Search This Blog

Sunday, April 5, 2020

கொரோனா இறுக்கமான சட்டம் நம்முடைய பொறுப்பு இயல்பு நிலை

கொரோனா வைரஸ் தொற்று வரவரக் கூடிக் கொண்டே போகிறது. மரணிப்போரின் தொகையும் அதிகரித்துள்ளது. குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின், பிரிட்டன் போன்ற வளர்ச்சியடைந்த நாடுகள் இதனால் உச்சப்பாதிப்பிற்குள்ளாகியுள்ளன. (03.04.2020) மட்டும் அமெரிக்காவில் ஒரே நாளில் 1120 பலியாகியுள்ளனர். கொரேனாவினால் இதுவரை உயிரிழந்தோர் 60 ஆயிரத்தைத் தொட்டுள்ளது. அடுத்த ஒரு வாரத்தில் 50 ஆயிரம் பேரை இழக்கக் கூடிய நிலைமை காணப்படுகிறது என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைவர் செட்ராஸ். நோய்த்தொற்றுக்குள்ளானோர் 10 லட்சத்தைக் கடந்துள்ளது. இரண்டு மாதத்திற்குள் 200 நாடுகளில் இது பரவியிருக்கிறது. இப்பொழுது ஒவ்வொரு நாளும் தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை பன்மடங்காக அதிகரித்துக் கொண்டிருக்கிறது. மரணத்தின் தொகையும் கூடத்தான்.
தொற்றுக்குள்ளாகியோருக்குத் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டாலும் அபாய நிலை நீங்கவில்லை. முக்கியமாக கொரோனாவுக்கு இன்னும் உரிய மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதே ஆகப் பெரிய சவால். இந்த நிலையில் இதைப் பரவ விடாமல் தடுப்பது, பாதிப்பைக் குறைப்பது என்பவற்றுக்கான வழிமுறையே இன்றுள்ள ஒரே தெரிவு. இதற்குத் தனிமைப்படுதலும் தனிமைப்படுத்தலுமே ஓரளவுக்குப் பாதுகாப்பை வழங்கக் கூடியது. எல்லா வகையிலும் நிலைமையைக் கட்டுப்படுத்தி வைப்பதற்கும் இது ஒன்றே வழி.
இதனால்தான் உலகெங்கும் ஊரடங்கைப் பிறப்பித்துள்ளன எல்லா நாடுகளும். உண்மையில் இது ஊரடங்கல்ல. ‘வீடடங்கு’ ஆகும். அதாவது வீட்டுக்குள் அடங்கியிருத்தலாகும். அவசிய நிலைமைகளைத் தவிர வேறு எந்தக் காரணத்தைக் கொண்டும் வீட்டை விட்டு வெளியே நடமாடாதிருப்பது அசியமானதாகும்.
சொல்வதைப் போல இது எளிதான ஒன்றல்ல. மிக மிகச் சிரமமான விசயம். தொடர்ந்து வீட்டிற்குள் அடைபட்டுக்கொண்டிருக்க முடியாது. உளவியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, உணவுக்கே கதியில்லை என்பது தொடங்கி ஏராளம் காரணங்கள், தேவைகள் வரையில் இது பிரச்சினைக்குரிய ஒன்றே. வெளியே செல்வதற்கான தேவைகளும் காரணங்களும் ஏராளமிருக்கும்போது வீட்டுக்குள் முடங்கியிருக்க முடியாது என்பதை யாரால்தான் புரிந்து கொள்ள முடியாது.
ஆனாலும் இது ஒரு தவிர்க்க முடியாத அனர்த்த நிலை. எந்த அனர்த்த நிலையிலும் முதலில் பாதிக்கப்படுவது இயல்பு நிலை. இயல்பு நிலை பாதிக்கப்பட்டால் அதனால் கூடுலான நெருக்கடியைச் சந்திப்போர் அடிமட்ட வாழ்க்கைத் தரத்தில் உள்ளோரே. இங்கும் அதுதான் நிலைம.
அதிலும் இந்த அனர்த்தம் சாதாரணமான ஒன்றல்ல. மிகப் பயங்கரமானது. உலகளாவியது. இதற்குக் காரணமான நோய் நம் கண்ணுக்குப் புலப்படாதது. விளைவுகளையே நாம் காண முடியும். ஆகவே ஏனைய பிற இடர்கால (சுனாமி, புயல், சூறாவளி, வெள்ளம், வரட்சி, மண்சரிவு, பூகம்பம், தீவிபத்து போன்றவற்றைப்போல) நெருக்கடிகளைப்போல புலப்படு அனர்த்தம் இதுவல்ல. உணரும் நெருக்கடியே இது.
இந்த நிலையில் இதற்கு மருத்துவ ஆலோசனை ஒன்றை மிகவும் பொறுப்போடு கடைப்பிடிப்பதே ஒரே பாதுகாப்பான வழிமுறையாகும். மருத்துவ ஆலோசனைகளின் அடிப்படையிலேயே அவசரகால நெருக்கடி நிலையை – பாதுகாப்பு அறிவிப்புகளை உலகளாவிய ரீதியில் அரசுகள் மேற்கொண்டிருக்கின்றன. எனவே சரி, பிழைகளுக்கு அப்பால் அரசாங்கத்தின் அறிவுறுத்தலை ஏற்று நடப்பதே பொருத்தமானது. ஏனைய அரசாங்கங்கள் கூட உலக மருத்துவ நிலைமைகளையும் ஆலோசனைகளையும் பின்பற்ற வேண்டிய கட்டாயத்திலுள்ளன. இதை விடுத்து அரச எதிர்ப்பு மனோ நிலையில் (Anti Government Mentality) இதனையும் அணுக முடியாது. அது கூடவே கூடாதது. (வேறு விடயங்களுக்கு வேறு சந்தர்ப்பங்களில் அரசாங்கத்தை நாம் விமர்சிப்பதும் எதிர்ப்பதும் வேறு. இது வேறு). அப்படி அணுக முற்பட்டால் அதனுடைய விளைவுகளை நாமே அனுபவிக்க வேண்டியிருக்கும்.
கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவதற்கான தனித்திருத்தல், தனிமைப்படுத்தல் போன்றவற்றை பலரும் கடைப்பிடிப்பதாகத் தெரியவில்லை.
ஊரடங்கு உத்தரவைச் சுழித்துக் கொண்டு திரிவதைச் சிலர் பெருமை அடிக்கிறார்கள். படையினர் இல்லை என்பதால் அது தமக்கு வசதி என்று சிலர் கருதுகிறார்கள். உட்பாதைகளால் வழமையைப்போலப் பலரும் திரிகிறார்கள். இது ஏதோ போராட்ட காலப் பிரச்சினை எண்டமாதிரி ஒரு எண்ணம் பலருக்கும் இருக்குப் போல. அது வேறு. இது வேற சங்கதி எண்ட விளக்கம் பலருக்குமில்லை.
அதானால் ஆளாளுக்கு ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்கிறார்கள். சிலர் வறுமை நிலையிலிருக்கும் குடும்பங்களுக்கான உணவுப் பொருட்களை வழங்கும் உதவித் தொண்டுக்காக. சிலர் வயலுக்கு அல்லது தோட்டத்துக்கு. சிலர் மீன்பிடிக்காக. சிலர் மீன் மற்றும் மரக்கறி விநியோகத்துக்காக. சிலர் பாண் போன்ற உணவு வழங்கல்களுக்காக. சிலர் மருந்தகங்களைத் திறப்பதற்காக. சிலர் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக. சிலர் கள்ளிறக்குவதற்காக. இதைவிட அரச திணைக்களங்களில் சிலவும் இப்படி அவசர உதவிகளுக்காக தமது உத்தியோகத்தர்களை அழைத்துச் சேவையில் ஈடுபடுத்துகின்றன. உதாரணமாக சமுர்த்தி உதவிப் பணத்தை வழங்குவதற்கு. கூட்டுறவுக்கடைகளைத் திறப்பற்கு. புள்ளி விவரங்களைத்திரட்டுவதற்கு. சில அவசியப் பணிகளை மேற்கொள்வதற்கு....
இப்படிப் பல காரணங்கள். ஆனால், இதில் நாம் ஒன்றைக் கவனிக்க வேணும். பட்டினியால் நடக்கும் மரணங்களை விடவும் கொரோனாத் தொற்றின் பாதிப்பும் அது உண்டாக்கும் மரணமும் கட்டுப்படுத்த முடியாதளவுக்கானதாயிருக்கும்.
மட்டுமல்ல, தப்பித் தவறி, கொரோனா தொற்று நமது பிரதேசத்தில் வந்து விட்டதென்றால், அதில் உயிரிழப்புகள் நிகழுமாயின் பின்னர் இந்தப் பிரதேசங்கள் முற்றாகவே மூடுண்ட நிலைக்கே செல்லும். பாதிப்பும் உச்சமடைந்து விடும். இதற்கு நாலுபேர் செத்து, நானூறுபேர் ஆஸ்பத்திரியில் உயிருக்காகப் போராடிய பிறகுதான் நமக்கு கண் திறக்கும். ஞானம் பிறக்கும் என்றால் என்னதான் செய்ய முடியும்?
படித்த சமூகம் என்று நாம் எம்மையே சொல்லிக் கொள்வதொன்றும் முக்கியமானதல்ல. அதில் எந்தப் பயனுமிருப்பதில்லை. அறிவாளர்களாக எப்படிச் செயற்படுகிறோம் என்பதுவே முக்கியமானது. அதுவே பயனுடையது. எனவே கொரோனோ பாதிப்பைத் தவிர்ப்பதற்கான ஒரே வழியான தனித்திருத்தல், வீடங்கியிருத்தல், உச்சப் பொறுப்போடு நடத்தல், தனிமைப்படல் என்பதைக் கடைப்பிடிப்பதே வழியாகும்.
எனவேதான் மேற்சொன்னவாறான செயற்பாடுகள் அவசியமானவை என்றாலும் இதற்கு ஒரு மாற்றுப் பொறிமுறை அவசியமாக உருவாக்கப்பட்டு, அந்தப் பொறிமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என்கிறேன். அப்படிச் செய்யும்போது இதில் ஆட்தொகையைக் குறைக்க முடியும். நடமாட்டத்தை மேலும் மட்டுப்படுத்தலாம். இதை ஒழுங்கமைக்கப்பட்ட பொறிமுறைக்கூடாகவே செய்ய முடியும்.
குறிப்பாக உதவிப் பொருட்களை (உணவுப் பொருட்களை) வழங்குவோர் அதை முறைப்படுத்தப்பட்ட பொறிமுறை ஒன்றுக்கூடாக வழங்குவது நல்லது. இதை ஒழுங்கமைக்க வேண்டிய கடப்பாடு மாவட்ட செயலங்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்குண்டு. அவர்களின் வழிப்படுத்தலின் வழியாக இதைச் செய்வதே பொருத்தமானது. அல்லது அவர்களும் சமூகச்செயற்பாட்டியக்கத்தினரும் (மட்டுப்படுத்தப்பட்ட அளவில்) ஒருங்கிணைந்து இதைச் செய்ய வேணும்.
கூடவே சரியான அறிவுறுத்தல்களை சுகாதாரத் துறையினர் தொடர்ச்சியாக மேற்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ந்தும் நிலைமைகளைக் குறித்த – பாதுகாப்பு ஏற்பாடுகளைக் குறித்த எண்ணங்களை சனங்களிடம் உருவாக்க வேண்டும்.
உணவைக் கொடுப்பது பசியைப் போக்குதவற்கும் உயிர் வாழ்வதற்கும் என்றால், அந்த உயிர்களைக் காப்பாற்றுவதற்கான அக்கறையும் அவசியமானதல்லவா. எனவேதான் பெரும் பாதிப்பைத் தரக்கூடிய நோய்த்தொற்று வந்தால் அது செய்யப்படும் பிற மனிதாபிமான உதவிகளை விடப் பாரதூரமாகி விடும்.
அதேவேளை இதெல்லாம் அவசியமானவை என்பதை மறுக்கவில்லை. நியாயமான காரணங்களின் அடிப்படையிலானவையே என்பதை நாம் புரிந்து கொள்கிறாம். இதற்கான பொறிமுறையை உருவாக்கிக் கொண்டு செய்யவேணும் என்பதே நமது வாதமாகும். ஏனெனில் இதை ஒரு சாட்டாகவே வைத்துக்கொண்டு ஆளாளுக்கு வெளியே திரிகிறார்கள். தினமும் இப்படித் திரிவோர் பொலிஸினால் கைது செய்யப்படுகிறார்கள். கைது செய்யப்படுவோர் நூறில் ஒரு பங்கும் வராது. ஏனையோர் பிடிபடாமல் திரிந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் தாம் செய்து கொண்டிருப்பது மிகத் தவறான செயல் என்பதை அறியவில்லை. அல்லது அதைப்பற்றி அவர்களுக்குப் பொருட்டுமல்ல. அரசாங்கம் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. அல்லது அரசாங்கத்துக்கு நாங்கள் கட்டுப்பட மாட்டோம் என்று எண்ணிக் கொண்டு பொறுப்பற்று நடக்கிறார்கள். உண்மையில் இதனால் இவர்களுக்கும் இவர்களால் சனங்களுக்குமே பாதிப்பு. நெருக்கடி. துயரம். ஏனெனில் இது நாங்கள் அரசாங்கத்துக்குச் சவால் விடுகிற விசயமில்லை. எங்களையே பாதிக்கக் கூடியது.
ஆகவே இவர்களைக் கட்டுப்படுத்த வேண்டியது அரசாங்கத்தினுடைய – படையினருடைய பொறுப்பு மட்டுமல்ல, நம்முடைய பொறுப்புமாகும்.
கொரோனா வைரஸ் தாக்கம் முதல்முதலில் பாதிப்பை உண்டாக்கிய சீனாவில் உச்சக்கட்ட விதிமுறைகளின் வழியாகவே நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். அங்கே பின்பற்றப்பட்ட வழிமுறைகளையே இன்று உலகம் பின்பற்றுவதற்குப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறது. அங்கே இறுக்கமான முறையில் சட்டம் பின்பற்றப்பட்டுள்ளது. சனங்கள் அதற்குக் கட்டுப்பட்டு ஒத்துழைப்பு வழங்கியுள்ளனர். இதனால்தான் அங்கே மிக விரைவில் இயல்பு நிலை திரும்பக் கூடியதாக இருந்தது.
Karunakaran Sivarasa

Saturday, April 4, 2020

Environmental Benefits of Coronavirus

 Coronaviruses are well-known to us. In fact, you are probably an unknown host to millions of them now. Coronaviruses cause various illnesses ranging from the common cold to severe and often deadly respiratory infections. This new strain, COVID-19, is short for coronavirus disease-2019.  This novel coronavirus is responsible for the current global outbreak. Although coronaviruses are well-known, this new strain has no cure or prevention. This fact has jeopardized millions of human beings worldwide, particularly the elderly or immune suppressed.
“The coronavirus outbreak has seen widespread changes in human behaviour, encouraging companies to alter everyday operations by suggesting employees work from home, reducing congestion and enhancing air quality.”
It is possibly too soon to arrive at conclusions concerning the consequences of the new sickness. Still, at present, we see the significant impact the topic has on the mass media and how this is being transmitted into drastic individual decisions that affect the smooth functioning of our society, particularly the economy.

According to Green Connect CEO Kylie Flament, there's been a 25 per cent increase in people wanting to buy fruit and vegetables from her organisation's Lake Heights farm.

She also saw a significant increase in people looking to other environmentally friendly alternatives to cushion the impact of COVID-19 social distancing and self-isolation.

"Coronavirus is causing enormous health, social and economic upheaval, and that shouldn't be underestimated, but there are silver linings and some of these are environmental," she said.
She pointed out that local nurseries have been selling out of plants, especially edible ones, and said she had noticed an increasing demand for people wanting backyard chickens.
"These might have been things at the back of people's minds, and suddenly it's become an urgent priority," she said. "So the silver lining in all this is that people are being pushed to more sustainable living."


Low to no NO2

The NO2 is a noxious gas. It generates from motor vehicles. Thus, it is clear that the recent plummet of this gas was due to the nationwide shutdown of vehicle movement. The fewer vehicles on the road mean low-to-no NO2 in the air. Evidence of the reduction of pollution started in Wuhan and spread over the entire mainland China.

We see reduced production in the Chinese industry, which has resulted in a considerable drop in China's pollution. We also understand that many international conferences, summits or events that concentrate thousands of individuals from different countries are being cancelled or made virtual because of the fear of extending the infection of coronavirus. This is happening in tech, business, science, and other sectors, even museums and Disneyland in several places in Asia. Venice, in the distant past a lovely town of canals, but converted in recent decades into a pathetic unpleasant attraction park with mass tourism of 20-30 million visits per year, is now deathly silent. What a respite for the Venetians! What good news for the ecologists and tourist-haters! This positively affects the reduction of CO2 emission and the whole wave the destruction associated with holiday and professional conference tourism. Possibly not so good for airline companies or travel agencies. It is certainly not very good for the economy in general, but it is fantastic for the environment.

For decades, we have witnessed the struggle between the expanding forces of the economy and the restoring forces of ecology. Conclusions that may be derived from observing this confrontation are that:

1) an ecological/green/sustainable capitalist economy is an oxymoron; that is, capitalism and sustainability are mutually exclusive ideas, and

2) the economy is winning almost all of the hands of the battle down. A prominent example of the failure to arrive at a green solution within the current model of our western-style societies in developed countries is illustrated in global warming conferences: a perfect example of hypocrisy in which climate scientists and many politicians, administrators and people living on the green lobbies behave as a "jet-set" among the highest ratio contaminators. At the same time, they exert their moral authority to demand that people in less privileged groups of our society, such as coal miners, teamsters working on oil pipelines, and mining-dependent workers sacrifice their own economic well-being to fight climate change. One of the latest failed attempts to find solutions came from the COP25 in Madrid of 2019 summit; another one in the long list of fruitless negotiations to try to stop or mitigate the adverse effects of the global warming already knocking on our doors.

The implicit or explicit explanation for the long list of unsuccessful negotiations is always the same: "yes, yes, we see the problem, but... you know, we have the economy to think about, and many people will suffer if we significantly modify any of its parameters, so let us continue to live as usual, even increasing our consumption habits, and we will meet again at next summit to eat in good restaurants, enjoy tourism and take beer with colleagues to try to find a solution". Putting it bluntly, there is no solution, and we are damned to a disaster unless a miracle happens.

Suddenly, much to the surprise of the economic and political gurus, the solution is spontaneously arising in front of our very eyes: a virus. As in H. G. Wells' The War of the Worlds, a microscopic Earth lifeform has finally proved to reverse the victory in what has so far been a losing war to reduce the excesses of a crazy, self-destructive world. Neither Greenpeace, nor Greta Thunberg, nor any other individual or collective organization have achieved so much in favor of the health of the planet in such a short time. A miracle happened, and, suddenly, all the excuses to avoid a reduction of contamination have been shown to be spurious. In less than two months, worldwide organizations have shown us how it is indeed possible to close museums, shut down whole towns, including such top touristic destinations as Venice, reduce the number of flights, and cancel many of the most important conferences and summits, etc. And this is only the beginning.

When I said in a previous article that we should ban conferences or hugely reduce their numbers, I knew that almost nobody would take this advice seriously, but it now comes as a complete surprise that I am now witnessing the very thing I was recommending. Suddenly, we realize that all the excuses to avoid the reduction of contamination were just excuses, and that we can perfectly live in a world without conferences, a world of academicians and scientists without beer-drinking with colleagues and feeding the narcissism of some researchers, an expensive luxury that we should not be able to afford in these times of climate crisis.

"Yes, we can", said the slogan of a former US president. Certainly, we can; we can stop the world if necessary and keep the people alive and healthy and happy without an expanding and destructive economic system. But words are not enough to move the world; arguments are not enough in the midst of irrational systems. With beasts like human beings, which are moved by a more terrible and irrational monster such as Money, only fear works, and sickness such as COVID-19 of moderate mortality (not so dangerous so far, it is not as mortal as the Ebola virus although it is more infectious) may be more effective than good arguments in pushing humanity in more sustainable directions.
Thanks https://www.calamitypolitics.com,https://www.illawarramercury.com.au,https://www.rt.com

நூறு சிறந்த சிறுகதைகள் - எஸ்.ராமகிருஷ்ணன் தேர்வு








நன்றிகள்: சென்ஷி மற்றும் நண்பர்களுக்கு



1. காஞ்சனை  :  புதுமைப்பித்தன்

2. கடவுளும் கந்தசாமி பிள்ளையும்  :  புதுமைப்பித்தன்

3. செல்லம்மாள்  :  புதுமைப்பித்தன்

4. அழியாச்சுடர்  :மௌனி

5. பிரபஞ்ச கானம்  :  மௌனி

6. விடியுமா  :  கு..ரா

7. கனகாம்பரம்  :  கு..ரா

8. நட்சத்திர குழந்தைகள்  :பி. எஸ். ராமையா

9. ஞானப்பால்  :  பிச்சமூர்த்தி

10. பஞ்சத்து ஆண்டி  :  தி.ஜானகிராமன்

11. பாயசம்  :  தி.ஜானகிராமன்

12. ராஜா வந்திருக்கிறார்  :  கு. அழகிரிசாமி

13. அன்பளிப்பு  :  கு. அழகிரிசாமி

14. இருவர் கண்ட ஒரே கனவு கு. அழகிரிசாமி

15. கோமதி  :  கி. ராஜநாராயணன்

16. கன்னிமை  :  கி.ராஜநாராயணன்

17. கதவு. கி.ராஜநாராயணன்

18. பிரசாதம்  :சுந்தர ராமசாமி

19. ரத்னாபாயின் ஆங்கிலம்  :சுந்தர ராமசாமி

20. விகாசம்  :  சுந்தர ராமசாமி

21. பச்சை கனவு  :லா..ராமாமிருதம்

22. பாற்கடல்  :லா..ராமாமிருதம்

23. ஒரு ராத்தல் இறைச்சி  :  நகுலன்

24. புலிக்கலைஞன்  :அசோகமித்ரன்

25. காலமும் ஐந்து குழந்தைகளும்  :  அசோகமித்ரன்

26. பிரயாணம்  :  அசோகமித்ரன்

27. குருபீடம்  :  ஜெயகாந்தன்

28. முன்நிலவும் பின்பனியும்  :  ஜெயகாந்தன்

29. அக்னிபிரவேசம்  :ஜெயகாந்தன்

30. தாலியில் பூச்சூடியவர்கள்  :  பா.ஜெயபிரகாசம்

31. காடன் கண்டது  :  பிரமீள்

32. உயரமாக சிவப்பா மீசை வைக்காமல்  :  ஆதவன்

33. ஒரு அறையில் இரண்டு நாற்காலிகள்  :  ஆதவன்

34. பைத்தியக்கார பிள்ளை  :  எம்.வி. வெங்கட்ராம்

35. மகாராஜாவின் ரயில்வண்டி  :  . முத்துலிங்கம்

36. நீர்மை  :  .முத்துசாமி

37. அம்மா ஒரு கொலை செய்தாள்  :  அம்பை

38. காட்டிலே ஒரு மான்  :அம்பை

39. எஸ்தர்  :  வண்ணநிலவன்

40. மிருகம்  :  வண்ணநிலவன்

41. பலாப்பழம்  :  வண்ணநிலவன்

42. சாமியார் விற்கு போகிறார்  :  சம்பத்

43. புற்றில் உறையும் பாம்புகள்  :  ராஜேந்திரசோழன்

44. தனுமை  :  வண்ணதாசன்

45. நிலை  :  வண்ணதாசன்

46. நாயனம்  :  .மாதவன்

47. நகரம்  :சுஜாதா

48. பிலிமோஸ்தவ்  :சுஜாதா

49. தக்கையின் மீது நான்கு கண்கள்  :  சா.கந்தசாமி

50. டெரிலின் சர்ட்டும் எட்டு முழு வேஷ்டி அணிந்த மனிதர்  :  ஜி. நாகராஜன்

51. ஒடிய கால்கள்  :  ஜி.நாகராஜன்

52. தங்க ஒரு  :  கிருஷ்ணன் நம்பி

53. மருமகள்வாக்கு  :  கிருஷ்ணன் நம்பி

54. ரீதி  :  பூமணி

55. இந்நாட்டு மன்னர்  :  நாஞ்சில் நாடன்

56. அப்பாவின் வேஷ்டி  :  பிரபஞ்சன்

57. மரி எனும் ஆட்டுக்குட்டி  :  பிரபஞ்சன்

58. சோகவனம் : சோ.தர்மன்

59. இறகுகளும் பாறைகளும்  :மாலன்

60. ஒரு கப் காப்பி  :  இந்திரா பார்த்தசாரதி

61. முங்கில் குருத்து  :  திலீப்குமார்

62. கடிதம்  :  திலீப்குமார்

63. மறைந்து திரியும் கிழவன்  :  சுரேஷ்குமார இந்திரஜித்

64. சாசனம்  :  கந்தர்வன்

65. மேபல்  :தஞ்சை பிரகாஷ்

66. அரசனின் வருகை  :  உமா வரதராஜன்

67. நுகம்  :  எக்பர்ட் சச்சிதானந்தம்

68. முள்  :  சாரு நிவேதிதா

69. ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்  :  சுப்ரபாரதி மணியன்

70. வனம்மாள்  :அழகிய பெரியவன்

71. கனவுக்கதை  :  சார்வாகன்

72. ஆண்மை  :  எஸ்பொ.

73. நீக்கல்கள்  :  சாந்தன்

74. மூன்று நகரங்களின் கதை  :கலாமோகன்

75. அந்நியர்கள்  :  சூடாமணி

76. சித்தி  :  மா. அரங்கநாதன்.

77. புயல்  :  கோபி கிருஷ்ணன்

78. மதினிமார்கள் கதை  :  கோணங்கி

79. கறுப்பு ரயில்  :  கோணங்கி

80. வெயிலோடு போயி  :  தமிழ்செல்வன்

81. பத்மவியூகம்  :  ஜெயமோகன்

82. பாடலிபுத்திரம்  :  ஜெயமோகன்

83. ராஜன் மகள்  :  பா.வெங்கடேசன்

84. தாவரங்களின் உரையாடல்  :  எஸ்.ராமகிருஷ்ணன்

85. புலிக்கட்டம்  :  எஸ்.ராமகிருஷ்ணன்

86. இருளப்பசாமியும் 21 ஆட்டுகிடாய்களும்  :வேல.ராமமூர்த்தி

87. ஒரு திருணையின் பூர்வீகம்  :சுயம்புலிங்கம்

88. விளிம்பின் காலம்  :  பாவண்ணன்.

89. காசி  :  பாதசாரி

90. சிறுமி கொண்டு வந்த மலர்  :  விமாலதித்த மாமல்லன்

91. மூன்று பெர்நார்கள்  :  பிரேம் ரமேஷ்

92. மரப்பாச்சி  :  உமா மகேஸ்வரி

93. வேட்டை  :  யூமா வாசுகி

94. நீர்விளையாட்டு  :  பெருமாள் முருகன்

95. அழகர்சாமியின் குதிரை  :  பாஸ்கர் சக்தி

96. கண்ணியத்தின் காவலர்கள்  :  திசேரா

97. ஹார்மோனியம்  :  செழியன்

98. தம்பி  :  கௌதம சித்தார்த்தன்

99. ஆண்களின் படித்துறை. ஜே.பி.சாணக்யா

100. பூனைகள் இல்லாத வீடு  :  சந்திரா
http://azhiyasudargal.blogspot.com/2009/07/blog-post_07.html

ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் (Oedipus complex) நவீன தீர்வு ?

காமத்தின் மூலம் உளவியல் என்ற கொள்கையை முன்வைத்தவர் உளவியலின் தந்தை என்று கருதப்படும் சிக்மண்ட் ஃபிராய்ட் இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற சிந்தனையாளர்களில் ஒருவர். கார்ல் மார்க்ஸ், சார்லஸ் டார்வின், ஐன்ஸ்டீன் போன்றோருக்கு இணையாக வைத்துப் போற்றப்படுபவர். குழந்தைமை, ஆளுமை, நினைவாற்றல், பாலியல், சிகிச்சை முறை போன்ற சொற்களுக்குப் புதிய அர்த்தங்களை உருவாக்கிக் காட்டியவர்.’காமத்தின் மூலம் கடவுள்’ என்ற கோட்பாட்டை ஓஷோ முன் வைப்பதற்கு சில பத்தாண்டுகளுக்கு முன்னமே ‘காமத்தின் மூலம் உளவியல்’ என்ற கோட்பாட்டை முன் வைத்தவர். 

ஃபிராய்ட் (1856 1939) ஆஸ்திரியாவில் பிறந்த ஒரு மருத்துவர், நரம்பியல் நிபுணர். ஆனால், அவரிடம் சிகிச்சைக்கு வந்த பலருக்கு இருந்தது உடல் பிணிகள் அல்ல; உளம் சார்ந்த பிரச்சினை களே என்பதை அறிந்து மனித மனதின் செயல்பாடுகள் பற்றி அறிவதில் ஆர்வம் கொண்டார். அதிலிருந்து முகிழ்ந்தவைதான் மனம் மாற்றிய அவரது கோட்பாடுகள்.
ஒரு பிறந்த குழந்தைக்கும் இந்த உலகத்துக்கும் இடையே இருக்கும் முதல் தொடர்பு தாயின் மார்பகம் மட்டுமே. குழந்தையின் தாய் என்பது தாயின் மாபகம்தான். பின்னர்தான் அது தனது தாயின் முகம், உடல், தாயின் வாசனை போன்ற இதர அம்சங்களை உணர்ந்து கொள்கிறது. தாயின் மேல் காதல் கொள்கிறது. இந்தக் காதலை ஃபிராய்ட் ‘ஈடிபஸ் காம்ப்ளக்ஸ்’ (Oedipus complex) என்று அழைக்கிறார்.
ஒரு குழந்தையின் மூன்று வயது முதல் ஐந்து வயது வரையிலான காலத்தை இந்த ஈடிபஸ் சிக்கலுக்கான காலக்கட்டமாக சிக்மண்ட் ஃபிராய்ட் வரையறுக்கிறார். ஓர் ஆண்குழந்தை தனது பால்ய பருவத்தை வெற்றிகரமாகக் கடந்து செல்ல வேண்டுமானால் அது ஈடிபஸ் சிக்கல் பருவத்தைக் கடந்து சென்றாக வேண்டும் என்பது ஃபிராய்டியக் கோட்பாடு.
ஃபிராய்டுக்குப் பின் வந்த இன்னொரு முக்கியமான உளவியலாளரான லக்கான் ஃபிராய்டின் கோட்பாட்டை அனுமானமாக்கிக் காட்டினார். ஆனாலும், ஃபிராய்டின் ஈடிபஸ் சிக்கல் என்ற கோட்பாட்டை அவர் மறுக்கவில்லை.
ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் என்பது மனநோய். கிரேக்க வீரன் ஈடிபஸ். பிறக்கும் போதே தந்தையைக் கொன்று தாயை மணப்பான் என்னும் சாபத்துடன் பிறக்கிறான். பயத்தில் அவனை மலையிலிருந்து தள்ளிவிடுகின்றனர். பழங்குடியின மக்களிடம் வளரும் அவன் இந்த ரகசியத்தை அறிந்து நாடு நோக்கி செல்கிறான். வழியில் வழிப்போக்கனிடம் யார் வழிவிடுவது என்று சண்டை மூள்கிறது. சண்டை பெரிதாக வழிப்போக்கனை கொன்றுவிடுகிறான். வழிப்போக்கனாக வந்தவன் நாயகன் சென்றுகொண்டிருக்கும் நாட்டின் அரசன். அரசனற்ற நாட்டிற்கு பதவியேற்க சில மாயப்புதிர்களை விடுவிக்க வேண்டும் என்று சொல்கின்றனர். அதை விடுவித்து விதவையான ராணியை மணக்கிறான். அவர்களுக்கு குழந்தைகளும் பிறக்கின்றன. இறந்த அரசன் யாரென அறிய முற்படும் போது வெகு நாட்களுக்கு முன் தான் கொன்ற வழிப்போக்கனே அரசன் என்றறிகிறான். இதை ராணியும் அறியும் போது தான் ஈடிபஸிற்கு தான் தந்தையை கொன்று தாயை மணந்து கொண்டதையும் அறிந்து கொள்கிறான். அவள் சாபம் பலித்ததையறிந்து தற்கொலை செய்து கொள்கிறாள். ஈடிபஸ் தன் கண்களை குருடாக்கிக் கொள்கிறான். இதைத் தான் சிக்மண்ட் ஃப்ராய்டு காம்ப்ளக்ஸாக மாற்றுகிறார். தாயின் மீது மகனுக்கும் தந்தையின் மீது மகளுக்கும் காமம் சார்ந்த ஈர்ப்பு இருந்தே வருகிறது. இது தவறில்லையா என்னும் குற்றவுணர்ச்சி எங்கு தோன்றுகிறதோ அங்கு தான் ஈடிபஸ் காம்ப்ளக்ஸ் ஆரம்பத்தினை கொள்கிறது. இதற்கு முடிவு இல்லையா எனும் போது கல்வியாலும் பிரக்ஞையை மேம்படுத்தி சமூகக் கட்டுபாடுகளுடன் தனிமனிதனை மாற்றும்போதும் அவனுடைய சுயமும் இச்சைகளும் கலாச்சார மீறல்களை மீறாமல் இருக்கும் என்கிறார்.
இதை டி.எச்.லாரன்ஸ் தன்னுடைய "SONS AND LOVERS" நாவலில் ஊடுபாவலாக சென்று தர்க்கங்களையும் தீர்வுகளையும் கொடுக்கிறார்

சுரங்கத்தில் வேலைப்பார்க்கும் குடும்பம் வால்டர் மோரலுடையது. அவருடைய மனைவி கெர்ட்ரூட் கப்பார்ட். அவர்களுடைய குழந்தைகள் வில்லியம், ஆன்னி, பால். கணவர் சுரங்கத் தொழிலுக்கு செல்வதால் அங்கிருந்த களைப்பினை போக்க நிச்சயம் மதுவினை உட்கொண்டாக வேண்டும். ஆனால் அது அதிகமாகும் தருணங்களில் அதுவே மனைவின் வதைபடுதலுக்கு காரணமாகிவிடுகிறது. இதனால் முழுதும் நொந்த மனைவியிடம் கணவன்பால் இருந்த காதல் காணாமலாகிறது. இதை அவளே உணரும் போது என்னிடம் இருக்கும் காதலை யாருக்கேனும் நான் பங்கிட்டுக் கொள்ள வேண்டுமே என ஏங்குகிறாள். மூத்த மகன் வில்லியமிடம் பாசத்தை பொழிகிறாள். வில்லியம் வேலை கிடைத்து நாட்டிங்காம்ஷைரிலிருந்து லண்டன் சென்றுவிடுகிறான். அங்கு அவன் காதல் வயப்பட்டு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வருகிறான். பின் நிமோனியா காய்ச்சலில் இறந்தும்விடுகிறான். இதற்கு பின் தான் நாவல் தன்னுடைய தீவிரத் தன்மையை எய்துகிறது.
காதலை வெளிக்காட்ட இருந்த வடிகாலான வில்லியம் இறந்தவுடன் அவளுடைய கவனம் முழுக்க பாலிடம் செல்கிறது. இது பாலினை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது என்பதே நாவலின் மீதக்கதையாகிறது. கப்பார்ட்டின் குணமும் எண்ணமும் அவளை வசீகரம் மிக்கவளாக அதே நேரம் சமூகத்தின் பார்வையில் வன்மம் நிறைந்தவளாக மாற்றிவிடுகிறது. சிறந்த உதாரணம் எனில் வில்லியம் தான் காதலிக்கும் பெண்ணின் புகைப்படத்தை அனுப்புகிறான். அவள் எல்லாவற்றிலிருந்தும் குறைகளை தேடியெடுத்து குமுறிக் கொண்டே இருக்கிறாள். இது பின்னர் பாலிடமும் நீள்கிறது. தன்னுடைய அன்பை பங்கெடுக்க யாரேனும் வந்துவிடுவார்களோ என்னும் எண்ணமே நாவல் முழுக்க அவளை உருவாக்கிக் கொண்டு வருகிறது.

அதே நேரம் பாலின் வாழ்க்கை காதலுக்கான இடமே இல்லாமல் வறண்டு இருக்கிறது. அங்கு இருக்கும் ஒரே சோலையாக அவனுடைய அம்மா இருக்கிறாள். மிரியம் மற்றும் க்ளாரா என இரண்டு பேர் அவனுடைய வாழ்க்கையில் வருகிறார்கள். இதில் க்ளாரா ஏற்கனவே மணமாகி விவாகரத்து இல்லாமல் பிரிந்து இருப்பவள். இருவருக்கும் அவன் மீது காதல் இருக்கிறது. ஆனால் பாலிடம் இருக்கும் நிலையற்ற தன்மை அவன் மீதான வெறுப்பை அவர்களுக்குள் கொடுக்கிறது.

பாலிற்கு ஒருக்கணம் தேவையெனவும் மறுக்கணம் இவ்வுலகம் தாயால் மட்டுமே இருந்தால் நன்றாக இருக்குமே எனவும் இரு எல்லைக்கு இடையில் ஊசலாட வைக்கிறது. மிரியமிடம் நேரடியாகவே சொல்கிறான் நான் மணமே செய்து கொள்ள போவதில்லை. அம்மாவுடன் இருந்தால் அதுவே போதும் என. அவனுடைய முட்டுக்கட்டையாக தாயின் அன்பே நாவல் முழுக்க இருக்கிறது.

ஈடிபஸின் பிரச்சினையில் தாய் யார் என்பது மகனுக்கு தெரியாமல் மாயத்தன்மையில் இருக்கிறது. இங்கோ என்ன பிரச்சினை ஏன் நிகழ்கிறது என எல்லாமே தெள்ளத்தெளிவாக தெரிகிறது. அப்படியிருக்கையில் ஏதேனும் ஒரு இருத்தல் காணாமல் போனால் இயல்பான வாழ்க்கைக்கு திரும்ப முடியுமல்லவா ? இது நாவலில் நிகழும் தர்க்கமாக மாறுகிறது. சிறைப்பட்ட வாழ்க்கை தான் காதலுடன் இருப்பதா என்னும் கேள்வியையும் சுமந்துகொண்டு செல்கிறான். என்ன ஆகிறது என்பதை மனதிலிருந்து சிறிதும் நீங்காத வண்ணம் சொல்லி நாவலினை முடிக்கிறார்.

நவீனம் செய்ய வேண்டிய எல்லா விஷயங்களையும் இந்நாவல் செய்கிறது. ஈடிபஸின் பிரச்சினையை வெளிப்படையாக்கி தாயின் பார்வையில் அதை நியாயமாக்க முற்பட்டால் அதுவே லாரன்சின் நாவலாக மாறுகிறது. முடிக்கும் போது எல்லாவித கலாச்சாரத்திற்குள்ளிருந்தும் வெளியே நிற்கும் ஒரு கருவையே இந்நாவல் பேசுகிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்ளலாம். அவர் நியாயப்படுத்துவதை நம்மால் எதிர்க்கவும் முடிவதில்லை என்பதில் தான் நாவல் தன் வெற்றியை கொள்கிறது.
Thanks www.kimupakkangal.com/,siruva.blogspot.com,www.aanthaireporter.com