Search This Blog

Wednesday, May 16, 2018

How Memory Replay in Sleep Boosts Creative Problem-Solving

A new theory explains how the two phases of sleep work together to help you find out-of-the-box solutions to vexing problems.
Scientists suspect that connections between neurons are remodeled during sleep, and studies on animals have shown that animals and humans deprived of sleep do not perform well on memory tasks. There is still a lot we don’t know about the role of sleep and what exactly goes inside the brain during slumber. A new study, however, is helping fill in the gaps, suggesting that the interleave of REM and non-REM sleep might facilitate creative problem-solving.
- German chemist Friedrich August Kekulé stated that the idea for the ring structure of benzene came to him in a day-dream, in which he saw snakes biting their own tails.
- Robert Louis Stevenson came up with the plot of Strange Case of Dr Jekyll and Mr Hyde during a dream.
- Paul McCartney discovered the tune for the song "Yesterday" in a dream and was inspired to write "Yellow Submarine" during hypnagogia.
- Mary Shelley's Frankenstein was inspired by a dream at Lord Byron's villa.
- Ramanujan who made almost 4,000 proofs, identities, conjectures and equations in pure mathematics. said that the Hindu goddess Namagiri would appear in his dreams, showing him mathematical proofs, which he would write down when he awoke.
How Memory Replay in Sleep Boosts Creative Problem-Solving
Creative problem-solving is critical for all spheres of innovation and pioneering thought. As such, it forms the foundation of a technology-based economy.
"Many experiments have shown that sleep promotes creative problem-solving. Now, Penny Lewis from Cardiff University and two of her colleagues have collated and combined those discoveries into a new theory that explains why sleep and creativity are linked. Specifically, their idea explains how the two main phases of sleep—REM and non-REM—work together to help us find unrecognized links between what we already know, and discover out-of-the-box solutions to vexing problems."
Cecile G. Tamura


"எழுத்துச் சிற்பி" பாலகுமாரன் காலமானார்

தமிழின் தலைசிறந்த எழுத்தாளர்களில் ஒருவரான "எழுத்துச் சிற்பி" பாலகுமாரன் காலமானார்.
பாலகுமாரன் தமிழ்நாட்டில் வாழும் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தஞ்சாவூர் மாவட்டத்தில் திருக்காட்டுப்பள்ளி வட்டத்தில் உள்ள பழமார்நேரி என்னும் சிற்றூரில் தமிழாசிரியர் சுலோசனா என்பவருக்கு மகனாகப் பிறந்தார். பதினொன்றாம் வகுப்பு வரை பயின்ற இவர். தட்டச்சும் சுருக்கெழுத்தும் கற்று தனியார் நிறுவனத்தில் 1969ஆம் ஆண்டில் சுருக்கெழுத்தராகப் பணியாற்றத் தொடங்கினார். அவ்வாண்டிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கினார். அவற்றுள் சில கணையாழி இதழில் வெளிவந்தன. பின்னர் டிராக்டர் கம்பெனியில் உயர் அதிகாரியாக பணியாற்றினார். திரைத்துறையில் பணியாற்றுவதற்காக அப்பணியைத் துறந்தார். இவர் 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 200-க்கும் மேற்பட்ட நெடுங்கதைகளையும் சில கவிதைகளையும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார்.

'மெர்க்குரிப்பூக்கள்' மூலம் ஏராளமான வாசகர்களைக் கட்டிப் போட்டவர் எழுத்தாளர் பாலகுமாரன். 'மெர்க்குரிப்பூக்கள்', 'தலையணைப்பூக்கள்', 'கரையோர முதலைகள்', 'பயணிகள் கவனிக்கவும்', 'இரும்பு குதிரைகள்' என 300க்கும் மேற்பட்ட நாவல்கள் எழுதிய பாலகுமாரன், எண்பதுகளில் மிகப்பெரிய உச்சத்தில் இருந்து தன் எழுத்துக்களால் வாசகர்களைக் கட்டிப்போட்டார். 

ஆரம்ப கட்டத்தில் 'சாவி' பத்திரிகையில் பணிபுரிந்தார். ஆடிப்பெருக்கு பற்றி இவர் எழுதிய கட்டுரையும் நடிகை ஷோபா மரணம் குறித்த கட்டுரையும் எல்லோராலும் பாராட்டப்பட்டது.

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த 'நாயகன்' படத்தின் மூலம் வசனகர்த்தாவாகவும் பணிபுரிந்தார். அதையடுத்து 'குணா', 'செண்பகத்தோட்டம்', 'மாதங்கள் ஏழு', 'கிழக்கு மலை', 'ஜென்டில்மேன்', 'காதலன்', 'ஜீன்ஸ்', 'பாட்ஷா', 'முகவரி', 'சிட்டிசன்' முதலான ஏராளமான படங்களுக்கு வசனம் எழுதினார் பாலகுமாரன்.
'அன்பு. இதுவே என் கதையின் பிரதானம். இதுவே எல்லோருக்க்கும் தேவையாயும் போதுமானதாகவும் இருக்கிறது. இது இருந்தாலே, கிடைத்துவிட்டாலே சமூகம் அழகாகிவிடும். மனிதர்கள் நிம்மதியாய் வாழ்வார்கள்' என்பதையே தொடர்ந்து தன் எழுத்துக்களிலும் நாவல்களிலும் பேட்டிகளிலும் வலியுறுத்தி வந்தார்.
ராஜராஜ சோழன் குறித்தும் தஞ்சை தேசம் குறித்தும் இவர் பல வருடங்களாக ஆய்வு செய்து எழுதிய 'உடையார்' எனும் மிகப்பிரமாண்டமான நாவல், வாசகர்களால் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றது. எல்லோரும் உடையார் படித்துவிட்டு கொண்டாடினார்கள்.
திருவண்ணாமலை மகான் யோகி ராம்சுரத்குமாரை தன் குருநாதராக ஏற்றுக்கொண்டு வாழ்ந்து வந்தார். இரண்டு முறை பைபாஸ் செய்யப்பட்டும் கூட, சோழ தேசம் முழுவதும் பயணித்து நிறைய கதைகளை, படைப்புகளை வழங்கிக் கொண்டே இருந்தார்.
நேற்று திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆனால், எழுத்தையை தவமாகக் கொண்ட பாலகுமாரன், தவமிருந்து எழுத்துக்களைப் படைத்த பாலகுமாரன் தன் எழுத்துக்களால் சூரிய சந்திரர்கள் உள்ளவரை வாழ்ந்துகொண்டே இருப்பார்.

பாலசந்தரின் குழுவில் மூன்று திரைப்படங்களிலும்கே. பாக்யராஜ்குழுவில் இணைந்து சில படங்களிலும் உதவி இயக்குநராகப் பணியாற்றினார். பின்னர் இது நம்ம ஆளு என்னும் திரைப்படத்தை கே. பாக்யராஜ் மேற்பார்வையில் இயக்கினார்.

அன்னாருக்கு எமது அஞ்சலிகள்!


Saturday, May 5, 2018

சித்திரா பெளர்ணமி (சித்திரை மாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு?)


மாதம் தோறும் தான் பௌர்ணமி வருகிறது.சித்திரைமாதப் பௌர்ணமியில் அப்படியென்ன சிறப்பு?
அச்சுவினி முதல் ரேவதி வரையான இருபத்தேழு நட்சத்திரங்களில் பதின்நான்காவதாக வரும் சித்திரை நட்சத்திரம் அம்மனுக்குரிய சிறப்புத் தினமாக அமைகின்றது. மாதந்தோறும் வரும் இச்சித்திரை நட்சத்திர தினங்களில் சித்திரை மாதம் பௌர்ணமி தினத்துடன் கூடிவரும் சித்திரை நட்சத்திர தினம் சித்திரா பௌர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகின்றது.
தாயாரை இழந்தவர்கள் இத்தினத்தில் விரதமிருப்பதால் இந்நாள் பிதிர்களுக்குரிய விரத நாளாகவும் அமைகின்றது. தந்தையை இழந்தவர்கள் ஆடிஅமாவாசையன்று விரதமிருப்பது போன்று தாயாரை இழந்தவர்கள் சித்திரா பௌர்ணமி விரதத்தை மேற்கொள்வது விதியாயமைந்துள்ளது.
பெற்று, வளர்த்து, சீராட்டி வளர்த்தெடுத்த தாயாரை அவர் மறைந்த பின்பும் நன்றியுடன் நினைவுகூரும் நாளான இந்நாளில் விரதமிருந்து வழிபாடு செய்வதன் மூலம் தாயின் தாய்மையின் பெருமைகளை மனதிலிருத்தி அவரது ஆன்மா அமைதியடைய இறைவனைத் தொழும் நாளாகவும் இந்நாள் அமைகின்றது.
சித்திரா பௌர்ணமியின் சிறப்பு
சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரம் கூடி வரும் பௌர்ணமி நாள் சித்திரா பௌர்ணமி நாளாகும்.
இது வசந்தகாலம். காலங்களில் நான் வசந்தகாலமாக இருக்கிறேன் என்று பகவான் கண்ணன் பகவத்கீதையில் கூறுகிறார். இவ்வசந்த காலத்தில் தான் பெரும்பாலும் ஆலயங்களில் பிரம்மோற்சவம் (திருவிழா) நடைபெறுகிறது. அக்ஷய திருதியை போலவே இந்த நாளிலும் தானங்கள் செய்வது நன்மை தரும் என்று கருதப்படுகிறது.
வெய்யிலுக்கு இதமாக தயிர்சாதம், கைவிசிறி, பானகம், நீர்மோர் இவற்றை அந்தணர்களுக்குத் தானமாக அளிப்பது வழக்கம்.
உப்பில்லாமல் உணவருந்தி, பசும்பால், பசு நெய், பசுந்தயிர் தவிர்த்து சித்திரா பௌர்ணமி விரதம் இருந்து ஒரு மூங்கிலாலான முறத்தில் அரிசி, வெல்லம், மாங்காய், ஒரு நோட்டுப்புத்தகம், பேனா முதலியவையும் தானம் செய்யலாம்.
சித்திரா பௌர்ணமி
சித்திரா குப்தம் மஹா பிராஜ்னம்
லோகாகி பத்ரதாரிணம்
சித்ர ரத்னாம்பர தாரம் .
மத்யஸ்தம் ஸர்வதேஹினாம்,எந்தக் காரியாலயத்திலும் அல்லது கம்பெனிகளிலும் கணக்கு சரி பார்க்க ஒருஆடிட்டர் தேவைப்படுகிறார். இவர் வரவு சிலவு சரியாக இருக்கிறதா என்று பார்த்து சரியாக இல்லை என்றால் அதற்குத் தகுந்தாற்போல் தண்டனையும் கிடைக்கிறது. அபராதமோ அல்லது கோர்ட்டுக்கோ போகவேண்டி இருக்கும். அதே போல யமலோகத்திற்கும் ஒரு ஆடிட்டர் தேவைதானே… எத்தனைக் கோடி மக்களுக்கு பாப புண்ணியக் கணக்கு எழுத வேண்டும்? அதற்குத் தகுந்தாற்போல் வாழ்க்கையும் அமையும். யமலோக ஆபீஸில் ஆடிட்டர் சித்திர புத்திரன். இந்தச் சித்திர புத்திரன் பற்றி இரண்டு விதமான புராணங்கள்…
உலகத்திற்கெல்லாம் ஈசன் சிவபெருமான் ஒருதடவை ஏடும் எழுத்தும் கொண்டு கணக்கு எழுத ஒரு தேவதையைப் படைக்க எண்ணினார். அதன்படி ஒரு சித்திரம் வரைந்து அதற்கு உயிரூட்ட ஒரு தேவதைத் தோன்றினாள். அவளிடமிருந்து ஒரு அழகான புத்திரன் வர சித்திரத்திலிருந்து வந்ததால் சித்திரப் புத்திரன் என்று அழைக்கப்படலானான். இதே சித்திரப்புத்திரன் மீண்டும் ஒருமுறை சிவனருளால் காமதேனுவிற்குப் பிறந்து இதே பெயர் பெற்றார். இவனுக்கு எல்லோருடைய பாப புண்ணியக் கணக்குகளை எழுதும் வேலையைச் சிவபெருமான் கொடுக்க அதைப் பாரபட்சமில்லாமல் இவர் செய்து வருகிறார். குப்த் என்றால் ரகசியம்… நமது பாப
புண்ணியங்களின் ரிகார்ட் ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. இவர் யமதர்ம ராஜா முன்னிலையில் பூத உடலைவிட்டு வரும் மனிதர்களின் பாப புண்ணியங்களைத் தன் ஏட்டிலிருந்து ஒப்பிக்கிறார். அதற்குத் தகுந்தாற்போல் விளைவும் ஏற்படுகிறது.

Wednesday, April 25, 2018

Antibiotic resistance occurs everywhere in the world, and how it spreads.

Antibiotic / Antimicrobial resistance is the ability of microbes to resist the effects of drugs – that is, the germs are not killed, and their growth is not stopped. Although some people are at greater risk than others, no one can completely avoid the risk of antibiotic-resistant infections. Infections with resistant organisms are difficult to treat, requiring costly and sometimes toxic alternatives.

Bacteria will inevitably find ways of resisting the antibiotics developed by humans, which is why aggressive action is needed now to keep new resistance from developing and to prevent the resistance that already exists from spreading.

Explanation of Bacteria and Other Microbes


Microbes are organisms too small for the eye to see and are found everywhere on Earth.  There are many types of microbes: bacteria, viruses, fungi, and parasites.  While most microbes are harmless and even beneficial to living organisms, some can cause disease among humans, other animals, and plants.  These disease-causing microbes are called pathogens; sometimes they are referred to as “germs” or “bugs.”  All types of microbes have the ability to develop resistance to the drugs created to destroy them, becoming drug-resistant organisms.

How Resistance Happens


Simply using antibiotics creates resistance.  These drugs should only be used to manage infections.

Trends in Drug Resistance


  • Antibiotics are among the most commonly prescribed drugs used in human medicine and can be lifesaving drugs.  However, up to 50% of the time antibiotics are not optimally prescribed, often done so when not needed, incorrect dosing or duration.

  • The germs that contaminate food can become resistant because of the use of antibiotics in people and in food animals.  For some germs, like the bacteria Salmonella and Campylobacter, it is primarily the use of antibiotics in food animals that increases resistance.  Because of the link the between antibiotic use in food-producing animals and the occurrence of antibiotic-resistant infections in humans, antibiotics that are medically important to treating infections in humans should be used in food-producing animals only under veterinary oversight and only to manage and treat infectious disease, not to promote growth.

  • The other major factor in the growth of antibiotic resistance is spread of the resistant strains of bacteria from person to person, or from the non-human sources in the environment.

Brief History of Antibiotics


Humans developed antimicrobials to destroy disease-causing microbes.  The most commonly known antimicrobials are antibiotics, which target bacteria.  Other forms of antimicrobials are antivirals, antifungals, and antiparasitics.

Penicillin, the first commercialized antibiotic, was discovered in 1928 by Alexander Fleming.  While it wasn’t distributed among the general public until 1945, it was widely used in World War II for surgical and wound infections among the Allied Forces.  It was hailed as a “miracle drug” and a future free of infectious diseases was considered.  When Fleming won the Nobel Prize for his discovery, he warned of bacteria becoming resistant to penicillin in his acceptance speech.

Sunday, April 22, 2018

Rajarajacholan's documents in The Netharlands


21 ம் நூற்றாண்டின் பென்னிvகுயிக் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி...!!!


நாட்டில் அழிந்துபோன நதிகள், தூர்ந்து போன ஏரிகள், காணாமல் போன குளங்கள் போன்ற வரலாற்றைத்தான் கேட்டிருக்கிறோம்.
அவற்றை மீட்டதாக சரித்திரம் இல்லை.
ஆனால், இருந்த இடம் தெரியாமல், தண்ணீர் தங்கிய தடம் தெரியாமல். மொத்தமாக மண்ணுக்குள் புதைந்துபோன 1664 ஏக்கர் பரப்பளவு உள்ள வாலாஜா ஏரியை புயல், தண்ணீர் பஞ்சம், விவசாயிகள் தற்கொலைக்கு பெயர் போன கடலூரிலே மீட்கப்பட்டு உள்ளது.
கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக வறட்சியில் தவித்துக்கொண்டிருந்த 15 கிராமங்கள் இந்த மாதம் முதல் நெல், கரும்பு, வாழை என இருபோகத்துக்கு மாறியிருக்கின்றன.
2003 இலிருந்து இதற்காக போராடி அந்த ஏரியை மீட்டவர் மிகுந்த மதிப்பிற்கும், மரியாதைக்கும், போற்றுதலுக்கும் உரியவர் கலெக்டர் ககன்தீப் சிங் பேடி ஆவார்.
அவர் ஏரி மீட்ட வரலாறை பார்ப்போம்.
சத்தமில்லாமல் இந்தச் சாதனை நடந்திருப்பது நம் தமிழகத்தின் கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகேயிருக்கும் கரைமேடு கிராமத்தில் தான்.
2005-ம் ஆண்டு. கண்ணுக்கெட்டிய தூரம்வரை விரிந்து கிடந்தது புதர்க் காடு. தூரத்தில் நிலக்கரி சுரங்க எரிகோபுரங்களில் இருந்து வெண்புகை கசிந்துக்கொண்டிருந்தது. அப்போது நெய்வேலி சுற்றுவட்டார கிராமங்களில் கடும் வறட்சி நிலவிக்கொண்டிருந்தது.
பரவனாற்றில் தண்ணீர் பார்த்து பல ஆண்டுகளாகிவிட்டதால் கம்மாபுரம், கொம்பாடிகுப்பம் ஆகிய ஏரிகள் அழிந்தேபோயிருந்தன.
ஓரளவாவது தண்ணீர் இருக்கும் வெலிங்டன் ஏரியும் பெருமாள் ஏரியும்கூட காய்ந்துக்கிடந்தன.
கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த ககன்தீப் சிங் பேடி ஒரு முறை, நெய்வேலி நிலக்கரி சுரங்க திட்ட பொறியாளர் துரைக்கண்ணுவிடம் ஒரு விஷயத்தை சொல்லியிருந்தார்.
அது, “நிலக்கரி சுரங்கத்திலிருந்து சேற்றை வெளியேற்றுகிற அந்த இடம் சாதாரணமானது கிடையாது.
சுமார் 60 வருஷத்துக்கு முன்பு அழிந்து போன 1,664 ஏக்கர் பரப்பளவுகொண்ட பிரம்மாண்டமான ஏரி அது.
அதில் 12 வாய்க்கால்கள், 15 கதவுகள் இருந்திருக்கின்றன. ஆவணங்களில் ‘வாலாஜா ஏரி’ என்கிற குறிப்பை தவிர, வேறு எதுவும் இல்லை.
ஒருகாலத்தில் அந்த ஏரியின் மூலம் முப்போகம் விளைவித்திருக்கிறார்கள். இன்றும் ஏரியின் மதகுகள், இரும்புக் கதவுகள் எங்கேயோ புதருக்குள் கிடக்கலாம். மீண்டும் அங்கே ஆழப்படுத்தி ஏரியை மீட்டுவிட்டால் கடலூரில் வறட்சிக்கே இடமிருக்காது” என்பதாகும்.
நெய்வேலி லிக்னைட் நிறுவனம் நிலக்கரி வெட்டி எடுக்கும்போது வெளியேறும் நிலத்தடி நீரை சேற்றுடன் பரவனாற்றில் வெளியேற்றியது.
அது வாலாஜா ஏரி வழியாக பெருமாள் ஏரிக்குச் சென்று கடலில் கலந்தது.
இதனால் வாலாஜா ஏரி தூர்ந்து, ஒருகட்டத்தில் இருந்த இடம் தெரியாமல் மண்மேடாகி
அழிந்தே போனது.
எனவே, சுரங்க நிர்வாகமே அந்த ஏரியை மீட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் அன்றைய கடலூர் மாவட்ட ஆட்சியர்
ககன்தீப் சிங் பேடி.
சமூக பொறுப்புணர்வுத் திட்டம் அனைத்துப் பொதுத் துறை நிறுவனங்களும் தங்களது லாபத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை, அந்த நிறுவனம் இயங்கும் பகுதி மக்களின் கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டுக்கென ‘சமூக பொறுப்புணர்வு நிதி’யாக செலவிடவேண்டும் என்பது அரசு விதி.
அதன்படி நெய்வேலி சுரங்க நிறுவனமும் ஆண்டுதோறும் தனது லாபத்தில் 10சதவீதத்தை செலவிட்டு வந்தது.
ஆனாலும், அவை தையல் இயந்திரங்கள் கொடுப்பது, குடிநீர் தொட்டி கட்டுவது, இலவச நோட்டுப் புத்தகங்கள் கொடுப்பது என்பதாக மட்டுமே இருந்தன.
வாலாஜா ஏரியின் மொத்தப் பரப்பான 1664 ஏக்கரையும் மீட்க வேண்டும் என்றால் அதற்கு ரூ.60 கோடிக்கும் அதிகமாக நிதி தேவை.
அவ்வளவு பெரிய நிதியை என்.எல்.சி. ஒதுக்குவது சாத்தியமில்லை.
எனவே, பகுதி பகுதியாகவேனும் ஏரியை மீட்க வேண்டும் என்பது ககன்தீப் சிங் பேடியின் திட்டமாக இருந்தது.
ஆனால், 2003-ம் ஆண்டு தொடங்கி 2013-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் அவர் எவ்வளவோ முயற்சித்தும் பணிகள் நகரவில்லை.
தமிழக மக்களின் தண்ணீர் பஞ்சத்தை தீர்க்க இந்த வட இந்தியர் போராடினார். ஆனால் இந்த சீக்கிய செம்மலின் கோரிக்கையை கண்டு கொள்ளவே இல்லை.
இன்னொரு பக்கம் கடலூர் கடும் வறட்சியால் பாதிக்கப்பட்டது .
பொறுத்து, பொறுத்துப் பார்த்த ககன்தீப் சிங், வெறுத்துப் போய் கடலூர் மாவட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி. மிகப்பெரிய போராட்டங்களை நடத்தினார்.
ஆனால் அது எல்லாம் தமிழக செய்தி பத்திரிகை , தொலை காட்சிகளிலே வரவே இல்லை வரவும் வராது.
வெறும் மூவாயிரம் உறுப்பினர்கள் உள்ள தென் இந்திய நடிகர் சங்க பிரச்சனை தான் 7 கோடி மக்களுக்கும் தேவை பாருங்க.
ஏரிப் பகுதியை ஆய்வு செய்த மாவட்ட நிர்வாகம் ரூ.13.72 கோடிக்கு திட்ட மதிப்பீட்டை தயார் செய்தது.
நீண்ட இழுபறிகளுக்குப் பிறகு முழுப் பணத்தையும் ஒதுக்கீடு செய்வதாக சம்மதம் தெரிவித்தது என்.எல்.சி நிர்வாகம்.
பணி தொடங்கியது
ஒருவழியாக 2014-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி ஏரியை தோண்டும் பணிகள் தொடங்கின. பணியை முன்னின்று செய்தவர் திட்டப் பொறியாளர் துரைக்கண்ணு.
1664 ஏக்கர் பப்ரபளவு உள்ள அந்த ஏரியை மீட்க, 12 கால்வாய்களை தூர் வார வேண்டும். அது தான் மிகவும் சவாலான செயலாக இருந்தது.
துரைகண்ணு அவர்கள் தி ஹிந்துவுக்கு கொடுத்த பேட்டியில் :
கால்வாய்கள் தூர் வாரும் பணி, மொத்தம் 12 கால்வாய்கள். ராஜன் கால்வாய் தண்ணீரும், சுரங்கத்தில் இருந்து வெளியேற்றுகிற நிலத்தடி தண்ணீரும் அந்தக் கால்வாய்களில் விவசாயத்துக்காக போய்க் கொண்டிருந்தது.
12 கால்வாய்களையும் தூர் வார ஒரு வருஷமாகும். வேலையைத் தொடங்கினால் ஒரு வருஷத்துக்கு விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது.
சுமார் 15 கிராமங்கள். எல்லோரும் வறட்சியால் பாதிக்கப்பட்டிருக்கும் சிறு விவசாயிகள்.
ஒரு வருஷம் விளைச்சல் இல்லைன்னா அவங்க வயித்துப்பாடு என்னாகுமோன்னு கலக்கமாக இருந்தது.
ஒரு நாள் ஊர் கூட்டத்தை கூட்டி இதை தயக்கத்தோட விவசாயிகள்கிட்ட சொன்னோம்.
ஆனால், நாங்களே எதிர்பார்க்காத மாதிரி,
"ஊர் நன்மைக்காக ரெண்டு வருஷம் கூட வயித்தைக் காயப்போட நாங்க தயார்”னு சொன்னாங்க.
எங்களுக்கு கண்ணீர் வந்துடுச்சி. கலெக்டரும் கண் கலங்கிட்டாரு.
எங்களுக்கு அதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய வேகம் தொத்திக்கிச்சு.
கூலி தொழிலாளர்கள் தொடங்கி இன்ஜினியருங்க வரைக்கும் பல நாட்கள் யாரும் வீட்டுக்கே போகலை.
ஏரிக்கரையிலேயே கொட்டகையை போட்டு அங்கேயே தங்கினோம். அங்கேயே சாப்பிட்டோம். ராப்பகல் பார்க்காம பேய் மாதிரி வேலை நடந்தது.
ஒரு வருஷம்ன்னு நிர்ணயிச்ச வேலையை நாலே மாசத்துல முடிச்சோம்.
பின்னர் பழைய 15 கதவுகளை பெயர்த்து. புதிய கதவுகளை பொருத்தி. அந்த ஏரியை ஒட்டி 4 கிலோ மீட்டர் நீளத்துக்கு கரையை அமைத்தனர்.
அந்த கரையிலே. வனத்துறையினர். 40 ஆயிரம் தேக்கு மரக்கன்றுகளை நட்டனர்.
கடலூர் மாவட்ட விவசாயி திரு எஸ் ராமானுஜம் அவர்கள், சிறு வயதில் நான் நீந்தி விளையாடிய ஏரி இது. இதை இறப்பதற்கு முன் நான் பார்ப்பேன் என்று கற்பனை கூட செய்து பார்த்ததில்லை என்று ஆனந்த கண்ணீரோடு சொன்னார்.
இப்போது இந்த ஏரி கடல் போல காட்சியளிக்கிறது.
இதனால், எங்கள் பகுதியில் 12,000 ஏக்கர் நன்செய் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
12,000 ஏக்கர் முழுவதும் சம்பா பயிரிடப்பட்டு பயிர்கள் நல்ல நிலையில் காட்சியளிக்கின்றன. என்கிறார் விவசாயி ராமானுஜம்.
திட்டத்துக்கு வித்திட்ட ககன்தீப் சிங் பேடி தற்போது தமிழக அரசின் ஊரகவளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைச் செயலாளராக இருக்கிறார்.
அவரிடம் பேசினோம். “எல்லா பெருமையும் விவசாயிகளையும், என்.எல்.சி. நிர்வாகத்தையுமே சேரும் என்றார்.
தமிழகத்தில் பல்வேறு ஏரிகள் அழிந்துவருகின்றன.
அரசை மட்டுமே நம்பாமல் லாபத்தில் இயங்கும் தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்கள் சமூக பொறுப்புணர்வு திட்ட நிதியை நீர் நிலைகளை மீட்க செலவிட வேண்டும் என்றார்.
கடந்த 30 ஆண்டுகளில் 12456 ஏரிகளும், 27000 குளங்களும் அழிந்திருக்கின்றன.
மக்களுக்கு நல்லது செய்பவர்கள் தான் நமது மண்ணை ஆள வேண்டும். அத்தகையவர்கள் ககன்தீப் சிங் போன்ற வட இந்தியராகவும் இருக்கலாம்.
பென்னி குயிக் போன்ற வெளி நாட்டுக்காரராகவும் இருக்கலாம்.
மக்களுக்கு நன்மை செய்பவர்கள் செவ்வாய் கிரக வாசிகளாக இருந்தாலும் அவர்கள் எனது பங்காளிகளே.
சினிமாக்காரர்கள் என்றால் என்னமோ தேவதூதர்கள் என்று நினைத்து அவர்களுக்கு கூஜா தூக்குவதை விட்டுவிட்டு இந்த சீக்கிய செம்மலுக்கு ஒரு நன்றி சொல்வார்களா நம் மக்கள்?
ஓசியில் எதைக் கொடுத்தாலும் நமக்குத் தேவையோ இல்லையோ ஓடிப் போய் வாங்கி பரணில் வைக்கும் மக்கள் நம் வாழ்வாதாரத்துக்கு எது தேவை என்று யோசித்து அதைக் கொடுப்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.
(*** இந்த செய்தியை முழுமையாக படித்தமைக்கு நன்றி ***)


Tuesday, April 17, 2018

Education is the best predictor of a long life than income

Robert Karl Stonjek
"Rising income and the subsequent improved standards of living have long been thought to be the most important factors contributing to a long and healthy life. However, new research from Wolfgang Lutz and Endale Kebede, from IIASA and the Vienna University of Economics and Business (WU) has shown that instead, the level of education a person has is a much better predictor of life expectancy.
In 1975, Samuel Preston developed the Preston Curve, which plotted the GDP per person on the horizontal axis against life expectancy on the vertical axis. The curve shows a clear but flattening upward trend in life expectancy with increasing GDP. The curves also shift upwards over time which has been explained by better healthcare."
https://medicalxpress.com/news/2018-04-income-predictor-life.html

Monday, March 5, 2018

எந்தவொரு சூழ்நிலையிலும் ஆனந்தமாக இருக்க ஓஷோ சொல்லும் வழிமுறை


அந்தக் கிராமத்தின் ஓய்வு விடுதியில், ஒரு நாள் இரவ
ஓஷோவும் மாநில அமைச்சர் ஒருவரும் அடுத்தடுத்த அறைகளில் தங்கி இருந்தனர். இரவு முழுவதும் முப்பது அல்லது நாற்பது நாய்கள் அந்த விடுதியைச் சுற்றி குரைத்துக் கொண்டே இருந்தன. அமைச்சரால் தூங்கவே முடியவில்லை.
அவர், அன்று காலை முழுவதும் பயணம் செய்திருந்தார்.மறுநாளும் அலைச்சல் இருக்கிறது. அதை நினைக்க நினைக்க அமைச்சருக்குக் கோபம் அதிகமானது. நாய்களோ வெறித் தனமாகக் குரைத்து, இரவின் அமைதியைக் கெடுத்தன. ஆனால், இத்தனைக்கும் மத்தியில் ஓஷோ அடுத்த அறையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தார்.
ஓஷோவை எழுப்பிய அமைச்சர், ''என்ன மனிதர் நீங்கள்... இவ்வளவு சத்தத்துக்கு மத்தியில் உங்களால் எப்படி உறங்க முடிகிறது?'' என்று புலம்பினார்.
ஓஷோ, தனது வழக்கமான கிண்டலுடன் கூறினார்: ''அந்த நாய்கள், உங்களுக்கு ஆதரவாகவோ அல்லது எதிராகவோ இங்கு கூடவில்லை; கோஷமிடவில்லை! பாவம், அந்த நாய்களுக்கு... இங்கு ஒரு மந்திரி தங்கி இருப்பது தெரியாது. அவை, பத்திரிகை படிப்பதில்லை. அவற்றுக்கு அறிவும் கிடையாது. அந்த நாய்களுக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
அவை, தங்களுக்கே உரிய குரைக்கும் வேலையைப் பார்க்கின்றன. நீங்கள், தூங்குகிற வேலையைப் பாருங்கள்!'' என்றார்.
''நாய்கள் இப்படி ஓயாமல் குரைத்தால், நான் எப்படி தூங்க முடியும்?'' என்றார் அமைச்சர்.
உடனே ஓஷோ, ''நீங்கள், அவை குரைப்பதை எதிர்த்துப் போராடுகிறீர்கள். அப்படிப் போராடாதீர்கள். பிரச்னை குரைப்பொலி அல்ல... உங்கள் எதிர்ப்பு உணர்வு. நீங்கள், சத்தத்துக்கு எதிராக இருக்கிறீர்கள்;இந்த நாய்கள் குரைப்பதை நிறுத்தினால்தான் தூங்க முடியும் என்று ஒரு நிபந்தனை ஏற்படுத்தி விட்டீர்கள். நாய்கள் உங்களது நிபந்தனையைக் கவனிக்கப் போவது இல்லை.
நீங்களும் உங்கள் நிபந்தனையை விலக்கப் போவது இல்லை. ஆனால், நிபந்தனையை விலக்கினால் மட்டுமே நிம்மதி பெற முடியும். நடைமுறைக்குச் சாத்தியமானதும் அதுதான்!
நாய்களின் குரைப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். இந்த இரவிலும் எவ்வளவு சக்தியுடன் அவை குரைக்கின்றன...பார்த்தீர்களா? ஏற்பு உணர்ச்சியுடன் கவனித்தால், குரைப்புச் சத்தமும் ஒருவகை மந்திரம்தான்!''என்றார் ஓஷோ.
'உதவாக்கரை யோசனை!' என்று மனதுக்குள் பழித்தபடி போனார் மந்திரி. ஆனால் காலையில், மிகுந்த மகிழ்ச்சியுடன் வந்து ஓஷோவைச் சந்தித்தார் அமைச்சர்!
''ஆச்சரியம்தான்! எனது எதிர்ப்பு உணர்ச்சியை விலக்கிக் கொண்டு, நாய்கள் குரைப்பதைக் கவனித்தேன். ஆழ்ந்து ரசிக்கவும் தொடங்கினேன். அப்படியே உறங்கிப் போனேன்'' என்றார் அமைச்சர்.
ஓஷோ நமக்குச் சொல்கிறார்: ''இதை, நீ ஞாபகத்தில் வைத்துக் கொள். உன்னைச் சுற்றி இருப்பவற்றால் நீ எரிச்சல் அடைந்தால், உன் முகத்தை உள்முகமாகத் திருப்பு. எரிச்சலுக்கான காரணம் நீயாகத்தான் இருப்பாய். உனது எதிர்பார்ப்பு அல்லது ஆசை வேறாக இருந்திருக்கும். அல்லது ஏதோ ஒரு நிபந்தனையை உனக்குள் நீ விதித்திருப்பாய். அதுதான் உனது எரிச்சலுக்குக் காரணம். உலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியாது...
அதை எதிர்த்துப் போராடும்போது நீ வெறுப்படைகிறாய்'' என்கிறார்... !!!
--- ஓஷோ ---

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிவு

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிவு கடந்த தேர்தலுக்கு முன்பே பலராலும் மதிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் கூட்டமைப்பின் விசுவாசிகளும் சில ஊடகவியலாளர்களும் இதை மறைப்பதற்கும் மறுப்பதற்கும் பாடாய்ப் பட்டனர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சரிவு
தேர்தல் முடிவுகள் அதை நிரூபித்தன.
மக்களின் மன நிலையை நாடி பிடித்துப் பார்க்கத் தவறியவர்களை என்ன என்று சொல்வது?
கூட்டமைப்பின் வீழ்ச்சிக்கான காரணங்கள் ஒன்றல்ல. ஏராளமானவை.
அந்தக் காரணங்களும் பலரும் அறிந்தவை. இங்கே அவற்றைப் பட்டியல் போட்டு முடியாதது.
அவற்றையெல்லாம் பொறுப்போடு ஆராய்ந்து சீர் செய்வதற்குக் கூட்டமைப்புத் தயாரில்லை.
அப்படிச் சீர் செய்ய வேண்டுமாக இருந்தால், அடிப்படையிலிருந்தே மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
அதாவது அதுவொரு“ குணாம்ச மாற்றமாகும்”.
ஆனால், அதற்கு கட்சியின் உயர் மட்டத்திலும் (தலைமையிலும்) தயாரில்லை. அடிமட்டத்திலும் தயாரில்லை.
யாருமே இதைப்பற்றிச் சிந்திக்கவுமில்லை.
“தலைமை கொழும்பில் பாய் போட்டுப்படுத்தே விட்டது”.
“வால்கள்” மட்டும் வன்னியிலும் (கிளிநொச்சி, முல்லைத்தீவு) யாழ்ப்பாணத்திலும் சிலவேளை மட்டக்களப்பிலும் மெல்ல ஆடிக் கொண்டிருக்கின்றன.
தலைமைக்கு நெருக்கடியைக் கொடுத்த கஜேந்திரகுமார் அணி, சுரேஸ் அணி போன்றவற்றை தூக்கி வெளியே வீசிய பிறகு எந்தப் பிரச்சினையும் இனி இல்லை என்ற நிம்மதியில் காலாட்டிக் கொண்டிருக்கிறது தலைமை.
மிஞ்சியிருக்கும் ரெலோவும் புளொட்டும் கொழும்புடன் சமரசம் செய்து கொள்ளக் கூடியவை. கூட்டமைப்பின் தலைமைக்கு எதிர் நிலைப்பாடு எடுக்க முடியாதவை.
ஆனால், கூட்டமைப்பை விட ஏனைய தரப்புகள் பல இடங்களிலும் எழுச்சியடைந்துள்ளன.
இதையும் தேர்தல் முடிவுகள் நிரூபிக்கின்றன.
இதைக் கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத கூட்டமைப்பினர் பதறியடித்துக்கொண்டு ஊர் ஊராக இளைஞர்களையும் தங்களை விட்டு விலகியோரையும் தேடி, வலை விரித்து, காலில் விழுந்து, பணிந்து, கெஞ்சிக் கொண்டிருக்கிறார்கள். மன்னிப்புக் கேட்கிறார்கள். மன்றாடுகிறார்கள்.
உண்மையில் இப்படிச் செய்யவே வேண்டியதில்லை.
மாற்றங்களைச் செய்தால், மக்களுக்கு விசுவாசமாக இருந்தால், நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால், உண்மையைப் பேசினால், கண்ணியமாக நடந்தால், விடுதலைக் கனவோடு வாழ்ந்தவர்களுக்கும் வீழ்ந்தவர்களுக்கும் உண்மையாகவே மரியாதை செய்தால் மக்கள் தாங்களாகவே ஆதரவைத் தருவார்கள்.
அப்படிச் செய்யாமல் ஆட்சேர்ப்பதற்கும் தேர்தலில் வெற்றியடைவதற்கும் மக்களைப் பயன்படுத்த முயற்சிப்பது தந்திரமாகும். இந்தத் தந்திரத்துக்கு மக்கள் மேலும் பாடம் படிப்பிப்பார்கள்.
இதுவே வரலாற்று உண்மை.
அதிலும் இளைய தலைமுறையினர் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.
அவர்கள் விழிப்பும் போராட்டக் குணமும் நேர்மையும் புத்திக் கூர்மையும் உள்ள அணியினர்.
நாளைய வரலாற்றை சரியாக எழுதக் கூடியவர்கள்.
இதைக் கூட்டமைப்பினர் புரிந்து கொள்வது அவசியம்.
உண்மையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது பெரியதொரு ஆலமரமாகவே இருந்தது. இப்பொழுது அது சரிந்து விழத் தொடங்கி விட்டது.
சிறிய மரங்கள் சரிந்தால் அதைத் தடுப்பதற்கும் தாங்குவதற்கும் முட்டுக் கொடுக்கலாம்.
பெரிய மரம் (ஆலமரம்) சரிந்தால் எதுவும் செய்ய முடியாது.

தமிழர்களுடைய அரசியலை அடுத்த கட்டத்துக்கு - போருக்குப் பிந்திய அரசியலாக முன்னெடுத்துச் செல்வதற்கான சிந்தனையும் செயலூக்கமும் கொண்ட தரப்பினர் இன்னும் இல்லை.
இதை நோக்கிச் சிந்திப்பதற்கும் தமிழ்ச் சூழலில் யாரும் முன்வரவில்லை.
போருக்கு முந்திய, போர்க்கால அரசியலின் நிழற் பிரதியையே பலரும் தொடர்கின்றனர்.
அதற்கு புதிய வர்ணத்தைப்பூசிப் புதிதாகக் காண்பிக்கவே பலரும் விரும்புகின்றனர்.
இதனால்தான் அது சர்வதேசக் கவனிப்பையும் பெறவில்லை. புதிய அடிகளை முன்வைக்கவும் இல்லை. சிங்கள அதிகாரத்தரப்பை அசைக்கவும் இல்லை.
போருக்கு முந்திய, போர்க்கால அரசியலைப் போருக்குப் பிந்திய அரசியலின் தொடர்ச்சியாகக் கொள்ளவே முடியாது.
இது உலக அனுபவம்.
போருக்குப் பிந்திய சூழலில் தமிழர்களுக்கு அருமையான பல வாய்ப்புகள் கிடைத்திருந்தன.
ஆனால், அதை நோக்கி நகர்வதற்கான சிந்தனையும் உலக அனுபவமும் செயற்படுத்தத்தக்க ஆளுமைகளும் துணிச்சலும் கொண்டவர்கள் இல்லாது போயிற்று.
அப்படி அரும்பிய முளைகளையும் பழைய கண்ணோட்டத்தில் எதிர்த்து மடக்கியதும் விலக்கியதுமே நடந்தது.
இப்பொழுது மறுபடியும் பழைய பெருங்காயப் பானைக்குள்தான் கையை விட்டுத் தேடுகின்றன.
மீண்டும் பிரமுகர்களைச் சுற்றியும் தேடியுமே தமிழ் அரசியல் முன்னெடுக்கப்படுகிறது.
இது 70 ஆண்டுகாலத் தோல்வியை நூற்றாண்டுத் தோல்வியாக்கும் முயற்சியே.

கருணாகரன் சிவராசா