Tuesday, October 4, 2011

மெதுவாக உணவு அருந்தினால் சர்க்கரை நோய் வராது: ஆய்வில் தகவல்




உணவை நாம் வேகமாக உண்பதால் சர்க்கரை நோய் ஏற்பட வாய்ப்புள்ளது என்று ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் என்ற பத்திரிகை இந்த ஆராய்ச்சி முடிவுகளை வெளியிட்டுள்ளது.
மெதுவாக உணவு உண்பவர்களை விட வேகமாக உணவு உண்பவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகி அதுவே சர்க்கரை நோய் ஏற்பட வழிவகுக்கிறது.
10 ஆண்டுகளுக்குப் பின் இது டைப் 2 சர்க்கரை நோயாக மாறும் என்று ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த ஆராய்ச்சியில் ஒருவருடைய எடை, பாலினம், வயது, புகைபிடித்தல், மது அருந்துதல் போன்ற காரணிகளை விட வேகமாக உணவு உண்பதினால் மட்டுமே சர்க்கரை நோய் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment