தொழிலாச்சு - உலகம் கொள்ளை யடிப்பவர்க்கு நிழலாச்சு! வறுமைக்கு மக்கள்நலம் பலியாச்சு - எங்கும் வஞ்சகர் நடமாட வழியாச்சு!
சோகச் சுழலிலே ஏழைச் சருகுகள் சுற்றுதடா - கண்ணீர் கொட்டுதடா மோசச் செயலாலே முன்னேற்றம் கண்டோரின் ஆசைக்கு நீதி இரையாகுதடா - அன்பை அதிகார வெள்ளம்கொண்டு போகுதடா!!
பழந்துணி அணிந்தாலும் பசியாலே இறந்தாலும் பாதை தவறாத பண்பு உள்ளம் இருந்தநிலை மறந்து இழுக்கான குற்றம்தன்னைப் புரிந்திட லாமென்று துணியுதடா - நேர்மை பொல்லாத சூழ்நிலையால் வளையுதடா!!! நட்புடன் பொறிஞர் வி.நடராஜன் |
No comments:
Post a Comment