Wednesday, August 8, 2012

கடவுள்களின் தந்தை...!



இவர்தான் ராஜ ரவி வர்மா, பல கை, கால்களுடன் மாற்றுத் திறனாளிகளாய் இருக்கும் கடவுள்களுக்கு எல்லாம் இவர்தான் தகப்பனார். ஆமாம் இப்பொழுது பலர் வீட்டின் பூசை அறையிலும் மற்றும் நாட்க
ாட்டியிலும் இருக்கும் கடவுள்களுக்கு எல்லாம் உருவம் கொடுத்தவர்.இவர்தான். வெறும் புனைவுகளாவும் கதையாடல்களாகவும் இருந்துவந்த இதிகாச நாயக நாயகிகள் மானிட உருப்பெற்று நம் கண் முன் வந்து தோன்றியது இவரால்தான். சரஸ்வதி, மகாலட்சுமி, ராதை மற்றும் ருக்மினியுடன் நிற்கும் கிருஷ்ணர் போன்ற உருவங்குளுக்கு எல்லாம் சரிகைகள், பளபளபளக்கும் சமிக்கிகள் வைத்து அலங்கரித்தது இவர்தான். ராஜா ரவி வர்மா மஹாலஷ்மிக்கு மேலாடை போட்டு வரையும் வரை, இந்திய பெண் தெய்வ உருவங்கள் எல்லாமே மேலாடை இல்லாமல் தான் இருந்தன. தாமரை மேல் சரசுவை தூக்கிவைத்ததும் இவர்தான்.

No comments:

Post a Comment