Search This Blog

Thursday, July 3, 2014

பேர்லாகர் குவிஸ்டு: அறிமுகக்குறிப்பு - சுந்தர ராமசாமி

ஸ்வீடிஸ் தேசத்து இலக்கிய கர்த்தா, 1951ல் நோபல் பரிசு பெற்றவர். ‘பாரபாஸ்’ என்னும் நாவல் எழுதி உலகப்புகழ் பெற்றவர். இந்நாவல் வெளிவந்த முதலாண்டிலேயே பதினொரு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டதாம். திரைப்படமாகவும் எடுக்கப்பட்டுள்ளது.
‘பாரபாஸ்’ நாவல் தமிழிலும் ‘அன்பு வழி’ என்ற தலைப்பில், க.நா.சு.வால் Lagerkvist மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஒரு பதிப்பு வந்ததோடு சரி. வாசகர்கள் கண்டுபிடித்துப் படித்துப் பார்க்க வேண்டிய நாவல் இது.
‘அன்புவழி’ நாவலில் திருடன் ஒருவன் தண்டனைக்கு உள்ளாகிறான். அவனுக்குப் பதிலாக இயேசு குருசில் அறையப்பட்டுத் தண்டனை பெறுகிறார். இயேசுவுக்குப் பதிலாக ‘பாரபாஸ்’ விடுதலை பெறுகிறான். இயேசு குரிசில் அறையப்படும் காட்சியை  கண்ணால் பார்க்க நேரும் ‘பாரபாஸ்’ பெரும் பாதிப்புக்குள்ளாகிறான். இயேசு குரிசில் அறையப்பட்ட காட்சி அவன் மனதில் நீங்காது இடம் பெறுகிறது. ஆனால் அவனால் இயேசுவை முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ, பின்பற்றவோ முடியவில்லை. செம்புச் சுரங்கம் ஒன்றில் அடிமையாக வேலை பார்க்கும் பாரபாஸ் மன உளைச்சல் என்ற குரிசில் ஓயாது தன்னை அறைந்து அவதிக்குள்ளாகிறான். ஆத்மீக ஒளியை ஏற்றுக்கொள்ள விரும்பியும், ஏற்றுக்கொள்ள இயலாத, தருக்க உலகுக்கு ஆட்பட்டுவிட்ட நவீன மனிதனின் இரண்டுங்கெட்டான் நிலையை பாரபாஸ் காட்டுவதாக கொள்ளலாம்.
பேர்லார்கர் குவிஸ்டு 1891ல் பிறந்தவர். அவருடையது விவசாயிகளின் குடும்பம். மிகுந்த மத நம்பிக்கைக்கு உட்பட்டது. வைதீகமானது. கிறிஸ்துவ வைதீக மத நம்பிக்கைகளை பேர்லாகர் குவிஸ்ட்டால் முழுமையாக ஏற்க முடியவில்லை. முழுமையாக நிராகரிக்கவும் முடியவில்லை.
பேர்லாகர் குவிஸ்ட் சுமார் 35 புத்தகங்கள் வரையிலும் எழுதியிருக்கிறார். 1913ல் சுவீடனிலிருந்து அவர் பாரீஸ் சென்றார். பாரீஸில் கூபிஸ்டு இயக்கம் மும்முரப்பட்டுக் கொண்டிருந்த காலம். இவ்வியக்கம் இவர் மனதை பாதித்தது. நுண் கலைகள், முக்கியமாக ஓவியம் தன் தடைகளை முறித்துக்கொண்டு, வாழும் காலத்தின் பிரதிபலிப்பை ஏற்று பயணத்தை முடுக்கிக்கொண்டிருப்பதாயும், இலக்கியம் தயங்கி பின் நிற்பதாகவும் அவருக்குத் தோன்ற ஆரம்பித்தது. barabbas பாரபாஸ்
பேர்லாகர் குவிஸ்டு ஒரு கவியாக தன் இலக்கிய வாழ்வை ஆரம்பித்தவர். ‘துக்கம்’ என்ற தலைப்பில் இவர் வெளியிட்ட முதல் கவிதைத்தொகுதி இவருடைய 25வது வயதில் வெளியாயிற்று.
இளமைக் காலத்தில் பேர்லாகர் குவிஸ்ட்டை சங்கடப்படுத்திய பிரச்சனைகள் இரண்டு. ஒன்று அவருடைய மனோபாவத்துக்கு மாறாக வைதீக கிறிஸ்துவ மதம் கொண்டிருந்த நிலை. இரண்டு முதல் உலகப் போரின் விளைவாக ஏற்பட்ட நாசங்கள். இவர் எழுதிய முதல் நாடகம் ‘கடைசி மனிதன்’ என்பது. பைபிளைத் தழுவி எழுதிய நாடகம் இது. முப்பது வயதில் லாகர் குவிஸ்டு பிரஞ்சு தேசத்திலும் இத்தாலியிலும் வாழ்ந்தார். இவருடைய வாழ்க்கைப் பார்வையில் நம்பிக்கையின் ஒளியைச் சேர்க்க இவ்வெளிநாட்டு வாழ்க்கை உதவிற்று. மீண்டும் 1930 வாக்கில் ஐரோப்பியச் சூழ்நிலையில் ஒரு மாற்றம் நிகழ்ந்தது. வன்முறையும், எதேச்சதிகாரமும், பயமுறுத்தல்களும் வாழ்க்கையை மிக மோசமாக கெடுத்துக் கொண்டிருந்தன. இச்சூழ்நிலையால் பாதிக்கப்பட்டு பேர்லாகர் குவிஸ்ட்  ஏகாதிபத்தியத்தின் பரம வைரியாக மாறினார். இக்காலத்தில் இவர் எழுதிய நூல் ‘தூக்குத்தூக்கி’ என்பது. ஏகாதிபத்தியத்தைக் கேலி செய்து முகத்திரையைக் கிழிக்கும் நூல் இது. இந்நாவல் நாடகமாக மாற்றப்பட்டு அரங்கேறியபொழுது ஸ்காண்டிநேவிய நாடக உலகில் மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளாயிற்று.
இவருடைய  ’ஆத்மாவை இழந்த மனிதன்’ என்ற நாவலில் பலாத்காரவாதியான ஒரு அரசியல்வாதி காதல் வாழ்க்கை மூலம் பக்குவப்பட்டு மனித வாழ்வைக் கருணையோடு பார்க்கும் மாற்றாத்தைப் படிப்போர் ஏற்றுக்கொள்ளும்படி மிக அழகாக சொல்லி இருக்கிறார். இதற்குப் பின் இவர் எழுதிய பிரபல நாடகம் ‘மனிதன் வாழட்டும்’ என்பது. நாடகத்தில் இயேசு நாதர், சோக்ரதர், ஜாண் ஆப் ஆக், ஒரு அமெரிக்க நீக்ரோ ஆகியோர்கள் வருகிறார்கள். இவர்களுடைய தலைவிதியின் பொதுத்தன்மையை ஆராய்கிறார் பேர்லாகர் குவிஸ்டு இந்நாடகத்தில்.
பேர்லாகர் குவிஸ்டு பேச்சில் நம்பிக்கை அற்றவர். பொதுக் கூட்டங்களின் கோலாகலங்களில் அவர் எப்போதுமே கலந்து கொண்டதில்லை. நோபல் பரிசு பெற்றபொழுது நிருபர்கள் அவரை அணுகி உலக மக்களுக்கு ஒரு விசேஷ செய்தி தர வேண்டும் என்று கேட்டதற்கு பேர்லாகர் குவிஸ்டு, ‘சொல்ல எதுவும் இல்லை என புத்தகங்களில் அனைத்தும் சொல்லி இருக்கிறேன்’ என்றார்.
- நன்றி கொல்லிப்பாவை இதழ்த்தொகுப்பு.

கணிதத்தின் வரலாறு

ஒருவன் இந்த சமூகத்தோடு படிப்பறிவு இல்லாமலும் ஒன்றி வாழ முடியும். ஆனால் அவனுக்கு சிறிதளவாது கணித அறிவு இருக்க வேண்டும். அப்போது தான் அவனால் இந்த சமூகத்தில் வாழ முடியும். பண்டை காலத்தில் வாழ்ந்த புலவர்கள் கூட தங்கள் பாடல்களை ஒரு குறிப்பிட்ட கணித விதிப்படி தான் அமைத்தனர். உதாரணத்திற்கு திருக்குறளையே கூறலாம். இத்தகைய கணிதம் எப்படி தோன்றி வளர்ந்து இன்றைய கணிப்பொறி வரை வளர்ந்தது என்பதை பார்ப்போம்.

ஆதிகாலத்தில் வாழ்ந்த மக்கள் பொருள்களை ஒப்பிட அறிந்த போதை கணிதம் வளர தொடங்கிவிட்டது. ஆதி மக்கள் தங்கள் கால்நடைகளையும், மற்ற பொருட்களையும் கணக்கிடுவதற்கு கற்கள், குச்சிகள் போன்றவற்றை பயன்படுத்தினர். ஆதி மக்கள் தங்களின் உற்பத்தி பொருட்களை பரிமாற்றிக்கொண்டனர். இதனால் பண்டமாற்று முறை நடைமுறைக்கு வந்தது. இதனால் பொருட்களை அளந்து கொடுக்க தொடங்கினர்.

அப்போது தோன்றியது தான் முகத்தல் அளவைகள். இதற்கு அடுத்து சேர், அழாக்கு, படி, முழம் போன்ற அளவைகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு மக்களின் வாழ்க்கைத்தரம் படிப்படியாக உயர ஆரம்பித்தது. இதையடுத்து பல அறிஞர் பெரு மக்கள் தோன்றி பல கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்தனர். ஆரம்ப காலத்தில் எண்ணிக்கையை கணக்கிட அறிந்த மக்கள் பின்னர் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்றவற்றை பொருள்களையும,¢ கற்களையும், குச்சிகளையும் கொண்டு செய்ய ஆரம்பித்தனர். இந்த காலகட்டத்தில் சீனர்கள் கம்பிகளை கொண்ட ஒரு மணிச்சட்டத்தை உருவாக்கி அதன் மூலம் கூட்டல், கழித்தல், வகுத்தல், பெருக்கல் போன்றவற்றை செய்தனர்.

இவர்கள் உருவாக்கிய சட்டத்தில் கம்பிக்கு 7 மணிகள் வீதம் இருந்தன. இதற்கு அபகஸ் என்று பெயர் வந்தது. இதையே இரு மணிகளை குறைத்து ஜப்பானியர்கள் சோரபான் என்று பெயரிட்டனர். இவ்வாறு கணிதவியலின் அடிப்படை செயலிகள் அறிமுகமாயின. இன்றைய கணிப்பொறி பிறக்க இந்த மணிச்சட்டமே அடிப்படையாக இருந்தது என்று அறியப்பட்டுள்ளது. பின்னர் ஜான் நேப்பியர் என்ற அறிஞர் மேலும் சில மாற்றங்களை செய்து ஒன்பது மணிச்சட்டம் கொண்டு ஒரு கருவியை அமைத்தனர். இதற்கு நேப்பியர் சட்டங்கள் என பெயரிட்டனர். இதன் மூலம் வர்க்க மூலம் வரை கணக்கி முடிந்தது. இவரின் இந்த அறிய கண்டுபிடிப்பு தான் சில மாற்றங்களுடன் இன்று நாம் மடக்கை என்ற பெயரை பயன்படுத்துகிறோம்.

காலத்தை -குறிப்பாக பழங்காலத்தில் மணல் சாடிகளை பயன்படுத்தி மணல் செரிந்த அளவை கொண்டு நேரத்தை கணக்கிட்டனர். பின்னர் மணலுக்கு பதில் நீரை பயன்படுத்தினர். இக்காலகட்டத்தல் வானவியல் பற்றி கலில¦யோ, ஆர்யபட்டர் என பலர் பல ஆராய்ச்சிக¬ளை செய்து பூமி தன்னைத்தானே சுற்றிக்கொள்ள 23 மணி 56 நிமிடம் 4.091 நொடி என்று கூறினார். அவை பின்னர் விஞ்ஞானி பூர்வமாக நிருபிக்கப்பட்டு அதுவே ஒரு நாளைக்கு 24 மணி நேரம் எனக் குறிக்கப்பட்டது.

இதிகாசங்களில் வெறுமே அல்லது வெற்றிடம் என்பதை குறிக்க சூன்யம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. பின்னர் சுன்னம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டது. இதையே கணித மேதைகள் மதிப்பில்லாதவைகளுக்கு புள்ளியை பயன்படுத்தினர். பின்னர் குழப்பத்தை தவிர்க்க புள்ளியை சுற்றி வட்டமிட்டனர். பின்பு, வட்டம் என்று பயன்படுத்தினர். இந்த சூன்யம் என்ற சொல் வெவ்வேறு மொழிகளில் மாறி பின்னர் பிரஞ்சு மொழி ஜுரோ என்று பெயரிடப்பட்டு அதுவே நிலைத்துவிட்டது. இதை கண்டுபிடித்து உலகிற்கு வழங்கிய பெருமை இந்தியாவையே சேரும். இதை வழங்கியர் ஒரு பெயர் அறியப்படாத இந்தியர் என்று அறியப்பட்டுள்ளது. இந்த 0 தான் இன்று கணிப்பொறியில் தலையாய எண்ணாக உள்ளது.

பிளாட்டோ என்ற தத்துவ மேதை கிமு 387ம் ஆண்டு ஐரோப்பாவில் முதல் பல்கலைக்கழகமாகிய ஏதென்ஸ் அகாடமியில் வடிவங்களை அளக்க சில கருவிகளை உருவாக்கினர். அவர் உருவாக்கியவை தான் அளவு கோள், காம்பஸ் போன்றவை. அவை தான் இன்று நடைமுறையில் உள்ளது. பல கணித மேதைகள் உருவாக்கிய அடிப்படை தகவல்களை கொண்டு கோப் நிக்கஸ் என்ற போலந்து நாட்டு அறிஞர் கோணகணிதம் என்ற பிரிவை வழங்கினர். பின்னர் இவரின் கண்டுபிடிப்புகளை பயன்படுத்தி கலில¦யோ போன்ற வானவியல் அறிஞர்கள் அண்டத்தை பற்றி பல உண்மைகளை கண்டறிந்தனர். இயக்கம், விசை போன்ற உண்மைகளை கண்டறிய இவரின் கோணகணிதம் தான் பயன்பட்டது. 

World first: Australian solar plant has generated “supercritical” steam that rivals fossil fuels’

A CSIRO test plant in Australia has broken a world record and proved solar power could efficiently replace fossil fuels.


A solar thermal test plant in Newcastle, Australia, has generated “supercritical” steam at a pressure of 23.5 mpa (3400 psi) and 570°C (1,058°F).
CSIRO is claiming it as a world record, and it’s a HUGE step for solar thermal energy.
"It's like breaking the sound barrier; this step change proves solar has the potential to compete with the peak performance capabilities of fossil fuel sources," Dr Alex Wonhas, CSIRO’s Energy Director, told Colin Jeffrey for Gizmag.
The Energy Centre uses a field of more than 600 mirrors (known as heliostats) directed at two towers housing solar receivers and turbines, Gizmag reports.
This supercritical steam is used to drive the world’s most advanced power plant turbines, but it’s only been possible to produce it by burning fossil fuels such as coal or gas.
"Instead of relying on burning fossil fuels to produce supercritical steam, this breakthrough demonstrates that the future power plants could instead be using the free, zero-emission energy of the sun to achieve the same result,” Dr Wonhas explained.

Image: CSIRO
Currently, commercial solar thermal or concentrating solar power power plants only operate at “subcritical” levels, using less pressurised steam. This means they’ve never been able to match the output or efficiency of the world’s best fossil fuel power plants - until now.
The commercial development of this technology is still a fair way off, but this is an essential first step towards a more sustainable future.
Watch the video to see the plant in action.
Source: Gizmag and CSIRO

மரப்பாச்சி - உமா மகேஸ்வரி

பரணில் எதையோ தேட ஏறிய அப்பா இறங்கும்போது வேறொரு பொருளைக் கையில் வைத்திருந்தார். கடந்த காலத்தின் தூசு அவர் மீது மங்கலாகப் படிந்திருந்தது. பழைய பொருள்களோடு ஞாபகங்களையும் உருட்டிக் களைத்துக் கனிந்த முகம். அப்பா அனுவைக் கூப்பிட்டார் - எந்த நொடியிலும் விழுந்து சிதறுவதற்கான அச்சுறுத்தல்களோடு அவசர வாழ்வில் விளிம்பில் தள்ளாடும் அபூர்வமானதொரு குழந்தைக் கணத்தைத் தன்னிலிருந்து சேகumamaheswariரித்து அவளில் நட்டுவிட வேண்டும், உடனடியாக. ஒரு மாயாஜாலப் புன்னகையோடு அதை அனுவிடம் நீட்டினார். சிறிய, பழைய மஞ்சள் துணிப்பையில் பத்திரமாகச் சுற்றிய பொட்டலம், பிரிபடாத பொட்டலத்தின் வசீகரமான மர்மத்தை அனு ஒரு நிமிடம் புரட்டிப் பார்த்து ரசித்தாள். உள்ளே  என்ன? பனங்கிழங்குக் கட்டு? பென்சில் டப்பா? சுருட்டிய சித்திரக் கதைப் புத்தகம்? எட்டு வயது அனுவிற்கு இந்தப் புதிரின் திகில் தாங்க முடியவில்லை. அப்பாவின் ஆர்வமோ அது இவளுக்குப் பிடித்திருக்க வேண்டுமே என்பதாக இருந்தது. அவசர அவசரமாகப் பிரித்தபோது வெளியே வந்தது கரிய மரத்தாலான சிறிய பெண்ணுருவம். அதனுடைய பழமையே அனுவிற்குப் புதுமையானதாயிற்று. தெய்வ விக்கிரகங்களின் பிழைபடாத அழகோ, இயந்திரங்கள் துப்பிய பிளாஸ்டிக் பொம்மைகளின் மொண்ணைத்தனமோ வழவழப்போ அதற்கில்லை. விரல்களை உறுத்தாத சீரான சொரசொரப்பு. இதமான பிடிமானத்திற்கு ஏதுவான சிற்றுடல்; நீண்டு மடங்கிய கைகள்; ஒரு பீடத்தில் நிறுத்தப்பட்ட கால்கள்; வாழ்தலின் சோகத்தை வளைகோடுகளுக்குள் நிறைத்த கண்கள்; உறைந்த உதடுகள். 'ஹை, பின்னல்கூட போட்டிருக்கப்பா.' அனு ஒவ்வொன்றாகத் தடவிப் பார்த்தாள் அதிசயமாக. 'ஒவ்வொரு அணுவிலும் இதைச் செதுக்கிய தச்சனின் விரல்மொழி, உளியின் ஒலி' என்று அப்பா முழங்கை, கால்கள் மற்றும் முகத்தில் இருக்கிற சிறுரேகைகளைக் காட்டிச் சொன்னார். பிறகு அவளுடைய திகைப்பைத் திருப்தியோடு பார்த்தபடி, புதிய விளையாட்டுத் தோழியுடனான தனிமையை அனுமதிக்கும் விதமாக அங்கிருந்து நகர்ந்தார்.
மரச் செப்புகள், சிறு அடுப்பு, பானை, சட்டி, சருவம், குடம், கரண்டி என்று எதிர்காலச் சமையல் அறையின் மாதிரி அவள் சிறு கைகளில் பரவிச் சமைந்து அவளைக் களைப்புறச் செய்தது. வட்டத் தண்டவாளத்தில் ஓடும் குட்டி ரயிலின் கூவல் சோகத்தின் நிழலை நெஞ்சுள் பூசுகிறது. கிளி, மைனா, புறா என்று பறவை பொம்மைகளின் மொழியோ சதா மேகங்களைத் துழாவிக் கொண்டிருக்கிறது. பிளாஸ்டிக் யுவதிகள் அவள் கற்பனையின் கனம் தாளமாட்டாத மெலிவோடு இருக்கிறார்கள்.
அம்மா சமையல், கழுவுதல், துவைத்தல், துடைத்தல் என எந்த நேரமும் வேலைகளோடிருக்கிறாள். பிறகு தங்கச்சிப் பாப்பாவின் குஞ்சுக் கை, கால்களுக்கு எண்ணெயிட்டு நீவி, காலில் குப்புறப் போட்டுக் குளிக்கவைக்கிறாள். துவட்டிச் சாம்பிராணிப் புகை காட்டி, நெஞ்சோடு அணைத்துச் சேலையால் மூடி மூலையில் உட்கார்ந்திருக்கிறாள் நெடுநேரம்.
'அம்மா நான் உன் மடியில் படுத்துக்கட்டுமா?'
'இன்னும் சின்னக் குழந்தையா நீ?' நெஞ்சு வரை மேடேறிய கர்ப்ப வயிற்றோடு அம்மாவுக்குப் பேசினாலே மூச்சிரைக்கிறது. அவள் பகிர்ந்து தரும் அன்பின் போதாமை அனுவை அழுத்துகிறது.
அப்பா மெத்தையில் சாய்ந்து மடக்கி உயர்த்திய கால்களில் தங்கச்சிப் பாப்பாவைக் கிடத்தி தூரியாட்டுகிறார். கிலுகிலுப்பையை ஆட்டி பாப்பாவிற்கு விளையாட்டுக் காட்டுகிறார். 'ங்கு, அக்கு' என்று பாப்பாவோடு பேசுகிறார்.
'அப்ப, இந்தக் கதையில அந்த ராஜா...' என்ரு அனு எதையாவது கேட்டால்., 'பெரிய மனுசிபோல் என்ன கேள்வி நை நைனு, சும்மா இரு' என்று அதட்டுகிறார்.
'நான் யார்? பெரியவளா, சின்னவளா, நீயே சொல்' அனு கேட்கையில் மரப்பாச்சி மௌனமாய் விழிக்கும்.
'எனக்கு யாரிருக்கா? நான் தனி.' அனுவின் முறையிடல்களை அது அக்கறையோடு கேட்கும். சுடுகாயைத் தரையில் உரசி அதன் கன்னத்தில் வைத்தால் 'ஆ, பொசுக்குதே' என்று முகத்தைக் கோணும். கொடுக்காப்புளிப் பழத்தின் கொட்டையில், உட்பழுப்புத் தோல் சேதம் அடையாமல் மேல் கறுப்புத் தோலை உரித்து நிலை மேல் வைத்தால் பகல் கனவும் பலிக்கும் என்கிற அனுவின் நம்பிக்கைகளுக்கு 'ஆமாஞ்சாமி' போடும். அவள் நிர்மாணிக்கிற பள்ளிகளில் மாணவியாக, தொட்டில்களில் பிள்ளையாக, சில நேரம் அம்மாவாக, கனவுலக தேவதையாக எந்த நேரமும் அனுவோடிருக்கும்.
மரப்பாச்சி புதிய கதைகளை அவளுக்குச் சொல்லும்போது, அதன் கண்களில் நீல ஒளி படரும். மரப்பாச்சி மரத்தின்  இதயமாயிருந்தபோது அறிந்த கதைகள், மரம் வானை முத்தமிட்ட பரவசக் கதைகள், மழைத்துளிக்குள் விரிந்த வானவிற் கதைகள்... அவள் எல்லா நாளும் ஏதாவது ஒரு கதையின் மடியில் உறங்கினாள்.
வருடங்கள் அவளை உருகிப் புதிதாக வார்த்தன. நீண்டு, மினுமினுக்கிற கைகள்; திரண்ட தோள்கள்; குழைந்து, வளைந்த இடுப்பு, குளியல் அறையில் தன் மார்பின் அரும்புகளில் முதன் முறையாக விரல் பட்டபோது பயந்து, பதறி மரப்பாச்சியிடம் ஓடி வந்து சொன்னாள். அது தனது சிறிய கூம்பு வடிவ முலைகளை அவளுக்குக் காட்டியது.
அவள் குளியல் அறைக் கதவுகளை மூடித் தன்னைத் தனிப்படுத்திக் கொள்வதில் அம்மாவிற்குக் ஆதங்கம். 'நான் தலை தேய்து விடறேனே' என்கிறாள்.
'ஒண்ணும் வேணாம்' என்று அனு விலகுகிறாள். அம்மா தனக்கும் அவளுக்கும் இடையே தள்ளத் தள்ள முளைத்தாடும் திரைகளை விலக்க முயன்று, தாண்டி முன்னேறுகையில் புதிது புதிதாய் திரைகள் பெருகக் கண்டு மிரண்டாள். நிரந்தரமான மெல்லிய திரைக்குப் பின்புறம் தெரியும் மகளின் வடிவக்கோடுகளை வருடத் தவித்தாள்.
எல்லோரும் தூங்கும் இரவுகளில் அனுவின்  படுக்கையோரம் அம்மா உட்கார்ந்திருப்பாள். அனுவின் உறக்கத்தில் ஊடுருவி நெருடும் அம்மாவின் விழிப்பு. உள்ளங்கை அனுவின் உடல் மீது ஒற்றி ஒற்றி எதையோ எதையோ தேடும். 'என்னம்மா?' பாதி விழிப்பில் அனு கேட்டால் பதற்றமாகக் கையை இழுத்துக்கொண்டு, 'ஒண்ணுமில்லை' என முனகி, முதுகு காட்டிப் படுத்துக் கொள்வாள். அம்மாவின் முதுகிலிருந்து விழிகளும் வினாக்களும் தன் மீது பொழிவதை அனுவால் அறிய முடியும்.
பள்ளிக்குக் கிளம்பும் நேரம் இப்போதெல்லாம் மேலாடையைச் சரியாகப் போடுவது அம்மாதான், சாயங்காலம் அவள் வர பத்து நிமிடம் தாமதித்தால் , வாசலில் அம்மா பதறித் தவித்து நிற்கிறாள். எங்கே போனாலும் அம்மாவின் கண்களின் கதகதப்பும் மிருதும் அடைகாக்கிறது.
தன் அயர்விலும் ஆனந்தத்திலும் மரப்பாச்சி மங்குவதையும் ஒளிர்வதையும் கண்டு அனு வியக்கிறாள். தன்னை அச்சுறுத்தவும் கிளர்த்தவும் செய்கிற ததும்பல்களை மரப்பாச்சியிடமும் காண்கிறாள். கட்புலனாகாத கதிர்களால் தான் மரப்பாச்சியோடு ஒன்றுவதை உணர்கிறாள்.
மரப்பாச்சியின் திறந்த உடல், கோடுகள் தாண்டி மிளிரும் விழிகள், இடுப்பும் மடங்கிய கையும் உருவாக்கும் இடைவெளி அனைத்தையும் உறிஞ்சத் திறந்த உதடுபோல் விரியும். அனுவின் உலகம் அதற்குள் வழுக்கி, நகர்ந்து, சுருங்கும்.
சிறுமிகள் அனுவை விளையாடக் கூப்பிட்டு உதடு பிதுக்கித் திரும்புகிறார்கள். கூடத்துத் தரையில் முடிவுற்று ஆடும் தொலைக் காட்சியின் ஒளி நெளிவுகள், இரவில் ஊறும் இருள், ஜன்னல் கதவுகள் காற்றில் அலைக்கழிய, அனு கட்டில் ஓரத்தில் சுருண்டிருப்பாள். மேஜையில் இருக்கும் மரப்பாச்சியின் கண்கள் அவளைத் தாலாட்டும் மெல்லிய வலைகளைப் பின்னுகின்றன. அதன் முலைகள் உதிர்ந்து மார்பெங்கும் திடீரென மயிர் அடர்ந்திருக்கிறது. வளைந்து இடுப்பு நேராகி , உடல் திடம் அடைந்து, வளைந்த மீசையோடு அது பெற்ற ஆண் வடிவம் விசித்திரமாயும் விருப்பத்திற்குரியதாகவும் இருக்கிறது. அது மெதுவாக நகர்ந்து அவள் படுக்கையின் அருகில் வந்தது. அதன் நீண்ட நிழல் கட்டிலில் குவிந்து அனுவை அருந்தியது. பிறகு அது மெத்தை முழுவதும் தனது கரிய நரம்புகளை விரித்ததும் அவை புதிய புதிய உருவங்களை வரைந்தன.; துண்டு துண்டாக. அம்புலிமாமா கதைகளில் அரசிளங்குமரிகளை வளைத்துக் குதிரையில் ஏற்றுகிற இளவரசனின் கைகள். சினிமாக்களில் காதலியைத் துரத்தி ஓடுகிற காதலனின் கால்கள். தொலைக்காட்சியில் கண் மயங்கிய பெண்ணின் கன்னங்களில் முத்தமிடுகிற உதடுகள். தெருவோரங்களில், கூட்டங்களில் அவள் மீது தெறித்து , உணர்வைச் சொடுக்கிச் சிமிட்டுகிற கண்கள். இன்னும் அம்மாவின் இதமான சாயல்கள், அப்பாவின் உக்கிரக் கவர்ச்சியோடான அசைவுகள், அத்தனையும் சிந்திய நிழற்துண்டங்கள், அபூர்வமான லயங்களில் குழைந்து கூடி உருவாகிறான் ஒருவன். அவள் ஒருபோதும் கண்டிராத, ஆனால் எப்போதும் அவளுள் அசைந்தபடியிருந்த அவன், அந்த ஊடுருவல் தனக்கு நேர்வதைத் தானேயற்று கவனம் கொள்ள முடிவது என்ன அதிசயம்? தனக்கு மட்டுமேயாகவிருந்த அந்தரங்கத்தின் திசைகளில் அவன் சுவாதீனம் கொள்வது குளிர்ந்த பரபரப்பாகப் பூக்கிறது. அந்த இரவு, காலையின் அவசரத்திலும் உடைபடாது நீண்டது. அனு வேறெப்போதும் போலன்றி தன் உடலை மிகவும் நேசித்தாள். கனவின் ரகசியத்தைப் பதுக்கிய மிதப்பில் பகல்களிருந்தன. பள்ளி முடிந்ததும் தாவி வந்து அவளை அள்ளுகிற மரப்பாச்சி; 'ஏன் லேட்?' என்று 'உம்'மென்றாகிற அதன் முகம்; நீள்கிற ரகசியக் கொஞ்சல்கள்; அம்மா இல்லாத நேரம் இடும் முத்தங்கள்; அவள் படுக்கையில் அவளுக்கு முன்பாகவே ஆக்கிரமித்திருக்கிற அவன். போர்வைக்குள் அனுவின் கைப்பிடியில் இருக்கிற மரப்பாச்சியை அம்மா பிடுங்க முயற்சித்தால், தூக்கத்திலும் இறுகப் பற்றிக் கொள்கிறாள். அதன் விரிந்த கைகளுக்குள் தன்னைப் பொதிந்தும், மார்பு முடிகளைச் சுருட்டி விளையாடியும் மீசை நுனியை இழுத்துச் சிரித்தும் தோள்களில் நறுக்கென்று செல்லமாய்க் கிள்ளியும் அவள் நேரங்கள் கிளுகிளுக்கும். தாபங்களின் படிகளில் சுழன்றிறங்குகிறாள் அவள். அகலவும் மனமின்றி அமிழவும் துணிவின்றி வேட்கையின் விளிம்பலைகளில் நுனிப் பாதம் அளைகிறாள்.
கிருஸ்துமஸ் லீவ் சமயம் அத்தை வந்தபோது அனு கவுனை கால்களுக்கிடையில் சேகரித்து, குனிந்து, கோல நடுச்சாணி உருண்டையில் பூசணிப் பூவைச் செருகிக்கொண்டிருந்தாள். 'அனு எப்படி வளர்ந்துட்டே!' அத்தை ஆச்சரியத்திற்குள் அவளை அள்ளிக் கொண்டாள். உணவு மேஜையில் விசேஷமான பண்டங்கள், பார்த்துப் பார்த்துப் பரிமாறும் அம்மா. அத்தை அனுவை லீவிற்குத் தன்னோடு அனுப்பும்படி கேட்டதும் அம்மாவின் முகத்தில் திகிற் புள்ளிகள் இறைபட்டன. 'அய்யோ மதினி, இவளை நாங்க கடிச்சா முழுங்கிடுவோம்? அப்படியே இவள் ஆளாகிற முகூர்த்தம் எங்க வீட்டில் நேர்ந்தால் என்ன குத்தம்? எனக்கும் பிள்ளையா குட்டியா? ஒரு தரம் என்னோட வரட்டுமே' அத்தை அவளைத் தன்னருகில் வாஞ்சையாக இழுத்துக் கொண்டாள்.
ஒரு உறுப்பையே தன்னிலிருந்து வெட்டியெடுப்பது போன்ற அம்மாவின் வேதனை கண்டு அனு மருண்டாள். துணிகளை அடுக்கிய பெட்டியில் மரப்பாச்சியை வைக்கப் போனபோது அத்தை, 'அங்கே நிறைய பொம்மை இருக்கு' என்று பிடுங்கிப் போட்டதுதான் அனுவுக்கு வருத்தம்.
அந்தப் பயணம் அவளுக்குப் பிடித்திருந்தது. நகர்கிற மரங்கள்; காற்றின் உல்லாசம்; மலைகளின் நீலச்சாய்வு. எல்லாமும் புத்தம் புதிது.
அம்மா வற்புறுத்தி உடுத்திவிட்ட கரும்பச்சைப் பாவாடையில் அனுவின் வளர்த்தியை மாமாவும் வியந்தார். பார்த்த கணத்திலிருந்தே மாமாவிடம் இருந்து தன்பால் எதுவோ பாய்வதை உணர்ந்து அவள் கூசினாள். 'எந்த கிளாஸ் நீ? எய்த்தா, நைன்த்தா?' என்று கேட்டுவிட்டு பதிலைக் காதில் வாங்காமல் கழுத்துக் கீழே தேங்கிய மாமாவின் பார்வையில் அது நெளிந்தது. ' எப்படி மாறிட்டே? மூக்கொழுகிக்கிட்டு, சின்ன கவுன் போட்டிருந்த குட்டிப் பொண்ணா நீ?' என்று அவள் இடுப்பைத் திமிறத் திமிற இழுத்துக் கொஞ்சியபோது மூச்சின் அனலில் அது ஊர்ந்தது. 'சட்டை இந்த இடத்தில் இறுக்குதா?' கேட்டு தொட்டுத் தொட்டு மேலும் கீழும் அழுத்தித் தேடிய உள்ளங்கையில் இருந்து அது நசநசவென்று பரவியது. மாமாவின் கைகளில் இருந்து தன்னை உருவிக்கொண்டு ஓடினாள் அனு.
அத்தை பிரியமாயிருந்தாள். திகட்டத் திகட்ட கருப்பட்டி ஆப்பாம், ரவை பணியாரம், சீனிப்பாலில் ஊறிய சிறு உருண்டையான உளுந்து வடைகள் என்று கேட்டுக்கேட்டு ஊட்டாத குறைதான்.
'உன் அடர்த்தியான சுருள்முடியில் இன்னிக்கு ஆயிரங்கால் சடை பின்னலாமா? பின்னி முடித்து, கொல்லையில் பூத்த பிச்சி மொட்டுகளை ஊசியில் கோர்த்து வாங்கி , ஜடையில் தைத்து, பெரிய கண்ணாடி முன் திருப்பி நிறுத்தி, சின்னக் கண்ணாடியைக் கையில் தந்தாள். 'நல்லாயிருக்கா பார் அனு!'
அம்மா ஒளிந்துவைத்த அன்பின் பக்கங்கள் அத்தையிடம் திறந்து புரண்டன. அனு எந்நேரமும் அத்தையை ஒட்டி, இரவில் சுவர் மூலையில் ஒண்டிப் படுத்து, அத்தையின் சேலை நுனியைப் பார்த்தபடியே தூங்க முனைவாள். அவ்வளவு தூரத்தையும் ஒரு விரல் சொடுக்கில் அழித்துவிட்டு , மரப்பாச்சிக்குள்ளிருந்து கிளம்பி வருகிறான் அவன். அத்தைக்கும் அனுவிற்கும் நடுவே இருந்த சிறிய இடைவெளியில் தன்னை லாவகமாகச் செலுத்திப் பொருத்திப் படுக்கிறான். உறக்கத்தோடு அனுவின் தசைகளிலும் நரம்புகளிலும் கிளர்ந்து கலக்கிறான். அவனும் அவளும் இடையறாத மயக்கத்தில் இருக்கையில் ஒரு அன்னியப் பார்வையின் திடீர் நுழைவில் அத்தனையும் அறுபடுகிறது. அனு உலுக்கி விழிக்கிறாள். மிகவும் அவசரமாக கழிப்பறைக்கு போகவேண்டும் போலிருக்கிறது. கொல்லைக் கதவு திறந்து  தென்னைகள், பவழமல்லி, மருதாணி எல்லாம் கடந்து, இந்த இருட்டில் குளிரில்...அய்யோ, பயமா இருக்கே. அத்தையை எழுப்பலாமா? ச்சே, அத்தை பாவம். அலுத்துக் களைத்து அயர்ந்த தூக்கம். ஏறி இறங்கும் மூச்சில் மூக்குத்தி மினுக்கும். காதோர முடிப் பிசிறில், கன்னத்து வியர்வைத் துளிர்ப்பில் அத்தைக்குள் புதைந்த குழந்தை வெளித் தெரிகிறது. எப்படியாவது தூங்கிவிடலாம். இல்லை, தாங்க முடியவில்லை. அடிவயிற்றில் முட்டும் சிறுநீர் குத்தலெடுக்கிறது. மெல்ல எழுந்து அத்தைக்கும் முழிப்புக் காட்டாமல் , கொலுசு இரையாமல் பூனைபோல நடந்து, சாப்பாட்டு மேஜையில் இடித்துச் சமாளித்து, இருட்டில் தடவி சுவிட்சைப் போடுகிறாள். கதவில் சாவியைத் திருகும் சிற்றொலி நிசப்தத்தின் மென்மைக்குள் பெரிதாக வெடிக்கிறது. அத்தை புரள்வது கேட்கிறது. 'ரொம்ப இருட்டாயிருக்குமோ?' பயந்து, நடுங்கி, அடித்தாழை ஓசையிட நீக்கி, கதவைத் திறந்தால் பளீரென்று நட்சத்திரங்களின் கலகலத்த சிரிப்பு. மின்விளக்கின் மஞ்சளௌளி தரையில் சிறுசிறு நாகங்களாக நெளிகிறது; மிக அழகாக,அச்சமேற்படுத்தாததாக. தன் பயங்களை நினைத்து இப்போது சிரிப்பு வருகிறது. காற்றில் அலையும் பாவாடை. பிச்சிப்பூ மணம். செடிகளின் பச்சை வாசனை. மருதாணிப் பூக்களின் சுகந்த போதை, தாழ்ந்தாடுகிற நட்சத்திரச் சரங்கள். நிலவின் மழலையொளி. கழிவறைக் கதவின் கிறீச்சிடல்கூட இனிமையாக. சிறுநீர் பிரிந்ததும் உடலின் லகுத்தன்மை. இந்த மருதாணிப் புதர்கிட்டே உட்கார ஆசையாயிருக்கே. அய்யோ அத்தை தேடுவாங்க. திரும்பி வருகையில் அனு தான் தனியாக இல்லாததை உணர்ந்தாள். உடல் மீது நூறு விழிகள் மொய்த்து உறுத்தின. அனிச்சையாக ஓடத் தொடங்கியபோது எதன் மீதோ மோத, கடினமான கைகள் அவளை இருக்கின, காலையில் உணர்ந்த அதே சுடு மூச்சு. 'ச்சீ, இல்லை; என்னை பேய் பிடிச்சிடிச்சோ?' கரிய, நரை முடியடர்ந்த நெஞ்சில் அவள் முகம் நெருக்கப்படுகிறது. கொட்டும் முத்தங்கள் - கன்னத்தில், உதட்டில், கழுத்தில், அவளுள் தளிர் விடுகிற அல்லது விதையே ஊன்றாத எதையோ தேடுகிற விரல்களின் தடவல், மாறாக அதை நசுக்கிச் சிதைக்கிறது. சிறிய மார்பகங்கள் கசக்கப்பட்டப்போது அவள் கதறிவிட்டாள். வார்த்தைகளற்ற அந்த அலறலில் அத்தைக்கு விழிப்புத் தட்டியது. காய்ந்த கீற்றுப் படுக்கைமீது அனுவின் உடல் சாய்க்கப்பட்ட போது  அவள் நினைவின்மையின் பாதாளத்துள் சரிந்தாள். கனமாக அவள் மேல் அழுத்தும் மாமாவின்  உடல். அத்தை ஓடிவரவும் மாமா அவசரமாக விலகினார். அத்தையின் உலுக்கல்; 'அனு, என்ன அனு!' அவளிடம் பேச்சு மூச்சில்லை. 'பாத்ரூம் போக வந்தப்ப விழுந்துட்டா போல.' மாமாவின் சமாளிப்பு. அத்தை மௌனமாக அவளை அணைத்துத் தூக்கிப் படுக்கையில் கிடத்துகிறாள்.
அரை மயக்க அலைகளில் புரளும் பிரக்ஞை. 'இதுவா? இதுவா அது? இப்படியா, இல்லை, முகமும் முகமும் பக்கத்தில் வரும்; உடனே ஒரு பூவும் பூவும் நெருங்கி ஆடும்; வானில் புதிய பறவைகள் சிறகடிக்கும். நீலமேகமும் பசும் புல்வெளியும் ஒட்டி உறவாடும்; திசைகளெங்கும் குழலிசை இனிமையாகப் பெருகும்; அப்படித்தானே அந்த பாட்டில் வரும்? ஓஹோ, அப்படியிருந்தால் இது பிடித்திருக்குமா? நீ விரும்புவது அணுகுமுறையின் மாறுதலையா? இல்லை. ச்சே, இந்த மாமாவா? காதோர நரை. வாயில் சிகரெட் நெடி. தளர்ந்த தோள்களின் வலுவான இறுக்கத்தில் இருந்த கிழட்டுக் காமத்தின் புகைச்சல். நெஞ்சைக் கமறுகிறது. உடல் காந்துகிறது. மார்பு வலியில் எரிகிறது. கண்கள் தீய்கின்றன.
'அய்யோ அனு, மேல் சுடுதே. இந்த மாத்திரையாவது போட்டுக்கோ' அத்தை வாயைப் புடவையால் போர்த்திக்கொண்டு விம்முகிறாள். மாமாவின் அறைக்கு ஓடி என்னவோ கோபமாய்க் கத்துகிறாள்.
'நான் இனி நானாயிருக்க முடியாதா? மாமாவின் தொடல் என் அப்பாவுடையது போலில்லை. அப்பா என்னைத் தொட்டே ஆயிரம் வருடம் இருக்குமே! என் முதல் ஆண் இவனா! என் மேல் மோதி நசுக்கிய உடலால் என்னவெல்லாம் அழிந்தது? பலவந்தப் பிழம்புகளில் கருகி உதிர்ந்த பிம்பங்கள் இனி மீளுமா? மாமா என்னிலிருந்து கசக்கி எறிந்தது எதை? எனக்கு என்னவோ ஆயிடிச்சே. நான் இழந்தது எதை? தூக்கம் ஒரு நனைந்த சாக்குப்போல் இமைமீது விழுந்தது.
காலையில் தேய்ந்த ஒலிகள். அடுப்படியில் லைட்டரை அழுத்தும் சத்தம், பால் குக்கரின் விசில், டம்ளரில் ஆற்றும் ஓசை. விழித்தபடி படுத்திருந்த அனுவிடம், 'இந்தா காப்பியைக் குடி அனு' என்கிறாள் அத்தை.
'வேணாம், எனக்கு இப்பவே அம்மாகிட்டே போகணும்'
அத்தையின் கெஞ்சல்களை அனு பொருட்படுத்தவில்லை. மாமா பேப்பரை மடித்துவிட்டு பக்கத்தில் வருகிறார். மறைக்க முடியாத குற்ற உணர்வு அவர் முகத்தில் படலமிட்டிருக்கிறது அசிங்கமாக.
'உனக்கு மாமா ஒரு புது ஃப்ராக் வாங்கித் தரட்டுமா?'. தோளில் பட்ட கையை அனு உடனடியாக உதறித் தள்ளுகிறாள். மாமா அத்தையின் முறைப்பில் நகர்ந்து விலகுகிறார்.
பயணம் எவ்வளவு நீண்டதாக நகர்கிறது? எத்தனை மெதுவாகச் சுழலும் சக்கரங்கள்? அத்தையின் மௌனம் நெஞ்சில் ஒற்றுவதாகப் படிகிறது. அத்தை அம்மாவின் நைந்த பிரதியெனத் தோற்றம் கொள்கிறாள். 'அம்மா, அம்மா! நான் உன்னிடம் என்ன சொல்வேன்? என்னால் இதை எப்படிச் சொல்ல முடியும்?'
'என்னாச்சு? உடனே திரும்பிட்டீங்க? அம்மா இடுப்புக் குழந்தையோடு ஓடி வருகிறாள். அனுவைப் பாய்ந்து தழுவும் அவள் பார்வை. அத்தை வரவழைத்துக்கொண்ட புன்னகையோடும் கலங்கி வருகிற கண்ணோடும்.
'ஒரு நாள் உங்களைப் பிரிஞ்சதுங்கே உங்க பொண்ணுக்குக்க் காய்ச்சல் வந்துடுச்சு' எனவும் அம்மாவின் விழிகள் நம்பாமல் அனு மீது நகர்ந்து தடவுகின்றன - கை தவறி விழுந்தும் உடையாமல் இருக்கிற பீங்கான் சாமானைப் பதறி எடுத்துக் கீறவில்லையே என்று சரி பார்ப்பதுபோல.
அனு ஒன்றும் பேசாமல் உள்ளே ஓடுகிறாள். வீட்டின் நாற்புறமும் தேங்கிய துயரம். அமானுஷ்யமான அமைதி அங்கே பொருக்குக் கட்டியுள்ளது. 'என் மரப்பாச்சி எங்கே?' அனு தேடுகிறாள். கூடத்தில் தொலைகாட்சிப் பெட்டிமீது, அடுக்களையில் பொம்மைகளிடையே, பாப்பாவின் தொட்டிலில், எங்கும் அது இல்லை. 'அது கீறி உடைந்திருக்கும். நூறு துண்டாக நொறுங்கிப் போயிருக்கும். அம்மா அதைப் பெருக்கி வாரியள்ளித் தூர எறிந்திருப்பாள். அனுவின் கண்களில் நீர் கோர்த்தது. அழுகையோடு படுக்கையில் சரிந்தபோது மரப்பாச்சி சன்னலில் நின்றது. ஆனால் அது அனுவைப் பார்க்கவேயில்லை. அவளையன்றி எங்கேயோ, எல்லாவற்றிலுமோ அதன் பார்வை சிதறிக் கிடந்தது. அனுவின் தொடுகையைத் தவிர்க்க அது மூலையில் ஒண்டியிருந்தது. அதனோடான நெருக்கத்தை இனி ஒருபோதும் மீட்க முடியாதென்று அவள் மனம் கேவியது. உற்றுப் பார்த்தபோது மரப்பாச்சியின் இடை வளைந்து, உடல் மறுபடியும் பெண் தன்மையுற்றிருந்தது. மீண்டும் முளைக்கத் தொடங்கியிருந்த அதன் முலைகளை அனு வெறுப்போடு பார்த்தாள்.
*
நன்றி : தமிழினி பதிப்பகம்

Mumps ::


Mumps (epidemic parotitis) is a systemic viral infection characterised by swelling of the parotid glands. Infection is endemic world-wide and peaks at 5–9 years of age. Vaccination has reduced the incidence in children but incompl
ete coverage has increased susceptibility amongst older non-immune adults. Infection is spread by respiratory droplets.

Clinical features :-

The median incubation period is 19 days, with a range of 15–24 days. Classical tender parotid enlargement, which is bilateral in 75%, follows a prodrome of pyrexia and headache. In non-vaccinated communities, mumps is the most common cause of sporadic viral meningitis, and meningitis complicates up to 10% of cases. The cerebrospinal fluid (CSF) reveals a lymphocytic pleocytosis, or less commonly neutrophils. Rare complications include encephalitis, transient hearing loss, labyrinthitis, electrocardiographic abnormalities, pancreatitis and arthritis.
Approximately 25% of post-pubertal males with mumps develop epididymo-orchitis but, although testicular atrophy occurs, sterility is unlikely. Oophoritis is much less common. Abortion may occur if infection takes place in the first trimester of pregnancy. Complications may occur in the absence of parotitis.

Diagnosis :-

The diagnosis is usually clinical. In atypical presentations without parotitis, serology for mumps-specific IgM or IgG seroconversion (four-fold rise in IgG convalescent titre) confirms the diagnosis. Virus can also be cultured from urine in the first week of infection or detected by PCR in urine, saliva or CSF.

Management and prevention :-

There is no specific treatment for mumps. Symptoms may be relieved by analgesia. Warm saltwater gargles, soft foods, and extra fluids may also help relieve symptoms. Patients are advised to avoid acidic foods and beverages, since these stimulate the salivary glands, which can be painful. Mumps vaccine is one of the components of the combined MMR vaccine.

DIABETES


New material could replace silicons in next-generation transistors

FIONA MACDONALD  
Scientists have demonstrated that a graphene-like material could help make near-perfect transistors that don't lose heat.
molyb6-27.jpg
Image: Kathryn McGill/Cornell University
As the transistors that make up electronics continue to shrink, there's increasing pressure to make them more efficient. And new research from Cornell University in the US suggests that a graphene-like material might just be the key to doing that.
The material is molybdenum disulfide and is an atom-thick semiconducting crystal. The two dimensional material is made up of atoms of molybdenum (grey in the image above) and sulfur (yellow).
Scientists first became interested in using it after studies showed that graphene would be the perfect material to make transistors with - except it doesn't allow for easy switching on and off of current, which is the key job of transistors.
Molybdenum disulfide, in contrast, has the necessary "band gap" to make it a semiconductor. 
But even more interestingly, researchers have discovered that it possesses another potentially useful property - in addition to charge and spin, the material has an extra degree of freedom called a valley. As the press release explains, this valley can produce a perpendicular chargeless current that doesn't lose any energy as it flows.
This sideways current is shown in the image above, triggered by a laser.
Effectively this means that the valley could be used to form a new-perfect, atom-thick transistor that would allow the creation of electronics that's don't dissipate heat, lead researcher Kin Fai Mak explained. That means they would be far more efficient than current electronics, which lose energy in the form of heat.
Now Mak and his team have now shown evidence of this valley-produced current in a functional transistor, using a laser of circularly polarised light. This light excited the electrons into the unusual sideways curve, a result that paves the way for further research on harnessing the potential of this current.
Their research is published in Science.
As the press release explains: These experiments bolstered the concept of using the valley degree of freedom as an information carrier for next-generation electronics or optoelectronics.
Watch this space…electronics could soon become a whole lot more efficient.

Here's how you learn new languages while you sleep

BECKY CREW  
A new study has provided proof that listening to a new language while you sleep can reinforce prior learning.
learning
Image: Piotr Marcinski/Shutterstock
A team led by biopsychologist Björn Rasch from the Swiss National Science Foundation enlisted 60 German-speaking students to test how sleeping affected their Dutch language lessons. They all sat down and learned a number of Dutch words until 10pm, at which point half of the volunteers were told to go to bed and the other half had to stay up. 
The sleeping half had the words they’d just learned played back to them while they were in non-rapid eye movement sleep - otherwise known as a dreamless sleep. The other half stayed up till 2am and also had their newly learned words played back to them.
At 2am, the sleeping volunteers were woken up and everyone was tested on the same group of Dutch words they’d all learned and listened to recordings of. According to Liat Clark at Wired, “Despite only hearing the Dutch words in their sleep, the students that got some shut-eye could remember the German translation better than the group forced to stay awake. In fact, the playback appeared to have no effect on those that were up all night.”
Publishing in the journal Cerebral Cortex, the researchers concluded that "Verbal cueing [spoken recordings] failed to improve memory during active and passive waking."
"It is, of course,” says Clark at Wired, "entirely reasonable to assume that sleep depravation versus rest played a part in the results.” But the team accounted for this by figuring out what was going on in the brains of the sleeping volunteers by taking electroencephalography, or EEG, recordings, which record electrical activity along the scalp. 
Of the different types of EEG feedback signals they got, one was correlated to the part of the brain responsible for processing language. And these feedback signals, known as “theta oscillations”, are associated with memory encoding activity when a person is awake. 
More research needs to be done, but the signs from this study are pretty promising that your brain can retain learned information even while you're at rest.
Source: Wired

பேச்சு - சில உளவியல் ஆலோசனைகள்...!

1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

2. மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும்.

3. மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள்.

4. நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும்.

5. நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும்.

6. பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை சரிப் படுத்துவதையோ தவிர்க்கவும். அது உங்களை நம்பிக்கையற்றவராகக் காட்டும்.

7.நகத்தையோ, பென்சில் / பேனா முனையையோ கடிப்பதை தவிர்க்கவும். அது உங்களை பயந்தவராக காட்டக்கூடும்.

8.நம்பிக்கையோடு கூடிய புன்னகை, நீங்கள் சொல்வதை கேட்க விரும்பாதவரையும் கேட்கவைக்கும்.

9.குழந்தைகளோடு பேசும்போது, அருகில் அமர்ந்து பரிவோடு பேசவும்.

10.உங்கள் பேச்சை விளக்குவதற்கு, உங்கள் கைகளையும் பயன்படுத்தவும். சைகைகள் நீங்கள் சொல்வதை மேலும் விவரிக்கும்.

சீரியல் கொலைகாரன் Jeffrey Dahmer

Jeffrey Lionel Dahmer என்பவன் 1960 மே 20 அன்று அமெரிக்காவில் பிறந்தவன். இவன் தன் பெற்றோருடனும், தன் தம்பி டேவிட்டுடனும் வசித்து வந்தான். இவனின் வாழ்க்கை எட்டு வயது வரை அமைதியாக போய்கொண்டிருந்தாலும், பதினைந்து வயதுக்கு பிறகு இவனின் பழக்கவழக்கங்கள் அடியோடு மாற ஆரம்பித்தது. டாமர் இந்த வயதில் முயல், அணில், ஓணான் போன்ற சிறு விலங்குகளை பிடிப்பதற்காகவே அருகில் உள்ள காட்டுக்குள் மணிக்கணக்கில் அலைவான். ஸ்டாம்ப் சேகரிப்பு மாதிரி புனை, அணில், முயல் உடற்பகுதிகளை துண்டு துண்டாக்கி சேகரித்து விதவிதமான ஜாடிகளில் வைத்திருந்தான் சிறுவன் டாமர். அவன் வசித்த தெருவில் ஒரு நாய் காரில் அடிபட்டு செத்துப்போனது. இரவு அங்கு ஒரு கத்தியுடன் போய், அந்த நாயின் தலையை மட்டும் வெட்டி வீட்டுக்கு எடுத்துசென்று ஒரு குச்சியில் செருகி வைத்தான் அவன். இவற்றையெல்லாம் தன்னை சுற்றி பரப்பி வைத்துக்கொண்டு பிறகு சுயஇன்பம் மேற்கொள்வதில் அந்த சிறுவனுக்கு மிகவும் விருப்பம் இருந்தது. எதோ 'மேற்படிப்பு' மாதிரி டாமர் மனித தலைகளை தேடி போனது பிற்பாடுதான்.

டாமருக்கு 17 வயதிருக்கும் போது அவனது பெற்றோர் விவாகரத்து வாங்கிக்கொண்டனர். டாமர் குடி பழக்கத்திற்கு அடிமையாக ஆரம்பித்தான். படிப்பும் அவனுக்கு சுத்தமாக ஏறவில்லை. அவனின் தந்தை அவனை ராணுவத்தில் சேர வற்புறுத்தினார். அவனும் ராணுவத்தில் சேர்ந்து ஆரம்பத்தில் ஒழுங்காகத்தான் இருந்தான். ஆனால் அந்த குடிப்பழக்கத்தால் அவன் திரும்ப தவறானவனாக மாற ஆரம்பித்தான். இரண்டு வருடங்கள் கழித்து அவனை Dismiss செய்தது ராணுவம். அவன் தந்தையிடம் செல்ல பயந்து, பாட்டி வீட்டில் தன் 'பாட்டிலோடு' தங்க ஆரம்பித்தான் டாமர். இவனின் 22 வது வயதிலிருந்து சுமார் ஆறு வருடம் வரை தன் பாட்டி விட்டில் வசித்து வந்தான் டாமர். அந்த சமயங்களில் அவனின் நடவடிக்கைகள் முற்றிலுமாக மாறி போயிருந்தது. துணிக்கடைகளில் இருக்கும் பொம்மைகளை திருடிக்கொண்டு வந்து தன் பிரோவில் வைத்துக்கொண்டான். ஏன் தெரியுமா? அதோடு தன் செக்ஸ் ஆசைகளை நிவர்த்தி செய்து கொள்வான் டாமர். இது போன்ற செய்கைகள் கொஞ்சம்கொஞ்சமாக அவன் பாட்டிக்கு தெரியவர, அவன் பாட்டி அவனை வீட்டை விட்டு வெளியே போக சொன்னாள். அவனும் தனியாக ஒரு புறநகரில், மரங்கள் சூழ்ந்த ஒரு பகுதியில் இருந்த வீட்டில் தனியாக தங்க ஆரம்பித்தான்.

டாமர் ஏற்கனவே இரண்டு முறை அமெரிக்க போலீசாரால் கைதுசெய்யப்பட்டவன். இரண்டு தடவையும் பாலியல் குற்றங்களுக்காகவே அவன் கைது செய்யப்பட்டான். ஐந்து வருடங்கள் சிறையிலும் இருந்திருக்கிறான் டாமர். சிறையிலிருந்து வெளியே வந்த டாமர், தன் கொலை படலத்தை ஆரம்பித்திருக்கிறான். ஆண், பெண் பேதமின்றி இதுவரை 17 பேரை கொடூரமாக கொன்றிருக்கிறது அந்த கொடூர மிருகம். தன்னந்தனியாக செயல்பட்ட டாமர், ஒரு சாடிஸ - செச்சுவல் கொலைகாரன். யாராவது ஒரு அப்பாவி பெண்ணையோ அல்லது ஆணையோ போகிறபோக்கில் தேர்ந்தெடுத்து கடத்தி கொண்டுபோய், பல மணி நேரம் விதவிதமாக சித்ரவதை செய்து, கடைசியாக கழுத்தை நெரித்து திர்த்து கட்டிய பிறகு, அந்த உடலோடு செக்ஸ் வைத்துக்கொள்வது டாமருக்கு ரொம்ப பிடிக்கும். 'பலநாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்' என்பது போல ஒரு நாள் வசமாக போலீசிடம் மாட்டினான். எப்படி தெரியுமா? ஒருவனை கொலை செய்வதற்காக அவனிடம் கத்தியை காட்டி மிரட்டி, விலங்கிட்டு வீட்டுக்குள் இழுத்து வந்திருக்கிறான். அவன் கொஞ்சம் சுதாரித்து டாமரை அடித்து விட்டு போலீசிடம் புகார் அளித்திருக்கிறான் அவன். டாமரை விசாரிக்க வந்த போலீசார், அவன் வீட்டிலிருந்து வரும் துர்நாற்றத்தை கண்டு சந்தேகமடைந்து அவன் வீட்டில் சோதனை போட்டார்கள்.

வீட்டுக்கு கிழே இருந்த ஒரு பாதாள அறைக்குள் நுழைந்த பார்த்த துணிவு மிகுந்த காவலதிகாரிகள் அனைவரின் நெற்றிகளும் சரேலென்று வியர்க்க ஆரம்பித்தன. சிலர் வெளியில் ஓடிவந்து வாந்தி எடுத்தார்கள். அங்கே...அறை முழுவதும், வெட்டப்பட்ட மனித கை, கால், தலைகள் சிதறி கிடந்தன. ஆசிட் நிரப்பப்பட்ட ஒரு பெரிய 'மீன்தொட்டிக்குள்' அழுகிப்போன (தலை, கை கால்கள் இல்லாத) உடல்கள் மெதுவாக மிதந்து கொண்டிருந்தன. அவனது குளிர்சாதன பெட்டிக்குள் வரிசையாக மனித தலைகள் அடுக்கப்பட்டிருந்தன. இன்னொன்றில், ஐஸ் படர்ந்து வெளுத்து போன நாலைந்து மனித இதயங்கள், கூடவே கச்சிதமாக வெட்டப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஆண் உறுப்புகளும் இருந்தன. மனித உடல் பகுதிகளை காய்கறிகளை போல சாப்பாட்டிலும் பயன்படுத்தினான் டாமர். போலீஸ் விசாரணையில், 'வீட்டில் இடமில்லை. எலும்புகள் ரொம்ப சேர்ந்து விட்டன. ஆகவே, அவற்றை சுத்தியலால் பொடியாக்கி, கிளிஞ்சல்களை போல மூட்டைகளில் கட்டி வைத்திருக்கிறேன். தலைகளை தனியே வெட்டி எடுத்து கொதிக்கும் நீரில் போட்டு, தோல்களை உரித்து துடைத்து, மண்டை ஓடுகளின்மீது சம்மந்தப்பட்டவரின் பெயர், வயது, கொலை செய்த தேதி போன்ற குறிப்புகளை எழுதி வைத்து விடுவேன்' என்று மிகவும் சாவதானமாக சொன்னான் டாமர்.

டாமரின் சார்பில் வாதாடிய வக்கீல், 'கொலைவேறிவந்தால், நம்மை போல அவனால் தன்னை கட்டுப்படுத்தி கொள்ள முடியாது. உடனே கொலையை செய்தாக வேண்டும். அதற்கு அவன் காரணமல்ல. டாமர் ஒரு சிந்திக்க முடியாத ஒரு மனநோயாளி' என்று வாதிட்டார். கொலையின்போது படிப்படியாக டாமர் மேற்கொண்ட அணுகுமுறை, அவனது ரசனை, மற்றும் 'சாதாரண' காலங்களில் அவன் மேற்கொண்ட அமைதியான வாழ்க்கை... இப்படி பல விஷயங்கள் டாமருக்கு எதிராக போனது. 'டாமருக்கு தரவேண்டியது ட்ரீட்மென்ட் அல்ல... பனிஷ்மென்ட்' என்று ஜூரி ஏகமனதாக சொல்ல, தொடர்ந்து 15 வருடங்கள் (957 ஆண்டுகள்) ஆயுள் தண்டனையை ஒருசேர அனுபவிக்க வேண்டும்' என்று தீர்ப்பு வழங்கினார் நீதிபதி (டாமர் வசித்த விஸ்கான்ஸின் மாநிலத்தில் மரண தண்டனை கிடையாது). சிறைப்பட்ட 950-வது நாளன்று ஒரு சக கைதி, 'டாமருக்கு தரவேண்டியது மரண தண்டனை தான்' என்று முடிவு கட்டி, அவன் பாத்ரூமில் அசந்திருந்த சமயம் பார்த்து ஒரு இரும்பு தடியால் டாமரின் தலையில் திரும்பத்திரும்ப அடித்து கொன்றான்.

ஒரு வேளை, 'எங்களை போன்ற சாமான்ய மனிதர்கள் வேறு, டாமர் போன்ற கொலை மிருகங்கள் வேறு. கொலை மிருகங்களையும், சாமான்ய மனிதர்களையும் ஒரே சிறையில் வைக்காதிர்கள்' என்று டாமரை கொன்ற அந்த சக கைதி நினைத்திருக்கலாமோ என்னவோ...

நன்றி: மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்', விகடன் வெளியிடு.

Parts of a car


1933-ம் ஆண்டில் திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்பட்ட பேருந்து


அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், திருச்செங்கோடு(ஒரு தேர் போன்ற வடிவம். அதன் கீழ் ஆமை வடிவம்)

ஒரு தேர் போன்ற வடிவம். அதன் கீழ் ஆமை வடிவம் ஒன்று செதுக்கப்பட்டு அந்தத் தேரினை ஆமை எடுத்துச் செல்வது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.
இடம் : அர்த்தநாரீஸ்வரர் ஆலயம், திருச்செங்கோடு

ஹிந்தி நடிகர் Hrithik Roshan னை வியப்பில் ஆழ்த்திய மஜிக்...


Tuesday, July 1, 2014

Why are DRUGS so hard to Quiet ?



It is an awesome video everyone should watch .It is produced by NIH National Institute Of Drug Abuse. It explains in a simple way, what is addiction? Why it is hard to quiet addiction to drugs like Alcohol, Nicotine, Internet as well s sex etc. Addiction is not a curse or something that is caused by some Demons or Evil Spirits.It is in fact, a disease.A disease That affects the brain. A disease that affects the reward centre of the brain. Many people fail to overcome addiction by failing to keep up their decision to stop alcohol.It is not because they are weak-hearted nor they are under the hilarious slavery of so called diabolic spirits. But because they have acquired neuropsychiatric disorder that affects the neurotransmitter system of the reward centre of brain located in the Limbic cortex. More specifically speaking, drugs develop addiction by flooding the circuits of the reward centre with a neurotransmitter called Dopamine. It is a neurotransmitter present in regions of the brain responsible for mediating emotion, cognition, feeling of pleasure and motivation. The overstimulation of this system, which rewards our natural behaviours, produces the euphoric effects sought by people who abuse drugs and teaches them to repeat the behaviour.

Phobia


பிறந்தது முதல் ஐந்து வயது வரை என்னென்ன உணவுகளை எப்படி கொடுக்க வேண்டும்

இது குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயது வரை என்னென்ன உணவுகளை எப்படி கொடுக்க வேண்டும் என்று உலக அளவில் ஐக்கிய நாடுகள் குழந்தைகள் அமைப்பு (UNICEF) தெளிவாக வெளியிட்டிருக்கும் புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஏழைத் தாய்மாரும் செயல்படுத்தக் கூடிய வழி முறைகள்தான் இது என்பது கூடுதல் சிறப்பு. என்றாலும் குடும்ப மருத்துவருடன் கலந்தாலோசித்து இதை நடைமுறைப்படுத்துவது சாலச் சிறந்தது.

முதல் ஆறு மாதங்கள் வரை:

குழந்தைக்கு தாய்ப்பால் எப்பொழுதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்பொழுதெல்லாம், அதாவது, ஒரு நாளைக்கு குறைந்தது 8 முறை கொடுக்க வேண்டும். மற்ற உணவுகள் அல்லது திரவ உணவுகள் – ஏன் தண்ணீர் கூட கொடுக்கக் கூடாது. கோடைக்காலம் என்றாலும் தண்ணீர் அவசியமில்லை. குழந்தை நோய்வாய்ப்பட்டிருந்தாலும் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்தக் கூடாது.

ஆறு மாதங்கள் முதல் ஒரு வயது வரை:

குழந்தை எப்பொழுதெல்லாம் விரும்புகிறதோ அப்பொழுது தாய்ப்பால் கொடுத்தால் போதும். மற்ற நேரங்களில் ஒரு கிண்ணம் உணவு, ஒரு முறை கொடுக்கலாம். நெய், எண்ணெய் கலந்த பருப்பு சாதம், கேழ்வரகு கஞ்சி, அரிசி கஞ்சி, பொட்டுக் கடலை கஞ்சி, உப்புமா, கிச்சடி, பொங்கல், மசித்த இட்லி, இடியாப்பம், சப்பாத்தி, வேக வைத்த மசித்த காய்கறிகள் (உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட்) ஆகியவற்றை கொடுக்கவும். வாழைப்பழம், மாம்பழம், பப்பாளி, சப்போட்டா ஆகிய பழங்களையும் கொடுக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைக்கு ஒரு நாளைக்கு மூன்று முறையும், தாய்ப்பால் குடிக்காத குழந்தைக்கு ஒரு நாளைக்கு ஐந்து முறையும் உணவு கொடுக்க வேண்டும். இந்த உணவையும் குழந்தையை மடியில் வைத்து தாய் தன் கையால் ஊட்ட வேண்டும். ஸ்பூன் அவசியமில்லை அல்லது தேவையில்லை. ஒவ்வொரு முறை ஊட்டும்போது தாய் தன் கை மற்றும் குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ வேண்டும்.

ஒரு வயது முதல் இரண்டு வயது வரை:

குழந்தை விரும்பும்போது தாய்ப்பால் கொடுக்க வேண்டும். வீட்டில் பெரியவர்கள் உண்ணும் உணவையே குழந்தைகளுக்கும் கொடுக்கலாம். ஒரு வேளைக்கு ஒன்றரை கிண்ணம் உணவு என்ற அளவில் ஒரு நாளைக்கு ஐந்து வேளை கொடுக்க வேண்டும். குழந்தை சாப்பிடும் வரை பக்கத்தில் அமர்ந்திருப்பது நல்லது. அப்போதுதான் தேவைப்படும்போது உதவ முடியும். ஏனெனில் இந்த வயதில், தன் உணவை தானே எடுத்து சாப்பிட குழந்தையை பழக்கப்படுத்த வேண்டும். முடிந்தவரை ஊட்டக் கூடாது. சாப்பிடுவதற்கு முன்பு குழந்தையின் கையை சோப்பு போட்டு கழுவ பழக்கப்படுத்துங்கள்.

இரண்டு வயதுக்கு மேல்:

குழந்தை விரும்பினால் தாய்ப்பால் கொடுக்கலாம். என்றாலும் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு கொடுக்க வேண்டும். அதே போல் ஒரு நாளைக்கு இரண்டு வேளை சாப்பாட்டுக்கு முன் ஊட்டச்சத்து நிரம்பிய உணவான வாழைப்பழம், மாம்பழம், முட்டை மற்றும் தின்பண்டங்களை கொடுக்கலாம். இத்துடன் பணி முடிந்தது என்று நினைக்காமல் குழந்தை சாப்பிட்டு முடிக்கும் வரை உடனிருக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன்பும், பின்பும் கை கழுவ பழக்க வேண்டும்.

மூடநம்பிக்கை:

வாழ்வின் முக்கியமான வளர்ச்சி, குழந்தைப் பருவத்தில்தான் நிகழ்கிறது. குழந்தை பிறக்கும்போது தலையின் சுற்றளவு 35 செ.மீ. இருக்கும். இது குறிப்பிட்ட வளர்ச்சி விகிதத்தில் வளர்ந்து குழந்தையின் ஒரு வயதில் 45 செ.மீ. ஆகிறது. ஐந்து வயதாகும் போது தலையின் சுற்றளவு 50 செ.மீ. இருக்கும். கவனிக்க வேண்டிய விஷயம் இதுதான். காரணம், வளர்ந்த மனிதனின் தலை சுற்றளவு 50 செ.மீ.தான். ஐந்து வயதுக்கு மேல் தலைச்சுற்றளவும், மூளையின் புற வளர்ச்சியும் அதிகரிப்பதில்லை. அறிவு மற்றும் சுற்றுப்புற சூழல் தூண்டுதல்களால் மூளையின் செயல்திறன் மட்டுமே அதிகரிக்கிறது. எனவே, இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த குழந்தைப் பருவத்தில் சத்துணவு மிக மிக அவசியம். குழந்தை பிறந்தவுடன் தாயிடம் சுரக்கும் சீம்பால், குழந்தைக்குத் தேவையான எல்லா ஊட்டச் சத்துக்களையும், அதிக அளவில் நோய் எதிர்ப்புச் சக்திகளையும் கொடுக்கக் கூடியது. இது குழந்தைக்கு செரிக்காது, வயிற்றுக்கு போதாது என்று சிலர் நினைக்கிறார்கள்.

அதனாலேயே சீம்பால் தருவதை தவிர்க்கிறார்கள். இது தவறு. அவசியம் சீம்பால் தர வேண்டும். தாய்ப்பால் தரும் தாய்க்கு வரும் பொதுவான நோய்களால் தாய்ப்பாலின் தரம் மாறாது. அவர்கள் உட்கொள்ளும் பொதுவான மருந்துகளாலும் குழந்தைக்கு பாதிப்பில்லை. காச நோய், புற்று நோய், எய்ட்ஸ் நோய் வந்த தாய்மார்களும் தங்கள் குழந்தைக்கு பாலூட்டலாம். மிக அரிதான சில நோய்களாலும், மருந்துகளாலும் மட்டுமே குழந்தைக்கு பாதிப்பு உண்டாகும். மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகுதான் தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டும். அதே போல் தாயின் உணவுப் பழக்கங்களால் தாய்ப்பாலின் தரம் மாறுவதில்லை. எளிதில் செரிக்கக் கூடிய, எளிய சத்தான எல்லா உணவு வகைகளையும் தாய் உட்கொள்ளலாம்.

பழங்கள் மற்றும் பழச்சாறு உட்கொண்டால் தாய்க்கு சளி பிடிக்கும்; பலாப்பழம், மாம்பழம் மற்றும் முட்டையை பாலூட்டும் தாய் உட்கொண்டால் குழந்தைக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்… என்பதெல்லாம் அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. எளிதில் செரிக்கக் கூடிய எல்லா உணவுகளையும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்தபடி தாய் சாப்பிடலாம். வேலைக்கு செல்லும் தாய், சிலமணி நேரத்துக்கு மேல் பாலூட்டவில்லையெனில் அது கெட்டு புளித்திருக்கும், குழந்தைக்கு செரிக்காது என்று சிலர் நினைக்கிறார்கள். இது தவறு. இப்படி எண்ணி குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதை நிறுத்த வேண்டாம். குழந்தை மார்பகத்தை சப்பிக் குடிக்கும்போது பால் சுரக்கிறது. சாதாரணமாக மார்பகத்தில் பால் சேமித்து வைக்கப்படுவதில்லை. பால் நாளங்களில் 10 – 20 மி.லி. பால் இருக்கும். அவ்வளவுதான். எனவே, தாய்ப்பால் புளித்துப் போக வாய்ப்பில்லை. இரு மாதங்கள் வரை பால் கொடுக்காமல் இருந்து, பிறகு கூட தாய்ப்பால் கொடுக்க ஆரம்பிக்கலாம்.

குழந்தைக்கு தர வேண்டிய உணவுகள்:

முதல் ஆறு மாதங்கள் வரை தாய்ப்பால் மட்டுமே கொடுக்க வேண்டும் என்று பார்த்தோம். அதன் பிறகு வீட்டில் தயாராகும் அவரவர் வழக்கத்துக்கு தகுந்த உணவை பழக்கலாம்.காலை 8 – 9 மணிக்குள் காலை உணவை கொடுக்க வேண்டும். சாப்பாட்டுக்கு இரண்டு மணி நேரங்களுக்கு பால் தரலாம். மொத்தத்தில் பசியுடன் இருந்தால்தான் உணவு உணபதில் குழந்தை ஆர்வம் காட்டும். மசித்த இட்லி, இடியாப்பம், மூடி வைக்கப்பட்ட ஆப்பம், மிருதுவான ஊத்தப்பம் போன்றவற்றை கைகளால் மசித்து சிறு சிறு கவளமாக தர வேண்டும். பருப்பு வேகவைத்த நீர், ரசம், புளிக்காத தயிர், பால் பயன்படுத்தி மசிக்கலாம். சர்க்கரை சேர்த்து கொடுப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், இனிப்பு சுவைதான் குழந்தைக்கு முதலில் புரியும்.

அதை ருசி பார்த்துவிட்டால் பிறகு காரம், உப்பு வகைகளை விரும்பாது. பேச்சு கொடுத்தபடியே ஊட்ட வேண்டும். காலை 11 – 12 மணியளவில் புதிதாக வீட்டில் ஆப்பிள், திராட்சை, மாதுளை ஆகியவற்றிலிருந்து தயாரான பழச்சாறை கொடுக்கலாம். திட உணவு பழகும்போது படிப்படியாக நிதானமாக செயல்பட வேண்டும். முதலில் 2 – 3 வாரங்களுக்கு காலை உணவு, பிறகு 2 – 3 வாரங்களுக்கு மதிய உணவு, பின்னர் 2 – 3 வாரங்களுக்கு மாலை உணவு… கடைசியாக இரவு உணவு. ஒவ்வொரு முறையும் புதிதாக சமைத்த உணவையே குழந்தைக்கு தர வேண்டும். ஆறிய உணவுகளை சுட வைத்து கொடுக்கக் கூடாது. ஊட்டும்போதும் உணவை வாங்கிக் கொள்ள, வாயைக் கூட்டி நாக்கை மடித்து விழுங்க… என்று படிப்படியாக பழக்கப்படுத்த வேண்டும்.

மதிய உணவில் சாதத்தை கையால் மசித்து சிறிது உப்பு, ஆறிய வெந்நீர் சேர்த்து ஊட்டலாம். பிறகு துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, சாம்பார், ரசம், கீரைச் சாறு என மாற்றி மாற்றி ஊட்டலாம். உருளைக்கிழங்கு, கேரட், பீட்ரூட், பரங்கி, பூசணி போன்றவற்றை நன்கு வேக வைத்து உப்பு சேர்த்து கொடுக்கலாம். புளிக்காத தயிரும், மோரும் குழந்தைக்கு நல்ல பயனளிக்கும். கடையில் விற்கும் இணை உணவுகளை வாங்கிக் கொடுக்காதீர்கள். அதே போல் பிஸ்கெட், ரொட்டி, கேக், சாக்லெட், நூடுல்ஸ், வறுவல்கள் (சிப்ஸ்) மாதிரியான ஜங்க் ஃபுட்டுக்கும் பழக்கப் படுத்தாதீர்கள். முடிந்தவரை இவற்றையெல்லாம் வாங்கிக் கொடுக்காமல் இருப்பதே நல்லது. காரணம், அதிலுள்ள காரம் மற்றும் வேதிப் பொருட்கள் நச்சுத்தன்மையை அதிகரிக்கும். உடல் எடை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தி குறையும். முக்கியமாக துரித உணவுகள் (ஃபாஸ்ட் ஃபுட்ஸ்) பக்கம் செல்லவே செல்லாதீர்கள்.

What Does Your Body Look Like When It Feels These 14 Basic Emotions?

Researchers have long known that emotions are connected to a range of physiological changes, from nervous job candidates’ sweaty palms to the racing pulse that results from hearing a strange noise at night. But new research reveals that emotional states are universally associated with certain bodily sensations, regardless of individuals’ culture or language.

Once More With Feeling

More than 700 participants in Finland, Sweden and Taiwan participated in experiments aimed at mapping their bodily sensations in connection with specific emotions. Participants viewed emotion-laden words, videos, facial expressions and stories. They then self-reported areas of their bodies that felt different than before they’d viewed the material. By coloring in two computer-generated silhouettes — one to note areas of increased bodily sensation and the second to mark areas of decreased sensation — participants were able to provide researchers with a broad base of data showing both positive and negative bodily responses to different emotions.
Researchers found statistically discrete areas for each emotion tested, such as happiness, contempt and love, that were consistent regardless of respondents’ nationality. Afterward, researchers applied controls to reduce the risk that participants may have been biased by sensation-specific phrases common to many languages (such as the English “cold feet” as a metaphor for fear, reluctance or hesitation). The results are published today in the Proceedings of the National Academy of Sciences.

Hot-Headed

Although each emotion produced a specific map of bodily sensation, researchers did identify some areas of overlap. Basic emotions, such as anger and fear, caused an increase in sensation in the upper chest area, likely corresponding to increases in pulse and respiration rate. Happiness was the only emotion tested that increased sensation all over the body.
The findings enhance researchers’ understanding of how we process emotions. Despite differences in culture and language, it appears our physical experience of feelings is remarkably consistent across different populations. The researchers believe that further development of these bodily sensation maps may one day result in a new way of identifying and treating emotional disorders.
- See more at: http://www.spiritscienceandmetaphysics.com/

பத்தாம் வாசல்

நம்முடைய உடம்பில் ஒன்பது ஓட்டை உள்ளது. ஆனால் பத்தாம் ஓட்டை ஒன்று உள்ளது யாரும் அறியார். அது அண்ணாக்குக்கு அருகில் உள்ளது. அதை இறையருளால் திறந்துகொண்டால் உயிர் இருக்கும் இடத்திற்கு செல்லலாம். 
பத்தாம் வாசல் வழியாக மூச்சு காற்றை மேல் ஏற்றினால் காற்று உயிர் அக்னி வரை சென்று வெப்பத்தை உடம்பு முழுவதும் பாய்ச்சும். அதனால் உடம்பு சுட்டதேகமாக மாறும் பின்னர் ஞானதேகம் பெறலாம்

எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணவும் அறியீர்
எத்துனை கொள்கில்லீர் பித்துலகீர்.
எட்டோடு இரண்டு சேர்த்து எண்ணினால் என்ன வரும்.10 வரும். நம் உடம்பில் ஒன்பது வாசல் உள்ளது இது எல்லாருக்கும் தெரியும். ஆனால் பத்தாவதாக ஒரு வாசல் இருக்கிறது. அந்த வாசல் திறந்தால் தான் இறைநிலை விளக்கம் கிடைக்கும்.
எட்டு இரண்டும் என்ன என்று மயங்கிய வென்தனக்கே
எட்டாத நிலையெல்லாம் மெட்டுவித்த குருவே - வள்ளலார் பாடல்.
சுப்பையா என்ற மகான்
திருகழுகுன்றதில் ஜீவசமாதி அடைந்துள்ளார். அவர் 1960 இல் ஜீவசமாதி
அடைந்துள்ளார். அவரின் விருப்பபடி . அவர் ஜீவ சமாதி அடைந்த 48 ஆம்
நாள் அவரின் உடலை அதிகாரிகள் முன்நிலையில் தோண்டி எடுத்து பார்த்ததில்
அவருடைய உடல் கெடாமல் அப்படியே இருந்ததை கண்டு ஆச்சிர்யபட்டு அவருக்கு கோயில் கட்டியுள்ளார்கள். இது 1960 நாளிதழ்களில் பிரசுரிக்கபட்டுள்ளது. இதுவே சுட்டதேகதிற்கு எடுத்துகாட்டு ஆகும்.
சுழுமுனை
மதிரவியும் பூரணமுங் கண்வாய் மூக்கும்
மகத்தான செவியோடு பரிசமெட்டும்
பதியவிடங் சுழுமுனை என்றதற்கு பேராம். – அகத்தியர் பாடல்
சுழுமுனை என்பது அண்ணாக்கிற்கு மேல் உள்ளயிடம். மனத்தை சுழுமுனையில் நிறுத்தி வாசி இடகலை மற்றும் வடகலை அக்னியில் கூடி மூன்றும் ஒன்றாகும். உள் சென்ற காற்று பத்தாம்வசலில் ஏறும், மூக்கில் காற்று வெளியே வராது. ஐந்து புலன்களும் ஒடுங்கும். ரவிமதிசுடர் மூன்றும் ஒன்றாகி உஷ்ணம் கிழே பாயும். உஷ்ணம் உடம்பை வேதித்து காயசித்தி உண்டாகும்.

இதயத்திற்கு இதமான செய்தி...... இதயத்தில் அடைப்பு உள்ளதா?




இதோ உடனே செல்லுங்கள் .திருவனந்தபுரம் காட்டாகடை அருகில் உள்ள பன்னியோடு சுகுமாரன் வைத்தியர் அவர்கள் இலவசமாக வைத்தியம் செய்கிறார்.நாடித்துடிப்பை பார்த்தே உங்கள் நோயை கண்டுபிடிக்கிறார்..வெள்ளிக்கிழமை தவிர்த்து மற்ற எல்லாநாட்க்களிலும் வைத்தியம் .இதயத்தில் அடைப்பு உள்ளவர்களுக்கு மூன்று மாத மருந்துக்கு 2700 ரூபாய் ஆறு நாட்கள் மருந்து உட்கொண்டாலே ரத்த குழாய் அடைப்பு மாறுகிறது .பணம் கொடுக்க வசதியில்லாதவருக்கு இலவசம் .தேவையுள்ளவர் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர் .


மிகமிக முக்கியமான தகவல் என்பதால் இதனை அதிகமான அளவில் பகிர்ந்து உங்களுடைய நண்பர்களுக்கு இத்தகைய தகவல் சென்றுசேர உதவுங்கள் இதனால் யாரவது ஒருவர் பயன்பெற்றாலும் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியே.....


தகவல் கே.எம்.ஷாவிடம் இருந்து.