Search This Blog

Sunday, October 4, 2015

216 சிவாலயங்கள் செல்வதற்கு . எண் - கோயில் - இருப்பிடம் - போன் சென்னை மாவட்டம்

01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் - பாடி - 044 - 2654 0706.
02. மாசிலாமணீஸ்வரர் - வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., - 044 - 2637 6151.
03. கபாலீஸ்வரர் - மயிலாப்பூர் - 044 - 2464 1670.
04. மருந்தீஸ்வரர் - திருவான்மியூர் கிழக்கு கடற்கரை சாலை - 044 - 2441 0477.
காஞ்சிபுரம் மாவட்டம்
05. ஏகாம்பரநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 044 - 2722 2084.
06. திருமேற்றளீஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 1 கி.மீ., - 98653 55572, 99945 85006. 
07. ஓணகாந்தேஸ்வரர் - ஓணகாந்தன்தளி. காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., தூரத்திலுள்ள பஞ்சுப்பேட்டை - 98944 43108.
08. கச்சி அனேகதங்காவதேஸ்வரர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2கி.மீ., - 044-2722 2084. 
09. சத்யநாதர் - காஞ்சிபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 2 கி.மீ., - 044 - 2723 2327, 2722 1664. 
10. திருமாகறலீஸ்வரர் - திருமாகறல், காஞ்சிபுரத்திலிருந்து கீழ்ரோடு வழியாக 16 கி.மீ. - 94435 96619.
11. தெய்வநாயகேஸ்வரர் - எலுமியன்கோட்டூர். காஞ்சிபுரத்திலிருந்து 25 கி.மீ., - 044 - 2769 2412, 94448 65714.
12. வேதபுரீஸ்வரர் - திருவேற்காடு. சென்னை கோயம்பேட்டிலிருந்து பூந்தமல்லி வழியில் 10 கி.மீ - 044-2627 2430, 2627 2487.
13. கச்சபேஸ்வரர் - திருக்கச்சூர். செங்கல்பட்டில் இருந்து சிங்கப்பெருமாள் கோயில் வழியாக 12 கி.மீ., - 044 - 2746 4325, 93811 86389.
14. ஞானபுரீஸ்வரர் - திருவடிசூலம். செங்கல்பட்டில் இருந்து 9 கி.மீ., - 044 - 2742 0485, 94445 23890.
15. வேதகிரீஸ்வரர் - திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டிலிருந்து 17 கி.மீ., - 044 - 2744 7139, 94428 11149.
16. ஆட்சிபுரீஸ்வரர் - அச்சிறுபாக்கம். செங்கல்பட்டில் இருந்து 48 கி.மீ. (மேல்மருவத்தூர் அருகில்) - 044 - 2752 3019, 98423 09534.
திருவள்ளூர் மாவட்டம்
17. திரிபுராந்தகர் - கூவம், திருவள்ளூரில் இருந்து 17 கி.மீ., - 94432 53325.
18. வடாரண்யேஸ்வரர் - திருவாலங்காடு. திருவள்ளூரிலிருந்து அரக்கோணம் வழியில் 16 கி.மீ.,.
19. வாசீஸ்வரர் - திருப்பாசூர். திருவள்ளூரில் இருந்து 5 கி.மீ., - 98944 86890.
20. ஊன்றீஸ்வரர் - பூண்டி. திருவள்ளூரில் இருந்து 12 கி.மீ., - 044 - 2763 9725, 
21. சிவாநந்தீஸ்வரர் - திருக்கண்டலம். சென்னை - பெரியபாளையம் சாலையில் 40 கி.மீ., - 044 - 2762 9144, 99412 22814.
22. ஆதிபுரீஸ்வரர் - திருவொற்றியூர். - 044 - 2573 3703.
வேலூர் மாவட்டம்
23. வில்வநாதேஸ்வரர் - திருவல்லம். வேலூர்- ராணிப்பேட்டை வழியில் 16 கி.மீ., - 0416-223 6088.
24. மணிகண்டீஸ்வரர் - திருமால்பூர். காஞ்சிபுரத்திலிருந்து 22 கி.மீ., - 04177 - 248 220, 93454 49339.
25. ஜலநாதீஸ்வரர் - தக்கோலம். வேலூரில் இருந்து 80 கி.மீ., - 04177 - 246 427.
திருவண்ணாமலை மாவட்டம்
26. அண்ணாமலையார் - திருவண்ணாமலை. - 04175 - 252 438.
27. வாலீஸ்வரர் - குரங்கணில்முட்டம். காஞ்சிபுரம்- வந்தவாசி ரோட்டில் உள்ள தூசி வழியாக 10 கி.மீ., - 99432 95467.
28. வேதபுரீஸ்வரர் - செய்யாறு. திருவண்ணாமலையிலிருந்து 105 கி.மீ., காஞ்சிபுரத்திலிருந்து 15 கி.மீ., - 04182 - 224 387.
29. - தாளபுரீஸ்வரர் - திருப்பனங்காடு.காஞ்சிபுரத்தில் இருந்து 16 கி.மீ., - 044 - 2431 2807, 98435 68742.
கடலூர் மாவட்டம்
30. திருமூலநாதர் - சிதம்பரம். (நடராஜர் கோயில்) - 94439 86996.
31. பாசுபதேஸ்வரர் - திருவேட்களம். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக வளாகம். - 98420 08291, 98433 88552.
32. உச்சிநாதர் - சிவபுரி.சிதம்பரம்- கவரப்பட்டு வழியில் 3 கி.மீ., - 98426 24580.
33. பால்வண்ணநாதர் - திருக்கழிப்பாலை, சிதம்பரம்- கவரப்பட்டு (பைரவர் கோயில்)வழியில் 3 கி.மீ., - 98426 24580.
34. பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் - ஓமாம்புலியூர். சிதம்பரத்தில் இருந்து 3 கி.மீ. - 04144 - 264 845.
35. பதஞ்சலீஸ்வரர் - கானாட்டம்புலியூர், சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 04144 - 208 508, 93457 78863.
36. சவுந்தர்யேஸ்வரர் - திருநாரையூர்.சிதம்பரம்- காட்டுமன்னார் கோயில் வழியில் 18 கி.மீ., - 94425 71039, 94439 06219.
37. அமிர்தகடேஸ்வரர் - மேலக்கடம்பூர். சிதம்பரத்தில் இருந்து காட்டுமன்னார்கோயில் வழியே 28 கி.மீ., - 93456 56982.
38. தீர்த்தபுரீஸ்வரர் - திருவட்டத்துறை.விருத்தாசலத்தில் இருந்து 22கி.மீ., - 04143 - 246 467.
39. பிரளயகாலேஸ்வரர் - பெண்ணாடம். விருத்தாசலத்திலிருந்து 18 கி.மீ., திட்டக்குடியிலிருந்து 12 கி.மீ., - 04143 - 222 788, 98425 64768.
40. நர்த்தன வல்லபேஸ்வரர் - திருக்கூடலையாற்றூர்.சிதம்பரத்திலிருந்து சேத்தியாதோப்பு வழியாக 20 கி.மீ., - 04144 - 208 704.
41. திருக்குமாரசாமி - ராஜேந்திர பட்டினம். விருத்தாசலம் (சுவேதாரண்யேஸ்வரர்) - ஜெயங்கொண்டம் ரோட்டில் 12 கி.மீ., - 04143 - 243 533, 93606 37784.
42. சிவக்கொழுந்தீஸ்வரர் - தீர்த்தனகிரி. கடலூரில் இருந்து 18 கி.மீ. - 94434 34024.
43. மங்களபுரீஸ்வரர் - திருச்சோபுரம். கடலூர்- சிதம்பரம் ரோட்டி<ல் 13 கி.மீ., ஆலப்பாக்கம், இங்கு பிரியும் ரோட்டில் 2கி.மீ., - 94425 85845.
44. வீரட்டானேஸ்வரர் - திருவதிகை. கடலூரில் இருந்து 24 கி.மீ., தூரத்திலுள்ள பண்ருட்டி நகர எல்லை - 98419 62089.
45. விருத்தகிரீஸ்வரர் - விருத்தாச்சலம். சென்னை - மதுரை ரோட்டில் உளுந்தூர் பேட்டையிலிருந்து தெற்கே 23 கி.மீ., - 04143 - 230 203.
46. சிஷ்டகுருநாதேஸ்வரர் - திருத்தளூர். கடலூரில் இருந்து பண்ருட்டி வழியாக 32 கி.மீ., - 04142 - 248 498, 94448 07393.
47. வாமனபுரீஸ்வரர் - திருமாணிக்குழி. கடலூரிலிருந்து பாலூர் வழியாக 15 கி.மீ., - 04142 - 224 328.
48. பாடலீஸ்வரர் - திருப்பாதிரிபுலியூர். கடலூர் நகருக்குள், - 04142 - 236 728.
விழுப்புரம் மாவட்டம்
49. பக்தஜனேஸ்வரர் - திருநாவலூர். பண்ருட்டி-உளுந்தூர் பேட்டை வழியில் 12 கி.மீ., - 94861 50804, 04149 - 224 391.
50. சொர்ணகடேஸ்வரர் - நெய்வணை. உளுந்தூர்பேட்டையில் இருந்து 15 கி.மீ., - 04149 - 291 786, 94862 82952.
51. வீரட்டேஸ்வரர் - கீழையூர். (திருக்கோவிலூர் அருகில்) விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 93456 60711.
52. அதுல்யநாதேஸ்வரர் - அறகண்டநல்லூர். விழுப்புரத்திலிருந்து 35 கி.மீ., - 99651 44849.
53. மருந்தீசர் - டி. இடையாறு. விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ., - 04146 - 216 045, 94424 23919. 
54. கிருபாபுரீஸ்வரர் - திருவெண்ணெய்நல்லூர். விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ., - 93456 60711.
55. சிவலோகநாதர் - கிராமம். விழுப்புரத்திலிருந்து அரசூர் வழி 14 கி.மீ. - 04146 - 206 700.
56. பனங்காட்டீஸ்வரர் - பனையபுரம். விழுப்புரத்திலிருந்து 12 கி.மீ., - 99420 56781.
57. அபிராமேஸ்வரர் - திருவாமத்தூர். விழுப்புரம் -செஞ்சி ரோட்டில் 6 கி.மீ., - 04146 - 223 379, 98430 66252.
58. சந்திரமவுலீஸ்வரர் - திருவக்கரை. திண்டிவனத்திலிருந்து 22 கி.மீ., - 0413 - 268 8949.
59. அரசலீஸ்வரர் - ஒழிந்தியாம்பட்டு. புதுச்சேரி- திண்டிவனம்- வழியில் 13 கி.மீ., 04147 - 235 472.
60. மகாகாளேஸ்வரர் - இரும்பை. புதுச்சேரி - திண்டிவனம் வழியில் 12 கி.மீ., - 0413 - 268 8943, 98435 26601.
நாமக்கல் மாவட்டம்
61. அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு. நாமக்கல்லில் இருந்து 30 கி.மீ., - 04288 - 255 925, 93642 29181.
ஈரோடு மாவட்டம்
62. சங்கமேஸ்வரர் - பவானி. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ., - 04256 - 230 192, 98432 48588.
63. மகுடேஸ்வரர், - கொடுமுடி,ஈரோடு - கரூர் ரோட்டில் 47 கி.மீ., - 04204 - 222 375.
திருப்பூர் மாவட்டம்
64. அவிநாசி ஈஸ்வரர் - அவிநாசி. திருப்பூர்-கோவை ரோட்டில் 13 கி.மீ., - 04296 - 273 113, 94431 39503.
65. திருமுருகநாதர் - திருமுருகன்பூண்டி. திருப்பூர்- கோவை ரோட்டில் 8 கி.மீ., கோவையில் இருந்து 43 கி.மீ., - 04296 - 273 507.
திருச்சி மாவட்டம்
66. சத்தியவாகீஸ்வரர் - அன்பில். திருச்சியிலிருந்து 30 கி.மீ., - 0431 - 254 4927.
67. ஆம்ரவனேஸ்வரர் - மாந்துறை. திருச்சியிலிருந்து லால்குடி வழி 15 கி.மீ., - 99427 40062, 94866 40260. 
68. ஆதிமூலேஸ்வரர் - திருப்பாற்றுறை.திருச்சியில் இருந்து திருவானைக்காவல் வழி கல்லணைரோட்டில் 13 கி.மீ. - 0431 - 246 0455. 
69. ஜம்புகேஸ்வரர் - திருவானைக்காவல். திருச்சியில் இருந்து 8 கி.மீ., - 0431 - 223 0257.
70. ஞீலிவனேஸ்வரர் - திருப்பைஞ்ஞீலி. திருச்சியில் இருந்து 23 கி.மீ., - 0431 - 256 0813.
71. மாற்றுரைவரதர் - திருவாசி. திருச்சி- சேலம் ரோட்டில் 13 கி.மீ., - 94436 - 92138.
72. மரகதாசலேஸ்வரர் - ஈங்கோய்மலை.திருச்சியில் இருந்து முசிறி வழியாக 50 கி.மீ., - 04326 - 262 744, 94439 50031.
73. பராய்த்துறைநாதர் - திருப்பராய்த்துறை. திருச்சி- கரூர் ரோட்டில்15 கி.மீ. - 99408 43571.
74. உஜ்ஜீவநாதர் - உய்யக்கொண்டான் திருமலை. திருச்சி - வயலூர் வழியில் 7 கி.மீ., - 94431 50332, 94436 50493.
75. பஞ்சவர்ணேஸ்வரர் - உறையூர்.திருச்சி கடைவீதி பஸ் ஸ்டாப் அருகில் - 0431 - 276 8546, 94439 19091. 
76. தாயுமானவர் - திருச்சி. மலைக்கோட்டை - 0431 - 270 4621, 271 0484. 
77. எறும்பீஸ்வரர் - திருவெறும்பூர்.திருச்சி- தஞ்சாவூர் ரோட்டில் 10 கி.மீ. - 98429 57568.
78. திருநெடுங்களநாதர் - திருநெடுங்குளம். திருச்சி-துவாக்குடியிலிருந்து 3 கி.மீ. - 0431 - 252 0126.
அரியலூர் மாவட்டம்
79. வைத்தியநாதசுவாமி - திருமழபாடி. அரியலூரிலிருந்து 28 கி.மீ., - 04329 -292 890, 97862 05278.
80. ஆலந்துறையார் - கீழப்பழுவூர். அரியலூர்- தஞ்சாவூர் வழியில் 12 கி.மீ. - 99438 82368.
கரூர் மாவட்டம்
81. ரத்தினகிரீஸ்வரர் - அய்யர் மலை. கரூரில் இருந்து குளித்தலை வழியாக 40 கி.மீ., - 04323 - 245 522.
82. கடம்பவனேஸ்வரர் - குளித்தலை. கரூரில் இருந்து 35 கி.மீ., - 04323 - 225 228
83. கல்யாண விகிர்தீஸ்வரர் - வெஞ்சமாங்கூடலூர்.கரூரிலிருந்து ஆறுரோடு பிரிவு வழியாக 21 கி.மீ., - 04324 - 262 010, 99435 27792.
84. பசுபதீஸ்வரர் - கரூர் - 04324 - 262 010.
புதுக்கோட்டை மாவட்டம்
85. விருத்தபுரீஸ்வரர் - அறந்தாங்கியிலிருந்து 42 கி.மீ., - 04371 - 239 212
தஞ்சாவூர் மாவட்டம்
86. பசுபதீஸ்வரர் - பந்தநல்லூர்.கும்பகோணம்- சென்னை ரோட்டில் 30 கி.மீ., - 98657 78045. 0435 - 2450 595.
87. அக்னீஸ்வரர் - கஞ்சனூர். கும்பகோணம்- மயிலாடுதுறை - 0435 - 247 3737.
88. கோடீஸ்வரர் - திருக்கோடிக்காவல்.கும்பகோணத்திலிருந்து 18 கி.மீ., - 94866 70043. 
89. பிராணநாதேஸ்வரர் - திருமங்கலக்குடி. கும்பகோணத்தில் இருந்து 17 கி.மீ., (சூரியனார்கோவில் அருகில்) - 0435 - 247 0480.
90. அருணஜடேஸ்வரர் - திருப்பனந்தாள். கும்பகோணம்- சென்னை ரோட்டில் 15 கி.மீ., - 94431 16322, 0435 - 245 6047. 
91. பாலுகந்தநாதர் - திருவாய்பாடி. கும்பகோணம்-சென்னை வழியில் 18 கி.மீ., - 94421 67104.
92. சத்தியகிரீஸ்வரர் - சேங்கனூர். கும்பகோணம்-சென்னை ரோட்டில் 16 கி.மீ., (திருப்பனந்தாள் அருகில்) - 93459 82373, 0435 - 2457 459.
93. யோகநந்தீஸ்வரர் - திருவிசநல்லூர். கும்பகோணம்- சூரியனார்கோவில் ரோடு (வேப்பத்தூர் வழி)8 கி.மீ.,. - 0435 - 200 0679, 94447 47142.
94. கற்கடேஸ்வரர் - திருந்துதேவன்குடி. கும்பகோணம் - சூரியனார்கோவில் வழியில் 11 கி.மீ., - 99940 15871, 0435 - 200 0240.
95. கோடீஸ்வரர் - கொட்டையூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 5 கி.மீ., - 0435 - 245 4421.
96. எழுத்தறிநாதர் - இன்னம்பூர்.கும்பகோணம்- சுவாமிமலை ரோட்டில் புளியஞ்சேரியிலிருந்து 2 கி.மீ., - 96558 64958, 0435 - 200 0157.
97. சாட்சி நாதேஸ்வரர் - திருப்புறம்பியம்.கும்பகோணத்திலிருந்து 8 கி.மீ. (இன்னம்பூர் அருகில்) - 94446 26632, 0435 - 245 9519.
98. விஜயநாதேஸ்வரர் - திருவிஜயமங்கை. கும்பகோணத்தில் இருந்து 21 கி.மீ., (திருவைகாவூர் அருகில்) - 0435 - 294 1912, 94435 86453.
99. வில்வ வனேஸ்வரர் - திருவைகாவூர். கும்பகோணம்- திருவையாறு ரோட்டில் 17 கி.மீ., - 94435 86453, 96552 61510.
100. தயாநிதீஸ்வரர் - வடகுரங்காடுதுறை. கும்பகோணம் - திருவையாறு ரோட்டில் 20 கி.மீ. - 04374 - 240 491, 244 191.
101. ஆபத்சகாயர் - திருப்பழனம். தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., தூரத்திலுள்ள திருவையாறு அருகில் - 04362 - 326 668.
102. ஐயாறப்பர் - திருவையாறு. தஞ்சாவூரில் இருந்து 16 கி.மீ., - 0436 - 2260 332. 
103. நெய்யாடியப்பர் - தில்லைஸ்தானம். திருவையாறிலிருந்து 2 கி.மீ., - 04362 - 260 553.
104. வியாக்ரபுரீஸ்வரர் - திருப்பெரும்புலியூர். திருவையாறிலிருந்து தில்லைஸ்தானம் வழியே 5 கி.மீ. - 94434 47826, 94427 29856.
105. செம்மேனிநாதர் - திருக்கானூர்(விஷ்ணம்பேட்டை). திருவையாறில் இருந்து திருக்காட்டுப்பள்ளி வழியே 30 கி.மீ., - 04362 - 320 067, 93450 09344.
106. அக்னீஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி.திருவையாறிலிருந்து 25 கி.மீ., - 94423 47433.
107. ஆத்மநாதேஸ்வரர் - திருவாலம் பொழில். தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 17 கி.மீ., - 04365 - 284 573.
108. புஷ்பவனேஸ்வரர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 20 கி.மீ., - 94865 76529.
109. பிரம்மசிரகண்டீசுவரர் - கண்டியூர். தஞ்சாவூரிலிருந்து திருவையாறு வழியாக 20 கி.மீ., - 04362 - 261 100, 262 222.
110. சோற்றுத்துறை நாதர் - தஞ்சாவூரிலிருந்து கண்டியூர் வழியாக 19 கி.மீ., - 99438 84377.
111. வேதபுரீஸ்வரர் - திருவேதிக்குடி. தஞ்சாவூரில் இருந்து கண்டியூர் வழியாக 14 கி.மீ., - 93451 04187, 04362 - 262 334. 
112. பசுபதீஸ்வரர் - பசுபதிகோயில். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 97914 82102.
113. வசிஷ்டேஸ்வரர் - தென்குடித்திட்டை. தஞ்சாவூரிலிருந்து 10 கி.மீ., - 04362 - 252 858. 
114. கரவாகேஸ்வரர் - கரப்பள்ளி (அய்யம்பேட்டை). தஞ்சாவூர் - கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ.,
115. முல்லைவனநாதர் - திருக்கருகாவூர். தஞ்சாவூரில் இருந்து 22 கி.மீ., - 04374 - 273 502, 273 423.
116. பாலைவனேஸ்வரர் - பாபநாசம். தஞ்சாவூர்- கும்பகோணம் ரோட்டில் 12 கி.மீ., - 94435 24410.
117. கல்யாண சுந்தரேஸ்வரர் - நல்லூர் (வாழைப்பழக்கடை) தஞ்சாவூரில் (பஞ்சவர்ணேஸ்வரர்) இருந்து பாபநாசம் வழியாக 15 கி.மீ., - 93631 41676.
118. பசுபதீஸ்வரர் - ஆவூர் (கோவந்தகுடி).கும்பகோணத்திலிருந்து பட்டீஸ்வரம் வழியாக 15 கி.மீ., - 94863 03484.
119. சிவக்கொழுந்தீசர் - திருச்சத்திமுற்றம். பட்டீஸ்வரத்திலிருந்து 6 கி.மீ., - 94436 78575, 04374 - 267 237. 
120. பட்டீஸ்வரர் - பட்டீஸ்வரம், கும்பகோணத்தில் இருந்து 2 கி.மீ., - 0435 - 241 6976.
121. சோமநாதர் - கீழபழையாறை வடதளி.கும்பகோணம் - ஆவூர் ரோட்டிலுள்ள முழையூர் அருகில் - 98945 69543.
122. திருவலஞ்சுழிநாதர் - திருவலஞ்சுழி.சுவாமிமலையில் இருந்து 1கி.மீ., - 0435 - 245 4421, 245 4026.
123. கும்பேஸ்வரர் - கும்பகோணம். - 0435 - 242 0276.
124. நாகேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலுக்கு கிழக்கே - 0435 - 243 0386.
125. சோமேஸ்வரர் - கும்பகோணம். கும்பேஸ்வரர் கோயிலை அடுத்துள்ள பொற்றாமரைக்குளக் கரை - 0435 - 243 0349.
126. நாகநாதர் - திருநாகேஸ்வரம். கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ., - 94434 89839, 0435 - 246 3354, 
127. மகாலிங்க சுவாமி - திருவிடைமருதூர். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 9 கி.மீ., 0435 - 246 0660.
128. ஆபத்சகாயேஸ்வரர் - ஆடுதுறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 14 கி.மீ., - 94434 63119, 94424 25809.
129. நீலகண்டேஸ்வரர் - திருநீலக்குடி. கும்பகோணம் - காரைக்கால் ரோட்டில் 15 கி.மீ., - 94428 61634. 0435 - 246 0660. 
130. கோழம்பநாதர் - திருக்குளம்பியம். கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் திருவாவடுதுறையிலிருந்து 5 கி.மீ., - 04364 - 232 055, 232 005.
131. சிவானந்தேஸ்வரர் - திருப்பந்துறை. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் (எரவாஞ்சேரி வழி) 12 கி.மீ., - 94436 50826, 0435 - 244 8138. 
132. சித்தநாதேஸ்வரர் - திருநறையூர் (நாச்சியார்கோவில்).கும்பகோணம்- திருவாரூர் ரோட்டில் 10 கி.மீ., - 0435 - 246 7343, 246 7219.
133. படிக்காசுநாதர் - அழகாபுத்தூர். கும்பகோணம்- திருவாரூர் செல்லும் வழியில் 6 கி.மீ., - 99431 78294, 0435 - 246 6939.
134. அமிர்தகடேஸ்வரர் - சாக்கோட்டை. கும்பகோணம்-மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 98653 06840, 0435 - 241 4453. 
135. சிவகுருநாதசுவாமி - சிவபுரம். கும்பகோணத்தில் இருந்து 7 கி.மீ. சாக்கோட்டையில் இருந்து 2 கி.மீ., - 98653 06840.
136. சற்குணலிங்கேஸ்வரர் - கருக்குடி (மருதாநல்லூர்).கும்பகோணம் - மன்னார்குடி ரோட்டில் 5 கி.மீ., - 99435 23852
137. சாரபரமேஸ்வரர் - திருச்சேறை. கும்பகோணத்தில் இருந்து 15 கி.மீ., 
138. ஞானபரமேஸ்வரர் - திருமெய்ஞானம் (நாலூர் திருமயானம்). கும்பகோணத்தில் இருந்து திருச்சேறை வழியாக 17 கி.மீ., - 94439 59839.
139. ஆபத்சகாயேஸ்வரர் - ஆலங்குடி. திருவாரூர்-(குரு ஸ்தலம்) மன்னார்குடி ரோட்டில் 30 கி.மீ., - 04374 - 269 407.
140. பாஸ்கரேஸ்வரர் - பரிதியப்பர்கோவில். தஞ்சாவூர் -பட்டுக்கோட்டை ரோட்டில் 17 கி.மீ. (உளூர் அருகில்) - 0437 - 256 910.
திருவாரூர் மாவட்டம்
141. தியாகராஜர் - திருவாரூர். - 04366 - 242 343. 
142. அசலேஸ்வரர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் இரண்டாம் பிரகாரத்தில் - 04366 - 242 343. 
143. தூவாய் நாதர் - திருவாரூர். தியாகராஜர் கோயில் கீழரத வீதி - 99425 40479, 04366 - 240 646. 
144. பதஞ்சலி மனோகரர் - விளமல். திருவாரூர் பஸ் ஸ்டாண்டிலிருந்து 2 கி.மீ., - 98947 81778, 94894 79896.
145. கரவீரநாதர் - கரைவீரம். திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 8 கி.மீ. தூரத்திலுள்ள வடகண்டம் பஸ் ஸ்டாப் - 04366 - 241 978.
146. வீரட்டானேஸ்வரர் - திருவிற்குடி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் தங்கலாஞ்சேரி அருகில். - 94439 21146. 
147. வர்த்தமானீஸ்வரர் - திருப்புகலூர். திருவாரூரில் இருந்து சன்னாநல்லூர் வழியாக 24 கி.மீ., - 94431 13025, 04366 - 292 300.
148. ராமநாதசுவாமி - திருக்கண்ணபுரம். திருவாரூரில் இருந்து 26 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 292 300. 
149. கணபதீஸ்வரர் - திருச்செங்காட்டங்குடி. திருவாரூரில் இருந்து 29 கி.மீ., (திருப்புகலூர் அருகில்) - 94431 13025, 04366 - 270 278.
150. கேடிலியப்பர் - கீழ்வேளூர். திருவாரூர்- நாகப்பட்டினம் ரோட்டில் 35 கி.மீ. - 04366 - 276 733.
151. தேவபுரீஸ்வரர் - தேவூர். நாகப்பட்டினம்-திருத்துறைப்பூண்டி வழியில் 18 கி.மீ., - 94862 78810, 04366 - 276 113.
152. திருநேத்திரநாதர் - திருப்பள்ளி முக்கூடல். திருவாரூரிலிருந்து பள்ளிவாரமங்கலம் வழியாக 6 கி.மீ., - 98658 44677, 04366 - 244 714.
153. பசுபதீஸ்வரர் - திருக்கொண்டீஸ்வரம். திருவாரூரில் இருந்து நன்னிலம் வழியாக 18 கி.மீ., - 04366 - 228 033.
154. சவுந்தரேஸ்வரர் - திருப்பனையூர். திருவாரூரில் இருந்து ஆண்டிப்பந்தல் வழியாக 12 கி.மீ., - 04366 - 237 007.
155. ஐராவதீஸ்வரர் - திருக்கொட்டாரம். கும்பகோணம் (நெடுங்காடு வழி) - காரைக்கால் ரோட்டிலுள்ள வேளங்குடி. - 04368 - 261 447.
156. பிரம்மபுரீஸ்வரர் - அம்பர் (அம்பல்). மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 6 கி.மீ., - 04366 - 238 973.
157. மகாகாளநாதர் - திருமாகாளம். கும்பகோணம்-காரைக்கால் ரோடு. - 94427 66818, 04366 - 291 457. 
158. மேகநாதசுவாமி - திருமீயச்சூர். மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170.
159. சகல புவனேஸ்வரர் - திருமீயச்சூர் இளங்கோயில், மயிலாடுதுறை அருகிலுள்ள பேரளத்திலிருந்து 1 கி.மீ., - 94448 36526, 04366 - 239 170. 
160. முக்தீஸ்வரர் - செதலபதி. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 5 கி.மீ., - 04366 - 238 818, 239 700, 94427 14055.
161. வெண்ணிகரும்பேஸ்வரர் - கோயில்வெண்ணி.திருவாரூரிலிருந்து 26 கி.மீ., - 98422 94416. 
162. சேஷபுரீஸ்வரர் - திருப்பாம்புரம்.கும்பகோணம்-காரைக்கால் வழியில் 20 கி.மீ. தூரத்திலுள்ள கற்கத்தியில் இருந்து 3 கி.மீ. - 94439 43665, 0435 - 246 9555. 
163. சூஷ்மபுரீஸ்வரர் - செருகுடி.கும்பகோணம்-காரைக்கால் இருந்து 3 கி.மீ. (பூந்தோட்டம் வழி) கடகம்பாடியில் இருந்து 3 கி. மீ. - 04366 - 291 646. 
164. அபிமுக்தீஸ்வரர் - மணக்கால் அய்யம்பேட்டை,திருவாரூர்- கும்பகோணம் ரோட்டில் 10 கி.மீ., 
165. நர்த்தனபுரீஸ்வரர் - திருத்தலையாலங்காடு. திருவாரூர்-கும்பகோணம் ரோட்டில் 15 கி.மீ., - 94435 00235, 04366 - 269 235.
166. கோணேஸ்வரர் - குடவாசல்.திருவாரூரில் இருந்து 23 கி.மீ., கும்பகோணத்தில் இருந்து 20 கி.மீ., - 94439 59839.
167. சொர்ணபுரீஸ்வரர் - ஆண்டான்கோவில்.கும்பகோணத்தில் இருந்து வலங்கைமான் வழி 13 கி.மீ., - 04374 - 265 130.
168. பாதாளேஸ்வரர் - அரித்துவாரமங்கலம், கும்பகோணம் - அம்மாபேட்டை வழியில் 20 கி.மீ., - 94421 75441, 04374 - 264 586
169. சாட்சிநாதர் - அவளிவணல்லூர்.கும்பகோணத்தில் இருந்து அம்மாப்பேட்டை வழியாக 26 கி.மீ., - 04374 - 275 441.
170. வீழிநாதேஸ்வரர் - திருவீழிமிழலை. திருவாரூர்- மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ. தூரத்திலுள்ள பூந்தோட்டத்தில் பிரியும் சாலையில் 7 கி.மீ., - 04366 - 273 050, 94439 24825148.
171. சதுரங்க வல்லபநாதர் - பூவனூர்.திருவாரூரிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னார்குடி ரோட்டில். - 94423 99273. 172. நாகநாதர் - பாமணி.மன்னார்குடியிலிருந்து 2 கி.மீ., - 93606 85073.
173. பாரிஜாதவனேஸ்வரர் - திருக்களர்.மன்னார்குடி-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 21 கி.மீ., - 04367 - 279 374.
174. பொன்வைத்த நாதர் - சித்தாய்மூர். திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 20 கி.மீ. (ஆலத்தம்பாடி அருகில்) - 94427 67565.
175. மந்திரபுரீஸ்வரர் - கோவிலூர். மன்னார்குடி-முத்துப்பேட்டை ரோட்டில் 32 கி.மீ., - 99420 39494, 04369 - 262 014. 
176. சற்குணநாதர் - இடும்பாவனம். திருத்துறைப்பூண்டி-புதுச்சேரி ரோட்டில் 10கி.மீ. (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 349.
177. கற்பக நாதர் - கற்பகநாதர்குளம். திருத்துறைப்பூண்டி -புதுச்சேரி ரோட்டில் 12 கி.மீ., (தொண்டியக்காடு வழி) - 04369 - 240 632.
178. நீள்நெறிநாதர் (ஸ்திரபுத்தீஸ்வரர்) - தண்டலச்சேரி. திருவாரூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியில் 23 கி.மீ., - 98658 44677.
179. கொழுந்தீஸ்வரர் - கோட்டூர்.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 97861 51763, 04367 - 279 781. 
180. வண்டுறைநாதர் - திருவண்டுதுறை.மன்னார்குடி- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 11 கி.மீ., சேரிவடிவாய்க்கால் அருகில் - 04367 - 294 640.
181. வில்வாரண்யேஸ்வரர் - திருக்கொள்ளம்புதூர் கும்பகோணம் -கொரடாச்சேரி வழியில் 25 கி.மீ., செல்லூர் அருகில் - 04366 - 262 239.
182. ஜகதீஸ்வரர் - ஓகைப்பேரையூர்.திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (லட்சுமாங்குடி வழி) - 04367 - 237 692.
183. அக்னீஸ்வரர் - திருக்கொள்ளிக்காடு. திருவாரூரிலிருந்து 28 கி.மீ. கச்சனத்திலிருந்து 8 கி.மீ., - 04369 - 237 454.
184. நெல்லிவனநாதர் - திருநெல்லிக்காவல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 18 கி.மீ., - 04369 - 237 507, 237 438.
185. வெள்ளிமலைநாதர் - திருத்தங்கூர்.திருவாரூர்- திருத்துறைப்பூண்டி ரோட்டில் 12 கி.மீ., - 94443 54461, 04369 - 237 454.
186. கண்ணாயிரநாதர் - திருக்காரவாசல்.திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் 14 கி.மீ., - 94424 03391, 04366 - 247 824.
187. நடுதறியப்பர் - கண்ணாப்பூர், திருவாரூர் - திருத்துறைப்பூண்டி ரோட்டில் மாவூரிலிருந்து 7 கி.மீ., - 94424 59978, 04365 - 204 144.
188. கைச்சினநாதர் - கச்சனம்.திருவாரூர்-திருத்துறைப்பூண்டி ரோட்டில் 15 கி.மீ., - 94865 33293
189. ரத்தினபுரீஸ்வரர் - திருநாட்டியத்தான்குடி.திருவாரூர்- வடபாதிமங்கலம் ரோட்டில் 15 கி.மீ., (மாவூர் வழி) - 94438 06496, 04367 - 237 707. 
190. அக்னிபுரீஸ்வரர் - வன்னியூர்(அன்னூர்). கும்பகோணம்-காரைக்கால் ரோட்டில் 24 கி.மீ., - 0435 - 244 9578
191. சற்குணேஸ்வரர் - கருவேலி. கும்பகோணம்-மயிலாடுதுறை ரோட்டில் 22 கி.மீ., தூரத்திலுள்ள கூந்தலூர் - 94429 32942, 04366 - 273 900
192. மதுவனேஸ்வரர் - நன்னிலம்.திருவாரூர்-மயிலாடுதுறை ரோட்டில் 16 கி.மீ., - 94426 82346, 99432 09771
193. வாஞ்சிநாதேஸ்வரர் - ஸ்ரீவாஞ்சியம். கும்பகோணம்- நாகபட்டினம் வழியில் 27 கி.மீ. அச்சுதமங்கலம் ஸ்டாப் - 94424 03926, 04366 - 228 305
194. மனத்துணைநாதர் - திருவலிவலம். திருவாரூரிலிருந்து 20 கி.மீ., (வழி கச்சனம்) - 04366 - 205 636
195. கோளிலிநாதர் - திருக்குவளை. திருத்துறைபூண்டி - எட்டுக்குடி ரோட்டில் 13 கி.மீ.(வழி கச்சனம்) - 04366 - 245 412
196. வாய்மூர்நாதர் - திருவாய்மூர்.திருவாரூர்- வேதாரண்யம் ரோட்டில் 25 கி.மீ., - 97862 44876
நாகப்பட்டினம் மாவட்டம்
197. சிவலோகத்தியாகர் - ஆச்சாள்புரம். சிதம்பரத்தில் இருந்து 12 கி.மீ., - 04364 - 278 272.
198. திருமேனியழகர் - மகேந்திரப்பள்ளி. சீர்காழியில் இருந்து கொள்ளிடம் வழி 22 கி.மீ., - 04364 - 292 309.
199. முல்லைவனநாதர் - திருமுல்லைவாசல். சீர்காழியிலிருந்து 12 கி.மீ., - 94865 24626.
200. சுந்தரேஸ்வரர் - அன்னப்பன்பேட்டை. சீர்காழியில் இருந்து கீழமூவர்கரை ரோட்டில் 16 கி.மீ., - 93605 77673, 97879 29799.
201. சாயாவனேஸ்வரர் - சாயாவனம். சீர்காழி- பூம்புகார் வழியில் 20 கி.மீ., - 04364 - 260 151
202. பல்லவனேஸ்வரர் - பூம்புகார். சீர்காழியில் இருந்து 19 கி.மீ., - 94437 19193.
203. சுவேதாரண்யேஸ்வரர் - திருவெண்காடு.சீர்காழி-பூம்புகார் வழியில் (புதன் ஸ்தலம்) 15 கி.மீ., - 04364 - 256 424
204. ஆரண்யேஸ்வரர் - திருக்காட்டுப்பள்ளி. சீர்காழியில் இருந்து 15 கி.மீ., திருவெண்காட்டிலிருந்து 1 கி.மீ., - 94439 85770, 04364 - 256 273. 
205. வெள்ளடைநாதர் - திருக்குருகாவூர். சீர்காழியில் இருந்து 5 கி.மீ., - 92456 12705.
206. சட்டைநாதர் - சீர்காழி.சிதம்பரத்தில் இருந்து 19 கி.மீ., - 04364 - 270 235.
207. சப்தபுரீஸ்வரர் - திருக்கோலக்கா. சீர்காழியிலிருந்து 2 கி.மீ., - 04364 - 274 175.
208. வைத்தியநாதர் - வைத்தீஸ்வரன்கோவில்.மயிலாடுதுறை -சீர்காழி வழியில் 18கி.மீ., - 04364 - 279 423.
209. கண்ணாயிரமுடையார் - குறுமாணக்குடி. மயிலாடுதுறை- வைத்தீஸ்வரன் கோவில் வழியில் கதிராமங்கலத்தில் இருந்து 3 கி.மீ. - 94422 58085 
210. கடைமுடிநாதர் - கீழையூர். மயிலாடுதுறையில் இருந்து 12 கி.மீ., - 94427 79580, 04364 - 283 261, 
211. மகாலட்சுமிபுரீஸ்வரர் - திருநின்றியூர். மயிலாடுதுறை- சீர்காழி வழியில் 7 கி.மீ., - 94861 41430.
212. சிவலோகநாதர் - திருப்புன்கூர்.மயிலாடுதுறையிலிருந்து 15 கி.மீ., - 94867 17634. 
213. சோமநாதர் - நீடூர். மயிலாடுதுறையில் இருந்து 5 கி.மீ., - 99436 68084, 04364 - 250 424, 
214. ஆபத்சகாயேஸ்வரர் - பொன்னூர். மயிலாடுதுறையில் இருந்து 6 கி.மீ., - 04364 250 758.
215. கல்யாண சுந்தரேஸ்வரர் - திருவேள்விக்குடி. மயிலாடுதுறை அருகிலுள்ள குத்தாலத்திலிருந்து 2 கி.மீ., - 04364 - 235 462.
216. ஐராவதேஸ்வரர் - மேலத்திருமணஞ்சேரி.
சிவாய நம.

Shirdi Ke Sai Baba | Sai Baba | Devotional Song

Captopril ( ACE Inhibitor ) ::


Captopril is an ACE inhibitor. ACE stands for Angiotensin Converting Enzyme. Captopril is used to treat high blood pressure (hypertension), congestive heart failure, kidney problems caused by diabetes, and to improve survival after a heart attack.
Indication
1. Hypertension
2. Heart Failure
3. Left Ventricular Dysfunction After Myocardial Infarction
4. Diabetic Nephropathy

Side Effects
1. Cough
2. Flushing (warmth, redness, or tingly feeling)
3. Numbness, tingling, or burning pain in your hands or feet;
4. Loss of taste sensation
5. Mild skin itching or rash.
6. Stomach pain
7. Difficulty breathing

Sculptural extravaganza













உணவே மருந்து


1. மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும் விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.
2. ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் எக்ஸ்பர்ட்.
3. பூண்டு சாப்பிட்டீர்களென்றால்… உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும். வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, கேன்சர் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.
4. சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
5. பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.
6. சுண்டைக்காயை உணவில் சேர்த்தால்… நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.
7 வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள்.
8. பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவட்டல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும். இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால்… கண் நோய்கள் நெருங்காது.
9. சமையலுக்குக் கைக்குத்தல் அரிசியைப் பயன்படுத்துவது மிக மிக நல்லது. கைக்குத்தல் அரிசியில் நார்ச் சத்துக்கள் நிறைந்துள்ளன.
10. சைக்கிள் கேப்பில் எல்லாம் ஸ்நாக்ஸ் சாப்பிடுவதை முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். அதற்குப் பதிலாக தானியங்கள், முளைகட்டிய பயறு போன்றவற்றைச் சாப்பிடலாம்.
11. பப்பாளிப் பழங்கள் மிகவும் சத்து மிகுந்தவை. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் வாங்கிச் சாப்பிடுங்கள். கண்களுக்கும் நல்லது.
12. அதிக நாட்கள் உணவை ஃப்ரிட்ஜில் வைத்து சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அப்படி வைக்கப்பட்ட உணவுகளில் சத்துக்கள் குறைந்து விடுவதோடு, உடல் ஆரோக்கியத்துக்கும் தீங்கினை ஏற்படுத்தும்.
13. தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.
14. பலமான விருந்து காரணமாக ஜீரணக் கோளாறா? புதினா, தேன், எலுமிச்சைச் சாறு… இவற்றில் ஒவ்வொரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் போதும். கல்லும் கரைந்துவிடும்.
15. கேன்சர் செல்களைத் தகர்க்கும் சக்தி திராட்சையின் தோலில் இருக்கிறது. திராட்சை கொட்டைகளிலிருந்து பெறப்படும் மருந்துப் பொருட்கள், வைரஸ் எதிர்ப்புச் சக்தியை பெரிதும் தூண்டுகின்றன.மருந்தே வேண்டாம்….!
16. இயற்கைச் சூழலான இடங்களுக்குச் செல்ல நேர்ந்தால்… கொஞ்ச நேரம் ஆழமாக மூச்சு விடுங்கள். நுரையீரலுக்கு அது மிகவும் பயனளிக்கும்.
17. எந்தவித நோய் தாக்கியிருந்தாலும் முதலில் செய்ய வேண்டியது, கவலையைத் தூக்கி எறிவதுதான்

ஒரு தந்தை தன் மகனுக்கு எழுதிய அழகிய / அருமையான கடிதம்


இக்கடிதம் புகழ் பெற்ற ஹாங்காங் தொலைக் காட்சி ஒளிபரப்பாளர் / குழந்தை உளவியல் நிபுணரால் அவருடைய மகனுக்கு எழுதப்பட்டது. இக் கடிதத்தில் உள்ள வார்த்தைகள் / கருத்துக்கள் உண்மையிலேயே நம் அனைவருக்கும் பயனளிப்பதாகும். இளமையானவர்கள், முதியவர்கள், குழந்தைகள் அல்லது பெற்றோர்கள் அனைவருக்கும் இது பயனளிக்கும். அனைத்து பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைகளுக்கு இதனை படிப்பினையாக கற்பிக்கலாம்.
அன்புள்ள மகனுக்கு,
மூன்று காரணங்களுக்காக நான் இதை உனக்கு எழுதுகிறேன்:
1. வாழ்க்கை, அதிர்ஷ்டம்/நல்ல வாய்ப்பு, இடையூறுகள் ஆகிய அனைத்தும் முன் மதிப்பிட்டு அறிய(கணிக்க) முடியாதவை. தாம் எவ்வளவு காலம் வாழ்வோம் என்று எவரும் அறிவதில்லை. சில கருத்துக்களை / அறிவுரைகளை சரியான நேரத்தில்(முன் கூட்டியே) கூறிவிடுவது நல்லது.
2. நான் உன்னுடைய தந்தை. நான் உனக்கு இதனை கூறாவிடில் உனக்கு இதனை யாரும் கூறப் போவதில்லை.
3. நான் உனக்கு எழுதுவது யாதெனின், எனக்கேற்பட்ட சிறு அளவிலான சொந்த அனுபவங்களேயாகும். இது ஒரு வேளை தேவையற்ற அதிகப்படியான இதய வலிகளிலிருந்து உன்னைக் காக்க இயலும். .
கீழ்க் கண்டவற்றை நீ உன் வாழ்க்கை முழுவதும் கவனத்தில் கொள்ள வேண்டும்:
1. உன்னிடத்தில் நல்லவர்களாக நடந்து கொள்ளாதவரிடம் நீ உன் வன்மத்தை / பொல்லாங்கை காட்டாதே. உன் அம்மாவையும் என்னையும் தவிர உன்னை நல்லவிதமாக நடத்தி செல்லும் பொறுப்பு எவருக்குமில்லை. உனக்கு யாராவது நல்லவர்களாக இருப்பின் அது உனக்கு கிடைத்த புதையல் / பொக்கிஷம் போன்றதாகும். அவர்களுக்கு நீ நன்றி உடையவனாக இரு. மேலும் நீ அவர்களிடத்தில் கவனமாக நடந்து கொள்ளுதல் அவசியம். ஏன் எனில், ஒவ்வொருவரின் அணுகுமுறையும் ஏதேனும் ஒரு நோக்கத்துடனேயே இருக்கிறது. உன்னிடத்தில் ஒரு மனிதன் நல்லவனாக நடந்து கொள்கிறான் என்றால், உன்னை அவன் உண்மையாக நேசிக்கிறான் என்று அர்த்தம் இல்லை. நீ விழிப்புடன் இருக்க வேண்டும். அவனை நீ ஆய்ந்தறியாமல், மதிப்பிடாமல் உண்மையான் நண்பன் என்று கொள்ளாதே.
2. இந்த உலகில் இன்றியமையாதது என்று ஒன்று இல்லை. உனக்கு உடமையானது என்று எதுவும் இந்த உலகில் இல்லை. இந்த கூற்றினை நீ புரிந்து கொண்டாய் என்றால், உன்னை சுற்றி மனிதர்கள் சூழ்ந்திருந்தாலும், எவரும் தேவை இல்லை என்றாலும் அல்லது நீ அதிகமாக விரும்பிய ஒன்றையோ/ ஒருவரையோ நீ இழக்க நேர்ந்தாலும் உன் வாழ்க்கையை நீ எளிதில் வழி நடத்திச் செல்ல இயலும்.
3. வாழ்கை என்பது மிகவும் குறுகிய காலத்திற்கு உட்பட்டது. இன்றைய வாழ்க்கையை நீ வீணடித்தாய் என்றால் உன் வாழ்க்கை உன்னைவிட்டு சென்றுவிட்டதை நாளை நீ கண்டுகொள்வாய். வாழ்க்கையின் மதிப்பினை நீ எவ்வளவு விரைவில் உணர்ந்து கொள்கிறாயோ ஓரளவாகிலும் நீ வாழ்வினை அனுபவிப்பாய்.
4. அன்புதான் என்றாலும் அது உறுதியற்ற ஒரு உணர்வே ஆகும். காலத்தை பொருத்தும் ஒருவரின் மனநிலையை பொருத்தும் இந்த உணர்வு மங்கி / குறைந்து விடுகிறது. உன்னை மிகவும் நேசித்தவர் உன்னை விட்டு விலகிச் செல்லும் பொழுது நீ அமைதியாக இரு. காலம் உன் வலிகளையும் கவலைகளையும் துடைத்தழித்துக் கொண்டு போய்விடும். இனிமையான அன்பையும், அழகையும் நீ மிகையாக எண்ணாதே. அன்பில்லாமல் போகின்ற தருணத்தில் ஏற்படும் கவலைகளையும் நீ பெரிதாகக் கொள்ளாதே.
5. வெற்றி பெற்ற நிறைய மனிதர்கள் நல்ல கல்வியறிவு பெற்றவர்கள் இல்லை. நீ சிரமப்பட்டு கல்வி பயிலாவிடினும் வெற்றி பெற இயலும் என்பது இதன் பொருள் இல்லை. என்னென்ன அறிவுத் திறனைப் நீ பெற்றிருக்கின்றாயோ அது வாழ்க்கையில் உனக்கான ஆயுதங்களாகும். ஒரு சிலர் வாழ்க்கையில் உயர்கின்ற தருணத்தில் இன்னல்களை அனுபவிக்கின்றனர். ஒரு சிலர் துவக்கத்திலேயே இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது.
6. என்னுடைய வயதான காலத்தில், உன்னுடைய வருமானத்தை சார்ந்து வாழ வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எனக்கில்லை. அதே போன்று உன்னுடைய வாழ்க்கை முழுதும் நான் உனக்கு நிதி ஆதாரங்களை அளிக்க இயலாது. உன்னை வளர்த்து ஆளாக்கும் வரையில் தான் என்னுடைய ஆதரவும் பொறுப்பும்; நீ வளர்ந்து விட்ட பிறகு இந்த பொறுப்பு முடிவடைந்து விடுகிறது. அதன் பிறகு நீ தான் முடிவு செய்ய வேண்டும். நீ பயணிக்கப் போவது பொது போக்குவரத்திலா அல்லது உன் சொந்த வாகனத்திலா / இரதத்திலா; வசதி படைத்தவனாக அல்லது ஏழையாக.
7. நீ கூறும் வார்த்தைகளுக்கு நீ மதிப்பளிக்க வேண்டும். ஆனால் பிறர் அவ்வாறு இருத்தல் வேண்டும் என்று நீ எதிர்பார்க்கக் கூடாது. நீ அனைவருக்கும் நல்லவனாக இரு. ஆனால் உனக்கு அனைவரும் நல்லவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பாராதே. நீ இதனை புரிந்து கொள்ளாமல் போனால் உன் வாழ்க்கை தேவையற்ற பிரச்சினைகளில் உழல வேண்டி இருக்கும்.
8. நான் பல வருடங்களாக பரிசு சீட்டுகளை வாங்கி இருக்கிறேன். ஆனால் எந்த பரிசும் எனக்கு அடித்ததில்லை / கிடைக்கவில்லை. நீ வசதி படைத்தவனாக வேண்டுமென்றால் நீ கடினமாக உழைக்க வேண்டும் என்பதையே இது காட்டுகிறது! இலவசமாக உணவு கிடைக்காது!
9. நான் உன்னுடன் எவ்வளவு அதிகப்படியான நேரம் இருக்கிறேன் என்பது ஒரு பொருட்டல்ல. நாம் ஒன்றாக இணைந்திருக்கும் அந்த நேரத்தை பெரும் பாக்கியமாகக் (பொக்கிஷம்) கருதுவோம். நமக்கு தெரியாது நாம் மறுபடியும் நம்முடைய அடுத்த பிறவியில் சந்திப்போம் என்று.
அன்புடன் ,
உன் அப்பா.

Saturday, October 3, 2015

To Build Wealth, Treat Money Like a Jealous Lover

What's the difference between Physics and mathematics exactly?

The indivi-duality of Nature. The phys-maths Nature
In the article below the author question:
what's the difference between phys and maths exactly?
And answered himself (between *---* my observations)
I think there are two linked, but subtly distinct, differences.
*There is no differences when you consider Nature as individuality, so far they are not linked, just they are two faces of the same coin*.
1. Physics is a science and mathematics is not.
This means that physics has an experimental aspect. In physics, it is possible to disprove a hypothesis by experiment: this cannot be done in maths.
*The author is debunking empiric and/or quasi-empiric maths defended by Stewart Mills and Imre Lakatos respectively. Also, he is obviating Mr. Atiyah assertion about human evolution in a very special physical environment with the physical reality across our brain modelizing it "mathematically" beyond our physical "intuitions" that we developed observing that immediate physical environment as Albert Einstein did with his General and Special Relativity theory for example*.
2. Physics is about this world and mathematics is not (necessarily).
The canvas for mathematical ideas is much wider than the canvas of physics.
A small subset of mathematics seems to correspond with observable physical phenomena to a shocking extent. This we call applied mathematics. However, mathematics describes many things which don't correspond to phenomena in this world.
*Sure, maths are wider than phys. In fact maths is a "world of possibles" and phys is our world now, one world in a period of time between many possible worlds. Thus we can't say that maths describe many things which not correspond to phenomena in this world. On contrary we have many examples which maths without any connection with our world, in principle, but later on they were describing extremely accurately physical phenomena, as for example non-euclidean geometry. It is started just like a toy for some XIX century mathematicians and finally it was the bases to describe space-time by Minkowski and fundamental for the General Relativity by Einstein. There are many examples like that (recently Efimov's triad describe a physical phenomena) and it is very probable to find more and more "connections" like tha when we will get deeper in our knowledge about Nature. Perhaps it will happen with string theory too.
Finally, in the wider sense of science, maths is science as well because Nature is a phys-math individuality.*
https://protonsforbreakfast.wordpress.com/…/physics-is-mor…/

Facebook is about to look completely different — here’s what's coming


What types of video games improve brain function?


From "brain games" designed to enhance mental fitness, to games used to improve real-world problems, to games created purely to entertain, today's video games can have a variety of potential impacts on the brain.
A new article in Policy Insights from the Behavioral and Brain Sciences argues that it is the specific content, dynamics, and mechanics of individual games that determine their effects on the brain and that action video games might have particularly positive benefits.

Analyzing science on the cognitive effects of video games researchers wrote that action video games- games that feature quickly moving targets that come in and out of view, include large amounts of clutter, and that require the user to make rapid, accurate decisions - have particularly positive cognitive impacts, even when compared to "brain games," which are created specifically to improve cognitive function.
"Action video games have been linked to improving attention skills, brain processing, and cognitive functions including low-level vision through high-level cognitive abilities. Many other types of games do not produce an equivalent impact on perception and cognition," the researchers commented. "Brain games typically embody few of the qualities of the commercial video games linked with cognitive improvement."
Researchers noted that while action games in particular have not been linked to problems with sustaining attention, research has shown that total amount of video game play predicts poorer attention in the classroom.
Furthermore, video games are known to impact not only cognitive function, but many other aspects of behavior - including social functions - and this impact can be either positive or negative depending on the content of the games.

Scientists find worms can safely eat the plastic in our garbage

  • Researchers found mealworms that subsists on Styrofoam transform wastes into biodegradable fragments
  • Styrofoam had always been thought to be non-biodegradable from early research
  • The discovery is considered a revolutionary breakthrough in solving global waste crisis

Garbage is a big problem. Even with so many of us doing our bit to help out with recycling, the amount of unrecyclable and discarded plastics in the US alone comes close to 30 million tonnes annually, thanks to things like disposable coffee cups(2.5 billion of which are thrown away by Americans every year). We’re looking at you, Starbucks.
Now, for the first time, researchers have found detailed evidence that bacteria in an animal’s gut can safely biodegrade plastic and potentially help reduce the environmental impact of plastic in landfill and elsewhere. The animal in question? The humble mealworm – which turns out to be not so humble after all.
Researchers led by Stanford University in US and Beihang University in China found that the mealworm – the larval form of the darkling beetle – can safely subsist on a diet of Styrofoam and other kinds of polystyrene, with bacteria in the worm’s gut biodegrading the plastic as part of its digestive process. The findings are significant because it was previously thought that these substances were non-biodegradable – meaning they ended up in landfill (or worse, our oceans, where they’d accumulate for decades).
“Our findings have opened a new door to solve the global plastic pollution problem,” co-author Wei-Min Wu, a senior research engineer in the Department of Civil and Environmental Engineering at Stanford, said in a statement.
In the study, 100 mealworms ate between 34 and 39 milligrams of Styrofoam each day, converting about half into carbon dioxide and the other excreting the bulk of the rest as biodegraded droppings. They remained healthy on the plastic diet, and their droppings appeared to be safe for use as soil for crops.
Compared to the amount of plastic people go through every year, the mealworms’ capacity to process our waste product might not sound like much, but further research could help us engineer more powerful enzymes for plastic degradation, including processing other kinds of currently impervious plastics, including polypropylene, microbeads, and bioplastics.
The researchers are also looking to find whether a marine equivalent of the mealworm may exist, as hundreds of thousands of tonnes of plastic in the world’s oceans are an ongoing environmental concern.
“There’s a possibility of really important research coming out of bizarre places,” said Craig Criddle, a professor of civil and environmental engineering who supervised the research. “Sometimes, science surprises us. This is a shock.”
Not a substitute to recycling
However, while the mealworms may just help the world save its mounting waste crisis, this should not be considered as a substitute for recycling, Wu said.
According to the Worldwatch Institute data released in 2013, the world has generated about 300 million tons of plastic, with a very small percentage of these wastes being recycled while the larger portion continue to threaten the environment with water contamination and poisoning of the animal and marine life.
“We need to be better at recycling. We shouldn’t waste plastic anywhere,” Wu told CNN.
Craig Criddle, a professor of civil and environmental engineering supervising Wu’s research at Stanford, said they are now planning to study whether microorganisms within mealworms and other insects can biodegrade plastics such as polypropylene, microbeads and bioplastics.
Polypropylene is being used to manufacture textile products and automotive components, microbeads are used for exfoliants while bioplastics are derived from renewable sources of biomass.
Craig said the researchers will next study the effect of wastes from these sources when consumed by other animals, which are in turn, eaten by other animals in what he described as “cradle-to-cradle” approach.

கட உபநிஷதத் தத்துவங்கள் 108 :


மரணமிலாப் பெருநிலை :
அவ்யக்தாத் து பர: புருஷோ வ்யாபகோஅலிங்க ஏவ ச I
யம் ஜ்ஞாத்வா முச்யதே ஜந்து: அம்ருதத்வம் ச கச்சதி II (கட 2.3:8)

பொருள்: அவ்யக்த்தத்தை விட இறைவன் மேலானவர், அவர் எங்கும் நிறைந்தவர், (இவர்தான் என்று சுட்டிக் காட்டுவதற்கு) எந்த அடையாளமும் இல்லாதவர். அவரை அனுபூதியில் உணர்வதால் மனிதன் (தளைகளிலிருந்து) விடுபடுகிறான்; மரணமிலாப் பெருநிலையையும் அடைகிறான்.
புலன்களின் செயல்பாடு தனியானவை, அவற்றுடன் ஆன்மாவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை என்பதை உணர்ந்து மனம் ஆன்மாவில் நிலைபெறும்போது புலன்கள் இயல்பாகவே தங்கள் வேகத்தை இழக்கின்றன. இதனைப் படிப்படியாக 7&8 ஆம் மந்திரங்கள் தெரிவிக்கின்றன. 1.3:10-11 மந்திரங்களும் இதே கருத்தை வலியுறுத்துவதாக அமைந்தது ஒப்புநோக்கத் தக்கது.
இறைவனை அடைந்தால் மனிதன் மரணமிலாத நிலையை அடைகிறான். அந்த நிலையைப் பற்றிய சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.
இந்தக் கண்களால் காண முடியாது:
ந ஸந்ருசே திஷ்ட்டதி ரூபமஸ்ய
ந சக்ஷுஷா பச்யதி கச்சனைனம் I
ஹ்ருதா மனீஷா மனஸா அபிக்ல்ருப்தோ
ய எதத் விதுரம்ருதாஸ்தே பவந்தி II ( கட 2.3:9)
பொருள்: இறைவனுடைய உருவம் புறத்தில் காணக்கூடியதாக இல்லை. யாரும் அவரைக் கண்களால் காண்பதில்லை. இதயக்குகையிலுள்ள ஆன்மாவால், விழிப்புற்ற புத்தியில், மனத்தின் தொடர்ந்த முயற்சியால் உணரப்படுகிறார். அவரை அறிபவர்கள் மரணமற்றவர்களாக ஆகின்றனர்.
மிகவும் பொருள் பொதிந்த மந்திரம் இது. இறையனுபூதி என்பதன் ஒரு தெளிவான விளக்கத்தை இங்கு காண்கிறோம். இறையனுபூதிக்கு இங்கே ஐந்து விளக்கங்கள் தரப்படுகின்றன –
1 புறத்தில் காணக்கூடியதல்ல; 2 கண்களால் காண்பதில்லை; இந்தக் கருத்துக்களை ஏற்கெனவே (2.2:14-15) கண்டோம்.
3 ஆன்மாவால் காணப்படுகிறது ; உடம்பிலுள்ள சாதாரணக் கண்கள் இறைவனைக் காண்பதில்லை என்றால் அவரைக் காண்பது, உணர்வது யார்? இதயக் குகையிலுள்ள ஆன்மா. இதயக் குகை பற்றியும் ஆன்மா பற்றியும் ஏற்கெனவே விரிவாகக் கண்டுள்ளோம். இறைவன் ஒரு பேரொளி என்றால் ஆன்மா ஒரு சுடர், ஒரு பொறி. ஒவ்வொருவரிலும் அந்தப் பொறி உள்ளது. அந்தப் பொறிதான் இறைவனை அறிகிறது.
4 புத்தி தெளிய வேண்டும்: ஆன்மா இறைவனை எங்கே காண்கிறது? விழிப்புற்ற புத்தியில். இது பற்றியும் ஏற்கெனவே (1.3:6-9) விரிவாகக் கண்டுள்ளோம்.
5 மனத்தின் தொடர்ந்த முயற்சி வேண்டும்: ஆன்மா, இதயக் குகை, புத்தி என்றெல்லாம் கூறியதால் அவை ஏதோ நம்மை மீறிய விஷயங்கள் என்று எண்ணி விடாமல், நமது கருவியாகிய மனத்தைத் தொடர்ந்து சாதனைகளில் ஈடுபடுத்த வேண்டும். ஏதாவது ஒரு பாதையைத் தேர்ந்தெடுத்து முழுமூச்சுடன் அதில் முன்னேற வேண்டும்.
இவ்வாறு மனத்தின் தொடர்ந்த முயற்சியால் புத்தி தெளிகிறது. தெளிந்த புத்தியால் தன்னை ஆன்மாவுடன் ஒன்றுபடுத்திக் காண முடிகிறது. நம்மில் உள்ள இருவரில் (1.3.1) ‘நாம் ஜீவன்’ என்ற நிலை மாறி ‘நாம் ஆன்மா’ என்ற நிலை உருவாகிறது. இந்த ஆன்ம நிலையில் இறைக்காட்சி கிடைக்கிறது.

ராமர் பட்டாபிஷேகம்!



ஸ்ரீராமபிரானுக்கு பட்டாபிஷேகம் எப்படி நடந்தது? எத்தனையோ ராமயணங்கள் இருந்தாலும், அதில் வால்மீகி ராமாயணத்துக்கு ஒரு சிறப்பு உண்டு. அந்தக் காவியத்தில் ராமனுக்குப் பட்டாபிஷேகம் நடந்ததை வால்மீகி எப்படி வர்ணிக்கிறார்?
அதிகாலையின் அற்புதம் திவ்யமாக இருக்கிறது. மதுரமான இசையாலும், கருவிகளின் ஒலிகளாலும், தங்க ஆபரணங்கள் அணிந்து உத்தமப் பெண்களின் நாட்டியங்களாலும், தாங்கள் எழுப்பப்டுவதைக் கண்டு நாங்கள் சந்தோஷம் கொள்கிறோம்.  வானவீதியில் முழுமையான ஒளிக்கிரணங்களுடன் அனைத்து உலகுக்கும் தேஜஸையும் ஆயுளையும் வழங்கிக் கொண்டிருக்கும் நடுப்பகல் சூரியன் போன்று, தாங்கள் பட்டாபிஷேகப் பெரும் வைபவத்தோடு, சிம்மாசனத்திலிருந்து எங்கள் அனைவருக்கும் அருள்பாலித்து நலம் புரிவதைப் பார்த்துப் பார்த்து மகிழ்ச்சி கொள்கிறோம். பூமி உள்ள வரையிலும் தாங்கள் பரிபாலனம் நடத்த வேண்டும் என்பதே எங்கள் பிரார்த்தனை! இவ்வாறாக பரதன், தலைமீது கரங்களைக் கூப்பியவண்ணமாக ஸ்ரீராமனிடம் வேண்டினான்.
பூஜிதா மாமிகா மாதா
தத்தம் ராஜ்யம் இதம் மம
தத் ததாமி புனஸ் துப்யம்
யதாத்வம் ததா மம
முன்பு எனக்கு அரசு தந்து என் தாயைப் போற்றினாய். அதை அப்படியே உனக்குத் தருகிறேன். பரதனின் சரணாகதியை அயோத்தி ராமனும் ஏற்றார். ஆசனத்தில் அமர்ந்தார். பட்டாபிஷேகத்துக்குரிய பணிவிடைகள் எல்லாம் சீராகத் தொடங்கின. ராம லக்ஷ்மண பரத சத்ருக்னார்களுடைய அலங்காரம் நடந்தேறியது. சீதாதேவிக்கு, தசரத பத்தினிகளே அலங்காரம் செய்தனர். வந்திருக்கும் வானரப் பெண்களுக்கும் அழகு செய்கிறாள் கௌசல்யை.
ததோ வானர பத்னீனாம்
ஸர்வாஸாமேவ சோபனம்
சகார யத்னாத் கௌஸல்யா
ப்ரஹ்ருஷ்டா புத்ரவத்ஸலா
சத்ருக்னருடைய ஆணையின் பேரில் இஷ்வாகு குலத்தின் தேரோட்டியான சுமந்திரர், கம்பீரமான குதிரைகள் பூட்டிய ரதத்தைக் கொணர்ந்தார். கதிரவன் போன்று ஒளிமயமாகக் காட்சிதரும் அந்த ரதத்தில் ஸ்ரீராமன் ஏறி அமர்ந்தார். சுக்ரீவனும் அனுமனும் உடன் சென்றனர். சுக்ரீவன் மனைவியும் சீதாபிராட்டியும், திவ்யமான அலங்காரத்துடன் அவர்களுடனே சென்றனர். ஸ்ரீராமனுக்கு சகல நலங்களும் சுகமும் தனமும் பெருகுவதற்கும், அயோத்தி நகரமும் அந்த நாடும் என்றும் மங்கலம் பெறுவதற்கும் உரிய சுப காரியங்களைச் செய்யுமாறு அனைவரும் வசிஷ்டரிடம் வேண்டினர். அமைச்சர்கள் பின்தொடர ஜய விஜயபீவ என்ற முழக்கம், ஜயகோஷமுமாகக் காற்றுடன் அலை மோதியது. ரகுராமனான, கல்யாண ராமனான, சீதா ராமனான, தசரத ராமனான, கல்யாண குனோஜ்வலனான, பித்ருவாக்ய பரிபாலனான, ஏக பத்னி விரதனான, சர்வஜன ரக்ஷகனான ஸ்ரீராமன் அயோத்தி நகரை நோக்கி வந்து கொண்டிருந்தார். மஞ்சள் கலந்த அட்சதையுடன் பிராமணர்களும் உடன் சென்றனர். பசுக்களும் கோலாகலத்தில் கலந்து சென்றன. குடிமக்களின் குதூகலம் பொங்க, ஸ்ரீராமன் அரண்மனைக்குள் அடியெடுத்து வைத்து, கௌசல்யாதேவி, சுமித்ரா தேவி, கைகேயி தேவி மூவரையும் நமஸ்கரித்தார். சத்ருக்னர், ராமருடைய அபிஷேகத்துக்காக சுக்ரீவனிடம் வானரர்களை அனுப்பப் பணித்தார். பொழுது புலரும் முன் வானரர்கள், ரத்னமும் தங்கமும் இழைத்த குடங்களில், கடலிலிருந்தும் நதிகளிலிருந்தும் புண்ணிய தீர்த்தத்தைக் கொணர்ந்தார்கள். ஜாம்பவான், அனுமன், வேகதர்சீ, சிஷபன் ஆகியோர் ஐந்நூறு நதிகளிலிருந்து புண்ணிய தீர்த்தத்துடன் வந்தார்கள். ஸுஷேணன், ரிஷபன், கவயன், நளன் நால்வரும் முறையே நாலா திசை சமுத்திரங்களிலிருந்தும் புனித நீரைக் கொணர்ந்தார்கள்.
பேரருள் பெற்றவரும் தசரத குல குருவுமான வசிஷ்ட மகரிஷி, புலன்களையும் புத்தியையும் சமன் செய்து, பிராமணர்களின் சம்மதத்துடன் ஸ்ரீராமனை ரத்தின ஒளிவீசும் சிம்மாசனத்தில் அமரும்படி செய்தார்.
ராமம் ரத்னமயே பீட
ஸஹஸுதம் ந்யவேசயத்
பட்டாபிஷேக வைபவம் பவித்திரமாகத் திகழ்ந்தது. வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காச்யபர், காத்யாயநர், ஸுயஜ்ஞர், கௌதமர், விஜயர் ஆகிய எட்டு மகா ஞானியர்களும் நிகழ்த்திய பட்டாபிஷேகம். எண்மரும் வேதச் சீர்மையுடன் மந்திரங்களை உச்சாடனம் செய்து ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியை மணமிகுந்த திரவியங்கள் கலந்த புண்ணிய தீர்த்தத்தால் நெறிமுறைகளின்படி பட்டாபிஷேகத்தை நிறைவேற்றினார்கள். வானத்தில் திக்பாலர்களும் தேவகணங்களும் பேருவகை கொண்டார்கள். சத்ருக்னர் வெண்குடை பிடித்தார். சுக்ரீவன் வெண் சாமரம் வீசினார். வாயுபகவான் தங்கத் தாமரைகளாலான ஒளி கூடிய மாலைகளையும், ஒன்பது ரத்தினம் சேர்ந்த முத்து மாலையையும் கொணர்ந்தார். பூமி செழித்தது. மரங்களில் கனிகள் நிறைந்தன. பசுக்களையும், கன்றுகளையும், தங்க நாணயங்களையும், ஆபரணங்களையும் ஸ்ரீராமன் தானமாக வழங்கினார். சுக்ரீவனுக்குத் தங்க மாலையையும், அங்கதனுக்குத் தங்கத்தோள் வளைகளையும் வழங்கினார். சீதாதேவியிடம் சந்திரன் போன்று பிரகாசமான முத்துமாலையை வழங்கினார். பிராட்டியும் மணாளனின் விருப்பத்தை ஜாடையால் அறிந்து, அம்மாலையை அனுமனுக்கு அளித்தாள். விபீஷணர், ஸ்ரீரங்க விமானத்தைப் பெற்று லங்காபுரி சென்றார். தசரத குமாரனான ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி, குடிமக்கள் அனைவரையும் தமது குழந்தைகளாக நினைத்து பரிபாலனம் நடத்தி வந்தார். லக்ஷ்மணனை இளவரசாக இருக்கக் கோரினார். லக்ஷ்மணர் இசையவில்லை. பரதனுக்கு இளவரசுப் பட்டம் நிகழ்ந்தது. சிம்மாசனத்தைத் தாங்கி நிற்கிறான் அனுமன். அங்கதன் வாள் ஏந்த, பரதன் வெண்குடை தாங்க, மற்ற இரு சகோதர்களும் சாமரம் வீச, சீதையின் உவகை ஓங்க, வசிஷ்டர் மகுடம் சூட்டுகிறார். அச்வமேதம், வாஜபேயம் போன்ற யாகங்களைப் புரிந்து, ஸ்ரீராமன் ஆட்சி ராமமயமாகவே இருந்தது.

உலக இறுதி நாட்களில் ஏற்படும் அடையாளங்கள் என்று நபி முஹம்மது (ஸல்) அவர்கள் குறிப்பிட்டவைகள்.


* அநீதி பெருகிவிடும்.
* பொய் உண்மையாகும்.
* தீர்ப்புகள் நியாயமானதாக இருக்காது.
* மனித உள்ளங்கள் மாசு படிந்திருக்கும்.
* இலேசன விஷயத்திற்கெல்லாம் கொலை செய்வார்கள்.
*
*
* வட்டியைச் சாப்பிடுவார்கள்.
* ஆண்கள் பட்டாடை அணிவார்கள்.
* உறவினர்களை துண்டித்து வாழ்வார்கள்.
* கட்டிடங்களை உயர உயரமாக கட்டுவார்கள்.
* உலக ஆதாயங்களுக்காக மார்க்கத்தை விற்பார்கள்.
*
*
* மழை பொழியாது.
* பூகம்பம் ஏற்படும்.
* சிகப்பு சூறாவளி காற்று வீசும்.
* வானத்திலிருந்து கல்மாரி பொழியும்.
* பாவமான செயல்கள் அதிகமாகி விடும்.
*
*
* பொய்யனை மெய்யனாக ஆக்குவார்கள்.
* மெய்யனைப் பொய்யனாக ஆக்குவார்கள்.
* அவதூறுகள் (வீண்பழிகள் சுமத்துவது) பரவலாகி விடும்.
* மோசடிக்காரர்களை மக்கள் நம்பிக்கையாளர்கள் என நினைப்பார்கள்.
* நம்பிக்கையாளர்களை மக்கள் மோசடிக்காரர்கள் என நினைப்பார்கள்.
*
*
* பள்ளிவாசல்கள் அலங்கரிக்கப்படும்.
* குர்ஆன் பிரதிகள் அலங்கரிக்கப்படும்.
* மினராக்கள் உயர உயரமாக கட்டுவார்கள்.
* குர்ஆனை ஓதிக் கொண்டே பாவங்கள் செய்வார்கள்.
* தீயவர்களின் சப்தம் பள்ளி வாசல்களில் அதிகமாகி விடும்.
*
*
* திடீர் மரணம் அதிகமாகி விடும்.
* விவாகரத்து (தலாக்) அதிகமாகி விடும்.
* குழந்தைகள் அதிகம் பெற்றெடுப்பதை வெறுப்பார்கள்.
* தகுதி குறைந்தவர்கள், உயர் ரக வாழ்க்கை வாழ்வார்கள்.
* கண்ணியத்திற்குறியவர்கள் வசதி வாய்ப்பின்றி வாழ்வார்கள்.
*
*
* அக்கிரமம் செய்வதை பெருமையாகக் கருதுவார்கள்.
* நம்பிக்கைக்கு உரியவர்கள் கூட மோசடி செய்வார்கள்.
* தலைவர்களும், மந்திரிகளும் பொய்யர்களாக இருப்பார்கள்.
* கூட்டத்தில் இழிவுக்குறியவன் அவர்களுக்குத் தலைவராகி விடுவான்.
* செருப்பில்லாமல் நடப்பவர்கள், ஆடையின்றி இருப்பவர்கள் கூட தலைவர்களாக ஆகிவிடுவார்கள்.
*
*
* பாதுகாப்பு குறைந்து விடும்.
* காவலர்கள் அதிகமாக இருப்பார்கள்.
* மதுபானங்கள் அருந்துவது அதிகரிக்கும்.
* மக்கள் நீதத்தை லஞ்சம் கொடுத்து மாற்றுவார்கள்.
* பொய்யை ஒரு கலையாக சாமர்த்தியமாக நினைப்பார்கள்.
*
*
* இசைக் கருவிகள் அதிகமாகி விடும்.
* இசையைப் போன்று குர்ஆனை ஓதுவார்கள்.
* பாட்டுப் பாடும் பெண்கள், கண்ணியம் செய்யப்படுவார்கள்.
* மக்கள் மிருகங்களின் தோலினாலான ஆடையை அணிவார்கள்.
* எவ்விதம் உயர்ரக ஆடைகளை அணிந்தாலும், அவர்களின் உள்ளங்கள் செத்த பிணங்களை விட, மிக மோசமானதாக இருக்கும்.
*
*
* ஆண்கள் பெண்களைப் போன்று நடிப்பார்கள்.
* பெண்கள் ஆண்களைப் போன்று நடிப்பார்கள்.
* கணவன் மனைவிக்குக் கட்டுப்பட்டு நடப்பான்.
* கணவருடன் மனைவி வியாபாரத்தில் ஈடுபடுவாள்.
* அடிமைபெண் (தனக்கு கட்டளையிடும்) எஜமானியைப் பெற்றெடுப்பாள். (அதாவது பெண் மக்கள் தனது தாயை வேலைக்காரியைப் போன்று வழி நடத்துவார்கள்)
*
*
* தனது தாயை வெறுத்து விடுவான்.
* தனது நண்பனுக்கு கேடு செய்வான்.
* மகன் தந்தையை நோவினை செய்வான்.
* முஸ்லிம் பொய் சாட்சி கூறத் தயாராகி விடுவான்.
* அறிமுகம் உள்ளவர்களுக்கு மட்டும் ஸலாம் கூறுவார்கள்.
*
*
* தங்கம் பயன்பாட்டில் அதிகமாக இருக்கும்.
* வெள்ளி பயன் படுத்துதல் குறைந்து விடும்.
* விலங்கினங்களின் தோலைப் பயன்படுத்துவார்கள்.
* நடக்கும் பாதைகளில் மதுபானங்கள் அருந்துவார்கள்.
* பிற்காலத்தவர் முற்காலத்தவர்களைத் திட்டுவார்கள். சாபமிடுவார்கள்.
*
*
* பொறுமையாளர்கள் அநீதம் புரிவார்கள்.
* ஜகாத் கொடுப்பதை அபராதமாக நினைப்பார்கள்.
* தீனுக்காக அல்லாமல் உலக ஆதாயத்திற்காக கல்வி கற்பார்கள்.
* அல்லாஹ் அல்லாத உலக வஸ்துக்களின் மீது சத்தியம் செய்வார்கள்.
* தொழுகையை மரணிக்கச் செய்வார்கள். அதாவது தொழுகைக்கு முக்கியத்துவம் தர மாட்டார்கள், அதை முறைப்படி நிறைவேற்ற மாட்டார்கள்.
*
*
* குற்றங்களுக்குறிய ஷரீஅத் தண்டனைகள் நிறைவேற்றப் படாது.
* கனீமத் பொருட்களை தங்கள் சொந்தப் பொருள்களைப் போன்று பயன்படுத்துவார்கள்.
* மனிதர்களின் உருவங்களை உருமாற்றம் செய்யப்படும் மற்றும் பல அடையாளங்கள் நிகழும்.
* அமானிதப் பொருள்களை போரில் கிடைத்த (கனீமத்)பொருளைப் போன்று எடுத்துக்கொள்வார்கள்.
* அமானிதப் பொருட்களை வீணாக்கி விடுவார்கள். அதாவது அமானிதப் பொருள்களைக் கொடுத்து வைத்திருந்தால் அதில் மோசடி செய்வார்கள்.


இத்தகைய செயல்கள்(பாவங்கள்) ஏற்படும் போது,
இந்த உலகின் இறுதி நாளை எதிர் பாருங்கள்.
*
என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக
ஹுதைபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
*
ஆதார நூல்: - துர்ருல் மன்சூர். பக்கம் :-56.