Wednesday, August 5, 2015

Manitha Neyam மனித நேயமே மகிழ்ச்சி



காந்திக்கு ஒரு கைத்துப்பாக்கி, 
இந்திராகாந்திக்கு ஒரு எ.கே.47 , 
ராஜிவ்காந்திக்கு ஒரு மனிதவெடிகுண்டு, 
எங்கே செல்கிறது நம் இந்தியா..? 

மதங்களை ஒழிக்கவேண்டாம் நீங்கள் 
மனிதனுக்கு மதம்பிடிக்க செய்யாதீர்கள் மனிதநேயம் மகாத்மாவோடு 
அடக்கம் செய்யப்பட்டுவிட்டதா..? 

இந்தியாவின் வாழ்க்கைப் பயணத்தில் 
இதுவரை வழிப்போக்கர்களாக மட்டுமே நாம்... 
எதையோ தொலைத்துவிட்டு 
ஏக்க உணர்வோடு தேடுகிறோம் இன்றுவரை... 

சொந்த மனிதர்களை நேசிக்க மறந்ததால் 
சொந்த மண்ணிலேயே அந்நியராய் உணர்கிறோம், 
காலில்பட்ட அடிக்கு கலங்கின கண்கள் 
கலங்கும் மனங்களுக்கு ஆறுதலாய் நீயிரு... 

மனிதனை நேசிப்பவன் தெய்வமாகிறானாம் மனிதநேயத்தைத் தூண்டி ஒளிரவிடு 
தெய்வமாக வேண்டாம் - குறைந்தபட்சம் இருக்கும்வரை மனிதர்களாக இருப்போம்... 
"மனிதநேயத்தோடு..."

No comments:

Post a Comment