண்குணமும் ஏற்படும்...
74. தானாக
மூச்சை அடக்கி தனக்குத்தானே மரணம்
ஏற்படும்படி செய்ய எவராலும் முடியாது...
75. நம் மூக்கில் வாசனையை நுகரும் செல்கள் 50
லட்சம் உள்ளன. ஆனால் நாயின் மூக்கில்
22கோடி நுகரும் செல்கள் உள்ளன. அதனால்
மோப்ப சக்தி அதிகம். காவல் துறையில் வேலை..
76. நம் இதயத்தின் எடை 10 அவுன்ஸ் தான்.
அவரவர் கைவிரல் 5 யையும் பொத்திப் பார்த்தால்
என்ன அளவு இருக்குமோ அதே அளவு தான்
அவரவர் இதயம் இருக்கும்...
77. நம் நுரையீரலில் உட்புறம் அமைந்துள்ள
'ஆலவியோலி' என் னும் சிறிய காற்று அறைகளின்
எண்ணிக்கை மட்டும் 30 கோடியாகும்..
78. மூளை 65 சதவீதம் கொழுப்பு பொருளால்
ஆனது..
79. இரத்தத்தில் 300 கோடி வெள்ளை அணுக்கள்
உள்ளன..
80. மனிதனுக்கு 4 வகையான பற்கள்
உண்டு..
81. நமது நாக்கில் சுவை உணரும் மொட்டுக்கள்
9000 உள்ளன..
82. நம் ஒவ்வொரு கண்ணிலும் 6 தசைகள்
உள்ளன.
83. எலும்புகளின் துணை இன்றி தானே அசையும்
தசை நாக்கு..
84. மனித உடலில் அதிக செல்களால் உருவான
பகுதி மூளை,மூளையின்
வெளிப்பகுதி மட்டுமே 8 பில்லியன் செல்களால்
உருவானது..
85. ஒரு மனிதன் தன் தாழ்நாளில் 23 வருஷம்
தூங்குகிறான்.
86. ஒரு பெண் பிறக்கும் போதே அவள் சுமார் 3-½
லட்சம் கரு முட் டைகளோடு தான் பிறக்கிறாள்.
இந்த முட்டைகளை ஒரு டீஸ் பூனில் 10 லட்சம் நிரப்பலாம்.
87. 70 கிலோ எடையுள்ள மனிதனுக்கு 5600
மில்லிலிட்டர் ரத்தம் உடம்பிலிருக்கும்..
88. பெண்களுக்கு வாழ்நாளில் மாத விடாய் சுமார்
375 முறை ஏற் படுகிறது..
89. இதயம் ஒரு நாளைக்கு சுமார் 1லட்சம்
தடவை லப்டப் செய்கி றது. வருஷத்திற்கு 4
கோடி தடவை..
90. நமது தோலின் பரப்பளவு சுமார் 20
சதுரஅடிகள்.
91. மனித உடலிலுள்ள பாஸ்பரசைக் கொண்டு 20
ஆயிரம் தீக்குச்சிகள் செய்யலாம்..
92. மனித உலின் கார்பனைக் கொண்டு 900
பென்சில்களை உரு வாக்கலாம்.
93. மனித உடலிலுள்ள கொழுப்பைக் கொண்டு 7
பார் சோப்புகளை செய்ய லாம்..
94. மனித உடலின் இரும்பைக் கொண்டு 2 அங்குல
ஆணி ஒன்று செய்யலாம்..
95. மனித உடலில் அதிகமாக காணப்படும்
தாதுப்பொருள் கால்சியம்..
96. இரத்தம் சுமார் 97,000 கிலோ மீட்டர்
நீளமுள்ள இரத்த நாளங்களிலி ருந்து இதயம்
வழியே நிமிடத்திற்கு 70 தடவை செல்கிறது...
97. உள் வாங்கும் காற்றில் ஆக்ஸிஜன்
குறைவாகி கார்பன்டை ஆக்சைடு அதிகமாகிவிட்டால
் உபரியாக காற்றை உள்வாங்க
கொட்டாவி விடுகிறோம்...
98. மனிதன் 21 வயது முடிவதோடு உடலின்
எல்லா உறுப்புகளின் வளர்ச்சியும்
நின்று விடுகிறது.
இறுதிவரை தொடர்ந்து வளர்வது காது மட்டும்தான்
சின்னதாக.. நம்மால் கண்டுபிடிக்க முடியாத
அளவிற்கு வளர்ச்சி...
99. 60 வயது வரை மனிதன் வாழுகின்றான்
என்றால் அந்த மனிதன் ஒரு நாளைக்கு 10 நிமிடம்
வீணாக்கினால் அவன் ஆயுளில் 5மாதங்கள்
வீணாக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது..
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்..

The smallest species of deer in the world

Oh this? It's just a pudu - the smallest species of deer in the world. It's so cute our hearts hurt. 



Pudu (Poo-doo) deer are indigenous to temperate rainforests of South America, where they hang out in dense underbrush and bamboo groves. There are two distinct species of pudu — the southern pudu that inhabit the lower Andes of Chile and southwest Argentina, and the northern pudu (Pudu mephistophiles) that inhabit the lower Andes of Ecuador, northern Peru and Colombia. Though the southern pudu deer is tiny, its cousin is actually a tad smaller, making the northern pudu the smallest deer species in the world,

ஸ்ரீ ஆஞ்சனேயர் காயத்ரி

ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே
வாயு புத்ராய தீமஹி
தந்நோ ஹனுமத் ப்ரசோதயத்

Sri Saraswathi



Ganesha Meenakshi Amman Temple, Madurai, Tamil Nadu, India 1858


Thursday, December 31, 2015

ஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன

வருடத்தில் மற்றைய அனைத்து மாதங்களும் 30,31 நாட்களுடன் இருக்கும் போது ஏன் மாசி மாதத்திற்கு மட்டும் 28 நாட்கள் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை பார்ப்போம்.
நாட்காட்டிகள் விவசாயத்திற்கான பருவமாற்றங்களை எதிர்வுகூறுவதற்காகவே அடிப்படையில் உருவாக்கப்பட்டன. முதலாவது உரோம நாட்காட்டியில் 304 நாட்களே இருந்தன. ( இப்போதைய தை மற்றும் மாசி மாதங்கள் இருக்கவில்லை!)
304 நாட்களைக்கொண்ட நாட்காட்டி சரியாக பருவமாற்றங்களை வருடாந்தம் தராததால் அதில் மாற்றம் செய்யவேண்டிய தேவை ஏற்பட்டது. ( நாட்காட்டி சரியான பருவமாற்றத்தை காட்டாமைக்கான காரணம் பூமி வருடத்தை சுற்ற எடுக்கும் நாட்களான 365 1/4 என்பதை இந்த நாட்காட்டி சரியாக கணிப்பிடவில்லை.)
Numa Pompilius என்ற அரசர் ஜனவரி, ஃபெப்ரவரி (தை, மாசி) என்ற இரு மாதங்களையும் இணைத்து 355 நாட்களைக்கொண்ட புதிய நாட்காட்டியை உருவாக்கினார். எனினும் அதுவும் சரியான பருவமாற்றத்தை காட்டவில்லை. (காரணம், பூமி சுற்றுகைக்கு 10 நாட்கள் வித்தியாசப்பட்டன.)
எனவே, மேலும் ஒரு திருத்தமாக 10 நாட்களைக்கொண்ட Mercedinus எனும் மாதத்தை 13 ஆவது மாதமாக இணைத்தார் பொம்பிலியுஸ். ஆனால், 13 மாதங்கள் என்பது சந்திர சுற்றுகைக்கு பொருத்தமானதாக இருக்கவில்லை.
பின்னர் வந்த அரசர் Julius Caesar (யூலியஸ் சீசர்) அவ் நாட்காட்டியை முற்றாக தவிர்த்து, 13 ஆம் மாதமான மேர்கிறிடினஸில் இருந்து ஒவ்வொரு மாதத்திற்கும் சில நாட்கள் என்ற ரீதியில் 12 மாதங்களையும் 365 நாட்களையும் கொண்ட நாட்காட்டியை உருவாக்கினார். (யூலை என்பது யூலியஸ் சீசரின் பெயரில் இருந்து வந்த மாதமாக கருதப்படுகிறது.) யூலை தான் பிறந்த மாதமாகவருவதனால் அது ஏனைய சில மாதங்களை விட குறைவான நாட்களைக்கொண்டிருப்பதை விரும்பாத சீசர், வருடத்தின் இறுதி மாதமாக விளங்கிய ஃபெப்ரவரியில் இருந்து 1 நாளை எடுத்து யூலையுடன் இணைத்துகொண்டார்! ஃபெப்ரவரிக்கு 29 நாள் ஆனது.
சீசருக்குப் பின் வந்த Augustus (ஒகஸ்துஸ்) தனது பெயரில் ஒரு மாதம் இருக்கவேண்டும் என விரும்பினார். அதனால் தான் பிறந்த மாதத்திற்கு ஓகஸ்ட் என பெயர் மாற்றம் செய்ததுடன்; எனினும் ஓகஸ்டில் 30 நாட்களே இருந்தன, சீசரை விட தான் குறைந்தவன் அல்ல என காட்டுவதற்காக வருட இறுதி மாதமான ஃபெப்ரவரியில் இருந்து மீண்டும் ஒரு நாள் எடுத்துக்கொள்ளப்பட்டது. ஓகஸ்ட் 31 ஆனது, ஃபெப்ரவரி 28 ஆக மெலிந்தது!
புவி சுற்றுகையை சரிசெய்ய 4 வருடங்களுக்கு ஒருமுறை லீப் வருடமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. அதற்கு தேவைப்பட்ட ஒரு நாளை வருடத்தின் இறுதிமாதமாகிய ஃபெப்ரவரியுடன் இணைத்துக்கொண்டார்கள்!
நாட்காட்டியின் தொடக்க மாதமாக மார்ச் (பங்குனி) மாதம் விளங்கியது. ( தொடக்க மாதம் மார்ச் என்பதால் தான் ஜனவரி, ஃபெப்ரவரியை பொம்பிலியுஸ் இறுதியாக சேர்த்துக்கொண்டார்.)
பின்னர், காலப்போக்கில் ஜனவரி மாதத்தை முதலாவது மாதமாக்க வேண்டிய தேவை ஏற்பட்டது!இதனால், ஃபெப்ரவரி இரண்டாம் மாதமாகியது!
இந்த மாற்றம் நடை பெற்றதால்த்தான் Septum (7) Oct (8) Nano (9) Deca (10) எனும் பொருட்பட்ட மாதங்கள் சம்பந்தமில்லாமல் வேறு இடங்களுக்கு மாறியுள்ளன. உதாரணமாக ஏழு எனும் பொருள் படும் september (Septum / sept) சம்பந்தமில்லாமல் 9 ஆவது மாதமாக உள்ளது. ஜனவரி, ஃபெபரவரி இறுதி மாதங்களாக இருந்தபோது september சரியான இடத்தில் இருந்திருக்கும்!
ஆனால், இவ்வாறு படிப்படியாக மாற்றம் பெற்ற ஐரோப்பிய கத்தோலிக்க நாட்காட்டி, அச்சு அசலாக பலவருடங்களுக்கு முன்னர் உருவாக்கம் பெற்ற மதமற்ற தமிழர்களின் நாட்காட்டியை ஒத்து அமைந்துவிட்டது!
இதனால் அதிருப்தியடைந்த போப் 3ஆம் கிரகெரி 1752 ஒக்டோபர் மாதத்தில் சில நாட்களை கழித்து, தற்போது பாவனையில் உள்ள கிரகெரியன் நாட்காட்டியை உருவாக்கினார்!
ஏப்ரல் ஃபூல் எனவும் முட்டாள்கள் தினம் எனவும் அழைக்கப்படும் தினம் தோன்றிய வரலாறும் இது தான்! முன்னர் ஏப்ரல் 1 ஏ வருடத்தின் முதல் நாளாக இருந்தது. பின்னர் ஏற்பட்ட மாற்றங்களால் அது 4 ஆம் மாதமானது. பழையமுறைப்படு ஏப்ரல் 1 ஐ கொண்டாடியவர்கள் முட்டாள்கள் என அறிவிக்கப்பட்டனர்.
-முற்றும்-

வயிற்றுப் புண்ணுக்கு சிறந்தது தேங்காய் பால்


தேங்காய் மருத்துவத்தின் அடையாளச் சின்னம் என்கிறது சித்த மருத்துவம். தேங்காயில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன. புரதச் சத்து, மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு உற்பட்ட தாதுபொருட்கள், வைட்டமின் சி, அனைத்து வகை பி காம்ப்ளக்ஸ் சத்துக்கள் நார்ச்சத்துகள் என உடல் இயக்கத்துக்கு தேவைப்படும் அனைத்துச் சத்துக்களும் தேங்காயில் உள்ளன.
தேங்காய் எண்ணெய் சித்த மருத்துவத்தில் பல்வேறு மருந்துகளில் சேர்க்கப்படுகிறது. தேங்காய் எண்ணெய் எளிதில் ஜீரணமாகும். தேங்காய் எண்ணெயை தீக்காயம் பட்ட இடத்தில் தடவி வந்தால் தீப்புண்கள் குணமாகும்.
கூந்தல் வளர்ச்சிக்கு தேங்காய் எண்ணெய் சிறந்த டானிக். தேமல் ,படை, சிரங்கு போன்ற நோய்களுக்காக தயாரிக்கப்படும் மருந்துகளில் பெருமளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் போது கிடைக்கும் புண்ணாக்குடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து தோல் நோய்களுக்கான மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. தேங்காய் சிரட்டையில்(வெளிப்புற ஒடு) இருந்து தயாரிக்கப்படும் ஒருவித எண்ணெய் தோல் வியாதிகளை குணப்படுத்துகிறது.
தேங்காய்ப்பால் நஞ்சு முறிவாகப் பயன்படுத்தப்படுகிறது-. சேராங்கொட்டை நஞ்சு, பாதரச நஞ்சு போன்றவற்றுக்கு தேங்காய்பால் நஞ்சு முறிவு சிறந்தது. தேங்காய் எண்ணெயைக் கொண்டு தயாரிக்கப்படும் தைலங்கள் பல்வேறு நோய்களுக்கு அருமருந்து.
குழந்தைகளுக்கு தேவையான எல்லா சத்துக்களும் தேங்காய் பாலில் உள்ளன. தேங்காய் பாலில் கசகசா, பால் தேன், கலந்து சாப்பிட்டால் வறட்டு இருமல் மட்டுப்படும். பெருவயிறுக்காரர்களுக்கு( வயிற்றில் நீர் கோர்த்தல்) இளநீர் கொடுத்தல் சரியாகும். தேங்காய் பாலை விளக்கெண்ணெயில் கலந்து கொடுத்தால் வயிற்றில் உள்ள புழுக்களை அகற்றும்.
தேங்காய் பாலில் காரத்தன்மை உள்ளதால் அதிக அமிலம் காரணமாக ஏற்படும் வயிற்றுபுண்களுக்கு தேங்காய் பால் மிகவும் சிறந்தது. உடலுக்குத் தேவையான அமினோ அமிலங்கள் இதில் உள்ளன. இவை உடலின் வளர்ச்சிதை மாற்றத்துக்குப் பெரிதும் உதவுகிறது.

Wednesday, December 30, 2015

Bantureethi koluvu - Hamsanaadham -- Thyagarajaswamy - Nithyasree mahad...

NOHALESHWAR [NOHTA ]SHGIVA TEMPLE DAMOH .MP


This ancient Shiv – temple is situated in NOHTA, District Damoh. This temple is 25 km away from Damoh and 84km from Jabalpur on the Damoh-Jabalpur road. It is believed that this place was called “NAOHATA” after nine “HATA”(market) during the ancient times. This place was once a famous trading center. This temple is known as “MAHADEV” and NOHTESHWAR” the temple was constructed during circa 950-60 A.D. . It is said that the credit for construction of this temple goes to Maharani NOHTA, the wife of king Yuraraj Dev-1 of Kalcuri dynasty. The temple was erected on a high platform. It consists of anchrath, Garbhagriha, Antral, Mandapa and Mukhmandapa the entrance in Mandapa is divided into five in which Gan,Mithun and Curved human figure Lotus stem are depicted the figure of Natesh Shiv in a very artistical manner .there are four main pillars the Mandapa and the Shikhara is small. The Shikhara of Garbhagriha is consisting Amalak.the iconography is more prominent and the depiction og Gaja Lakshmi is very beautiful in these sculptures aesthetic sense and epic is very prominent. The sculptures of Vyala is very interesting , several animals and birds figures are depicted as Vyata in which Gaj and Shuk Vyala are important in addition of this Sculptures of Harihara, Uma Maheshware Shiv Parvati ,Lakshmi Narayan, Brahma, Dikpala( Indra and Vaya) are also depicted. This sculptures of Chakrishwami and Ambika are found among join figures.

உங்களுக்கு தெரிந்திருக்கலாம் அல்லது தெரியாமலிருக்கலாம் ..


1.பூக்களை தொடுத்து கட்டும்போது, இடைவெளி இருக்கக்கூடாது. அப்படி கட்டியுள்ள பூவை கடையில் வாங்காதீர்கள். நீங்களாகவே வாங்கி நெருக்கமாக தொடுத்து அணிந்துகொள்ளுங்கள்.கணவன் மனைவி பிரிவு வராது.
2.செவ்வாய் கிழமையும், வெள்ளிகிழமையும், மனைவியுடன் சண்டை போடாதீர்கள். பணம் காசு குறைவு ஏற்படும். அதுபோல் மனைவிமார்களும் புருஷனுடன் சண்டை போடக்கூடாது.
3.தினசரி காலை எழுந்தவுடன் பார்க்க வேண்டியவை கோவில், கோபுரம், சிவலிங்கம், தெய்வப் படங்கள், நல்ல புஷ்பங்கள், ( நந்தவனங்களில் இருக்கும் மலர்கள்) மேகம் சூழ்ந்த மலைகள், தீபம், கண்ணாடி, சந்தனம், மிருதங்கம், கன்றுடன் பசு, உள்ளங்கை, மனைவி, குழந்தைகள்.
4.வீடுகளில் பூஜை அறை என்று தனியாக வைத்துக் கொண்டிருந்தால் அங்கு தேவை இல்லாத உடைந்த பொருட்களைச் சேர்த்து வைக்காதீர்கள். இது இறை சக்தியைக் குறைக்கும்.
5.அமாவாசை, தவசம் ஆகிய நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.
6.பொதுவாக பெண்கள் நெற்றிக்கு திலகமிடாமல் ( குங்குமம்) பூஜை செய்யக்கூடாது.
7.பெண்கள் பூசணிக்காய் உடைத்தல் கூடாது. இரு கைகளால் தலையை சொரிதல் ஆகாது.
8.கர்ப்பிணி ( பிரசவ காலங்களில்) பெண்கள் தேங்காய் உடைத்தல் கூடாது.
9.வீட்டின் நிலைகளில் ( வாசற்காள்கள்) குங்குமம், மஞ்சள் வைக்க வேண்டும். இதனால் தீய சக்திகளும், விஷப்பூச்சிகளும் வீட்டிற்குள் வராது.
10.நெய், விளக்கு எண்ணெய், வேப்ப எண்ணெய், இலுப்பை எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவை ஐந்தும் கலந்து ஊற்றி 48 நாட்கள் விளக்கேற்றி பூஜை செய்தால், தேவியின் அருளும், மந்திர சக்தியும் கிடைக்கும்.
11.ஏற்றிய விளக்கில் இருந்து கற்பூரத்தையோ ஊதுபத்தியையோ ஏற்றக்கூடாது.
12.வீட்டில் பூஜை அறையில் தெய்வப் படங்களுடன் மறைந்த மூதாதையர் படத்தை சேர்க்காமல் தனியாக வைத்து வணங்கினால், சிறந்த பலன் கிடைக்கும்
13.சனி பகவானுக்கு வீட்டில் எள்விளக்கு ஏற்றக் கூடாது.
14.யாராவது தூங்கிக் கொண்டிருக்கும்போது காலை, மாலை வேளைகளில் விளக்கேற்றக்கூடாது. தூங்குபவர்கள் எழுந்த பிறகுதான் விளக்கேற்ற வேண்டும். தூங்குபவர்களின் தலைக்கு நேராக தேங்காய் உடைக்கக் கூடாது.
15.பூஜையின்போது விபூதியை நீரில் குழைத்து பூசக் கூடாது. தீட்சை பெற்றவர்கள் மட்டுமே விபூதியை நீரில் குழைத்து பூசலாம்.
16.பூஜை அறையில் வழிபாடு முடிந்ததும் இடது நாசியில் சுவாசம் இருக்கும்போது பெண்கள் குங்குமம் இட்டுக் கொண்டால் மாங்கல்ய விருத்தி ஏற்படும்.
17.விரத தினத்தில் தாம்பூலம் தரித்தல், பகல் உறக்கம், தாம்பத்திய உறவு, சண்டையிடுதல் கூடாது.
18.ஈர உடையுடனும், ஓராடையுடனும், தலைகுடுமியை முடியாமலும், தலையிலும், தோளிலும் துணியை போட்டுக் கொண்டோ, கட்டிக் கொண்டோ வழிபாடு செய்யக் கூடாது.
19.தேங்காய் இரண்டுக்கு மேற்பட்ட துண்டுகளாக உடைந்தால் அதை தெய்வத்திற்கு நிவேதனம் செய்யக்கூடாது.
20.புழுங்கல் அரிசியால் சமைக்கப்பட்ட உணவை தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
21.தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யும்போது வெற்றிலை மற்றும் பாக்குகளை இரட்டைப்படை எண்ணிக்கையில் (2, 4, 6, 8, 10) வைக்க வேண்டும்.
22. பூஜைக்கு உபயோகிக்கும் பாக்கு, வெற்றிலை அனைத்து வகை பழங்கள், பூக்கள், தர்ப்பங்கள், ஸ்மித்துகள் போன்றவற்றை பூமியில் நேரடியாக வைக்கக் கூடாது. தட்டு போன்ற பொருட்களின் மீது வைக்க வேண்டும்.
23.வலம்புரிச் சங்கு வைத்திருக்கும் வீட்டில் வற்றாத செல்வம் வந்து சேரும். ஏனெனில் வலம்புரிச் சங்கிலே மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது மகான்களின் கூற்று. பல மகோன்னதம் ஒரு வலம்புரிச் சங்கிற்கு உண்டு.
24.செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் வெண்ணை உருக்கக் கூடாது. காரணம் மேற்படி கிழமைகளில் லட்சுமிக்கு உகந்தவை ஆதலாலும் வெண்ணையில் மகாலட்சுமி இருப்பதாலுமே வெண்ணை உருக்கக் கூடாது என்பார்கள்.
25. உறவினர்களை வெளியூர் செல்ல வழியனுப்பிய பிறகு பூஜை, முதலியவைகளை செய்யக் கூடாது.
26.பெண்கள் வகிடு ஆரம்பத்தில் குங்குமப் பொட்டு கட்டாயம் வைக்க வேண்டும். ஸ்ரீமகாலட்சுமியும், அம்பாளும் வகிட்டில்தான் நிரந்தர வாசம் செய்வதால் சுமங்கலிகளுக்கு சகல சவுபாக்கியங்களையும், மங்கலத்தையும் அளிப்பார்கள்.
27.வீட்டில் அரளி பூச்செடி வளர்ப்பது மிகச் சிறப்பு. காலையில் எழுந்ததும் அரளி பூச்செடியைத் தரிசிப்பதால் நம் தீவினைகள் மறையும். தானம் கொடுக்கும்போது சிறிது அரளி தானம் கொடுக்க வேண்டும். அரளியோடு தரப்படாத தானம் வீண்.
28.வெற்றிலை நுனியில் லட்சுமியும், மத்தியில் சரவஸ்தியும், காம்பில் மூதேவியும் வாசம் செய்வதாக ஐதீகம். எனவே வெற்றிலைக் காம்பை கிள்ளி விட்டு வெற்றிலையைக் கழுவிய பின் பூஜைக்கு வைக்க வேண்டும்.
29.வெற்றிலையின் நுனிப்பாகம் சுவாமிக்கு இடது புறம் வருமாறு வைக்க வேண்டும். அப்போது வெற்றிலையின் காம்புப் பகுதி சாமிக்கு வலதுபுறம் இருக்கும்.
30.செல்வத்திற்குரிய தெய்வங்களான வெங்கடாஜலபதி, லட்சுமி, குபேரன் ஆகியோர்களுக்கு செல்வத்தை வாரி கொடுப்பவரே பரம்பொருள் ( சிவபெருமான்) ஒருவரே ஆவார் படங்களை வீட்டின் வெளிப்புறம் பார்த்து இருக்குமாறு மாட்டக்கூடாது.
31.நிவேதனம் செய்த தேங்காயை சமையலில் சேர்த்து அந்த உணவை மறுபடியும் சாமிக்கு நிவேதனம் செய்யக்கூடாது.
32.அன்னம் முதலியவற்றை எவர்சில்வர் பாத்திரங்களில் நேரடியாக வைத்து தெய்வங்களுக்கு நிவேதனம் செய்யக்கூடாது. பாத்திரத்தில் இலை வைத்து அதில் உணவை வைத்து நிவேதனம் செய்யலாம்.
34.தனது வீட்டில் கோலம் போடாமலும் விளக்கேற்றாமலும் ஆலயங்களுக்கு செல்லக்கூடாது.
35.சாமி படங்களில் உள்ள உலர்ந்த பூக்களை வீட்டில் வைக்கக் கூடாது..
நன்றி .....

அமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன் ஞானசேகரன், யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் அளவெட்டியைச் சேர்ந்த பெற்றோருக்குப் பிறந்த மகீசன் ஞானசேகரன் அமெரிக்கக் குடியரசுத் தலைவரை நேரில் சந்திக்கும் பேறுற்றார்.
அமெரிக்கக் குடியரசுத் தலைவரைச் சந்திக்கவுள்ள மகீசன் ஞானசேகரன், யாழ்ப்பாணம், அளவெட்டி, அச்சுவேலியைப் பிறப்பிடமாகக் கொண்டு, இப்பொழுது அமெரிக்காவின் நியூ சேர்சியில் (New Jersey) வசிக்கும் ஞானசேகரன்-நிர்மலா இணையரின் மகனாவார்.
அனைத்து உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு இடையிலான கல்வித்திறன், சமூகப்பணி ஈடுபாடு, மற்றும் மாணவ தலைமைத்துவம் ஆகிய பல்துறைத் தெரிவுப் போட்டிகளை 2015ஆம் ஆண்டுக்காக நியூ சேர்சிக் கல்வித் திணைக்களம் நடாத்தியது. அனைத்துத் துறைகளிலும் மகீசன் ஞானசேகரன் முதல் இடங்களைப் பெற்றார்.
அமெரிக்க குடியரசுத் தலைவர் பராக்க ஒபாமா Barack Obama சிறப்பிக்கும் நிகழ்வில் பங்கேற்க 2016 பங்குனி 5ம் நாள் அமெரிக்கத் தலைநகரில் (Washington D.C .) அமைந்துள்ள வெள்ளை மாளிகைக்கு (White House) அழைத்துள்ளனர்.
உயர்கல்விப் பெறுபேறு மற்றும் மாணவத் தலைமைத்துவத் திறன் அடிப்படையில் தெரிவு செய்து அமெரிக்க குடியரசுத் தலைவர் சிறப்பிக்கும் முதல் தமிழ் மகன் என்ற பெருமையும் புகழும் மகீசன் ஞானசேகரன் ஊடாக யாழ்ப்பாண மண்ணுக்கு சென்றடைகிறது.
அமெரிக்கத் தலைநகரில் தங்கியிருக்கும் ஒரு வார காலத்தில் மகீசன் ஞானசேகரன் அமெரிக்க குடியரசுத் தலைவர், மாநில அவை, நாடாளுமன்றம் Senators, House of Representatives ஆகியவற்றின் உறுப்பினர், உயர்மட்ட அரசியல் வல்லுனர்களைச் சந்திப்பார். மாணவத் தலைமைத்துவத் திறனின் சிறப்பு மற்றும் மாணவர்களின் உயர்கல்வி தொடர்பாகக் கலந்துரையாடுவார்.
அண்மையில் நியூ ஜெர்சியில் நடந்த பல்கலைக்கழகத் தெரிவுப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மகீசன், அமெரிக்க டாலர் $ 5000 பல்கலைக் கழக புலமைப்பரிசிலுக்கும் உரித்துடையவராகி, உலகின் முன்னிலைப் பல்கலைக்கழகங்களில் ஒன்றான பிரின்சுடன் பல்கலையில் Princeton University யில் நான்கு ஆண்டுகாலப் பட்டப்படிப்பை தொடரவுமுள்ளார்.
மகீசன் போன்ற திறமையுள்ள தமிழ் மாணவர்கள் புலம் பெயர் நாடுகளில் மென்மேலும் உருவாகி எமது தாய் நாட்டுக்கும் தமிழ் மண்ணுக்கும் பெருமை சேர்த்துத் தர ஆண்டவனை வழிபடுகின்றோம்.

Shirdi Sai Baba Madhyan (Afternoon) Aarti by Pramod Medhi in Marathi wit...

The Social Network


Adapted by Aaron Sorkin from the book The Accidental Billionaires by Ben Mezrich, The Social Network is a 2010 biographical drama directed by David Fincher and starring Jesse Eisenberg, Andrew Garfield, Armie Hammer and Justin Timberlake.
It's 2003 and 19-year-old Harvard University student Mark Zuckerberg (Eisenberg) has just been dumped by his girlfriend (Rooney Mara). Pissed off, he creates a website, hacks into the university database and publishes photos of female students for visitors of the site to vote on. The site is so popular, it crashes the network but also brings Zuckerberg to the attention of the Winklevoss twins (Hammer), who invite him to work on a university social site they they are developing. Zuckerberg, however, decides to also work on his own website and approaches his friend Eduardo Saverin (Garfield) for funding, calling his site The Facebook. Within months, the site becomes highly popular amongst students and soon other universities join in, which causes the Winklevoss twins to feel like their idea has been stolen. Not much later, Zuckerberg and Saverin meet Napster co-founder Sean Parker (Timberlake), who spreads the word about The Facebook in silicon valley and even suggests to drop the "The" to make the name more catchy and it's for long that the website starts to turn into a global sensation. But success also brings about greed and as the site starts making serious money, Zuckerberg finds himself losing friends and involved in legal disputes, which, along with the money, seriously alter his personal life.
The Social Network's main asset is it stunning script by Aaron Sorkin, which not only seemingly effortlessly chronicles the rise of Facebook as well as the effects its rapid growth had on those involved, but also is filled with sharp and stunning dialogue. Meanwhile, David Fincher directs the hell out of this movie and it easily ranks amongst the director's best works, which, in his case, says a lot. Add to that a solid cast who all bring their a-game and stunning moody cinematography by regular Fincher cinematographer Jeff Cronenweth, sharp editing and a great soundtrack by Trent Reznor and Atticus Ross and you easily have one of 2010's best movies. The Social Network was nominated for eight Academy Awards, winning three for Best Adapted Screenplay, Editing and Soundtrack, six Golden Globes, winning four for Best Director, Screenplay, Score and Dramatic Film, six BAFTA Awards, winning three for Best Director, Editing and Screenplay and a seemingly endless slew of international awards from many award ceremonies, festivals and critics' circles worldwide. Perhaps not one of the most accurate biographical features, The Social Network nonetheless remains of the most enjoyable and accomplished.