Search This Blog

Monday, April 20, 2015

தாலி அறுத்தான் சந்தை ,,,,,! ஆடை அணிய கூடாது என்றது ஒரு சட்டம்.



ஆடை இல்லா மனிதன் அரைமனிதன்" - ஆடை அணிய கூடாது என்றது ஒரு சட்டம்.
ஆம்,
10 மற்றும் 11- ஆம் நுற்றாண்டுகளில் ஆரியப் பிராமணர்களின் (நம்பூதிரிகள்) ஆதிக்கம் சேர நாட்டில் ஓங்கத் தொடங்கியது. அந்த வேளையில் கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் சாதிக் கட்டுபாட்டுக்குள் வந்தன.
நமக்கு தெரியுமோ என்னவோ, நம்பூதிரிகள் யார் என்று? மலையாளம் மொழியை தாய்மொழியாக கொண்ட பிராமணர்கள். ( ஆதிசங்கரர் இந்த இனத்தை சேர்ந்தவர் தான்).
ஜென்மி சம்பிரதாயத்தின் ஆதிக்கத்தால் 12 - ஆம் நூற்றாண்டில் இந்தக் கட்டுப்பாடுகள் அதிகரித்தது. மேல் சாதி இந்து என்றும், கீழ் சாதி இந்து என்றும் பாகுபாடுகள் உருவாகியது.இந்த பாகுபாட்டால் தாழ்த்தப்பட்ட மக்கள் இடுப்புக்கு மேலும், முழங்காலுக்கு கீழும் ஆடை அணியக்கூடாது என்றக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
இந்த விதிப்படி அவர்கள் சாதி வரிசையை உருவாக்கினார்கள்.
உயர்ந்த சாதி இந்துக்களின் முன்பு தாழ்த்தப்பட்ட பெண்கள் மார்பகங்களை மறைக்ககூடாது .
பிராமணர்கள் முன்பு தாழ்த்தப்பட்ட அனைத்து பெண்களும் மார்பகங்களை மறைக்காமல் நடமாட வேண்டும்.அப்படி அவர்கள் மறைத்து நடந்தால், தங்களுக்கு மரியாதை தரவில்லை என்று தண்டித்து வந்தனர். மரண தண்டனை கூட விதித்தனர்.
இந்த வரிசையில் நாடார், முக்குவர், புலையர் போன்ற பதினெட்டுக்கும் மேற்பட்ட சாதிகள் இந்த விதிக்கு உட்படுத்தப்பட்டனர். இதில் நாடார் இனத்தவர் சீர்திருத்த கிருத்தவ மதத்தில் இணைந்து சார்ல்சு மீட் என்ற பாதிரியாரின் அறிவுரைப்படி, பெண்கள் தங்களின் மார்பகங்களை மறைத்தது மட்டும் அல்லாது அதற்கு மேல் சேலையும் அணிய ஆரம்பித்தனர்.
இதை விரும்பாத மேல் சாதி இனத்தவர் 1822 - இல் கலவரத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சனை பெரிதாக, மீட் ஆங்கில தளபதிக்கு விரிவாக கடிதம் எழுதினார். அதன் பயனாக இந்த பிரச்சனை நீதிமன்றத்துக்கு வந்தது. கிருத்தவ பெண்கள் குப்பாயம் என்ற வகை ஆடையை பயன்படுத்தலாம் என்று நீதிமன்றம் 1823 - இல் தீர்ப்பு விதித்தது.
இந்த தீர்ப்பு நிரந்தரமான தீர்வாக இல்லாததால் 1827 - இல் ஆத்தூர் (கன்னியாகுமரி மாவட்டம்) மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இப்பிரச்சனை மிக பெரிய அளவில் பரவியது. இதற்கு காரணம் இந்த கிருத்தவ இன பெண்கள் தங்களுக்கு சொன்ன தீர்ப்பின் படி குப்பாயம் அணியாமல் ஐரோப்பியர்களின் ஆடைகள் மற்றும் உயர் சாதிக்காரர்களின் ஆடைகளை அணிய ஆரம்பித்தனர். இவர்களை பார்த்து இந்து நாடார் இனத்தவரும் மேலாடைகள் அணியும் பழக்கத்திற்கு வந்தனர்.
இது ஒருபுறம் நடந்து முடிய, 1858 - இல் விக்ட்டோரிய மகாராணியின் வருகையால், இந்த தோள் சீலை போராட்டம் மேலும் தீவிரம் அடைந்தது. இங்கிலாந்து பாராளுமன்றத்தில் இந்தியாவை ஆங்கிலேய கிழக்கு இந்திய கம்பெனியிடமிருந்து அரசாங்க கட்டுப்பாட்டில் கொண்டு வரும் போது நடந்தது. உயர் சாதிக்காரர்கள் ஆங்கிலேய அரசிடம் முறையிட்டு சரிவர அமையாததால் பெரும் கலவரம் வெடித்தது.
மேல் சாதி காரர்கள் நாடார்குல மற்றும் கிருத்தவ பெண்களின் குப்பாயத்தை கிழித்தும் அவர்களை துன்புறுத்தியும் வந்தனர். அவர்களின் அருகாமையில் சென்றால் தீட்டு என்பதால் நீண்ட கழியின் முனையில் அரிவாளை கட்டி அவர்களின் மேலாடையை கிழித்தனர். அப்படி கிழிக்கும் போது ஒருநாள் சந்தைக்கு வந்த ஒரு பெண்ணின் குப்பாயதோடு தாலியும் அறுந்து விழ்ந்தது. அன்றிலிருந்து அந்த சந்தைக்கு தாலி அறுத்தான் சந்தை என்று பெயர் வந்தது. கன்னியாகுமரியில் உள்ள இந்த சந்தை இன்றும் தாலி அறுத்தான் சந்தை என்றே அழைக்கப்படுகிறது.
இப்போராட்டத்தின் முடிவில், அனைத்து நாடார் பெண்களும் மத வேறுபாடு இல்லாமல் குப்பாயம் என்கின்ற மேலாடை அணியலாம் என்று உரிமை அளித்தனர். இதற்கான அரசாணை 26, சூலைத் 1859 ம் ஆண்டு வெளியிடப்பட்டது. ஆனால் உயர் சாதி பெண்கள் அணிவது போன்ற ஆடை அணிய தடை விதிக்கப்பட்டது. இந்த உரிமை மற்ற கீழ் சாதியினருக்கு அரசு வழங்கவில்லை. எனினும் கிறித்தவப் பெண்கள் அனைவரும் மேலாடை அணிந்தனர்.
இந்த கதை குறிப்பிட்டதற்கு காரணம்,
முட்டாள்கள் இன்னும் அடிமையாய் வாழவே விரும்புகிறார்கள் அவர்கள் இதை அறியமாட்டார்கள் ,,,,
அதற்க்கு தான்

Friday, April 17, 2015

How Structure Arose in the Primordial Soup


Life’s first epoch saw incredible advances — cells, metabolism and DNA, to name a few. Researchers are resurrecting ancient proteins to illuminate the biological dark ages.
About 4 billion years ago, molecules began to make copies of themselves, an event that marked the beginning of life on Earth. A few hundred million years later, primitive organisms began to split into the different branches that make up the tree of life. In between those two seminal events, some of the greatest innovations in existence emerged: the cell, the genetic code and an energy system to fuel it all. All three of these are essential to life as we know it, yet scientists know disappointingly little about how any of these remarkable biological innovations came about.
“It’s very hard to infer even the relative ordering of evolutionary events before the last common ancestor,” said Greg Fournier, a geobiologist at the Massachusetts Institute of Technology. Cells may have appeared before energy metabolism, or perhaps it was the other way around. Without fossils or DNA preserved from organisms living during this period, scientists have had little data to work from.
Fournier is leading an attempt to reconstruct the history of life in those evolutionary dark ages — the hundreds of millions of years between the time when life first emerged and when it split into what would become the endless tangle of existence.
He is using genomic data from living organisms to infer the DNA sequence of ancient genes as part of a growing field known as paleogenomics. In research published online in March in the Journal of Molecular Evolution, Fournier showed that the last chemical letter added to the code was a molecule called tryptophan — an amino acid most famous for its presence in turkey dinners. The work supports the idea that the genetic code evolved gradually.
Using similar methods, he hopes to decipher the temporal order of more of the code — determining when each letter was added to the genetic alphabet — and to date key events in the origins of life, such as the emergence of cells.
Photo Credits : Olena Shmahalo/Quanta Magazine 

Primordial soup" hypothesis

No new notable research or theory on the subject appeared until 1924, when Alexander Oparin reasoned that atmospheric oxygen prevents the synthesis of certain organic compounds that are necessary building blocks for the evolution of life. In his book The Origin of Life, Oparin proposed that the "spontaneous generation of life" that had been attacked by Louis Pasteur did in fact occur once, but was now impossible because the conditions found on the early Earth had changed, and preexisting organisms would immediately consume any spontaneously generated organism. Oparin argued that a "primeval soup" of organic molecules could be created in an oxygenless atmosphere through the action of sunlight. These would combine in ever more complex ways until they formed coacervate droplets. These droplets would "grow" by fusion with other droplets, and "reproduce" through fission into daughter droplets, and so have a primitive metabolism in which factors that promote "cell integrity" survive, and those that do not become extinct. Many modern theories of the origin of life still take Oparin's ideas as
a starting point.

Robert Shapiro has summarized the "primordial soup" theory of Oparin and Haldane in its "mature form" as follows:

1.The early Earth had a chemically reducing atmosphere.

2.This atmosphere, exposed to energy in various forms, produced simple organic compounds ("monomers").

3.These compounds accumulated in a "soup" that may have concentrated at various locations (shorelines, oceanic vents etc.).

4. By further transformation, more complex organic polymers – and ultimately life – developed in the soup.

Around the same time, J. B. S. Haldane suggested that the Earth's prebiotic oceans—different from their modern counterparts—would have formed a "hot dilute soup" in which organic compounds could have formed. J.D. Bernal, a pioneer in x-ray crystallography, called this idea biopoiesis or biopoesis, the process of living matter evolving from self-replicating but nonliving molecules, and proposed that biopoiesis passes through a number of intermediate stages.

One of the most important pieces of experimental support for the "soup" theory came in 1952. Stanley Miller and Harold Urey, performed an experiment that demonstrated how organic molecules could have spontaneously formed from inorganic precursors, under conditions like those posited by the Oparin-Haldane Hypothesis. The now-famous "Miller–Urey experiment" used a highly reduced mixture of gases—methane, ammonia and hydrogen—to form basic organic monomers, such as amino acids.[63] This provided direct experimental support for the second point of the "soup" theory, and it is around the remaining two points of the theory that much of the debate now centers. In the Miller–Urey experiment, a mixture of water, hydrogen, methane, and ammonia was cycled through an apparatus that delivered electrical sparks to the mixture. After one week, it was found that about 10% to 15% of the carbon in the system was now in the form of a racemic mixture of organic compounds, including amino acids, which are the building blocks of proteins.

Bernal shows that based upon this and subsequent work there is no difficulty in principle in forming most of the molecules we recognise as the basic molecules of life from their inorganic precursors. The underlying hypothesis held by Oparin, Haldane, Bernal, Miller and Urey, for instance, was that multiple conditions on the primeval Earth favored chemical reactions that synthesized the same set of complex organic compounds from such simple precursors. A 2011 reanalysis of the saved vials containing the original extracts that resulted from the Miller and Urey experiments, using current and more advanced analytical equipment and technology, has uncovered more biochemicals than originally discovered in the 1950s. One of the more important findings was 23 amino acids, far more than the five originally found.However Bernal said that "it is not enough to explain the formation of such molecules, what is necessary" he says "..is a physical-chemical explanation of the origins of these molecules that suggests the presence of suitable sources and sinks for free energy.

Greg Fournier, a geobiologist at MIT, is searching for the origins of the genetic code.

Thursday, April 16, 2015

Very Useful TIPS For Traveling


Hindu Temple and the Structure of Human Body: Comparison


"Everything is governed by one law. A human being is a microcosmos, i.e. the laws prevailing in the cosmos also operate in the minutest space of the human being."
Hindu Temples take their cue from the structure of Human body. The vast Hindu canonical literature on Agamic texts, Devalaya Vastu (Temple Vastu astrology) and sacred geography describe the temple as a cosmic man, the 'Purusha' (cosmic man). The legend of the ‘Vastu Purusha’ states that Vastu Purusha blocked the heaven from the Earth and Lord Brahma along with many other Gods trapped him to the ground.
The science of Vastu is believed as part of the Indian architecture. Vastu Shastra developed during the period of 6000 BC and 3000 BC and the ancient Indian text Mayamatam represents Vastu Purusha as the presiding deity for all land structure meant for temples or houses. Vastu Purusha Mandala is the metaphysical plan of a temple incorporating course of the heavenly bodies and supernatural forces. This Mandala square is divided into (8×8 =64) 64 metaphysical grids / modules or pada for temples. (For dwelling places 9x9=81 metaphysical grids / modules or pada). At this square Vastu Purusha is shown lying with his chest, stomach and face touching on the ground - his head is shown at Ishanya (north-east) and his legs shown at Nairutya (south west). The center point is known as Brahmasthana and at this vital energy point Lord Brahma presides over the temple site and protects it.
Directions in Hindu tradition are called as Disa, or Dik. There are four primary directions and a total of 10 directions: East, South-East (Agneya), West, North-West (Vayavya), North, North-East (Isanya), South, South-West (Nauritya), Zenith (Urdhva), Nadir (Adho). There are 'Guardians of the Directions' (Dikpala or Dasa-dikpala) who rule the specific directions of space.
1. North east Direction ruled by Ishanya Shiva (Load of Water) influences balanced thinking
2. East Direction ruled by Indra (Load of Solar) - influences long life
3. South east Direction ruled by Agneya or Agni (Load of Fire) (Energy Generating) influences comfort, peace, prosperity and progeny.
4. South Direction ruled by Yama (Lord of Death or Lord of Death / Damage) yields nothing but mourning, depression and pain. If this direction used properly safeguards from envy of others and cast of all evils.
5.West Direction ruled by Varuna (Load of Water / Lord of Rain) (Neptune) influences reputation, fame, prosperity and success.
6. South west Direction ruled by Nairitya - Deity Lord (Demon) Nairitya influences Protection, strength and stability
7. North west Direction ruled by Vayu or Vayavya (Load of Wind) influences peace
8. North (Kuber) - Deity Lord Kuber or Lord of Wealth (Finance) and keeper of riches influences good strength, better business sufficient in flow of money, education, industrial growth etc.
9. Center ruled by Lord Brahma (Creator of Universe)
The 'Aham Brahmasmi' ("I am Brahman. I am part of the Universe.") is the great sayings (Mahavakya) mentioned in Brihadaranyaka Upanishad 1.4.10. of Yajur Veda. The meaning is that ‘Whatever is in the Universe, is present in me’ (and ‘whatever is in me, is part of the Universe’). Indian temples represents the macrocosm of the universe and the structure of the human body represents the microcosm. Veda also says "Yatha Pinde tatha Brahmande". It means what is going on within human being is the same as what is going on in universe. According to the Tamil Saint Tirumular "our body is a temple". Here I would like to quote Stella Kramrisch:
“The vastu-purusha-mandala represents the manifest form of the Cosmic Being; upon which the temple is built and in whom the temple rests. The temple is situated in Him, comes from Him, and is a manifestation of Him. The vastu-purusha-mandala is both the body of the Cosmic Being and a bodily device by which those who have the requisite knowledge attain the best results in temple building.” (Stella Kramrisch,; The Hindu Temple, Vol. I)
The concept of chakra features in tantric and yogic traditions of Hinduism. In Yoga, Kundalini Shakti means the ‘coiled power.’ It is compared to a serpent that lies coiled while resting or sleeping.
Chakras are vital energy points (Kundalini energy) in the human anatomy, i.e. breath channels, or nadis, and the winds (vayus), that are centres of life force (prana), or vital energy. They include: 1. Muladhara, 2. Swadhisthana, 3. Manipura or manipuraka, 4. Anahata, Anahata-puri, or padma-sundara, 5. Vishuddha or Vishuddhi, 6. Ajna and 7. Sahasrara.
1. Muladhara or root chakra located at the base of the spine in the coccygeal region (governs senses). According to Vastu Mandala South-West (Nauritya) - Deity Lord (Demon) Nauritya influences protection, strength and stability.
2. Swadhisthana or Adhishthana at the lower stomach region or the sacrum of the human. Vastu direction West (Varuna) - Lord Varuna (Neptune) Lord of Water or Rain. Formation of temple tank or water bodies in South or West will influence reputation, fame, prosperity and success.
3. Manipura or Manipuraka at the digestive glands (governs digestion through pancreas and adrenal glands) of the human. Digestion involves energy of fire. Female bears navel, womb and umbilical chord. According to Vastu Mandala Lord Brahma or Lord of Creation seated on lotus flower base (Adishtana) rules this point. Cosmic Brahma bridges the cosmic human navel or life. If this point in temple should be left open, the vital energy flows and the wholeness resides with blessings and protection.
4. Anahata, Anahata-puri, or Padma-sundara located at chest (governs lungs, immune system - thymus of human being). As per Vastu Mandala Lord Vayu or Lord of Wind rules this point. This grid relates to air and regulation of air. If this grid is allowed to flow air and the peace and comfort resides.
5. Vishuddha or Vishuddhi located at the throat i.e., thyroid glands (governs sound, speech communication and sence of security of human being). Mantras chanted by cosmic humanbeing bridges with cosmic Ishanya. Comic Ishanya is represented in OM, a Pranava Mantra form. According to Vastu Mandala Lord Shiva in Ishanya form rules this grid and represents the space or Akasha. Mantras chanted here will reverberate in space. If left free from obstacles and less occupation or weight, there will be balanced power.
6. Ajna or third eye located at pineal glands or between the eye brows; the two side nadis 'Ida' (yoga) and 'Pingala' are terminating and merge with the central channel 'Sushumna' (governs higher and lower selves and trusting inner guidance of human being). As per Vastu Mandala this direction is also related to open spaces (‘Akasha’) and to the North East corner (Ishanya). The sanctum (Garbagriha or womb chamber) is recommended at this grid, the seat of the divinity.
7. Sahasrara or pure consciousness chakra located at the crown of the head - symbolized by a lotus with one thousand multi-coloured petals. According to Vastu Mandala Anja is the sanctum. The vimanam and shikara forms the space element and the currents of life ascends through the 'Brahma-randra shila' or stone slab placed at 'griva' (neck)of the vimana. The finial of the shikara of the vimanam is the grid at which unseen sahasrara located.
"Garba Gruha Sirahapoktam antaraalam Galamthatha
Ardha Mandapam Hridayasthanam Kuchisthanam Mandapomahan
Medhrasthaneshu Dwajasthambam Praakaram Janjuangeecha
Gopuram Paadayosketha Paadasya Angula Pokthaha
Gopuram Sthupasthatha Yevam Devaalayam angamuchyathe"
Meaning: Garba-griham (main sanctum) is equated with human head; antarala (vestibule) is equated with human neck; ardha - mandapam (half-hall) is compared with human chest; maha - mandapam (main hall) is equated with the stomach; flag-post is viewed along with human male organ;and gopuram or temple gateway tower is viewed along with human feet.

Wednesday, April 15, 2015

One teenage girl is using film to fight child sex trafficking


Thirteen Disorders Caused by Lack of Water



1. Fatigue, Energy Loss: Dehydration of the tissues causes enzymatic activity to slow down.
2. Premature Aging: The body of a newborn child is composed of 80 percent liquid, but this percentage declines to no more than 70 percent in an adult and continues to decline with age.
3. Excess Weight and Obesity: We may overeat because we crave foods rich in water. Thirst is often confused with hunger.
4. High and Low Blood Pressure: The body’s blood volume is not enough to completely fill the entire set of arteries, veins, and capillaries.
5. Cholesterol: When dehydration causes too much liquid to be drained from inside the cells, the body tries to stop this loss by producing more cholesterol.
6. Constipation: When chewed food enters the colon, it contains too much liquid to allow stools to form properly, and the wall of the colon reduces it. In chronic dehydration, the colon takes too much water to give to other parts of the body.
7. Digestive Disorders: In chronic dehydration, the secretion of digestive juices is less.
8. Gastritis, Stomach Ulcers: To protect its mucous membranes from being destroyed by the acidic digestive fluid it produces, the stomach secretes a layer of mucus.
9. Respiratory Troubles: The mucous membranes of the respiratory region are slightly moist to protect the respiratory tract from substances that might be present in inhaled air.
10. Acid-Alkaline Imbalance: Dehydration activates an enzymatic slowdown producing acidification.
11. Eczema: Your body needs enough moisture to sweat 20 to 24 ounces of water, the amount necessary to dilute toxins so they do not irritate the skin.
12. Cystitis, Urinary Infections: If toxins contained in urine are insufficiently diluted, they attack the urinary mucous membranes.
13. Rheumatism: Dehydration abnormally increases the concentration of toxins in the blood and cellular fluids, and the pains increase in proportion to the concentration of the toxins.
Recommended Daily Amount:
Every day you lose water through your breath, perspiration, urine and bowel movements. For your body to function properly, you must replenish its water supply by consuming beverages and foods that contain water.
So how much fluid does the average, healthy adult living in a temperate climate need? The Institute of Medicine determined that an adequate intake (AI) for men is roughly 3 liters (about 13 cups) of total beverages a day. The AI for women is 2.2 liters (about 9 cups) of total beverages a day.
Source:

வீட்டிலிருந்த படியே சிறுநீரக கல்லை குணமாக்கும் வீட்டு வைத்தியம்!


தலைவலி, பல்வலி போல பலரையும் பரவலாக தாக்கக்கூடிய ஒரு பிரச்சினையாக இன்றைக்கு உருவெடுத்துக் கொண்டிருக்கிறது சிறுநீரகக்கல். இந்த நோய் வருவதற்கான அறிகுறிகள், பின்னணி, சிகிச்சைகள், தவிர்க்கும் முறைகள் பற்றி பிரபல சிறுநீரகவியல் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறும் ஆலோசனைகளை பின்பற்றுங்களேன்.
சிறுநீரகத்தில், சிறுநீரில் உள்ள கிரிஸ்டல் எனப்படுகிற உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம் ஆகியவை) ஒன்றுதிரண்டு, சிறுநீர்ப் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களை உருவாக்கலாம். சிறுநீரானது சிறுநீரகத்தில் உற்பத்தியாகி, சிறுநீர்க் குழாய் வழியே சிறுநீர்ப் பைகளுக்கு வந்து பிறகு வெளியேறுகிறது. சிறுநீரகத்தில்தான் கல்லும் உற்பத்தியாகிறது. அது அங்கேயே தங்கிப் பெரிதாகலாம். குழாய் மூலம் சிறுநீர் பைக்கு வெளியேறலாம். அல்லது அடைப்பு ஏற்படுத்தலாம்.
அறிகுறிகள் என்ன ?
முதுகில் வலி ஆரம்பித்து, அது முன்பக்கம் வயிற்றுப்பகுதிக்குத் தாவினாலோ, அடிவயிற்றில் வலித்தாலோ, அது தொடைகள், அந்தரங்க உறுப்புகளுக்குப் பரவினாலோ, காய்ச்சல், சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் போன்றவை இருந்தாலோ சிறுநீரக்கல்லாக இருக்கலாம்.
தைராய்டு பிரச்சினை
பரம்பரையாக சிறுநீரகக்கல் பிரச்சினை ஒருவரைத் தாக்கலாம். சிறுநீர் போகிற பாதையில் அடைப்பிருந்தாலோ, பாரா தைராய்டு எனப்படுகிற சுரப்பியின் அதீத இயக்கம் காரணமாகவோ, இன்ஃபெக்ஷன் காரணமாகவோ கூட சிறுநீரகத்தில் கல் வரலாம். அலட்சியப்படுத்தினால் கல் கொஞ்சம் கொஞ்சமாக பெரிதாகி, மான் கொம்பு அளவுக்கு வளர்ந்து நிற்கும்.
5 மில்லிமீட்டரை விட சிறிய கல் எனில் சிறுநீரிலேயே வெளியேறி விடும். 8 மி.மீ. என்றால் 80 சதவிகித வாய்ப்புண்டு. 1 செ.மீ. அளவுக்கு வளர்ந்துவிட்டால் சிரமம். சரியான நேரத்தில் சிகிச்சை எடுக்காவிட்டால் சிறுநீரகம், சிறுநீரைப் பிரிக்க இயலாது, செயலிழக்கும்.
ரத்தப்பரிசோதனை மூலம் கல் இருப்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு ஸ்கேன் உதவியுடன், கல் இருக்கும் இடம், அதன் அளவைத் தெரிந்து கொள்ளலாம். அய்.வி.பி. எக்ஸ்ரே மூலம் சிறுநீரகம் எப்படி இயங்குகிறது என்பதையும், அதில் அடைப்புள்ளதா, வேலை செய்யும் திறனை இழக்குமா என்பனவற்றைக் கண்டுபிடிக்கலாம். மருந்துகளால் முடியாத பட்சத்தில், அதிர்வலை சிகிச்சை மூலம் கல்லை மட்டும் உடைத்தெடுக்கலாம்.
பெரிய கல் என்றால் முதுகுவழியே துளையிட்டு, டெலஸ்கோப் வழியே பார்த்து உடைக்கலாம். சிறுநீர் பாதை வழியே டெலஸ்கோப்பை செலுத்தி உடைக்கிற யூரெத்ரோஸ்கோப்பியும் பலனளிக்கும். ஒருமுறை கல்லை அகற்றினால் மறுபடி வருவதற்கான வாய்ப்புகள் உண்டு.
வீட்டு வைத்தியம்
சிறுநீரக் கல்லை வெளியேற்ற வீட்டிலேயே மருந்து உள்ளது என்கின்றனர் மருத்துவர்கள். தினசரி மூன்று முதல் நான்கு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடை காலத்தில் தினமும் ஒரு இளநீரும், மற்ற காலங்களில் வாரத்திற்கு 2 முறையாவது குடிப்பது நலம்.
பார்லியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி சிறுநீரகத்தில் உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒருமுறை இதை செய்யலாம். அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து, அந்த நீரை அருந்தலாம்.
வாழைத்தண்டு
முள்ளங்கி சாறு 30 மிலி அளவு குடித்து வந்தால் சிறுநீரக கோளாறு நீங்கும். சிறுநீர் நன்றாக பிரியும். வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டு, ஆகியவைகளை அதிகம் உட்கொள்ள வேண்டும்.
வெள்ளரிப்பிஞ்சு, நீராகாரம் சிறுநீரக பிரச்னைகளுக்கு அருமருந்து. பரங்கிக்காய் சிறுநீர் பெருக்கி. அதை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புதினாக் கீரையை தொடர்ச்சியாக சாப்பிட்டு வந்தால் சிறுநீரகங்கள் பலப்படும்.
எதை சாப்பிடக்கூடாது?
சிறுநீரக கல் பிரச்சினை உள்ளவர்கள் சில உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உப்பு பிஸ்கட், சிப்ஸ், கடலை, பாப்கான், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், முந்திரிபருப்பு, பாதாம், பிஸ்தா, கேசரி பருப்பு, கொள்ளு, துவரம் பருப்பு, ஸ்ட்ராங் காபி, டீ, சமையல் சோடா, சோடியம் பை&கார்பனேட் உப்பு, சீஸ், சாஸ், க்யூப்ஸ் ஆகியவைகளை தவிர்க்க வேண்டும். கோக்கோ, சாக்லேட், குளிர்பானங்கள், மது மற்றும் புகையிலை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.

When criminal law meets neuroscience


Transformative technology marks the progress of humanity. It also inevitably raises questions. Just think of all the issues the spread of the Internet has raised, from net neutrality to anonymous harassment to search privacy. Not all of the issues are negative, of course, as exemplified by the question all non-profits are now asking themselves: how can we replicate the fundraising success of the ALS Ice Bucket Challenge?
One sector of technology innovation that doesn’t get much attention in the media, but seems poised to make game-changing strides, is neuroscience and its applications for criminal and civil law. In 2011, the MacArthur Foundation granted $4.5 million to establish the national Research Network on Law and Neuroscience (which shortens its name to the Network) headquartered at Vanderbilt University in Nashville, Tennessee.
Their mission includes examining the multiple effects of modern neuroscience on criminal law, designing and conducting neuroscientific research, and trying to make neuroscience accessible and beneficial to America’s courtrooms.
This field is so new that it is more defined by questions than answers at this pioneering stage. To get a sense of those questions, we turned to the Network’s Director, Owen Jones, who is one the country’s few professors of both law and biology.

Tuesday, April 14, 2015

Steve Jobs and his 3 stories


Serotonin controls fat metabolism!



Central serotonin (5-HT) is an anorexigenic neurotransmitter in the brain. However, accumulating evidence suggests peripheral 5-HT may affect organismal energy homeostasis. 

Authors in Nature Communications show 5-HT regulates white and brown adipose tissue function. 


Under high-fat diet (HFD) condition, the inhibition of 5-HT synthesis by various means reduced body weight gain, improved glucose tolerance, increased thermogenic activity in brown adipose tissue (BAT) and decreased lipogenesis in white adipose tissue (WAT).

Authors also show that 5-HT inhibited thermogenesis through (serotonin receptor) Htr3 in BAT and increased lipogenesis through Htr2a in WAT.

These data suggest important roles for adipocyte-derived 5-HT in controlling energy homeostasis.

Lesser known rock cut temple at Wasvi, Dhar(Madhya Pradesh) Via: ASI Bhopal circle


Beautiful sculpture of Nagas


Monday, April 13, 2015

Why I Refuse to be Silent


"Wow I thought black people are supposed to be scary." This honest and uncensored statement that a little girl recanted as I recited my biographical speech on Florence Nightingale clothed in the white sheets that represented Ms. Nightingale's pure heart tore down my dignity and self-esteem to shreds like a machete chopping off the foundation of a plant. Nevertheless, these words instilled a spark in me to relentlessly stand up for others that are unjustly judged.
Many years later, I was prompted to act when my friend grumbled about how the Day of Silence for LGBTQ individuals that I and some members of the diversity club initiated was garbage. At first I ignored him, but then as I overheard him tell his likeminded friend that he would "never have a college roommate who was gay," that very spark in me was lit and I felt morally obligated to challenge this prejudiced line of thinking.
I began to ask him if he would really refuse to have a roommate who was gay. As our conversation escalated, his face turned red, my heart beat faster, and our voices grew louder. My friend felt that one couldn't be a devout Catholic like myself and yet support gay marriage. I countered by attacking his Biblical argument that gay marriage is a moral abomination with my belief that Christianity should be about love and acceptance of others. After a drawn-out argument in which I constantly refuted my friends points, I remembered that inner beat-down I had suffered many years ago that had really triggered my confrontational stance. This was about a whole lot more than a logical or ethical argument, this was about an attack on my human rights.
I don't know what it feels like to be gay, bisexual, or transgender, but I do know what it is like to have a facade of inferiority hang over me because I look "scary." I know how worthless it is to pat the victim on the back or assure him in times of privacy that "it doesn't matter what she thinks." This applies even in the most intimate of settings as I find my friend is not the only one I must confront on such issues but also my own personal heroes. "But granny regardless of what the bible says isn't the struggle for gay rights just like the struggle for racial equality?" I know that it may seem wrong to challenge those that have unconditionally loved and taken care of you, but I must do so in order to ensure that others can feel this same love from all people.
I speak up because when one sees an injustice and just shrugs one's shoulder it is just like promoting it. We live in a society of interdependence in which we must be allies for each other in all social spheres for the continual progress of society as a whole. If one analyzes any prolonged societal injustice against any social group in history, one will see that a critical component in its persistence was the silent approval of the unaffected. I will admit that it can be very confusing at times to stand up for others, especially when it involves challenging ideal systems I've always considered absolute or people I look up to. But in order to reap the vast benefits of the great diversity around us we must take to heart the sorrows of our fellow human-being and make them our own.


Read more: http://www.businessinsider.com/

Saturday, April 11, 2015

Why You Should Walk, Not Run, Your Way To Fat Loss


1 – When you do a cardio exercise, like running, you burn calories from muscle and fat. The body cannot pick to burn the calories that you would like to see burnt, and thus by running you actually decrease your muscle mass. You don’t want to do that because muscles are more metabolic and burn more calories.
2 – Too much cardio exercises increase the production of a stress hormone called cortisol, which leads to bigger food cravings because your body wants to overcompensate for the burned calories. So, you end up consuming more calories than you have burned.
**Too much cardio exercising makes you leptin-resistant, which is the same hormonal effect as sleep deprivation. That way your body is unable to tell if it is full. You get very hungry and eventually develop insulin resistance due to the high amounts of cortisol and you get back to weight gaining.
**Cardiovascular exercises can have negative impact on the thyroid function. In order to have a properly functioning metabolism, the thyroid produces a hormone called T4, which then is converted to T3 to help the metabolism. But, by creating too much cortisol in your body, the thyroid is unable to produce T4 and you end up with dysfunctional metabolism, decreased ability to burn fat and loss of energy.
3 – It is believed that running has a low impact, plus the further you run the more you bang your feet into the ground. If you are overweight this can be bad for your knees and other joints
Summary: Cardio can cause the reduction of the muscle mass, less efficient metabolism, hormonal imbalance, which can lead to more weight, and it can have a negative impact on your knees if you are overweight.
Walking on the other hand can be a much healthier and more balanced alternative, even though it doesn’t provide the same amount of calorie burning effects as running. By walking you decrease the amounts of cortisol, which is much better on longer term. Walking makes you more sensitive to insulin, which then enables better calorie burning from other exercises and it doesn’t create cravings and unmanageable hunger. It also produces serotonin and dopamine which make you feel motivated and happier and lead to overall wellness.
So, walk as much as possible! Take 30 to 60 minutes walk at least three days a week, and increase this up to six days. Choose walking instead of cardio, and do other activities that relieve stress to the body. But, if you want a firm and good looking body, do some weekly metabolic resistance exercises for 20 or 30 minutes. Couple this with a well-though diet and you won’t have to run ever again.

குடமுழவம்

வழக்கொழிந்துபோன தமிழ் இசைக்கருவிகளில் ஒன்றான குடமுழவம்.. திருவாரூர், திருத்துறைபூண்டி கோவில்களில் மட்டுமே உள்ளது..! 

ஈரல்வறுவல்


தேவையான பொருட்கள்:
ஆட்டு ஈரல் -1/4கிலோ
பெரியவெங்காயம் -1
பச்சைமிளகாய் -2
இஞ்சி, பூண்டு விழுது -1ஸ்பூன்
தக்காளி -1
மஞ்சள்தூள் -1/4ஸ்பூன்
கறிமசாலா தூள் 2ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணய் - தேவையான அளவு
செய்முறை:
• ஈரலை சுத்தம்செய்து சிறு துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
• வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.
• மிளகாயை இரண்டாக நறுக்கி வைக்கவும்.
• வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், மிளகாய் போட்டு வதக்கி, இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
• தக்காளி சேர்த்து சிறிது வதங்கியவுடன் ஈரலை போட்டு உப்பு சேர்த்து பிரட்டவும்.
• மஞ்சள்தூள், கறிமசாலா தூள் சேர்த்து தேவையான உப்பு போட்டு கலந்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
• தண்ணீர் வற்றி ஈரல் வெந்தவுடன் இறக்கவும்.
• சுவையான ஈரல் வறுவல் ரெடி.

கலைமாமணி கா.மு. ஷெரீப்

“இலக்கியத்தைப் போல, திரைப்படப் பாடல்கள் என்றைக்கும் நிலைத்து நிற்கக் கூடியவை அல்ல. ஆனால், அந்தப் பாடல்களும் கூட, இலக்கியத்துக்கு நிகராக நிலைத்து நிற்க முடியும் என்பதற்கு எடுத்துக் காட்டாக கவி.கா.மு.ஷெரீப் அவர்களின் பாடல்கள் உண்டு. இன்றைக்கும் ‘ஏரிக்கரையின் மேலே போறவளே, பெண் மயிலே’ என்கின்ற பாடலைக் கிராமப் புறத்திலே உள்ளவர்களெல்லாம் பாடக்கேட்டு, அவர்கள் அந்தப் பாட்டிலே, ஒரு மகிழ்ச்சியை உருவாக்கிக் கொண்டு நடப்பதைக் கண்டு நான் பூரிப்படைந்திருக்கிறேன்.”
ka mu sheriff and karunanidhiஎன்று, கவி கா.மு.ஷெரீப் அவர்களின் திரைப்படப் பாடல்களைக் குறித்து, எழுதியிருக்கிறார் கலைஞர் கருணாநிதி அவர்கள். இந்த வரிகள், கலைஞரின் சுய சரிதை நூலான, நெஞ்சுக்கு நீதி எனும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
தமிழ் சினிமா உலகில், இன்றைக்கும் புகழ் மங்காது ஜீவித்துக் கொண்டிருக்கும் பராசக்தி திரைப்படத்தின் வசனங்களை உருவாக்கியவர் கலைஞர் என்பது யாரும் அறிந்த செய்தி. ஆனால், சினிமா உலகில் கலைஞர் காலடி எடுத்து வைத்த வரலாறு, எத்தனை பேர் அறிந்த செய்தி?
இன்றைய சினிமா உலகத்தைப் போல அல்ல, அன்றைய சினிமா உலகம். அது ஒரு இரும்புக் கோட்டை. அதில் நுழைவது அவ்வளவு எளிதானது அல்ல.
”ஒளி” எனும் இதழொன்றை கவி கா.மு.ஷெரீப் அவர்கள், திருவாரூரில் நடத்திக் கொண்டிருந்தார். அந்த சமயம், கலைஞர் அவர்களின் எழுத்தைக் கண்டு, அவரை ஒளி-யில் எழுத வைத்தார். பின்னாட்களில், சேலம் மாடர்ன் தியேட்டர்ஸில் வசன கர்த்தாவாகவும், பாடலாசிரியராகவும், ஆஸ்தானக் கவிஞராகவும் ஒளி வீசிக் கொண்டிருந்த கவி அவர்கள், எழுத்தின் மூலம் அறிமுகமான கலைஞரை, தனது சிபாரிசில் சினிமா உலகத்திற்கு கொண்டு வந்தார். ஆம், சேலம் மாடர்ன் தியேட்டரில்தான் கலைஞரின் சினிமா உலகம் ஆரம்பமானது. அவரின் வசனங்கள் தமிழகம் முழுமைக்கும் சென்றடைந்தது. இதற்கான திறவுகோலை ஏற்படுத்திக் கொடுத்தவர்தான் கவி கா.மு.ஷெரீப் அவர்கள்.
இதுமட்டுமா, கவியரசர் கண்ணதாசனை கலைஞருக்கு அறிமுகம் செய்து வைத்து, நட்பை உருவாக்கிக் கொடுத்தவரும் கவி கா.மு.ஷெரீப் அவர்கள்தான்.
இன்றைக்கு நூற்றாண்டு கடந்து நிற்கும் கவிஞர் அவர்கள், பண்முகங்களைக் கொண்டவர். 20-ம் நூற்றாண்டின் தமிழக அரசியலில், இன்றுள்ள மூத்த அரசியல்வாதி நல்லக்கண்ணு அவர்களுக்கு ஒப்பானவராக திகழ்ந்தவர். இன்று தமிழ் தேசிய பார்வைகள் கூர்மை அடைந்திருக்கிறது. தமிழ் தேசிய அரசியல் எங்கும் கேட்கத் தொடங்கியிருக்கிறது. இந்தத் தமிழ் தேசிய அரசியல் களத்தில், அரசியல் செய்பவர்களின் பேனர்களில் ம.பொ.சி தவிர்க்க இயலாதவராக இடம் பெற்றிருப்பார். ஆனால், ம.பொ.சி அவர்களைவிடவும் தமிழ் தேசிய அரசியல்வாதியாய் தனது இறுதிக் காலம் வரை வாழ்ந்து மறைந்தவர் கவி கா.மு.ஷெரீப் அவர்கள் என்பது இங்கு அறியப்படாமலே போன வரலாறாக உள்ளது.
அரசியல் மட்டுமல்ல, இவர் சிறுவயதில் மாட்டு வண்டி ஓட்டுபவராகவும், விவசாயியாகவும் இருந்துள்ளார். பின்னாட்களில், கவிஞராக, விடுதலைப் போராட்ட வீரராக, திரைப்படப் பாடலாசிரியராக, வசன கர்த்தாவாக, எழுத்தாளராக, பதிப்பாளராக, வரலாற்று ஆசிரியராக, சொற்பொழிவாளராக, ஆன்மீகவாதியாக என பல பரிணாமங்களைப் பெற்றுத் திகழ்ந்தவர்.
இந்த நூற்றாண்டு சகாப்த மனிதனின், எண்ணற்ற தளங்களைத் தேடிய ஆய்வின் சிறிய தொகுப்புதான் இந்தக் கட்டுரை.

1914-ம் வருடம், ஆகஸ்டு மாதத்தின் 11-வது தேதியில், திருவாரூர் மாவட்டத்திலுள்ள கொரடாச்சேரி எனும் ஊருக்கு அருகிலுள்ள அபிவிரூத்திஷ்வரத்தில் பிறந்தார் கா.முகம்மது ஷெரீப் அவர்கள். காதர்ஷா இராவுத்தர் – முகம்மது இப்ராஹீம் பாத்து அம்மாள் ஆகியோருக்கு பிறந்த ஒரே வாரிசு ஆவார் இவர்.
இவரின் பெற்றோர்களது ஊர், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, விநாயகர் கோட்டையாகும். இங்கிருந்து தொழில் நிமித்தமாக, இவரின் பெற்றோர்கள், திரூவாரூறிற்கு வந்துள்ளனர். கவிஞர் பிறந்தது அபிவிருத்தீஷ்வரம் என்றாலும், அவர் சிறு வயதில் ‘வேளுக்குடி’ எனும் கிராமத்திலேயேதான் வளர்ந்தார்.
தனது 14-ம் வயதிலேயே தந்தையை இழந்து நின்ற கவிஞர், முறைப்படி பள்ளி சென்று எந்தக் கல்வியையும் கற்காதவராகத்தான் இருந்தார். தனது தந்தை இருந்தபோது, அவரின் தூண்டுதலில் திண்ணைப் பள்ளியில் சில காலம் பயின்றதோடு, தமிழ் இலக்கியங்களின்பால் கவனமும் பெற்றார். நாகூருக்கு அருகிலுள்ள பொதக்குடி எனும் ஊரில், அரபிப் பாடம் பயின்றிருக்கிறார் என்பதைத் தாண்டி, அவரின் மற்ற எல்லாக் கல்விக்கும் பின்புலம் அவரின் தாயாராகவே விளங்கியிருக்கிறார்.
சிறு கடை ஒன்றில் எழுத்தராகப் பணியாற்றிவிட்டு வீடு திரும்பும் கவிஞருக்கு, தமிழின் தொன்மையான இலக்கிய நூல்களை உண்ணக் கொடுத்திருக்கிறார், அவரின் தாயார் பாத்து அம்மாள். இவரின் தொடர்ந்த உற்சாக மூட்டல்களில், இலக்கியங்களைத் தாண்டி, எழுத்துலகின் பலதரப்பட்ட சுவையைக் கண்டுணர்ந்த கவிஞர், தனது 15-ம் வயதில் ’தந்தை பெரியாரின்’ சுயமரியாதை இயக்கத்தின் வாயிலாக, முதல் அரசியல் பயணத்தையும் துவக்கியுள்ளார்.
தனது 18-ம் வயதில் கவிதை எழுதத் தொடங்கிய கவிஞரின், முதல் கவிதை 1933-ம் ஆண்டில், ‘குடியரசு’ ஏட்டில் வெளியானது. இதுவே இவரின் கவிதைக்கான முதல் அங்கீகாரமாக உருவானது. இந்தக் கவிதை அநேக இடங்களில் பெரியாரைப் போற்றியதாக அமைந்திருந்தது.
1934-ம் ஆண்டில் கவிஞர் மண வாழ்க்கையைக் கண்டார். அவரின் மனைவி முகம்மது பீவி அவர்கள், உடல் நலக் குறைவால் சில ஆண்டுகளிலேயே மரணித்துப் போய்விட்டார். மனைவியின் பிரிவில் சில காலம் கழித்த கவிஞர், 1940-ம் ஆண்டில் ஜமீலா பீவி என்பவரை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். ஒன்பது ஆண்களும், இரண்டு பெண்களும் என பதினோரு பிள்ளைகளுக்குத் தந்தையாக விளங்கிய கவிஞர், பன்னிரண்டாவதாக ஒரு வளர்ப்பு மகளையும், எடுத்து வளர்த்தினார். இந்த வளர்ப்பு மகளின் கதை, கவிஞரின் மனிதநேயத்திற்கான தன்னிகரற்ற சான்று என்றே சொல்லலாம்.
வயதின் மோகத்தால், ஒருவனால் கர்ப்பிணியாக்கப்பட்டப் பெண், பின்னர் அவனால் கைவிடப்பட்டு விடுகிறாள். இவள் வேறு யாருமல்ல, கவிஞருடைய நண்பரின் மகள்தான். இந்த நண்பர், ஒரு பிராமணச் சமூகத்தைச் சார்ந்தவர்.
தன் மகளுக்கு நேர்ந்த துயரத்தைச் சொல்லி, கருவை கலைக்கப் போவதாக கவிஞரிடம் சொல்லியிருக்கிறார், பிராமண நண்பர். உடனே கவிஞர் அவர்கள், ‘ஒரு உயிரை அழிக்கும் உரிமை நமக்கு இல்லை’ என்று சொல்லி அவரைத் தடுத்ததோடு, அவரின் மானத்தைக் காக்கும் பொருட்டு, அந்தப் பெண்ணை தனது வீட்டில் அழைத்து வந்து வைத்துவிட்டார்.
கர்ப்பிணியான அந்தப் பெண்ணையும், தனது மனைவியையும், கவிஞர் தான் வளர்ந்த ஊரான லெட்சுமாங்குடிக்கு அருகிலுள்ள வேளுக்குடிக்கு அனுப்பி வைத்தார். முறையாகக் கவனிக்கப்பட்ட அந்தக் கர்ப்பிணிப் பெண், தன் சிசுவை ஈன்றெடுத்தாள். இதன்பிறகே அவளை, நண்பரின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறார் கவிஞர்.
அந்தப் பெண் ஈன்றெடுத்த சிசுதான், கவிஞரின் வளர்ப்பு மகள். ஆம், பிராமண நண்பரின் மானம் காக்க, ஒரு இசுலாமிய நண்பரின் உதவிதான், அந்த வளர்ப்பு மகள். தன்னலமற்ற, யாரும் செய்திட முன்வராத இந்த உதவியை, மனிதநேயம் என்கிற ஒற்றை வார்த்தை கொண்டு வர்ணித்துவிட இயலாது.
நண்பரின் மானம் காத்த கவிஞருக்கு, நண்பர் செய்த உபகாரம், தனது மகளின் திருமணத்திற்கு அழைப்பு கொடுக்காமல் புறக்கணித்ததுதான். இந்தச் செய்தியை அறிந்த கவிஞரின் மனைவி, இதுபற்றி தன் கணவரிடம்  கேட்டுள்ளார். அதற்கு அவர், ‘என்னைக் காண்பதில் அவர்களுக்கு சங்கடம் ஏற்படும். குற்ற உணர்வு வரும்’ என்பதால் அழைக்காமல் விட்டிருப்பார்கள் என சமாதானம் செய்து வைத்தார். இந்தத் தன்மைகள் இங்கு எவருக்கு வரும்? இப்படிக் கவிஞரின் மேன்மை குணங்கள் ஒன்றா? இரண்டா? ஓராயிரம் உண்டு அவர் வாழ்வில். சுருங்கச் சொன்னால் இவர் ஓர் வாழ்வின் இலக்கணம் என்றே சொல்லலாம்.

1939-ல், தனது 25-ம் வயதில் “தமிழின் தொன்மையைப்” பாடினார் கவிஞர். இது ‘சந்திரோதயம்’ எனும் இதழில் வெளியாகிப் பலரின் கவனத்தைப் பெற்ற ஒன்றாக இருந்திருக்கிறது. இந்த வயதிலேயே கவிஞரின் கவிப்புலம் இவ்வளவு செம்மை அடைந்திருக்கிறது எனில், இவரின் தாய் இவருக்கு எந்த அளவிற்கு கல்வியைக் கொடுத்திருப்பார் என்பதை நம்மால் யூகிக்க முடிகிறது. ஒரு முஸ்லீம் பெண்மணி தமிழ் இலக்கியங்களை, தன் பிள்ளைக்கு விருந்தாய் கொடுத்திருக்கிறார் எனில், மொழிப் பற்று இங்கு எவ்வளவு மிகுந்திருக்கிறது என்பதனை நாம் ஆராய வேண்டும்.
ஆனால், இன்றைய இசுலாமியர்கள் இதில் பின்தங்கி, முன்னோர்களின் அர்ப்பணிப்புகளை, நிர்மூலமாக்கிக் கொண்டுள்ளோம். தாய் மொழியினின்றும் வெகுதூரம் சென்று கொண்டுள்ளோம். இந்தச் சூழல் நம்மில் எப்படி விளைந்தது என்கிற காரணிகளைத் தேடி, அவைகளைக் களைய வேண்டிய கட்டத்தில் நாம் இன்று இருக்கிறோம். கவிஞரின் வாரிசுகள் நாம் என்பதனை சற்று மீளாய்வு செய்துப் பார்க்க நாம் தவறிவிடக் கூடாது.
கவி உலகில் கால் பதித்த கவிஞர், 1942-ல் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் களம் கண்டு, சுதந்திரப் போராட்ட வீரராக உருவெடுத்தார். இது தொட்டு அவரின், விடுதலைக் கனல்கள் அவரின் வாழ்க்கை முழுவதும் பரவிக் கிடப்பதை நம்மால் காண முடியும். தன்னுடைய கொள்கையின் உறுதியான நிலைப்பாடு, அவரின் மரணம் வரை மாறாத ஒன்றாக இருந்துள்ளது.
பெரியாரின் சுயமரியாதைக் கழகம், காங்கிரஸ் என அரசியலில் பயணம் செய்த கவிஞர், இந்திய அரசியலில் நம்பிக்கையற்றுப் போய், ‘தேசியவாத’ அரசியல் பார்வைக்குத் திரும்பினார். அதே சமயம் பெரியாரின் மீதும், காந்தியடிகளின் மீதும் மிகுந்த மரியாதையும், நட்பும் கொண்டிருந்தார்.
’தமிழ் தேசியம்’ தனித் தமிழ் நாடு போன்ற கொள்கையில் மிகுந்து போயிருந்த கா.மு.ஷெரீப் அவர்கள், ம.பொ.சிவஞானம் அவர்களின் தலைமையிலான ‘தமிழரசுக் கழகத்தில்’ தன்னை இணைத்துக் கொண்டார். பின்னர், தமிழரசுக் கழகத்தின் பொதுச் செயலாளராக உருவெடுத்து, அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் தமிழகம் எங்கும் வலம் வந்தார். இந்தக் கால கட்டத்தில், ‘செங்கோல்’ எனும் ம.பொ.சி அவர்களின் இதழில் தொடர்ந்து அரசியல் கட்டுரைகளை எழுதி வந்தார் கவிஞர். இவரின் கட்டுரைகள் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியதைவிட, தமிழரசுக் கழகத்தின் கொள்கைகளை ஒவ்வொரு தமிழனுக்கு கொண்டுபோய் சேர்த்ததை எவராலும் மறுக்க முடியாது. ஆனால் ம.பொ.சி-யை தெரிந்த தமிழ் தேசியவாதிகளுக்கு, கவிஞர் காணப்படாமலேயே போய்விட்டார் என்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானாது.
‘சிவாஜி’ எனும் இதழொன்றில் துணை ஆசிரியராகப் பணியில் அமர்ந்து, ஒரு பத்திரிக்கையாளனாகப் புதிய அவதாரத்தை எடுத்தார் கவிஞர். பின்னர், 1948-ம் ஆண்டில், திருவாரூரில் ‘ஒளி’ எனும் மாத இதழை ஆரம்பித்து, அதன் ஆசிரியராகப் பொறுபேற்றார்.
ஒளி இதழைத் தொடர்ந்து, 1952 முதல் 1969 வரை, ‘தமிழ் முழக்கம், சாட்டை’ போன்ற இதழ்களையும் நடத்தியிருக்கிறார் இவர். இந்த இதழ்கள் மாதமாகவும், மாதமிருமுறையாகவும், தின இதழாகவும் கூட வெளி வந்திருக்கின்றன. இப்படி பத்திரிக்கை உலகில் கோலோச்சிய அதே வேளை, திரைப்படத் துறையிலும் ஒளி வீசியிருக்கிறார் கா.மு.ஷெரீப்.
1948-ம் ஆண்டில், பேரறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில், “திருநாடே” என்று கவிஞர் எழுதிய பாடல், அக்காலத்தில் மிகப்பெரும் அதிர்வலையையும், வரவேற்பையையும் ஏற்படுத்திய வரலாற்றைக் கொண்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து. ’கொலம்பிய கம்பெனி ரிக்கார்டுகளுக்காக’ வசனமும், பாடலும் எழுதத் தொடங்கிய கவிஞர், 1948-ல் வெளிவந்த ‘மாயாவதி’ எனும் திரைப்படத்தில் முதன் முதலாகப் திரைப் பாடல் எழுதினார். இதே காலத்தில், ‘பெண் தெய்வம்’, ‘புதுயுகம்’ போன்ற படங்களுக்கு வசனமும் எழுதி இருந்திருக்கின்றார் கவிஞர்.
கவிஞரின் முதல் கவிதைத் தொகுப்பு, 1946-ம் ஆண்டில் வெளியானது. இது “ஒளி” எனும் தலைப்பைப் பெற்று, ஒளி வீசியதை, தமிழ் இலக்கிய உலகம் என்றைக்கும் மறைந்து போய் விட முடியாது. இந்தக் கவிதைத் தொகுப்பிலும், கவிஞரின் விடுதலை வேட்கையை நம்மால் காண முடியும். இதில் இடம்பெற்றுள்ள பல கவிதைகள், விடுதலை கீதங்களாக ஒலித்துக் கொண்டுள்ளன. பாட்டில் புரட்சி செய்த பாரதியைப் போற்றும் நம் தமிழ் மக்கள், கவிஞரின் சுந்திர கீதங்களை சுவாசிக்க மறந்து போய்விட்டனர்.
தத்துவப் பாடலாசிரியர் என அறியப்படுகிற கண்ணதாசனுக்கெல்லாம் மூத்தவரும், வழிகாட்டியுமாக விளங்கியிருக்கிறார், கவிஞர் அவர்கள். இதனைக் கண்ணதாசனின் ஒரு கூற்றிலிருந்தே நம்மால் அறிய முடிகிறது.
“அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே, அவரின் கவிதைத் தொகுதி வெளிவந்துவிட்டது. “ஒளி” எனும் தலைப்புடைய அந்தத் தொகுதியை, நான் சுவைத்திருக்கிறேன்.”
என்கிறது கவியரசர் கண்ணதாசனின், காமு ஷெரீப் அவர்களைப் பற்றிய கூற்று.
இதனைத் தொடர்ந்து கவிஞர் கா.மு. அவர்கள் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப் பாடல்களை இயற்றியுள்ளார். அப்படி அவர் இயற்றி, காலத்தால் இன்றளவும் தனித்துவத்தோடு விளங்கும் பாடல்களில் சில:
”சிட்டுக் குருவி சிட்டுக் குருவி செய்தி தெரியுமா?, பொன்னான வாழ்வு மண்ணாகிப் போகுமா?, வாழ்ந்தாலும் ஏசும், தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இது தானடா, பணம் பந்தியிலே குணம் குப்பையிலே, அன்னையைப் போல ஒரு தெய்வமில்லை, ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?, பூவா மரமும் பூத்தது பொன்னும், மணியும் விளைந்தது, வானில் முழு மதியைக் கண்டேன். வனத்தில் ஒரு பெண்ணைக் கண்டேன், நான் பெற்ற செல்வம் நலமான செல்வம், உலவும் தென்றல் காற்றினிலே, வாராய் நீ வாராய்” போன்ற பாடல்களைக் குறிப்பிடலாம். இவைகளைத் தவிர்த்து இன்னொன்றை நாம் குறிப்பிட்டே ஆக வேண்டும்.
அது திருவிளையாடல் படத்தில் இடம் பெற்ற, இறுதிப் பாடலான “பாட்டும் நானே, பாவமும் நானே” என்கிற பாடலாகும்.
இந்தப் பாடல் திரைப்படத்தில் இடம் பெற்றபோது, டைட்டிலில் கண்ணதாசனின் பெயரை பாடலாசிரியர் என்று போட்டிருக்கிறார், அப்படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்கள்.
இந்தப் பாடலை, ‘சிவலீலா’ எனும் திரைப்படத்திற்காகத்தான் கவிஞர் எழுதிக் கொடுத்திருக்கிறர். ஆனால் இந்தப் படத்தின் வேலைகள் இடையிலேயே நின்று போய்விட்டது. அதனால் சிவலீலா படத்தின் தயாரிப்பாளர் எம்.ஏ.வேணு அவர்களும், திருவிளையாடல் படத்தின் இயக்குனர் ஏ.பி.நாகராஜன் அவர்களும் கவிஞரின் பாடலை திருவிளையாடலில் பயன்படுத்திவிட்டு, கவிஞரின் பெயருக்கு மாற்றாக, கண்ணதாசனின் பெயரை போட்டு திருவிளையாடலை கவிஞரிடம் செய்துவிட்டனர். இந்தச் செய்தி, பின்னாட்களில் ’எழுத்தாளர் ஜெயகாந்தன்’ அவர்களின் மூலமாக வெளி உலகத்திற்கு தெரியவந்தது.
இதனை அறிந்த ஜெயகாந்தன் அவர்கள், இதுகுறித்து கவிஞர் அவர்களிடத்தில் கேட்டிருக்கிறார். அதற்கு அவர், ‘யார் பெயராக இருந்தாலென்ன, பாடல் நன்றாகத்தானே இருக்கிறது’ என்று பெருந்தன்மையாகச் சொல்லிவிட்டுச் சென்றுவிட்டாராம். கவிஞருக்கு வேண்டுமானால் அது சாதரணமானதாகத் தெரிந்திருக்கலாம், ஆனால் சிந்தித்துப் பாருங்கள் இந்தச் சகிப்புத்தன்மை யாருக்காவது வருமா என்று!
பிறருடைய படைப்பை எடுத்து அதில், தன்னுடைய பெயரைப் போட்டுக் கொள்ளும் உலகில், தன்னுடைய படைப்பை பிறர் பயன்படுத்தியது தெரிந்தும் கவிஞர் அமைதியாய் கடந்திருக்கிறார். இந்த மனம் இன்று நம்மில் எத்தனை பேருக்கு வாய்க்கும்? இப்படிப்பட்ட பண்பாளரை, இசுலாமியக் கோட்பாட்டின் படி வாழ்வின் ஒவ்வொரு கணங்களையும் அமைத்துக் கொண்டு வாழ்ந்த கொள்கை மறவரை, இசுலாமியர்கள் இன்று மறந்து நிற்பதும், அவரை அறிந்தவர்கள் புறக்கணிப்பதும் எவ்வளவு பெரிய துரோகம் என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
கவிஞரின் இந்தச் சகிப்புத் தன்மையினை, “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” எனும் தனது புத்தகத்தில், 110-113 வரையிலான பக்கங்களில் குறிப்பிட்டிருக்கிறார், ஜெயகாந்தன் அவர்கள்.
மேலும் இந்தப் பக்கங்களில் கவிஞரின் பண்புகளைப் பற்றிய ஒரு செய்தியையும் சொல்லியிருக்கிறார் அவர். கொஞ்சம் இதில் கருத்தூன்றிப் பாருங்கள். சினிமா என்றாலே சீரழிவுவாதிகள்தான் இருப்பார்கள் என்கி்ற பிம்பத்தை, கவிஞரின் வாழ்வு எப்படி உடைத்தெறிக்கிறது என்பதனை இதில் அறிந்து கொள்ளலாம்.
“ஷெரீப் பல நற்பண்புகளின் உறைவிடமாய் இருந்தார். திரையுலகத் தொடர்பிருந்தும், அதன் சீரழிவுகளில் சிக்கிக் கொள்ளாத உயர் பண்பு அவரிடம் இருந்தது. ஒரு கவிஞர் வறுமையிலும் செழுமையாக எப்படி வாழ்வது என்பதை, நான் அவரிடமிருந்துதான் கற்றேன். கவிஞர் ஷெரீப் ஒரு முஸ்லீமாக இருந்த போதும் தீவிரமான சைவர். அதுகுறித்து அவரை நாங்கள் பரிகாசம் செய்வதுண்டு.
நான் புகைப் பிடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தவன். புகைப்பிடிப்பதை கண்டித்ததால், நான் ஒரு கம்பெனியில் வேலையைவிட்டே வந்துவிட்டேன்.  ஆனால், ஷெரீப் அவர்கள் புகைப் பிடிப்பவரல்ல. அதனால் நான் அவரின் எதிரில், ஒரு மரியாதைப் பண்பு கருதிப் புகை பிடிக்காமல் இருக்கும் பழக்கத்தை மேற்கொண்டேன்.”
என்று கவிஞரின் பண்புகளையும், கவிஞரின் மேல் தான் வைத்திருக்கும் மரியாதையையும் குறிப்பிட்டிருக்கிறார் ஜெயகாந்தன் அவர்கள். கவிஞரின் நற்பண்புகள், ஜெயகாந்தன் அவர்களிடம் எவ்வளவு தாக்கங்கள் ஏற்படுத்தியிருந்தால் புகைப் பிடிக்கும் பழக்கத்தை கவிஞரின் முன் கைவிட்டிருப்பார் ஜெயகாந்தன்? என்பதை நாம் கவனிக்கத் தவறிவிடக் கூடாது.
இன்னும் கவிஞரின் திரைத் துறை பணிகள் பலவற்றை நம்மால் காண இயலுகிறது. அலிபாபாவும் 40 திருடர்களும் எனும் படத்தில் இடம் பெற்ற, ‘மாசிலா உண்மைக் காதலே’ எனும் பாடலுக்கு பல்லவியை அமைத்துக் கொடுத்தவர் கவி அவர்களே. இந்தப் பாட்டின் சரணத்தை, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரம் அவர்கள் அமைத்திருக்கிறார். இதுபோக, சில பாடல்களில் மருதகாசி அவர்களோடு சேர்ந்தும் வரிகளை எழுதிக் கொடுத்திருக்கிறார் கவிஞர் அவர்கள்.
இப்படித் திரையுலகில் புகழின் உச்சஸ்தானத்தில் இருந்தும், கவிஞர் வறுமையான வாழ்க்கையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தார். இந்தத் தருணத்தில் கவிஞரின் திரையுல நண்பர்கள் கவிஞரிடத்தில் ஒரு வேண்டுகோளை வைத்திருக்கிறார்கள்.
“முதலமைச்சர் உங்களுக்கு நன்கு தெரிந்தவர் தானே, அவரிடத்தில் ஒரு வீடு கேளுங்களேன்” என்ற கோரிக்கைதான் அது.
அதற்கு கவிஞர் சொல்லியிருக்கிறார், “நான் வல்ல இறைவனையன்றி, வேறு எவரிடமும் கையேந்த மட்டேன்” என்று. இப்படியானவரை, சினிமாவில் பாட்டெழுதினார் என்கிற காரணத்தாலோ என்னவோ, இசுலாமியச் சமூகம் திரும்பிப் பார்க்காமலேயே போய்விட்டது. இது அவர் கொண்டிருக்கும் இறை நம்பிக்கைக்கான அழுத்தமான சான்று. ஒரு இடத்தில் கவிப்பேரரசு வைரமுத்து ஒன்றைச் சொல்லினார், “ஷெரீப் அவர்கள் ஒரு உண்மையான இசுலாமியர்” என்று. வைரமுத்துவிற்கு புரிந்தது, நமக்கு ஏன் புரியாமல் போய்விட்டது? இந்த வரலாற்றுப் பிழையை மாற்றி அமைக்க வேண்டிய பொறுப்பில் நாம் இருந்து கொண்டுள்ளோம் என்பதையாவது அறிய வேண்டும்.
இதேபோல் எம்.ஜி,ஆர் அவர்கள், கவிஞரை பலமுறை அழைத்திருக்கிறார். ஆனால் கவிஞர் செல்ல மறுத்ததோடு, அழைக்க வந்தவர்களிடம், “நான் ராமாவரம், போகாவரம் வாங்கி வந்திருக்கிறேன்” என்று பதில் கூறி, அழைப்பை நிராகரித்துள்ளார். அந்தளவிற்கு கவிஞர் வறுமையை விரும்பி வாழ்ந்துள்ளார்.
மேலும் இன்னொரு சம்பவத்தையும் இங்கு குறிப்பிட வேண்டும். கவிஞரின் மனைவி தன் மகனின் வேலைக்கு சிபாரிசு செய்யும்படி கேட்டு, கலைஞர் கருணாநிதி அவர்களிடம் சென்றுள்ளார். அதற்கு கலைஞர் அவர்கள், “அண்ணன் அவர்களுக்கு சிபாரிசு செய்வது பிடிக்காதே. நீங்கள் அவரிடமிருந்து கடிதம் வாங்கி வாருங்கள்” என்று சொல்லியிருக்கிறார். இந்தச் சம்பவத்தை கவிஞரிடம் அவர் மனைவி சொல்லியிருக்கிறார். அதற்கு கவிஞர் கண்டித்ததோடு, கலைஞர் பதவியில் இல்லாத போதன்றி நான் அவரைச் சந்திக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
எவ்வளவு பெரிய சுயமரியாதைக்காரராக கவிஞர் வாழ்ந்திருக்கிறார் பாருங்கள். இந்தப் பண்பினை கவிஞர் மிக இயல்பாகவே தன்னில் கொண்டிருந்திருக்கிறார். கலைஞரிடம் தான் நெருங்காததற்கு இன்னொரு மிக முக்கியமான காரணம் யாதெனில், அது கவிஞர் கொண்டிருந்த தமிழ் தேசிய அரசியலே ஆகும். கலைஞரோ திராவிட அரசியலில் இருப்பவர் அல்லவா!
திரைத் துறையில் இருந்தும் வறுமை நீங்காத கவிஞர், திரைத் துறையில் இருந்து திடீரென வெளியேறினார். இனிமேல் சினிமாவில் பாடல் எழுதப் போவதில்லை என அறிவிப்புச் செய்தார். இதனைச் சொல்லுகிறபோது அவர், புகழின் உச்சியில் இருந்திருக்கிறார் என்கிற செய்தி, நாம் உற்று நோக்கிப் பார்க்க வேண்டிய ஒன்று.
“கவிஞன் என்பவன் தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என பொறுப்புடனும் எழுத வேண்டும்.”
என்று ஒருமுறை தனது கட்டுரை ஒன்றில் எழுதினார் கவிஞர். தான் எழுதிய வரிகளுக்கு, தன்னைவிட நேர்மையாளன் இன்னொருவன் இல்லை என்பதனை தெளிவாக்கினார், சினிமா உலகில் இருந்து விலகியதன் மூலம்.
தேர்த் திருவிழா எனும் படத்தில், “ஏ...குட்டி, என்னா குட்டி, எகிறிப் போகும் கன்னுக் குட்டி” என்ற பாடலைக் கேட்டதும் கவிஞர் மனம் நொந்து போய் சினிமாவில் பாடல் எழுதுவதை நிறுத்திக் கொண்டார். காரணம் அதிலிருந்த ஆபசமான வார்த்தைகள்தான். தரம் தாழ்ந்து போன சினிமாவில், இனி எழுத மாட்டேன் என்று அவர் சொன்னது அதற்குத்தான். ஒரு கவிஞனின் பொறுப்புணர்வு என்ன என்பதை விளக்கியவர் அல்லவா கவிஞர் அவர்கள். அந்தப் பொறுப்புணர்வை காக்கும் பொருட்டே அவர் சினிமா உலகில் தொடர முடியாமல் வெளியேறினார். இப்பேற்பட்டவரை இனம் காணாமல் போய்விட்டதே இந்த இசுலாமியச் சமூகம்? இது எவ்வளவு பெரிய இனத் துரோகம்?
மேலும், எங்கள் வீட்டுப் பிள்ளை படத்தில், “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” என்கிற பாடல் வெளியானது. இதனைக் குறித்து கவிஞர் கூறுகையில், “என்னை சினிமாவை விட்டுத் துரத்தியப் பாடல் இது” என்று குறிப்பிட்டார்.
இந்தப் பாடல் குறித்த தன்னுடைய கண்டனத்தை, 07.11.1986-ல் வெளியான வண்ணத்திரை இதழில் இப்படி பதிவு செய்தார் அவர்:
“ஒழுக்கக் கேடு இது. தமிழ்க் கலாச்சாரமும், பெண்மையும் இதுபோன்ற பாடல்களால் இழுக்குப்படுகின்றன.”
தான் நேசிக்கின்ற தமிழுக்காக, தமிழ் கலாச்சாரத்திற்காக, இசுலாமிய கொள்கை நெறிகளுக்காக கவிஞர் எப்படிப்பட்ட வாழ்வை துறந்திருக்கிறார்! மேலும், இதில் கவிஞர் பெண்ணினத்தின் மீது கொண்டிருந்த மரியாதைப் பண்புகளையும் இந்தக் கூற்றில் அழுத்தமாகக் காண முடியும்.
சினிமா உலகில் சுற்றியடித்துக் கொண்டிருந்த போதே கவிஞர் தீவிர அரசியலிலும் ஈடுபட்டுத்தான் கொண்டிருந்தார்.
ஆங்கில மொழித் திணிப்பிற்கு எதிரான போராட்டங்களிலும், இந்தி எதிர்ப்பு போராட்டங்களிலும், தமிழரசுக் கழகத்தின் முன்னனி தலைவராய் இருந்து சுழன்றிருக்கிறார் கவி கா.மு.ஷெரீப் அவர்கள்.
சென்னைய ஆந்திராவிலிருந்து மீட்டெடுத்தப் போராட்டமாகட்டும், கன்னியாகுமரியை கேரளத்திடமிருந்து காப்பாற்றிய போராட்டமாகட்டும், திருத்தணியை தமிழகத்திற்கு திருப்பிய போராட்டமாகட்டுமென எல்லை மீட்புப் போராட்டங்களில் வீரியத்தோடு போராடியும் சிறைகளைக் கண்டவராகவும் இருந்திருக்கிறார் கவிஞர்.
தை மாதப் பிறப்பன்று பொங்கல் விழா கொண்டாடப்பட வேண்டும் என்கிற கோரிக்கையில் வென்று காட்டினார்கள் தமிழரசுக் கழகத்தினர். இந்தக் கோரிக்கைகாவும், கவிஞர் பலவாறு ம.பொ.சி அவர்களோடு தோள் நின்று உழைத்திருக்கிறார்.
இதேபோல, “மெட்ராஸ்” என்று ஆங்கிலப் பெயரைத் தமிழில் மாற்ற வேண்டும் என்று தமிழரசுக் கழகம் தீர்மானம் போட்டது. இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற முற்றுகைப் போராட்டங்களை நடத்தியது. இந்த முற்றுகைப் போராட்டத்தில், ம.பொ.சி கலந்து கொள்ளவில்லை. வழக்கமாக ம.பொ.சி ஸ்தானத்தில் கவிஞர்தான் அதிகமாகத் தலைமை வகிப்பார். அப்படி இந்தப் போராட்டத்திலும் கவிஞரே தலைமை வகித்து, தொண்டர்களை தினந்தோறும் சரியாக அணிவகுத்துக் கொண்டு போராடினார். அப்படிப் போராடி, இதிலும் சிறைகளைக் கண்டார் கவிஞர்.
இந்தியா சுதந்திரத்திரம் அடைந்தற்குப் பிறகு, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு “தியாகி பென்ஷன்” கொடுக்கப்பட்டது. அப்படி இது கவிஞருக்கும் அறிவிக்கப்பட்டபோது, கவிஞர் அதனை ஏற்காமல் நிராகரித்துவிட்டார். தான் செய்த தொண்டு பணத்திற்காக அல்ல. அதனை பணத்தைக் கொண்டு அளவிடுவது அநாகரீகமானது என்று எண்ணியோ என்னவோ, கவிஞர் அவைகளைத் தூக்கி எறிந்தார். கவிஞர் லட்சங்களுக்காக வாழ்ந்தவர் அல்ல, லட்சியங்களுக்காக வாழ்ந்தவர் என்பதனை இந்தச் சம்பவம் படம் பிடித்துக் காண்பிக்கிறது.
மேலும், 1953-ம் ஆண்டு கன்னியாகுமரி ஈத்தா மொழியில் “தெற்க்கெல்லை விடுதலைப் போராட்ட ஆதரவு மாநாடு” தமிழரசுக் கழகம் மற்றும் எல்லைப் போராட்ட ஆதரவாளர்களின் கூட்டமைப்பில் நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள் முன்னனி வகித்தார். இதில் ம.பொ.சி அவர்களும் பங்கு கொண்டார். இந்த மாநாட்டின் செயல்பாட்டாளராக கொடிக்கால் செல்லப்பா எனும் சேக் அப்துல்லா அவர்கள் இருந்து செயல்பட்டிருக்கிறார்.
இப்படி ம.பொ.சி அவர்களோடு இணைந்து தேசியவாத அரசியலில் தீவிரமாகச் சுழன்ற கவிஞர். ம.பொ.சி அவர்களின் கொள்கைத் தடுமாற்றங்களால் கட்சியைவிட்டு வெளியேறிவிட்டார்.
தேசியவாதம் பேசிக் கொண்டிருந்த ம.பொ.சி அவர்கள், தனது கட்சியை திமுக-விடம் ஒப்படைத்து, தேசியவாத அரசியலில் இருந்து பின் வாங்கியதே இதற்குக் காரணம். இந்தத் தருணத்தில் கவிஞரின் விலகல் குறித்து, ம.பொ.சி அவர்கள் கூறுகையில்,
”பழுத்த இலை உதிர்ந்துவிட்டது” என்று சொல்லியிருக்கிறார்.
அதற்கு கவிஞர் அவர்கள், “பட்ட மரத்திலிருந்து, பழுத்த இலைதானே உதிரும்” என பதில் அறிக்கை அளித்துள்ளார்.
இத்தோடு ம.பொ.சி அவர்கள் வேறெதையும் பேச இயலாமல் வாயடைத்துப் போய்விட்டார்.
தமிழரசுக் கழகத்தின் ஆரம்பம் முதல் தன்னை ஈடுபடுத்தி, அர்ப்பணித்து, பொதுச் செயலாளராகவும், பல போராட்டங்களில் தலைவராகவும் சுழன்ற கவிஞரை ம.பொ.சி அவர்கள் அரசியலில் மட்டும் கை கழுவவில்லை. மாறாக, ”எனது போராட்டம்” என்கிற தலைப்பில் தான் எழுதிய 1007 பக்கம் கொண்ட புத்தகத்தில் ஒரே ஒரு இடத்தில் கூட கவிஞரின் பெயரைக் குறிப்பிடாமல் இருந்திருக்கிறார் அவர்.
எப்படியானவரின் பெயரை இருட்டடிப்பு செய்திருக்கிறார் தெரியுமா?
ம.பொ.சி-யின் 50-வது பிறந்த தின விழாவிற்கு 50-பவுன் நகையை மேடையில் அளிப்பதாக கட்சியினர் தீர்மானித்து முடிவெடுத்தனர். ஆனால் இறுதி நேரத்தில் அவர்களுக்கு அந்தளவிற்கு பணம் கிடைக்காமல் போய்விடுகிறது. இதனைத் தெரிந்து கொண்ட கவிஞர் அவர்கள், “சொன்னது சொன்னபடி செர்ணத்தைக் கொடுத்துவிட வேண்டும்” என்று சொல்லிவிட்டு, தனது மனைவியின் நகைகளை விற்று, மீதித் தொகைக்கு ஈடு செய்திருக்கிறார். கவிஞரின் வாக்கு வன்மைக்கு இதைவிட இன்னொரு சான்று வேண்டுமா என்ன?
பின்னாட்களில் பவுனிற்காக கொடுக்கப்பட்ட தொகையில்தான் ம.பொ.சி ‘பியட்’ காரை வாங்கிப் பயன்படுத்தினார்.
இப்படிபட்ட கவிஞரின் பெயரைத் தான், தனது புத்தகத்தில் இருட்டடிப்பு செய்திருக்கிறார் ம.பொ.சி அவர்கள்.
ம.பொ.சி அவர்களின் இந்த மோசமான செயல்பாடுகளை, வளவன் என்கிறவர் தனது, ”நெஞ்சத் திரையில் நினைவுக் கோடுகள்” எனும் புத்தகத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.
“சிலம்புச் செல்வர், தன்னல வெறியாலும், பதவிப் பித்தாலும், கடுமையாக வளர்ந்துவிட்ட தமிழரசுக் கழகத்தை, திமுக எனும் கடலில் கரைத்த பெருங்காயமாய் ஆக்கிக் கரைத்துவிட்டு, கையையும் கழுவி விட்டு, பேராயக் கட்சியில் போய்ச் சேர்ந்தார்.
’எனது போராட்டம்’ எனும் தனது 1007 பக்க நூலில் ஒரு சாதனையை மறைமுகமாகச் செய்துள்ளார்.  அது, தமிழரசுக் கழகத்தில் தனக்கு அடுத்த தலைவராகவும், 10 ஆண்டுகளுக்கு பணியாற்றியவரும், பல்வேறு போராட்டங்களில் மாபெரும் பங்கு வகித்தவருமான கவி கா.மு.ஷெரீப் பற்றிய செய்திகளை மறைத்துவிட்ட சாதனையாகும்.”
என்று உண்மையை உலகிற்கு எடுத்துப் பேசியிருக்கிறார் வளவன்.
இத்தனை பெரிய துரோகத்தை யாரால் தாங்கிக் கொள்ள இயலும்? ஆனால் கவிஞர் இவைகளையும், கனத்துப் போன இதயங்களோடு கடந்து போயிருக்கிறார்.  
கவிஞரின் போராட்டங்கள், சமூகத் தொண்டு எனப் பார்த்தால் அது நீண்ட பட்டியலில் செல்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், இந்தியச் சுதந்திரத்திற்கான போராட்டங்கள், சுதந்திரத்திற்குப் பிறகு எல்லை மீட்புப் போராட்டங்கள், மொழி மீட்புப் போராட்டங்கள், புதிய தமிழக அமைப்பு, மன்னர் ஒழிப்பு, தமிழ் ஆட்சி மொழிக்கான போராட்டங்கள், தமிழகப் பெயர் அமைப்பு, தமிழிசை இயக்க ஈடுபாடு, பாரதிப் பாடல்கள் தேசியமயமாக்கிடுதல், நாடக வரிச் சட்ட நீக்கம், திராவிட நாடு தட்சின ராஜ்ய எதிர்ப்பு, தொழிலாளர் போராட்டம் போன்றவற்றைக் கூறலாம்.
இப்படியான தீவிர அரசியலில் சுழன்ற கவிஞர், மா.பொ.சி-யின் தூரோகத்தாலும், தமிழக அரசியலின் திசை மாற்றங்களாலும் சற்று தள்ளி நின்று கொண்டார். சினிமாவை விட்டு அவர் வெளியேற என்ன காரணமோ, அதே காரணங்கள்தான் அரசியலிலிருந்தும் அவர் வெளியேறியது. வடிவங்களும், சம்பவங்களும் வேறாக இருக்கலாம் ஆனால் காரணம், தூய்மை, நேர்மை இவைகள் இல்லாது போனதுதான். அதனால்தான் கொள்கை மறவரால் இரண்டிலுமே நீடிக்க இயலவில்லை. கொஞ்சம் அனுசரித்துப் போயிருந்தார் என்றால், இவர் கோடிக்கு அதிபராகியிருப்பார். அரசியலில் பல பதவிகளைப் பெற்று வாழ்ந்திருப்பார். ஆனால் கவிஞரை இதிலிருந்து தடுத்தே வந்துள்ளது, தான் ஏற்றுக் கொண்ட இசுலாமிய கொள்கையும், தமிழ் தேசிய அரசியலும்.
 தமிழகம் எப்படி இருக்க வேண்டும் எனக் கவிஞர் குறிப்பிடுகிறார்:
“அன்றையத் தமிழகம் உலகின் முன் உயர்ந்த நாடாக, புகழ் மிக்க நாடாக, பொருள் வளமிக்க பூமியாக, கற்றோர்களையும், கவி வாணர்களையும், வீரர்களையும் கொண்டு திகழ்ந்தது. இன்றோ நம் தமிழர்கட்கு, இன, மொழி நாட்டுப் பற்றுதலுமில்லை, பக்தியுமில்லை. இந்த நிலை மாற, நாம் நமது மக்களை தேச பக்தர்களாக, மொழி பக்தர்களாக, இனப் பற்றுதல் உடையவர்களாக ஆக்கிடுதல் வேண்டும்.”
என்கிற வார்த்தைகள்தான் அது. இது 1959-ம் ஆண்டில் கவிஞர் அவர்கள் சாட்டை எனும் இதழில் எழுதிய ஒரு கட்டுரையின் வரிகளாகும்.
கவிஞரின் தேசிய உணர்வினை படம் பிடித்துக் காட்டும், பொன்னான வரிகளாகும் இவைகள். இன்று யார் யாரையோ தேசிய இனத்தின் அடையாளங்களாக, தமிழ் தேசியவாதிகள் முன்னிறுத்திக் கொண்டுள்ளனர். அவர்களின் பார்வைக்கு கவிஞர் எப்படித்தான் விடுபட்டுப் போனாரோ?
1970-ம் ஆண்டில் தமிழகமெங்கும் சுற்றிய கவிஞர் அவர்கள். ஒவ்வொரு ஊர்களிலும் சீறாப்புராணத்தின் தொடர்ச் சொற்பொழிவுகளை ஆற்றினார். கவிஞர் அவர்கள் சீறாப்புராணத்தின் வரிகளுக்கு உரைநடை வாசிக்க, அதனை குமரி அபூபக்கர் அவர்கள் பாடலாக மக்கள் மத்தியில் எடுத்து வைப்பார்.
சீறாப்புராணத்தின் சொற்பொழிவுகளுக்காக தமிழகம் முழுமைக்கு பயணித்த கவிஞர் ஒரு வழிப்போக்கனாகவே வாழ்ந்துள்ளார். இரவு நேரத்தில் மசூதிகளில் படுத்துறங்கியிருக்கிறார். தமிழகத்தின் இரண்டு முதலமைச்சர்களின் வளர்ச்சிக்கு காரணமானவர், வறுமையில் வாடிய கோலத்தை எண்ணி நம்மாலேயே சகித்துக் கொள்ள இயலவில்லை. கவிஞர் எப்படித்தான் வாழ்ந்தாரோ!
கவிஞரின் சொற்பொழிவுகளைக் குறித்து, முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் அவர்கள் கூறுகிறார்:
“சீறாப்புராணம் சொற்பொழிவைக் கேட்ட பிறகு, அவரை ஒரு சொற்பொழிவாளராக அறிந்து மகிழ்ந்தேன்”. என்று.
இதேபோல கவிஞரின் கவித்துவத்தைக் குறித்து,   
“தம்பி ஷெரீப் கவிஞன் என்று கண்டு கொண்டேன். அவருடையப் பாக்களைப் படித்து, அதனின்றும் இன்பத்தைக் கங்கு, கரையின்றி அனுபவிப்பீர்களாக.”
என்று 1946-ம் ஆண்டில் பாரட்டியுள்ளார், அறிஞர் வ.ரா அவர்கள்.
“கலைமாமணி விருது பெற்ற கவிஞர். அருந்தமிழ் இலக்கியங்கள்
இலக்கணங்கள் அனைத்தையும் பாங்குறக் கற்றுத் தெளிந்தவர்கள்”
என்று போற்றுகிறார், சிலம்பொலி செல்லப்பனார் அவர்கள்.
இப்படிப் பலராலும் பற்பல பாரட்டுகளைப் பெற்றிருக்கிறார் கவிஞர். அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கெளரவித்துள்ளது. ஆனாலும் இந்த விருதுகளைக் கொண்டு, கவிஞருக்கு எந்தப் பெருமையும் இருந்திருக்கவில்லை. விருது என்பது இன்று, இரகசிய விலை பேசப்படும் பொருளாக உள்ள காலத்தில், நாம் விருதுகளைக் கொண்டு கவிஞரை இழுக்கப்படுத்த வேண்டியதில்லை.
முஸ்லீம், இந்து என்கிற மத மோதல்கள் திட்டமிட்டு சிலரால் ஏற்படுத்தபட்டுக் கொண்டிருக்கிற நாட்டில், இஸ்லாம் இந்து மத்திற்கு விரோதமானதா? என்கிற நூலை எழுதி சமத்துவத்தை மேலோங்கச் செய்திருக்கிறார் கவிஞர். இப்படி கவிஞரின் எழுத்துலகப் பணி என்பதும் நீண்ட ஒன்று.
”புதுயுகம், தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?, காதலும் கடமையும், தமிழரசில் முஸ்லீம்கள், இலக்கியத்திலும் பித்தலாட்டமா?, வீரன் செண்பகராமன் வரலாறு, கண்ணகியின் கனவு, தமிழரின் சமய நெறி, பொது சிவில் சட்டம் பொருந்துமா?, மச்சகந்தி, புலவர் புகழேந்தி, பல்கீஸ் நாச்சியார் காவியம், நபி தம் பேரர், ஆயிஷா நாச்சியார் பிள்ளைத் தமிழ், இஸ்லாமும் ஜீவகாருண்யமும், மகளே கேள், நபியே எங்கள் நாயகம்”
இப்படி கவிஞர் பெற்றெடுத்த புத்தகங்கள் ஏராளம் உண்டு. இதில் நாடக நூல்கள், சிறுகதைகள், கவிதைகள், வரலாற்று நூல்கள், அரசியல் & இலக்கிய கட்டுரை நூல்கள், புதினங்கள் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் இருக்கின்றன. இவரின் நூல்களில் சில, இவரின் வெளியீட்டகமான “சீதக்காதி வெளியீட்டகத்தின்” மூலமாகவும் வெளிவந்திருக்கின்றன.
கவிஞரின் புத்தகங்களில், தஞ்சை இளவரசி, வள்ளல் சீதக்காதி வரலாறு, விதியை வெல்வோம், இறைவனுக்காக வாழ்வது எப்படி?, இஸ்லாம் இந்து மதத்திற்கு விரோதமானதா?, நல்ல மனைவி உள்ளிட்டவைகள் அரசால் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.
இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான கவிஞர், 07.07.1994-ம் ஆண்டில், சென்னை மாநகரில், தனது இறுதி நாளைக் கண்டார். தமிழ் மொழியின், தமிழ் நாட்டின் அடையாளங்களுள் ஒருவரான கவிஞர், அன்றைய தினத்தில் காலமாகிப் போனார். தமிழினத்தின், தமிழ் தேசியத்தின் ஒப்பற்ற ஓர் விடுதலைக் குரல் அன்று ஓய்ந்து போனது.
கவிஞர் மறைந்து இன்று இருபது ஆண்டுகள் கழிந்துவிட்டன. அதேசமயம் அவர் பிறப்பின்படி நூற்றாண்டுகளைத் தொட்டும்விட்டுள்ளார்.
கவிஞரின் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும், தமிழ் இன உணர்வுகளும், மொழி உணர்வுகளும், தன்னலமற்ற மாந்த நேயங்களும், கொள்கை மாறா தூய உறுதியும், கிஞ்சிற்றும் குறைவற்ற உயர் பண்புகளும் இன்று காலத்தால் மறைந்து போய், அவரைப் பற்றிய குறிப்புகள் மறைக்கடிக்கப்பட்டும் போய் உள்ளது.
இந்தத் தருணத்தில் அவரின் நூற்றாண்டு விழாக்கள் தற்போது தமிழகத்தில் வெகு சிலரால் கொண்டாடப்பட்டு வருகிறது என்பது சற்றே ஆறுதலான ஒன்று. மறந்துவிட்ட மாமனிதருக்கு ‘சாகித்ய அகாடமி’ விழா எடுத்துள்ளதையும் இந்த நேரத்தில் நாம் வரவேற்க வேண்டும்.
கவிஞர் தமிழ் மொழிக்கு ஆற்றிற்கும் பெரும் பங்கை விளக்கிச் சொல்லுகிறபோது, கலைமாமணி விக்கிரமன் அழுத்தம் திருத்தமாக ஒன்றைச் சொல்லுகிறார், “முஸ்லீம்கள் தமிழ் வளர்ச்சிக்கு செய்திருக்கும் தொண்டைப் பற்றி, பெரிய நூலே எழுதலாம்” என்று.              
இந்தக் கூற்று எவ்வளவு உண்மையானது. முஸ்லீம்கள் மீதும், அவர்களின் மொழி, இனப் பற்றின் மீதும் பரப்பப்படுகிற அவதூறுகளுக்கு நேரெதிராக இசுலாமியர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதற்கு நம்முடைய கவிஞர் காதர்ஷா முகம்மது ஷெரீப் அவர்கள், ஓர் ஒப்பற்ற முன்மாதிரியாக இருக்கிறார்.
இவ்வளவு மொழிப் பற்றும், இத்தனை இசுலாமிய கொள்கைப் பிடிப்புகளும் கொண்டிருந்து என்ன பயன்? கவிஞரை இசுலாமியர்களும் கண்டுகொள்ளவில்லை. தமிழ் தேசியவாதிகளும் கண்டுகொள்ளவில்லை.
சினிமாக்காரர்கள் என்றாலே நடத்தை கெட்டவர்கள் என்கிற போக்கு எல்லோர் மத்தியிலும் பரவிக் கிடக்கிறது. ஆனால், கவிஞர் சினிமாவில் இருந்தும் எப்பேற்பட்ட வாழ்வினை வாழ்ந்திருக்கிறார். தூய இசுலாமிய நெறியை அவர் ஒருபோதும், எவற்றிற்காகவும் விட்டுக் கொடுத்திடவே இல்லை. இப்படியான கவிஞரை இசுலாமியச் சமூகம் தூக்கிக் கொண்டாடி இருக்க வேண்டாமா?
காங்கிரஸ் கட்சி மகாகவி பாரதியாரைத் தூக்கிப் பிடித்ததைப் போல, திராவிடக் கட்சிகள் பாவேந்தர் பாரதிதாசனை முன்னிறுத்தியதைப் போல, கம்யூனிஸ்டுகள் பட்டுக்கோட்டையாரைக் கையிலேந்தியதைப் போல, தமிழ் தேசியவாதிகள் கவி கா.மு.ஷெரீப் அவர்களைத் தாங்கியிருக்க வேண்டாமா?
ஒரு மனிதர் வாழும் போதும் புரிந்து கொள்ளப்படாமலும், இறந்தப் பின்னரும் புரிந்து கொள்ளப்படாமலும் போனது எவ்வளவு பெரிய வேதனை..!
கவிஞர் கா.மு.ஷெரீப் அவர்கள், தமிழின் மறைக்கப்பட்ட ஓர் அடையாளம். மறைக்கப்பட்டவரை மீட்டெடுக்காமல், நாமும் மறந்து போகலாமா?
“புதிய தமிழகம் தோன்றி உழைத்தவர்களில், ஒருவன் நான் என்பதை, வரலாறு எழுதுவோர் மறந்துவிட முடியாது” என்று நம்மீது நம்பிக்கை கொண்டு வார்த்தைகளைச் சொல்லி சென்றுள்ள கவிஞரின் நம்பிக்கையை நாம் வீணடித்து விடாமல், இந்தத் தமிழ்ப் போராளியை தமிழுலகம் அறியச் செய்ய வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் ஈடாகும்!
பழனி ஷஹான்
(நன்றி: சமநிலைச் சமுதாயம், மார்ச் 2015)
thanks http://keetru.com/