Search This Blog

Friday, October 7, 2016

Mechanical Beauty...by engineers from Germany.


தேடல்



        இரண்டு கதைகளை இங்கே போட்டிருக்கிறேன். 
முதல் கதை சீனாவில் வழங்கும் கதை. அங்கு நிலவிய தாஓஇஸம் என்னும் சமயத்தில் காணப் படுவது.
இரண்டாவது கதை இந்தியக் கதை. உபநிஷதத்தில் காணப்படும்.

முதல் கதையைப் படித்துவிட்டு, அடுத்த கதையை அடுத்தாற்போல் உடனே படித்து விடுங்கள்.
ஒற்றுமை தெரியும்.


முதற்கதை -


Taoism என்றொரு சமயம் இருக்கிறது. சீனாவில். லாவோட்ஸ என்பவரால் தோற்றுவிக்கப் பட்டது என்பார்கள். மிகவும் பழமையான சமயம். 

தாஓயியர்களிடையே வழங்கும் ஒரு கதை. 
இதை ஏற்கனவே அகத்தியத்தில் போட்டு, இறுதியில் ஒரு கேள்வியையும் கேட்டிருந்தேன். 
யாருமே இன்றுவரை பதில் சொல்லவில்லை.

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


ஒரு சன்னியாசி காட்டில் ஒரு கல்லைக் கண்டெடுத்தார். 
அதை அவருடைய தொங்கு மூட்டையில் வைத்துக்கொண்டு வந்தார். ஓர் ஊரை ஒட்டிய பெரிய மரத்தடியில் இருந்த கல்மேடையில் தம்முடைய மூட்டையை வைத்துக்கொண்டு படுத்திருந்தார். 


அப்போது ஒருவன் வேகமாக ஓடிவந்தான். 


அவன் அந்த சன்னியாசியைக் குலுக்கி எழுப்பி, "எங்கே அந்தக் கல்? அந்த அரிய கல் எங்கே? அதை கொடு" என்றான்.
"என்ன கல்?" என்று சன்னியாசி கேட்டார். 
நேற்று இரவு நிதிக் கடவுள் என் கனவில் வந்தார். அவர் " இந்த ஊருக்கு வெளியில் தங்கியிருக்கும் சன்னியாசியிடம் ஒரு கல் இருக்கும். அது உன்னை மிகப் பெரிய செல்வந்தனாக ஆக்கும்", என்று என்னிடம் சொன்னார், 

    சன்னியாசி தம்முடைய மூட்டைக்குள் குடைந்து அந்தக் கல்லை எடுத்தார். 


"நான் இந்தக் கல்லைத்தான் காட்டில் கண்டெடுத்தேன். விசித்திரமான கல். ஆகவே கையில் எடுத்துக்கொண்டு வந்தேன். இந்தா. உனக்கு வேண்டுமென்றால் எடுத்துக்கொள்," என்று சொல்லிவிட்டு அந்தக் கல்லை அவனிடம் கொடுத்துவிட்டு, கொட்டாவி விட்டுக்கொண்டே மீண்டும் மூட்டையைத் தலைக்கு வைத்துக்கொண்டு படுத்து, மறுபுறம் திரும்பிக் கொண்டு முழங்கால்களை மடக்கிக்கொண்டு, நிம்மதியாகத் தூங்கலானார். 


அந்த மனிதன் தன் கையிலிருந்த கல்லை மிகவும் வியப்புடன் பார்த்தான். 

அவனுடைய உள்ளங்கையை நிரப்பிக்கொண்டு அந்தக் கல் இருந்தது. 
உலகிலேயே மிகப் பெரிய வைரக்கல்!


வீட்டுக்குத் திரும்பினான். 
தூக்கமே வரவில்லை.
இப்படியும் அப்படியுமாகப் புரண்டுகொண்டேயிருந்தான். ஒரே குழப்பம். சிந்தனை. 
        
விடிந்தவுடன் வேகமாக அந்த மரத்தடிக்குச் சென்றான். சன்னியாசி இன்னும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தார். 


அவரைக் குலுக்கி எழுப்பிச் சொன்னான், 


  "இந்த மகத்தான விலை மதிப்பில்லாத உயர்ந்த வைரத்தை, கூழாங்கல்லை எறிவதுபோல சர்வசாதாரணமாக எறியச் செய்த மிகப்பெரும் அரிய செல்வம் எதையோ நீ வைத்திருக்கிறாய். 
அதை எனக்குத் தா!"

>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>


இந்தக் கதையைப் போல பிருஹதாரண்யக உபநிஷதத்தில் ஒரு சம்பவத்தைக் காணலாம். 


யக்ஞவல்கியர் என்னும் ரிஷிக்குக் காத்யாயனி என்பவர் மனைவி. இவர் சாதாரணமான பெண்களுக்கு உரிய கடமைகளை மேற்கொண்டு குடும்பத்தை நடத்தினார். 
மைத்ரேயி என்ற இளம்பெண் ஒருநாள் காத்யாயனியிடம் வந்தார்.
யக்ஞவல்கியரோடு உடன் இருந்து ஞானத்தைக் கற்றுக்கொள்ள அனுமதி கேட்டார். 
காத்யாயனியின் அனுமதியின் பேரில் யக்ஞவல்கியருடைய மாணவியாகவும் மனைவியாகவும் உடன் இருந்தார் மைத்ரேயி.
சில காலம் கழித்து யக்ஞவல்கியர் தம் மனைவியரை அழைத்து, தாம் பூரண துறவறம் பூண வேண்டியிருப்பதால் குடும்பத்தை விட்டு விட்டுப் போகப்போவதாகக் கூறினார். 
அதற்கு முன்னதாக தம்முடைய பசுக்கள், சொத்துக்கள் ஆகியவற்றை மனைவியரிடம் கொடுத்தார். 
காத்யாயனியின் பங்குக்குக் கிடைத்தவற்றை அவர் வாங்கிக்கொண்டார்.


ஆனால் மைத்ரேயி அவ்வாறு செய்யவில்லை. 
யக்ஞவல்கியரைக் கேட்டார்.
"ரிஷிகளில் எவ்வளவோ செல்வம் படைத்தவர் நீவிர். இவ்வளவையும் க்ஷணப்பொழுதில் உதறித் தள்ளிவிட்டுப் போகிறீர். அப்படியானால் இவையெல்லாவற்றையும் விட மிகப் பெரிய அரிதான விஷயம் இருக்கிறது. சொல்லுங்கள். உலகில் பரப்பிவைக்கப்பட்ட அனைத்து செல்வங்களும் இறவாத்தன்மையை நல்குமா?" 
யக்ஞவல்கியர், "அவை கொடுக்கமாட்டா. நீ அதிக செல்வம் படைத்தவளாக இருப்பாய். அவ்வளவுதான். அவை அனைத்துமே உனக்கு இறவாத்தன்மையைக் கொடுக்கமாட்டா", என்றார். 
"அப்படியானால் நீவிர் இவற்றையெல்லாம் துச்சமாக மதித்து, விட்டு விட்டு எதை நாடிப்போகிறீரோ, அதை எனக்குக் கொடும்", என்று பிடிவாதமாச் சொல்லிவிட்டு, அவருடன் புறப்பட்டார். 
பின்னர் யக்ஞவல்கியர் மைத்ரேயியிடம் "நீ எப்போதுமே என் அன்புக்கு உரியவள். இப்போது இந்தக் கேள்வியால் இன்னும் எனக்குப் பிரியமானவள் ஆகிவிட்டாய். வா..., இப்படி அமர். நான் உனக்கு அதைச் சொல்கிறேன். அதை நீ கேட்டுக்கொண்டவுடன் அதை நீ தியானம் செய்", என்றார்
பிறகு பிரம்ம ஞானத்தை மைத்ரேயிக்கு யக்ஞவல்கியர் உபதேசம் செய்தார்.

Tuesday, October 4, 2016

Discovery of an extragalactic hot molecular core



Astronomers have discovered a 'hot molecular core', a cocoon of molecules surrounding a newborn massive star, for the first time outside our Galaxy. The discovery, which marks the first important step for observational studies of extragalactic hot molecular cores and challenges the hidden chemical diversity of our universe.
The scientists from Tohoku University, the University of Tokyo, the National Astronomical Observatory of Japan, and the University of Tsukuba, used the Atacama Large Millimeter/submillimeter Array (ALMA) in Chile to observe a newborn star located in the Large Magellanic Cloud, one of the closest neighbors of our Galaxy. As a result, a number of radio emission lines from various molecular gas are detected, which indicates the presence of a hot molecular core associated with the observed newborn star.
The observations have revealed that the hot molecular core in the Large Magellanic Cloud shows significantly different chemical compositions as compared to similar objects in our Galaxy. In particular, the results suggest that simple organic molecules such as methanol are deficient in this galaxy, suggesting a potential difficulty in producing large organic species indispensable for the birth of life.
The research team suggests that the unique galactic environment of the Large Magellanic Cloud affects the formation processes of molecules around a newborn star, and this results in the observed unique chemical compositions.
"This is the first detection of an extragalactic hot molecular core, and it demonstrates the great capability of new generation telescopes to study astrochemical phenomena beyond our Galaxy," said Dr. Takashi Shimonishi, an astronomer at Tohoku University, Japan, and the paper's lead author. "The observations have suggested that the chemical compositions of materials that form stars and planets are much more diverse than we expected. "
It is known that various complex organic molecules, which have a connection to prebiotic molecules formed in space, are detected from hot molecular cores in our Galaxy. It is, however, not yet clear if such large and complex molecules exist in hot molecular cores in other galaxies. The newly discovered hot molecular core is an excellent target for such a study, and further observations of extragalactic hot molecular cores will shed light on the chemical complexities of our universe.
http://iopscience.iop.org/artic…/10.3847/0004-637X/…/72/meta

Cecile G. Tamura

ஆஸ்திரேலியப் பழங்குடி கலாசாரத்தில் அக்னி.


இந்துக்களின் வேதத்தில் இந்திரனுக்கு அடுத்தபடியாக, அதிகம் போற்றப்படுபவர் அக்னி பகவான். வேத காலத்தில் வீட்டிலும், அரண்மனைகளிலும், கோவில்களிலும் 400 வகையான யாக, யக்ஞங்கள் நடத்தப்பட்டன. ஆஸ்திரேலியப் பழங்குடிகள் அக்னி வழிபாடு செய்யாவிட்டாலும், இந்துக்களைப் போல, தீயை ஒரு புனிதப் பொருளாகவே கருதினர். மேலும் ஒரு ஒற்றுமை. வேத கால பிராமணர்கள், மந்திரம் சொல்லி, அரணிக்கட்டையை வைத்து தீயை மர ஓட்டைகளிலிருந்து கடைந்தெடுத்தது போலவே பழங்குடி மக்களும் செய்தனர். ஆயினும் இவ்வழக்கம் இந்தியா, ஆஸ்திரேலியா தவிர மாயா நாகரீகத்தில் கூட உள்ளது. ஆக, யார் யாரிடமிருந்து கடன் வாங்கினர் என்பது ஆராய்ச்சிக்குரிய விஷயமே.
அக்னியை உண்டாக்க பழங்குடியினர், அரணியைப் போல வுள்ள கருவிகளையே பயன்படுத்தினர். அவர்கள், இதற்காகப் பலவகைக் கருவிகளைச் செய்து, தீக்குச்சி போலத் தோன்றும் பெரிய குச்சிகளையும் வைத்திருந்தனர். தீப்பொறி வந்தவுடன் அதைக் கொளுத்திக் கொள்வர்.
எதையும் வீணடிக்காதே
சிட்னி மியூசியத்தில், ஆஸ்திரேலிய பிரிவில் நமது கவனத்தை ஈர்க்கும் மற்றொரு விஷயம் – எதையும் வீணடிக்காதே என்ற பழங்குடி மக்களின் வாசகமாகும்.
இந்துக்கள், எல்லா பொருள்களையும் கடவுளின் பொருளாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்கமாட்டார்கள். ‘ஈஸாவாஸ்யம் இதம் சர்வம்’ – என்று உபநிஷதம் கூறுவதால், காலையில் படுக்கையிருந்து எழுந்து பூமி மீது பாதங்களை வைக்கும் முன் ‘பாத ஸ்பர்சம் க்ஷமஸ்வமே’ (கால்களை உன் மீது வைக்கிறேன்; மன்னிப்பாயாக) என்று சொல்லித்தான் வைப்பர். கிணறு வெட்டுகையிலும், நிலத்தை உழும்போதும் பூமாதேவியிடம் மன்னிப்புக் கேட்பர். இப்படிக் காடு மலை, ஆறு, குளம், செடி கொடி, தோப்பு, துறவு எல்லாவற்றையும் ஈசனின் படைப்பாகப் பார்ப்பதால் எதையும் வீணடிக்க மாட்டார்கள். அளவுக்கு அதிகமாகச் சுரண்ட மாட்டார்கள். மிருகங்களைக்கூட, நாட்டிற்குள் நுழைந்து தொல்லை கொடுக்கையில் மட்டுமே வேட்டையாடுவர். சிட்னி மியூசியத்தில் இந்தக் கருத்தை பழங்குடி மக்களும் எழுதிவைத்தது சிந்தனையின் ஒருமைப்பாட்டைக் காட்டி நின்றது.
நீ நாட்டைப் போற்று, அது உன்னைப் போற்றும்!
நம் கவனத்தை ஈர்க்கும் மற்றொரு போர்டு, நீ நாட்டைக் கவனி, அது உன்னைக் கவனிக்கும் – என்பதாகும். தர்மோ ரக்ஷதி ரக்ஷித: ( நீ அறத்தைக் காத்தால், அறம் உன்னைக் காக்கும்) என்ற இந்துமதக் கருத்தை இது பிரதிபலிக்கிறது. ஆஸ்திரேஇயப் பழங்குடி மக்கள், ‘நாடு’ என்று சொல்லுவது, அவர்களுடைய குழுக்களையாகும். ஆக நாம் மற்றவர்களைக் காப்பார்ரினால், அனத தர்மமே நம்மைக் காக்கும் என்றும், இருக்கும் இயற்கை வளத்தை மிதமாகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் எண்ணுகின்றனர்.
ஒரு பழங்குடி மக்களிடையே இப்படி உயர்ந்த சிந்தனை இருப்பது அவர்களுடைய பழைய இந்துமத அடிப்படையைக் காட்டுவதாகவே எனக்குத் தோன்றியது.
அவர்களுடைய, மொழி, நடை உடை பாவனை போன்ற அனைத்தையும் காண்கையில் இது உறுதிப் படுகிறது. இந்தியப் பழங்குடி மக்களிடையேயும் இப்படி இருப்பதை காணலாம். ஆயினும் 40,000 ஆண்டுகளாகத் தனித்து வாழ்ந்த இனங்கள் ஆகையால் பல வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும்.
நன்றி-Tamil and Vedas

You've got 3days to kill

ஒரு ரகசிய போலீஸ் அதிகாரி.. தன் வேலைக்காக குடும்பத்தை பிரிஞ்சு வந்தவர்.. ஒரு அசைன்மென்ட்டில் தீவிரவாதி ஒருத்தன் கண் முன்னாடி எஸ்கேப் ஆகிறான் அவனை பிடிக்க முடியாமல் உடல் நிலை சொதப்ப மயக்கமாகிறார்...

டாக்டர் பாத்துட்டு... மூளை நுரையீரலில் புற்று நோய் பரவியிருக்கு 3 மாதம் தான் வாழ்க்கைன்னு சொல்ல.. வேலையை விட்டுட்டு.. மகள் மனைவியை தேடி போறார்.... செம வெறுப்பில இருக்கிறவங்க கிட்ட மறுபடி பாசபிணைப்பு.. அப்பா மகள் உறவு செதுக்கல்கள்ன்னு ஒரு பக்கம்...

மீண்டும் தொல்லை குடுக்கும் தீவிரவாதியுடன் கேன்சர் நோய் பாதிப்புக்கு நடுவில் குடும்பத்துக்கு தெரியாமல்... ஆக்சன் நடவடிக்கைகள் ஒரு பக்கம்... ன்னு சுவாரஸியமான கதை....

சென்டிமென்ட் & ஆக்சன் பிடிப்பவர்களுக்கான படம்... போர் அடிக்காது.. :)
 
Director McG and producer Luc Besson just can’t drag Kevin Costner down to their level, try as they might. The "This Means War" helmer and the man responsible in some way or another for the "Taken," "Transporter," and "Taxi" movies plunk the aging action star into a fairly cynical live-action cartoon whose ostensible quirkiness has become its own form of cliché, and Costner responds by bringing an easy integrity and seemingly effortless humanity to his part. And hence making a messy, meandering and silly movie rather more watchable than it deserves to be.
 

From the get-go you know what kind of tripe "Kill" is: the overdetermined, overblown, overdesigned type—a EuroTrash action movie, if you will. One in which the explosions are almost as loud as the real-life kind that make people deaf, and the villain looks like he stepped out of a "Saturday Night Live" parody of a Prada advertisement. In the middle of the sound and fury of an opening battle, Costner is stolid and solid. Then his character learns that he’s got a virulent form of cancer, and only months to live. “The C.I.A. thanks you for your service,” his attending physician tells him. Right. Acting on advice to get his affairs in order, Costner’s character, who doesn’t speak a word of French, goes to his flat in Paris, discovers a family of Africans squatting there, tries to go all middle-period Eastwood on them, doesn’t, and then looks up his estranged wife and estranged teenage daughter.
“Promise me one thing,” estranged wife Connie Nielsen says. “Promise me you’re not working for them anymore.” Sure enough, Costner promises. And sure enough, Amber Heard, a mysterious presence in the opening scene, and made up throughout to look as if she just stepped out of a Tex Avery animated short, turns up offering to cure his cancer if he’ll, yes, work for “them” again, this time killing bad guys known as “The Wolf” and “The Albino.” His new assignment happens to coincide with a let’s-get-reacquainted period between father and daughter.
The upshot of which, at times, involves Costner’s character torturing various lower-level criminals while, get this, soliciting their advice on parenting. This is the main comic device of the movie’ scenario, and it’s a pretty uncomfortable one. This is one of those movies that’s ridiculously busy with dumb and not particularly pertinent detail on the one hand, and determined to beat all of its near-decent jokes into the ground on the other (as in what happens after Costner’s daughter sets Icona Pop’s “I Don’t Care” as his cell phone ringtone for her), so when it stops dead for a father-daughter bonding scene in front of Sacre Coeur, the effect is a little unsettling at first. As in, what the hell is this, "Die Hard" meets "Amelie"? Only, because "True Grit" girl Haille Steinfeld is easily winning as the daughter, and Costner is delivering his absolute best Gary Cooper stuff, the scene is actually almost affecting.
And so it goes throughout the ridiculous and thoroughly predictable action proceedings (when “The Wolf” says to an associate, “Take me to my partner’s house, he will know how to get me out of Paris,” you know exactly who the partner is going to turn out to be, even though you can’t believe it). Costner deserves better, and the fact that he doesn’t phone it in here indicates that he thinks maybe so do you. It’s worth noting, too, that the movie looks real nice; Thierry Arbogast, a long time Besson accomplice (he even worked with the man when he was doing good, as in "The Fifth Element") imbues the possibly overfamiliar Paris locations with a gold-sepia lighting that’s very pleasing.
 thanks: rogerebert.com

எழுத்தாளர் (சிறுகதை)


எழுத்தாளர் பக்கி (அதுதான் அவர் புனைப்பெயர்) அன்று கொஞ்சம் உற்சாகமாகவே இருந்தார். அவருக்கு நாற்பது வயது. வயதைக் குறிப்பிடுவது எதற்கென்றால் அவரைப் பற்றிய சரியான பிம்பத்தை உங்களுக்கு அளிக்க!

பக்கி இதுவரை ஏழோ எட்டோ புத்தகங்கள் போட்டிருக்கிறார். வித்தியாசமாகத் தலைப்பு வைத்தால் தான் மக்கள் வாங்குவார்கள் என்று 'சூனியத்தில் முளைத்தெழும் வெளி' , 'விட்டில் பூச்சியின் கனவுகள்' 'ஒளியற்றதன்   நிழல்கள்' 'கடலில் பிறக்கும் நதி' என்றெல்லாம் தலைப்பு வைத்து கவிதை என்ற பெயரில் எதையோ எழுதி இருக்கிறார். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் ஹேமாவின் பூனை என்ற வரலாற்று சிறப்பு மிக்கதொரு  புதினத்தை (?) எழுதி வெளியிட்டு இருக்கிறார். புதினம் என்றால் புதினா சட்னியின் சுருக்கப்பட்ட பெயர் என்று எண்ணிக் கொண்டிருக்கும் ரசனையற்ற மக்களுக்கு மத்தியில் அவர் புத்தகம் வெளியிடப்பட்டதே பெரிய விஷயம் என்று தன் குல தெய்வம் குருத்தாம் பாளையம்  வேலி காத்த அய்யனாருக்கு தினமும் நன்றி சொல்லிக் கொண்டிருக்கிறார்.

நிற்க. அவர் உற்சாகமாக இருக்கிறார் என்று நாம் சொல்லியதற்குக் காரணம் மறுதினம் புத்தகக் கண்காட்சியில் அவரது வாசக வட்ட (?) நண்பர்கள் ஒரு சின்ன சந்திப்புக்கு ஏற்பாடு செய்தது தான். வா.வ என்றதும் ஏதோ சாரு போல 15000 வாசகப் பெருமக்கள் என்று எண்ணிக் கொள்ள வேண்டாம். UKG குழந்தை போல டூ, த்ரீ , பைவ், எய்ட் என்று எடக்கு மடக்காக எண்ணினாலும் அவரது வாசக வட்டம் 100 ஐத் தாண்டாது.

அவரது மிகத் தீவிர வாசகர் குளுவான் குஞ்சு என்பவர் . அவர் ப்ளாக்கில் போஸ்ட் போடும் போதெல்லாம் அவருக்கு இமெயில் அனுப்பி கன்னா பின்னா என்று புகழ்பவர். அவர் இருக்க வேண்டியது சென்னை மண்ணடி குறுக்கு சந்தே அல்ல. ஜெர்மனியின் முனீச் சந்து தான் என்று தவறாமல் சொல்பவர். பக்கி தன் ப்ளாக்கில் கமெண்டுகளை disable செய்து விட்டார். இல்லை என்றால் இந்த அறிவு ஜீவிகளின் தொல்லை தாங்க முடியாது. ஒருவாரம் கங்குல் பகலாக யோசித்து ஒரு கருத்தாழமிக்க (?) பதிவு போட்டால் உடனே சண்டை போட ரெடியாக பின்னூட்டத்தில் வந்து விடுகிறார்கள். அவர்களுக்கெல்லாம் வேறு வேலையே இல்லையா என்று பக்கி நினைப்பார். இது தப்பு அது தப்பு என்று நொட்டை சொல் சொல்கிறார்களே தவிர உருப்படியாக எதுவும் எழுத மாட்டார்கள். இவர்களுக்கு இருக்கும் இந்த அறிவுக்கு ஏன் இன்னும் இலக்கியத்துக்கான நோபல் பரிசு வரவில்லை என்று யோசிப்பார்.

பக்கிக்கு அறிவியல் என்றால் அலர்ஜி. இன்னும் கூட இவ்வளவு பெரிய பூமி அந்தரத்தில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் என்பதை அவர் நம்பவில்லை. ஒரு நாள் தெரியாத் தனமாக ஏதோ ஒரு நல்ல மூடில் 'பொருள் என்பது சூனியம் தான்' என்ற நவீன இயற்பியல் தத்துவத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வேதம் சொல்லி விட்டது என்று தன் ப்ளாக்கில் ஒரு பிட்டைப் போட்டு வைத்தார். அதற்கு வந்த பின்னூட்டங்களைப் பார்த்து விட்டுத் தான் தமிழ் நாட்டில் இத்தனை விஞ்ஞானிகள் இருக்கிறார்கள் என்பதை பக்கி உணர்ந்தார். ஒரு விமர்சகர் இப்படிக் கமெண்ட் போட்டிருந்தார். அதைப் பார்த்த நிமிடத்திலேயே அவசர அவசரமாக கமெண்ட்ஸ் ஐ disable செய்து விட்டார்.

ஞானதேசிகன் commented on 'பொருள்-சூனியம்-பொருள்'..

view 59 more comments

"அன்பின் பக்கி, இது எந்த உபநிடதத்தில் எந்த சர்கத்தில் வருகிறது என்று reference சொல்ல முடியுமா? சூனியம் என்ற ஒன்றை குவாண்டம் தத்துவம் நம்புவதில்லை. காசிமிர் வாக்யூம் என்று எண்ணிலடங்கா ஆற்றல் துகள் எதிர்த்துகள் பேரணிகள் சூனியத்தில் நிலை கொண்டுள்ளன.உதாரணமாக மேல் குவார்க் மற்றும் வேறுபடு (strange )குவார்க்குகள் கொண்ட கேயான் ஒன்று பையான் -ஆக சிதைந்து இடைநிலையில் W போசானும் குளுவான்களும் வருகின்றன"

Comments disabled ..


பக்கி ரொம்ப பில்ட் அப் கொடுக்காமல் ஒரு எல்லைக்குள்ளாகவே இருப்பது என்று தீர்மானித்தார்.கொஞ்சம் intellectual ஆன விஷயங்களை இப்போது அவர் தொடுவதே இல்லை.கவிதை எழுதினால் பிரச்சினை இல்லை பாருங்கள். தன் சமீபத்திய ஹேமாவின் பூனை புத்தகத்தில் அவர் அகநானூறு, ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் , பிஸி பேளா பாத் செய்வது எப்படி , The count of Monte kristo , குற்றியலிகரம், சிவ வாக்கிய விளக்கம், பார்முலா ஒன் ரேஸ், ஓரினச் சேர்க்கை, 12 years a slave ,இலங்கைத் தமிழர்கள், பரிணாமம், சுவாதிஸ்டானம் , நரேந்திர மோடி, எமிலி டிக்கின்சன் ,வர லக்ஷ்மி விரதம்,ice age ,gravity 3டி ,சிந்து பைரவி, ஜக்கி வாசுதேவ், குட்டி ரேவதி, இளையராஜா ,முடி உதிர்வதைத் தடுப்பது எப்படி என்று கலந்து கட்டி அடித்திருக்கிறார்.

நிலவின்
மங்கிய வெள்ளொளியில்
எனக்குள் பீறிட்டுக் கிளம்பிய
தனிமையின் ஏகாந்தத்தை
நிரப்ப வரும்
சம்பூரணத்தின்
சிறகுகளின் நறுமணத்தில்
பூத்துப் படரும்
உன் நினைவு!

என்றெல்லாம் கவிதை எழுதினால் யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் பாருங்கள்.

குளுவான் குஞ்சு அலை பேசியில் அழைத்து , 'சார் நாளைக்கு ஒரு சின்ன கூட்டம் போடலாம். இருபது முப்பது வாசகர்களை அழைத்து வருகிறேன்' அடையாளம் பதிப்பகத்தின் அருகில் கூட்டம் என்றார்.எழுத்தாளர் பக்கிக்கு உற்சாகம் பொங்க ஆரம்பித்து விட்டது. சந்திப்பில் என்ன பேசுவது , 'இலக்கியம் என்பது என்ன, பெர்னாட்ஷா என்ன சொல்கிறார் என்றால் ..' என்று பேசுவது என்றெல்லாம் கற்பனை செய்து கொண்டார். ஆட்டோக்ராப் கேட்பவர்களுக்கு கீழ்க்கண்ட வரிகளை எழுதித் தரலாம் என்றெல்லாம் கற்பித்துக் கொண்டார்.

"உங்கள் தலையெழுத்தை  மாற்ற முடியும் ஒரு எழுத்தாளனின் கையெழுத்து!! "

-உங்கள் அபிமான பக்கி


அன்று இரவு 1 மணி வரை என்னென்னோவோ புத்தகங்களை வைத்து குறிப்புகள் எழுதி வைத்துக் கொண்டார். " எழுத்தாளர் பக்கியை சந்திக்க வரும் வாசகர்கள் கூட்டம் அதிகம் இருப்பதால் வாசகர்கள் தங்கள் உடைமை, செல் போன் , புத்தகங்கள் , பிஸ்கட், குழந்தை முதலியவைகளை பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும்' என்று மைக்கில் அறிவிப்பதாகக் கனவு கண்டார்.

மறுநாள் காலை ஆறு மணிக்கே எழுந்து கொண்டு ஷேவ் செய்து கொண்டு பேன்டீன் சாம்பூ போட்டுக் குளித்து விட்டு சிறப்பான உடைகளை அணிந்து கொண்டார் பக்கி.புதிய பெல்ட் அணிந்து கொண்டு டக் இன் செய்து கொண்டார். வாட்ச் கட்டிக் கொண்டார். 8 மணிக்கு குஞ்சுக்கு போன் செய்த போது 'The number you are trying to call is not reachable' , என்று வந்தது , அந்த அழகான பெண் குரல் அதைத் தமிழில் பெயர்ந்து சொல்லிக் கொண்டிருப்பதற்குப் பாதியிலேயே 'நீங்கள் அழைக்கும் நபர் தற்போது தொடர்பு எல்லைக்...' கட் செய்தார். 9 மணிக்கு மீண்டும் போன் செய்த போது அதே பெண் குரல், வேறு ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கிறார் என்றது.சரி தொந்தரவு செய்ய வேண்டாம். வாசக வட்ட நண்பர்களை சேர்த்துக் கொண்டு கண்காட்சிக்கு வந்து விடுவார் என்று பக்கி சுய சமாதானம் சொல்லிக் கொண்டார்.கண்காட்சிக்குத் தனியாகவே போவது என்று முடிவு செய்து டாக்ஸி ஒன்றைப் பிடித்து 11 மணியளவில் அங்கே ஆஜரானார்.அலீப் டிபன் சென்டரில் மூன்று இட்லி ஒரு பரோட்டா ஒரு காபி சாப்பிட்டுக் கொண்டார்.

அன்று கண்காட்சிக்கு வந்திருந்த கூட்டத்தைப் பார்த்து பக்கிக்குத்  தன் கண்களையே நம்ப முடியவில்லை.தமிழ்நாடு கேரளாவை முந்திக் கொண்டு எங்கோ இலக்கிய ராஜ பாட்டையில் 5th கியரில் போய்க் கொண்டிருப்பதாகத் தோன்றியது.வாக்கிங் ஸ்டிக் வைத்துக் கொண்டு நடக்கும் 90 வயது முதியவரில்  இருந்து சாக்கோ பார் கடித்துக் கொண்டு நடக்கும் 10 வயது சிறுவன் வரை எல்லாரையும் காண முடிந்தது அவ்விடத்தில் .எது எடுத்தாலும் இருபது ரூபாய் என்று கூவி அழைக்கும் பொருட்காட்சிக்குக் கூட இவ்வளவு கூட்டம் வராது போலிருந்தது. இன்னொரு ஆச்சரியம் 'Im a machine; but I used to be a person long long ago' என்பன போன்ற பொன்மொழிகள் பொறிக்கப்பட்ட தேநீர் சொக்காய்களை அணிந்த யுவன்களும் யுவதிகளும் வந்திருந்தது. கத்திரிக்காயில் 90 வகை சமையல், லக்ஷ்மி சஹஸ்ரநாமம்  போன்ற புத்தகங்களை வாங்க வந்திருந்த மாமிகளை பக்கி கண்டு கொள்ளவேயில்லை.

பக்கி நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு ஸ்டால்களுக்குள் நுழைந்து நிதானமாக நடந்து பார்வையிட்டார். முதல் முறையாக 'யாருமே தன்னைக் கண்டு கொள்ளவில்லை' என்ற உண்மை அவருக்கு மெதுவாய் உறைக்க ஆரம்பித்தது. குஞ்சுக்கு போன் செய்தார். மூன்று முறையும் ரிங் போயிற்றே தவிர அவர் attend செய்யவில்லை.நான்காவது முறை குஞ்சு எடுத்து பதட்டத்துடன் , 'சார்,,ரொம்ப சாரி,,,,நண்பர் ஒருவருக்கு ஆக்சிடெண்ட் ஆகி எமெர்ஜென்சியில் இருக்கிறார். ஆஸ்பிடலில் இருக்கிறேன், ஈவினிங் கூப்பிடுகிறேன் சாரி ' என்று சொல்லி போனை வைத்து விட்டார். இன்னொரு வாசகருக்கு போன் செய்ததில் சுவிட்ச் ஆப் என்று வந்தது. பக்கி தனியாளாக கண்காட்சியை நோட்டம் விடுவது என்று தீர்மானித்தார்.

தன் வ .சி.மிக்க புத்தகமான 'ஹேமாவின் பூனை' யை யாராவது வாங்குகிறார்களா என்று ஒவ்வொருவராக நோட்டம் விட்டார். எல்லாரும் கொற்கை, பொன்னியின் செல்வன்,ஓநாய் குலச் சின்னம் உப பாண்டவம்  என்று வாங்கிக் கொண்டிருந்தார்கள். இன்னும் மக்கள் பொன்னியின் செல்வன் ,  படிக்கிறார்களா அதில் என்ன தான் இருக்கிறதோ என்று பக்கி வியந்தார்.அவர் புத்தகத்தை வெளியிட்டிருந்த தமிழன்னை பதிப்பகத்தில் ஈயாடியது. அதற்கு நித்தியானந்தா பதிப்பகத்தில் கூட ரெண்டு பேர் நின்று கொண்டு டி.வி.டி இருக்கா என்று கேட்டுக் கொண்டிருந்தனர். அதற்கு அந்த அம்மணி அவர்களிடம் அட்ரஸ் வாங்கிக் கொண்டு டி .வி.டி. அனுப்புவதாகவும் எக்ஸ்ட்ராவாக குண்டலினியை எழுப்பித் தரலாமா என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். குறும்பு மிக்க இளைஞர் ஒருவர் ரஞ்சிதா மேடத்தைக் காணலியே என்று கமெண்ட் செய்து கொண்டே கடந்து சென்றார்.

பக்கி ஒரு லிட்சி ஜூஸ் குடித்து விட்டு கண்காட்சியை மீண்டும் வலம் வந்தார்.தன்னை யாரேனும் அடையாளம் கண்டு கொள்கிறார்களா என்று நோட்டம் விட்டார். அழகான இளம் யுவதி ஒருவள் வந்து 'சார், நான் உங்க தீவிர ரசிகை , உங்கள் 'விட்டில் பூச்சியின் கனவுகள்', சான்சே இல்லை சார், வாட் எ லிடரசர் ஆட்டோ கிராப் ப்ளீஸ் என்று சொல்வாள் என்று கண்டிப்பாக எதிர்பார்த்தார்.ஆனால் சற்றேறக்குறைய அப்படிப்பட்ட யுவதி ஒருத்தி இவர் பக்கம் திரும்பிக் கூடப் பார்க்காமல்  தன் ஆண் நண்பரிடம் தன் whatsapp இல் அனுப்பிய குறுந்தகவல் வரவில்லையா என்ற தத்துவ வேந்தாந்த விசாரத்தைப் பேசிக் கொண்டிருந்தாள் .மக்கள் தொடர்ந்து நடுப்பகல் மரணம் கம்ப்யூட்டர் கிராமம் அனிதாவின் காதல்கள்  போன்ற அலுத்துப் போன சுஜாதா புத்தகங்களை வாங்கிய வண்ணம் இருந்தனர். பக்கிக்கு அந்த ஆள் மேல் எரிச்சலாக வந்தது. நல்ல வேளை  அந்த ஆள் இப்போது உயிருடன் இல்லை இருந்திருந்தால் யாரையும் எழுத விட்டிருக்க மாட்டார் என்று ஆறுதலும் வந்தது.உயிர்மை ஸ்டாலின் வெளியே அமர்ந்திருந்த மனுஷ்ய புத்திரனை கண்டும் காணாமல் வந்து விட்டார். ஏனென்றால் மூன்று நான்கு பேர் அவரை சுற்றி நின்று கொண்டு கையெழுத்து வாங்க முயன்று கொண்டிருந்தனர். அப்படியென்ன பிரமாதமாக எழுதறார் என்று தனக்குள் சலித்துக் கொண்டார். தானும் உட்காரலாம் என்று ஏதேனும் நாற்காலியைத் தேடினார். மாற்றுத் திறனாளியாக இருந்தால் மட்டுமே நாற்காலி தருவார்கள் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டார்.கண்காட்சியின் உள்ளே நிலவிய வெக்கை மின் விசிறிகளையும் மீறி உறுத்தியது.

பக்கி வாரியார் பதிப்பகம் சென்று 'வாரியார் சொன்ன குட்டிக் கதைகள்' புத்தகத்தை வாங்கினார்.தன் அடுத்த புத்தகத்துக்கு உதவும் என்று தமிழ் மொழி வரலாறு என்று 600 ரூபாய்  குண்டு புக்கையும் வாங்கினார்.மக்கள் 'அரசு பதில்கள்' 'பக்தி யோக விளக்கம்' 'யானைகள் காணாமலாகின்றன ,சில்க் சுமிதாவின் கதை , கொக்கோக சாஸ்திரம் ,பீக்கதைகள் போன்ற புத்தகம் எல்லாம் வாங்குகிறார்கள், நம் புத்தகத்தை வாங்குவார் இல்லை என்று தனக்குள் அலுத்துக் கொண்டார்.இதற்கும் தன் புத்தகத்தின் பின் அட்டையில் தான் கூலிங் கிளாஸ் அணிந்து கொண்டு மைசூர் ஜூவில் நின்றிருக்கும் போட்டோவை கலரில் போட்டிருக்கிறார்.

மதியம் இரண்டு மணியளவில் பக்கி புத்தகக் கண்காட்சி கேண்டீனுக்குள் நுழைந்தார். முக்கால் வாசிக் கூட்டம் அங்கே தான் இருப்பது போல் இருந்தது.
பக்கி ஒரு ரவா தோசை டோக்கன் வாங்கி தோசை வேகும் வரை அசுவாரஸ்யமாய் காத்திருந்து வாங்கிக் கொண்டு உட்கார்ந்து கொள்ள நாற்காலிகளைத் தேடினார். காலி நாற்காலி ஒன்று கூட இல்லை. யாரேனும் எதிர் வந்து , சார், உட்காருங்க ப்ளீஸ், உங்க 'ஹேமாவின் பூனை'....என்று சொல்வார் என்று எதிர் பார்த்தார்.ஆனால் மக்கள் நூடூல்ஸ் ஐயும் சூடான மசால் தோசையையும் டெல்லி அப்பளத்தையும்  உள்ளே தள்ளுவதிலேயே குறியாக இருந்தனர். கொடுமை என்ன என்றால்  தோசையை தின்று முடிந்ததும் எழும்பிப் போகாமல் மக்கள் அங்கேயே அமர்ந்து தாங்கள் உள்ளே வாங்கிய புத்தகங்களை , ப்ரீயாக வந்த காலண்டர்களை , துண்டுப் பிரசுரங்கள் இத்யாதிகளை  பிரித்துப் படிக்கவும் செய்தார்கள். உங்கள் இலக்கிய ஆர்வத்துக்கு ஒரு அளவே இல்லையா என்று பக்கி நினைத்துக் கொண்டார். ஒரு நாற்காலி காலியாய் இருக்கவே பக்கி உடனே போய் அங்கு ஏறக்குறைய அமர்ந்தே விட்டார்.அருகில் அமர்ந்திருந்த பெண் விரோதமாக 'ஆள் வருது' என்றாள் . பக்கி பேரவமானமாக உணர்ந்து நின்று கொண்டே சாப்பிட்டு விட்டு அவ்விடத்தினின்றும் வெளியேறினார்.

கண்காட்சிக்கு வெளியே ஒரு இலக்கியக் கூட்டம் (?)நடந்து கொண்டிருந்தது.
தெலுங்கு, கன்னட கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்தனர். ஸ்லீவ்லெஸ் அணிந்த கன்னடப் பெண் கவிஞர் தன் கவிதையை வாசிக்கும் போது கிட்டத்தட்ட நடனம் ஆடிக் கொண்டிருந்தார். அதில் பக்கிக்கு 'கொத்தில்லா கொத்தில்லா' என்பது மட்டும் புரிந்தது. அதை மொழி பெயர்த்து சொல்லிக் கொண்டிருந்த பெண் 

என்னை 
துலைத்த உன் விழிகல் 
குலத்தின் கரையில் 

என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். ல ள வித்தியாசம் தெரியாதவர்கள் எல்லாம் இலக்கியக் கூட்டத்துக்கு வந்து விடுகிறார்கள் என்று சலித்துக் கொண்டு பக்கி அவ்விடம் விட்டு கோபத்துடன் சாரி அறச் சீற்றத்துடன் வெளியே வந்தார்.

என்னமோ போடா மாதவா என்று விரக்தியுடன் சலித்துக் கொண்டார்.

கண்காட்சியை விட்டு வெளியே போகுமுன் சுண்டல் வாங்கிச் சாப்பிடலாம் என்ற ஆசை அவருக்குள் துளிர் விட்டது. சுண்டல் விற்பவன் டாய்லெட் போய் விட்டு சானிடைசரில் கை கழுவுவானா என்பன போன்ற  மனச்சாட்சியின்  கேள்விகளைப் புறம் தள்ளி விட்டு  சுண்டல் விற்ற பையனை அழைத்தார். ஒரு சுண்டல் குடு என்று பத்து ரூபாயை நீட்டினார்.

அவரை நிமிர்ந்து பார்த்த சுண்டல் பையன் 'சார் , நீங்க எழுத்தாளர் பக்கி தானே'? என்றான்.



சமுத்ரா

What is Mass Hypnosis


Lets start by understanding what mass hypnosis is. Its not the same as stage hypnosis, where people cluck like chickens nor is it some far fetched Manchurian candidate type scenario, where someone gets brainwashed and practically turned into a robotic zombie, however this may well be possible. These two well-known images of hypnosis are pushed into the pop culture and either laughed at as entertainment or ridiculed as being ridiculous.
Also many times I have heard people in the field of hypnosis repeatedly claim that hypnosis is not dangerous and that you cant use it to make people do anything they wouldn't already want to do. Well i can tell you that that is a LIE.
I can also tell you that right now you are in a trance state.
It should surprise you to know that, but it more than likely will make you LOL, but let me explain further.
Even some of the worlds leading hypnotists eg Richard Bandler, the inventor of NLP, have suggested this idea.
First to understand what this permanent trance state is, you need to understand what a trance is.
A trance is something as simple as sitting and staring out the window, when your bored of listening to the teacher etc and your mind drifts off and you get that long distance stare into nothingness. That trance state happens naturally all the time to topple, and you wont be aware of just how many times during the day you actually fall into this state, but next time it happens you will remember this thread.
Now a hypnotist can put you into a similar day dream state as I mentioned, but what happens then is the hypmotist deepens the trance further and further by instructing you to sleep and go deeper and deeper to sleep etc. then once your in a deep trance state the hypnotist gives the sbject instructions...atleast thats one method of hypnosis used in thearaphy sessions.
So how does mass hypnosis affect us? We are not in a trance are we? Yes we are.
from the first day of birth we are conditioned by a set of rules, religion etc, we deveop an ego/personality in response to this external stimuli. now the purpose of the ego is to help us live amongst other people in "society", to interact and work and play etc.
now what the personalty actaully is is a figment of each of our imaginations, something we brought into existance in response to external stimuli and peer pressures.
Much of who we think we are is based on our tastes in music, art political and religious ideologies etc.
for most people these days, the more things they can define themselves as different to everyone else, the better.
This ego explosion is promoted massively by TV and the advertising of a thousand different lifestyles and a billion different branded products and gadgets.
the material society that infact has not made human beings any more fulfilled or happier, infact in the west where we have a mountain of consumerism, people have more mental illnesses than the third world, we also have an endless variety of them to describe ourselfs as different, by as another set of lifestlye options to choose from, anorexic or or bi polar, or ADHD, if you feel crazy the choice is yours to dip in and be any crazy you wanna be, we have every kind of crazy at rock bottom prices.
So what Im saying is the drive to be different and an "individual" is actually a drive into a deeper and deeper trance state, no wonder so many people wind up crazy.
TPTB have every interest in keeping us in this overblown ego state, because it is a trance state and in a trance state its very easy to manipulate the masses.
especially when they dont realise that they are in a trance.
now the reason this is important to understand is because its real. I can prove this by looking at the recent economic crash, especially the housing crash.
people took on impossibly large mortgages, which if they were using their rational mind they would not have done, banks loaned impossibly large mortgages to waitresses etc when logically they also knew that this was a ridiculous idea. However the millions of people who took part in this merry dance were not thinking logically, they were under mass hypnosis.
you see the human mind has to parts, logical thinking and emotional thinking. We all would like to think we make important decisions on logic but infact most of our most important desicions are made on emotion AKA ego.
for example the housing crash, countless relationships that dont work, unsatisfying careers etc, etc, etc and supporting military invasions based on no evidence but an emotional response to 9/11.
Your being manipulated at every turn and you didnt even realise it. but now you have a chance to WAKE UP FOR REAL.
Now we have the ego mania being promoted at full tilt by likley the C.I.A. where we have once rational people falling over themselves to post photographs and personal info all over FACEBOOK and similar sites, where we can even see with our rational minds the security and privacy implications but our emotional heads keeps lapping it up even when it makes no secret that there is facial recognition on every photograph etc, etc, etc.
There is an expression "did we sleepwalk into Big Brother", notice the word sleepwalk.
We need to go the other direction before it gets any worse and realise that we are all human beings and we all have more in common with eachother than the imaginary things that seperate us. if we as people can realise this fact we all will be better off and the small power eliter that has been using us as slaves and pitting us against eachother as a divide and concoure technique, well that elite would dry up and dissapear once it no longer could suck the life blood out of the people of this world.
  ஓஷோ பின்வரும் உளவியல் சோதனையை செய்யச் சொல்கிறார். ஒரு ஏழெட்டு பேர் கொண்ட நண்பர்கள் குழுவில் யாரேனும் ஒரு victim ஐத் தேர்வு செய்யவும். ஒரு நாள் குழுவில் உள்ள மற்ற நண்பர்கள் அவரிடம் 'ஏய் , உனக்கு என்ன ஆச்சு, டல்லா தெரியற? உடம்பு சரியில்லையா' என்று சும்மானாச்சும் கேட்க வேண்டும். முதலில் ஒருத்தர் ரெண்டு பேர் கேட்கும் போது அவர் சும்மா லைட்டாக  விட்டு விடுவார்.அதெல்லாம் இல்லையே . நல்லா தான் இருக்கேன் என்று  அதையே நான்கைந்து பேர் கேட்கும் போது அவர் உண்மையிலேயே களைப்பாக, நோய் வந்தது போல உணர ஆரம்பிக்கிறார். சில சமயம் அவருக்கு உண்மையில் நோய் கூட வந்து விடுகிறது!!! நிறைய பேர் சொல்லும் போது , நிறைய பேர் நம்பும் போது அது உண்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நம் மனம் நம்ப ஆரம்பித்து விடுகிறது. உண்மையில் நாம் நன்றாகத்தான் இருக்கிறோம், 2+2=4 என்று நம் உள் மனதுக்குத்  தெரியும்.ஆனால் இத்தனை பேர் சொல்வதால் ரெண்டும் ரெண்டும் ஐந்தோ ஒருவேளை மாத்திட்டாங்களோ என்று கூட நினைக்கத் தோன்றும்.ஹிட்லரின் mass hypnotism !

கல்யாண்ஜி யின் கவிதை

அடிக்கடி
பார்க்க முடிகிறது யானையைக் கூட
மாதக் கணக்காயிற்று
மண் புழுவைப் பார்த்து


காக்காய் கத்தி
இவ்வளவு நேரம் ஆகிவிட்டது.
காதில் விழவே காணோம்
உப்பு விற்கிறவரின் குரல்,
கோலப்பொடி விற்கிறவரின் குரல்.
என்னவோ ஆகத்தான் போகிறது
இந்த உலகத்துக்கு
இன்றைக்கு.



" உருண்டுகிடக்கிற
ஒரு பாறையின் முன்பக்கத்தை
எப்படித் தீர்மானிப்பது?
கம்பிக் கூடையில்
கடைக்காரர் வைத்திருக்கிற
முட்டைகளில் ஒன்றுக்கு
முன்பக்கம் எதுவென்று
சொல்கிறீர்களா யாராவது.
நாலாபக்கமும் பூத்திருக்கிற
நந்தியா வட்டைக்கு
எது முன்பக்கம்.
சூரியனுக்குப் பின்பக்கம்
என்று சொன்னவன்
சொல்லியிருக்கிறானா
முன்பக்கத்தைப்பற்றி.
கரையில் நிற்கும் நாம்
கடலின் எந்தப்பக்கம் பார்த்துக் கால்களை நனைக்கிறோம்.
பூவரசம்பூவின் பம்பரக்காய்
எந்தப்பக்கத்துத் தரையில்
விழுகிறது.
காற்றின் முன்பக்கம் எது.
இந்த கவிதைக்கு உண்டா
முன்பக்கம் பின்பக்கம்? "
__________________________________________
" மழை உங்களிடம்
இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சை புழுவைக் காணோம் வெகு நாட்களாக.
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக.
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக.
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக் கூடாது என்று தடுத்துவிட்டதாக.
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக.
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன்
மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்.
__________________________________________
"எந்தச் சத்தமும் கேட்காமல் ஒரு கருப்பு இசைத்தட்டு சுழல்கிற  காட்சி இப்போது எனக்கு ஞாபகம் வருகிறது.
இரண்டு சிறகுகள் மாதிரி வெளிச்சம் பிரதிபலிக்க, வழவழப்பான
அரக்குக் கருப்பில், அவ்வப்போது ஒரு அலையில் ஏறி இறங்குகிற படகின் அசைவுடன் அது சுற்றுவது அழகுதான்.
ஒத்துக்கொள்கிறேன்.
ஆனால்
அதன் சத்தமற்ற,
ஒளிபரபப்படாத  மௌனம்
எத்தனை வதை."
__________________________________________
"தனி என்றால்,
நாங்கள் இங்கே இருக்கிறோம்
நீங்கள் அங்கே இருங்கள்.
குறுக்கே வரக்கூடாது
என்பது மாதிரி கூட இல்லை.
அது வேறு மாதிரி.
வெளியே தள்ளிக் கதவைப் பூட்டி,
சாவியையும் கடலுக்குள்
எறிந்தது போல இருக்கும்"
__________________________________________
"இந்த உலகம்
ண்ணத்துப்பூச்சி மயமானது
என்று யாரும் சொல்லவில்லை;
வண்ணத்துப்பூச்சிகளே அற்றது இவ்வுலகு என்று யாரும் சொல்ல முடியாது,
முழுக்க முழுக்க அன்பு அற்றவர்களாகி விட்டோமோ என்ன;
இன்னும் இல்லையே.
இந்த இன்னும் என்ற
வார்த்தைகளின் கீழே
வருபவைகள்தான்
என் கதைகள்"
_________________________________________
"சீட்டுக்கட்டுப்போல
இருளில் தெருவே
கலைந்து கிடக்க,
என் பாதையை நானே பொறுக்கிக்கொள்ள
வேண்டியதாகி விட்டது."
__________________________________________
"...தேவையற்ற இலைகளை உதிரும்படியாக மரமும், தேவையற்ற இறகுகள் உதிரும்படியாகப் பறவைகளும் இருக்கையில்,
-தேவையற்றதெல்லாம் உதிரும் படியாகவே வாழ்வும் இருக்கும்.
நாம் துளிர்க்க அனுமதித்தது போல, உதிர அனுமதிப்போம்.
தாவரமாக இருங்கள்.
விதை முதல் விதை வரை.
சின்னு முதல் சின்னு வரை, எல்லாம் அவ்வளவுதான்.
உங்கள் உள்ளங்கைக்குள் இருட்டு நுழைந்ததுபோல, ஒளியும் நிரம்பியிருக்கிறது என்பது எளிய உண்மை"
__________________________________________
எதிர்பார்க்கவே இல்லை
அந்தக் கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப்  பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்க பட்டிருக்கும் என.
__________________________________________
நெடும்பொழுது
அனைத்தையும்  அணிந்து
நடக்கிறோம்.
சிறுபொழுது
எல்லாவற்றையும் களைந்து
கிடக்கிறோம்.
உயர உயரப் பறக்கிற பறவை
ஓரோர்கணம்
பறக்காமல் மிதக்கிறது.
இப்படிதான் இருக்கிறது
எல்லாமும் .

Monday, October 3, 2016

Mindscape Film


ஒரு 16 வயசு பொண்ணு, பெரும் பணக்காரர் மகள், பேர் அன்னா, தற்கொலை முயற்சி பண்ணுதுன்னும், சாப்பிட மாட்டேங்குதுன்னும், அதை சாப்பிட வைக்கனும்ன்னு சொல்லி கேஸ் ஹீரோ கிட்ட வருது, ஞாபகங்களை கண்டறிய ஒரு நபரின் மனதிற்குள் செல்லும் ஒரு ஸ்பெஷல் சக்தி ஹீரோ கிட்ட இருக்கு...

அந்த பொண்ணுக்கு பேய் பிடிச்சிருக்குன்னு அவங்க அப்பா (அம்மாவின் கணவன்) நம்பறார்... ஏதாவது ஒரு மனநல காப்பகத்துல விடனும்ன்னு துடிக்கிறார்... அந்த பொண்ணு தான் நல்லவள்ன்னும் அவங்க அப்பா அம்மாக்கு தான் ஏதோ பிரச்சனைன்னும் சொல்லுது, அவங்க சாப்பாட்டுல ஏதாவது மருந்து கலந்திருவாங்கன்னு தான் சாப்பிடாம இருக்கேன்னு சொல்லுது...

இந்த பொண்ணு மனசுக்குள்ள போய் பார்த்தா அதோட சின்ன வயசில நடந்த பாலியல் அத்துமீறல்கள் ஹீரோவோட பாஸுக்கு தொடர்பு இருப்பதா காட்டுது..., சமீபத்தில் அந்த பெண்ணை தவறா பயன்படுத்த முயன்ற போட்டோக்ராபி டீச்சர், கூட தங்கியிருந்த ஹாஸ்டல் பொண்ணுங்க... அப்படீன்னு அந்த பொண்ணு மனசை பாதிச்ச பல விசயங்கள் தெரிய வருது..

சின்ன வயசில நடந்த சம்பவங்கள் தான் இப்படி நடந்துக்கிறதுக்கு காரணம் அந்த பொண்ணு மேல எந்த தவறும் இல்லைன்னு கேஸை முடிக்கிறார்....

அப்புறமா ஆரம்பிக்குது புதிர்கள்.. ஹீரோவே மண்டை குழம்பி போகும் அளவுக்கான ட்விஸ்டுகள்.. அவரோட கம்ப்யுட்டர்ல சின்ன வயசு பெண்களின் நிர்வான படங்கள் இருக்கு, யாரோ ஹீரோவை பின் தொடர்ந்துட்டே இருக்காங்க... அன்னா கிட்ட இருந்து மர்ம போன் கால்.. வீட்டுக்கு போனா அன்னாவின் பெற்றோர் சாகும் தருவாயில். கொலை பழி ஹீரோ மேல... அன்னாவை காணோம்..... குழம்பிய குட்டையில கடைசியில யார் இதை எல்லாம் செய்றாங்க அப்படிங்கிற மீன் நமக்கு மட்டும் கிடைக்கும்... ஒரு சைக்கியாட்ரிக் த்ரில்லர்... ஒரு டைம் பாருங்க.. :) படம் பேர் Mindscape / Anna.

 
If the surreal dreamscapes that propelled "Inception" had taken place in the deep, dark and dubious recesses of a disturbed adolescent girl’s mind, it would look a lot like "Anna." It's as messy as a teen’s bedroom and packed with all manner of distracting clutter that needlessly burdens a plot.
This psychological thriller concerns a so-called memory detective, John Washington (played by Guy Ritchie regular Mark Strong, a rugged Jason Statham type but with more soul and less scowling), who can remotely view the flashbacks of his subjects and brilliantly deduce details about their cases. But he has been off his game after suffering a stroke during a session gone awry. That’s on top of grieving over the suicide of his wife.
After a two-year break and depleted funds, he agrees to enter the mind of Anna (Taissa Farmiga, a formidable presence who looks like a mini-me version of older actress sis Vera), a 16-year-old who is both "gifted" and "haunted," as we are so informed. Locked in an upper chamber of an imposing mansion like a Disney princess and kept under constant surveillance, she has been on a hunger strike for a week, has engaged in cutting herself and—perhaps—was involved in questionable acts at her school. His assignment: To pinpoint whether a trauma is at the root of her behavior or if she is a potentially dangerous sociopath who needs to be sent off to an institution.
Naturally, Anna’s family is more Addams than Brady. Her doubting stepdad (her father died before she was born) appears to be having an affair with the housekeeper (who, for some reason, wears a French maid’s outfit straight out of a Halloween catalog) and would control Anna’s inheritance if she is sent away for treatment. Meanwhile, her caring mom drowns her disappointments with drink.
As we tag along on the journeys into Anna’s past, we see possible triggers, including such images as being locked into a closet and bleeding while holding a dripping letter opener. But more troubling is John’s discovery, after doing some actual research, that a teacher had taken inappropriate photos of her and that a fellow student has accused her of a vicious attack.
The saving grace of Anna is the cool, calm and collected air that Strong and Farmiga maintain as he struggles to unearth the truth. Yes, this is a cat and mouse game, a battle of wills where we are to think that the rodent might be in charge. The two actors, who each possess a magnetic screen presence, make for intriguing foils as they challenge one another.
However, it is hard to believe that it takes so long for Strong’s character to even question Anna’s motives, even after the audience does, despite any sympathetic feelings he might have for her as a fellow victim of a damaged psyche. For a supposedly ace sleuth of the subconscious, John is oddly unsuspicious, especially when it appears that Anna might be more fond of him than she should be.
Even more disappointing, instead of any effects that are truly special given the visual opportunities this premise offers, Spanish director Jorge Dorado leans heavily on repeating certain thematic symbols over and over, presumably providing clues, or maybe red herrings, that instead only prove confusing. There is water—rain storms, the sea, tap water overflowing out of tubs and basins, showers, flooded floors; stairs, especially the massive spiral one in Anna’s home. The splashes of the color red materialize on lips, roses, blood, rugs and Anna’s sketches. And clocks—along with a metronome—complete with nervous ticks and tocks. But even with such tricks as quick cuts, shadowy figures, distorted sounds and images, nothing really gets under your skin. 
And, save for the two leads, the performances of the rest of the cast—including, most surprisingly, the usually commanding Brian Cox as John’s boss—are not much better than Lifetime Channel level. What is most frustrating is that Dorado denies us any real element of surprise or revelation as he exposes the pieces of his muddled puzzle.
"I’m not a sociopath," Anna claims. "Just smart enough to think like one." If only "Anna" the movie were that smart, too.
thanks:  rogerebert.com

Sunday, October 2, 2016

இந்த ஒரு பாடலின் தான் ஒட்டு மொத்த மனித வாழ்கையிம் அடங்கி இருக்கிறது


நவராத்திரி சகலகலாவல்லி மாலை


1)வெண் தாமரைக்கு அன்றி நின்பதம் தாங்க என்வெள்ளை உள்ளத்
தண் தாமரைக்குத் தகாது கொலோ சகம் ஏழும்அளித்து
உண்டான் உறங்க ஒழித்தான் பித்தாக உண்டாக்கும் வண்ணம்
கண்டான் சுவைகொள் கரும்பே சகல கலாவல்லியே.

2)நாடும் பொருட்சுவை சொற்சுவை தோய்தர நாற்கவியும்
பாடும் பணியில் பணித்தருள் வாய் பங்கயாசனத்தில்
கூடும் பசும்பொற் கொடியே கனதனக் குன்றும் ஐம்பால்
காடும் சுமக்கும் கரும்பே சகல கலாவல்லியே.


3)அளிக்குஞ் செழுந்தமிழ்த் தெள்அமுது ஆர்ந்துஉன் அருள்கடலில்
குளிக்கும் படிக்குஎன்று கூடும்கொ லோஉளம் கொண்டுதெள்ளித்
தெளிக்கும் பனுவல் புலவோர் கவிமழை சிந்தக்கண்டு
களிக்கும் கலாப மயிலே சகல கலாவல்லியே.


4)தூக்கும் பனுவல் துறைதோய்ந்த கல்வியும் சொற்சுவைதோய்
வாக்கும் பெருகப் பணித்து அருள்வாய் வடநூல் கடலும்
தேக்கும் செழுந்தமிழ்ச் செல்வமும் தொண்டர் செந்நாவில் நின்று
காக்கும் கருணைக் கடலே சகல கலாவல்லியே.


5)பஞ்சுஅப்பு இதம்தரு செய்ய பொற்பாத பங்கேருகம் என்
நெஞ்சத் தடத்து அலராதது என்னே நெடுந் தாள் கமலத்து
அஞ்சத்துவசம் உயர்த்தோன் செந்நாவும் அகமும் வெள்ளைக்
கஞ்சத்து அவிசு ஒத்து இருந்தாய் சகல கலாவல்லியே.


6)பண்ணும் பரதமும் கல்வியும் தீஞ்சொல் பனுவலும் யான்
எண்ணும் பொழுது எளிதுஎய்த நல்காய்! எழுதா மறையும்
விண்ணும் புவியும் புனலும் கனலும் வெங்காலும் அன்பர்
கண்ணும் கருத்தும் நிறைந்தாய்! சகலகலாவல்லியே!


7)பாட்டும் பொருளும் பொருளால்பொருந்தும் பயனும் என்பால்
கூட்டும்படி நின்கடைக்கண் நல்காய்! உளம்கொண்டு தொண்டர்
தீட்டும் கலைத்தமிழ்த் தீம்பால் அமுதம் தெளிக்கும் வண்ணம்
காட்டும் வெள் ஓதிமப் பேடே! சகலகலாவல்லியே!


8)சொல் விற்பனமும் அவதானமும் கவி சொல்லவல்ல
நல்வித்தையும் தந்து அடிமை கொள்வாய் நளின ஆசனம்சேர்
செல்விக்கு அரிதுஎன்று ஒருகாலமும் சிதையாமை நல்கும்
கல்விப் பெருஞ்செல்வப் பேறே சகல கலாவல்லியே.
!

9)சொற்கும் பொருட்கும் உயிராம் மெய்ஞ்ஞானத்தின் தோற்றம்என்ன
நிற்கின்ற நின்னை நினைப்பவர் யார்? நிலம்தோய் புழைக்கை
நற்குஞ்சரத்தின் பிடியோடு அரசன்னம் நாண நடை
கற்கும் பதாம்புயத் தாளே! சகலகலா வல்லியே!


10)மண்கண்ட வெண்குடைக் கீழாக மேற்பட்ட மன்னரும் என்
பண்கண்ட அளவில் பணியச் செய்வாய்! படைப்போன் முதலாம்
விண்கண்ட தெய்வம் பல்கோடி உண்டேனும் விளம்பில் உன்போல்
கண்கண்ட தெய்வம் உளதோ? சகலகலா வல்லியே!



மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

நாமணக்க பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய்
மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்

வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாய்
எங்கள் உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே என்றும்
அள்ளி அறிவைத் தரும் அன்னையும் நீ

வாணி சரஸ்வதி மாதவி பாரதி வாகதீஸ்வரி மாலினி
காணும் பொருளில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி
நான்முகன் நாயகி மோகனரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கமுதே தேனருள் சிந்தும்
கான மனோகரி கல்யாணி

அருள்வாய் நீ இசை தர வா நீ
இங்கு வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா

மாணிக்க வீணை ஏந்தும் மாதேவி கலைவாணி
தேன் தமிழ் சொல்லெடுத்து பாட வந்தோம்
அம்மா பாட வந்தோம்...



நவராத்திரியின் 9 நாட்களிலும் அம்பிகையின் சக்தி பிரவாகமாய் பரவி இருக்க அதனை நம்முள் பெற்றுக் கொள்ளும் பூஜையாகக் கொண்டாடப்படுகின்றது.
நவராத்திரிக்கு கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்
நவராத்திரி சரிதத்தினை முனிவர் நாரதர் சொல்லி ஸ்ரீ ராமபிரான் கடை பிடித்து சண்டிஹோமம் செய்து அம்பிகையின் அருளை பெற்று ராவணனை யுத்தத்தில் வென்றதாக புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
துர்க்காதேவி மகிஷாசுரனுடன் (அரக்கன்) 9 நாட்கள் போரிட்டு வென்று மகிஷாசுர மர்த்தினி என்ற பெயரினை பெற்றதாக வரலாற்று கூற்றும் வழிபாடும் உள்ளது.
நவராத்திரியின் 9 நாட்களிலும் அம்பிகையின் சக்தி பிரவாகமாய் பரவி இருக்க அதனை நம்முள் பெற்றுக் கொள்ளும் பூஜையாகக் கொண்டாடப்படுகின்றது. மாயையின் பிடியில் சிக்கும் நாம் அதிலிருந்து நம்மை விடுவித்துக் கொள்ளும் விரத பூஜையாக நவராத்திரி அமைந்துள்ளது.

9 நாளும் ஏதோ ஒரு முறைப்படி விரதம் இருப்பவர்களும் உண்டு. பூஜைகளுக்கு விதிமுறைகளும் உண்டு
பூஜை செய்பவர் சந்தனம், குங்குமத்தினை வலது கை மோதிர விரலால் மட்டுமே இட்டுக் கொள்ள வேண்டும்.
வாசனை மிகுந்த மலர்களால் பூஜிக்க வேண்டும். பூக்களை நாம் முகர்ந்து பார்க்கக் கூடாது.
மல்லிகை, ஜாதி மல்லி, செண்பகம், மனோரஞ்சிதம், தாமரை, வெள்ளை மற்றும் சிகப்பு அரளி, பவழ மல்லி, ரோஜா, மரிக்கொழுந்து, கதிர் பச்சை போன்ற மலர்களை மிக சுத்தமானதாக பயன்படுத்த வேண்டும்.
பூக்களின் தண்டு பகுதி அம்பாள் பக்கம் இருக்க வேண்டும்.
படம், விக்ரகங்களில் அணிவிக்கப்படும் பூ மாலைகள் கண், காது போன்ற பகுதிகளை மறைக்காது இருக்க வேண்டும். உறுத்தாமலும் இருக்க வேண்டும்.
தாழம் பூவினை முட்கள் இல்லாது வெட்டி உபயோகிக்க வேண்டும். தாமரை போன்ற பெரிய பூக்களை 1, 9 அதன் விரிவாக்கம் என்ற முறையில் சமர்ப்பிக்க வேண்டும்.
பூக்களை அர்ச்சனையின்போது அம்பிகை இருப்பதனை மனதால் உணர்ந்து பய பக்தியுடன் நிதானமாய் பாதத்தில் சேர்க்க வேண்டும். குச்சி, காம்பு, காய்ந்த பூ, மண் இவை தவறி கூட இருந்து விடாமல் மிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
நறுமணமான ஊதுவத்தி, தூப சாம்பிராணிகளை பயன் படுத்துங்கள். வசதிக்கேற்ப செய்தாலும் போதும். ஆனால் தரமானதாக இருக்கட்டும்.
ஊதுவத்தியினை ஆள்காட்டி, கட்டை விரல் நடுவே பிடித்து இடமிருந்து வலமாக மூன்று முறை முழு வட்டமாக சுற்றி பூஜிக்க வேண்டும்.
ஆரத்தி காண்பிப்பது நெய் தீபத்திலும், ஏகமுகமாகவும் பஞ்சமுகமாகவும் காண்பிப்பது சிறப்பு. ஆரத்தியின்போது இரண்டு வரிகளாவது அம்பிகையைப் பற்றி பாட வேண்டும். அம்பிகை காணப்பிரியை.
வீணை போன்ற அனைத்து இசை வாத்தியங்களுமே அம்பிகைக்கு பிரியமானவைதான். அதனால்தான் நவராத்திரி காலங்களில் பாட்டு, நடனம், வாத்திய கச்சேரிகள் நடைபெறுகின்றன.
அம்பாளுக்கு புடவை, சட்டை துணி, வளையல், குங்குமம், வெற்றிலை, பாக்கு என பல சீர் வரிசைகள் வைத்து பல வகை உபசாரங்களை செய்து வழிபடுவது மிக விசேஷம்.
வீட்டில் பூஜை செய்யும்போது 10 வயதிற்கு கீழ் உள்ள பெண் குழந்தைகளை அழைத்து அவர்களை கோலமிட்ட மனை மீது உட்கார வைக்க வேண்டும். காலில் நலங்கிட்டு, சந்தன, குங்குமம் கொடுத்து, தலைக்கு பூ வைத்து அக்குழந்தைக்கு பிடித்த சாப்பாட்டினை இனிப்புகளோடு கொடுக்க வேண்டும். பின் தாம்பூலம் கொடுத்து சக்திக்கு ஏற்ப பாவாடை, சட்டை என்று கொடுப்பது அம்பிகையின் ‘பாலா’ எனும் சக்திமிகுந்த ரூபத்தினை வழிபடுவதாகும்.
நவராத்திரி நாட்களில் எவ்வாறெல்லாம் எளிதாகவும், சக்தியாகவும் அம்பிகையை வழிபடலாம் என்று பார்க்கலாம்.

நாள் – 1, திதி – பிரதமை :
அம்பிகை: மகேஸ்வரி
பூ: மல்லிகை
நைவேத்தியம் : வெண் பொங்கல்
கோலம்: அரிசி மாவில் புள்ளி வைத்த கோலம்
ராகம்: தோடி
ஸ்லோகம்: ஓம் ஸ்வேத வர்ணாயவித்மஹே
சூல ஹஸதாய தீமஹி
தன்னோ மஹேஸ்வரி ப்ரசோதயாத்
நாள் – 2, திதி – துவதியை :
தேவி: கவுமாரி
பூ: செவ்வரளி
நைவேத்தியம் : புளியோதரை
கோலம்: ஊற வைத்த பச்சரிசியினை நைய அரைத்து இழை கோலம்
ராகம்: கல்யாணி
ஸ்லோகம்: ஓம் சிகி வாஹனாய வித்மஹே
சக்தி ஹஸ்தாய தீமஹி
தன்னோ கௌமாரி ப்ரசோத யாத்
நாள் – 3, திதி – திரிதியை :
தேவி: வாராஹி
பூ: சம்பங்கி
நைவேத்தியம் : சர்க்கரைப் பொங்கல்
கோலம்: மலர் கோலம்
ராகம்: காம்போதி
ஸ்லோகம்: ஓம் மஹிஷத்வஜாய தீமஹி
தண்ட ஹஸ்தாய வித்மஹே
தன்னோ வாராஹி பரசோதயாத்
நாள் – 4, திரி – சதுர்த்தி :
தேவி: லட்சுமி
பூ: ஜாதி மல்லி
நைவேத்தியம் : கதம்பசாதம்
கோலம்: மஞ்சள் கலந்த அரிசி கொண்டு படிகட்டு கோலம்
ராகம்: பைரவி
ஸ்லோகம்: பத்ம வாசின்யைச் வித்மஹே
பதமலோசனி ஸ தீமஹி
தன்னோ லட்சுமி ப்ரசோதயாத்.
நாள் – 5, திதி – பஞ்சமி :
தேவி: வைஷ்ணவி
பூ: பாரிஜாதம், முல்லை.
நைவேத்தியம் : தயிர் சாதம்
கோலம்: கடலை மாவில் பறவை கோலம்
ராகம்: புன் வைராளி, பஞ்சமவர்ண கீர்த்தனை
ஸ்லோகம்: ஓம் ஸ்யாமவர்ணாயை வித்மஹே
சக்ர ஹஸ் தாயை தீமஹி
தன்னோ வைஷ்ணவி பிரசோதயாத்
நாள் – 6, திதி – சஷ்டி :
தேவி: இந்திராணி
பூ: செம்பருத்தி
நைவேத்தியம் : தேங்காய் சாதம்
கோலம்: அம்பிகையின் பெயரினை கடலை மாவில் எழுதுங்கள்.
ராகம்: நீலாம்பரி
ஸ்லோகம்: ஓம் கஜத்வஜாய வித்மஹே
வஜ்ர ஹஸ் தாய தீமஹி
தந்நோ இந்த்ரி ப்ரசோதயாத்.
நாள் – 7, திதி – சப்தமி :
தேவி: சரஸ்வதி
பூ: மல்லிகை, முல்லை
நைவேத்தியம் : எலுமிச்சை சாதம்
கோலம்: வாசனைப் பூக்களால் கோலமிடுங்கள்
ராகம்: பைரவி
ஸ்லோகம்: ஓம் வாக் தேவ்யை வித்மஹே
விரிஞ்சி பத்நைச தீமஹி
தந்நோ வாணி ப்ரசோதயாத்
நாள் – 8, திதி – அஷ்டமி :
தேவி: துர்கா
பூ: ரோஜா
நைவேத்தியம் : பாயசம்
கோலம்: தாமரைப் பூ கோலம்
ராகம்: புன்னாகவராளி
ஸ்லோகம்: ஓம் மஹிஷ மர்தின்யை வித்மஹே
துர்கா தேவ்யை தீமஹி
தன்னோ தேவி பிரசோதயாத்
நாள் – 9, திதி – நவமி :
தேவி: சாமுண்டி
பூ: தாமரை
நைவேத்தியம் : அக்காரவடிசல்
கோலம்: வாசனை பொடிகளால் ஆயுதம் போல் (சூலம்)
ராகம்: வசந்த ராகம்
ஸ்லோகம்: ஓம் கிருஷ்ண வர்ணாயை வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ சாமுண்டா ப்ரசோதயாத்
விஜயதசமி – திதி – தசமி :
தேவி: வித்யா
பூ: மல்லிகை, ரோஜா
நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், இனிப்புகள்.
ஸ்லோகம்: ஓம் விஜய தேவ்யை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ தேவி ப்ரசோதயாத்
பிரபஞ்ச சக்தி, பிரபஞ்சத்தினை தாண்டிய, கண்ணுக்குத் தெரியாத மகா ஆதி சக்தியினை எப்படி வழிபட்டாலும் உயர்வு தேடி வரும்.

Archaeologists Unearth Tomb Of Genghis Khan

Öndörkhaan| Construction workers employed in road building near the Onon River in the Khentii province of Mongolia, have discovered a mass grave containing the remains of many dozens of human corpses lying upon a large rudimentary stone structure. Forensic experts and archaeologists were called on the site, which was revealed to be a Mongolian royal tomb from the 13th century that the scientists believe to be Genghis Khan’s.

 

The team of scientists affiliated with the University of Beijing, has concluded that the numerous skeletons buried on top of the structure were most likely the slaves who built it and who were then massacred to keep the secret of the location. The remains of twelve horses were also found on the site, certainly sacrificed to accompany the Great Khan in death.

A total of 68 skeletons were found buried together, almost directly over the top of a rather crude stone structure.
The content of the tomb was scattered and badly deteriorated, presumably due to the fact that the site was located beneath the river bed for hundreds of years, until the course of the Onon river changed in the 18th century. The remains of a tall male and sixteen female skeletons were identified among hundreds of gold and silver artefacts and thousands of coins. The women are presumed to have been wives and concubines of the leader, who were killed to accompany the warlord in the afterlife.
The amount of treasure and the number of sacrificed animals and people, have immediately led the archaeologists to consider that the site was certainly the burial site of a really powerful Mongol warlord. After realizing an extensive set of tests and analysis, they were able to confirm that the body belonged to a man aged between 60 and 75, who died between 1215 and 1235 AD. Both the age, the date, the location and the opulence of the site seem to confirm that the tomb does indeed belong to Genghis Khan.
Thanks http://unearth.info