Friday, November 6, 2015

இந்த "மெஸேஜ்" இதுவரை ஏன் பரவவில்லை அல்லது பரப்பப்படவில்லை?

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக இயற்கை வேளாண் விஞ்ஞானி பேரறிஞர் நம்மாழ்வார் இயற்கைக்கு எதிரான , ரசாயன உரங்கள் பூச்சிகொல்லிகள் பயன்பாடு குறித்தும் பன்னாட்டு நிறுவனங்களின் நயவஞ்சக சதிகளையும் அதற்க்கு துணைபோகும் அரசையும் குறித்து தன் வாழ்நாள் முழுவதும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினார் யாரும் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பல்வேறு நோய்களுக்கு ஆளாகி சம்பாத்யத்தின் பெரும்பகுதி மருத்துவருக்கும் மருந்திற்க்கும் செலவாகும் சூழலுக்கு மக்கள் தள்ளப்பட்டுவிட்டனர். நம்மாழ்வார் ஏற்படுத்திய விழிப்புணர்வின் தாக்கம்தான் இதுபோன்ற திரைப்படங்களாக வருகின்றது சினிமாக்காரன் சொன்னால்தான் வாயைப்பிளந்துகொண்டு கேட்டு உணர்ச்சிவசப்பட்டு விழிக்கும் கேடுகெட்ட சமூகமாக இன்னமும் உள்ளது தமிழ் சமூகம் .

No comments:

Post a Comment