Search This Blog

Tuesday, September 1, 2015

ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் 10 அறிகுறிகள்!

இவ்வுலகில் பிறப்பு என்ற ஒன்று இருந்தால், இறப்பு என்ற ஒன்று நிச்சயம் இருக்கும். பிறப்பை கண்டு மகிழும் நாம், இறப்பைப் கண்டு அச்சமடைவோம். சாதிக்கும் எண்ணம் இருக்கும் யாருக்கும் இறக்க வேண்டுமென்ற எண்ணம் இருக்காது. இருப்பினும், நிச்சயம் ஒரு கட்டத்தில் அனைவரும் இறக்க நேரிடும். அதை யாராலும் தடுக்க முடியாது.இத்தகைய இறப்பை சந்திக்கும் முன்பு ஒருசில அறிகுறிகள் தென்படும். மேலும் சிவபுராணத்தில் ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஒருவன் இறக்கப் போகிறான் என்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள் :
அறிகுறி 1 :
எப்போது ஒருவரது சருமத்தின் நிறமானது வெளிர் மஞ்சளாகவோ அல்லது வெள்ளையாகவோ அல்லது லேசான சிவப்பாக மாற ஆரம்பித்தால், அது அவர் இன்னும் 6 மாத காலத்தில் உயிரை விடப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 2 :
எப்போது ஒருவனால் அவனது பிம்பத்தை எதிரொலியை தண்ணீரிலோ அல்லது கண்ணாடியிலோ தெளிவாக காண முடியவில்லையோ, அத்தகையவர்களும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்பதை வெளிப்படுத்துமாம்.
அறிகுறி 3 :
எப்பொழுது ஒருவனுக்கு பார்க்கும் அனைத்தும் கருப்பாக தெரிய ஆரம்பிக்கிறதோ, அவர்களும் இறப்பை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 4 :
ஒருவரது இடது கை மட்டும் ஒரு வாரத்திற்கு மேல் துடிக்கவோ அல்லது நடுங்க ஆரம்பிக்கிறதோ, அவர்கள் ஒரு மாதத்திற்கு மேல் உயிருடன் இருக்கப் போவதில்லை என்று அர்த்தமாம்.
அறிகுறி 5 :
ஒருவரின் உணர்ச்சிமிக்க உறுப்புக்கள் இறுக்கமடைந்து கல் போன்று மாறுகிறதோ, அவர்களும் இன்னும் கொஞ்ச மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 6 :
நிலா, சூரியன் அல்லது நெருப்பின் ஒளியை சரியாக காணமுடியவில்லையோ, அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 7 :
எப்போது ஒருவரின் நாக்கு வீக்கமடைந்து, ஈறுகளில் சீழ் கட்ட ஆரம்பிக்கிறதோ, அவர்கள் இவ்வுலகில் நீண்ட நாட்கள் வாழப் போவதில்லை என்று அர்த்தம்.
அறிகுறி 8 :
ஒருவரால் வானத்தில் உள்ள நட்சத்திரங்களை காண முடியவில்லையோ, அவரும் ஆறு மாதத்தில் இறக்கப் போகிறார் என்று அர்த்தம்.
அறிகுறி 9 :
சூரியன், நிலா மற்றும் வானத்தை பார்க்கும் போது, அவை சிவப்பாக தெரிய ஆரம்பித்தால், அத்தகையவர்களும் விரைவில் மரணத்தை சந்திக்கப் போகிறார் என்று அர்த்தமாம்.
அறிகுறி 10 :
ஒருவரின் கனவில் ஆந்தையோ, வெற்றிடமோ அல்லது கிராமம் அழிவது போன்றோ வந்தால், அவரும் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் என்று அர்த்தமாகும்

மேஜிக் மேதைகள்


சுமார் இருபது அடி நீளமுள்ள தடிமனான கயிறு அது. அதனை கையில் ஏந்தியிருந்த அந்த மாயவித்தைக்காரர் கண்களை மூடி தன் தலையை குனிந்திருந்தார். அவரது உதடுகள் ஏதோ மந்திரத்தை முணுமுணுத்தபடி இருந்தன. கூட்டம் அசுவாரசியமாக சலசலத்துக் கொண்டிருந்தது. மாயவித்தைக்காரர் கயிறைக் காற்றில் சுழற்ற ஆரம்பித்தார். வேகமாகச் சுழற்றியபடியே கயிறை வான் நோக்கி வீசினார். கூட்டத்தின் பார்வை மேல்நோக்கி உயர்ந்தது. மீண்டும் கீழிறங்கவில்லை. கயிறும்தான். வானுக்கும் நிலத்துக்கும் பாலமாக கம்புபோல விறைத்து நின்றது.
'ஏ பையா! ஏறு அதிலே!
அந்தச் சிறுவன் கூட்டத்தினரைப் பார்த்து கைகளை சந்தோஷமாக அசைத்தான். விறைத்து நின்று கொண்டிருந்த கயிறைப் பற்றினான். வாலில்லா குரங்குபோல சடசடவென கயிறில் ஏறினான். கயிறு வளையவோ, நெளியவோ, சுருண்டு விழவோ இல்லை. கயிறின் உச்சியை அடைந்தான்.பறக்கும் விமானம் ஒன்று மேகத்துக்குள் மறைவதுபோல, காணாமல் போனான். கூட்டம் வாய்பிளந்தது.
மாயவித்தைக்காரர் பி.எஸ். வீரப்பாவின் ஜெராக்ஸ் சிரிப்பு ஒன்றை சிரிக்க, யாருக்கும் பதிலுக்குச் சிரிக்கத் தோன்றவில்லை. அவர், வாள் ஒன்றைத் தன் பற்களால் கவ்வியபடி, கயிற்றைப் பிடித்தார். விறுவிறுவென மேலே ஏறினார். உச்சியை அடைந்தார். வாளைக் கையில் எடுத்தார். சூரிய ஒளிபட்டு வாளின் முனை பளபளத்தது. கூட்டத்தினர் கண்கள் கூச வான்நோக்கி மெளனமாக 'ஆ' உச்சரித்துக் கொண்டிருந்தனர்.
மாயவித்தைக்காரர் தன் வாளை காற்றை வெட்டுவதாக சில முறை குறுக்கும் நெடுக்கமாக வீசினார். ஒரு சில நொடிகள் கடந்திருக்கும். மேலே ஏறிச் சென்று மாயமாகிப் போன சிறுவனின் உடல் பல துண்டுகளாகத் தரையில் விழுந்தது. கூட்டம் அதிர்ந்து சில அடிகள் விலகி நின்றது. சிலர் மயங்கிக் கூட விழுந்தனர். மாயவித்தைக்காரர், ரத்தம் சொட்டும் வாளைத் தன் பற்களால் கவ்வியப்படி சரசரவென கீழே இறங்கினார். கண்களால் கயிற்றுக்கு கட்டளை இட்டார். அது பெட்டி பாம்புபோல சுருண்டு விழுந்தது..
மீண்டும் அந்த வில்ல சிரிப்பு. அடேய் படுபாவி கொலைகார என்று சிலர் மாயவித்தைக்காரரை மனத்துக்குள் சபிக்க ஆரம்பித்திருந்தனர். அவரோ தன் வாளை உறைக்குள் சொருகிவிட்டு ஒரு கம்பளத்தை எடுத்து உதறி தரையில் விரித்தார். சிதறிக் கிடந்த அந்தச் சிறுவனின் உடல் துண்டுகளை அந்த கம்பளத்தில் ஓர் ஒழுங்குப்படி அடுக்கினார். அந்த கம்பளத்தை சுருட்டினார். மீண்டும் கண்களை மூடி ஏதோ மந்திரத்தை முணுமுணுக்க ஆரம்பித்தார். அடுத்து நிகழவிருப்பது அதிசயமா அல்லது மீண்டும் அதிர்ச்சிதானா? கூட்டத்தினரின் கணகள் விரிந்து கிடந்தன.
கம்பள மூட்டை அசைந்தது. படாரென கம்பளத்துக்குள் இருந்து அந்தச் சிறுவன், முழுமையான உடலுடன் எந்தவிதக் காயமும் இன்றி பழையபடி சிரித்துக்கொண்டு எழுந்து நின்றான். கூட்டத்தினரை நோக்கி கையை அசைத்தான். எழுந்த ஆரவார ஒலியை மாயவித்தைக்காரர் பெருமிதத்துடன் எதிர்கொண்டார்.
இந்த வித்தை இந்தியாவிலும் ஆசியாவின் சில பகுதிகளிலும் நடத்தப்பட்டதுதான். இந்த மாயவித்தையை உருவாக்கியது யார், எந்த காலகட்டத்திலிருந்து அரங்கேற்றப்படுகிறது என்ற வரலாறு தெரியவில்லை ஆனால் இந்தியாவுக்கு வந்த மார்க்கோ போலோ, இபின் பதூத்தா உள்ளிட்ட வெளிநாட்டு பயணிகள் இந்த கயிறு வித்தை குறித்து வியந்து எழுதி வைத்திருக்கிறார்கள். மகுடி ஊதினால் சுருண்டு கிடக்கும் கயிறு, பாம்பை போல படமெடுத்து எழுத்து அப்படியே வானை நோக்கி உயரமாக வளரும் வித்தை குறித்தும் வியந்திருக்கிறார்கள். உயிரை விட்டு உடல் மாற்றுவது உள்ளிட்ட பல அதிசயங்களை நிகழ்த்திய மாயவித்தைக்காரர்கள் இந்தியாவில் இருந்திருக்கின்றனர் என்ற வாதங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன..
நன்றி-முகில்

'Oldest' Quran ( Koran) fragments found in Birmingham University

Carbon dating suggests that the Quran, or at least portions of it, may actually be older than the Prophet Muhammad himself.
If the findings are proved true, it could rewrite early Islamic history and shed doubt on the "heavenly" origins of the holy text.
Scholars now believe that a copy Quran held by the Birmingham Library was actually written sometime between A.D. 545 and 568, while the Prophet Muhammad was believed to have been born in A.D. 570 and to have died in 632. The copy of the widely used holy text held by the library is known for being one of the oldest in the world.
Scholars came to this conclusion after researchers carbon dated a small piece of parchment from the Islamic holy book. The carbon dating, which is considered to be extremely accurate, suggests that the Quran may have actually been written before Muhammad was alive, or during the early years of his childhood.
The Quran held by the Birmingham Library is believed to be the oldest known copy in the world. It should be noted, however, that the documents held at the library are not a complete copy of the holy text, instead containing text only for suras (chapters) 18 to 20.
If the carbon dating analysis proves to be accurate, it would raise serious questions as to the origin of the Islamic holy book. It should be noted, however, that the dating was conducted only on the parchment, rather than the ink, so it is possible that the Quran was simply written on old paper.
The Quran was not officially written down until 653 AD, under the orders of the Caliph Uthman, though it is believed that partial written scripts of the Quran were in circulation beforehand. Before the Quran was inked onto paper it was passed along orally, with some devout believers choosing to memorize the entire text by heart.
Some scholars believe, however, that Muhammad did not receive the Quran from heaven, as he claimed during his lifetime, but instead collected texts and scripts that fit his political agenda.


Read more: http://www.businessinsider.com/

பிரித்தானியாவில் கண்டுபிடிக்கப்பட்ட குரான் உலகில் மிகவும் பழமையானது என்றும் முகமது நபிகள் காலத்துக்கு முன்பாகவே எழுத்தப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் பெர்மிங்கம்(Birmingham) பகுதியில் பழமையான குரானின் படிமங்கள் கடந்த மாதம் கிடைத்தன.
இந்த படிமங்கள் விலங்குகளின் தோல்களில் எழுதப்பட்டிருந்தது.
இதையடுத்து இந்த படிமங்களின் காலத்தை கணக்கிட்ட ஆக்ஸ்வோர்ட் பல்கலைக்கழகத்தின் வல்லுனர்கள், இது தான் உலகிலேயே பழமையாக குரான் என்று தெரிவித்துள்ளனர்.
முகமது நபிகளின் காலம் கிபி 570-632 என்றும் குரான் கிபி 610-632ஆம் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்று கூறப்படுகிறது.
ஆனால் விலங்குகளின் தோலில் எழுதப்பட்டிருந்த இந்த குரான் கிபி 568- 645 காலகட்டத்தை சேர்ந்தது என்று நம்பப்படுகிறது.
மேலும் இதில் முகமது நபிகள் பற்றிய குறிப்புகள் இருக்கக்கூடும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கெயித் ஸ்மால் என்ற ஆராய்ச்சியாளர் கூறியதாவது, முன்பு இருந்த வாசகங்களையே முகமது நபிகள் மக்களுக்கு கூறியுள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போதைய குரானின் உள்ள எழுத்துகளே இதில் இடம்பெற்றுள்ளதாகவும் சில எழுத்துகள் மட்டுமே மாற்றம் அடைந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்களின் இந்த முடிவு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.