Search This Blog

Tuesday, October 9, 2018

விசம்...........


அலங்கரிக்கப்பட்ட
கழிவுகளை
கவர்ந்திழுக்க்கிறது
கண்கள்.

தேவையானவை
தேவையற்றுப்போக
தேவையற்றவை
தேவையாகிப்போனது
எனக்கு.
என்
உயிரணுக்கள்
ஒவ்வொன்றுக்குள்ளும்
ஒளித்து வைக்கப்படுகிறது
விசம் .
காலை
அருந்தும்
தேநீருடன்
ஆரம்பிக்கிறது
என்
அழிவு.
நஞ்சுகளை
தின்று தின்றே
நகர்கின்றன
என்
நாட்கள்
விசத்தையும்
கொடுத்து
விசம் முறிக்க
மருந்தையும்
கொடுத்து
என்னிடம்
வெற்றிகொள்கிறது
வியாபாரம்.
என்
கடைசி
மூச்சைக்கூட
முதலாளிகள்தானே
முடிவு செய்கின்றனர்
பஞ்ச
பூதங்களையும்
பாழாக்கிவிட்டு
நஞ்சை
வேளாண்மை
செய்கிறது
விஞ்ஞானம்.
இயற்கையின்
கதவுகளை
மூடிவிட்டு
இரசாயனங்களுக்குள்
இழுக்கப்படுகிறேன்
நான்.
முப்பாட்டன்
காலத்து
முறைகளையெல்லாம்
மூட்டிகட்டிவிட்டு
கண்ட கண்ட
கன்றாவிகளுக்குள்
கரைந்துவிடுகின்றேன்
நாளும்.
எழுபது
வயதில்
வரவேண்டியவை
எல்லாம்
ஏழு வயதிலேயே
வர
நாற்பது
வயதுக்குள்ளாகவே
நரகத்துள்
விழுகிறேன்.
வீதிக்கொரு
வைத்தியசாலை
வீட்டுக்கொரு
மருந்தகம்....
அனுபவிக்கப்போகிறது
அடுத்த
தலைமுறை.
ஆரோக்கியவான்களை
இனி
அகராதியில்
மட்டுமே
பார்க்கலாம்.....
Sivaratnam Navatharan

Monday, October 8, 2018

கவிதையியல் அல்லது அழகியல் செயல்பாடு

ஒரு மொழிதலில் இருக்கும் ஆறு அம்சங்களில் மேலாதிக்கம் செலுத்தும் ஒன்று வேறுபட்ட மொழியியல் செயல்பாட்டைக் கொண்டிருப்பதாக யாக்கப்சனின் மொழியியல் தகவல்தொடர்பு மாதிரியில் விளக்கப்படுகிறது. மொழிதல்களில் கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தினால்(உதாரணமாக இலக்கியப் பிரதிகள்), மொழி அதிகம் ‘இருண்மை’ மிக்கதாகவும் குறிப்பான் மற்றும் ஊடகத்தை(மற்றும் அதன் பொருளாம்சாம் உட்பட) அல்லது வடிவம், பாணி அல்லது சங்கேதம் போன்றவற்றில் குறைந்தபட்சம் குறிப்பீடு, உள்ளடக்கம், ‘தகவல்’ அல்லது குறிப்பால் உணர்த்தும் பொருள் போன்றவற்றை வலியறுத்துவதாகவும் மரபுரீதியான உரையாக இல்லாமலும் இருக்கும்.
அது போன்ற பிரதிகள் வெளிப்பாட்டின் வடிவம் மற்றும் வினையை முன்வைப்பதாகவும் ‘இயற்கையான’ அல்லது ‘ஊடுருவத்தக்க’ உறவாக குறிப்பான் மற்றும் அதன் குறிப்புப் பொருளைக் குறைத்துக் காட்டுவதாகவும் இருக்கும். இந்தப் பொருளில், கவிதையியல் செயல்பாடு மேலாதிக்கம் செலுத்தும் பிரதி சுய-குறிப்புப் பொருளாக உள்ளது: வடிவமே உள்ளடக்கம் மற்றும் ‘ஊடகமே(அல்லது மொழியே) அதன் தகவல்’.
யாக்கப்சனின் மாதிரியை முன் வைத்து பின்னர் வளர்க்கப்பட்ட மாதிரிகளில் கவிதையியல் செயல்பாடு முறையான செயல்பாடாகக் கொள்ளப்பட்டது. கவிதையியல் செயல்பாடு ஆகுபெயராக அல்லாமல் அதிமான உருவகமாகவும் புறப்பொருளைச் சுட்டாமல் அதிகமான அகப்பொருளைக் கொண்டும் இருக்கும்.
பல்பொருள்:பிரதியியல் நியமனவாதத்தை(உதாரணமாக பின்அமைப்பியல்வாதிகள்) மறுப்பவர்கள், பிரதிகளின் ‘பல்பொருள்’ இயல்பை வலியுறுத்துகிறார்கள்-பன்மை பொருள்களைக் கொண்டதாகக் கூறுகிறார்கள்.
பல்குரல்கள்:ஒற்றைக் குரலுக்கு மாற்றாக ஒரு பிரதியின் கதையாடலில் இருக்கும் பல்குரல்கள் ஒரு விருப்பப்பட்ட வாசிப்பு அல்லாமல் பல்வேறு வகைப்பட்ட வாசிப்புகளை ஊக்குவிக்கின்றன.
பின்நவீனத்துவம்:இந்த வழுக்கும் சொல், நவீன காலத்திற்குப் பிந்தையதாகவும் பின்அமைப்பியலுடன் இயைந்து வந்த தத்துவமாகவும், கட்டுடைப்பு, முற்போக்கு ஐயமுறு வாதம், உறவுவாதம் போன்றவற்றுடன் முரண் அடிப்படை நிலைப்பாட்டைப் பகிர்வதுமான ஒன்றாகவே கொள்ளப்படுகிறது. விளக்கத்தை எதிர்க்கும் விளக்கமாகவே பின்நவீனத்துவம் இருப்பது அவலம்.
ஓர் ஒற்றை ‘கோட்பாட்டை’க் கொண்டதாக பின்நவீனத்துவத்தைக் கூறமுடியாது(குறித்தலுக்கு வெளியே எந்த ஓர் உண்மையும் இருப்பதாக எந்த ஒரு பின்நவீனத்துவக் கோட்பாட்டாளரும் கூறவில்லை). ‘பின்நவீனத்துவ’ அழகியல் ‘இயக்கம்’ எதுவும் இல்லை. பின்நவீனத்துவம் அதிகமான முறிவுகளைக் கொண்டதாகவும் பன்முகம் கொண்டதாகவும் உள்ளதாகும். இருந்தாலும், பின்நவீனத்துவ பிரதிகள் மற்றும் நடைமுறைகளின் பண்பில் உள்ள அம்சங்கள் அவலம் மற்றும் அதிகப்படியான உட்பிரதியியலைப் பிரதிபலிப்பவையாக இருப்பதாகும்-பிரதிகளுக்கு, வகைமைகளுக்கு, ஊடகங்களுக்கு இடையே உள்ள எல்லைகள் மங்கி பிரதியின் கட்டமைப்பு மற்றும் கட்டமைக்கப்பட்டச் செயல்பாடு மீது மட்டும் கவனத்தைக் குவிப்பவையாக உள்ளன.
வெகுஜன கலாச்சாரத்தையும் ‘தீய ரசனையை’ உள்ளிழுப்பதாகவும் இருப்பதால் நவீனத்துவத்திலிருந்து பின்நவீனத்துவம் வேறுபடுகிறது. லியோடார்ட் 1979ல் எழுதிய ‘பின்நவீனத்துவ நிலை’ என்ற நூலிலிருந்து அதன் காலம் கணக்கிடப்படுவதாகவும் சில சமயங்களில் தோன்றுகிறது. அதிலிருந்து ‘மீமெய் கதையாடல்களின் மீதான அவநம்பிக்கையை’க் காட்டுவதாக பின்நவீனத்துவ கோட்பாடு கொள்ளப்படுகிறது.

Mubeen Sadhika

வினாயகரை வழிபட

ஒருவனுக்கு ஜாதகத்தில் ஏற்படும் எந்தவித சாபங்களையும் வினாயகர் வழிபாட்டால் நிவர்த்தி யாகும். குலதெய்வ சாபம், குலதெய்வத்தை வழிபாடு செய்யாததால் வரும் கஷ்டம், குலதெய்வம் வீட்டிற்கு வராத நிலை, குலதெய்வம் கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள், குலதெய்வத்தை நினைத்து வினாயகரை வழிபட வினாயகர் குலதெய்வ அருளை பெற்றுத் தந்துவிடுவார்.

 விநாயகர் என்றால் தனக்கு மேலே வேறொரு தலைவன் இல்லாதவன் என்று பொருள். விநாயகர் முழுமுதற் கடவுள் ஆவார். ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரம் எல்லாவற்றுக்கும் மூலமாக அமைந்துள்ளது.

‘ஓம்’ எனும் வடிவமாகவும், பிரணவ பொருளாகவும் விநாயகர் விளங்குகிறார். சிவபெருமானின் மகனான விநாயகர் பூதகணங்களின் தலைவரும் ஆவார். அதனால் அவருக்கு கணபதி என்ற பெயரும் உண்டு.

‘கணபதி பூஜை கைமேற்பலன்’ என்பது பழமொழி. விநாயகர் ஏழை, எளியவர்களுக்கு கண்கண்ட தெய்வம் மஞ்சள் பொடியிலும், களிமண்ணிலும், சாணத்திலும் விநாயகரை பிடித்து வழிபடலாம். அந்த வடிவில் அவர் எழுந்தருளி அருள்புரிவார். அவரை வழிபட சாஸ்திரங்கள் தேவையில்லை. கணபதியை உள்ளன்போடு வணங்குபவர்களுக்கு வருகின்ற வில்லங்கங்கள், இடையூறுகள் அனைத்தும் விலகி ஓடும். எனவே தான் எந்த சுபகாரிய தொடக்கத்திலும் அன்று தொட்டு இன்று வரை அனைவரும் விநாயகர் பூஜையை முதலில் கொண்டாடி வருகிறோம்.



1. விநாயகர் சகஸ்ரநாமம்:
 
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
 
2. விநாயகர் ஸ்லோகம்:
 
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
உமாஸுதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்
 
3. விநாயகர் ஸ்லோகம்:
 
ஓம் தத்புருஷாய வித்மஹே 
வக்ரதுண்டாய தீமஹி 
தன்னோ தந்தி ப்ரசோதயாத்.
 
4. விநாயகர் ஸ்லோகம்:
 
ஐந்து கரத்தனை யானை முகத்தனை 
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை 
நந்தி மகன்தனை ஞானக் கொழுத்தினைப் 
புந்தியில் வைத்து அடி போற்றுகின்றேனே.
 
5. விநாயகர் ஸ்லோகம்:
 
மூஷிக வாகன மோதக ஹஸ்த 
சாமர கர்ண விளம்பித சூத்ர 
வாமன ரூப மஹேஸ்வர புத்ர 
விக்ன விநாயக பாத நமஸ்தே.
 
6. விநாயகர் காயத்ரி மந்திரம்:
 
வக்ரதுண்டாய ஹீம் 
ஓம் நமோ ஹேரம்ப மதமோதித 
மம சர்வ சங்கடம் நிவாரயே ஸ்வாஹா 
ஓம் கம் க்ஷிப்ரப்ரசாதனாய நமஹ.
 
7. விநாயகர் ஸ்லோகம்:
 
அல்லல்போம் வல்வினைபோம் அன்னைவயிற்றில் பிறந்த 
தொல்லைபோம் போகாத் துயரம்போம் நல்ல 
குணமதிக மாம் அருணைக் கோபுரத்தில் மேவும் 
கணபதியைக் கைதொழுதக் கால்.
 
ஆகியவற்றை தினமும் படித்து அருகம்புல்லால் விநாயகரை வழிபட்டு வந்தால் விநாயகரின் அருள் நமக்குக் கிடைக்கும். பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும்.


பூதமாய், தேவராய், விலங்காய், ஆணாய், பெண்ணாய் இவ்வாறு எல்லாமாக விளங்குபவர் விநாயகர். அவர் ஒரு கொம்பு, இரு செவிகள், மூன்று கண்கள், நான்கு தோள்கள், ஐந்து கரங்கள், யானை முகத்தினை உடையவர்.

கும்பம் ஏந்திய திருக்கரம் ஆக்கும் தொழிலையும், மோதகம் ஏந்திய கரம் காத்தல் தொழிலையும், அங்குசம் ஏந்திய கரம் அழித்தல் தொழிலையும், பாசம் ஏந்திய கரம் மறைத்தல் தொழிலையும், தந்தம் ஏந்திய திருக்கரம் அருளல் தொழிலையும் புரிகின்றன. எனவே, விநாயகர் ஐம்பெரும் தொழில்களை ஐந்து திருக்கரங்களில் புரிந்து பக்தர்களுக்கு அருள்புரிகிறார்.

விநாயகர் வழிபாட்டுக்கு சதுர்த்தி உகந்தது. சதுர்த்தி என்பது ஒரு திதி. ஒவ்வொரு மாதமும் வளர்பிறையிலும், தேய்பிறையிலும் வருகிற நாலாவது நாள் சதுர்த்தி ஆகும். ஆவணி மாதத்தில் வளர்பிறையில் நான்காம் நாளன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.

இது விநாயகர் பெருமான் பிறந்த தினமாகும். விநாயகர் அவதாரம் மகிமை வாய்ந்தது. கயமுகன் என்ற அரக்கன் சிவபெருமானிடம் வரங்கள் பல பெற்றிருந்தான். அந்த வரத்தின் மகிமையால் தேவர்களையும், மனிதர்களையும் கொடுமைப்படுத்தி வந்தான். அவன் கொடுமை தாங்காத தேவர்கள் சிவனிடம் முறையிட்டனர். கயமுகனை சம்காரம் செய்து தேவர்களை காப்பாற்றுவதற்காக விநாயக பெருமான் சதுர்த்தி அன்று அவதரித்தார். விநாயகர், கயமுகனுடன் போர் புரிந்தார். அவன் ஆயுதங்களால் அழியாத வரம் பெற்றவன். விநாயகர் தனது வலக்கொம்பை ஒடித்து சிவமந்திரத்தை உச்சரித்து ஏவ அது கயமுகனை சாய்த்தது. அவன் பெருச்சாளி வடிவில் எதிர்த்து வந்தான். விநாயகர் அவன் மீது கருணை புரிந்தார். அவன் அறியாமை அகன்றது. விநாயகரை வணங்கி நின்றான். விநாயகர் அவனை தன் வாகனம் ஆக்கி அருள் புரிந்தார்.


பிள்ளையார் பூஜைக்கு அருகம்புல்லும் எருக்கம் பூவும் விசேஷமானதாகும். விநாயகர் சதுர்த்தி விரதம் இருப்பவர்கள், விநாயகரின் அருள் பெற்று அனைத்து நலன்களையும் சுகங்களையும் பெறுவார்கள். வாழ்க்கையில் துன்பம், இடைஞ்சல்கள் வராது.

இலை வழிபாடு பலன்

விநாயகரை மருத இலையால் வழிபட்டால் மகப்பேறு கிடைக்கும். அரச இலையால் வழிபட எதிரிகள் வீழ்வர். அகத்தி இலையால் வழிபட்டால் துயரங்கள், வில்வ இலையால் அர்ச்சனை செய்தால் இன்பம் பெருகும். வெள்ளெருக்கால் வழிபட சுகம் கிடைக்கும். மாதுளை இலையால் வழிபட நற்புகழ் அடைவர். கண்டங்கத்தரி இலையால் வழிபட லட்சுமி கடாட்சம் கிடைக்கும். 

கட்சிசார் அரசியல் இலங்கை தமிழர்களுக்கு அவசியமற்றது.......


இன்று எம்முன் இருக்கும் ஒரே தெரிவு. உரிமை அரசியலை வினைத்திறனுடனும் ராஜதந்திரவழியுனூடாக கொண்டு சென்று இலக்கை எட்டும் அரசியல் அனுபவசாலிகளை ஒருமுகபடுத்துவதே.
நல்லாட்சி அரசுக்கு த தே கூட்டமைப்பு கண்மூடித்தனமாக ஆதரவை வழங்கி இன்று அது தனது சர்வதேச நெருக்கடிகளில் இருந்து மீண்டு பொருளாதார சிக்கலை தவிர்த்துக்கொள்ள போராடுகிறது.
நெருக்கடியில் இருந்து மீண்டுவர உதவிய
த தே கூட்டமைப்பு. தீர்வும் இன்றி அபிவிருத்தியும் இன்றி. வெறுமை அடைந்த நிலையில் மக்களுக்கு எதை சொல்லி சாமாளிச்சு மீண்டும் கட்சிசார் வியாபார. அரசியலை முன்னேடுப்பது என்று அங்கலாய்ப்பதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில் தனிப்பட்ட கட்சி நலன்சார்ந்து சிந்திப்பதை தவிர்த்து கூட்டாக சேர்ந்து குறிப்பாக கொள்கை அளவில் இணங்கி செல்வோர் ஒருமித்து செயல்படும் போதே தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெறமுடியும். அதை விடுத்து ஆளுக்கொரு திசையில் பயணித்தால் மீண்டும் இஸ்லாமிய சிங்கள சகோதரர்களின் ஆதரவில் தமிழரசு கட்சி ஆட்சியை கைபற்றும்.
அவ்வாறான நிலை ஏற்பட்டால் அரசு தான் நினைக்கும் விடயங்களை இலகுவாக நிறைவேற்றும். இதை தடுப்பதற்கு கட்சிசார் அரசியல் ஆதாயங்களை மறந்து மக்கள் ஆதரவு இருக்கும் கட்சிகள் கொள்கைரீதியாக ஒன்றுபடவேண்டும்.
மாகாணசபையில் எதிர்கட்சியாக இருந்து எந்த பயனும் கிட்டாது.

T N A ,,,,, E P D P,,,, U N P,,,, கூட்டுச்சேர்ந்து ஆட்சி அமைக்க முயற்சிப்பர். ஏனேனில் அவர்களுக்கும் கணிசமான வாங்கு வங்கியுள்ளது. இவற்றை எதிர்கொள்ள நாம் தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற வேண்டும். தனித் தனியாக பயணித்தால் அரசு ஆதரவுக் குழு ஆட்சி அமைக்கும்.
அவ்வாறு ஒரு நிலை ஏற்பட்டால் தமிழ் மக்கள் கட்சிகளை சபிக்கும் நிலை ஏற்படும்.
எனவே த தே கூ எதிர்கொள்ள உங்களுக்குள் இருக்கும் வறட்டு கௌரவங்களை உதறிவிட்டு கொள்கைரீதியாக பயணிக்கும் அனைவரும் ஒரணியாகி திரண்டு தமிழ் மக்களின் தலைமை மாற்றத்துக்கு உதவுங்கள்.

நாம் ஒன்று பட்டால் போலிக்கூட்டை உடைத்தெறியலாம்.
அன்புடன் ஸ்ரீரங்கன்.

Friday, October 5, 2018

Three scientists have won the Nobel prize in chemistry for their work in harnessing evolution to produce new enzymes and antibodies.

Frances H Arnold, George P Smith and Gregory P Winter win Nobel prize in chemistry
Three scientists have won the Nobel prize in chemistry for their work in harnessing evolution to produce new enzymes and antibodies.
British scientist Sir Gregory P Winter and Americans Frances H Arnold and George P Smith will share the 9m Swedish kronor (£770,000) prize, awarded by the Royal Swedish Academy of Sciences.

Half of the prize goes to Arnold, from the California Institute of Technology, for her work on directing the evolution of enzymes – proteins that speed up chemical reactions. In a nutshell, Arnold introduced genetic mutations into enzymes and then looked to see what effect the mutations had. She then selected the cases where a particular mutation proved useful – for example, allowing the enzyme to work in a solvent it would otherwise not work in.
Her work has made it possible to cut out the use of many toxic catalysts and has led to the development of enzymes for all manner of fields, including the development of biofuels and the production of pharmaceuticals.
The other half of the award goes to Winter and Smith, for their work on “phage display of peptides and antibodies.” A phage is a virus that can infect bacteria, “tricking” bacteria to reproduce it. Smith genetically engineered phages so that they would include a certain protein on their outer capsule. He was the ability to separate out these modified phages from those without the protein. The technique means that scientists are able to explore how the protein might interact with. Winter used this technology to develop new drugs that have transformed medicine, offering therapies for diseases ranging from cancer to autoimmune conditions.
Arnold is only the fifth woman to be awarded the prize for Chemistry – the last female scientist to scoop the award was Ada E. Yonath in 2009 who shared the prize for her work on understanding the structure of ribosomes: the protein-manufacturing structures inside cells.
Prof Carol Robinson, president of the Royal Society of Chemistry welcomed the announcement. “Today’s Nobel Prize in chemistry highlights the tremendous role of chemistry in contributing to many areas of our lives including pharmaceuticals, detergents, green catalysis and biofuels,” she said. “Directed evolution of enzymes and antibody technology are subjects that I have followed with keen interest; both are now transforming medicine.”

Thursday, October 4, 2018

Ten World’s Oldest Things From Armenia.

Ar Mari Rubenian

Leather Shoe – 5,500 years old

wolrds_old_shoe
A perfectly preserved shoe, 1,000 years older than the Great Pyramid of Giza in Egypt and 400 years older than Stonehenge in the UK, has been found in a cave in Armenia. The 5,500-year-old shoe, the oldest leather shoe in the world, is made from a single piece of cowhide, cut into two layers, tanned and laced.  It contained grass, although the archaeologists were uncertain as to whether this was to keep the foot warm or to maintain the shape of the shoe. “It is not known whether the shoe belonged to a man or woman,” said the lead author of the research, “We thought initially that the shoe and other objects were about 600-700 years old because they were in such good condition,” said Dr Pinhasi. “It was only when the material was dated by the two radiocarbon laboratories in Oxford, UK, and in California, the US that we realised that the shoe was older by a few hundred years than the shoes worn by Ötzi, the Iceman.” Three samples were taken in order to determine the absolute age of the shoe and all three tests produced the same results. Interestingly enough the shoe very much resembles a traditional Armenian shoe known as “charokh” a type of moccasin, still in popular use in Armenia.

Source: http://www.sciencedaily.com/releases/2010/06/100609201426.htm

2-(1)
Sky Observatory – 7,500 years old

Carahunge Zorats Karer
“Carahunge” or “Zorats Karer” (also known as the Armenian Stonehenge) is a megalithic stone circle located some 200km from the Armenian capital Yerevan, not far from the town of Sisian. The name derives from “Car” for “stone” and “hunge” for “sound” or “voice”, meaning “singing stones”. The structure is believed to be a sky observatory due to the enigmatic holes drilled in the stone pointing at the cosmic bodies like the sun, the moon and the stars. It is specifically aligned with the Cygnus constellation and its brightest star Deneb. Being over 2000 years older than the Stonehenge it is believed to be the oldest known sky observatory. However, only since the middle of the 80ies, Carahunge was first interpreted as an archaeoastronomical monument and was studied by Prof. E.S. Parsamian (1999) and Prof. P.M. Herouni (1998) who have dated the structure to around 5,500 BCE. There are 222 stones with a total extent exceeding 250 metres, including 84 with holes (with 4-5 cm diameters).

Source: http://www.aras.am/Archaeoastronomy/astronomyancientarmenia.html

3-(1)
Human Brain – 6,000 years old

world's oldest human brain
In a cave overlooking southeastern Armenia’s Arpa River, a team of international scientists have uncovered three Copper Age human skulls, each buried in a separate chamber. The skulls belonged to 12- to 14-year-old girls. The team in Armenia, comprised of 26 specialists from Ireland, the United States and Armenia, had been excavating the three-chamber cave where the brain was found since 2007. “The preliminary results of the laboratory analysis prove this is the oldest of the human brains so far discovered in the world,” said Dr. Boris Gasparian, one of the excavation’s leaders and an archaeologist from the National Academy of Science’s Institute of Archaeology and Ethnology in Yerevan. “Of course, the mummies of Pharaonic Egypt did contain brains, but this one is older than the Egyptian ones by about 1,000 to 1,200 years.” The cave’s damp climate helped preserve red and white blood cells in the brain remains. Genetic research is underway.

Source: http://www.popsci.com/scitech/article/2009-01/archeologists-unearth-oldest-old-world-brain

World's oldest wagons Lchashen Armenia lake Sevan4-(1)
Wagons – 4,000 years old

Over a dozen rich burials have been excavated in Armenia. The most spectacular were those excavated at Lchashen on the borders of Lake Sevan where a more than a dozen almost complete four-wheeled and two-wheeled wagons, as well as two-wheeled chariots with spoked wheels were uncovered. Two of these wagons form a spectacular display in the National Museum in Armenia. The four solid wheels are made from three planks of oak, while the interior is covered by a covering of withies. In his chronology (Timeline of the Development of the Horse, 2007) Beverley Davis describes these wagons as follows: “Primitive wagons dating from this time (2000 BCE) have been found in excellent condition in Armenia. These are the oldest known wagons in the world.”  The wagons have also been included in Prof Stuart Piggott’s classic book “The Earliest Wheeled Transport”.
Source: 1) http://www.armeniapast.com/discovering-armenia/ 2) http://sino-platonic.org/complete/spp177_horses.pdf

Oldest Skirt found in Armenia5-(1)
Skirt – 5,900 years old

Fragment of a skirt made of reed was found during excavations in the Areni-1 cave in southern Armenia. Pavel Avetisian, the head of the Institute of Archeology and Ethnography in Yerevan, informed that this artefact was discovered in 2010 and, even though they had informed about this precious item at the time, interest toward it grew further only recently. “The women’s clothing dates back to 39th century BC. So far we have discovered the skirt’s parts, which were superbly preserved. It is an amazing material with rhythmic colour hues, and other remnants of the straw-woven material were also discovered. Such thing is recorded in Armenia for the first time,” Avetisyan noted. It’s considered the world’s oldest piece of reed clothing.
Source: http://www.huffingtonpost.com/2010/10/26/5900yearold-skirt-found-i_n_774429.html

6-(1)
Wine-Making Facility – 6,100 years old

oldest-wine-making-press-Armenia
In a cave in southern Armenia, a team of international archaeologists have unearthed a wine press for stomping grapes. Fermentation and storage vessels, drinking cups, and withered grape vines, skins, and seeds have also been discovered at the site. The installation suggests the Copper Age vintners pressed their wine the old-fashioned way, using their feet. Juice from the trampled grapes drained into the vat, where it was left to ferment. The wine was then stored in jars—the cool, dry conditions of the cave would have made a perfect wine cellar. Ancient-wine expert Patrick E. McGovern, a biomolecular archaeologist at the University of Pennsylvania Museum in Philadelphia, called the discovery “important and unique because it indicates large-scale wine production, which would imply, I think, that the grape had already been domesticated.” The apparent discovery that winemaking using domesticated grapevines emerged in what’s now Armenia appears to dovetail with previous DNA studies of cultivated grape varieties, McGovern said. Armenian Highlands are considered the birthplace of viticulture. It is believed the wine has been used for religious or ritualistic purposes. The discovery is important, the study team says, because winemaking is seen as a significant social and technological innovation among prehistoric societies. Vine growing, for instance, heralded the emergence of new, sophisticated forms of agriculture. They had to learn and understand the cycles of growth of the plant. They had to understand how much water was needed, how to prevent fungi from damaging the harvest, and how to deal with flies that live on the grapes. Chemical analysis of the residue has dated the winery to 4,100 BCE. “This is the earliest, most reliable evidence of wine production,” said archaeologist Gregory Areshian of the University of California, Los Angeles (UCLA).

Source: 1) http://graphics8.nytimes.com/packages/pdf/science/YJASC_2685.pdf    2) http://news.nationalgeographic.com/news/2011/01/110111-oldest-wine-press-making-winery-armenia-science-ucla/

7-(1)
Metal Smelting Foundry – 6,000 years old

Metsamor-metal smelting foundries
Excavation of the ruins at a Bronze Age archaeological settlement of Metsamor in central Armenia has revealed a very large metal industry including a foundry with 2 kinds of blast furnaces. The foundry is known to have extracted and processed gold, copper, and several types of manganese, zinc, strychnine, mercury, and iron. Several huge underground caves were uncovered that are thought to have been storehouses for base metal. The first iron in the ancient world was probably forged here, though it was not as commonly forged as bronze. Metal from the foundries of Metsamor found their way to Egypt, Central Asia and China.

Source: http://www.ancient-wisdom.co.uk/turkeymetsamor.htm

8-(1)
Innovative Stone Age Tools – 325,000 years old

Stone Age Levallois tools Armenia
A team of archaeologists and anthropologists from the United States and Europe led by Dr Daniel Adler of the University of Connecticut have discovered thousands of Levallois stone tools at the Armenian archaeological site of Nor Geghi dating from between 325,000 and 335,000 years ago. Suggesting that local populations developed them out of biface technique, which was also found at the site. Named after flint tools discovered in the 19th century in the Levallois-Perret suburb of Paris in France, Levallois technique is a distinctive style of flint knapping developed by early humans during the Paleolithic. The co-existence of the two techniques provides the first clear evidence that local populations developed Levallois technique out of existing biface technique. The discovery was published in the Science Journal and challenges the commonly held out of Africa theory of human innovation. These tools are the oldest outside of Africa, according to the published work: “Our data from Nor Geghi 1, Armenia, record the earliest synchronic use of bifacial and Levallois technology outside Africa”

Source: 1) http://www.sciencemag.org/content/345/6204/1609 2) http://www.sciencedaily.com/releases/2014/09/140925141224.htm

9-(1)
Depictions of Agriculture – 7,500 years old

petroglyphs-of-ukhtasar-mountains-armenia (1)
Armenia is home to numerous sites containing ancient petroglyphs with images of scenes of agriculture and domestication of animals. On the slopes of volcanic massifs of Armenia, 3000 meters above sea level, one can find whole galleries of rock drawings of agricultural motives. Some of these petroglyphs are dated as far as the 12th -11th millennium BC. People from later eras (Chalcolithic and Bronze Age) continued to record their prowess and beliefs on the stones. The largest variety and number of carvings date to this period and the early Iron Age. The first farmers depicted the great history of agronomics in these petroglyphic drawings. The symmetric arrangement of predominantly zoomorphic heroes was an indispensable attribute of the new times. These petroglyphs are carved onto dark brownish-black volcanic stones left behind by an extinct volcano. Although the site was discovered in the early 20th century, it was not really studied until the 1920s and again in the late 1960s; it is still not fully understood today. In his chronology (Timeline of the Development of the Horse, 2007) Beverley Davis describes: “Petroglyphs found in Armenia (one of the possible sites for the Indo-European homeland) show the oldest pictures of men driving chariots, wagons, and plows, with horses doing the pulling.” 

Source: 1) http://ayfwest.org/news/ughtasar-the-petroglyphs-of-armenia/ 2) http://sino-platonic.org/complete/spp177_horses.pdf

horse-bit-was-found-in-the-tomb-at-Nerkin-Naver-and-dates-to-the-3rd-millennium-BC10-(1)
War Horses – 4,500 years old

Armenian archaeologists discovered an ancient burial site containing a large amount of sacrificed animal remains, among them war horses. The head of the Cultural Inheritance Research Center of Armenia Hakob Simonyan explained that the horse bones found at “Nerkin Naver” are the oldest yet uncovered belong to a domesticated horse used for military purposes. “This find dates back to the 26-25th centuries BC, and it’s the oldest burial place of a horse discovered to this day. It has an all-important significance not only for Armenia but for the whole Western Asia as well,” Simonian said. Horse domestication and breading have for long been associated with ancient Armenia. Classical writers would often refer to Armenia as a land of excellence horse mastery. The ancient Greek historian Strabo describes Armenian war horses in several of his passages [11. 14. 9]: “Artavasdes (king of the Armenians), at the time when he invaded Media, showed, apart from the rest of the cavalry, six thousand horses drawn up in battle array covered with complete armour.” Horses have been considered sacred animals to the ancient Armenians and have been associated with the solar deity. Ancient Greek writers have equally recorded horse sacrifice in Armenia, Xenophon Anabasis [4. 5. 35] (430 – 354 BC) recounts: “Then Xenophon took the village chief back for the time to his own household, and gave him a horse that he had got when it was rather old, to fatten up and sacrifice, for he understood that it was sacred to the Sun-god. He did this out of fear that the horse might die, for it had been injured by the journey”. In almost all regions of the Republic of Armenia, bronze horse bridles have been found, dating to the middle of the II millennium BC, and providing sound evidence of the existence of the numerous cavalry in the late Bronze Age. One of the most important was the bronze chariot model discovered in Loriberd near the town of Stepanavan. It shows battle scenes, where the warring armies consist of cavalry, heavy and light-armed infantry, and units of transport. The image on the right is showing an iron horse-bit from the burial, which was prepared by forging technologies; which is the earliest example of an iron curb known to us.
Source: 1) http://hetq.am/eng/news/37962/%E2%80%9Cnerkin-naver%E2%80%9Dashtarak-burial-site-reveals-its-ancient-treasures.html 2) http://www.perseus.tufts.edu/hopper/text?doc=Xen.%20Anab.%204.5.35&lang=original
See more on ancient Armenian horse culture: Armenia the land of the horse or read the following two articles: Land of the Horse and Historic quotes about horse-breeding in Armenia
this concludes my list of 10 World’s oldest things from Armenia. I would very much like to know which is/are your favourite and why? Also, let me know in the comment section if it’s missing a “world’s oldest thing from Armenia” you think should’ve made the list.  The following 5 discoveries didn’t make my list due to limited information and because I only needed 10 (maybe in the next list):
1) “World’s oldest use of Water Dams” at Mokhrablur,
2) “Earliest traces of animal pigment” Vordan Karmir
3) “World’s oldest known carpet” Pazyryk carpet
4) “World’s oldest evidence of cultivating almonds”
5) “World’s oldest cathedral” Etchmiadzin Cathedral
I am planning a video about the oldest things from Armenia (not limited to 10 items) so all suggestions are of course welcome, let me know your thoughts. Bellow an info-graphic for sharing on social media, enjoy!

Old Lankan Map in Tamil


பரியேறும் பெருமாள் BA BL

முரண்பட்டு நிற்கும் இரண்டு தரப்புகளும் சுமுகமாக செல்ல வேண்டுமென்றால் negotiation ground எனப்படும் உரையாடல் தளம் வேண்டும். இரு தரப்பும் பேச ஆரம்பிக்க வேண்டும். உடனே தீர்வு கிடைத்துவிடாது. ஆனால், பேசத் துவங்குவது மிக முக்கியம் - எதிர்தரப்பு எவ்வளவு மோசமாக இருந்தாலும், பேசும் போதுதான் பிரச்சனையை தீர்ப்பதற்கான வெளிச்சம் தட்டுப்படும். இது நீண்ட பயணத்திற்கான தொடக்கப் புள்ளி.
இயக்குனர் தோழர் Mari Selvaraj நினைத்திருந்தால், பரியன் கொலை செய்வதாகக் காட்டி, உணர்ச்சிக் குவியலாகப் படத்தை முடித்திருக்கலாம். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. ஆதிக்க ஜாதியுடன் ஓர் உரையாடலைத் துவக்கியிருக்கிறார். `நா சொல்றது உனக்குப் புரியுதா ? உன்னோட வன்மத்தால் எம்மக்கள் அனுபவிக்கும் கொடுந்துயரங்களைப் பார்த்தாயா ? ' என்று ஒடுக்கப்பட்ட ஜாதி, தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை ஒருபுறம் வைத்துவிட்டு, பெருந்தன்மையோடும், பேரன்போடும்,
பெரும்வேதனையோடும், ஆதிக்க ஜாதியுடன் உட்கார்ந்து பேசுகிறது. உரையாடத் துவங்குகிறது.
சமத்துவத்திற்கான சவாலான பயணத்தில் negotiation groundஐ உருவாக்கியிருக்கும் `பரியேறும் பெருமாள் BA BL' மிக முக்கியமான படம் 
 Geeta Ilangovan
இந்திய சமூகங்களின் சாதிய மனபோக்குகளை பலவீனப்படுத்துகின்ற திரைப்படம் பரியேறும் பெருமாள். சாதி ஒழிப்பு என்கின்ற சமத்துவ சமூகத்திற்கான முயற்சி ஒடுக்கப்படுகின்ற சமூகத்திலிருந்து தொடங்குவதில்லை. மாறாக அது ஒடுக்குகின்ற சமூகத்திலிருந்து தொடங்க வேண்டியது என்பதை இப்படம் மிகத்தெளிவாக உணர்த்தியிருக்கிறது.
பாபாசாகேப் அம்பேத்கரின் சாதியொழிப்பு என்கிற நூல் தலித்துகளுக்கானதில்லை. தலித் அல்லாதவர்களின் சிக்கலான உளவியலை சீர்ப்படுத்தும் பாடநூல் என்பதை இத்திரைப்படச் சூழலிலாவது சாதி இந்துக்கள் புரிந்துக்கொள்ள வேண்டும். புரட்சியாளர் அம்பேத்கர் "இந்தியாவில் கிராமங்கள் புற்றுநோயாக இருக்கிறது" என்கிறார். காந்தியோ "முதுகெலும்பு" என்கிறார். பரியேறும் பெருமாள் திரைப்படம் புரட்சியாளர் அம்பேத்கரின் கூற்றை நிரூபித்திருக்கிறது. சமூக விடுதலைக்கான இயக்கங்கள், கட்சிகளுக்குக்கூட சாதிய வன்கொடுமைகள் பழகிப்போய், அது குறித்த பிரங்ஞையே இல்லாமல் பறந்துக்கொண்டிருப்பதை பரியனின் தந்தை செல்வராஜை அவமானப்படுத்துகின்ற காட்சி அப்பட்டமாக்குகிறது.
"இந்திய கிராமங்கள் அதிகாரமற்றவர்களின் திறந்தவெளி சிறைச்சாலையாக இருக்கிறது" என்பதை, பேருந்திலிருந்து பரியனை இறக்கி அடிக்கின்ற காட்சி - திருமணத்திற்கு வந்தவனை அடித்து சிறுநீர் கழிக்கின்ற காட்சி - கறுப்பி நாய் கொல்லப்படுவது... போன்ற காட்சிகள் தத்ரூபமாக இருக்கின்றன. திரைமொழியாக்கப்படாமல் இருந்த பள்ளர்களின் வாழ்வியலை முதல்முதலாக இயக்குநர் மாரி செல்வராஜ் எடுத்துக்காட்டி இருக்கிறார். ஒடுக்கப்படுகின்ற அனைத்து சமூகத்தின் குறியீடாக இத்திரைப்படம் அமைந்திருந்தாலும், தென்மாவட்ட தலித்துகளின் தற்கால அரசியல் நிலைப்பாட்டை இது பேசியிருக்கிறதா? என்ற கேள்வியும் எனக்குள் எழுந்திருக்கிறது.
வணிக அடிப்படையிலான முழுமையான வெற்றியடையாமல்,
அனைத்து திரையரங்குகளிலும் வெளியிடப்படாமல் போகின்ற நிலை உண்டாகுமேயானால், படைப்பு ரீதியாக இத்திரைப்படம் முழுமையான வெற்றியை அடைந்ததாகத்தான் அர்த்தம். இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்படவேண்டிய திரைப்படம் பரியேறும் பெருமாள்.

இனி சாதிய வன்கொடுமைகளைப்பற்றி உலக நாடுகளுக்கு எடுத்துரைக்க ஆவணப்படங்கள் அவசியமில்லை, பரியேறும் பெருமாளே அதை பறைசாற்றும். இயக்குநர் பா.ரஞ்சித், இயக்குநர் சுசீந்திரன், இயக்குநர் கோபி நயினார் தமிழ் சினிமாவில் உருவாக்கிய சாதியொழிப்பு பாதையில் சுதந்திரமாகவும் உண்மையாகவும் பயணித்திருக்கிறார் இயக்குநர் மாரி செல்வராஜ். மக்களோடு கலந்திருக்கும் இசை இத்திரைப்படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. தென்மாவட்ட சமூக அரசியலில் டாக்டர் அம்பேத்கரை மிக எதார்த்தமாக அறிமுகப்படுத்தியிருக்கிறார் மாரி.
சாதியொழிப்பு அரசியலைப் பேசுகின்ற #பாரஞ்சித் #நீலம்புரடெக்‌ஷன் வழியாக இத்திரைப்படத்தை தயாரித்திருப்பது தமிழ்ச்சினிமாவில் ரஞ்சித்தின் கலை நேர்மையை மீண்டும் உணர்த்தியிருக்கிறது. ஜோக்கர் திரைப்படத்திற்கு தேசிய விருது வழங்கிய இந்திய அரசு நிச்சயம் பரியேறும் பெருமாளை தலைதாழ்ந்து வரவேற்கும்.
- டாக்டர். பாரதி பிரபு

பரியேறும் பெருமாள் - பரிவட்டம் கட்டுவாரா?
ஒரு கலைப்படைப்பை ஒரு தனி மனிதனின் உள்ளுணர்வோடு உரையாடச் செய்கிற போது அவனுடைய மனம் ஏதாவது ஒரு இயல்புணர்ச்சியால் பதட்டமடைகிறது என்றால், அந்தக் கலைப்படைப்பு வெற்றி பெற்றதாக நாம் அறிகிறோம், குறிப்பாக சாதி குறித்த உயர் நவிற்சியால் ஊற வைக்கப்பட்டிருந்த தமிழ் திரைப்படங்கள் ஒடுங்கிய குரலை, நடுங்கிக் கொண்டிருக்கிற மானுடத்தின் ஒரு பகுதியை கலை வெளிச்சம் போட்டுக் காட்ட முற்படுகிறது என்பதே பெரிய சாதனையாகப் பேசப்படுவதுதான் சமகாலத்தின் துயரம்.
நம்முடைய சமூகம், உயர் இலக்கியங்களைப் பேசக் கூடியதாக இருக்கிறது, உயர் பண்பாடுகளைக் குறித்த வரட்டுக் கூச்சலிடுவதாய், பொருளாதார மேம்பாடு, அரசியல், சமூக வளர்ச்சி என்று பெருமிதம் கொண்டதாய்க் காட்சி அளிக்கிறது, தமிழகத்தின் ஒரு கிராமத்தில், தோற்றத்தில் பெரிய மனிதர் ஒருவரை நீங்கள் சந்திக்க நேர்ந்தால் அவருடைய குரலில் கலந்திருக்கும் அரசியல் மற்றும் சமூகப் பெருமிதம் உங்களை ஒரு பண்பட்ட சமூகத்தில் இருப்பதாக உணரச் செய்யும்.
பிறகு உரையாடலின் ஏதாவது ஒரு புள்ளியில் அவர் சாதி அடையாளம் குறித்துப் பேசும்போது அந்தப் பாதுகாப்பு மனநிலையில் இருந்து நழுவி ஒரு பதட்டம் தொற்றிக் கொள்ளும். அந்த உரையாடலின் இரண்டாம் மனிதன் ஒடுக்கப்பட்ட மனிதனாக அடையாளம் செய்யப்படுகிறவனாக இருந்தால் அவனுடைய மனநிலை குறித்து நீங்கள் கற்பனை செய்து பாருங்கள். விரைந்து உரையாடலை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறத் துடிக்கிற, ஒடுங்கிப் போகிற மானுடத்தின் குரலாக அது இருக்கும். சாதிப் பெருமிதத்தின் முன்னாள் சாலையில் அடிபட்டுக் கிடக்கிற ஒரு அழகான நாய்க்குட்டியின் படபடக்கிற வாலைப் போல காட்சிப் புலத்தில் நின்று துடிக்கும்.
தமிழ் திரைப்படங்களில் விலங்குகளுக்காக உலகத்தையே எதிர்த்து நின்று போராடுகிற மாவீரர்களை, போராளிகளை நாம் பார்த்திருக்கிறோம், ஆனால், கருப்பியைப் போல கொடூரமாகக் கொல்லப்பட்ட ஒரு நாய்க்காக கதை நாயகனின் சார்பில் பார்வையாளனைப் போர் தொடுக்க வைத்ததுதான் பரியேறும் பெருமாளின் வெற்றி. அது இந்த சமூகத்தில் ஒரு இயல்பான நிகழ்வு என்று நாயகனோடு கடக்கிறது மாரி செல்வராஜின் திரை மொழி. நாய் ஒரு படிமம், நாயை நீங்கள் இளவரசனாகக் கொள்ளலாம், சாதிப் பெருமிதத்தின் பெயரால் கொல்லப்பட்ட எவரையும் அந்த நாயைப் போல நீங்கள் காட்சிப் படுத்திக் கொள்ளலாம்.
பொது சமூகத்தின் மனநிலையில் இரண்டு வெவ்வேறு விதமான மனநிலை மாற்றத்தை இந்தத் திரைப்படங்கள் உருவாக்கலாம், ஒடுக்கப்பட்டவனாகத் தன்னை உணர்கிற ஒரு மானுடனின் மனநிலை, சாதிப் பெருமிதம் கொள்பவனாகத் தன்னை அடையாளம் காண்கிற ஒரு மானுடனின் மனநிலை, முதலாவதில் சினம் உருவாகலாம், அல்லது கையறு நிலை, பரிவுணர்ச்சி என்று கலவையான மனநிலை உருவாகலாம். இரண்டாமதில் இயக்குனர், தயாரிப்பாளர், ஒரு நல்ல கலைப் படைப்பை ரசிக்கிற பார்வையாளன் என்று எல்லோருமே எதிர் நோக்குவது மாற்றத்தை, நேரடியான சாதிக்கு எதிரான மனநிலை மாற்றத்தை.......
ஆனால், அந்த மாற்றம் நிகழக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறதா என்கிற கேள்வி நூலறுந்த பட்டம் போலக் காற்றில் ஆடுகிறது. வழக்கமான கொண்டாட்ட மனநிலை என்பது முற்போக்கு முகமூடிகளில் மறைக்கப்படும், சாதி திரைப்படங்களின் மூலமாக எழுப்பப்படுகிற கேள்விகளால் அழிந்து விடக்கூடிய ஒரு நிறுவனம் அல்ல, மாறாக இந்திய சமூகத்தின் ஆதி அந்தம் வரைக்கும் பரவிக் கிடக்கிற ஒரு மத நிறுவனம். முறையான தன்னெழுச்சியான மானுடத் துண்டுகள் மட்டுமே இத்தகைய கலை வடிவத்தைப் போற்றக் கூடியதாக இருக்கிறது.
ஆக, இந்த உரையாடல்களில், வெறும் பரிவுணர்ச்சியால், கருப்பியைப் போல கொல்லப்படுகிற நாயாக, பரியனின் வேட்டி அவிழ்க்கப்பட்ட தந்தையின் நிர்வாணமாக, சிறுநீர் கழிக்கப்படுகிற ஒடுங்கிய காதலனின் குருதியாக சரணடைதலின் கலை நுட்பத்தை வேண்டுமானால் ரசித்துப் போற்றலாம், ரசித்தலில் இருந்து இந்த சமூகக் கோபத்தை ஒரு இயக்கமாக மாற்ற வேண்டிய ஆயுதங்கள் இந்தப் படத்தில் இன்னும் கூர்மையாக்கப்பட்டிருக்க வேண்டும் என்று ஏனோ தோன்றுகிறது.
சாதி நிறுவனத்தை நீர்த்துப் போகச் செய்ய தார்மீகமான முதல் வழி எதிர்த்து அடிப்பது, இரண்டாவது வழி அரவணைத்துப் போவது அல்லது பணிந்து போவது, மூன்றாவதாக கல்வியின் மூலமாகப், பொருளாதார சமூக மேம்பாடுகளை அடைந்து தன்னியல்பில் நிற்பது, சாதியப் பெருமிதம் ஒரு சந்தனப் பேழை என்று நினைக்கிற மனிதர்களை அது ஒரு பீக்குழி என்று உணர வைக்கிற வேலை இந்த வகையான திரைப்படங்களின் திட்டமாக இருக்க வேண்டும், அதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் மாரி செல்வராஜ்.
முற்பாதியில் கல்லூரி வாழ்க்கையையும், சமூக வாழ்க்கையையும் இணைக்கிற புள்ளிகளில் ஒரு கலைஞனாக இன்னும் பல படிகள் முன்னேற வேண்டிய தேவை மாரி செல்வராஜுக்கு இருக்கிறது, திரைக்கதையில் இன்னும் தீவிரமாக உழைத்திருக்கலாம், திரைப்படங்களுக்கும் ஆவணப்படங்களுக்கும் திரைக்கதையில் இழையோடும் உயிரோட்டம் தான் மிக முக்கியமான வேறுபாடு.
இந்த வகைத் திரைப்படங்கள் ஒடுங்கிய குரல் கொண்ட மானுடத்தின் வரவேற்பைப் பெற்று, போலி முற்போக்கு ஊடகங்களின் விசில் ஒலியில் ஜொலிக்கக்கூடும், ஆனால், பொது சமூகத்தின் மனநிலையில் அதாவது ஒடுங்கிய குரலைக் கண்டு மகிழ்வெய்துகிற ஆதிக்க சமூகத்தின் மனதில் என்ன வேலை செய்கிறது என்பதுதான் மிக முக்கியமான கேள்வி. இப்போதுதான் வேலையைத் துவக்கி இருக்கிற ஒரு இளைஞரிடம் நாம் அத்தகைய கடுமையான கேள்விகளை முன்வைக்க வேண்டாம் என்று தோன்றுகிறது.
முதல் பத்தியில் சொன்னதைப் போல ஒடுக்கப்பட்ட மானுடனின் குரலை, அதாவது அவனுடைய இயல்பான குரலைப் பதிவு செய்வதே ஒரு மிகப்பெரிய புரட்சி என்று கொண்டாடப்படும் சமூகத்தில் நாம் வாழ்கிறோம், நம்முடைய இந்தப் பயணம் இன்னும் நூற்றாண்டுகள் பயணிக்க வேண்டும், நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருந்த பயணத்தை பா.ரஞ்சித்தும் அவரது பரிவாரங்களும் வேகப்படுத்தி இருக்கிறார்கள்.
இன்னும், அழுத்தமான திரைக்கதையோடு, ஆழமான சிந்தனைகளோடு தொடருங்கள் மாரி செல்வராஜ். வாழ்த்து. 
Arivazhagan Kaivalyam

Monday, October 1, 2018

Bridrangar Lighthouse, Iceland.

The whitewashed lighthouse is perched atop the tallest of the rocky cliffs, which stretches an impressive 120 feet upward. It’s off the coast of the Westman Islands, which themselves are about 4.5 miles from mainland Iceland. Because of its isolation, some on the internet have jokingly dubbed the beacon a haven for introverts.
The remote lighthouse was built right before the dawn of World War II. Constructing this lonely lighthouse was no easy task, as helicopters had yet to take to the skies when the work began in 1938. Builders scaled the cliffs to reach the pillar’s pinnacle, laying out the groundwork by hand. They faced slick rocks, rain, and fervent winds knowing that one slip could send them plunging into the frigid North Atlantic Ocean that thrashed and splashed below.

Sunday, September 30, 2018

வள்ளுவர் மேல் ஒரு வழக்கு


பழநி சோ முத்துமாணிக்கம்.
அன்று காலை பரபரப்பாகக் காணப்பட்டது அறம்கூறும் அவையம் (நீதிமன்றம்). வெளிநாடுகள் சென்று சுற்றுவதிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த மன்னனும் மன்றத்துக்கு வருவதாகக் கூறினார்கள். அதனால் அமைச்சர்களும் ஒருவித அச்சத்துடன் காத்திருந்தார்கள்.
உலகமெல்லாம் எவருடைய நூலை உலகப் பொதுமறை என்று போற்றுகிறதோ, எவருடைய நூல் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்த ஆன்றோர்மேல் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
மன்ற வாயில்முன் மக்கள் கூட்டத்தின் எழுச்சி முழக்கம் அறங்கூறவையத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.“கைவைக்காதே.. கைவைக்காதே.. கருத்துரிமையின்மேல் கைவைக்காதே! வாழ்க்கைத் தத்துவம் வடித்துத் தந்த வள்ளுவர் மேலே பொய்வழக்குகள் போடாதே! மக்கள் ஆட்சியின் மாபெரும் உரிமை கருத்துரிமை என்பதைக் கவனத்தில் வை! அறிஞர்கள் வாய்க்குப் பூட்டுப் போட்டால் அழியும் ஆட்சி மறவாதே!” என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டு பல்லாயிரம் மக்கள் கையுயர்த்திக் கொண்டிருந்தார்கள்.
காவலர்கள் முன்னும் பின்னும்வர, வள்ளுவர் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். பொங்கியெழும் மக்களைப் பார்த்துத் தலைமைக் காவலர் வெகுண்டார். “எல்லோரும் அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் குறிபார்த்துத் தீ அம்புகளை வீசக்கூடிய வில்மறவர்கள் உங்களைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்” என்று சீறினார். அப்போதுதான் மக்கள் நாலாபுறமும் சுற்றிப் பார்த்தார்கள்.
எல்லாத் திசைகளிலும் யானைகளின் மேலும் குதிரைகளின் மேலும் அமர்ந்து வில்லும் கவணும் தீப்பந்துகளும் தாங்கிய வீரர்கள் இவர்களைக் குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள். மன்னரிடம் பரிசாகப் பொற்காசுப் பைகளைப் பெறுவதற்காக, எவ்விதக் காரணமும் இன்றி மக்களை நோக்கித் தீக்குண்டுகளை வீசக் காத்திருக்கிறார்கள்
காவலர்கள்.அமைச்சர்களும் படைப்பிரிவுத் தளபதிகளும் அறங்கூறவையத் தலைவரும் வள்ளுவர் நுழைந்தபோது தன்னெழுச்சியாய் எழுந்து நின்றார்கள். அடுத்த நொடியில், குற்றம் சாட்டப்பட்டவருக்காக எழுந்து நிற்பதை மன்னன் விரும்பவில்லை என்று தெரிந்தவுடன் அனைவரும் விரைந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.
‘தங்கள் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதை அறிவீர்களா வள்ளுவரே?’ தலைமை அமைச்சர் அவையின் அமைதியைக் கலைத்தார்.
புன்னகை தவழும் முகத்தோடு பேசினார் வள்ளுவர், ‘என் மீது குற்றச்சாட்டா? அறம்பேச வந்தவர்கள் குற்றவாளி என்றால் இந்த நாட்டில் வாழ்பவர்கள் அனைவருமே குற்றவாளிகள்தாம் அமைச்சர் பெருமானே! இறந்த பின் தான் புலவர்களுக்கு தமிழ் ரத்தினம், தமிழ்க்கடல் என்றெல்லாம் விருது கொடுப்பீர்கள். இருக்கும்போது அவர்களுடைய கருத்துரிமையை மதிக்கமாட்டீர்கள்.குற்றவாளியாக்கிக் களிப்பீர்கள். அது சரி.. நான் செய்த குற்றம் என்ன?‘.
‘நீங்கள் ஒரு தேசத் துரோகி’ அமைச்சரின் வினைக்கு எதிர்வினை பார்வையாளர் மாடத்தில் இருந்து வந்தது. ‘இது நீதியில்லை. முறையும் இல்லை’ உலகமெல்லாம் அன்பு தழைத்தோங்க வேண்டும் என்று குறளைப் படைத்த கோமான்மேல் இப்படியொரு குற்றம்சாட்ட உங்களுக்கு எப்படி மனம் வந்தது மக்கள் குமுறி எழுந்து குரல்முழக்கம் இட்டனர்.’அமைதி.. அமைதி.. வள்ளுவர் மேல் சாட்டப்பட்ட குற்றங்களை அமைச்சர் எடுத்துரைப்பார். பிறகு பேசுங்கள் எது சரி என்று’ மன்னனின் எச்சரிக்கையால் அமைதி அடைந்தனர் மக்கள்.
அமைச்சர் வினாக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார். ‘கடவுள் வாழ்த்தை எழுதியது நீங்கள்தானே?’
வள்ளுவர் விடையளித்தார், ‘அதற்கென்ன ஐயம்?’
“அதில் எந்தக் கடவுளரின் பெயரும் இல்லையே? வாலறிவன், மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்று பெயர் சுட்டாமல் குறிப்பிடுகிறீர்களே, அந்த இரகசியக் குறியீட்டுக்கு என்ன பொருள்? அதன் பின்னணியில் என்ன சதி இருக்கிறது?
வள்ளுவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘கடவுள் பெயரைச் சொல்லிச் சதிசெய்யும் வழக்கம் எமக்கில்லை. அவனுக்குப் பெயரில்லை; வடிவில்லை; நீங்களாக எந்த வடிவத்தையும் வைத்துக் கொள்ளலாம்: எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். அது மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தது’ என்றார்.
அமைச்சரின் முகம் எப்போதும் இப்படி இருண்டு போனதில்லை. வினாக்களை தொடர்ந்தார் .‘பரந்து கெடுக உலகுஇயற்றியான் எனக் கடவுளுக்கே சாபம் கொடுக்கிறீர்களோ? என்ன நெஞ்சழுத்தம் உங்களுக்கு’?
‘பிச்சை எடுத்துத்தான் ஒருவன் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை நாட்டில் நிலவினால் அப்படி அவனைப் படைத்தவன் ஒழியட்டும் என்று கூறினேன். இதில் என்ன தவறு?.
’ஓகோ.. கொலைசெய்யத் திட்டம் போட்டதாக உங்கள்மேல் குற்றம் பதியப்பட்டிருக்கிறது. அறிவீரா?
வள்ளுவர் விடைசொல்வதற்குள், அறநிலையத்துறை அமைச்சர் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். “கடவுள் வழிபாட்டு முறைகளைப் பகடி செய்துள்ளீர்கள். கடவுளுக்காக மொட்டை அடிப்பதையும் தாடி வளர்ப்பதையும் எள்ளி நகையாடி இருக்கிறீர்கள். கற்புடைய பெண்கள் தெய்வத்தைத் தொழமாட்டார்கள் என்கிறீர். தவத்தொடு தானம் செய்பவரைவிட மனத்தோடு வாய்மை உரைப்பவர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்று கூறித் தவம் செய்பவர்களைத் தாழ்த்துகிறீர்கள். பிறர் சொல்லும் வசைமொழிகளைப் பொறுத்துக்கொள்பவர்கள், உண்ணாநோன்பிருக்கும் துறவிகளைவிடப் பெரியவர்கள் என்கிறீர். தாங்கள் நினைத்ததை எல்லாம் எழுதுவதற்கு இங்கே உரிமையில்லை.பொது அமைதிக்குக் கேடு விளைவித்ததாக உங்கள்மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.”
“அமைச்சர் பெருமானே! ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற குறளையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் என அமைச்சர் பண்பு நலன்களைப் பற்றியும் பாடியிருக்கிறேன். ஆனால் நீங்கள் கனியிருக்கக் காய்கவர்ந்தது போல் பேசுவது எமக்கு நகைப்பையே வரவழைக்கிறது. போகட்டும். கடவுள் நம்பிக்கையின் பெயரால் மடமைகள் பெருகிவிடக் கூடாதே என்ற தவிப்பால் நான் எழுதிய பாக்களுக்கு இப்படி எல்லாம் பொருள் கொள்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை.” வள்ளுவரின் துணிச்சலான பேச்சு மன்னனுக்குச் சினத்தையே தூண்டியது.
வள்ளுவரைப் பார்த்துச் சீறினான். ‘‘மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறியிருக்கிறீர்கள். எம்மை எதிர்த்துப் பேசுவோர்க்கு ஆதரவாகச் செயல்படுகிறீர்களா? எம்மைப் பழிதூற்றிப் பேசினாலும் பொறுத்துப் போகவேண்டுமா? அதுதான் மன்னருக்கு அழகா? காட்சிக்கு எளியனாக இருக்கலாம்; கடுஞ்சொல் கூறாமல் எப்படி இருப்பது? இடித்துரைக்க ஆளில்லாவிட்டால் மன்னன் தானே கெடுவான் என எம்மையே எதிர்த்துப் பேசுகிறீர்களா? மன்னன் கொடியவன் என்று மக்கள் ஏச்சுக்கு ஆளானால், மன்னனுடைய அரசாட்சிக் காலம் விரைவில் முடியும் என்று கூற உமக்கு என்ன துணிச்சல்? மக்கள் நலத்துக்காகவே வரிக்குமேல் வரி போடுகிறோம்.அதை ஏளனம் செய்கிறீர்கள். வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் என்று எம்மை வழிப்பறிக்காரனாகச் சித்தரிக்கிறீர்கள். அப்படி வசூலிக்கும் வரியைக் கொடுக்க முடியாதவர்கள் கண்ணீர் சிந்தினால், அந்தக் கண்ணீரே எம்மை அழித்துவிடும் என அச்சமூட்டுகிறீர்கள். அழக்கொண்ட எல்லாம் அழப்போம் என முழக்கமா இடுகிறீர்கள்? அரசை எதிர்த்துப் பேசுவது பெரும் குற்றமில்லையா? மன்னரோடு பழக வேண்டியவர்கள் அகலாது அணுகாது தீக் காய்வோர்போல் இருக்க வேண்டும் என்கிறீர்களே? நான் என்ன விலங்கா அருகில் இருப்போரைக் கடித்துக் குதற!
‘‘மன்னர் பெருமானே நாடும் மக்களும் நலம் பெறவே குறளை எழுதினேன். எந்தச் செயலைச் செய்தாலும் பிறர் தம்மை எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் என்று எச்சரிக்கவே இலக்கியம் படைத்தேன். மக்களுடைய வாழ்வைக் கெடுக்கிற அனைத்தையும் எதிர்ப்போம். எத்தனையோ திட்டங்களை உங்கள் அரசவையில் அறிவிக்கிறீர்கள். அது செயலுக்கு வருகிறதா என்று நீங்கள் எண்ணித் துணிகிறீர்களா? சரி புலவர்கள், அறங்கூறவையத்தார் ஆகியோர் நல்லாட்சிக்குத் தேவையானவற்றைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுச் செயல்பட மறுக்கிறீர்கள். சொல்லுதல் யார்க்கும் எளிய.. ஆனால் அதைச் செயலாக்க நீங்கள் முனைவதில்லையே? ஏவவும் செய்கலான் தான் தேறான், அதாவது தானும் செய்யமாட்டான்; பிறர் எடுத்துரைத்தாலும் கேட்கமாட்டான் என்று மன்னரைப் பற்றி நான் பாடியது உண்மைதான். நான் பாடியபடி மன்னர்கள் இருக்கிறார்களா?” ஆவேசமாக வள்ளுவர் விடுத்த வினாக்களுக்கு விடைசொல்லத் தெரியாமல் மன்னன் தனக்குள் குமைந்து கொண்டிருந்தான்.‘‘அது சரி வள்ளுவரே, அரசின் திட்டங்களையெல்லாம் எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டே இருக்கிறீர்களே..’’
அது சரியா?
‘‘எதை எதிர்த்தேன் மன்னா?’’
‘‘பனைநிறைந்த காடுகள்; பதனியொடு கள்சுரக்கும்; பருகிமக்கள் இன்பமுற அங்காடி பலதிறந்தோம்; அதை எதிர்த்துக் குரல்கொடுக்க அணிஅணியாய் மக்கள் எழ, வழிவகுத்தது உம் குறள் அல்லவா? கள்ளையும் சூதினையும் பொருட்பெண்டிரையும் சான்றோர் புறக்கணிப்பார்கள் என்று பட்டியல் போட்டீர். கள்ளுண்பார் நஞ்சுண்பார் என்றீர். சான்றோரால் எண்ணப்படாதவர்களே கள்ளுண்பார்கள் என்கிறீர். பனை வளர்க்கும் உழவர்க்கு எதிராகவும் செயல்படுகிறீர்கள். இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கே கேடு விளைவிக்கத் தாங்கள் மக்களைத் தூண்டி விடுகிறீர்கள். உங்கள் செயலுக்குப் பின்னணியில் எதிரிநாட்டு மன்னர்களின் சதி இருக்குமோ என நான் ஐயப்படுகிறேன்.”
‘‘மன்னா எங்களையும் மிஞ்சிவிட்டீர்கள் கற்பனை செய்வதில். மக்களின் அறிவை மயக்கி அவர்களுடைய உடலையும் குடும்பத்தையும் நாட்டையும் கெடுக்கும் மதுக்கடைகள் தான் உங்கள் அரசுப் பெட்டகத்தை நிறைக்கும் என்றால், உங்கள் அறிவின்மேல், பொருளாதாரத் திறமையின்மேல், தொழில் வளர்ச்சிச் சிந்தனையின் மேல் எனக்கு நம்பிக்கைபோய் விட்டது. அவையறிந்து ஆராய்ந்து சொல்லும் பண்பும் திறமும் உங்களிடம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். உழவர்களைப் பற்றி ஏதோ சொன்னீர்களே.. வியர்வை சிந்தி உழைத்தும் வாழ்வில் மேலெழ இயலாமல் வெந்துகொண்டு இருக்கிறார்களே.. அவர்கள் நிலையை என்றைக்குச் சிந்தித்துப் பார்த்தீர்கள்? ஊருணி நீர் நிறைந்தற்றே எனப் பாடினேன். எத்தனை ஊருணிகளை அரண்மனைக் கேளிக்கைக் கூடங்களுக்காகக் காவு கொடுத்திருக்கிறீர்கள்? அரசுக்கு வேண்டிய பெருவணிகப் பெருமக்களுடைய நலனுக்காக, எத்தனை வயல்களைச் சூறையாடி அரசபாட்டையாக ஆக்கி இருக்கிறீர்கள்? மழை வந்தாலும் வேளாண்மைக்கு நீர் கிட்டவில்லை.இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நல்ல நாட்டுக்கு வேண்டியன எனப் பாடினேனே! எத்தனை மலைகளை விழுங்கி உங்கள் சிங்கார மாளிகைகளுக்குள் சிலைகளாக நிறுத்தியிருப்பீர்கள்? தவறுகளைச் சுட்டுவது குற்றமா? எதிரிநாட்டுச் சதியா?’’
வள்ளுவருக்கும் சினம் மூளும் என்பதை மக்கள் அன்று கண்டார்கள்.தலைமை அமைச்சர் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். தீர்ப்புச் சொல்லப் போகிறது அறம்கூறவையம். முன்னரே எழுதிவைக்கப்பட்ட தீர்ப்புகளைச் சொல்வதற்குத் தானே இந்த விசாரணை நாடகம் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள். ‘‘
ஆகவே.. வள்ளுவரின் கூற்றிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், மன்னன் என்ன செய்தாலும் எதிர்க்கிறார். மக்கள் மறந்துபோய் இருக்கும் உரிமைகளை நினைவூட்டுகிறார். மக்கள் அரசுக்கு எதிராகப் பேசும் குற்றத்தை ஊக்குவிக்கிறார். மக்களுக்கு மன்னன் கடவுள் போன்றவன். மன்னனின் எண்ணத்துக்கு எதிராகப் பேசுபவர்கள் இந்த நாட்டின் எதிரிகள். அறிவாளிகள் சிந்திப்பதை மன்னன் தடுக்கவில்லை. அதே நேரத்தில் மன்னன் சிந்திப்பதைத்தான் அவர்கள் சிந்திக்கவேண்டும். மாறாகச் சிந்திப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அவர்கள் எதிரிநாட்டின் ஒற்றர்களாகக் கருதப்படுவார்கள்...” என்று தலைமை அமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கும்போது...
மடைதிறந்த வெள்ளமென மக்கள் கூட்டம் மன்றத்துக்குள் புகுந்தது. வந்தோருள் இளையோர் சிலர் வள்ளுவரிடம் சென்று அவரைக் காப்பதுபோல் வட்ட அரணாக நின்று கொண்டனர்.கருத்துரிமைக்காகப் போராடும் வள்ளுவரா நாடு கடத்தப்பட வேண்டியவர்? தவறான தீர்ப்புக்கு வழிகாட்டிய இந்த அவையும் கொடுங்கோல் மன்னனும் தான் கடத்தப்பட வேண்டியவர்கள் என்று மக்கள் கூட்டத்தில் இருந்து அலைஅலையாய்க் குரல்கள்.. முழக்கங்கள்..அடுத்தநாள் பழைய அறங்கூறவையம் கலைக்கப்பட்டது. எங்கு நோக்கினும் திருக்குறளோடு இளைஞர் கூட்டம்..!
நன்றி : வண்ணக்கதிர் ,தீக்கதிர் , 30/09/2018