Friday, June 3, 2011

Panneer Pushpangale - Aval Appadithaan


இசை


பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு


இசை




ஆண் கொண்ட தாகம்
தீர்க்கின்ற தேகம்
பெண்ணென்ற ஓரினமோ
இது யார் பாவம்

ஆண் செய்த சட்டம்
அவர் போட்ட வட்டம்
அதற்கென்று பெண்ணினமோ
இது யார் சாபம்
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது .


பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு


இசை


பாஞ்சாலி வாழ்ந்த

பரிதாப வாழ்வை
பாராட்ட யாருமில்லை
நிஜ வாழ்க்கையிலே

பலபேரைச் சேரும்
பரந்தாமன் தன்னை
புகழ் பாட கேட்டதுண்டு
இந்த பூமியிலே
நியாயங்களோ பொதுவானது
புரியாமல் போனது


பன்னீர் புஷ்பங்களே
கானம் பாடு
உன்னைப்போலே எந்தன் உள்ளம் ஆடுது
புது தாளம் தொட்டு ஓ
புது ராகமிட்டு..

நன்றி
MSSSARAN

No comments:

Post a Comment