சங்ககாலத்தைச் சேர்ந்த புலவர்களை சங்ககாலப் புலவர்கள் என்கிறார்கள். இதில் முதற் சங்கத்தில் 549 புலவர்களும், இரண்டாம் சங்கத்தில் 449 புலவர்களும், மூன்றாம் சங்கத்தில் 468 புலவர்களும் தமிழ் வ்ளர்த்திருக்கின்றனர். இந்த 1446 புலவர்களில் பெண்பாற் புலவர்கள் 32 பேர் இருந்திருக்கின்றனர். இந்தப் பெண்பாற் புலவர்கள் பெயர்களும், அவர்கள் பாடிய பாடல்கள் அகநானூறு , புறநானூறு , குறுந்தொகை , பதிற்றுப்பத்து , பொருநல் ஆற்றுப்படை , நற்றிணை என்கிற பிரிவில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன என்பது குறித்த பட்டியல் இங்கே தரப்பட்டுள்ளது.
| எண் | பெண் புலவர் பெயர் | அகநானூறு | புறநானூறு | குறுந்தொகை | பதிற்றுப்பத்து | பொருநல் ஆற்றுப்படை | நற்றிணை | மொத்தம் |
| 1 | அவ்வையார் | 5 | 33 | 15 | ... | ... | 7 | 60 |
| 2 | அஞ்சில் அஞ்சியார் | ... | ... | ... | ... | ... | 1 | 1 |
| 3 | அஞ்சியத்தை மகள் நாகையார் | 1 | ... | ... | ... | ... | ... | 1 |
| 4 | அள்ளூர் நன்முல்லையார் | 1 | 1 | 9 | ... | ... | ... | 11 |
| 5 | அணிலாடு முன்றிலார் | ... | ... | 1 | ... | ... | ... | 1 |
| 6 | ஆதிமந்தி | ... | ... | 1 | ... | ... | ... | 1 |
| 7 | ஒக்கூர் மாசாத்தியார் | 2 | 1 | 5 | ... | ... | ... | 8 |
| 8 | ஓரிற் பிச்சையார் | ... | ... | 1 | ... | ... | ... | 1 |
| 9 | கச்சிப்பேட்டு நன்னாகையார் | ... | ... | 8 | ... | ... | ... | 8 |
| 10 | கழார்க்கீரன் எயிற்றியார் | 4 | ... | 3 | ... | ... | 2 | 9 |
| 11 | காக்கைப்பாடினி நச்செள்ளையார் | ... | 1 | 1 | 10 | ... | ... | 12 |
| 12 | காவற்பெண்டு | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
| 13 | காமக்கணி நப்பசலையார் | 2 | 2 | ... | ... | ... | 1 | 5 |
| 14 | குமுழி ஞாழல் நப்பசையார் | 1 | ... | ... | ... | ... | ... | 1 |
| 15 | குற மகள் இளவெயினியார் | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
| 16 | குறமகள் குறிஎயினி | ... | ... | ... | ... | ... | 1 | 1 |
| 17 | தாயங்கண்ணியார் | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
| 18 | நக்கண்ணையார் | 1 | 3 | ... | ... | ... | 2 | 6 |
| 19 | நல்வெள்ளியார் | 1 | ... | 1 | ... | ... | 2 | 4 |
| 20 | பாரிமகளிர் | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
| 21 | பூங்கனுத்திரையார் | ... | 1 | 2 | ... | ... | ... | 3 |
| 22 | பெருங்கோப்பெண்டு | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
| 23 | இளவெயினி | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
| 24 | பொன்முடியார் | ... | 3 | ... | ... | ... | ... | 3 |
| 25 | பொதும்பில் புல்லளங்கண்ணியார் | 1 | ... | ... | ... | ... | ... | 1 |
| 26 | மாற்பத்தி | ... | 1 | ... | ... | ... | ... | 1 |
| 27 | மாறோகத்து நப்பசலையார் | ... | 7 | ... | ... | ... | 1 | 8 |
| 28 | முடத்தாமக் கண்ணியார் | ... | ... | ... | ... | 1 | ... | 1 |
| 29 | முள்ளியூர் பூதியார் | 1 | ... | ... | ... | ... | ... | 1 |
| 30 | வெள்ளி வீதியார் | 2 | ... | 8 | ... | ... | 3 | 13 |
| 31 | வெண்ணிக் குயத்தியார் | ... | ... | 1 | ... | ... | ... | 1 |
| 32 | மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் | ... | ... | ... | ... | ... | 2 | 2 |
(இணையத்தில் இருந்து)வாழ்த்துக்களுடன் தமிழச்சி |
No comments:
Post a Comment