Search This Blog

Sunday, May 4, 2014

Stephen Hawking Says A.I. Could Be Our 'Worst Mistake In History'

The world's most famous physicist is warning about the risks posed by machine superintelligence, saying that it could be the most significant thing to ever happen in human history — and possibly the last.
As we've discussed extensively here at io9, artificial superintelligence represents a potential existential threat to humanity, so it's good to see such a high profile scientist both understand the issue and do his part to get the word out. Stephen Hawking Says A.I. Could Be Our 'Worst Mistake In History'

New study warns of mental cost to cognitive enhancement.


Cognitive neuroscientists from the University of Oxford find that gains in cognition through transcranial electrical stimulation often leads to deficits in other parts of the brain.
The researchers found that the volunteers who had the parietal area involved in numerical cognition stimulated learned the new number system more quickly than those who got sham stimulation. However, "at the end of the weeklong study reaction times were slower when they had to put their newfound knowledge to use to solve a new task that they hadn't seen during the training sessions."
In other words, artificially stimulating one's brain may lead to a short-term enhancement but to a weaker consolidation of learning and poorer long-term results.Boosting Brain Power Comes At A Price

Having a tough time dealing with the negative people around you?


கண்கள் கலங்கியது .இந்த குரலை கேட்டவுடன்

கண்கள் கலங்கியது .இந்த குரலை கேட்டவுடன் ....இதுவரை நடந்த சூப்பர் சிங்கர் போட்டியில் நேத்து ஒளிபரப்பு நடந்த ஒரு விஷயம்தான் மிக மிக நல்ல விஷயம் . சிலர் பார்த்து இருப்பீர்கள் , பலர் பார்த்து இருக்க மாட்டீர்கள். கண் தெரியாத ஒரு சிறுவன் செந்தில்நாதன் மேடை ஏறிப் பாடினான் . மிக அருமையான குரல். சற்று மன நலம் பாதிக்கப்பட்டவன். சிறு வயதில் இவனது பெற்றோர்கள் இவனை கடற்கரையில் போட்டு விட்டு போய் விட்டார்கள். அப்புறம் ஒரு அநாதை ஆசிரமத்தில் வளர்ந்து இருக்கான் . ஒரு இடத்தில அவனால் நிற்கவே முடியல. ஆனா பாட ஆரம்பித்தால் அவ்வளவு இனிமையான குரல். அவனுடைய வீடியோ உங்கள் பார்வைக்கு . பார்க்கும் போதே அழுது விட்டேன். நீங்கள் உதவி செய்ய வேண்டும் என்று நினைத்தால் உதவுங்கள் ...இந்த பதிவு மாற்று திறனாளிகளுக்கு சமர்பிக்கிறேன் ...கண்டிபாக பகிரவும் ..

Islam: What the West needs to know (full documentary)

சிக்கன் மஞ்சூரியன் ரெஸிபி

தேவையான பொருட்கள்
எலும்பு நீக்கிய கோழிக்கறி - 400 கிராம்
முட்டை – ஒன்று
கார்ன்ப்ளவர் - 6
மேசைக்கரண்டி மைதா – 1 மேசைக்கரண்டி உப்பு - தேவையான அளவு சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி இஞ்சி விழுது - 2 டீ ஸ்பூன் பொடியாக நறுக்கிய பூண்டு – கால் கப் பூண்டு குடை மிளகாய் - ஒன்று பெரிய வெங்காயம் - ஒன்று பச்சை மிளகாய் - 3 வெங்காயத்தாள் - 2 எண்ணெய் - 4 மேசைக்கரண்டி அஜினோமோட்டோ - கால் தேக்கரண்டி வினிகர் - 2 மேசைக்கரண்டி மஞ்சூரியன்

செய்முறை

கோழிக்கறியினை கழுவி சுத்தம் செய்து பின் விரல் நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும். அகலமான பாத்திரத்தில் 2 மேசைக்கரண்டி கார்ன்ப்ளவர், ஒரு மேசைக்கரண்டி மைதா, சோயா சாஸ், முட்டை, தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்க்க வேண்டும். இதில் சிக்கனை சேர்ந்து நன்கு கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவேண்டும். ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, ஊறவைத்துள்ள கோழித் துண்டங்களைப் போட்டு முன்று நான்கு நிமிடங்களுக்கு வேக வைத்துப் பொரித்து எடுத்து, தனியாக வைத்துக்கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கி கொள்ளவும். குடை மிளகாயைக் கழுவி, விதைகளை நீக்கி மெல்லிய நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வெங்காயத் தாளினையும் நீளவாக்கில் குறுக்காக வெட்டி வைத்துக்கொள்ளவும். மீதமுள்ள கார்ன் ப்ளவரை ஒரு கப் தண்ணீரில் கரைத்துக் கொள்ள வேண்டும். வாணலியில் 4 மேசைக்கரண்டி எண்ணெய் விட்டு நறுக்கிய பூண்டு, இஞ்சி விழுது போட்டு இலேசாக வதக்க வேண்டும். அத்துடன் நறுக்கின வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து மேலும் ஒரு நிமிடம் வதக்க வேண்டும். அதன் பிறகு சோயா சாஸ், அஜினோமோட்டோ, தேவையான உப்பு சேர்த்து நன்கு கொதிக்கவிட வேண்டும். பிறகு கரைத்து வைத்துள்ள கார்ன்ஸ்டார்ச்சினை ஊற்றிக் கலக்கி குழம்பு கெட்டியாகும் வரை நன்கு கலந்து வேகவிட வேண்டும். அதில் வறுத்து வைத்துள்ள கோழித் துண்டங்களைச் சேர்த்து சில நிமிடங்களுக்கு வேக விட வேண்டும். பின்னர் நறுக்கின குடை மிளகாய் சேர்த்து அடுப்பை சிம்மில் வைக்கவும். இறக்குவதற்கு முன்பு வினிகர் கலந்து, வெங்காயத் தாளினைத் தூவி சூடாகப் பரிமாறலாம். சுவையான சிக்கன் மஞ்சூரியன் ரெடி. எளிதாக செய்யலாம். நீங்களும் செய்து பார்த்து அசத்துங்களேன்.

மூன்று முட்டையால் கிடைத்த நட்பு!.....குட்டிக்கதை


சூடான் நாட்டு அரசனுக்கு அழகான மகன் பிறந்தான். அவனுக்கு அனந்தா என்று பெயர் சூட்டினர்.
அரசனுக்கிருந்த குடிப்பழக்கம் காரணமாக மகன் பிறந்த சிறிது நாட்களிலேயே அவன் நோய் வாய்ப்பட்டு இறந்துபோனான்.
இளவரசன் அனந்தாவை ராணி நல்ல திறமையான வீரனாக வளர்த்து வந்தாள். இருப்பினும், அவள் தன் கணவனைப் போலவே தன் மகனும் தீய நண்பர்களுடன் சேர்ந்து குடி மற்றும் தீய பழக்கங்களைக் கற்றுக் கொண்டு விடக் கூடாது என்று கவனமாக இருந்தாள்.
அவள் ஒரு நாள் மகன் அனந்தாவை அழைத்து “மூன்று முட்டை மந்திரம்” ஒன்றைச் சொன்னார்.
இந்த மூன்று முட்டை மந்திரத்தைப் பயன்படுத்தித்தான் நட்பு கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினாள். அதாவது, யாரிடம் நட்பு கொள்ள விரும்புகின்றாயோ, அவர்களை அழைத்து மூன்று அவித்த முட்டைகளை விருந்தாகக் கொடுக்க வேண்டும். அவர்கள் அந்த முட்டையை எப்படி உண்கிறார்களோ அதன்படி அவர்களை நண்பர்களாக ஏற்றுக் கொள்ளலாம் என்றார்.
அனந்தாவுடன் மந்திரி ஒருவரின் மகன் நெருங்கி பழகினான். ஒன்றாக போர்ப் பயிற்சிகளை மேற்கொண்டனர். எனவே, அனந்தா ஒரு நாள் அவனை அழைத்து மூன்று முட்டைகளைக் கொடுத்தான்.
அவன் ஒரு முட்டையைச் சாப்பிட்டுவிட்டு, இரண்டு முட்டைகளை அனந்தாவிடமே திருப்பிக் கொடுத்தான்.
இதை அவன் அம்மாவிடம் தெரிவித்தான்.
உடனே அவள், “உன்னிடம் நல்ல பெயர் வாங்க, உனக்கு இரண்டு முட்டைகளைக் கொடுத்துள்ளான். இவன் நெருங்கிய நட்பு உனக்கு வேண்டாம்” என்றார்.
சில வாரங்கள் கழித்து, கணக்கு வழக்குகளைப் படிக்கும் போது வணிகர் மகன் ஒருவனின் நட்பு கிடைத்தது.
அனந்தா, அவனிடம் மூன்று முட்டைகளை கொடுத்தான்.
அவன் மூன்று முட்டைகளையும் வாங்கி முழுதாகச் சாப்பிட்டு விட்டான்.
இதைப் பற்றி அனந்தா தாயிடம் தெரிவித்தான்.
அவன் தாய், “மகனே, அவனுக்கு உன் மீது சுத்தமாக அக்கரை இல்லை. இவன் நட்பு வேண்டவே வேண்டாம்” என்றார்.
அடுத்து இன்னொரு மந்திரி மகனின் நட்பை விரும்பி அவனிடம் மூன்று முட்டைகளைக் கொடுத்தான் அனந்தா.
ஆனால் அவனோ, அந்த மூன்று முட்டையும் அவனிடமே திருப்பி அளித்தான்.
இதைத் தாயிடம் தெரிவித்த போது, “மகனே, அவன் உன்னை முழுமையாக மதிக்கவேயில்லை... அவன் நட்பை வேண்டாம் என்று ஒதுக்கி விடு” என்றாள்.
அனந்தா ஒரு நாள் காட்டிற்கு வேட்டையாடச் சென்றான்.
அவன் வேட்டையாடிவிட்டு அரண்மனை திரும்புவதற்குள் இருட்டி விட்டது. அதனால் காட்டிலே இருக்கும் விறகுவெட்டியின் வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கு விறகு வெட்டியின் மகன் விநோதன் இவன் வயதுடையவன். இருவரும் இரவு நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தனர்.
மறுநாள் அனந்தாவோடு விநோதனும் வேட்டையாடச் சென்றான்.
அனந்தா விநோதனை அரண்மனைக்கு அழைத்தான் .
அவனுக்கும் மூன்று முட்டைகளைத் தட்டில் வைத்தான்.
விநோதன் எழுந்து மேஜை மீது இருந்த கத்தியை எடுத்து ஒரு முட்டையை சரிபாதியாக வெட்டி இருவரும் ஒன்றரை ஒன்றரை முட்டையாகச் சாப்பிடலாம் என்றான்.
அனந்தா விநோதனின் செயலைத் தாயிடம் தெரிவித்தான்.
தாய் மகிழ்ந்தாள். பின்னர், “மகனே, அவன் விறகு வெட்டியின் மகனாக இருந்தாலும், உன்னைச் சமமாக நினைத்ததன் மூலம் உன்னை நண்பனாக ஏற்றுக் கொண்டுள்ளான். எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவன் உன்னிடம் நட்பு பாராட்டுகிறான். இது தான் நட்பின் முக்கியத் தேவை. அவனுடைய நட்பை உடனடியாக ஏற்றுக் கொள்” என்றார்.
இளவரன் அனந்தாவுடன் விநோதனுக்கும் அனைத்துக் கல்வி, போர் முறைகளையும் கற்றுக் கொடுக்க ராணி உத்தரவிட்டாள். இருவரும் அனைத்திலும் தேர்ச்சி பெற்றனர். பின்னர் அனந்தா அரசனானான். விநோதன் அந்நாட்டின் அமைச்சராக நியமிக்கப்பட்டான். இருவரும் இணைந்து நாட்டில் நல்லாட்சி வழங்கினர்.

Sai Baba Bajan Song in Tamil

சமையலில் செய்ய வேண்டியவை & செய்யக்கூடாதவை


 சமையலில் செய்ய செய்யக்கூடாதவை...

* ரசம் அதிகமாக கொதிக்ககூடாது.

* காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது.

* மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது.

* கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது.

* காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது.

* சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது.

* தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது.(வெங்காயத்தை முதலில் வதக்கி பிறகு அதன் கூட தக்காளியை சேர்த்து வதக்கவும்.இல்லையேல் வெங்காயம் சரியாக வதங்காது...)

* பிரிட்ஜில் வாழைப்பழமும், உருளைக்கிழங்கும் வைக்கக் கூடாது.

* பெருங்காயம் தாளிக்கும் போது, எண்ணெய் நன்றாக காயக்கூடாது.

* தேங்காய்ப்பால் சேர்த்தவுடன், குழம்பு அதிகமாக கொதிக்கக்கூடாது.

* குலோப்ஜாமூன் பொரித்தெடுக்க நெய்யோ, எண்ணெயோ நன்றாக காயக்கூடாது.

* குழம்போ, பொரியலோ, அடுப்பில் இருக்கும் போது கொத்தமல்லி இலையை போடக்கூடாது.

....செய்ய வேண்டியவை....

* மாவு பிசைந்தவுடனேயே பூரி போட வேண்டும்.

* புளி காய்ச்சலுக்கு, புளியை கெட்டியாக கரைக்க வேண்டும்.

* ஜவ்வரிசி வற்றலுக்கு, அரை உப்பு போட்டு காய்ச்ச வேண்டும்.

* போளிக்கு மாவு, கிட்டத்தட்ட ஆறு மணிநேரம் ஊறவேண்டும்.

*குருமாவை இறக்கும் போது, கரம் மசாலாவை சேர்க்க வேண்டும்.

* பச்சை கற்பூரம் டப்பாவில், நான்கு மிளகை போட்டு வைக்க வேண்டும்.

* குறைந்தது இரண்டு மணி நேரமாவது சப்பாத்திக்கு மாவு ஊற வேண்டும்.

* வாழைப்பூவை, முதல் நாள் இரவே நறுக்கி, தண்ணீரில் போட வேண்டும்.

* கடலை உருண்டைக்கு, வெல்லப்பாகு, முத்தின பாகாக இருக்க வேண்டும்.

*வற்றல் குழம்பை, தாளித்த எண்ணெய், மேலே வரும் வரை கொதிக்க விட வேண்டும்.

விகடன் பொக்கிஷம் ஓவர் ஆக்‌ஷன்.. மெட்டுக்குப் பாட்டா..


"'தேவர்மகன்' ஷூட்டிங்... அப்ப நான் சினிமாவுக்கு வந்த புதுசுங்கறதால, சூப்பரா நடிக்க ணுங்கற நினைப்புல ஓவர் ஆக்ஷன் பண்ணிடுவேன். அந்தப் படத்தில், கமல்ஹாசனோட அப்பா சிவாஜி சார் இறந்து போகிற ஸீன்! சிவாஜி இறந்து கிடப்பார். பக்கத்தில் குழந்தைகள்... கால்மாட்டில் நானும் சங்கிலி முருகனும். கமல் சார் கொஞ்சம் தூரத்திலிருந்து ஓடி வருவார். எல்லோரும் சேர்ந்து அழணும். கமல் சார் என்னிடம், 'தத்ரூபமா அழணும்பா' என்றிருந்தார். 'ஷாட் ரெடி!' என்று குரல் கேட்டதுமே... 'ஐயோ! எங்களை விட்டுப் போயிட்டீங்களேய்யா... ஐயா!' என்று எட்டுப்பட்டிக்கும் கேட்கிற மாதிரி குய்யோ முறையோ என ஓலமிட்டு அழ ஆரம்பித்தேன். பத்து செகண்ட்கூட ஆகியிருக்காது. 'கட், கட்' என்றபடி பிணம் எழுந்துவிட்டது. சிவாஜி சார் தான்! என்னைப் பார்த்து, 'இங்க வாடா' என்றார் முறைத்தபடி. நான் பயந்துகொண்டே நெருங்கினேன். 'நீ ஒருத்தன் அழுதா போதுமா... மத்தவன் யாரும் அழ வேண்டாமா? என் மகனா வர்ற கதாநாயகனே மெதுவா அழறான். நீ ஏண்டா இந்தக் கத்துக் கத்தற? நீ கத்தற கத்தில் உன் உசுரும் போயிடப்போகுது! துண்டை வாயில் வெச்சுக்கிட்டு கமுக்காம விசும்பி அழு, போதும். ஓவர் ஆக்ஷன் பண்ணா உதைபடுவே படுவா!' என்றார். சிவாஜி சாரைக் கோபப்பட வைத்த எனது அந்த ஓவர் ஆக்ஷனை நினைத்தால், இப்போதும் சிரிப்பு வரும் எனக்கு!"
- வடிவேலு (9.3.97)
"மெட்டுக்குப் பாட்டா, பாட்டுக்கு மெட்டா என்று கேட்டால், பாட்டுக்கு மெட்டு என்பது தான் சிறந்தது. அந்தக் காலத்தில் கண்ணதாசனும் மெல்லிசை மன்னரும் அப்படித்தான் செய் தார்கள். 'புதிய பறவை'யில் ஒரு புதுமை. படத்தில் வரும் ஒரு சோகப் பாட்டுக்கு சிச்சுவேஷ னைச் சொல்லிவிட்டுப் போய்விட் டார் டைரக்டர். கண்ணதாசனால் எவ்வளவோ முயன்றும் பாடல் எழுத முடியவில்லை. 'நீங்கள் முதலில் மெட்டமையுங்கள். அதற்குப் பாட்டெழுதுகிறேன்' என்று எம்.எஸ்.வி-யைக் கேட் டார். அவராலும் மெட்டமைக்க முடியவில்லை. இறுதியில் நடிகர் திலகத்தை அழைத்து, 'இந்த சிச்சு வேஷனுக்கு ஒரு பாடல் வந்தால், நீங்கள் எப்படி நடிப்பீர்கள்?' என்று கேட்க, அவர் பாடல் வரிகளே இல்லாமல் அற்புதமாக நடித்துக் காட்டினார். அதைப் பார்த்துத்தான் கண்ணதாசன் பாட்டெழுதினார். அந்தப் பாடல் தான் 'எங்கே நிம்மதி'!".
கவிஞர் வைரமுத்து (4.2.90)

Saturday, May 3, 2014

Egyptian axe, about 3600 years old.


Humayum's Tomb

This is the tomb of Humayun who died in 1556, and his widow Hamida Banu Begam commenced with the construction of his tomb in 1569, fourteen years after his death. This was the first distinct example of proper Mughal style, which was inspired by Persian architecture.

This is a favourite tourist spot in Delhi, India

 

Friday, May 2, 2014

உலகத்திலேயே மிகவும் சுத்தமான உப்பு ,THE PUREST FORM OF SALT IN THE WORLD:"HIMALAYAN PINK SALT"

உலகத்திலேயே மிகவும் சுத்தமான உப்பு Himalayan Pink உப்பு தான். இதற்குக் காரணம் இந்த உப்பு 250 மில்லியன் வருடங்களுக்கு முன்பு பூமியின் ஆரம்ப காலத்தில், நிலம், நீர், காற்று என்பன அசுத்தமடையாமல் இருந்த காலத்திலிருந்த கடல்களிலுள்ள நீர் சூரியக் கதிர்களால் ஆவியாக்கப்பட்டு உருவாகப்பட்ட உப்பு இது. இமாலய மலைத் தொடர்கள் உருவாகும் போது அதில் அகப்பட்ட உப்புத் தளங்கள் மில்லியன் வருடங்களாக வெப்பத்தாலும் அழுத்தத்தாலும் உப்புப் பளிங்குகளாக மாறின. இவை இமாலய மலைத் தொடரில் மில்லியன் வருடங்களாக அகப்பட்டு இருப்பதால் இவற்றில் சுற்றுப்புற மாசு கிடையாது. அத்துடன் மனித உடலிலுள்ள 84 தாதுப் பொருட்கள் இந்த உப்பில் இருப்பதால் இவை இலகுவாக மனித உடம்போடு ஒத்துப் போகிறது. இந்தத் தாதுப் பொருட்களின் இரசாயன உருவம் இதை உடலால் இலகுவாக உறிஞ்சிக் கொள்ள உதவுகின்றன. இதனது சிவப்பு நிறக் கலப்பு கொண்ட நிறங்களுக்குக் காரணம் இதிலுள்ள இரும்பாகும். இப்போது ஆரோக்கியமான இயற்கைப் பொருள் என்பதில் இந்த உப்பு மிகவும் பிரபல்யமடைந்து வருகிறது
"HIMALAYAN PINK SALT"

Himalayan crystal salt originated from the evaporation of the primaeval sea, at a time when pollution did not exist and planet Earth was a pristine ecosystem. Throughout hundreds of millions of years of intense heat and pressure from shifting tectonic plates, the Himalayan mountains were formed and the salt became crystallized. Created under intense tectonic pressure, in an environment of zero exposure to toxins and impurities, this salt is free of bleaches, preservatives, and chemical additives. Himalayan pink salt, which is over 250 million years old, is considered to be the purest salt on earth. It contains the same 84 natural minerals and elements found in the human body, making it easily metabolized. Its minerals exist in a colloidal form, meaning that they are tiny enough for our cells to easily absorb. The salt crystals range in colour from sheer white, varying shades of pink, to deep reds, the result of high mineral and iron content. Himalayan pink salt is still extracted from mines by hand, according to long-standing tradition, and without the use of any mechanical devices or explosion techniques. After being hand-selected, the salt is then hand-crushed, hand-washed, and dried in the sun. Most of the commercial supply of Himalayan pink salt on the market today is currently coming from the mountainous regions of Pakistan.

வலி.....!

-     அகில்














மச்சக்கறி இல்லையென்றால் மயூரனுக்கு சாப்பாடு இறங்காது. செவ்வாய், வெள்ளி போறதே அவனுக்குப் பெரும்பாடாக இருக்கும். அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சாமினி மரக்கறிச்சாதம் செய்து, ஊறுகாய்த் துண்டொன்றும் வைத்திருந்தாள். மதிய இடைவேளையின்போது வேண்டாவெறுப்பாக சாப்பிட்டுவிட்டு, வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பியிருந்தான்.

'இன்டைக்கு நல்ல பேச்சுத்தான் நடக்கப்போகுது' என்று நினைத்து வந்ததைப் போல வீட்டுக்கு வந்தபொழுது, புன்முறுவல் காட்டி வரவேற்ற சாமினி, அவன் கொண்டுவந்த சாப்பாட்டுப் பெட்டியைத் திறந்து பார்த்ததும் புறுபுறுக்கத் தொடங்கினாள்.

''என்னப்பா, கொண்டுபோன சாப்பாடு அப்பிடியே இருக்குது......''

''ம்.... மனுசர் சாப்பிடக் கூடிய சாப்பாட்டை வைச்சால் எல்லோ சந்தோசமாச் சாப்பிட'' என்றான் வெறுப்பு மண்டிய குரலில்.

''எந்த நாளும் மட்டனும், சிக்கனும் என்று சாப்பிட்டு நல்லா கொலஸ்ரோலை ஏத்தத்தான் உங்களுக்கு விருப்பம்..'' புறுபுறுத்தபடி லஞ்ச் பாக்ஸை 'சிங்'கில் போட்டு தண்ணீரைத் திறந்துவிட்டாள். சாமினியின் குடும்பம் வெஜிடேரியன் என்று மயூரனுக்கு கலியாணம் பேசும்போதே தெரியப்படுத்தி இருந்தார்கள். நல்ல வேளை வெளிநாட்டு தனிக்குடித்தன வாழ்க்கையில் அவன் நிறையவே சமைக்கக் கற்றுக்கொண்டிருந்தான். தனக்குத் தேவையான மச்சச் சாப்பாட்டை தானே சமைத்துக்கொள்ளுவான். சாமினி அவனுக்கு முட்டை மட்டும் அவித்துக்கொடுப்பாள். அவள் மச்சத்தைக் கையாலும் தொட்டதில்லை.

உடை மாற்றி, சற்று நேரம் சோபாவில் அமர்ந்து டீவியை ஓடவிட்டான். வன்கூவரில் நடந்த 'வின்டர்ஒலிம்பிக்' விளையாட்டுப் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பு நடந்துகொண்டிருந்தது. கனடா ஐந்து தங்கப்பதக்கங்களை வென்றிருந்தது.

'இன்றைக்கு ரஷ்யாவும் கனடாவும் ஹெக்கி விளையாடுவீனம். கட்டாயம் பார்க்கவேணும். ஹெக்கியில இந்த முறை கனடா 'வின்'பண்ண வேணும்' மனதுக்குள் நினைத்துக்கொண்டான். அகதியாய் வந்தபோது அடைக்களம் தந்த நாடல்லவா!

''என்னப்பா இப்பிடியே இருந்தால் சரியா....? எழும்பி வெளிக்கிடுங்க. இன்றைக்கு நந்தினியின்ர மகளுன்ட 'பேத்டே பார்டி' இருக்கெல்லோ.....?''

''ஓமப்பா அதை மறந்தே போயிற்றன். அங்கையாவது போனா மச்சம் சாப்பிடலாம் தானே'' என்றான் சாமினிக்கு கோபமூட்டுவதற்காகவே.
அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்துவிட்டுப் போனாள் சாமினி.

மயூரனுக்கு 'ஹைகொலஸ்டிரோல்' இருப்பதாக குடும்ப வைத்தியர் சொன்ன நாளில் இருந்து சாமினியும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாள். செவ்வாயும், வெள்ளியும் வீட்டில் மச்சம் சமைக்க சாமினி அனுமதிப்பதில்லை. மற்றைய நாட்களில் எல்லாம் தனக்கு விரும்பியவாறு ஏதாவது இறைச்சி, ஹொட்டோக், பேகர் என்று வாய்க்கு ருசியாக சாப்பிட்டான். திருடனாய்ப் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்பதுபோல அந்த உணவுப் பழக்கத்தையும் தானே விட்டாலொழிய தான் சொல்லி எதுவும் நடக்காது என்பதை உணர்ந்து மௌனியானாள் சாமினி.

வெள்ளிக்கிழமை மாலை நேரம் என்பதால், அவர்கள் பயணித்த உயர்வேகப்பாதை(Highway)அமைதியாகக் கிடந்தது. பனிகொட்டும் காலம் என்பதால் நேரத்திற்கே இருள் கவ்வத் தொடங்கியிருந்தது. தெருவின் இரு புறமும் பனித்துகள்கள் உறைந்துபோய் கல்லாகிக் கிடந்தன.

சதா வேலை வேலை என்று ஓடித்திரியும் வேகவாழ்க்கையின் மத்தியில் இப்படி மனைவியுடன் காரில் பயணிக்கும் சந்தர்ப்பங்கள் மிகவும் மகிழ்ச்சிகரமான பொழுதுகள். வேலைப்பளு, கடன்பிரச்சனைகள், தாய் மண்ணின் நினைவுகள் எல்லாவற்றையும் சற்று ஒதுக்கிவிட்டு இருவரும்; எத்தனையோ விடயங்களை பகிர்ந்துகொண்டு, ஒருவரை ஒருவர் கிண்டலடித்துக்கொண்டு செல்வது உண்மையில் வாழ்க்கைப் பயணம் இப்படியே நீளக்கூடாதா என்று ஓரிரு சமயங்களில் அவன் நினைத்துக்கொள்வதுண்டு.

மயூரன்; காரை செலுத்திக்கொண்டுவர சாமினி சுற்றுமுற்றும் பார்த்து ரசித்துக்கொண்டே வருவாள். பனியில் நனைந்து நிற்கும் கிறிஸ்மஸ் மரங்கள், வரிசையாய் ஒளிவிட்டுப் பிரகாசிக்கும் மின்கம்பங்கள், வானுயர்ந்த மாடங்களின் வடிவமைப்புக்கள், சதா வானத்தில் அங்குமிங்கும் பறந்து திரியும் விமானங்கள் என்று இவற்றையெல்லாம் ஒரு குழந்தையைப் போல அலுக்காமல் பார்த்து மகிழ்வாள் சாமினி.

திடீரென்று எதையோ ஒன்றைப் பார்த்தவளைப் போல சாமினி சத்தம் போட்டாள்.

''மயூ..... மயூ..... அங்க பாருங்க'' என்று அவள் சொல்ல, அவள் காட்டிய திசையில் மயூரன் பார்வையைச் செலுத்தினான்.

அவர்கள் பயணிக்கின்ற பாதையருகே ஒரு பெரிய 'ட்ரக்' ஒன்று வந்துகொண்டிருந்தது.

'ட்ரக்' என்றாலே சாமினிக்கு சரியான பயம். 'ட்ரக் வருகுது. கிட்டப் போகாதேங்கப்பா' என்பாள். பத்துப்பன்னிரண்டு சில்லுகள் கொண்ட பாரிய அதன் உருவத்திற்கு முன்னால் தங்களின் கார் அவளுக்கு பருந்தின் கால்களுக்கிடையில் இரையாகப்போகும் கோழிக்குஞ்சைப் போல உணருவாள்.

''தள்ளிப்போங்கப்பா... தள்ளிப்போங்க...'' என்று அந்த 'ட்ரக்' வண்டி தங்களை முந்திச் செல்லும் வரை செபம்போல் சொல்லிக்கொண்டே இருப்பாள். அவளது பயம் சிலவேளைகளில் மயூரனுக்கு சிரிப்பாக இருக்கும்.

'அங்க பார்த்தீங்களா.....? அதென்னப்பா அதுகள்...?' சாமினியின் கண்கள் கூர்மையுடன் அந்த 'ட்ரக்'கின் பின்புறப்பகுதியில் பதிந்திருந்தன. மயூரன் அப்பொழுதுதான் கவனித்தான். அந்த ட்ரக்கில் பன்றிக்குட்டிகள் அடைக்கப்பட்டிருந்தன.

அந்த வாகனம் முழுமையும் மூடப்பட்டு, பின்பகுதியிலும், பக்கங்களிலும் சில சிறிய துவாரங்கள் இடப்பட்டிருந்தன. அந்தத் துவாரங்களின் ஊடாக தமது மூக்கை வெளியே விட்டு தம்மை ஆசுவாசப்படுத்தின அந்தக் குட்டிகள். அவை ஒன்றையொன்று முட்டித்தள்ளியபடி துவாரத்தின் வழியே மூச்சுக்காற்றை இழுத்துக்கொண்டன. ட்ரக்கை மூன்று அடுக்குகளாகப் பிரித்து அவற்றை உள்ளே அடைத்திருப்பார்கள் போல் தோன்றியது. அவற்றின் தலை உயரத்தோடு ஒட்டியதாக இருந்த அந்தத் துவாரங்கள் மட்டும் திறந்திருந்தன.

''அங்க பாருங்க நல்ல சிவப்பு நிறத்தில பன்றிக்குட்டியள்'' என்றாள் சாமினி.

''நான் நினைக்கிறன் இதுகள் இப்பத்தான் ஒன்று, ஒன்ரரை மாதக் குட்டியாய் இருக்கும்.''

''இதுகளின்ட இறைச்சியைத் தான் 'பேக்கின்' செய்யுறதுக்கு எடுக்கிறது'' விளக்கம் கொடுத்தான் மயூரன்.

''ஐயோ! இவ்வளவு சின்னக் குட்டியளின்ர இறைச்சியைத்தான் நீங்க சாப்பிடுறனீங்களோ?'' என்றவள் மேலும் தொடர்ந்தாள்.

''சாக்காட்டத்தான் கொண்டுபோறாங்கள். அதுக்காக இப்பிடியா....? அதுகள் சுவாசிக்கக் கூட ஏலாமல் எவ்வளவு கஸ்டப்படுகுதுகள்.''

''உப்பிடி இறைச்சிக்கு என்று வளர்க்கிற ஆடு, மாடு, பன்றி எல்லாத்தையும் இவங்கள் நிலத்தில படுக்கக் கூட விடமாட்டங்களாம் என்ன மயூரன்?'' தான் யார் மூலமாகவோ அறிந்திருந்த விடயத்தை ஊர்ஜிதப்படுத்தும் நோக்கத்தோடு கேட்டாள் சாமினி. மயூரன் அதை ஏற்றுக்கொண்டு தலையசைக்கவும்,

''உயிர் என்டால் எல்லாம் உயிர்தானே. அதில மனுசர், மற்றதுகள் என்டு பிரிச்சுப் பார்க்கஏலாது. அதுகளும் தங்கட உயிரைக் காப்பத்த எவ்வளவு போராடுதுகள்'' என்றாள் சாமினி.

''என்ன கருமங்கள் இதுகள்''

ஒன்றையொன்ற நெரித்தபடி மூக்கை நீட்டி, 'மூசு, மூசென்று' காற்றைச் சுவாசித்தன. அவற்றைப் பார்க்க மயூரனுக்கு மிகவும் பரிதாபமாக இருந்தது.

''பன்றியள் மட்டுமா? ஏன் நானும்; கூட இப்பிடித்தானே கனடாவுக்கு வந்தனான். பன்றியளோட பன்றியா......''

அவனது விழிகள் வீதியில் பதிந்திருந்தாலும், மனம் பத்து வருடங்களுக்கு முன்னர் நடந்த அந்தச் சம்பவத்தை நினைவு கூர்ந்தது.

அகதியாக வெளிநாடு வந்த ஒவ்வொரு தமிழனுக்கும் கசப்பான கதைகள் பல இருக்கும். அந்த வகையில் அவனுடைய வாழ்க்கையில் நடந்த கசப்பான சம்பவம் ஒன்றை மீண்டும் இரைமீட்டுக்கொள்ள வேண்டியதாக இந்தச் சம்பவம் அமைந்துவிட்டது.

கனடாவுக்கு அகதியாக வெளிக்கிட்ட அவன், மெக்சிக்கோ வரை ஒரு பிரச்சனையும் இல்லாமல் வந்துவிட்டான். கனடாவுக்கு போவதென்றால் அமெரிக்காவுக்குப் போய் அங்கிருந்துதான் கனடாவுக்குப் போகவேண்டும். மெக்சிக்கோவுக்கு வந்து இரண்டு மாதங்கள் நின்றாகிவிட்டது. அவன் வந்த நேரமோ என்னவோ இலகுவாக அமெரிக்காவுக்கு போகின்ற கள்ளப் பாதைகள் எல்லாம் மூடப்பட்டு விட்டன. இந்த நிலையில்தான் இரண்டுநாட்கள் அவனை தனியே விட்டுவிட்டுப் போன ஏஜென்சிக்காரன் ஒருநாள் திடீரென்று வந்து கேட்டான், 'தம்பி அமெரிக்காவுக்குப் போறதுக்கு ஒரு வாய்ப்பு வந்திருக்கு. பிரச்சினை இல்லாமல் போயிறலாம்....' என்று சொல்ல மறுப்பேதும் சொல்லாமல் தலையாட்டினான். எப்பிடியாவது கனடாவுக்குப் போய்ச் சேர்ந்தால் போதும் என்றிருந்தது அவனுக்கு.

உடுப்புக்களை மடித்து எடுப்பதற்குக் கூட நேரமில்லாமல் எல்லாவற்றையும் திரணையாகத் திரட்டி பைக்குள் அடைத்துக்கொண்டான். ஏஜென்சிக்காரன் தான் அழைத்துவந்த வாடகைக்காரில் மயூரனை ஏற்றிக்கொண்டான். எங்க போய் போவது, எப்படி போவது என்று எதுவுமே தெரியாத நிலையில் ஏதோ ஏஜென்சிக்காரன் சொல்கிறான் என்று ஏறிக்கொண்டான்.

கார் நகரத்தை விட்டு வெளியான பாதையொன்றில் போய்க்கொண்டிருந்தது. சிறிது நேர ஓட்டத்தின் பின் கார் ஒரு ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரக்கின் பக்கத்தில் போய் நின்றது. பையை எடுத்துக்கொண்டு இறங்கிய அவனை ட்ரக்கின் முன்பகுதிக்கு அழைத்துச்சென்றான். சாரதியின் இருப்பிடத்திற்கு பின்புறமாக இருந்த சிறிய துவாரம் ஒன்றின் வழியாக உள்ளே இறங்கச்சொன்னான் அந்த 'ட்ரக்'கின் சாரதி.

''என்ன இது இந்த சின்ன துவாரத்திற்குள்ளால் நான் எப்படி உள்ளே போவது'' என்று தயங்கிய மயூரனை சாரதி அரைகுறை ஆங்கிலத்தில் துரிதப்படுத்தினான். அவன் சொன்னதுபோலவே முதலில் கால்களை உள்ளே நுளைத்து இறங்கினான். கால்கள் தரையில் பட்ட இடம் விழுவிழென்று வழுக்கியது. மெதுவாக தலையை உள்ளே எடுத்ததும் வயிற்றைக் குமட்டிக்கொண்டு வந்தது. இரண்டு தடவைகள் வாந்தியெடுத்தபின் தலையை நிமிர்த்தினான். அவன் வந்த பாதை மூடப்பட்டு விட்டது. எங்கும் இருள் சூழ்ந்திருந்தது. ஒருசில நிமிடங்களின் பின் அவனது கண்கள் இருளுக்குப் பழக்கமானது. வாகனத்தின்; அசைவிலிருந்து பயணம் தொடங்கிவிட்டதை உணர்ந்துகொண்டான்.

அப்பொழுதுதான் கவனித்தான். அவனைச் சூழ சிறியவையும், பெரியனவுமாக பன்றிகள் அடைக்கப்பட்டிருந்தன. புதிதாக வந்த இவனை நெருங்கி அவை மோப்பமிட்டன. மயூரன் பயத்துடன் ட்ரக்கோடு சாய்ந்துகொண்டான். நல்ல வேளையாக சிறுதடுப்புக் கம்பிகள் இடையே இருந்தமையால் அவற்றால் இவனை நெருங்க முடியவில்லை. அவை அந்த கம்பி இடைவெளிகளின் வழியாக தமது முகத்தை நீட்டி இவனை நெருங்க பயமும், அருவருப்புமாய் நன்றாக ட்ரக்குடன் ஒட்டிக்கொண்டான். சற்றைக்கெல்லாம் அவனுக்கு மூச்சு முட்டியது. பன்றிக்குட்டிகளின்; கழிவு நாற்றம் குடலைப் புறட்டியது. சில பன்றிகள் சிறுநீர் கழித்தன. அது இவன் முகத்தில் தெறித்தது. உடல் முழுவதும் ஏதோ பூச்சிகள் ஊர்வது போல் கசகசத்தது. அந்த சிறிய இடத்தை விட்டு ஒரு அடி கூட எடுத்துவைக்க இடமின்றி அந்த இடத்திலேயே அடைபட்டுக் கிடந்தான்.

'இப்படி நடக்கும் என்று நினைத்திருந்தால், செத்தாலும் பரவாயில்லை என்று சிலோனில் இருந்திருக்கலாம்' என்று ஒருகணம் அவன் நினைத்துப் பார்க்கக்கூட தவறவில்லை.

மெக்சிக்கோவில் அவன் ஏற்றப்பட்ட இடத்தில் இருந்து அமெரிக்காவுக்குப் போவதென்றால் குறைந்தது இரண்டு மணித்தியாலங்கள் என்றாலும் எடுக்கும். அந்த இரண்டு மணித்தியாலமும் அவன் பட்ட அவஸ்தைக்கு அளவே இல்லை. நரகவேதனை. கையில் இருந்த காசை செலவு செய்ய விரும்பாமல் காலையில் எதுவும் அவன் சாப்பிடவில்லை. மதியம் சாப்பிடுவோம் என்று ஆயத்தமானபோதுதான் ஏஜென்சிக்காரன் வந்தான். உள்ளே புழுங்கிய வெப்பத்தில் நாவரண்டு தாகம் எடுத்தது. வாந்தி எடுத்ததில் தலைபாரமாகி, வயிற்றுக்குள் ஏதோவெல்லாம் செய்தது.

'இதுகளையெல்லாம் இறைச்சிக்குத் தானே கொண்டு போறாங்கள்' என்று நினைத்த மயூரனுக்கு தானும் அவற்றுடன் சேர்ந்து ஏதோ ஒரு கொலைக்களத்திற்குக் கொண்டு செல்லப்படுவது போல் தோன்றியது.

பசிமயக்கம் ஒரு புறம், மூச்சுத் திணறல் ஒருபுறமுமாக அரைகுறை மயக்கத்தில் இருந்த மயூரனை அந்த ட்ரக் சாரதி அமெரிக்காவில் பெயர் தெரியாத, சனசந்தடியே இல்லாத ஒரு இடத்தில் இறக்கி விட்டுப் போய்விட்டான். கடும் குளிரில் அரைமயக்கத்தில் கிடந்த அவனை அந்த வழியால் சென்ற அமெரிக்கப் பொலீஸ்காரர்கள் பிடித்துவிட்டனர். அவனுடைய நிலையைப் பார்த்து முதலில் அவனுக்குச் செய்யவேண்டிய முதலுதவிகளைச் செய்தனர். மயூரனுக்கு பயத்திலும், பயணத்தில் பட்ட அவஸ்தையிலும் காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் அவனை ஏனைய கைதிகளுடன் வைத்திருக்க விரும்பாத காவல்துறையினர், அவனை ஒரு விடுதியில் சேர்த்தனர்.

காலையில் கண்விழித்த மயூரன், யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தைவிட்டு வெளியேறி தன் ஏஜென்சியுடன் தொடர்புகொண்டான். ஏஜென்சிக்காரன் சொன்னபடியே தன் உறவினர்களுடன் தொடர்புகொண்டு கனடாவுக்கு வந்துசேர்ந்தான்.

'என்னப்பா....? எங்க போறீங்க.....?' சாமினி சத்தமிடவும் சுயநினைவுக்கு வந்தான் மயூரன். 'எக்ஸிட்' எடுக்கவேண்டிய இடத்தைத் தாண்டி கார் போய்க்கொண்டிருந்தது.

'உச்'சுக்கொட்டினான் மயூரன். சாமினி பொறுமையை இழந்து புறுபுறுக்கத் தொடங்கினாள்.

'சரி.... சரி. இதில எக்ஸிட் எடுத்துப் போவம். இப்ப என்ன அவசரம்?' என்றபடி காரைத் திருப்பினான் மயூரன்.

அந்தக் கசப்பான நினைவுகளினாலோ என்னவோ மயூரனுக்கு குளிரிலும் வியர்த்துக்கொட்டியது. 'காஸ்பொட்'டில் இருந்து தண்ணீரை எடுத்து இரண்டு மிடறு குடித்துவிட்டு வைத்தான்.

'உங்கட கவலையீனத்தால இன்றைக்கு பிறந்தநாளுக்கு நேரத்துக்கு போக ஏலாமல் போயிட்டுது. அப்பிடி என்னப்பா யோசினை....?'

பெரிதாக ஒரு முறை மூச்சை எடுத்துவிட்ட மயூரன் 'நான் அகதியாக கனடாவுக்கு வந்த விதத்தை ஒருக்கா நினைச்சுப் பார்த்தன்.....'

சாமினியிடம் ஏற்கனவே பலதடவைகள் அந்தக் கதைகளையெல்லாம் மயூரன் சொல்லியிருக்கிறான்.

'சரி சரியப்பா. அதுகளையெல்லாம் விடுங்கோ....' என்று அவனுடைய தோளிலே அழுத்தி ஆசுவாசப்படுத்தினாள்.

அவர்கள் உள்ளே நுளையவும் கீர்த்தiனா கேக் வெட்டவும் சரியாக இருந்தது. சாமினியின் நெருங்கிய உறவு அவர்கள். மகளுக்கு 'கீ பேத்டே' பெரிதாகக் கொண்டாட வேண்டும் என்று மண்டபம் எடுத்து எல்லோருக்கும் சொல்லிச் செய்தார்கள்.

போட்டோ எடுத்துக்கொள்ள ஒரு பகுதியினர் முண்டியடிக்க, ஒரு பகுதியினர் சாப்பாட்டு லைனில் இணைந்துகொள்ள என்று வந்திருந்த கூட்டம் இரண்டாகப் பிரிந்தது. அன்று வெள்ளிக்கிழமை என்பதால் சைவச்சாப்பாடு ஒரு இடத்திலும், மச்சச் சாப்பாடு எதிர் புறத்திலும் வைக்கப்பட்டிருந்தது.

''மயூ... உங்களுக்கு இன்டைக்கு நல்ல வெட்டுத்தான். நீங்க அந்தப் பக்கம் போங்க.'' என்று அவன் காதுக்குள் கிசுகிசுத்தாள் சாமினி.

மயூரன் கையில் 'பிளேட்'டும், முள்ளுக்கரண்டியும் எடுத்துக்கொண்டு வரிசையில் நகர்ந்தான். காற்றில் விதவிதமான உணவுகளின் வாசனை கலந்து வந்துகொண்டிருந்தது. மயூரனுக்கு உணவை நெருங்க நெருங்க வயிற்றை குமட்டத் தொடங்கியது. இடியப்பப் பிரட்டல், பிட்டு, ரொட்டி இவற்றுடன் 'சில்லிச் சிக்கன், மட்டன் கறி, தந்தூரி சிக்கன், மாட்டிறைச்சிப் பிரட்டல் என்பன வரிசையாய் ஆவிபறக்கும் விதமாக வைக்கப்பட்டிருந்தன.

'ஆறறிவு படைச்ச மனுசர் நாங்கள். உயிருக்கு ஆபத்து என்றதும் என்ன பாடுபட்டோ உயிரைக் கையில் பிடிச்சுக்கொண்டு, காடு மேடு கடல் எல்லாந்தாண்டி நாடு விட்டு நாடு வந்து சேர்ந்திட்டம். இந்த ஜீவராசிகள் இறைச்சிக்கு என்றே வளர்க்கப்படுறதுகள். சாமினி சொன்னதைப் போல தங்கட தேவைக்கு ஏத்தமாதரி அதுகளை நீட்டி நிமிர்ந்து படுக்கக் கூட விடாமல், சதை பிடிக்கிறதுக்கும், ஆரோக்கியமா இருக்கிறதுக்கும் என்று செயற்கையாக எத்தினையோ மருந்துகளைக் கொடுத்து அதுகளை வருத்தி வருத்தி வளர்த்து கடைசியில ஒன்று பார்க்க ஒன்ற – அடுத்தது நான் தான் என்ற மாதிரி மற்றது காத்திருக்க – மெசினுக்க தலையைக் குடுத்து சாக்காட்டுவான்கள். ஒரு மாட்டின்ட தலை அறுபடேக்க அந்த மாடு துடிக்கிற வேதனையும், அதுக்கு பின்னால நிற்கிற மாட்டுக்கு அடுத்ததாக எனக்கும் இது நடக்கப் போகிறது என்பதையும் உணர்ந்துகொள்ளும். சில மாடுகள் பரிதாபமாகக் கண்ணீர் கூட வடிக்குமாம். திமிரிக்கொண்டு ஓடியும், அவலமாய் கத்தி குரல் எழுப்பியும் தமது எதிர்ப்பைக் காட்டுமாம். அவன் கேள்விப்பட்டிருக்கிறான். இது எவ்வளவு பெரிய உயிர்க்கொலை.

சட்டென்று மயூரன் தன் கையில் இருந்த பிளேட்டை வைத்து விட்டு விலகினான்.

பத்து வருடங்களுக்கு முன் அந்த 'ட்ரக்'கில் நுகர்ந்த அதே அருவருக்கும் மணம் அவன் வயிற்றைக் குமட்டச் செய்தது. முகமெல்லாம் வியர்வையில் நனைந்தது. மெதுவாக வோஷ;ரூமுக்குள் சென்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டான்.

''என்னப்பா, சாப்பிட இல்லையா? என்ன ஒரு மாதிரி இருக்கிறியள்...?'' மயூரனைப் பார்த்ததும் அச்சமும் படபடப்புமாய் வினாவினாள் சாமினி. அவள் பிளேட் அரைவாசி ஏற்கனவே காலியாகியிருந்தது. பக்கத்தில் 'புரூட் சாலட்;' வேறு.

மயூரன் சாமினிக்கு எதிர்ப்புறமாக இருந்த கதிரையில் அமர்ந்துகொண்டான். சாமினியின் பதட்டத்தைப் பார்த்ததும் மயூரன் தன்னை திடப்படுத்திக்கொண்டான்.

''ஒன்றுமில்லை சாமினி. எனக்கு இன்றைக்கு ஏதோ சாப்பிட மூட் இல்லாமல் இருக்குது. பசிக்க இல்லை..... நீர் சாப்பிடும்....'' என்றான். மயூரனை சந்தேகமாய் பார்த்தபடி இரண்டு ஸ்பூன் சாப்பிட்டவள் அத்துடன் நிறுத்திக்கொண்டாள். 'புரூட் சாலட்டை' கைகளில் எடுத்துக் கிளறியபடி அவனை நெருங்கி அமர்ந்துகொண்டாள்.

''என்னப்பா... என்ன பிரச்சனை....?''

''ஒன்றுமில்லை. எனக்கு பழைய நினைவு வந்திட்டுது....'' சிறிது நேரம் மௌனமாய் இருந்த மயூரன் தொடர்ந்தான்.

''இனி நான் இந்த இறைச்சியள் ஒன்றும் சாப்பிடப்போறதில்லை. எனக்கு இந்த மச்சங்கள் ஒன்றும் இனிவேண்டாம்'' என்றான்.

அவன் குரலில் உறுதி தெரிந்தது. அவன் தாடைகள் இறுகிப்போய் இருந்தன. கண்கள் தீர்க்கமாய் சாமினியின் கண்கள் மீது நிலைத்திருந்தது.


முற்றும்

Types Of Stroke ::

LEAD POISONING AND ARSENIC POISONING

Utterance of Appar Or Tirunavukkarasar

The rare jewel of the Brahmins is the Veda with its six angas (parts). The rare jewel of the Saivite is the Panchakshara.

Everything is the manifestation of Lord Siva. Siva is Narayana, Brahma, the four Vedas, the Holiest, the most Ancient, the Perfect. Though Siva is all these, He is none of these. He is without name, without birth, death or disease. He is at once the transcendent and the immanent.

Love of Lord Siva must be felt and manifested. Sing. Pray. Worship. Weep. Dance. Lord Siva is the music or melody in the song, the sweetness in the fruit, the thought in the mind, the lustre in the eyes. He is neither male, nor female. He is without dimensions.

Subdue the senses. Practise regular meditation. Practise the four-fold Saivite discipline. Develop dispassion (Vairagya). Transcend the three bodies. Unite the individual soul with the supreme soul or Lord Siva. You will attain eternal bliss and immortality. You can behold Lord Siva if you look for Him with the light of wisdom issuing forth from the wick of life, fed with the ghee of meditation in the lamp of the mind within the house of your body.

Plough with truth. Plant the seeds of desire for Self-knowledge. Irrigate the mind with the water of patience. Supervise your work by looking within or introspecting. Build the fence of Yama, Niyama, or right conduct or right living. You will soon attain Sivanandam or eternal bliss of Siva.

Regard your body as the temple of Lord Siva, your mind as the worshipper, Truth as purity which is necessary for worship, the jewel of the mind as the Lingam, love as the ghee, milk, etc. Perform Puja to Lord Siva thus. Lord Siva cannot be obtained without making the mind one-pointed and meditating on the Panchakshara.

Tirunavukkarasar was born in Tiruvamoor in Tirumunaipadi Nadu, in the 7th century. His sister Tilakavathiar became a mother for him when their parents died. Marulneekiar, even while young, realized the unreality of the world and engaged himself in all kinds of charitable works. One day, while he was worshipping the Lord and sang hymns, a celestial voice said: ‘From now on you will be known as Tiru Navukkarasar, Lord of Speech. Your glory will spread everywhere.’ Tirunavukkarasar became a staunch devotee of Lord Siva and lived in Him repeating the Panchakshara Mantra.

Tirunavukkarasar spent his days in worshipping and serving the Lord in various ways, to set an example even to saints that they should not relax their eternal spiritual vigilance, lest they should fall a prey to Maya, and to exhort them to lead the ideal life of a humble devotee for the guidance of others. He also visited many sacred shrines.

Crispy Cauliflower Buffalo Wings

This recipe is one of the best things I have ever made. It's crispy on the outside, soft on the inside and extremely easy to make — perfect for a weekend snack, dinner, appetizer or to bring to your next party. That is, if you still want to share after trying them!
Crispy Cauliflower Buffalo Wings
Serves 4
Ingredients
  • 1 head cauliflower, chopped into bite size pieces
  • 1 cup garbanzo bean flour
  • 1 cup water
  • 1 tsp. garlic powder
  • 1/2 tsp. salt
  • 1 tsp. melted butter or ghee
  • 2/3 cup hot sauce
Directions
Preheat oven to 450F. In a medium size bowl, combine flour, water, garlic powder and salt.
Whisk together until smooth. Toss cauliflower into batter making sure to coat each piece completely, then place battered cauliflower on a lightly greased, non-stick baking sheet. Bake for 15 minutes, tossing half way through.
In the meantime, combine melted butter and hot sauce in a large bowl, stirring. When cauliflower is done, remove it from the oven and gently toss it in the hot sauce mixture. Place cauliflower back on the baking sheet and cook for an additional 25 minutes or until it becomes crispy. Allow cauliflower to cool for 15 minutes before serving. Serve with your favorite creamy dressing.
Enjoy!

Thursday, May 1, 2014

HIV is adapting to its human hosts

A study tracing the evolution of HIV in North America has found the virus is getting better at dodging our immune system. Luckily, it's happening really slowly.
shutterstock_133011752
Image: martynowi.cz/Shutterstock
The research, published in PLoS Genetics, suggests that the change is so gradual it's unlikely to impact vaccine and design - at least that's the case in North America.
“Much research has focused on how HIV adapts to antiviral drugs – we wanted to investigate how HIV adapts to us, its human hosts, over time,” said lead author Zabrina Brumme, from Simon Fraser University in Canada, in a press release.
When HIV infects a host, it adapts to their immune response through mutations that can technically be passed on – these are known as immune escape mutations. 
If these mutations spread throughout populations, it could be bad news for host immunity and vaccine development, according to Brumme.
“Just like transmitted drug resistance can compromise treatment success, transmitted immune escape mutations could erode our ability to naturally fight HIV.”
Her team characterised HIV sequences from patients dating from 1979 to today, and then reconstructed the "ancestral" HIV sequence from that information to see how much things had changed.
“Overall, our results show that the virus is adapting very slowly in North America,” said Brumme. “In parts of the world harder hit by HIV though, rates of adaptation could be higher.”
Brumme adds: “We already have the tools to curb HIV in the form of treatment—and we continue to advance towards a vaccine and a cure. Together, we can stop HIV/AIDS before the virus subverts host immunity through population-level adaptation.” 
The race is on.

அறுபடை வீடுகள்

01.திருப்பரங்குன்றம்
ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார். அசுரனை வென்ற அவர் இந்த தலத்தில் இந்திரனின் மகளான தெய்வானையை திருமணம் செய்து கொண்டார். முருகன் அமர்ந்த கோலத்தில் இருப்பது சிறப்பு. இத்தலத்தில் மலை வடிவில் சிவபெருமான் அருள்புரிகிறார். சிவனின் பெயரால் இத்தலம் "திருப்பரங்குன்றம்' எனப்படுகிறது. முருகனின் அருகில் நாரதர் தாடியுடன் இருப்பது குறிப்பிடத்தக்கது.

02. திருச்செந்தூர்
முருகனின் இரண்டாம் படைவீடு திருச்செந்தூர். இது கடலோரத்தில் அலைகள் வீச அமைந்துள்ளதால் அலைவாய் என்ற பெயரும் உண்டு. இந்ததலம் கைலாயத்திற்கு சமமானது. முருகப்பெருமான் சூரர்களை வெல்வதற்கு முன்னும் பின்னும் தங்கிய இடம். இவரது திருவடிகளை படகிற்கு சமமாக சொல்கிறார்கள். அதனால் தான் கடலின் முன்புள்ள இத்தலத்திலுள்ள முருகனின் திருவடிகளை வணங்கி பிறவிப் பெருங்கடலை கடப்பதாக நம்பிக்கையுள்ளது.

03. பழநி
சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால்வைத்தாலே பாதி நோய் தீரும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகளுக்கு தொடர்ந்து காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் அனைத்தும் ஒன்றே என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறுவதுடன், வாழ்க்கை என்றால் இன்னதென்று உணரும் ஞானஒளியையும் பெறலாம். அபிஷேகம் செய்யப்பட்ட பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தி (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை. பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது சிலை. போகர் சித்தரால் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

04. சுவாமிமலை சிவகுருநாதன்
சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தை உபதேசித்து சுவாமி மலையில் சுவாமிநாதனாக முருகப்பெருமான் வீற்றிருக்கின்றார். "தன்னைவிட தன் பிள்ளைகள் அறிவுடையவர்களாக இருப்பது இப்பரந்த உலகத்தில் வாழும் உயிர்களுக்கெல்லாம் நன்மையைத் தரும்' என்கிறார் வள்ளுவர். அந்த வழியில் தன் பிள்ளையின் வாயால் மந்திரத்தின் பொருளை கேட்டு மகிழ்ந்தார் சிவன். அதுவும் தன் பிள்ளை குருவாக வீற்றிருக்க, தானே சீடனைப் போல் அமர்ந்து கேட்டார். அதனால் ""சிவகுருநாதன்'' என்ற பெயரை முருகப்பெருமான் பெற்றார்.

05. திருத்தணி முருகன்
அழகே உருவாக பொலிவுடன் காட்சி தரும் முருகன், திருத்தணியில் மார்பில் காயம்பட்ட தடத்துடன் இருக்கிறார். இதனை சூரனுடன் போரிட்ட போது ஏற்பட்ட காயம் என்கிறார்கள். திருச்செந்தூரில் சூரனை வதம் செய்த முருகன் இங்கு வந்து கோபம் தணிந்து சாந்தமாக அமர்ந்தார். கோபம் தணித்த இடம் என்பதால் "தணிகை' என இவ்வூர் பெயர் பெற்றது. அபிஷேக சந்தனம் இத்தலத்தில் பிரசாதமாக தரப்படுகிறது. இ தனை பக்தர்கள் நீரில் கரைத்து குடிக்கின்றனர். இதனால், நோய் நீங்கும் என்பது நம்பிக்கை.

06. சோலைமலை
அறுபடைவீடுகளில் ஆறாவது வீடாக விளங்குவது சோலைமலை. மதுரையிலிருந்து 20 கி.மீ., தொலைவில் உள்ளது. அவ்வைக்கிழவியிடம்,"" சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?,'' என்று சாதுர்யத்துடன் உரையாடிய முருகன், இங்கு கோயில் கொண்டிருக்கிறார். உலக உயிர்கள் அனைத்தும் பழங்கள். அவற்றின் மீது பாசபந்தம் என்னும் மண் ஒட்டியிருக்கிறது. அதனைப்போக்க கல்வியறிவு மட்டும் போதாது. இறையருள் என்னும் மெய்யறிவும் வேண்டும் என்பதை உணர்த்த சுட்டிப்பையனாக வந்து திருவிளையாடல் புரிந்தவர் இவர். தன்னை வழிபட்டவர்க்கு கல்வியறிவும், ஞானமும் தருபவராக அருள்கிறார். ""அறிவால் அறிந்து உன் இருதாள் இறைஞ்சும் அடியார் இடைஞ்சல் களைவோனே'' என்று அருணகிரிநாதர் இவரைப் போற்றியுள்ளார்.