Thursday, September 11, 2014

கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்கள் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகள்

எந்த கடவுளும் இனி மீள் அவதாரம் எடுக்க மாட்டார்கள்.
பல புராணங்களில் கலியுகத்தில் நடக்கக்கூடிய சம்பவங்களும் அதில் வியாபிக்கக்கூடிய சூழ்நிலைகள் வருணிக்கப்பட்டுள்ளன. அவற்றில் சிலவற்றை காண்போம்:
• திருடர்கள் அரசர்களாவார்கள், அரசர்கள் திருடர்களாவார்கள்.
• ஆட்சியாளர்கள் (மக்களின்) செல்வங்களை திருடி அவற்றை துஷ்பிரயோகம் செய்வார்கள்.
• அவர்கள் (ஆட்சியாளர்கள்) மக்களை காத்திடமாட்டார்கள்
• சிறிதளவே கல்வியறிவு பெற்ற (அதையும் பயன்படுத்திட தெரியாத) வீனர்கள் ஞானிகள் எனப் போற்றப்படுவர்
• அகதிகளாகப் பலர் நாடு விட்டு நாடு செல்வார்கள்
• தாயின் கர்ப்பத்திலேயே சிசுக்கள் கொலை செய்யப்படுவார்கள்
• தவறான கருத்துக்களையே மக்கள் ஏற்றுக்கொள்ள விரும்புவார்கள்
• எவரையுமே நம்ப முடியாமல் போகும்
• மக்கள் பொறாமை நிறைந்திருப்பார்கள்
• பிறக்கும் பல குழந்தைகள் வாலிப வயதைத் தாண்டமாட்டர்கள்
• பசியாலும் பயத்தினாலும் மக்கள் நிலவரைகளுக்குள் தஞ்சம் புகுவார்கள்
• இளம் பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை விலை பேசுவார்கள்
• மேகங்கள் சீராக மழை பொழிய மாட்டா.
• வணிகர்கள் நேர்மையற்ற வணிகத்தில் ஈடுபடுவார்கள்
• பிச்சைக்காரர்களும் வேலையற்றோரும் நிறைந்திருப்பார்கள்
• கடுமையான மற்றும் கொச்சையான மொழிகளை மக்கள் பயன்படு்த்துவார்கள்
• செல்வம் சேர்ப்பதிலேயே மக்கள் ஈடுபடுவார்கள், பணங்காரர்களே ஆதிக்கம் செலுத்துவார்கள்
• ஆட்சித் தலைவர்கள் மக்களைக் காத்திடாமல், வரிகளின் மூலம் செல்வங்களைப் பறித்துக்கொள்வார்கள்
• நீர் கிடைக்காமல் போகும்
• விரைவுணவு எல்லா இடங்களிலும் சுலபமாக கிடைக்கும்.
பூமி சிறு சிறு கோலித் துண்டுகளாக வெடித்துச் சிதறும்.மக்கள் சடுதியில் சாம்பல் ஆவார்கள்.

No comments:

Post a Comment