Search This Blog

Sunday, September 24, 2017

குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்!

குறிஞ்சிப்பாட்டு - "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" - கபிலர் என்கிற யக்ஞவல்கியர்! வேள்வி என்பது யக்ஞத்துக்கு - யாகத்துக்கு முன்னர் செய்யப்படுவது. வேள்வி என்பது பிராமணருடனும் கலந்துபேசி முடிவெடுப்பது. யக்ஞ்சம் - யாகம் என்பது வேள்வியில் எடுக்கப்பட்ட முடிவை - இலக்கை அடையவேண்டி; திட்டமிட்டுச் செயல்படுத்துவது. வேள்வியில்மட்டுமே பிராமணர்கள் பங்குபெறுவர். யக்ஞம் என்பது போருக்கு முன்னர் காலாற்படை முதல் சேனாதிபதி படைநடத்துநர் வரை தேர்வுசெய்து வழிமுறைகளை வகுத்து; இலக்கைநோக்கி அனைவரையும் செலுத்தி; இறுதியில் வெற்றியை ஈட்டுவது. சத்திரியர்க்கே உரியது. பிரகத் ஆரண்யக உபநிஷத்: உண்மையில் ஆதியில் இந்த உலகம் பிரம்மமாக இருந்தது; ஒன்றாக இருந்ததால் அது வளர்ச்சிபெற்றிருக்கவில்லை. எனவே இதைக்கட்டிலும் சிறந்த வடிவத்தைப் பிரம்மம் எடுத்தது. அதற்கு சத்ரியத்துவம் என்று பெயர். இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்சன்யன் யமன் ம்ருத்யு ஈசானன் ஆகியோரும் இவ்வடிவத்தவரே. சத்ரியத்துவத்தைக்கட்டிலும் சிறந்தது வேறெதுவும் இல்லை. அதனால்தான் ராசசுயயாகத்தில் சத்திரியர்க்குக் கீழே பிராமணர் அமர்கின்றனர். சத்ரியத்துவத்தின் கீழ்தான் பிராமணனுக்கு மரியாதை கிடைக்கிறது. அனால் சத்ரியத்துவத்தின் தோற்றுவாய் பிராமணத்துவம் என்பது உண்மையே. எனவேதான் அரசன் உயர்ந்தவனாக இருந்தாலும் பிராமணத்துவத்தையே மூலமாகக் கொள்ளவேண்டியுள்ளது. ஆகவே எவனொருவன் பிராமணனைத் தாக்குகிறானோ அவன் தன்னையே தாக்கிக்கொள்கிறவன் ஆகிறான். தன்னைக்கட்டிலும் சிறந்தவனுக்குக் கேடுவிளைவிக்கிறவன் அதைவிட மோசமான கேட்டைத் தனக்குத்தானே விளைவித்துக்கொள்கிறான். சத்பத பிராமணங்கள்: (சுருக்கமாகக் காண்பொம்) xiv. 4.2.23: முன்னர் இந்த பிரமா; அண்டம் ஒன்றாகமட்டுமே இருந்து; வீரியவடிவத்தில் சத்ரியரை உண்டாக்கினார்; அதாவது கடவுளர்களுள் சக்திமிக்கவர்களாக இந்திரன் வருணன் சோமன் ருத்ரன் பர்ஜனியன் யமன் மிருத்யு ஈசானன் முதலானோர் தோன்றினர். எனவே ராஜசுய யாகத்தில் பிராமணர் சத்ரியர்க்குக் கீழேதான் அமர்வர். அவர் சத்ரியர்க்கு அரசசக்தியைத் தருகிறார். பிரமாதான் சத்ரியரின் பிறப்பிடம். ஆயினும் பிராமணரைத் தனது உயர்வுக்கு மூலாதாரமாகக் கருதி நாடினார். யாரொருவர் பிராமணரை அழிக்கிறார்களோ அவர்கள் தங்களையே அழித்துக்கொள்வதாகும். அவர் வசுக்களைச் சிருஷ்டித்தார். கடவுளர் வகுப்பைச்சேர்ந்த அவர்கள் வசுக்கள் ருத்ரர் ஆதித்தியர் விசுவதேவர் மருத்துகள் ஆகிய சைனியங்களாகப் பெயரிடப்பட்டனர். அவர் சூத்ரர்(புஷன்) வகுப்பைப் உண்டாக்கினார். பூமிதான் புஷனி; அவள் உலகில் வாழ்வன அனைத்தையும் வாழ்விக்கிறாள். அவர் பேரார்வத்தோடு ஒப்பற்ற வடிவில் நியாய(தருமத்)தை உண்டாக்கினார். எனவே சத்ரா -ஆள்பவர்; சத்ராவை ஆள்பவர்தான் நீதிதேவதை. எதுவும் நீதிக்கு மேற்பட்டவையல்ல. இதுதான் பிராமணர் சத்ரியர் வைஷியர் மற்றும் சூத்ரர். அக்னியின் மூலம் கடவுளரிடையே பிரமாவும்; மனிதர்களிடையே பிராமணரும்; மானிட சத்ரியரிடையே தெய்வீகச் சத்திரியரும், மானிட வைசியரிடையே தெய்வீக வைசியரும் மானிடசூத்ரரிடையே தெய்விகச்சூத்ரரும் உருவானார்கள். ஆகவே இவர்கள் கடவுளரிடையே அக்னியிடமும், மானிடரிடையே பிராமணரிடமும் வாழ்வைத் தேடி அலைந்தார்கள். ரிக்வேதம்; iii -34.5: " சோமபௌமன்(சந்திரகுல நகுஷ=செழியன்) தனது கறுப்பு நிறத்தைக் களைந்து ஒளிவீசும் நிறத்தை மேற்கொண்டான்; அதனால் சுக்கிலவருணம்(வெண்மை நிறம்) அதிகரிப்பதாற்கு வகைசெய்தது" சந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் தகவல் வியப்பளிப்பதாகும்; தாழ்ந்த வருணத்தைச்சேர்ந்த சண்டாளன் நாய்களோடும் பன்றிகளோடும் சமமானவனா மிக எளிதில் ஒப்பிட்டுப்பேசப்படுகிறான். பிரகத் ஆரண்யக உபநிஷத்தின் கர்த்தா ஞானி யக்ஞவல்கியர் அக்காலத்தின் சூழ்நிலைகளை வரலாற்றுநோக்கில் நாம்காண உதவுகிறார். இவற்றுள் ஒரே ஆட்சியாளன் இருந்து மக்களும் ஒரே இனம் / வருணம் சார்ந்தோராக இருந்ததையும்; பின்னர் பிராமணரின் / அந்நியரின் வரவால் பல கலப்பினங்கள் உருவாகிக் குழப்பங்கள் ஏற்பட்டு சண்டைசச்சரவுகள் பெருகியதால் சத்திரியர் என்ற பெயரில் தலைமை ஆட்சியாளனையும் அவனுக்குத்துணையாக மேலும் அவனுக்கீழ் கட்டுப்பட்ட சத்திரியராக எட்டுப்பேரை உருவாக்கி ராசசூயயக்ஞத்தைச் செய்துள்ளனர். அப்போது பிராமணர் தங்களுக்கு அந்த யாகத்தில் உரிய இடத்தைக் கோரியபோது சில கருத்துவேற்றுமைகள் உருவாகியிருக்கவேண்டும். முதலிடத்துக்கான கோரிக்கையெனத்தெரிகிறது. ஆயினும் யாகத்தில் முதலிடத்தைச் சத்திரியருக்குக் கொடுப்பதாக முடிவுசெய்துள்ளனர். ஆயினும் பிராமணர் வேண்டாவெறுப்புடனனே இதனை ஏற்றுள்ளபோதிலும் தாங்களே உயர்ந்தவர்கள் என அறிவித்துக்கொண்டதைக் காண்கிறோம். இச்சரவின் வளர்ச்சியை மேலும் பல வேதப்பாடல்கள் எடுத்துரைக்கின்றன. பின்னரே சட்டங்களும் நீதிகளும் உருவக்கப்பட்டுள்ளன என்பதையும் காண்கிறோம். அதன்பின்னரும் கலப்பினத்தில் உருவானோரிடையே அமைதியில்லை என்பதைக் காண்கிறோம். இந்நிலையில்தான் கலப்பினமாக சத்ரியன் சந்திரகொற்றனுக்கும் தாழ்ந்த இனப்பெண்ணுக்கும் பிறந்தவனாகக் கருதப்பட்ட பிம்பிசாரன் கலப்பினத்தில் உருவானோரின் உதவியுடன் - குறிப்பாக மிளேச்சருடன்சேர்ந்து சோழநட்டு சத்திரிய இனப்பெண்ணைப் புணர்ந்து கெடுத்துள்ளான். அதற்குத் துணைநின்ற ஆரியவரசனே பிரகத்தன். அவனே ஆரியப்பேடியாகவும் அமணத்துறவிபோன்ற வேடமிட்டுப் போர்க்களத்திலிருந்து தப்பியோடியதாகவும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். "ஆரியவரசன் பிரகத்தனுக்குத் தமிழறிவித்தற்குப் பாடியது" என்ற குறிப்பு கபிலனின் குறிஞ்சிப்பட்டில் காணப்படுகிறது. எனவே பிரகத்தனுக்கு அறிவுறுத்தியவர் புலவர் கபிலரே. அவராலேயே பிரகத் ஆரண்யக உபநிஷத் உருவாக்கப்பட்டது என்பது உறுதியாகிறது. ஆயினும் அதன் ஆசிரியரின் பெயர் யக்ஞவல்கியர் எனக்கொடுக்கப்பட்டுள்ளது. தொல்தமிழ்ப்பாடல்களில் வேள்விகுறித்து கபிலரால் பாடப்பட்ட பாடல்கள் பல உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பரசுராமனால் பாதிரிப்புலியூரிலிருந்து விரட்டப்பட்ட தமிழந்தணர்கள் கரிகால்சோழன் அகத்தியனாக வாழ்ந்த அன்றைய சேரலத்தின் மலைநாட்டில் வாழ்ந்துள்ளான் என்பதையும்; விரட்டப்பட்ட அந்தணர்கள் அவனது உதவியைநாடிச்சென்றனர் என்பதையும் பெரியபுராணம் உறுதிப்படுத்துகிறது. தமிழ் அந்தணருக்காக மலைக்காடுகளைக்கடந்து சென்று அவர்களின் வருத்தத்தைப்பொக்க முயன்ற கபிலரையும் சிலப்பதிகாரத்தில் காண்கிறோம். பிராமணருக்கும் தமிழ் அந்தணருக்கும் இடையே நிகழ்ந்த பூசலின் வெளிப்பாட்டையே வேதங்களும் உபநிஷத்களும் விரிவாகப்பேசுகின்றன. ரிக்வேதத்தின் 10ஆம் மண்டலமான புருஷசூக்தத்திலும் புருஷனே முதல்வனாகவும் எட்டு வசுக்களாக மேலே குறிப்பிட்டோரும் இடம்பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதில் புருஷ் என இடம்பெற்றவனே சந்திரகொற்றனின் தந்தை போரஸ்! போரஸ் என்பதையே புருஷ் என மாற்றியுள்ளனர். சாந்தோக்கிய உபநிஷத் குறிப்பிடும் சண்டாளர்களும் பன்றிகளும் நாய்களும் சில மாறுபட்ட இனமக்களையே குறிக்கும். அத்தகையோரை அடையாளப்படுத்துவது இன்றைய சூழ்நிலைக்கு உகந்ததாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் நகுஷன் என்பவனைக் குறித்து விரிவான தகவல்களை மாபாரதமும் புராணங்களும் கொடுக்கின்றன. அவனிடம் கரிகால்சோழனின் நாடு தண்டனைக்கலம் முடியும்வரை ஒப்படைக்கப்பட்டது என்பதையும் பரசுராம மாறிசனுடன் சேர்ந்து தானே இந்திரனாக முயன்றதையும் சோழநட்டையும் மதுரையையும் மாறிச பரசுராமனிடம் ஒப்படைத்துவிட்டு சோலநாட்டை ஆள்வதற்கான ஆரங்களுடன் இலங்கைக்குத் தப்பியோடிய நகுஷனே இராவண செழியன் என்பதைத் தொல்தமிழ்ப்பாடல்களும் தெளிவாகக் காட்டுகின்றன. மணிமேகலையும் உறுதிப்படுத்துகிறது. கபிலரான யக்ஞவல்கியரின் பிரகத் ஆரண்யக உபநிஷத் நூலில் உள்ள கருத்துக்களுக்கு மேலும் சில கருத்துக்களைச் சேர்த்து 'யக்ஞவல்கிய ஸ்மிருதி' என்ற நூலில் இருபிரப்பாளரான சத்திரியரும் பிராமணரும் மட்டுமே பிரம்மம் - ஆன்மா குறித்த சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற வாசகம் சேர்க்கப்பட்டுள்ளது வியப்பளிப்பதாகும். இதேகருத்து மாபாரத்திலும் திருதராஸ்ற்றன் பிரம்மத்தைப்பற்றி விதுரனிடம் விளக்கம் கேட்டபோது "நான் சூத்திரன் என்பதால் அதைப்பற்றி நான் பேசமுடியாது" எனக் குறிப்பிடுவதையும் காண்கிறோம். இந்த விதுரனின் மகனே நகுச இராவண செழியன். அவனையே பின்னர் சத்திரியனாக முயன்றனர் என்பதை ரிக்வேதத்திலும் தொல்தமிழ்ப்பாடல்களிலும் விரிவாகக் காண்கிறோம். இந்நிலையிலேயே முகம்மதியருக்கான அதர்வவேதம் வெளிப்பட்டிருக்கவேண்டும். அதர்வேதத்தை வெகுகாலத்துக்க வேதமாக எவரும் ஏற்கவில்லை என்பதையும் வேதங்களின் வரலாற்றில் காணலாம்! கபிலரான யக்ஞவல்கியர் - யக்ஞங்களைச்செய்வதில் வல்லவர்; அவரது சிந்தனைகளும் கருத்துக்களும் சாக்ரட்டீஸின் சிந்தனைகளிலும் பிளேட்டோவின் சிந்தனைகளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை பருவா அவர்கள் குறிப்பிட்டதை வட இந்தியர் எவரும் பொருட்படுத்தவில்லை என்பதுதான் வருந்தத்தக்கது. மேலும் பருவா அவர்களின் நூலில் கிரேக்கச் சிந்தனையாளர்கள் பலரும் தமிழரின் தத்துவங்களையே தங்களுடையதாக மாற்றிக்கொண்டனர் என உணர்த்துவதையும் காணலாம்! அவரது முழுநூலையும் தமிழில் வெளியிட்டுள்ளார்களா? அறிய இயலவில்லை. விரிவான வரலாற்றைச் சான்றுகளுடன் காணவிரும்புவோர்
http://nhampikkai-kurudu.blogspot,com தளத்தில் காணலாம்!sariya Chandrasekaran 

புராணங்களில் நமது தமிழரின் வரலாறு!

 புராணங்களில் நமது தமிழரின் வரலாறு! விஷ்ணுபுராணம், மார்க்கண்டேயபுராணம்; “அயோத்தியின் மன்னான அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி) ஒரு யாகத்தை நடத்திக்கொண்டிருந்தபோது இந்திரன் யாகப்பலியை எடுத்துச் சென்றான்” எனக்குறிப்பிடுகிறது. இந்திரன்-முசுகுந்தன்- பரசுராமன், யாகம் நடத்திய புரோகிதன் சமதக்கினி- ஒரு அலக்சாந்தன், யாகப்பலியை எடுத்துச்செல்ல உதவியவன் பரசுராமன். “இத்தகைய அபசகுணமான நிகழ்ச்சி ஏற்பட அரசனின் சீர்குழைந்த நிர்வாகம்தான் காரணம் என்றும், ஒரு மனிதனைப் பலிகொடுத்துத்தான் பரிகாரம் தெடவேண்டும் என்றும் குரு(சமதக்கினி) கூறினார்.” முசுகுந்தன்- பரசுராமன் பரசுப்பதவியை - இந்திரப்பதவியை; வசிட்ட சமதக்கினியிடம் வேண்டிப் பெற்றுவிட்டான், இந்த அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி)யாகத்திலும் பரசுராமன் இந்திரப்பதவி வகித்திருப்பான். பரசுராமனுக்குத் தெரியாமல் யாகப்பிராணி கடத்தப்பட்டிருக்கமுடியாது. இருக்கு வேதத்தில் இடம்பெறும் சுனச்சேபனைப் பலிகொடுக்கத் தேர்வு செய்தனர். சுனசேபனும் சமதக்கினியின் மகனே. உண்மை வெளிப்பட்டுவிட்டதால் வசிட்டனால் பலிகொடுக்கத் தேர்வுசெய்யப்பட்டிருக்க வேண்டும். “மன்னனின் மோசமான ராச்சிய பரிபாலனத்தால்தான் வேள்விப்பலிப்பசு காணாமல் போனது எனப் புரோகிதன் சமதக்கினி கூறினான். இந்நிலையில் அம்பரீசன்(இளஞ்சேத்சென்னி) சமதக்கினியுடன் ஆலோசனை செய்து சமதக்கினியின் புதல்வர்களில் ஒருவனைப் பலி கொடுக்க முயன்றனர்.( இதற்கான காரணம் என்ன என்பதைக் குறிப்பிடாமல் மறைத்துவிட்டனர்; காரணம் முசுகுந்த- பரசுராமன் வேள்விப்பலியைக் கடத்திச்சென்றதே) தனது மூத்தமகனை இழக்க சமதக்கினி விரும்ப வில்லை. பரசுராமனைக் கொடுக்க ரேணுகா விரும்பவில்லை. இரண்டாவது மகன் சுனசேபன் தன்னைப் பலிகொடுக்க ஒப்புக்கொண்டான்.(இவன் ரிக்வேதத்திலும் இடம்பெறுகிறான்)இதற்கு ஈடாகப் பொன் பொருட்களும், பசுக்களும், ஆடை, ஆபரணங்களும் கொடுக்கப்பட்டன. புஷ்கரம் வழியாகச் செல்லும்போது; சுனசேபன் தனது மாமனான விஸ்வாமித்திரைக்கண்டு, நடந்ததை எடுத்துரைத்தான். விஸ்வாமித்திரன் சுனசேபனை காப்பாற்றுவதாக உறுதியளித்துத் தனது மக்களில் ஒருவனைப் பலியாகும்படி கட்டளையிட்டான். அவர்களுடன் வாக்குவாதம் நடந்தது. இறுதியில் எவனும் ஒப்புக்கொள்ளாததால் அவர்களை விஸ்வாமித்திரன் சபித்துச்சென்றான். சுனசேபனுக்கு இரண்டு மந்திரங்களை (துதிப்படல்களை) கற்றுக்கொடுத்தான். விஷ்ணுவின்- சூரியனின் பலிபீடத்தில் இம்மந்திரங்களை அக்னியிடம்(சோழனிடம்) முறையிட்டுத் துதித்தால் அம்பரீசன் (இளஞ்சேட்சென்னி) யாகம் செய்யும் இடத்தில் நினைத்தது நிறைவேறும் என உறுதி கூறினார். இதன்படி சுனசேபன் காப்பாற்றப் பட்டான்.“ இந்தயாகம் மேலும் தொடர்ந்தபோது முசுகுந்தன் -பரசுராமன் தன்னால் புணர்ந்து கெடுக்கப்பட்ட சோழன் சேத்சென்னியின் மகள் பாவையுடன் வந்ததாகவும் யாகத்தைத் தடுக்க முயன்றதாகவும் தச்சனின்- சேத்சென்னியின் மகள் தச்சணி மாகாளியாகத் தீயினின்றும் வந்ததாகவும் சிவபுராணம் போன்றவற்றில் காணப்படுகிறது. [ அப்பெண் யாககுண்டத்தில் வீழ்த்தப்பட்டதை மறைத்துவிட்டனர்]; நிறைசூலியான பாவையே யாகத்தைத் தடுக்கத் தீயில் பாய்ந்ததாகவும் ஒரு தகவல் உள்ளது; அவளே பாய்ந்தாளா? அல்லது எவரேனும் யாககுண்டத்தில் வீசினரா? பாவைக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இவ்வளவு காலமும் காக்கப்பட்டுவிட்டது. இனி .. .. தக்ஷனின் யாகம் குறித்துப் பலவிதமான சிவபுராணக் கதைகள் உள்ளன. வரலாற்றில் தக்கனின்மகள் பெயரை `சதி' எனக் குறிப்பிடுகின்றனர். ரிக்வேதம் தச்சணி எனக்குறிப்பிடுகிறது; சதி என்பது பொதுவாகத் தீயில் விழுந்த பெண்களைக் குறிக்கும் சொல்லாக இருக்கக்கூடுமோ? ஐயம் தவிர்க்க முடியாதது. “தக்ஷன்(இளஞ்சேட்சென்னி)தனது பெண்ணைக் காணச்சென்றபோது தடைப்பட்டுக் கோபமுற்று; விஷ்ணு, பிரம்மன் போன்ற கடவுளரைத் தலைவர்களாக்கி யாகம் நடத்த முற்பட்டான்; தேவர், இருடியர்க்குத் தகவல் அனுப்பினான். ததீசி முனிவர், தக்ஷனைச் சிவனுக்கு(முசுகுந்த பரசுராமனுக்கு) அவிர் பாகம் கொடுக்க வேண்டினார். தக்ஷன் மறுத்துவிட்டு யாகத்தைத் தொடர்ந்தபோது, (இதற்குப்பிறகு காணப்படும் தகவல்கள் நம்பத்தக்கனவாக இல்லை) தக்ஷனின் மகள் (முசுகுந்தனால் கெடுக்கப்பட்ட பாவை நிறைசூலியாக) யாகத்தை நடத்தவிடாமல் தடுக்க முயன்றாள், முடியாமல் போகவே சபித்துச் சென்றாள். மணாளனிடம் (முசுகுந்தனிடம்) யாகத்தை அழிக்கவேண்டினாள்” எனவும் உள்ளது. தக்கயாகப்பரணி: ஒட்டக்கூத்தர்இயற்றியது; வெளியிட்டவர் உ.வே. சா. (இதிில் முசுகுந்தன் சிவனோடு அடையாளப்படுத்தப்பட்டான்) யாகத்தை அழிக்க வீரபத்திரர் அனுப்பப்பட்டார். உமா தேவி மஹாகாளியை அனுப்பினாள். வீரபத்திரர் பல்லவத்தை அணிந்து (மாந்தளிர்=இளம் பல்லவர் சேனையுடன்) சென்றார்” எனவும் உள்ளது. சிவபுராணம்: "காத்த வீரியன்(கரிகால்சோழன்) யாகத்தைக் காத்தவன், இவனை ரேணுகா மோகித்தாள், ரேணுகா சமதக்கினி யின் பத்னி, இளம் சிறுமியாக இருந்தபோது, வாழைப்பழத்துக்கு - லிங்கத்துக்கு? ஆசைகாட்டி மணந்து கொண்டார்". மஹாபாரதம்-ஆதிபருவம்: (இவை பிருகு அலக்சாந்த சமதக்கினிவம்ச பிராமணர்க்கும் சேத்சென்னி மற்றும் அவரது மகன் கரிகால்சோழனின் ஞாயிற்றுச்சோழ வம்சத்தாருக்கும் நடந்த மோதல்களை வெளிப்படுத்துகின்றன). "கிருதவீரியன் (கரிகால்சோழனின் தந்தை இளஞ்சேத்சென்னி)என்ற மன்னன் இருந்தான், வேதங்களைக் கற்றறிந்த பிருகுக்கள் இவனுக்கு புரோகிதர்களாக இருந்தனர். மன்னன் இவர்களுக்குத் தாராளமாகச் சொத்துக்களை வாரி வழங்கினான்; நூற்றுக்கணக்கான பசுக்களையும் மலைமலையான பணத்தையும் இவர்கள் சம்பாதித்துவிட்டனர். [சேத் சென்னி பண்ணிய யாகத்தில் யாகப்பலி இந்திரனாகிய முசுகுந்தனால் பரசுராமனின் துணையுடன் கடத்திச் சென்றதையும், இதற்குப் பரிகாரங்கள் செய்யப்பட்டதையும் நினைவுகொள்ளவும். காத்தவீர்யார்ச்சுனன் என்பது கரிகால் சோழன், பல பெயர்களில் சமதக்கினி இடம்பெறுவான், ஔர்வன் என இராவணனும் காணப்படுவான் (ஔர்வன் தொடையிற்பிறந்த வைசியனையும் குறிக்கும்). இராவணனின் மாமனார் மயன் என்பது நாம் அறிந்ததே, கரிகால்சோழனுக்கு மகதம், அவந்தி, வச்சிர நாட்டவர்கள் கொடுத்த கொற்றப்பந்தரும், பட்டி மண்டபமும், தோரணவாயிலும் மயன் விதித்துக் கொடுத்த மரபின, எனச் சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது. இராவணன்; மனைவிவழியில் இலங்கை அரசைப் பெற்றவன் எனவும் தெரிகிறது.) “சமதக்கினிக்கு அவரது துணைவி ரேணுகா; நித்திய அனுட்டானங்களுக்குத் தேவையான பசுவின் பால், நதிநீர் போன்றவற்றைக் கொடுத்து உதவிகள் செய்துவந்தாள். அதிகாலை நதிக்குச் சென்று நீராடி ரிசியின் தவவலிமையாலும் தனது கற்புத் திறத்தாலும் நதியின் மணலை ஒன்று சேர்த்துக் கும்பமாக்கி; அதில் நீர் கொண்டுவருவது வழக்கம். ஒருமுறை கிருதவீரியன் வேட்டைக்குச் சென்று திரும்பும்போது, ரிசியின் ஆச்ரமத்துக்குத் தாகசாந்திக்காக வீரர்களுடன் வந்தான். திரும்பிச் செல்லும்போது முனிவரின் பசுத் தொழுவத்தில், யாகத்தில் காணாமல்போன பசு இருப்பதைக் கண்டான். அரண்மனை சென்று மகன் காத்தவீர்யார்ச்சுனனிடம், யாகப்பசு சமதக்கினியின் ஆச்ரமத்தில் இருப்பதைக் குறிப்பிட்டான். அர்ச்சுனன் ஆச்ரமத்துக்குச் சென்று பார்த்தபோது ரிசி இல்லை. ரேணுகா மட்டுமே தனியாக இருந்தாள். காத்தவீர்யார்ச்சுனனை, ஓரை விளையாட்டின்(நீர்விளையாட்டின்)போது ஆற்றுக்கு நீர்கொண்டுவரச் செல்லும்போதெல்லாம் கவணித்திருக்கிறாள். ஆச்ரமத்தில் தனியாகக் கண்டவுடன் மனம் தடுமாறினாள்[காரணம் அந்தப்பசுவே சோழரின் வேள்வியின்போது பரசுராமனால் கடத்தப்பட்டது என்பதை அவள் அறிவாள்]. அர்ச்சுனன் கொட்டடியில் கட்டப்பட்டிருந்த பசுவை அவிழ்த்துக்கொண்டு, ரேணுகாவிடம் சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டான். அடுத்தநாள் ஓரை விளையாட்டில் ஈடுபட்டிருந்த அர்ச்சுனனைக் கண்ட ரேணுகா மனம் தடுமாறினாள். அன்று மணலைக்கொண்டு குடம் செய்ய முடியவில்லை. அச்சத்தாலும் தடுமாற்றத்தாலும் பயந்து அழுது கொண்டிருந்தாள், வீட்டுக்குத் திரும்பவில்லை.(இவளது அச்சம் இயல்பானது, காரணம் முதல் நாள் ஆஸ்ரமத்தில் அர்ச்சுனனால் பிடித்துச்செல்லப் பட்ட பசு; பரசுராமனால் கடத்திவரப்பட்டதை அறிவாள்) வெகுநேரமாகியும் ரேணுகா வராததைக் கண்ட ரிசி சினமுற்றார். தனது ஞான திருட்டியால் என்ன நடந்தது? என்பதை அறிந்துகொண்டார்.( தொடர்ச்சியாக இராவணனும் காணப்படுகிறான். மற்றொரு புராணம் குறிப்பிடுவதைக் காண்போம்) “காத்தவீரியன்(தசரதன்=உருவப்பல்தேர் இளஞ்சேத்சென்னி) ஹைகயநாட்டு மன்னன். இவனது மகன் காத்தவீர்யார்ச்சுனன் (இராமன்=கரிகால்சோழன்) பிறந்தபோது கால்கள் நடக்கமுடியாத நிலையில் இருந்தான் (இவன் “கட்டுக்களுடனேயே பிறந்தான், தேவர்களால் கட்டப்பட்டான்" என மற்றொரு புராணம் குறிப்பிடுகிறது) இந்நிலையில் [தண்டிக்கப்பட்ட ]12 வயதுக்குப்பிறகு தெய்வ அருளாலும், தத்தார்த்ரேய(கார்வேலன்= கிருஷ்ணன்)முனிவரின் ஆசியாலும் கால்கள் வலுப்பெற்றன. வலிமைமிக்கவனாக வளர்ந்துவந்தான். நர்மதை நதியில் தனது காதலியருடன்(ஓரை விளையாட்டு) விளையாடியபோது பகைமைகொண்ட இராவணன் (அரவான், ஆயுர்வான் ஔர்வன் எனவும் பலவிதமாக குறிப்பிடுகின்றனர்) அர்ச்சுனனைத் தேடி அரண்மனைக்குச் சென்று, அங்கு இல்லாததால் நதிக்கரைக்கு வந்தான். மணலில் ஒரு லிங்கம் செய்து வழிபட்டுக்கொண்டிருந்த போது, ஓரை விளையாட்டில் இருந்த அர்ச்சுனன் நதியின் நீரை வீசிவிளையாடியதால், லிங்கமும் பூசைப் பொருட்களும் நீரால் சிதைந்தன. சினமுற்ற இராவணன் அர்ச்சுனனுடன் போரிடவந்தான், அர்ச்சுனன் இராவணனைச் சிறைப்படுத்தினான். இதனை அறிந்த அர்ச்சுனனின் தாத்தா, புலத்தியர்(அகத்தியர்-புலஸ்தியர் தக்க யாகப் பரணியிலும் இடம் பெறுகின்றனர்; இந்தப்புலத்தியர் விதுரன் = வழுதி -பாண்டிய இராவண செழியனின் தந்தை=சூத்திரன் என மாபாரதம் குறிப்பிடுகிறது) கெஞ்சிக்கேட்டுக் கொண்டதால் இராவணன் விடுவிக்கப்பட்டான்.” மாபாரதம்-சாந்திபருவம்: பரசுராமன் “மன்னனின் (இளஞ்சேத்சென்னியின்) புதல்வர்கள் எனது தந்தைக்குத் தெரியாமல் பசுவை கவர்ந்து சென்றனர்.”என சினம்கொண்டான். மஹாபாரதம்-வனபருவம்: ”சமதக்கினிக்கு ஐந்துபுதல்வர்கள் உண்டு[இது பாண்டவர்களுடன் குழப்பத்தை ஏற்படுத்த இடைச்சேர்க்கையாக இடம்பெற்றது], கடைசி மகனே பரசுராமன். தங்களது தந்தையின் கட்டளைப்படி பிற நான்கு புதல்வர்கள்; ரேணுகாவின் தலையை வெட்டிக்கொண்டுவர மறுத்துவிட்டதால் மனம்பேதளிக்கும்படி சபித்துவிட்டான், இதனால் கடைசிமகன் பரசுராமன் ரேணுகாவின் தலையைவெட்டி எடுத்துவர நதிக்கரைக்குச் சென்றான், தலையை வெட்டிக் கொண்டுவந்து சமதக்கினியிடம் ஒப்படைத்தான். தனது ஆணையை நிறைவேற்றிய பரசுராமனுக்கு இரண்டு வரங்கள் தர ஒப்புக்கொண்டார் சமதக்கினி. அதன்படி தனது சகோதரர்களைப் பழையநிலைக்குத் திரும்பிவர வேண்டியது நிறை வேற்றப்பட்டது. அடுத்து ரேணுகாவை உயிர்ப்பிக்க வேண்டினான். இதற்கு அவளது உடல் தேவைப்பட்டது. நதிக்கரைக்குத் தேடிச்சென்ற பரசுராமன் திகைத்துப்போனான்; ரேணுகாவின் உடல் காணப்படவில்லை.”இதனால் தடுமாறிய பரசுராமன் ரேணுகா போன்ற தோற்றம் கொண்ட மற்றொரு பெண்ணின் தலையை வெட்டிவிட்டு உடலை எடுத்துச்செல்ல முயன்றான். (பரசுராமனால் வெட்டப்பட்ட மற்றொரு பெண்; ரேணுகாவின் தங்கையும் கரிகால்சோழனின் மனைவியுமான ஸ்ரீ ஆவாள்; இவளது தலையை வீசிவிட்டு உடலைமட்டும் எடுத்துச்சென்றான்; இத்தலையைக் கண்ட கரிகால்சோழனின் குடும்பத்தார் அதனை "அங்கலம்மா"- அங்கமில்லாத அம்மா எனக் குலதெய்வமாகக் கொண்டனர். ரேணுகாவை அந்தர/ஆந்தர மாநிலத் தோர் தங்களது குலதெய்வமாகக் கொண்டனர்) இதனைக்கண்டு திகைத்த சிறுமியரும் பிறரும் தடுக்கமுயன்றனர். சினமுற்ற பரசுராமன் பலரையும் பரசு - வஜ்ராயுதம் - மழு என்னும் கருவியால் தாக்கிக் கொன்றான். (பரசுராமன் கொலைசெய்வதைத் தடுத்ததால் கொல்லப்பட்ட ஏழுகன்னிப்பெண்கள் "கன்னிமார்" எனக் கொண்டாடப்பட்டனர்) உடலை எடுத்துச்சென்று தந்தையிடம் ஒப்படைத்தான். உடலைக் கண்ணுற்ற சமதக்கினி; ரேணுகாவின் உடல் இதுவல்ல என்பதை அறிந்தவுடன் பதற்றமடைந்தார். ஆயினும் மனைவி ரேணுகாவின் தலையுடன் உடலை ஒட்டவைத்தும்; உயிர் கொடுக்க முடியவில்லை. நதிக்கரையில் பரசுராமன் நடத்திய கொலைவெறித் தாக்குதலால் அச்சமுற்ற பலரும் திரண்டனர். நாடுமுழுவதும் செய்திபரவியதால் சினமுற்ற கூட்டம் சமதக்கினியின் ஆச்ரமத்துக்கு விரைந்தது. சந்தடியைக்கேட்ட சமதக்கினி; புதல்வர்களை மறைந்து ஓடிவிட உத்தர விட்டார். பரசுராமன் சேரலமலைநாட்டுக்கு ஓடிவிட்டான். மாபாரதம்-சாந்திபருவம்: “பரசுராமன்' எனது தந்தைக்குத் தெரியாமல் பசுவைக் கவர்ந்து கொண்டனர்,' எனச் சினமுற்று [கிருதவீர்யா]அர்ச்சுனனின் 1000 கைகளை வெட்டினான். அர்ச்சுனனின் மகன் இதற்குப் பலிவாங்கினான். சமதக்கினியைக் கொன்றான். 'திமிர் மூர்க்கத்தனம் படைத்த அவனுடைய(இளஞ்சேட்சென்னியின்)புதல்வர்கள்தான் எனது தந்தையைக் கொன்றார்கள்.' எனப் பரசுராமன் சினமுற்றான். மாபாரதம்-வனபருவம்: "பரசுராமன்(சேரல மலைநாட்டில் மறைந்துதிரிந்து)திரும்பிவந்து; தனது தந்தை, மன்னனின் புதல்வர்களால் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து அடங்காத சினமுற்றான், 'சத்திரிய இனத்தை அழிப்பேன்' எனச் சபதமுரைத்தான்."(இளஞ்சேட்சென்னியைக் கொலைசெய்தான்.) மஹாபாரதம்-ஆதிபருவம்: "இக்குரு(சமதக்கினி-பிருகு) மோச்சமடைந்த பிறகு அவருடைய வம்சாவழியினர் வறியநிலையை அடைந்தனர். பிருகுவின் குடும்பத்தாரிடம் ஏரளமான சொத்துக்கள் இருப்பதை அறிந்ததனால் தானம்கேட்டனர். இதற்குப் பயந்த பிருகு வம்சத்தார் தங்கள் செல்வத்தை மண்ணுக்குள் புதைத்து வைத்தனர், ஒருசிலர் கொஞ்சமாகக் கொடுத்தனர். ஒருசமயம்.ஒரு சத்திரியன் பிருகுவின் வீட்டில் மண்ணைத் தோண்டியபோது மண்ணுக்குள் செல்வம் புதைத்து வைக்கப்பட்டிருப்பதைக் கண்டான். இதனை அறிந்த பிற சத்திரியர்கள் பிருகுவம்சத்தாரின் குழந்தைகள் முதல் அனைவரையும் கொலை செய்தனர். பயந்து ஓடிய பிருகுக்கள்மீது எப்போதுமே அவர்களுக்கு வெறுப்பு இருந்தது. கர்ப்பிணிப் பெண்களும் விதவைப் பெண்களும் மலைகளுக்கு (பரசுராமன் சென்ற சேரள நாட்டு மலைகளுக்கு) ஓடிவிட்டனர். இதனை அறிந்த ஆயுர்வான்(பரசுராமன்) எல்லா சீவராசிகளையும் அழித்தொழிக்கச் சபதம்பூண்டு தியானம் மேற்கொண்டான். ஆனால் பிருகுக்களின் பித்ருக்கள் இவனிடம் 'சத்திரியர்களை பலிவாங்குவது நோக்கமாகக்கூடாது, முதுமை வாட்டுகிறபோது சத்தியர்களால் கொலை செய்யப்படுவதையே நாங்கள் விரும்பினோம், புதைத்துவைக்கப்பட்டிருந்த செல்வம் பிருகுக்களலேயே சத்திரியர்களுக்குக் காட்டிக்கொடுக்கப்பட்டது, எங்கள்மீது சத்திரியர்கள் கோபம்கொண்டு கொலைசெய்யப்பட்டு மோச்சமடைவே நாங்கள் விரும்பினோம், தற்கொலை செய்துகொள்ள விரும்பாமலே இப்படிச்செய்தோம்' என்றனர். இதனால் அடங்காத கோபத்தை ஆயுர்வான் நீருக்குள்(படைவீரரைத்திரட்டச் சதி) செலுத்தினான்.” மாபாரதம்-வனபருவம்: "பரசுராமன் நாட்டைவிட்டு மலைகளுக்கு ஓடிவிட்டான். ஒரு சமயம் விசுவாமித்திரரின் பேரன் பரவாசு-ரைபியனின் புதல்வன், ஒரு சபையில் பரசுராமனைப் பழித்து இடித்துரைத்தான்; "யயாதியின் நகரத்தில் நடைபெற்ற வேள்விக்கு வந்திருந்த பிரதர்மனும், ஏனையோரும் சத்திரியர்கள் இல்லையா? உன் சபதத்தை நீ நிறைவேற்ற வில்லை. இந்தச்சபையில் வீனாகச் சம்பமடித்துக் கொள்கிறாய். வல்லமைமிகுந்த சத்திரியர்களுக்குப் பயந்துதான் நீ மலைக்கு ஓடிவிட்டாய். இப்போது பார், சத்திரிய இனம் நூற்றுக்கணக்கில் பெருகிவிட்டது” என்றான். இதனால்; இயல்பாகவே முன்கோபக் காரனான பரசுராமன், வெகுன்டெழுந்து ஆவேசத்தோடு வெளியேறினான்.” மாபாரதம்-ஆதிபருவம்: “மலைகளில் மிகச்சிறந்த மகேந்திர மலையில் சமதக்கினியின் மகன் (பரசுராமன்) தவம் செய்தான்” (மஹேந்திர மலை என்பது திருநெல்வேலியிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் நான்குநெறி வட்டத்தில் திருக்குறுங்குடியில் உள்ளது, 7ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பெரியகோயிலை; நம்மாழ்வார் பாடியுள்ளார், ஸ்ரீராமானுஜரும் இங்கு வந்துள்ளார் எனத்தெரிகிறது; மகேந்திரமலை- பொதியைப்பகுதியுடன் சேர்ந்ததாகவும் இருக்கலாம், இப்பொதியைமலையை நமது புலவர்கள் இமயத்துக்கு ஈடாகப்புகழ்ந்து பாடியுள்ளனர், கபிலரும் பாடியுள்ளார் ”பொய்யா நாவில் கபிலன் பாடிய மையணி நெடுவரை” என மிகப்பரந்த பல மலைகளையும் ஆறுகளையும் கொண்டதாகக் குறிப்பிடுகின்றனர்.) மாபாரதம்-வனபருவம்: "கீர்த்தவீரியனின் மகனும் ஹைகயாசின் மன்னனுமான அர்ச்சுனன் 1000 புயங்களை உடையவன் என்று கூறப்படுகிறது.(ஆயிரத்துக்கு மேற்பட்ட அனைத்து நாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவன் என்பதைக் குறிக்கும்.)அவன் தத்தார்த்ரேயரிடமிருந்து(காமகோட்டங் காவல்-மெய்ச்சாத்தன்-கரவேல்-குந்தகுந்தாச்சாரியார்=கிருஷ்ணன்) தங்கத்தாலான வானூர்தி(செண்டு-வலிமை மிக்க வேலாயுதம்கொண்ட வேளிர் போர்ப்படை) பெற்றான். அது முன்னேறிச் செல்லும்போது அதனை எதிர்த்து யாரும் நிற்க முடியாது. இவ்வாறு அவன் தேவர்களையும், யச்சர்களையும், ரிசிகளையும் அடிபணிய வைத்தான். எல்லா உயிர் ராசிகளையும் அடக்கி ஒடுக்கினான். தேவர்களும், ரிசிகளும்; அர்ச்சுனனால் அவமதிக்கப்பட்ட இந்திர(முசுகுந்த பரசுராம)னுடன் சேர்ந்து, அர்ச்சுனனை ஒழித்துக்கட்ட ஒரு திட்டம்தீட்டினர்." மஹாபாரதம்-ஆதிபருவம்: இதில் வசிட்ட - அலெக்சாந்தருக்கும் தமிழ்ச்சோழன் விசுவாமித்திரருக்கும் நடந்த பூசல்கள் இடம் பெற்றுள்ளன, சத்திரிய பிராமணர்க்கும் தமிழ் அந்தணர்க்கும் இடையே சச்சரவுகள் நடந்துள்ளன, காரணம் பிராமணர்; தங்களுக்கு மட்டுமே தானம் பெறவும் பரிசில்கள் பெறவும், வேதங்களைக் கற்றுத்தரவும், புரோகிதராக இருந்து; வேள்வி நடத்தித்தரவும் உரிமை உள்ளது, பிறருக்கு இதில் எந்த உரிமையும் இல்லை என்றதாகும். இவை குறித்த சச்சரவுகளைத் திரிசங்கு என்னும் சத்தியவிரதனின் விவகாரத்தில்; திரிசங்குவுக்கு வசிஸ்டர் உதவ முன்வரவில்லை. அவரது புதல்வர்களை(சமதக்கினி மற்றும் நூற்றுவர் - துர்யோதனாதியர்) நாடித் தெற்குத்திசைக்கு வந்து 100 புதல்வர்களையும் வேண்டியபோது அவர்களும் உதவில்லை. இதனால், தென் புலத்துக்கு வந்து விசுவாமித்திரரை நாடினான். உதவி செய்யவும் யாகம் நடத்திக் கொடுக்கவும் விசுவாமித்திரர் ஒப்புக்கொண்டார். வசிட்டரது குடும்பம் உட்பட அனைத்து ரிசிகளுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டது. வசிட்டரின் புதல்வர்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்; "ஒருசண்டாளன்(வசிட்ட அலக்சாந்தனால் 12 ஆண்டுகளுக்குத் தண்டிக்கப்பட்டு நாடுகடத்தப்பட்டவன் கார்வேலன்)யாகம் நடத்துகிறான், ஒரு சத்திரியன் [விசுவாமித்திரன்] புரோகிதனாகிறான், யாகத்தில் பலியிடப்படும் பலி உணவைத் கடவுளரும்(சத்திரிய பிராமணர் அலக்சாந்தரும் அவனது உறவினரும் பரசுராம துர்யோதனாதியரும்) ரிஷிகளும் (பிராமணர்)எப்படி உண்ண முடியும்; விசுவாமித்திரரின் ஆசியோடு ஒரு சண்டாளன் அளிக்கும் உணவை உண்டபிறகு மேன்மை மிக்க பிராமணர் எவ்வாறு (மகதம் அல்லது இமையத்தில் மேற்கு எல்லையில் உள்ள அலக்சாந்திரியா அல்லது மேற்காசிய மத்தியதரைப்பகுதி நாடுகள்)சொர்க்கத்துக்குச் செல்லமுடியும்?” எனக் கொடிய வார்த்தைகளைக் கூறினர். இதனைக் கேள்வியுற்ற விசுவாமித்திரர்[சானக்கியர் என்கிற விஷ்ணுகுபதர் எனப்பட்ட கவுடல்யர்]; வசிட்டரையும் அவரது புதல்வர் நூற்றுவரையும் சபித்தார். அவரது சாபம் [மாபாரதப்போரின் முடிவில்] பலித்தது. ரிசிகளும் பயந்துநடுங்கி யாகத்தை நடத்திக் கொடுத்தனர். இதனால் சுதாசன்(கரிகால்சோழன்) வசிட்டரைப் பதவிலிருந்து நீக்கினான். (மனுவின்சட்டப்படி[விஸ்வாமித்திரர் சாபப்படி]12 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது) மேலும் விசுவாமித்திரரைத் தனது குலகுருவாக நியமித்துக்கொண்டான்.” சத்தியாயனபிராமணம்: இதன்படி 'சுதாசன்(கரிகால்சோழன்), வசிட்டரின் புதல்வனான சக்தியை நெருப்பில் எறிந்து கொன்று விட்டான்.(இதற்கானகாரணம் தெரியவில்லை)எனினும் ரிக்வேதத்துக்கு-காத்தியாயனரின் அநுக்கிரகமணிக்கு-சத்குரு சிஷ்யர் செய்துள்ள விளக்க உரையில் உள்ளபடி, சுதாசன் ஒருயாகம் நடத்தினான், அதில் விசுவாமித்திரரும் வசிட்டரின் புதல்வர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், இதனால் கோபமுற்ற சுதாசன் சக்தியை[சமதக்கினியைக் கொன்ற மக்களின் மன்னனான கரிகால்சோழனே கொன்றதாகக் கொண்டுள்ளனர்] கொன்றான். இதனால் வசிட்டரின் குடும்பத்துக்கும் சுதாசனுக்கும் பகை நீடித்தது'. (சுதாசனின் புதல்வர் அல்லது தம்பியர் மற்றும் சோழநாட்டு மக்கள்தான் சமதக்கினியை கொன்றனர்) தைத்திரீயசமிதை: இதனை உறுதிப்படுத்துகிறது: ”வசிஸ்டர், தனது புதல்வன் சமதக்கினி கொல்லப்பட்ட பிறகு தனக்கு புத்திர சந்தானம் வேண்டி; ஏகமன்ன பஞ்சாசத்தைக் கொண்டு யாகம் செய்தார், புத்திர பாக்கியமும் கிட்டியது” என உள்ளது. கௌசிதாகிபிராமணம்: ”வசிட்டர் தனது புதல்வன் கொல்லப்பட்டபிறகு சந்ததியும் கால்நடைகளும் வேண்டி, சௌதாசர்களை(கரிகால்சோழன் மற்றும் இளஞ்சேத்சென்னியின் புதல்வர்களை)அழிக்கவும் ஒருயாகம் நடத்தினார், தாம் விரும்பியதைப் (ஒரு வாரிசை - பரசுராமனைப்) பெற்றார். சௌதாசர்களையும் வெற்றிகண்டார்” என உள்ளது. இது வசிட்டனின் அப்பட்டமான சதிச்செயலை அடிப்படையாகக்கொண்டு கரிகால் - இராமனைத் தண்டித்து நாடுகடத்திய இராமாயணத்தி அடிப்படையாகக்கொண்டது]. வசிட்டன் பெற்ற வாரிசு பராசரன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. சந்திரகொற்றனின் ஆசைமனைவி(ஹெலன்) சத்தியவதியைத் திருமணத்துக்கு முன்னரே ஒரு பராசரனுடன் புணரவைத்து வியாசனைப் பெற்றதாகவும் உள்ளது. பின்னர் அந்தச்சத்தியவதுயே மற்றொருவனைப் புணர்ந்து பிம்பிசார முசுகுந்த பரசுராமனை ஈன்றாவள்! சத்தியவதியின் புதல்வரின் மனைவியர் -அம்பிகா அம்பாலிகா ஆகியோருடன் வியாசனைப் புணரவைத்துத் திருதராட்சசனையும் பாண்டுவையும் பெற்றதாக மாபாரதத்தில் பொய்யுரைத்து பீஷ்மனைப் புகுத்தியதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் வசிட்டன் தனது மனைவி சத்தியவதியையும் அவளது தாயையும் கொண்டு சமதக்கினியையும் விசுவாமித்திரனை யும் பெற்றதாக மற்றொரு தகவலையும் வெளிப்படுத்துகிறது. சிலப்பதிகாரம்; இளஞ்சேத்சென்னியைப் பரசுராமன் கொன்றபிறகு சோழநாட்டின் நிலையை மாடலனிடம் செங்குட்டுவன் வினவியதாக; சேத்சென்னியின் மகளான பாவையின் மைந்தனே செங்குட்டுவன் என்பதை மறைத்து வரலாற்றைப்புரட்டுகிறது. “இளங்கோ வேந்தர் இறந்ததற் பின்னர், வளங்கெழு நன்னாட்டு மன்னவன் கொற்றமொடு செங்கோல் தன்மை தீதுஇன் றோ'என” இளஞ்சேட்சென்னியை 'இளங் கோ' எனக் குறிப்பிடுவது நோக்கத்தக்கது. இந்நிலையில்தான் கரிகால்சோழனும் பாவையும் பிற சோழரும் தண்டிக்கப்பட்டனர். மஹாபாரதம்-வனபருவம்: மற்றும் உத்யோகபருவம்: ”ஒருசமயம் இந்திரன் (பரசுராம முசுகுந்தன்) விருத்திரன் என்ற அசுரனக் கொன்றுவிட்டான். ஒருபிராமணனை(சேத்சென்னியை அசுரன் என ரிக்வேத மொழிபெயர்ப்பாளர்களும்; பிராமணன் எனச் சிலரும் குழப்பியுள்ளது நோக்கத்தக்கது) கொன்றுவிட்டோமே, எங்கே தன்னை பிரம்மஹத்திதோஷம்(மனுவின் தண்டனையான 12ஆண்டு) பிடித்துக்கொள்ளுமோ என்று அஞ்சி நீர்நிலைகளில்(இமையத்தின் மேற்கு அடிவாரத்தில் அலக்சாந்தனால் அமைக்கப்பட்ட அல்லஃநந்தா - மானசரோவர் ஏரியில்)போய் மறைந்து கொண்டான். சோழ - பாரதநாட்டுக்கு அரசனில்லாததனால்; ரிசிகளும் தேவர்களும் [விதுரனின் மகன்] நகுச(பாண்டியசெழிய)னை அனுகித் தங்களுடைய இந்திரனாக (சோழநாட்டுக்கும் அரசனாக)இருக்கும்படி வேண்டினர், (சத்திரியனல்லாத சூத்திரன் என்பதால்) அதற்கான அதிகாரம் தனக்கு இல்லை என முதலில் மறுத்தான். மிகவும் வற்புறுத்தியதால் பொறுப்பை ஏற்கச்சம்மதித்தான். (சிலப்பதிகாரம் இவனை; ”......இளையர் ஆயினும் பகை அரசு கடியும் செருமான் தென்னர் குலமுதல் ஆகலின்........” எனக்குறிப்பிட்டு; இப்பதவியைப் பெற்றதாகக் குறிப்பிடுகிறது. மனிமேகலையில் மேலும் விரிவான தகவல்கள் உள்ளன) இந்த உன்னத இடத்தைப் பெறும்வரை ஒழுக்கசீலனாக, பண்பாளனாக இருந்தான். அதிகாரப்போதை தலைக்கேரியதும் அறவே மாறிவிட்டான். சிற்றின்பம், கேளிக்கைக் கூத்துக்களுக்கு அடிமையாகிவிட்டான். ஒருசமயம் இந்திரனின் மனைவி (கரிகால் சோழனின் சோழமண்ணின் வளமை மற்றும் அதனை ஆள்வதற்கான ஆரம் - சீதை) இவனது கண்ணில் பட்டுவிட்டாள். இந்திராணியின் அழகில்மயங்கி மனதைப் பறிகொடுத்தான், எப்படியாவது அடையவேண்டும் என்று ஆசைப்பட்டான். இவனது தகாத ஆசையை அறிந்த இந்திராணி தேவர்களின் குருவான பிரகசுபதி அங்கிரசுவிடம் (கார்வேல் -அகத்தியரிடம்) சரணடைந்தாள். காப்பாற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது [இத்தகவலே கார்வேலனின் அகத்திக்கும்பா- அகத்தியர்குகைக் கல்வெட்டுக்களில் 13 ஆண்டுகளுக்குப்பிறகு; இந்திரன் - வஜ்ரகரனால் தொல்லைக்கு ஆளான தனது உறவுப்பெண்ணை - கரிகால்சோழனின் தையையும் அவளது குழந்தை செங்குட்டுவனையும் காக்கவேண்டி தெற்கே வந்து மூவர்கூட்டணியைச் சிதைத்து சிங்களர் ஆரியர் மற்றும் மோரியரை வென்று செழிய இராவணனை அடக்கி மணியாரங்களையும் முத்தாரங்களையும் மீட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது]. இவரது தலையீட்டைக் கேள்விப்பட்ட நகுசன் எல்லையில்லாச் சீற்றம் அடைந்தான். தேவர்கள் அவனிடம் 'அடுத்தவன் (நாட்டை - சீதையை)மனைவியை அபகரிக்கநினைப்பது நெறிகெட்டசெயல்' என்றனர். அவனோ இதனை ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை. 'தான் ஒன்றும் இந்திரனைவிட (பிராமணர்களால் அவ்வப்போது இந்திரனாகக் கருதப்பட்ட பல அலக்சாந்தருள் ஒருவன்) மோசமான நடத்தை கொண்டவனல்ல, ஒரு ரிசியின் தர்மபத்தினி அகலிகையை அந்த ரிசி உயிரோடு இருந்த காலத்திலேயே ஒரு இந்திரன் கற்பழித்துக் கெடுத்தான், அப்போது நீங்கள் ஏன் அவனைத் தடுக்கவில்லை? இன்னும் எத்தனையோ காட்டு மிராண்டித்தனமான நடத்தைகளில் ஈடுபட்டான், நயவஞ்சகமான, நெறியற்ற, நீசத்தனமாக நடந்துகொண்டான், அப்போ தெல்லாம் நீங்கள் தடுக்கவில்லை' என்று வாதிட்டான். ரிசிிகளால் பதில்கூற முடியவில்லை. ரிசிகளிடம் இந்திராணியை [இந்த இந்திராணி யாரென்பது புதிரானது! காரணம் முசுகுந்த பரசுராமனின் அந்தப்புரத்தில் எத்தனையோ அழகிகள் இருந்துள்ளனர்; ஆயினும் இப்பெண் ஒரு சோழநாட்டுப்பெண் எனத்தெரிகிறது.] அழைத்துவரும்படி உத்தரவிட்டான். வேறுவழியின்றி இந்திராணியை அழைத்துவரச் சென்றனர். ஆனால் பிரகசுபதி (அகத்தியர் - கார்வேலர்) அவளைக் கைவிடத்தயாரில்லை. அவர் யோசனைப்படி இந்திராணி நகுசனிடம்: 'கணவர் [பரசுராமன்] எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கும்வரை பொறுத்துக் கொள்ளவேண்டும்' என வேண்டினாள். நகுசன் இதனை ஏற்றுக்கொண்டு அவளை அனுப்பி வைத்தான். தனது கணவனைத் தேடிக்கண்டுபிடிக்க உபசுருதியின்(இரவுக்காலத்தேவதை, ரகசியங்களை வெளியிடும் தெய்வம்) உதவியோடு தேடினாள். அவன் வடக்கே ஒரு மாகடலுக்குள் இருக்கும் ஒருகண்டத்தின் ஏரியில், வளர்ந்துவரும் தாமரைமலரின் தண்டில் மிகவும் நுற்பமான வடிவத்தில் மறைந்திருப்பதைக் கண்டுபிடித்தாள். தனது கணவனிடம், மீண்டும் இந்திரப்பதவி பெறும்படியும், தன்னைக் காப்பாற்றும்படியும் வேண்டினாள். நகுசன் மா பெரும்(முசுகுந்த பரசுராமனின் படைகளைக் கைப்பற்றியதோடு ஆரியவரசன் பிரகத்தனின் உதவியையும் பெற்று) வல்லமை படைத்தவனாகிவிட்டதால் உடனடியாகத் தலையிடுவது இயலாது எனக்கூறினான். மேலும் அவனை பதவிலிருந்து இறக்க ஒரு உபாயத்தைக் கூறினான். அதன்படி 'தெய்வீக எழில் கொழிக்கும் ஒரு சிவிகையை [ஆரிய]ரிசிகள் தாங்கிவர, அதில் அமர்ந்து வந்தால் அவனது இச்சைக்கு இனங்குவேன்' என நகுசனிடம் கூறினாள். மேலும் 'தேவர்கோனே, நீங்கள் விஷ்ணுவோ ருத்திரனோ [அ]சுரர்களோ அல்லது ராச்சச[சிங்கள]ர்களோ இதுவரை பயன் படுத்தியிராத ஒரு சிவிகையில் பவனிவர, அதனை [ஆரிய]ரிஷிகள் தங்கிவர நான் காணும்படியாக நீங்கள் வரவிரும்புகிறேன். அதனைக் கண்டு என் உள்ளம் களியுவகை கொள்ளும்' என்றாள். இதனைக் கேட்டு, நகுசன் மனம் குளிர்ந்தான். 'ரிஷிகள் என்னைச் சுமந்துவர வைக்கும் எனது பராக்கிரமம் சாதாரனமானதல்ல, முக்காலத்திலும் வலிமையை ஆராதிப்பவன், போற்றுபவன் நான். இந்த உலகம் எனது கோபத்தைத் தாங்கமுடியாது. எல்லாம் என்னையே சார்ந்துள்ளது, ஆதலால் ஓ! தேவதேவி! உன்விருப்பத்தை நிச்சயமாக நிறைவேற்றுவேன். ஏழு முனிவர்களும், அனைத்துப் பிராமணர்களும் என்னைச் சுமந்துகொண்டு வருவார்கள், அப்போது என் அழகு ராணியே! எனது பெருமிதத்தை, எனதுமாண்பை, எனதுபுகழ் ஒளியை, எனது வன்மையை, எனதுவெற்றிப்பொலிவைப் பார்த்துத் தெரிந்துகொள்' என்றான். (இந்நிலையில்) அகத்தியமுனிவர்[கார்வேலன்] மீண்டும் இந்திரனை(பரசுராமனை)ப் பதவியில் அமர்த்த ஒரு யாகம் நடத்தப்போவதாகவும் அதில் நகுசனை அழிக்கப்போவதாகவும்' கூறினார். (இராமாயணப்போர் நடந்தது. வெற்றிபெற்றபிறகு) இந்திரனை அழைத்துவர அக்னி அனுப்பப்பட்டான். இந்திரன் வந்துசேர்ந்ததும் அவன் இல்லாதபோது (போர்நடந்த போது) நாட்டில் நடந்ததையெல்லாம் பிரகசுபதி (அகத்தியர்-கார்வேலன்) அவனிடம் விவரித்தார். பின்னர் யமன், சோமன், வருணன், குபேரன் ஆகியோருடன் இந்திரன் விவாதித்துக்கொண்டிருந்தபோது, அகத்தியர் அங்குவந்து 'இந்திரனது பகைவன்அழிந்தான்' என்னும் செய்தியை கூறிப் பாராட்டி; அது எவ்வாறு நிகழ்ந்தது என விவரித்தார்.” மாபாரதம் பாண்டியனை 'நகுஸன்' எனக்காட்டியதோடு; 'முக்காலமும் அறிந்தவனின் பக்தன்' என அவனே குறிப்பிடுகிறான் 'முசுகுந்தனின்? பக்தன்'. இந்த நகுஷனின் கதைக்கு முன்னர், இளை - முசுகுந்த பரசுராமனால் ஏமாற்றப்பட காதலி - கரிகால்சோழனின் தங்கை நல்லியற்பாவையின் மைந்தன் ப்ரூரவன் - வேலவன் - செங்குட்டுவனின் கதை இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பரசுராம முசுகுந்தன் ஆட்சியைத் திரும்பப்பெற்றதாகக் குறிப்பிடுவதற்கு மாறாக இராமனே ஆட்சிபெற்றதாக இராமாயணம் குறிப்பிடுவதும் நோக்கத்தக்கது! இதுகுறித்த தகவல்களை வெளிப்படுத்தும் பாடல்கள்; ரிக்வேதத்திலும் பழந்தமிழ்ப்பாடல்களிலும் சிலப்பதிகாரத்திலும் மணிமேகலையிலும் சிதைக்கப்பட்டுள்ளன.
Chandrasekaran Arumugam
http://nhampikkai-kurudu.blogspot.com.

Friday, September 22, 2017

The Goddess Durga

In Hinduism, the goddess Durga, also known as Shakti or Devi, is the protective mother of the universe. She is one of the faith's most popular deities, a protector of all that is good and harmonious in the world. Sitting astride a lion or tiger, the multi-limbed Durga battles the forces of evil in the world.

Durga's Name and Its Meaning

In Sanskrit, Durga means "a fort" or "a place that is difficult to overrun," an apt metaphor for this deity's protective, militant nature Durga is sometimes referred to as Durgatinashini, which literally translates into "the one who eliminates sufferings." 

Her Many Forms

In Hinduism, the major gods and goddesses have multiple incarnations, meaning they can appear on earth as any number of other deities. Durga is no different; among her many avatars are Kali, Bhagvati, Bhavani, Ambika, Lalita, Gauri, Kandalini, Java, and Rajeswari.
When Durga appears as herself, she manifests in one of nine appellations or forms: Skondamata, Kusumanda, Shailaputri, Kaalratri, Brahmacharini, Maha Gauri, Katyayani, Chandraghanta, and Siddhidatri. Collectively known as the Navadurga, each of these deities have their own holidays in the Hindu calendar and special prayers and songs of praise.

Durga's Appearance

Befitting her role as mother protector, Durga is multi-limbed so that she may always be ready to battle evil from any direction. In most depictions, she has between eight and 18 arms and holds a symbolic object in each hand.
Like her consort Shiva, the goddess Durga is also referred to as Triyambake (the three-eyed goddess). Her left eye represents desire, symbolized by the moon; her right eye represents action, symbolized by the sun; and her middle eye stands for knowledge, symbolized by fire.

Her Weaponry

Durga carries a variety of weapons and other items that she uses in her fight against evilEach has symbolic meaning important to Hinduism; these are the most significant:

  • The conch shell symbolizes the Pranava or the mystic word Om, which indicates her holding on to God in the form of sound.

  • The bow and arrows represent energy. By holding the bow and arrows both in one hand, Durga demonstrates her control over both aspects of energy—potential and kinetic.

  • The thunderbolt signifies firmness in one's convictions. Just as a real bolt of lightning can destroy anything it strikes, Durga reminds Hindus to attack a challenge without losing confidence.

  • The lotus in Durga's hand, not yet fully in bloom, represents the certainty of success but not finality. The lotus in Sanskrit is called Pankaj, which means "born of mud," reminding the faithful to stay true to their spiritual quest amid the worldly mud of lust and greed.

  • The Sudarshan-Chakra or beautiful discus, which spins around the index finger of the Goddess, signifies that the entire world is subservient to the will of Durga and is at her command. She uses this unfailing weapon to destroy evil and produce an environment conducive to the growth of righteousness.

  • The sword that Durga holds in one of her hands symbolizes knowledge, which has the sharpness of a sword. Knowledge free from all doubts is symbolized by the shine of the sword.


  • The trident or Trishul is a symbol of three qualities: Satwa (inactivity), Rajas (activity), and Tamas (nonactivity). Deva uses these to alleviate physical, mental, and spiritual suffering.

Durga's Transport

In Hindu art and iconography, Durga is frequently depicted standing atop or riding a tiger or lion, which represents power, will, and determination. In riding this fearsome beast, Durga symbolizes her mastery over all these qualities. Her bold pose is called Abhay Mudra, which means "freedom from fear." Just as the mother goddess confronts evil without fear, Hindu scripture teaches, so too should Hindu faithful conduct themselves in a righteous, courageous way.
https://www.thoughtco.com/

Tuesday, September 19, 2017

Painting Art











Ganesha

Ganesha, Madhya Pradesh, c. 750, India
Ganesha (/ɡəˈnʃə/; Sanskrit: गणेश, Gaṇeśa; also known as Ganapati, Vinayaka and Binayak, is one of the best-known and most worshiped deities in the Hindu pantheon. His image is found throughout India, Sri Lanka, Thailand, and Nepal. Hindu sects worship him regardless of affiliations Devotion to Ganesha is widely diffused and extends to Jains and Buddhists.

Although he is known by many attributes, Ganesha's elephant head makes him easy to identify.Ganesha is widely revered as the remover of obstacles, the patron of arts and sciences and the deva of intellect and wisdom.As the god of beginnings, he is honoured at the start of rites and ceremonies. Ganesha is also invoked as patron of letters and learning during writing sessions. Several texts relate mythological anecdotes associated with his birth and exploits and explain his distinct iconography.
Ganesha emerged as a distinct deity in the 4th and 5th centuries AD, during the Gupta period, although he inherited traits from Vedic and pre-Vedic precursors. Hindu mythology identifies him as the restored son of Parvati and Shiva of the Shaivism tradition, but he is a pan-Hindu god found in its various traditions.In the Ganapatya tradition of Hinduism, Ganesha is the supreme deity. The principal texts on Ganesha include the Ganesha Purana, the Mudgala Purana, and the Ganapati Atharvashirsa. Brahma Purana and Brahmanda Purana are other two Puranic genre encyclopedic texts that deal with Ganesha.

என் நடுங்கங்களில் நீ...

Iyyappa Madhavan
பனிக்கால அந்தியில் விழித்த கதவினுள் வந்தாய்
தேகத்தினுள் நிசப்தமாய் விரவினாய்
என் நடுக்கங்களில் நீ உறைந்தவேளை ...
நிர்வாண நினைவில் ஏங்கி எரிந்தேன்
அதீத சீதளத்தில் உன் வேட்கையில் புதைய
மாய பிம்பமாய்ப் புலுனுற்றேன்
என் பசலை நிலை கண்டு
பரிதிகளாய் வந்திருந்து மோதிய வேளை
பெரும்காடெனப் பற்றிக்கொண்டேன்

நீயோ பனிச்சாம்பலிலிருந்து உயிர்ப்பித்தாய்
புனைந்த அழகில் கிறங்கிக் கிடந்தவனை
உன் வாஞ்சையாக மாற்றிக்கொண்டாய்
கை வளையல்களும் காற்கொலுசும் மீட்டியபோது
இசையாய்க் கரைந்துபோனேன்
உன் பித்தில் நீயாகவே இருந்தேன்

மந்த மாருதம் காதல் மென்னுணர்வுகள் இசைத்தன
உன் தோளில் நான் சாய்ந்தேன்
என் தோளில் நீ சாய்ந்தாய்
மலர்களாயின தூறிய சாரல்கள்
நறுமணம் தோய்ந்து உருகிக் மறைந்தோம்

அந்தி முடிய இருளின் வருகையில்
விண்மீன்களாய் ஒளிர்ந்தது நாணம்
நிலவொளியில் அந்தகாரம் தேய்ந்து சுருங்க
சயனத்திலிருப்பது போல் விழித்திருந்தோம்

இமைகள் மூடாதிருந்தது நீண்ட கனவு.

Saturday, September 16, 2017

அன்னா அக்மதோவா கவிதைகள்

மொழியாக்கம்: வ.கீதா, எஸ்.வி. ராஜதுரை
ஆழ்கிணற்றின் அடியாழத்திலுள்ள ஒரு வெள்ளைக்கல் போல
என்னிடத்தில் ஒரே ஒரு நினைவு மட்டும்....
அதை நான் போக்க முடியாது, போக்க விரும்புவதுமில்லை
அது ஒரு உவகை, அது வேதனையும் கூட.
எனக்குத் தோன்றுகிறது என் கண்களை உற்றுப் பார்ப்பவருக்கு
அது தெளிவாகத் தெரியுமென்று.
சோகம் ததும்பும் கதையொன்றைக் கேட்பவரை விட
அவர் நெஞ்சம் மேலும் கனக்கும், துயருறும்.
எனக்குத் தெரியும் கடவுளர் மனிதரைக்
கல்லாக மாற்றியுள்ளனர்,
மனங்களை அப்படியே விட்டுவைத்து.
அந்த அற்புதமான சோகங்கள்
இன்னும் எஞ்சியிருக்க வேண்டுமென்று
என் நினைவாக மாற்றப்பட்டு விட்டாய் நீ.

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில்

மொழியாக்கம்: தி.இரா.மீனா

நான் உன்னைப் பார்க்கவில்லையெனில் –...
நிமிடங்களை நூற்றாண்டுகளாக முடிவற்றவைகளாக உணர்வேன்
ஒரு முறை உன்னைப் பார்த்திருந்தால் —
மீண்டும் இரக்கமற்ற வகையில் நெஞ்சுக் காயத்தோடு.
நான் உன்னைப் பார்க்கவில்லையெனில் -
இருட்டிலும் உறைபனியிலும் காற்றாய்க் கிடப்பேன்
ஒரு முறை உன்னைப் பார்த்து விட்டால் —
ஏதோ ஒன்றால் கருக்கப்பட்டு சுருங்குவேன்

நான் உன்னைப் பார்க்க விரும்பினால் —
தேவதைகளின் கரங்கள் சொர்க்கத்திற்கு என்னை அனுப்பும்
நான் ஒருமுறை உன்னை பார்த்திருந்தால் -
நரகத்தின் கொடுமைகள் தரப்பட்டிருக்கும்
என் அமைதிக்குத்தான் இழப்பு
உன்னுடனோ அல்லது நீயில்லாமலோ —அது சிதைவுதான்
எனக்கு பூமி கிடைக்கவில்லை

நான் சொர்க்கத்திலிருந்து விலக்கப்பட்டவள்.

வெள்ளை இரவு

மொழியாக்கம்: தி.இரா.மீனா
நான் கதவைப் பூட்டவில்லை
...
மெழுவர்த்திகளையும் ஏற்றவில்லை,
நீ அறியவும் மாட்டாய், கவலையுமில்லை
தூங்கப் போகுமளவுக்கு
எனக்கு பலமில்லை
வயல்வெளிகள் நிறமிழந்தன
சூரியாஸ்தமனம் பைன்மரங்களை இருளாக்கியது
எல்லாம் இழந்த நிலைதான்
இந்த வாழ்க்கை சாபமான நரகம்தான்
கதவருகில் உன்குரல் கேட்டு போதையாகிறேன்.
நீ வருவாயென நிச்சயம் தெரியும்

அந்த எதிரொலி

மொழியாக்கம்: தி.இரா.மீனா

கடந்த காலத்திற்கான பாதைகள் என்றோ மூடப்பட்டுவிட்டன...
நான் இறந்த காலத்தை வைத்துக் கொண்டு என்னதான் செய்யமுடியும்?
அதில் என்ன இருக்கிறது?இரத்தத்தால் உரசப்பட்ட கற்கள்
அல்லது சுவறான கதவுச்சிறை
அல்லது எதிரொலி, அதுதான் என்னை எப்போதும் வருத்துகிறது
அமைதி, உறுதி என்று நான் பிரார்த்தனை செய்தபோதும்
எதிரொலி ஒரு பழங்கதையாகவே இருக்கிறது.

அதையும் என்நெஞ்சில் மட்டுமே சுமக்கிறேன்.

இதுவரை பாடப்பட்டப் பாடல்களிலேயே இனிதானது"

மொழியாக்கம்: ஆழி செந்தில்நாதன்
ஆழமாய்ப் படிந்த பனியின் ...
கடினமான மேற்பரப்பினூடே,
உன் ரகசியமான வெள்ளை இல்லம் நோக்கி,
அமைதியாய், நாசூக்காய்
நாம் இருவரும் நடைபயில்கிறோம்,
பாதி இழந்த நிசப்தத்தில்.
இதுவரை பாடப்பட்ட எல்லாப் பாடல்களினும்
இனியதாக இருக்கிறது
இந்தக் கனவு நனவாகும் நிகழ்வு,
ஆம் என்று சொல்லி அசைகின்றன
பின்னிய கிளைகள்.

  1. Thanks Kutti Revathi


How to understand Women ,Men Are From Mars, Women Are from Venus

Men Are From Mars, Women Are from Venus is the essential tool for couples who want to develop more satisfying relationships with their partners. John Gray provides a practical and proven way for men and women to communicate better by understanding and respecting the differences between them.
When it comes to relationships, most would agree that it's a cosntant battle of the sexes. Pretending that men and women are from different planets can help us to deal with the opposite sex in a loving and accepting way, leading ot better relationships.

Throughout Men Are From Mars, Women Are from Venus, John shows how to diminish frustration and disappointment in relationships, and instead create intimacy and relate lovingly to the opposite sex, through a better understanding and accepting the differences between men and women.

John explains what it takes to have a successful relationship. He provides different scenarios from both the woman's and the man's point of view and offers advice on how to counteract differences in communication styles, emotional needs, and behavior patterns.

John realizes that "not only do men and women communicate differently, but they think, feel, perceive, react, respond, love, need, and appreciate differently." So, instead of discussing "why" men and women are different, he focuses on what those differences are and explains the ways men and women react to stress, what motivates them, and their emotional cycles and needs.


Thursday, September 14, 2017

Sri Lakshmi Narayan


Lakshmi Narayan or Lakshmi-Narayana (Sanskrit: लक्ष्मी-नारायण, IAST: Lakṣmīnārāyaṇa), also sometimes spelled Lakshminarayan, Lakshminarayana, Laxminarayana, is a manifestation of Vishnu in the Hindu religion. It is usually referring to Vishnu, also known as Narayan, when he is with his consort, Lakshmi, in his abode, Vaikuntha. Lakshmi is depicted as standing next to a dark-skinned Vishnu, who is holding a conch, mace, lotus and the Sudarshana Chakra. Another depiction of Lakshminarayan portrays Lakshmi in the service of Narayan, who is reclining on the cosmic serpent Sesha, floating in Kshīrsagār, the Ocean of Milk.
Every soul is said to be a ray of Lakshmi Narayan.

Sunday, September 10, 2017

சீன நாவலாசிரியர் மோ யான்

மூர் மார்கெட்டில் ஒரு புத்தகம் கிடைத்தது. மாற்றம். சீன மொழியிலிருந்து தமிழுக்கு எம்.ஸ்ரீதரனால் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்ட நூல் இது. ஸ்ரீதரன் பற்றி கேள்விப்பட்டிருக்கக்கூடும். ஐ.எஃப்.எஸ் அதிகாரி. தமது பணியின் காரணமாக சீன மொழியைக் கற்றுக் கொண்டவர். பயணி என்ற புனைப்பெயரில் ‘வாரிச்சூடினும் பார்ப்பவரில்லை’ என்ற தலைப்பில் சீன மொழியின் சங்கப்பாடல்களை மொழி பெயர்த்திருந்தார். இப்பொழுது அமெரிக்காவில் இருக்கிறாராம். அந்தளவுக்கு மட்டும் அவரைப் பற்றித் தெரியும்.

வழக்கமாக வெளியூர் பயணமெனில் பகல் நேரப் பயணங்கள்தான் ஜாலி. அப்பொழுதுதான் ஊர்களை வேடிக்கை பார்க்க முடியும். அருகில் அமர்ந்திருப்பவர்கள் உறங்காமல் இருப்பார்கள். பேச்சுக் கொடுத்து மொக்கை போடலாம். அப்படியும் இல்லையென்றால் புத்தகங்கள் வாசிப்பதற்கு நான்கைந்து மணி நேரங்கள் சேர்ந்த மாதிரி கிடைக்கும். இரவுப் பயணங்களில் வெறும் இருட்டுதான். ஒவ்வொரு ஊராக அவற்றின் இருள் திரையைக் கிழித்துக் கொண்டே போவது போன்ற பிரமை. விழித்துப் பார்த்துவிட்டு மீண்டும் உறங்கிவிடுவேன். கடந்த முறை சென்னையிலிருந்து பெங்களூருவுக்குத் திரும்பிய போது பைக்குள் புத்தகம் எதுவுமில்லை. புத்தகங்களைத் துழாவுவதற்காக மூர் மார்கெட் சென்றிருந்த போதுதான் மாற்றம் சிக்கியது. மூர் மார்க்கெட்டில் திரும்பிய பக்கமெல்லாம் புத்தகங்கள்தான். ஆனால் அத்தனையும் மருத்துவம் பொறியியல் என்று கல்வி சார்ந்த புத்தகங்கள். எங்கேயாவது ஒன்றிரண்டு கடைகளில் மட்டும் தமிழ் புத்தகங்களை வைத்திருக்கிறார்கள். ஒருவேளை எனக்குத் தேடத் தெரியவில்லையோ என்னவோ.

‘மாற்றம்’ புத்தகத்தை ஆம்பூர் தாண்டுவதற்குள்ளாக வாசித்து முடித்துவிட்டேன். துக்கினியூண்டு சுயசரிதை. ஒரு பள்ளிக் கூடம்- நாவலாசிரியர் மோ யான் படித்த பள்ளிக் கூடம். அங்கே படித்த மாணவர்களின் வாழ்க்கை வழியாக அந்தக் காலகட்டத்தில் சீன நாட்டின் வரலாற்றையும், மக்களின் வாழ்க்கையையும் வேகமாகச் சொல்லிச் செல்லும் சுய சரிதை. சற்றேறக்குறைய நாற்பது-ஐம்பதாண்டு காலக் கதை இது. 

பொதுவாகவே வரலாறு சுவாரசியமானது. ஆனால் அதைக் கதையாக யாரேனும் சொல்லிக் கேட்க வேண்டும். ஒரு வரலாறை வாசிக்கும் போது அதிலிருந்து நிறையக் கிளைக் கேள்விகள் உண்டாகும். அவற்றுக்கான விடைகளைத் தேடிச் செல்லும் போது ஒரு நிலம் அல்லது மனிதன் குறித்தான முழுமையான சித்திரத்தை உருவாக்கிக் கொள்ள முடிகிறது. மாற்றம் அப்படியான நாவல். சீன-ஜப்பான் போர், சீனாவின் கம்யூனிஸ அரசு, அதற்கு முன்பான சீன தேசம், மக்களின் வாழ்வியல் குறித்தெல்லாம் குறுக்குவெட்டுத் தோற்றத்தைக் காட்டுகிற நாவல்.

இந்நாவல் காலச்சுவடு வெளியீடு. ஆன்லைனில் விற்பனைக்குக் கிடைக்கிறதா என்று தெரியவில்லை.

மாற்றம் நாவலில் ஓரிடத்தில் Red Sorghum படப்பிடிப்புக்காக படப்பிடிப்புக் குழுவினர் தமது ஊருக்கு வந்தது பற்றி மோ யான் சொல்லியிருப்பார். Red Sorghum நாவலும் மோ யான் எழுதியதுதான். இந்த நாவலுக்காகத்தான் அவருக்கு நோபல் பரிசு கிடைத்தது
Red Sorghum,  மோ யானின் தாத்தா பாட்டி பற்றிய கதை அது. நாலாபுறமும் சிவப்புச் சோளம் நிறைந்த நிலம் அது. ஒரு அழகிய ஏழைப் பெண்ணை வைன் தயாரிக்கும் கிழவனுக்குக் கட்டி வைக்கிறார்கள். அவன் தொழுநோயாளி. வசதியானவன் என்பதால் கட்டிக் கொடுத்துவிடுகிறார்கள். அவளை பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு தூக்கியில் வைத்து நான்கைந்து இளைஞர்கள் ஆட்டபாட்டமாகத் தூக்கிச் செல்கிறார்கள். ‘அவன் தொழுநோயாளி..அவனை வேண்டாம்ன்னு சொல்லிடு’ என்று அந்தக் கூட்டத்தில் ஒருவன் சொல்கிறான். அவள் பதிலேதும் சொல்லாமல் அழுகிறாள். அதன் பிறகு யாரும் எதுவும் பேசாமல் அழைத்துச் சென்று கணவனது வீட்டில் விட்டுவிடுகிறார்கள். 


மூன்றாம் நாள் புதுப்பெண் பிறந்த வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது பாரம்பரியமாம். அப்படித் திரும்பிச் செல்லும் போது ஒருவன் அவளை சோளக்காட்டுக்குள் தூக்கிச் செல்கிறான். தூக்கியைத் தூக்கிச் சென்றவர்களில் ஒருவன்தான் அவன். அதை வலுக்கட்டாயமான வன்புணர்வு என்று சொல்ல முடியாது. அவளுக்கும் அவன் மீது விருப்பமுண்டு. 

‘என்னை ஏன் தொழுநோயாளிக்கு கட்டி வெச்சீங்க’ என்று அப்பனிடம் சண்டையிட்டுவிட்டுத் புகுந்த வீட்டுக்குத் திரும்பி வரும் போது அவளது கணவன் கொல்லப்பட்டிருக்கிறான். யார் கொன்றார்கள் என்று வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆனால் அந்தப் பெண்ணைத் தூக்கிச் சென்றவனாகத்தான் இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்துவிட முடியும். கணவனின் வைன் தொழிலை அவள் தொடர்ந்து நடத்துகிறாள். தூக்கியும் இவளோடு வந்து சேர்ந்து கொள்கிறான். ஒரு குழந்தை பிறக்கிறது. அந்தக் குழந்தைதான் கதையைச் சொல்லிக் கொண்டிருப்பவனின் தந்தை. குழந்தை பிறந்த சில ஆண்டுகளில் ஜப்பானிய படை சிவப்புச் சோளத்தை அழித்து ஊருக்குள் நுழைந்து அழிச்சாட்டியம் செய்கிறது. அதன் பிறகு என்ன நடக்கிறது என்பது மீதிக் கதை. 

சீனர்களிடம் இன்னமும் ஜப்பானியர்கள் மீது ஆழமான வன்மமும் வெறுப்புமுண்டு. அதற்கான காரணத்தை இந்தப் படம் இயல்பாகச் சொல்கிறது. அருமையான திரைப்படம். ஒருவேளை நாவலாக வாசித்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கக் கூடும். யூடியூப்பிலேயே சப்-டைட்டிலுடன் கிடைக்கிறது. 

மாற்றம் நாவலில் ஒரு சரக்குந்து (ட்ரக்) இடம்பெறும். கிட்டத்தட்ட அதுவொரு கதாபாத்திரம் மாதிரிதான். அந்த வகுப்பில் அழகான பெண்ணின் அப்பாவுடைய ட்ரக் அது. மாற்றம் நாவலின் இறுதியில் தனது பள்ளிக்கூட நண்பனிடம் ‘அந்த சரக்குந்து என்னாச்சு?’ என்று மோ யான் கேட்பார். அதை அவளது அப்பாவிடமிருந்து நிறையப் பணம் கொடுத்து அந்த நண்பன் வாங்கியிருப்பான். ‘Red sorghum படத்துல கடைசிக்காட்சியில் எரியுமே..அதுதான்’ என்பான் நண்பன். படத்தில் அந்த ட்ரக்கைப் பார்த்த போது எனக்கு அவ்வளவு சந்தோஷமாக இருந்தது. ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த நாவலையும் திரைப்படங்களையும்  பார்க்கும் போது அவை உண்டாக்குகிற தூண்டல்கள் அலாதியானவை. நம்முடைய தேடலை விரிவடையச் செய்பவை. மாற்றம் நாவலை வாசித்து Red sorghum படத்தைப் பார்த்துவிட்டு சீன-ஜப்பான் போர் குறித்தான தகவல்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். 

‘நம்முடைய உலகம்’ என்று நினைத்துக் கொண்டிருக்கும் சிறு வட்டத்தைத் தாண்டி தெரிந்து கொள்ள எவ்வளவோ இருக்கின்றன. எதை எங்கே தொடங்குவது என்றுதான் தெரிவதில்லை. யாரேனும் ஒருவர் டார்ச் அடித்துக் காட்ட வேண்டுமல்லவா? அப்படி வெளிச்சம் காட்டுகிற வேலையைப் பயணி மாதிரியான மொழிபெயர்ப்பாளர்களால் செய்ய முடிகிறது.
http://www.nisaptham.com

Saraswati, the goddess of knowledge and arts

Saraswati, the goddess of knowledge and arts, represents the free flow of wisdom and consciousness. She is the mother of the Vedas, and chants directed to her, called the 'Saraswati Vandana' often begin and end Vedic lessons.​
Saraswati is the daughter of Lord Shiva and Goddess Durga. It is believed that goddess Saraswati endows human beings with the powers of speech, wisdom and learning. She has four hands representing four aspects of human personality in learning: mind, intellect, alertness and egoThe Symbolism of Saraswati
With her other two hands, Saraswati plays the music of love and life on a string instrument called the veena. She is dressed in white--the symbol of purity--and rides on a white swan, symbolizing Sattwa Guna (purity and discrimination). Saraswati is also a prominent figure in Buddhist iconography--the consort of Manjushri.
Learned and the erudite individuals attach great importance to the worship of goddess Saraswati as a representation of knowledge and wisdom. They believe that only Saraswati can grant them moksha-- the final liberation of the soul.

Vasant Panchami--Day of Saraswati Worship

Saraswati's birthday--Vasant Panchami--is a Hindu festival celebrated every year on the fifth day of the bright fortnight of the lunar month of Magha.


Hindus celebrate this festival with great fervor in temples, homes and educational institutes alike. Pre-school children are given their first lesson in reading and writing on this day. All Hindu educational institutions conduct special prayer for Saraswati on this daySaraswati Mantra--Hymn for the Goddess
The following popular pranam mantra, or Sanskrit prayer, is uttered by utmost devotion by Saraswati devotees as they eulogizes the goddess of knowledge and arts:
Om Saraswati Mahabhagey, Vidye Kamala Lochaney |
Viswarupey Vishalakshmi, Vidyam Dehi Namohastutey ||
Jaya Jaya Devi, Charachara Sharey, Kuchayuga Shobhita, Mukta Haarey |
Vina Ranjita, Pustaka Hastey, Bhagavati Bharati Devi Namohastutey ||

The beautiful human form of Saraswati comes to the fore in this English translation of the Saraswati hymn:

"May Goddess Saraswati,
who is fair like the jasmine-colored moon,
and whose pure white garland is like frosty dew drops;
who is adorned in radiant white attire,
on whose beautiful arm rests the veena,
and whose throne is a white lotus;
who is surrounded and respected by the Gods, protect me.
May you fully remove my lethargy, sluggishness, and ignorance."

What is the "Curse of Saraswati"?

When education and artistic skill becomes too extensive, it can lead to great success, which is equated with Lakshmi, goddess of wealth. As mythologist Devdutt Pattanaik notes:
"With success comes Lakshmi: fame and fortune. Then the artiste turns into a performer, performing for more fame and fortune and so forgets Saraswati, goddess of knowledge. Thus Lakshmi overshadows Saraswati. Saraswati is reduced to Vidya-lakshmi, who turns knowledge into vocation, a tool for fame and fortune."

The Curse of Saraswati, then, is the tendency of the human ego to drift away from the purity of the original devotion to education and wisdom, and toward a worship of success and wealth.

Saraswati, the Ancient Indian River

Saraswati is also the name of a major river of ancient India. The Har-ki-dun glacier flowing from the Himalayas produced the Saraswati's tributaries, Shatadru (Sutlej) from Mount Kailas, Drishadvati from Siwalik Hills and the Yamuna. The Saraswati then flowed into the Arabian Sea at the Great Rann delta.
By about 1500 B.C. the Saraswati River had dried up in places and by the late Vedic Period, the Saraswati ceased to flow entirely.

Wednesday, September 6, 2017

Bernouli's Equation

Moving fluids

Fluid dynamics is the study of how fluids behave when they're in motion. This can get very complicated, so we'll focus on one simple case, but we should briefly mention the different categories of fluid flow.
Fluids can flow steadily, or be turbulent. In steady flow, the fluid passing a given point maintains a steady velocity. For turbulent flow, the speed and or the direction of the flow varies. In steady flow, the motion can be represented with streamlines showing the direction the water flows in different areas. The density of the streamlines increases as the velocity increases.
Fluids can be compressible or incompressible. This is the big difference between liquids and gases, because liquids are generally incompressible, meaning that they don't change volume much in response to a pressure change; gases are compressible, and will change volume in response to a change in pressure.
Fluid can be viscous (pours slowly) or non-viscous (pours easily).
Fluid flow can be rotational or irrotational. Irrotational means it travels in straight lines; rotational means it swirls.
For most of the rest of the chapter, we'll focus on irrotational, incompressible, steady streamline non-viscous flow.

The equation of continuity

The equation of continuity states that for an incompressible fluid flowing in a tube of varying cross-section, the mass flow rate is the same everywhere in the tube. The mass flow rate is simply the rate at which mass flows past a given point, so it's the total mass flowing past divided by the time interval. The equation of continuity can be reduced to:
Generally, the density stays constant and then it's simply the flow rate (Av) that is constant.

Making fluids flow

There are basically two ways to make fluid flow through a pipe. One way is to tilt the pipe so the flow is downhill, in which case gravitational kinetic energy is transformed to kinetic energy. The second way is to make the pressure at one end of the pipe larger than the pressure at the other end. A pressure difference is like a net force, producing acceleration of the fluid.
As long as the fluid flow is steady, and the fluid is non-viscous and incompressible, the flow can be looked at from an energy perspective. This is what Bernoulli's equation does, relating the pressure, velocity, and height of a fluid at one point to the same parameters at a second point. The equation is very useful, and can be used to explain such things as how airplanes fly, and how baseballs curve.

Bernoulli's equation

The pressure, speed, and height (y) at two points in a steady-flowing, non-viscous, incompressible fluid are related by the equation:
Some of these terms probably look familiar...the second term on each side looks something like kinetic energy, and the third term looks a lot like gravitational potential energy. If the equation was multiplied through by the volume, the density could be replaced by mass, and the pressure could be replaced by force x distance, which is work. Looked at in that way, the equation makes sense: the difference in pressure does work, which can be used to change the kinetic energy and/or the potential energy of the fluid.

Pressure vs. speed

Bernoulli's equation has some surprising implications. For our first look at the equation, consider a fluid flowing through a horizontal pipe. The pipe is narrower at one spot than along the rest of the pipe. By applying the continuity equation, the velocity of the fluid is greater in the narrow section. Is the pressure higher or lower in the narrow section, where the velocity increases?
Your first inclination might be to say that where the velocity is greatest, the pressure is greatest, because if you stuck your hand in the flow where it's going fastest you'd feel a big force. The force does not come from the pressure there, however; it comes from your hand taking momentum away from the fluid.
The pipe is horizontal, so both points are at the same height. Bernoulli's equation can be simplified in this case to:
The kinetic energy term on the right is larger than the kinetic energy term on the left, so for the equation to balance the pressure on the right must be smaller than the pressure on the left. It is this pressure difference, in fact, that causes the fluid to flow faster at the place where the pipe narrows.

A geyser

Consider a geyser that shoots water 25 m into the air. How fast is the water traveling when it emerges from the ground? If the water originates in a chamber 35 m below the ground, what is the pressure there?
To figure out how fast the water is moving when it comes out of the ground, we could simply use conservation of energy, and set the potential energy of the water 25 m high equal to the kinetic energy the water has when it comes out of the ground. Another way to do it is to apply Bernoulli's equation, which amounts to the same thing as conservation of energy. Let's do it that way, just to convince ourselves that the methods are the same.
Bernoulli's equation says:
But the pressure at the two points is the same; it's atmospheric pressure at both places. We can measure the potential energy from ground level, so the potential energy term goes away on the left side, and the kinetic energy term is zero on the right hand side. This reduces the equation to:
The density cancels out, leaving:
This is the same equation we would have found if we'd done it using the chapter 6 conservation of energy method, and canceled out the mass. Solving for velocity gives v = 22.1 m/s.
To determine the pressure 35 m below ground, which forces the water up, apply Bernoulli's equation, with point 1 being 35 m below ground, and point 2 being either at ground level, or 25 m above ground. Let's take point 2 to be 25 m above ground, which is 60 m above the chamber where the pressurized water is.
We can take the velocity to be zero at both points (the acceleration occurs as the water rises up to ground level, coming from the difference between the chamber pressure and atmospheric pressure). The pressure on the right-hand side is atmospheric pressure, and if we measure heights from the level of the chamber, the height on the left side is zero, and on the right side is 60 m. This gives:

Why curveballs curve

Bernoulli's equation can be used to explain why curveballs curve. Let's say the ball is thrown so it spins. As air flows over the ball, the seams of the ball cause the air to slow down a little on one side and speed up a little on the other. The side where the air speed is higher has lower pressure, so the ball is deflected toward that side. To throw a curveball, the rotation of the ball should be around a vertical axis.
It's a little more complicated than that, actually. Although the picture here shows nice streamline flow as the air moves left relative to the ball, in reality there is some turbulence. The air does exert a force down on the ball in the figure above, so the ball must exert an upward force on the air. This causes air that travels below the ball in the picture to move up and fill the space left by the ball as it moves by, which reduces drag on the ball.