Saturday, July 10, 2021

எனக்கு ஒரு நிழல் இருப்பதை நம்ப முடியவில்லை


அது என்னுடன் வருகிறது என்னைப் போலவே நடக்கிறது
என்னையே பிரதிபலிக்கிறது
ஒரு நேரம் இருக்கிறது
ஒரு நேரம் மறைந்துவிடுகிறது
இருந்தும் இல்லாமலும்
அது வேடிக்கை காட்டுகிறது
எனக்குள் இருக்கும் இருட்டை போல அது கருப்பாக இருக்கிறது
நான் பேசும்போது என்னைப்போலவே உதடுகளை அசைக்கிறது
அது என்னுள் சமாதி நிலையில் இருக்கிறது
என் மீது ஒளி பட்டு தெறிக்கும் போது
தியான நிலையில் இருந்து வெளியேறுகிறது
என்னைப் போன்று அது இருப்பதாக ஒருபோதும் கூறியதில்லை
நான் நினைத்துக் கொள்கிறேன் அது என்னுடைய பிம்பம் என்று
என்னுள் படிந்திருக்கும் துயரத்தையும் சோகத்தையும் கண்ணீரையும்
தனிமையையும் அது உணர்ந்திருக்கவில்லை
அது ஒரு ஒளி விளையாட்டு வேறொன்றுமில்லை
என் நிழல் பெரு மரத்தின் பெரும் நிழலைப் போல இளைப்பாறுதலை
கொடுப்பதில்லை
என் நிழல் என்னுடன் வீணாகவே வசிக்கிறது..

Iyyappa Madhavan 

No comments:

Post a Comment