பழமொழிகள் "ஆ" * ஆடிப்பட்டம் தேடி விதை. * ஆழம் தெரியாமல் காலை விடாதே! * ஆற்றிலே ஒரு கால்; சேற்றிலே ஒரு கால்! * ஆற்று நிறைய நீர் இருந்தாலும், நாய் நக்கித்தான் குடிக்கும். * ஆயுள் நீடிக்க உணவைக் குறை. * ஆணி அடிசாரல், ஆடி அதிசாரல்,ஆவணி முழுசாரல். * ஆனி அரை ஆறு, ஆவணி முழு ஆறு. * ஆடே எரு; ஆரியமே வெள்ளாமை. * ஆண்டிகள் கூடி மடம் கட்டுவது போல. * ஆபத்தில் அறியலாம் அருமை நண்பனை. * ஆறுவது சினம். * ஆத்தாள் அம்மணம்; கும்பகோணத்தில் கோதானம். * ஆபத்திற்கு பயந்து ஆற்றிலே விழுந்தது போல. * ஆகும் காலம் ஆகும்; போகும் காலம் போகும். * ஆயிரம் சொல்லுக்கு அரை எழுத்து மேல். * ஆசை நோவுக்கு அமிழ்தம் எது? * ஆலயம் தொழுவது சாலவும் நன்று. * ஆலை விழுது தாங்கியது போல. * ஆடு பகை குட்டி உறவா? * ஆட்டுக் கிடையில் ஓநாய் புகுந்தது போல. * ஆடி ஓய்ந்த பம்பரம் போல. * ஆரம்பத்தில் சூரத்துவம். * ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும்; பாடுற மாட்டை பாடிக் கறக்கணும். * ஆமையைக் கடித்தால் ஈக்குத்தான் வலிக்கும். * ஆபத்தினைக் கடந்தால் ஆண்டவனே மறந்து போகும். * ஆற்றுநீர் பித்தம் போக்கும், குளத்து நீர் வாதம் போக்கும்,சோற்றுநீர் எல்லாம் போக்கும் * ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வை. நட்புடன் தியாகராஜன்
No comments:
Post a Comment