Sunday, November 12, 2017

நிராகரித்தலென்பது


இரக்கமற்ற ஓர் சொல்லின்
விதையிலிருந்து அரும்புகிறது ...
நமது நிராகரிப்புகளின் பச்சை

ஒரு குழந்தை
தாயின் முத்தத்தை மறுப்பதிலிருந்து
துவங்குகிறது அதன் முதல் வலி

அதனை ஏற்பதென்பது
அத்துனை சுலபமான விடயமல்ல
தவிரவும் யாரும் விரும்பி ஏற்பதுமில்லை

ஒருத்தர் மீதான நம்பிக்கையும்
அதீதமான பிரியமும் உடைகிற போது
நிராகரிப்புகளும் உடன் நிகழ்ந்து விடுகிறது
அது தவிர்க்க முடியாதுமாகும்

நிராகரிக்கப் படாமல்
இங்கு யார்தான் ஜீவிக்கிறார்கள்
அதிலிருந்து யாருமே தப்ப மடியாது

ஆயினும் இன் நிராகரிப்புகள்
எதுவுமே நிரந்தரமானதல்ல

காலம் நம்மை
எப்போது நிராகரிக்குமென்று
யாராலூம் கணித்து சொல்ல முடியாது

அத்துயர்மிகு கணம் வரை
வாழ்ந்து தொலைய வேண்டியதுதான்

0
ஜமீல்

No comments:

Post a Comment