Search This Blog

Wednesday, November 20, 2013

Arth-அர்த் (இந்தி திரைப்படம்)

Arth-அர்த்
(இந்தி திரைப்படம்)

1982 ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, மாறுபட்ட திரைப்படங்களை ரசிப்பவர்களின் பாராட்டைப் பெரிய அளவில் பெற்ற படம். படத்தின் இயக்குநர் மகேஷ் பட். அவர் இயக்கும் படம் என்றாலே, மாறுபட்ட கதைக் கரு இருக்கும், புதுமையான கோணத்தில் கதை கூறப்பட்டிருக்கும் என்று பொதுவாக கூறுவார்கள். அது உண்மைதான் என்பதற்கு `அர்த்’ படமும் எடுத்துக்காட்டாக நிற்கிறது.
மகேஷ் பட்டிற்கும், முன்பு பிரபல இந்தி நடிகையாக இருந்த பர்வீன் பாபிக்குமிடையே ஒரு வகையான உறவு இருந்தது. அது இந்தி படவுலகைச் சேர்ந்த எல்லோருக்கும் தெரியும். அந்த உறவை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதே `அர்த்’ என்று அந்தக் காலகட்டத்தில் விமர்சகர்கள் குறிப்பிடுவார்கள்.
இரண்டு பெண்களையும் ஒரு ஆணையும் சுற்றி பின்னப்பட்ட கதையே `அர்த்’.

கிட்னி அறிந்ததும் அறியாததும்!



“ஒரு வீட்டின் சுத்தம் எப்படிப்பட்டது என்பது அந்த வீட்டின் ஹால், கிச்சன், பெட்ரூம் போன்றவற்றைப் பார்ப்பதைவிட அந்த வீட்டின் கழிப்பறையைப் பார்த்தால் தெரிந்துவிடும். அதுபோலத்தான் நம் உடலும்… நாம் முழுமையான ஆரோக்கியத்தோடு இருக்கிறோமா என்பதை நம் சிறுநீரகத்தின் செயல்பாட்டை வைத்துச் சொல்லிவிடலாம்…” என்று எளிமையான உதாரணத்தோடு பேசத் தொடங்கினார் டாக்டர் சௌந்தரராஜன். சிறுநீரகத் துறையில் உலகின் மிக முக்கியமான மருத்துவரான டாக்டர் சௌந்தரராஜன்தான் நடிகர் ரஜினி ராமச்சந்திரா மருத்துவமனையில் இருந்தபோது அவரை மருத்துக் கண்காணிப்பு செய்து வந்தவர். சிங்கப்பூர் வரைக்கும் ரஜினியோடு போய்வந்த மருத்துவரும் இவர்தான். சிறுநீரகத்தைப் பற்றிய கேள்விகளுக்கு அவருடைய பதில்கள் இதோ:-

யாருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்?

சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம், உப்பு நீர் வியாதி, சிறுநீர் அழற்சி, சிறுநீரகக் கற்கள், சிறுநீர் அடைப்பு மற்றும் வலி நிவாரண மாத்திரைகளை அதிகமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழக்க வாய்ப்புள்ளது.

பாதிப்பு உண்டாக்கும் காரணங்கள் வேறென்ன?

வயிற்றுப் போக்கு மற்றும் வாந்தியால் உடலில் நீர் வற்றிப் போவதாலும், பாம்புக்கடி, விஷப் பூச்சிக் கடி, எலி ஜுரம் மற்றும் வலி நிவாரணிகளால் ஏற்படும் ஒவ்வாமையாலும் சிறுநீரகம் தற்காலிகச் செயலிழப்பு ஏற்படும்.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படாமல் தடுக்க முடியுமா?

முடியும். எடுத்த எடுப்பிலேயே ஒருவருக்கு நிரந்தரச் செயலிழப்பு ஏற்படாது. படிப்படியாகத்தான் பாதிக்கப்படும். அதனால், ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால் நிரந்தர செயலிழப்பிலிருந்து தப்ப முடியும்.

அதை எப்படி கண்டுபிடிப்பது..?

வருடத்துக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்துகொள்ளும்போது சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும். பிரச்சினை இருந்தால், இதில் தெரிந்துவிடும். ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், பின்னால் அவஸ்தை இருக்காது. சிறுநீர், ரத்தம், அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் இணைந்த விளக்கமான சிறுநீரக இயக்கச் சோதனை (Detailed Kidney Function Test) செய்துகொள்வது நல்லது.

அறிகுறிகள் இருக்குமா..?

இருக்கும். கைகால்களில் வீக்கம் ஏற்படும். சிறுநீரக பாதிப்பால்தான் வீக்கம் ஏற்படுகிறது என்பதை கண்டு அறிந்துவிட்டால் அளவுக்கு அதிகமாக தண்ணீ­ர் அருந்துவது, உப்பு சேர்த்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். பொதுவாக எந்த வீக்கமாக இருந்தாலும் தண்­ணீரையும் உப்பையும் குறைப்பதன் மூலம் வீக்கத்தை குறிக்க முடியும்.

எதனால் கைகால் வீக்கம் ஏற்படுகிறது..?

தண்­ணீரை வெளியேற்ற முடியாமல் சிறுநீரகம் தவிக்கிறது என்பதற்கான அறிகுறிதான் கைகால் வீக்கம்.

தற்காப்பு நடவடிக்கைகள் என்ன?

அசைவ உணவுகளைத் தவிர்த்துவிட்டு சைவத்துக்கு மாறவேண்டும். போதுமான அளவு நீர் அருந்த வேண்டும், சிறுநீரை அடக்கிக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும், சுய வைத்தியம், வலி நிவாரண மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்ப்பது, காலாவதியான மருந்துகளை உட்கொள்ளாமல் இருப்பது, பிறருக்கு மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை எடுத்துக்கொள்ளாமல் இருப்பதாலும், அதிக உடற்பருமன் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதாலும், புகை மற்றும் மதுப் பொருட்கள் உபயோகிப்பதை தவிர்ப்பதாலும் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படுவதைத் தடுக்க முடியும்.

உணவு முறைகள் என்ன?

எதையும் அளவாக எடுத்துக்கொள்ள வேண்டும். அசைவ உணவுகளை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது. கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் கூடாது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உணவில் உப்பு, பொட்டாசியம் நிறைந்த உணவுகளையும் சுத்தமாக தவிர்க்க வேண்டும். ரத்த அழுத்தம், சிறுநீரகக் கல் இருப்பவர்கள் பொட்டாசியம் சேர்த்துக்கொள்ளலாம்.

எந்தெந்த உணவுகளில் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது..?

வாழைப்பழம், இன்ஸ்ட்டன்ட் காஃபி, டீ, செயற்கை பானங்கள் (கூல்டிரிங்ஸ்), பேரீச்சம் பழம், இளநீர், ஆரஞ்சு, இவற்றிலெல்லாம் பொட்டாசியம் அதிகமாக இருக்கிறது.

சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லாருமே பொட்டாசியம் சாப்பிடக்கூடாதா..?

அப்படியில்லை. டயாலிஸிஸ் செய்துகொள்ளும் நிலைவரைக்கும் போனவர்கள் பொட்டாசியத்தை முழுமையாக தவிர்க்க வேண்டும். ஆரம்பக்கட்டத்தில் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி நடந்துகொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு சாறு, முள்ளங்கிச் சாறு சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் என்கிறார்களே…?

வாழைத்தண்டு, முள்ளங்கி இரண்டும் சிறுநீரகப் பெருக்கிகள். அவற்றை உட்கொள்வதால் சிறுநீர் பெருக்கம் ஏற்பட்டு சிறுநீரகத்தில் அடைத்து இருக்கும் கல் சிறுநீரில் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.

சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க முடியுமா?

முடியும். தவறான உணவுப் பழக்கவழக்கம், தேவைக்கு ஏற்ற நீர் அருந்தாமல் இருப்பது, அதிகமான அளவில் அசைவ உணவுகளை உட்கொள்வது, கால்சியம் மற்றும் வைட்டமின் ‘டி’ உணவுகளை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வதால் சிறுநீரகக் கற்கள் ஏற்படுகின்றன. எனவே, இவற்றைத் தவிர்ப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாவதை தடுக்க முடியும்.

சிகிச்சை முறைகள் பற்றி சொல்லுங்கள்…

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் டயாலிஸிஸ், கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் போன்ற எல்லை வரை போகாமல் தவிர்க்கலாம். அல்லது தள்ளிப் போடலாம்.

இல்லாவிட்டால்…

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டுவிட்டது என்பது உறுதியாகிவிட்டால், வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை டயாலிஸிஸ் செய்துகொள்ள வேண்டும். வீட்டிலேயே செல்ஃப் டயாலிஸிஸ் செய்துகொள்வதென்றால், தினமும் மூன்று முறையாவது டயாலிஸிஸ் செய்வது நல்லது.

அப்புறம்…

இளைய வயதினராக இருந்து நிரந்த சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டு இருந்தால், அவர்கள் டயாலிஸிஸ் செய்துகொண்டு காலத்தைக் கழிப்பதைவிட சிறுநீர் மாற்று அறுவைசிகிச்சை செய்துகொள்வதுதான் நல்லது. அதற்கு ஆகும் செலவையும் அவர்களால் எளிதில் ஈடுசெய்ய முடியும்.

இளைஞர்கள் மட்டும்தான் செய்துகொள்ள முடியுமா..?

இளைஞர்களுக்கு புதிய கிட்னி பொருந்திப் போகவும், சிறப்பாக வேலை பார்க்கவும் வாய்ப்புகள் அதிகம். ஆனால், வயதானவர்களுக்கு வாய்ப்புகள் மிகவும் குறைவு. அதனால், 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வது உசிதம் இல்லை. அதனால், தொடர்ந்து டயாலிஸிஸ் செய்துகொள்வதன் மூலமாகவும் ஆயுளை நீட்டிக்கலாம். கிட்னி மாற்று சிகிச்சைக்கு பல லட்சம் செலவாகும்.

கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்வதால் என்ன பயன்..?

என்னுடைய அனுபவத்தில் கிட்னி டிரான்ஸ்பரன்ஷன் செய்தவர்களின் ஆயுள் கூடியிருக்கிறது. டிரான்ஸ்பரன்ஷன் செய்யாதவர்களைவிட செய்தவர்கள் 20லிருந்து 30 ஆண்டுகளுக்குக் கூடுதலாக வாழ்ந்து இருக்கிறார்கள்.

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்கள் எல்லோருக்கும் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்ய முடியுமா?

முடியாது. தற்சமயம் இந்தியாவில் 100 பேரில் 5 பேருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்கிறது. அதிலும் நெருங்கிய உறவினர்கள் தானம் செய்வதன் மூலமாகத்தான் கிடைக்கிறது. காரணம், பொருத்தமான சிறுநீரகம் பலருக்குக் கிடைப்பதில்லை. அதுவும் இல்லாமல், இந்தியாவின் பல மாநிலங்களில் சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்வதற்கான வசதி வாய்ப்புகள் என்பதே இல்லை. அப்படியே இருந்தாலும் பெருநகரங்களில் மட்டுமே இருக்கும். இந்தத் துறையில் நிபுணர்களும் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர்களும் குறைவு. அதனால், எல்லோருக்கும் சாத்தியமாவதற்கு இன்னும் சில காலம் ஆகலாம். சிறுநீரகத்தை எடுத்து தேவைப்படுபவர்களுக்கு அளிக்கலாம். இது அவருடைய நெருங்கிய உறவினரின் சம்மதத்தோடு மட்டுமே செய்யமுடியும். அதுவும் சிறுநீரகம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செய்ய முடியும்.

நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டவர்கள் உடலுறவு கொள்ள முடியுமா..?

முடியாது. அவர்களுடைய பாலினத்துக்கேற்ப ஆண்மைக்குறைவு, பெண்மைக்குறைவு, குழந்தை பிறப்பதில் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் சாத்தியம் இல்லை. ஆனால், சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சைக்குப் பிறகு எல்லோரையும் போல் அவர்களும் குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

நிரந்தர செயலிழப்பு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

நிரந்தர செயலிழப்பு ஏற்பட்டவர்களில் மூன்றில் இரண்டு பங்கு நோயாளிகள் மாரடைப்பு ஏற்படுவதாலேயே இறந்துபோகிறார்கள். அதேபோல இதயநோயாளிகளுக்கு நிரந்தர சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம். அதனால், சிறுநீரகம் நிரந்தரமாக செயலிழந்தவர்கள் இதயத்தையும், இதயநோயாளிகள் சிறுநீரகத்தையும் அடிக்கடி முழுமையான பரிசோதனை செய்துகொள்வதால் மரணத்தை தள்ளிப்போட முடியும்.

The Union of Man and Woman

She is Language, he is Thought
She is Prudence, he is Law
He is Reason; she is Sense
She is Duty; he is Right
He is Will; she is Wish
He is Pity; she is Gift
He is Song; she is Note
She is Fuel; he is Fire
She is Glory; he is Sun
She is Motion; he is Wind
He is Owner; she is Wealth
He is Battle ; she is Might
He is Lamp; she is Light
He is Day; she is Night
He is Justice; she is Pity
He is Channel; she is River
She is Beauty; he is Strength
She is Body; he is Soul

- The Wisdom of The Vishnu Purana

Sri Aane Gudde Vinayaka temple (more than 2000 years old)

Lord Aane Gudde vinayaka is 12 feet tall in the very elephant form itself against the traditional Vinayaka form in Tamilnadu. People call Him Swayambu Vinayaka. The tilak is in upward Vaishanava Nama style – not with sacred ash.

The temple celebrates special pujas in Karthikai month-December-January to wake up the birds and to protect them and the cattle from attack of diseases. This is called Pakshi Sankara Puja. He (Sankara) appears with four hands including two Abhaya Hastha to protect those surrendering at His feet and granting boons. He appears with silver covering alankara. It is believed that the Vinayaka idol is growing big. The Kailash darshan of Lord Shiva with Mother Parvathi is beautifully depicted at the entrance.

Students pray for good education, job opportunities. Devotees also seek wedding, child and profit boons in business.

Realizing their wishes, on any day convenient to them, devotees do alankara to Lord Ganapathi with 400 kgs of rice, 1008 or a minimum of 125 coconuts. They call it Moodu Ganapathi puja and Arisi (rice) Ganapathi puja.

Greatness Of Temple: The deity of 12 feet tall Aane Gudde Vinayaka in the very elephant form itself is made of a single stone. He is praised as Swayambu vinayaka with a Vaishnava style tilak on the forehead. Devotees praise Him as Vishnu Roopa Ganapathi and Vishnu Roppa Paramatma. Ranga Puja is conducted on Fridays for the welfare of all in the world – Loka Kshema. Devotees joining the puja light lamps. Lighting lamps in the temple is followed by devotees during the months Aipasi, Karthikai, Margazhi and Thai covering October-November to January-February. During the Sankatahara Chaturthi, devotees offer Tulabaram to Lord – offering things equal to one’s weight. This is a very important commitment by the devotees. Lord Vinayaka also graces as Deepa Ganapati reforming those addicted to liquor and other bad habits.

Temple History: Mangalore – now Mangaluru on the shores of the Arabian Sea was a desert earlier. Drought enveloped the region. Sages performed penance and people who were helpful to them suffered from starvation. They sought the help of sage Agasthya. He began penance on Varuna the God of rain. A demon, Kumbasura by name caused troubles to the penance of the sage. Bheema one of the Pandava brother only had the power to destroy the demon. Lord Vinayaka took the elephant form carrying a weapon. Seeing Bheema coming to have the weapon, the elephant dropped the weapon and fled away. Bheema killed the demon with the weapon.

As the demon was destroyed with the weapon of Lord Vinayaka, while dying, he realized wisdom and died a pure soul. The place became fertile with good rains. Sages begged Lord Vinayaka that He should stay at the place where their grievances came to an end. Lord obliged. As Kumbasura was reformed in this place, it came to be known as Kumbasi. The temple is in the Aane Gudde part of the place. Aane Gudde means a hill, the home of Lord Vinayaka.
 — 

Vedic influences are all over Indonesia

Culturally speaking Java is characterized by deep traces of Indianization that occurred long ago. From this, Indianization was born a series of kingdom - Cambodia, Champa, Malay Pensisnsula, the kingdoms of Sumatara, Java and Bali and finally the Burmese and Thai kingdoms.

How Hinduism was introduced in Indonesia:

Records of foreign trade with Indonesia exist from the early AD centuries. Consequently, it was earlier thought that Hinduism was introduced to Indonesia through traders arriving from India. However, recent discoveries of Sanskrit transcriptions in places like eastern Kalimantan, a considerable distance from the international trade route, and also in western Java have given rise to a new theory that it was introduced to the Indonesian islands through rishis and their Indian and Indonesian disciples. References in Balinese literature about Pura Pucak Raung (in the Eastern Javanese district of Glenmore), where Maharishi Markandeya is said to have visited and gathered followers, further bolster this claim.

Even today at a Muslim festival - immense conical mounds of rice are carried to Mosques in Yogyakarata - a direct reference to the sacred mountain - Mount Mahameru - the abode of Hindu Gods. Beneath the unornamented throne of the Susuhunan of Surakarta - a titular Muslim prince - a tiger skin symbolizing his role as the embodiment of Lord Shiva.

Under the Gupta Dynasty - India enjoyed one of its "Golden Ages". When Chinese pilgrim Fa-hsien visited Java in 414 AD Hinduism was practiced in both islands of Java and Sumatara. The oldest Sanskrit inscription in Java dates from 414 AD is found near modern Bogor. King Purnavarman of Taruna founded the Sanjaya Dynasty. Javanese pilgrims are known to have visited India in the 9th century and who brought back India's intellectual and cultural sophistication to a land as ready to embrace and expand on philosophical ideas as the Javanese earth receives and nurtures rice seedlings. The earliest Hindu temples in Java are located on the high plateau of Dieng and Gedong Songo built in 732 - 760 CE.

Indonesia has Sanskrit names like Jayakarta (Jakarta), Yogyakarta, Surakarta, Denpasar, Surbaya. Krishna/Arjuna chariot sculptures can be spotted in Jakarata and Bali. The Bahasa language of Indonesia is filled with Sanskrit words. Mount Bromo means Brahma is a sacred mountain - an active volcano in East Java. Here the Tengger Hindus of this region hold a ceremony called Yadnya Kasada Ceremony once a year. Mahameru is the hightest mountain in Java. Arjuno-Welirang Is a twin volcano in East Java. Arjuno is Javanese rendition of Arjuna, a hero in Mahabharata epic, while Welirang is Javanese word for sulfur. Mt. Penanggungan - An ancient Javanese text, the tantu panggelaran records how in times long past the holy Mt Mahameru was transported from India to Java, in order to hold the island in place. During the journey, however, the mountain began to break apart, pieces falling to earth to form a chain of volcanic peaks. The base became Mt Semeru, Java's highest mountain, while the summit, Mt Pawitra, came to rest on the plains south of Surabaya. Mount Tambora and the city of Bhima on the island of Sumbawa. While in In a sacred pool on the slopes of Java’s Mount Penanggungan, men often bathe beside statues of Sri and Lakshmi, the consorts of Lord Vishnu. Pustakasala - also known as Kimpulan temple, is a 9th to 10th century Hindu temple located in the area of Indonesia Islamic University. —

A dry park in the winter, and a 10mdeep lake in the summer

There is a place in Austria that is a dry park in the winter, and a 10mdeep lake in the summer. Located at the foot of the Hochschwab Mountains, in Tragoess, Styria, Green Lake is one of the most bizarre natural
phenomena in the world. During the cold winter months, this place
is almost completely dry, and used as a country park where hikers love to come and spend some time away from urban chaos. But as soon as temperatures rise, the snow and ice covering the mountain tops begin to melt, and
the water pours down, filling the basin below with crystal-clear water. Water levels go from one-two meters at most, to over 10 meters, in the early summer. The waters of Green Lake are highest in June, when this extraordinary place is invaded by divers, curious to see what a mountain park looks like underwater. Fish swimming over wooden benches, a grass-covered bottom, trees, roads, roads and even bridges create a surreal setting that feels like it belongs on dry ground.

The Chennakesava Temple, originally called Vijayanarayana Temple

The Chennakesava Temple, originally called Vijayanarayana Temple, was built on the banks of the Yagachi River in Belur, by the Hoysala Empire King Vishnuvardhana. Belur, which was an early Hoysala capital is in the Hassan district of Karnataka state, India. It is 40 km from Hassan city and 220 km from Bangalore. Chennakesava (lit, "handsome Kesava") is a form of the Hindu god Vishnu. Belur is well known for its marvelous temples built during the rule of the Hoysala dynasty, making it and nearby Halebidu favored tourist destinations in Karnataka state. These temple complexes have been proposed to be listed under UNESCO World Heritage Sites.

The temple was commissioned by King Vishnuvardhana in 1117 AD. Scholars are divided about the reasons for the construction of the temple. The military successes of Vishnuvardhana is considered a probable reason. Some scholars believe Vishnuvardhana commissioned the temple to surpass his overlord, King Vikramaditya VI of the Western Chalukya Empire (who ruled from Basavakalyan), after his initial military victories against the Chalukyas. According to another theory, Vishnuvardhana was celebrating his famous victory against the Chola dynasty of Tamil country in the battle of Talakad (1116 AD), which resulted in the annexation of Gangavadi (modern southern Karnataka) by the Hoysalas. Another theory points to Vishnuvardhana's conversion from Jainism to Vaishnavism (a sect of Hinduism) after coming under the influence of saint Ramanujacharya, considering this is a predominantly Vaishnava temple in sculptural iconography. The Hoysalas employed many noted architects and artisans who developed a new architectural tradition, which art critic Adam Hardy called the Karnata Dravida tradition. In all 118 inscriptions have been recovered from the temple complex, covering the period 1117 AD to the 18th century, giving historians details of the artists employed, grants made to the temple and renovations committed during later times.

DEPRESSION


Depression is a chronic and recurrent mood disorder. Although many people may feel depressed at one time or another, clinical depression is defined when the symptoms interfere with everyday life for an extended period. It affects 3% to 5% of the general population, but it's reported to be significantly underdiagnosed and usually inadequately treated.

Forms of depression include major depression, dysthymia, postpartum depression, premenstrual dysphoric disorder, and seasonal affective disorder.
File:Abraham Lincoln O-60 by Brady, 1862.jpg

Abraham Lincoln suffered from "melancholy",
known today as clinical depression.


Abraham Lincoln suffered from "melancholy",
known today as clinical depression.


The peak age of depression onset is between 20 and 40.

Causes :
---------
- Some people may have a genetic predisposition to developing depression.
- Possible contributing factors
- Disappointment at home, work, or school
- Death of a friend or relative
- Prolonged pain or having a major illness
- Medical conditions, such as hypothyroidism, cancer, or hepatitis
- Drugs, such as sedatives and antihypertensives
- Alcohol or drug abuse
- Chronic stress
- Abuse or neglect
- Social isolation
- Nutritional deficiencies (such as folate and omega-3 fatty acids)
- Sleeping problems


Signs and symptoms
-------------------------
- Persistent sad, anxious, or “empty” mood
- Feelings of hopelessness and pessimism
- Feelings of guilt, worthlessness, and helplessness
- Loss of interest or pleasure in hobbies and activities that were - once enjoyed
-Loss of energy or fatigue
-Unexplained pain
-GI symptoms
-Headache
- Insomnia
- Dizziness
- Palpitations
- Heartburn
- Numbness
- Loss of appetite
- Premenstrual syndrome

*** In children, symptoms of depression include hyperactivity, poor school performance, somatic complaints, sleeping and eating disturbances, lack of playfulness, and suicidal ideation or actions.

Winston Churchill suffered from clinical
depression throughout his life.
He called it "black dog".

Pathophysiology
-------------------
An imbalance of the neurotransmitters is thought to be the underlying mechanism in depression. In a person with normal levels of neurotransmitters, serotonin and norepinephrine are released from one neuron and travel to another one, activating receptors. After the receptors are activated, the neurotransmitters are taken up by the presynaptic neuron. A patient with depression has inadequate levels of serotonin or norepinephrine, thus not allowing this smooth transmission of impulses.

Diagnostic test results
--------------------------
Several screening questionnaires are used to detect depressive symptoms. They include:
Beck Depression Inventory
Center for Epidemiological Studies Depression Scale
Zung Self-Rating Depression Scale.

* To screen for depression, ask your patient these two questions:
- Have you felt down, depressed, or hopeless for most of the past 2 weeks?
- Have you felt little interest or pleasure in performing activities for most of the past 2 weeks?
- If the patient answers yes to either question, further assessment is warranted.

J.K. Rowling, author of Harry Potter stories,
was diagnosed with clinical depression.

Treatment >>>
-------------
1- Medications < Antidepreesants >
- Selective serotonin reuptake inhibitors, such as fluoxetine and sertraline
- Tricyclic antidepressants, such as nortriptyline and desipramine
- Venlafaxine
- Nefazodone
- Bupropion
- Monoamine oxidase inhibitors

2- Psychotherapy
3- Electroconvulsive therapy
4- Exercise
5- Other Treatments :
- Support groups
- Self-help literature
- Light therapy
thanks Web Medicine 


Sleep therapy seen as an aid for depression
Curing insomnia in people with depression could double their chance of a full recovery, scientists are reporting. The findings, based on an insomnia treatment that uses talk therapy rather than drugs, are the first to emerge from a series of closely watched studies of sleep and depression to be released in the coming year.


External Visual Attention Technique: Overcome Clinical Depression and Anxiety in just a few minutes!


Major psychological disorders such as Clinical Depression and Anxiety are associated with an excessive tendency for inward-directed mental attention. Inward-directed mental attention is the state of mind when your mental attention is directed towards the self rather than the external environment. In other words, it is the state of mind when your attention is engaged in your thoughts and your mind is detached from its surroundings. Excessive inward-directed mental attention is the primary mediating factor that triggers or exacerbates psychological vulnerabilities. By counteracting the tendency for inward-directed mental attention with a technique of external visual attention, you can overcome psychological disorders.
The technique of External Visual Attention was announced in a path-breaking research paper published in June 2013 in the medical journal Medical Hypotheses. If you like to be one of the first people to avail the benefits of this cutting edge discovery in medical research, then read on.
Please read the instructions in this page very carefully. If you take the following steps seriously and follow the instructions, then the technique can help you to achieve an immediate relief in the short term and a complete recovery in the long term. Please do not forget to bookmark this webpage since you may need to refer back to the instructions provided here. If you are being helped by my technique, use the donate button at the bottom of this page to support me.

The technique is based on the following principles:

  • The excessive tendency for inward-directed mental attention is the primary mediating factor in the onset and persistence of psychological disorders.
  • Psychological disorders can be overcome by counteracting the occurrence of inward-directed mental attention.
  • Consciously directing your visual attention towards the external world is the most effective way to counteract the tendency for inward-directed mental attention.


What is Inward-directed mental attention?

Inward-directed mental attention can be defined as the state of mind when one’s mental attention is directed towards the self rather than the external environment. Mental attention is directional - it can be directed inward or outward. Inward-directed mental attention is the state of mind when you are engaged in your thoughts and emotions and less attentive of your surroundings.
Immersive thinking, brooding, anxious thinking etc are typical examples of activities that often involve a high degree of inward-directed mental attention.
Moments of inward-directed mental attention are often very common in every person's daily life. Some amount of inward-directed mental attention is needed for our regular thinking processes. However, too much occurrence of inward-directed mental attention will result in excessive immersion in your thoughts and detachment from the external surroundings. Excessive occurrence of inward-directed attention prevents you from living in the present moment.

Excessive tendency for inward-directed mental attention is pathological

  • In a state of inward-directed mental attention, the subjective experience of your thoughts and emotions is intensified. The intensification of your thoughts and emotions can make it harder for you to disengage from them and will lead to overthinking and lose of rational perspective.
  • A state of inward-directed mental attention increases the mental engagement in internally generated stimuli (i.e., your thoughts and emotions) and decreases your mental engagement in external surroundings. Hence, excessive inward-directed mental attention can make you feel "wrapped up in your head" and disconnect you from the external surroundings.
  • Increased mental engagement and intensification of maladaptive thoughts will ultimately lead to the reinforcement of corresponding neural pathways in the brain. This is why inward-directed mental attention is considered to be the primary reason for the onset and exacerbation of psychological vulnerabilities.
.

Psychological disorders can be overcome by External Visual Attention technique

Unlike other therapies in psychology, external visual attention technique is unique because it is a technique of overcoming inward-directed mental attention. Emotional wellbeing can be achieved by training the mind to be more externally directed and less internally directed. Directing mental attention towards the external environment prevents a person from being lost in his thoughts and keeps him anchored in the "present moment". Visual stimuli from the external world provide the easiest and the most unambiguous reference frame to divert attention away from one's inner thoughts and emotions. In other words, consciously looking at the external world is the easiest and the most effective method to overcome inward-directed mental attention and train your mental attention to be more externally directed in the long term.
Persistent practice can modify maladaptive neural pathways in the brain and may result in a complete and lasting relief from OCD, Anxiety and Depression.

How to apply External Visual Attention technique?

To apply this technique, you simply have to "look at the external world". Do this frequently throughout your daily life and especially during times of psychological distress. The external world, in this context simply refers to your surroundings that you can see in your field of view. When you consciously look at your surroundings, your mental attention becomes externally directed and your mind easily disengages from its thought processes. In a state of externally directed mental attention, your mind is less vulnerable to the maladaptive thoughts generated in your mind.
The technique is very simple to apply. When you consciously look at the external world, you do not have to concentrate or focus your attention. You do not have to apply any effort. You do not have to think about what you look at.
Upon trying this technique, you may soon realise that it is difficult to keep your mind externally directed 100% of the time. Don't worry, this is normal. All that you should do is keep trying this technique often (but not too much) so that your mind is trained to become more externally directed in the long term. If you try this technique too much, you may get mentally tired and exhaust your will power. Hence, do this technique in moderation, at a pace that feels comfortable to you.
What makes External Visual Attention technique unique and highly effective is that it addresses the issue of inward-directed mental attention that has been neglected by all other therapeutic approaches currently in practice. Moreover, this technique has been specifically designed to be so simple that it can be easily practiced by anyone at anytime.
If you like to know more about this technique, check out the list of Frequently Asked Questions.
Additional Notes: Give this technique a higher priority than all other activities in your life and keep repeating the phrase "look at the external world" in your mind if you tend to be forgetful in applying the technique. You can direct your visual attention on anything in your field of vision, such as a face or a computer screen. This technique can be easily integrated into your daily life without causing any interruption to any of your activities. For instance, you can consciously look at things around you as you walk down the road or look at faces as you talk to people.



Tuesday, November 19, 2013

குறைந்த செலவில் நிறைந்த மின்சாரம் - படிக்காத மேதையின் பலே கண்டுபிடிப்பு!



“படித்ததினால் அறிவு பெற்றோர் ஆயிரம் உண்டு.. பாடம் படிக்காத மேதைகளும் பாரினில் உண்டு..’ என்ற கண்ணதாசனின் காப்பிய வரிகளுக்கு கச்சிதமான உதாரணம் சுப்பிரமணியம்!

சுப்பிரமணியத்தின் சொந்த ஊர், ஈரோடு மாவட்டம் சென்னிமலை. குடும்பச் சூழலால் பத்தாம் வகுப்புக்கு மேல் தாண்ட முடியாத சுப்பிரமணியம் இப்போது, தனியார் கல்லூரியின் தற்காலிக ஊழியர். ஆனால், இவரது சாதனைப் பட்டியல், பெரிய சைன்டிஸ்ட் ரேஞ்சுக்கு நீள்கிறது.

மெட்ரிக் முறையில் இயங்கும் கடிகாரம், செலவைக் குறைத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் புதிய பெட்ரோல் இயந்திரம், தினசரி, மாத காலண்டர்களைப் போல வார காலண்டர், சாண எரிவாயு உற்பத்தியில் புதிய தொழில்நுட்பம், தமிழ் எழுத்து சீர்திருத்தத்துக்கான முயற்சி… என பல கண்டுபிடிப்புகளால் மிரட்டுகிறார் மனிதர்!

இதுமட்டுமா, சிலந்தி வலை சிக்கலில் எனது நாடு, டீசல், இந்தியா - உலக நாடுகள் பல்வகை ஒப்பீடு உள்ளிட்ட நூல்களையும் சுப்பிரமணியம் எழுதியுள்ளார். இதில், 'சிலந்திவலை சிக்கலில் எனது நாடு' என்ற நூலை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் வைக்க வேண்டும் என முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளது சிறப்பிலும் சிறப்பு.

"படிப்பு கம்மினாலும், புதுசா எந்தத் தகவல் கிடைச்சாலும் மறக்காம நோட்டுல குறிச்சு வைச்சிக்குவேன். அதைத் தொகுத்துத்தான் நூல்களா எழுதிருக்கேன். எட்டு மாசத்துக்கு முந்தித்தான் இப்ப நான் இருக்கிற வேலையில சேர்ந்தேன். அதுக்கு முந்தி கம்ப்யூட்டரை தொட்டுக்கூட பார்த்ததில்லை" என்று தன்னை வெளிச்சம் போட்டுக் கொள்ளும் சுப்பிரமணியம், கடந்த, 2000-ம் ஆண்டில், தமிழக அரசின், புதிய கண்டு பிடிப்புக்கான அறிவியல் ஆய்வாளர் விருது பெற்றவர்.

இந்த, 'வில்லேஜ் விஞ்ஞானி'யின் தற்போதைய கண்டுபிடிப்பு நவீன காற்றாலை

மின் உற்பத்தி இயந்திரம். அதுகுறித்து பேசியவர், ’’நம்ம மாநிலத்தில இருக்கிற காற்றாலைகள், வருஷத்துக்கு, 4 மாசம்தான் வேலை செஞ்சு, கரன்ட் உற்பத்தி பண்ணுது. அதுவும், வேகமா காத்து அடிக்கிற தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தேனி, கம்பம், உடுமலைப்பேட்டை, தாராபுரம் மாதிரியான ஊர்கள்ளதான் இந்த காற்றலைகளையும் அமைக்க முடியுது. இதுக்கான செலவும் அதிகம்.

ஆனா, நான் கண்டுபிடிச்சிருக்கிற மெஷின் லேசா காத்தடிச்சாலும் ஓடி கரன்ட் உற்பத்தியாகும். காத்து உராய்வு மூலமா, பெரிய ரெக்கைகள் சுத்தி, அது வழியா கரன்ட் உற்பத்தி பண்ணுறாங்க. இதுக்கு பதிலா, காத்து நேரடியா ரெக்கைகளை தள்ளினால், முழு சக்தி கிடைக்கும்; மின்சார உற்பத்தியும் அதிகரிக்கும்னு நினைச்சேன். அதைத்தான் இப்ப செஞ்சிருக்கேன்.

இப்ப இருக்கிற செங்குத்தான பெரிய ரெக்கைகளைக் கொண்ட காற்றாலைகள் மணிக்கு, 12 கி.மீ. வேகத்தில் காத்து வீசினாத்தான், மின்சார உற்பத்தி செய்யும். வருஷத்துல நாலு மாசம்தான், இந்த வேகத்தில் காத்து வீசும்ங்கிறதால, அப்ப மட்டுமே, மின் உற்பத்தி செய்யமுடியும். ஆனா, நான் வடிவமைச்சிருக்கிற காற்றாலையில மணிக்கு, 6 கி.மீ., வேகத்தில் காற்று வீசினாலே மின் உற்பத்தி செய்யமுடியும். அப்படிப் பார்த்தா வருஷத்துல 8 மாசம் மின் உற்பத்தி செய்ய முடியும்.

தற்போதுள்ள காற்றாலை இயந்திரங்களை, 300 மீட்டர் இடைவெளியில் தான் நிறுவமுடியும். என்னுடைய இயந்திரத்தை அருகருகே அமைக்க முடியும். காற்று எந்த திசையில் இருந்து வீசினாலும் மின் உற்பத்தி செய்யமுடியும். முதலில் சின்னதாக ஒரு மாடல் செய்து பார்த்தேன். அதில் வெற்றி கிடைத்ததால், அடுத்ததாய், நான்கு இறக்கைகளுடன் சற்று பெரிய அளவில் வடிவமைத்துள்ளேன். இதனை, 20 இறக்கைகள் வரை அதிகரித்தால், அதற்கு ஏற்ப மின் உற்பத்தியும் அதிகரிக்கும்’’ என்றார்.

கோவை, 'கொடிசியா'வில், புதிய கண்டுபிடிப்புகளுக்காக நடந்த கண்காட்சியில் இவரது கண்டுபிடிப்புக்கு ஏக வரவேற்பாம். பெருமையோடு இதை நம்மிடம் சொன்ன சுப்பிரமணியம், "இரண்டு இறக்கை கொண்ட காற்றாலை இயந்திரத்தை செய்ய, 60 ஆயிரம் ரூபாய் செலவானது. எனவே, எனது இயந்திரத்தை தனித்தனியாக அமைப்பது நடைமுறை சாத்தியமில்லை. அதிக அளவில் உற்பத்தி செய்யும்போது, செலவு குறையும்.

ராணுவத்தில் பணியாற்றும் முருகசாமி, எனது கண்டுபிடிப்பை ஊக்குவிக்க 35 ஆயிரம் ரூபாய் கடன் கொடுத்து இந்த இயந்திரத்தை உருவாக்க உதவினார். எட்டு மாதங்கள் பாடுபட்டு இந்த இந்திரத்தை செய்து முடித்திருக்கிறேன். எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கேட்டு விண்ணப்பம் செய்திருக்கின்றேன். அரசு எனக்கு நிதி ஆதாரம்

வழங்கினால் தொழிற்சாலை தொடங்கி இந்த காற்றாலை இயந்திரங்களை அதிக எண்ணிக்கையில் தயாரித்துக் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்’’ என்று சொன்னார்.

இவரது நவீன இயந்திரத்தைக் கொண்டு மணிக்கு, 6 கி.மீ. வேகத்தில் காற்று அடிக்குமானால் ஒரு நாளில் 4 யூனிட் வரை மின் உற்பத்தி செய்ய முடியுமாம். இறக்கைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தினால், மின் உற்பத்தியின் அளவை அதிகரிக்க முடியும். சாதாரணமாக வீட்டின் மாடியில் இதனை பொருத்திவிட்டால், எட்டு மாதத்துக்கு மின்சாரம் தடையின்றி பெறமுடியும்.

ஆயிரக்கணக்கில் கோடிகளை கொட்டி அணு உலைகளை அமைத்து மின்சாரம் தேடும் ஆட்சியாளர்கள் தனது எளிய கண்டுபிடிப்பை அங்கீகரிக்கத் தயங்குவதாக ஆதங்கப்படுகிறார் சுப்பிரமணியம், ‘’அதற்காக நான் சோர்ந்துட மாட்டேன் சார்.. எடிசனையே அவர் ஆயுசு இருக்கும் வரைக்கும் இந்த உலகம் கண்டுக்கல. அதேமாதிரி, என்னையும் ஒருநாள் இந்த உலகம் கண்டுக்கும். அதுவரைக்கும் நாட்டுக்கு

தேவையான நல்ல விஷயங்கள் எதையாவது கண்டுபிடிச்சுக்கிட்டே இருப்பேன் சார்’’ நம்பிக்கை துளிர்க்கச் சொன்னார் சுப்பிரமணியம்.

எஸ். கோவிந்தராஜ்

பக்கவாதம் நோய் பற்றிய தகவல்கள்:-



பக்கவாதம் என்பது ஸ்ட்ரோக் என்று ஆங்கிலத்தில் அறியப்படுகிறது. மூளைக்குச் செல்லும் ரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்பு, கசிவு போன்ற சில பிரச்சினைகளால் ஏற்படுவதுதான் பக்கவாதமாகும்.

ரத்த திட்டுக்கள் ஏதேனும் ஒன்று மூளைக்குச் சென்று அங்குள்ள நாளங்களை அடைத்து விட்டாலும் பக்க வாதம் ஏற்படும். இது யாருக்கும், எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம். இந்த நோய் வருவதற்கு முன்பு எந்த அறிகுறியும் இருக்காது.

இதனைத் தடுக்க, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, இதய நோய்கள் போன்றவற்றிற்கு உரிய சிகிச்சை அளித்து உடல் இயக்கத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும். புகைக்கும் பழக்கம் பக்கவாதத்திற்கு காரணமாக அமையலாம். எனவே புகைப்பிடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் அதனை கைவிட வேண்டும்.

குறைந்த கொழுப்பு உள்ள உணவுகள், மற்றும் குறைந்த உப்பை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

தினமும் உடற்பயிற்சி செய்வது இன்றியமையாததாகிறது.

பக்கவாதத்தின் காரணமாக ஏற்படும் பிரச்சினைகள்

உடலின் ஏதேனும் ஒன்று அல்லது இரண்டு உறுப்புகள் செயல்படாமல் போவது, பலகீனம், பார்வைக் குறைபாடு, நினைவுத் திறன் குறைவது, ஒரு காரியத்தை செய்ய உடலின் ஒத்துழைப்பு இன்மை, உடல் வீக்கம், அடிக்கடி மயக்கநிலை, சிறுநீர் தொடர்பான உபாதைகள் போன்றவை பக்கவாதத்திற்கு அடிப்படைக் காரணிகளாக அமைகின்றன.

இவற்றை, சிடி அல்லது எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனைகள் மூலமாகவோ, இசிஜி, ஸ்கேன் போன்றவற்றைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.

மிகப்பெரிய பிரச்சினை

சில சமயங்களில் பக்கவாத நோயால் நோயாளிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினைகள் அல்லது நிரந்தர ஊனம் ஏற்பட்டு விடுகிறது.

ரத்த அழுத்தம் அதிகரித்து ரத்த நாளங்களில் பாதிப்பு, உடலில் வாய், கை அல்லது கால்களின் அசைவுகள் முற்றிலுமாக முடங்கிப்போவது, எலும்பு முறிவு, மூட்டுகள் விடுபட்டுப் போவது, தசைகள் கிழிவது, மூளையின் செயல்பாடு நின்றுப்போவது, சுயமாக எதையும் செய்ய இயலாமல் போவது போன்ற பல பிரச்சினைகளை பக்கவாதம் ஏற்படுத்திவிடுகிறது.

சிகிச்சை முறைகள்

முன்பெல்லாம் பக்கவாதம் வந்துவிட்டால் ஆயுள் முழுவதும் படுக்கையிலேயே இருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இப்போது பக்கவாதம் வந்தவர்கள் பல்வேறு பயிற்சிகளுக்குப் பிறகு இயல்பான வாழ்க்கை வாழ வழி ஏற்பட்டுள்ளது.

மேலும், பக்கவாதம் வந்தவுடன் சில மருந்துகளைக் கொடுத்து உடனடியாக ரத்த ஓட்டத்தை சீரடைய வைத்து கோமா அல்லது நிரந்த பக்கவாதத்தில் இருந்து நோயாளிகளைக் காப்பாற்றும் சிகிச்சை முறைகள் வந்துவிட்டன.

மூளையில் ரத்த திட்டால் ஏற்பட்ட பக்கவாதத்தை உடனடியாகக் கண்டறிந்து தலையில் அறுவை சிகிச்சை செய்து நோயாளியை காப்பாற்றும் முறை வந்துள்ளது.

ரத்த நாளங்களில் உள்ள அடைப்புகள், ரத்த திட்டுக்கள் போன்றவற்றை உடலில் பரிசோதனை செய்து அவற்றை முன்கூட்டியே நீக்குவதால் மேற்கொண்டு பக்கவாதம் வராமலும் தடுக்க முடியும்.

பக்கவாதம் பாதித்தவர்களுக்கு உடனடியாகக் கொடுக்கப்படும் சிகிச்சையை விட, பிறகு அவர்களுக்கு அளிக்கும் பிசியோதெரப்பி பயிற்சியே நல்ல முன்னேற்றத்தை அளிக்க உதவும்.

பேசும் பயிற்சி, கை, கால்களை அசைக்க பயிற்சி, நடக்கும் பயிற்சி, சிறுநீரை அடக்கும் பயிற்சி போன்றவையும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படுகிறது

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம்

 கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் இறுதி காலம் குறித்து பெரும்பாலான மக்களுக்கு தெரிய வாய்ப்பில்லாமல் போனது வருந்தத்தக்கது. தமிழனுக்கே உரியதாக சொல்லப்படும் தன்மான உணர்வை உண்மையிலேயே கொண்டிருந்த திரு வ.உ.சி அவர்கள் சுதேசி கொள்கையைமுன்னெடுக்கும் விதத்தில் உருவாக்கிய சுதேசி கப்பல் தொழிலும் நலிவடைய, போராட்டத்தின் காரணமாக சிறை சென்றதால் வழக்கறிஞராக பணியாற்றவும் தடைவிதித்தது ஆங்கில அரசு. 1908 ஆம் ஆண்டு சிறை சென்ற வ.உ.சி அவர்கள் 1912 டிசம்பர் மாதம் விடுதலையானார். சென்னை சிந்தாதிரிப்பேட்டை, மயிலாப்பூர், பெரம்பூர், என பல்வேறு இடங்களில் குடியேறினார். சென்னை, கோவை, ஒட்டப்பிடாரம், கோவில்பட்டி, தூத்துக்குடி, என பல்வேறு ஊர்களில் வாழ்ந்து பார்த்தார்.ஆனால் வறுமை அவரை வாழ விடவில்லை.. சிந்தாதிரிப் பேட்டையில் ஒரு சிறிய வீட்டில் தன் மகளோடு குடியேறினார்.ஒரு சிறிய மளிகை கடையை துவங்கி நடத்தினார். வியாபாரம் குறிப்பிடும் படி இல்லாமல் போகவே வீடு வீடாக சென்று மளிகை பொருட்களின் தேவையை பட்டியல் (லிஸ்ட்) எடுத்து வந்து தன் மகளின் உதவியோடு அந்தந்த வீடுகளுக்கு விநியோகம் செய்து அதில் கிடைத்த சொற்ப தொகையில் வாழ்ந்து வந்தார். அரிசி விற்றார், மண்ணெண்ணெய் விற்றார், ஆனால் தன்மானத்தை விற்கவில்லை.யாரிடமும் கையேந்தவில்லை. சுயராஜ்ய நிதியிலிருந்து திலகர் மாதந்தோறும் அனுப்பி வைத்த 50 ரூபாய் அவருக்கு ஓரளவு உதவியாக இருந்தது. தென் ஆப்ரிக்க தமிழர்கள் இதனை கேள்வி பட்டு ஒரு தொகையை வ.உ.சி யிடம் சேர்க்குமாறு காந்தியிடம் கொடுத்தனுப்பினர்.ஆனால் ஏனோ அது வ.உ.சி-க்கு வந்து சேரவில்லை. "இப்போது இருக்கும் நிலையில் அந்த பணம் வேண்டாம் என்று நான் சொல்லப்போனால் அது நான் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் இழைத்த தவறாகிவிடும் " என்று வெட்கத்தை விட்டு காந்திக்கு கடிதம் எழுதும் அளவிற்கு வ.உ.சி இருந்தார்.. அவர் இறுதி காலத்தில் எழுதி வைத்த உயில் கண்ணீர் வரவழைக்கும். தூத்துக்குடி சரோஜினி ஸ்டோர்ஸ் ஜவுளி கடைக்கும், வன்னிய தெரு எண்ணெய் கடைக்கும் எவ்வளவு கடன் வைத்துள்ளேன் என்பதை சொல்லியிருந்தார். நண்பர்களே இதை படித்து விட்டு like போடவேண்டும் என்பது இந்த பதிவின் நோக்கமல்ல. படித்து விட்டு இனி இந்த காங்கிரசுக்கு நான் வாக்களிக்க மாட்டேன் என உறுதி கொண்டவர்கள் like செய்யுங்கள். தயவு செய்து பகிருங்கள்.

மனதைக் கரைத்து விட்டது இந்த அழகான கதை

" 'நம் உடம்பிலே மிக முக்கியமான உறுப்பு' என்ற தலைப்பில் ஆசிரியர் தன் மாணவர்களை ஒரு கட்டுரை எழுதச் சொன்னார்.அந்த வகுப்பில் உடல் ஊனமுற்ற ஒரு சிறுமியும் இருந்தாள். கட்டுரைக்கான தலைப்பே அவளுக்கு பிடிக்கவில்லை. தவிர, சக மாணவர்கள் அந்தச் சிறுமியின் ஊனத்தைச் சொல்லி கிண்டல் செய்ய.. அன்றைய வகுப்பு பாவம் அவளுக்கு நரகமாகக் கழிந்தது.

மாலை வீடு திரும்பியதும் அந்தச் சிறுமி தன் தாயின் தோள்களில் சாய்ந்து அழுதபடியே கேட்டாள்.. "நம் உடம்பில் முக்கியமான உறுப்பு எதும்மா?"

"உடம்பிலே கண் தான் மா முக்கிய உறுப்பு! ஏன் என்றால், கண் இல்லையெனில் உலகமே இருட்டாகி விடுமே" என்று சொன்னாள் அம்மா. ஆனால், அதைச் சரியான பதிலாக அந்தச் சிறுமியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. "அப்படியானால் கைகள் தான் முக்கியமான உறுப்பு. அது இல்லையென்றால் நம்மால் எழுதவோ, வேறு எந்த வேலையும் செய்ய முடியாது இல்லையா" .. அம்மாவின் இந்த பதிலையும் சிறுமியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

கடைசியில் அந்தச் சிறுமியே ஒரு பதிலைச் சொன்னாள்.. " நம் உடம்பில் தோள்கள் தான்மா முக்கியமான உறுப்பு. மற்ற உறுப்புக்கள் எல்லாம் நமக்கு உதவியாக இருக்கும். ஆனால், தோள்கள் தான் ஆதரவு தேடும் அன்பு முகங்கள் புதைந்து கொள்ள இடம் கொடுக்கும். இதோ, நான் கூட இப்போது உன் தோள்களிலே முகம் புதைந்து அழுகிறேன். என்னைப் பொறுத்தவரை அடுத்தவர் அழுவதற்கு இடம் கொடுக்கும் தோள்கள் தான் உடம்பிலே முக்கியமான உறுப்பு!"

மலையாள சினிமாவின் மகாராஜாக்கள்.

ஒரு திரியளவு, பஞ்சை, மேலும் பக்குவமாய் திரித்து, நாசிக்குள் நுழைத்தால், வரும் அந்த முதல் தும்மல், கொஞ்சம் சிரம காரியம் தான் எனினும்,அதற்குப் பின் நிகழும் அந்த சுவாசம் ரொம்ப சந்தோஷமான அனுபவம்.

இந்திய சினிமாவின், வர்த்தக நாசிக்குள், தும்மல், அதுவாக வந்தால் தான் உண்டு. ஏனெனில், சுவாசிக்க கூட, மறந்து பணம் பண்ணிக் கொண்டிருக்கும் பாவப் பட்ட ஜீவன் அது. மறைந்த ரிது பர்ன கோஷ், இன்றும் பிரகாசிக்கும் ரிதிவிக் கட்டக் போன்றவர்கள் இந்திய சினிமா நாசியில் தும்மல் எழுப்பிய சில திரிகள்.

தென்னிந்திய சினிமாவில், அந்த தும்மல், அடிக்கடி நிகழும் ஒரே நாசி மலையாள சினிமா தான் என்று பகவதி அம்மன் அருள் வாக்கு மாதிரி ,சினிமாவைப் பின் தொடர்பவர்களால் மிக உறுதியாக சொல்ல முடியும். ஆயிரத்து தொள்ளயிரத்து ஐம்பதுகளில், அப்புறம் எண்பதுகளில்,அங்கே விழுந்த தும்மல், கொஞ்சம் வடக்கத்தி பக்கமும்,நிறைய நம் தமிழ் பக்கமும் தொடர் தும்மல்களை ஏற்படுத்தி இருந்திருக்கிறது.

இப்போது மறுபடியும், மாற்றத்திற்கான அந்த தும்மல் மலையாளத்தில் நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் கொஞ்சப் பேர் தான். விரல் விட்டு எண்ணி விடலாம்.

ஆனால்,தம் படங்களில் வாய்ஸ் ஓவருக்கு மட்டும் மோகன்லாலையும்,மம்முட்டி யையும் பயன்படுத்தினால் போதும் என்கிற முடிவு எடுக்கிற மாதிரியான மன வலிமை படைத்தவர்கள்.

முன் மண்டை வழுக்கையான, கொஞ்சம் அசந்தர்ப்பமான மூக்கும் கொண்ட பஹத் பாசிலை நம்பி கதை சொன்னவர்கள். ஆரம்பத்தில் அடி வாங்கினாலும்,இன்று அவர்களை இந்திய சினிமாவே உற்று கவனிக்கிறது. ஆகவே,நாமும்.

ராஜேஷ் பிள்ளை,அமல் நீராட்,ஆசிக் அபு, அன்வர் ரஷீத், சமீர் தாகிர்,ராஜீவ் ரவி,சலீம் அஹ்மத்,வினீத் ஸ்ரீனிவாசன், ஷ்யாம் பிரசாத், அஞ்சலி மேனன்,ரூபேஷ் பீதாம்பரம்,சித்தார்த் பரதன்,லால் ஜோஸ், இப்படி தொடரும் இவர்கள் தான் இன்றைய மலையாள சினிமாவின் மகாராஜாக்கள்.

இவர்களில், எர்ணாகுளம்,மகாராஜாஸ் காலேஜ் தந்த மகாராஜாக்கள் மிகக் குறிப்பிடத் தக்கவர்கள்.

ஏனெனில்,கல்லூரி நட்பும்,கனவும்,உண்மையாகும் போது, அது அந்த நண்பர்கள் சார்ந்த ஒரு துறைக்கே, மாற்றத்தைக் கொணர்வதாக இருக்கக் கூடும் என்பதை உங்கள் கையில் இப்போது தவழும் அந்திமழை மாதிரி, சினிமாவில் நிரூபித்தவர்கள் இவர்கள்.இவர்களுடைய கல்லூரி சீனியர்கள் ஆன மம்முட்டி,திலீப் மாதிரி.

அமல் நீராட்,அன்வர் ரஷீத்,ஆசிக் அபு,ராஜீவ் ரவி, இவர்களுடன் நடிகர் சலீம் குமார். இந்த எர்ணாகுளம் மகாராஜாக்கள் தந்த சில படைப்புகள் மலையாள சினிமாவின் கண்களை மறுபடி திறந்து வைத்தவை.

ஆதாமிண்டே மகன் அபு,
சாப்பா குரிசு,
அன்னையும் ரசூலும்,
சால்ட் அண்ட் பெப்பர்,
22,பீமேல் கோட்டயம்,
அஞ்சு சுந்தரிகள்,
டைமண்ட் நெக்லஸ்,
அன்வர்,
பிக் பீ,
நீல ஆகாசம்,
பச்சக் கடல்,
சுவர்ண பூமி
இவையெல்லாம் இந்த மகாராஜாக்களின் பெயர் சொன்னவை,சொல்பவை.

அமல் நீராட்-டிடம் இருந்து ஆரம்பிக்கிறது மலையாள சினிமாவை மாற்றிய இந்த எர்ணாகுளம் மகாராஜாசின் மகா கனவு.

டாடி கூல், சாப்ப குரிசு, டைமன்ட் நெக்லஸ்,நீலாகசம் பச்சக் கடல் சுவர்ண பூமி,ஆகிய குறிப்பிடத்தக்க படங்களை இயக்கிய சமீர் தாகிர், அமலை தங்களின் குரு என்கிறார்.

அமல் நீரட் எர்ணாகுளம் மகாராஜஸ் கல்லூரி யின் யூனியன் சேர்மன் ஆக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப் பட்டவர் (1992-93,1993-94). ஆனால்,இந்த கேங் கின் ஆதார சுதியாக இருக்கும் போட்டோ கிராபி தான் அமலையும் சினிமாவுக்குள் இழுத்து வந்தது. அமல் ஒளிப்பதிவாளர் ஆகப் பணியாற்றிய "ப்ளாக் (2004)" மம்முட்டி நடித்து சூப்பர் ஹிட் ஆனதும், ராம்கோபால் வர்மாவின் மாஸ்டர் பீஸ்,சிவா(89)வின் தொடர்ச்சியான சிவா(2006) ஹிந்தி,தேடி வந்தது.

அன்வர் (2010) - மலையாளத்தில் ,அமல் இயக்கிய முக்கியமான திரைப்படம்.

அமல் நீரட் மாதிரியே சினிமாட்டோகிராபியை தன் கனவாகக் கொண்டு கல்லூரியில் திரிந்தவர் ராஜீவ் ரவி. அமலைக் காட்டிலும் அதிக உயரத்திற்கு ஒளிப் பதிவில் போனவர்.

மொத்த பாலிவுட் உலகமும் தேடும்,கொண்டாடும் ஒளிபதிவு இயக்குனர். அவர் ஒளிப் பதிவு செய்த முதல் படம் மது பண்டார்க்கர் இயக்கிய "சாந்தினி பார்(2001)". "தேவ் டி", அனுராக் காஷ்யப்பின் "கேங்க்ஸ் ஆப் வாசிப்பூர்" பார்ட் 1&2, "மான்சூன் சூட் அவுட்" இவையெல்லாம் ராஜீவ் ரவியின் பாலிவுட் பெயர் சொல்லும் சில படங்கள்.

லால் ஜோஸ் இயக்கிய "கிளாஸ் மேட்ஸ்" என்னும் மனதில் நிற்கும் மலையாள கவிதைக்கு ஒளிப் பதிவு ராஜீவ் ரவி தான். ராஜீவ் ரவி முதன் முதலாக இயக்கிய படமும் ஒரு கவிதை தான்."அன்னையும் ரசூலும்(2013)".

ராஜீவ் ரவியின் அசிஸ்டெண்ட் ஆக சினிமாவுக்குள் நுழைந்தவர் தான் சமீர் தாகிர். எனினும் அமலைப் போலவோ,ராஜீவைப் போலவோ சினிமா கனவுகளுடன் இருந்தவரில்லை. ஆனாலும் சமீரின் அடிப்படை போட்டோ கிராபிதான்.

அவர் அதிகபட்சம் ஆர்வம் காட்டியது திருமண வீடியோ,புகைப் படங்கள் எடுப்பதில்தான். ஆனால்,ஒரு குழுவாக, அதிலும் கல்லூரித் தோழர்களாக இயங்குவதன் பூரண பலன் சமீருக்குக் கிடைத்தது. அமல் நீரட் டின் " பிக் பி"படத்தின் ஒளிப்பதிவாளர் சமீர் தான். லால் ஜோஸ் இயக்கிய "டைமன்ட் நெக்லஸ்" படத்திற்காக சிறந்த ஒளிப் பதிவாளர் விருது அவருக்கு கிடைத்தது.

ஆனால்,சமீர் தாகிரின் பெயர் சொன்ன படம் "சாப்ப குரிசு". அவர் இயக்கியது. அவருடைய லேட்டஸ்ட்" நீல ஆகாசம் பச்சக் கடல் சுவர்ண பூமி". மம்முட்டியின் மகன், தல்கர் சல்மான் நடித்த Road Movie.

தல்கர் சல்மான் நடித்த இதற்கு முந்தைய படம் மறக்க முடியாத ஒன்று. "உஸ்தாத் ஹோட்டல்(2012)".இதை இயக்கியவரும் எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரியின் மகாராஜாக்களில் ஒருவர் தான்.

அவர் பெயர் அன்வர் ரஷீத்.

தன்னுடைய முதல் படத்தில் மம்முட்டியை இயக்கியவர் "ராஜமாணிக்கம் -(2005)". இன்னொரு கமர்சியல் படமான "சோட்டா மும்பை - (2007)க்கு" அப்புறம் அன்வர் ரஷீத் இயக்கிய உஸ்தாத் ஹோட்டல் மலையாள சினிமாவின் மிக முக்கியமான சினிமாவாக விமர்சகர்களால் குறிப்பிடப்பட்ட ஒன்று.

அமல் நீரட்டின் நட்பும்,கொட்டேஷன் படத்தை இயக்கிய வினோத் விஜயனின் அருகாமையும் அன்வர் சினிமாவுக்குள் தன் கனவுகளைக் கடைவிரிக்க உதவின.

டிராமா, யூத் பெஸ்டிவல்கள்,போட்டோ கிராபி தான் அன்வரின் கனவு ஆதாரமும். "உண்மையில் மகாராஜாஸ் கல்லூரியைத்தான் எனக்கும் என் சினிமாவுக்கும் காரணமாக சொல்லவேண்டும்" என்று சொல்லும் அன்வர் ரஷீத் தை நம்பித் தான் மலையாள சினிமாவின் பெரிய பட்ஜெட் படங்கள் உருவாகின்றன.

ஆஷிக் அபுவும் ஸ்டூடண்ட் யூனியன் மெம்பர் தான். அப்படி, நான்கு வருடங்கள் தொடர்ந்து இருந்தவர்.

"எர்ணாகுளம் மகாராஜாஸ் கல்லூரி யில் நாங்கள் படித்ததாக நினைவில்லை,ஆனால்,வாழ்க்கையைக் கற்றுக் கொண்டோம்,எங்கள் கனவுகளைச் சுமக்கவும்"என்று ஒரு மலையாளப் பத்திரிகைப் பேட்டியில் சொல்லியிருக்கும் ஆஷிக் அபுவின் சால்ட் அண்ட் பெப்பர் ரசனையான காதல் சமையல் கவிதை. இன்று சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஹிந்தி " லஞ்ச் பாக்ஸ் "கூட இதன் பாதிப்பு தான் என்கிறார்கள்.

"22 பீமேல் கோட்டயம்" ஆஷிக் அபு இயக்கிய மறக்க முடியாத படம்.

ஆஷிக் அபுவின் ஆரம்பம் விளம்பர படங்களில் தான். ஆலுக்காஸ்,மாத்ருபூமி,பேனசோனிக் ஆகியவை அவரது முக்கியமான விளம்பர க்ளையண்ட்டுகளில் சில.இப்போது போஸ்டர்களில் ரகளையை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மோகன் லாலின் "கொடுங்காட்டு" பட இயக்குனரும் ஆஷிக் தான்.

மேற்சொன்ன மகாராஜாக்கள் எல்லாம் படிக்கிற காலத்தில்,கேரளாவில் கல்லூரி களுக்கு இடையே நடக்கிற யூத் பெஸ்டிவல்கள் ரகளையாகவும்,
ரசனையாகவும்,அதிக போட்டியுடனும் இருக்கும்.

அப்போதெல்லாம்,நம்பி,இவர்களும்,இவர்கள் கல்லூரியும் அனுப்பி வைத்த தனிநபர் திறமை அதிகம் கொண்ட தோழர்தான் நடிகர் சலீம் குமார்.

இவர்கள் மொத்த பேருமே பெருமைப் படக் கூடிய படமொன்றில் நடித்தவர்,ஏன்,உண்மையில் அது மலையாள சினிமா உலகமே,பெருமைப் படக் கூடிய எளிய மனிதனின் சினிமாவும்தாம்.

அதன் பெயர் "ஆதாமிண்டே மகன் அபு".

இதை இயக்கிய "சலீம் அஹ்மத்",

உஸ்தாத் ஹோட்டலுக்கு திரைகதை எழுதிய, மஞ்சாடிக் குரு என்கிற அற்புதமான படத்தை இயக்கிய "அஞ்சலி மேனன்",

நித்ரா வை இயக்கிய "சித்தார்த் பரதன்",

மோகன்லாலை வைத்து ரெட் வைன் இயக்கிய "சலாம்பாப்பு",

தீவ்ரம் என்கிற டார்க் பிலிமை இயக்கிய "ரூபேஷ் பீதாம்பரம்",

நீலத் தாமர,டைமன்ட் நெக்லஸ்,கிளாஸ்மேட்ஸ் படங்களை இயக்கிய "லால்ஜோஸ்" என்று நீளும் மலையாள சினிமாவின் புதிய பாதை விருப்பு வெறுப்பற்று,கூச்சப் படாமல் எதையும் பேசும் சினிமாவை நம் கண்முன் தவழ விட்டுக் கொண்டிருக்கிறது.

எளிய மனிதர்களின் அன்றாட நிகழ்வை,பணத்தில் புரளும் புதிய தலைமுறை சமூகத்தின் வாழ்க்கையை, வக்கிரத்தை,தனிமனித ரசனை, சோகம், காதல், மரணங்களைப் பதிவு பண்ணுவதோடு,அதை
கமர்சியல் ஆகவும் வெற்றிப் பெற செய்தது தான் இந்த "கேங்க்ஸ் ஆப் கேரளா"வின் நவீன சினிமா சாதனை.

கடவுளின் சொந்த பூமி என்கிற கால கால மலையாளக் கனவை உடைத்து,வறுமையும்,பீடி வலித்தே வயிறு நிரப்பும் மனிதர்களும் இங்கே உண்டு என்று சொன்னவர்களும் இந்த புதிய தலைமுறை இளைஞர்கள் தான்.

இல்லையென்றால் பஹத் பாசில் போன்ற அற்புதமான நடிகனை மலையாள சினிமாவோ,இல்லை நாமோ ஏற்றுக் கொண்டிருப்போமா என்பது சந்தேகம் தான். மம்முட்டியும், மோகன்லாலும் இவர்கள் பின்னே போவதற்கும் இந்த சினிமாவை உடைத்த சினிமா கேங்க்ஸ் தான் காரணம்.

"அந்த நாட்கள் மிக வறுமையானவை. கொஞ்சம் ரொட்டியும்,வாழைப்பழங்களும்,ஒரு பாட்டில் தண்ணீரும் எடுத்துக் கொண்டு திருவனந்தபுரத்தில் நடக்கும் பிலிம் பெஸ்டிவல்களுக்கு நாங்கள் பயணப் பட்ட போது,எங்கள் கையில் இருந்தது கொஞ்சம் ரூபாய் நோட்டுகளும்,டன் கணக்கில் கனவுகளும் தான்"...... என்று அமல் நீரட் தன் கேங்க்ஸ் ஆப் மகாராஜாஸ் காலேஜ் வாழ்க்கையை நினைவு கூறும்போது, அந்த கனவுகள் மாற்றிப் போட்டிருக்கிற மலையாள சினிமாவைப் பார்த்து பொறாமையும், வருமா தமிழில் இப்படி ஒரு கேங் என்கிற ஏக்கமும் மிஞ்சுகிறது.


-குமரகுருபரன்



(அந்திமழை அக்டோபர் 2013 மாத இதழில் வெளியான கட்டுரை)

ஆங்கில படங்களை தழுவி அல்லது ஆங்கில படங்களின் பாதிப்பில், அல்லது ஆங்கில படங்களின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் படங்கள்

ஆங்கில படங்களை தழுவி அல்லது ஆங்கில படங்களின் பாதிப்பில், அல்லது ஆங்கில படங்களின் தாக்கத்தில் எடுக்கப்பட்ட நடிகர் கமல்ஹாசனின் படங்கள் பற்றிய சிறு குறிப்பு !

தவறாக இருந்தாலும் சுட்டி காட்டலாம் நீங்கள்.


Romance on the High Sea"s (1948) - மன்மதன் அம்பு (2010)

Butterflies are free (1972 ) - ராஜபார்வை (1982)

The reincarnation of Peter Proud (1975 ) - எனக்குள் ஒருவன் (1984 )

Moon over Parador (1988 ) - இந்திரன் சந்திரன் (1990)

The Prinicpal (1987 ) - நம்மவர் (1994)

Tie me Up, Tie me Down (1990 ) - குணா (1991 )

HardCore (1979 ) - மகாநதி (1994 )

Very Bad Things (1998) - பஞ்ச தந்திரம் (2002)

Mrs.Doubtfire (1993) - அவ்வை சண்முகி (1996 )

What about Bob (1991) - தெனாலி ( 2000 )

Planes, Trains, Automobiles (1987) - அன்பே சிவம் (2003)

9 to 5 (1980) - மகளிர் மட்டும் (1994 )

She Devil (1989) - சதி லீலாவதி (1995 )

Greencard (1990 ) - நள தமயந்தி (2003 )
 — 
149

இசையமைப்பாளர் "சலீல் சவுத்ரி"

"செம்மீன்" படத்தில் வரும் "கடலினக்கற போனோரே" பாடல், தமிழ் ரசிகர்களின் மனதில் கிட்டத்தட்ட நாற்ப்பதாண்டுகளுக்கு மேலாக பதிந்து நின்றது என்கிறார்கள் இசை விமர்சகர்கள்.

தமிழ் திரைப்பட காவியங்கள் என்று ரசிகர்களால் சிலாகிக்கப்படும் 'அழியாத கோலங்கள்" படத்தில் வரும் "பூவண்ணம் போல மின்னும்" பாடலை யாரால் மறக்க முடியும் ???

இப்படியான பாடலை நமக்கு தந்து சென்ற இசையமைப்பாளர் "சலீல் சவுத்ரி" அவர்களின் பிறந்த நாள் இன்று. வங்காள இசையமைப்பாளரான இவர் எப்படி தமிழுக்கு அழைத்து வரப்பட்டார் என்று ஒரு கவிதையை போல சொல்லி இருக்கிறார் பாலு மகேந்திரா. இனி பாலு மகேந்திரா என்ன சொல்லி இருக்கிறார் என்பதை பார்க்கலாம். 



சலீல் சவுத்ரி பற்றி பாலு மகேந்திரா:
-------------------------------------------------


பூனே திரைப்படக் கல்லூரியில் எனது படிப்பை முடித்து தங்கப் பதக்கம் வென்று நான் வெளிவந்த வருடம் 1969. செம்மீன் புகழ் ராமு கரியாத், அதற்கடுத்து இயக்கிய நெல்லு என்ற மலையாளப் படத்தின் ஒளிப்பதிவாளராக என்னை அறிமுகப்படுத்துகிறார். இது வருடம் 1971-ல் நிகழ்கிறது.

நெல்லு படத்தின் இசையமைப்பாளர் சலீல் சௌத்ரி. செம்மீன் படத்திற்கும் அவர்தான் இசையமைத்திருந்தார். இந்தியத் திரையிசையின் மகா மேதைகளில் ஒருவர் சலீல் சொத்ரி. நெல்லு படத்தின் ஒளிப்பதிவைப் பார்த்து பிரமித்துப் போன அவர் என் மீது மிகவும் பிரியமாக இருந்தார். அந்தப் பிரியத்தின் வெளிப்பாடாக அவர் ஒரு நாள் என்னிடம் சொன்னார். ”பாலு நீ இயக்கும் முதல் படத்திற்கு நான் தான் இசையமைப்பேன்”. இந்திய இசைவானில் தன்னிகரற்ற தனி நட்சத்திரமாகத் திகழ்ந்த அந்த மகா வித்வானின் அன்புக் கட்டளை அது.

அவர் விரும்பியபடியே,எனது முதற் படமான “கோகிலா”வுக்கு அவரே இசையமைத்து என்னை ஒரு இயக்குனராகத் துவக்கி வைத்தார். அது நடந்த வருடம் 1976. கன்னட கோகிலாவைத் தொடர்ந்து நான் இயக்கிய இரண்டாவது படம் “அழியாத கோலங்கள்” தமிழ்ப்படம். இந்தப் படத்திற்கும் சலீல் சௌத்ரியே இசை அமைத்தார்.

-----------------

இப்படியாகத்தான் தமிழ் திரையுலகிற்கு சலீல் சவுத்ரி கிடைத்தார். இது மட்டுமல்ல "பூவண்ணம் போல மின்னும்" பாடல் மெட்டை அவர் தமிழிலில் மட்டுமல்லாமல், மலையாளத்திலும், வங்காளத்திலும் பயன்படுத்தியுள்ளார்.


1977-ல் மலையாளத்தில் வெளிவந்த “ஏதோ ஒரு ஸ்வப்னம்” படத்தில் யேசுதாஸை வைத்து இதே மெட்டில் ஒரு பாடல் கொடுத்திருக்கிறார் சலீல் சவுத்ரி.

அதே போல் 1980-களில் வெளிவந்த “அந்தர்காட்” என்கிற வங்காள படத்தில் “கிஷோர்குமாரயும், லதா மங்கேஷ்கரயும்” இதே மெட்டில் பாட வைத்தார் சலீல்.

ஒரு தலைமுறை தமிழர்களின் வாழ்வில் ஒன்றாக கலந்துவிட்ட “சலீல் சவுத்ரிக்கு” பிறந்த நாள் வாழ்த்துக்கள் !

மருத்துவத்திற்கு பயன்படும் இலை காய்கறி



நாம் பொரியலுக்கு பயன்படுத்துவதில் முட்டைகோஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இலைக்காய்கறிகளில் ஒன்றான முட்டைகோஸின் நன்மைகள் பற்றி நாம் அதிகம் தெரிந்திருப்பதில்லை. முட்டைகோஸ் வெள்ளை, சிவப்பு, பச்சை மற்றும் ஊதா போன்றவை நிறங்களில் உள்ளது. இவை அனைத்தும் ஆரோக்கியம் தரும் உணவுகளே. இதில் பைட்டோ நியூட்ரியண்டுகள் மற்றும் வைட்டமின்களான ஏ, சி மற்றும் கே போன்ற சத்துகளை கொண்டுள்ளது. 

இவை உடலை தாக்கும் புற்றுநோய், இதயநோய், போன்றவற்றை தடுக்கும். இதில் நார்சத்துகளை கொண்டுள்ளதால் செரிமான பிரச்சனை மற்றும் மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது. குறிப்பாக முட்டைகோஸை சமைக்கும் போது அளவுக்கு அதிகமாக வேகவைத்து சாப்பிடக்கூடாது. ஏனெனில் அதிகளவு வேகவைக்கும் போது அதன் சத்துகள் வெளியாகிவிடும். 

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் பொருட்களை அதிகளவு கொண்டுள்ளது. எனவே இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை தடுக்கலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. அல்சரால் அவதிப்படுபவர்கள், முட்டைக்கோஸை ஜூஸ் போட்டு சாப்பிட்டு வந்தால், அல்சரை விரைவில் குணப்படுத்தலாம். ஏனெனில் இதில் அல்சரை குணப்படுத்தும், குளுட்டமைல் அதிக அளவில் நிறைந்துள்ளது.

இதில் உள்ள அதிகப்படியான வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, உடலை நோய்கள் தாக்காதவாறு பாதுகாக்கும். முட்டைகோஸில் பீட்டா-கரோட்டீன் அதிக அளவில் இருப்பதால், அது கண்புரையை தடுக்கிறது. எடையை குறைக்க நினைப்போர், தினமும் ஒரு கப் வேக வைத்த முட்டைகோஸ் அல்லது முட்டைகோஸ் சூப் சாப்பிட்டால், உடல் எடையை ஆரோக்கியமான முறையில் குறைக்கலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும். நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும். தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும். எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

நரம்பு தளர்ச்சியை போக்கும் சௌ சௌ





நாம் உணவில் சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சில காய் வகைகளை எப்போதாவது சேர்த்துக்கொள்வோம். அப்படி எப்போதாவது சேர்த்துக்கொள்ளும் காய்கறிகளில் சௌசௌவும் ஒன்று. சௌசௌவில் வைட்டமின் ஏ, பி, சி, கே போன்ற சத்துகள் அடங்கியுள்ளன. 100 கிராம் சௌசௌவில் 17.8% கார்போஹைட்ரேட், 10.7% ஸ்டார்ச், 10.5% போலேட் சத்து, 5.4% புரதசத்து, 6.7% சுண்ணாம்பு சத்து, 4.8% பாஸ்பரஸ், 9% மாங்கனீசு கொண்டுள்ளது.

உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் சௌசௌ காயை சாப்பிடலாம். இது நரம்பு தளர்ச்சியை போக்கி நரம்புகளை கட்டுபடுத்தும் ஆற்றல் கொண்டது. வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளை நீக்கி வயிற்றை சுத்தமாக வைத்துக்கொள்ளும் சக்தி இதற்கு உண்டு.. உயர் ரத்த அழுத்தத்தை குறைத்து உடலை சமநிலையில் வைத்துக்கொள்ளும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிபடுபவர்கள் இந்த காயை வாரம் இரு முறை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். பெருங்குடல், சிறுகுடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்கி குடல் மூலம் உருவாகக்கூடிய பிரச்சனைகளை சரிபடுத்துகிறது. 

கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் கை, கால்களில் வீக்கம் ஏற்படும். ஆதலால் நீர்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான சௌசௌவை உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் குழந்தையையும் நோய் தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.. சிறு வயதிலேயே முகச்சுருக்கம் ஏற்பட்டு விட்டதே என கவலை படுபவர்கள் சௌசௌவை உணவில் தாராளமாக பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள சுருக்கம் நீக்கி விடும்.

புற்றுநோயை தடுக்க: சௌசௌவில் காணப்படும் வைட்டமின்கள் புற்றுநோய் தடுப்பியாக செயல்படுகிறது என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். எனவே இதை உணவில் பயன்படுத்தினால் புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்..

தைராய்டு கோளாரால் அவதி படுபவர்கள் சௌசௌவை பயன்படுத்தலாம். சௌசௌவில் காணப்படும் காப்பர், மாங்கனீசு, தைராய்டு நோயால் அவதிபடுபவர்களுக்கு சிறந்த மருந்தாகும். இதை உணவில் எடுத்துக்கொண்டால் தைராய்டு கோளாறு நீங்கும். சௌசௌவில் கால்சியம் சத்துகள் காணப்படுவதால் எலும்புகளை வலுப்பெற செய்கிறது. எனவே வளரும் குழந்தைகளுக்கு சௌசௌ காயை உண்ண கொடுக்கலாம்.

கொழுப்புகளை குறைக்கவும் இது பயன்படுகிறது. வயிறு மற்றும் இடுப்பு பகுதியில் சேர்ந்து இருக்கும் அதிகபடியான கொழுப்புகளை கரைக்க சௌசௌவை சூப் செய்து பருகினால் நல்ல பலன் கிடைக்கும். சௌசௌவை வேகவைத்து உப்பு, மிளகு, தண்ணீர் சேர்த்து சூப் செய்து காலை, மாலை வேளையில் உணவிற்கு முன் இதை பருகலாம்.