Search This Blog

Sunday, February 24, 2019

மாசி மகத்தின் சிறப்புகள்


1.மகாவிஷ்ணுவாக அவதாரம் எடுத்தது மாசி மகத் திருநாளில் தான்.
2.மாசி மதித்து சங்கடகர சதுர்த்தி மிக விசேஷம் அந்நாளில் விரதம் இருப்பவர்கள் எல்லாவித தோஷங்களிலிருந்தும் விடுபடுவர்.
3.மாசி மாதத்தன்று தான் பார்வதிதேவி காளிந்தி நதியில் ஒரு தாமரை மலரில் வலம்புரிச் சங்காகத் தோன்றினாள்.
4.சிவபெருமான் திரு விளையாடல்கள் பல புரிந்தது மாசி மாதத்தில் தான்.

5.மாசி மாதத்தன்று மந்திர உபதேசம் பெறுவது சிறந்ததாகக் கருதப் படுகிறது.
6.குலசேகர ஆழ்வார் மாசி மாதம் புனர்பூச நட்சத்திர நாளில் தான் அவதரித்தார்.
7.அன்னதானத்தின் பெருமைகளை உணர்த்துவது மாசி மகம் தான்.
8.மாசி மாத பூச நட்சத்திரம் தினத்தன்று தான் முருகப்பெருமான் சுவாமி மலையில் தன் தந்தை சிவா பெருமானுக்கு உபதேசம் செய்தார்.
9.பிரம்மஹத்தி போன்ற பெரும் பாவங்களைப் போக்கி பேய்க்கும் நற்கதி கொடுக்கும் இரு ஏகாதசிகள் வருவது மாசி மாதத்தில் தான்.
10.உயர் படிப்பு படிக்க விரும்புபவர்கள் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் மாசி மக நாளில் அவற்றைத் தொடங்கினால் அதில் சிறந்து விளங்கலாம்.
11.அகத்தியர் தன் விருப்பங்கள் நிறைவேற தவம் இருந்து அருள் பெற்றது மாசி மாதத்தில் தான்.
12.காரடையான் நோன்பு சாவித்திரி விரதமும் இம்மாதத்தில் வரும் விசேஷ விரதங்கள்.மாசி மகத்தன்று காமதகன் விழா நடைபெறுகிறது.
13.மாசி மாதத்தில் வீடு குடிபோனால் வடைகை வீடாக இருந்தாலும் அவ் வீட்டில் அதிக நாட்கள் வாழ்வார்கள்.எனவே இம்மாதத்தில் புது வீடு கிரகபிரவேசம் நடத்தலாம்.
14.இம் மாதத்தை மாங்கலய மாதம் என்றும் கூறுவார்.
15.மாசி மக நட்சத்திரத்தில் பிறப்போர் ஜனத்தை ஆள்வார் என்பதும் மாசிக் கயிறு பாசி படியும் என்பதும் பழமொழி .இம்மாதத்தில் பெண்கள் புது மாங்கல்யச் சரடு கட்டிக் கொள்வது சிறப்பானது.
16.மாசி மக புனித நீராடல் செய்ய இயலாதோர் மாசி மக புராணம் படிக்கலாம்.அல்லது கேட்கலாம் அதுவும் புண்ணியமே.
17.மாசி மகத்தன்று நெல்லையப்பர் கோவில் பொற்றாமரை தீர்த்தத்தில் திருநாவுக்கரசருக்கு தெப்பத் திருவிழா நடத்துவர்.இதற்கு அப்பர் தெப்பம் எனப் பெயர்.
18.மாசி மாதத்தில் அதிகாலை எழுந்து குளித்தப் பின் துளசியால் மகாவிஷ்ணுவை வழிபட்டால் ,வைகுண்டத்தில் இடம் கிடைக்கும்.
19.மாசி மக நன்னாளில் அம்பிகையை குங்குமத்தால் அர்ச்சித்து வழிபடுபவர்களுக்கு ,இன்பமும் வெற்றியும் தேடி வரும்.
20.மாசி சுக்ல பஞ்சமியில் ஸ்ரீ சரஸ்வதி தேவியை மனமுள்ள மலர்களால் அலங்கரித்து வழிபட்டால் ,கல்வியில் சிறந்து விளங்கலாம்.


Monday, February 18, 2019

ஒரு காஷ்மீர் மாணவியின் உளக் குமுறல்...


இராணுவத்துடன்
படுப்பதுதான் தேசபக்தியா?
காஷ்மீர் மாணவி....
"நீங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்கள் என்றல்லவா இங்கே பிரச்சாரம் செய்யப்படுகிறது?”
“நாங்கள் பாகிஸ்தானி ஆதரவாளர்களா? நாங்கள் இந்தியாவை எந்தளவுக்கு வெறுக்கிறோமோ அதே அளவுக்கு பாகிஸ்தானையும் வெறுக்கிறோம். எங்களை சுதந்திரமாக விட்டால் போதும் பிழைத்துக் கொள்வோம்”
”இந்திய அரசு உங்களுக்காக நிறைய செலவு செய்கிறது நிறைய சலுகைகள் கொடுத்துள்ளது என்றெல்லாம் வெளியே பிரச்சாரம் செய்யப் படுகிறதே? அவ்வளவையும் பெற்றுக் கொண்டு இந்தியாவுக்கு எதிராக பேசுவது நன்றி கெட்டத்தனம் என்றல்லவா ஆர்.எஸ்.எஸ் காரர்கள் சொல்கிறார்கள்?
வினவு
”முதலில் எங்களுக்காக செலவு செய்கிறது என்று சொல்வதே பித்தலாட்டமான வாதம்… எங்களை வைத்து செலவு செய்கிறது என்று சொல்ல வேண்டும்.
அப்படி செலவு செய்யப்படும் பணம் எங்கே போகிறது தெரியுமா? ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரரை நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.
இராணுவம்தான் அத்தனை காசையும் தின்கிறது. இவர்களின் வேலை என்ன தெரியுமா? நல்ல வளமான இடத்தை ஆக்கிரமித்து முகாம் போட்டுக் கொள்கிறார்கள்.. அரசு ஒதுக்கும் காசில் நன்றாக குடித்து விட்டு பெண்கள் தனியே எதிர்ப்படும் போது அவர்கள் பார்க்கும் விதமாக தங்கள் ஜிப்பைத் திறந்து காட்டுகிறார்கள்…..
உங்கள் குடும்பத்துப் பெண் பிள்ளைகளை அந்த இடத்தில் வைத்து யோசித்துப் பார்த்தால் தான் உங்களுக்கு எங்கள் வலி புரியும்”
“இந்த மாதிரியான அத்துமீறல்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடக்கிறதல்லவா?”
“அத்துமீறல்கள் என்று ஒரே வார்த்தையில் எங்கள் வாழ்க்கையை நீங்கள் சுருக்க முடியாது. ஒன்றரை லட்சம் மக்கள் இதுவரை கொல்லப்பட்டிருக்கிறார்கள்.. சுமார் பத்தாயிரம் பெண்கள் அரை விதவைகளாக இருக்கிறார்கள்…
அரை விதவை என்ற பதத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?”
”சொல்லுங்கள்”
”இந்தப் பெண்களின் கணவன்மார்களெல்லாம் இராணுவத்தால் ‘விசாரணை’ என்ற பேரிலோ அல்லது வேறு முகாந்திரங்களைச் சொல்லியோ அழைத்துச் செல்லப்பட்டவர்கள்… எத்தனையோ ஆண்டுகளாகியும் அவர்களெல்லாம் திரும்பவில்லை..
கட்டியவன் இருக்கிறானா செத்துப் போய் விட்டானா என்று கூட இவர்களுக்குத் தெரியாது. இறந்து விட்டான் என்று உத்திரவாதமாக தெரிந்தால் கூட மறுமணம் செய்து கொண்டு புது வாழ்க்கையைத் தொடங்கலாம்.. அல்லது மனதை சமாதானப்படுத்திக் கொண்டு எஞ்சிய வாழ்க்கையைக் கழிக்கலாம்.. தங்கள் கணவன்மார்களுக்கு என்ன நேர்ந்ததென்றே இவர்களுக்குத் தெரியாது…
ஆண்டுக்கணக்கில் இப்படி அரை விதவைகளாகவே கழித்து வருகிறார்கள்…”
”இதெல்லாம் இந்தியாவின் முக்கிய ஊடகங்களில் வந்ததில்லையே…”
“எப்படி வரும்? ஜே.என்.யு விவகாரத்தில் பார்க்கிறீர்கள் அல்லவா? வேட்டையாடும் வெறியோடு எங்கள் மீது பாய்ந்து குதறும் வாய்ப்புக்காகத்தானே காத்திருக்கின்றன இந்த ஊடகங்கள்..
அரை விதவைகள் பற்றிச் சொன்னேன் அல்லவா..? அதே போல் எண்பதினாயிரம் அனாதைகளை உங்கள் இராணுவம் எங்களுக்குப் பரிசளித்துள்ளது தெரியுமா.
இப்போது சொல்லுங்கள் இதெல்லாம் எங்களுக்கு உங்கள் அரசாங்கம் கொடுத்த சலுகைகளா?”
“ஆனால் இவற்றையெல்லாம் நீங்கள் ஏன் இந்தியாவின் மற்ற பகுதி மக்களிடம் எடுத்துச் செல்லக் கூடாது?”
“தோழர்.. புரிந்து கொள்ளுங்கள்.. அங்கே ஒவ்வொரு காஷ்மீரிக்கும் ஒரு இராணுவ வீரனையோ போலீசையோ உளவாளியையோ நிறுத்தி வைத்திருக்கிறார்கள்..
நீங்கள் யாரிடம் பேசுகிறீர்கள் என்றே உங்களுக்குத் தெரியாது..
நாங்கள் எங்களைச் சுற்றி இருக்கும் யாரையும் நம்ப முடியாது. யாரையும், எதையும் சந்தேகத்தோடு பார்த்தால் தான் பிழைத்துக் கிடக்கவே முடியும்..
ஆள் தெரியாமல் யாரிடமாவது எதையாவது பேசப் போனால் ‘எல்லையைக் கடக்க முயற்சித்த போது சுட்டுக் கொல்லப்பட்ட தீவிரவாதியின் புகைப்படம் இதோ’ என்று மறுநாள் ரத்தம் தோய்ந்த எங்கள் சடலங்கள் தலைப்புச் செய்தியில் வந்து விடும்..
எப்போதும் யாரோ உங்களைக் கவனித்துக் கொண்டே இருக்கும் அந்த உளவியல் சித்திரவதையை மற்றவர்கள் உணர்வது கடினம்.”
”ஆனால், இது ஒடுக்கப்படும் எல்லா மக்களும் எதிர் கொள்வது தானே? தண்டகாரண்யாவிலும் வட கிழக்கிலும் கூட மக்கள் இதே துயரங்களைத் தானே எதிர் கொள்கிறார்கள்?”
“நான் தெளிவாக ஒன்றைச் சொல்லி விடுகிறேன்
. நாங்கள் புரட்சிக்காக காத்துக் கொண்டிருக்க முடியாது. இந்திய துணைக்கண்டமெங்கும் ஒடுக்கப்படும் மக்கள் இருக்கிறார்கள் என்பது உண்மை தான். அவர்களோடெல்லாம் ஒரு ஐக்கியத்தைக் கட்டமைப்பதன் மூலம் தான் இந்திய ஆளும் வர்க்கத்தை வெல்ல முடியும் என்பதும் எதார்த்தமானது தான்…
ஆனால், அப்படியான ஒரு ஐக்கியம் வரும் வரைக்கும் எங்களை என்ன செய்யச் சொல்கிறீர்கள்? செத்து மடிய வேண்டுமா? என்றோ ஒரு நாள் வரும் புரட்சிக்காக இன்றைக்கு நாங்கள் பிணங்களை எண்ணி விளையாடிக் கொண்டிருக்க வேண்டுமா?
எங்கள் மாநிலத்தில் மூன்றில் ஒருவர் உளவியல் ரீதியாக மன அழுத்த நோயால் (Dipression) பீடிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீங்கள் அறிவீர்களா? தோழர்…
நாங்கள் செத்து வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். முதலில் உடனடியாக நாங்கள் எங்கள் எதிர்ப்பை பதிய வைக்க வேண்டும்.. எங்கள் குரல்கள் நின்று விட்டால் குரல்வளைகள் அறுத்து எரியப்பட்டு விடும்.
ஒடுக்கப்பட்ட மக்களின் பரந்துபட்ட ஒற்றுமைக்காக நாங்கள் என்றுமே நிற்கிறோம்.. ஆனால் அதுவரை சும்மா இருக்க முடியாது..”

Gene analysis may have finally revealed what killed 15 million Aztecs



When Europeans arrived in North America, they carried with them pathogens against which the continent's native people had no immunity. And the effects could be devastating. Never was this more true than when smallpox wiped out 5-8 million Aztecs shortly after the Spanish arrived in Mexico around 1519. Even worse was a disease the locals called “huey cocoliztli" (or “great pestilence" in Aztec) that killed somewhere from 5 to 15 million people between 1545 and 1550. For 500 years, the cause of this epidemic has puzzled scientists. Now an exhaustive genetic study published in Nature Ecology and Evolution has identified the likely culprit: a lethal form of salmonella, Salmonella enterica, subspecies enterica serovar Paratyphi C. (The remaining Aztecs succumbed to a second smallpox outbreak beginning in 1576.)

In a paper published in Nature Ecology & Evolution, they describe how DNA extracted from the teeth of 29 skeletons buried in a cemetery in southern Mexico revealed previously unidentified traces of the salmonella enterica bacterium.
The bacterium is known to cause enteric fever, of which typhoid is an example. According to the study, the symptoms tally with those mentioned in records from the time, which describe victims developing red spots on the skin, vomiting, and bleeding from various body orifices.
The epidemic was one of several to hit the indigenous population soon after the arrival of Europeans in the early 16th century. 
"When the Europeans arrived in Mexico, they brought with them lots of different diseases," Ashild Vagene, co-author of the study, told The Independent. "There were dozens of epidemics across the New World and Mexico was particularly hard hit."

Thursday, February 14, 2019

ப்ரயோக சக்கர ஆசனத்தில் அமர்ந்து இருக்கும் ஶ்ரீ நரசிம்மர்

வேறு எங்கும் காண முடியாத
ப்ரயோக சக்கர ஆசனத்தில் அமர்ந்து
இருக்கும் ஶ்ரீ நரசிம்மர்



இடம்:நாக்பூர் ஶ்ரீ ராமர் கோவில்

Wednesday, February 13, 2019

The Way the Brain Creates a Timeline of the Past

Cecile G. Tamura
The brain can’t directly encode the passage of time, but recent work hints at a workaround for putting timestamps on memories of events.
https://bit.ly/2N6PDc0
"As sensory neurons fire in response to an unfolding event, the brain maps the temporal component of that activity to some intermediate representation of the experience — a Laplace transform, in mathematical terms.
That representation allows the brain to preserve information about the event as a function of some variable it can encode rather than as a function of time (which it can’t). The brain can then map the intermediate representation back into other activity for a temporal experience — an inverse Laplace transform — to reconstruct a compressed record of what happened when." https://bit.ly/1vfaaPE
Other scientists independently uncovered neurons, dubbed “time cells,” that were “as close as we can possibly get to having that explicit record of the past. These cells were each tuned to certain points in a span of time, with some firing, say, one second after a stimulus and others after five seconds, essentially bridging time gaps between experiences. Scientists could look at the cells’ activity and determine when a stimulus had been presented, based on which cells had fired. This was the inverse-Laplace-transform part of the researchers’ framework, the approximation of the function of past time. “
“A second can last forever. Days can vanish. It’s this coding by parsing episodes that, to me, makes a very neat explanation for the way we see time. We’re processing things that happen in sequences, and what happens in those sequences can determine the subjective estimate for how much time passes.”
That timeline could be of use not just to episodic memory in the hippocampus, but to working memory in the prefrontal cortex and conditioning responses in the striatum.
Scientists also started to show that the same equations that the brain could use to represent time could also be applied to space, numerosity (our sense of numbers) and decision-making based on collected evidence — really, to any variable that can be put into the language of these equations. “For me, what’s appealing is that you’ve sort of built a neural currency for thinking, If you can write out the state of the brain … what tens of millions of neurons are doing … as equations and transformations of equations, that’s thinking."
One day cognitive models could even lead to a new kind of artificial intelligence built on a different mathematical foundation than that of today’s deep learning methods. Only last month, scientists built a novel neural network model of time perception, which was based solely on measuring and reacting to changes in a visual scene.
But before any application to AI is possible, scientists need to ascertain how the brain itself is achieving this.

Women in ART















எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!


Vijai Bala
வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.
மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமாற விரும்புவதையும் நாம் காண்கிறோம். ஆனால் இஸ்லாத்தில்இதற்கு அனுமதி இல்லை.
எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று நபிகள் நாயகம் கட்டளை பிறப்பித்தார்கள்.
நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர்.
உடனே முஆவியா (ரலி) அவர்கள் 'அமருங்கள்' என்றனர். 'தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன்
என்றும் முஆவியா (ரலி) கூறினார்கள்.நூல்கள்: திர்மிதீ 2769 அபூதாவூத் 4552
மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிருந்து நாம் அறிகிறோம்.
உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம்.
இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்கள்: அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678
தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.
ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள்.
நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் 'பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே! அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள்.
உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர்கள் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்' என்று கூறினார்கள்.
நூல்: முஸ்லிம் 701
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம்.
யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார்ந்து தொழ அனுமதி உண்டு.
அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை.
ஆனாலும் முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்க பின்னால் மற்றவர்கள் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது.
ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோற்றமளிக்கின்றது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள்.
இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.வரவேற்பதற்காகவும், அன்பைளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக் கூடாது.
பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர். (திர்மிதீ 3807)
நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.
ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள்.
இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.

மகாபாரதம் உணர்த்தும். உண்மைகள்.



மோகத்தில் வீழ்ந்துவிட்டால், மொத்தமாய் வீழ்ந்திடுவாய்
- சாந்தனுவாய்....
சத்தியம் செய்துவிட்டால், சங்கடத்தில் மாட்டிடுவாய்......
- கங்கை மைந்தானாய்..

முற்பகல் செய்யின், பிற்பகல் விளையும்
- பாண்டுவாய்....


ஒவ்வொரு வினைக்கும், எதிர்வினை உண்டு
- குந்தியாய்...

குரோதம் கொண்டால், விரோதம் பிறக்கும்
- திருதராஷ்டிரனாய்....

பெற்றோர்கள் செய்யும் பாவங்கள், பிள்ளைகளை பாதிக்கும்
- கௌரவர்கள்...

பேராசை உண்டாக்கும், பெரும் அழிவினையே
- துரியோதனனாய்...

கூடா நட்பு, கேடாய் முடியும்
- கர்ணனாய்...

சொல்லும் வார்த்தை, கொல்லும் ஓர்நாள்
- பாஞ்சாலியாய்..


தலைக்கணம் கொண்டால், தர்மமும் தோற்கும்
- யுதிஷ்டிரனாய்.....

பலம் மட்டுமே, பலன் தராது
- பீமனாய்....

இருப்பவர் இருந்தால், கிடைப்பதெல்லாம் வெற்றியே
- அர்ஜூனனாய்....

சாஸ்திரம் அறிந்தாலும், சமயத்தில் உதவாது
- சகாதேவனாய்..

விவேகமில்லா வேகம், வெற்றியை ஈட்டாது
- அபிமன்யூ

நிதர்சனம் உணர்ந்தவன், நெஞ்சம் கலங்கிடான்
- கண்ணனாய்....

வாழ்க்கையும் ஒரு பாரதம்தான்....
வாழ்ந்திடலாம்.

- சித்தர்களின் குரல்.

Monday, February 11, 2019

ஆதித்ய ஹ்ருதயம்' தமிழில்!


தினமும் சூரியோதய வேளையில் அகத்தியர் அருளிய "ஆதித்ய ஹ்ருதயம்' சொல்வது மிகுந்த நன்மை தரும்.
* அதிதியின் புத்திரனே! நீயே இந்த உலகத்தை படைத்திருக்கிறாய். உலக ஜீவன்கள் தங்கள் செயல்களை செய்யும்படியான பலத்தை கொடுக்கிறாய். எவ்வித எதிர்பார்ப்புமின்றி உலகிற்கு ஒளி கொடுப்பதற்காக ஆகாயத்தில் சஞ்சரிக்கிறாய். ஒளிமிக்க கதிர்களை கொண்டிருக்கிறாய்.
* தங்க நிறமானவனே! நீ அபரிமிதமான பலன்களை கொடுக்கிறாய். சுவர்ணமயமான இந்த பிரபஞ்சத்திற்கு நீயே அதிபதி. நீயே பகலைப் படைக்கிறாய்.
* கருத்த குதிரைகளால் இழுக்கப்படுபவனே! ஆயிரம் கதிர்களைக் கொண்டவனே!"சப்த' என்ற பெயரை உடைய குதிரை பூட்டிய தேரை உடையவனே! விசேஷ பிரகாசம் உள்ளவனே! இருட்டை நாசம் செய்கிறவனே! உன்னிடமிருந்தே சகல சுகமும் எங்களுக்கு கிடைக்கிறது. இவ்வுலகத்தில் உள்ள அனைத்து பொருட்களையும் நீயே அழிக்கிறாய்.
* சூரியனே! ஆகாயத்திற்கு நீயே நாதன். ராகு என்னும் இருளைப் பிளந்து கொண்டு வெளியில் வரும்படியான சக்தியைக் கொண்டிருக்கிறாய். ரிக், யஜூர், சாமம் என்ற வேதங்களின் முடிவைக் கண்டவனாய் இருக்கிறாய்.
* கண்கண்ட தெய்வமே! உன்னிடத்திலிருந்தே மழை உண்டாகிறது. நீ கடலரசனின் நண்பன். தட்சிணாயண காலத்தில் விந்தியபர்வதம் என்ற மலையின் வழியாக செல்கிறாய். ஆகாயத்தில் தெப்பமாய் மிதக்கிறாய். உன்னிடமிருந்தே வெயில் பிறக்கிறது.
*வட்ட வடிவத்தை உடையவனே! விரோதிகளை நாசம் செய்கிறவனே! உதயமாகும் போது மஞ்சள் நிறம் கொண்டவனே! மதிய வேளையில் எல்லா வஸ்துகளையும் தகிக்கச் செய்கிறவனே! சாஸ்திரங்களை உபதேசிக்கிறவனே! உலகிற்கு வழிகாட்டுபவனே!
மகத்தான ஒளியை உடையவனே! எல்லாப் பிராணிகளிடமும் அன்பு கொண்டவனே! அந்தப் பிராணிகளை அழிப்பவனே! நட்சத்திரங்களுக்கும் கிரகங்களுக்கும் அதிபதியே! பிரபஞ்சத்தை நிறைபெறச் செய்கிறவனே! எல்லா தேவதை களைக் காட்டிலும் அதிகமான சக்தியை உடையவனே! இந்திரன், வருணன், தாரா, பகன், பூஷா, அர்யமா. அர்சிஸ், விவஸ்வான், த்வஷ்டா, ஸவிதா, விஷ்ணு என்ற 12 மூர்த்திகளை உள்ளடக்கியவனே! உனக்கு நமஸ்காரம்.
* உருகியோடும் தங்க ஆறு போன்ற பிரகாசம் கொண்டவனே! அக்னியின் வடிவே! சகல உலகமும் தோன்றக் காரணமானவனே! அஞ்ஞானம் என்ற இருளை போக்குபவனே! கருணாமூர்த்தியே! உலகிலுள்ள சகல ஜீவன்களின் புண்ணிய பாவங்களுக்கும் சாட்சியாய் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.
* உலகம் அழியும் காலத்தில் இந்த ஜகத்தை நீயே அழிக்கிறாய். மீண்டும் நீயே அதை சிருஷ்டிக்கிறாய். ஜலத்தை வற்றச் செய்கிறாய். உலகையே எரிக்கிறாய். மழை பெய்யச் செய்கிறாய். எல்லா உயிர்களும் அழித்து அடங்கியிருக்கும் போது நீ மட்டும் விழித்துக் கொண்டிருக்கிறாய்.
சர்வாத்மாவே! சர்வேஸ்வரனே! வேதங்களால் கூட உன்னை அறியமுடியாது. ஆதித்யனே! வேத விற்பன்னர்கள் செய்யும்யாகமாகவும், அதன் பலனாகவும் இருப்பவனே! உனக்கு நமஸ்காரம்.

The facts about Erwin König Sent to Stalingrad to Take on The Very Effective Soviet Sniper Vasily Zaytsev


Figure1.Major Erwin König

Vasily Zaytsev was one of the most successful snipers in the Soviet army. According to documents from the time, he was so prolific that the Wehrmacht sent their own super sniper, Erwin König, to take him out. This allegedly resulted in a sniper duel which ended with Zaytsev killing König during the Battle of Stalingrad.

 
This is a story that sparks the imagination and resulted in the film Enemy at the Gates. However, there is very little historical evidence to confirm this. There is no official information about who Erwin König was and whether he was ever sent out to kill Zaytsev.
The only sources about the duel between Zaytsev and König come from the Soviet army and Zaytsev himself. In his memoirs, Zaytsev refers to König as Herr Koning and identifies him as the head of the German sniper school in Berlin. This was according to documents taken from the body after the duel in Stalingrad.

Sunday, February 10, 2019

அறு சுவை உணவில் எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும் என்று தெரியுமா?


உணவு என்று சொன்னால், உணவின் சுவைதான் நினைவுக்கு வரும். சுவையில்லாத உணவு உணவாகாது. ஆறு சுவையுடன் கூடிய உணவே முறையான உணவாகும்.
நாக்கு அறியக் கூடிய சுவைகள் ஆறுவகை எனப் பழந்தமிழ் மருத்துவம் கூறுகிறது.
உடலில் இயங்குகின்ற முக்கியமான தாதுக்களுடன் ஆறு சுவைகளும் ஒன்றுகூடி உடலை வளர்க்கப் பயன்படுகின்றன.
உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு தாதுக்களால் ஆனது. இவற்றுள் ஏழாவது தாதுவாகிய மூளை சரியாக இயங்க வேண்டுமானால், பிற தாதுக்கள் ஆறும் தகுந்த அளவில் உடலில் இருக்க வேண்டும்.
இந்த ஆறு தாதுக்களை வளர்ப்பவை ஆறு சுவைகளாகும்.
துவர்ப்பு ரத்தம் பெருகச் செய்கிறது. இனிப்பு தசை வளர்க்கிறது. புளிப்பு கொழுப்பை உற்பத்தி செய்கிறது. கார்ப்பு எலும்பை வளர்த்து உறுதியாக்குகிறது. கசப்பு நரம்பை பலப்படுத்துகிறது. உவர்ப்பு உமிழ் நீரைச் சுரக்கச் செய்கிறது. உடல் தாதுக்கள் பெருக்கவும் அவற்றை உடலுக்கு ஏற்றவாறு சமன் செய்வதும் ஆறு சுவைகள் கொண்ட உணவுகளாகும்.
துவர்ப்பு:
உடல் நலத்துக்கு மிகவும் உகந்தது. விருப்பு வெறுப்பில்லாதது. வியர்வை, ரத்தப்போக்கு, வயிற்றுப் போக்கை சரி செய்யும். வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அத்திக்காய் போன்றவை துவர்ப்பு சுவையுடையவை.
இனிப்பு:
மனத்துக்கும் உடலுக்கும் உற்சாகத்தைத் தரக்கூடியது. இது அதிகமானால் எடை கூடும். உடல் தளரும். சோர்வும் தூக்கமும் உண்டாகும். பழங்கள், உருளை, காரட், அரிசி, கோதுமை, கரும்பு போன்ற பொருள்களில் இனிப்புச் சுவை இருக்கிறது.
புளிப்பு:
உணவின் சுவையை அதிகரிக்கும் சுவையிது. பசியைத் தூண்டும். நரம்புகளை வலுவடையச் செய்யும். இது அளவுக்கு அதிகமானால், பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், ரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்றவற்றை உண்டாக்கும். உடல் தளரும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவை புளிப்புச் சுவை கொண்டவை.
காரம்:
பசியைத் தூண்டும். செரிமானத்தைத் தூண்டும். உடல் இளைக்கும். உடலில் சேர்ந்துள்ள நீர்ப்பொருளை வெளியேற்றும். ரத்தத்தைத் தூய்மையாக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவை காரச்சுவை கொண்டவை.
கசப்பு:
பெரும்பாலும் வெறுக்கக் கூடிய சுவை. ஆனாலும் உடலுக்கு மிகுந்த நன்மையைத் தரக்கூடிய சுவை இதுவே. இது, நோய் எதிர்ப்புச் சக்தியாகச் செயல்படும். தாகம், உடல் எரிச்சல், அரிப்பு, காய்ச்சல் ஆகிய இவற்றைத் தணிக்கும். ரத்தத்தைச் சுத்திகரிக்கும் பாகற்காய், சுண்டை, கத்தரி, வெங்காயம், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம் பூ, ஓமம் போன்றவற்றிலிருந்து கசப்புச் சுவையைப் பெறலாம்.
உவர்ப்பு:
அனைவரும் விரும்புகின்ற சுவை. தவிர்க்க இயலாதது. உமிழ் நீரைச் சுரக்கச் செய்யும். மற்ற சுவைகளைச் சமன் செய்யும். உண்ட உணவைச் செரிக்க வைக்கும். கீரைத்தண்டு, வாழைத் தண்டு, முள்ளங்கி, பூசணி, சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் உவர்ப்புச் சுவை மிகுதியாக உள்ளது.
உணவு வகைகளை சுவைக்கு ஒன்றாகச் சமைத்து உண்பதாக வைத்துக்கொள்வோம். இலையில் உணவு பரிமாறப்பட்டுள்ளது. எந்தச் சுவையை முதலில் உண்ண வேண்டும். எந்தச் சுவையை இறுதியில் உண்ண வேண்டும் என்பது தெரிந்திருக்க வேண்டும்.
சிலர், இலையில் உணவு பரிமாறப்படும் போதே ஒவ்வொன்றாக உண்டு கொண்டேயிருப்பார்கள். அது தவறு.
உணவு முழுமையாகப் பரிமாறப்பட்ட பின்பும், முதலில் உண்ண வேண்டியது, இனிப்பு. அடுத்து அடுத்ததாகப் புளிப்பு, உப்பு, காரம், கசப்பு ஆகிய சுவைகளை உண்ட பின்பு இறுதியாகத் துவர்ப்புச் சுவையை உண்ண வேண்டும்.
இவ்வாறாக உணவை உண்பதனால், உடம்பில் ஆட்கொண்டிருக்கும் பஞ்ச பூதங்கள் சமநிலை பெறும்.
இவ்வாறு உண்ட பின்பு முடிவாக தயிரும் உப்பும் கலந்து உண்டால், உணவில் கலந்துள்ள முக்குற்றங்கள் தோசம் நீங்கி விடும்.
உடம்பில் நோய் தோன்றுவதற்கான கூறுகள் அனைத்தும் அகற்றப்பட்டுவிடும்.
ஆறு சுவை உணவை மட்டும் உண்டுவிட்டால் போதாது.
அதற்கு உரிய காலத்தில் உணவு உண்ண வேண்டும். சூரியன் எழும்போதும், மறையும் போதும் எந்த உணவையும் உண்ணக் கூடாது.
கோபமோ கவலையோ துக்கமோ ஏற்படும் போதில் உணவு உண்பதைத் தவிர்த்திட வேண்டும். அதே போல், நின்று கொண்டும் கைகளை ஊன்றிக் கொண்டும் உணவு உண்ணக் கூடாது.
எவ்வகை உணவாயினும் அதை உண்பதற்கு வாழை இலையைப் பயன்படுத்தினால், உணவினால் உண்டாகக் கூடிய தீமைகள் முற்றிலும் நீங்கிவிடும்.
உணவு உண்டு முடிந்த பின்பு குறைந்த அளவு நூறு அடி தூரமாவது நடந்து விட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானது.
உணவின் சுவைக்கும் உடல் நலத்துக்கும் உள்ள தொடர்பை அறிந்து கொண்டால், உடல் நோய்களைத் தீர்க்கலாம். உடலில் நோய்கள் வராமல் தடுக்கலாம். உடல் உறுப்புகள் நன்கு வளரச் செய்யலாம்.
உடல் உறுப்புகள் பழுதில்லாமல் செழிப்பாகச் செம்மையாக அமைந்துவிட்டால் உடல் இன்பமாக இருக்கும். அதன்பின் வாழ்க்கை இன்பமாக இருக்கும். உடலில் ஏற்படும் குறைபாடுகளுக்கு ஏற்ப மனம் இருக்கும்.
நோயுடைய உடலைக் கொண்ட மனம், மகிழ்ச்சியை எண்ணாமல் துன்பப்படும். நாக்கின் விருப்பத்துக்கு ஏற்ப உணவை உண்ணும் நாகரிகம் வளர்ந்து வருகிறது.
எதை எப்போது சாப்பிடுவது என்றில்லாமல் எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்னும் பழக்கத்தினால், நோய்களுக்கு இடமளிப்பவர்கள் இருக்கின்றார்கள்.
உயிர் வாழ்வதற்கு உணவு வேண்டும் என்பதற்காக நேரம் கிடைக்கும் போதெல்லாம் உண்டு கொண்டிருந்தால் தம்மைத்தாமே வருத்தத்தில் ஆழ்த்திக் கொள்வதாகும்.
வாழ்க்கையை வாழும் முறையை அறிந்தவர்கள் சொல்லும் சொல்லை இகழ்ந்தால் வாழ்க்கையை இகழ்ந்தது போலாகும். ஆறு சுவையுடைய உணவுகளை உண்டு வந்தால், இல்லற வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
சில சமயத்தில் ஆறு சுவை உணவை உண்ண இயலாமல் போகலாம். இயலும் சமயத்தில் உண்டு வந்தால் அவை சமநிலைக்கு வந்து உடல் நிலையைப் பாதுகாக்கும்.
அனைவருக்கும் பகிருங்கள்!

குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிப்பதன் மூலம் குற்றம் கரைந்து போகுமா?

குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவித்து வெளியே வந்த பின் அவர்கள் மீதான பார்வை மாறவேண்டுமா? அவர்கள் ஒரு கொடூர குற்றத்தைச் செய்யும் குணத்தைப் பெற்றவர்கள் என்பது மாறிவிடுமா? அவர்கள் மீதான பச்சாதாபம், பரிதாபம் எல்லாம் இருக்கலாம். அவர்களைப் பராமரிக்கலாம். ஆனால் அவர்கள் கொலை செய்யும் அளவுக்குத் துணிந்தவர்கள் என்ற பார்வையை மாற்றமுடியுமா?
தண்டனை அனுபவிப்பதன் மூலம் குற்றம் கரைந்து போகுமா? குற்றங்கள் செய்தவர்கள் பலரும் இது போல் தண்டனை அனுபவித்து வெளியேறலாம். ஆனால் அந்தக் குற்றத்தின் நிழல் அவர்களைப் பின் தொடரும் என்பதுதான் இது வரை நடந்திருப்பது. இப்போது அந்தப் பார்வையில் மாற்றம் தேவைப்படும் நிலை ஏற்பட்டுவிட்டதா?
ஒரு குற்றம் செய்தவரை வாழ்நாள் முழுவதும் குற்றவாளியாகவே பார்ப்பதுதான் சரியான அறமா? குற்றம் செய்யாதவர்களையும் குற்றம் செய்தவர்களையும் பிரித்துப் பார்க்கவேண்டியிருப்பது எப்போதும் அவசியமாகிறது. தண்டனை என்பது மட்டுமே இந்தப் பிரிவினையை வழங்கிவிடாது. சமூக வெளியில் குற்றம் புரிந்தவர்களுக்கான இயக்கம் குற்றம் புரியாதவர்களின் இயக்கத்துடன் கலக்க முடியாது என்பதுதான் அறத்தின் அடிப்படையாக இருந்து வந்திருக்கிறது.
குற்றவாளிகளின் நெருக்கத்திற்குரியவர்கள் அவர்களை மன்னிப்பது மட்டுமே அவர்களின் குற்றத்திற்கான தண்டனையை விடப் பெரிதாக இருக்கிறது. மன்னித்தல் மட்டுமே குற்றத்திற்கான இயல்பைச் சீராக்கிவிடும் என்பதை ஏற்க முடியவில்லை. எல்லாவற்றையும் மன்னித்தல் என்பதைத்தான் நவீன காலத்திற்குப் பிறகான தத்துவமாகப் பார்க்கப்படுகிறது.
மீண்டும் ஒரு முறை அது போன்ற குற்றத்தை அவர்கள் செய்யமாட்டார்கள் என்ற உத்தரவாதம் இல்லை. தண்டனை அவர்களை மாற்றிவிடும் என்பதுதான் இதற்கான விளக்கமாக இருக்கிறது. குற்றத்தையும் தண்டனையையும் இணை வைத்துப் பார்ப்பதால் இது போன்ற சிக்கல்கள் நெருகின்றன. ஒரு குற்றத்திற்கு ஒரு குறிப்பிட்ட தண்டனை என்பது அறம் நிலைக்க உருவாக்கப்பட்ட விதியாக இருக்கிறது.
திருமண பந்தத்திற்கு மீறிய உறவு சட்டத்தால் நியாயப்படுத்தப்பட்டுவிட்டது. திருமண பந்தங்களுக்குள் நேரும் கொலைகளைச் சட்டத்தால் மன்னிக்கப்படும் காலம் வந்திருக்கிறது. கொலைகள் எல்லாம் பொதுவானவை என்றாலும் கொலைக்கான காரணங்கள் மட்டுமே தண்டனைகளை நிர்ணயிக்கின்றன. அதே காரணங்கள்தான் குற்றவாளிகள் மீதான பார்வையையும் தீர்மானிக்கின்றன.
குற்றவாளிகளைக் குற்றவாளிகளாகவே பார்ப்பது ஆரோக்கியம் இல்லை. மன்னித்தல் ஆன்மீக சார்பைக் கொடுத்துவிடும். இரண்டுக்கும் இடையில் இருக்க முடிவது மீண்டும் மனிதப் பண்பை மீட்டெடுக்க உதவலாம்.

Thanks 


Mubeen Sadhika

தத்துவ மேதை சாக்கரடிஸ்


அறிவை நேசித்த, அறிவாக உருப்பெற்றிருந்த ஏதென்ஸ் நகரத்தின் முகப்பினை இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளாக அலங்கரித்துக் கொண்டிருப்பவர் தத்துவஞானி சாக்ரடீஸ்.
குட்டையான பருத்த உருவம், வழுக்கைத் தலை, வட்ட முகம், விரிந்த மூக்கு, அகன்ற வாய், ஆழ்ந்த சிந்தனையுடன் உற்றுநோக்கும் கண்கள், முழங்கால் வரை தொங்கும் தளர்ந்த அழுக்கான ஆடையுடன் இருந்த சாக்ரடீஸ்தான் "கேள்வி கேள்" என்று சொன்னதற்காக கொல்லப்பட்ட முதல் அறிவுஜீவி.
மனசை ஆராய்ந்த அறிஞன்
தனக்கு முன்னாள் இருந்த தத்துவ ஞானிகள் மரத்தையும் கல்லையும் நட்சத்திரங்களையும் ஆராய்ந்துகொண்டிருந்தபோது, சாக்ரடீஸ் மனித மனதை ஆராய்ந்தார்.
மனதைப் போன்று மர்மங்கள் நிரம்பிய ஆய்வுப் பொருள் வேறொன்றில்லை என்று சாக்ரடீஸ் உணர்ந்திருந்தார்.
மனிதன் யார்? எப்படி வந்தான்? மனிதனின் வாழ்வுக்கும் மரணத்துக்கும் இடையில் என்னவாகிறான் போன்ற கேள்விகளை சாக்ரடீஸ் எழுப்பினார்.
ஏதென்ஸ் நகரத்தின் மூலை முடுக்குகளில், கோயில்களில், நாடக அரங்குகளில், விளையாட்டுத் திடல், சந்தை, பொதுமக்கள் கூடுமிடங்களில் எல்லாம் சாக்ரடீஸ் பேசிக்கொண்டே இருந்தார்.
``கற்பிக்கப்பட்ட எதையுமே ஏற்றுக்கொள்ளக்கூடாது, அறிவினால் சீர்தூக்கிப் பார்த்து ஏற்புடையதாக இருப்பதை மட்டுமே ஏற்க வேண்டும்” போன்ற பகுத்தறிவு சிந்தனைகளைப் பரப்பிய சாக்ரடீஸ் ஏதென்ஸின் பெரியார்.
நகர குடியரசாக இருந்த ஏதென்ஸின் ஆட்சியாளர்கள் மக்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். மக்கள் பழமையை நம்புகிறவர்களாகவும், மரபான மத நம்பிக்கைகளைப் பின்பற்றுபவர்களாகவும் இருக்கும்வரைதான் தங்களால் தொடர்ந்து ஆட்சியாளர்களாக இருக்க முடியும் என்ற தெளிவு கொண்டவர்கள். "எல்லாவற்றையும் கேள்வி கேளுங்கள்" என்ற சாக்ரடீஸின் பின்னால் கூடிய இளைஞர்கள் கூட்டத்தைக் கண்டு, ஆட்சியாளர்கள் அச்சப்பட்டார்கள். இளைஞர்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டால் ஆட்சியதிகாரம் நம் கையில் நீடிக்காது என்பதற்காக சாக்ரடீஸை கொல்லும் வாய்ப்பினை உருவாக்கினார்கள்.
அறிவுக்கு எதிரான முதல் வழக்கு
ஏதென்ஸ் நகரத்தில் நீதிபதிகளையும் மக்களே தேர்ந்தெடுப்பார்கள். அமெச்சூர் வழக்கறிஞர்கள். இத்தகைய நீதிமன்றத்தில் மெலிட்டஸ் எனும் கவிஞனும், அநீதன் எனும் தோல் வியாபாரியும் சாக்ரடீஸ்மீது குற்றம் சுமத்துகிறார்கள். அறிவுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட முதல் வழக்கு. ``ஏதென்ஸ் நாட்டு மக்கள் வணங்கும் கடவுளை சாக்ரடீஸ் வணங்குவதில்லை, சந்திரனை மண் என்கிறார், சூரியனைக் கல் என்கிறார். கடவுள்களால் விளக்கப்படாத மறைபொருட்களை ஆராயத் தொடங்கியதின் மூலம் நகரத்துக்குத் தீமையை உண்டாக்கப் பார்க்கிறார். கெட்டதை நல்லதுபோல் பேசி இளைஞர்களைக் கெடுக்கிறார்’’ என்பன உள்ளிட்டவையே சாக்ரடீஸ்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள். நீதிமன்றம் சாக்ரடீஸ் மீதான குற்றச்சாட்டை உறுதிசெய்கிறது.
குற்றஞ்சாட்டப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போதுசாக்ரடீஸுக்கு 70 வயது. ``என்னுடைய எதிரிகள் அநீதியும் அறிவின்மையும்தான்” என்ற சாக்ரடீஸின் வாதம், இன்றும்பொது வாழ்வில் போராட முன்வருபவருக்கான திறவுகோல்களாக இருக்கின்றன.
"கடவுளையும் கடவுள் கோட்பாட்டையும் ஆராய்ச்சி செய்வது நாத்திகம் என்றால், எங்கே கடவுளை ஒப்புக்கொள்ள மறுத்துவிடுவேனோ என்று பயப்படுவதே அதைவிட நாத்திகமாக இருக்கிறது" என்ற சாக்ரடீஸ், எப்போதும் யாருக்கும் ஆசிரியராக இருந்து போதித்தது இல்லை. அவருக்கென்று எந்த பள்ளியும் இல்லை. அவரின் தர்க்கவாதத்தால் ஈர்க்கப்பட்டவர்கள் அவரைப் பின்பற்றினார்கள்.
தீர்ப்பு எழுதிய பின்புதானே குற்றச்சாட்டே பதிவு செய்யப்பட்டது? நாடகத்தின் அடுத்த காட்சிபோல் சாக்ரடீஸுக்கு மரண தண்டனை கொடுக்கலாமா? மன்னிப்புக் கொடுக்கலாமா என்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மொத்தம் 501 பேர் கூடியிருந்த அவையில், சாக்ரடீஸ் எனும் காலத்தைக் கடந்து புகழ்பெறப் போகும் ஞானி, தீர்ப்பை எதிர்நோக்கி நிறுத்தப்பட்டிருந்தார். `ஜனநாயகம், ஆட்சியாளர்களின் ஏவலாளியாக மாறும் ஆபத்தையும் உட்கொண்டது’ என்பதை காலம் சாக்ரடீஸின் வரலாற்றில் இருந்தே அறிந்துகொண்டது.
அறிவைக் கொண்டாடும் நகரம், அறிவை நேசிக்கும் நகரம், அரங்கங்கள்தோறும் தர்க்கம் செய்து கொண்டிருக்கும் நகரம், சாக்ரடீஸை மரணத்தின் வாயிலில் நிறுத்தி வைத்திருந்தது. வாக்களித்தார்கள் கூடியிருந்தோர். மன்னிக்கலாம் என 220 பேரும், மரண தண்டனை அளிக்கலாம் என 281 பேரும் வாக்களித்தனர். 61 வாக்கு வித்தியாசத்தில் உலகத்தின் ஆகச் சிறந்த தத்துவ ஞானியின் மரணம் தீர்மானிக்கப்பட்டது. தன்னை வீழ்த்த நினைத்தவர்களுக்கு, அவர்களின் வெற்றிக்கான பரிசாகத் தன் உயிரையே கொடுக்கத் தயாரானார் சாக்ரடீஸ்.
ஒரு மாத காலம் கை கால்களில் கட்டப்பட்ட சங்கிலியுடன் சிறைச்சாலையில் நண்பர்களுடன் தர்க்கம் செய்தார் சாக்ரடீஸ். சிறையில் இருந்த காலத்திலும் எழுதினார். கப்பல் நாளைத் திரும்பி வரப்போகிறது என்பதையறிந்த சாக்ரடீஸின் நண்பன் கிரிட்டோ, சிறையில் இருந்து தப்பிச் செல்ல எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக சாக்ரடீஸிடம் சொல்கிறான்.
``மரண தண்டனை நிறைவேற்றாமல் போனால்கூட இன்னும் ஒன்றிரண்டு ஆண்டுகளில் இயற்கை மரணம் அடையப்போகும் நான், சிறையில் இருந்து தப்பிச் சென்று என் கொள்கைகளுக்கு முரணாக நடந்துகொள்ள விரும்பவில்லை” என்று மறுத்துவிடுகிறார்.
ஒரு கோப்பை விஷம்
மரண தண்டனை நிறைவேற்ற வேண்டிய நாள். கை கால் சங்கிலிகள் விலக்கப்படுகின்றன. எப்போதும் விஷம் கொண்டுவருபவனின் கை அன்று நடுங்குகிறது. தான் எப்படி விஷத்தைப் பருக வேண்டும்? எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று கேட்டறிகிறார் சாக்ரடீஸ். பிறகு குளித்துவிட்டு வருகிறார். சிறைக் காவலன் சொல்லியபடி ஹெம்லாக் என்ற அந்த விஷத்தை மிச்சமின்றி பருகுகிறார். ஓரிடத்தில் நிற்காமல் அறை முழுக்க நடக்கிறார். கால்கள் சோர்ந்துபோக படுக்கையில் அமர்கிறார். சோர்ந்துபோன பிறகு கால் நீட்டி படுக்கிறார். அவரின் கால்களை அழுத்திவிட்ட காவலன், “நான் அழுத்துவது உங்களுக்குத் தெரிகிறதா?” என்கிறான். “இல்லை” என்கிறார். காவலன் அழுத்துவதை நிறுத்திக்கொள்கிறான்.
கால்களில் பரவிய விஷம், இதயத்துக்கு வருகிறது. சாக்ரடீஸுக்கு மூச்சடைப்பதுபோல் இருக்கிறது. போர்த்தி இருந்த போர்வையை விலக்கி, நண்பன் கிரிட்டோவை அழைக்கிறார். “கிரிட்டோ, நான் அஸ்குலபியஸ் தெய்வத்துக்கு சேவல் பலியிடுவதாக வேண்டிக்கொண்ட வேண்டுதல் நிறைவேற்றப்படாமல் இருக்கிறது. மறக்காமல் அக்கடனை நிறைவேற்றிவிடு” என்று சொல்கிறார். சில நிமிடங்களில் உயிர் பிரிகிறது.
அறிவின் திடத்தை உலகத்துக்கு நிரூபிப்பதற்காக ஒரு கோப்பை விஷத்தை, தேநீர் பருகுவதுபோல் நிதானமாகப்பருகித் தன்னையே பலியிட்டுக்கொண்டார் சாக்ரடீஸ்
மரணம் ஒரு கலை

Thanks
Vijai Bala