Tuesday, October 9, 2012

எல்லா மருந்துகளுக்கும் மேற்பட்ட மருந்து, மருந்தீஸ்வரரின் திருநீறு


.
எல்லா மருத்துவர்களுக்கும் மேற்பட்ட மருத்துவர் மருந்தீசர்.
மருந்தீஸ்வரரை நம்பிக்கையோடு வழிபட்டால் நிறைவேறாத காரியமே இல்லை.
********************************
திருவான்மியூரில் உள்ளது சோழ மன்னர்களால் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மருந்தீஸ்வரர் ஆலயம்
********************************
அன்னை திரிபுரசுந்தரி என்னும் திருப்பெயரோடு நின்ற கோலத்தில், மேலிரு கரங்களில் பாசம், அங்குசம்
கீழிரு கரங்களில் அபயமும், வரதமும் கொண்டு தெய்வீகக் காட்சி தருகிறாள்.
______________________________
"கல்லாலின் புடையமர்ந்து நான் மறை
ஆறங்க முதற்கற்ற கேள்வி கிறந்த
வல்லார்கள் நல்வருக்கும் வாக்கிறந்த
பூரணமாய் மறைக்கப்பாலாய்

எல்லாமாய் அல்லதுமாய்
இருந்ததனை இருந்து காட்டி
சொல்லாமல் சொன்னவரை நினையாமல்
நினைந்து பவத் தொடக்கை வெல்வாம்"

என்னும் பரஞ்சோதி முனிவரின் துதிப்பாடல் எழுதப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment