Search This Blog

Tuesday, May 31, 2016

பஞ்ச பட்சி சாஸ்திரம்

நட்பு பட்சியாக உள்ளவர்களுடன் கூட்டு சேர்வது நன்மை பயக்கும். பகை உள்ளவர்களிடம் சற்று தள்ளியே இருப்பது நல்லது.
“அண்டத்தில் உள்ளதெல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பது சித்தர்களின் வாக்கு. பிரபஞ்சமானது பஞ்ச பூதங்களாலானது என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள். அது போல் மனித உடலானது பஞ்ச பூதங்களாலானது என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்.
ஜோதிட சாஸ்திரத்தில் சந்திரனுக்கு உடல் காரகன்,மனோக்காரகன் என்று பெயர்.மனித உடலிலும்,மனதிலும் ஏற்படும் மாற்றங்களுக்கு சந்திரனின் சுழற்சியே காரணம் என்பதை சித்தர்கள் கண்டறிந்தார்கள்.மனிதர்களின் உடற்கூறு அவர்கள் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்கு தகுந்தாற்போல் அமைந்தூள்ளது என்பதையும் கண்டறிந்தார்கள். உடலை இயக்குவது உயிர் காந்த ஆற்றலாகும். அந்த உயிர் காந்த ஆற்றாலானது சந்திரனினின் சுழற்சிக்கு தகுந்தார்போல் சில நேரங்களில் வலிமையடைவதையும்,சில நேரங்களில் வலுவிழந்துபோவதையும் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் எளிதில் நிறைவேறுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, எண்ணிய எண்ணங்கள் நடைபெறாமல் தடைபடுவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள்.
உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமையாக இருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை கூடுவதையும், உடலில் உயிர்காந்த ஆற்றல் வலிமை குன்றியிருக்கும்போது, உடல் வலிமை,மனவலிமை குறைவதையும் அனுபவத்தில் கண்டறிந்தார்கள். உடலில் ஏற்படும் இத்தகை மாற்றங்கள் ஒரு குறிப்பிட்ட கால சுழற்சியில் இயங்குகிறது என்பதையும்,அந்த கால சுழற்சிக்குத்தகுந்தார் போல் செயல்பட்டால் வாழ்க்கையில் எப்பொழுதும் வெற்றி நடை போடலாம் என்பதையும் மானிடர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு அதை பஞ்ச பட்சி சாஸ்திரம் என்னும் தலைப்பில் உலகுக்கு வெளிப்படுத்தினார்கள்.
“பஞ்ச”என்றால் “ஐந்து” என்று பொருள். “பட்சி” என்றால் “பறவை” என்று பொருள். “சாஸ்திரம்” என்றால் “எழுதப்பட்டவைகளை செயல்படுத்திப்பார்த்தால் உண்மை விளங்கும்” என்று பொருள்.

பஞ்ச பட்சிகள் என்பவை வல்லூறு,ஆந்தை,காகம்,கோழி,மயில் ஆகிய ஐந்து பறவைகளாகும்.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தில் ஜென்ம நட்சத்திரம் தெரிந்தவர்களுக்கு ஜென்ம நட்சத்திர அடிப்படையிலும், ஜென்ம நட்சத்திரம்தெரியாதவர்களுக்கு அவரவர்களுடைய பெயரின் முதல் எழுத்தில் அமைந்துள்ள உயிர் எழுத்தின் அடிப்படையிலும் பட்சி நிர்ணயம் செய்யப்படுகிறது.
தமிழ் எழுத்துக்களை சித்திர எழுத்துக்கள் என தமிழறிஞர்கள் குறிப்பிடுவர். தமிழ் உயிர் எழுத்துகளில் குறில் வடிவமுடைய “அ,இ,உ,எ,ஒ” ஆகிய ஐந்து எழுத்துக்கள் என்ன வடிவத்தில் அமைந்துள்ளனவோ,அதே வடிவத்தையொத்த பறவைகள் பஞ்ச பட்சிகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
அ - வல்லூறு
இ - ஆந்தை
உ - காகம்
எ - கோழி
ஒ - மயில்.

மனித உடல் பஞ்ச பூதங்களால் ஆனது,அந்த பஞ்ச பூதங்களின் செயல் பாட்டையே,பஞ்ச பட்சி சாஸ்திரம் விளக்குகிறது.
நிலம் - வல்லூறு
நீர் - ஆந்தை
நெருப்பு - காகம்
காற்று - கோழி
ஆகாயம் - மயில்.

பஞ்ச பூதங்களைக்கட்டுப்படுத்தும் ஆற்றல் பஞ்சாக்ஷரம் என்னும் சிவ மந்திரத்திரத்திற்கு உண்டு. எனவே பஞ்சாக்ஷரம் ஜெபிப்பவனை யாராலும் வெற்றிகொள்ள முடியாது என்பதை இந்த சாஸ்திரம் ரகசியமாக வெளிப்படுத்துகிறது.
ந - வல்லூறு
ம - ஆந்தை
சி - காகம்
வ - கோழி
ய - மயில்.

பஞ்சாக்ஷர மந்திரத்திற்குரிய தேவதையான சிவபெருமானே,இந்த பஞ்ச பட்சி சாஸ்திரத்தை முதலில் தன் குமரனான முருகப்பெருமானுக்கு அசுரர்களை அழிக்கும் பொருட்டு உபதேசித்தார் எனவும்,முருகன் அதை அகத்தியருக்கு உபதேசித்தார் எனவும்,அகத்தியர் பதினென் சித்தர்களுக்கு உபதேசித்தார் எனவும் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
பஞ்ச பட்சி சாஸ்திரத்தின் உதவியுடன் கீழ்கண்ட காரியங்களை செய்யலாம்.
1) உடலிலிருந்து நோய் நீக்குதல்
2) பிறர் உடலில் நோயை உண்டாக்குதல்
3) மனோவிகாரங்களிலிருந்துதன்னை தற்காத்துக்கொள்தல்
4) பிறர் மனதை கட்டுப்படுத்துதல்
5) எண்ணிய எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்தல்
6) பிறர் எண்ணங்கள் நிறைவேறாமல் தடுத்தல்
7) போட்டிகளில் வெற்றியடைதல்
8) எதிரிகளை வெல்லுதல்
9) தாம்பத்தியஉறவில் பெண்ணை திருப்திபடுத்துதல்
10) ஆருட பலன் கூறுதல்
11) கிரக தோசங்களுக்கு பரிகாரம் செய்தல்
12) சுப காரியங்களுக்கு நல்ல நேரம் தேர்ந்தெடுத்தல்
13) வர்மம் நீக்குதல்,வர்மத்தால் எதிரிகளைதாக்குதல்


முதலில் யாருக்கு என்ன பட்சி என்று பார்ப்போம்.
ஒருவரின் நட்சத்திரத்தின் மூலம் பட்சியை நிர்ணயிக்கலாம். இது நட்சத்திரப் பட்சி எனப்படும். அவை கீழ் கண்டவாறு:-
வல்லூறு
அஷ்வினி,பரணி,கார்த்திகை,ரோகிணி,மிருகசீரிஷம்
ஆந்தை
திருவாதிரை,புனர்பூசம்,பூசம்,ஆயில்யம்,மகம்,பூரம்
காகம்
உத்தரம்,ஹஸ்தம்,சித்திரை,சுவாதி,விசாகம்
கோழி
அனுஷம்,கேட்டை,மூலம்,பூராடம்,உத்ராடம்
மயில்
திருவோணம்,அவிட்டம்,சதயம்,பூரட்டாதி,உத்ரட்டாதி,ரேவதி
இதுதான் பரவலாக பயன்படுத்தப் பட்டு வருகிறது. நட்சத்திரம் தெரியாதவர்கள் பெயரின் முதல் எழுத்தை வைத்து தங்களுடைய (அல்லது பிறருடைய) பட்சிகளை முடிவு செய்யலாம். இவை அட்சரப் பட்சிகள் எனப்படும்.
வளர்பிறை
அ, ஆ - வல்லூறு (ராமன், கலைவாணன் இப்படி, அதாவது ராமன் என்னும் பெயரில் ரா முதல் எழுத்து. அதை ர் + ஆ என்று பிரிக்கலாம். அதே போல் கலைவாணன் என்னும் பெயரில் முதல் எழுத்து க. இதை க் + அ என்று பிரிக்கலாம். இப்படியே மற்ற எழுத்துகளுக்கும் பார்த்துக் கொள்ளலாம்.)
இ, ஈ - ஆந்தை
உ, ஊ - காகம்
எ, ஏ - கோழி
ஒ, ஓ - மயில்
தேய்பிறை
அ, ஆ - கோழி
இ, ஈ - வல்லூறு
உ, ஊ - ஆந்தை
எ, ஏ - மயில்
ஒ, ஓ - காகம்
ஒருவர் தொழில் நிமித்தமாகவோ வேறு எதற்காகவேனும் தங்களுடைய பட்சியின் நிலையறிந்து செயல்பட்டால் அதில் வெற்றி நிச்சயம் பெறலாம். இந்த பட்சிகளின் தொழில்கள் என்று அரசு, ஊண், நடை, துயில், சாவு என்று நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலைகளில் பட்சிகளின் பலம் கீழ் கண்டவாறு இருக்கும் என்று சொல்லலாம்
அரசு - 100% பலம்
ஊண் - 80% “
நடை - 50% “
துயில் - 25% “
சாவு - 0% “
ஒவ்வொரு பட்சிக்கு பகல்/இரவு நேரம் 5 பிரிவாக பிரிக்கப் பட்டு அந்த நேரத்தில் மேற்கண்ட எந்த நிலையில் இருக்கிறது என்று சொல்லப் பட்டிருக்கிறது.
இது தவிர இந்த பட்சிகளுக்கு மிகவும் பலவீனமான நாட்கள் (செயல் இழந்து விடும் நாட்கள் - Death Days) என்று இருக்கிறது. இவை படுபட்சி நாட்கள் எனப்படும். இந்த நாட்களில் எந்த முக்கியமான வேலை, புது முயற்சி, சுப காரியம், பிரயாணம், மிகவும் Riskஆன ஆப்பரேஷன், மருத்துவ சிகிச்சை இவை மேற்கொள்ளாமல் இருப்பது நல்லது. இவை பகல், இரவு இரண்டு வேளைகளுக்கும் பொருந்தும்.
வளர்பிறை - படுபட்சி நாட்கள்
வல்லூறு - வியாழன், சனி
ஆந்தை - ஞாயிறு, வெள்ளி
காகம் - திங்கள்
கோழி - செவ்வாய்
மயில் - புதன்
தேய்பிறை படுபட்சி நாட்கள்
வல்லூறு -செவ்வாய்
ஆந்தை -திங்கள்
காகம் -ஞாயிறு
கோழி -வியாழன், சனி
மயில் -புதன், வெள்ளி
அடுத்து இந்த பட்சிகளுக்கு ஊண் பட்சி நாட்கள் (Ruling Days) என்று இருக்கின்றன. அந்த நாட்களில் அந்த பட்சி பலமாக இருக்கும். முன்பு சொன்ன படு பட்சி நாட்களுக்கு நேர் எதிரானது. மேலே விலக்கச் சொன்ன எல்லாக் காரியங்களையும் மேற்கொள்ள ஏதுவான நாள். இவை படு பட்சி நாட்கள் போல் இல்லாமல் பகல் இரவு இரு வேளைகளுக்கும் வெவ்வேறாக இருக்கும். அவை கீழ்கண்டவாறு:-
வளர்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு - ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன், திங்கள்
காகம் - வியாழன்
கோழி - வெள்ளி
மயில் - சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு - வெள்ளி
ஆந்தை -ஞாயிறு
காகம் -ஞாயிறு, செவ்வாய்
கோழி - திங்கள், புதன்
மயில் -வியாழன்
தேய்பிறை
பகல் - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -வெள்ளி
ஆந்தை - வியாழன்
காகம் -புதன்
கோழி - ஞாயிறு, செவ்வாய்
மயில் - திங், சனி
இரவு - ஊண்பட்சி நாட்கள் (Ruling Days)
வல்லூறு -ஞாயிறு, செவ்வாய்
ஆந்தை - புதன்
காகம் - வியாழன்
கோழி - திங்கள், சனி
மயில் -வெள்ளி
இந்த படு பட்சி நாட்களில் உங்களுடைய பட்சி குறிப்பிட்ட நேரத்தில் அரசு என்ற நிலையில் இருந்தாலும் எந்த பிரயோஜமும் இல்லை. அதே நேரத்தில் ஊண் பட்சி நாட்களில் சாவு என்ற நிலையில் இருந்தாலும் அது பலமிழந்ததாக ஆகாது.
அடுத்து பட்சிகளின் பொதுவான பல நிர்னயங்களைப் பார்ப்போம். பட்சிகளின் பலம் இறங்குமுகமாக கீழ் கண்டவாறு:
1) காகம்
2) ஆந்தை
3) வல்லூறு
4) கோழி
5) மயில்
அதாவது காகம் எல்லாவற்றிலும் பலமிக்கது என்றும் மயில் மிகவும் பலவீனமானது என்று இதன் மூலம் முடிவுக்கு வரலாம்.
இது எதற்கு என்றால் உங்களது பட்சி மயில் என்று வைத்துக் கொள்வோம். உங்கள் பட்சியை விட பலமான ஆந்தை, காகம் இவற்றைத் தங்களது பட்சியாகக் கொண்டுள்ளவர்களுடன் நீங்கள் போட்டி போட்டு ஜெயிப்பது கடினம். ஆனால் பலவீனமான உங்கள் பட்சிக்கு ஊண் பட்சி நாட்களாக இருந்து, எதிராளியின் பட்சி படு பட்சியாக இருந்தால் உங்களுக்குதான் வெற்றி. இதை தற்காப்புக்காக பயன் படுத்தலாம் என்பதற்காகச் சொல்கிறேன். பிறருக்கு தீங்கு செய்வதற்காக அல்ல.
அந்த கால கட்டத்தில் எதிராளிக்கு பில்லி, சூனியம், ஏவல் செய்பவர்கள், அல்லது ஏதாவது ஒரு வகையில் கெடுதல் செய்ய நினைப்பவர்கள், பஞ்ச பட்சி தெரிந்தவர்களிடம் கேட்டு தனக்கு ஊண் பட்சி நாளும், எதிராளிக்கு படு பட்சி வரும்படி பார்த்துக் கொள்வார்கள். அல்லது பஞ்ச பட்சி தெரிந்தவர்கள் தங்களை நாடி வருபவர்களிடம் இந்த நாட்களைத் தேர்ந்தெடுத்து சொல்வார்கள். தீமைக்கு மட்டுமல்ல. நல்ல காரியங்களுக்கும் பயன்படுத்தலாம். பயன்படுத்த வேண்டும்.
தனக்கு சாதகமாக காரியம் சாதித்துக் கொள்ள நினைப்பவர்கள், (வீண், வம்பு, வழக்கு என்று மாட்டிக் கொண்டவர்கள், அதிகாரிகளைச் சந்தித்து உதவி கேட்க நினைப்பவர்கள்) இந்த பட்சியின் நிலையறிந்து நடந்தால் நன்மை அடையலாம். ஊண் பட்சி நாட்களில் வேலைக்கு மனு செய்தால் சாதகமான பதிலை எதிர் பார்க்கலாம்.
படு பட்சி நாட்கள் என்பது மிகவும் மோசமான பலன்களைக் கொடுக்கக் கூடியது என்று பார்த்தோம். இதனுடைய கொடிய பலன்களிலிருந்து தப்பிக்க ஒரு பரிகாரம் சொல்லியிருக்கிறார்கள். ஓம் நமசிவய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபம் செய்து விட்டு சென்றால் அதன் கடுமை குறையும் என்று. (இதை மசிவயந, சிவயநம, நசிவயம என்று 125 வகையில் மாற்றி சொல்லலாம். பலன் ஒன்றுதான்.) ஆயினும் முழுமையாக படு பட்சி நாளின் கடுமையை கட்டுப்படுத்தி விட முடியாது என்பது என் கருத்து.
நாளும் கோளும் சிவனடியார்களை ஒன்றும் செய்து விட முடியாது என்று கோளறு திருப்பதிகத்தைப் பாடி தன் பயணத்தைத் தொடர்ந்த திருஞானசம்பந்தரே அதன் பிடியில் இருந்து தப்ப முடியாமல் போய் விட்டது. நாமெல்லாம் எம்மாத்திரம்.
பறவைகள் ஐந்து. அதன் தொழில்கள் ஐந்து என்று ஏற்கனவே பார்த்தோம். எந்த பறவை எந்த நாளில் எந்த நேரத்தில் என்ன தொழில் செய்யும் என்று பார்ப்போம். ஒரு நாளில் மொத்தம் 24 மணி = 60 நாளிகை. பகல் = 30 நாளிகை, இரவு = 30 நாளிகை. அது ஐந்து பறவைகளுக்கும் ஐந்து பிரிவாக பிரிக்கப்பட்டு பகல் (அல்லது இரவில்) தன் தொழிலைச் செய்ய ஒவ்வொரு பறவையும் 6 நாழிகைகள் எடுத்துக் கொள்ளும். 6 நாழிகைகள் என்பது 2 மணி 24 நிமிடங்கள். முதல் 6 நாழிகை ஊண் என்றால் அடுத்த 6 நாழிகை நடை அல்லது வேறு ஒரு தொழில் என்று வரும்.
உண்மையில் உற்றுக் கவனித்தீர்களானால் வளர் பிறை பகல் தொழில் முறையே ஊண், நடை, அரசு, துயில், சாவு என்று வரும். இரவு ஊண், அரசு, சாவு, நடை, துயில் என்று வரும். அதே போல் தேய்பிறை பகல் ஊண், சாவு, துயில், அரசு, நடை என்றும் இரவில் ஊண், துயில், நடை, சாவு, அரசு என்ற இந்த வரிசையில் வரும். எல்லா பட்சிகளுக்கும் வளர்/தேய் பிறைகளில் ஞாயிறு செவ்வாய், ஒரே மாதிரியான தொழில் இருக்கும். வளர் பிறைகளில் திங்கள், புதன் தேய்பிறைகளில் திங்கள், சனி, பட்சிகளின் தொழில் ஒரே மாதிரி இருக்கும். மற்ற கிழமைகளில் அந்தந்த கிழமைக்கு தகுந்தாற்போல் மாறி வரும்.

அதிகம் குழப்ப விரும்பவில்லை. கீழே ஒரு அட்டவணை தந்திருக்கிறேன் அதைப் பார்த்துக் கொள்ளுங்கள். சூரிய உதயம் காலை 6 மணி என்ற நிலையில் இதைத் தந்திருக்கிறேன். நீங்கள் இருக்கும் நாட்டில் சூரிய உதயம் 6.30 மணி என்றால் அந்த நேரத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஊண் பட்சி நாட்களை மஞ்சள் நிறத்திலும், படு பட்சி நாட்களை சிவப்பு நிறத்திலும் இரண்டும் கலந்து வந்தால் ஆரஞ்சு நிறத்திலும் highlight செய்து உள்ளேன்.











பல கண்ணீர்களின் கதை....


Monday, May 30, 2016

One chip to rule them all? The Internet of Things and the next great era of hardware . The challenge in the SoC paradigm.

Cecile G. Tamura
It’s been almost 10 years since Apple unveiled the iPhone. Since that day, the smartphone has been the overwhelming driver of innovation in the technology industry. Cameras, Wi-Fi, batteries, touch sensors, baseband processors and memory chips — in less than a decade, these components have made stunning advances to keep up with consumer demand to have sleeker, more powerful devices every year.


For chip makers, the pressure has been to produce smaller, more powerful components for each generation of phones. Denser, faster, cheaper — these mantras have driven our industry for as long as most people can remember.
But there’s a new game in town. The smartphone era is not over, but the growth rate is slowing. The key growth driver in hardware could soon be the Internet of Things. Over the next decade, this industry will churn out tens of billions of connected sensor devices. These will be used in every corner of the world — from highways to arteries — to gather new insights to help us live and work better.
This chapter will reshape the technology hardware industry in profound ways, and even reverse many of the changes brought about by the smartphone era. To understand how profound this shift could be, it’s important to know how past markets have shaped the way computers are built.
It started with the circuit board
Just a few short decades ago, computers filled entire rooms. In these early days, manufacturers produced each component separately and wired them together on a circuit board. You’d have memory in one part of the board, logic processing on another side, maybe a radio in the corner. Wires or copper traces connected each piece, and components could be easily added or removed from the system.
The “System on a Board” configuration worked for a while. But then computers began to shrink as scientists engineered smaller and smaller transistors. Transistors are like electric switches — the fundamental building blocks of modern computing.
In 1965, Gordon Moore, the founder of Intel, made a famous prediction (misleadingly labeled a “law”): Every 18-24 months, engineers would fit about twice as many transistors on a particular piece of silicon. Computer components started shrinking fast, and suddenly a lot of free space opened up on circuit boards.
The master chip
Engineers soon began to experiment with putting multiple functions on a single piece of silicon. Before long, they could get a whole computer onto that one piece of silicon, wrap it up nicely and market it as a single, all-inclusive package.
We call this “System on a Chip” (SoC). You probably have one in your smartphone. This tight integration of components carries some big advantages. With components packed closer together, signals can travel between them more quickly, which can increase processing speed.
SoCs are frequently cheaper too; instead of testing many components independently, you could run one set of tests on a single chip. And, of course, size matters. The consolidated package helped manufacturers like Apple and Samsung produce new generations of lighter, sleeker devices.
But there’s a big drawback. SoCs are manufactured on common process platforms in large manufacturing facilities called “fabs.” These mega-factories are able to produce hundreds of millions of chips per month.
The challenge in the SoC paradigm is that all the components in a single chip (processor, radio, memory, etc.) are locked into a single manufacturing process, which does not always provide the “best in class” for each component. For example, one process platform may be excellent for processors, but just mediocre for embedded flash memory. And it’s difficult to upgrade or switch out components individually without upgrading the entire fab.
For smartphones, and many other applications, the benefits of an integrated SoC generally outweigh this drawback. However, the emergence of a new hardware era introduces a new set of challenges for chip makers.
New rules in the era of “things”
Let’s look at the Internet of Things. This is the hardware industry of the future, and it will run on billions of sensor devices. But the problem is, these devices will exist in all sorts of environments. Some will live in factories; some will be outside; some will collect data underwater. The basic functionality of these smart nodes is very similar (sense data, collect data, store data, communicate data); however, the deployment requirements vary greatly.
A sensor node in a car engine, for example, will need to withstand high temperatures. Sensor nodes spread across farmland might require powerful radio components to send data over long distances. Most sensors will need to operate at very low power consumption (because they won’t be plugged in), but for some, this will be even more important than others.
Even more confusing, at this point we simply don’t know the exact requirements for most IoT applications. It’s just too early in the process. But we have to start building hardware for it anyway! This presents all kinds of challenges to existing models of chip production.

Watch for disintegration
The PC and smartphone industries were able to deploy the same chip designs for hundreds of millions of units. The giant integrated SoC fabs were well-suited to this. But IoT is different; it will likely consist of thousands of one-million-unit applications. This would suggest the need for a much greater diversity of chip configurations than we’ve seen to date.
As a result, other models for constructing chips are emerging. Some are calling the developments multi-chip modules, or 2.5D, or System in a Package (SiP). All involve packing components closely together, without the complete, end-to-end integration of SoC. The equations governing cost, performance and power consumption of these approaches are beginning to tilt the balance away from SoC as the favored choice for IoT smart nodes.
In some ways, the great trends of the PC and smartphone eras were toward standardization of devices. Apple’s great vision was understanding that people prefer a beautiful, integrated package, and don’t need many choices in hardware. But in software it’s generally the opposite. People have different needs, and want to select the apps and programs that work best for them.
In a smart, connected world, sensor requirements could vary greatly from factory to factory, not to mention between industries as varied as agriculture, urban planning and automotive. Just like smartphone owners like to pick and choose which apps they want, IoT manufacturers may want to shop for components individually without being locked into a single fab.
It’s hard to overstate how fundamental this shift could be. The $300+ billion semiconductor industry has grown up around the standardized hardware of PCs and smartphones — basically, boxes that live indoors and plug into walls. IoT, on the other hand, will require a huge diversity of hardware offerings. Get ready for some big changes in the “silicon” of Silicon Valley.
http://computer.howstuffworks.com/moores-law.htm
http://techcrunch.com/…/one-chip-to-rule-them-all-the-inte…/
http://semiengineering.com/how-much-will-that-chip-cost/
http://arstechnica.com/…/the-pc-inside-your-phone-a-guide-…/
http://techcrunch.com/…/one-chip-to-rule-them-all-the-inte…/

நினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள்



“ரோஸ் பட்” என்கிற சொல்லை வாழ்வின் கடைசிச் சொல்லாகச் சொல்லி மரணிக்கிற ஒருவரின் இரகசியத்தை அறியும் முயற்சியாக “சிட்டிசன் கேன்” என்கிற திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ஆர்சன் வெல்ஸ் இயக்கத்தில், 1941ல் வெளியான சிட்டிசன் கேன் திரைப்படம், சார்லஸ் ஃபோஸ்ட்டர் கேனின் மிகப் பிரமாண்டமான மாளிகையில் செவிலியின் துணையுடன் தனித்திருக்கும் கேன், “ரோஸ் பட்” என்று சொல்லி மரணிக்க, அந்த ஒற்றைச் சொல்லின் வழியே அவரின் வாழ்வைப்பற்றிய புதிரை அறிவதாக அமைந்திருக்கிறது. இந்தச் சொல்லுக்கும் அவர் வாழ்வுக்கும் என்ன தொடர்பு என்பதை நண்பர்கள், எதிரிகள், காதலியின் பார்வையில் தேடிச் செல்கிறதாக கதையின் இழை பின்னலிட்டுள்ளது. ஒரு தடுப்புவேலியில் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகையில் தொடங்குகிற திரைக்காட்சியில், அந்த உத்தரவை மீறி, உள்நுழைந்து செல்கிற காட்சியில் திரைப்படத்தின் கதை தன்னைத் திறக்கிறது. பல்வேறு தடைகளைக் கடந்து பத்திரிகைத் துறையில் வெற்றிபெற்று செல்வந்தனாக ஆகி அரசியலில் தோற்று ஆடம்பரமான மாளிகையில் தனித்து மரணித்த ஒரு மனிதனின் வாழ்வு என்பது தான் ஒரு வரியாக அமைந்த கதை. ஆனால் மரணத்தைத் தொடுகிறவனின் இறுதிச்சொல் திறக்கும் கதவுகள் எண்ணற்றவை. 

“ரோஸ் பட்” என்கிற அந்தச் சொல்லின் மறைபொருளைத் தேடித் பயணிக்கும் பத்திரிக்கையாளர், அதற்கு ஒருவேளை ஒருபொருளும் இல்லையோ எனத் தோல்வியுற்று திரும்ப, தேவையற்றதாகக் கருதப்படுகிற சார்லஸ் கேனின் எரிக்கப்படுகிற பொருள்களில், அடர்ந்து எரிகிற தீயின் மேல் திரைப்படக்காட்சி நகர்ந்து நிலைக்கிறது. சார்லஸ் கேன் சிறுவனாக இருந்தபொழுது அவன் அம்மா அவனுக்குப் பரிசளித்த பனிச்சறுக்கு விளையாட்டுக்கருவியும் எரியும் நெருப்பில் தூக்கியெறியப்படுகிறது. தீயில் எரிந்து கருகும் அந்தப் பனிச்சறுக்குப் பலகையில் “ரோஸ் பட்” என்று எழுதப்பட்டிருக்க மீண்டும் “அத்துமீறி நுழையாதே” என்கிற உத்தரவுப்பலகையுடன் படம் முடிவடைகிறது.


திரைப்படத்தில் தொடக்கக்காட்சிகளில் ஒன்றில், அம்மாவிடமிருந்து ஒன்பது வயதில் கேன் பலவந்தமாகப் பிரிக்கப்படும்பொழுது சார்லஸ் கேன் விளையாடிக்கொண்டிருந்த பனிச்சறுக்குப் பலகை அவனிடமிருந்து தனித்து விடப்பட்டுப் பனிப்பொழிவினால் மூடப்படுகிறது. சார்லஸ் கேனின் மரணத்திற்குப் பிறகு வேறு யாரும் முக்கியம் என்று கருதாத பழைய பொருள்களுடன் அந்தப்பலகையும் எரிந்து சாம்பலாகிறது. உண்மையில் மற்றவர்களின் கண்களுக்கு முக்கியத்துவப்படாத ஒன்றில் தான் சம்மந்தப்பட்டவரின் இரகசியம் அல்லது வாழ்வு அடங்கியிருக்கும். அதிகாரம், செல்வாக்கு, புகழ் என எல்லாம் அடைந்து, அரசியலில் தோற்று, இரண்டாவது மனைவியையும் பிரிந்து வயோதிகத்தில் தனித்திருக்கும் ஒருவனின் மனத்தில், அவன் இழந்த குழந்தைமையும் அம்மாவின் நினைவுமே ஆழப்பதிந்திருக்கிறது. இவை சார்ந்த நினைவாகவே இந்த “ரோஸ் பட்” என்கிற சொல்லை உணரமுடிகிறது. அந்தச் சொல்லுக்குப் பொருளை அறியவியலாமல் திரைப்படம் நிறைவடைகையில், இன்னொருவர் அத்துமீறி நுழைந்து கண்டறியவியலாத நினைவுகள் எல்லோருக்கும் இருக்கும் என்பதை நினைவூட்டுகிறது. மரணத்தருவாயில் ஒவ்வொருவருக்கும் ஒரு சொல் அவர்களை நிறைவு செய்யும். அந்தச் சொல்லில் பொதிந்திருக்கும் முழுமையான வாழ்வை இன்னொருவர் அறியவே இயலாது. அனேகமாக மரணிக்கிற அத்தனை ஆண்களின் நினைவுகளின் சொல்லாக பெண்ணே இருக்கிறாள். அந்த நினைவுக்குள் அயலார் யாருமே அத்துமீறி நுழையமுடியாது என்பதாக இந்தத் திரைப்படத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.
ஒருவரின் நினைவு என்பதே சொல்லாக இருக்கிறது. சொற்களின் வழியாக மனிதர்களை நினைவு கொள்கிறோம். ஒருவர், தான் பேசுகிற சொற்களின் வழியாகவே அடையாளம் காணப்படுகிறார். சொல்லில் தெளிவும் நேர்மையும் வேண்டும் என்பதும் கொடுத்த வாக்கை எப்படியாவது காக்கவேண்டும் எனவும் தொடர்ந்து பயிற்றுவிக்கப்படுகிறது. ஒற்றைச் சொல்லுக்காகக் காத்திருப்பதும், சொற்களுக்குள் அடைக்கலமாவதும், சொற்களுக்குள் சிக்கிக்கொள்வதும், சொற்கள் பிறழ்வதும் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. அதனால்தான் ஒருவர் பேசும் சொற்கள் அவரின் அடையாளம் ஆகிறது. இன்னொருபக்கம், “ஆதியிலே சொல் இருந்தது” என “சொல்லை” தெய்வீகமாக நினைக்கப் பழகியிருக்கிறோம். “இறைவாக்குச்சொல்” என்பது குறிப்பிட்ட சிலருக்கே கேட்கமுடியும் என்பதாகவும் கேட்பவர்களை இறைத்தூதர்கள் என்றும் அவர்களின் வாக்கு இறைவனின் வாக்காக “சொல்” மீதான நம்பிக்கைத் தொடர்ந்திருந்தது. சொற்களின் மீதான அவ்விதமான தெய்வீக நம்பிக்கை ஒருபக்கம் தகர்க்கப்பட்டாலும் மறுபக்கம் சகமனிதருக்கு கொடுத்த வாக்கை காப்பதும், ஒருவரின் வாக்கை மூன்றாம் மனிதர் யாரேனும் செயல்படுத்த இயலுமா எனவும் சொற்கள் பிறழாமல் வாழ்கிறவர்களையும் காணமுடிகிறது. தன்னுடைய சொற்களில் வழுவாமல் இருப்பவர்களுக்கு மத்தியில் கொடுத்த வாக்கினைக் காக்கத் தவறுகிறவர்களை இழிவாக நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறு சொற்களை ஏற்றும் மறுத்தும், சொற்களின் வழியாகவே ஒட்டுமொத்த வாழ்வும் இயங்கிக்கொண்டிருக்கிறது.
வாக்கு என்பது ஒரு வடமொழிச் சொல். வாக்கு என்றால் பேச்சு, சொல் அல்லது அது உருவாக்கிய மனம். வேதகாலத்தில் வாக்கு என்பது பெண் தெய்வமாகத் தொழுகை செய்யப்பட்டது. பிற்காலத்தில் வாக்கின் தெய்வம் சரஸ்வதி என்று வழங்கப்பட்டது. ஆக, ஒரு சொல்லைக் காப்பது என்பது பெண்ணைப் காப்பது, ஒரு சொல்லை மதிப்பது என்பது பெண்ணை மதிப்பது என்பதாகத் தோன்றுகிறது. அப்படியெனில் ஒருவரின் சொல் என்பதே பெண்ணாக இருக்கிறது. என்றபோதிலும் வாழ்கிற காலம்மட்டும் காதலின் சொல் பற்றி பெண்தான் வாழ்கிறாள். ஆணுக்கு ஒரு சொல்லைவிட்டு, அந்த சொல் சார்ந்த நினைவைவிட்டு நகர்ந்து செல்வதற்கான காரணங்களும் சூழலும் அமைந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் பெண்ணுக்கு, அவள் செல்கிற தூரம்மட்டும் நேசித்தவனின் சொற்களே வாழ்க்கைத் துணையாக இருக்கிறது.
தேவாரம் பாடிய மூவருள் ஒருவரான அப்பர் என்கிற திருநாவுக்கரசரின் சகோதரி திலகவதியார். திலகவதியாரை கலிப்கையாருக்கு திருமணம் பேசி முடிவு செய்கிறார்கள். அப்பொழுது நாட்டில் போர்ச்சூழல் ஏற்பட சோழமன்னனின் படையில் இணைந்து போர்செய்ய கலிப்பகையார் செல்கிறார். போர்க்களம் சென்றிருந்த காலத்தில் திலகவதியாரின் தாய் மாதினியார் தகப்பன் புகழனார் இருவரும் இறந்துவிடுகிறார்கள். வெற்றியுடன் திரும்பி வருவேன் என்று சொல்லிச் செல்கிற கலிப்பகையாரும் போர்க்களத்தில் இறந்துவிடுகிறார். கலிப்பகையார் இறந்த செய்தி கேட்டவுடன் அவருடனேயே இறந்துவிட திலகவதியார் முயலுகிறார். தாய் தகப்பன் இறந்தபொழுது உடன் இறந்துவிட எந்தப்பெண்ணும் நினைப்பதில்லை. தன்னுடைய வாழ்வே அவன்தான் என நம்பிய ஒருவன் இறந்தபின்பு தனக்கென தனித்த வாழ்வு ஒன்றுமில்லை என பெண் நினைக்கிறாள். தமக்கையின் முடிவினை தம்பி தடுத்து உயிர்வாழும்படிக் கெஞ்சுகிறார். அதன்பிறகு, மிகச் சிறியவனான தன்னுடைய தம்பி அப்பர் எனப்பட்ட மருள்நீக்கியாரைப் பார்த்துகொள்ளும் பொறுப்பு இருப்பதால் தன்னுடைய முடிவை மாற்றிக்கொள்கிறார். “கலிப்பகையாரின் சொற்களின் நினைவுடன் நான் என் வாழ்நாளைக் கடத்திவிடுவேன்” எனத் தன்னுடைய தம்பிடம் சொல்கிறார். தன்னை நேசித்தவன் அல்லது கணவன் சொல்லிச் சென்ற “வந்துவிடுவேன்” என்ற ஒற்றைச் சொல்லின் முழுமையாக பெண் தன்னுடைய மீதி வாழ்வையும் வாழ்ந்து நிறைகிறாள்.
அவ்விதமான காதலின் சொற்களை மனதில் ஏந்தியிருக்கும் பெண் தன்னுடைய காலங்களைக் கடந்துவிடுகிறாள் என்று சொல்வதைவிடவும் அவளுக்குக் காலங்களே இல்லை என்று சொல்லலாம். சங்கப் பெண்பாற்புலவர் பொன்மணியாரின் குறுந்தொகைப்பாடல், 

“உவரி யொருத்தல் உழாது மடியப்
புகரி புழுங்கிய புயல்நீங்கு புறவில் 
கடிதுஇடி உருமின் பாம்புபை அவிய
இடியொடு மயங்கி இனிதுவீழ்ந் தன்றே
வீழ்ந்த மாமழை தழீஇப் பிரிந்தோர்
கையற வந்த பையுள் மாலைப்
பூஞ்சினை இருந்த போழ்கண் மஞ்ஞை
தாஅம்நீர் நனந்தலை புலம்பக்
கூஉந் தோழி பெரும் பேதையவே.”

அது ஒரு முல்லைநிலம். ஆயர்கள் ஆடுகளையும் மாடுகளையும் மேய்த்துத் திரியும் பரந்த சமவெளி. தலைவன் வெகுதூரம் பொருள்தேடிச் சென்றிருக்கிறான். மழைக்காலத்திற்குள் வந்துவிடுவதாக தலைவியிடம் கூறியிருக்கிறான். உவரி என்னும் உப்புமண்ணை உடைய கரம்புநிலம் எருது பூட்டி உழாமல் வெடித்துக் கிடக்கிறது. மழையற்று வறண்ட அந்த நிலத்தில், எருதுகள் உழுதல் செயலை செய்யாமல் கொட்டிலில் சோம்பிக்கிடந்தன. மழை பெய்தலை நீங்கிய காட்டில் புள்ளிமான்கள் வெம்மையால் புழுங்கின. இன்று, இப்பொழுது கரிய மேகங்கள் அடர்ந்து வானம் இடிக்கத் தொடங்குகிறது. இடியோசையின் முழக்கத்தில் அந்த ஓசை தாளாது பாம்புகள் தங்கள் படம் ஒடுங்கிக்கிடந்தன. அவ்வாறு மழை பொழிவதற்காகத் தாழ்ந்த மேகங்களைப் பின்தொடர்ந்து தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிகள் செயலற்றுப் போகும்படியான மாலைப்பொழுதும் வந்தது. மழை எல்லோருக்கும் இனிமை தந்தது. மேகங்களுக்காகவும் மழைக்காகவும் ஏங்கிக்கிடக்கும் பெண்மயில்கள் பூத்திருக்கும் கிளையிலிருந்து நீரில் தாவி தங்களுடைய துணையான ஆண்மயில்களை அழைத்துக் கூவுகின்றன. ஆனால் இந்த மயில்கள் பேதமையுடைவை என தோழியிடம் தலைவி சொல்கிறாள்.
பாடலில் அவள் உணர்த்துவது, உண்மையில் மழை பொழியவேயில்லை, இடி இடிக்கவேயில்லை, பாம்புகள் தங்கள் படத்தினை ஒடுக்கிக்கொள்ளவே இல்லை, மொத்தத்தில் கார்காலம் இன்னும் தொடங்கவேயில்லை. இந்தப் பெண்மையில்கள் சென்ற மழையின் நினைவில் தானாக கூவுகின்றன. கார்காலம் தொடங்கியிருந்தால் சொல்லிச் சென்ற தலைவன் திரும்பி வந்திருப்பான். அவன் சொன்ன சொல் தவறாதவன், அதனால் எருதுகளும், புள்ளிமான்களும், பாம்பின் படமும், இடியோசையும், மயிலின் அழைப்பும் தவறுதலாக இருக்ககூடும். தலைவன் சொல் எப்பொழுதும் மிகச் சரியாக இருக்கும் என்பதால் கார்காலமே இன்னும் வரவில்லை என்பதை அறியாத பெண்மயில்கள் பேதமையில் இருப்பதாக தலைவி சொல்கிறாள். தலைவனின் சொற்களுக்கு முன்பாக காலமும் பருவமும் சூழலும் அவளுக்கு நம்புவதற்கு அற்றதாக இருக்கின்றன.
தனக்கென எதுவும் வைத்துக்கொள்ளாத எதன்மீதும் பிடிப்பற்று வாழவும் குடும்ப உறுப்பினர்களுக்கான கடமைகளைச் செய்யப் பயிற்றுவிக்கப்பட்ட பெண் அவளுக்கு விருப்பமான ஆணைக் கண்டடைந்தவுடன் நெகிழ்நிலமாகிறாள். பெண்ணின் வாழ்வில் அவள் நேசிக்கிற ஆணின் வரவுக்கு முன்பான அவளின் நிலையை முழுமையுடையதாக அவள் நம்புவதில்லை. தி.பரமேஸ்வரியின் கவிதை,

“பாலை மட்டுமே 
பழகிய கண்களுக்குக் காட்டினாய் 
குறிஞ்சி முல்லை 
மருதம் நெய்தலையும்
உணர்த்தினாய் உணர்ந்தேன் 
கரைத்தாய் கரைந்தேன் 
மீண்டும் பாலைக்குள் நுழையும்படி 
நேர்ந்த தருணத்தில் 
எங்கோ பெய்யும் மழையின் வாசம், 
நினைவூட்டுகிறது என்னை.”

சூழலின் காரணமாக பிரிந்து செல்கிற நேசிப்புகுரியவர்கள் மனத்தில் சொற்களின் வாசமாக ஒருவர் மற்றவரை நிரப்பியபடியே இருப்பார்கள். எங்கோ பொழிகிற மழையின் வாசம் இவளை நிரப்ப, மழையின் துளிர்ப்பை எங்கோ தூரத்திலிருக்கும் அவனும் அந்தக்கணம் உணரக்கூடும். ஒருவேளை அவன் அப்போது உணராது இருந்தாலும். இவளின் நேசிப்பின் அடர்வு அவனது மரணப்படுக்கையின் நிறைவுச் சொல்லாக அவளையே நிறுத்திவிடும்.
அவன் சொல்லின் மீதான பெண்ணின் நம்பிக்கை எந்த நவீனக்காலத்திலும் மாற்றமடைவது இல்லை. அவனுடைய சொற்களை நம்புகிற பெண்ணின் மனத்திற்கு சிலசமயம் அவன் சொற்கள் பொய்யானவை எனத் தெரிந்தாலும் “அவனுடைய சொற்கள் பொய்யானது” என்று சொல்கிற அவளுடைய அறிவை அவள் நிராகரிக்கவே விரும்புகிறாள். அவ்விதமாக அவனுடைய சொற்களை நம்புகிற பெண்ணின் நினைவையே அந்த ஆண் தன்னுடைய இறுதிச் சொல்லாக வைத்திருக்கிறான். காதலியாகவோ தோழியாகவோ 

மனைவியாகவோ தாயாகவோ இருக்கிற யாரோ ஒரு பெண்ணின் நினைவைக் கொண்டே ஒவ்வொரு ஆணும் தன்னை நிறைக்கிறான். 
******************************************************************************************************************
பொன்மணியார் :

இவர் எழுதிய பாடலாக குறுந்தொகை -391 மட்டும் கிடைத்துள்ளது. 

இவர் ஆணா பெண்ணா என்கிற குழப்பம் உள்ளது, ஆனால் இவர் பாடியிருக்கும் பாடலின் பொருள்குறித்தும் பெயரின் பொருள் குறித்தும் (பொன், மணி என பெண்கள் பிரத்தியேகமாக இடையில் அணிந்துகொள்ளும் அணிகலன்களை குறிக்கும் பெயராக இருப்பதால்) பெண்பாற்புலவர் எனக்கருதப்படுகிறார். 
“பொன்னும் மணியும் போலும் யாழநின் 
நன்னர் மேனியும் நாரிருங் கதுப்பும்” (நற்றிணை:166 )என்கிற பாடலில் பாடியவர் பெயர் குறிப்பிடப்படவில்லை. இந்தப்பாடலின் பொருள் குறித்தும் பாடலின் சொற்கள் குறித்தும் இந்தப்பாடலும் பொன்மணியாரின் பாடலாகவும் இருக்கலாம் என டாக்டர் தாயம்மாள் அறவாணன் குறிப்பிட்டுள்ளார். 
***************************************************************************************************************
பொன்மணிமாலை:

சங்ககாலத்தில் பெண்கள் இடையில் அணிந்துகொள்ளும் அணிகலன்கள் பல இருந்தன. மேகலை(ஏழுவடம்), காஞ்சி(எட்டுவடம்), கலாபம்(பதினாறு வடம்), பருமம்(பதினெட்டுவடம்), விரிசிகை(முப்பத்திரண்டு வடம்), இவை மட்டுமல்ல, தோரை, அத்து, மனா, அரைப்பட்டிகை, அரைஞாண், உதரபந்தம், இரதனம், கடி சூத்திரம், சீர்த்தி முகம், இடைச்செறி, சதங்கை மணிக்கோவை, ஐம்படைக்கோவை, அரைச் சதங்கை, அரைவடம், அரைமூடி, கச்சைப்புறம் போன்றவை பெண்கள் இடையில் அணிகிற அணிகலன்களாக குறிக்கப்படுகின்றன.

”வண்டிருப்பன்ன பல்கா ழல்குல்“ பொருநராற்றுப்படை- 39 அல்குல் மேலே அணியப்பட்ட அணிகலன் வண்டின் ஒழுங்கைப்போல அமைந்திருப்பதாகவும் “பொன்னோடு மணிமிடை அல்குல் மடந்தை- குறுந்:274) பொன் அரைஞாணில் மணிகளுடன் கூடி பெண்கள் அரையில் அணியும் பிரத்தியேகமாக பொன் ஆபரணம் தான் பொன்மணி என அறியமுடிகிறது. இந்தவகை அணிகலன்களின் ஒட்டி வழங்கப்படுகிற இன்னொரு பெண்பால் பெயர் மணிமேகலை. 
************************************************************************************************************************
நன்றி: ஓவியம் Shyam Sankar

Sakthi Jothi

Assembly of MAN Trucks at Augsburg Plant in Germany.

100 years of MAN trucks and buses - how it all began

Roads without a silver lion on the radiator grille? Hard to imagine today. But in 1914, trucks and buses did not yet play a part in the MAN range. A state of affairs that General Director Anton von Rieppel wanted to change. "M.A.N. must be put on wheels," was his strategy. No sooner said than done. In the summer of 2015, MAN Truck & Bus will be celebrating 100 years of commercial vehicle engineering.

One of the first 4 t chain-drive trucks in front of the Lindau assembly shop in 1915
The name MAN Truck & Bus AG did not however exist at the time the company was founded. "Lastwagen Werke M.A.N.-Saurer GmbH" (M.A.N.-Saurer Truck Works) – LWW for short – was the entry made in the City of Nuremberg companies register on 21 June 1915. At that time, the company Saurer was the leading truck manufacturer in Switzerland – and new partner to the Maschinenfabrik Augsburg-Nürnberg (M.A.N.). At the time M.A.N. General Director von Rieppel was planning to set up the company´s own truck and bus production plant in 1914, the First World War had just broken out. So there was no time for M.A.N. to develop its own vehicles and instead, it found a partner with the necessary know-how in the form of Saurer.
It was Anton von Rieppel himself who approached Adolph Saurer in a letter written in December 1914. This gave rise to negotiations between the two companies. Mr. von Rieppel had originally planned to acquire a license from Saurer to build his own trucks. But Adolph Saurer wanted to enter into a cooperation that would guarantee his participation in the company. After several m

Omnibuses for transporting parcels

Country bus used by the 'Reichspost'
M.A.N.-Saurer omnibuses transported passengers, parcels and letters across the whole of Germany
As well as trucks, LWW also produced omnibuses, mainly for the "Reichspost" and city transport companies. Especially the country buses built by LWW were a common sight on the roads at that time. The "Reichspost" used them to transport not only passengers, but also letters and parcels. Just like the trucks, these first buses were also 2 to 3.5 ton cardan vehicles – all fitted with a four-cylinder spark ignition engine, engine brakes, carbide lighting, petrol lamps, bulb horns, wooden wheels and a set of solid rubber tyres.
M.A.N. und Saurer worked closely together until 1918, then Saurer and his company pulled out of the joint venture. And from 14 November 1918 onwards, this was also reflected in its name - the company then became officially known as "M.A.N. Lastwagen Werke" (M.A.N. Truck Works). From then on, the Nuremberg site paved its own way in the development and production of trucks. Successfully. Until today.
With the TGX D38, the latest flagship of the truck fleet, MAN sets new standards in efficiency and performance. The MAN engineers also have a keen eye on the future of mobility. They are working hard to make the vehicles even more customer-friendly and economically. And customers appreciate this: Numerous fleet operators, breweries and local authorities have been relying on commercial vehicles made by MAN for decades.onths of negotiations, the industrialists finally reached agreement – and this joint venture laid the foundation for truck and bus production at MAN.
From then on, things moved very quickly. By July 1915, LWW was already producing its first trucks at a plant in Lindau. This plant took over the joint venture from Saurer. Only four months later, production activities were relocated step by step to Nuremberg. Not only was the entire plant and all the machinery moved, but Lastwagen Werke also took over all the forty Lindau employees.



Very First Nationalised Bus in Sri Lanka. 1958.01.01







Thanks  Eng.Chandana Gunatilake

7 வது படித்தவர்... 210 பஸ்களுக்கு முதலாளி....



படித்து பட்டங்கள் பல பெற்றவர்கள்தான் புதுமையாக சிந்தித்து ,தொழிலில் வெற்றிபெறமுடியும் என்பதில்லை. பள்ளிக்கல்வியை முழுமையாக முடிக்காதவர்கள் கூட வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக விளங்குகிறார்கள் என்பதற்கு மற்றொரு உதாரணமாக வலம் வருகிறார் இந்த தொழிலதிபர்.
மூன்று ஆங்கில எழுத்துக்களை சொன்னாலே போதும், தமிழகம் மட்டுமல்ல தென்மாநிலங்களில் உள்ள மக்களுக்கும் அந்த சொகுப்பேருந்துகள்தான் நினைவுக்கு வரும். அந்தப் பேருந்துகளை இயக்கும் கே.பி.என். டிராவல்ஸ் அதிபர் கே.பி.நடராஜன், இன்றைய தேதியில் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தலா ஒன்றரைக்கோடி ரூபாய் மதிப்புள்ள 210 சொகுசு பேருந்துகளுக்கு சொந்தக்காரர்.
அதோடு 300 பார்சல் லாரிகளும் நாடுமுழுவதும் சுமைகளை ஏற்றி இறக்கி வலம் வந்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு பெரிய போக்குவரத்து சாம்ராஜ்யத்தை நிறுவி, வெற்றிகரமாக நடத்திவரும் கே.பி.நடராஜன், பெரிய பிசினஸ் படிப்பு எதுவும் படித்தவர் அல்ல. இவர் படித்தது வெறும் ஏழாம் வகுப்பு மட்டும்தான். ஆனால், அடைந்த வெற்றிகள் ஏராளம்.
தனது வெற்றிக்கதையை சொல்கிறார் நடராஜன்....
'' நான் பிறந்து வளர்ந்தது சேலம், பெரியபுத்தூர் கிராமம். அப்பா பொன்மலைக்கவுண்டர் நாலரை ஏக்கர் நிலம் வைத்திருந்த சாதாரண விவசாயி. எனக்கு விவசாயத்தில் பெரிய நாட்டம் இல்லை. சிறு வயதில் இருந்தே மோட்டார் தொழிலில் ஈடுபடவேண்டும் என்கிற ஆசை எனக்கு அதிகம். ஏழாம் வகுப்பு தாண்டியதும் பள்ளிப்படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தேன். சில வருடங்கள் அப்பாவுக்கு துணையாக விவசாய வேலைகளை செய்தேன். ஒரு கட்டத்தில் என்னுடைய மோட்டார் தொழில் கனவு நிறைவேறும் சூழல் ஏற்பட்டது. 1968 ம் வருடம் எனது உறவினர்கள் சிலருடன் சேர்ந்து பஸ் ஒன்றை வாங்கினேன். அதுக்கு 'வெங்கடேஸ்வரா பஸ் சர்வீஸ்' என்று பெயர் வைத்து கோவை டூ பெங்களூரு ட்ரிப் அடித்தேன்.
அந்த ஒற்றைப் பஸ்ஸின் ஓட்டுநரும் நான்தான், கிளீனரும் நான்தான். இப்படியாக தனி ஒருவனாக பஸ் போக்குவரத்தை நடத்தினேன். அடுத்த சில வருடங்களில் பங்குதாரர்கள் தங்கள் பங்கை பிரித்துக்கொண்டு வேறு தொழில்களுக்கு போய்விட்டார்கள். எனக்கு மோட்டார் தொழிலை விட மனதில்லை. என்னிடம் இருப்பில் இருந்த பணம் போதவில்லை. வெளியில் தெரிந்தவர்களிடம் கொஞ்சம் கடன் வாங்கி 1969 ல் ஒரு புதிய பஸ் ஒன்றை வாங்கினேன். எனது நெருங்கிய உறவினரின் குழந்தை பெயர் சிவக்குமார். அந்த குழந்தையின் பெயரையே புதிய பஸ் கம்பெனிக்கு வைத்தேன். 'சிவக்குமார் பஸ் சர்வீஸ்' என்கிற பெயரில் இயங்கிய அந்தப் பஸ்ஸின் டிரைவரும் நான்தான்.
.

மதுரை டூ பெங்களூரு ரூட்டில் பேருந்தை இயக்கி, அந்த பஸ் கம்பெனியை 3 வருடங்களாக வெற்றிகரமாக நடத்தினேன். கிடைத்த லாபத்தில், தொடர்ந்து இன்னொரு பஸ் வாங்கினேன். எனது தாத்தா குப்பண்ணகவுண்டர் பெயரின் முதல் எழுத்தான 'கே' இன்ஷியலையும், எனது தகப்பனார் பொன்மலைக்கவுண்டர் பெயரில் இருந்து 'பி' எழுத்தையும், என்னோட பெயரில் இருந்து 'என்' ஆங்கில எழுத்தையும் எடுத்து இணைத்து, '1972 கே.பி.என்.' என்கிற பெயரைவைத்து, டிராவல்ஸ் கம்பெனி தொடங்கினேன்.
'ஏ.பி.சி 7581' என்கிற ஆந்திர மாநில பதிவு எண் கொண்ட அந்த கே.பி.என். டிராவல்ஸ் பஸ், திருநெல்வேலி - பெங்களூரு இடையே இயக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டு வருடங்கள் நடந்த போக்குவரத்தை தொடர்ந்து, 1974ம் வருடத்தில், கே.பி.என்.டிராவல்ஸின் இரண்டாவது பஸ் இயக்கப்பட்டது.1976 ல் மூன்றாவது பஸ்ஸை வாங்கினேன். மூன்று பேருந்துகளும் லாபகரமாக ஓடின.
பயணிகளிடம் நாங்கள் காட்டிய அன்பான அணுகுமுறை, சரியான நேரத்தில் புறப்பட்டு ஊரை சென்றடைதல், பாதுகாப்பான பயணத்திற்கு உத்தரவாதம் உள்ளிட்ட விஷயங்களில், எங்கள் கம்பெனி டாப்கியரில் போகத்தொடங்கியது. இதில் ஒரு விஷேசம் என்னவென்றால், ஒரு பஸ் மட்டும் இயக்கிய பொழுது, நான் மட்டும்தான் டிரைவர். இரண்டாவது பஸ்ஸை ஓட்ட, இன்னொரு டிரைவரை வேலையில் சேர்த்தேன். படிப்படியாக கம்பெனி வளர்ந்து, ஒரு கட்டத்தில் 10 வண்டிகளுடன் உயர்ந்தது. அப்படி 10 வண்டிகளுக்கு முதலாளி என்கிற அந்தஸ்து கிடைத்தபோதும், அதில் ஒரு வண்டியின் டிரைவராக நான்தான் இருந்தேன்.
அடுத்தடுத்து தொலைதூர பயணிகளை ஈர்க்கும் விதமாக சொகுசு பஸ்களை அறிமுகம் செய்தேன். குளுகுளு வசதி செய்யப்பட்டதும், சாய்மானம் கொண்ட மெத்தை இருக்கைகளை உடைய பஸ்களை வடிவமைத்தோம். அவற்றுக்கு பயணிகளிடம் பெரும் வரவேற்பு கிடைத்தது. தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களுக்கும் பல பஸ்களை இயக்கினோம்.
இந்தியாவில் படுக்கை வசதி கொண்ட தொலைதூர பஸ்ஸை அறிமுகம் செய்தது எங்கள் நிறுவனம்தான்.இப்போது எங்கள் நிறுவனத்தின் 210 பேருந்துகளில்,95 படுக்கை வசதி கொண்டவை. இன்று நாட்டின் எல்லா நகரங்களிலும் எங்கள் நிறுவனத்திற்கு பதிவுக் கிளைகள் உண்டு. நாட்டின் எந்த மூலையில் நீங்கள் இருந்தாலும், கே.பி.என்.டிராவல்ஸில் பயணம் செய்ய ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளமுடியும்.
ரயில் பயணிகளுக்கு ரயிலுக்குள் உணவு கிடைப்பது போல, எங்கள் பஸ்ஸில் பயணிப்பவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் செயல்படுத்திட உள்ளோம். எதிர்காலத்தில் 'கே.பி.என். ஏர்லைன்ஸ்' என்கிற பெயரில் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவை வழங்கும் ஒரு திட்டத்தைப் பற்றிய யோசனையும் இருக்கிறது.
ஏழாம் வகுப்பு வரை மட்டும் படித்த நான் 17 வயதில் கிளீனர்,18 வயதில் டிரைவர், 20 வயதில் ஒரு பஸ்ஸின் பங்குதாரர், 24 வயதில் கே.பி.என்.டிராவல்ஸ் என்கிற கம்பெனியின் முதலாளி என்று படிப்படியாக வளர்ந்து, இன்று 510 வாகனங்களை வைத்து இயக்கி வருகிறேன். நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் எங்கள் பஸ்ஸில் பயணிக்கிறார்கள். கோடிக்கணக்கான ருபாய் சரக்குகள் நாடெங்கிலும் எடுத்துச் செல்லப்படுகிறது. இதை நிர்வாகம் செய்ய, என்னிடம் நூற்றுக்கணக்கான பட்டதாரிகள் வேலை பார்க்கிறார்கள்" என்ற நடராஜன்," அன்றைக்கு ஏதோ ஒரு ஆர்வத்தில் படிப்பை பாதியில் கை விட்டேன். இன்னும் கூட படித்திருக்கலாம் என்கிற ஆதங்கம் சிலசமயம் எழுவதுண்டு. இன்று தென் மாநிலங்களுக்கு மட்டும் பஸ் போக்குவரத்தை நடத்திவரும் நான், பட்டப்படிப்பை படித்திருந்தால், இன்னும் நன்றாக பஸ் போக்குவரத்தை நடத்தியிருக்கலாம் என்று எப்போதாவது நினைப்பதுண்டு. ஆனாலும் வாழ்க்கையில் தெரிந்துகொண்ட அனுபவக் கல்விதான் என்னை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது என்பதையும் மறுபதற்கில்லை.'' என சொல்லி முடித்தார்.