Search This Blog

Saturday, June 30, 2018

எப்படி பொருளாதார நிபுணராக ஆகமுடியும்?

"எப்படி பொருளாதார நிபுணராக ஆகமுடியும்?" என்பதுதான்.......
அவர்களுக்காக …..!!! என் நினைவுகளிலிருந்து!!
நீண்ட பதிவு முழுமையாக வாசியுங்கள்!
Facebook நண்பர் Boopal Chinappaவின் இன்றய கருத்தீடு இதற்கு பொருத்தமாக அமைகிறது!!
„முயல்பவனுக்கு தட்டிக்கொடு, இல்லாதவனுக்கு விட்டுக்கொடு, கேட்பவனுக்கு சொல்லிக்கொடு, வாழ்வில் விழுந்தவனை தூக்கிவிடு !! -இது தர்மம்.“
1700ம் ஆண்டுகளில், பொருளாதாரம் என்பது வெறுமனே நாடுகளின் செல்வம் பற்றி படிப்பது என்ற நிலையிலிருந்து, பல படிகளை கடந்து வந்துள்ளது. பொருளாதாரத்தின் தந்தை என்று அழைக்கப்படும் ஆடம்ஸ்மித் அவ்வாறு கருதினார்.
சுமேரியர்கள் பொருளாதாரத்தைப் பொருள் பணத்தின் அடிப்படையில் உருவாக்கினர்; அதே போல பாபிலோனியர்களும் பொருளாதார அமைப்பை, கடன் மீதான விதிகள்/சட்டங்கள் வரையறைகளில், சட்ட ரீதியான ஒப்பந்தங்கள் மற்றும் வணிக முறைகளின் சட்ட விதிகள் மற்றும் தனியுடைமை வரையறைகளில் உருவாக்கினர்.
இன்று பொருளாதாரம் கல்விப் புலங்களின் வரிசையில் சமூக அறிவியல்களான பொருளாதாரம், அதேபோல பொருளாதார வரலாறு அல்லது பொருளாதாரப் புவியியல் ஆகியன அடங்கியுள்ளன.
"பொருளாதாரத்தின் உலகம்"
பொருளாதாரம் என்பது, Micro and Macro Economics என்று வகைப்படுத்தப்படுகிறது. Micro Economics , கூட்டுத்திரள் தொகுப்பு நிலையிலான நடத்தையுடன் தொடர்புடையது.
இந்த நிலையில், பொருளாதார வல்லுநர்கள், ஒரு தனிப்பட்ட நிறுவனத்திற்காக, வளர்ச்சி, விரிவாக்கம், இணைப்பு மற்றும் ஈட்டுதல் வாய்ப்பு ஆகியவை குறித்து மதிப்பாய்வு மற்றும் பகுப்பாய்வுகளை மேற்கொள்கிறார்கள்.
அதேசமயம், Macro Economics என்பது, பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக ஆய்கிறது. ஒரு நாட்டின் வரவு மற்றும் உற்பத்தி, அதன் வேலைவாய்ப்பு விகிதம், பணவீக்கம், செலவு போன்ற விவகாரங்கள், Macro Economics கீழ் வருபவை.
இவை இரண்டையும் தாண்டி, Development Economics என்ற பிரிவு, சமீப ஆண்டுகளில் பிரபலமடைந்து வருகிறது. பொருளாதார நிபுணர்கள் என்பவர்கள், NGOக்கள், ஆராய்ச்சி கல்வி நிறுவனங்கள், அரசு அமைப்புகள்(Government, Finance Ministry, Central Bank) உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட விஷயத்தைப் பற்றிய தரவுகளை சேகரித்தல், அந்த விஷயத்தைப் பற்றிய போக்கை ஆய்வுசெய்து ஒரு தீர்வை உருவாக்குதல் ஆகிய பணிகளை மேற்கொள்வதற்காக, பொருளாதார நிபுணர்கள், மேற்கண்ட அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள்.
"பொருளாதார அளவீடுகள்"
தேசத்தின் பொருளாதாரத்தின் நடவடிக்கையை அளவீடு செய்ய எண்ணற்ற வழிகளுள்ளன. இத்தகைய பொருளாதார நடவடிக்கையை அளவீடு செய்யும் வழிமுறைகளில் உள்ளிட்டவை:
நுகர்வோர் செலவு, வெளிநாட்டு நாணய பரிமாற்று விகிதம், உள்நாட்டு மொத்த உற்பத்தி, மொத்த உள்நாட்டு தனி நபர் உற்பத்தி, மொத்த தேசிய உற்பத்தி, பங்குச் சந்தை, வட்டி விகிதங்கள், தேசிய கடன், விலையுயர்வு விகிதம், வேலைவாய்ப்பின்மை, வர்த்தகச் சமநிலை.
"ஒரு பொருளாதார நிபுணராக உருவாதல்"
பொருளாதார நிபுணர்கள், பொதுவாக, பொருளாதாரம் அல்லது துணைநிலை பொருளாதாரம் அல்லது சமூக அறிவியல் ஆகிய பாடங்களில், ஏதேனும் ஒன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றவராக இருப்பார்.
ஜரோப்பிய நாடுகளைப் பொறுத்தவரை, ஒருவர், Econometrics, Micro Economics அல்லது Macro Economics ஆகிய ஏதேனும் ஒன்றில் விசேட படிப்பாக செய்திருக்கலாம். அதேசமயம், வெளிநாட்டில், Industrial economics, Game theory, Applied economics, Financial economics மற்றும் International Business போன்ற விசேட துறைகள் பிரபலம்.
ஏன் பொருளாதார படிப்பை தேர்வுசெய்ய வேண்டும்?
ஒரு பாடமாக, பொருளாதாரம் என்பது சர்வதேச பயன்பாடு கொண்டது. பொருளாதார வல்லுநர்கள் சமூகத்தில் மிகவும் மதிக்கப்படும் நிலையில் இருப்பவர்கள். அவர்கள், உலக விவகாரங்கள் குறித்து up-to-date நிலையில் இருக்க வேண்டும். பொருளாதார நிபுணர்கள், ஒரு நல்ல நிதி திட்டமிடுநர்களாகவும் இருக்க வேண்டும்.
அதே நேரத்தில்...
Economics படிப்பில் ஈடுபட்டிருப்பவர்கள், அத்துறையில் சாதிக்க, அதிகமாக படிப்பது அவசியம். அது மாணவராக இருக்கும்போதும் சரி, அந்த காலகட்டத்தை கடந்துவிட்டபிறகும் சரி.
பொருளாதாரப் படிப்பு என்பது, உயர்நிலைக் கல்வி அளவில் அதிகம் கணிதம் தொடர்பானது. எனவே, எண்கள் மீது ஆர்வம் இல்லாதவர்கள், இப்படிப்பை அனுபவிக்க முடியாது. இத்துறையில் பட்டப் படிப்பை நிறைவு செய்தவர்கள், தங்களின் முதல் பணி வாய்ப்பை பெறுவது சற்று கடினமாக காரியம்தான். ஏனெனில், இத்துறையின் பட்டதாரி, தன்னை ஒரு தொழில் நிபுணராக மாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது. பணி நேரங்கள் சில சமயங்களில் மிக அதிகமாக இருக்கும். மேலும், இந்த வகைப் பணியானது, வெறுமனே அலுவலகத்தில் இருப்பது மட்டுமாகாது. மாறாக, பயணம் செய்தல் மற்றும் களப் பணி ஆகியவற்றையும் உள்ளடக்கி இருக்கலாம்.
இத்துறை தொடர்பான வாய்ப்புகள் குறைவாகவே இருப்பதால், ஒருவர் தனக்கான நல்ல பணியைப் பெறுவதென்பது எளிதான காரியமல்ல. ஒவ்வொரு நிறுவனத்திற்கு பொருளாதார நிபுணர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால், குறைவான எணணிக்கையில் மட்டுமே. எப்போது தேவை இருக்கிறதோ, அப்போது மட்டுமே Economist பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். மேலும், தற்போதைய நடப்பு நிகழ்வுகளைக் கொண்டு, எதிர்கால சூழல் எவ்வாறு இருக்கும் என்பதையும் ஒரு Economist மதிப்பிடுவார்.
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வரும் தருணத்தில், சிறந்த பொருளாதார நிபுணரின் தேவை இன்றியமையாததாக இருக்கிறது.
பணி வாய்ப்பு துறைகள்:
வங்கியியல், Finance, Marketing, Business, Politic Accountancy, நுகர்வோர் பயன்பாட்டுப் பொருட்கள், Governments
தேவையான திறன்கள்:
கூர்மையான பகுப்பாய்வு மற்றும் கணித திறன்கள், சிறப்பான கவனம் மற்றும் ஆர்வம் இருப்பதோடு, நிறைய படிக்கக்கூடிய மனப்பக்குவமும் இருக்க வேண்டும்.
பொருளாதார படிப்பிற்கு பெயர்பெற்ற கல்வி நிறுவனங்கள்:
Stanford University, லண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸ் – பிரிட்டன், ஹாவர்டு பல்கலைக்கழகம் - அமெரிக்கா., University of Oxford, Yale University, University of Cambridge, National University of Singapore, University of Toronto, ETH Zurich - Swiss Federal Institute of Technology, University of Amsterdam, Ludwig-Maximilians-Universität Germany, Rheinische Friedrich-Wilhelms-Universität Bonn, Germany இப்படிப் பல.
பலருக்கும் நான் பதிவேற்றும் படங்களை பார்த்ததும் ஏளனச் சிரிப்பும், நகைப்பும், மலினப்படுத்தும் கருத்தீடலும்.... ஏதோ உலகம் சுற்றுவதான நினைப்பும் தான் தோன்றும். பலர் நேரடியாகவே கூறுவதுண்டு. அவர்களது அறியாமையால் நான் கோபப்படுவதுமுண்டு!!
இவையனைத்தையும் கடந்துதான் எனது தொழில் சர்வதேச ரீதியாக செய்யமுடிந்திருக்கிறது. எனது திறமையில் இவ்வளவு நாடுகள் நம்பிக்கை வைத்து என்னோடு ஒத்துழைக்கிறார்கள் என்றால் எனது இந்த கல்வி, அறிவு, செயற்திறன், அரசியல், பொருளாதார சமூக ஆளுமை, ராஜதந்திரங்களே.
இன்னும் பலவற்றை சமூகங்களிடம் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அதனால் நான் என்றும் மாணவனேயொழிய நிறைவுபெற்ற நிபுணனாக இருக்கமுடியாது.
அதேபோல் உங்களிடம், உங்கள் பிள்ளைகளிடம் இருக்கும் கணிதத் திறமையை, உங்களின் சமூக அறிவுடன் ஒருங்கிணைத்து, அதன்மூலம் நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கு உங்களால் திறம்பட பங்களிப்பு செய்ய முடிந்தால், சமூகம் உங்களைப் போற்றும். என் இனத்தின் வாழ்வு சிறக்கும்.
- புலோலியூரான்-

Saturday, June 23, 2018

செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது

Prasanna Ramaswamy

செவ்விந்திய சமூகத் தலைவன் ஸீயாட்டீல் 1852ல் எழுதியது. ஆங்கிலத்திலிருந்து என் மொழிபெயர்ப்பு.
"வாஷிங்டனிலிருந்து ஜனாதிபதி எங்கள் நிலத்தை வாங்க விரும்புவதாக செய்தி அனுப்பியிருக்கிறார்.
வானத்தையோ நிலத்தையோ எவ்விதம் நீங்கள் விற்கவோ வாங்கவோ முடியும்? இது நாங்கள் கேட்டறியாதது. காற்றின் சுத்தத்தையும் நீரின் மினுக்கலையும் எவ்விதம் விற்க இயலும்? இந்த நிலத்தின் ஒவ்வொரு பகுதியும் எங்களுக்கு புனிதமானது. பளபளக்கும் ஊசிக்காட்டின் ஒவ்வொரு சுள்ளியும், ஓசையிடும் சிள்வண்டுகளும். இவையெல்லாமே எங்கள் மக்களின் அனுபவங்களிலும் நினைவுகளிலும் மிகவும் புனிதம் வாய்ந்தவை.
மரங்களினுள்ளே ஓடும் உயிர்த்தன்மையை எங்கள் நரம்புகளில் ஓடும் ரத்தத்தை அறிவது போலவே அறிவோம். நாங்கள் இந்த பூமியின் ஒரு அங்கம். பூமி எங்களின் ஒரு பகுதி. நறுமணமுள்ள மலர்கள் எங்கள் சகோதரியர். கரடி, மான், வலிய பருந்து முதலியவை எங்கள் சகோதரர்கள். மலை முகடுகள், புல்வெளிகளில் உள்ளுறை அமிழ்து, குதிரைக் குட்டியின் கதகதப்பு, மனிதன், எல்லாம் எங்கள் குடும்பம்.
ஓடைகளிலும் நதிகளிலும் சலசலத்து மின்னியோடுவது நீரல்ல; எம் மூதாதையரின் குருதி. நாங்கள் உங்களுக்கு இவற்றை விற்போமானால் நீங்கள் நினைவிலிருத்த வேண்டும் இவற்றின் புனிதத்தை. துல்லியமான நீர் நிரம்பிய ஏரிகளில் பிரதிபலிக்கும் ஒவ்வொரு பிம்பமும் எங்கள் மக்களின் வாழ்வியலை, நினைவுகளைச் சொல்கின்றன. நீரெல்லாம் என் அப்பனுக்குத் தகப்பனின் குரலில் முணுமுணுக்கிறது.
நதிகளோ எம் சகோதரர்கள். அவை எம் விடாய் தீர்க்கின்றன. அவை எங்கள் ஓடங்களைச் சுமக்கின்றன. எம் குழந்தைகளுக்கு உணவூட்டுகின்றன. ஆதலினால் எம் நதிகளிடம் ஒரு சகோதரனைப் போல அன்பு செலுத்த வேண்டும்.
உங்களுக்கு இந்த நிலத்தை யாம் விற்போமானால், இந்தக் காற்று எங்களுக்கு விலை மதிப்பற்றது, சூழலின் வாழ்வத்தனையும் அது தாங்குகிறது என்று நினைவிருத்துவீர்களாக. எம்முடைய தாத்தனுக்கு அவனது முதல் மூச்சையும் கடைசி சுவாசத்தையும் இந்தக்காற்றுதான் அருளிற்று, இதே காற்றுதான் எங்கள் குழந்தைகளுக்கு இந்த வாழ்க்கையின் ஆதாரத்தையே தருகிறது. ஒருவேளை உங்களுக்கு நாங்கள் இந்த நிலத்தைத் தருவோமானால், நீங்கள் அதனைப் புனிதமாகப் போற்றி, நறுமலர்களின் இன்மணம் தோய்ந்த காற்றை மனிதர்கள் அங்கு சுவாசிக்க ஏதுவாக நீங்கள் அந்த நிலத்தைப் பாதுகாக்க வேண்டும்.
நாங்கள் எங்கள் குழந்தைகளுக்குக் கற்பித்ததை நீங்கள் உங்கள் குழந்தைகளுக்குக் போதிப்பீர்களா? இந்த பூமி நம் தாய் என்றும், எது இந்த நிலத்துக்கு நேர்கிறதோ அது இந்த நிலத்தின் எல்லாப் பிள்ளைகளுக்கும் நேரும் என்றும்?
நாங்கள் அறிந்தவரை, இந்த பூமி மனிதனுக்கு சொந்தமானதல்ல; மனிதன் பூமியின் உடமை. நம் எல்லோரையும் பிணைக்கும் ரத்தம் போலவே இந்த பூமியில் எல்லாம் ஒன்றுக்குள் ஒன்று. இந்த வாழ்க்கையின் உயிர்க்கூட்டை நெய்தவன் மனிதனல்லன். மனிதன் இந்த பூமியின் உயிரிகளில் ஒரு இழை மாத்திரமே. இந்த பூமிக்கு மனிதன் இழைக்கும் ஒவ்வொரு செயலையும் அவன் தனக்கேதான் இழைத்துக் கொள்கிறான்.
கடவுள் ஒருவரே. பூமியின் மீது நிகழ்த்தப்படும் ஒவ்வொரு தாக்குதலும் அதன் படைப்புக் கடவுளின் மீது நிகழ்த்தப் படுவதே. உங்களுக்கு இறுதியில் என்னவாகும் என்பது எங்களுக்கு விளங்காப் புதிர்தான். எல்லா எருதுகளையும் கொன்று குவித்த பின், எல்லாக் குதிரைகளையும் அடக்கியபின் என்னாகப் போகிறது? அடர்வனங்களின் பகுதிகளெல்லாம் மனிதக் கூட்டத்தின் மூச்சுக் காற்று படர்ந்தபின், பசுமலைகளின் சிகரங்களை மின்கம்பிகளின் பின்னல்கள் மறைக்கும்போது...செறிந்த காடுகள் எங்கே? அழிந்தன..உயர் வானில் பறக்கும் பருந்துகள் எங்கே? போயே போயின...
அப்புறமென்ன? உயிர்த்திருப்பது இல்லாமலாகி, வாழ்தல் மட்டுமே எஞ்சும்.
கடைசி செவ்விந்தியனும் அவனது கானுயிரோட்டமும் மறைந்தபின், அவன் குறித்த நினைவென்பது அலையாடும் புல்வெளியைக் கடக்கும் மேகத்தின் நிழல் போலான பின் இந்த நதிக்கரைகளும் காடுகளும் இங்கிருக்குமா என்ன? எம் மக்களுடைய உயிர்ப்பு இங்கே எங்கிருக்கும்?
தாயின் இதயத்துடிப்பை உணரும் பிறந்த குழந்தை போல இந்த பூமியை நாங்கள் நேசிக்கிறோம். ஆதலால் இதை உங்களுக்கு நாங்கள் கொடுப்போமானால், நாங்கள் நேசித்தது போல் நீங்களும் இந்த பூமியை நேசிக்கத் தெரிந்து கொள்ளுங்கள். அதன்பால் எங்களைப் போலவே கரிசனம் கொள்ளுங்கள். இந்த நிலத்தைப் பெற்றுக் கொள்ளும்போது அது இருந்த விதமாகவே நீடிக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இனி வரும் சந்ததிகளுக்காக இந்த நிலத்தைப் பாதுகாப்பாக, அதைக் கடவுள் நேசிப்பது போல இந்த நிலத்தை நேசமுடன் வைத்திருங்கள்.
நாங்கள் இந்த நிலத்தின் பகுதி என்பதே போல்தான் நீங்களும். இந்த பூமி எங்களுக்கு விலை மதிப்பற்றது. உங்களுக்கும்தான். கடவுள் ஒருவரே. செவ்விந்தியனோ வெள்ளையனோ ஒருவருக்கொருவர் வித்தியாசமானவர்கள் அல்லர். நாமெல்லோரும் ஒருதாய் வயிற்று மக்களே"

Tuesday, June 19, 2018

Five Ways to Use Quantum Technology Every Day.


Quantum technology

Quantum technology is a new field of physics and engineering, which transitions some of the properties of quantum mechanics, especially quantum entanglement, quantum superposition and quantum tunnelling, into practical applications such as quantum computing, quantum sensors, quantum cryptography, quantum simulation, quantum metrology and quantum imaging.

The field of quantum technology was first outlined in a 1997 book by Gerard J. Milburn which was then followed by a 2003 article by Jonathan P. Dowling and Gerard J. Milburn, as well as a 2003 article by David Deutsch. The field of quantum technology has benefited immensely from the influx of new ideas from the field of quantum information processing, particularly quantum computing. Disparate areas of quantum physics, such as quantum optics, atom optics, quantum electronics, and quantum nanomechanical devices, have been unified under the search for a quantum computer and given a common language, that of quantum information theory.

The Quantum Manifesto was signed by 3,400 scientists and officially released at the 2016 Quantum Europe Conference, calling for a quantum technology initiative to coordinate between academia and industry, to move quantum technologies from the laboratory to industry, and to educate quantum technology professionals in a combination of science, engineering, and business.



Applications

Sensing

Quantum superposition states can be very sensitive to a number of external effects, such as electric, magnetic and gravitational fields; rotation, acceleration and time, and therefore can be used to make very accurate sensors. There are many experimental demonstrations of quantum sensing devices, such as the experiments carried out by the nobel laureate William D. Phillips on using cold atom interferometer systems to measure gravity and the atomic clock which is used by many national standards agencies around the world to define the second.

Recent efforts are being made to engineer quantum sensing devices, so that they are cheaper, easier to use, more portable, lighter and consume less power. It is believed that if these efforts are successful, it will lead to multiple commercial markets, such as for the monitoring of oil and gas deposits, or in construction.

Secure communications

Quantum secure communication are methods which are expected to be 'quantum safe' in the advent of a quantum computing systems that could break current cryptography systems. One significant component of a quantum secure communication systems is expected to be Quantum key distribution, or 'QKD': a method of transmitting information using entangled light in a way that makes any interception of the transmission obvious to the user.

Computing

Quantum computers are the ultimate quantum network, combining 'quantum bits' or 'qubit' which are devices that can store and process quantum data (as opposed to binary data) with links that can transfer quantum information between qubits. In doing this, quantum computers are predicted to calculate certain algorithms significantly faster than even the largest classical computer available today.

Quantum computers are expected to have a number of significant uses in computing fields such as optimization and machine learning. They are famous for their expected ability to carry out 'Shor's Algorithm', which can be used to factorise large numbers which are mathematically important to secure data transmission.