Search This Blog

Wednesday, February 12, 2014

யௌவனம்

கே.எஸ்.சுதாகர











கோட்டைப் புகையிரத நிலையம் ஒரே ஆரவாரமாக இருந்தது. இவன் சன நெரிசலில் முண்டியடித்துக் கொண்டு புகையிரதத்தினுள் ஏறிக்கொண்டான். 'ஹாண்ட் பாக்'கை மேலே வைத்துவிட்டு 'கோணர் சீற்'றைக் கைப்பற்றிக் கொண்டான். இருக்கும் இடம் வசதியானதும் சுற்றுமுற்றும் பார்த்தான். இவனது இருக்கையின் அருகருகே இரண்டு வயது முதிர்ந்தவர்கள். எதிராக இருந்த மற்ற 'கோணர் சீற்'றில் வாட்ட சாட்டமான ஒரு இளைஞன். அவன் தனது பார்வையை வெளியே எறிந்துவிட்டுக் காத்திருந்தான். அந்த எறிதலில் ஏதோ விஷேசம்  இருப்பது கண்டு இவனும் அத்திசை நோக்கினான். புகையிரதத்திற்கு வெளியே அழகிய ஒரு இளம் பெண். அவள் அருகே பையன் ஒருவனைத் தூக்கி வைத்திருந்தபடி சேலை அணிந்த இன்னொரு வயது முதிர்ந்த பெண்.

 அந்த இளம்பெண் ஒரு கலைப்படைப்பு. அப்படித்தான் இருக்க வேண்டும். அடிக்கடி சட்டையை மேலும், பாவாடையைக் கீழும் இழுத்து விட்டுக்கொண்டாள். இரட்டைப் பின்னலைத் தூக்கிப் பின்னாலே எறிந்து கொண்டாள். இரட்டைப் பின்னலுக்கு தப்பிய முடி, புகையிரத நிலையத்தின் செயற்கை ஒளியில் பொன்னிறமாகத் தகதகத்து காற்றினில் துடித்துக் கொண்டிருந்தது. பொக்கற்றுக்குள்ளிருந்த 'லிப்ஸ்டிக்'கை எடுத்து உதட்டருகே கோடிழுத்துக் கொண்டாள். உதடுகளை மேலும் கீழும் அசைத்து சப்புக்கொட்டி அழகு காட்டினாள். மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு இருபது இருபத்திரண்டு வயது இருக்கலாம்.

 இவன் தனது கைக்கடிகாரத்தைப் பார்த்தான். புகையிரதம் புறப்படுவதற்கு இன்னமும் இரண்டோ மூன்று நிமிடங்கள் தானிருந்தன. புகையிரதம் கொஞ்சம் தாமதித்துப் புறப்பட்டால் நல்லது போல இருந்தது. அவளைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். மனம் பரபரப்படையத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் அவள் மறைந்துவிடுவாள்.

 புகையிரதம் புறப்படுவதற்காகக் கூவியது. அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது. சேலை அணிந்திருந்த பெண் - அந்த இளம்பெண்ணைத் தேற்றுவது போலவும், அவள் ஏதோ சிணுங்கிச் செல்லம் கொஞ்சுவது போலவும் தெரிந்தது. புகையிரதம் புறப்பட ஆயத்தமானதும் - பையனை அந்த இளம் பெண் அவளிடமிருந்து வாங்கிக்கொண்டாள். சேலை அவளைக் கட்டித் தழுவிக்கொண்டது. மறுகணம் பிள்ளை – பிள்ளையைத் தூக்கிக்கொண்டு சிட்டாகப் பறந்து வந்து புகையிரதத்தில் ஏறிக்கொண்டது. இவனுக்கு எதிராக மூலைக்குள்ளிருந்தவன் எழுந்துகொள்ள – அவள் அந்த இடத்தை நிரப்பினாள். இருவரும் ஒருமுறை ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். அசப்பில் அவள் அண்ணனைப் போன்றிருந்த அவன், அந்தச் சிறுவனின் கன்னங்களைத் தடவிக்கொண்டே விறுவிறெண்டு இறங்கிப் போனான். அவள் கண்கள் அழுதுவிடுமாப்போல் கண்ணீர் ததும்பி நின்றது.

 கீழே இறங்கிக் கொண்ட அவனும், சேலை அணிந்த பெண்ணும் 'பாய்' என்று அவளிற்கு கை காட்டினார்கள். புகையிரதம் புறப்பட்டது.

 எந்த தேவதையின் கடைக்கண் பார்வை விழாதோ என ஏங்கினானோ – அந்த தேவதை இப்பொழுது வரம் கொடுப்பதற்காக இவனின் முன்பாக கறுப்பு என்றாலும் பளிங்கு போன்ற படிகம். முகத்திலே ஒரு தனிக்கவர்ச்சி. அவளின் தோடு - இன்னமும் தோணி போல காதிலே ஆடிக்கொண்டிருந்தது. இலவச அழகை தாராளமாக அள்ளிப் பருகிக் கொண்டான்.

 பிரயாணம் எந்தவித கஸ்டமுமின்றி இருக்கவேண்டுமென இவன் வேண்டிக் கொண்டான். இவனிடம் அரச அலுவலகத்தில் வேலை செய்வதற்கான அத்தாட்சி இருந்த போதிலும் உள்ளூர ஒரு பயம். மோப்ப நாய்களுக்கு முகரும் சக்தி போல. முகமூடிகளுக்கும் இராணுவத்துக்கும் அப்பாவித்தமிழர்களைக் கண்டுபிடிக்கும் வல்லமை அதிகம். போனதடவை கூட வவனியாவிலிருந்து கொழும்பிற்கு வரும்போது மூன்று நான்கு தமிழ் இளைஞர்களை குருநாகலில் இறக்கி இராணுவத்தினர் கொண்டு போனார்கள்.

 இவனிற்கு அருகே இருந்தவர்கள் தாங்கள் கொண்டுவந்திருந்த பேப்பரை வாசிக்கத் தொடங்கினார்கள். சிங்களப் பேப்பர். எதிரே இருந்த அவள் 'இவனை' ஒருதடவை பார்த்துவிட்டு, குழந்தையை மடி மீது சௌகரியமாக இருத்திக் கொண்டாள். இவன் செக்கச் செவேல் என்ற தோற்றம். 'கிளீன் Nஷவ்'. முறுக்கேறிய உடல். ஏதோ ஒரு உயர் அதிகாரியாக இருக்க வேண்டும். இவன் தன் கால்களைப் பக்கவாட்டில் நீட்டி அவள் சௌகரியமாக இருக்கும் பொருட்டு வழி சமைத்தான். சிறு பையன் சோர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். புகைவண்டி சட்டங்கள் மீது தனது தலையைச் சாய்த்து எங்கோ தொலைவில் மலையிடுக்கை நோக்கி அவளது பார்வை நீண்டு போனது. மலைத்தொடருக்கு மேலால் முகில்கூட்டங்கள் விரைந்து சென்றன. அவள் கண்களில் ஏக்கமும் சிந்தனையும் குடிகொண்டு இருந்தன. அவள் கூட ஒரு மழை முகில்தான்.

 அவள் யார்? சிங்களப் பெண்ணா அல்லது தமிழ்ப்பெண்ணா?

 ரயில் பூமி அதிர கடகடத்தபடி ஓடிக்கொண்டிருந்தது. ரயிலில் குலுக்கத்தில் - சிலவேளைகளில் அவளின் கால்கள் இவன் மீது பட்டு விலகின. குளிர்ந்த பஞ்சிலாலான ஒரு உரசல். அந்தப் பொழுதெல்லாம் ஒரு 'ஜென்டில்மன்' ஆக இவன் நடந்துகொண்டான். இருப்பினும் அவன் மனதினுள்ளே ஒரு மிருகத்தின் பாதச்சுவடுகள் உள்ளே நுழைய எத்தனித்துக் கொண்டிருந்தன.

 வெளியே இருட்டி விட்டிருந்தது. ராகம – பொல்காவெல போன்ற இடங்கள் தாண்டி விட்டன. உள்ளே சில விளக்குகள் மாத்திரம் எரிய பெரும்பாலானவர்கள் தூங்கி வழிந்துகொண்டிருந்தார்கள். அவள் இவனை ஒரு தடவை பார்த்துவிட்டு, ஜன்னலின் முன்னால் இருந்த சட்டத்தை இழுத்துவிட்டாள். புற உலகக் காட்சிகள் மறைந்தன.

 'ஜனகன். புhலைக் குடிச்சிட்டுப் படு' தனது மகனை அழகு தமிழில் கூப்பிட்டாள். தமிழ்! தமிழ்ப்பெண்!! அந்தச் சிறுவன் பேந்தப் பேந்த விழித்து பால் போத்தலை வாயினுள் வைத்து உறுஞ்சினான். சற்று நேரத்தில் இருவரும் உறக்கத்திற்குப் போய் விட்டார்கள். இவன் தனது வலது கையை மடக்கி தலையணையாக்கி உறங்க முயற்சித்தான்.

 உறக்கம் வரவில்லை. அவளை மேலும் கீழும் ஒவ்வொரு அவயவமாகப் பார்த்தான். கண் மூடி ஒரு மெருகுச்சிலை போல அவள் இருந்தாள். அவளின் எடுப்பான தோற்றமும், கிளர்ச்சியைத் தூண்டும் பருவ மொக்குகளும் இவனை அவளின்பால் ஈர்த்தது. கீறிப் பிளந்து விட்ட உதடுகளில், லிப்டிக்ஸ்கின் சாயம் வைரத்தில் பட்டுத் தெறிக்கும் ஒளியென மின்னியது. அவள் பாதங்கள் செருப்பை விட்டு வெளியே வந்து இவனுக்காகவே காத்துக் கிடந்தன. கொழுத்த குட்டிக் குட்டி விரல்கள். ஒரு விரலிலே 'மெட்டி'. அதன் வெண்ணிற ஒளி இவனை 'வா' என்று சமிக்கை செய்தது. இளமையின் மதர்ப்பில் உடல் சிலிர்த்து உன்மத்தம் கொண்டது. ஒட்டகம் இவனது கூடாரத்தினுள் கேட்பாரற்று நுழையத் தொடங்கியது.

 எவ்வளவு நேரந்தான் வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருப்பது! ஆமை தன் ஓட்டிற்குள்ளிருந்து அவயவங்களை வெளியே நீட்டி அவள் விரல்களிற்கு கொக்கி போட்டது. சங்கமித்ததில் அவன் உடல் மெல்ல நடுங்கத் தொடங்கியது. மனச்சாட்சி உறுத்த, அறிவு மழுங்கி உணர்ச்சி கொப்பளித்துப் பாய்கிறது. அவள் பேய்த் தூக்கத்தில் ஆழ்ந்து கிடந்தாள்.

 இவனது அங்க சேஷ;டைகள் ஒவ்வொரு படி நிலையாக உயர்ந்தது. ஒரு நிலையில் அவள் இருக்கையில் அங்கும் இங்கும் நெளிந்து விழித்தெழுந்தாள். இவன் கண்களை இறுக மூடிக்கொண்டான். சற்று நேரத்தில் மெதுவாக கண்களை இவன் திறந்த போது – அவள் ஒன்றுமே நடவாதது போல இவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவளின் அந்தச் செய்கை இவனுக்கு விசித்திரமாக இருந்தது. தனக்கு உடன்பாடாக இருப்பது போலவே உணர்ந்து கொண்டான். அப்போது நேரம் இரவு ஒரு மணியைத் தாண்டியிருந்தது.

 மேலும் அத்தகையதொரு சுகமான வாசிப்பிற்காகக் காத்திருந்தான். இரண்டாம் ஜாமப்பொழுதில் மீண்டும் தன் திருவிளையாடலை ஆரம்பித்தான். முற்றாக விளக்குகள் அணைந்திருந்தன. எங்கும் இருள். அந்தத் தடவை அவள் கண்களைத் திறந்து கொள்ளவேயில்லை. எந்தவித புறக்கணிப்பும் இல்லாமல் ஒரு அசைவற்ற ஜடம் போல பொறுமையாக சகித்துக்கொண்டாள். தனது முயற்சியில் தோற்றுப் போய் வலிந்த ஒரு கனவுக்குள் இவன் நழுவினான். கனவின் புலத்தில் அந்த அதிசய இரவில் அவளுடன் உறக்கம் கொண்டான்.

 திடீரென இவனை யாரோ தொடுவது போல் இருக்க மெல்ல விழித்துக் கொண்டான். அவள் இவனது கால்களைச் சீண்டி விளையாடிக்கொண்டிருந்தாள். மெதுவாக விழி உயர்த்தி அவளைப் பார்த்தான். அவள் எங்கோ சிந்தனையில் இருப்பவள் போல காணப்பட்டாள்.

 இரவின் நீட்சியில் இயற்கை அவர்கள் இருவரையும் வென்றது.

 வெளியே இருள் விலகத் தொடங்கியிருந்தது. புகையிரதம் மாகோ, அனுராதபுரம் போன்ற இடங்களைத் தாண்டி மதவாச்சியை எட்டிப் பிடிக்க ஓடிக்கொண்டிருந்தது. ஜன்னல் சட்டங்களிற்குள்ளால் செந்நிற ஒளி உள்ளே கசியத் தொடங்கியது. அவள் சட்டங்களை மீண்டும் மேல் உயர்த்தினாள். தக தகத்த செந்நிறச் சூரியன் வானத்தை மெல்ல எட்டிப் பார்த்தான். அவள் முகம் ஒளியில் சிவந்து ஒரு சௌந்தர்ய தேவதை போலக் காட்சி தந்தது. குருவிகளின் கீச்சிட்ட சத்தம் உள்ளே வந்து காதை எட்டியது.

 அவள் ஒரு கையில் பிள்ளையை அணைத்தபடி மறுகையை புகையிரதத்திற்கு வெளியே தொங்க விட்டாள். இவனும் தனது கையை வெளியே நீட்டினான். குளிர்ந்த காற்று இருவரது கைகளையும் வருடிச் சென்றது. இவன் சட்டென்று அவளது கரத்தைப் பற்றிக் கொண்டான். இருவருது கைகளும் ஒன்றையொன்று தழுவின. உணர்வின் வெப்பம் உடல்களை ஊடுருவின. இரண்டு குளிர்ந்த கால்கள் இவன் முழங்காலை முறுக்கின. திடீரென ஏதோ நினைத்தவாறு அவள் தன் கையை உள்ளே எடுத்துக் கொண்டாள்.

 இந்தப் பயணம் இனி எதில் போய் முடியும்?

 அருகே இருந்தவர்கள் மெல்ல விழிப்படையத் தொடங்கினார்கள். ஒரு சிலர் தாம் கொண்டுவந்திருந்த பொதிகளை மேலிருந்து இறக்கத் தொடங்கினார்கள்.

 ஈரப்பெரியகுளத்தில் ஒரு சில இராணுவவீரர்கள் புகையிரதத்தினுள் ஏறிக்கொண்டார்கள். அவள் ஊர் போய்ச் சேரும் வரைக்கும் - இவன்தான் அவளுக்கு 'கார்டியன்'. அவளது தூக்கியடிக்கும் அங்க அசைவுகளில் சொக்கி, மீண்டும் மீண்டும் அவளைச் சீண்டினான். அவள் ஒன்றுமே நடவாதது போல தன்னைக் காட்டிக் கொள்ள முயன்றாள்.

 இவனது தொடர்ந்த செய்கைகள் அவளிற்கு இப்போது கோபத்தையும் எரிச்சலையும் ஊட்டியது. உணர்ச்சியற்ற ஜடம் போல இருந்த அவளது உடல் எதனாலோ ஒருமுறை குலுங்கியது. கண்களில் நீர் திரண்டது. வெறுப்பைக் கக்கும் விழிகளால் இவனை உற்றுப் பார்த்தாள். 'தூ' என்று காறி உமிழ்ந்து ஜன்னலிற்கு வெளியே துப்பினாள். 'இனி என்னைத் தொடாமல் இரு' என்ற எச்சரிக்கையுடன் எச்சில் நிலத்திலே விழுந்தது.

 ஒரு சிறங்கை எச்சிலால் இந்த மனித மனங்களை அடக்க முடியுமா?

 இவன் திடீரென்று அதிர்ச்சிக்குள்ளானான். அவளது அந்த அதிர்ச்சி வைத்தியம் - இவனது அவயவங்களை உள்ளிளுத்து ஒடுங்கச் செய்தது. இதுவரையும் அப்படி நடந்து கொண்டவள் திடீரென்று ஏன் இப்படி மாற வேண்டும்? ஏமாற்றம் கொண்டான். அவளின் அந்தச் செய்கையானது – வடபகுதியின் எல்லைவரை தொட்டு வந்த யாழ்தேவி, வவனியா வரை தனது சேவையை நிறுத்தியது போல இருந்தது.

 புகையிரதம் வவனியாவில் தரிப்பதற்கு முன்பதாகவே அவசர அவசரமாக இருக்கையைவிட்டு எழுந்து கொண்டாள் அவள். 'பாக்'கை தோளிலே மாட்டிக் கொண்டாள். பையனைத் தூக்கி இடுப்பிலே இருத்திக் கொண்டாள். விழுந்துவிடுமாப் போல் தள்ளாடி நடந்து கதவருகே போய் நின்றுகொண்டாள். இவனிடமிருந்து எவ்வளவு விரைவாக தப்பித்துக் கொள்ளலாம் என்பதில் அவள் கவனம் இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் இறங்கி சனங்களின் மத்தியில் கலந்துகொண்டாள்.

 இவன் விரைவாகப் புகையிரதத்திலிருந்து குதித்து அவளை அங்குமிங்கும் தேடினான். அப்பொழுது அவள் ஸ்ரேசனின் உட்புறமிருந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். இவன் விரைவாக நடந்து ஸ்ரேசன் வளவிற்குள் நின்ற அரசமரத்தின் பின்னால் ஒதுங்கினான். முன்னே விரிந்து சென்ற பாதை வழியே நடந்து கொண்டிருந்த அவள் - ஒரு தடவை நின்று தன்னை யாராவது பின் தொடருகின்றார்களா எனப் பார்த்துவிட்டு நடக்கத் தொடங்கினாள்.

 'பாரடா தம்பி! உதிலை போறது அகிலாதானே?' அரசமரத்தின் வேரிலே குந்தியிருந்த வயது போன ஒரு முதியவர், தனக்குப் பக்கத்திலே நின்ற சை;ககிள்காரப் பெடியனிடம் கேட்டார்.

 'ஓம் அப்பு!' என்றான் அவன்.

 இவன் முதியவருக்குப் பக்கத்தில் வந்து, 'ஐயா! உங்களுக்கு அந்தப் பெண்ணைத் தெரியுமா?' என்றான்.

 முதியவர் இவனை மேலும் கீழும் பார்த்துவிட்டு,

 'பாவமடா பெடிச்சி! இப்ப நாலைஞ்சு வரிசமா பிள்ளையோடை புருஷனைத் தேடி, கொழும்பு அங்கை இஞ்சையெண்டு அலையுறாள். கொழும்புக்குப் போன இடத்திலை வெள்ளை வானிலை வந்தவங்கள் பிடிச்சவங்கள். இன்னமும் வச்சிருக்கிறான்களோ அல்லது சுட்டுப் போட்டான்களோ ஆருக்குத் தெரியும்! ஒரு சோலி சுரட்டுக்கும் போகாத அப்பாவி அவன்' என்றார்.

 பின் ஏதோ எண்ணம் கொண்டு, 'அவளுக்கு அவள் புருஷன் - வாழ்க்கையிலை ஒரு மின்னலைப் போல' என்றார்.

 முதியவரின் பேச்சில் இவன் திகைத்துப் போனான். ஒருவேளை புகையிரதத்தினுள் நடந்தது கூட அவளின் ஒரு 'தற்காப்பு' முயற்சியோ என்று இவனை சிந்திக்க வைத்தது.

 அவள் போன வழியே – ஆனால் சற்றுத் தாமதித்து - இவனும் நடக்கலானான். அவள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு பாதச்சுவடும் இவன் நெஞ்சை அழுத்தியது. தம்மைத்தாமே எல்லா வகையிலும் மேம்பட்டவர்களாகக் காட்டிக்கொள்ளும் இந்த உலகத்தில் - மன்னுப்புக் கேட்கும் திராணியற்று – அவளின் பின்னாலே நடந்து கொண்டிருந்தான். அவளது இடுப்பிலே தொங்கிய பையனின் கால்கள் இவனது மனத்தைப் போல இருபுறமும் ஆடிக்கொண்டிருந்தன.

 அடுத்து வந்த சந்தியில் அவள் மேற்குப் புறமாகவும் - இவன் கிழக்குப் புறமாகவும் பிரிந்து சென்றார்கள். 

மெமரிகார்ட் பற்றிய சில தகவல்கள் ? ? ?

மெமரிகார்ட் என்றால் Dataக்களை பதிந்து வைக்க பயன்படும் ஒரு நினைவக அட்டை என்றும் அது 4,8,16,32GB என்ற அளவுகளில் கிடைக்கிறது இது மட்டும்தான் நாம் மெமரிகார்டை பற்றி தெரிந்து வைத்திருக்கும் விடயம் .
சரிதானே ?

சரி அப்படியென்றால் ஏன் ஒரே அளவுள்ள மெமரிகார்ட் (4GB) பல தயாரிப்பாளர்களால்
வெவ்வேறு விலைகளில் விற்கப்பட வேண்டும் என யாராவது சிந்தித்தீர்களா ?
(வெல கம்மியா கடச்சா வாங்கிட்டு போய்கிட்டே இருக்கனும் பாஸ் அத வச்சு ஆராய்ச்சி எல்லாம் பன்னப்படாது ) என்று ஒரு போதும் இருந்துவிடாதீர்கள் ஏனென்றால் நாம் டிஜிட்டல் உலகத்தில் இருந்து கொண்டிக்கிறோம் அதைப்பற்றிய அரிவை நாம் பெற்றிருப்பது முக்கியம்
மெமரிகார்டில் கவனிக்க வேண்டிய விஷயம் என்ன்வெனில்
மெமரிகார்டில் அதனிடைய தயாரிப்பு நிறுவனத்தின் பெயருக்கு கீழ் 4,6,8,10 என்ற எதாவது ஒரு எண் குறிப்பிட்டு அதில் ஒரு வட்டமிட்டு காட்டப் பட்டிருக்கும் இதுதான் இந்த விலை பட்டியலுக்கு காரணம் ஆனால் இதனை அதிகம் நபர்கள் தெரிந்து வைத்திருப்பதில்லை.
இவ்வாறு வட்டமிட்டு காட்டப்பட்டுள்ள எண் அந்த memory cardனுடைய class என்று குறிப்பிடப்படுகிறது அது ஒவ்வொரு மெமரிகார்டின் data transfer speedஐ குறிக்கும் code ஆகும் 4என்ற எண் எழுதப்பட்டு வட்டமிடப்பட்டு இருந்தால் அது நொடிக்கு 4MB வேகத்தில் fileஐ transfer செய்யும் தன்மையை பெற்றிருக்கும்

class 6 - 6MB per second
Class 8 - 8MB per second
Class 10 - 10MB per second என்ற வேகத்தில் dataக்களை பரிமாறிக்கொள்கிறது
இதை வைத்துதான் இதனுடைய விலை நிர்ணயிக்கப்படுகிறது என்பது இதை விற்கும் பல வியாபாரிகளுக்கே தெரியாது

நீங்களும் இதனை share செய்வதன் மூலம் உங்களை கொண்டு பல நபர்கள் இதனை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் என்பதால் share செய்யுங்கள்

Posted by
Aashy

Wednesday, February 5, 2014

The History of the English Language, Animated

by Maria Popova
“The Sun never sets on the English language.”
The history of language, that peculiar human faculty that Darwin believed was half art and half instinct, is intricately intertwined with the evolution of our species, our capacity for invention, our understanding of human biology, and even the progress of our gender politics. From the fine folks at Open University — who previously gave us these delightful 60-second animated syntheses of the world’s major religions, philosophy’s greatest thought experiments, and the major creative movements in design — comes this infinitely entertaining and illuminating animated history of the English language in 10 minutes:
Complement with these 5 essential reads on language and the only surviving recording of Virginia Woolf’s voice, in which she explores the beauty of the English language.

thanks  http://www.brainpickings.org

இராவணன் உபதேசம்

 
மரணப் படுக்கையிலிருந்த ராவணனிடம், இராமன், பவ்யமாக அவன் காலடியில் நின்று, "உங்கள் ஞானம் உங்களோடு அழிந்து விடக் கூடாது , என் மூலம் இந்த உலகம் பயன் பெற உங்கள் ஞானத்தை உபதேசிக்க வேண்டும்" என உபதேசம் வேண்டினான். இராவணன் உபதேசித்தான் ........ 1 . உன் சாரதியிடமோ , வாயிற் காப்போனிடமோ, சகோதரனிடமோ பகை கொள்ளாதே . உடனிருந்தே கொல்வர். 2 .தொடர்ந்து நீ வெற்றிவாகை சூடினாலும் , எப்போதும் வெல்வோம் என எண்ணாதே . 3 .உன் குற்றங்களை சுட்டிக் காட்டும் நண்பனை நம்பு . 4 .நான் அனுமனை சிறியவன் என எடைபோட்டது போல் , எதிரியை எளியவன் என எடை போட்டு விடாதே . 5 . வானின் நட்சத்திரங்களை வளைக்க முடியும் என நம்பாதே , ஏனெனில் அவை உன் வழிகாட்டிகள். 6 . இறைவனை , விரும்பினாலும் மறுத்தாலும் ,முழுமையாகச் செய் . Tamil Selvi

Scientists create bone-like material that is lighter than water but as strong as steel

Details -- A new material has been developed, which is said to be lighter than water and stronger than steel. The bone-like stuff was created by Jens Bauer at the Karlsruher Institute of Technology, according to Phys.org.

The reason it's so interesting is that materials which are less dense than water - such as wood and bone - are porous but are generally less intense than denser materials.

Theoretical studies and mathematical models have shown that finding a better balance between strength and density with patterns on the scale of human hair is possible. Building them seemed impossible. But using Nanoscribe 3D printers, the German team made a new material which is both porous and extremely strong based on that research.

"This is the first experimental proof that such materials can exist," Jens Bauer said.

The technique is complex, involving removing areas of polymer with a computer-aided laser, then adding aluminium oxide and submitting materials to stress tests. Bauer's best result is more substantial than all natural and man-made materials, lighter than 1000kg/m3, and as strong as some types of steel. Of course, making it in bulk is still a long way off, and this material won't replace traditional materials. But the more work done in this area, the more likely it is that one day we'll be printing the stuff our homes are made with - if not our homes themselves.

அதிமதுரம்

அதிமதுரம் என்று ஒன்று இருப்பது நிறைய பேருக்கு தெரியாது. ஆனால் அதில் இருக்கும் மருத்துவ குணங்களை இயற்க்கையின் வரம் எனலாம். இனி அதைப் பற்றி பார்ப்போம். நம் நாட்டு குண்டுமணியின் வேர் அதிமதுரம் எனப்படுகிறது. மேனாட்டில் விளையும் குண்டுமணி வேரில் மருத்துவப் பயன் மிகவும் அதிகம். இவ்வேர் இனிப்புச் சுவையும் இனிமையான மணமும் நிறைந்தது.

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகையாகும். அதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. அதிமதுரம் மிக எளிய முறையில் பயன்படுத்தப்பட்டாலே அனேக நோய்களை நீக்கி விட முடியும். மனிதர்களுக்குத் தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்திகள் நிரம்பியது.

1. அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும் பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் நிகரற்ற முறையில் செயல்படுகிறது.

2. ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.

3. தோல் நோய்கள், கண்நோய்கள், சளி, சரும அலர்ஜி குணமாகும். வேற்று மருந்துகளுடன் கூட்டியும், சூரணம், கஷாய ரூபத்தில், தனியாகவும் உபயோகித்து நோய்களிலிருந்து நன்மை பெறலாம்.

4. அதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் ( தலை மண்டை ) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமயிரின் ( தலைமுடி ) குறைகள் நீங்கும்.

5. தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.

6. தேங்காய் பாலைத் தலையில் அரை மணி நேரம் ஊற வைத்துக் குளித்தால் முடி உதிர்வது நிற்கும். வாரம் ஒரு முறை இப்படியாக முடி உதிர்வது நிற்கிற வரை செய்ய வேண்டும் . அதிமதுரத்தை இடித்து எருமைப்பால் விட்டு நன்றாக அரைத்து தலையில் தேய்த்து வந்தாலும் குணம் தெரியும்.

7. நெல்லி முள்ளியுடன், கரிசலாங்கண்ணி, அதிமதுரம் ஆகியவற்றை சம அளவு எடுத்துச் சேர்த்து, அரைத்து தலையில் தேய்த்து ஊறவைத்துக் குளித்து வரலாம். கடுக்காய்க்கு நரையை அகற்றிக் கருமையாக்கும் தன்மை உண்டு. கரிசலாங்கண்ணிச் சாற்றையும், கடுக்காய் ஊறிய தண்ணீரையும் கலந்து தலையில் தேய்த்துச் சிறிது நேரம் ஊறியதும் குளிக்க வேண்டும். இளநரை நீங்கும்.

8. அதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்து நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும்.

9. இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல்.

10. அதிமதுரத்துடன் சமஅளவு தோல் சீவிய சுக்கு சேர்த்து தூளாக்கி காலை, மாலை உணவுக்குப் பிறகு கால் டீஸ்பூன் தேனில் குழைத்து சிறிது சிறிதாக சுவைத்து உண்ண தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் போகும்.

11. அதிமதுர இலையை அரைத்துப் பூசிவர உடலிலும், அக்குளிலும் உண்டாகும் கற்றாழை நாற்றம், அரையில் உண்டாகும் சொறி, சிரங்கு போகும்.

12. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயிலிட்டுச் சுவைத்து விழுங்க இருமல் தணியும். அதிமதுரம், சோம்பு, சர்க்கரை வகைக்கு 35 கிராம், கொடி வேலி வேர்ப்பட்டை 17 கிராம் இலைகளைச் சூரணம் செய்து சித்திரை முதல் ஆடி வரை சாப்பிட்டுவர நோயணுகாது. தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீராத்தலைவலி, காய்ச்சல் தீரும். கண்கள் ஒளி பெறும்.

13. அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.

14. அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.

15. அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும். சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.

16. அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 1_2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.

17. பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.

18. அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 4_6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.

19. சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்ணீர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.

20. அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 3_4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.

21. போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து .

22. அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்ணீர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.

23. அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்ணீரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.

24. அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.

25. அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.

26. அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 50_100 கிராம் எடுத்து தண்ணீரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 2_3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

27. அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள்நிவர்த்தியாகும்.

28. அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.

29. அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.

30. பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்.

இளநரையா? டை அடிக்க வெக்கமா? இதோ மூலிகை தைலம்

இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவுமுறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர். போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இள வயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது. இத்தகைய பிரச்சனையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிடவேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும் தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக்கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநறை மாறும்.

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் – 100 மி.லி.
சீரகம் – 1 ஸ்பூன்
சோம்பு – 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் – 3
கறிவேப்பிலை – 2 இணுக்கு
கொத்தமல்லலி – சிறிதளவு
நெல்லி வற்றல் – 10 கிராம்
வெட்டிவேர் – 5 கிராம்

இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.
முடி உதிர்தல், இளநரை சரியாக....

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.
Photo: முடி உதிர்தல், இளநரை சரியாக....

கரிசலாங்கண்ணி இலையை (200 கிராம்) மையா அரைச்சி, அதோட அரை லிட்டர் தேங்காய் எண்ணெய் சேர்த்து காய்ச்சி பதத்துக்கு வந்ததும் இறக்கி வச்சிரணும். வழக்கமா தலைக்கு எண்ணெய் தேய்க்கிற மாதிரி அதை தேய்ச்சிட்டு வந்தா....முடி உதிர்றது, இளநரை எல்லாம் சரியாகும்.

கரிசலாங்கண்ணி சூரணத்தை கால் ஸ்பூன் எடுத்து, தேன் சேர்த்து சாப்பிட்டாலும் நரை விழுற பிரச்னை சரியாகும்.

மருதாணி இலை 300 கிராம், நல்லெண்ணெய் 1 1/2 லிட்டர், பசும்பால் 700 மில்லி சேர்த்து பதமா காய்ச்சி, தலைக்கு தேய்ச்சிட்டு வந்தா...கூந்தல் நல்லா வளரும். அதோட நரை விழுறதையும் தடுக்கும்.

பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
 —

முத்திரை..!

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.
Photo: முத்திரை..!

முயற்சித்து பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்....

1.சின் முத்திரை அல்லது ஞான முத்திரை: கட்டை விரல் மற்றும் ஆள்காட்டி விரல் நுனிகள் இரண்டும் தொட்டுக்கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்வது மனத்தை ஒருநிலைப்படுத்த உதவும். மூளை செல்கள் புத்துணர்ச்சி பெறும். தலைவலி, தூக்கமின்மை, கவலை, கோபம் ஆகியவை விலகும்.

2.வாயு முத்திரை: ஆள்காட்டி விரலைக் கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் சிறிது அழுத்தம் கொடுக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை செய்தால் வாயு தொடர்பான நோய்கள் போகும். ரத்த ஓட்டம் சீராகும்.

3.சூன்ய முத்திரை: நடுவிரலை, கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டை விரலால் அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால் காதில் நீர் வடிதல், காது வலி, காது அடைப்பு போன்றவை சீராகும். எலும்பு தளர்ச்சி மற்றும் இதய நோய் தவிர்க்கப்படும். தசைகள் வலுவடையும். தைராய்டு நோயிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

4.பிருதிவி முத்திரை: பெருவிரல் மற்றும் மோதிர விரலின் நுனிப்பாகம் தொட்டுக் கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்து வந்தால் உடல் மற்றும் மூளை செல்கள் ஊக்கம் பெறும்.

5.சூரிய முத்திரை: மோதிர விரலை கட்டை விரலின் அடிப்பாகத்தில் வைத்து மெதுவாக அழுத்த வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் நீங்கும். உடலின் வெப்பம் அதிகரித்து ஜீரண சக்தி பெருகும்.

6.வருண முத்திரை: சுண்டு விரலின் நுனியை கட்டை விரலின் நுனி தொட்டு கொண்டிருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதனால், தோல் சம்பந்தமான நோய்கள் குணமாகும். தோல் வறட்சி, முகப்பருக்கள் வராமல் தடுக்கப்படும்.

7.பிராண முத்திரை: மோதிர விரல், சுண்டு விரல் இரண்டையும் மடக்கி, கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டு இருக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இந்த முத்திரையால் கண் கோளாறுகள் நீங்கி ஒளி பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

8.அபான முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டையும் மடக்கி கட்டை விரலின் நுனியை தொட்டு கொண்டிருக்கும்படி வைக்க வேண்டும். மற்ற விரல்கள் நேராக இருக்க வேண்டும். இதை தொடர்ந்து செய்தால் மலச்சிக்கல், மூல நோய், வாயுத் தொல்லை விலகும். உடலிலிருந்து தேவையற்ற கழிவுகள் வெளியேறும்.

.9அபான வாயு முத்திரை: மோதிர விரல், நடுவிரல் இரண்டும் கட்டை விரல் நுனியை தொட்டு கொண்டிருக்க வேண்டும். ஆள்காட்டி விரல் கட்டை விரலின் அடிப்பாகத்தை தொட்டு கொண்டிருக்க வேண்டும். இவ்வாறு செய்தால் இதய நோய் சரியாகும். ரத்த ஓட்டம் சீரடையும்.

10.லிங்க முத்திரை: இரண்டு கைகளையும் சேர்த்து பிடித்துக்கொண்டு இடது கட்டை விரலை மட்டும் நிமிர்த்தி வைத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள அதிக சூட்டை சமன்படுத்தும். கபத்தை அகற்றும். ஜலதோஷம், ஆஸ்துமா பிரச்னைகள் விலகும். வறட்டு இருமல், நீர்க்கட்டு பிரச்னை சரியாகும்.

11.அஸ்வின் முத்திரை: பத்மாசனம் அல்லது வஜ்ராசனத்தில் அல்லது சுகாசனத்தில் அமர்ந்து கொண்டு குதத்தை சுருக்கி விரிவடையச் செய்வதே அஸ்வினி முத்திரையாகும். இதை படுத்து கொண்டும் செய்யலாம். ஆரம்ப காலத்தில் 10 முதல் 20 முறையும், பிறகு 30 முதல் 50 முறையும் செய்யலாம்.

இந்த முத்திரையை செய்தால் நரம்பு மண்டலம் ஊக்குவிக்கப்படும். வாயுத் தொல்லை, மலச்சிக்கல், மூலநோய் ஆகியவை நீங்க வாய்ப்பு உள்ளது. பெண்களுக்கு கருப்பை வலுப்பெறும். பிரசவ காலத்தில் இயல்பான குழந்தைப் பேறு கிடைக்கும்.

பாட்டி வைத்தியம்:-

1) மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

2) தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

3) மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

4) வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

5) நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

6) பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

7 ) உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

8) தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

9) வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

10) கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

11) வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

12) உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

13) கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

14) கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

15) உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

16) இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

16) உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

17) மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

18) தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்
Photo: பாட்டி வைத்தியம்:-

1)  மூலம் கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

2)  தீப்புண் வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.

3)  மூக்கடைப்புக்கு ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.

4)  வரட்டு இருமல் எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்

5)  நரம்பு சுண்டி இழுத்தால் ஊற வைத்து, முளைக்க வைத்ததானிய வகைகளை சாப்பிட்டால் இந்த நோய் வராது. வாரத்தில் 3 தடவைகளாவது சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் இருக்கும். நரம்பு நாளங்களை சாந்தப்படுத்தும் குணம் தேனுக்கு உடையது.

6)  பல்லில் புழுக்கள் சிறிது வேப்பங்கொழுந்து எடுத்து, நன்றாக பற்களின் எல்லாப் பகுதியிலும் படும்படி மென்று சாப்பிட வேண்டும்.

7 )  உடல் பருமன் குறைய வெங்காயத்தில் கொழுப்புச் சத்து குறைவு. அதனால் உடல் பருமனைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் உணவில் தாராளமாக வெங்காயம் சேர்த்துக் கொள்ளலாம்.

8)  தேன் உடல் பருமனைக் குறைக்கும்.தேனுடன் குளிர்ந்த தண்ணீரை கலந்து அருந்தினால் உடல் பருமன் குறையும்.

9)  வெண்மையான பற்களைப் பெற ஒவ்வொரு முறையும் சாப்பிட்ட பின்பு வாயை நன்றாகக் கழுவ வேண்டும். தூங்கப் போகும் முன்பும், தூங்கி எழுந்த பின்பும் பல் தேய்க்க வேண்டும். பல்தேய்த்துக் கழுவும் போது ஈறுகளைத் தேய்த்துத் தடவி கழுவ வேண்டும். இதனால் பற்களும் ஈறுகளும் வலுவடையும்.

10)  கணைச் சூடு குறைய சூட்டினால் சில குழந்தைகள் உடல் மெலிந்து நெஞ்சுக் கூடு வளர்ச்சி இன்றி மெலிவாகவும் இருப்பார்கள். அவர்களுக்கு தினமும் ஆட்டுப்பாலில் 2 தேக்கரண்டி தேன் கலந்து கொடுத்தால் கணைச் சூடு குறைந்து உடல் தேறிவிடும்.

11)  வலுவான பற்கள் வேப்பங்குச்சியினால் பல் துலக்கினால் பற்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும்.முருங்கைக்காயை நறுக்கி, பொரியல் செய்து அல்லது சாம்பாரில் போட்டு சாப்பிட்டால் பற்கள் வலுவடையும். தினமும் சாப்பிட்டால் வயோதிகத்திலும் பற்கள் நன்கு உறுதியாக இருக்கும்.

12)  உடல் சூடு ரோஜா இதழ்கள், கல்கண்டு, தேன் ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கும் குல்கந்தை தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

13)  கற்கண்டு சாப்பிடுவதால் இரத்தம் சுத்தமாகும். கண்களில் ஏற்படும் திரை அகன்று, கண்னொளி பெருகும். கண் சிவப்பை மாற்றும். வெண்ணெய்யில் சேர்த்து தினமும் சாப்பிட்டு வந்தால் உடல் பெருக்கும்.

14)  கக்குவான் இருமல் வெற்றிலைச் சாறுடன், தேன் கலந்து கொடுத்தால் குழந்தைகளுக்கு வரும் கக்குவான் இருமல் குணமாகும்.

15)  உள்நாக்கு வளர்ச்சி உப்பு, தயிர், வெங்காயக் கலவை உள்நாக்கு வளர்ச்சியைத் தடுக்கும்.

16)  இரத்தசோகை நோய்க்கு தேன் ஏற்ற மருந்து. இதற்குக் காரணம் அதில் இரும்புச்சத்து இருப்பதாகும்.ஆட்டுப் பாலை வடிகட்டி, தேன் கலந்து பருகினால் உடல் வலிமை ஏற்படும். உடலுக்குத் தேவையான இரத்தத்தை ஊறச் செய்யும்.

16)  உடலில் தேமல் மறைய தொடர்ந்து மருந்து எடுத்துக்கொண்டால் மட்டுமே குணமாகும்.
வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

எலுமிச்சம் பழச் சாற்றை முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும்.
ஆடு தீண்டாப் பாளையை, தேங்காய் எண்ணெய்யில் போட்டு, 1 வாரம் வெய்யிலில் வைத்த பிறகு தேமல் இருக்குமிடத்தில் தடவினால் தேமல் மறையும்.

மோரில் முள்ளங்கியை அரைத்து இந்தக் கலவையை முகத்தில் தேய்த்தால் தேமல் மறையும்.

1 துண்டு வசம்புடன் பூவாரம்பட்டை சேர்த்து அரைத்து இரவில் பற்றுப் போட்டு வந்தால் நாளடைவில் தேமல் குணமாகும்.

குறிப்பு: சோப்பு போட்டுக் குளிக்கக் கூடாது.

17)  மலேரியாவால் தாக்கப்பட்டவடர்கள் தினமும் துளசி இலையை சிறிதளவு காலையில் வெறும் வயிற்றில் மென்று விழுங்கி வந்தால் ஓரிரு நாட்களில் நோய் நீங்கிவிடும்.
மலேரியா போன்ற நோய்கள் பரவக் கொசுக்களே மூல காரணம். துளசியின் வாடை பட்டால் கொசுக்கள் அவ்விடத்திற்கு வராது. கொசு தொல்லையை நீக்க வீட்டில் துளசி செடிகளை வளர்க்கலாம்.

18)  தீக்காயங்கள் பட்டவுடன் முதலில் தண்ணீரில் கழுவ வேண்டும்.
தீப்பட்ட புண்ணின் மேல் தொடர்ந்து தேன் தடவி வந்தால் புண் குணமாகி விடும். தீக்காயங்களை ஆற்றுவதற்கு தேன் உகந்தது. வலி நீங்கும். தீக்கொப்புளங்கள் ஏற்படாமல் தடுக்கும்.

முட்டைக்கோஸ் இலைகளை சிறுசிறு துண்டுகளாக்கி, முட்டையில் உள்ள வெள்ளைக் கருவுடன் கலந்து தீக்காயங்கள், புண்கள், காயங்கள் மீது தடவினால் விரைவான குணம் கிடைக்கும்.

தீப்புண்களுக்கு முட்டையின் வெள்ளைக் கருவைத் தடவி குணப்படுத்தலாம்

முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.
முகத்திற்கு ஆவி பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள்..!

* முகத்தில் உள்ள அழுக்குகள் விரைவில் எளிதாக செல்வதற்கு,… இந்த முறை மிகவும் சிறந்தது. இதனால் எப்போது ஆவி பிடிக்கின்றோமோ, அப்போது ஆவி பிடித்து முடித்ததும், முகத்தை சுத்தமான துணியால் துடைக்கும் போது, முகத்தில் உள்ள இறந்த செல்கள் எளிதில் வந்துவிடும்.

* கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளை புள்ளிகளும் விரைவில் நீங்கிவிடும். அதற்கு 5 முதல் 10 நிமிடம் ஆவி பிடித்து, பின் தேய்த்தால், மூக்கில் காணப்படும் வெள்ளையானவை சீக்கிரம் வந்துவிடும். மேலும் அவை எளிதில் வருவதோடு, கரும்புள்ளிகள் வேரோடு வந்துவிடும். பின்னர் அவை வராது போய்விடும்.

* ஆவி பிடிப்பதால், முகப்பருக்கள் குறையும். எப்படியெனில் ஆவி பிடிக்கும் போது முகத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் சருமத்திற்கு ஏற்ற இயற்கை எண்ணெயால், சருமம் எண்ணெய் பசையோடு இருப்பதால், துளைகளில் சேரும் அழுக்குகள் அல்லது டாக்ஸின்களால் ஏற்படும் பருக்கள், துணியால் துடைக்கும் போது போய்விடும்.

* மற்றொரு நன்மைகள் என்னவென்றால், முதுமை தோற்றதை தடுக்கும். எவ்வாறென்றால், சருமத்தில் அழுக்குகள் நீங்காமல் தங்கிவிடுவதால் தான், முகம் மிகவும் பளிச்சென்று இல்லாமல் முதுமை தோற்றத்தோடு காணப்படுகிறது. அப்போது ஆவி பிடித்தால், அவை அந்த அழுக்குகளை நீக்கி, பளிச்சென்று, இளமைத் தோற்றதை தரும்.

* பிம்பிள் இருக்கும் போது முகத்திற்கு 4-5 நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். பின் 30 நிமிடம் ரிலாக்ஸ் ஆக இருந்து, பின்னர் ஐஸ் கட்டிகளால், முகத்தை தேய்த்தால், பிம்பிள் உடைந்துவிடும். இதனால் ஒரே நாளில் பிம்பிளை சூப்பராக குறைத்துவிடலாம்.

* ஆவி பிடிக்கும் போது முகத்திற்கு சரியாக இரத்த ஓட்டம் இருக்கும். மேலும் துளைகள் நன்கு எந்த ஒரு தொந்தரவும் இல்லாமல் சுவாசிக்கும். அதனால் சருமம் நன்கு அழகாக, பொலிவோடு இருக்கும்.
ஆகவே நேரம் இருக்கும் போது முகத்திற்கு ஆவி பிடித்து, சோர்ந்து போன சருமத்தை புத்துணர்ச்சியுடன், அழகாக மாற்றுங்கள்.

An orangutan began spear fishing after watching local fisherman

An orangutan from a zoo reintroduced to the wild in Borneo began spear fishing after watching local fisherman.
An orangutan from a zoo reintroduced to the wild in Borneo began spear fishing after watching local fisherman.

How to find the source code of a web page.

How to Read Your Website Source Code and Why It’s Important

Underneath all the beautiful images, perfect typography, and wonderfully placed calls to action lies your webpage source code. This is the code your browser turns into delightful experiences for your visitors and customers on a daily basis.
Google and other search engines “read” this code to determine where your webpages should appear in their indexes for a given search query. So, a lot of SEO comes down to what’s in your source code.
This is a quick guide to show you how to read your own website source code in order to make sure it’s properly SEO-ed and, really, to teach you how to sanity check your SEO efforts. I also will go over a few other situations where knowing how to view and examine the right parts of source code can help with other marketing efforts.
Finally, if you’re paying someone to SEO your site, this is a great guide to help you keep tabs on them!

How to View Source Code

The first step in checking your website’s source code is to view the actual code. Every web browser allows you to do this easily. Below are the keyboard commands for viewing your webpage source code for both PC and Mac.
PC
  • Firefox – CTRL + U (Meaning press the CTRL key on your keyboard and hold it down. While holding down the CTRL key, press the “u” key.) Alternatively, you can go to the “Firefox” menu and then click on “Web Developer,” and then “Page Source.”
  • Internet Explorer – CTRL + U. Or right click and select “View Source.”
  • Chrome – CTRL + U. Or you can click on the weird-looking key with three horizontal lines in the upper right hand corner. Then click on “Tools” and select “View Source.”
  • Opera – CTRL + U. You also can right click on the webpage and select “View Page Source.”
Mac
  • Safari – The keyboard shortcut is Option+Command+U. You also can right click on the webpage and select “Show Page Source.”
  • Firefox – You can right click and select “Page Source” or you can navigate to your “Tools” menu, select “Web Developer,” and click on “Page Source.” The keyboard shortcut is Command + U.
  • Chrome – Navigate to “View” and then click on “Developer” and then “View Source.” You also can right click and select “View Page Source.” The keyboard shortcut is Option+Command+U.
Once you know how to view the source code, you need to know how to search for things in it. Usually, the same search functions you use for normal web browsing apply to searching in your source code. Commands like CTRL + F (for Find) will help you quickly scan your source code for important SEO elements.

Title Tags

The title tag is the holy grail of on-page SEO. It’s the most important thing in your source code. If you’re going to take one thing away from this article, pay attention to this:
You know those results Google provides when you’re searching for something?
All of those results come from the title tags of the webpages they are pointing to. So, if you don’t have title tags in your source code, you can’t show up in Google (or in any other search engine, for that matter). Believe it or not, I’ve actually seen websites without title tags!
Now, let’s do a quick Google search for the term “Marketing Guides”:
marketing guides search results
You can see that the first result is for the KISSmetrics blog section on marketing guides. If we click on that first result and view the page source code, we can see the title tag:
the title tag
The title tag is designated by the opening tag: <title>. It ends with the closing tag: </title>. The title tag is usually near the top of your source code in the <head> section.
And we can see that the content inside the title tag matches what is used in the headline of that first Google result.
Not only are title tags required in order to be included in Google search results, but Google identifies the words in your title tags as important keywords that they think are relevant to their users’ searches.
So if you want a certain webpage to rank for a particular subject matter, you’d better make sure words that describe the subject matter are in the title tag. To learn more about how keywords and title tags are important in your overall site architecture, check out this post.
Here are some important things to remember about your title tags:
  • Make sure you have only one title tag per webpage.
  • Make sure every webpage on your website has a title tag.
  • Make sure each title tag on your website is unique. Never duplicate title tag content.

Meta Descriptions

Another important part of your webpage’s head section is the meta description tag. This 160 character snippet is free advertising copy that gets displayed underneath your title content in the search engines.
the meta description
I’ve seen hundreds of websites that completely ignore this tag. It’s very easy to find in your source code:
meta description source code
So, check to make sure it’s on all of your webpages. More importantly, check to make sure you’re not duplicating it across multiple pages. Duplicating a meta description tag is not a search engine penalty, but it’s a very big marketing mistake.
A lot of people gloss over the meta description, but you really should put some thought into it because it is read by search engine users. Think about what copy would help pull in more visitors and increase click-throughs.

H1 Headings

H1 headings carry a little on-page SEO weight, so it’s a good idea to check your pages to make sure you are using them properly. For each page on your website, look over the source code to see if you spot this tag:
h1 heading source code
You don’t want more than one set of H1 tags appearing on any given webpage. We recently published an article that says you shouldn’t try to over optimize your H1 headings. And what that boils down to is don’t try to purposely boost your SEO by putting your keyword in the H1 heading. Just use it for what it’s meant for – the biggest heading on the page. On your home page, this might be your value proposition.

Nofollows

If you engage in link building, then checking your backlinks to see if they are nofollowed is a must.
But before I go further, I have to talk a little about what “link juice” is. In the world of SEO, getting another website to link to your site is a great achievement. That link is seen by search engines as an endorsement. Search engines factor in the number of links that point to your site when they are ranking your site in their engines. “Link Juice” is a non-scientific term for the so-called power that the link provides your website or webpage in question.
Nofollows are an attribute that can be coded into a link to stop the link juice from flowing to a website. This is a very common thing you will see in the links present in the comment section of blogs.
To find out if your backlinks are passing link juice, you should check to see if the links have nofollow attributes inside them. If they do, then the link you worked so hard to get isn’t doing much for you since the nofollow attribute basically tells Google to ignore your webpage.
The Nofollow Attribute
It might be a little hard to see in the picture above, but rel=’external nofollow’ is in the anchor link. So, even though a person can click through on the link, no link juice is being passed.
Some people think that Google actually does count some link juice from nofollows, but to be conservative in your backlink counting, you should assume nothing is getting passed.
Alternatively, you may want to “page sculpt” some of your own webpages. Some SEOs believe it’s a good idea to limit what pages you send your internal link juice to so that more important webpages get the majority of the site’s overall link juice. You can do this by nofollowing some of your internal website links. For example, you might want to nofollow all of the links to your privacy policy or other boring / uninteresting pages.
Google will tell you to ignore this practice, and I somewhat agree. It’s kind of a tedious, unnecessary task, and your energy is better spent on creating great content instead.

Image Alt Tags

Empty image alt tags are very common SEO boo-boos. Image alt tags describe what your images are to robotic search engines.
If you run an ecommerce website, you definitely want to make sure your alt tags are filled out. A good idea is to make sure that the product brand name and serial number are in the alt tag description.
image alt tag
Above is a screenshot of an image tag with the alt tag buried inside it.
Now, you don’t want to use alt tags for decorative images. That can be seen as an over optimization and be a penalty. Just make sure you have your alt tags filled out for:
  • Images of Merchandise
  • Diagrams
  • Infographics
  • Your Website Logo
  • Screenshots
  • Photos of Team Members

Verifying That Your Analytics is Installed Properly

One last great reason for checking your source code is to make sure you have Google Analytics or KISSmetrics installed on every webpage of your website.
Checking is very simple. For Google Analytics, just view the source code of your webpages and search for the letters “UA.”
verifying google analytics
If you find an instance where the “UA” is followed by a 7-digit number, then you have confirmed that Google Analytics is installed on that one page. Also, keep track of how many times “UA” shows up on your webpage. Sometimes, your analytics tracking code will be inserted more than once accidentally, which is unnecessary. If that’s the case, you should have your developer remove the extra instances.
For KISSmetrics, look for “_km” to confirm that KISSmetrics is installed on your webpage. It’s also a good idea to check to see if the entire code snippet is present. It’s possible that somewhere along the way the snippet was truncated (either by not copying the entire snippet or by devious gremlins living in your developer’s computer).
Next, you will have to check the remaining webpages on your site to see if your analytics code has been inserted on every page. If you don’t have your analytics tracking code on every page of your website, you’re not getting a complete picture of what’s happening on your site, which kind of makes analytics useless.
This can be a daunting task if you have an enormous website. It even can be impossible to check manually.
I like to use xml-sitemaps.com to get a text file of all the URLs my website has within it. This provides me with an inventory checklist which helps to keep track of which URLs might need some extra attention (like having analytics installed on them). It’s also a great tool for being alerted to duplicate content issues and other strange things that might be lurking on a web server.
Even xml-sitemaps.com will give you only 500 results for free. You may need to ask your developer to give you a URL inventory so that you have a complete map of your massive website. Additionally, you may want them to create a script or program to perform these checks for you so you don’t have to do them manually.

That’s It!

I hope you found this guide helpful. Feel free to ask me any questions in the comments. I may have missed something. :)
About the Author:  is the Minister of Propaganda at KISSmetrics. Feel free to ask him questions about SEO or site architecture by connecting with him onTwitter (@seanvwork) or Linkedin.

இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை!

வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.
இரத்தத்தை உற்பத்தி செய்யும் வெந்தயக்கீரை!

வெந்தயக் கீரையில் அதிகளவு வைட்டமின் ஏ சத்தும், சுண்ணாம்பு சத்தும் அதிகளவு காணப்படுகின்றது. வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் சுண்டக்காய்ச்சி காலை, மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.

உடலுக்கு நல்ல பலனை தருவதுடன், புதிய இரத்தத்தை உற்பத்தி செய்யும்.

வெந்தயக் கீரையில் வேரை நீக்கி, கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டுச் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக வேகவைக்க வேண்டும்.

பின்னர் வெந்தயக்கீரை இருக்கும் அளவில் இரண்டு பங்கு கோதுமை ரவையை எடுத்து லேசாக வறுத்து கீரையுடன் சேர்த்து, எல்லாம் எந்த அளவு இருக்கிறதோ அந்த அளவிற்கு சர்க்கரை சேர்த்து இலேசாகக் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா போல வரும்.

இந்த சமயம் அதே அளவு நெய்யையும் விட்டுச் சிறிதளவு பால் சேர்த்துக் கடைந்து, ஓர் ஏலக்காயைத் தட்டிப் போட்டுக் கலக்கி வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு உபயோகப்படுத்தலாம்.

இந்த அல்வாவை காலை, மாலை ஒரு உருண்டை அளவு சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணிந்து விடும். வெந்தயக்கீரையில் 49 கலோரி சத்துள்ளது. வெந்தயக்கீரையுடன் பாசிப்பயிரு சேர்த்து குழம்பு வைத்துச் சாப்பிட்டால் கல்லீரல் பலப்படுகிறது.

வயதுக்கு வரும் பெண்கள் இதைச் சாப்பிட்டால் இரத்தம் விருத்தியுண்டாகும். சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையவும், பசியைப்போக்கவும் பயன்படுகிறது.

MEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி ?

MEMORY CARDஐ server ஆக மாற்றுவது எப்படி என்று உங்களுக்கு தெறியுமா ? சில பேர் தங்களுடன் இருக்கும் ஒரு fileஐ மற்றவருக்கு இனயத்தின் மூலம் அனுப்ப அதனை இனையத்தில் upload செய்து பிறகு அதனுடைய linkஐ அந்த நபருக்கு அனுப்பி டவுன்லோட் செய்ய சொல்லுவார்கள் சில பேர் emailஐ உபயோகிப்பார்கள் ஆனால் இதில் குறிப்பிட்ட அளவுள்ள file ஐ தான் உங்களால் ் அனுப்ப முடியும் ஆனால எப்பேர்பட்ட fileஐயும் இனையத்தில் upload செய்யாமல் நேரடியாக உங்களுடைய போனிலிருந்தே மற்றொருவருக்கு அனுப்பலாம் இதற்காக குறிப்பிட்ட அளவே என்பதெல்லாம் கிடையாது எவ்வளவு பெரிய கோப்பாக இருந்தாலும் சரி ஆனால் அதை முழுமையாக மற்றவர் பெறும்வரை உங்களது மொபைலில் இண்டர்நெட் துண்டாகாமல் இருப்பது அவசியம் இது அனைவருக்கும் உபயோகப்படாது என்றாலும் இப்படியும் ஒரு தொழில்நுட்பம் நமது மொபைலில் உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளவே இந்த பதிப்பு முதலில் play store சென்று share via http என்ற applicationஐ install செய்து கொள்ளுங்கள் பிறகு file manager சென்று நீங்கள் விருப்பப்படும் fileஐ share செய்யுங்கள் வரும் optionல் share via http என்பதனை தேர்ந்தெடுங்கள் அது சில நிமிடங்களில் அந்த Fileற்கான http addressஐ காட்டும் அதை பெரும் நபருக்கு அனுப்பி browserன் address barல் அதை செலுத்தினால் நீங்கள் share செய்த fileஐ உலகில் அவர் எந்த மூலையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம் பிடித்திருந்தால் பகிருங்கள் நமது பகுதியின் வளர்ச்சிக்காக நன்று
 post by Aashy

thanks :https://www.facebook.com/Angadimangalam123

Tuesday, February 4, 2014

வீர மாமுனி

முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் தலைநகரமான ரோமி லிருந்து இந்தியாவிலுள்ள தமிழகத்திற்கு கிறிஸ்துவ மதத்தை பரப்ப பெஸ்கி (முழு பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி) எனும் பாதிரியார் வந்தார். கிறுஸ்துவ மதத்தை பரப்ப தமிழகம் வந்த பாதிரியார் அவருடைய தாய் மொழி யிலோ அல்லது ஆங்கிலத்திலோ கிறிஸ்துவத்தை பரப்பினால் மக்களுக்கு எப்படி புரியும் என்று நினைத்து, அவர் தமிழ் பயி ன்று தமிழ் மொழியிலேயே பரப்பினால் நல்ல பலனளிக்கும் என்று தமிழை கற்க்க தொடங்கினார். அவர் மக்களோடு மக்களா க எளிய முறையில் பழகி பேச்சு தமிழை நன்றாக கற்று க்கொண்டார் பிறகு தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். மதத்தை பரப்பும் நோக்கத்துடன் வந்த பாதிரியார் தமிழின் இலக்கண இலக்கியங் களையும் கற்க்க ஆவல் கொண்டார் பிறகு அதனையும் சிற ப்புடன் கற்று முடித்தார்.
தமிழின் இலக்கண இலக்கியங்களின் சிறப்புத்தன்மையை கண்டு தன்னை ஒரு தமிழராகவே நினைத்து அவர் பெயரையும் தை ரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதனாக மாறிய பெஸ்கி, தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் மதம் பரப்புவதை விட்டு தமிழுக்கு சேவை செய்வதே தம் கடமையாக கொண்டார். இவர் தமிழுக்கு ஆற்றி ய தொண்டிற்க்காக மதுரை தமிழ்ச்சங்கம் இவருக்கு வீரமா முனிவர் என்ற பெயரை சூட்டி சிறப்புச் செய்தனர். அன்று முதல் கிஸ்த்துவ மதத்தை பரப்ப வந்த பெஸ்கி எனும் பாதிரியார், வீரமா முனிவர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்ட்டார்.

தமிழுக்காக வீரமாமுனிவர் செயதசேவை கொஞ்ச நஞ்சமில்லை. அந்த காலத்தில் தமிழ் வார்த்தையின் பொருள் அறிய நூல்கள் ஏதும் இல்லை. நிகண்டுகள் என்று சொல்லக்கூடிய செய்யுள் வகை நூல்களே சொல்லுக்கு பொருள் கூறும் நூல்கள். தமிழின் வார் த்தைக்கு மிக சுலபமாக பொருள் கண்டறிய சதுரகராதி என்ற முதல் தமிழ் -தமிழ் அகராதியை உருவாக்கிய பெருமை வீரமா முனிவரையே சேரும். தமிழ் இலக்கணங்கள் ஐந்தினையும் சூத்திரங்களாக தொகுத்து அதற்கு உரையும் எழுதினார்.

தேம்பாவணி என்ற இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு பற்றி வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட முதல் பெரிய செய்யுள் வகை நூலாகும். இந்நூல் பல தமிழ் புலவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே வெளியிட ப்பட்டது. அரங்கேற்ற நிகழ்வின்போது பல தமிழ் புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சற்றும் தளராமல் பதில் அளித்தாராம். மேலும் ஒரு புலவர், கிண்டலாக எல்லாம் தெரியும் என்கிற வீர மாமுனியே உமக்கு வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கும் என்று தெரியுமா என்று கேட்டதற்கு வீர மாமுனி சிறிதும் யோசிக்காமல் முப்பத்தி மூன்று கோடி, முப்பதிமூன்று லட்சத்து, முப்ப திமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திர ங்கள் இருக்கிறது என்று கூறி சந்தேகமிருந்தால் எண்ணி ப்பாருங்கள் என்றாராம், இந்த பதிலை கேட்டு அரங்கம் முழுவதும் சிரிப்பொலி கிளம்பியதாம். தேம் பாவணி நூலின் சிறப்பை பாராட்டி வீரமாமுனி என்ற பெஸ்கி பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித் தார்களாம்.

பெஸ்கி என்ற வீரமாமுனி கிராம மக்களிடையே சென் று கிராம மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம் பரிய கதைகளையும் நாட்டுப்புற பாடல்களையும் கேட் டறிந்தார். இந்த அனுபவத்தின் மூலமாக பரமார்த்த குரு என்ற கதைகளை நமக்கு தந்த பெருமை அவரையே சேரும் இந்த கதைகளின் மூலக்கரு என்னவென்றால் எதையும் யோசி க்காமல் செய்தால் என்ன துன்பங்கள் மற்றும் அவமானங்கள் நேரிடும் என்பதை நகைச்சுவையுடன் கூறுவதே பரமார்த்த குரு கதைகள். மேலும் இக் கதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

எங்கிருந்தோ வந்த கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி பாதிரி யார் வீரமா முனிவராக மாறி தமி ழுக்கு செய்த சேவையை நினைத்தால் மெய்சிலி ர்க்க வைக்கிறது. அவ ருடைய வாழநாள் காலம் நவம்பர் 8, 1680 – பிப்ரவரி 4, 1747
முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இத்தாலியின் தலைநகரமான ரோமி லிருந்து இந்தியாவிலுள்ள தமிழகத்திற்கு கிறிஸ்துவ மதத்தை பரப்ப பெஸ்கி (முழு பெயர் – கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி) எனும் பாதிரியார் வந்தார். கிறுஸ்துவ மதத்தை பரப்ப தமிழகம் வந்த பாதிரியார் அவருடைய தாய் மொழி யிலோ அல்லது ஆங்கிலத்திலோ கிறிஸ்துவத்தை பரப்பினால் மக்களுக்கு எப்படி புரியும் என்று நினைத்து, அவர் தமிழ் பயி ன்று தமிழ் மொழியிலேயே பரப்பினால் நல்ல பலனளிக்கும் என்று தமிழை கற்க்க தொடங்கினார். அவர் மக்களோடு மக்களா க எளிய முறையில் பழகி பேச்சு தமிழை நன்றாக கற்று க்கொண்டார் பிறகு தமிழில் எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டார். மதத்தை பரப்பும் நோக்கத்துடன் வந்த பாதிரியார் தமிழின் இலக்கண இலக்கியங் களையும் கற்க்க ஆவல் கொண்டார் பிறகு அதனையும் சிற ப்புடன் கற்று முடித்தார்.

தமிழின் இலக்கண இலக்கியங்களின் சிறப்புத்தன்மையை கண்டு தன்னை ஒரு தமிழராகவே நினைத்து அவர் பெயரையும் தை ரியநாதன் என்று மாற்றிக் கொண்டார். தைரியநாதனாக மாறிய பெஸ்கி, தமிழ் மொழியில் மிகுந்த ஆர்வம் கொண்டதால் மதம் பரப்புவதை விட்டு தமிழுக்கு சேவை செய்வதே தம் கடமையாக கொண்டார். இவர் தமிழுக்கு ஆற்றி ய தொண்டிற்க்காக மதுரை தமிழ்ச்சங்கம் இவருக்கு வீரமா முனிவர் என்ற பெயரை சூட்டி சிறப்புச் செய்தனர். அன்று முதல் கிஸ்த்துவ மதத்தை பரப்ப வந்த பெஸ்கி எனும் பாதிரியார், வீரமா முனிவர் என்று மக்களால் அன்புடன் அழைக்கப்ட்டார்.

தமிழுக்காக வீரமாமுனிவர் செயதசேவை கொஞ்ச நஞ்சமில்லை. அந்த காலத்தில் தமிழ் வார்த்தையின் பொருள் அறிய நூல்கள் ஏதும் இல்லை. நிகண்டுகள் என்று சொல்லக்கூடிய செய்யுள் வகை நூல்களே சொல்லுக்கு பொருள் கூறும் நூல்கள். தமிழின் வார் த்தைக்கு மிக சுலபமாக பொருள் கண்டறிய சதுரகராதி என்ற முதல் தமிழ் -தமிழ் அகராதியை உருவாக்கிய பெருமை வீரமா முனிவரையே சேரும். தமிழ் இலக்கணங்கள் ஐந்தினையும் சூத்திரங்களாக தொகுத்து அதற்கு உரையும் எழுதினார்.

தேம்பாவணி என்ற இயேசு கிறிஸ்துவின் வளர்ப்பு தந்தையான புனித யோசேப்பு பற்றி வீரமாமுனிவரால் இயற்றப்பட்ட முதல் பெரிய செய்யுள் வகை நூலாகும். இந்நூல் பல தமிழ் புலவர்களின் எதிர்ப்புகளுக்கிடையே வெளியிட ப்பட்டது. அரங்கேற்ற நிகழ்வின்போது பல தமிழ் புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு சற்றும் தளராமல் பதில் அளித்தாராம். மேலும் ஒரு புலவர், கிண்டலாக எல்லாம் தெரியும் என்கிற வீர மாமுனியே உமக்கு வானத்தில் எத்தனை நட்சத்திரம் இருக்கும் என்று தெரியுமா என்று கேட்டதற்கு வீர மாமுனி சிறிதும் யோசிக்காமல் முப்பத்தி மூன்று கோடி, முப்பதிமூன்று லட்சத்து, முப்ப திமூவாயிரத்து, முன்னூற்றிமுப்பதிமூன்று நட்சத்திர ங்கள் இருக்கிறது என்று கூறி சந்தேகமிருந்தால் எண்ணி ப்பாருங்கள் என்றாராம், இந்த பதிலை கேட்டு அரங்கம் முழுவதும் சிரிப்பொலி கிளம்பியதாம். தேம் பாவணி நூலின் சிறப்பை பாராட்டி வீரமாமுனி என்ற பெஸ்கி பாதிரியாருக்கு ராஜரிஷி என்ற பட்டம் அளித் தார்களாம்.

பெஸ்கி என்ற வீரமாமுனி கிராம மக்களிடையே சென் று கிராம மக்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் பாரம் பரிய கதைகளையும் நாட்டுப்புற பாடல்களையும் கேட் டறிந்தார். இந்த அனுபவத்தின் மூலமாக பரமார்த்த குரு என்ற கதைகளை நமக்கு தந்த பெருமை அவரையே சேரும் இந்த கதைகளின் மூலக்கரு என்னவென்றால் எதையும் யோசி க்காமல் செய்தால் என்ன துன்பங்கள் மற்றும் அவமானங்கள் நேரிடும் என்பதை நகைச்சுவையுடன் கூறுவதே பரமார்த்த குரு கதைகள். மேலும் இக் கதைகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது.

எங்கிருந்தோ வந்த கான்ச்டன்டைன் சோசப்பு பெஸ்கி பாதிரி யார் வீரமா முனிவராக மாறி தமி ழுக்கு செய்த சேவையை நினைத்தால் மெய்சிலி ர்க்க வைக்கிறது. அவ ருடைய வாழநாள் காலம் நவம்பர் 8, 1680 – பிப்ரவரி 4, 1747

Air balloons filled with bombs and/or incendiaries

In 1944, the Japanese Imperial Army released over 9,000 air balloons filled with bombs and/or incendiaries and aimed them at US and Canadian cities, forests and farmlands. They were intended to wreak havoc, causing explosions and widespread fire but only around 1,000 of the balloons actually made it to their intended targets.
Photo: In 1944, the Japanese Imperial Army released over 9,000 air balloons filled with bombs and/or incendiaries and aimed them at US and Canadian cities, forests and farmlands. They were intended to wreak havoc, causing explosions and widespread fire but only around 1,000 of the balloons actually made it to their intended targets.

Gangsta Nuns

சிறுநீரகக் கற்கள்... தமிழ்ச்சித்தர்களின் ஓர் எளிய தீர்வு.!


மனித உடலின் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் முக்கியமான உறுப்புதான் சிறுநீரகம். இடுப்புக்கு சற்றே மேலாக வயிற்றுக்கு பின் புறத்தில்,முதுகு தண்டின் அருகாமையில் அமைந்திருக்கும். இதன் முக்கிய வேலை குருதியில் இருக்கும் தேவையற்ற அல்லது மிகையாக இருக்கும் உப்புகளை பிரித்து நீராக வெளியேற்றுவதே ஆகும். இவை தவிர உடலில் இருக்கும் அமிலங்களின் அளவினை கண்காணித்து சமநிலையை பேணும் பணியினையும் சிறுநீரகம் செய்கிறது.

சிறுநீரக பாதிப்புகள் பலவாக இருந்தாலும், இந்த பதிவில் சிறுநீரக கற்களை பற்றி மட்டுமே தகவல்களை பகிர விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் அளவுக்காவது தண்ணீரை உள்ளெடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு குறைவாக நீரை உள்ளெடுக்கும் போது சிறுநீரகம் பிரிக்கும் கழிவு உப்பின் செறிவானது சிறுநீரில் அதிகரிக்கும். இந்த உப்புகள் சிறுநீரக பாதையில் படிமஙக்ளாக படிந்து கற்களாய் உருவாகும்.

நாளடைவில் இவ்வாறு உருவாகும் கற்கள் சிறு நீரகபாதையில் தடையினை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்தும். அப்போது தாங்க இயலாத அளவில் வலி உண்டாகும். ஆங்கில மருத்துவத்தில் பல புதிய முறைகளும் தீர்வுகளும் இருந்தாலும், சிகிச்சைகள் செலவு கூடியதும் பக்க விளைவுகளை உண்டாக்குவதாகவும் கருத்துக்கள் உள்ளன.

இந்த கற்களை கரைத்து வெளியேற்ற நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரெ எளிமையான இயற்கை மருத்துவ முறைகள் பலவற்றை சொல்லியுள்ளனர்.

சிறுநீரக கற்களை முற்றாக கரைத்து சிறுநீரில் வெளியேற வைக்க தினமும் காலையில் வாழை தண்டு சாறு எடுத்து ஒரு குவளை வீதம் பதினைந்து நாட்கள் அருந்தினால் எத்தகைய சிறுநீரக கல்லும் முற்றாக கரைந்து வெளியேறும் என்று சொல்லும் தேரையர், வாழைத் தண்டு சாற்றினை பதினைந்து நாள் இடைவெளியில் ஒரு தடவை வீதம் அருந்தி வருபவர்களுக்கு சிறுநீரக நோய்கள் எப்போதும் அண்டாது என்றும் சொல்கிறார்.
சிறுநீரகக் கற்கள்...
தமிழ்ச்சித்தர்களின் ஓர் எளிய தீர்வு.! 

மனித உடலின் கழிவுகளை பிரித்து வெளியேற்றும் முக்கியமான உறுப்புதான் சிறுநீரகம். இடுப்புக்கு சற்றே மேலாக வயிற்றுக்கு பின் புறத்தில்,முதுகு தண்டின் அருகாமையில் அமைந்திருக்கும். இதன் முக்கிய வேலை குருதியில் இருக்கும் தேவையற்ற அல்லது மிகையாக இருக்கும் உப்புகளை பிரித்து நீராக வெளியேற்றுவதே ஆகும். இவை தவிர உடலில் இருக்கும் அமிலங்களின் அளவினை கண்காணித்து சமநிலையை பேணும் பணியினையும் சிறுநீரகம் செய்கிறது.

சிறுநீரக பாதிப்புகள் பலவாக இருந்தாலும், இந்த பதிவில் சிறுநீரக கற்களை பற்றி மட்டுமே தகவல்களை பகிர விரும்புகிறேன். ஒவ்வொரு மனிதரும் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு லிட்டர் அளவுக்காவது தண்ணீரை உள்ளெடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு குறைவாக நீரை உள்ளெடுக்கும் போது சிறுநீரகம் பிரிக்கும் கழிவு உப்பின் செறிவானது சிறுநீரில் அதிகரிக்கும். இந்த உப்புகள் சிறுநீரக பாதையில் படிமஙக்ளாக படிந்து கற்களாய் உருவாகும்.

நாளடைவில் இவ்வாறு உருவாகும் கற்கள் சிறு நீரகபாதையில் தடையினை உண்டாக்கி அடைப்பை ஏற்படுத்தும். அப்போது தாங்க இயலாத அளவில் வலி உண்டாகும். ஆங்கில மருத்துவத்தில் பல புதிய முறைகளும் தீர்வுகளும் இருந்தாலும், சிகிச்சைகள் செலவு கூடியதும் பக்க விளைவுகளை உண்டாக்குவதாகவும் கருத்துக்கள் உள்ளன.

இந்த கற்களை கரைத்து வெளியேற்ற நம் சித்தர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரெ எளிமையான இயற்கை மருத்துவ முறைகள் பலவற்றை சொல்லியுள்ளனர். 

சிறுநீரக கற்களை முற்றாக கரைத்து சிறுநீரில் வெளியேற வைக்க தினமும் காலையில் வாழை தண்டு சாறு எடுத்து ஒரு குவளை வீதம் பதினைந்து நாட்கள் அருந்தினால் எத்தகைய சிறுநீரக கல்லும் முற்றாக கரைந்து வெளியேறும் என்று சொல்லும் தேரையர், வாழைத் தண்டு சாற்றினை பதினைந்து நாள் இடைவெளியில் ஒரு தடவை வீதம் அருந்தி வருபவர்களுக்கு சிறுநீரக நோய்கள் எப்போதும் அண்டாது என்றும் சொல்கிறார்.
சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!
வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
சிறுநீர் கற்களைக் கரைக்கும் வெங்காயம்!

வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம்… அதில் உள்ள ‘அலைல் புரோப்பைல் டை சல்பைடு’ என்ற எண்ணெய். இதுவே வெங்காயத்தின் நெடிக்கும், நமது கண்களில் கண்ணீர் வருவதற்கும் காரணமாக அமைகிறது. வெங்காயத்தில் புரதச்சத்துக்கள், தாது உப்புக்கள், வைட்டமின்கள் ஆகியவை உள்ளன. அதன் பலன்களை இங்கே பார்ப்போம்,

வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்றும் சொல்லலாம். இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து, உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பு இல்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.

குளவியோ, தேனீயோ கொட்டிவிட்டால் பயப்பட வேண்டாம். அவை கடித்த இடத்தில் வெங்காயத்தை எடுத்துத் தேய்த்தாலே போதும். வெங்காயத்தில் உள்ள ஒரு வகை என்சைம், கொட்டியதால் ஏற்படும் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற ப்ராஸ்டாகிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. விஷத்தையும் முறித்து விடுகிறது.

சிறுநீர் அடக்கிவைக்கும் பழக்கம் ஆண்களைவிட பெண்களிடம் அதிகம் உண்டு. அவ்வாறு சிறுநீரை அடக்குவதால் அதில் நுண்ணுயிரிகளின் உற்பத்தி அதிகமாகி, நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும். இந்த பழக்கத்தை தொடர்பவர்களுக்கு சிறுநீர்த்தாரைத் தொற்று வரும். இவர்கள், வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக்கொண்டால் போதும். வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து கழிவுகளை வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த் தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும். வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டால் அந்த கற்கள் கரைந்துவிடும்.

முதுமையில் வரும் மூட்டு அழற்சியை கட்டுப்படுத்தும் ஆற்றல் வெங்காயத்திற்கு உண்டு. இதற்கு வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் போதும். வலி குறைந்துவிடும்.

செலனியச் சத்து இருப்பவர்களுக்குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினை தோன்றும். இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயத்தில் இருக்கிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் எடுத்து வந்தாலே போதும். தேவையான செலினியச்சத்து கிடைத்துவிடும். வெங்காயம் தவிர, பூண்டையும் இதற்காக பயன்படுத்தலாம்.

சீதோஷ்ண நிலை மாறும்போது அடிக்கடி இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் ஏற்படும். சிறிது வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிட்டால் மேற்கண்ட பிரச்சினைகள் நீங்கும்.

புற்றுநோயைத் தடுக்கும் மருந்துப்பொருள் வெங்காயத்தில் இருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புகைபிடித்தல், காற்று மாசுபடுதல், மன இறுக்கம் போன்றவற்றால் ஏற்படும் செல் இறப்புகள், செல் சிதைவுகளை இது சரிசெய்து விடுகிறது.

நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.

வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்

வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் கலந்து குடிக்க இருமல் குறையும்.

வெங்காயச் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.

அடிக்கடி புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.

Lost Bomb Nuclear

 
In 1958, a Mark-15 warhead, packing about 2 Megatons, was jettisoned by a B-47 Bomber when it collided with an F-86 fighter plane

At first the Air Force claimed there was no nuclear core. However, in 1966, Assistant Secretary of Defense W.J. Howard testified to Congress that it was, indeed, a complete nuclear weapon.
Sweet dreams.

Breast stem cells could carry cancer

Researchers from Melbourne’s Walter and Eliza Hall Institute have discovered that breast stem cells and their ‘daughters’ have a much longer lifespan than previously thought, and are active in puberty and throughout life.
The longevity of breast stem cells and their daughters means that they could harbour genetic defects or damage that progress to cancer decades later, potentially shifting back the timeline of breast cancer development. The finding is also integral to identifying the ‘cells of origin’ of breast cancer and the ongoing quest to develop new treatments and diagnostics for breast cancer.
Breast stem cells were isolated in 2006 by Professor Jane Visvader and Professor Geoff Lindeman and their colleagues from the ACRF Stem Cells and Cancer division at the Walter and Eliza Hall Institute.
Now, in a project led by Dr Anne Rios and Dr Nai Yang Fu that tracked normal breast stem cells and their development the team has discovered that breast stem cells actively maintain breast tissue for most of the life of the individual and contribute to all major stages of breast development. The research was published in the journal Nature.
Professor Lindeman, who is also an oncologist at The Royal Melbourne Hospital, said discovering the long lifespan and programming of breast stem cells would have implications for identifying the cells of origin of breast cancers.
“Given that these stem cells – and their ‘daughter’ progenitor cells – can live for such a long time and are capable of self renewing, damage to their genetic code could lead to breast cancer 10 or 20 years later,” Professor Lindeman said. “This finding has important applications for our understanding of breast cancer. We hope that it will lead to the development of new treatment and diagnostic strategies in the clinic to help women with breast cancer in the future.”
Professor Visvader said understanding the hierarchy and development of breast cells was critical to identifying the cells that give rise to breast cancer, and how and why these cells become cancerous. “Without knowing the precise cell types in which breast cancer originates, we will continue to struggle in our efforts to develop new diagnostics and treatments for breast cancer, or developing preventive strategies,” Professor Visvader said.
Previous research from the institute team had already implicated some of these immature breast cells in cancer development. “In 2009, we showed that luminal progenitor cells, the daughters of breast stem cells, were the likely cell of origin for the aggressive BRCA1-associated basal breast cancers,” Professor Visvader said. “The meticulous work of Anne and Nai Yang, using state-of-the-art three-dimensional imaging, has significantly improved our understanding of normal breast development and will have future applications for breast cancer.”
The project should settle a debate that has been raging in the scientific field, confirming that breast stem cells were ‘true’ stem cells capable of renewing themselves and making all the cells of the mammary gland.
“Our team was amongst the first to isolate ‘renewable’ breast stem cells,” Professor Visvader said. “However the existence of a common stem cell that can create all the cells lining the breast ducts has been a contentious issue in the field. In this study we’ve proven that ancestral breast stem cells function in puberty and adulthood and that they give rise to all the different cell types that make up the adult breast.”
The research project was supported by the Australian National Health and Medical Research Council, Victorian Government, Australian Cancer Research Foundation, Qualtrough Research Fund, National Breast Cancer Foundation and Cure Cancer Australia.
Editor's Note: Original news release can be found here.